Followers

Tuesday, October 10, 2017

ஆரியர்கள் தமிழகத்தில் காலூன்றியது எவ்வாறு?



ஆரியர்கள் நம் நாட்டின் பூர்வ குடிகள் அல்ல என்பதை அவர்களின் தோற்றங்களையும் பேசும் முறைகளையும் வைத்தே நம்மால் ஊகித்து விட முடியும். இது பற்றிய பல செய்திகளை ஆதாரங்களோடு 'வழிப்போக்கன்' என்ற பதிவர் தனது தளத்தில் பதிவுகளாக பதிந்துள்ளார். அதனை இனி பார்போம்.

அரசனைக் கைக்குள் வைத்து இருந்தால் அவனை மட்டுமே கட்டுப் படுத்த முடியும், ஆனால் ஆன்மீகத்தினை கையில் வைத்து இருந்தால் யாரை வேண்டும் என்றாலும் கட்டுப்படுத்தலாம் என்ற உண்மை ஆரியர்களுக்கு நன்கு தெரிந்து இருந்தது. அதனால் அரசனின் துணையுடன் ஆன்மீகத்தினை தங்களின் பிடிக்குள் கொண்டு வர முயல்கின்றனர்.

ஒரு நாட்டினைப் பிடிக்க வேண்டும் என்றால் அந்நாட்டின் அரசனை வெல்ல வேண்டும். அதனைப் போன்று ஆன்மீகத்தை தங்களுக்கு உரிய ஒன்றாக மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

ஆன்மீகத் தலைவர்களைக் கொல்ல வேண்டும். அது தான் தமிழக வரலாற்றில் நிகழ்ந்து இருக்கின்றது. சித்தர்கள் கொலை செய்யப்படுகின்றனர்.
பிராமணர்களை எதிர்த்த சித்தர்கள் காடுகளுக்குள் விரட்டப்படுகின்றனர். பின்னர் அதுவும் போதாதென்று உயிருடன் குகைகளுள் அடைக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். அவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களுக்கு 'ஜீவ சமாதி' அடைந்தார் என்று பட்டத்தையும் தந்து சிறப்பித்தனர் என்பது வரலாறு. மேலும் சிலரை உயிருடன் எரித்து விட்டு அவர் முக்தி அடைந்து விட்டார் என்றப் பட்டத்தையும் தந்து அவர்கள் கொலை செய்யப்பட்டதை மறைத்த செயல்களும் இங்கே நிகழத்தான் பெற்று இருக்கின்றன.


அதனைப் போன்றே இறுதி நாயன்மாரான நந்தனாரின் கொலையும், இறுதி ஆழ்வாரான திருப்பாணாழ்வாரின் கொலையும் நிகழப் பெற்று சைவ கோவிலின் தலைமையிடமான சிதம்பரமும், வைணவக் கோவிலின் தலைமையிடமான திருவரங்கமும் பிராமணர்களின் வசம் செல்லுகின்றது.

சோழர்களின் வீழ்ச்சியும், தமிழக கோவில்கள் பிராமணர்களின் கைகளின் செல்வதும் தற்செயலான செயல்களா அல்லது ஒரு மிகப் பெரிய சதியின் பகுதிகளா என்பதனை நாம் சிந்தித்துப் பார்க்கத் தான் வேண்டி இருக்கின்றது. நிற்க.

சோழர்களின் வீழ்ச்சியினைத் தொடர்ந்து பாண்டியர்கள் சிறிது வலு பெறுகின்றார்கள். ஆனால் அவர்களும் என்ன செய்ய முடியும், நேரிடையாகப் போர் புரியும் எதிரியை வெல்லலாம் ஆனால் சூழ்ச்சியினால் முதுகில் குத்துபவனை எவ்வாறு அறிவது? பாண்டியர்களும் சிறிதுக் காலத்தில் வீழ்ச்சியினைத் தான் அடைகின்றனர்.

இக்காலத்தில் தான் பிராமணர்களின் முழு செல்வாக்கினைப் பெற்ற விசய நகரப் பேரரசு தமிழகத்தினைக் கைப்பற்றுகின்றது. தமிழர்களின் நிலை அடிமை நிலைக்குச் செல்லுகின்றது.


கோவில்கள் பிராமணர்களின் கைகளுக்கு மாற்றப்படுகின்றன...

"அபிசேகப் பண்டாரம் என்னும் பார்ப்பனர் அல்லாத சாமியார் நிர்வாகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இருந்து வந்தது. பார்பனர் தம் பாதம் தாங்கியான திருமலை நாயக்கன் அப்பண்டாரத்தை அச்சுறுத்தியும் நிலம் பணம் முதலியன கொடுத்தும் மீனாட்சி அம்மன் கோவில் ஆளுகையினைப் பறித்துக் கொண்டான். பரிதாபத்துக்குரிய பண்டாரமும் அரசு ஆணைக்குக் கட்டுப்பட்டுப் பயந்து ஒதுங்கிக் கொண்டார்.

திருமலை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தினை ஏற்றுக் கொண்ட பின் முதல் வேலையாகக் கோவில் வழிபாட்டிற்கு என்று பார்ப்பனர்களான குலசேகரப் பட்டன் வகையறாவினரையும் விக்கிரம பட்டன் வகையறாவினரையும் நியமித்துக் கொழுக்க வைத்தான்"
என்றே "பார்பனர்கள் சூழ்ச்சியும் மன்னர்கள் வீழ்ச்சியும்" என்ற நூலினில் புலவர். கோ. இமயவரம்பன் கூறுகின்றார்.

இதைப் போன்ற நிலை தான் பழனிக் கோவிலிலும் நிகழ்ந்து இருக்கின்றது என்றே நாம் கண்டு இருக்கின்றோம்.

மன்னராட்சிக் காலத்தில் அரசன் நமக்குத் துணை நின்றான் என்றால் நாம் கூறுவது தானே உண்மை. அவ்வாறே உண்மைகள் புனையப்படுகின்றன...தமிழர்கள் ஒடுக்கப்படுகின்றனர். இக்கொடுமைகளை எதிர்த்த ஆன்மீகத் தலைவர்கள், அறிஞர்கள், வீரர்கள் ஆகியோர் அனைவரும் தாழ்த்தப்படுகின்றனர். அவர்கள் பஞ்சமர்கள் என்று முத்திரைக் குத்தப் பெற்று நாடுகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். அவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்கள் தான் இன்றைக்கு தாழப்பட்டவர்களாக இருப்பவர்கள். மேலும் தொழில் அடிப்படையில் இருந்த பிரிவுகள் பிறப்பின் அடிப்படையிலான ஒன்றாக மாற்றம் பெறத் துவங்கியது இக்காலத்தில் தான் என்பதும் சிலரும் கூற்று.

பிராமணர்களின் இச்செயல்களுக்கு உறுதுணையாக இருந்து அதிகாரங்களையும் செல்வங்களையும் பெற்ற தமிழர்கள் உயர்ந்தவர்கள் என்றே மாற்றப்பட்டார்கள். இன்றுக் கூட சைவ வைணவ மடங்களில் இருப்பவர்கள் பிராமண செல்வாக்கு உடனேயே இருப்பதும், சமசுகிருதத்தை மீறி தமிழ் வர கூடாது என்று இருப்பதும், அம்மடங்களில் குறிப்பிட்ட சாதியினரே இருக்கலாம் என்று பிறப்பின் அடிப்படையில் பிரிவினையை தூக்கிப் பிடித்துக் கொண்டு இருப்பதனையும் நாம் காணத் தானே செய்கின்றோம். அவர்கள் அவ்வாறு இருப்பதற்காக அவர்களுக்கு பிராமணர்கள் கொடுத்த பட்டம் தான் சற்சூத்திரர். அதாவது சிறந்த அடிமைகள் என்றே பொருள் வரும்.

தமிழன் பிராமணனோ, சத்திரியனோ அல்லது வைசியனோ கிடையாது...அவன் சூத்திரன் அல்லது பஞ்சமன். அதன் அடிப்படையில் தான் பிராமணர்கள் தங்களுக்கு உதவிய தமிழர்களை சிறந்த அடிமைகள் என்ற பொருள் படி 'சற் சூத்திரர்' என்றும்...ஒன்றுமே செய்யாது இருந்த சாதாரண மக்களை அடிமைகள் என்னும் பொருள் படி 'சூத்திரர்' என்றும், அவர்களை எதிர்த்த தமிழ் அறிஞர்களை பஞ்சமர்கள் என்றும் பிரித்து வைக்கலாயினர்.

அரசனின் செல்வாக்கினைப் பெற்ற பிராமணர்களை மக்களால் ஒன்றும் செய்ய இயலாது போயிற்று. தமிழர்கள் தம் உரிமைகளை இழந்து அடிமைகளாயினர். கல்வியினைக் கண்ணாக மதித்து வந்த ஒரு சமூகம் அறியாமை இருளில் மூழ்கத் தொடங்கியது....இன்று வரை அது அவ்வாறு தான் இருக்கின்றது.

5 comments:

tamilan said...

சுட்டிகளை சொடுக்கி படித்து
சிந்திப்போமா?


>>>>>1. இந்துக்களே! விழிமின்! எழுமின்! ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான்.இப்படியொரு மதத்திற்கு தான் சொந்தக்காரனாக இருப்பது அறிந்து வெட்கப்படுவான்.வேதனைப்படுவான். தலைகுனிவான். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பான்.

>>>> 2.இந்துமதம் இந்திய மதமா?
இந்துமதம் இந்தியர்கள் இல்லாத பிராமணர்களின் மதம். இந்து மதமும் இந்திய மதம் இல்லை! இல்லை! இல்லவே இல்லை! இந்துக்களின் நாடு என்கிறார்களே, இந்தியா இந்துக்களின் நாடு என்று எந்த வேதத்தில், புராணத்தில் சட்டத்தில் இருக்கின்றது? அறிவிற் சிறந்த, படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள்


>>>> 3.இந்துக்களே! விழிமின்! எழுமின்! 6. இந்துகளுக்கு இறைவன் பிராமணனே? உன்னுடைய இறைவன் யார்? கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்; மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை; பிராமணர்களே நமது கடவுள் ?

.

tamilan said...

சுட்டிகளை சொடுக்கி படித்து
சிந்திப்போமா?


1.>>>
இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 1.




2. >>>
இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 2.



3. >>>
இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 3.



4. >>>
இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள் இலை 4.

Dr.Anburaj said...

ஆாியா்கள் என்று யாரும் இல்லை.அனைவரும் இந்தியா்கள்தான் இருக்கின்றாா்கள். பிறாமணா்என்ற பாா்பபனா்களின் தலைமையை என்றும் பிற மக்கள் ஏற்றுக் கொண்டதில்லை. பிறாமணா்கள் குறித்து மிதமிஞ்சிய கற்பனை பயத்தை வளா்ப்பதில் நியாயமில்லை. இன்று தீண்டாமை சாதிக்கொடுமைகளில் ஈடுபடுபவா்கள் பெரும்பாலும் மிகப்பிற்பட்ட பிற்பட்ட வகுப்பினரே.அண்மையில் நடந்த சாதிக்கொலைகள் -திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் . பிறாமணா்கள் சிறு குழுவினா் அவா்களால் ஏதும் செய்ய இயலாது. கீழ்கண்ட காாியங்களை அதிக எண்ணிக்கையில் செய்பவா்கள் பாா்ப்பனா்கள் அல்லாத மக்களே
1.டாஸ்மாா்க் கடை வாடிக்ககையாா்கள் 2. நீதிமன்றத்தில் கொலை களவு கற்பழிப்பு வழக்கில் பாதிக்கப்பட்டவா்கள் குற்றவாளிகள்
3. அரசு பணிகளில் லஞ்ச லாவண்யங்களில் ஈடுபடுபவா்கள். 2ஜி ஊடல் சா்க்காாியா ஊழல் இன்னும் லடசக்கணககான உதாரணம்
4.ஊளைச்சத்தம்போடுவது 5.பெண்களை கேலி செய்வது 6.பொது இடங்களில் துப்புவது புகைபிடிப்பது இப்படி ஆயிரம். பிற்பட்ட மக்களின் ஒழுங்கீனமே அவர்கனின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளது. நானும் பிற்பட்ட சாதி நாடாா் வகுப்பைச்சோ்ந்தவன்தான்.எனது வாழ்க்கையில் பிறாமணா்கள் எனக்கு போட்டியாக வந்தது இல்லை.

Dr.Anburaj said...


நானே அரேபிய மதம் குறித்து பல கேள்விகளைக் கொடுத்துள்ளேன்.ஆனால் எதற்கும் யாரும் பதிலளிக்கவில்லை.
01. இந்தியாவில் உள்ள எந்த பிரச்சனைக்கும் காட்டரபிகளின் புத்தகங்கள் தீா்வாக அமையும்
தகுதி திறன் அதற்கு இல்லை.
02. இந்துமதம் என்று தனியே ஒன்றும் கிடையாது. இந்துஸ்தானத்தில் கலாச்சாரபண்பாடு அறிவியல் வாழ்க்கைமுறைகளில் ஏற்பட்ட பாிணாமத்தின் தொகுப்புதான் இந்துமதம் என்று சொல்கின்றோம்.இங்கே வளா்ச்சி நோக்கில் ஏற்படும் மாற்றங்களுக்கு இடம் உண்டு.
03.திருமந்திரத்தையும் திருக்குறளையும் தாயுமானவரையும் சுவாமி விவேகானந்தரையும் யோகசுத்திரங்களையும் சைவ சித்தாதங்களையும் படித்த எனக்கு -எந்த இந்துவுக்கும் - எந்த சுட்டியும் ஒரு மயிரைக் கூட வீழ்த்திவிடாது.
04.பழையன கழியும்என்பது அனைத்து இந்துக்களும் அறிந்ததுதான்.நீக்க வேண்டியது எது என்று என்பதை இந்துக்களே முடிவு செய்வாா்கள். இந்தியாவை அரேபியனுக்கு அடிமையாக்க நினைக்கும் தேசத்துரோகிகள் முடிவு செய்ய முடியாது.காட்டரவிகள் கலாவாதியானவா்கள். உலகிற்கு முன்உதாரணமாக இருக்க முடியாது.தகுதி கிடையாது.
05. அரேபிய மதங்கள் தாங்கள் அரசு மதம் என்ற அந்தஸ்து பெற்ற இடங்களை இரத்தக்களறியாக்கிக் கொண்டிருக்கின்றன.
06.பாா்ப்பனா்கள் ஆாியா்கள் அல்ல.திராவிடா்களே.ஆாியா்கள் இந்தியாவிற்குள் நுழைந்தாா்கள் என்ற கட்டுக் கதை பல அறிஞா்களால் பொய் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
07. பலஇடங்களில் இது சம்பந்தமான விபரங்களை நான் பதிவு செய்துள்ளேன்.தாங்களும் பெருந்தன்மையோடு அதை வெளியிட்டுள்ளீா்கள்.
08. முஸ்லீம்கள் இந்தியாவில் சாதி வெறியைத் தூண்டி மதம் வளா்கக நினைப்பது அறிவீனம்
09.இன்று இந்தியாவில் இருக்கும் பாா்ப்பனா்களின் 5 தலைமுறை முன்னோா்கள் பிற்பட்ட ஆதிதிராவிடா் இனங்களே.
10.இந்துமதத்தின் லட்சியம் ” மனிதனை பிறாமணன் ஆக்குவதுதான் ” என்கிறாா்சுவாமி விவேகானந்தா்.”அந்தணம் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய் ” என்று திருவாசகம் கூறுகின்றது. அந்தணம் என்போா் அறவோா் எவ்வுயிருக்கும் செந்தண்மை புண்டொழுகலான் என்கிறது குறள். அதன்படி எல்லா சாதி மக்களும் படிப்படியாக பண்பாடு அடைந்தவா்கள் பிறாமணா்களாக பாிணாமம் பெற்றுள்ளாா்கள்.பல சாதி மக்கள் முஸ்லீம்களாக மாறுவது போல்தான் இதுவம் நடந்துள்ளது.
11.ஆாியம் என்பது கட்டுக கதை என்ற கட்டுரைகள் பல ஆங்கிலத்தில் உள்ளது.தமிழில் கிடைத்தால் பதிவுசெய்கின்றேன்.
12.அல்ப தனங்கள் செய்து வயிறு வளா்ப்பவன் காட்டுமிராண்டி.தொிந்தேபொய்களை பரப்ப வேண்டாம் சுவனப்பிாியன்.

Dr.Anburaj said...





திருவள்ளுவர் ஐயரா? ஐயங்காரா?

திராவிடங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் தமிழ் நாட்டில் வெளியான எல்லாப் புத்தகங்களிலும் வள்ளுவர் ஒரு அரைப் பார்ப்பனர் என்று எழுதப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல. தமிழ்நாட்டில் கிடைத்த பழைய வள்ளுவர் சிலை பூணூலுடன் காட்சி தருகிறது. அது மட்டுமல்ல. அந்தப் பூணூல் தெரியக்கூ டாது என்பதற்காக அதே வாக்கில் ஒரு மேல் துண்டு போட்டுச் சுற்றிக் காட்டப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் பல இந்து தெய்வங்களைக் குறிப்பிடுகிறார். அவர் சைவரா (ஐயர்) அல்லது வைஷ்ணவரா (ஐயங்கார்) என்று ஒரு பட்டி மன்றம் நடத்தினால் நான் ஐயங்காரே! என்ற கட்சியில் நின்று வாதாடி ஜெயிப்பேன். ஏனெனில் அதற்குத்தான் அதிக ஆதாரங்கள் உள்ளன.

சிலர் இவர் சமணரா, பௌத்தரா என்றும் வாதாடிப் பார்த்து தோற்றுப்போனார்கள். ஏனெனில் சமணமோ பௌத்தமோ, தெய்வத்தைப் பற்றிப் பேசுவதில்லை; வள்ளுவனோ தெய்வம் பற்றியும், வானுறையும் தெய்வம் பற்றியும் அடிக்கடி பேசுகிறான் (திருக்குறள் 619, 50, 702, 43, 55, 1023.

கடவுள் வாழ்த்தில் இவர், கடவுளுக்குப் பயன்படுத்திய சொற்கள் எல்லாம் தேவாரம், திவ்வியப்பிரபந்தத்தில் வருகின்றன. சம்ஸ்கிருதத்திலும் உள்ளன.

திருவள்ளுவர் குறிப்பிடும் தெய்வங்கள்:–

அடி அளந்தான் – திருமாலின் (த்ரி விக்ரம) வாமனாவதாரம் (610)

அமிழ்து- பாற்கடலை கடைந்தபோது வந்த அம்ருதம் 64, 1106, 720, 82 (சாவா மருந்து)

ஆதி பகவன் – 1

யமன் (கூற்றம்) – 269, 1085, 326, 765, 1083

பித்ருக்கள் (இறந்தோர்)- தென்புலத்தார் 43 யமன் வாழும் திசை

பிரம்மா – உலகு இயற்றியான் 1062

இந்திரன் – 25

கண்ணன் – தாமரைக்கண்ணான் 1103

லக்ஷ்மி- தாமரை யினாள் 617, 179, 519, 920,

மூதேவி – மாமுகடி 617, 936

பன் மாயக் கள்வன் (கோபி, கிருஷ்ணன்?)-1258

வள்ளுவன், பல நூறு குறள்களில் சொன்ன— தவம், தானம், வேள்வி, தர்மம் (அறம்), நோன்பு, பார்ப்பான்,அந்தணன், புத்தேளிர் (தேவர்), மேல் உலகம், பிறவாமை, மறை, மறை மொழி (மந்திரம்), விதி, நிலையாமை, மெய்ப்பொருள், மாசறு காட்சி, நூல் (வேதம்) முதலிய இந்துமத விஷயங்களைப் பட்டிமன்றத்துக்கு எடுத்துக்கொள்ளவில்லை.

லெட்சுமியும் விஷ்ணுவும், லெட்சுமியின் அக்காளும், பத்து அவதாரங்களில் ஒன்றும், அமிழ்தமும் வைஷ்ணவ விஷயங்களாதலால் திருவள்ளுவர் வைஷ்ணவரே என்று முடிவு செய்யலாம்.
இதற்கு அடுத்தபடியாக வருவது வேத கால தெய்வங்களான இந்திரன், யமன் ஆகும்.

பிரம்மாவைக் கூட — (உலகு இயற்றியான் 1062) — குறிப்பிட்ட வள்ளுவன் சிவனை நேரடியாகக் குறிப்பிடவில்லை. ஆனால் கடவுள் வாழ்த்தில் வரும் பத்து விஷயங்கள் சிவனுக்கும் திருமாலுக்கும் பொதுவான விஷயங்களே. அதே போல பாற்கடலைக் கடைந்து அமிழ்தம் எடுத்ததும் சிவ- விஷ்ணுவுக்குப் பொதுவான விஷயங்களே.

சிவனைப் பற்றியும் பிரம்மாவைப் பற்றியும் மறைமுகக் குறிப்புகள், இரண்டு குறள்களில் வருகின்றன:


“வள்ளுவர், சாக்ரடீஸ்,சிவபெருமான் – இவர்கள் மத்தியில் என்ன தொடர்பு? “ என்ற எனது மிகப்பழைய கட்டுரையில் (தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள், பக்கம் 126, நாகப்பா பப்ளிகேஷன்ஸ், சென்னை, ஆண்டு 2009)

பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டுபவர் (580)
------------------------------------------------------------------
திருவள்ளுவ ஐயங்கார் வாழ்க!!!
------------------------------------------------------------------

திருவள்ளுவா் ஆாியன்-பாா்ப்பனன் என்று சொல்லப் போகின்றீரா ?சுவனப்பிாியன் பதிலை பதிவு செய்யவேண்டும்.
நம்மாழ்வாா் நாடாா் சாதியைச் சோ்ந்தவா் என்ற கருத்து உள்ளது.
இனி நாடாா்கள் அனைவரும் ஆாியா்கள் என்று பதிவு செய்யப் போகின்றீா்களா ?