Followers

Friday, August 03, 2012

ஒலிம்பிக் அரங்கேற்றும் பாலியல் வக்கிரங்கள்!



சாதி மத பேதமற்று அனைவரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்வது விளையாட்டு துறை. நானும் பால் பேட்மிட்டனில் ஓரளவு விளையாடி பல சான்றிதழ்களை பெற்றுள்ளேன். அம்மாபேட்டை, ஒரத்தநாடு, வலங்கைமான், கும்பகோணம், அய்யம் பேட்டை என்று பல பள்ளிகளில் படிக்கும் காலங்களில் நான் படித்த பள்ளிக்காக விளையாடிய அனுபவம் உண்டு.

ஆனால் இன்று வெகு விமரிசையாக விளம்பரப்படுத்தப்பட்டு நடத்தப்படும் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் விளையாட்டின் நோக்கத்தையே சிதைக்கும் விதமாக நடந்து கொள்கிறது. ஒலிம்பிக் கிராமங்களில் பாலியல் வக்கிரங்களை கணக்கின்றி பரவ விடுவதை எவரும் கண்டிக்காமல் இருப்பது ஆச்சரியப்பட வைக்கிறது.

இவர்களின் நோக்கத்தை சரியாக புரிந்து கொண்ட சில இஸ்லாமிய நாடுகள் இந்த போட்டிகளிலிருந்து ஒதுங்கி இருந்தன. இது ஏதோ மிகப் பெரிய தவறு என்று மீடியாக்கள் விமரிசிக்கப் போய் வேண்டா வெறுப்பாக சிலரை இந்த வருடம் சவுதி அரேபியா தனது வீராங்கனைகளை அனுப்பி வைத்துள்ளது. ஆண் துணையோடும் ஹிஜாப் உடையோடும் கலந்து கொள்வார்கள் என்ற கண்டிஷனோடு தனது வீரர்களை அனுப்பி வைத்துள்ளது சவுதி அரேபியா. கற்பை இழந்து கண்ணியத்தை இழந்துதான் அந்த ஒலிம்பிக் மெடலை வாங்க வேண்டும் என்றால் அதனை தூக்கி எறியவும் தயாராக இருக்க வேண்டும். சாந்தி என்ற முன்னால் தமிழக வீராங்கனை இன்று செங்கல் சூளையில் தினக் கூலிக்கு வேலை செய்து வருகிறாராம். இதுதான் அவர்களுக்கு கிடைத்த கடைசி பரிசு.

ஒலிம்பிக் விளையாட்டை நடத்தும் சில கம்பெனிகள் உலகுக்கு சிறந்த விளையாட்டு வீரர்களை தருவதை விட அந்த வீரர்களை செக்ஸ் அடிமைகளாக மாற்றுவதில் அதிக அக்கறை காட்டுகின்றன. போதை மருந்துகள் மிக இலகுவாக புழக்கத்தில் விடப்படுகிறது. இங்கு நடக்கும் பல அநாச்சாரங்களைப் பற்றி முன்னால் இங்கிலாந்து ஒலிம்பிக் வீரர் புனை பெயரில் 'தி சீக்ரெட் ஒலிம்பிக்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதே போல் ஒரு அமெரிக்க பெண் உடற் பயிற்சியாளர் 'பட் ஆஃப்' என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். இந்த இரண்டு புத்தகங்களும் ஒலிம்பிக் கிராமங்களில் எந்த அளவு மோசமாக பாலியல் வக்கிரங்கள் அரங்கேற்றப்படுகின்றன எனபதை விரிவாக விளக்குகின்றன.

ஒலிம்பிக் நடைபெறும் லண்டனில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் தலா பதினைந்து ஆணுறை(காண்டம்) என 150000 காண்டங்கள் விநியோகிக்க இருப்பதாகவும் மேலும் தேவைப்பட்டால் ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள மருந்து கடைகளில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. நம் நாட்டு வீரர்கள் ஏன் தங்கத்தையும் வெள்ளியையும் அள்ளவில்லை என்ற ரகசியம் இப்போதுதான் தெரிகிறது. அனைத்து நாடுகளின் வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் காண்டம் விநியோகிப்பதின் அர்த்தம் என்ன? விளையாட்டுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

இது இந்த முறைதான் புதிது என்று நினைக்கவேண்டாம், அனுமதிக்கப்பட்ட இன்னும் சொல்லப்போனால் வலியுறுத்தப்பட்ட விபச்சாரம் 1988 சியோல் ஒலிம்பிக் போட்டியின் போதே தொடங்கிவிட்டதாம். அப்பொழுது 8500 காண்டமும், 1992 பார்சிலோனோ ஒலிம்பிக்கின் போது 50000 காண்டமும், 2000 சிட்னி ஒலிம்பிக்கின்போது 70000மும், கடந்த 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கின் போது 1 லட்சம் காண்டம் விநியோகித்து அது ஒரே வாரத்தில் தீர்ந்துவிட்டது என்று பெருமையோடு சொல்லிக்கொண்டு இப்பொழுது 150000 காண்டம் விநியோகித்துள்ளோம் தேவைப்பட்டால் மேலும் இலவசமாக தர தயாராக உள்ளோம் என்று பெருமையோடு கூறி ஆர்வப்படுத்தி உள்ளனர்.

இந்த அழகில் இஸ்லாமிய நாடுகளை ஹிஜாபோடு ஒலிம்பிக் கிராமத்தில் ஏன் அனுமதித்தீர்கள்? இஸ்லாமிய நாடுகளுக்கு ஏன் அடி பணிந்தீர்கள் என்று லண்டனில் தங்களின் மேலாடையை கழட்டி நூதன போராட்டத்தை சில பெண் இயக்கங்கள் நடத்தியுள்ளன. போராட்டம் நடத்திய பெண்கள் எந்த அளவு ஒழுக்கமானவர்கள் என்பதற்கு அவர்களின் போராட்ட முறையே நமக்கு காட்டிக் கொடுத்துள்ளது. வெட்கங் கெட்ட விபசாரிகள் கும்பலாக வந்து மேலாடையை கழட்டி போராட்டத்தில் ஈடுபட்டதை லண்டன் காவல்துறை அனுமதிக்காமல் அவர்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியுள்ளது. சபாஷ் லண்டன் காவல் துறை! லண்டன் காவல் துறை மோசமாக நடந்து கொண்டதாக இக்பால் செல்வன் வேறு குறைபட்டுக் கொள்கிறார்....பாவம் அந்த பெண்கள்... இல்லையா இக்பால் செல்வன்?.

ஒலிம்பிக்கில் கலந்து கொண்டவர்களின் அனுபவங்களை பார்ப்போம்.:

அமெரிக்க பெண்கள் கால்பந்து அணியின் கோல் கீப்பர் ஹோப் சோலோ கூறுகையில், ஒலிம்பிக் போட்டிகளுக்கு இடையே அதிகளவில் செக்ஸ் உறவு கொள்ளும் சம்பவங்கள் நடைபெறுகிறது என்றார். மேலும் இது குறித்து இங்கிலாந்து சைக்கிள் வீராங்கனை விக்டோரியா பென்டில்டன் கூறியதாவது, ஒலிம்பிக் போட்டியின் போது, அங்குள்ள மக்கள் பொது இடத்திலேயே செக்ஸ் உறவு வைத்து கொண்ட சம்பவங்கள் நான் நேரில் பார்த்துள்ளேன். கட்டிடங்களுக்கு இடையே உள்ள புல் பகுதிகளில், அசுத்தமான இடங்களில் கூட செக்ஸ் உறவு கொள்கின்றனர். பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் போது எனது அறைக்கு செல்லும் போது, யாராவது உள்ளே இருக்கின்றனரா என்பதை அறிய ரகசியமாக உள்ளே நுழைந்தேன். ஆனால் அறையின் உள்ளே யாராவது இருந்தார்களா என்றால், அது ஒலிம்பிக் ரகசியம் என்று கூறி இப்பொழுது புதிதாக கலந்து கொள்பவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டுகிறார்.



பட் ஆஃப் புத்தகத்தில் என்ன உள்ளது என்று கொஞ்சம் பார்ப்போம்,. ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் பல போட்டியாளர்களும் ஒழக்கமற்ற முறையில் ஜோடி சேருகின்றனர். மதுபானங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளில் போதைப் பொருள் மற்றும் மதுபானங்கள் தாராளமாக விநியோகிக்கப்படுகிறது. ஒலிம்பிக் கிராமத்திற்குள் நடைபெறும் சம்பவங்களை பார்த்தால் எதை குறிப்பிடுவது என்ற குழப்பம் கூட ஏற்படும். விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட பிறகு, போட்டியாளர்களுக்கு தங்களின் ஆசையை தீர்த்து கொள்ள வேறு வழியில்லால் தவிக்கின்றனர். இதனால் செக்ஸ் உறவு கொள்ள கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்கின்றனர். வெளி உலகத்தின் கண்களுக்கு மறைவாக கடும் பாதுகாப்பு வளையத்திற்குள் போட்டியாளர்கள் இருப்பதாக நம்பப்படுவதால்(காட்டப்படுவதால்) ஒலிம்பிக் கிராமத்தினுள் நடைபெறும் அனைத்து சம்பவங்களும் அப்படியே புதைக்கப்படுகிறது. இதனால் ஒலிம்பிக் போட்டியாளர்கள் செய்யும் பல மோசமான நடவடிக்கைகள் வெளியே தெரிவதில்லை.

தி சீக்ரெட் ஒலிம்பிக் புத்தகத்தில் உள்ளவற்றை கூறாவிட்டால் அவர்கள் கோபித்து கொள்ள போகிறார்கள் எனவே அதனையும் கொஞ்சம் பார்ப்போம். ஒலிம்பிக் கேம்ஸ் வில்லேஜ்களில் மதுவுக்கு தடை இருப்பது வழக்கம். அதேபோல போதை மாத்திரைகளுக்கும் அனுமதி கிடையாது. இருந்தாலும் வீரர்கள் விடுவார்களா என்ன... வாட்டர் பாட்டில்களில் நைசாக மதுவை நிரப்பிக் கொண்டு உற்சாகமாக இருப்பார்களாம். அதேபோல போதை மாத்திரைகளும் கூட ரகசியமாக புழங்குவது சகஜமாம். இதுபோன்ற நடவடிக்கைகளை அதிகாரிகள் பெரும்பாலும் கண்டு கொள்வதில்லையாம். அதேபோல கண்டிப்பதும் இல்லையாம். கேம்ஸ் வில்லேஜ்களில் நடக்கும் அத்தனை விஷயங்களும் அங்கேயே கமுக்கமாக மறைந்து போய் விடுமாம். அங்கு நடந்தது குறித்து யாரும் வெளியில் சொல்லிக் கொள்வதில்லையாம் என்று போகிறது அந்த நூல்.

2000ம் வருடம் ப்ரேசில் நடத்திய கால்பந்து விளையாட்டை விளம்பர படுத்த விபச்சாரிகளை இறக்குமதி செய்ததும், பெண்களுக்கு உடை அணியாமல் மார்பு, இடுப்பின் முன், பின் பகுதிகளிள் கால்பந்து படத்தை வரைந்து கடற்கரையில் நிர்வாணமாக கால்பந்து போட்டி நடத்தியதும் இந்த நேரத்தில் நினைவிற்க்கு வந்து தொலைக்கின்றது.


உலக மக்களை வருடம் ஒரு முறை மெக்காவுக்கு அழைத்து 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' 'ஒரு தாய் மக்கள்' 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று ஓங்கி ஒலிக்க வைக்கும் இஸ்லாமிய செயல்பாடுகள் எங்கே?

உலக விபசாரிகளை இறக்குமதி செய்து விளையாட்டு வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் காண்டங்களை இஷ்டம் போல் விநியோகித்து இளைஞர்களை வழி கெடுக்கும் மேற்கத்திய கலாசாரம் எங்கே?

நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்.


எனக்கு பின்னர் வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்க முடியாத நபிமொழி ஒன்றை (இப்போது) நான் உங்களுக்கு அறிவிக்கப் போகிறேன். “கல்வி குறைந்து போய் விடுவது, அறியாமை வெளிப்படுவதும், வெளிப்படையாய் விபச்சாரம் நடப்பதும், ஐம்பது பெண்களுக்கு அவர்களை நிர்வமிக்கும் ஒரே ஆண் என்ற நிலைமை வரும் அளவுக்குப் பெண்கள் மிகுதியாவது ஆண்கள் குறைந்துவிடுவதும் மறுமை நாளின் சில அடையாளங்களாகும்” என்று இறைத்தூதர் கூற கேட்டிருக்கிறேன் என நபித் தோழர் அனஸ் அறிவித்தார்கள். (நூல் புகாரி- அத்தியாயம்-1- ஹதீஸ்-81)

…..According to the anonymously authored expose ‘The Secret Olympics’, which is written by a former British competitor, organizers supplied 70,000 condoms to athletes at the 2000 Summer Olympics in Sydney, Australia. The stockpile ran out in a week.
While alcohol and drugs are banned at Olympic Villages, competitors often fill water bottles with booze and smuggle in weed and doping agents.
While officials don’t condone such behaviour, they don’t condemn it either, and the only thing that matters is that the image of the Olympics remains unsullied…….


http://books.hindustantimes.com/2012/07/rampant-sex-and-booze-secrets-at-olympic-village-exposed/

------------------------------------------------------------------------

மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு - 13


59 comments:

NKS.ஹாஜா மைதீன் said...

சலாம் சகோ....

இவர்கள் விளையாட்டு எனும் பெயரில் விபசாரத்தை நடத்துகிறார்கள்...வெட்க கேடு..

UNMAIKAL said...

UNMAIKAL said... PART 1

>>>>
மார்பு திறந்து பெண்கள் மாபெரும் போராட்டம் ! கலங்கி போனது ஒலிம்பிக் நிர்வாகம் ...
<<<

என்ற குடுகுடுப்பை பதிவை படித்து பார்த்தால் கோடங்கியின் "நன் நோக்கம்" புரியும்.

அங்கு நான் இட்ட கீழ்கண்ட பின்னூட்டம் உடனடியாக நீக்கப்பட்டுவிட்டது.
ஆதலால் இங்கு பதிந்து வாசகர்கள் அறிய தருகின்றேன்.

1. UNMAIKAL2 August 2012 23:41

விளையாட்டு அரங்கமா ? (காம) விளையாட்டுக் கூடமா ?

உலக (காம)விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெற்று வருகின்றது.

இதனை உலக விளையாட்டு திருவிழாவாக ஆக்கி ஒவ்வொரு நாட்டையும், தான் இந்த போட்டியை நடத்துவது தன் நாட்டிற்க்கு கௌரவம் என்றும் அதில் பங்கேற்பது ஒவ்வொரு தனிநபருக்கும் மிகப்பெரிய லட்சியமாகவும் விளம்பரம் மூலம் அந்த விளையாட்டை நடத்தும் நிறுவனங்கள் ஏற்படுத்தி உள்ளது.

மேற்கத்திய (அ)நாகரீக மோகத்தால் பாரம்பரியமிக்க சில நாடுகள் கூட இந்த போட்டியை நடத்த கோடிகளில் செலவு செய்து பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றது என்றுதான் நாம் நினைக்கின்றோம்.

ஆனால் இதனை நடத்துவதில் பெருமையவிட காமகளியாட்டங்களாலும், போதை பொருட்களில் விற்பனைமுலம் வரும் வருமானக்களிலும்தான் அந்த விளையாட்டு நிறுவனங்களும், நடத்த துடிக்கும் நாடுகளும் துடியாய் துடிக்கிறது என்று சமீபத்தின் வெளியாகி இருக்கும் இரு புத்தங்கள் மூலம் நமக்கு தெரியவருகின்றது.

முன்னாள் இங்கிலாந்து ஒலிம்பிக் வீரர் தன் பெயரில் அல்லாமல் புனை பெயரில் எழுதி உள்ள தி சீக்ரெட் ஒலிம்பிக் என்ற புத்தகத்திலும், அமெரிக்க பெண் உடற்பயிற்ச்சியாளர் எழுதி வெளியிட்டுள்ள ”பட் ஆஃப்” என்ற புத்தகத்திலும் அங்கு நடக்கும் காமகூத்துக்கள் பற்றி புட்டுபுட்டு வைத்துள்ளது.

அதனை உறுதி செய்யும் வகையில் ஒலிம்பிக் நடத்தும் லண்டன் கலந்து கொள்ளும் ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் தலா 15 ஆணுறை(காண்டம்) என 150000 காண்டங்கள் விநியோகிக்க இருப்பதாகவும்,

மேலும் தேவைப்பட்டால் ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள மருந்து கடைகளில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

The oh, oh, Ohhh-lympics! As record 150,000 condoms are handed out to a host of super-attractive athletes, could London 2012 be the raunchiest games ever?

Athletes will receive 15 condoms each for the 17-day festival

'I've seen athletes having sex out in the open, getting down and dirty on grass between buildings,' says U.S. women's goalie
Victoria Pendleton among the glamorous female stars offered condoms

Read more: CLICK >>> The oh, oh, Ohhh-lympics! As record 150,000 condoms are handed out to a host of super-attractive athletes, could London 2012 be the raunchiest games ever?<<< HERE

இது இந்த முறைதான் புதிது என்று நினைக்கவேண்டாம்,

அனுமதிக்கப்பட்ட இன்னும் சொல்லப்போனால் வலியுறுத்தப்பட்ட விபச்சாரம் 1988 சியோல் ஒலிம்பிக் போட்டியின் போதே தொடங்கி விட்டதாம்.

அப்பொழுது 8500 காண்டமும், 1992 பார்சிலோனோ ஒலிம்பிக்கின் போது 50000 காண்டமும்,

2000 சிட்னி ஒலிம்பிக்கின்போது 70000மும்,

கடந்த 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கின் போது 1 லட்சம் காண்டம்

விநியோகித்து அது ஒரே வாரத்தில் தீர்ந்துவிட்டது என்று பெருமையோடு சொல்லிக்கொண்டு

இப்பொழுது 150000 காண்டம் விநியோகித்துள்ளோம்

தேவைப்பட்டால் மேலும் இலவசமாக தர தயாராக உள்ளோம் என்று பெருமையோடு கூறி ஆர்வப்படுத்தி உள்ளனர். (என்ன ஒரு அதீத நாகரீக மற்றும் ஆக்கப்பூர்வமான வளர்ச்சி).

இதில் பன்னாட்டு விபச்சாரிகளின் படையெடுப்பு லண்டனை நோக்கி என்று துணை செய்தி வேறு.

இத்தனை பெரிய நோய், மற்றும் சாபம் தங்களை தாக்க வருவதை பெருமையாக கூறும் இவர்கள் தீவிரவாத இயக்க தாக்குதலை பற்றி தினம் தினம் செய்திகளை பரப்பி தங்களை இன்னும் விளம்பரபடுத்தி கொண்டுள்ளனர்.

வருடத்திற்க்கொருமுறை மக்காவில் உலக மக்களை அழைத்து சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்துகிறது இஸ்லாம்,

ஆனால் இவர்கள் சமூக, கலாச்சார சீரழிவுகளையும், ஒழுக்க சீர்கேடுகளையும் அதன்மூலம் நோய்களையும் பரப்பி மருத்துவ கம்பெனிகளின் மாஃபியாக்களுக்கு உதவுபவர்களாகவும் இருக்கின்றார்கள். என்ன செய்வார்கள் பாவம் அவர்களின் வேதமே அதனைத்தானே கற்றுத்தருகின்றது.

UNMAIKAL said...

UNMAIKAL2 August 2012 23:43

விளையாட்டு அரங்கமா ? (காம) விளையாட்டுக் கூடமா ?
PART 2


சரி ஒலிம்பிக்கில் கலந்து கொண்டவர்களின் இதுபோன்ற அனுபவங்களை பார்ப்போம்.

அமெரிக்க பெண்கள் கால்பந்து அணியின் கோல் கீப்பர் ஹோப் சோலோ கூறுகையில், ஒலிம்பிக் போட்டிகளுக்கு இடையே அதிகளவில் செக்ஸ் உறவு கொள்ளும் சம்பவங்கள் நடைபெறுகிறது என்றார்.

மேலும் இது குறித்து இங்கிலாந்து சைக்கிள் வீராங்கனை விக்டோரியா பென்டில்டன் கூறியதாவது, ஒலிம்பிக் போட்டியின் போது, அங்குள்ள மக்கள் பொது இடத்திலேயே செக்ஸ் உறவு வைத்து கொண்ட சம்பவங்கள் நான் நேரில் பார்த்துள்ளேன்.

கட்டிடங்களுக்கு இடையே உள்ள புல் பகுதிகளில், அசுத்தமான இடங்களில் கூட செக்ஸ் உறவு கொள்கின்றனர்.

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் போது எனது அறைக்கு செல்லும் போது, யாராவது உள்ளே இருக்கின்றனரா என்பதை அறிய ரகசியமாக உள்ளே நுழைந்தேன். ஆனால் அறையின் உள்ளே யாராவது இருந்தார்களா என்றால், அது ஒலிம்பிக் ரகசியம் என்று கூறி இப்பொழுது புதிதாக கலந்து கொள்பவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டுகிறார்.

சரி பட் ஆஃப் புத்தகத்தில் என்ன உள்ளது என்று கொஞ்சம் பார்ப்போம்,.

ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் பல போட்டியாளர்களும் ஒழக்கமற்ற முறையில் ஜோடி சேருகின்றனர். மதுபானங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளில் போதைப் பொருள் மற்றும் மதுபானங்கள் தாராளமாக விநியோகிக்கப்படுகிறது.

ஒலிம்பிக் கிராமத்திற்குள் நடைபெறும் சம்பவங்களை பார்த்தால் எதை குறிப்பிடுவது என்ற குழப்பம் கூட ஏற்படும். விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட பிறகு, போட்டியாளர்களுக்கு தங்களின் ஆசையை தீர்த்து கொள்ள வேறு வழியில்லால் தவிக்கின்றனர்.

இதனால் செக்ஸ் உறவு கொள்ள கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்கின்றனர். வெளி உலகத்தின் கண்களுக்கு மறைவாக கடும் பாதுகாப்பு வளையத்திற்குள் போட்டியாளர்கள் இருப்பதாக நம்பப்படுவதால்(காட்டப்படுவதால்) ஒலிம்பிக் கிராமத்தினுள் நடைபெறும் அனைத்து சம்பவங்களும் அப்படியே புதைக்கப்படுகிறது. இதனால் ஒலிம்பிக் போட்டியாளர்கள் செய்யும் பல மோசமான நடவடிக்கைகள் வெளியே தெரிவதில்லை.

தி சீக்ரெட் ஒலிம்பிக் புத்தகத்தில் உள்ளவற்றை கூறாவிட்டால் அவர்கள் கோபித்து கொள்ள போகிறார்கள் எனவே அதனையும் கொஞ்சம் பார்ப்போம். ஒலிம்பிக் கேம்ஸ் வில்லேஜ்களில் மதுவுக்கு தடை இருப்பது வழக்கம். அதேபோல போதை மாத்திரைகளுக்கும் அனுமதி கிடையாது.

இருந்தாலும் வீரர்கள் விடுவார்களா என்ன... வாட்டர் பாட்டில்களில் நைசாக மதுவை நிரப்பிக் கொண்டு உற்சாகமாக இருப்பார்களாம். அதேபோல போதை மாத்திரைகளும் கூட ரகசியமாக புழங்குவது சகஜமாம்.

இதுபோன்ற நடவடிக்கைகளை அதிகாரிகள் பெரும்பாலும் கண்டு கொள்வதில்லையாம். அதேபோல கண்டிப்பதும் இல்லையாம்.

கேம்ஸ் வில்லேஜ்களில் நடக்கும் அத்தனை விஷயங்களும் அங்கேயே கமுக்கமாக மறைந்து போய் விடுமாம். அங்கு நடந்தது குறித்து யாரும் வெளியில் சொல்லிக் கொள்வதில்லையாம் என்று போகிறது அந்த நூல்.

இந்த நிலையை பார்த்தால் பல நாடுகளில் இருந்தும் விளையாட்டு? போட்டிகளில் பங்கேற்க்கவும், பார்க்கவும் பலரும் செல்கிறார்கள்.

வெறும் கையோடு வந்தால் கூட பரவாயில்லை, மாறாக............... விளையாட்டு வினையாகும் என்பார்கள் அது இதுதானோ?.

எனோ 2000ம் வருடம் ப்ரேசில் நடத்திய கால்பந்து விளையாட்டை விளம்பர படுத்த விபச்சாரிகளை இறக்குமதி செய்ததும்,

பெண்களுக்கு உடை அணியாமல் மார்பு, இடுப்பின் முன், பின் பகுதிகளிள் கால்பந்து படத்தை வரைந்து கடற்கரையில் நிர்வாணமாக கால்பந்து போட்டி நடத்தியதும் இந்த நேரத்தில் நினைவிற்க்கு வந்து தொலைக்கின்றது.

-நௌஷாத் அலி

UNMAIKAL said...

UNMAIKAL2 August 2012 23:54

150,000 Olympic Condoms (That’s 15 Per Athlete) To Be Handed Out At London 2012

One of the most titillating stories surrounding every Olympics is the insane amount of sex that takes place in the athletes’ village.

Olympians are charged up with hormones (some natural, some unnatural) and tight with tension. Many are looking to let loose before their big event, or at least as soon as it’s over.

They are surrounded by toned, attractive athletes from around the world and they are all living together in tight quarters. It’s not hard to see why so many of them get it on with each other.

A record 150,000 condoms will be delivered to athletes at the 2012 Summer Olympics, in anticipation of record levels of athlete sex.

That equates to a staggering 15 condoms per athlete–a 50 per cent increase over the number that were handed out in Beijing.

Durex has even said that it is prepared to ship in emergency backups if the initial supply runs out.

At the 2000 Sydney Olympics, organizers famously had to place a rush order for 20,000 extra condoms because the initial supply of 70,000 ran out.

Hope Solo, goalkeeper for the US women’s Olympic soccer team, has spoken in the past about all the sex that happens at the Olympics.

“I’ve seen people having sex out in the open, getting down and dirty on grass between buildings,” she said. “I may have snuck a celebrity into my Beijing room without anybody knowing and snuck him back out. But that’s my Olympic secret.”

Many athletes cheat on their spouses at the games, but it doesn’t seem to be a big deal in that culture. They take sort of a “what happens at the Olympics stays at the Olympics” perspective on things.

SOURCE: http://www.manolith.com/2012/07/20/150000-olympic-condoms-thats-15-per-athlete-to-be-handed-out-at-london-2012/

UNMAIKAL said...

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கம் கொண்டு வர மீண்டும் கட்டுப்பாடு

ஜெத்தா: வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவுக்கு தங்க நகைகள் கொண்டு வர மீண்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது வெளிநாடு வாழ் இந்தியர்களை ஆத்திரமடையச் செய்துள்ளது.

45 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுங்க சட்டத்தை இந்திய அரசு மறுபடியும் அமல்படுத்தியுள்ளது. அதன்படி வெளிநாடுகளில் வாழும் இந்திய ஆண்கள் தங்கள் ஊருக்கு வருகையில் ரூ.10,000 மதிப்புள்ள தங்க நகையும், பெண்கள் ரூ.20,000 மதிப்புள்ள நகைகளையும் மட்டுமே சுங்க வரியின்றி எடுத்து வர முடியும்.

தற்போதுள்ள தங்க விலையைப் பார்க்கையில் ஆண்கள் 3.5 கிராமும், பெண்கள் 7.1 கிராம் தங்க நகைகள் மட்டுமே எடுத்து வர முடியும். அதை விட அதிக தங்க நகைகள் கொண்டு வந்தால் நகையின் மதிப்பில் 10 சதவீதம் மற்றும் 3 சதவீத வரி செலுத்த வேண்டும். முன்பெல்லாம் 10 கிராம் தங்க நகைக்கு ரூ.300 வரியாக செலுத்தினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டம் அமலுக்கு வந்தது தெரியாமல் ஏராளமான தங்க நகைகள் கொண்டு வந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் விமான நிலையங்களில் சிக்கினர்.

தனது குடும்பத்தாரை இந்தியாவில் கொண்டுபோய் விட்டுவிட்டு அமீரகம் திரும்பிய விஜு நாயர் சவூதி கெசட் பத்திரிக்கைக்கு தெரிவித்ததாவது,

எங்களின் நெருங்கிய உறவினரின் மகள் திருமணப் பரிசாக தங்க நகைகளை என் மனைவி இந்தியா கொண்டு சென்றார். கொச்சி விமான நிலையத்தில் எங்களை நிறுத்தி எங்களிடம் எவ்வளவு தங்க நகைகள் உள்ளது என்று விசாரித்ததும் அதிர்ச்சி அடைந்தோம்.

நகைகளுக்கு எக்கச்சக்க சுங்கத் தீர்வை செலுத்த நாங்கள் விரும்பவில்லை. அதனால் நகைகளை விமான நிலையத்திலேயே வைத்து விட்டு ஊருக்கு சென்றோம்.

அந்த நகைகள் என் மனைவி அடுத்த மாதம் அமீரகம் திரும்பும்போது எடுத்து வருவார் என்றார்.

இந்த சட்டப்படி வழக்கமாக 40 முதல் 50 கிராம் தங்க நகைகள் அணியும் இந்திய பெண்கள் இனி ஒரு தங்க மோதிரம் மட்டுமே அணிந்து செல்ல முடியும் என்று அப்துல் ஜமீல் என்பவர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு ஒத்துவராது என்றும், முரண்பாடானது என்றும் சவூதி அரேபியாவில் உள்ள கேரள சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த கூட்டமைப்பின் தலைவர் ஆர். முரளிதரன் சவூதி கெசட் பத்திரிக்கையிடம் கூறுகையில்,

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இந்த சட்டத்தை இந்திய அரசு வேண்டும் என்றே மீண்டும் அமல்படுத்தியுள்ளது.

அதில் அடிக்கடி இநதியா வரும் வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களை குறிவைத்து இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

SOURCE: http://tamil.oneindia.in/news/2012/08/02/world-nris-angry-at-reintroduction-decades-old-gold-customs-158888.html
=============================

UNMAIKAL said...

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கம் கொண்டு வர மீண்டும் கட்டுப்பாடு

வேலையா இரு தினங்களுக்கு முன்பு இந்தியா போக வேண்டி இருந்தது.

அப்பொழுது சென்னை விமான நிலையத்துல இமிக்ரேஷன் செக்கிங் முடிந்ததும் விமான நிலயத்த விட்டு வெளியேற முயலும் பொழுது சுங்க இலாக்க சோதனை மையம் அருகில் ஒரே கூட்டம் என்ன என்று விசாரித்த பொழுது வரும் பயணிகள் எவ்வளவு நகை எடுத்து வருகின்றார்கள் என்று சோதனை நடப்பதாக கூறினார்கள்.

பலரும் சுங்க இலாக்கா அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு கொண்டு இருந் தார்கள். அதானால் வரிசை மிகவும் பொறுமையா எறும்பு போல ஊர்ந்து சென்று கொண்டு இருந்தது. என் முறையும் வந்தது அப் பொழுது சுங்க இலாக்க அதிகாரி எவ்வளவு நகை வைத்து இருகின்றீர்கள் என விசாரித்தார். என்னிடம் பெரிதாக நகை இல்லை. அதானால் நான் என்னிடம் நகை இல்லை கழுததில் போட்டு இருக்கும் ஒரு சைன் மட்டும் தான் வேறு ஒன்றும் இல்லை என கூறினேன்.

அப்படியா சரி அந்த சைனை கழட்டுங்கள் சோதித்து விட்டு தருகின்றேன் என்றார்கள். நானும் இது நாம் பல காலமாக கழுத்தில் போட்டு இருக்கும் செயின் தானே அதனால் என்ன பிரச்சினை வர போகின்றது என நினைத்து கழட்டி கொடுத்தேன்


அதை நிறுத்து பார்த்து விட்டு 20 கிராம் இருக்கின்றது. இதன் மதிப்பு 55000 எனவும் ஒரு நபருக்கு 10000 வரை நகை கொண்டு செல்ல அனுமதியுண்டு மீதம் உள்ள 45000 திற்கு 10சதவீதம் சுங்க வரியும், 3 சதவீதம் சேவை வரியும் சேர்த்து 5850 ரூபாய் செலுத்த வேண்டும் என கூறியதை கேட்டு செம கடுப்பாகி விட்டது. என்னங்க சொல்றீங்க இப்ப 2 மாதத்திற்கு முன்பு இதே சைனை போட்டு கொண்டுதான் இந்தியா வந்தேன்.



அப்பொழுதெல்லாம் ஒன்றும் இது போல் கூறவில்லை இப்பொழுது என்ன புதுசா சுங்க வரி கட்ட சொல்றீங்கன்னு கேட்டதுக்கு நாங்க என்ன சார் செய்ய முடியும் இப்பொழுது சட்டம் அப்படி போட்டு இருகின்றார்கள் நாங்கள் என்ன செய்ய முடியும், என அந்த அதிகாரி கூறினார்.

அப்புறம் வேறு வழி இல்லாமல் இந்த சைனை நான் ஊரில் வைத்து விட்டு வர மாட்டேன் திரும்பவு எடுத்து கொண்டு வெளிநாடு சென்று விடுவேன் என கூறி அதற்கான அனுமதி சீட்டை பெற்று கொண்டு செல்ல வேண்டியதாகி விட்டது.


எனக்கு பரவா இல்லை அந்த சைனை நான் எப்பொழுதும் கழுத்தில் போடு இருப்பதால் பிரச்சினை இல்லை. அங்கு வந்த பெண்களின் நிலைதான் மிகவும் பரிதாபமாக இருந்தது. 10 பவுன் எல்லாம் நமது பெண்கள் சாதரணமாக அணிந்து வருவார்கள். 10 பவுனுக்கு கணக்கு போட்டால் 26000 வரி மட்டும் செலுத்த வேண்டி வரும். அப்படி வந்த பெண்களில் பல பேர் திரும்பவும் நகை எடுத்து கொண்டு போவதாக அதற்கான இரசீதை பெற்றுக் கொண்டு சென்றார்கள்.


அந்நிய நாட்டு முதலீடுகளை அனைத்து துறைகளிலும் அனுமதித்து அந்நிய நாட்டு முதலாளிகள் கோடிகணக்கில் நமது நாட்டில் சம்பாதித்துக் கொண்டு இருகின்றார்கள். நமது நாட்டு குடிமக்கள் வெளிநாடு சென்று வேர்வை சிந்தி சம்பாதித்து நமது நாட்டுக்கு கொண்டு வரும் நகையில் அரசு 13 சதவீதம் பங்கு கேர்ப்பது எந்த விதத்தில் நியாயமான அணுகுமுறையாக இருக்க முடியும். சரி வரி விதிப்பது தான் விதித்தார்கள் ஆனால அதற்க்காண எந்த அறிவிப்பும் முறையாக அறிவிக்க வில்லை. அன்று என்னுடன் வந்த அனைத்து பயணி களுக்கும் இந்த சட்டம் குறித்து தெரியவில்லை என்பதை உணர முடிந்தது.


இவர்களை நாம் தலைவர்களாக ஏற்றுகொண்டதால் இன்னும் என்ன என்ன கொடுமையெல்லாம் அனுபவிக்க போகின்றோமோ தெரியவில்லை.


source: http://kalamarudur.blogspot.sg/2012/08/blog-post.html

Anonymous said...

ஆண் துணையோடும் ஹிஜாப் உடையோடும் கலந்து கொள்வார்கள் என்ற கண்டிஷனோடு தனது வீரர்களை அனுப்பி வைத்துள்ளது சவுதி அரேபியா. ..............

எனக்கு ஒன்று புரியவில்லை .. ஹிஜாப் சரி எதோ மத சம்பிரதாயம். அது ஏன் ஆண் துணை .. உடலையும் மனதையும் பெண்ணால் கட்டுப்படுத்த முடியாதா.. அப்படியே ஆண்களோடு பேசினால் அவள் என்ன அவனோடு படுக்கச் சென்றுவிடுவாளா ... அசிங்கமாக இல்லை இது ... !!!

ஒரு பெண் நினைத்தால் என்ன தான் ஆண் துணையோடு கூட போனாலும், பூட்டி வைத்தாலும் கூட தப்பு செய்ய நினைத்தால் செய்ய முடியும் ஒரு கடைக் கண் பார்வையே போதும். அதே பெண் நினைத்தால் விபச்சார விடுதியில் இருந்தாலும் கூட தன்னை பாதுக்காக்க முடியும் .. ஆண்கள் வல்லுறவு நடத்தினால் மட்டுமே அவள் கற்பு பறி போகும் . அதுவும் உடலளவில் தான் ..

Anonymous said...

ஒலிம்பிக் விளையாட்டை நடத்தும் சில கம்பெனிகள் உலகுக்கு சிறந்த விளையாட்டு வீரர்களை தருவதை விட அந்த வீரர்களை செக்ஸ் அடிமைகளாக மாற்றுவதில் அதிக அக்கறை காட்டுகின்றன. போதை மருந்துகள் மிக இலகுவாக புழக்கத்தில் விடப்படுகிறது. .....

ஒத்துக் கொள்கின்றேன் பணம் புழங்கும் இடமெல்லாம் போதை மருந்தும் செக்ஸும் உலா வருமே .. ஒலிம்பிக்கில் மட்டும் இது நடப்பது போல சொல்வதை நான் கடுமையாக கண்டிக்கின்றேன் .. !!! மத்தியக் கிழக்கில் அரபுகள் பெண்களை விலைக்கு வாங்கி சுகிக்கும் பல ஷேக்குகள் இருக்கின்றார்கள். போதையிலேயே திளைத்து வாழும் தாலிபான் முதல் பல கோடிஸ்வர இஸ்லாமியர்களும் இருக்கின்றார்கள் .. ஆக விளையாட்டுத் தான் இதற்கு காரணம் என்பதை என்னால் ஏற்க முடியாது ..

காண்டங்கள் இல்லை எனில் எய்ட்சோடு தான் பலர் வாழ வேண்டி இருக்கும் .. இதற்கு ஒலிம்பிக் என்ன செய்ய முடியும் .. அனைத்து விளையாட்டு வீரர்களும் கூடவே நான்கு நான்கு மனைவியரை அழைத்துச் செல்லலாமே .. பெண் விளையாட்டு வீரர்களுக்கு நான்கு கணவன்மாரை ரெடி பண்ணிக் கொடுக்கலாம்.

Anonymous said...

ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஹிஜாப்போடு விளையாட விட்டதை அவர்கள் எதிர்க்கவில்லை சகோ. உங்கள் அறிவு அவ்வளவு தான் .. தென்னாப்பிரிக்காவை ஏன் ஒலிம்பிக்கில் புறக்கணித்தார்கள். இனவெறிக் காட்டியதால் தானே.. அதே போல வெறித்தனங்களை தான் சில இஸ்லாமிய நாடுகளும் காட்டுகின்றன.. பெண்ணுக்கு ஒரு சட்டம் ஆணுக்கு ஒரு சட்டம் .. பாலியல் சிறுபான்மையினர், இறைமறுப்பாளர்கள் போன்றோரை கொடூரமாக நடத்துவதும் இனவெறியே அப்படிப் பட்டவர்களை ( எண்ணெய்க்கு ஆசைப்பட்டு ) ஒரு சில நிபந்தனையோடு விளையாட விடுவது சரியான முறையே இல்லை .. அப்படி எனில் தென்னாப்பிரிக்காவுக்கு ஒரு நியாயம் ( அங்கு பெற்ரோல் இல்லை ) பிற நாடுகளுக்கு ஒரு நியாயமா.. அனைவரும் சமம் என்ற ஒலிம்பிக்கின் அடிப்படைக் கோட்ப்பாட்டை இது உடைக்குது ( ஆமாங்க எங்களுக்கு இந்த கோட்பாடு வேதம் தான் .. )

பெண்கள் மார்பு விலகி போராடினால் அது ஒழுக்கம் கெட்டத் தனமா.. அப்படி அவர்களை இந்நிலைக்கு தள்ளியது உங்களின் அசிங்கம் பிடித்த ஆணாதிக்க வெறி.. உங்களின் சூட்டுக்கு நாலு பேரை வச்சிப்பீங்க.. அதற்கு இறைவன் கொடுத்தான் என்ற பழி வேறு ....

அவர்கள் வேசிகளாகவே இருந்துவிட்டு போகட்டுமே .. எனக்கு அவர்கள் உக்கிரம் கொண்ட காளி போலத் தெரிந்தார்கள். மணிப்பூரில் இந்திய இரானுவத்தின் பூ.. வெறிக்கு இரையான பெண்களும் முழு நிர்வாணமாகவே போராடினார்கள். அது சரி நீங்களே பெண்களை கெடுப்பீங்க. அப்புறம் அவ மேல வேசிப் பட்டம் கட்டி சுட்டுத் தள்ளுவீங்க ( ஆப்கானில் வீடியோ பிடிச்சு போட்டவன் வாழ்க )....

இலண்டன் காவல்துறை செய்தது சரி தான். ஆனால் அவர்களை அடித்து உதைத்து சென்றது சரியான ஒன்றே அல்ல.. உங்கள் சட்டப்படி ஆம்பளை போலிஸ் பொம்பளையைத் தொட்டது சரியா இல்லையா... அச்சோ... அச்சோ

Anonymous said...

ஒலிம்பிக் போட்டிகளுக்கு இடையே அதிகளவில் செக்ஸ் உறவு கொள்ளும் சம்பவங்கள் ....

ஒன்றும் செய்ய முடியாது செக்ஸை வியாபாரம் ஆக்குகின்ற தொழில் வணிகர்களைத் தான் பிடிக்க வேண்டும் ( இதில் நம்ம சௌதி பார்ட்டிகளுன் அடங்குகின்றார்கள் ) .. அரபுகள் பலர் ஒலிம்பிக் பார்க்க லண்டன் பறந்துள்ளனராம். அல் அரேபியா செய்தி சொல்லுது .. ( ஒலிம்பிக் பார்க்கத் தான் போறாங்களா ) .. ஒலிம்பிக் பார்க்கும் சாக்கில் நான்குக்கு மேலாக ருசிப் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் தான்.. இல்லை அரபுகள் எல்லோரும் ராமன்கள் என்று அடித்து சொல்ல முடியுமா...

பெண்களின் இந்த நிர்வாண போரட்டாம் சரியாவுக்கு எதிராக மட்டுமல்ல மேல்கலாச்சார வியாபார ரீதியாக்கப்பட்டு இருக்கும் பாலியல் பெண்களின் உரிமைகளுக்காகவும் தான் ....

ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்பவர்கள் போட்டி தொடங்கும் முன்னரும் பின்னரும் கூட மது, ஸ்ட்ராய்ட் , போதை போன்றவற்றை பயன்படுத்தியமை தெரிந்தால் விளையாட முடியாது சகோ... ஆக விளையாட்டு வேகத்துக்கு ஒரே மருந்து செக்ஸ் தான் .. ஆனால் அனைவரும் செக்ஸுக்காகத் தான் ஒலிம்பிக்கு போக வேண்டிய அவசியம் இல்லை. விளையாட்டு வீரர்கள் நினைத்தால் அவரவர் நாட்டிலேயே வித விதமான பெண்களோடு சல்லாபம் கொள்ளலாம் ...

அங்கு போதை சாப்பிட போபவர்கள் வீரர்கள் அல்ல.. வியாபாரிகள் பணத்தில் கொழுத்தவர்கள் ( இதில் அரபுகளும் அடங்குவார்கள் - இல்லை என நிரூபிக்க முடியுமா ) ....

வாட்டர் பாட்டில்களில் நைசாக மதுவை நிரப்பிக் கொண்டு உற்சாகமாக இருப்பார்களாம். அதேபோல போதை மாத்திரைகளும் கூட ரகசியமாக புழங்குவது சகஜமாம். இதுபோன்ற நடவடிக்கைகளை அதிகாரிகள் பெரும்பாலும் கண்டு கொள்வதில்லையாம்..............

Anonymous said...

வீரர்கள் போதை சாப்பிட வாய்ப்பே இல்லை .. அப்படி சாப்பிட்டால் சோதனைகளில் தெரிய வந்துவிடும் .. சீக்ரெட் ஒலிம்பியன் புத்தகம் முழுவதும் உண்மையல்ல.. அப்படிப் பார்த்தால் முகமது உண்மையில் இருந்தாரா என்ற புத்தகம் இங்கு சக்கைப் போடு போடுகின்றது. அதுவும் உண்மை என நம்பலாமே.. !!! புத்தகங்களை மட்டும் நம்பும் பழக்கம் நம்முள் போகவே போகாதுங்க...

....2000ம் வருடம் ப்ரேசில் நடத்திய கால்பந்து விளையாட்டை விளம்பர படுத்த விபச்சாரிகளை இறக்குமதி செய்ததும், பெண்களுக்கு உடை அணியாமல் மார்பு, இடுப்பின் முன், பின் பகுதிகளிள் கால்பந்து படத்தை வரைந்து கடற்கரையில் நிர்வாணமாக கால்பந்து போட்டி நடத்தியதும் இந்த நேரத்தில் நினைவிற்க்கு வந்து தொலைக்கின்றது....

பெண்களை வியாபார பொருளாக பார்க்கும் எண்ணத்தை தான் நாமும் எதிர்க்கின்றோம். பெண் அவள் விரும்பினால் யாரோடும் படுத்துவிட்டு போகட்டும்.. ஆனால் உடலை வியாபாரம் ஆக்கும் இழிநிலை எதிர்க்கின்றோம். இதனைத் தான் ஃபெம்னா அமைப்பும் வலியுறுத்தி வருகின்றது .. ஆனால் உங்கள் பார்வைக்கு பெண் என்றாலே செக்ஸ் பொருள் தானே.. எங்கே நாம் வைத்திருக்கும் செக்ஸ் பொருளை இன்னொருவன் தட்டிக் கொண்டு போய்விடுவானோ என்ற அப்ச்ஸ்வினெச்சால் அவளை மூடி வைப்பதும், கூடவே ஆண் துணையோடு போ என சொல்வதும் ( சந்தேகப் புத்தி ) .. என்னவாம் ....

பெண்களை செக்ஸ் பொருளாக பாவித்ததில் முகமது போன்றோரும் உள்ளவர்களே.. அக்காலத்தில் அது சரியாக இருந்திருக்கலாம்.. ஆனால் இன்று வரை அது தொடர்கின்றது ...

....உலக விபசாரிகளை இறக்குமதி செய்து விளையாட்டு வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் காண்டங்களை இஷ்டம் போல் விநியோகித்து இளைஞர்களை வழி கெடுக்கும் மேற்கத்திய கலாசாரம் எங்கே?...

மேற்கோ கிழக்கோ இடையோ கலாச்சாரங்கள் அனைத்தும் உடைபட வேண்டும் .. மனித இரக்கத் தன்மையிலும் சமத்துவத்திலும் புதிய கலாச்சாரங்கள் உருவாக்கப்படல் வேண்டும் .. அது பெட்டர் இது பெட்டர் என்பது எல்லாம் சுத்தப் பேத்தல் ......



.....“கல்வி குறைந்து போய் விடுவது, அறியாமை வெளிப்படுவதும், வெளிப்படையாய் விபச்சாரம் நடப்பதும், ஐம்பது பெண்களுக்கு அவர்களை நிர்வமிக்கும் ஒரே ஆண் என்ற நிலைமை வரும் அளவுக்குப் பெண்கள் மிகுதியாவது ஆண்கள் குறைந்துவிடுவதும் மறுமை நாளின் சில அடையாளங்களாகும்” ...

இதை சொன்ன மாமேதாவியருக்கு வரலாறு அவ்வளவு தான் தெரியும்.. இந்த நிலை எதோ இன்று வந்தது போல் உளறிவிட்டு போயுள்ளார்... இதே நிர்வகிக்கும் நிலை ரோமானியர் காலத்திலேயே இருந்தது. அதாவது முகமது பிறக்க முன்னரே. ஓ ! அப்போ அவர் பிறக்கும் முன்னரே மறுமை நாள் வந்துவிட்டதோ ... !!!!

போங்கய்யா.. நீங்களும் உங்களின் அடைப்புக்குறிகளும் .. ப்ராக்கட் போட்டு எழுதுவதை நிறுத்துங்கள். அல்லா என்ன சொன்னாரோ அதனை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயருங்கள் .. நீங்களாக புதியதை சேர்க்காதீர்கள் .... முடியாதா. விட்டுவிடுங்கள் .. விரும்பியவர் அரபியில் படித்து பொருள் உணரட்டும் ... !!!

வர்டா ...........................................................

suvanappiriyan said...

சலாம் சகோ ஹாஜா மைதீன்!

//இவர்கள் விளையாட்டு எனும் பெயரில் விபசாரத்தை நடத்துகிறார்கள்...வெட்க கேடு.. //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

இக்பால் செல்வன்!

என்னதான் முயன்றாலும் இந்த இஸ்லாமியர்களை ஒரு வழிக்கு கொண்டு வர முடியவில்லையே என்ற ஆதங்ககம் உங்கள் பின்னூட்டத்தில் தெரிகிறது. சில நேரங்களில் உங்களை நினைத்தால் பரிதாபமாகவும் இருக்கிறது. ஏதோ புரட்சி செய்யப் போவதாக நினைத்து படுகுழியில் விழுந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எடுத்து வைக்கும் கருத்துகளை உங்கள் குடும்பத்தவரே பறம் தள்ளி விடுவார்கள். பகுத்தறிவு, பரிணாமம், பெண் விடுதலை என்று ஏகத்துக்கும் குரல் கொடுத்தவர்களெல்லாம் முகவரி இழந்து ஒரு மூலையில். :-)

இதே ஒலிம்பிக் கிராமத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் தங்களின் தாஃவா பணியை வீரியமாக்கியிருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் கனடாவும் ஷரியாவுக்குள் வரும் போது வேறு நாட்டை நீங்கள் தேட வரலாம்.

நீங்களும் இன்னும் உங்களைப் போன்றவர்களும் எத்தனை பதிவுகளை ஆபாசத்தை ஆதரித்தும், இஸ்லாத்தை இகழ்ந்து எழுதினாலும் அது அத்தனைக்கும் இஸ்லாமியர்கள் தக்க பதிலை பதிவுகள் வாயிலாக கொடுத்துக் கொண்டே இருப்பார்கள் மறக்க வேண்டாம்.

'நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள்: தீமையைத் தடுப்பார்கள்: தொழுகையை நிலை நாட்டுவார்கள்: ஏழை வரியையும் கொடுப்பார்கள்: இறைவனுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே இறைவன் அருள் புரிவான்: இறைவன் மிகைத்தவன்: ஞான மிக்கவன்:'
-குர்ஆன் 9:71

suvanappiriyan said...

குஜராத் மோடி ஆட்சியில் 2002 இல் நடைபெற்ற மதக்கலவரம் - வரலாறு உள்ளவரை பேசப்பட்டுக் கொண்டே இருக்கும்.

கோத்ரா ரயில் நிலையத்தில் ஒரு ரயில் பெட்டி எரிந்ததால் ஏற்பட்ட உயிரிழப்புக்குக் காரணம் முஸ்லிம்கள்தான் என்று முத்திரை குத்தி பெரும்பான்மை எண்ணிக்கை கொண்ட இந்து மக்கள் மத்தியில் வெறியை ஊட்டி மதக் கலவரத்தை நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியே தலைமை தாங்கி நடத்தியது என்பது மாபெரும் வெட்கக்கேடு!

கோத்ராவில் எரியுண்டு மாண்டவர்களின் சடலங்களை அவரவர்கள் ஊர்களுக்குக் கொண்டு செல்லுவது என்று தொடக்கத்தில் முடிவு செய்யப்பட்டது. முதல் அமைச்சர் நரேந்திர மோடி சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் வந்து பார்த்த பிறகுதான் பிரச்சினை திசை திரும்பியது. சடலங்களை ஒட்டு மொத்தமாக ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று முதல் அமைச்சர் மோடி ஆணையிட்டதால், திட்டம் தீட்டிக் கொடுத்ததால், மக்கள் மத்தியில் குரூரமான வெறியுணர்வு தூண்டப்படுவதற்கு வசதி செய்து கொடுக்கப் பட்டது.

எரியுண்ட சடலங்களை ஒரே நேரத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்றால் எத்தகைய விபரீத விளைவுகளை அது ஏற்படுத்தும் என்பது எல்லோராலும் எளிதாகப் புரிந்து கொள்ளப்படக் கூடியதாகும்.
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முசுலிம்கள் கொன்று குவிக்கப்பட்டனர். காவல்துறையும் சேர்ந்து கொண்டு கொலை வெறியாட்டம் போட்டது. வழக்குகள் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை.
உச்சநீதிமன்றம் தலையிட்டதன் காரணமாக வழக்குகள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டன. இப்பொழுதுதான் நீதிமன்றம் கொலையாளிகளுக்குத் தண்டனை கொடுக்கத் தொடங்கியுள்ளது. மெஹ்சானா மாவட்டம் விஸ்நகரில் தீப்தா தர்வாஜா பகுதியில் இரண்டு பச்சிளம் குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர்கள் வன்முறைக் கும்பலால் ஈவு இரக்கமின்றி கொலை செய்யப்பட்டனர்.

சட்டமன்ற முன்னாள் உறுப்பினர், நகராட்சித் தலைவர்கள் உட்பட 85 பேர்கள் மீது வழக்கு தொடரப் பட்டது. இதில் 21 பேர்களுக்கு ஆயுள் தண்டனையும் கடமை தவறிய காவல்துறை அதிகாரி ஒருவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் அளிக்கப்பட்டது.

மோடி அரசு ஒழுங்காக வழக்கை நடத்த விரும்பாத நிலையிலேயே தண்டனைகள் தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன என்றால், எந்த அளவுக்குக் குற்றங்கள் - வன்முறைகள் அங்கு கொம்பு முளைத்துக் கூத்தாடி யிருக்கும் என்பதை எளிதில் உணரலாமே. பெஸ்ட் பேக்கரி வழக்கும் அப்படியே!
உச்சநீதிமன்றத்தின் இன்னொரு தீர்ப்பும் மிக முக்கியமானது. தகர்க்கப்பட்ட சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு குஜராத்தின் பி.ஜே.பி. அரசு நட்ட ஈடு கொடுக்கவேண்டும் என்று குஜராத் உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அதனை எதிர்த்து குஜராத் மாநில அரசு உச்சநீதிமன்றம் சென்றது. உச்சநீதிமன்றமோ குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.

இப்படி தொடர்ந்து நீதிமன்றங்கள் நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் பி.ஜே.பி. அரசுக்கு எதிராகத் தீர்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த வலியைப் பொறுக்க முடியாமலும், தாம் அம்பலப்படுத்தப் பட்டு வருகிறோம் என்ற நிலையில் ஆத்திரப்பட்டும், உணர்ச்சி வயப்பட்டுமேதான் நரேந்திர மோடி நான் குற்றம் செய்திருந்தால் என்னைத் தூக்கில் போடுங்கள் என்று கத்துகிறார் - கதறுகிறார்.
இவ்வளவு மோசமான ஒருவரை இந்தியாவில் உள்ள உயர்ஜாதி ஊடகங்கள் அடுத்த பிரதமருக்கான வேட்பாளராகத் தூக்கிப் பிடிக்கின்றன. காற்றடித்து வண்ண வண்ண பலூன்களாக உயரப் பறக்க விடுகின்றன என்றால் இந்த நாட்டில் உயர்ஜாதி மனப்பான்மை என்ற ஒரு தீய சக்தி படமெடுத்து ஆடும் ஆபத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
குஜராத் கலவரம் நடந்த ஒரு கால கட்டத்தில், அப்பொழுது பிரதமராக இருந்த அடல்பிகாரி வாஜ்பேயி என்ன சொன்னார் என்பதையும் இந்த இடத்தில் மறக்காமல் நினைவு கூர்வது மிகவும் பொருத்த மானதாகும்.

எந்த முகத்தை வைத்துக் கொண்டு நான் வெளிநாடு செல்லமுடியும்? என்ற அவரது வினாவையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டாமா உயர்ஜாதி ஊடகங்கள்?
இன்னும் பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. ஒவ்வொன்றாக வரும் தீர்ப்புகள் குஜராத் மோடி அரசின் முகத் திரையை முற்றிலும், கிழிக்கும் என்பதில் அய்யமில்லை.

-viduthalai
02-08-2012

suvanappiriyan said...

சகோ சார்வாகன்!

//நாம் அனைவரும் ஒரு யோக்கியன் என்ற முகமூடி அணிந்து கொண்டு சமூகத்தில் நடிக்கிறோம்.சந்தர்ப்பம் கிடைக்காத்வரை பலர் நல்லவர்களே. நம் இயல்புகளை,செயல்களை மறைக்கிறோம். நம் சிந்தனையில் வரும் வகை வகையான எண்ணங்கள்தான் எத்தனை?.//

இதைத்தானே இஸ்லாமும் சொல்கிறது! ஒருவனுக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் சபல புத்தி உள்ளவன் தவறி விடுகிறான். எனவே தான் அதற்குரிய வாசல்களை அடைக்கச் சொல்கிறது இஸ்லாம்.

என்ன....சேம் ஸைட் கோல் போட்டு அசத்துரீங்க......:-)

Anonymous said...

// கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)//

அடுத்தவர்களைக் கேவலமாகப் பேசுவதைத் தான் வள்ளுவர் இப்படிச் சொல்லியிருக்கிறாரோ?

Anonymous said...

you blogger, you didnt answer any questions straightly one by one or point by point as he did to your post. Just wrote something godhra bla bla bla...pls try to answer his every point one by one clearly do not mislead the discussion....what u did is called chappai kattu...

Anonymous said...

Mr Iqbal Selvan,

///பெண்கள் மார்பு விலகி போராடினால் அது ஒழுக்கம் கெட்டத் தனமா.. அப்படி அவர்களை இந்நிலைக்கு தள்ளியது உங்களின் அசிங்கம் பிடித்த ஆணாதிக்க வெறி..///

உங்களின் தங்கை, அக்கா, மனைவிகளின் மார்பகங்களை வெளியில் காட்டித் திரிவதை நீங்கள் சீரணித்துக் கொள்வீர்களா? அது ஒழுக்கம் கெட்டத்தனம் என்று உங்கள் உள்மனம் வெளிச்சம் போட்டுக் காட்டுமே? அப்போது நீங்கள் சொல்லும் ஆணாதிக்க வெறி, உங்களுக்கும் இருக்கிறது என்று ஒத்துக் கொள்கிறீர்கள் தானே?

வேறு பெண்கள் மார்பகங்களைத் திறந்து போவதை எதிர்த்தால், ஆணாதிக்க வெறி என்று சொல்லும் இக்பால் செல்வன், தனது மகள், மனைவி, தங்கை, அக்காமார்களின் மார்பகங்களை திறந்து மற்றவர்களுக்கு காட்டுவதை விரும்புவாரா?

நல்ல வார்த்தையப்பா! ஆணாதிக்கம், பெண்ணியம் என்ற சொற்கள் எல்லாம் பிற பெண்களுக்கு! நமக்கல்ல!

///பெண்களை வியாபார பொருளாக பார்க்கும் எண்ணத்தை தான் நாமும் எதிர்க்கின்றோம். பெண் அவள் விரும்பினால் யாரோடும் படுத்துவிட்டு போகட்டும்.///

உங்களது எண்ணத்தை நாம் மதிக்கிறோம். திரும்பவும் கேட்கிறேன். உங்களின் மனைவியும் ஒரு பெண்தானே? அவர் யாரோடும் படுத்துவிட்டுப் போக அனுமதிக்க மாட்டீர்கள். உங்களது மகள் மார்கள் அவர்கள் விருப்பத்துடன் யாருடனும் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள நிச்சயம் அனுமதிக்க மாட்டீர்கள்.

அப்படியாயின், உங்களுக்கும் ஆணாதிக்க வெறி தொற்றிவிட்டது என்று அர்த்தம்.

Anonymous said...

A good article on assam issue.
http://twocircles.net/2012jul31/assam_muslims_and_insiders.html

Anisha Yunus said...

ச்ச..... ஒலிம்பிக்கின் மேல் இருந்த மதிப்பே போய்விட்டது. பெரிய விசிறி அல்ல நான் எனினும் உடலை வருத்தி விளையாடுகிறார்களே... இதற்கென எத்தனை எத்தனை வருடம் எத்தனை தியாகம் செய்வார்களோ என்றெண்ணியிருந்தேன் ஆனால் இப்படித்தான் தியாகம் செய்கிறார்கள் என்பதை படித்தால்..... ஹ.... சாப்பிட்டதெல்லாம் வெளியேறிவிடும் போலிருக்கிறது. அல்லாஹ் காப்பாற்றட்டும் இவர்களை. இவர்களின் மத்தியிலும் IERAவின் தாவாஹ் வேலைகளை என்னவென்பது, மாஷா அல்லாஹ்..... அல்லாஹ் அவர்களின் நிய்யத்தை பொருந்திக் கொள்ளட்டும், பன்மடங்கு நற்கூலியை தரட்டும். ஆமீன்.

Anonymous said...

http://www.huffingtonpost.com/ahmed-shihabeldin/saudi-arabias-olympic-par_b_1709873.html

suvanappiriyan said...

சகோ அன்னு!

//ச்ச..... ஒலிம்பிக்கின் மேல் இருந்த மதிப்பே போய்விட்டது. பெரிய விசிறி அல்ல நான் எனினும் உடலை வருத்தி விளையாடுகிறார்களே... இதற்கென எத்தனை எத்தனை வருடம் எத்தனை தியாகம் செய்வார்களோ என்றெண்ணியிருந்தேன்//

ஒரு விளையாட்டு வீரன் என்ற முறையில் நானும் ஒலிம்பிக்கை மிக உயர்வாக எண்ணியிருந்தேன். முஸ்லிம்கள் இதில் அதிகம் சோபிப்பதில்லையே என்று முன்பு வருந்துவது உண்டு. தற்போது அந்த வருத்தம் சென்று விட்டது. இப்படி எல்லாம் தியாகம் செய்து அந்த ஒலிம்பிக் மெடலை வாங்க அவசியமே இல்லை.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

//you blogger, you didnt answer any questions straightly one by one or point by point as he did to your post.//

நான் சொல்வதை விட ஒரு அனானியே பதில் கூறி விட்டார். வேறு எதற்கு பதில் இல்லை என்று தனியாக தந்தால் தர்க்க ரீதியாக பதிலை தருகிறேன்.

suvanappiriyan said...

தணல்!

//சு.பிரியன்! என்ன தான் முக்கி முனகினாலும் உமது சுவன வழிக்கு வேறு ஒருவரும் வர மாட்டார்கள்! இத்தனை நாள் இத்தனை இடுகைகள் எழுதி ஈர்க்க இழுக்க முயன்றதில், இந்தப் பதிவுலகில் ஒருவரேனும் உமது மற்றும் உமது மதக் கொள்கைகளைப் படித்துவிட்டு இஸ்லாமை தமது மார்க்கமாக ஏற்றுக் கொண்டுள்ளனரா?//

என்னைப் போன்றவர்கள் எழுதுவது எவரையும் இஸ்லாத்தின் பக்கம் இழுப்பதற்காக அல்ல. ஒருவரின் மனதில் மாற்றத்தைக் கொண்டு வருவது இறைவன் கையில் இருக்கிறது.

நாங்கள் எழுதவதின் முக்கிய நோக்கமே இஸ்லாத்தின் மேல் அபாண்டமாக சுமத்தப்பட்ட பழிகளை தோலிறித்துக் காட்டி உண்மையை விளக்குவதே! அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளோம். எனக்கு வரும் தனி மெயில்களும் அதை உறுதிப்படுத்துகிறது. அது போதும் எங்களுக்கு..

சிராஜ் said...

/அரபுகள் பலர் ஒலிம்பிக் பார்க்க லண்டன் பறந்துள்ளனராம். அல் அரேபியா செய்தி சொல்லுது .. ( ஒலிம்பிக் பார்க்கத் தான் போறாங்களா ) .. ஒலிம்பிக் பார்க்கும் சாக்கில் நான்குக்கு மேலாக ருசிப் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் தான்.. இல்லை அரபுகள் எல்லோரும் ராமன்கள் என்று அடித்து சொல்ல முடியுமா... /////
அண்ணே....

இக்பால் செல்வன் பிரச்சனை இஸ்லாம் அல்ல...அரபுக்கள்.... இவருக்கு இஸ்லாத்துக்கும் அரபுக்களுக்குமே வித்தியாசம் தெரியல..இவருக்கு என்னத்த சொல்லி புரிய வைக்க போறீங்க...????? ஸ்மைலி போட்டுட்டு போங்கண்ணே....

வவ்வால் said...

திரு.சு.பி,

ஒலிம்பிக் காபீர்கள் நடத்தும் ஒரு விளையாட்டு அதைப்பற்றி உங்களுக்கு என்ன கவலை, வேண்டுமானால் புருனை சுல்தான் காம வேட்டை நடத்துவது குறித்து பதிவுப்போட்டு கவலைப்படுங்களேன் :-))

சிராஜ் said...

/* போதையிலேயே திளைத்து வாழும் தாலிபான் */

எண்ணன்ணே... வாங்கி கொடுத்துட்டு வந்தவர் மாதிரி சொல்றீங்க...

ஆப்கானிஸ்தான் போதை ஏற்றுமதியில் திளைத்த நாடு... தாலிபன்கள் தான் வந்து அதை தடை செய்தார்கள்.. அவர்களை பார்த்து போதை மறந்து கடத்துகிறார்கள் என்று சொல்ல உங்களுக்கு கொஞ்சம் கூட கூச்சமாக இருக்காதா?? அமெரிக்க சொல்றத வாந்தி எடுக்கிறத தவிர வேற ஒன்னும் தெரியாதா?????

suvanappiriyan said...

வருண்!

//சரி, எதுக்குய்யா காட்டுமிராண்டி நாட்டுக்குப் போயி வாழனும்? நம்ம ஊர்லயே இருக்க வேண்டியதுதானே? னா பதிலைக்காணோம்.//

சும்மா அடிச்சு விளாட்றீங்க....ஈராக் சண்டையில் குவைத்திலிருந்தும் மற்ற வளைகுடா நாடுகளிலிருந்தும் வெளியேறிய இந்தியர்களால் நமது நாட்டு பொருளாதாரமே ஒரு ஆட்டம் கண்டது நினைவிருக்கலாம். அமெரிக்காவிலோ மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் உள்ளவர்கள் அதிகம் பேர் குடும்பத்தோடு அங்கேயே செட்டில் ஆகி விடுகின்றனர். ஆனால் வளை குடா நாடுகளில் அதிகம் பேர் தங்களது குடும்பத்தை தாய் நாட்டிலேயே விட்டு விட்டு தங்கள்து செலவு போக மொத்த பணத்தையும் நமது நாட்டுக்கே அனுப்பி விடுகின்றனர். இவ்வளவு ஊழலுக்கு பிறகும் நமது நாடு நிமிர்ந்து நிற்க காரணமே வளைகுடா பணம் தான். எங்கள் ஊரைச் சுற்றி கொத்தனார், பிளம்பர், எலக்ட்ரீஷியன், இரும்பு சம்பந்தமான வேலையில் உள்ளோர் அனைவரும் வளைகுடா சம்பளத்தை நம் நாட்டிலேயே பெற்றுக் கொள்கிறார்கள். ஆட்களும் கிடைப்பதில்லை. அந்த அளவு வீடு கட்டும் பணி கொடி கட்டி பறக்கிறது. அனைத்தும் வளைகுடா பணமே.

அடுத்து இந்தியர்களை அரபு நாட்டுக்கு அனுப்ப நம் அரசு தடை விதித்தால் அவர்கள் பங்களாதேஷிலிருந்தோ பாகிஸ்தானிலிருந்தோ ஆட்களை எடுத்துக் கொள்வார்கள். இந்த வகையிலும் நஷ்டம் நமக்குத்தான்.

எவனோ ஒரு அரபி எப்பொழுதோ ஒரு முறை வீட்டுப் பெண்களிடம் தவறாக நடந்தால் அதையே பெரிது படுத்தி அரபு நாடுகள் என்றால் ஒரு தவறான பிம்பத்தை ஏற்படுத்த சிலர் முயல்வது எனக்கு சிரிப்பைத்தான் வரவழைக்கிறது.

suvanappiriyan said...

திரு வவ்வால்!

//ஒலிம்பிக் காபீர்கள் நடத்தும் ஒரு விளையாட்டு அதைப்பற்றி உங்களுக்கு என்ன கவலை, வேண்டுமானால் புருனை சுல்தான் காம வேட்டை நடத்துவது குறித்து பதிவுப்போட்டு கவலைப்படுங்களேன் :-))//

அவர் இஸ்லாமியராக உள்ளதால் இந்த அளவிலாவது இருக்கிறார். அந்த பணம் உங்களிடம் இருந்தால் எந்த நேரமும் நாலு காலில்தான் நடப்பீர்கள். :-)

suvanappiriyan said...

சகோ சிராஜ்!

//இக்பால் செல்வன் பிரச்சனை இஸ்லாம் அல்ல...அரபுக்கள்.... இவருக்கு இஸ்லாத்துக்கும் அரபுக்களுக்குமே வித்தியாசம் தெரியல..இவருக்கு என்னத்த சொல்லி புரிய வைக்க போறீங்க...????? ஸ்மைலி போட்டுட்டு போங்கண்ணே....//

இக்பால் செல்வனின் வாதங்கள் எனக்கு சிரிப்பையே வரவழைக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிராஜ்.

Anonymous said...

// உங்களின் தங்கை, அக்கா, மனைவிகளின் மார்பகங்களை வெளியில் காட்டித் திரிவதை நீங்கள் சீரணித்துக் கொள்வீர்களா? அது ஒழுக்கம் கெட்டத்தனம் என்று உங்கள் உள்மனம் வெளிச்சம் போட்டுக் காட்டுமே? அப்போது நீங்கள் சொல்லும் ஆணாதிக்க வெறி, உங்களுக்கும் இருக்கிறது என்று ஒத்துக் கொள்கிறீர்கள் தானே? //

தங்கை, அக்கா, மனைவியர் மார்பகங்களை வெளியில் காட்டி அலையுங்கள் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் அவர்கள் அப்படி வெளியில் காட்டி போராடினால். என்னை எதிர்த்து போராடினால். குற்றம் எங்குள்ளது என்பதை அறிந்துவிடலாம். ஒரு பெண் மறைக்க விரும்பும் உறுப்பினை வெளியில் காட்டி போராடுவதும் - சார்வாகன் சொன்னது போல மனித வெடிகுண்டாகி உயிரை மாய்த்து போராடுவதும் ஒன்றே ஆகும். ஏனெனில் மானமே உயிர் என்று சொல்பவர்களுக்கு. மானம் போவதும் உயிர் போவதும் ஒன்றே ஆகும்.

Anonymous said...

அனானி ://வேறு பெண்கள் மார்பகங்களைத் திறந்து போவதை எதிர்த்தால், ஆணாதிக்க வெறி என்று சொல்லும் இக்பால் செல்வன், தனது மகள், மனைவி, தங்கை, அக்காமார்களின் மார்பகங்களை திறந்து மற்றவர்களுக்கு காட்டுவதை விரும்புவாரா?//

அந்த பெண்கள் மார்பு திறந்தது என்ன ஜாலியாக இருக்க வாருங்கள் என்பதற்காகவா ? அவர்கள் மார்பு திறந்தமை ஒரு போராட்டம் என்பதைக் கூட உணர முடியாதவர்களிடம் உரிமை கோருவது எவ்வளவு முட்டாள் தனம் என்பதை நீங்களே நிரூபித்துவிட்டீர்கள். எனது சகோதரி மார்புகளை திறந்து போராடினால் முதலில் ஓடிப் போய் அவரின் பிரச்சனை என்ன.. அதனை எப்படி தீர்ப்பது என்று தான் யோசிப்பேனே ஒழிய !!! அவற்றைப் பார்த்து ஜொள்ளுவிடுவதையோ. அல்லது கேடு கெட்டவள் என திட்டுவதையோ நான் செய்ய மாட்டேன்.

Anonymous said...

அனானி : // உங்களின் மனைவியும் ஒரு பெண்தானே? அவர் யாரோடும் படுத்துவிட்டுப் போக அனுமதிக்க மாட்டீர்கள். உங்களது மகள் மார்கள் அவர்கள் விருப்பத்துடன் யாருடனும் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள நிச்சயம் அனுமதிக்க மாட்டீர்கள்.//

எனது மனைவி என்னோடு படுக்க விருப்பம் இல்லை என்று சொன்னால் நான் செய்ய வேண்டும். அவளை அடித்து உதைத்து படுத்துத் தான் ஆகவேண்டும் என்பது சொல்வது சரியா. இல்லை உனது பிரச்சனை என்ன ? என்னால் தீர்வளிக்க முடியுமா என பேச்சுவார்த்தைக்கு போவது சரியா? முடிவில் அவள் என்னோடு வாழ்விருப்பம் இல்லை எனில் விவாகரத்து கொடுப்பது சரியா ? இல்லை அவள் விபச்சாரி என சொல்லி சுட்டுக் கொல்வது சரியா ?

எனது மகள் யாருடன் செக்ஸ் ( திருமணம் என்று நீங்கள் பெயரிட்டு வைத்த ) கொள்ள விரும்புகின்றாள் என்பதை அவள் தான் தீர்மானிக்க வேண்டும். எம்மால் என்ன செய்ய முடியும். இல்லை நீ நான் சொல்பவனோடு தான் படுக்க ( மணக்க ) வேண்டும் என்று சொல்வது சரியா ? இல்லை நீ விரும்பியவனோடு படுக்க ( மணக்க ) அனுமதிப்பது சரியா ?

Anonymous said...

//இக்பால் செல்வன் பிரச்சனை இஸ்லாம் அல்ல...அரபுக்கள்.... இவருக்கு இஸ்லாத்துக்கும் அரபுக்களுக்குமே வித்தியாசம் தெரியல..இவருக்கு என்னத்த சொல்லி புரிய வைக்க போறீங்க...????? ஸ்மைலி போட்டுட்டு போங்கண்ணே....//

எனக்கு பிரச்சனை என்றுமே இஸ்லாம் அல்ல.. இஸ்லாம் என்ற பெயரால் தமது அட்டூழியங்களுக்கு நியாயம் சொல்பவர்களே ( அரபுகள் உட்பட ) .... !!!

//ஆப்கானிஸ்தான் போதை ஏற்றுமதியில் திளைத்த நாடு... தாலிபன்கள் தான் வந்து அதை தடை செய்தார்கள்.. அவர்களை பார்த்து போதை மறந்து கடத்துகிறார்கள் என்று சொல்ல உங்களுக்கு கொஞ்சம் கூட கூச்சமாக இருக்காதா?? அமெரிக்க சொல்றத வாந்தி எடுக்கிறத தவிர வேற ஒன்னும் தெரியாதா?????//

ஹிஹி !!! தடை செய்தார்களா .. ஆம் செய்தார்கள் ஏழைகள் சாப்பிடக் கூடாது .. காசு படைத்தவனே சாப்பிட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் .. அல் -கய்தா போதைப் பொருட்களை அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் ஏற்றுமதி செய்த கட்டுரை ஆய்வுகளை நீங்கள் படித்தது இல்லை போலும் ... !!! அல்-கய்தா போன்றவர்களும், அரபிய அரசர்மார்களும் வெளியே சொல்வது ஒன்று செய்வது ஒன்று. தமது வியாபார நலன்களுக்கு ஷரியா சட்டம் நல்லவன் வல்லவன் என்று பேசிவிட்டு - கப்பல்களில் பெண்களையும் போதைப் பொருட்களையும் விற்றுக் காசாக்கி வருகின்ற கதைகள் அறியாத அப்பாவி போலும் நீங்கள் .. ( அரபுகளுக்குத் துணைப் போவது அவர்களின் பரம் எதிரிகளாக சித்தரிக்கப்படும் அமெரிக்க யூத வியாபாரிகள் என்பது கூடுதல் தகவல்கள் )

Anonymous said...

//ஒரு அரபி எப்பொழுதோ ஒரு முறை வீட்டுப் பெண்களிடம் தவறாக நடந்தால் அதையே பெரிது படுத்தி அரபு நாடுகள் என்றால் ஒரு தவறான பிம்பத்தை ஏற்படுத்த சிலர் முயல்வது எனக்கு சிரிப்பைத்தான் வரவழைக்கிறது.//

அரபுகள் அனைவரும் கெட்டவர்கள் இல்லை என்பதை நானும் சொல்கின்றேன். இங்குள்ள அரபுகள் சிலரை எனக்கு நன்றாகவே தெரியும் .. சரி அந்த தப்பு செய்த அரபியின் கைகளை வெட்டிவிட்டார்களா.. அதுக் குறித்து ஒரு தகவலையும் காணோம் . இல்லை அரபு என்பதால் தண்டம் செலுத்தினால் போதும் என தப்பிக்க விட்டார்களா...

Anonymous said...

//அவர் இஸ்லாமியராக உள்ளதால் இந்த அளவிலாவது இருக்கிறார். அந்த பணம் உங்களிடம் இருந்தால் எந்த நேரமும் நாலு காலில்தான் நடப்பீர்கள். :-)//

சோ. இஸ்லாமியராக இருப்பதால் தான் கம்மியா ( இதுவே கம்மியா ) தப்பு பண்றார்... !!! அவர் செய்தது தவறு என்று சொல்லும் தைரியம் உமக்கு இல்லை என்பதை நீங்களே காட்டிவிட்டீர்கள் .. !!!

Anonymous said...

//இக்பால் செல்வனின் வாதங்கள் எனக்கு சிரிப்பையே வரவழைக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் //

பரவாயில்லை சிரித்தால் உடலுக்கு நல்லதாம் மருத்துவர்கள் கூறுகின்றார்கள் ... என்ன நாளை உலகே சிரிக்கும் நிலைக்கு வந்துவிடாதீர்கள் என்பதால் தான் எனது வாதம் ... !!!

suvanappiriyan said...

//.. சரி அந்த தப்பு செய்த அரபியின் கைகளை வெட்டிவிட்டார்களா.. அதுக் குறித்து ஒரு தகவலையும் காணோம் . இல்லை அரபு என்பதால் தண்டம் செலுத்தினால் போதும் என தப்பிக்க விட்டார்களா...//

கை வெட்டுதல் தலை வெட்டுதல் எல்லாம் தற்போது மிகவும் குறைந்து விட்டது இக்பால் செல்வன். மிகவும் மோசமான கொலைகள், சிறுவர் சிறுமியர் பாலியல் , அரசுக்கு எதிராக செயல்படுதல் போன்ற வன் செயல்களுக்குத்தான் தலை வெட்டுதல். கை வெட்டுதல் சிறு சிறு திருட்டுகளுக்கு கிடையாது. அடுத்து பாதிக்கப்பட்டவர் மன்னித்தால் அந்த தண்டனையும் கிடையாது. இதுதான் நடைமுறை.

//சோ. இஸ்லாமியராக இருப்பதால் தான் கம்மியா ( இதுவே கம்மியா ) தப்பு பண்றார்... !!! அவர் செய்தது தவறு என்று சொல்லும் தைரியம் உமக்கு இல்லை என்பதை நீங்களே காட்டிவிட்டீர்கள் .. !!!//

தவறு யார் செய்தாலும் இஸ்லாமிய பார்வையில் ஒன்றே. புருனை மன்னர் தவறு செய்தார் என்பதை வவ்வால் வாதத்தை வைத்து ஒரு முடிவுக்கு வர முடியுமா? இங்கு நடக்கும் விவாதத்துக்கும் புருனை சுல்தானுக்கும் என்ன சம்பந்தம்? அவர் தவறு செய்தால் அதற்குரிய தண்டனையை இறைவனிடம் பெற்றுக் கொள்வார். அது பற்றிய ஆராய்ச்சி இந்தியனான நமக்கெதற்கு? அதைப் பற்றி கவலைப்பட வேண்டியது புருனை மக்களல்லவா?

// என்ன நாளை உலகே சிரிக்கும் நிலைக்கு வந்துவிடாதீர்கள் என்பதால் தான் எனது வாதம் ... !!! //

சிரிப்பை வரவழைப்பது எந்த வாழ்க்கை முறை என்பதை நம் நாட்டு இந்து கிராமங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். தீண்டாமை அந்த அளவு தலைவிரித்தாடுகிறது. முதலில் அங்கிருந்து ஆரம்பித்தால் அந்த மக்கள் உங்களை வாழ்த்தலாம்.

suvanappiriyan said...

//சவுதியை கொஞச்ம தள்ளி வச்சுட்டு, நம்ம "சங்கர் ராமனை" கவணிப்போம். அந்தாளு ஆத்மா ஷாந்தி அடையாமல் ஆவியா அலையிறாரு. அந்தாளை கொன்னவனுக்கு இன்னும் ஒரு நியாயத்தையும் காணோம்! அது மட்டும் மணக்குதாக்கும்!//

அதானே! நியாயம் என்று பேசினால் எல்லாத்தையும் பேசிறனும்.:-) கமருதீன் சந்தேக நபராகத்தான் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்தான் பணத்தை எடுத்தார் என்பதற்கு நேரடி சாட்சிகளும் இல்லை..

ஆனால் சங்கரராமன் கொலை வழக்கில் கடிதங்கள் முதற்கொண்டு நேரடி சாட்சிகள் வரை பலமாக இருக்க நமது நாட்டு சட்டம் என்ன செய்து விட்டது வவ்வால்?

அரசு நிலத்தை அபகரித்த அம்மாவையும், பல ஊழல் செய்த கலைஞரையும் நமது சட்டம் என்ன செய்து விட்டது வவ்வால்?

வருணுக்கு பதில் சொல்லுங்கள். அதன் பிறகு நாம் சவுதி அரேபியாவை திருத்த போகலாம்.

Anonymous said...

//கை வெட்டுதல் தலை வெட்டுதல் எல்லாம் தற்போது மிகவும் குறைந்து விட்டது இக்பால் செல்வன். மிகவும் மோசமான கொலைகள், சிறுவர் சிறுமியர் பாலியல் , அரசுக்கு எதிராக செயல்படுதல் போன்ற வன் செயல்களுக்குத்தான் தலை வெட்டுதல். கை வெட்டுதல் சிறு சிறு திருட்டுகளுக்கு கிடையாது. அடுத்து பாதிக்கப்பட்டவர் மன்னித்தால் அந்த தண்டனையும் கிடையாது. இதுதான் நடைமுறை.//

குறைந்துவிட்டது எனில் சட்டம் மாறிவிட்டதா. இன்ன இன்ன குற்றத்துக்கு இன்ன இன்ன தண்டனை என்று தானே ஷரியா சொல்கின்றது ... இல்லை நீதிபதியின் முடிவுக்கு விட்டுவிடுகின்றதா ..

அது ஹலாலான உணவு உடை பற்றி விவாதிக்கின்றோம்.. ஹலாலான டிவி என்ற ஒருக் கொடுமை எகிப்தில் வருவதைப் பற்றி உங்கள் கருத்து என்ன ... ??!!!

பெண்கள் கண் மட்டும் தானா வெளியில் காட்டும்படி இஸ்லாம் கூறுகின்றதா.. எனக்கு அந்த குரான் வசனங்கள் அரபியில் இருந்து வரிக்கு வரியான மொழிப் பெயர்ப்பை கொடுத்தால் நல்லாருக்கும் !!!

//அவர் தவறு செய்தால் அதற்குரிய தண்டனையை இறைவனிடம் பெற்றுக் கொள்வார். //

அதைத் தான் நானும் சொல்கின்றேன்.. ஒருவரு தவறு செய்தால் இறைவன் தண்டிப்பான் தானே அப்புறம் எதுக்கு இந்த சட்டத்தை நீட்டுக்கின்றார்கள் ஷரியா வாதிகள் .... !!!

ஓரினச் சேர்க்கையாளானக இருப்பவனுக்கு ஷரியா சொல்லும் ( பூலோக ) தண்டனை என்ன ... !!! பூலோகத்தில் தண்டனைக் கொடுப்பது சரியா ! இல்லை இறைவனின் இறுதி தீர்ப்பு நாளுக்கு விட்டுவிடுவது சரியா !!!

//அதைப் பற்றி கவலைப்பட வேண்டியது புருனை மக்களல்லவா?//

சரிதான் ! அப்புறம் எதுக்கு நீங்கள் ஒலிம்பிக்கில் நடக்கும் பாலியல் வக்கிரங்களைப் பற்றி கவலைப்பட்டு பதிவு எழுதினீர்கள் .. ஒலிம்பிக் சௌதியில் நடக்கும் போது கவலைப்பட்டு இருக்கலாமே ? !!! இப்போ அவை நடக்கும் நாட்டு மக்கள் அல்லவா கவலைப்பட வேண்டும் .. !!!

//சிரிப்பை வரவழைப்பது எந்த வாழ்க்கை முறை என்பதை நம் நாட்டு இந்து கிராமங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். தீண்டாமை அந்த அளவு தலைவிரித்தாடுகிறது. முதலில் அங்கிருந்து ஆரம்பித்தால் அந்த மக்கள் உங்களை வாழ்த்தலாம்.//

உண்மை தான்.. ஆனால் அது என்ன இந்து கிராமங்கள்.. அப்படி ஒன்று இருக்கின்றதா என்ன .. புரியவில்லை எனக்கு .. !!! சரி இந்துக்கள் 100 % வாழும் கிராமங்கள் இந்து கிராமம் என்று வைத்துக் கொள்வோம் .. 100 % முஸ்லிம் வாழும் கிராமங்களில் தீண்டாமை இல்லை என சொல்ல வருகின்றீர்களா ? !!!

அனைத்து இந்துக்களிடமும் தீண்டாமை இருக்கவும் இல்லை. அனைத்து இஸ்லாமியரிடமும் தீண்டாமை இல்லாமலும் இல்லை .. நான் சொல்வது தவறு என்று உங்களால் நிரூபிக்க முடியுமா ?? !!!

Anonymous said...

அதானே! நியாயம் என்று பேசினால் எல்லாத்தையும் பேசிறனும்.:-) கமருதீன் சந்தேக நபராகத்தான் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்தான் பணத்தை எடுத்தார் என்பதற்கு நேரடி சாட்சிகளும் இல்லை..

எனக்கு என்னவோ இஸ்லாமிய நாடுகளைக் கூட திருத்திவிடலாம்.. ஆனால் இந்த தெற்காசியாவை திருத்தவே முடியாதுனு தோணுது ( பாகிஸ்தான், வங்கதேசம் உட்பட தெற்காசிய நாடுகள் அனைத்தும் ஒரே மாதிரி தான் இருக்கு ) ................ !!!

Anonymous said...

@Iqbal Selvan ஹிஹி !!! தடை செய்தார்களா .. ஆம் செய்தார்கள் ஏழைகள் சாப்பிடக் கூடாது .. காசு படைத்தவனே சாப்பிட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் .. அல் -கய்தா போதைப் பொருட்களை அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் ஏற்றுமதி செய்த கட்டுரை ஆய்வுகளை நீங்கள் படித்தது இல்லை போலும்

என்ன நண்பரே நீங்கள் சொல்வது மட்டும் உண்மையை உண்மையாக நேரில் கண்டு ஆய்வு செய்து எழுதிய கட்டுரைகள். அவர்கள் சொல்வதெல்லாம் பொய்யால் நிரப்பபட்ட புத்தகங்களிருந்து. அப்படி என்றால் நீங்கள் சொன்னால் மெய். மற்றவர்கள் சொன்னால் அது பொய். ஒரு இடத்தில நாம் சொல்வதை மற்றொரு இடத்தில் நாமே முரண்படாமல் சொல்ல வேண்டும். இதற்க்கு பல உதாரணம், வந்த வழியை திரும்பி பாருங்கள்.

suvanappiriyan said...

//அது ஹலாலான உணவு உடை பற்றி விவாதிக்கின்றோம்.. ஹலாலான டிவி என்ற ஒருக் கொடுமை எகிப்தில் வருவதைப் பற்றி உங்கள் கருத்து என்ன ... ??!!!//

அதாவது ஆபாச உடைகள் இல்லாமல் கண்ணியமான உடையில் தோன்றுவதையும், அறிவியல் மற்றும் ஆன்மீக செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி சேனல் வெளியிடப்படும் என்று நினைக்கிறேன். அப்படி வந்தால் நல்லதுதானே! நம் ஊரில் கூட புதிய தலைமுறை டிவி சிறப்பாக செயல்பட்டு வருகிறதே!

//பெண்கள் கண் மட்டும் தானா வெளியில் காட்டும்படி இஸ்லாம் கூறுகின்றதா.. எனக்கு அந்த குரான் வசனங்கள் அரபியில் இருந்து வரிக்கு வரியான மொழிப் பெயர்ப்பை கொடுத்தால் நல்லாருக்கும் !!!//

மேலும் நபியே மூமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களை பேணிக் காத்துக் கொள்ள வேண்டும். தங்களின் அலங்காரத்தை அதனின்று சாதாரணமாக வெளியில் தெரியக் கூடிய முன்கை & முகத்தைத் தவிர வேறு எதையும் வெளிக்காட்டலாகாது. இன்னும் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.
(அல்குர்ஆன் 24:31)

சிலர் பேணுதலாக இருக்கட்டும் என்பதற்காக முகத்தையும் அதிகப்படியாக மூடிக் கொள்வர். குர்ஆன் அவ்வாறு கட்டளையிடவில்லை. சிலர் தாங்களாகவே விரும்பிச் செய்வது.

//ஓரினச் சேர்க்கையாளானக இருப்பவனுக்கு ஷரியா சொல்லும் ( பூலோக ) தண்டனை என்ன ... !!! பூலோகத்தில் தண்டனைக் கொடுப்பது சரியா ! இல்லை இறைவனின் இறுதி தீர்ப்பு நாளுக்கு விட்டுவிடுவது சரியா !!!//

தவறு என்று போதிக்க வேண்டும். மருத்துவர்களிடம் கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வேண்டும். இதற்கும் அடங்காமல் அதிலேயே மூழ்கியவனை தலையை எடுத்து விட ஷரியா சொல்கிறது. அவ்வாறு தண்டனையை தனி மனிதர் செய்து விட முடியாது. இஸ்லாமிய ஷரியா ஆட்சி நடத்தும் ஒரு ஆட்சி தலைமைக்கே இந்த அதிகாரம் உண்டு.

பூலோகத்தில் தனது அதிகாரத்தால் தப்பித்துக் கொண்டவன் மறுமையில் இறைவனால் அங்கும் தண்டனை கொடுக்கப்படுவான். அழகிய பெண்களை ஆண்களுக்கும், அழகிய ஆண்களை பெண்களுக்கும் இறைவன் கொடுத்திருக்க எதற்கு இப்படி இயற்கைக்கு முரணணான ஒரு வீண் வேலை. :-)

'நீங்கள் பெண்களை விட்டு இச்சைக்காக ஆண்களிடம் செல்கிறீர்கள். நீங்கள் வரம்பு மீறிய கூட்டமாகவே இருக்கிறீர்கள்' என்று லூத் (லோத்) கூறினார்.
குர்ஆன் 7:81

உலகில் முதன் முதலில் ஓரினச் சேர்க்கை உருவான சமூகம் இவர்களே! கோபம் கொண்ட இறைவன் அவர்கள் ஊரையே பூமிக்குள் அழுத்தி விட்டான். சாக்கடல் ஜோர்டானில் உள்ள அந்த இடத்தை இன்றும் பார்க்கலாம்.

//சரிதான் ! அப்புறம் எதுக்கு நீங்கள் ஒலிம்பிக்கில் நடக்கும் பாலியல் வக்கிரங்களைப் பற்றி கவலைப்பட்டு பதிவு எழுதினீர்கள் .. ஒலிம்பிக் சௌதியில் நடக்கும் போது கவலைப்பட்டு இருக்கலாமே ? !!! இப்போ அவை நடக்கும் நாட்டு மக்கள் அல்லவா கவலைப்பட வேண்டும் .. !!!//

ஒரு நாட்டு அரசன் தவறாக நடப்பதற்கும் உலக நாடுகளின் வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் காண்டம் கொடுத்து அவர்களை அழிவிற்கு இட்டு செல்வதும் ஒன்றாகுமா? முந்தயதில் ஒரு அரசன் மட்டுமே பாதிப்படைகிறான். பிந்தயதில் ஒரு சமூகமே அழிவுக்கு செல்கிறதே...இரண்டையும் ஒன்றாகத்தான் நீங்கள் பார்க்கிறீர்களா?

//அனைத்து இந்துக்களிடமும் தீண்டாமை இருக்கவும் இல்லை. அனைத்து இஸ்லாமியரிடமும் தீண்டாமை இல்லாமலும் இல்லை .. நான் சொல்வது தவறு என்று உங்களால் நிரூபிக்க முடியுமா ?? !!!//

முதலில் பள்ளியில் எடுத்துக் கொள்ளுங்கள். புதிதாக இஸ்லாத்தை தழுவிய ஒரு தலித் மசூதிக்கு முதலில் வந்தால் முதல் வரிசையில் நிற்பார். அடுத்து வரும் பணம் படைத்த முஸ்லிம் அவருக்கு பின்னால்தான் நிற்பார். சாஸ்டாங்கமாக தரையில் நெற்றி படும் போது தலித் முஸ்லிம் காலடியில் பணக்கார முஸ்லிமின் தலை இருக்கும். சாப்பிடும் போது ஒரே தட்டில் அமர்ந்து சாப்பிடுவதை பரவலாக பார்க்க முடியும். பெண் எடுத்து பெண் கொடுக்கின்றனர். எங்கள் ஊரில் நடந்துள்ளது. குர்ஆனும் நபி மொழிகளும் தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுககின்றன. ஆனால் பகவத் கீதையும் ஸ்மிருதிகளும், ராமாயணமும் தீண்டாமையை உரம் போட்டு வளர்க்கின்றன. எனவே ஆதிக்க இந்துக்களின் மனதில் இருந்து உங்களால் தீண்டாமையை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழிக்க முடியாது என்பது கசப்பான உண்மை.

Anonymous said...

Mr Iqbal Selvan,

///தங்கை, அக்கா, மனைவியர் மார்பகங்களை வெளியில் காட்டி அலையுங்கள் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் அவர்கள் அப்படி வெளியில் காட்டி போராடினால். என்னை எதிர்த்து போராடினால். குற்றம் எங்குள்ளது என்பதை அறிந்துவிடலாம்.///

மார்பகங்களைக் வெளியில் காட்டி அலைந்தாலும் வெளியில் காட்டிப் போராடினாலும் எல்லாம் ஒன்றுதான்!

தங்களின் அக்கா, தங்கை, மனைவி, மகள் போன்றோர் மார்பகங்களை வெளியில் காட்டி அலைந்தாலும், பாதையில் வருவோர், போவோர் எல்லாரும் மொய்ப்பது அவர்களின் மார்பகங்களைத்தான்!

மார்பகங்களை வெளியில் காட்டிப் போராடினாலும், எல்லாரும் மொய்ப்பது அவர்களின் மார்பகங்களைத்தான்!

போராடிய மாதவிகளை பத்திரிகைகளில்கூட, திறந்த மார்பகங்கள், இடுப்புக்கு கீழே உள்ள மறைவிடங்களை அப்பட்டமாக போட்டு சொதப்பி இருக்கிறார்கள், லண்டனில்!

அவர்களின் நிர்வாணம்தான் செய்தியாக இருந்தது.

அந்த நிர்வாண கோலத்துடன் என்ன செய்தியைக் கொண்டு போனார்களோ, அது புஷ்வாணமாகப் போய்விட்டது. யாரிடமும் எடுபடவில்லை.

///அவர்கள் மார்பு திறந்தமை ஒரு போராட்டம் என்பதைக் கூட உணர முடியாதவர்களிடம் உரிமை கோருவது எவ்வளவு முட்டாள் தனம் என்பதை நீங்களே நிரூபித்துவிட்டீர்கள்.///

நீங்கள் சொல்வது உண்மைதான்! உணராதவர்களிடம் எப்படி உரிமைபற்றிப் பேச முடியும்?

மார்பு திறந்தமை ஒரு போராட்டம் என்பதை பிரிட்டிஷ் அரசும் பிரிட்டிஷ் போலீஸ்காரர்களும் உணரத் தவறிவிட்டனர். அதனால்தான்போலும், இழுத்துக் கொண்டுபோய் விட்டனர்.

இழுத்துக் கொண்டுபோகும்போது, அந்த மார்பு தெரிந்த அம்மணிகளின் வாயிலிருந்து வந்த, கேட்கவே நாக்கூசும் அமுத மொழிகளையும் அந்த போலிஸ் காரர்கள் உணரவில்லை.


///எனது சகோதரி மார்புகளை திறந்து போராடினால் முதலில் ஓடிப் போய் அவரின் பிரச்சனை என்ன.. அதனை எப்படி தீர்ப்பது என்று தான் யோசிப்பேனே ஒழிய !!! அவற்றைப் பார்த்து ஜொள்ளுவிடுவதையோ. அல்லது கேடு கெட்டவள் என திட்டுவதையோ நான் செய்ய மாட்டேன்.///

உங்கள் சகோதரி, மகள், மனைவி போன்றோர் மார்புகளை திறந்து, தங்களின் முன் மட்டும் போராடினால், நீங்கள் எதை எழுதினீர்களோ அதுபோலத்தான் நடக்கும்.

உங்கள் சகோதரி , மகள், மனைவி போன்றோர் தங்களது மார்புகளைத் திறந்து பிறர் முன்னிலையில் போராடினால், நீங்கள் எதை எழுதினீர்களோ, அதற்கு மாற்றமான செயற்பாடுகள் உங்களை செய்யத் தூண்டும்.

உங்களை செய்யத் தூண்டும் அந்த மாற்றமான செயற்பாடுகள், உங்கள் மொழியில் ஆணாதிக்க வெறி. அப்படித்தானே!


///பெண் அவள் விரும்பினால் யாரோடும் படுத்துவிட்டு போகட்டும்.. ஆனால் உடலை வியாபாரம் ஆக்கும் இழிநிலை எதிர்க்கின்றோம்.///

சற்றுமுன் இதைச் சொன்னீர்கள். அதாவது, பெண் விரும்பினால் யாரோடும் படுத்துவிட்டுப் போகட்டும்.

தங்களின் அடுத்த வசனத்தைப் பாருங்கள்.

///எனது மகள் யாருடன் செக்ஸ் ( திருமணம் என்று நீங்கள் பெயரிட்டு வைத்த ) கொள்ள விரும்புகின்றாள் என்பதை அவள் தான் தீர்மானிக்க வேண்டும்.///

இப்போது, தங்களின் மகள் யாரோடும் படுத்து விட்டுப் போகட்டும் என்று சொல்ல மனமில்லை.

ஆக, இது முற்றிலும் பிற பெண்களுக்கு!

தற்போது, புதிதாக அடைப்புக்குறியைப் பயன்படுத்துகிறீர்கள்.

அடைப்புக் குறியில் உள்ளது, நானோ நீங்களோ ஏற்கனவே சொன்னது அல்ல.

இப்போது புரியுது, தங்களின் மகள் யாரோடும் படுத்து விட்டுப் போகக் கூடாது என்ற கரிசனையை நான் பாராட்டுகிறேன்.

Anonymous said...

//பெண் அவள் விரும்பினால் யாரோடும் படுத்துவிட்டு போகட்டும்.. ஆனால் உடலை வியாபாரம் ஆக்கும் இழிநிலை எதிர்க்கின்றோம்.//=இப்படி இக்பால் செல்வன் என்பவருக்கு, தன் குடும்ப பெண்கள் என்று வந்த பிறகு இஸ்லாமிய ஆணாதிக்கவெறி பிடித்து விட்டது. எப்படியாம்?

//உங்களின் மனைவியும் ஒரு பெண்தானே? அவர் யாரோடும் படுத்துவிட்டுப் போக அனுமதிக்க மாட்டீர்கள்.//=இது அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி.

இந்த கேள்வி சொல்ல வரும் கருத்து, அவ்வப்போது நீங்கள் வீட்டில் இல்லாத சமயம், உங்கள் மனைவி -ஒரு பெண் அவள் விரும்பினால் யாரோடும் படுத்துவிட்டு போகட்டும்- என்ற அதே உரிமையை ஏன் தரமாட்டீர்கள்? காசு வாங்குவதை தானே எதிர்க்கிறீர்கள்? விரும்பி செய்தால் எதற்கு எதிர்க்க வேண்டும்?

//எனது மனைவி என்னோடு படுக்க விருப்பம் இல்லை என்று சொன்னால் நான் செய்ய வேண்டும்.//=இதல்லாம் இங்கே விவாதப்பொருளே இல்லையே? இன்னும் இந்த சிம்பிள் மேட்டருக்கு போயி, விவாகரத்து என்று ஏதேதோ ஆணாதிக்க வார்த்தைகள். அவர் உங்களோடு மட்டுமல்ல வேறு பிறரையும் உங்கள் இடத்தில் வைக்கிறார். இத்தானே இங்கே மேட்டர்? எதற்கு திசைதிருப்பல்?

///எனது மகள் யாருடன் செக்ஸ் ( திருமணம் என்று நீங்கள் பெயரிட்டு வைத்த ) கொள்ள விரும்புகின்றாள் என்பதை அவள் தான் தீர்மானிக்க வேண்டும்.///=போங்கய்யா.. நீங்களும் உங்களின் அடைப்புக்குறிகளும் .. ப்ராக்கட் போட்டு எழுதுவதை நிறுத்துங்கள். ஹா,ஹா,ஹா,(எங்கேயோ கேட்ட குரல்?)

//எனது மகள் யாருடன் செக்ஸ் கொள்ள விரும்புகின்றாள் என்பதை (அவள் தான் தீர்மானிக்க வேண்டும். அவளின் கணவனுக்கு அதிகாரம் இல்லை)//=இப்படி பிராக்கட் போட்டு சொல்லி இருந்தால் உங்கள் வாதம் எடுபட்டு இருந்திருக்கும்.

ஆக, மற்ற பெண்களுக்கு நீங்க உங்கள் சட்டத்தை அமல் பத்துவீர்கள்.

பிற பெண்கள் என்று வரும்போது நியாபகம் வராத வார்த்தை விவாகரத்து. ஆனால், உங்கள் மனைவி என்று வரும்போது, அவர் உங்கள் இடத்தில் பிற ஆணை வைக்கும்போது, விவாகரத்து செய்வீர்கள். (இதுவும் 'இஸ்லாமிய ஆணாதிக்கம்' தானே?)

பிற பெண்கள் என்று வரும்போது நியாபகம் வராத வார்த்தை திருமணம். ஆனால், உங்கள் மகள் என்று வரும்போது மட்டும் திருமண வரையறை வேண்டும் செக்சுக்கு. (இதுவும் 'இஸ்லாமிய ஆணாதிக்கம்'தானே?)

ஆக,மற்ற பெண்களுக்கு பெண்ணுரிமை-தனது வீட்டு பெண்கள் என்றால் இஸ்லாமிய வரைமுறை.

நல்லா இருங்கப்பு. நல்லா இருங்க. ஆனால், நடிக்காம இருங்க.

Unknown said...

சகோ சுவனப்பிரியன் அந்த அனானி கமென்ட் எதுவும் நாகரீகமாக இல்லை. அதனை நீக்கி விடலாமே.

Anonymous said...

Hello anony sir, Islam unkalukku ippadithan pesa kathu koduthu irukka? Ithai than ethirkkirom. Nanri.

Anonymous said...

Mr Ahamed Jatheer,

///சகோ சுவனப்பிரியன் அந்த அனானி கமென்ட் எதுவும் நாகரீகமாக இல்லை. அதனை நீக்கி விடலாமே.///


சகோதரர் சுவனப்பிரியனுக்கு பூரண உரிமையுண்டு, எனது பின்னூட்டத்தை நீக்கி விடுவதற்கு! நான் சிறிதும் வருத்தப்பட மாட்டேன்.

இஸ்லாமிய நெறிமுறையில், ஒரு நல்ல விடயத்தைக் கடைப்பிடிப்பதற்கும் பிழையான செயல்களை விடுவதாக இருந்தாலும் முதலில் தன்னிலிருந்தும் தனது குடும்பத்திலிருந்தும் ஆரம்பித்த பிறகே, பிறருக்கு எத்தி வைப்பது ஆரோக்கியமானது.

தனக்கும் தனது குடும்பத்திற்கும் நடைமுறையில் பொருந்தாத ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்களை சமூகத்திற்கு எத்தி வைக்கும்போது, ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்காது.

இஸ்லாமிய குடும்ப நெறிமுறைகளுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்களை அவர் சொன்னபோது, அவை அவரின் குடும்ப அங்கத்தினர்களுக்குப் பொருந்துதா என்று திருப்பிக் கேட்டேன். அவ்வளவுதான்!

இக்பால் செல்வன் என்ற சகோதரரின் பின்னூட்டம் நாகரிகமானதா இல்லையா என்பதை வாசகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

அந்தப் பின்னூட்டத்தின் பாணியில்தான் நான் பதிலளித்தேன்.

இதில் யாரும் வருந்துவதற்கு இல்லை.

Anonymous said...

//குர்ஆன் அவ்வாறு கட்டளையிடவில்லை. சிலர் தாங்களாகவே விரும்பிச் செய்வது.//

இக்கருத்தில் எனக்கு உடன்பாடில்லை .. பல இடங்களில் இது திணிக்கப்பட்டே இருக்கின்றது. எகிப்தில் அந்த சேனலைப் பார்த்தாலே தெரியுது .. ஏனெனில் அந்த சேனலில் முகத்தை மூடாமல் யாரும் பணி செய்யவில்லை .. !!! ஆக முகம் மூடுதல் தான் உண்மையான இஸ்லாம் என சொல்ல வருகின்றார்கள் அவர்கள் .. !!!

//தவறு என்று போதிக்க வேண்டும். மருத்துவர்களிடம் கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வேண்டும். இதற்கும் அடங்காமல் அதிலேயே மூழ்கியவனை தலையை எடுத்து விட ஷரியா சொல்கிறது. அவ்வாறு தண்டனையை தனி மனிதர் செய்து விட முடியாது. இஸ்லாமிய ஷரியா ஆட்சி நடத்தும் ஒரு ஆட்சி தலைமைக்கே இந்த அதிகாரம் உண்டு.//

ஆக ! உங்கள் பார்வையில் ஒருபாலின சேர்க்கை தவறு .. அதற்கு மருத்துவம் பார்க்க வேண்டும் .. ஆனால் அறிவியல் வேறு மாதிரி அல்லவா சொல்லுகின்றது ..

//'நீங்கள் பெண்களை விட்டு இச்சைக்காக ஆண்களிடம் செல்கிறீர்கள். நீங்கள் வரம்பு மீறிய கூட்டமாகவே இருக்கிறீர்கள்' என்று லூத் (லோத்) கூறினார்.
குர்ஆன் 7:81//

'' நீங்கள் '' என்று ஆண்களையா சொன்னார் ? !!! பெண்கள் பெண்களோடு புணரக் கூடாது என்று எந்த குரான் வசனம் ஹராம் சொல்கின்றது ... !!!

//ஒரு நாட்டு அரசன் தவறாக நடப்பதற்கும் உலக நாடுகளின் வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் காண்டம் கொடுத்து அவர்களை அழிவிற்கு இட்டு செல்வதும் ஒன்றாகுமா? முந்தயதில் ஒரு அரசன் மட்டுமே பாதிப்படைகிறான். பிந்தயதில் ஒரு சமூகமே அழிவுக்கு செல்கிறதே...இரண்டையும் ஒன்றாகத்தான் நீங்கள் பார்க்கிறீர்களா?//

மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி ! ஒரு அரசன் தவறு செய்தால் மக்களும் அதனைத் தான் செய்வார்கள் .. அப்போ அரசனுக்கு ஒரு நியாயம் மக்களுக்கு ஒரு நியாயமா ??!!!

//உலக நாடுகளின் வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் காண்டம் கொடுத்து அவர்களை அழிவிற்கு இட்டு செல்வதும் ஒன்றாகுமா? //

காண்டங்களை வாங்கியதில் இஸ்லாமிய விளையாட்டு வீரர்களும் அடங்குவர் என உறுதிப்படுத்திக் கொண்டேன் .. அப்படி எனில் ஏன் ஒரு இஸ்லாமிய நாடும் அதனை தடை சொல்லவில்லை .. இதைக் கண்டித்து அந்த வீரர்களை ஒலிம்பிக் போகாமல் தடுக்கலாமே ? அல்லது ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்கலாமே.. 50 இஸ்லாமிய நாடுகளில் ஒன்றும் அப்படி செய்யாதது ஏன் ?

//எனவே ஆதிக்க இந்துக்களின் மனதில் இருந்து உங்களால் தீண்டாமையை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழிக்க முடியாது என்பது கசப்பான உண்மை.//

நான் இல்லை என்று சொல்லவில்லை .. ஆனால் இஸ்லாமியர்களிடம் அதுவும் பலதலைமுறையாக இஸ்லாமில் இருப்பவர்களிடம் சாதிப் பார்த்து திருமணம் செய்வது, ஏழ்மையானவர், நிறம் குறைந்தவர், தலித்களை ஒதுக்குவதை நான் நேரில் கண்டிருக்கின்றேன் .. கேட்டிருக்கின்றேன் .. தமிழ்நாட்டில் தானுங்க .. !!

நீங்க சொல்ற சமத்துவவாதி இஸ்லாமியர்கள் கொஞ்சம் பேர் தான் என நான் நினைக்கின்றேன் ... பள்ளிவாசலில் தொழுவும் போது மட்டும் தான் ஒன்னும் பேசாமல் இருக்கின்றார்கள்.. ஆனால் வெளியே வந்ததும் எல்லாம் மறந்து போய் பழைய நிலைக்கு வந்துவிடுகின்றார்களோ .. ?!!!

100 % முஸ்லிம்களும் சாதி பார்ப்பதில்லை என்பதற்கு நீங்கள் உத்தரவாதம் தரமுடியுமா ??!!!

Anonymous said...

//இக்பால் செல்வன் என்ற சகோதரரின் பின்னூட்டம் நாகரிகமானதா இல்லையா என்பதை வாசகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

அந்தப் பின்னூட்டத்தின் பாணியில்தான் நான் பதிலளித்தேன்.

இதில் யாரும் வருந்துவதற்கு இல்லை//

திரைமறைவில் இருந்து பயந்து பயந்து பேசுவதைக் காட்டிலும் பெயர் சொல்லி வெளியில் வரலாமே !!!

ஏனெனில் பலசமயங்களில் திரைமறைவில் இருப்பவர் முஸ்லிமா ? இந்துவா ? என்றுக் கூட தெரிவதில்லை .. சிலர் சேம் சைட் கோல் அடித்து கலகம் பண்ணிவிட்டு போய்விடுவார்கள் .. !!!

எனதுக் கருத்தை படிப்பவர்கள் படித்துவிட்டு முடிவுக்கு வரட்டும் .. அதில் எனக்கு விருப்பம் தான் !!

suvanappiriyan said...

//நீங்க சொல்ற சமத்துவவாதி இஸ்லாமியர்கள் கொஞ்சம் பேர் தான் என நான் நினைக்கின்றேன் ... பள்ளிவாசலில் தொழுவும் போது மட்டும் தான் ஒன்னும் பேசாமல் இருக்கின்றார்கள்.. ஆனால் வெளியே வந்ததும் எல்லாம் மறந்து போய் பழைய நிலைக்கு வந்துவிடுகின்றார்களோ .. ?!!!

100 % முஸ்லிம்களும் சாதி பார்ப்பதில்லை என்பதற்கு நீங்கள் உத்தரவாதம் தரமுடியுமா ??!!! //

பள்ளிவாசலில் சகோதரனாக அன்பாக பழகும் ஒரு முஸ்லிம் பள்ளியிலிருந்து கீழே இறங்கியவுடன் பழையபடி ஏழை பணக்காரன் மற்றும் சாதி வித்தியாசம் பார்ப்பது ஏன்? மற்ற நாடுகளில் இல்லை. இந்தியாவில் மட்டும் ஏன் என்று கொஞ்சம் யோசித்து பாருங்கள். பெரும்பான்மை மக்களான இந்துக்களால் பின் பற்றப்படும் சாதி கொடுமையை நேரில் பார்க்கும் ஒரு பாமர முஸ்லிம் இவ்வாறு நாமும் நடக்கா விட்டால் நம்மையும் இழிந்த சாதியாக்கி விடுவார்களோ என்ற பயத்தில் செய்து விடும் தவறுகளே இது. இதை மாற்ற இன்று நாங்கள் பல பிரசாரங்களை செய்து வருகிறோம். நிறைய முன்னேற்றம் காண முடிகிறது.

//'' நீங்கள் '' என்று ஆண்களையா சொன்னார் ? !!! பெண்கள் பெண்களோடு புணரக் கூடாது என்று எந்த குரான் வசனம் ஹராம் சொல்கின்றது ... !!!//

'ஆணுக்கு பெண்: பெண்ணுக்கு ஆண் சுகம் அனுபவிக்க' என்று குர்ஆன் தெளிவாக கூறி விடுகிறது. எனவே ஆணுக்கு ஆணும், பெண்ணுக்கு பெண்ணும் இணைவது தடுக்கப்படுகிறது. இயற்கைக்கு மாற்றமாகையால் இதனை மதம் கடந்து அனைவரும் எதிர்க்க வேண்டும்.

//மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி ! ஒரு அரசன் தவறு செய்தால் மக்களும் அதனைத் தான் செய்வார்கள் .. அப்போ அரசனுக்கு ஒரு நியாயம் மக்களுக்கு ஒரு நியாயமா ??!!!//

இஸ்லாதிய பார்வையில் மன்னனும் மக்களும் ஒன்றே. நம் நாட்டிலும் முதல்வர்கள் அமைச்சர்கள் சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி தப்பி விடுவதை பார்க்கிறோம். இங்கு தப்பினாலும் மறுமையில் இதற்கான தண்டனையை புருனை மன்னர் பெற்றுக் கொள்வார்(அவர் தவறு செய்திருந்தால்).

Anonymous said...

Mr Iqbal Selvan,

///எனதுக் கருத்தை படிப்பவர்கள் படித்துவிட்டு முடிவுக்கு வரட்டும் .. அதில் எனக்கு விருப்பம் தான் !!///

தங்களது கருத்துக்கள் தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்குமே ஒவ்வாமையாக, சீரணிக்க முடியாததாக, முகம் சுளிக்கக்கூடியதாக இருக்கும்போது, மற்றவர்கள் படித்து பயன்பெறுவதாவது?

///திரைமறைவில் இருந்து பயந்து பயந்து பேசுவதைக் காட்டிலும் பெயர் சொல்லி வெளியில் வரலாமே !!!///

எனது பெயர் இஸ்மத். ஒரு சாதாரண முஸ்லிம். இதைச் சொல்வதால், யாருக்குப் பயம்?

- ISMATH

Abu Zaahid said...

இக்பால் செல்வன் என்ன சொல்ல வருகிறார் ??? தன்னை சிறந்த புரட்சியாளராக காண்பிக்க முயற்சி செய்கிறார் தனனை படைத்த இறைவனை மறந்து விட்டு ...

சகோதரர் சுவனபிரியன் அவர்களுக்கு ஒரு குர் ஆன் வசனத்தை நினைவு படுதுகிறேன்

அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ, அவர் தாம் நேர்வழிப்பெற்றவர் ஆவார்; இன்னும் அவன் யாரை வழிகேட்டில் விடுகிறானோ அ(த்தகைய)வருக்கு உதவி செய்வோர் அவனையன்றி வேறு எவரையும் நீர் காணமாட்டீர்; மேலும் அவர்களைக் குருடர்களாகவும், ஊமைகளாகவும், செவிடர்களாகவும் தம் முகங்களில் குப்புற வரும்படி செய்து கியாம நாளில் ஒன்று சேர்ப்போம்; இன்னும் அவர்கள் ஒதுங்கும் இடம் நரகமேயாகும்; (நரக நெருப்பு). அணையும் போதெல்லாம் நாம் அவர்களுக்கு நெருப்பை அதிகமாக்குவோம். (al quran 17:97)

Abu Zaahid said...

ஒரு பெண்ணும் புனருவதை பற்றி சொல்லும் போதே இக்பால் செல்வனின் சிந்தனை எந்த ஒரு கேடுகெட்ட அளவில் உள்ளது என்று தெரிந்து கொள்ள முடிகின்றது,,, இக்பால் செல்வனின் சிந்தனை சரி என்று எவனும் சொல்ல மாட்டான் ..5 அறிவு படைத்த மிருகங்களே ஆண் ஆணுடனோ பெண் பெண்ணுடனோ சேர்வதில்லை ..அந்த மிருகங்களை விட கேவலமான ஒரு செயலை பற்றி இக்பால் செல்வன் அறிவு ஜீவி இதில் இவருடய கருத்துக்களை நாங்கள் முடிவுக்கு வரனுமாம் வந்துட்டோம்யா முடிவுக்கு ..

you worsen than the animals attitude kind of stupid manners..am mohamed ziyad am muslim and insha allah we muslims expect reward and certificate from not from u like a stupid person..may allah give the sense

khaleel said...

salaam suvanapiriyan

some of the comments made by an anonmymous against iqbal selvan are in very bad taste. i request you to remove/delete those comments.

Anonymous said...

..... 5 அறிவு படைத்த மிருகங்களே ஆண் ஆணுடனோ பெண் பெண்ணுடனோ சேர்வதில்லை ....

@ MZHR - அவர்களே உங்களின் அறிவியல் அறிவு அவ்வளவு தான் .. மிருங்களிடம் ஒரு-பால் புணர்ச்சி இல்லை என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா.. சவால் ... !!!

Anonymous said...

Mr Iqbal Selvan,

உங்களின் அறிவியல் அறிவு அவ்வளவு தான் .. மிருங்களிடம் ஒரு-பால் புணர்ச்சி இல்லை என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா.. சவால் ... !!!///


பொதுவாக மிருகங்களிடம் ஓரினப் புணர்ச்சி காண்பது அரிது.

விதிவிலக்காக, சில மிருகங்களிடம் ஓரினப் பால் புணர்ச்சி இருப்பின், எமக்குத் தெரியப்படுத்தி, தங்களின் அறிவியல் அறிவை பகிர்ந்து கொள்ளலாமே?

- Ismath

Anonymous said...

@ இஸ்மத் -

சுமார் 1500 உயிரினங்களில் ( ANIMAL KINGDOM ) ஒரு பால் புணர்ச்சிகள் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளன.

எமது பல்கலைக் கழக ஆய்வாளர்கள் சிலர் இவை இன்னும் பன்மடங்கு அதிகமாக, அதாவது பத்து மடங்கு இருக்கும் என கருதி ஆய்வில் ஈடுப்பட்டு வருகின்றார்கள்.

சில சிறிய வகை உயிரினங்களில் ( BACTERIA, PLANTS ) ஆண் பெண் வேறுபாடே இல்லை. சிலவற்றில் ஆணே பெண்ணாகவும், பெண்ணே ஆணாகவும் மாறி புணர்ந்துக் கொள்வதும் உள்ளது.

அவற்றுக்கான சில சுட்டிகள் :

http://en.wikipedia.org/wiki/Homosexual_behavior_in_animals

http://www.news-medical.net/news/2006/10/23/20718.aspx

http://www.nytimes.com/2010/04/04/magazine/04animals-t.html?pagewanted=all

உங்களுக்கு சுட்டிகள் கொடுத்தால் பிடிக்காது அல்லவா ... !!! புத்தகங்கள் கொடுத்து அனுப்பவா. அறிவியலை நம்புவீர்களா. அறிவியல் எல்லாம் பொய்கள் பித்தலாட்டம் என்றல்லவா இங்கு வருபவர்கள் பலர் சொல்லிக் கொண்டுள்ளார்கள்.. எப்படிச் சொல்லி புரிய வைத்தாலும் காதுக் கொடுத்துக் கேட்க தயாரில்லதவர்களோடு பேசி என்ன பயன் ..

அதாவது ஒரு விடயத்தை பற்றி முழுமையாக தெரியாத நிலையில் அவற்றைப் பற்றி தெரிந்தவர் போலக் காட்டிக் கொள்வது முறையான ஒன்றல்ல. அதே போல ஒன்றும் தெரியாமல் தெரிந்தவை போல பேச வருபவன் நானில்லை.. அத்தோடு இது நான் சார்ந்திருக்கும் அறிவியல் துறை என்பதால் என்னால் உயிரியல் அறிவியலில் பல விடயங்களை அடித்துப் பேச முடியும் ... !!!

HBA said...

கவர்ச்சியாக உடை அணிந்த பெண்களை காண்பதாலும், அவர்களை நினைத்து கற்பனை உலகில் சஞ்சரிப்பதாலும் ஆண்களின் ஆண்மைக்கு ஆபத்து ஏற்படுகிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ஆண்களின் ஆண்மையை பறிக்கும் மொபைல்போன், லேப்டாப், மனஅழுத்தம், சூடு போன்றவற்றின் பட்டியலில் தற்போது கவர்ச்சி உடை கண்ணியர்களும் இடம் பெற்றுள்ளனர்.
ஆண்களின் ஆண்மை குறைபாட்டிற்கான காரணம் குறித்து அமெரிக்காவில் 30 ஆண்டுகாலம் ஆய்வு நடைபெற்றது. அதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தன. அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும், முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் கண்டறியப்பட்டது. பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும், நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு கொண்டு செல்கிறதாம்.
உடலை முழுதும் மறைக்கும் ஆடை அணியும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள பெண்கள் வாழும் அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் பெரும்பாலும் இல்லை என்பதனால் இதற்கும் ஆடைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா எனும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
பணிபுரியும் இடங்களிலும், பொது இடங்களிலும் சந்திக்கும் பெண்களின் வசீகரிக்கும் தோற்றமும், உடைகள் மறைக்காத உடலின் பாகங்கள் தூண்டிவிடும் செக்ஸ் சிந்தனைகளும், ஆண்களின் மனதில் பதிந்து அவர்களுடைய ஏக்கங்களை விரிவடைய வைத்து ஏமாற்றத்தை அதிகரிப்பதே இந்த ஆண்மைக்குறைவு மற்றும் புரோஸ்ட்ரேட் புற்று நோய் இவற்றின் மூல காரணம் என்று இந்த ஆராய்ச்சி தனது முடிவை ஆதாரங்களுடன் வரையறை செய்திருக்கிறது. முக்கால்வாசி ஆண்மைக்குறைபாடுகளும் இத்தகையதே என்பது இந்த ஆராய்ச்சியின் தீர்க்கமான முடிவாகும்.
நவீனப் பெண்களின் இத்தகைய ஆடைக் கலாச்சாரமும், வசீகரிக்கும் வனப்பை வெளிக்காட்டும் மோகமும், ஆண்களின் மனதில் பல்வேறு கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாகவும், அவர்களுடைய ஏக்கங்களை அதிகரிப்பதாகவும், தாம்பத்திய வாழ்வின் திருப்தியைத் திருடிக் கொள்வதாகவும் ரஷ்யாவின் லீனாய்ட் எனும் மருத்துவர் கூறியுள்ளார்.
பெண்களின் கவர்ச்சிகரமான நடத்தையினால் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுகிறது என்ற அதிர்ச்சிகரமான செய்தியாக இருக்கும் அதே வேளையில், ஆண்களும் கவர்ச்சி உடை அணிந்த கன்னியர்களை கண்டுகொள்ளாமல் இருந்தாலே ஆண்மையை பாதுகாத்துக்கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
(இதை பற்றியும் ஒரு பதிவு எழுதவும்)