Followers

Monday, June 24, 2019

சுப்ரமணிய ஸ்வாமியும் சுதா ரகுநாதன் அவர்களும்

சுப்ரமணிய ஸ்வாமியும் சுதா ரகுநாதன் அவர்களும்
ஒருவர் வேறு சாதி,மதத்தில் காதல் கொண்டு திருமணம் செய்து கொள்வதால் மட்டுமே முற்போக்காளர் ஆகி விட முடியாது.மேஜர் ஆன ஆணும் பெண்ணும் வேறு சாதி,மதத்தில் திருமணம் செய்து கொள்ளும் போது பெற்றோருக்கு சூட்டப்படும் புரட்சியாளர் கிரீடம் விந்தையாக இருக்கிறது .
அவர்களுக்கு வேறு வழி இல்லாத நிலையில் ஏற்று கொள்வதை பெரும் முற்போக்காக முன் நிறுத்துவதன் பின்னும் சாதிய பெருமிதம் தான் இருக்கிறது.மாட்டு கறி சாப்பிட வேண்டுமானால் பாகிஸ்தான் போ ,இங்கிருந்தால் கடும் தண்டனைகளில் இருந்து தப்ப முடியாது என்பதை ஆதரிக்கும் யாரும் முற்போக்காளர் ஆக மாட்டார்கள்.
பூதான் இயக்கம் நடத்தியவர் என்றாலும் மாடுகளை உணவாக எடுத்து கொள்வதை என் உயிர் போனாலும் போராடி தடுப்பேன் என்ற ஆச்சரிய வினோபா பாவே பிற்போக்காளர் தான் .
சாதிய பெருமிதத்துக்காக ,கேவலம் மாட்டு கறி உண்ணும் மிலேச்சன் இங்கு ஆள்வதா என்று சாதிக்காக வெள்ளைய அதிகாரியை கொலை செய்த வாஞ்சிநாதன் பிறந்த மாநிலத்தில் பல ஆண்டுகளாக சாதிய பெருமிதம் மிக பெரும்பான்மையான சாதிகளிடம் அடங்கி இருக்க காரணம் திராவிட இயக்கம்.முக்குலத்தோர் ,வன்னியர்,நாடார்,கொங்கு வெள்ளாளர் தவிர்த்து பல நூறு சாதிகள் தங்கள் மகன்,மகளின் காதல் சாதி,மத மறுப்பு திருமணங்களுக்கு எதிராக எதுவும் செய்ய முடியாத கூட்டம் தான் .நீறு பூத்து கிடந்த சாதிக்காக எதையும் செய்யும் வாஞ்சிநாதன்கள் பாஜக அரசு பதவிக்கு வந்ததில் இருந்து வீறு கொண்டு எழுந்து வெளிவருகிறார்கள்.
எண்ணிக்கை பலம் இருந்தால் உயர் சாதியினர் என்று அறியப்படும் சாதிகளின் வெறியாட்டம் மேற்கூறிய மூன்று நான்கு சாதிகளை விட பல மடங்கு அதிகமாக இருக்கும்.அவர்கள் குறிப்பிட்ட மாநிலங்களில்,மாவட்டங்களில் ,ஊர்களில் அதிக எண்ணிக்கையில் இருக்கும் பகுதிகளில் நடக்கும் சாதி ஆணவ கொலைகளுக்கு குறைவு கிடையாது

1 comment:

Dr.Anburaj said...

சுவனப்பிரியன் வழக்கம்போல் ஏதோ பைத்தியம் போல் பதிவுகள் செய்கின்றாா்.சாதி ஆவணக் கொலைகளை பார்ப்பனர்கள் செய்யவில்லை.மறந்து விடாதீர்கள்.பார்பனப் பெண்கள் வேறு சாதி ஆண்களை திருமணம் செய்வதை வழக்கம் போல் பெற்றோரும் உற்றவர்களும் தடுக்கத்தான் பார்க்கின்றார்கள்.உறுதி காணப்படும் போது மணமகன் பொருளாதார அந்தஸ்து சமூக நிலை தரமாக இருக்கும் நிலையில் விட்டு கொடுத்து விடுகின்றார்கள். பார்பனப் பெண்கள் பிறசாதி ஆண்களை திருமணம் செய்வது சுலபமாக நடைபெறுகின்றது. எனது உறவுக்கார பையன்கள் இரண்டு பேர் பிறாமணப் பெண்களை திருமணம் செய்துள்ளாா்கள்.குடும்பம் அமைதியாக உள்ளது. சாதிய வெறியை போக்க மக்கள் அனைவருக்கும் முறையான சமய கல்வி அளிகக வேண்டும்.விவேகானந்தா கேந்திரம் ராஷ்டிரிய ஸவயம் சேவக் சங்கம் நடத்தும் பயிற்சி முகாம்கள் அளிக்கும் பயிற்சி நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். 10000 ஆண்டுகளுக்கு முன்பு சாதிகள்யின்றி வாழ்நத சமுதாயம்தான் இன்று சாதியாக பிரிந்து கிடக்கின்றது. இந்தஉண்மையை ஒவ்வொரு இந்தியனும் உணர வைத்தால் தெளிய வைத்தால் சாதி ஆவணக் கொலைகள் நடக்காது. ஒரு அரிசன பெண்ணை நாடாா் மணக்கலாம். எந்த பழுதும் வராது.கன்னிப் பெண்ணக்கும் சந்நியாசிக்கும் சாதி கிடையாது.கணவனின் சாதிதான மனைவியின் சாதி என்ற விதியை கற்றுக் கொடுப்பார் யாரும் இல்லை.மனமாற்றத்திற்கு தேவையான காரியங்களை அரசு செய்யாமல் பின்வாங்கி விட்டது. முஸ்லீம் பெண்கள் இந்து ஆண்களை திருமணம் செய்வதை சாதாரணமாக சுவனப்பிரியன் எடுத்துக் கொள்வாரா ?