Followers

Wednesday, January 02, 2013

பெண் கொடுமை என்று தீரும் நம் நாட்டில்!



பெண்களுக்கான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. நமது நாட்டில் தினமும் ஏதாவது ஒரு செய்தி வந்த வண்ணமே உள்ளது. மக்கள் அனைவரும் படித்து விட்டால் பெண் கொடுமை ஒழிந்து விடும் என்று சொன்னோம். ஆனால் படித்த மக்களிடத்திலேதான் பெண் கொடுமை அதிகமாக உள்ளது. பெண் சிசுவை கருவிலேயே ஸ்கேன் செய்து பார்த்து அழிப்பதும் பெரும் பாலும் படித்தவரகள் தான். அதே போல் நான் டாக்டர், நான் பொறியாளர், நான் இத்தனை லகரம் சம்பளம் வாங்குகிறேன். எனக்கு இத்தனை லட்சம் வரதட்சணையாக கொடுத்தாலே போச்சு என்று வீம்பு பண்ணுவதும் படித்த மக்கள்தான். மருமகளை உயிரோடு எரித்தவர்களும் அதிகம் படித்தவர்கள் தான்.

அழகில்லாத ஆண். பொருளாதார வசதியில்லாத ஆண். இவனை ஒரு பெண் விரும்பா விட்டாலோ அல்லது வோறொருவனை விரும்பினாலோ கோபம் வெறியாக மாறி கொலை செய்வதோ, வன் புணர்வில் ஈடுபடுவதோ, முகத்தில் ஆசிட் வீசுவதோ நடந்து விடுகிறது. நமது சினிமாக்களால் ஒரு இளைஞன் என்று இருந்தால் அவன் யாரையாவது காதலித்தே தீர வேண்டும் என்ற எண்ணம் பரவலாக்கப்பட்டதும் ஒரு காரணமாகச் சொல்லலாம்.

பெண்ணை வன்புணர்ச்சி செய்வதற்கும் காமத்திற்கும் தொடர்பு கிடையாது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பெண்ணிடமிருந்து இன்பத்தை அனுபவிக்க எண்ணம் உள்ளவன் இது போன்ற அரக்கத்தனங்களில் ஈடுபட மாட்டான். மும்பை பெண்ணை அந்த கயவர்கள் இரும்பு பைப்பினால் குடலையும் கிழித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. காலம் காலமாக ஒடுக்கப்பட்ட தலித் இளைஞர்கள் மற்ற சாதி பெண்களை விரும்புவதையும தொடர்ந்து பார்த்து வருகிறோம். அங்கும் காமம் என்பது பின்னால் சென்று ஆதிக்க சாதிகளுக்கு சரிசமமாக நாமும் நிற்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. ஒரு வகையில் இதனை அவர்கள் பார்வையில் தவறு என்றும் சொல்ல முடியாது.

ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஒரு பெண்ணை ஒரு இளைஞன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். 3 வயது சிறுமியை ஒருவன் பலாத்காரம் செய்துள்ளான் என்றால் இவை எல்லாம் மன நோயின் அறிகுறிகள். இவர்களுக்கு மனநல சிகிச்சை செய்யப்பட வேண்டும். தக்க தண்டனையையும பெற்றுத் தர வேண்டும்.

இறைவனைப் பற்றிய எண்ணம் மனிதர்களிடத்தில் மறைந்து வருவதும் இது போன்ற வன் புணர்வுகளுக்கு காரணம் எனலாம். தன்னைப் பெற்ற தாயும் பெண்தான். தனது மனைவியும் பெண்தான். தன் உடன் பிறந்தவர்களும் பெண்தான். தனக்கு பிறந்தவர்களும் பெண் இனம் தான். இந்த பெண்மக்களை வழி நடத்திச் செல்ல ஆண்களுக்கு சில சிறப்பியல்புகளை இறைவன் கொடுத்துள்ளான். அந்த சிறப்பியல்புகளை இந்த மனிதன் இறைவன் எதற்காக கொடுத்துள்ளான் என்ற சிந்தனா சக்தி தனக்கு இல்லாததால் அந்த பெண்ணை அடக்கி ஒடுக்கப் பார்க்கிறான். தனது பேச்சுக்கு மதிப்பு தரவில்லை என்றால் கொலை செய்து விடுகிறான். காதலிக்க மறுத்தால் வன் புணர்வு செய்து விடுகிறான். அல்லது முகத்தில் ஆசிட் ஊற்றி விடுகின்றான். இன்னும் சிலர் அந்த பெண்ணின் நடத்தையில் களங்கத்தை அபாண்டமாக சுமத்தி சமூகத்தால் ஓரம் கட்ட வைக்கப் படுகின்றனர். இதை எல்லாம் நம்மைப் படைத்த இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். இறப்புக்குப் பிறகு நாம் செய்யும் இது போன்ற குற்றங்களுக்கு பதில் சொல்ல வேண்டி வரும் என்ற எண்ணம் மேலோங்கினால் மனதளவில் தவறுகளிலிருந்து திருந்த வாய்ப்புள்ளது. சந்தர்ப சூழ்நிலைகள் ஒருவனை தவறு செய்ய வைத்தால் அதற்கு கடுமையான தண்டனையும் பெண்களின் ஆடை விஷயங்களில் கவனமாக இருப்பதும் பெருமளவு குற்றங்களை குறைக்கலாம்.

----------------------------------------------

அமெரிக்கன் சோசியலாஜிக்கல் ரிவியூ நடத்திய ஆய்வில்,31 வளர்ச்சியடைந்த நாடுகளில் 15-59 வயது வரையிலான ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்ற ஆய்வில் பொதுவாகவே பாலியல் ஒழுக்கங்களை பேணுவதில் முஸ்லிம் நாடுகள் முன்னணியில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அனைத்து மதங்களும் திருமண உறவிற்கு வெளியே உள்ள முறைகேடான பாலியல் உறவுகளை ஊக்கப்படுத்துவதில்லை. ஆனால், அனைத்து மத நம்பிக்கையாளர்களும் ஒன்றுபோல் இல்லை என்று இந்த ஆய்விற்கு தலைமை தாங்கிய ஆமி ஆடம்ஸிக் சுட்டிக்காட்டுகிறார்.

முஸ்லிம் நாடுகளில் எய்ட்ஸ் நோய் மிகக் குறைவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வுக் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்காவின் கத்தோலிக் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த சோசியாலஜிஸ்ட் ரெவ.பால் சுல்லின்ஸ் கூறுகையில், “இந்த ஆய்வின் முடிவுகள் ஆச்சரியமானதல்ல. ஏனெனில் இவை பாரம்பரிய இஸ்லாமிய நாடுகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. புர்கா(உடலை மறைக்கும் ஆடை) உண்மையிலேயே இவ்விஷயத்தில் நன்றாக வேலை செய்கிறது. ஆண்களிலிருந்து முற்றிலும் வேறுபடுத்தி உடல் முழுவதும் மறைத்தால் பெண்களை அவர்களது திருமணம் முடியும் வரை முந்தைய முறைகேடான பாலியல் உறவுகளில் இருந்து பாதுகாக்க முடியும்” என கூறுகிறார்.

சூசி இஸ்மாயில், இவர் திருமணம் மற்றும் விவகாரத்துக்கான அதிகாரி ஆவார். இவர் கூறுகையில், “திருமணத்திற்கு முந்தையை, பிந்தைய முறைகேடான பாலியல் உறவுகள் முஸ்லிம்களிடம் குறைவாக இருப்பதற்கு அவர்களது மார்க்க ரீதியான வேர் காரணமாகும் . இஸ்லாம் விபச்சாரத்தை தடைச் செய்கிறது. இளம் வயதில் இருந்தே முஸ்லிம்கள் பாலியல் ஒழுக்கம் குறித்து பயிற்றுவிக்கப்படுகின்றார்கள்.” என தெரிவித்துள்ளார்.

தவறு செய்யும் மன நிலையில் உள்ள ஒரு ஆணையோ பெண்ணையோ எந்த சட்டங்கள் போட்டாலும் கட்டுப் படுத்த முடியாது. ஆனால் தவறு செய்யும் மன நிலையில் இல்லாத எத்தனையோ பெண்கள் வலுக்கட்டாயமாக இது போன்ற செயல்களில் ஈடுபடுத்தப்படவதை எந்த சமூகமும் அங்கீகரிக்காது.


What are top 10 countries with high incidence of rape?

Showing latest available data. Rank Countries Amount (top to bottom)
#1 United States: 95,136
#2 South Africa: 52,425
#3 Canada: 24,350
#4 Australia: 15,630
#5 India: 15,468
#6 Mexico: 14,373
#7 United Kingdom: 13,395
#8 Germany: 8,615
#9 France: 8,458
#10 Russia: 6,978
#11 Korea, South: 6,139
#12 Peru: 5,968
#13 Spain: 5,664
#14 Zimbabwe: 5,567
#15 Thailand: 4,020
#16 Argentina: 3,036
#17 Venezuela: 2,931
#18 Italy: 2,543
#19 Belgium: 2,436
#20 Japan: 2,35

http://wiki.answers.com/Q/What_are_top_10_countries_with_high_incidence_of_rape

இஸ்லாமிய சடடங்களில் உள்ள நியாயங்களை புரிந்து கொண்டு அதன் அடிப்படையில் சட்டம் இயற்ற நமது அரசு முயல வேண்டும். ஒரு நல்ல காரியம் இஸ்லாம் சொல்வதாலேயே அதனை கண்ணை மூடிக் கொண்டு வெறுப்பதும் ஒரு வகை மன நோயே. மதுரை ஆதீனம் சொன்ன ஒரு கருத்துக்கு வந்த எதிர்ப்புகளும் அந்த வகையைச் சார்ந்ததே! எனவே யார் நல்லது சொன்னாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் என்று வருகிறதோ அன்று தான் சமூகம் அமைதியுறும். பெண்கள் பாதுகாப்பாக வெளியிலும் வருவர்.

'இந்த காட்டுப் பய ஒரு ஆட்டுக் குட்டிப் போல உன் பின்னே சுத்துறேனே!'

என்றெல்லாம் பாடிக் கொண்டு பெண்கள் பின்னால் சுற்றிக் கொண்டிராமல் படித்து நல்ல வேலை கிடைத்து தாய் தகப்பன் சம்மதத்தோடு தனக்கு பிடித்த பெண்ணை வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்து வருங்கால இந்தியாவை ஒளி மிக்கதாக ஆக்க இளைஞர்கள் முயற்சிப்பார்களாக!

------------------------------------------

சிறந்த மனிதருக்கு சிறப்பான விருது!



சமூக நீதிக்காக வழங்கப்படும் 5-வது அன்னை தெரசா சர்வதேச விருது குஜராத் மாநிலத்தில் மோடியால் பழிவாங்கப்பட்ட மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுக்குறித்து அன்னை தெரசா விருதுக்காக சஞ்சீவ் பட், தேர்வுச் செய்யப்பட்டுள்ள தகவலை வெளியிட்ட ஃபவுண்டேசனின் தலைவர் ஆப்ரஹாம் மத்தாய் கூறியிருப்பதாவது:

பாதுகாப்பற்ற சிறுபான்மை சமூகத்தின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்காக வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக உறுதியாக நிற்கும் நபர் தாம் சஞ்சீவ் பட். அவருக்கு இவ்விருதை வழங்குவதில் திருப்தி அடைகிறோம் என்று மத்தாய் கூறியுள்ளார்.

அதேவேளையில், இவ்விருதை மரணித்த தனது தாயாருக்கு சமர்ப்பணம் செய்வதாக சஞ்சீவ் பட் கூறியுள்ளார்.விருது தனது நிலைபாடுகளுக்கான அங்கீகாரம் என்றும்,போராட்டத்தை வீரியத்துடன் எடுத்துச் செல்ல போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் மோடியின் பங்கினைக் குறித்து உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த சஞ்சீவ் பட் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக மோடி அரசு அவரை பதவியில் இருந்து இடை நீக்கம் செய்திருந்தது.

இவ்விருது இதற்கு முன்பு திபெத்தின் ஆன்மீக தலைவர் தலைலாமா, மனித உரிமை ஆர்வலரும், பாகிஸ்தனின் முன்னாள் அமைச்சருமான அன்ஸார் பர்ணி, மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர்.மஹாதீர் முஹம்மது ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

உண்மையை சொன்னதற்காக தனது பதவியை இழந்து நிற்கும் இந்த நல்லவருக்கு சரியான நேரத்தில் பொருத்தமான கௌரவம் கிடைத்துள்ளது. வாழ்த்துக்கள்.

http://post.jagran.com/suspended-ips-officer-bhatt-gets-mother-teresa-award-1356960239

5 comments:

suvanappiriyan said...

தெற்கு டெல்லியில் உள்ள சப்தர்ஜங் என்கிளேவ் பகுதியில் கடந்த 31ம் தேதி நள்ளிரவு நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் கலந்து கொண்டார். அங்கு அவருக்கு போதைப் பொருள் கொடுத்து இரண்டு பேர் கற்பழித்துள்ளனர். இதையடுத்து அந்த மாணவி இது குறித்து போலீசில் புகார் கொடுத்தார்.

அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திகார் சிறையில் அடைத்தனர். அந்த இருவரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் பணி புரிந்துள்ளனர். அவர்கள் தங்கள் குடும்பத்தாருடன் சரோஜினி நகரில் வசித்து வருகின்றனர். ஒருவர் ஐடி நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினியராக பணிபுரிந்துள்ளார். மேலும் மற்றொருவர் ஹெச்.ஆர். துறையில் பணிபுரிந்துள்ளார்.

இந்த இருவரில் ஒருவர் சமூகவலைத்தளம் மூலம் அந்த மாணவியுடன் நட்பு பாராட்டியதுடன் அவரை சந்திக்க வேண்டும் என்று பலமுறை தெரிவித்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

Anonymous said...

kaamththukku padithavan,padikkaathavan yendra bethamillai.

UNMAIKAL said...

பாலியல் வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை:

எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்கக்கோரும் வழக்கு –

உச்சநீதிமன்றம் ஏற்பு!


3 Jan 2013 SC takes a dim view of criminal MPs, MLAs

படெல்லி:பாலியல் வழக்குகளில் குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ள எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவை, உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஒய்வு பெற்ற பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி புரோமளா சங்கர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது;

“பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைவு நீதிமன்றங்கள் மூலம் விசாரணை நடத்தி அவர்களுக்கு விரைவில் தண்டனை கிடைக்கச் செய்யவேண்டும்.

இதற்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்க மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிடவேண்டும்.

ஈவ்டீசிங் குற்றம் செய்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 30 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை மத்திய, மாநில அரசுகள் உடனே அமல்படுத்த வேண்டும்.

சில மாநிலங்களில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க் கள் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்குகளில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவர்கள் பதவியை பறிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டெல்லி மாணவிக்கு ஏற்பட்ட கொடுமை போல, ஏராளமான மலைவாழ் இன பெண்களும் கடத்தி பலாதகாரத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

இதை தடுக்க நடவடிக்கை எடுக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை ஏற்றுக்கொண்டுள்ள உச்சநீதிமன்றம், இந்த மனு நாளை முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறியுள்ளது.

இதற்கிடையே பெண்கள் பாதுகாப்பு தொடர்பான மேலும் ஒரு பொது நலன் மனுவும் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் சதாசிவம், ரஞ்சன் கோகாய் ஆகியோர் அடங்கிய அமர்வு,பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய – மாநில அரசுகள் தெரிவிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

http://www.thoothuonline.com/sc-takes-a-dim-view-of-criminal-mps-mlas/

0 0 0 2

Unknown said...

//"பெண் கொடுமை என்று தீரும் நம் நாட்டில்!"//

இஸ்லாம் அழியும் போது

suvanappiriyan said...

//இஸ்லாம் அழியும் போது//

ஹி..ஹி...மேலே உள்ள புள்ளி விவரங்களை எல்லாம் பாரத்தாச்சுல்ல.....இஸ்லாம் தழைக்கும் போது என்று வர வேண்டும்.