Followers

Wednesday, November 14, 2012

காதல் என்ற மாயை சாதி கலவரமாக மாறியது ஏன்?

காதல் என்ற மாயை சாதி கலவரமாக மாறியது ஏன்?

நமது சமூகத்தில் இன்று பரவலாக வளர்ந்து வரும் வியாதி காதல். அரும்பு மீசை முளைக்க தொடங்கும் முன்னே ஒரு துணையை தேட ஆரம்பித்து விடுகின்றான். கேடுகெட்ட கூத்தடிகளான சினிமாத் துறையினரும் தங்கள் பங்குக்கு காதல் சீரழிவை உரம் போட்டு வளர்க்கின்றனர். ஒரு ஹீரோவாக இருந்தால் பெண்களை சீண்ட வேண்டும்: அந்த பெண்ணின் அப்பனிடம் மல்லுக்கு நிற்க வேண்டும். முடியாத பட்சத்தில் பெண்ணை இழுத்துக் கொண்டு ஓட வேண்டும். இப்படியே படங்களை எடுத்து நமது இளைஞர்களை ஒரு வழி பண்ணி விட்டனர் இந்த கூத்தாடிகள்.






இந்த சினிமாக்களை பார்த்து காதல் செய்வதையே முழு நேர வேலையாக கொண்டிருக்கும் கல்லூரி மாணவர்களிலிருந்து கால் காசுக்கு வழி இல்லாதவன் வரை செய்யும் லூட்டிகளை பார்த்து அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.

தான் திருமணம் செய்யப் போகும் பெண்ணை பார்ப்பதையோ திருமணத்துக்கு முன்பு சென்று பேசுவதையோ நாம் தடை சொல்லவில்லை. அதற்கும் ஒரு அளவு உண்டு. படிக்க வந்த பெண்ணை ஆசை வார்த்தை காட்டி காதல் என்ற பெயரில் சினிமா, பீச், ஹோட்டல், என்று சுற்றிவிட்டு சில நேரங்களில் லாட்ஜூக்கும் அழைத்து செல்கிறார்கள். இந்த நேரங்களில் இருவருமே தங்களின் குடும்பத்தை நினைத்துப் பார்ப்பதில்லை. சாதி பாகுபாடு, மத பாகுபாடு, பொருளாதார பாகுபாடு அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு முடிவில் ஓடி விடுகின்றனர். சில காலத்திற்கு பிறகு ஆசை அறுபது நாள் என்பது தெரிந்தவுடன் அந்த பெண்ணை அம்போ என்று விட்டு விட்டு ஓடி விடுவதை பார்க்கிறோம். திக்கு தெரியாத காட்டில் சிக்கிய அந்த அபலைப் பெண் முடிவில் விபசார புரோக்கர்களிடம் மாட்டி சீரழிக்கப்படுகிறாள். இதுதான் அநேக நபர்களுக்கு நடந்து வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு தர்மபுரியில் நடந்த கலவரத்தை பார்த்திருப்போம். இந்த கலவரத்துக்கு மூல காரணமே காதல் விவகாரம். தலித்களுக்கு சமூக அந்தஸ்தை கொடுக்க எந்த ஆதிக்க சாதியினருக்கும் விருப்பமில்லை. நிலைமை இவ்வாறு இருக்க வன்னிய இன பெண்ணை அந்த இளைஞன் காதலித்தது முதல் தவறு. அடுத்து அந்த பெண்ணை அனுப்பி விடுங்கள் என்று கேட்ட போதே தலித் மக்கள் அந்த பெண்ணை அனுப்பியிருக்க வேண்டும். அல்லது காவல் துறையிடம் ஒப்படைத்திருக்க வேண்டும்.

வன்னிய இனத்தவர் பெண்ணின் தகப்பனை கண்டபடி பேசியதில் அவர் தற்கொலை செய்து கொள்கிறார். இதன் பிறகு வெகுண்டெழுந்த மக்கள் தலித் கிராமத்தை தீ வைத்து கொளுத்தியுள்ளனர். தீயிட வந்தது மட்டும் இவர்கள் குறிக்கோளாக இல்லாமல் கொள்ளை சம்பவங்களும் நிறைய நடந்துள்ளது. தலித்கள் முன்னேறுவதை தடுக்க இதனை வாய்ப்பாக பயன்படுத்தியி ருக்கின்றனர். பீரோக்களை உடைத்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர். நகைகளை கொள்ளையடித்துள்ளனர். 250 வீடுகளுக்கு மேல் அந்த கும்பல் தீ வைத்துள்ளது.

சுமார் 60 இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. வாடகைக்கு ஓட்டிப் பிழைத்து வந்த டாடா ஏஸ் வாகனங்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதப்படுத்தப்பட்டுள்ளது. அண்ணா நகரில் சுமார் 50 வீடுகள் எரிக்கப்பட்டுள்ளது. இங்கே சுமார் 48 கேஸ் சிலிண்டர்களைத் திருடிச் சென்றுள்ளனர். கொண்டாம்பட்டியில் 90 வீடுகள் எரித்து சாம்பலாக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக கைது எண்ணிக்கை 138 ஆக அதிகரித்துள்ளது. தற்போது பதற்றம் தணிந்து இயல்பு நிலை திரும்பி உள்ளது. இருப்பினும் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். செல்லங்கொட்டாய் கிராம ஆண்கள் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். பாதிக்கப்பட்ட கிராமங்களை அரசியல் கட்சி குழுவினர் மற்றும் மனித உரிமை, ஆதிதிராவிடர் நல ஆணைய குழுவினர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர்.

சாதி வெறி வேரூன்ற மூல காரணம் எதுவோ அதனை தேடி அழிக்காமல் கலப்பு திருமணம் செய்தால் சாதி ஒழிந்து விடும் என்று சொல்பவர்கள் இந்த கலவரத்துக்கு என்ன பதிலை வைத்திருக்கிறார்க்ள. இந்த மக்கள் அனைவருமே உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள். வாங்கும் சம்பளத்தில் பாதி சாராயத்திலும் மீதி சாப்பாட்டிலுமாக அநேகமாக எதுவும் மிஞ்சுவதில்லை. ஏதோ ஒரு சிலர் இவர்களின் வாரிசுகள் அரசு உத்தியோகம் பார்ப்பதால் தற்போது சிறிது சேமிப்பு இவர்களிடம் தென்படுகிறது. இந்த ஏரியாக்கள் முன்பு நக்ஸல்களின் பிடியில் இருந்தது. பல அரசு திட்டங்கள் இந்த மக்களை சென்றடைந்ததால் நக்ஸல் இயக்கத்திலிருந்து விலகி இன்று சமூகத்தில் இரண்டற கலக்க ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு முன்னேறி வரும் சமூதாயத்திற்கு இத்தகைய இழப்புகளைக் கொடுத்தால் அவர்களால் தாங்க முடியுமா? இதனால் வெறுப்புற்று திரும்பவும் நக்ஸல் இயக்கத்தில் இளைஞர்கள் சேர ஆரம்பித்தால் அது ஒட்டு மொத்த மாவட்டத்துக்கும் தீராத பிரச்னையை உண்டு பண்ணாதா?

“வன்னிய இனப் பெண்களை கலப்புத் திருமணம் செய்பவர்களை வெட்டுங்கடா…வன்னியர் சங்கத் தலைவர் நான் சொல்கிறேன்” – கடந்த சித்ரா பவுர்ணமி தினத்தன்று மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் சங்க விழாவில் தங்களது கொள்கையை விளக்கி சிறப்புரை ஆற்றிய காடுவெட்டி குரு இவ்வாறு பேசியிருக்கிறார். இதனை ராமதாஸூம் மகன் அன்பு மணியும் அதே மேடையில் அமர்ந்து பேச்சை ரசித்துக் கொண்டிருந்தனர். இது ஒரு தலைவருக்கு அழகாகுமா? இன்று வரை பாதிக்கப்பட்ட மக்களை சென்று முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் எவரும் பார்க்கவில்லை. ஏனெனில் அவர்களுக்கு அந்த கிராமங்களிலிருந்து கிடைக்கும் ஓட்டுக்களே முக்கியம். மக்களின் நலனைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை.

எனவே நான் வைக்கும் கோரிக்கை சாதிகளுக்குள் உள்ள ஏற்றத் தாழ்வுகளை களைய முதலில் பாடுபடுங்கள். அதன் பிறகு பெற்றோர்களின் சம்மதத்தோடு தாராளமாக கலப்பு திருமணம் செய்து வையுங்கள். கலப்பு திருமணம் செய்கிறேன் என்று ஒவ்வொரு ஊரிலும் கலவரங்களை உண்டு பண்ணாதீர்கள்.

19 comments:

Unknown said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்

நல்ல பதிவு ...இன்றைய சமுதாய சீரழிவுக்கு சினிமா கூத்தாடிகளின் பங்கு மிகையானது...ஒரு ஹீரோ என்று இருந்தால் ஒரு ஹீரோஇன் இருப்பதும் அவர்கள் லவ்வுவதும் ஒரு சட்டம் போல...இவர்கள் சமுதாயத்துக்கு மெசேஜ் சொல்லுகிறார்களாம் !!! அடப்பாவமே..என்னதான் சொல்லுகிறார்கள் என்றால் பிரியமுடன் என்னும் படத்தில் நம்ம டாக்குடர் தனது நண்பனின் காதலியை தட்டி பறிப்பதற்காக உயிரையும் விடுவார்..இதே டாக்குடர் தான் சாஜஹான் என்னும் படத்தில் தனது காதலியை நண்பனுக்கு தாரை வார்ப்பார்..என்னதான் இவர்கள் சொல்ல வருகிறார்களோ !!!பாவம் இவரது அடிவருடிகள் ..இதில் நேற்று ரத்தத்தால் அபிசேகம் வேறு..

அதே போல் இரண்டரை மணி நேர படத்தில் சாதி பெருமையை பேசுவதற்கு ஒருவர் வில்லனாக இருப்பார்..இரண்டுமணி இருபத்தைந்து நிமிடங்கள் வரை சாதி பெருமை பேசுபவர் கடைசி ஐந்து நிமிடங்களில் திருந்திவிடுவார்.அதுகூட படம் முடியபோய் தான்..!!! சமீபத்தில் சசிகுமார் என்ற நடிகர் நடித்த படத்தில் ஜாதி பெருமையை காட்டியிருப்பர்...

அரசியலை பற்றி சொல்லவே வேண்டாம்..ஜாதி மத பிரிவால்தான் பொழப்பே ஓடுகிறது...

சினிமா அரசியல் இது இரண்டும் மனது வைத்தால்தான் ஜாதி ஒழியும் ...மறந்து போன தலைமுறைகளுக்கு இவர்கள் தான் பாலுற்றி வளர்கிறார்கள்

கடைசியாக இங்கு நாம் சொல்கின்ற விஷயம் நல்ல விஷயம் ஆனால் சொல்வது நாமல்லவா.??? அதனால் இங்கும் இஸ்லாத்தை இழுப்பார் இயலாதோர் ....!!!

நன்றியுடன்
நாகூர் மீரான்

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

// தலித்களுக்கு சமூக அந்தஸ்தை கொடுக்க எந்த ஆதிக்க சாதியினருக்கும் விருப்பமில்லை. நிலைமை இவ்வாறு இருக்க வன்னிய இன பெண்ணை அந்த இளைஞன் காதலித்தது முதல் தவறு. அடுத்து அந்த பெண்ணை அனுப்பி விடுங்கள் என்று கேட்ட போதே தலித் மக்கள் அந்த பெண்ணை அனுப்பியிருக்க வேண்டும். அல்லது காவல் துறையிடம் ஒப்படைத்திருக்க வேண்டும்.
//

உங்களைப்போன்ற பழமைவாத மதவாதிகளிடமிருந்து இதை தவிர வேறு என்ன எதிர்ப்பார்க்க முடியும்?

இதில் வேறு ராச நடை ஏன் கருத்தே சொல்லவில்லை என கேள்வி :-))

நடந்த வன்முறையை கண்டிக்க யோக்கியதை இல்லை, காதல் திருமணம் செய்தால் இப்படித்தான் செய்வார்கள் என வியாக்கியாணம்.

எங்கோ உட்கார்ந்து கொண்டு எப்படி கண்டிப்பிடித்தீர்கள்?

காவல் நிலையத்தில் அழைத்து விசாரித்து அப்போது பெண் காதலனுடன் வாழ விரும்புவதாக சொன்ன பின்னரே அனுப்பப்பட்டுள்ளார்.

18 வயதுக்கு மேல் விருப்ப பட்டவருடன் திருமணம் செய்ய ஆண்,பெண் இருவருக்கும் உரிமை உண்டு, அவர்கள் பாதுகாப்பு கேட்டால் காவல் துறை கொடுக்க வேண்டும்.

காவல் நிலையங்களிலேயே காதல் திருமணங்கள் நடத்தப்படுவதுண்டு.

நீங்கள் சொல்வது அரசின் சட்டத்திற்கு எதிரான கருத்து ஆகும்.

நீங்கள் ஏன் கணினி எல்லாம் பயன்ப்படுத்திக்கொண்டு இருக்கீரிர்கள்,கல் வெட்டிலோ,ஓலைச்சுவடியிலோ எழுதலாமே :-))

UNMAIKAL said...

முஸ்லிம்கள் எதிர்ப்பு எதிரொலி...

இன்று நடக்கவிருந்த துப்பாக்கி பிரஸ் மீட் ரத்து !


!Published: Thursday, November 15, 2012, 13:09 [IST]
Posted by: Shankar

இன்று நடக்கிவிருந்த துப்பாக்கி பட சக்ஸஸ் பிரஸ்மீட் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம் துப்பாக்கியில் இஸ்லாமியரை தீவிரவாதிகளாக சித்தரித்து படம் எடுத்திருப்பதால் எழுந்துள்ள சர்ச்சைதான் என்கிறார்கள்.

தீவிரவாதத்தைப் பற்றி படமெடுத்தாலே ஏன் முஸ்லிம்களை மட்டும் தீவிரவாதிகளாகச் சித்தரித்து அவமானப்படுத்துகிறீர்கள் என்று கோஷம் எழுப்பி விஜய் வீட்டை முஸ்லிகம்ள் முற்றுகையிட்டனர்.

இந்தப் போராட்டத்தில் 60 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் படத்தின் சக்ஸஸ் பிரஸ்மீட் இன்று சென்னை ரெயின் ட்ரீ ஓட்டலில் நடப்பதாக இருந்தது.

ஆனால் பிரஸ்மீட்டுக்கு வரும் செய்தியாளர்கள் யாராவது இந்த பிரச்சினை குறித்து கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளிக்கப்போய் சிக்கலில் சிக்கிக் கொள்வோமோ என பயந்து பிரஸ் மீட்டையே ரத்து செய்து விட்டார்களாம்.

தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த பிரஸ் மீட் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நபிகளை அவமானப்படுத்தும் விதமாக படமெடுத்த ஹாலிவுட் டைரக்டரை கண்டித்து முஸ்லிம்கள் சென்னையையே ஸ்தம்பிக்க வைத்தது நினைவிருக்கலாம்.

ஒருவேளை துப்பாக்கி தயாரிப்பாளர்களுக்கு அந்த போராட்டம் நினைவுக்கு வந்துவிட்டதோ என்னமோ..!


SOURCE: http://tamil.oneindia.in/movies/news/2012/11/thuppakki-press-meet-cancelled-due-164684.html

suvanappiriyan said...

திரு வவ்வால்!

//உங்களைப்போன்ற பழமைவாத மதவாதிகளிடமிருந்து இதை தவிர வேறு என்ன எதிர்ப்பார்க்க முடியும்?//

காடு வெட்டி குரு பேசியதை போட்டு நடந்த வன்முறையை கண்டித்ததை பார்க்கவில்லையா? காதலுக்கு எதிரானவன் அல்ல நான். ஒரு சமூகத்தை ஒட்டு மொத்த ஆதிக்க சாதிகளும் வெறுத்து வரும் நிலையில் கலப்பு திருமணம் எதிர்ப்பில் செய்ய வைத்து எதனை சாதிக்க போகிறீர்கள்? உயிர் பலியும், பொருள் நஷ்டமும் ஏற்பட்டதுதான் மிச்சம். முதலில் தலித் மக்களை மற்ற சாதி மக்களைப் போல் பொதுவில் குடியமர்த்துங்கள். அவர்களை சேரி பகுதியில் தனியாக வைத்திருப்பதுதான் பல தீண்டாமைகளுக்கு காரணம். அரசு ஒதுக்கும் நிலங்களில் பார்ப்பனர், செட்டியார், தேவர், வன்னியர், தலித் என்று அனைவருக்கும் வரிசையாக வீடுகளை ஒதுக்க வேண்டும். இதை செய்தாலே ஓரளவு தீண்டாமையை ஒழித்து விடலாம். ஒரு சமத்துவம் ஏற்பட்ட பிறகு பிறகு காதலித்து கொள்ளுங்கள்.

அடுத்து தீண்டாமையை ஆதரிக்கும் அனைத்து நூல்களையும் தடை செய்து சட்டம் இயற்ற வேண்டும். இதுவும் ஓரளவு பலன் தரும்.

ராவணன் said...

///அடுத்து தீண்டாமையை ஆதரிக்கும் அனைத்து நூல்களையும் தடை செய்து சட்டம் இயற்ற வேண்டும். இதுவும் ஓரளவு பலன் தரும்///

அண்ணாச்சி...ஒங்க அல்பூரான் பொத்தகத்தையும் தடை செய்துவிட்டால்...? எதுக்கு அண்ணாச்சி நமக்கு?

suvanappiriyan said...

ராவணன்!

//அண்ணாச்சி...ஒங்க அல்பூரான் பொத்தகத்தையும் தடை செய்துவிட்டால்...? எதுக்கு அண்ணாச்சி நமக்கு?//

குரானில் எந்த இடத்தில் சாதி வேற்றுமையை போற்றுகிறது என்று சொல்ல முடியுமா? நானும் தெரிந்து கொள்கிறேன்.

suvanappiriyan said...

கொண்டம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜூ தாழ்த்தப்பட்ட தோழர். அவரின் மகன் நேதாஜி வன்னியப் பெண்ணான முத்து லட்சுமியைக் காதல் செய்து திருமணம் செய்து கொண்டார்.

ஒன்றரை ஆண்டுகள் அவர்கள் எங்கு இருந்தனர் என்று தெரியவில்லை. சென்னையில் இருந்ததாகப் பிறகு தெரிய வந்தது. ஒரு நாள் திடீரென பத்து பேர் ராஜூவின் வீட்டுக்குள் புகுந்து அடித்து நொறுக்கினார்கள். ஓடிப் போய் முள் செடிக்குள் பதுங்கிக் கொண்டனர். காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று புலம்பிய ராஜூவின் வீடு இந்த முறையும் தாக்கப்பட்டது. தீக்கு இரையாக்கப்பட்டது. என்னே கொடுமை!

அளிக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள்

நத்தம், கொண்டாம்பட்டி, அண்ணா நகர், ஜாதிக் கலவரத் தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் விவரம்:

கிருட்டினகிரி மாவட்டம் சார்பாக ரூ.10,000/-, தொழிலதிபர் கே.வி.சண்முகம் ரூ.5000, கோகுல் மேட்ச் இண்டஸ்ட்ரீஸ் கே.எம்.சுப்ரமணி ரூ.5000, இரா. வேட்ராயன் 20 போர்வைகள், வீ. சிவாஜி 20 போர்வைகள், ஊமை செயராமன் 20 போர்வைகள், தமிழ்ப் பிரபாகரன் 100 கி.கி. அரிசி, கிருட்டினமூர்த்தி 10 போர்வைகள், கருபாலன் (50கி) 2 சிப்பம் அரிசி, தமிழ்ச்செல்வன்5 போர்வைகள், கருணாநிதி (கருநாடக மாநில தி.மு.க து. அமைப்பாளர்) 10 பெட்சீட், கே.வி.கே. சாமி RTO ஆபீஸ் 20 பெட்சீட், இ.பி. முனுசாமி 5 பெட்சீட், கே. திருமால் வழக்கறிஞர் 50 கி. அரிசி, சி. காமராசு 5 போர்வைகள், கதிர் செந்தில் 10போர்வைகள், திருமதி ஜெயலட்சுமி 8 போர்வைகள்,

ஆர். பரிமளம் 5 போர்வைகள், டி.டி. தனபால் துரைசிங் 8 போர்வைகள், ஆர். சின்னராசு 10 போர்வைகள், சரவணன் 20 போர் வைகள், கே.ஜெ. கிஷோர்குமார் 20 போர்வைகள், இ. மாதன்10 போர்வைகள், ஓவியர் சித்தார்த்தன் 6 போர்வைகள், பெ. மதிமணியன் 5 போர்வைகள், வே. கனிமொழி 2 சிப்பம் அரிசி, வே. மலர்விழி 2 சிப்பம் அரிசி, வே. கவியரசி 2 சிப்பம் அரிசி, பி. ராதா பிஎஸ்என்எல் 10 போர்வை, எல்.அய்.சி. பரமசிவம் 10 பாய்கள்,

விமலா சிவாநந்தம் பிஎஸ்என்எல் 20 பாய்கள், கே.ஆர். குமார் 5 போர்வைகள், ஆசிரியர் தீ சிவாஜி, 4 போர்வைகள், ஆசிரியர் சாமிநாதன் 4 போர்வைகள், மணிவேல் ஆசிரியர் 3 போர்வைகள், மா. கிருட்டிணன் 1 சிப்பம் அரிசி, சின்னப்பா சக்கரை 75 புடவை, தி.மு.க. ஒன்றிய குழு உறுப்பினர் 75 சட்டை, 75 ஜாக்கெட், அண்ணாமலை 10 போர்வைகள், ஆர். சின்னசாமி (பிஎஸ்என்எல்) 5 போர்வைகள்.

யசோதா சின்னராசு கவுரி - ரவி வீடுகள் சாம்பல்

இந்த இரு பெண்களும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இவர்களின் துணைவர்களோ தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நத்தம் கிராமத்தில் வசிக்கக் கூடியவர்கள்; எந்தவிதப் பிரச்சினையுமின்றி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த வர்கள் ஜாதிச் சிக்கல் அவர்களைப் பொறுத்த வரையில் ஒன்றும் இல்லை. அவர்கள் வீட்டையும் ஜாதி வெறியர்கள் தீ மூட்டி ஆடித் தீர்த்தனர். பதினேழரைப் பவுன் நகைகள், 27 ஆயிரம் ரூபாய் பணம் முதலிய வற்றைத் திருடி வீட்டையும் தீக்கிரையாக்கினர்.

வசந்தா கதறல்!

எங்கள் வீட்டில் இருந்த பீரோவைத் திறக்க முடியாததால், பீரோவையே தூக்கிச் சென்று விட்டனர் என்று கதறினார் சகோதரி வசந்தா.

ஆசிரியை ஜீவா கண்ணீர்

திடீர் என்று ஒரு கும்பல் எங்கள் வீட்டுக்குள் புகுந்தது. பீரோவை உடைத்து 10 பவுன் நகைகளையும் 35 ஆயிரம் ரூபாயையும் அள்ளிச் சென்றனர். வீட்டுக்கும் தீ வைத்தனர். ஓர் அறைக்குள் குழந்தையுடன் ஒளிந்து கொண்டிருந்த நான் பதறி அடித்து வெளியில் ஓடி விட்டேன் என்று கண்ணீர் விட்டார்.

http://thamizhoviya.blogspot.com/2012/11/blog-post_4588.html

suvanappiriyan said...

சகோ சார்வாகன்!

இந்த கூத்தாடிகளை நான் பெரிது படுத்துவதில்லை. ஆனால் தொடர்ந்து இவர்கள் தவறு செய்பவன் இஸ்லாமியன் என்ற பிம்பத்தை உருவாக்க அதீத முயற்சி எடுக்கிறார்கள். மோடி 2000 பேரை கொன்று குவித்தானே! அவனை வை த்து ஒரு படம் எடுக்கலாமே? ஏன் எடுக்க வில்லை? மாலேகானில் திட்டமிட்டு குண்டு வைத்து முஸ்லிம்களைகொன்று அதற்கு காரணம் என்று இஸ்லாமியர்களையே கைது செய்தார்களே? இதை வைத்து ஏன் படம் எடுக்கவில்லை? கடைசியில் கைதானது பெண் துறவி? பிரக்யாசிங் அல்லவா? இதன் பின்னணியில் முருகதாஸ் ஒரு படத்தை ஏன் எடுக்கவில்லை? 'கஜினி' என்ற முஸ்லிம் பெயரை சம்பந்தமில்லாமல் தனது முந்தய படத்துக்கு முருகதாஸ் வைத்ததன் பின்னணி என்ன?

காரணம் வேறொன்றுமில்லை. இஸ்லாத்தை கருத்துகளால் சந்திக்க முடியாது. எனவே தான் இந்துத்வா கை கூலிகள் இந்த முறையிலாவது இஸ்லாத்தை களங்கப்படுத்த முனைகின்றனர். வழக்கம்போல் இந்த முறையிலும் தோல்வியையே தழுவுவார்கள்.

suvanappiriyan said...

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த துப்பாக்கி படத்தில் இஸ்லாமிய சமுதாய மக்களை புண்படுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி இஸ்லாமிய அமைப்புகள் துப்பாக்கி படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தயாரிப்பாளர் தாணு, ஹீரோ விஜய் ஆகியோருக்கு கண்டனங்களும், அவர்களுக்கு எதிராக போராட்டங்களும் அறிவித்தனர்.

இதுபோன்ற பின்விளைவுகளை எதிர்பார்க்காத இயக்குனரும், தயாரிப்பாளரும், ஹீரோவும் அதிர்ச்சி அடைந்தனர். இஸ்லாமிய அமைப்புகளின் தீவிர எதிர்ப்புக்கு இணங்கி ஏ.ஆர்.முருகதாஸ், தாணு, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் இஸ்லாமிய சமுதாயப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சில மணிநேரங்கள் நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய துப்பாக்கி பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் “ துப்பாக்கி படத்தை முழு கமர்ஷியல் எண்டர்டெயின்மெண்ட் படமாக எடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தான் எடுத்தோம். யார் மனதையும் புண்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்கவில்லை. துப்பாக்கி படத்தில் இஸ்லாமிய மதத்தினரின் மனது புண்படும் நோக்கில் இருக்கும் காட்சிகள் நீக்கப்படும்.

இஸ்லாமிய மக்களின் மனது புண்படும் வகையில் சில காட்சிகள் அமைந்ததை நினைத்து வருந்துகிறோம். இந்த தவறு தெரியாமல் நடந்ததே தவிர திட்டமிட்டு நடக்கவில்லை. தெரியாமல் நடந்த இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறினார்.

துப்பாக்கி பட தயாரிப்பாளர் தாணு பேசிய போது “ இந்த தவறு தெரியாமல் நடந்த ஒன்று. ஒரு இராணுவவீரன் தன்னை ஒரு நாட்டுக்காக எந்த அளவிற்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதையும், நாட்டை காப்பாற்றும் பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் இருப்பதை உணர்த்தும் நோக்கில் தான் படத்தை எடுத்தோம். இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்களும் இராணுவத்தில் சேர்ந்து சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். தெரியாமல் நடந்த இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறினார்.

துப்பாக்கி படம் துவங்கிய போது தயாரிப்பாளராக இருந்த விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில் “ தமிழக இளைஞர்கள் மட்டுமல்லாமல் தாய்மார்களின் நெஞ்சத்திலும் இடம்பிடிக்க நினைத்து நடிப்பவர் விஜய். துப்பாக்கி படத்திற்கு இது போன்ற எதிர்ப்பு வந்தது அதிர்ச்சியளிக்கிறது. அனைத்து மதத்தினரையும், ஜாதியினரையும் விஜய் மதிக்கிறார். அவர்களது ரசிகர்களிலும் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் மனதை புண்படுத்தி விஜய் சந்தோஷப்படமாட்டார். இதற்கு பிராயச்சித்தமாக விஜய்யின் அடுத்த படத்தில் அவர் ஒரு இஸ்லாமியராக நடிப்பார். இஸ்லாமிய மதத்தினரின் விருப்பத்திற்கேற்ப தவறான காட்சிகள் மாற்றப்படும்” என்று கூறினார். துப்பாக்கி படத்திலிருந்து எந்த எந்த காட்சிகள் நீக்கப்படும் என்பது பற்றி ஒரு சில தினங்களில் தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.

-இணைய செய்தி

எல்லாம் சரி. இதற்கு பிராயச்சித்தமா விஜய் அடுத்த படத்துல முஸ்லிமா நடிக்கிறாராமா! இது அதை விட பெரிய கொடுமை. தயவு செய்து இந்த கூத்தாடி கும்பல்கள் இஸ்லாத்தை விட்டுருங்கலேம்பா! புண்ணியமாகப் போகும்.

suvanappiriyan said...

சலாம் சகோ நாகூர் மீரான்!

//நல்ல பதிவு ...இன்றைய சமுதாய சீரழிவுக்கு சினிமா கூத்தாடிகளின் பங்கு மிகையானது...ஒரு ஹீரோ என்று இருந்தால் ஒரு ஹீரோஇன் இருப்பதும் அவர்கள் லவ்வுவதும் ஒரு சட்டம் போல...இவர்கள் சமுதாயத்துக்கு மெசேஜ் சொல்லுகிறார்களாம் //

இந்த சமூகம் சீரழிந்ததற்கு கூத்தாடிகளின் பங்கு மிக முக்கியமானது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ உண்மைகள்!

//இன்று நடக்கிவிருந்த துப்பாக்கி பட சக்ஸஸ் பிரஸ்மீட் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.//

தற்போது சுமூகமான முடிவு காணப்பட்டுள்ளது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

யார் தீவிரவாதி.............???

பொதுமக்கள் முன்னிலையில், மீடியா முன்னிலையில் நேரடி விவாதத்திற்கு தயாரா..........???

இயக்குனர் முருகதாஸ், நடிகர் விஜய் அவர்களே...

இஸ்லாமியர் என்றால் தீவிரவாதியா ? நீங்கள் உண்மையான செய்தியை தான் சொன்னீர் என்றால் யார் தீவிரவாதிகள் என்று விவாதிக்க தயாரா ?

உன்னையும் உன்னை போன்ற காவி பயங்கரவாதிகளின் முகத்திரையும் கிழித்தெறியப்படும்,

ராணுவத்துறையில் எங்களுக்கு கிடைக்கவேண்டிய (இடஒதுகீட்டின் அடிப்படையில் கூட) வேலை கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் எங்கள் சமுதாயத்தை இந்த அளவுக்கு புறம் தள்ள யாரிடம் பாடம் கற்றாய்?

யார் தீவிரவாதி? பொதுமக்கள் மற்றும் மீடியா முன்னிலையில் விவாதிக்க தயாரா?

1) தீவிரவாதத்தை இந்த நாட்டில் அரங்கேற்றுவது யார் ?

2) சம்ஜயோதா எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?

3) சபர்மதி எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?

4) மக்கா மஸ்ஜிதில் குண்டு வைத்தவன் யார் ?

5) அஜ்மீர் தர்காவில் குண்டு வைத்தவன் யார் ?

6) கோவாவில் குண்டு வெடிப்பு நடத்தியவன் யார் ?

7) மாலேகானில் குண்டு வைத்தவன் யார் ?

8) நாடெங்கும் குண்டு வைத்து விட்டு அந்த பழியை முஸ்லிம்கள் மீது போடுபவன் யார் ?

9) குஜராத்தில் 3000 முஸ்லிம்களை கொன்று குவித்தவன் யார் ?

10) நாடு முழுவதும் கலவரத்தை நடத்துபவன் யார் ?

11) நம் தேசத்தந்தை மகாத்மா அவர்களை கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு காந்தியை கொன்றவன் யார் ?

12) விநாயக சதுர்த்தி ஊர்வலத்தின் போது தலித்,மற்றும் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் கலவரத்தை துண்டுபவன் யார் ?

13) பெங்களூரில் பாகிஸ்த்தான் கொடியை ஏற்றி தேச துரோக செயலை செய்து விட்டு முஸ்லிம்கள் மீது பழியை போட்டு பிறகு மாட்டி கொண்டவன் யார் ?

14) மாவீரன் கார்க்ரேவை கொன்றவன் யார் ?

16) ஆந்திராவில் மாட்டு தலையை வெட்டி போட்டு கலவரத்தை தூண்டியவன் யார்?

16) பாபர் மஸ்ஜித்தை இடித்து தரைமட்டமாக்கி உலக அரங்கில் இந்தியாவை தலை குனிய வைத்தவன் யார் ?

17) இந்த நாட்டின் இறையாண்மையை இல்லாமல் ஆக்குபவன் யார் ?

2003 மார்ச் 13:- மும்பை ரெயிலில் நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் பலி.

2003 ஆக 25:- மும்பையில் 2 கார் குண்டுகள் வெடித்து 60 பேர் பலி.

2005 அக் 29:- டெல்லியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 60 பேர் பலி.

2006 மார்ச் 7:- காசியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 15 பேர் பலி.

2006 ஜூலை 11:- மும்பை ரெயில்களில் 7 குண்டுகள் வெடித்தன. 180 பேர் பலி.

2006 செப் 8:- மலேகானில் நடந்த குண்டு வெடிப்பில் 35 பேர் பலி.

2007 பிப் 19:- பாகிஸ்தானுக்கு சென்ற ரெயிலில் குண்டு வெடித்து 66 பயணிகள் பலி.

2007 மே 18:- ஐதராபாத் மசூதியில் குண்டு வெடித்து 11 பேர் பலி.

2007 ஆக 25:- ஐதராபாத்தில் நடந்த தொடர்குண்டு வெடிப்பில் 40 பேர் கொல்லப்பட்டனர்.

2008 மே 13:- ஜெய்ப்பூரில் 7 இடங்களில் குண்டு வெடித்தது. 63 பேர் பலி.

2008 ஜூலை 25:- பெங்களூரில் 8 இடங்களில் குண்டு வெடித்தது. 1 பெண் பலி.

2008 ஜூலை 26:- ஆமதாபாத்தில் 16 இடங்களில் குண்டு வெடித்தது. 45 பேர் பலி.

2008 செப் 13:- டெல்லியில் அடுத்தடுத்து 5 இடங்களில் குண்டு வெடித்தது. 23 பேர் பலி.

1983 பிப்ரவரி 18: அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியிலிருந்து சுமார் 40 கி.மீ. தூரத்திலுள்ள நெல்லி எனும் கிராமத்தில் 1983, பிப்ரவரி 18 அன்று ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் திட்டமிட்ட இனப்படுகொலை ஒன்று நடத்தப்பட்டது. இதில் 2,191 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். 370 குழந்தைகள் அநாதையாக்கப்பட்டனர். 16 கிராமங்களிலிருந்த முஸ்லிம்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன.

suvanappiriyan said...

1989 பாகல்பூர் கலவரம்: பீகார் மாநிலம் பாகல்பூரில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக ஹிந்துத்துவ தீவிரவாதிகளால் 1989 ல் கலவரம் நடத்தப்பட்டது. இதில் முஸ்லிம்கள் 116 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த கலவரத்தை ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கமும் அதன் துணை அமைப்புகளும் திட்டமிட்டு நடத்தின. ஜக்தீஷ்பூர் காவல்நிலையத்தின் ஆய்வாளர் ராமச்சந்திர சிங் மற்றும் கிராமத்தலைவர் தாக்குர் பாஸ்வான் ஆகியோர் இந்த படுகொலைக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டனர்.

இதன் மூலம் சொந்த நாட்டில் 30,000 பேரை அகதிகளாக்கி, 3000க்கும் மேற்பட்ட வீடுகளைச் சூறையாடி, ஒரு பெரும் இன அழிப்பை நடத்தினர் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்.

இந்து தீவிரவாதிகள் பட்சிலம் குழந்தைகளை வெட்டி கிழித்து இரு கூராக்கினார்கள். மேலும் நெருப்பு குண்டம் வளர்த்து அதில் பெண்களின் கைகளில் இருந்த குழந்தைகளை பறித்து போட்டனர். அந்த குழந்தைகள் தீயில் கருகி சாவதை பார்த்து ரசித்து பேரானந்தம் அடைந்தனர்.

மறக்கப்பட்ட நெல்லி இனப்படுகொலை இந்தியாவில் ஹிந்துதுவாவினர் நடத்திய தொடர் இனப்படுகொலைகளின் ஒரு முன்னோட்ட மாகவே பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்தே டெல்லியில் 1984லும், பாகல்பூரில் 1989லும், மும்பையில் 1993லும் நாடு தழுவிய இனப்படுகொலைகள் நடைபெற்றன.

இதனுடைய உச்சகட்ட நிகழ்வுதான் குஜராத் இனப்படுகொலை (2002 பிப்ரவரி 28).

அதன் தொடர்ச்சிதான் இப்போது இந்தியா முழுவதும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகள்.


தீவிரவாதத்தை இந்த நாட்டில் அரங்கேற்றுவது யார் ? இதை பற்றியெல்லாம் படமெடுக்க கேடுகெட்ட கமல், விஜய்,அர்ஜுன், விஜயகாந்த், மணிரத்னம், முருகதாஸ் போறவர்களுக்கு துணிவு இருக்கா ?

பல பெண்களை கட்டிப்பிடித்து, தடவிக் கொடுத்து அதன் மூலமாக வாங்கிய பணத்தில் வயிற்றை நிறைக்கக் கூடிய மானங்கெட்டவர்களே?
இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகவும், தேசப்பற்று இல்லாதவர்களாகவும் சித்தரிக்கப்பட்ட திரைப்படத்தில் நடித்து உள்ளாயே? இஸ்லாமியர்களை பற்றி பேசுவதற்காவது உனக்கு தகுதியுள்ளதா?

மூளை மழுங்கியவர்களையும், ஒன்றும் அறியாத ஏழை ரசிகர்களின் தயவில் வாழக் கூடிய நீ இந்த நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்காகவும் செய்தது என்ன?

உனது திரைப்படத்தில் பெண்களை ஒரு போகப் பொருளாகவும், ஊருகாயாகவும் பயன்படுத்தி பெண்களை இழிவுபடுத்திக் கொண்டிருப்பதுதான் நீ நாட்டுக்கு செய்யும் தேசப்பற்றா?

பல சமூகத்தவர்களும் ஒற்றுமையாக இருக்கக் கூடிய இடங்களில் இது போன்ற திரைப்படங்கள் மூலமாக மக்களின் மனதில் நஞ்சை விதைத்து உனது காவி சிந்தனையை காட்டுகின்றாயா?

பல திரைப்படங்களில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துவிட்டு, இதனை ஈடுகட்ட ஹீரோவின் நண்பனாக ஒரு குல்லாவும், தாடியும் வைத்து ஒருவனை நடிக்க வைப்பது. உங்களது நடுநிலை புல்லறிக்க வைக்கின்றது.

நாய்ப் புகழ் நடிகரைப் போல ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தும் இது போன்று திரைப்படங்களில் நடித்து அரசியலில் களம் இறங்க அடித்தளமிட்டால் இது உனது அறியாமையையும், அடி முட்டாள்தனத்தைத் தான் காட்டுகின்றது. என்பதில் சிறிதும் மாற்றுக்கருத்து இருக்காது.

நன்றி : Tntj Ottery

Posted by கீழை ஜமீல் முஹம்மது

சார்வாகன் said...

சகோ சு.பி,
பதிவின் இந்த வரிகளுக்கு கடும் கண்டனம் ஒரு ஆதிக்க சாதியினரின் கருத்து போலவே இருக்கிறது.
//தலித்களுக்கு சமூக அந்தஸ்தை கொடுக்க எந்த ஆதிக்க சாதியினருக்கும் விருப்பமில்லை. நிலைமை இவ்வாறு இருக்க வன்னிய இன பெண்ணை அந்த இளைஞன் காதலித்தது முதல் தவறு. அடுத்து அந்த பெண்ணை அனுப்பி விடுங்கள் என்று கேட்ட போதே தலித் மக்கள் அந்த பெண்ணை அனுப்பியிருக்க வேண்டும். அல்லது காவல் துறையிடம் ஒப்படைத்திருக்க வேண்டும்.//
*******
சரி அதை விடுங்கள் . கொஞ்சம் வித்தியாசமாக‌ விவாதிப்போம்.

1.உங்களுக்கு காதல் பிடிக்காதா? காதல் ஏன் மாயை என்கிறீர்கள்??

2.கொஞ்சம் ஃப்ளாஷ் பேக் உங்கள் பதிவில் போய் மர்யம் ஜமீலா இஸ்லாமுக்கு மாறி ஒரு முஸ்லிமுக்கு இரண்டம் மனைவியானார்சரியா?.

இப்போது உங்கள் பதிவுகளைப் படித்து மார்க்கத்தின்& சு.பி மேலும் ஈர்ர்ப்பு வந்து ஒரு காஃபிர் பெண், உங்களை காதலிக்கிறேன் என்றால் என்ன செய்வீர்கள்?

டிஸ்கி ; இக்கேள்வியின் பதிலுக்கு சகோதரி திருமதி சு.பி வினைகளுக்கு நம் கம்பெனி பொறுப்பில்லை

நன்றி

UNMAIKAL said...

விஸ்வரூபம் திரைப்படம்:

முதலில் எங்களுக்கு காண்பிக்கப்படவேண்டும்-

தமுமுக கோரிக்கை


Thursday, 08 November 2012 18:03

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ். ரிபாயி வெளியிடும் அறிக்கை:

பிரபல திரைப்பட நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் என்ற படத்தை நடித்து இயக்கியிருக்கிறார்.

அதில் ஆப்கானிஸ்தான் போரை முன்னிலைப்படுத்தி கதை இருப்பதாகவும் அதில் முஸ்லிம்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கும் காட்சிகள் இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

கடந்த பல வருடங்களாக தமிழகத்தில் சிலர் தங்களின் பிழைப்புக்காகவும், வளர்ச்சிக்காகவும் முஸ்லிம்களை மட்டுமே குற்றவாளிகளாக சித்தரித்து படம் எடுத்து வருகிறார்கள்.

ஈராக்கில் 6 லட்சம் மக்களை கொன்ற அமெரிக்க பயங்கரவாதம் பற்றியோ,

60 ஆண்டுகளுக்கு மேலாக பாலஸ்தீனர்கள் மீது இன அழிப்பை நடத்தி வரும் இஸ்ரேலின் பயங்கரவாதம் பற்றியோ யாருக்கும் படம் எடுக்க மனமில்லை, துணிவில்லை.

இந்தியாவில் குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை தோலுரிக்க தைரியமில்லை.

எதிர்விளைவுகளையும், உலக அளவில் வஞ்சிக்கப்படும் சமூகத்தையும் மட்டுமே குறிவைத்து திரைப்படம் எடுப்பது இப்போது வழக்கமாகி வருகிறது.


கமல்ஹாசனின் திரைப்படமான விஸ்வரூபம் பற்றி மாறுப்பட்ட கருத்துகளும், சந்தேகங்களும் வலுத்துள்ளன அவர் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை சந்தித்ததன் பின்னணியும் இதுதான் என கூறப்படுகிறது.

இந்த சந்தேகங்களை போக்கை வகையில், இத்திரைப்படத்தை முஸ்லிம் பிரதிநிதிகளிடமும், மனிதஉரிமை ஆர்வலர்களிடமும் முதலில் திரையிட்டு காண்பித்து ஆட்சேபனைக்குரிய காட்சிகள் ஏதேனும் இருந்தால் அதை தவிர்த்துவிட்டு வெளியிட வேண்டும் என கோருகிறோம்.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் முஸ்லிம்களை புண்படுத்தும் வகையிலான ஊடக திரிபுகளை அனுமதிக்க முடியாது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்

(ஜே.எஸ். ரிபாயி)

source:http://www.tmmk.info/index.php?option=com_content&view=article&id=2810:2012-11-08-12-35-14&catid=42:press-reless&Itemid=160

suvanappiriyan said...

சகோ சார்வாகன்!

//பதிவின் இந்த வரிகளுக்கு கடும் கண்டனம் ஒரு ஆதிக்க சாதியினரின் கருத்து போலவே இருக்கிறது.//

கசப்பாக இருந்தாலும் அதுதான் உண்மை. மற்ற சாதிகள் முன்னேறினால் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் ஒரு தலித் வெள்ளையும் சொள்ளையுமா சட்டை போட்டு திரிஞ்சா 'பார்ரா...நேத்து வரை நம்ம கிட்டே கை கட்டி நின்னவன் என்னா தெனாவட்டா போறாம் பாரு..' என்று சொல்லும் பல செட்டியார்களை பல மூப்பனார்களை பல கள்ளர்களை எனது ஊரிலேயே பார்த்திருக்கிறேன். இது மறுக்க முடியாத உண்மை.

//1.உங்களுக்கு காதல் பிடிக்காதா? காதல் ஏன் மாயை என்கிறீர்கள்??//

காதலை விரும்பாதவன் மனிதனாகவே இருக்க முடியாது. எனது மனைவியை இன்று வரை மனபூர்வமாக காதலித்து வருகிறேன். காதல் எவ்வாறு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்பதற்கு நான் பதில் சொல்வதை விட தினமலர் சொல்லும் செய்தியை பாருங்கள்.

தமிழகத்தில், ஆண்டுக்கு 15 ஆயிரத்து 963 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதில், கடன் தொல்லையால் 2.2 சதவீதத்தினரும், போதைக்கு 2.4 சதவீதத்தினரும், காதல் தோல்வியில் 3.55 சதவீதம் பேரும், நோய் பிரச்னைக்காக 19.6 சதவீதம் பேரும், குடும்ப சண்டை காரணமாக 24.3 சதவீதத்தினரும் தற்கொலை செய்து கொள்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழக அளவில், திருப்பூர் மாவட்டம், தற்கொலைகள் அதிகரிக்கும் மாவட்டமாக உள்ளது. அதேபோல், குடும்பங்கள் சீரழிவு காரணமாகவே 80 சதவீத தற்கொலை சம்பவங்கள் நடக்கின்றன. திருப்பூர் மாவட்டத்தில், கடந்த 2009ல் 871 பேரும்; 2010ல், 940 பேரும்; 2011ல், 859 பேரும், 2012ல், கடந்த அக்., வரை, 511 பேரும் தற்கொலை செய்துள்ளனர். தினமும் சராசரியாக மூன்று பேர் தற்கொலை செய்து கொள்வதும்; 60 பேர் வரை தற்கொலைக்கு முயற்சிப்பதும் சாதாரணமாக நடந்து வருகிறது. ஆண்டுக்கு சராசரியாக 400 பேர் வரை காணாமல் போனதாகவும் போலீசில் புகார்கள் பதிவாகி வருகின்றன. மேலும், கள்ளத்தொடர்பு, காதல் தோல்வி காரணமாக கொலைகள் அதிகளவு நடக்கும் நகரமாகவும் உள்ளது.

-தின மலர் செய்தி

//இப்போது உங்கள் பதிவுகளைப் படித்து மார்க்கத்தின்& சு.பி மேலும் ஈர்ர்ப்பு வந்து ஒரு காஃபிர் பெண், உங்களை காதலிக்கிறேன் என்றால் என்ன செய்வீர்கள்?//

எனக்கு ஒரு மனைவியே போதும் என்று அறிவுறுத்தி புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட எத்தனையோ சகோதரர்கள் உள்ளார்கள். அவர்களை அந்த பெண்ணுக்கு எனது செலவிலேயே கட்டி வைப்பேன்.

//டிஸ்கி ; இக்கேள்வியின் பதிலுக்கு சகோதரி திருமதி சு.பி வினைகளுக்கு நம் கம்பெனி பொறுப்பில்லை//

ஹா..ஹா...என் மனைவியிடம் இப்படி ஒரு கேள்வியை முன்பே கேட்டுள்ளேன். என் மளைவியும் சிரித்துக் கொண்டே 'முகமது நபி போல அனைத்து மனைவிகளையும் ஒழுங்காக நடத்தும் பக்குவத்தை முதலில் வரவழைத்துக் கொண்டு இந்த கேள்வியை கேளுங்கள்' என்றார். எனக்கு ஒரு மனைவியே போதும். திருப்தியோடு வாழ்வு சென்று கொண்டிருக்கிறது.

Anonymous said...

K A V Y A says:
November 16, 2012 at 3:48 pm

என் விளக்கம் இதுதான். ஏற்கனவே சொல்லப்பட்டது:

தேவப்பிரியா சாலமன் தன் வியர்வையையும் உழைப்பையும் வேறு உதவும் விஷயத்தில் செலவிட்டால் தனக்கிருக்கும் ஸ்டாமினாவை நல்வழியில் பயனப்டுத்த்வதாக முடியும்? ஏன் இந்த வாழ்க்கை விரயம்?

மதங்கள் என்றெடுத்தால், அவை இன்று நேற்று தோன்றியவையல்ல. இரண்டாயிரமாண்டுகளுக்கு முன் தோன்றியவை. கிருத்துவமும் இசுலாமும் இந்தியாவுக்குள் நுழைந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு மேலாக ஆகிவிட்டன. இம்மதங்களில் இருப்போர் எண்ணிக்கை கோடிக்கணக்கில். ஆனால் இவர்கள் மூதாதையர் இந்துக்கள்.

எக்காரணங்களுக்காக இந்து மதத்தைவிட்டு விலகினரோ அவை இன்னும் இருக்கின்றன. மட சேனாவும் சிரிரங்கத்தை ஒரு பார்ப்பனரைப் பல்லக்கில் வைத்து தூக்குவதும், ஆகமங்கள் எங்களைத்தான் பூஜாரிகள் எனச்சொல்கின்றன’; இந்துமதப் போர்வையப் போர்த்திக்கொண்டு தன் ஜாதியை வளர்ப்பதும் போன்று ஏகப்பட்ட பார்ப்பனீய ஏற்றம் இன்னும் அழியாமலிருக்கின்றன. இத்தளத்திலும் அதை வலுப்படுத்தி கட்டுரைகள் இந்துக்களாலேயே போடப்பட்டு படித்துக் கொண்டிருக்கிறோம்.

புராணப் புரட்டுக்கள் என்று எடுத்தால், பார்ப்ப்னர்கள் செய்யதவை மற்றமதப் புரட்டுக்களை புரட்டிப் போட்டுவிடும். கந்தபுராணத்தில், மஹாபாரதத்தில், இராமாயணத்தில் இல்லாதவையா? அவற்றை நாத்திகர் மட்டுமா சொன்னார்? பக்கா இந்துக்களும் சொன்னவர்தானே? இனறும் தமிழ் ஹிந்து காமில் ஜடாயு என்பவர் மனு சுமிர்த்தியைத் தாக்கியும் அரவிந்தன் நீலகண்டன் டிவிட்டரில் மகாபெரியவாளில் ஜாதிப்பற்றைத் தாக்கியும் எழுதுகிறார்களே? வீரமணியா எழுதினார்?

ஆக, இந்துமதம் இன்னும் தன் அழுக்குக்களைத் துடிக்கவில்லையென்பதை விட, அவற்றைத் துடைக்க அவர்களுக்குள்ளேயே எதிர்ப்பு இருக்கிறதே? அரவிந்தன் நீலகண்டனை விமர்சித்து ஒரு பார்ப்ப்னர் கடுமையான பிளாக் போஸ்டை போன வாரம் எழுதி தமிழமணத்தில் வெளியானதே? பாரதியாரே, ‘கந்தபுராணத்திலில்லா புரட்டா? என்று நக்கலாகக் கேட்கிறார்.

ஆக, என் இறுதிச் சொல் இதுவே: எல்லா மதங்களுக்கும் இருபக்கங்கள் உண்டு. ஒன்று நல்லது; இன்னொன்று கெட்டது. நான் ஹிந்து. நல்லதை ஏற்கிறேன். நல்லவிட்யங்கள் எவரிடமிருந்தாலும் வரவேற்றுப்போற்றி வாழுதல். மத நல்லிணக்கம்.

என் வீட்டுக்கதவைப் பூட்டிக்கொண்டு நான் வாழ முடியாது. வெளிவந்து பிறருடன் சேர்ந்து வாழத்தான் செய்யவேண்டும். அதுவே இறைவன் கட்டளையுமாகும். அவ்வெளியிருக்கும் கிருத்துவரின் இசுலாமியரின் நம்பிக்கைகளை நான் பகடி பண்ண வாழமுடியுமா? என மதம் எனக்கு. அவர் மதம் அவருக்கு என்பதுதானே வாழ்க்கை?

அவரிருக்கக் கூடாது? அவர் கடவுளை அவர் நம்பக்கூடாது? அஃதெல்லாம் பொய என்றால் அவரும் நும் கடவுளைப்பற்றியும் அப்படிச்சொன்னால் தவறாகுமா?

இதை தேவப்பிரியா யோசிக்க வேண்டும்! சுவிசேசிகளோ மிசுநோரிகளோ போலியான வாக்குகளை நம்பிக்கைக்களாகக் கொடுத்து ஏமாற்றினால், அதற்குப்பதில் கிருத்த்வமே ஒரு புரட்டு என்பதா பதில்? அவர் அம்மதத்தை வைத்து மக்களை ஏமாற்றிப்பிழைக்கிறார் என்று சொன்னால் போதுமே?
Reply

அருள் said...

தருமபுரி கலவரம்: சட்டவிரோத குழந்தைத் திருமணத்திற்கு இத்தனை பேர் வக்காலத்தா?

http://arulgreen.blogspot.com/2012/11/Vanniyar-Dharmapuri-Child-Marriage.html

கூத்தாடி said...

சுவனப்பிரியன்

வவ்வால் கருத்தை நான் முழுமையாக வழி மொழிகிறேன்.

ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள், ஒரு சமூக மாற்றம் படிப்படியாகத்தான் ஏற்படுத்தப்படும். ஜாதி மறுப்பு திருமணம் அதன் முக்கியமான படி. அப்புறம் எப்படி அய்யா ஜாதிகள் கலக்கும்??


காடுவெட்டி குருவின் பேச்சுக்கும் உங்கள் பதிவுக்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை!