Followers

Sunday, July 17, 2011

விமானப் பயணத்தின் சில நினைவுகள்!



விமானப் பயணத்தின் சில நினைவுகள்!

பயணங்களிலேயே கொஞ்சம் காஸ்ட்லியான பயணம் விமானப் பயணமே! அதை விடக் காஸ்ட்லியாக சந்திர மண்டலத்துக்கு செல்ல இப்பொழுதே புக்கிங் நடந்து வருவதாகக் கேள்விப் பட்டேன். நான் பயணித்ததில் அதிகம் சவுதி அரேபியன் ஏர்லைன்ஸில்தான். டிக்கெட் புல்லாகி விட்டால் அவ்வப்போது ஏர் இந்தியா, ஏர் லங்கா பிளைட்களை நோக்கி ஓடுவதும் உண்டு.

இதில் சவுதியாவில் பயணிக்கும் போது ஒரு நிம்மதி ஏற்படும். விமானம் கிளம்பும் போதே பயண பிரார்த்தனை ஒன்றை ஒவ்வொரு முறையும் ஓதச் செய்வார்கள். விமானப் பயணத்திலும் இஸ்லாத்தைக் கடைபிடிக்கும் சவுதியா நிர்வாகத்தினருக்கு ஒரு சல்யூட்.

நபிகள் நாயகம் அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை “அல்லாஹு அக்ப(B)ர் - அல்லாஹு அக்ப(B)ர் - அல்லாஹு அக்ப(B)ர்” எனக் கூறுவார்கள். பின்னர் ஸுப்(B)ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா ரப்பி(B)னா லமுன்கபூன். அல்லாஹும்ம இன்னா நஸ்அலு(க்)க பீ(F) ஸப(F)ரினா ஹாதா அல்பி(B)ர்ர வத்தக்வா வமினல் அம மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸப(F)ரனா ஹாதா வத்வி அன்னா பு(B)ஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு(B) பி(F)ஸ்ஸப(F)ரி வல் கலீப(F)(த்)து பி(F)ல் அஹ்லீ அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸப(F)ரி வகாப (B)தில் மன்ளரி வஸுயில் முன்கலபி(B) பி(F)ல் மா வல் அஹ்லீ எனக் கூறுவார்கள்.

இதன் பொருள்: அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் - 2392

சவுதியாவில் பிரயாணம் செய்யவே அதிகமான பயணிகள் விரும்புகின்றனர். நேரம் தவறாமை. வேலை நிறுத்த போராட்டம் இல்லாத ஒரு ஒழுங்கு. சிறந்த பணிவிடை. தூய்மை என்று பல காரணங்களால் சவுதியாவுக்கு என்றுமே கிராக்கிதான். 2009 வருடத்தை காட்டிலும் போன வருடம் பயணிகள் அதிகம் சவுதியாவை பயன்படுத்தியிருக்கிறார்கள். 14 சதவீதம் போன வருடத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

8712668 பயணிகளை 68753 விமானங்களில் முந்திய வருடம் பயணிக்க வைத்தது சவுதியா. அதே போன வருடம் 9915578 பயணிகளை 73544 விமானங்களில் பயணிக்க வைத்து சாதனை புரிந்துள்ளது சவுதியா. பயணிகளின் எண்ணிக்கை 14 சதவீதம் அதிகரிக்க விமானங்களின் எண்ணிக்கையோ 7 சதம்தான் அதிகரித்துள்ளது. லாபத்தில் கொழிக்கிறது சவுதிஅரேபியன் ஏர்லைன்ஸ்.

இது இவ்வாறு இருக்க நமது நாட்டு ஏர்இந்தியாவின் நிலையையும் சற்று பார்ப்போம். அளவுக்கதிகமான சம்பளம், தேவையற்ற வேலை நிறுத்தம், வேலை செய்பவர்களிடம் அர்ப்பணிப்புத் தன்மை இல்லாதது என்று பல காரணங்களால் இன்று ஏர்இந்தியா மிகவும் அபாயகரமான சூழலுக்கு சென்று கொண்டிருக்கிறது. 'எனது தாய் நாட்டு விமானம்' என்று பெருமையோடு பயணம் செய்ய மனம் விரும்புகிறது. ஆனால் ஏர் இந்தியாவின் சேவைகளில் உள்ள குளறுபடிகளால் பலரும் சவுதியாவையும், ஏர்லங்காவையும்தான் நாடுகிறார்கள். தற்போதய ஏர் இந்தியாவின் நிலையை நேற்றய தினமலரின் செய்தியை பார்ப்போம்.
புதுடில்லி : ஏர் இந்தியா நிறுவனம், 67 ஆயிரம் கோடி ரூபாய் நிதி இழப்பு மற்றும் கடன் சுமையால் தத்தளிக்கிறது. ஏர் இந்தியா நிறுவனத்துக்கு, 2007ம் ஆண்டிலிருந்து கடந்த மார்ச் மாதம் வரையிலான கால கட்டத்தில், 20 ஆயிரத்து 320 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்நிறுவனம், 67 ஆயிரம் கோடி ரூபாய் நிதியிழப்பு மற்றும் கடன் சுமையால் திண்டாடிக் கொண்டிருக்கிறது. நடப்பு நிதியாண்டுக்குள் இந்நிறுவனம், 20 ஆயிரத்து 415 கோடி ரூபாய் கடனை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை இந்நிறுவனம் சந்திக்க நேரிடும் என, ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலைச் சமாளிக்க, பங்குகள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் 1,200 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்டி உதவ, மத்திய அமைச்சரவை திட்டமிட்டுள்ளது. இதற்காக, மத்திய அமைச்சர்களின் உயர்மட்டக்குழு இன்று கூடி ஆலோசனை நடத்த உள்ளது.
-தின மலர் 16-07-2011

அரபு நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் நமது நாட்டு மக்களே அதிகம் பணியில் உள்ளனர். தாய் நாட்டுக்கு வருடம் ஒரு முறையும் இரண்டு வருடத்திற்கு ஒருமுறையும் போய் வரும் நம் நாட்டவர் அதிகம். நம் நாட்டவர்கள் மட்டுமே ஏர் இந்தியாவை பயன்படுத்த ஆரம்பித்தால் இந்நிறுவனத்தை லாப நோக்கில் செயல்பட வைத்து விடலாம். அல்லது நஷ்டத்தில் இயங்கும் இந்நிறுவனத்தை தனியாருக்கு கொடுத்து விடலாம். ஆறே மாதத்தில் தனியாரிடம் கொடுத்தால் லாபமுள்ள தொழிலாக இதனை மாற்றிக் காட்டுவர்.

ஏர்லைன்ஸில் பணிபுரியும் எனது நண்பர் பிரான்ஸிஸிடம் இது பற்றி பேசினேன். 'தேவையற்ற ஆட்கள். அளவுக்கதிமான சம்பளம், நிர்வாகக் குறைபாடு இவைகளே ஏர் இந்தியா நஷ்டத்தில் இயங்க காரணம்' என்கிறார். அரசு பேசாமல் தனியாரிடம் ஏர் இந்தியாவை விற்று விடுவதே நலம் என்கிறார்.

சவுதியா அதிகம் லாபம் சம்பாதிக்கும் வழித்தடங்களில் ஒன்று ரியாத்-தம்மாம்-சென்னை. எந்த நேரமும் இந்த வழித்தடத்தில் டிக்கெட் கிடைப்பது அரிதாகவே இருக்கும். எல்லாமே அட்வான்ஸ் புக்கிங். கர்நாடக, கேரள மாநிலத்தவர் அதிகம் பேர் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்கின்றார்கள். நமது ஏர் இந்தியா ஏன் இந்த வழித் தடங்களில் விமான சேவைகளை நடத்துவதில்லை? சவுதியாவை பார்த்தாவது பாடம் படித்துக் கொள்ள வேண்டாமா?

மன்மோகன் சிங்குக்கு சோனியாவை தாஜா பண்ணவே நேரம் சரியாக இருக்கிறது. நரேந்திர மோடிக்கு முஸ்லிம்களை எப்படி வம்புக்கிழுத்து ஒரு கலவரத்தை உண்டு பண்ணி இந்து ஓட்டுக்களை தக்க வைப்பது என்ற குறி. ராமருக்கு கோவில் அதுவும் ஒரு பள்ளி இருந்த இடத்தை அபகரித்து கட்டிவிட்டால் இந்தியா முன்னேறி விடும் என்பது அத்வானியின் எண்ணவோட்டம். நிலைமை இப்படி இருக்க... இந்த அரசியல் வாதிகளுக்கு நாட்டைப் பற்றிய கவலை வருமா என்ன?

18 comments:

Rabbani said...

அஸ்ஸலாமு அலைக்கும்
Oman Airways யிலும் பயணம் போகும்போது சொல்லும் துஆ வை சொல்வார்கள் ஆனால் saudia அளவிற்கு நிறுத்தி நிதானமாக சொல்ல மாட்டார்கள் ஏதோ கடமைக்கு சொல்வார்கள் மேலும் air india நிறுவனத்தை தனியாருக்கு விற்றால் நல்ல லாபம் வரும் ஆனால் அதன் பணியாளர்கள் உடன்பட மறுப்பார்கள் அதற்கு சில அரசியல் கட்சிகள் வரிந்து கட்டி ஆதரவு தருவார்கள் குறிப்பாக இந்த கம்யூனிஸ்ட் பார்ட்டிகள் ...........
ஆகையால் அந்நிறுவனம் அப்படிதான் இருக்கும்

ஷர்புதீன் said...
This comment has been removed by the author.
RAZIN ABDUL RAHMAN said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ...
அருமையான வீடியோ பதிவு,நானும் எப்போ போனாலும் ஒரு வீடியோ எடுத்துவிடுவேன்,

சவுதி ஏர்லைன்ஸ்,இந்தியன் ஏர்லைன்ஸ் பற்றி எழுதியது நல்லா இருக்கு...

நானும் எப்பவுமே இந்தியன் ஏர்லைன்ஸ்’ஐ பிரிஃபர் பண்ரது இல்லை சகோ தாங்கள் சொன்ன காரணங்கள் தான்...என்ன செய்ய...நம்நாட்டு விமானத்தில் பயணிக்க ஆசைதான்..பட்???

பயண துஆ முழுவதும் எழுதியுள்ளீர்கள்.. //லமுன்கபூன்//
லமுன்கலிபூன் என வருமே சகோ...

அன்புடன்
ரஜின்

suvanappiriyan said...

17 பதிவுகளை சோர்வடையாது எழுதியும் ஒரு இஸ்லாமியரும் நாத்திகத்தின் பக்கம் வரவில்லையே! மாறாக பெரியார்தாசன் போன்ற கடைந்தெடுத்த நாத்திகர்களெல்லாம் இஸ்லாத்தில் ஐக்கியமாகிறார்களே என்று தருமி ஐயாவுக்கு இருப்பு கொள்ளாமல் மேலும் மேலும் பதிவுகளாக எழுதித் தள்ளுகிறார். பரிதாபம்தான் பட முடியும்.

நீங்கள் பெண்கள் சம்பந்தமாக இட்டுக்கட்டப்பட்ட ஹதீதுகளைத்தான் காட்ட முடியும். ஏனெனில் அவை எல்லாம் யூதர்களால் பரப்பப்பட்டவை. அறிவிப்பாளர் வரிசையை நீங்கள் பார்த்தாலே அதில் எத்தனை பொய்யர்கள் வருகிறார்கள் என்பதை சுலபமாக கண்டுபிடித்து விடலாம். குர்ஆனுக்கு மாற்றமாக வரும் அனைத்து நபிமொழிகளும் இட்டுக்கட்டப் பட்டவையே! ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பே இவற்றை எல்லாம் இஸ்லாமிய வட்டத்திலிருந்து ஒதுக்கி விட்டோம். அதை தேடிப்பிடிக்கு பதிவிடுவதால் எந்த பலனும் விளையப் போவதில்லை தருமி. சாரி..... வேறு ஏதாவது முயற்சி பண்ணவும்.

ரொம்பவும் போரடித்தால் புவியீர்ப்பு விசைக்கு எதிராக நித்தியானந்தா குரூப்புகள் ஆடும் ஆட்டத்தை சன் டிவியில் பார்த்து மகிழவும். :-)

3:51 --- உம்முடைய மனைவியரில் உம்முடைய விருப்பப்படி சிலரை உம்மைவிட்டுத் தனிமைப்படுத்தி வைப்பதற்கும், நீர் விரும்புகின்றபடி வேறு சிலரை உம்முடன் வைத்துக் கொள்வதற்கும், நீர் தனிமைப்படுத்தி வைத்தவர்களில் எவரையாவது நீர் ழைத்துக் கொள்வதற்கும் அனுமதி இருக்கிறது. இந்த விவகாரத்தில் உம் மீது எத்தகைய தவறுமில்லை.

இது தருமி பதிவில் குர்ஆனில் உள்ளதாக பொய்யுரைத்து எழுதியது.

குர்ஆனின் உண்மையான வசனம்:

3:51- 'அல்லாஹ்வே எனது இறைவனும், உங்கள் இறைவனுமாவான். எனவே அவனையே வணங்குங்கள்! இதுவே நேரான வழியாகும்.'

குர்ஆன் இவ்வளவு அழகாக கூறியிருக்க பொய்களை பரப்புவது வாத்தியாருக்கு அழகாகுமா!

மேலும் இந்த பதிவில் தருமி ஐயா கேட்ட கேள்விகளுக்கு அனைத்திற்கும் பழைய பதிவுகளிலேயே பதில்கள் கொடுத்தாகி விட்டதால் சார்வாகனின் புதுக் கேள்விக்கு வருவோம்.

//இன்னும் நிறைய இருக்கிறது.இந்த தற்காலிகத் திருமனம் பற்றி மட்டும் விளக்கம் எதிர்பார்க்கிறேன்.
நன்றி//

முத்ஆ என்ற தற்காலிக திருமணம் குர்ஆன் சொன்ன சட்டம் கிடையாது. முகமது நபி கொண்டு வந்த சட்டமும் கிடையாது. குர்ஆன் இறங்குவதற்கு முன்பே இத்தகைய சட்டம் அமுலில் அரபுலகம் முழுக்க இருந்தது. நாடோடிகளாக கூட்டமாக செல்லும் அரபிகள் சில இடங்களில் கூடாரம் அடித்து தங்கும் போது சில நாட்களுக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் திருமணம் செய்து கொள்வார்கள். அதே போல் போருக்காக செல்லும் பலரும் ஆறு மாதம் வரை கூட வீட்டிற்கு திரும்ப மாட்டார்கள். இத்தகைய சூழலில்தான் தற்காலிக திருமணம் நடைமுறைப்படுத்தப்பட்டது. மதுவையும் இஸ்லாம் உடனே தடை செய்யவில்லை. படிப்படியாகத்தான் தடை செய்தது. அது போல் இஸ்லாமிய அரசு ஸ்திரத் தன்மையை அடைந்தவுடன் கைபர் போரில் முகமது நபி தற்காலிகத் திருமணத்துக்கு தடை விதிக்கிறார்.

புஹாரி- 889. கைபர் போரின்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘முத்அத்துன்னிஸா.”.. (கால வரம்பிட்டுச் செய்யப்படும் திருமணம்) செய்ய வேண்டாம் என்றும், நாட்டுக் கழுதைகளை உண்ண வேண்டாம் என்றும் தடை விதித்தார்கள்.
ஆனால் ஷியாக்களில் ஒரு பிரிவினர் இந்த செயலை இன்றும் செய்து வருகின்றனர். ஷியாக்கள் செய்வதெல்லாம் இஸ்லாமாகாது.

suvanappiriyan said...

24:26. கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும்: நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் (தகுதியானவர்கள்.) அவர்கள் கூறுவதை விட்டும் இவர்களே தூய்மையானவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவுமுண்டு.

60:12. நபியே! முஃமினான பெண்கள் உங்களிடம் வந்து; அல்லாஹ்வுக்கு எப்பொருளையும் இணைவைப்பதில்லையென்றும்; திருடுவதில்லை என்றும்; விபச்சாரம் செய்வதில்லை என்றும், தங்கள் பிள்ளைகளை கொல்வதில்லை என்றும், தங்கள் கைகளுக்கும், தங்கள் கால்களுக்கும் இடையில் எதனை அவர்கள் கற்பனை செய்கிறார்களோ, அத்தகைய அவதூறை இட்டுக்கட்டிக் கொண்டு வருவதில்லை என்றும், மேலும் நன்மையான (காரியத்)தில் உமக்கு மாறு செய்வதில்லையென்றும் அவர்கள் உம்மிடம் பைஅத்து - வாக்குறுதி செய்தால் அவர்களுடைய வாக்குறுதியை ஏற்றுக் கொள்வீராக; மேலும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுவீராக; நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.

'சிலரை மற்றும் சிலரை விட இறைவன் மேன்மைபடுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு.'
-குர்ஆன் 4:32

பெண்ணிலிருந்தே மனித உற்பத்தி!
உதாரணமாக மனித உற்பத்தியையே எடுத்துக் கொள்வோம். ஆண் அவனது விந்தை பெண்ணின் கர்ப்பப் பைக்குள் செலுத்துவ தோடு ஒரு சில நிமிடங்களில் அவனது வேலை முடிந்து விடுகிறது. ஆனால் பெண்ணோ அந்தக் கருவை 10 மாதங்கள் பல சிரமங்களுக்கிடையே சுமந்து பின் பெரும் வேதனைக்கிடையே பெற்றெடுக்கிறாள். அதோடு அவளது வேலை முடிந்து விடுவதில்லை. குறைந்தது 2 வருடங்களுக்கு அக்குழந்தைக்குப் பாலூட்டி வளர்க்கும் நிலையிலும் அவள் சிரமப்படுகிறாள். அதற்காகப் பல தியாகங்களைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள். ஆணுக்குப் பெண் சமம் என்று முழக்கமிடும் அறிவு ஜீவிகள், இது என்ன நியாயம்? பெறக்கூடிய குழந்தைகள் அத்தனையையும் பெண்கள் தான் பெற்றுத் தர வேண்டுமா? பிரசவ வேதனையைப் பெண்கள் மட்டுந்தான் அனுபவிக்க வேண்டுமா?ஒரு பிள்ளையைப் பெண் பெற்றெடுத்தால், அடுத்த பிள்ளையை ஆண் பெற்றெடுக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் பெண் பெற்றெடுத்தால், ஆண்கள் அக்குழந்தையைப் பாலூட்டி வளர்க்க வேண்டும் என்று முழக்க மிட வேண்டும். இவ்வாறெல்லாம் அவர்கள் முழக்கமிடுவது ஒரு பக்கம் இருக்கட்டும். அது பற்றி வாயே திறக்கமாட்டார்கள். காரணம் இது பற்றிய அவர்களது கையாலாகத்தனம் அவர்கள் அறிந்ததே. இங்கே மட்டும் இறை நியதிக்கு அவர்கள் அறியாமலேயே அடிபணிந்து போவார்கள். ஆம்! இறைவன் ஆணை ஒரு நிலையிலும், பெண்ணை ஒரு நிலையிலும் படைத்தது மட்டுமல்ல, பெண்ணை இயற்கையிலேயே பலவீனமானவளாகவும் படைத்துள்ளான். இந்த நிலையை மாற்றி அமைக்க மனித வர்க்கம் முழுமையாக ஒன்று சேர்ந்து கொண்டு பாடுபட்டாலும் ஆகப் போவது ஒன்றுமில்லை.

ஆண் -பெண் கற்பு :
பெண்ணின் பலகீனத்தை இன்னும் விரிவாகவே பார்ப்போம். கற்பு என்பது ஆணுக்கும் உண்டு பெண்ணுக்கும் உண்டு. இஸ்லாம் ஆணையும், பெண்ணையும் ஆக இரு சாராரையும் கற்பைக் காத்துக் கொள்ள கட்டளை இடுகிறது (24:31). ஆனால் இன்று நடை முறையில் கற்பு பற்றி பெண்ணினத்திற்கு மட்டுமே பேசப்படுகிறது. ஆணும், பெண்ணும் சமம் என்று முழக்கமிடும் அறிவு ஜீவிகளும் இங்கு வாயடைத்துப் போய் விடுவார்கள். ஒரு ஆண் தன் மனைவி அல்லாத ஆயிரம் பெண்களிடம் போனாலும் அவன் கற்பை இழந்தவனாக மேற்படி அறிவு ஜீவிகளால் கருதப்படாது. ஆனால் ஒரு பெண் தன் கணவனல்லாத ஒரு ஆணிடம் போனாலும் அவள் கற்பிழந்தவளாக கூக்குரலிடுவார்கள் இந்த அறிவுஜீவிகள். இதற்குக் காரணம் என்ன? இறைவன் படைத்த இயற்கை நிலைக்கு அவர்கள் அறியாமல் அடிமைப்பட்டு, அதன் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பே இது. ஆண் -பெண் கற்பு :
பெண்ணின் பலகீனத்தை இன்னும் விரிவாகவே பார்ப்போம். கற்பு என்பது ஆணுக்கும் உண்டு பெண்ணுக்கும் உண்டு. இஸ்லாம் ஆணையும், பெண்ணையும் ஆக இரு சாராரையும் கற்பைக் காத்துக் கொள்ள கட்டளை இடுகிறது (24:31). ஆனால் இன்று நடை முறையில் கற்பு பற்றி பெண்ணினத்திற்கு மட்டுமே பேசப்படுகிறது. ஆணும், பெண்ணும் சமம் என்று முழக்கமிடும் அறிவு ஜீவிகளும் இங்கு வாயடைத்துப் போய் விடுவார்கள். ஒரு ஆண் தன் மனைவி அல்லாத ஆயிரம் பெண்களிடம் போனாலும் அவன் கற்பை இழந்தவனாக மேற்படி அறிவு ஜீவிகளால் கருதப்படாது. ஆனால் ஒரு பெண் தன் கணவனல்லாத ஒரு ஆணிடம் போனாலும் அவள் கற்பிழந்தவளாக கூக்குரலிடுவார்கள் இந்த அறிவுஜீவிகள். இதற்குக் காரணம் என்ன? இறைவன் படைத்த இயற்கை நிலைக்கு அவர்கள் அறியாமல் அடிமைப்பட்டு, அதன் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பே இது.

suvanappiriyan said...

அலைக்கும் சலாம் சகோ பேட்!

//மேலும் air india நிறுவனத்தை தனியாருக்கு விற்றால் நல்ல லாபம் வரும் ஆனால் அதன் பணியாளர்கள் உடன்பட மறுப்பார்கள் அதற்கு சில அரசியல் கட்சிகள் வரிந்து கட்டி ஆதரவு தருவார்கள் குறிப்பாக இந்த கம்யூனிஸ்ட் பார்ட்டிகள் ...........
ஆகையால் அந்நிறுவனம் அப்படிதான் இருக்கும்//

எனன செய்வது! கம்யூனிஸ்டுகளால் விளைந்த தீமைகளில் இதுவும் ஒன்று. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

அலைக்கும் சலாம் சகோ ரெஜின்!

//பயண துஆ முழுவதும் எழுதியுள்ளீர்கள்.. //லமுன்கபூன்//
லமுன்கலிபூன் என வருமே சகோ...//

திருத்தியமைக்கு நன்றி சகோ..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

வருகைக்கும் ஸ்மைலிக்கும் நன்றி ஷர்புதீன்!

சல்மான்கான் பிடித்த ஹீரோவோ... :-(

ஷர்புதீன் said...
This comment has been removed by the author.
ஷர்புதீன் said...
This comment has been removed by the author.
suvanappiriyan said...

இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பொற்கிழி கவிஞர் மு. சண்முகம்.

சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாம் குறித்து கவிதைகள், கட்டுரைகள் எழுதியும், பேசியும் வருபவர். இஸ்லாமிய இலக்கிய மாநாடுகளில் தவறாமல் பங்கேற்று படைப்புகளை வழங்கி வருபவர்.

’வஹியாய் வந்த வசந்தம்’ என்ற நூலுக்கு சீதக்காதி அறக்கட்டளையின் ஷேக் சதக்கத்துல்லாஹ் அப்பா பரிசினைப் பெற்றவர். இந்நூல் 1990 ல் கீழக்கரையில் நடைபெற்ற ஐந்தாவது உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் வெளியிடப்பட்டு தற்பொழுது முதுவை காஹிலா பதிப்பகத்தால் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.

இளையான்குடியில் நடைபெற்ற இஸ்லாமிய நிகழ்வின் போது நேற்று 17.07.2011 ஞாயிற்றுக்கிழமை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் இறைவனுக்கே!)

தனது பெயரை ஹிதாயத்துல்லா என மாற்றிக் கொண்டார்.
இத்தகவலை சிங்கப்பூர் ஆடிட்டர் பெரோஸ்கான் 18.07.2011 திங்கட்கிழமை காலை அலைபேசியில் இளையான்குடியில் இருந்து தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

தகவல் இளைஞான்குடி யூசுப், பென்சில்வேனியா, அமெரிக்கா

http://onlyoneummah.blogspot.com/2011/07/blog-post_19.html

அடடா...தருமி சார் இத்தனை மெனக்கெட்டு பல பதிவுகள் போட்டும் இஸ்லாம் வளர்ந்த வண்ணமாக அல்லவா இருக்கிறது. உடனே திரு சண்முகத்தை தொடர்பு கொண்டு இஸ்லாத்தில் உள்ள தீமைகளை (சொர்க்கத்து கன்னிகளை) விளக்கி அவரை பழைய மதத்தில் தங்க வைக்க முயற்ச்சிக்கவும்! :-( இல்லை என்றால் இன்னும் இரண்டொரு நாளில் அவரது குடும்பமும் இஸ்லாத்தை தழுவிய செய்தி வரும். தருமி சார்.... தாமதம் வேண்டாம்.

suvanappiriyan said...

காஞ்சிபுரம் வரதாரஜப் பெருமாள் கோவில் மேலாளராக இருந்த சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பில், காஞ்சி மடாதிபதிகள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 24 பேரும் திங்கட்கிழமை(18.7.11) புதுவை நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இந்த வழக்கில் முதல் எதிரியாக குற்றாஞ்சாட்டப்பட்டுள்ள காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, விஜயேந்திர சரஸ்வதி, அவரது தம்பி ரகு மற்றும் காஞ்சி சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச ஐயர் ஆகியோரிடம் மட்டும் 550 கேள்விகள் கேட்கப்பட்டன என்று இந்த வழக்கின் தலைமை அரச வழக்கறிஞரான தேவதாஸ் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இந்த நால்வரும், இது பொய் வழக்கு, இதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவித்ததாகவும் அதை நீதிபதி வரையறுத்துக் கொண்டு வழக்கை செவ்வாய்க் கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

செவ்வாய்கிழமை இந்த வழக்கின் மீதான விசாரணையின் போது, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள எஞ்சியுள்ள மீதி 20 பேரிடம் வழக்கு தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டு அவர்களிடம் விளக்கம் கேட்கப்படும் எனவும் தேவதாஸ் கூறுகிறார்.

ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட நான்கு பேரிடம் விளக்கங்கள் கோருவது முடிந்து விட்டது என்றும், செவ்வாய்கிழமை அவர்கள் நீதிமன்றத்துக்கு வருவதிலிருந்து விலக்கு கோரினால் அதை தமது வழக்கறிஞர்கள் மூலம் மனு தாக்கல் செய்து கோரலாம் எனவும் கூறிய அரசின் தலைமை வழக்கறிஞர், மற்ற 20 பேரும் கட்டாயம் நீதிமன்றத்தில் ஆஜராகியே தீர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதன் பின்னர் அவர்கள் தரப்பு சாட்சிகள் இருந்தால் அவர்களிடம் விசாரணை நடைபெற்று, நீதிமன்றத்தில் வாதங்கள் இடம்பெறும் எனவும், அதனை அடுத்து நீதிபதி தீர்ப்புக்கான தேதியை அறிவிப்பார் எனவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.
-BBC

Anonymous said...

ஏர் இந்தியா விமானங்கள் புறப்படும்போது தேங்காய், பழம் படைத்து, ஆரத்தி காட்டிப் பூஜை போட்டு, பிரசாதம் கொடுத்துக் கிளப்பினா நல்லாத்தான் இருக்கும்.

உங்களுக்கு ஓக்கேவா?

Anonymous said...

//அடடா...தருமி சார் இத்தனை மெனக்கெட்டு பல பதிவுகள் போட்டும் இஸ்லாம் வளர்ந்த வண்ணமாக அல்லவா இருக்கிறது. உடனே திரு சண்முகத்தை தொடர்பு கொண்டு இஸ்லாத்தில் உள்ள தீமைகளை (சொர்க்கத்து கன்னிகளை) விளக்கி அவரை பழைய மதத்தில் தங்க வைக்க முயற்ச்சிக்கவும்!//

அட நீங்க வேற தப்பா புரிஞ்சுகிட்டீங்க. அவரு தருமி பதிவ படிச்சதுக்கப்புறந்தான் இஸ்லாத்தைத் தழுவினாராம்.

Anonymous said...

//அட நீங்க வேற தப்பா புரிஞ்சுகிட்டீங்க. அவரு தருமி பதிவ படிச்சதுக்கப்புறந்தான் இஸ்லாத்தைத் தழுவினாராம்.//

ஹா ஹா...

தருமி ஐயா ஒரு பகுத்தறிவாளர் அதான் பகுத்து பகுத்து தப்பு தப்பா எழுதுறாரு.

Madhu said...

இந்தியன் ஏர்லைன்ஸ் சேவை மிகவும் கேவலமானது. எப்படி வாடிக்கையாளர்களிடம் பேசுவது என்பது கூட தெரியாத ஊழியர்கள். தமிழர்கள் அதிகம் பயணிக்கும் நாடுகளின் சேவைகளில் ஹிந்தியில் அறிவிப்பு செய்வார்கள்.பாதுகாப்பும் ஐயத்திற்குரியது.
மற்றபடி , சவுதி விமானம் குர்ரான் வசனதுலையா பறக்குது.அதுவும் எரிபோருள்ளில் தான் பறக்குது.நிறைய நாடுகளின் விமான சேவை பாராட்டுக்குரியது.

G u l a m said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
தங்களின் பதிவை பெரும்பாலும் பார்வையிட்டாலும் பின்னூட்டம் இடும் தருணங்கள் மிகக்குறைவே... நான் விரும்பும் (மதிக்கும்) பதிவர்களில் நிச்சயம் நீங்களும் ஒருவர்., மாஷா அல்லாஹ் சூழ் நிலைக்கு தகுந்தார்ப்போல் எதார்த்ததோடு மார்க்கத்தை சொல்வதே உங்களின் தனிப்பட்ட சிறப்பு. இதைப்போன்ற ஆக்கங்கள் மேலும் பல உருவாக ஏகன் உங்களுக்கு அருள் புரிவானாக..!
இறை நாடினால் இனியும் சந்திப்போம்

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ.குலாம்!

//நான் விரும்பும் (மதிக்கும்) பதிவர்களில் நிச்சயம் நீங்களும் ஒருவர்.,//

நன்றி! எல்லாப் புகழும் இறைவனுக்கே!