Followers

Sunday, December 25, 2011

மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்!

'காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும் உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர'
-குர்ஆன் 103:1,2,3

காலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக இறைவன் 'காலத்தின் மீது சத்தியமாக' என்று இந்த வசனத்தை ஆரம்பிக்கிறான். அன்றைய அரபுகள் தவறான காரியங்களைச் செய்யக் கூட சத்தியம் இட்டு சொல்வார்கள். அவர்களின் இந்த தவறை சுட்டிக்காட்டும் முகமாகவும் இறைவன் 'காலத்தின் மீது சத்தியமாக!' என்று ஆரம்பிக்கிறான். தொழுகையும் நேரம் குறிக்கப்பட்டது. குறிப்பிட்ட அந்த நேரத்தில் தொழுகையை முடிக்க வேண்டும் என்பது நமக்கு இடப்பட்ட கட்டளை. ஒருவன் காலத்தை சரிவர உபயோகப்படுத்தினால் அவன்தான் வெற்றி பெறுகிறான் என்ற படிப்பினையும் இங்கு வருகிறது.

by suvanappiriyan

காலத்தின் முக்கியத்துவத்தை உலகின் பல நாடுகளும் சிறப்பித்தே கூறியுள்ளதை அதன் பழமொழிகளிலிருந்தே அறியலாம்.

“காலமும் கடலலையும் எவருக்காகவும் காத்திராது” என்பது காலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஆங்கில பழமொழி.

“ஓரங்குலத் தங்கம் கொடுத்தாலும் ஓரங்குலக் காலத்தை விலைக்கு வாங்க முடியாது” என்பது சீனப்பழமொழி.

“காலம் கண் போன்றது ! கடமை பொன் போன்றது” என்பது நம் தமிழகப் பழமொழி.

நமது வள்ளுவரும் காலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பல குறள்களை நமக்கு தந்துள்ளார்.

காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மானப் பெரிது

என்றும்

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின்.
காலமறிதல்: அதிகாரம் 48

வெற்றி வாகை சூடக் கருதும் அரசன் அதற்குச் சாதகமான காலத்திற்க்காக காத்திருந்து இடம் அறிந்து செயல்பட்டால் வெற்றி பெற முடியும். விழிப்புடன் செய்தால் கைகூடாதனவும் கைகூடும் என்பது கருத்து.

இனி மேலே கூறிய குர்ஆன் வசனம் இறங்கிய காரணத்தைப் பார்ப்போம்:

அபுபக்கர் அவர்களின் பழைய தோழரான கல்தா இப்னு உஸைத் என்பவர் ஒரு நாள் அபுபக்கரிடம் சற்று கிண்டலாக 'நண்பரே! முன்னர் உமது திறமையாலும் உழைப்பாலும் வாணிபத்தில் பெரும் பொருளீட்டி வந்தீர். தற்போது பொருளாதாரத்தில் மிகவும் சிரமப்படுகிறீர். முன்னோர்களின் தெய்வமான லாத், உஜ்ஜா போன்ற தெய்வங்களையும் தற்போது வணங்குவதை விட்டு விட்டீர். மூதாதையர் மார்க்கத்தை உதறி தள்ளி இஸ்லாத்தில் இணைந்து விட்டீர். இதனால் நமது தெய்வங்களின் அன்பையும், சொந்தங்களின் ஆதரவையும் இழந்து பெரும் நஷ்டத்தில் அல்லவா உள்ளீர்?' என்று கேட்டார்.

கல்தாவின் கிண்டலான சொற்களைக் கேட்ட அபுபக்கர் அவர்கள் 'சத்தியத்தை ஏற்று நற்செயலாற்றுவோர் ஒருபோதும் நஷ்டமடைய மாட்டார்' என சட்டென பதிலளித்தார்கள். இந்த உரையாடலின் பின்னணியை வைத்தே இந்த வசனம் அருளப்பட்டதாக பத்ஹூல் அஜீஸ் என்ற நபிமொழி விளக்கவுரை நூல் கூறுகிறது.

குர்ஆனின் மிகச்சிறிய அத்தியாயமான இந்த வசனங்கள் மனிதன் வெற்றிபெறும் இலக்கை துல்லியமாக காட்டுகிறது. ஏக இறை நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும் உண்மையை போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர மற்ற அனைவரும் நஷ்டவாளிகளே! என்பது இந்த வசனத்தின் சுருக்கமான விளக்கம்.

இரண்டு நபித்தோழர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போது 'அல் அஸர்' என்ற இந்த அத்தியாயத்தை ஒருவருக்கொருவர் ஞாபகப்படுத்திக் கொள்ளாமல பிரியமாட்டார்களாம். அந்த அளவு இந்த அத்தியாயத்தை நபித் தோழர்கள் விரும்பியிருக்கிறார்கள். அதனால்தான் இம்மையிலும் மறுமையிலும் வெற்றிப் பெற்றார்கள்.

ஏக இறை நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்து உண்மையை போதித்து பொறுமையையும் போதிக்கும் மக்களாக உங்களையும் என்னையும் இறைவன் ஆக்கி அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்தித்தவனாக இப்பதிவை முடிக்கிறேன்.

9 comments:

Jafar ali said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

ஜஸாகல்லாஹ் ஹைரன்!

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ ஜாபர்!

//அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

ஜஸாகல்லாஹ் ஹைரன்!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Unknown said...

masha allah audio clip super keep it up

suvanappiriyan said...

நிரூபன்!

//அல்லது தாம் தமிழர்களிலிருந்தும் பிரிந்த வேறோர் இனம் என்பதனைக் காட்டிக் கொள்ளவா//

என்னதான் ஒருவர் அடையாளங்களை மாற்றிக் கொண்டாலும் ஒருவரின் இனம் என்பது எக்காலத்திலும் அழியப் போவதில்லை. நான் ஆரியன் இல்லை என்றோ அல்லது நான் திராவிடன் இல்லை என்றோ துண்டைப் போட்டு தாண்டினாலும் இன அடையாளம் என்றுமே அழியப்போவதில்லை.:-)) அவனது மார்க்கம் இந்துத்வமாக இருந்தாலும், இஸ்லாமாக இருந்தாலும், கிறித்தவமாக இருந்தாலும் மொழி அடிப்படையில் தமிழன் இன அடிப்படையில் அவன் திராவிடன். இன்று வரை தமிழகத்தில் பல மார்க்கங்களைப் பின்பற்றினாலும் அனைத்து மக்களும் அண்ணன் தம்பிகளாக, மாமன் மச்சான் என்ற உறவுகளை சொல்லிக் கொண்டும் அன்பாக வாழ்ந்தே வருகின்றனர்.

பிரச்னை எங்கு வரும் என்றால் ஒரே இனம் ஒரே மொழி என்பதால் நான் இந்துக்களின் கலாசாரத்தை சுவீகரிப்பதும், இந்துக்கள் இஸ்லாமிய கலாசாரத்தை சுவீகரிப்பதும் நடக்கும் போதுதான். இங்கு நாம் ஒருவருக்கொருவர் ஏமாற்றிக் கொள்கிறோம். ஏக இறைவனை வணங்கும் நான் எனது இந்து நண்பனை மகிழ்விப்பதற்காக அவர் கூட கோவிலுக்கு சென்று முருகனையும் பிள்ளையாரையும் வணங்கினால் அந்த நண்பரையும் ஏமாற்றுகிறேன். இறைவனுக்கும் மாறு செய்கிறேன்.

இதை இஸ்லாம் கடுமையாக ஆட்சேபிக்கிறது. எந்த காலத்திலும் மார்க்க விடயங்களில் சமரசம் செய்து கொள்வதை இஸ்லாம் விரும்பவில்லை. அதே நேரம் சக தோழர்களை வெறுக்கவும் சொல்லவில்லை.

'மனிதரகளே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்.'
-குர்ஆன் 4:1

இந்த வசனத்தின் மூலம் நிரூபனும் நானும் சகோதரர்கள் ஆகிறோம். இவ்வாறு இருக்க எனக்கு மாறறு நம்பிக்கை உடையவர்மேல் வெறுப்பு எங்கிருந்து வரும்?

இலங்கையைப் பொருத்த வரை அங்கு இந்து தமிழனும், இஸ்லாமிய தமிழனும் பிரிந்து கிடக்கின்றனர். அதற்கு காரணம் விடுதலை புலிகள் முஸ்லிம்களை பகைத்துக் கொண்டதும் அவர்களின் சொத்துக்களை கொள்ளையடித்ததும், தொழுது கொண்டிருந்த முஸலிம்களை நூற்றுக் கணக்கில் கொன்று போட்டதும்.

எனவே இந்த பிரிவினையை அங்குள்ள அரசியல் சூழ்நிலையே தீர்மானிக்கிறது. இதறகு இஸ்லாத்தை குறை சொல்ல முடியாது.

அடுத்து குழுமமாக செயல்படுவது பற்றி.... ஒருவருக்கு ஆபாச தளங்களில் குழுமமாக இருக்க பிடிக்கும். ஒருவருக்கு அரசியல் சார்ந்து குழுமமாக செயல்பட பிடிக்கும். ஒரு சிலருக்கு மார்க்கம் சார்ந்து குழுமமாக இருப்பது பிடிக்கும். உங்கள் நாற்று தளத்திலும் சிலர் குழுமமாக இருந்து பதிவை படிக்கிறார்களோ இல்லையோ 'வடை, ரைட்டு, ஓட்டு போட்டுட்டேன்,....' என்று 50 , 60 பின்னூட்டங்கள் ஒவ்வொரு பதிவிலும் வருகிறது. இதை யாரும் குறை சொல்லுவதோ வித்தியாசமாக பார்ப்பதோ இல்லை. அது அவர்களின் ரசனை என்று சென்று விடுகிறோம். இது போல் இதனையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள ஏன் தயங்குகிறீர்கள்?

//தமிழர்கள் எனும் பொதுப் பெயரினுள் ஏனைய பதிவுலகச் சொந்தங்கள் போன்று இவர்களுக்கும் சக உறவுகளோடு பழக வேண்டும் என்று ஆசை இல்லையா? ஆவல் இல்லையா?//

கண்டிப்பாக இருக்கிறது. அது இஸ்லாத்தை பாதிக்காமலும் இருக்க வேண்டும்.

suvanappiriyan said...

//masha allah audio clip super keep it up//

வருகைக்கும் கருத்தக்கும் நன்றி சகோ ஆஷிக்!

suvanappiriyan said...

டாக்டர்(?) ஐடியா மணி!

//மச்சி, இவர்களை உலகம் நன்றாகவே ஒதுக்குகிறது என்று இவர்களுக்கு நன்கு தெரியும்! ஏனைய இனத்தவர்கள் யாருமே இவர்களை மதிப்பதும் இல்லை! அதுவும் இவர்களுக்கு நன்கு தெரியும்! உலக அரங்கில் இவர்களுக்கு மரியாதையே இல்லை!//

எப்படி.... உங்களை சூத்திரர்கள் என்று ஒதுக்கி கோவிலுக்கு உள்ளே அனுமதிக்காமல் இன்று வரை அன்னியப் படுத்தி வைத்திருக்கிறார்களே அது போலவா? இந்து மதத்துக்குள்ளேயே வைத்துக் கொண்டு சூத்திரர்களை மதிக்காமல் இருக்கிறார்களே அது போலவா? உங்கள் சொந்த மதத்தில் உங்களுக்கு என்ன மரியாதை என்பதை சொல்லி விட்டு பிறகு இஸ்லாத்துக்கு வரவும்.

//அதுபோலத்தான் சிலருக்கு பெற்றோலியம் இயற்கையாக வாய்த்திருக்கிறது! அதை வைத்துக்கொண்டு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுகிறார்கள்! அதனைப் பிடுங்கிக்கொண்டால், அவ்வளவுதான் அவர்களின் கதை முடிந்தது!

இதைத்தான் அமெரிக்கா செய்கிறது!//

ஹா..ஹா.. பெட்ரோல் தீர்ந்தாலும் குர்ஆனும் நபி மொழிகளும் இருக்கும் வரை இஸ்லாம் இன்னும் வீறு கொண்டு எழும். பெட்ரோல் பணம் இருந்தாலும் நிதானம் தவறாது இஸ்லாமிய வழியில் நடைபோடும் சவுதியை பார்த்து பாடம் படித்து கொள்ளவும். அதே பெட்ரோலை வைத்து ஆட்டம் போட்ட எகிப்திய அதிபர், டுனீஷிய அதிபர், லிபிய அதிபர், ஈராக் அதிபர் போன்றோரின் கடைசி காலங்களை நான் சொல்ல வேண்டியதில்லை. உலகம் அறியும்.

மேலும் நீங்கள குறிப்பிடும் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு இஸ்லாமிய பெயரை சொல்லி அரசியல் நடத்த வேண்டும். அது தான் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அந்நாட்டு மக்கள் இஸ்லாத்தை சரியாகவே புரிந்து கொண்டுள்ளனர். எனவே தான் மற்ற எந்த நாடுகளை விடவும் இஸ்லாத்தை ஏற்போர் எண்ணிக்கை இந்த நாடுகளில் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது.

இன்னும் 10 ஆண்டுகளில் இந்த மூன்று நாடுகளிலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகி விடுவர். அப்போது அங்கு இஸ்லாமிய சட்டங்களும் அமுல்படுத்த வேண்டி வரும். அப்பொழுது விபசாரவிடுதிகள், மது பார்கள், டிஸ்கொதே, சூதாட்ட விடுதிகள் போன்றவை தடை செய்யப்படும். இந்த அனாச்சாரங்களுக்கு அடிமையான இளைஞர்கள் சுகம் தேடி வேறு நாடுகளுக்கு பயணிக்க வேண்டி வரும். இது இன்னும் 10 ஆண்டுகளில் நடக்கிறதா இல்லையா பாருங்கள்.

suvanappiriyan said...

திரு காட்டான்!

//இங்கிருக்கும் அரேபியர்கள் போலதான் எல்லா முஸ்லிமும் என்றால் கட்டாயம் எந்த ஒரு முஸ்லிமும் தான் சார்ந்த மதத்துக்காக வெக்கப்படுவான்.. களவு போதைபொருள் விற்பனை விபச்சாரத்தில் கொடிகட்டி பரப்பவர்களில் அதிகமானவர்கள் அவர்கள்தான்..//

அந்த அரபுகள் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸை நோக்கி ஓடுவதே இந்த அநாச்சாரங்களை அனுபவிக்கத்தானே! ஒரு சில முஸ்லிம்களை பார்த்து இஸ்லாத்தை எடை போட வேண்டாம். அங்குள்ள கிறித்தவர்களும் யூதர்களும் நாத்திகர்களும் குர்ஆனை விளங்கியே இஸ்லாத்தை நோக்கி சாரை சாரையாக வருகின்றனர்.

http://en.wikipedia.org/wiki/List_of_converts_to_Islam

இங்குள்ள லிஸ்டை பார்த்து மயக்கம் போட்டு விழுந்து விட வேண்டாம். இவர்கள் யாரும் முஸ்லிம்களை உதாரணமாக சொல்லவில்லை. தங்களின் மத மாற்றத்துக்கு குர்ஆனையும் முகமது நபியின் வழிகாட்டலையுமே காரணமாக சொல்லுகின்றனர்.

suvanappiriyan said...

ஜெயபிரகாஷ்!

//"கூமுட்டைகள்" என்று அர்த்தம், அவர்கள் அகராதியை படித்தால் விளக்கம் கிடைக்கும் . இந்த பெயர் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் சுவனப்ரியன்.//

நீங்கள் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கூப்பிட்டுக் கொள்ளுங்கள். அதற்காக மறுதலித்து சூத்திரன் என்பதற்கு என்ன அர்த்தம் என்று கேட்க மாட்டேன். யாரையும் கூப்பிடவும் மாட்டேன்.

//ஆனால் சுவனப்ரியன் சார் இஸ்லாமியர்களை தவிர வேறு யாரும் மத வெறி பிடித்த கடவுளை வணங்குவதில்லை.//

அதற்கு காரணம் உங்கள் மதத்தில் உள்ள பலகீனம். ஒரு முஸ்லிம் குர்ஆனை பொருளுணர்ந்து படிக்க ஆரம்பித்தால் மேலும் மேலும இஸ்லாத்தை கடைபிடிக்க வேண்டும் என்ற அவா அவனுக்கு உருவாகும். அதே ஒரு இந்து தனது வேத நூல்களையும் மனு ஸ்ருமிதிகளையும் ஆழமாக படிக்க ஆரம்பித்தால் நாத்திகத்தை நாட ஆரம்பித்து விடுவான். இதுதான் இன்று வரை நடந்து வருகிறது. எனவே இதைப் போல் நாத்திகததை முஸ்லிம்களும் நாட வேண்டும் எந்த வகை நியாயம் சார்?

//இந்தியாவிலும் இந்துக்கள் பெரும்பான்மையாக இருகிறார்கள். அதனால் இந்தியா இந்துக்களுக்கு மட்டும் சொந்தம் வேறு மதத்தவர் பொத்திக்கொண்டு இருக்க வேண்டும் என்று சவுதியை போல் சட்டம் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறன், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.//

இதனால் முஸ்லிம்களுக்கு ஒன்றும் நட்டம் இல்லை. இந்து ராஷ்டிரம் உருவானால் மற்ற சாதிகள் அனைத்தும் சூத்திரர்கள் என்ற பிரிவில் கொண்டுவரப்படுவர். உடன்கட்டை ஏறுதல் மீண்டும் அமுல்படுத்தப்படும். இட ஒதுக்கீடு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு ஆரியர்களின் ஆதிக்கம் அதிகமாகும். அரிஜனங்கள் காலில் செருப்பில்லாமலும், பெண்கள் மேல் சட்டை இல்லாமலும் வெளியில் வர வேண்டியிருக்கும். சாதி வேறுபாடு தலைவிரித்தாடும். பொது குளத்தில் அரிஜனங்கள் தண்ணீர் எடுக்க தடை போடப்படும். இரட்டை டம்ளர் முறை இந்தியா முழுக்க சட்டமாக்கப்படும். இந்த கொடுமையை எல்லாம காண சகிக்காமல் பிராமணர்களைத் தவிர மற்ற சாதியார் அனைவரும் இஸ்லாத்தில் கூட்டம் கூட்டமாக இணைவர். சில ஆண்டுகளில் ஹிந்து ராஷ்ட்ரா என்ற சொல் மங்கி இஸ்லாமிய ஆட்சி இந்தியாவிலும் வரும். வேறு ஒன்றும் நடந்து விடாது.

//சவுதியில் இஸ்லாம் வரும் முன்பு அங்கே வேறு மதங்களும் இருந்தது அதற்கு பிறகு வந்த இஸ்லாம் இன்று அங்கே முழுமையாக இருக்கவில்லையா? அது போல இந்தியாவிலும் இந்து சமயம் முழுமையாக இருந்தால் நன்றாக இருக்கும் இல்லையா? உங்கள் கருத்து என்ன//

சிலை வணங்கிகளும், கிறித்தவர்களும், யூதர்களும் இஸ்லாத்தின் மேன்மையை உணர்ந்து அனைவரும் முஸ்லிம்களாகி விட்டனர். பெரும்பான்மையோரின் விருப்பம் அதுவாக இருந்தது.

அதுபோல் இந்துக்களில் பெரும்பான்மையினரான பிராமணர் அல்லாத சாதியினர் அப்படி ஒரு ஆட்சி வர சம்மதிப்பார்களா? எல்லா மாநிலங்களிலும் பிஜேபி மண்ணை கவ்விக் கொண்டல்லவா இருக்கிறது. உங்களின் ஒரே ஆதரவான நரேநதிர மோடியும் முஸ்லிம்களை அரவணைததால்தான் காலம் தள்ள முடியும் என்று நேசக் கரம் நீட்ட ஆரம்பித்து விட்டாரே! தெரியாதா?

Anonymous said...

இலங்கை முஸ்லீம்களை தமிழர்கள் என்று அடைக்க முயற்சி செய்யப்படுகிறது. இலங்கையில் உள்ள எந்த முஸ்லீமும் தமிழர்கள் அல்ல.

அங்கங்கு இருக்கும் இடத்துக்கு தகுந்தார்போல தமிழோ அல்லது சிங்களமோ, ஏன் ஆங்கிலமோ பேசக்கூடியவர்களாக இருப்பார்களே தவிர யாரும் தமிழர்களும் அல்ல, சிங்களர்களும் அல்ல.

பெரும்பான்மையினர் மூர் என்று சொல்லபடும் அரபிய இனத்தவர். மற்ற முஸ்லீம்கள் போர்ச்சுகீசியர்களால் இந்தோனேஷியாவிலிருந்தும் மலேசியாவிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டவர்கள்.

மூர்களிலும் கிழக்குக்கரை மூர்கள், மேற்குக்கரை மூர்கள் என்ற இரண்டு பிரிவுகள் உண்டு. கிழக்குக்கரை மூர்கள், மட்டக்களப்பு, அம்பாறை போன்ற பகுதிகளில் உள்ளவர்கள், தாய்வழி மூதாதையை கணக்கிடக்கூடியவர்கள், கேரள முஸ்லீம்களை ஒத்த பழக்கவழக்கங்கள் உள்ளவர்களாக இருந்தாலும் இவர்களது பேச்சில் மிகுந்து காணப்படுவது சிங்களமும் அரபியுமே. மேற்குக்கரையான புத்தளம் மன்னார் கொழும்பு போன்ற இடங்களில் உள்ளவர்கள் மேற்குக்கரை மூர்கள். இவர்கள் தந்தைவழி மூதாதையரை கணக்கிடக்கூடியவர்கள். முழுக்க முழுக்க அரபியர்கள். அரபிய பழக்க வழக்கங்களை கொண்டவர்கள். இந்த அரபிய முஸ்லீம்கள் அரபிய மொழியையும் தமிழ் சிங்களத்தையும் கலந்து அரபி எழுத்துக்களில் எழுதப்பட்ட அர்வி என்ற மொழியை பேசிக்கொண்டிருந்தார்கள். இப்போது அதுவும் வழக்கொழிந்துவிட்டது. தற்போது மிகச்சில மதரசாக்களில் மட்டுமே இந்த அர்வி (arwi) என்ற மொழி சொல்லித்தரப்படுகிறது.

இந்தியாவிலிருந்து சென்றதாக சொல்லப்படும் முஸ்லீம்கள் எல்லோருமே வடக்கிந்திய முஸ்லீம்கள். போஹ்ராக்கள், மேமோன்கள், கோஜாக்கள். இவர்களுக்கும் தமிழர்களும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஆகவே இவர்களை தமிழர்கள் என்று சொல்லுவதோ அல்லது இவர்களை தமிழர்கள் என்று அடையாளம் காணப்பட வேண்டும் என்று சொல்லுவதோ தவறானது.

புலிகள் சிங்களர்களையும் தாம் ஆண்ட பிரதேசங்களிலிருந்து வெளியேற்றினார்கள். அவர்களாகவும் வெளியேறினார்கள். அது ஒரு பிரச்னையே அல்ல என்றுதான் இன்று புலி ஆதரவாளர்களாலும் எதிர்ப்பாளர்களாலும் பார்க்கப்படுகிறது. அதே போல முஸ்லீம்களும் பல காலம் வாழ்ந்துவந்த நிலங்களிலிருந்து துரத்தப்பட்டது நிச்சயம் விவாதத்துக்குரியது. சரி என்றும் வாதிடுபவர்கள் உண்டு, தவறென்றும் வாதிடுபவர்கள் உண்டு. நான் நிச்சயம் தவறு என்றுதான் சொல்லுவேன். ஆனால் இவர்களை தமிழர்கள் என்று சொல்லுவது மிக மிக தவறானதாகும். ஈழத்தமிழர்கள் எந்த காலத்திலும் எந்த காரணத்தாலும் இஸ்லாமியராக ஆனதற்கு வரலாறே கிடையாது.

Yogarasa,