Followers

Wednesday, March 29, 2017

ஒன்பது நாட்கள் இறைச்சி கடைகளை மூட வேண்டுமாம்!

ஒன்பது நாட்கள் இறைச்சி கடைகளை மூட வேண்டுமாம்!

வட மாநிலங்களில் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. 'இந்த நாட்களில் இந்துக்கள் மாமிசம் சாப்பிட மாட்டார்கள்: எனவே மீன், ஆடு, மாடு, கோழி போன்றவைகளை விற்கும் மாமிசக் கடைகளை கண்டிப்பாக மூட வேண்டும். இல்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என்று சிவசேனா மும்பையில் மிரட்டல் விடுத்துள்ளது. 300க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் தற்போது பயத்தில் மூடப்பட்டுள்ளன.

பல வெளிநாட்டவர் தொழில் நிமித்தம் வந்து போகும் ஒரு நகரத்தில் இப்படி ஒரு அறிவிப்பு. ரமலான் மாதத்தில் பகலில் முஸ்லிம்கள் சாப்பிட மாட்டார்கள். எனவே அனைத்து ஹோட்டல்களையும் மூடுங்கள் என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ அது போன்றதே இதுவும்.

அனைத்து பள்ளிகளிலும் யோகா முக்கிய பாடமாக வைக்க வேண்டும் என்று இன்று யோகி ஆதித்யநாத் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வன்முறையைக் கொண்டு எந்த சித்தாந்தத்தையும் மக்களிடம் புகுத்தி விட முடியாது. இதனை இந்துத்வாவாதிகள் என்றுதான் உணரப் போகிறார்களோ.

மோடி ஆட்சியில் இருக்கும் காலத்திலேயே நமது நாட்டை சோமாலியா ரேஞ்சுக்கு கொண்டு வந்து விடுவார்கள் இந்த 'டேஷ் பக்தர்கள்'. :-)

No comments: