Followers

Saturday, November 24, 2012

பாஜக அரவிந்த ரெட்டி கொலையின் குற்றவாளிகள் யார்?

பாஜக அரவிந்த ரெட்டி கொலையின் குற்றவாளிகள் யார்?

இந்த கொலை பற்றி தமிழ் ஹிந்து வலை தளம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்:

வேலூர், கொசப்பேட்டை பகுதியில் கடந்த அக்டோபர்-23ம் தேதி அன்று தமிழக பா.ஜ.க. மருத்துவ அணித் தலைவர் திரு. அர்விந்த் ரெட்டி அவர்கள் தமது மருத்துவ மனைக்கு முன்பாக ஒரு மூன்று நபர் கும்பலால் குரூரமான முறையில் படுகொலை செய்யப் பட்டிருக்கிறார்.



துடிப்பான இளைஞரும் செயல்வீரருமான அர்விந்த் ரெட்டி அவர்களின் மரணம் அந்த பகுதி மக்களையும் பாஜக தொண்டர்களையும் கடும் அதிர்ச்சிக்கும் சோகத்திற்கும் உள்ளாக்கியிருக்கிறது.

திரு அர்விந்த் ரெட்டி அவர்களுக்கு நமது கண்ணீர் அஞ்சலி. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். நாயகனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

இந்தப் படுகொலை தனிப்பட்ட காரணங்களுக்காக அல்லாமல், அரசியல் காரணங்களுக்காகவே நிகழ்ந்திருக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும், பா.ஜ.க தொண்டர்களும் கருதுகின்றனர். குறிப்பாக, இந்தப் பகுதிகளில் பா.ஜ.கவின் வளர்ச்சியைக் கண்டு இஸ்லாமிய மதவெறி இயக்கங்கள் அசூயையும் கடுப்பும் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் படுகொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை காவல்துறை தீவிர நடவடிக்கை மூலம் கைது செய்ய வேண்டும் என்று கோரி சென்னை, வேலூர் மற்றும் மாநிலத்தின் பல இடங்களில் பா.ஜ.கவினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்திய மருத்துவக் கழகத்தின் தமிழகக் கிளைத் தலைவர் ஜெயலால், முதல்வர் ஜெயலலிதா நேரடியாக தலையிட்டு இந்தக் கொலைவழக்கில் நீதி வழங்கப் பட்டு, குற்றவாளீகள் தண்டிக்கப் பட ஆவன செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

வேலூர் கலெக்டர் அலுவகலம் முன்பு நடந்த போராட்டத்தில் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் பங்கேற்றார். ஐநூறுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதில், சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியில் நடந்த பாஜக போராட்டத்தில் வன்முறை வெறியாட்டம் நிகழ்ந்துள்ளது. இளையாங்குடியில் பாஜக சார்பில் வேலூர் பாஜக மருத்துவர் அணிச் செயலாளர் அரவிந்த் ரெட்டிபடுகொலைக்கு கண்டனமும், இரங்கலும் தெரிவிக்கும் கூட்டம் நடந்தது. இதில் மாநில பொதுச் செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டார். அவர் பேசுகையில் அரவிந்த் ரெட்டிபடுகொலைக்கு காரணமானவர்களை கடுமையாக சாடிப் பேசினார். இதையடுத்து மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) ஆகிய கட்சியைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் திரண்டு வந்தனர். பாஜக கூட்டத்திற்குள் புகுந்து தாக்குதலில் இறங்கினர். இதில் பாஜக நிர்வாகிகள் இருவர் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தால் இளையாங்குடியில் பரபரப்பு நிலவுகிறது. போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மோதல் கலவரமாகி விடாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகளை போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர்.

-தமிழ் ஹிந்து

அதில் வந்த பின்னூட்டம்

ஸ்ரீ அரவிந்த் ரெட்டியின் படுகொலை அநியாயம். கண்டணத்திற்குறியது. இஸ்லாமிய தீவிரவாதத்தின் கோரமுகத்தினை மக்கள் உணர்வார்கள். உணரவேண்டும். அனைத்திற்கும் தீர்வு ஹிந்து ஒற்றுமைதான் அதுமட்டுமே

-------------------------------------------------

அங்கு ஒரு வாரம் முன்பு நான் இட்ட பின்னூட்டம்

. suvanappiriyan on November 7, 2012 at 7:37 pm

காவல் துறை இடத்தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக சந்தேகிக்கிறது. இன்னும் குற்றவாளிகள் யாரென்றே தெரியாத போது ஆளாளுக்கு இஸ்லாமிய தீவரவாதம் என்று பின்னூட்டமிடுவது நகைப்பிற்குரியது. இனியும் ராமரை வைத்து காலம் தள்ள முடியாது. மக்கள் விழிப்புடனே இருக்கிறார்கள். எனவே சமூகத்தில் தீண்டாமையை ஒழித்து இந்து மதத்தில் சமதர்ம சமூகம் அமைக்க பாடுபடுங்கள்.

-------------------------------------------------

அதே போல் ஆர்எஸ்எஸ் அமைப்பாளர் ஆனந்த் சில ரௌடிகளால் தாக்கப்படுகிறார். இதற்கும மத சாயம் பூசி அந்த ஏரியாவையே அலற வைத்துள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். செயலாளர் தாக்கப்பட்டவுடன் மேட்டுப்பாளையம் பகுதியில் வன்முறை வெடித்தது. உடனடியாக கடைகள் அடைக்கப்பட்டன. மக்களின் கோபம் அரசு பஸ்கள் மீது திரும்பியது. பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்துக்கு ஒரு கும்பல் தீ வைத்ததில் அது முற்றிலும் எரிந்து சாம்பலானது . தவிர, மேட்டுப்பாளையம் சாலையில், துடியலூர், பெரிய நாயக்கன் பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் சாலை மறியல் நடத்தப்பட்டது .

இந்த செய்திக்காக தமிழ்இந்து வில் வந்த பின்னூட்டம்:

சிவகுமார் on November 9, 2012 at 9:24 am

//கட்டுரையாளர் மக்களின் கோபம் அரசு பஸ் மீது திரும்பியது என்று எழுதியுள்ளார். இதனை இவர் ஆதரிக்கிறாரா. வன்முறை என்பது எவ்விடம் இருந்து தோன்றினாலும் அது எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றுதானே? மேலும் அரசு பஸ் என்று அதனை பார்க்கும் நோக்கினின்றும் மாறி மக்களின் சொத்தாக எண்ண வேண்டாமா?//

நாராயணன் சார், இப்படியே கேட்டுக்கிட்டு இருங்க… வௌங்கிடும். இந்தியாவெங்கும் / உலகெங்கும் பொது சொத்து தான் வன்முறையாளர்களின் முதல் இலக்கு. கும்பல் மனப்பாண்மையில் ஆத்திரங்கள் இவ்வாறாகத்தான் வெளிப்படும். வியாக்கியானங்கள் வேலைக்காகாது.

(எந்த அளவு வன்முறையை இந்துத்வாக்கள் வளர்ப்பதை பாருங்கள். இவர்களின் இடத் தகராறு கொலைக்காக அரசு பேருந்தை கொளுத்த வேண்டுமாம். இவர்கள் தான் நாட்டுப் பற்றாளர்களாம்)

---------------------------------------------------

பாஜக இந்துத்வாவினர் இவ்வாறு பொய்களை பரப்பிக் கொண்டிருக்க தற்போது அந்த கொலைக்கான உண்மை குற்றவாளிகளை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அந்த செய்தியை பார்போம்.

பாஜக பிரமுகர் கொலை : 6 பேர் கைது

பதிவு செய்த நேரம்: 22-11-2012 14:46

வேலூர்: வேலூரில் பாஜக மருத்துவர் அணிச்செயலர் டாக்டர் அரவிந்த் கொலையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 கூலிப்படைகளை சேர்ந்த 6 பேரை கைது செய்து வேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டோரில் 3 பேர் நேரடியாக கொலையில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உதயகுமார், தங்கராஜ், சந்திரன் ஆகியோர் அரவிந்தை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். 2-வது குழுவில் இருந்த ராஜா, பெருமாள், தரணிகுமாரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலூர் சிறையில் உள்ள வசூர் ராஜா திட்டப் படியே கொலையில் ஈடுப்பட்டதாக ஒப்புதல் அளித்துள்ளனர்.

http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=31744

இவ்வாறு முன் விரோதம் காரணமாக நடந்த ஒரு கொலையை மத சாயம் பூசி அதை காரணமாக்கி இங்கு ரத்த ஆறு ஓட வைக்க பாஜக முயல்கிறது. இதில் முஸ்லிம்கள் எந்த வகையிலும் சம்பந்தப்படாதபோது இதை முஸ்லிம்கள்தான் செய்திருப்பார்கள் என்ற ரீதியில் செய்தியை கசிய விடும் யூத தன்மையை என்னவென்பது? காவ்லதுறையினர் நேர்மையாக நடந்ததால் உண்மை குற்றவாளிகள் பிடிபட்டனர். இல்லை என்றால் பிளாட்பாரத்தில் தூங்கும் ஒரு ஏழை முஸ்லிமை பிடித்து அதற்கு கண் காது மூக்கு வைத்து ஒரு பெரிய ஆர்ப்பாட்டத்தையே நடத்தி முடித்திருப்பார்கள். இந்த கொலையை வைத்தாவது தனது அரசியல் செல்வாக்கை தமிழகத்தில் நிலை நிறுத்திக் கொள்ள துடிக்கிறது பாஜக. கட்சியை வளருங்கள். அதற்காக நாட்டு மக்களின் உதிரத்தில் உங்கள் கட்சியையும் இந்துத்வாவையும் நிலை நிறுத்த முயற்சிக்காதீர்க்ள். மக்கள் மிக விழிப்புடனேயே இருக்கின்றனர். இனியும் பொய்களை சொல்லி உங்களை வளர்த்துக் கொள்ள முடியாது என்று மட்டும் சொல்லி வைக்கிறோம்.

இந்த உண்மையான கொலையாளிகளைப் பற்றி தின மலர் எந்த செய்தியையும் வெளியிடவில்லை என்பதையும் பாரக்க வேண்டும்.

துப்பாக்கி பட டைரக்டர் முருகதாஸோ அல்லது உலக நாயகன் என்று தன்னை அழைத்து கொள்ளும் பார்ப்பன கமலோ இந்து தீவிரவாதத்தைப் பற்றி இது போன்ற காட்சிகளை தங்களின் படங்களில் வைக்க துணிவரா? அடுத்த படங்களில் பாஜக வின் வன்முறைகளை படமாக எதிர் பார்க்கலாமா?

21 comments:

அஜீம்பாஷா said...

assalamu alaikum,

nethiyadi bai, thanks for publishing with proof.

Unknown said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்

மிகவும் அவசியமான பதிவு...ஏன்னா பலபேருக்கு முதல் தகவல் மட்டுமே தெரிய வைத்திருப்பர்..இரண்டாவதாக வரும் உண்மையை மூடி மறைத்து விடுவர்..அதை வெளிக்கொண்டு வருவது நம் கடமை...என்னமோ இவர்கள் உலக உத்தமர்கள் போலவும் ..இவர்களில் ஒருவன் இறந்தால் கூட முஸ்லிம்களில் மீதே பழிபோட துடிப்பர்...இது இவர்களின் தொழில் நேக்குகளில் ஒன்று..

2007 ல் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் ஆறு பேர் படுகொலை நடந்தது...அதில் இரண்டு பக்கமும் மூன்று மூன்று பேர்..அதன் பின் சிலநாட்கள் கழித்து பக்கத்துக்கு ஊரான ஆலங்குளத்தில் பிஜேபி பிரமுகர் ஒருவர் கொல்லப்பட்டார்..அதற்க்கு ஒரு பாசிச தொலைகாட்சி ஒன்று இந்த பிரச்சனையை சம்பந்தப்படுத்தி செய்தி வெளியிட்டது..பின்னால் அவர் சொந்த பிரச்சனை காரணமாக கொல்லப்பட்டது தெரியவந்தது...

ஆக இது இவர்களின் இழிவான குணங்களில் ஒன்று..

நன்றி !!!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்.

பாஜக இந்துத்வாவினர் இவ்வாறு பொய்களை பரப்பிக் கொண்டிருக்க தற்போது அந்த கொலைக்கான உண்மை குற்றவாளிகளை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

மீண்டும் புத்துணர்வூட்டும் ஒரு செய்தி.

காவிக்கரை படியாத நேர்மையான காக்கி சட்டைகள் நம்முடன் தொடர்ந்து வாழ்ந்து வருவது அறிந்து மகிழ்ச்சி.

பதிவுக்கு நன்றி சகோ.

Unknown said...

இந்து மதம் பொதுவில் மத சகிப்புத்தன்மை கொண்ட மதமாகவே இருந்து வருகிறது...ஆயினும் ஆர்.எஸ்.எஸ் ,பா.ஜா.க ,சங் பரிவார் போன்றவை அரசியல் இலாபங்களுக்காக இன பிரிவினை வாதத்தை தூண்டி விடுகின்றன...கிடைக்கும் போதெல்லாம் தீக்கு நெய் ஊற்றுகின்றனர்...நேரடியான இந்து-முஸ்லிம் மோதல்கள் இல்லாத இந்த நேரத்தில் இவ்வாறான சித்தரிப்புக்கள் வீண் வன்முறைகளை உருவாக்கி விடும் (அப்போ தானே பல தாக்கரேகள் வர முடியும் !!!!!!!!!!!!!!!)...ஆனால் இவர்களை இந்துக்கள் தங்கள் ஏக பிரதிநிதிகள் ஆகா ஏற்று கொள்ள மாட்டர் என்பது கண் கூடு

முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.

எல்லா மாநிலத்திலும் தங்களுடைய ஆக்டோபஸ் காலை விரித்து வைத்தாகிவிட்டது.அமைதி பூங்காவை இரத்தவாடையை ஏற்படுத்தியாவது கைப்பற்ற வேண்டுமென்பது RSS மற்றும் பார(தீய )திய ஜனதா கட்சியின் நெடுநாளைய ஆசை.எப்படியெல்லாமோ குழியை பறித்துதான் பார்க்கிறார்கள் கடைசியில் அந்த குழியில் தாங்களே விழுந்துவிடுகின்றார்கள்.
//////துப்பாக்கி பட டைரக்டர் முருகதாஸோ அல்லது உலக நாயகன் என்று தன்னை அழைத்து கொள்ளும் பார்ப்பன கமலோ இந்து தீவிரவாதத்தைப் பற்றி இது போன்ற காட்சிகளை தங்களின் படங்களில் வைக்க துணிவரா? அடுத்த படங்களில் பாஜக வின் வன்முறைகளை படமாக எதிர் பார்க்கலாமா? //////எதிர்பார்ப்பது வேஸ்ட் சகோ.

suvanappiriyan said...

சலாம்!

சில வேலைகள் காரணமாக 3 நாட்களுக்கு இணையம் பக்கம் வர இயலாது. அந்த அளவு வேலை. பிறகு சந்திப்போம்.

Thanks for comments.

Anonymous said...

மதங்கள் என்பது ஒருக் கட்டத்தில் மதப்பித்தும், மதவெறியையும் தூண்டிவிடக் கூடியதே. இந்த பா.ஜா.கா. ஆர்.எஸ்.எஸ், சிவசேனை உட்பட மதம், சாதி சார்ந்த அத்தனைக் கட்சிகளையும் தடை செய்ய ப்பட வேண்டும். அப்படிச் செய்தால் தான் இந்தியா இன்னொரு ஆப்கானிஸ்தானாக, பாகிஸ்தானாக மாறாமல் இருக்கும் ...

சுவனப்பிரியனின் பதிவுகளை கொஞ்ச நாளாக காணோமே. பிஸியா, அல்லது உடல்நலக் குறைவா .. ! அவ்வப்போது எழுதுங்கள். நீங்கள் இல்லாமல் போர், அடிக்குது .. !

:)

suvanappiriyan said...

சில முக்கிய கம்பெனி வேலைகள். முடிந்தவுடன் வழக்கம்போல் வருகிறேன்.

suvanappiriyan said...

சலாம் சகோ அஜீம் பாஸா!

//nethiyadi bai, thanks for publishing with proof.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சலாம் சகோ. நாகூர் மீரான்!

//மிகவும் அவசியமான பதிவு...ஏன்னா பலபேருக்கு முதல் தகவல் மட்டுமே தெரிய வைத்திருப்பர்..இரண்டாவதாக வரும் உண்மையை மூடி மறைத்து விடுவர்..அதை வெளிக்கொண்டு வருவது நம் கடமை...என்னமோ இவர்கள் உலக உத்தமர்கள் போலவும் ..இவர்களில் ஒருவன் இறந்தால் கூட முஸ்லிம்களில் மீதே பழிபோட துடிப்பர்...இது இவர்களின் தொழில் நேக்குகளில் ஒன்று..//

முஸ்லிம்கள் மேல் பழி போட்டு வரும் செய்திகளை முந்திக் கொண்டு வெளியிடும் ஊடகங்கள், பிறகு விசாரணைக்கு பின்பு வரும் உண்மை குற்றவாளிகளின் செய்திகளை வெளியிடுவதே இல்லை. தின மலர் இதனை தொடர்ந்து செய்து வருகிறது.

suvanappiriyan said...

சலாம் சகோ ஆஷிக்!

//மீண்டும் புத்துணர்வூட்டும் ஒரு செய்தி.

காவிக்கரை படியாத நேர்மையான காக்கி சட்டைகள் நம்முடன் தொடர்ந்து வாழ்ந்து வருவது அறிந்து மகிழ்ச்சி.//

வட நாட்டைப் போல் தமிழ் நாட்டையும் ஆக்கலாம் என்று மனக் கோட்டை கட்டி வருகின்றனர். ஆனால் தமிழர்கள் இவர்களின் மாய வலையில விழத் தயாராக இல்லை என்பதை இனிமேலாவது உணர்ந்து இந்து மதத்தில் சீர் திருத்தங்களை செய்ய முயல வேண்டும்.

suvanappiriyan said...

சகோ விஜய்!

//நேரடியான இந்து-முஸ்லிம் மோதல்கள் இல்லாத இந்த நேரத்தில் இவ்வாறான சித்தரிப்புக்கள் வீண் வன்முறைகளை உருவாக்கி விடும் (அப்போ தானே பல தாக்கரேகள் வர முடியும் !!!!!!!!!!!!!!!)...ஆனால் இவர்களை இந்துக்கள் தங்கள் ஏக பிரதிநிதிகள் ஆகா ஏற்று கொள்ள மாட்டர் என்பது கண் கூடு //

உங்களைப் போன்ற நடுநிலையாளர்கள் பெரும் பான்மையாக இந்த நாட்டில் இருக்கும் வரை இந்துத்வா தனது சரித்திரத்தை இந்த மண்ணில் எழுத முடியாது என்பது மட்டும் நிச்சயம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சலாம் சகோ அப்துல் அஜீஸ்!

//எல்லா மாநிலத்திலும் தங்களுடைய ஆக்டோபஸ் காலை விரித்து வைத்தாகிவிட்டது.அமைதி பூங்காவை இரத்தவாடையை ஏற்படுத்தியாவது கைப்பற்ற வேண்டுமென்பது RSS மற்றும் பார(தீய )திய ஜனதா கட்சியின் நெடுநாளைய ஆசை.எப்படியெல்லாமோ குழியை பறித்துதான் பார்க்கிறார்கள் கடைசியில் அந்த குழியில் தாங்களே விழுந்துவிடுகின்றார்கள்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ இக்பால் செல்வன்!

//மதங்கள் என்பது ஒருக் கட்டத்தில் மதப்பித்தும், மதவெறியையும் தூண்டிவிடக் கூடியதே. இந்த பா.ஜா.கா. ஆர்.எஸ்.எஸ், சிவசேனை உட்பட மதம், சாதி சார்ந்த அத்தனைக் கட்சிகளையும் தடை செய்ய ப்பட வேண்டும். அப்படிச் செய்தால் தான் இந்தியா இன்னொரு ஆப்கானிஸ்தானாக, பாகிஸ்தானாக மாறாமல் இருக்கும் ...//

உண்மையான வார்த்தை.

//சுவனப்பிரியனின் பதிவுகளை கொஞ்ச நாளாக காணோமே. பிஸியா, அல்லது உடல்நலக் குறைவா .. ! அவ்வப்போது எழுதுங்கள். நீங்கள் இல்லாமல் போர், அடிக்குது .. ! //

அதான் வந்துட்டம்ல....:-)

வருட கடைசி! எனவே இன்வெண்ட்ரியினால் கொஞ்சம் பிஸி. இனி அவ்வப்போது தலையை காட்டுகிறேன்.

suvanappiriyan said...

//கஸால்லி போன்ற இளம் செயல்வீரர்கள் எந்த கடவுளையும் நம்பாமல் இருப்பதற்கு உரிமை உண்டு என்று உரத்து கூறூகிறார்கள்.//

தமிழ் நாட்டில் நாத்திகர்கள் இந்துக்களாகவே கருதப்படுகின்றனர். அவர்களின் குடும்ப பெண்களிலிருந்து பிள்ளைகள் வரை இந்து மத பழக்க வழக்கங்களை விட்டு விடுவதில்லை. பெயருக்கு நாத்திகர் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இந்த சமூகத்தில் வாழ வேண்டுமாயின் ஏதாவதொரு மதத்தை அல்லது மார்க்கத்தை பின் பற்றியே ஆக வேண்டிய கட்டாயம்!

எனது சொந்தத்திலேயே ஒரு நாத்திகர் உள்ளார். அதற்காக அவரை யாரும் துன்புறுத்தவில்லை. அவர் பாடு அவர் கடவுளின் பாடு. இஸ்லாத்தை விட்டு ஒருவர் செல்வதால் இந்த மார்க்கத்துக்கு எந்த நஷ்டமும் இல்லை. நஷ்டம் இஸ்லாத்தை விடுபவருக்கே!

Unknown said...

இஸ்லாத்தை விட்டு ஒருவர் செல்வதால் இந்த மார்க்கத்துக்கு எந்த நஷ்டமும் இல்லை. நஷ்டம் இஸ்லாத்தை விடுபவருக்கே! super ....super

Unknown said...

இஸ்லாத்தை விட்டு ஒருவர் செல்வதால் இந்த மார்க்கத்துக்கு எந்த நஷ்டமும் இல்லை. நஷ்டம் இஸ்லாத்தை விடுபவருக்கே! super ....super

Unknown said...

//மதங்கள் என்பது ஒருக் கட்டத்தில் மதப்பித்தும், மதவெறியையும் தூண்டிவிடக் கூடியதே. இந்த பா.ஜா.கா. ஆர்.எஸ்.எஸ், சிவசேனை உட்பட மதம், சாதி சார்ந்த அத்தனைக் கட்சிகளையும் தடை செய்ய ப்பட வேண்டும். அப்படிச் செய்தால் தான் இந்தியா இன்னொரு ஆப்கானிஸ்தானாக, பாகிஸ்தானாக மாறாமல் இருக்கும்//

கண்டிப்பாக மத வெறியை தூண்டும், எந்த ஒரு அமைப்பும் கட்சியும் இந்த நாட்டிற்கு தேவையற்றதே, ஜாதி மதம் சார்ந்த அமைப்புகள், கல்வி நிலையங்களாக இருந்தால் கூட தடை செய்யப்பட வேண்டும்.

அது போல 'என் மதம் உயர்ந்தது, நீங்கள் கரை பட்டதை பின்பற்றுகிறீர்கள், பொய்யை பின்பற்றுகிறீர்கள் என்று கூறி மத மாற்றம் செய்யும் தாவா அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும். பெரும்பாலான மத பிரச்சனைகளுக்கு இந்த மத மாற்ற பிரச்சாரமே முக்கிய காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. இது போல மத மாற்றம் செய்பவர்களை கடுமையாக தண்டிக்க சட்டம் இயற்ற வேண்டும் . இந்தியா இன்னொரு பாகிஸ்தானாக மாறாமல் இருக்க இத மத மாற்ற தாவா கூட்டங்களை தடை செய்வதும் அவசியம் என்று நினைக்கிறேன்,

சுவனப்ரியர் என்ன நினைக்கிறார்?

//
உண்மையான வார்த்தை. //

நமக்கு சாதகமாக இருக்கும் என்றால் எதுவுமே உண்மையான வார்த்தை தானே

suvanappiriyan said...

அனந்தன் கிருஷ்ணன்!

//அது போல 'என் மதம் உயர்ந்தது, நீங்கள் கரை பட்டதை பின்பற்றுகிறீர்கள், பொய்யை பின்பற்றுகிறீர்கள் என்று கூறி மத மாற்றம் செய்யும் தாவா அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும். பெரும்பாலான மத பிரச்சனைகளுக்கு இந்த மத மாற்ற பிரச்சாரமே முக்கிய காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.//

முன்பு இந்துக்களாக இருந்த எனது முன்னோர்கள் இஸ்லாத்தை ஏற்க காரணம் என்ன? ஒரு மனிதன் தனது பெற்றோர் பின் பற்றிய மதத்தை விட்டு வேறொரு மதத்துக்கு செல்வது என்பது அவ்வளவு சுலபத்தில் நடந்து விடக் கூடியது அல்ல. அவனது கலாசாரமும் மாறுகிறது. பெயர் மாறுகிறது. வணக்க வழிபாடுகள் மாறுகிறது. சமூகத்தில் மதம் மாறுபவனை பார்த்து இழி சொற்களும் கூறப்படுகின்றன. இத்தனையையும் தாங்கிக் கொண்டு அவன் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறான் என்று கொஞ்சம் சிந்தியுங்கள்.

தர்மபுரி ராமநாதபுரம் கலவரத்தின் முக்கிய காரணம் சாதி ஏற்றத் தாழ்வு என்பதை மறுக்க முடியுமா? இன்று வரை சாதி வெறி குறைவதற்கு பதில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் வெறுப்புற்று தனக்கு ஒரு புகலிடம் கிடைக்காதா என்று அவன் ஏங்கி நிற்கும் போது கண்ணெதிரே தெரியும் இஸ்லாத்தை பற்றி பிடித்துக் கொள்கிறான்.

இதுதான் உண்மை. பணத்துக்காக ஒருவன் மாறினால் இதை விட அதிகம் தர காத்திருக்கும் கிறித்துவத்தைத்தான் அவன் நாட வேண்டும்.எனவே தவறு உங்களிடம் உள்ளது. அந்த மக்களை சகோதர பாசத்தோடு அரவணையுங்கள். அதன் பிறகு அவன் மதம் மாறுவதை ஓரளவு உங்களால் தடுக்க முடியும்.

Unknown said...

சகோ சுவனப்பிரியன்,

மன்னிக்கவும் ..நான் வசிப்பது ஈழத்திரு நாட்டில்...ஆனா தாய் வீடு இந்தியா தான் ..இருந்தாலும் இங்கு சாதிய கொடுமைகள் குறைவு எனினும் அதன் பாதிப்புக்கள் இன்னும் தொடர்கின்றது..குறிப்பாக மலையக பகுதிகளில் இன்றும் சிரட்டை குவளை முறை,வழிபாடுகளில் சாதீய பாரபட்சம்,அறிமுகத்தின் போதே சாதியை கேட்பது இன்றும் தொடர்கிறது...இதன் விளைவு நாட்டில் மற்ற பகுதிகளை விட மலையகத்தில் மத மாற்றம் அதிகமாக உள்ளது...அடிக்கடி குடும்பமாக இஸ்லாம்,கிறிஸ்தவத்துக்கு மாறும் குடும்பங்களின் விளம்பரங்களை பத்திரிகைகளில் காணலாம் (சட்ட தேவைப்பாடு )....

பள்ளிப்படிப்பின் பின்னர் நான் வேலைக்கு சேர்ந்த அலுவலகத்தில் என்னிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி ....தம்பி நீங்க ஆசாரி சாதியா ?????அதுவும் கொழும்பில் .....சுவனம் சார் ,இவங்க எப்போ திருந்துவாங்க ???

suvanappiriyan said...

சகோ விஜய் !

//பள்ளிப்படிப்பின் பின்னர் நான் வேலைக்கு சேர்ந்த அலுவலகத்தில் என்னிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி ....தம்பி நீங்க ஆசாரி சாதியா ?????அதுவும் கொழும்பில் .....சுவனம் சார் ,இவங்க எப்போ திருந்துவாங்க ??? //

உங்களின் ஆதங்கம் புரிகிறது. சாதி வித்தியாசம் படித்தால் ஒழிந்து விடும் என்றார்கள். ஆனால் படித்து தெளிவடைந்த பின் தான் சாதி வெறி புரையோடி போயிருக்கிறது. அதிலும் நீ உயர்ந்தவன். நான் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு வேறு. இதற்கு மூல காரணம் இந்து மத ஸ்மிருதிகளான மனு சட்டங்களே! காலம் காலமாக ரத்தத்தில் ஊறி உள்ளது. இந்த குறையை நீக்காமல் யாராவது இஸ்லாத்துக்கு மாறி விட்டால் அவர்களை பணத்துக்காக மாறி விட்டார்கள் என்று இழிவாக பேசுவதும் தொடரும். தற்போது தவ்ஹீத் ஜமாத்தின் அலுவலகங்களில் இஸ்லாத்தை ஏற்கும் இந்து மத இளைஞர் கூட்டம் முன்னெப்போதையும் விட அதிகமாக உள்ளது. அது இலங்கையிலும் எதிரொலிக்கிறது.

உங்களைப் போன்ற இளைஞர்களின் தீவிர பிரசாரத்தின் மூலமே இந்து மதத்தில் சாதியை ஒழிக்க முடியும். ஆனால் இளைஞர்களோ சினிமாவிலும், காதலிலும், மதுவிலும் காலத்தை கழிப்பது வேதனையாக உள்ளது.