Followers

Sunday, July 03, 2011

மனிதனின் மூளையில் மறைந்திருக்கும் ரகசியங்கள்!

'முன்னர் எந்தப் பொருளாகவும் இல்லாதிருந்த நிலையில் அவனைப் படைத்தோம் என்பதை மனிதன் சிந்திக்க வேண்டாமா?'
-குர்ஆன் 19:67

'உங்களைப் படைத்திருப்பதிலும் ஏனைய உயிரினத்தைப் பரவச் செய்திருப்பதிலும் உறுதியாக நம்பும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.'
-குர்ஆன் 45:4

'உறுதியாக நம்புவோருக்கு பூமியிலும் உங்களுக்குள்ளும் பல சான்றுகள் உள்ளன. சிந்திக்க மாட்டீர்களா?'
-குர்ஆன் 51:20,21

மனித மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மனித மூளை, விழிப்புணர்வு இன்றியும் இயங்கும், இச்சை இன்றிய செயற்பாடுகளான மூச்சுவிடுதல், சமிபாடு (செரிமானம்), இதயத்துடிப்பு, கொட்டாவி[1] போன்ற செயற்பாடுகளையும்,[2] விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. மற்ற எல்லா உயிர்களையும் விட இத்தகைய சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளைச் சிறப்பாக கையாளும் திறனை மனித மூளை பெற்றிருக்கிறது.
மனிதனின் மூளை, மற்ற பாலூட்டிகளின் மூளையின் பொது வடிவத்தினை பலவாறு ஒத்திருப்பினும், அவற்றின் மூளைகளைக் காட்டிலும் உடல் எடை-மூளை அளவு விகிதத்தில் குறைந்தது ஐந்து மடங்கு பெரியது. இதற்குக் காரணம், மனித மூளையின் நன்கு விரிவடைந்த பெருமூளைப் புறணிப் (cerebral cortex) பகுதியாகும். நரம்பிழையத்தால் (neural tissue) உருவாகி, பல தொடர் மடிப்புகளை கொண்ட இப்பகுதி மனிதனின் முன்மூளையில் அமைந்துள்ளது. குறிப்பாக, பிற விலங்குகளில் இருந்து மனிதனைப் பிரித்துக்காட்டும் சிறப்பு செயல்பாடுகளான, தற்கட்டுப்பாடு, திட்டமிடல், பகுத்தறிதல், கற்றறிதல் ஆகியவற்றிக்குக் காரணமான மூளையின் முன் மடல்கள் மனித மூளையில் நன்கு விரிவடைந்து காணப்படுகின்றன. மேலும், கண் பார்வைக்குக் காரணமான பகுதியும் மனித மூளையில் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.--விக்கி பீடியா




For many years, many scientists thought that the frontal lobe was disproportionately enlarged in humans compared to other primates. They thought that this was an important feature of human evolution and was the primary reason why human cognition is different from that of the other primates. However, this view has been challenged by newer research. Using magnetic resonance imaging to determine the volume of the frontal cortex in humans, all extant ape species and several monkey species, Semendeferi et al. found that the human frontal cortex was not relatively larger than the cortex in the other great apes but was relatively larger than the frontal cortex in the lesser apes and the monkeys.[3]-wiki pedia

மனிதனுக்கும் மிருகங்களுக்கும் உள்ள மூளையின் அளவு வித்தியாசத்தில் மிகப் பெரும் மாறுபாடு உள்ளதையும் இங்கு கவனிக்க வேண்டும். இந்த இடத்திலும் பரிணாமவியலின் கோட்பாடு மனிதன் குரங்கிலிருந்து பரிணாமம் அடையவில்லை. மனிதப் படைப்பே மற்ற விலங்குகளிலிருந்து வித்தியாசமாக படைக்கப்பட்டுள்ளது என்பதை விளங்குகிறோம்.

The executive functions of the frontal lobes involve the ability to recognize future consequences resulting from current actions, to choose between good and bad actions (or better and best), override and suppress unacceptable social responses, and determine similarities and differences between things or events. Therefore, it is involved in higher mental functions.
The frontal lobes also play an important part in retaining longer term memories which are not task-based. These are often memories associated with emotions derived from input from the brain's limbic system. The frontal lobe modifies those emotions to generally fit socially acceptable norms.
Psychological tests that measure frontal lobe function include finger tapping, Wisconsin Card Sorting Task, and measures of verbal and figural fluency.-wiki pedia


பொய் கூறிய முன் நெற்றி - ஓர் விளக்கம்!

'தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்கவில்லையா?'

'அவர் நேர் வழியில் இருப்பதையும், அல்லது இறையச்சத்தை ஏவுவதையும் அவன் பொய்யயெனக் கருதி அலட்சியம் செய்வதை நீர் கவனித்தீரா?'

'இறைவன் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?'

"அவ்வாறில்லை. அவன் விலகிக் கொள்ள வில்லையானால் முன் நெற்றியைப் பிடிப்போம். அது குற்றமிழைத்த பொய் கூறிய முன் நெற்றி.'

-குர்ஆன் 96 : 9,10,11,12,13,14,15,16

இந்த வசனத்தில் முஸ்லிம்களை எந்த நேரமும் எதிர்த்துக் கொண்டும், அவர்கள் இறைவனை வணங்காமல் தடுத்துக் கொண்டும், பொய் பேசி திரிந்து கொண்டும் இருக்கும் நபர்களைப் பற்றி கூறப்படுகிறது.

குர்ஆன் இங்கு பொய் சொல்பவர்கள், தவறான நடத்தையில் ஈடுபடுபவர்கள் போன்றோரின் முன் நெற்றியைப் பிடிப்போம் என்று கூறுகிறது. பொய் சொல்வதற்கும்,தவறான நடத்தை நடப்பவருக்கும் அந்த நபரின் முன் நெற்றிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. ?

ஒரு மனிதனின் மூளையின் அமைப்பையும் அதன் முன் பக்கத்தையும் ஆராய்ந்து பாருங்கள்.அங்கு நமது தலையின் முன் பகுதியில் பெரு மூளை அமைந்துள்ளதைக் காணலாம். இதைப் பற்றி உயிரியல் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? Essential of Anatomy & Physiology என்ற புத்தகம் மூளையின் செயல்பாடுகளை விரிவாக விவரிக்கிறது. மனிதன் அதிகம் உணர்ச்சி வசப்படுதல், பொய்,கோபம், முதலான உணர்வு சம்பந்தப் பட்டவைகள் அதிகம் நிகழ்வது மூளையின் முன் பக்கத்தில் இந்த முன் பக்கம் என்பது காதுகளின் ஓரத்துக்கும், தலையின் முன் பக்கத்திற்கும் அதாவது நெற்றியில் அமைந்துள்ள நரம்புகளால் இந்த செயல்கள் செயல் படுத்தப் படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த நெற்றிப் பகுதியின் நரம்புகள் மனிதனின் அநேக செயல்களுக்கு காரணமாக அமைகிறது. இந்த இடமே ஒரு மனிதன் பொய் பேசுவதற்கும் உண்மை பேசுவதற்கும் தூண'டுகோலாய் இருக்கிறது.

முகமது நபி மருத்துவம் படித்தவரில்லை. அதைவிட தனது தாய் மொழியையே எழுதவும் படிக்கவும் தெரியாதவர். அவர் வாழ்ந்த சமூகமும் படிப்பறிவில் சிறந்த சமூகமாகவும் இல்லை.

இந்த உண்மை கண்டறியப்பட்டது சுமார் எழுபது வருடங்களுக்கு முன்புதான். இந்த உண்மையைத் தான் குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்பே உண்மைப் படுத்துகிறது. எனவே தான் 'பொய் பேசிய அந்த முன் நெற்றியை நாம் பிடிப்போம்' என்று இறைவன் கூறுகிறான். இந்த குர்ஆன் நம்மைப் படைத்த இறைவனின் வார்த்தைகள் தான் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக் காட்டு.

Evidence from
1)This is the Truth (video tape)
2)Essential of Anatomy & Physiology, seeley and others, page 211. Also see The Human Nervous System, Noback and others, page 410,411
Figure 12 : Functional regions of the left hemisphere of the cerebral cortex. The prefrontal area is located at the front of the cerebral cortex. (Essentials of Anatomy & Physiology, Seelay and others, page 210.
இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர் டாக்டர் மார்தா லாகர் தலைமையிலான குழுவினர் மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அவர்கள் ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டங்களில் வாழும் மனிதர்களின் மண்டை ஓடுகள் மூலம் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
சமீபத்தில் இஸ்ரேலில் உள்ள குகைகளில் இருந்து மனித மண்டை ஓடுகள் கிடைத்தன. அது கடந்த 1 லட்சம் முதல் 1 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த குகை மனிதர்களுடையது என தெரிய வந்தது. அவர்கள் நடத்திய ஆய்வின் மூலம் இவர்கள் மிகவும் உயரமாகவும், கட்டுமஸ்தான உடலமைப் புடனும் இருந்தது தெரிய வந்துள்ளது.
அதே போன்று அவர்களின் மூளை அளவு பெரிதாக இருந்தது. அவர்களின் உடல் அமைப்பை தற்போது வாழும் மனிதர்களுடன் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டனர். கடந்த 10 ஆயிரம் ஆண்டுக்குள் ஆதிகால மனிதனை விட தற்போதைய மனிதனின் உயரமும், உடல் எடையும் குறைந்துள்ளது.
அதே நேரத்தில் மூளையின் அளவும் 10 சதவீதம் குறைந்து சுருங்கி இருப்பது கண்டு பிடிக்கப் ட்டுள்ளது. அதற்கு தற்போது உணவு கட்டுப்பாடு மற்றும் சுகாதாரமற்ற சூழ்நிலை, இதை தொடர்ந்து ஏற்படும் நோய்களும் காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.-விக்கிபீடியா

இத்தனை வருடம் பழமையான மண்டை ஓடுகள் கிடைத்தும் தற்போதுள்ள மனிதனின் அமைப்பில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. உயரமாக இருந்த மனிதன் புறத் தோற்றத்தில் ஆறடி ஐந்தடியாக குறைவாக்கப்பட்டிருக்கிறான். இதுவும் அவன் வாழ்ந்த சூழலினால் ஏற்பட்ட மாற்றம். இந்த இடத்திலும் வழக்கம்போல் நம் டார்வின் மாமாவின் பரிணாமம் தோற்றுப் போகிறது.




http://www.blogger.com/img/blank.gif

22 comments:

வலையுகம் said...

தோழர் சுவனப்பிரியன் அவர்களுக்கு

//மனிதனுக்கும் மிருகங்களுக்கும் உள்ள மூளையின் அளவு வித்தியாசத்தில் மிகப் பெரும் மாறுபாடு உள்ளதையும் இங்கு கவனிக்க வேண்டும். இந்த இடத்திலும் பரிணாமவியலின் கோட்பாடு மனிதன் குரங்கிலிருந்து பரிணாமம் அடையவில்லை. மனிதப் படைப்பே மற்ற விலங்குகளிலிருந்து வித்தியாசமாக படைக்கப்பட்டுள்ளது என்பதை விளங்குகிறோம்.///

சரியான விளக்கத்தோடு வந்த அருமையான பதிவு தோழரே
வாழ்த்துக்கள்

naren said...

சகோ.சுவனப்பிரியன்...நல்ல கட்டுரை.

நெற்றிக்கும் மூலைக்கும் என்ன சம்பந்தம் என்பதை விளக்கமாக சொல்லியிருக்கலாம்.


//இத்தனை வருடம் பழமையான மண்டை ஓடுகள் கிடைத்தும் தற்போதுள்ள மனிதனின் அமைப்பில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. உயரமாக இருந்த மனிதன் புறத் தோற்றத்தில் ஆறடி ஐந்தடியாக குறைவாக்கப்பட்டிருக்கிறான். இதுவும் அவன் வாழ்ந்த சூழலினால் ஏற்பட்ட மாற்றம். இந்த இடத்திலும் வழக்கம்போல் நம் டார்வின் மாமாவின் பரிணாமம் தோற்றுப் போகிறது.//

சகோ. இதில் பரிணாமம்....வரும் ஆனா வராது. என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை விளக்கியிருக்கலாம்.

ஷர்புதீன் said...

:-)
for follow ups!

VANJOOR said...

பாதிக்கும் நோய்கள் அறிகுறிகள் :

காய்ச்சல், தலைவலி, உடல் இளைப்பு, கழுத்து, தலைவிறைப்பு, வாந்தி, வழக்கத்திற்கு மாறான அங்க அசைவுகள், பசியின்மை, முதலானவை இதன் அறிகுறிகளாகும். உடனடியாக மூளைச்சவ்வு அழற்சி தாக்கும் அபாயமுண்டு. மருத்துவ உதவியைப் பெறவேண்டியது மிகவும் அவசியமாகும்.

மூளைக்குச் செல்லும் இரத்த நாளங்கள் சிலருக்கு அவ்வளவு வலுவுடயதாக இருக்காது. எனவே அந்த நாளங்களில் வீக்கம் ஏற்பட்டு அவை வெடித்து மூளையில் இரத்தப்பெருக்கு ஏற்படும். இதனால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகும். சில நேரத்தில் இரத்தநாளம் வழியாகச் செல்லும் ரத்தம் உறைந்து போய்விடும். இதற்கு 'திராம்பஸ்' என்று பெயர். மூளை பெறும் ஆக்சிஜன் தடைபட்டு, செயலற்றுப் போகிறது. இதையே பாரிசவாயு அல்ல முடக்குவாதம் என்கிறோம். தகுந்த சிகிச்சை உடனடியாக எடுப்பதன் மூலம் இதை நிவர்த்திக்க வழி உண்டு.

சில வைரஸ்கள் இரத்தத்தின் மூலமாக மூளைய அடைநது; மூளைக் காய்ச்சல், மூளை அழற்சி நோய்கள உண்டுபண்ணிவிடுகிற.து போதை மருந்துகள், சாராயம் போன்றவற்றால் இப்படி நேர்ந்துவிடுகிறது மூளையின் செயல் திறமை பாதிப்படைகிறது. விபத்தின் காரணமாக தலையில் அடிபட்டால், தற்காலிக நினைவுக்குறைவு, தலைசுற்றல், வலிப்பு முதலியவையும் தோன்றிவிடும்.

பேச்சைக் கட்டுப்படுத்தும் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டால் பேச்சு கோர்வையாக வராது. நினைத்ததை சொல்லமுடியாது. எழுதமுடியாது. இதற்கு 'அபாஸியோ' நோய் என்று பெயர்.

உடல் இயக்கத்தைக் கட்டுப்படுததும் நரம்புச் செல்கள் அடங்கிய தொகுதியில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் ஓய்வு நிலையில் உடலெங்கும் ஒருவித நடுக்கம் இருந்துகொண்டிருக்கும். மற்ற நேரத்தில் விறைப்பு நிலையில் இருக்கும். இதை 'பார்க்கின்ஸன்' நோய் என்பர்.

போலியோ வைரஸ்கள், ரேபிஸ் வைரஸ், பன்றி வைரஸ் போன்றவையும் இயக்க நரம்புகளைப் பாதித்து உடலியக்கத்தை முடமாக்கிவிடுகின்றன.

மூளை தொடர்பான பல சிக்கல்கள் இன்றைய மருத்துவ விஞ்ஞானம் அவிழ்த்துவிட்டது. ஆனால் ''காக்ககாய் வலிப்பு'' மட்டும் இன்னும் பிடிபடாமல் பறந்துகொண்டிருக்கிறது.

மூளையில் ஏதேனும் பாதிப்பு நேர்ந்தால், வெளியே தெரியாவண்ணம் மற்ற செல்களே அவற்றைச் சரிசெய்து கொள்கின்றன. ஆக பிரச்சினை என்பது நம்மால் வெளியிலிருந்து உள்ளே போனால் தான் உண்டு.

SOURCE: INTERNET

VANJOOR said...

கோடிக்கணக்கான செல்களின் கூட்டமைப்பே நம உடல். அதில் மூளயில் மட்டுமே 1400 கோடி செல்களுக்கு மேல் உள்ளன.

முழு உடம்பையும் இந்த மூளை மண்டலமே கட்டுப்படுத்துவதால் அங்கே தனி கவனமும், அது குறித்த பாதுகாப்பும் மிகவும் தேவையாகின்றன.

மூளையத் தாக்கும் நோய்களுக்கு நாம் இடம் தராமல் இருக்கவேண்டும்.

:மூளை-தண்டுவட திரவ சுழற்சியில் எங்கேனும் தடை ஏற்பட்டால், மூளை அல்லது தண்டுவட பரப்பில் அதிக அழுத்தம் தோன்றும். இதற்கு ''ஹடிரோ செபலஸ்'' என்று பெயர். இப்படி மிகவும் அசாதாரணமாகவே தோன்றும். எனினும், சில நேரத்தில் அப்பகுதிகளில் கட்டி ஏற்பட்டால் அதன் விளைவாக இப்படி நேர்வதுண்டு.

கருவில் மண்டையோடு இணையும் முன் மூளை-தண்டுவட திரவ சுழற்சியில் தடை ஏற்பட்டால், அதன் விளவாக, தலையே மிகப் பெரிதாக வளர்ந்து விடுவதுண்டு. இதை அறுவை சிகிச்சை முறையில் 'கதீட்டர்' என்னும் ரப்பர் வடிகுழாய் உதவி கொண்டு தேங்கி நிற்கும் திரவத்தை வேறு பகுதிக்குத் திருப்பி விடுவார்கள்.

மூளைச்சவ்வு அழற்சி ஒரு கடுமையான மூளைத் தொற்றாகும். இது குழந்தைகளிடயே பரவலாக வரும். பொதுவாக கக்குவான், இருமல், காதுத் தொற்று முதலிய நோய்கள் மூளைச்சவ்வு அழற்சியில் கொண்டுபோய் விட்டுவிடும். தாய்க்கு காசநோய் இருந்தால் அதன் விளைவாக பிறக்கும் குழந்தைக்கு பிறந்த சில மாதங்களிலேயே காசநோய் தொடர்பான மூளைச்சவ்வு அழற்சி ஏற்படும்.

SOURCE :INTERNET

VANJOOR said...

மூளையின் முழு பரிமாணத்தையும் கண்டுபிடிப்பது என்பது சாத்தியமில்லையென்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

வியப்பான மூளை :

எல்லாவித வேலைகளையும் இடைவிடாமல் தொடர்ந்து செய்ய மூளைக்கு அதிகமான ஆக்சிஜன் தேவையாகிறது.

உடல் பயன்படுத்தும் மொத்த ஆக்சிஜனில் 20 சதவீதத்தை மூளையே விழுங்குகிறது.

சிறிது நேரம் ஆக்சிஜன் தடைப்பட்டாலும் மூளையின் செல்கள் பழுதடைகின்றன அல்லது இறக்கின்றன.

மூளையின் செயலுக்கேற்ப ஒரு மணி நேரத்திற்கு 35 லிட்டர் இரத்தம் அங்கே செல்கிறது.

ஒரு லட்சம் முதல் 10 லட்சம் பல்வேறு வேதியியல் வினைச்செயல்கள் ஒவ்வொரு நிமிடமும் முளையில் நடைபெறுகின்றன.

மூளையின் முழுத்திறன் என்னவென்று, உண்மையில் இதுவரை அறிய முடியவில்லை.

சோவியத் விஞ்ஞானிகள் குறைந்தபட்ச மதிப்பீட்டில் மூளையின் திறனை அறிய முயன்றனர். அதுவே ஒன்றின் பக்கத்தில் 105 லட்சம் கிலோ மீட்டர் தூரம் வரை எவ்வளவு பூஜ்யங்களப் போடமுடியுமோ அந்த எண்ணிக்கையில் செயல்புரியும் ஆற்றல் தெரிந்தது.

உலகிலேயே மிக மிக ஆச்சரியம் _ மனித மூளை. அதனுள் பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள், செல்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லையும் ஒரு மண்துகள் அளவுக்குப் பெரிசு பண்ணினால் ஒரு லாரி நிரம்பும்! இந்த செல்களில் ஆயிரம் கோடி நியூரான்கள், நரம்புச் செல்கள் வேறு. இவற்றுக்கிடையே ஓய்வில்லாத மின் ரசாயன நடனம்தான் நம் சிந்தனை! மனிதன் உயிர் வாழும்வரை இந்தச் செல்களிடையே மின் துடிப்புகள் திரிகின்றன.

‘இன்றைய கணிப்பொறிகளோடு ஒப்பிட்டால் மூளை ரொம்ப ரொம்ப நிதானம். ஆனால், கணிப்பொறியால் நீச்சல் அடிக்க முடியாது. டை கட்ட முடியாது. ஓரமாக பேப்பரைக் கிழித்துச் சுருட்டிக் காதை கிளீன் பண்ணிக்கொண்டு பொண்டாட்டியோடு வாக்குவாதம் பண்ண முடியாது.

SOURCE: INTERNET

VANJOOR said...

குழந்தையின் மூளை, ரகசியக் களஞ்சியம்.

குழந்தையின் மூளை, ரகசியக் களஞ்சியம். அதன் எண்ணற்ற விந்தைகளை விஞ்ஞானிகள் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து வருகிறார்கள்.

கருவிலேயே தொடங்குகிறது இதன் கதை. கரு உண்டாகி நான்கே வாரங்களில் முதலாவது மூளை உயிரணுக்கள் - நியூரோன்கள் - உருவாகின்றன. என்ன வேகத்தில்? நிமிடத்துக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் உயிரணுக்கள் என்ற ரீதியில்!

கோடிக் கணக்கில் நியூரோன்கள் தோன்றி கோடான கோடி தொடுப்புகளை ஒன்றுடன் ஒன்று உண்டாக்குகின்றன. இவையெல்லாம் மிகக் கவனமாக ஏற்படுத்தப் பட்டவை.

குழந்தைகள் பிறந்தவுடன் அவர்களின் மூளை ஏறத்தாழ “வெறுமையானது”. அதாவது எதையுமே கற்றுக் கொள்வதற்கு தயாராக இருக்கும்.

அவர்கள் வளர வளர கண்களால் காணுவதும், காதுகளால் கேட்பதும், தொடு கையினால் உணருவதும், நாக்கினாலே ருசிக்கின்றதும் அவர்களது “புதிய” மூளையில் பதிந்து மூளையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

நியூரோன்களின் கோர்வைகளிலே தாங்கள் புரிந்து கொண்டவற்றைச் சேமிக்கிறார்கள். குழந்தையின் மூளை கற்றுக் கொள்வதற்கு வசதியான கருவியாகும். குறுகிய காலத்தில் குழந்தை எல்லாம் கற்றுக் கொள்ளும்.

தவழுவதற்கு, நடப்பதற்கு, ஓடுவதற்கு என்று எல்லாவற்றையும் கற்றுக் கொண்டே போகும். எதிலும் தேடல் ஆர்வம் என கல்வி வாழ்க்கை வரை இது நீளும்.

நாம் எவ்வளவுக்கு குழந்தையுடன் கொஞ்சி,விளையாடுகிறோமோ அந்த அளவுக்கு நல்ல மன வளர்ச்சி இருக்கும்.

இந்த அவசர உலகில் எத்தனை அவசரமான வேலைகள் இருந்தாலும் குழந்தைக்கென நீண்ட நேரத்தை ஒதுக்க வேண்டியது முக்கியம்.

அவர்கள் தரத்துக்கு நாம் இறங்கி வந்து விளையாட வேண்டும்.

சிக்கலான நடப்புகளையும், சுற்றுச் சூழலையும் குழந்தைகள், தங்கள் மனதுக்குள்ளே வாங்கிக் கொள்கின்றன.

ஒவ்வொரு பொருளுக்கும் அதைக் குறிப்பிடும் சொல்லுக்கும் இடையே சரியாகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வர். அதே போல ஒவ்வொரு செயலுக்கும் அதைக் குறிப்பிடும் சொல்லுக்கும் இடையே சரியாகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வர்.

அவர்கள் 12-18 மாத வயதை எய்தும் போது, கண்பார்வை. திசை, புறமொழி, சைகைகள், உணர்ச்சிகள், மனநெகிழ்ச்சி போன்றவற்றையும் துல்லியமாகத் தெரிந்து கொள்ளக் கூடிய ஆற்றலைக் கொண்டிருப்பார்கள்.

அச்சமயத்தில் அவர்கள் நாம் பார்க்கின்ற திசையைப் புரிந்து கொண்டு அதை நோக்கிப் பார்ப்பார்கள். அந்தத் திசையில், அதாவது நாம் நோக்குகின்ற திசையில், காணும் பொருளை அந்நேரத்தில் நாம் சொல்லும் வார்த்தையுடன் பொருத்தி மனதில் இருத்திக் கொள்வார்கள்.

அதே வேளையில் நாம் வெளிப் படுத்தும் சந்தேகங்களையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

எடுத்துக்காட்டாக, ஏதோ ஒரு புத்தகத்தைக் குழந்தையுடன் சேர்ந்து படிக்கும் போது, அங்கு படத்தில் இருக்கும் ஒரு மிருகத்தைக் காட்டி அதன் பெயரென்ன என்று குழந்தை கேட்கும் போது நாம் ஒரு பெயரைச் சொல்லி ஆனால் அது சரியானதா தெரியவில்லை என்று ஒரு சந்தேகத்தையும் சேர்த்துக் கொண்டால், அந்தச் சொல்லை அந்த மிருகத்துடன் தொடர்புபடுத்தாமல் இலகுவாக மறந்து விடும்.

பிள்ளைகளின் மூளை வளர்ச்சி முதல் மூன்று ஆண்டுகள் வேகமாக இருக்கும்.

குழந்தைகளின் மூளை உயிரணுக்களின் வளர்ச்சி அவர்கள் வளரும் சூழலையும், அனுபவங்களையும் பொறுத்து இருக்கும். பெற்றோர்களாகிய நாம் அவர்களுக்கு நல்ல அனுபவங்களை வழங்க வேண்டும்.

SOURCE: INTERNET

suvanappiriyan said...

சகோ. ஹைதர் அலி!
//சரியான விளக்கத்தோடு வந்த அருமையான பதிவு தோழரே
வாழ்த்துக்கள்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

வீடு கட்டும் பணி முடிந்ததா? விடுமுறை முடிந்து எப்பொழுது வருகிறீர்கள்?

suvanappiriyan said...

நரேன்!

//நெற்றிக்கும் மூலைக்கும் என்ன சம்பந்தம் என்பதை விளக்கமாக சொல்லியிருக்கலாம்.//

நீங்கள் சொல்லும் மூலை வேறு நான் சொல்லும் மூளை வேறு.

மனிதனின் பெருமூளை நெற்றிப் பகுதியில்தானே அமைந்துள்ளது!

பொதுவாக மனிதர்கள் வழக்கில் பொய் கூறினால் வாயையோ அல்லது நாக்கையோ தான் சுட்டிக் காட்டி 'என்னமாதிரி பொய் பேசுறான் பார்?' என்று சொல்வோம். இன்றைய நவீன விஞ்ஞானம் ஒருவனின் குணத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணி பெரு மூளையின் முன்பாகமான 'ஃப்ரண்டல் லோப்' என்கின்றனர். இன்றைய நவீன யுகத்தில் கூட இதை எல்லாம் நம்பாதவர் இன்னும் பலர் இருக்கின்றனர். அன்றைய மக்களுக்கு மூளையில் உள்ள பெருமூளை பகுதியை நாம் பிடிப்போம் என்று சொன்னால் 1400 வருடத்துக்கு முன்பு உள்ள மக்களால் விளங்கியிருக்க முடியுமா? அடுத்து இது ஒரு அறிவியல் புத்தகம் அல்ல. உபதேசங்களை சொல்லிக் கொண்டே வழியிலேயே அறிவியல் கருத்துகளையும் தெளித்து விட்டுச் செல்வது குர்ஆனின் பாணி. அதுவும் எதற்காக என்றால் இது இறைவனிடமிருந்து வந்ததுதான் என்பதை நிரூபிப்பதற்காக இத்தகைய அத்தாட்சிகளை காண்பிக்கிறான் இறைவன்.

இது கண்டிப்பாக முகமது நபியின் வார்த்தைகளாக இருக்க முடியாது. அதுவும் 'பொய் கூறிய முன் நெற்றி' என்று இவ்வளவு துல்லியமாக எவ்வாறு கூற இயலும்?

//சகோ. இதில் பரிணாமம்....வரும் ஆனா வராது. என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை விளக்கியிருக்கலாம்.//
வடிவேலு ரசிகரோ! :-)

டார்வினின் பரிணாமக் கொள்கை என்ன சொல்கிறது? ஒரு செல் உயிரிலிருந்து நீந்துவன, நடப்பன வாகி குரங்கு வரை வந்து, அந்த குரங்கிலிருந்து பரிணாமம் பெற்றவன்தான் மனிதன் என்கின்றனர்.

ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதனின் மண்டை ஓட்டில் எந்த மாற்றமும் இல்லை. தற்போது மனிதனின் மண்டை ஓட்டிற்க்கும் இஸ்ரேலில் கிடைத்த மண்டை ஓட்டிற்கும் அளவில்தான வித்தியாசம் உள்ளதே தவிர உருவத்தில் எந்த மாற்றமும் அதாவது பரிணாமம் ஏற்படவில்லை. ஒரு உயிருக்கும் இதுவரை பரிணாமவியலார் பரிணாமம் அடைந்த இடைப்பட்ட இனத்தின் படிமங்களைக் காண்பிக்கவில்லை.

suvanappiriyan said...

சகோ. வாஞ்சூர் அண்ணன்!

//மூளையில் ஏதேனும் பாதிப்பு நேர்ந்தால், வெளியே தெரியாவண்ணம் மற்ற செல்களே அவற்றைச் சரிசெய்து கொள்கின்றன. ஆக பிரச்சினை என்பது நம்மால் வெளியிலிருந்து உள்ளே போனால் தான் உண்டு. //

அருமையான அறிவியல் பாடமே நடத்தி விட்டீர்கள்.

இவ்வளவு துல்லியமான இத்தனை நரம்பு மண்டலங்களையும் அமைத்து ஒவ்வொன்றிற்கும் ஒரு கட்டளையைக் கொடுத்து அவை அனைத்தும் எவ்வித சிக்கலும் இன்றி எப்படி செயல்படுகிறது? படைத்தவன் ஒருவன் இல்லாமல் இது எப்படி சாத்தியம் என்பது ஏன் பலருக்கும் விளங்குவதில்லை. ஆச்சரியம்தான்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,,,
சகோ.சுவனப்பிரியன்,

உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் அற்புதமே. அவை சேரும் போது ஒவ்வொரு திசுவும் அற்புதமே. அவை சேரும்போது ஒவ்வொரு மண்டலங்களும் அதிசயமே. உயிர் என்ற ஒன்றினைக்கொண்டு அவை எல்லாம் செயல்படுவதும் அற்புதமே. இவை அனைத்தையும் படைத்த இறைவனின் படைப்பாற்றல் ஈடிணையற்ற மகத்தான விஷயம்.

இது, சிந்தனையைத்தூண்டும் மிக்க நல்லதொரு ஆக்கம். இதில் சிந்திப்போருக்கு சான்றுகள் பல உள்ளன.

சகோ.வாஞ்சூர் அவர்களின் தொடர்ச்சியான பின்னூட்டங்களும் நிறைய விஷயங்கள் சொல்கின்றன. ஒரு மணிநேரம் என் குழந்தைகளுடன் விளையாடிவிட்டு வந்து இப்பின்னூட்டம் போடுகிறேன். :)

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ ஆஷிக்!
//நாம் எவ்வளவுக்கு குழந்தையுடன் கொஞ்சி,விளையாடுகிறோமோ அந்த அளவுக்கு நல்ல மன வளர்ச்சி இருக்கும்.//

வாங்சூர் பாய் அவர்களின் பின்னூட்டத்தின் படி குழந்தையுடன் விளையாடியிருக்கிறீர்கள். தினமும் தொடருங்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

VANJOOR said...

சந்திரனை சுட்டு விரலால் சுட்டிக்காட்டி பார்
என அழைப்பவனை

அழைக்கப்பட்டவன்
"டேய் , உன் விரலில் சுண்ணாம்பு ஒட்டிக் கொண்டிருக்கிறது என்றானாம்.

இவன் சுட்டுவது சந்திரனை

அவனுடைய நோக்கம் / சிந்தனை எல்லாம்

மூளையை மூலையில் வைத்துவிட்டு
சுட்டுபவன் விரலில் என்ன குறை காணலாம் என்பதே..

இது நிரந்தரமல்ல. அவனும் திருந்தி ஒருநாள் மனச்சாட்சியுடன் மற்றவர்களுக்கு சுட்டிக் காட்டும் நாட்களும் வராமல் இருக்காது.

-------------------------
பூமிக்கு மேல் மைல் கணக்கில் தூரத்தில் பறக்கும் பருந்து
பூமியில் கிடக்கும் சிறிய வஸ்துகளை அது கண்டுபிடித்து விடுகிறது.

நம்முடைய கண் பருந்தின் கண்களைவிட பெரிது
நம் கண் உருவத்தில் பெரிதே தவிர,
பறவைக்குள்ள கண்ணின் சக்தியைவிட அதிகம் சக்தி கொண்டதில்லை.

மனிதன் (?) கரும்பை உற்பத்தி செய்கிறான். ஆனால் யானைக்குக் கரும்பைத் தின்பதற்குத் தான் தெரியும். கரும்பை பயிர் செய்ய யானைக்குத் தெரியாது.

எவ்வளவு அழகான கருத்து என்பதை நன்றாக நினைத்துப் பாருங்கள்.

மாட்டுக்கு காலை கெடுத்து
மாடுகளுக்கு விரைந்தோடும் குதிரையின் கால்கள் அமைந்திருந்தால்?

குதிரைக்கு கொம்பை கெடுத்து
விரைந்தோடும் குதிரைகளுக்கு மாடுகளின் கொம்புகளிருந்தால்

புரிந்திருக்குமே.
.

VANJOOR said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பால் பிஸ்கட் மட்டும் போதாது.

குழந்தைகளைக் கொஞ்சுவதில் சிலர் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை.

குழந்தைகளுக்கு பால், பிஸ்கட் போன்ற உணவுகளைக் கொடுத்து விட்டால் கடமை முடிந்தது என்று நினைத்துக் கொள்வார்கள்.

குழந்தைகளை கொஞ்சுபவரிடத்தில் தான் இரக்கமும், கருனையும் பிறக்கும்.

ஒரு மனிதரிடத்தில் கருனையின் முதல் ஊற்றுக் கண் பிறப்பது தனது குழந்தையிடம் காட்டப்படும் பரிவும், பாசத்திலிருந்தும் தான்.

மனிதன் தனது வாழ்நாளில் தனது அன்பையும், பாசத்தையும் முதன் முதலில் பொழியத் தொடங்குவது தனது குழந்தையின் மூலம் என்பதால் அதையும் தடைசெய்து கொண்டால் அல்லாஹ் அவருடைய இதயத்திலிருந்து அன்பையும், பாசத்தையும் அகற்றிடவே செய்திடுவான்.

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லை'' என்றார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அல்லாஹ் உம்முடைய இதயத்திலிருந்து அன்பைக் அகற்றிவிட்ட பின்னர் உமக்காக நான் என்ன செய்ய முடியும்? என்று கேட்டார்கள். உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார்கள். நூல்: புகாரி 5999.

நபி (ஸல்) அவர்கள் (தம் குழந்தை) இப்ராஹீமைத் தூக்கி (உச்சி) முகர்ந்து முத்தமிட்டார்கள். இதை அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து ஸாபித் இப்னு அஸ்லம் (ரஹ்) அறிவித்தார்கள், அவர்களிடமிருந்து அப்துர் ரஹ்மான் இப்னு அபீ நுஅம் (ரஹ்) அறிவித்தார்கள் நூல் புகாரி: 5994

குழந்தைகளை முத்தமிட்டு அவர்களின் மீது அன்பு செலுத்துவது அவர்களுக்கு இடர் ஏற்படாமல் பாதுகாப்பது போன்றப் பண்புகளை மனிதர்களின் உள்ளத்தில் மட்டும் அல்லாஹ் ஏற்படுத்த வில்லை மாறாக அனைத்து உயிரினங்களுடைய உள்ளத்திலும் ஏற்படுத்தினான்.

எந்த நேரமும் காலால் தரையை மிதித்துக் கொண்டிருக்கக் கூடியக் குதிரை தனது குட்டி குதித்துக் கொண்டு காலுக்கடியில் வந்துவிட்டால் அது தனது காலில் மிதிபட்டு விடக் கூடாது என்பதற்காக அது அங்கிருந்து நகரும் வரை காலை உயர்த்திக் கொண்டே இருக்கும்.

அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம் வைத்துக்கொண்டான். (மீதமிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம் காட்டுகின்றன.

எந்த அளவிற்கென்றால், மிதித்து விடுவோமோ என்ற அச்சத்தினால் குதிரை தன்னுடைய குட்டியை விட்டுக் கால் குளம்பைத் தூக்கிக் கொள்கிறது. '' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் '' என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். நூல் புகாரி : 6000.

குழந்தையை கொஞ்சுபவர்களில் பலர் குழந்தையைப் படைத்த இறைவன் இக்குழந்தைக்கான வாழ்வாதாரம் இவ்வளவுதான் என்று எழுதி இருப்பதை மறந்து விட்டு ஊராளும் ராசாவே, உலகாளும் ராசாவே என்றெல்லாம் ஏராளமான கற்பனைகளுடன் கொஞ்சி விட்டு அத்துடன் நிறுத்தி விடுவதைப் பார்க்கிறோம்.

அவ்வாறல்லாமல் அவர்களை அன்புடன் அரவனைத்து முத்தமிட்டுக் கொஞ்சுவதுடன் இது போன்ற அன்பை இறைவன் அவர்கள் மீது பொழிய வேண்டும் என்றுக் கூறி பிரார்த்திக்க வேண்டும்

நம்முடையக் குழந்தைகள் மீது நாம் செலுத்தும் அன்பை விட இறைவன் செலுத்தும் அன்பு பல மடங்கு அவர்களின் உலக மற்றும் மறுமை வாழ்வுக்காக பயனளிக்கும்.

அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

Rabbani said...

அஸ்ஸலாமு அலைக்கும்

சகோதரரே உங்களது பதிவிலும் வாசகர்களின் பின்னுட்டத்திலும் ஏராளமான பயனுள்ள செய்திகள் அறியமுடிந்தது. தொடரட்டும் உங்களது பணி

Unknown said...

//இத்தனை வருடம் பழமையான மண்டை ஓடுகள் கிடைத்தும் தற்போதுள்ள மனிதனின் அமைப்பில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. உயரமாக இருந்த மனிதன் புறத் தோற்றத்தில் ஆறடி ஐந்தடியாக குறைவாக்கப்பட்டிருக்கிறான். இதுவும் அவன் வாழ்ந்த சூழலினால் ஏற்பட்ட மாற்றம். இந்த இடத்திலும் வழக்கம்போல் நம் டார்வின் மாமாவின் பரிணாமம் தோற்றுப் போகிறது//

நீங்கள் குறிப்பிடுவது போல மனிதன் mutation காரணமாக உயரம் குறைந்தவனாக ஆகிறான்.

பரிணாமம் சரி என்கிற பட்சத்தில் மனிதன் அதிக உயரமானவனாக அல்லவா ஆகா வேண்டும்.இதுவும் பரிணாமம் பொய் என்பதற்கான ஒரு சான்றே.

suvanappiriyan said...

சகோ. கார்பன் கூட்டாளி!

//பரிணாமம் சரி என்கிற பட்சத்தில் மனிதன் அதிக உயரமானவனாக அல்லவா ஆகா வேண்டும்.இதுவும் பரிணாமம் பொய் என்பதற்கான ஒரு சான்றே.//

ஆஹா... உங்களின் வாதமும் சரியாகவே படுகிறது. ஆனாலும் கடவுளை மறுக்க வேண்டும் என்பதற்காக டார்வினிஷ்டுகள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

மற்றபடி உங்களின் பரிணாமம் சம்பந்தமான பல பதிவுகளை சமீபத்தில்தான் படித்தேன். பல அருமையான வாதங்களை வைத்திருக்கிறீர்கள். தொடருங்கள்.

suvanappiriyan said...

அலைக்கும் சலாம் சகோ. பேட்!

//சகோதரரே உங்களது பதிவிலும் வாசகர்களின் பின்னுட்டத்திலும் ஏராளமான பயனுள்ள செய்திகள் அறியமுடிந்தது. தொடரட்டும் உங்களது பணி //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

பல பின்னூட்டங்களை தொடர்ந்து வழங்கி வரும் வாஞ்சூர் அண்ணனுக்கும் நன்றிகள் பல.

suvanappiriyan said...

//இந்த சுவனபிரியன் போன்ற ஆடு நனையும் என்று கவலை படுவர்கள் கருத்தை இங்கு வெளியிடுவது நியாயமா? ஜனநாயகம் என்று சொல்லாதீர்கள். நாத்திகம் பேசும் கைகூலிகளாவது லாபம் இல்லாதபோது காளஹஸ்தி போய்விடுவார்கள். ஆனால் இது போன்ற அந்நியர்களின் கருத்து இங்கு தேவையில்லை என்பது எனது கருத்து.//

அந்நியர் என்று யார் யாரைப் பார்த்து சொல்வது என்ற விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது. எகிப்திலிருந்து ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு கைபர் கணவாய் வழியாக எனது நாடான இந்தியாவுக்குள் புகுந்து கூடாரம் அடித்து தங்கி விட்ட கூட்டம் முஸ்லிம்களைப் பார்த்து வந்தேறிகள் என்பதா!

ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதை தெரியுமா ராஜரத்னம்?

suvanappiriyan said...

தமிழன்!

//தயவு செய்து நான் சாதி இருக்கவேண்டும் என்று கூறுவதற்கு சப்பைக்கட்டுவதாக நினைக்கவேண்டாம். எனது கருத்து என்னவென்றால் ,இது இந்து மதத்தினால் வந்தது அல்ல.//

தமிழன் என்ற பொய்ப் பெயரில் வர்ணாசிரமத்தை தூக்கிப் பிடிக்கும் ஆரியரே! தருமி ஐயா கேட்கும் கேள்விகளுக்கு நேரிடையான பதிலைச் சொல்லவும்.
----------------------------------------------------------------------
குஜால்!
//ஒவ்வொரு அரபிப் பெண்ணுக்கும் 5 லட்சம் ரியால் மஹர் தரவேண்டும் என்று யார் நிர்ணயித்தது?

சவூதி அரசாங்கமா இல்ல மத குருமார்களா இல்ல நீங்களா சும்மானாச்சிக்கும் அடிச்சுவுடுறீங்களா?//

பெரும்பான்மையான சவுதி வீடுகளில் திருமணம் முடிக்க ஐந்து லட்சம் ஒரு இலக்காக வைப்பார்கள். எனவே உதாரணத்திற்காகத்தான் அந்த தொகையை சொன்னேன்.

பரவாயில்லையே! ஓரளவு சட்டங்களை தெரிந்து வைத்திருக்கிறீர்களே!

4:4. நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.

2049. அனஸ்(ரலி) அறிவித்தார்.
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) மதீனாவுக்கு வந்தபோது, அவர்களையும் ஸஅத் இப்னு ரபீஉ(ரலி) அவர்களையும் நபி(ஸல்) அவர்கள் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸஅத்(ரலி) வசதி படைத்தவராக இருந்தார். அவர் அப்துர் ரஹ்மானிடம், 'என்னுடைய செல்வத்தைச் சரி பாதியாக உமக்குப் பிரித்துத் தருகிறேன். (என் மனைவியரில் ஒருத்தியை விவாகரத்து செய்து) உமக்கு மண முடித்துத் தருகிறேன்!' எனக் கூறினார். அதற்கு அப்துர் ரஹ்மான்(ரலி), 'உம்முடைய குடும்பத்திலும் செல்வத்திலும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக!' எனக்குக் கடை வீதியைக் காட்டுங்கள்! எனக் கூறினார். அவர் பாலாடைக் கட்டியையும் நெய்யையும் இலாபமாகப் பெற்று, அவர் தங்கியிருந்த வீட்டாரிடம் கொண்டு வந்தார். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் (மஞ்சள்) கறையுடன் வந்தார். அவரிடம் நபி(ஸல்) அவர்கள் 'என்ன விசேஷம்?' எனக் கேட்டார்கள். அதற்கவர், 'இறைத்தூதர் அவர்களே! நான் ஓர் அன்ஸாரிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டேன்!" என்றார். நபி(ஸல்) 'அவருக்கு என்ன மஹர் கொடுத்தீர்?' எனக் கேட்டார்கள். 'ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம்!" என அவர் பதில் கூறினார். அதற்கு 'ஓர் ஆட்டையேனும் மணவிருந்ததாக அளிப்பீராக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Volume :2 Book :34

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

//இந்த உண்மை கண்டறியப்பட்டது சுமார் எழுபது வருடங்களுக்கு முன்புதான். இந்த உண்மையைத் தான் குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்பே உண்மைப் படுத்துகிறது. எனவே தான் 'பொய் பேசிய அந்த முன் நெற்றியை நாம் பிடிப்போம்' என்று இறைவன் கூறுகிறான். இந்த குர்ஆன் நம்மைப் படைத்த இறைவனின் வார்த்தைகள் தான் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக் காட்டு//

சுப்ஹானல்லாஹ்!(அல்லாஹ் மிகவும் தூய்மையானவன்). அல்குர்ஆன் இறைவேதம் என்பது பலவிதங்களில் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. அதை அறிந்தும் அறியாததுபோல் நடிப்பவர்களுக்கும், உண்மையிலேயே அறியாதவர்களுக்கும் இறைவன் நேரான வழியைக் காட்டுவானாக!

அருமையான ஆய்வுகளுடன் கூடிய அழகிய தொகுப்பு! பகிர்வுக்கு நன்றி சகோ.

suvanappiriyan said...

சகோ. அஸ்மா!

//சுப்ஹானல்லாஹ்!(அல்லாஹ் மிகவும் தூய்மையானவன்). அல்குர்ஆன் இறைவேதம் என்பது பலவிதங்களில் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. அதை அறிந்தும் அறியாததுபோல் நடிப்பவர்களுக்கும், உண்மையிலேயே அறியாதவர்களுக்கும் இறைவன் நேரான வழியைக் காட்டுவானாக!

அருமையான ஆய்வுகளுடன் கூடிய அழகிய தொகுப்பு! பகிர்வுக்கு நன்றி சகோ.//

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!