Followers

Monday, July 11, 2011

யூதர்கள் தங்களின் திட்டங்களை செயல்படுத்தும் விதம்!

இஸ்ரேலின் உளவுப் பிரிவு மொசாத் தனது திட்டங்களை எப்படி செயல்படுத்துகிறது. அதற்கு என்னென்ன முயற்ச்சிகளை எடுக்கிறது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். இது ஒரு பழைய நிகழ்ச்சி!

1970 வாக்கில் பாலஸ்தீனர்களின் தாக்குதல் மிகவும் மூர்க்கமாக இருந்தது. இஸ்ரேலியர்கள் தாக்குபிடிக்க முடியுமா என்று பலரும் சிந்திக்க ஆரம்பித்தனர். ஜெர்மனியில் நடந்த தாக்குதல் பாலஸ்தீனர்கள் தங்களது நாட்டுக்கான போராட்டத்தை தீவிரப்படுத்துவதாகவே இஸ்ரேலியர்கள் எண்ணினர். இதை இப்படியே வளர விட்டால் ஒரு கட்டத்தில் இஸ்ரேலின் இருப்புக்கே ஆபத்தாகி விடும் என்ற நோக்கில் பாலஸ்தீனர்களின் முன்னேற்றத்துக்கு அவர்களின் போராட்டத்துக்கு ஒரு தடை ஏற்படுத்த வேண்டும் என்று சிந்திக்க தொடங்கியது இஸ்ரேலிய அமைச்சரவை.




அப்போதய இஸ்ரேலிய பிரதமர் கோல்டா மேயர் மொஸாத்தின் தலைவர் ஸிவி ஸமீரை அமைச்சரவை கூட்டத்துக்கு அழைத்திருந்தார். ஜெர்மனியின் தாக்குதலால் அனைவரின் முகத்திலும் ஒரு இறுக்கம் தென்பட்டது. 'பதிலடியாக நாம் என்ன செய்யப் போகிறோம்?' என்று ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டிருந்தனர். 'கடவுளின் கோபம்' என்ற ஒற்றை வரியில் பதிலளித்தார் மொசாத்தின் தலைவர் ஸிவி ஸமீர்.

அது என்ன 'கடவுளின் கோபம்?' என்று பலரும் அவரிடம் கேட்டனர். 'பல லட்சம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்க ஒலிம்பிக் போட்டியில் இஸ்ரேலிய வீரர்களை பாலஸ்தீன போராளிகள் பிடித்துச் சென்றது நமக்கு தலைக்குனிவையும், அவர்களுக்கு மேலும் தைரியத்தையும் உண்டாக்கியுள்ளது. எனவே போராளிகளின் நம்பிக்கையை தகர்க்கும் விதமாக பாலஸ்தீன இயக்க தலைவர்களையும் முக்கிய வீரர்களையும் தீர்த்துக் கட்ட போடப்பட்ட திட்டத்தின் பெயர்தான் 'கடவுளின் கோபம்' என்ற ஆபரேஷன்' என்றார் ஸிவி ஸமீர்.



படுகொலை செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியலை அனைவரின் பார்வைக்கும் வைத்தார் ஸிவி ஸமீர். ஸிவி ஸமீர் கொடுத்த புகைப் படத்தில் 11 பேர்களை மட்டும் இஸ்ரேலிய பிரதமர் கோல்டா மேயர் தேர்ந்தெடுத்தார். ஏனெனில் அந்த 11 பேரும் ஒலிம்பிக் போட்டியில் இஸ்ரேலிய வீரர்கள் 11 பேர் இறக்க காரணமானவர்கள். 11க்கு 11 என்ற ரீதியில் கணக்கு தீர்க்க திட்டம் தயாரானது. ஆனால் அவர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள்? எப்படி தீர்த்துக் கட்டப் பொகிறீர்கள்? அதற்கு எத்தனை காலம் தேவைப்படும்? என்றார் பிரதமர் கோல்டா மேயர்.

'அவர்கள் எவ்வளவு காலத்திற்குள் படுகொலை செய்யப்படுவார்கள் என்ற உத்திரவாதத்தை என்னால் தர முடியாது. ஆனால் அவர்கள் கண்டிப்பாக கொல்லப் படுவார்கள்' என்றார் ஸிவி ஸமீர். அவர் சொன்னது போல் இந்த திட்டத்தை செயல்படுத்த மொஸாத்துக்கு 20 வருடங்கள் பிடித்தது.

இவர்களின் திட்டத்தில் முதலில் பழி வாங்கப் பட இருந்தவர் கிறித்தவரான வாதி ஹத்தாத்.

யார் இந்த வாதி ஹத்தாத்?

1927 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனில் ஷஃபாத் என்னும் கிராமத்தில் பிறந்தார். மிகுந்த ஆச்சாரமிக்க கிரேக்க ஆர்த்தோடக்ஸ் கிறித்தவ குடும்பத்தில் பிறந்த வாதி ஹத்தாத் சிறு வயது முதலே மத சடங்குகளில் ஆர்வமுடையவராகவும் ஞாயிறு தோறும் தேவாலயத்துக்கு செல்பவராகவும் இருந்தார். ஷஃபாத் கிராமத்தைப் பொறுத்த வரையில் கிறித்தவர்களும் முஸ்லிம்களும் அமைதியான வாழ்க்கை நடத்தி வந்தனர். அமைதியான அவர்களின் வாழ்க்கையில் அரக்கர்களாக வந்தனர் இஸ்ரேலியர்கள்.

1948 ஆம் ஆண்டு நடைபெற்ற அரபு இஸ்ரேலிய போரில் பல பாலஸ்தீன கிராமங்கள் அழிக்கப்பட்டன. அதற்கு ஷஃபாத் கிராமமும் விதிவிலக்கல்ல. ஒரே இரவில் தங்களுடைய வீடுகளை விட்டு விரட்டியடிக்கப்பட்டனர். சொந்த வீட்டையும் சொந்த நாட்டையும் விட்டு அகதிகளாக லெபனானில் தஞ்சம் புகந்ததில் ஹத்தாதின் குடும்பமும் ஒன்று.

லெபனானின் தலைநகரிலிருந்த பெய்ரூத் அமெரிக்கன் யுனிவர்சிடியில் பல மருத்துவப் பிரிவில் தேர்ச்சி பெற்று மருத்துவரானார். இது குறித்து பிந்தைய நாட்களில் ஹத்தாத் குறிப்பிடும்போது 'அகதி என்ற பட்டத்துடனே மருத்துவர் என்ற பட்டமும் கிடைத்தது என்னுடைய பாக்கியம் என்றே கருதுகிறேன்' என்றார். மருத்துவ படிப்பை முடித்து விட்டு தனது கல்லூரி தோழரான டாக்டர் ஹபாஸூடன் சேர்ந்து ஜோர்டான் தலைநகர் அம்மானில் ஒரு கிளினிக் ஆரம்பித்தார். 1956 ஆம் ஆண்டு ஐ.நா வின் பாலஸ்தீனர்களின் புனர்வாழ்வுக்கான அமைப்புடன் இணைந்து அகதிகளுக்கான சேவையில் ஈடுபட்டார். அதே வேளையில் பாலஸ்தீன மீட்புக்காக 'அரபு தேசிய இயக்கம்' என்ற அமைப்பை தனது தோழரோடு சேர்ந்து ஆரம்பித்தார். பின்னாலில் இந்த இயக்கம் popular front for the liberation of palastine (pflp) என்ற பெயராக மாற்றப்பட்டது. 1967 லிருந்து 1977 வரை இவர் தலைமையில் பிஎஃப்எல்பி தொடுத்த தாக்குதல்களில் இஸ்ரேலே அரண்டு போனது. இந்த காலகட்டங்களில் இஸ்ரேலியர்கள் விமானத்தில் பயணிக்கவே பதறினர். ஏனெனில் 1930 க்கு பிறகு விமான கடத்தலை உலகுக்கு அறிமுகப்படுத்தியது யார் எனில் அது வாதி ஹத்தாதாகத்தான் இருக்க முடியும். இவ்வாறு அரண்டு போயிருந்த நேரத்தில்தான் ஜெர்மனியில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதிலும் ஹத்தாத் முக்கிய காரணகர்த்தா என்ற விபரம் தெரிய வந்ததும் இவரை தீர்த்துக் கட்டுவதன் அவசியத்தை இஸ்ரேல் உணர ஆரம்பித்தது.

ஆபரேஷன் 'கடவுளின் கோபம்' திட்டத்தின் படி வாதி ஹத்தாதின் தற்போதய இருப்பிடத்தை கண்டறிய ஸிவி ஸமீர் உத்தரவிட்டார். வழமையான ரகசிய படுகொலையில் மொசாத் ஒரு நடை முறையைக் கடை பிடிக்கும். அதாவது கொலை செய்யப்பட வேண்டியவர் இஸ்ரேலுக்கு வெளியே இருந்தால் முதலில் அந்நாட்டிலுள்ள தனது கைக் கூலிகளை உஷார் படுத்தும். இதற்காகவே பல நாடுகளிலும் வாடகை உளவாளிகளை மொசாத் வைத்துள்ளது. நம் நாட்டிலும் இதுபோல் பல உளவாளிகளை (இந்துத்வவாதிகளை) மொசாத் நியமித்துள்ளது. இரண்டாவதாக கேஸ் ஆபீஸர் எனப்படும் பிரத்யேக உளவு அதிகாரி நியமிக்கப்படுவார். அவர் கொல்லப்பட வேண்டிய குறிப்பிட்ட நபரைக் குறித்து அனைத்து தகவல்களையும் திரட்டி மொசாத் தலைமைக்கு அனுப்பி விடுவார். மூன்றாவதாக கொலைத் திட்டத்தின் அசல் மாதிரியை இஸ்ரேலில் போலியாக உருவாக்கி பயிற்சி செய்வர். இதன் மூலம் திட்டத்தை செயல்படுத்தும் போது ஏற்படும் சாதக பாதகங்களை முன் கூட்டியே மதிப்பீடு செய்து திட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்.

நான்காவதாக திட்டத்தை செயல்படுத்துவதற்க்கான தேதி குறிக்கப்பட்டு பிரதமருக்கு தெரிவிக்கப்படும். பிரதமர் தலையாட்டியவுடன் கேசரியா எனப்படும் ரகசிய கொலைக் குழு அனுப்பப்படும். இவர்கள் ஏற்கெனவே பயிற்சி பெற்றிருந்ததால் காரியத்தை கணக்கச்சிதமாக முடித்து விட்டு மாயமாய் மறைந்து விடுவர்.

மொசாத்தின் இந்த வழக்கமான பாணி வாதி ஹத்தாதின் விஷயத்திலும் பயன்படுத்தப்பட்டது. அதன்படி ஹத்தாதின் இருப்பிடம் குறித்து அறிவதற்க்காக பாலஸ்தீன ஆட்காட்டிகளை மொசாத் அணுகியது. இவர்கள் பணத்துக்காகவும் சுகத்துக்காகவும் மொசாத்துக்கு தகவல்களை கொடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இவர்களிடமிருந்து கிடைத்த தகவல் அத்தகைய நம்பகமானதாக இல்லை. ஏனெனில் ஹத்தால் தாம் மொசாத்தால் கொல்லப்படுவோம் என்பதை தீர்மானித்து தனது இருப்பிடத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்தார்.

பல கோணங்களில் துப்பறிந்த மொசாத்துக்கு இறுதியாக ஒரு நம்பகமான தகவல் கிடைத்தது. அது பிஎஃப்எல்பி யிலிருந்து ஹத்தாதால் நீக்கப்பட்ட இலிச் ராமிரஸ் சான்செஸ் என்பவன் கொடுத்த நம்பகமான தகவல்தான் ஹத்தாதின் கதையை முடிக்க மொசாத்துக்கு உதவியாக இருந்தது. ஹத்தாத் ஒளிந்திருந்தது ஈராக்கில். அப்போது சதாம் ஹீசைன் மிலிட்டரி கமாண்டர் ஜெனரலாக இருந்தார்.

இலிச் ராமிரஸ் சான்செஸ் கொடுத்த தகவலின்படி ஹத்தாதை கொல்ல ஒரு புது டெக்னிக்கை மொசாத் கையாண்டது. அது என்னவென்றால் ஹத்தாதுக்கு ஒரு பழக்கம் இருந்தது. சிறியவர்கள் சாப்பிடும் சாக்லெட்டுகளை எப்போதும் விரும்பி சாப்பிடுவார். இதை மோப்பம் பிடித்த மொசாத் இவரைக் கொல்வதற்கு அந்த சாக்லெட்டுகளையே பயன்படுத்தியது. 1970 களில் உயர்தர சாக்லேட்டுகள் ஈராக்கில் கிடைப்பது அரிது. இதையே தனக்கு சாதகமாக பயன்படுத்திய மொசாத் ஹத்தாதின் சமையல்காரனை தனது வலையில் வீழ்த்தியது.

சாக்லெட்டுக்கு பிரசித்திப் பெற்ற பெல்ஜியத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சாக்லேட்டுகளை சமையல்காரன் ஹத்தாதுக்கு கொடுக்க ஆரம்பித்தான். அதில் மிக மிக குறைந்த அளவில் உயிர்க் கொல்லி கிருமி தடவப்பட்டு ஆறு மாத காலம் யாருக்கும் சந்தேகம் வராமல் வழங்கப்பட்டது. அக்கிருமிகள் சிறிது சிறிதாக கல்லீரலைத் தாக்கி லுக்கிமியா நோயை ஏற்படுத்தி ஹத்தாதின் உயிரைக் காவு கொண்டது.

Poison with Sweets
…..Sure, it’s strange to think of a terrorist as a chocoholic, but it was indeed death by chocolate for Wadie Haddad, a medical doctor and onetime leader of the Popular Front for the Liberation of Palestine. A double agent slipped him a batch of poisoned chocolate in 1977, and Haddad went on to suffer a slow, months-long death. Israel’s intelligence agency, Mossad, was pointed to as the source of the poisoning in Aaron J. Klein’s book Striking Back…..
http://www.newsweek.com/2011/05/05/how-to-kill-a-terrorist.html
JERUSALEM (AP) -- Israel's Mossad secret service agency killed a Palestinian wanted for airplane hijackings by feeding him poisoned Belgian chocolate over six months in the late 1970s, according to a new book, the author said Saturday.

The book, "Striking Back," is apparently the first time that details of the killing have come to light and provides a glimpse at how sophisticated Israel is at poisoning.

In his book, author Aaron Klein describes how Israel tracked down Wadia Haddad, an operative of the Popular Front for the Liberation of Palestine, in Baghdad. Haddad had gone into hiding in the Iraqi capital after Israel began killing Palestinian militants around the world, Klein told Israel Radio.

Suspected in multiple hijackings, including the 1976 takeover of an Air France airplane in Entebbe, Uganda, Haddad knew from the Israeli tactics that he could be shot or bombed as he walked the street or picked up a phone.

Haddad was cautious of his every move, avoiding travel outside of Iraq, said Klein, a Time magazine correspondent in Jerusalem. But the 140-kilogram (309-pound) food lover had a weakness: chocolate...

http://www.cnn.com/2006/WORLD/meast/05/06/chocolate.ass...


ஆனால் உலகுக்கு இவர் இயற்கையான மரணத்தை தழுவியதாகத்தான் நம்ப வைக்கப்பட்டது. ஏனெனில் ஈராக்கில் வைத்து கொலை செய்யப்பட்டதற்கு இஸ்ரேலின் மொசாத் காரணம் என்ற செய்தி வெளியானால் அது இஸ்ரேல் ஈராக் உறவை பாதிக்கும். சுற்றிலும் பல பகைகளை பெற்றிருக்கும் இஸ்ரேல் ஈராக்கையும் அந்த நேரத்தில் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை.

காலங்கள் உருண்டோடின. 2007 ஆம் ஆண்டு முன்னால் மொசாத் அதிகாரியும் 'டைம்' பத்திரிக்கையின் ஜெருசலம் நிருபருமான ஆரோன் கிளீன் எழுதிய Striking Back என்ற புத்தகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்னால் வாதி ஹத்தாதை மொசாத் படுகொலை செய்ய பயன் படுத்திய டெக்னிக்கை வெளிப்படுத்தினார். தாங்கள் நினைத்த ஒரு காரியத்தை நிறைவேற்ற எத்தனை வருடங்கள் ஆனாலும் பொறுமையாக காத்திருந்து திட்டமிட்டு தங்களின் விருப்பத்தை நிறைவேற்றுவர் என்பதற்கு ஹத்தாதியின் மரணம் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.

நமது நாட்டிலும் இந்துத்வவாதிகள் மொசாத்தின் திட்டமிடல் படியே செயல்படுகின்றனர். அத்வானிக்கும் மொசாத்துக்கும் உள்ள தொடர்பு அனைவரும் அறிந்ததே! மாலேகானிலிருந்து சம்ஜோதா எக்ஸ்பிரஸ் வரை இவர்கள் நடத்திய அனைத்துக்கும் மூலம் மொசாத்திலிருந்து பெறப்பட்டவையே!

நமது மும்பை நகரத்தை தாக்கவும் எவ்வளவு கச்சிதமாக பிளான் பண்ணினார்கள். எங்கு பார்த்தாலும் இந்துத்வவாதிகள் கைது செய்யப்பட்ட நேரம். இதே நிலை நீடித்தால் மோடியின் கைகளுக்கும் விலங்கு வரும் என்ற நேரத்தில்தான் மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் நடந்தது. பாகிஸ்தானிய கசாப்புக்கும் அவனது கூட்டத்தாருக்கும் குடும்பத்தை காப்பாற்றுகிறோம் என்ற வாக்குறுதி தரப்பட்டது. போலி முல்லாக்களால் மத வெறியும் ஊட்டப்பட்டது. இந்தியாவுக்குள் நுழைய எத்தனையோ வழிகள் இருக்க மோடியின் குஜராத் கடல் மார்க்கம் தேர்ந்தெடுக்கப்பட்டது. கடலில் ரோந்து வருபவர்களுக்கு பணமோ அல்லது ராம பக்தியோ மோடி குரூப்பால் ஊட்டப்பட்டிருக்கலாம்.

இதை சாக்காக வைத்து ஹேமந்த் கர்கரேயையும் போட்டுத் தள்ளியாகி விட்டது. இந்துத்வாவாதிகள் மேலேயோ அல்லது மொசாத்தின் மேலேயோ துளியும் சந்தேகம் வராமல் காரியம் கச்சிதமாக நடத்தி முடிக்கப்பட்டது. மும்பை தாக்குதலுக்குப் பிறகு மாலேகான் முதற்கொண்டு அனைத்து வழக்குகளும் மந்த கதியை அடைந்தது. குற்றவாளிகள் நினைத்த காரியம் எந்த சிக்கலும் இல்லாமல் நிறைவேறியது. வழக்கம்போல் பாகிஸ்தானின் ஏதாவது ஒரு தீவிரவாத குரூப்பின் பெயரில் ஈமெயிலோ, ஒரு போன் காலோ போட்டு தங்களின் தேச பக்தியை இந்துத்வாவாதிகள் திறம்பட செயல்படுத்தி விட்டார்கள்.

ஜெய் ஹிந்த்!

19 comments:

ஷர்புதீன் said...

:-)


இனி இதுவே படித்தேன் என்பதற்கான அடையாளம் ., இன்றும் கடவுள் நாடினால் இனி வரும் காலங்களிலும் !!

suvanappiriyan said...

மும்பைத் தாக்குதலில் முக்கிய குற்றவாளி ராணா என்று இந்திய அரசும், அமெரிக்க உளவு அமைப்பான எப்.பி.ஐ.யும், சர்வதேச ஊடகங்களும் பரப ரப்பை கிளப்பி வந்த நிலை யில் அமெரிக்க நீதிமன்றமோ ராணாவுக்கு மும்பைத் தாக்குதலில் தொடர்பில்லை என அறிவித்திருக் கிறது.

மும்பைத் தாக்குதலில் முக்கிய குற்ற வாளியாக பாகிஸ்தானைச் சேர்ந்த தஹ வூர் ராணாவும், பாகிஸ்தானிய அமெரிக்க ரான டேவிட் கோல்மென் ஹெட்லியும் சேர்க்கப்பட்டனர். சர்வதேச தீவிரவாதிக ளாக ஹெட்லியும், ராணாவும் காட்டப் பட்டு வந்த நிலையில் அவர்கள் இருவ ரையும் அமெரிக்க உளவு நிறுவனமாக எப்.பி.ஐ. கைது செய்து சிறையிலடைத் தது.

இதில் ராணா மீது தொடரப்பட்ட வழக் கின் விசாரணை ஒரு மாத காலத்திற்கும் மேலாக அமெரிக்க நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது. 12 நீதிபதிகள் கொண்ட குழு ராணாவின் வழக்கை விசாரித்து வந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பை அறி விக்கும் பணிக்கு இரண்டு நாட்கள் எடுத் துக் கொண்ட நீதிபதிகள் கடந்த வாரம் தீர்ப்பை அறிவித்தனர்.

அந்த தீர்ப்பின்போது இந்திய அரசின் எதிர்பார்ப்பை பொய் யாக்கும் வகையில் மும்பைத் தாக்குதலில் ராணாவுக்கு எவ் விதத் தொடர்பும் இல்லை. 2008 நவம் பர் 26ம் தேதி மும்பையில் நடந்த பயங்கர வாதத் தாக்குதலுக்கு ராணா எவ்வகையி லும் உதவி செய்யவில்லை என்று 12 நீதி பதிகள் கொண்ட குழுவின் தலைமைப் பொறுப்பில் இருந்த நீதிபதி ஹாரி லெனின் வெப்பர் தீர்ப்பை வாசித்துள் ளார்.

மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் ராணாவுக்குத் தொடர்பில்லை என்று அமெரிக்க கோர்ட் அறிவித்திருப்பது இந்த வழக்கில் இந்தியாவிற்கு பின்ன டைவு ஏற்படும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

ராணாவை வைத்துத்தான் மும் பைத் தாக்குதலின் முழு சதிகளை யும் அறிந்து கொள்ள இந்திய விசாரணை அதிகாரி கள் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

ராணா வழக்கில் அரசுத் தரப்பு சாட்சி யாக மாறி ராணாவுக்கு எதிராக வாக்கு மூலம் அளித்திருந்தான் ஹெட்லி. ஹெட் லியின் வாக்குமூலத்தில் இந்தியாவில், தானும் லஷ்கரே தய்யிபாவும் செய்த சதி வேலைகள், உளவுப் பணிகள் குறித்தும் விவரித்திருந்த ஹெட்லி, மும்பை -பயங் கரவாத தாக்குதல் குறித்த அனைத்து சதி வேலைகளும் ராணாவுக்கு தெரி யும் என்றும் கூறியிருந்தது. அமெரிக்க எப். பி.ஐ. அதிகாரிகளுக்கும், இந்திய விசா ரணை அமைப்புகளுக்கும் தெம்பூட்டியி ருந்த நிலையில் அமெரிக்க கோர்ட்டின் தீர்ப்பு எதிர்பாராத விதமாக அமைந்து விட்டது.

***வாஞ்ஜுர்*** said...

CLICK THE LINKS BELOW AND SEE THE VIDEO

>>> அம்பலமாகும் காவிப்ப‌டையின் இருட்டு ர‌க‌சிய‌ங்க‌ள். "இந்தியா டுடே"

>>> உண்மையான பயங்கரவாதிகள். ஒரு பார்வை. Video.


>>> நடந்தது என்ன? அதிர்ச்சி தகவல்கள். அப்பட்டமான உண்மைகள்.

.

suvanappiriyan said...

//இனி இதுவே படித்தேன் என்பதற்கான அடையாளம் ., இன்றும் கடவுள் நாடினால் இனி வரும் காலங்களிலும் !!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஷர்புதீன்!

suvanappiriyan said...

சகோ. வாஞ்சூர்!

வருகைக்கும் பதிவு சம்பந்தமாக மேலதிக சுட்டிகளை தந்தமைக்கும் நன்றி!

Robin said...

//காலங்கள் உருண்டோடின. 2007 ஆம் ஆண்டு முன்னால் மொசாத் அதிகாரியும் 'டைம்' பத்திரிக்கையின் ஜெருசலம் நிருபருமான ஆரோன் கிளீன் எழுதிய Striking Back என்ற புத்தகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்னால் வாதி ஹத்தாதை மொசாத் படுகொலை செய்ய பயன் படுத்திய டெக்னிக்கை வெளிப்படுத்தினார். தாங்கள் நினைத்த ஒரு காரியத்தை நிறைவேற்ற எத்தனை வருடங்கள் ஆனாலும் பொறுமையாக காத்திருந்து திட்டமிட்டு தங்களின் விருப்பத்தை நிறைவேற்றுவர் என்பதற்கு ஹத்தாதியின் மரணம் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.// தகவலுக்கு நன்றி! மொசாத் உலகத்திலேயே திறமையான உளவு அமைப்பு.

Robin said...

//நமது நாட்டிலும் இந்துத்வவாதிகள் மொசாத்தின் திட்டமிடல் படியே செயல்படுகின்றனர்.//
அப்படியா?

// அத்வானிக்கும் மொசாத்துக்கும் உள்ள தொடர்பு அனைவரும் அறிந்ததே!// அத்வானியும் ஒரு யூதர்தான், இந்துவாக நடிக்கிறார் என்று எழுத வேண்டியதுதானே?

// மாலேகானிலிருந்து சம்ஜோதா எக்ஸ்பிரஸ் வரை இவர்கள் நடத்திய அனைத்துக்கும் மூலம் மொசாத்திலிருந்து பெறப்பட்டவையே!// நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு :)

//நமது மும்பை நகரத்தை தாக்கவும் எவ்வளவு கச்சிதமாக பிளான் பண்ணினார்கள். எங்கு பார்த்தாலும் இந்துத்வவாதிகள் கைது செய்யப்பட்ட நேரம். இதே நிலை நீடித்தால் மோடியின் கைகளுக்கும் விலங்கு வரும் என்ற நேரத்தில்தான் மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் நடந்தது. பாகிஸ்தானிய கசாப்புக்கும் அவனது கூட்டத்தாருக்கும் குடும்பத்தை காப்பாற்றுகிறோம் என்ற வாக்குறுதி தரப்பட்டது. போலி முல்லாக்களால் மத வெறியும் ஊட்டப்பட்டது. இந்தியாவுக்குள் நுழைய எத்தனையோ வழிகள் இருக்க மோடியின் குஜராத் கடல் மார்க்கம் தேர்ந்தெடுக்கப்பட்டது. கடலில் ரோந்து வருபவர்களுக்கு பணமோ அல்லது ராம பக்தியோ மோடி குரூப்பால் ஊட்டப்பட்டிருக்கலாம்.// உங்களுக்கு பொய் சொல்லவே வரல :)

//இதை சாக்காக வைத்து ஹேமந்த் கர்கரேயையும் போட்டுத் தள்ளியாகி விட்டது. இந்துத்வாவாதிகள் மேலேயோ அல்லது மொசாத்தின் மேலேயோ துளியும் சந்தேகம் வராமல் காரியம் கச்சிதமாக நடத்தி முடிக்கப்பட்டது. // இப்படியெல்லாம் பொய் சொல்லித்தான் தீவிராவாதிகளை காப்பாத்த வேண்டி இருக்குது. உங்களை சொல்லி குற்றமில்லை, தலைவன் எவ்வழி தொண்டன் அவ்வழி.

suvanappiriyan said...

ராபின்!

//இப்படியெல்லாம் பொய் சொல்லித்தான் தீவிராவாதிகளை காப்பாத்த வேண்டி இருக்குது. உங்களை சொல்லி குற்றமில்லை, தலைவன் எவ்வழி தொண்டன் அவ்வழி.//

தீவிரவாதிகளை காப்பாற்ற வேண்டும் என்ற எந்த அவசியமும் எனக்கு இல்லை. பணத்துக்காக இவ்வாறு கொலை செய்ய முற்படும் கூலி கொலையாளிகளை தூக்கில் ஏற்றத்தான் வேண்டும்.

அதே சமயம் கசாப்புக்கும் ஹேமந்த் கர்கரேக்கும் ஏதாவது கொடுக்கல் வாங்கல் தகராறா? அல்லது அவர்தான் இஸ்லாமியரிகளுக்கு எதிரியா? எதுவும் இல்லை. எங்கோ பாகிஸ்தானில் ஒரு குக்கிராமத்தில் பிறந்த கசாப்பும் அவனது கூட்டத்தினரும் குறிப்பாக ஹேமந்த் கர்கரேயையும், அவரது சகாக்களையும் குறிப்பிட்டு தீர்த்துக் கட்ட என்ன அவசியம் வந்தது?

இந்தியாவிற்குள் புக எத்தனையோ வழி இருக்க இந்துத்வ வாதி ஆட்சி செய்யும் குஜராத்தை அறிவுள்ள எவனும் தேர்ந்தெடுக்க மாட்டான்.
அடுத்து ஹேமந்த் கர்கரே மறைவுக்காக நீலிக் கண்ணீர் விட்டு நாடகமாடிய மோடி கொடுத்த பண முடிப்பை வாங்க மறுத்த அவரது மனைவியின் மனநிலையை சற்று சிந்தித்துப் பாருங்கள். ஏனெனில் அவருக்கும் தெரிந்திருக்கிறது அவரது கணவரை கொன்ற சூத்திரதாரி யார் என்று?

//, தலைவன் எவ்வழி தொண்டன் அவ்வழி.//

இப்படி சொன்னதால் நானும் ஏசு நாதரைப் பற்றி தரக் குறைவாக விமரிசிப்பேன் என்று என்ன வேண்டாம். ஏனெனில் முகமது நபிக்கு கொடுக்கும் அதே மதிப்பும் மரியாதையையும் ஏசு நாதருக்கும் நான் கொடுக்கிறேன்.

ஏசு நாதரின் பெயரில் உங்கள் மதத்தவர் ஏற்றி வைத்திருக்கும் பொய்களை பட்டியலிட ஆரம்பித்தால் ஒரு பதிவு பத்தாது. எனவேதான் இந்து மதத்தைப் போன்று கிறித்தவத்திலும் நாத்திகம் பெருத்து விட்டது.

suvanappiriyan said...

//அத்வானியும் ஒரு யூதர்தான், இந்துவாக நடிக்கிறார் என்று எழுத வேண்டியதுதானே?//

1.கல்லை வணங்குதல்
பரிசுத்த வேதாகமத்தில் ஆதியாகமம் 28:18-ல் யாக்கோபு (கிமு 1836 முதல் 1689 வரை) எனும் ஒரு தேவமனிதன் ஒரு கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்திய சம்பவத்தை பார்க்கிறோம். அவன் தன் தகப்பன் வீட்டை விட்டு ஓடி வரும் வழியில் ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் சூரியன் அஸ்தமித்தபடியினால், அங்கே ராத்தங்கி, அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின்கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக்கொண்டான்.அங்கே அவன் ஒரு சொப்பனம் கண்டான்; ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள். இதைக் கண்டு பயந்து அவன் விழித்தபோது மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார் எனச் சொல்லி ஒரு கல்லை நிறுத்தி தான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும் என்றான்.இப்படி கடவுள் தரிசனம் தந்த இடத்தை மறந்து விடாமல் நியாபகார்த்தமாக இருக்க கல்லை நாட்டி சிலை வைத்தல், கோவில் கட்டுதல் போன்ற பழக்கங்கள் யாக்கோபு காலத்திலேயே தொடங்கியது. இப்பழக்கம் தான் இந்து மதத்திலும் நுழைந்து இன்றைக்கு வீதிகள் தோறும் அவற்றை காண்கிறோம்.பிற்பாடு லேவியராகமம் 26:1-ல் ”நீங்கள் உங்களுக்கு விக்கிரகங்களையும் சுரூபங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலையை நிறுத்தாமலும், சித்திரந்தீர்ந்த கல்லை நமஸ்கரிக்கும்பொருட்டு உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்” என்ற கடவுளின் கட்டளைபடியாக கல்லை நிறுத்தும் பழக்கம் யூதமார்க்கத்தை விட்டு ஒழிந்தது. ஆனால் அது இந்து மார்க்கத்தில் இன்றும் தொடர்கிறது.

2.கும்பாபிஷேகம்
யாக்கோபு கல்லை நிறுத்தியது மட்டுமல்லாமல்,அதின் மேல் எண்ணெய் வார்த்தான் என்றும் படிக்கிறோம்.ஆதியாகமம்:35:13,14 வசனங்கள் இப்படியாக சொல்கிறது “ யாக்கோபு தன்னோடே தேவன் பேசின ஸ்தலத்திலே ஒரு கற்றூணை நிறுத்தி, அதின்மேல் பானபலியை ஊற்றி, எண்ணெயையும் வார்த்தான்” இச்சம்பவத்தை அபிசேகம் செய்தல் என்கிறோம் இதை ஆதியாகமம் 31:13-ல் பார்க்கலாம் ”நீ தூணுக்கு அபிஷேகம் செய்து, எனக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணின பெத்தேலிலே உனக்குத் தரிசனமான தேவன் நானே”. கும்பம் என்றால் குடம். கும்பத்தை கொண்டு சிலைகளுக்கு அபிசேகம் செய்வதால் அது கும்பாபிஷேகமாயிற்று. மனிதர்களை கடவுளுக்கென அர்பணித்து அபிசேகம் செய்தல் இன்றைக்கும் யூத மார்க்கத்தில் தொடர்ந்தாலும் கற்களை அபிசேகம் செய்தல் நடைபெறுவதில்லை.

3.பூசாரிமார்கள்
யூதர்கள் கடவுளை தொழுவதற்காக மோசேயால் உருவாக்கப்பட்ட கோவில் போன்ற ஆசரிப்புகூடாரத்தில் ஆசாரிய ஊழியம் செய்ய லேவியர் எனும் வம்சத்தினர் இஸ்ரேலில் தனியாக பிரித்தெடுக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மட்டுமே ஆலய பணிகளை செய்ய முடியும்.எண்ணாகமம் 18:6 ”ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்ய, கர்த்தருக்குக் கொடுக்கப்பட்ட உங்கள் சகோதரராகிய லேவியரை நான் இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து, உங்களுக்குத் தத்தமாகக் கொடுத்தேன்.” இந்து சமயத்திலும் பிராமண ஐயர்கள் மட்டுமே மந்திரம் ஓதுவது முதல் மற்ற எல்லா பூஜை பணிகளும் செய்ய தகுதி உடையவர் ஆவர்.

suvanappiriyan said...

4.கற்ப கிரக பிரவேசம்
யூதர்கள் கடவுளை தொழுவதற்காக மோசேயால் உருவாக்கப்பட்ட ஆசரிப்புகூடாரத்தின் ஒரு பகுதியான மகா பரிசுத்த ஸ்தலத்தில் லேவியர்கள் எனும் கர்த்தரால் ஆசாரிய ஊழியம் செய்ய அர்ப்பணிக்கப்பட்டவர்கள் மட்டுமே நுழைய முடியும்.II நாளாகமம் 23:6 ”ஆசாரியரும் லேவியரில் ஊழியம் செய்கிறவர்களும் தவிர, ஒருவரும் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கவேண்டாம்; அவர்களே உட்பிரவேசிப்பார்களாக; அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்; ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய காவலைக் காப்பார்களாக.” என்கிறது.இந்து கோவில்களிலும் பூசாரியாக உள்ள பிராமனர்கள் மட்டுமே கற்ப கிரகம் எனப்படும் கோவிலின் முக்கிய ஸ்தானத்திற்குள் நுழைய முடியும்.

5.பூஜையில் மணி அடித்தல்
பூஜையின் போது மணி அடிப்பதும், பழைய ஏற்பாட்டு காலத்தில் இருந்திருக்கிறது. மகா பரிசுத்த ஸ்தலத்தில் திரைக்கு மறுபக்கம் செல்லும் ஆசாரியன் உயிரோடு இருப்பதற்கு அடையாளமாக இந்த மணி அடிக்கப்படும், அந்த மணிச் சத்தம் கேட்பது நின்று போனால் அவன் செத்துப்போனான் என்று அர்த்தம். அப்போது அவனுடைய இடுப்பில் கட்டியிருக்கும் கயிரை பிடித்து இழுக்கவேண்டும்.யாரும் மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்கக் கூடாது. யாத்திராகமம்:28:34,35 ”அங்கியின் ஓரங்களில் சுற்றிலும் ஒரு பொன்மணியும் ஒரு மாதளம்பழமும், ஒரு பொன்மணியும் ஒரு மாதளம்பழமுமாய்த் தொங்குவதாக.ஆரோன் ஆராதனை செய்யக் கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கும்போதும், வெளியே வரும்போதும், அவன் சாகாதபடிக்கு, அதின் சத்தம் கேட்கப்படும்படி அதைத் தரித்துக் கொள்ளவேண்டும்.”

6.பலி செலுத்துதல்
பழைய ஏற்பாட்டு காலத்தில் இருந்தது போல இன்றும் அனேக இந்து கோவில் திருவிழாக்களில் மிருகங்கள் (கொடையாக) பலியாகச் செலுத்தப்படுகிறது, அதில் இரத்தம் தெளித்தல், இரத்தம் குடித்தல், என்று இரத்தத்திற்கு பிரதான இடம் உண்டு. ஆதியாகமம் 22:13 ”ஆபிரகாம் போய், ஆட்டுக்கடாவைப்பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான்” யாத்திராகமம்:24:5,8 ”கர்த்தருக்குச் சமாதானபலிகளாகக் காளைகளைப் பலியிட்டார்கள். அப்பொழுது மோசே இரத்தத்தை எடுத்து, ஜனங்களின்மேல் தெளித்தான்”

7.நந்தி வழிபாடு
இன்றைக்கும் நந்தி எனப்படும் ஆண் கன்றை வழிபடுதல் இந்துக்களிடையே பிரபலம். கோவில்களிலெல்லாம் நந்தி சிலைகள் காணப்படும். யூத ஜனங்கள் பின்மாறிப் போனபோது ஒரு கட்டத்தில் பொன்னை உருக்கி சிற்பக்கருவியினால் கருப்பிடித்து, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து அதை வணங்கினார்கள் என யாத்திராகமம் புத்தகத்தில் படிக்கிறோம். யாத்திராகமம் 32:8 அவர்களுக்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகினார்கள்; அவர்கள் தங்களுக்கு ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து, அதைப் பணிந்துகொண்டு, அதற்குப் பலியிட்டு: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்று சொன்னார்கள் என்றார்.

8.குத்துவிளக்கு
ஹிந்து தர்மத்தில் எநதப்பூஜை ஆரம்பித்தாலும் அதில் முதலில் இடம் பெறுவது குத்துவிளக்கு.யூத சமயத்திலும் குத்துவிளக்குகள் இடம் பெறுகின்றன. லேவியராகமம் 24:4 அவன் எப்பொழுதும் கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்தமான குத்துவிளக்கின்மேல் இருக்கிற விளக்குகளை எரிய வைக்கக்கடவன்.

9.புனித நீராடல்
இந்துக்கள் சாமி தரிசனம் செய்ய செல்லும் முன் பொய்கையில், ஆற்றில், கடலில் அல்லது தெப்ப குளத்தில் புனித நீராடி தங்களை புற சுத்தம் செய்துவிட்டு செல்வர். இதுவே யூதர்களுக்கும் கட்டளையாக இருக்கிறது.யாத்திராகமம் 30:20 அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும், கர்த்தருக்குத் தகனத்தைக் கொளுத்தவும் பலிபீடத்தினிடத்தில் ஆராதனைசெய்யவும் சேரும்போதும், அவர்கள் சாகாதபடிக்குத் தண்ணீரினால் தங்களைக் கழுவக்கடவர்கள்.

10.மாதவிலக்கு முறைமை
சில ஆச்சாரமான பிராமண வீடுகளில் மாதவிலக்கான பெண்களுக்கு ஓய்வு அளித்து தனியே ஒரு அறையில் தங்க வைப்பது இன்றும் ஒரு சில இடங்களில் உள்ளன. பழைய வீடுகளில் வீட்டுக்குப் பின்னால் ஒதுக்குப்புறமாக அடைசலான ஒரு சிறிய அறை இருக்கும் அதை “தூரமானாள் உள்” என்று அழைப்பார்கள்.இது போன்ற பழக்கம் யூதர்களிலும் இருந்திருக்கின்றது.லேவியராகமம்:15:19,20 சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்; அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. அவள் விலக்கலாயிருக்கையில், எதின்மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும்.

www.thewayofsalvation.org/2011/05/blog-post_05.html

suvanappiriyan said...

காந்தியார் படுகொலை (காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே கையில் "இஸ்மாயில்" என பச்சை குத்திக்கொண்டு முஸ்லிகளைப் போல் சுன்னத் செய்து கொண்டிருந்தான்) , தென்காசி சதித்திட்டம், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், மாலேகான் குண்டு வெடிப்பு என்று மிகப் பெரிய வன்முறைப் பாதைகளின் சுவடுகளையெல்லாம் மிகத் திறமையாக உளவுத் துறையையும் விஞ்சிய சாமர்த்தியத்தோடு இந்தத் தொலைக்காட்சி நிறுவனம் அலசி எடுத்துத் தோரணமாகத் தொங்க விட்டுவிட்டது.

தாம் அம்பலப்படுத்தப்பட்டுவிட்டோம் அதன் மூலம் சட்ட ரீதியான கடுந்தண்டனைக்கு ஆளாக்கப்படப் போகிறோம் என்பதைத் தெளிவாக உணர்ந்த இந்தக் காவிக் கூட்டத்தால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை.

கடந்த மாதம் (ஜூலை 16) புதுடில்லியில் உள்ள அந்தத் தொலைக் காட்சி நிறுவனத்தின் முன் காவிக் கூட்டத்தினர் ஆயிரக்கணக்கில் கூடி அந்நிறுவனத்தைத் தரைமட்டமாக்க ஆவேசமாக எழுந்தனர். காவல் துறையின் சாமர்த்தியத்தால் தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது என்பது போல, நான்காவது மாடியில் இருந்த அந்த நிறுவனத்துக்குள் இந்தக் காலிகளாகிய காவிகள் நுழைய முடியாமல் தடுக்கப்பட்டனர். ஆனாலும் கல்லெறி எனும் கலையில் தேர்ந்தவர்களாயிற்றே! அதைப் பயன்படுத்தி கண்ணாடிக் கதவுகளை யெல்லாம் அடித்துத் தூள் தூளாக்கிவிட்டார்கள்.

இந்த ஆத்திரமே அவர்களின் குற்றங்களுக்கான அளவுகோல் என்பதை மத்திய அரசு அறிந்திருக்க வேண்டும்..

அபினவ் பாரத் என்ற மாலேகான் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டர்களின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் காந்தியார் கொல்லப்பட்ட பின்பு நமக்கு நேர்ந்த கதியை விட மோசமான நிலைக்குத் தள்ளப்படுவோம் என்று ஆர்.எஸ்.எஸ்.சின் மூத்த தலைவர்களே அலற ஆரம்பித்துள்ளனர்.

இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு, மத்திய உள்துறை சட்ட ரீதியாக எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமோ, அவற்றைக் கொஞ்சமும் தயக்க மின்றி எடுத்தாகவேண்டும். இல்லையென்றால், நிவர்த்திக்க முடியாத கடும் விலையை இந்தியா கொடுக்க நேரிடும் என்று எச்சரிக்கின்றோம்.

THANKS TO: http://viduthalai.periyar.org.in/20100826/news21.html

Robin said...

சுவனப்பிரியன்,

வழக்கம்போல சாமார்த்தியமா பேச்சை மாத்துறீங்க!
நீங்க சொன்னது எல்லாம் இஸ்லாத்திலும் உண்டு. நீங்களும் மெக்காவில் கல்லைத் தான் சுற்றி வருகிறீர்கள், மந்திரம் சொல்லி ஆடு வெட்டுகிறீர்கள், யூதர்கள் போல சுன்னத் செய்கிறீர்கள். அதனால் இந்த கதையெல்லாம் வேண்டாம்.

அவுரங்கசீப்பையே நல்ல மனுஷன்னு சொன்ன ஆள் நீங்க. இஸ்லாமிய தீவிரவாதிகளும் உங்கள் பார்வையில் நல்லவர்களாகத்தான் தெரிவார்கள். நீங்கள் ஏற்றுக்கொண்ட மதம் அப்படி.

தீவிரவாதிகள் மட்டுமல்ல தீவிரவாதத்தை நியாயப்படுத்துபவர்களும் தீவிரவாதிகளை நல்லவர்கள்போல சித்தரிப்பவர்களும் ஆபத்தானவர்கள்தான்.

Rabbani said...
This comment has been removed by a blog administrator.
suvanappiriyan said...

Bat said….
அஸ்ஸலாமு அலைக்கும்

சகோத .....
நிறைய செய்திகள் அறியமுடிந்தது ( ராபின்) வலை உலகில் பலர் உள்ளனர் இவர்களிடம் நமது நேரத்தை வீண்ணடிக்காமல் இருப்பது நலம்

வாட்டாக்குடி இரணியன் said...

நல்ல உளவியல் விளையாட்டு சுவனப்பிரியன்.

கலிபோர்னியாக் காதலன் said...

தல, கசாப்பே குஜராத்ல பொறந்த இந்து. உருது கத்துகிட்டு ஜுனாகாத்திலிருந்து போட்ல வந்தான்னு ஒரே போடாப் போடுங்க.

***வாஞ்ஜுர்*** said...

CLICK THE LINK AND READ


1. >>>> அவுரங்கசீப்.... ? !!! இந்து மத்தினர் மீது விதித்த ( ஜஸியா ) வரி.


2. >>>> ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா?


.

George said...

திரு சுவனப்ரியன்,
மொசாத் 20 ஆண்டுகளாக திட்டம் போட்டு நிகழ்த்திய படுகொலைகளை விரிவாக அலசிய நீங்கள் அதற்கு காரணமான ஜெர்மன் நிகழ்ச்சியை பற்றி ஏதும் விளக்கவில்லையே, ஒருவேளை அல்லாவின் பிள்ளைகள் அதை செய்ததால் அது தவறு இல்லையோ?
//அதே சமயம் கசாப்புக்கும் ஹேமந்த் கர்கரேக்கும் ஏதாவது கொடுக்கல் வாங்கல் தகராறா? அல்லது அவர்தான் இஸ்லாமியரிகளுக்கு எதிரியா? எதுவும் இல்லை. எங்கோ பாகிஸ்தானில் ஒரு குக்கிராமத்தில் பிறந்த கசாப்பும் அவனது கூட்டத்தினரும் குறிப்பாக ஹேமந்த் கர்கரேயையும், அவரது சகாக்களையும் குறிப்பிட்டு தீர்த்துக் கட்ட என்ன அவசியம் வந்தது?//
எங்கோ பாகிஸ்தானில் ஒரு குக்கிராமத்தில் பிறந்த கசாபை இந்துத்துவ வாதிகள் எப்படி கண்டு பிடித்தார்கள் சுவனப்ரியன் அவர்களே, அவனுக்கு எங்கே, பாகிஸ்தானில் வைத்தா பயிற்சி கொடுத்தார்கள். ஒருவேளை பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்களுக்கும் இந்துதுவவாதிகளுகும் எதாவது ரகசிய தொடர்பு இருக்கிறதா? இங்கிருந்து இந்துக்கள் பாகிஸ்தான் கிராமங்களில் கசாப் போன்றவர்களை தேடி பிடித்து பயிற்சி அளித்து இந்தியாவில் தாக்குதல் நடத்தினார்கள் என்று சொன்னால், பச்சை குழந்தைகூட சிரிக்கும். இப்படி சொல்லி என்ன விதமான அனுதாபத்தை உருவாக்க பார்கிறீர்கள்.

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

நல்ல பதிவு ....இனியும் இது தொடரட்டும் இன்ஷா அல்லாஹ்......இஸ்லாத்திற்கு எதிரான பதிவுகளுக்கு tvpmuslim.blogspot.com பாருங்கள்.அந்த தளத்தில் இணையுங்கள்.