Followers

Tuesday, December 27, 2011

திருப்பூரில் நடந்த பிஜேபியின் கூட்டம் பற்றி....

சில தினங்களுக்கு முன்பு திருப்பூரில் பிஜேபியின் இளைஞர் அணி சார்பில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தனர். சிறப்புப பேச்சாளர்களாக ஜடாயுவைவும, அரவிந்தன் நீலகண்டனையும் அழைததிருந்தனர். ஜடாயு தமிழ்இந்து இணைய தளத்தை நடத்தி வருபவர். இவரது இயற்பெயர் சங்கர நாராயணன். மற்றொருவரான நீலகண்டன் இணையத்தில் பல கட்டுரைகளை எழுதி வருபவர். இணைய தொடர்பு உடையவர்களுக்கு இந்த இருவருமே ஓரளவு பரிச்சயப்பட்டவர்கள்.

பாஜகவின் இளைஞர அணி நடத்திய இந்த கருத்தரங்கில் நிறைய இந்து மத வேதங்களையும் புராணங்களையும் பற்றி அறிந்து கொள்ளலாம் என்று கருத்தரஙகை இணையத்தில் பார்வையிட்டேன். பேசிய இருவருமே இந்து மத பெருமையை கூறுவதை விடுத்து இஸ்லாம், கிறித்தவம், கம்யூனிஸம் என்றும் அதனால் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு பாதகம் வரப்போவதாகவும் பட்டியலிட ஆரம்பித்தனர்.

கிறித்தவர்கள் மாவோயிஸ்டுகளோடு சேர்ந்து கொண்டும் இஸ்லாமியர்கள் கம்யூனிஸ்டுகளோடு சேர்ந்து கொண்டும் இந்த நாட்டை பிரிக்க முயல்கின்றனர் என்ற ஒரு பொய்யான குற்றச்சாட்டை வைக்க ஆரம்பித்தனர். இதற்கு எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை. குர்ஆனும் அறிவியலும் பல இடங்களில் மோதுகின்றன என்ற சில விபரங்களை அரவிந்தன் பட்டியலிட்டார். ஆனால் அதற்கெல்லாம் முன்பே பதில் கொடுத்தாகி விட்டபடியால் மற்ற கேள்விகளுக்கு போவோம்.

அடுத்து பேச வந்த ஜடாயு 'இந்து மதத்தில் சாதிகள் இருக்கின்றது. அதனால் எந்த பிரச்னையும் இல்லை. விஸ்வகர்மா என்ற சாதியைச் சேர்ந்தவர்கள்தான் சிலைகளை செய்து தருகின்றனர். அவர்கள் இந்த சிலை செய்யும் தொழிலை விட்டு விட்டால் நமக்கு சிலை யார் செய்து கொடுப்பர்?' என்ற அருமையான வாதத்தை வைத்தார். அதாவது சக்கிலியன் சக்கிலியனாகவே இருக்க வேண்டும். தோட்டி தோட்டியாகவே இருக்க வேண்டும். அதாவது ராஜாஜி சொன்ன குலக் கல்வித் திட்டம். இநத சாதி முறைகளை அப்படியே தொடர்ந்து கொண்டு நாம் இந்துத்வாவில் ஐக்கியமாக வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறார் ஜடாயு.

அவரைப் பார்த்து நாம் கேட்பது விஸ்வகர்மா சாதியினர் வேறு வேலைக்கு சென்று விட்டால் வழிபடுவதற்கு சிலை கிடைக்காது. சரி... அது போல் கோவிலில் மந்திரம் சொல்லி அர்ச்சகராக இருப்பதுதான் பிராமணர்களின் தொழில். ஆனால் ஜடாயு முதற்கொண்டு 95 சதமான பிராமணர்கள் இறைத் தொண்டு செய்வதில்லை. எந்த கோவிலும் சென்று மணியாட்ட செல்வதில்லை. எல்லோரும் நன்றாக படித்து அரசு உத்தியோகங்களிலும் அமெரிக்கா பிரிட்டன வளைகுடா என்று பறந்து சென்று வளமான வாழ்க்கையை வாழ்கின்றனர். இப்படி எல்லோரும் வெளி வேலைக்கு சென்று விட்டால் கோவிலில் அர்ச்சகராக வேலை செய்வது யார்? என்ற கேள்வியை கூட்டத்தில் யாரும் ஜடாயுவைப் பார்த்து கேட்கவில்லை. நாம் கேட்கிறோம் ஜடாயுவிடம். இதற்கு பதில் என்ன?

அடுத்து 'இன்று இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வஹாபியிசத்தால் பெரும் கேடு வருகிறது. முன்பெல்லாம் இஸ்லாமிய பெண்கள் இந்த அளவு புர்காவை விரும்ப மாட்டார்கள். கடந்த இருபது வருடமாக தமிழகம் எங்கும் பெண்கள் கருப்பு புர்காவிலே வலம் வருகிறார்கள். நமது நாட்டு பாரம்பரியத்தை ஒட்டிய சூஃபியிசத்தை எதிர்க்கின்றனர். காலம்காலமாக தர்ஹாவை வணங்கி வரும் இஸ்லாமியர்களை வஹாபிய கூட்டுக்குள் அடைக்கப் பார்க்கிறார்கள்' என்று ஜடாயு பொரிந்து தள்ளினார்.

இங்குதான் இவர்களின் தந்திரத்தை நாம் பார்க்க வேண்டும். அதாவது ஏக இறைவன், நாகூர் தர்ஹா, ஏர்வாடி, ஐயப்ப சாமி, முருகன், பிள்ளையார் என்று பல தெய்வ வணக்கத்துக்கு முஸ்லிம்கள் வந்து விட்டால் இவர்களுக்கு பிரச்னை இல்லை. ஏனெனில் சீக்கியம், பவுத்தம், கிறித்தவம் போன்ற மதங்களை இந்து மதத்தின் உட்பிரிவாக ஆக்கியது போல் இஸ்லாத்தையும் கொண்டு வரச் சொல்லுகின்றனர். இதற்கு இடையூறாக இருப்பது வஹாபிகள். இதுதான் ஜடாயுவைப் போன்றவர்களின் எரிச்சலுக்கு காரணம்.

இன்று வஹாபியிசம்(ஏகஇறைக் கொள்கை) தமிழகத்தில் பரவியதால் கிடைத்த நன்மைகளை இங்கு பார்க்க வேண்டும். முன்பெல்லாம் பாபரி மசூதி இடிப்பு தினத்தில பல இடங்களில் வன்முறை வெடிக்கும். முஸ்லிம்களும் பஸ்ஸை கல்லெறிந்து தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். தவ்ஹீத் ஜமாத் என்ற ஒரு வஹாபிய (ஏக இறைவனை மட்டுமே வணங்குபவர்கள்) அமைப்பு உருவாக்கப்பட்டவுடன் அந்த அமைப்பின் சார்பில் அதே இளைஞன் போராட்டத்துக்கு வருகிறான். அரசு மீது தனக்குள்ள வெறுப்பை யாருக்கும் பாதகம் வராமல் சாத்வீகமான முறையில் வெளிப்படுத்துகிறான். அவனது கோபம் போராட்டத்தினால் சற்று மட்டுப்படுத்தப்படுகிறது. கலவியறிவு அற்ற சமூகமாக இருந்தவர்களை இன்று படிப்பின் அருமையை உணர்த்தியிருக்கின்றனர். அரசிடம் போராடி தனி இட ஒதுக்கீடு கேட்டு அதில வெற்றியும் பெற்றுள்ளனர். புரோகிதத்தை ஒழித்து எல்லோரும் அறிஞர்களாக மாற முயற்ச்சி எடுத்து அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். இதற்கு பணம் சவுதி அரசு தருவதில்லை. அப்படி வாங்கினாலும் குற்றமில்லை. ஆனால் அனைத்து செலவுகளும் மக்களிடம் வசூலித்தே செய்யப்படுகிறது. ஒருவன குர்ஆனையும் முகமது நபியையும் உளப்பூர்வமாக நெருங்க ஆரம்பித்து விட்டால் தனது நாட்டை நேசிப்பான். தனது நாட்டு மக்களை நேசிப்பான், முழு உலக மக்களையும் நேசிக்க ஆரம்பித்து விடுவான். ஏனெனில் உலக மக்களின் மூல பிதா ஒருவரே. அவரே ஆதம் என்று குர்ஆன் அறைகூவல் விடுக்கிறது.

இப்பொழுது சொல்லுங்கள். வஹாபியம் வளர்ந்ததனால் இந்தியாவுக்கு நன்மையா? தீமையா?

அடுத்து ஆரிய திராவிட பாகுபாடு பற்றி ஜடாயு பேசும் போது ஆரிய இனம் திராவிட இனம் என்பதே கட்டுக்கதை என்றும் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்த்தார். இது பற்றி பல ஆக்கங்கள் பலர் எழதினாலும் கலையகம் என்ற இணைய தளத்தில் பல புதிய செய்திகளை தருகின்றனர். நேரம் கிடைப்பவர்கள் படித்துப் பார்க்கவும்.

//இன்று ஈழத்தமிழரின் பூர்வீகமான வாழிடங்களில் சிங்களமயமாக்கல் நடைபெறுகின்றது. இதே போன்றதொரு கலாச்சார மேலாதிக்கம், இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்திய இலங்கையிலும் இடம்பெற்றது. அது ஆரிய மயமாக்கும் நடைமுறையாக ஆரம்பித்தது.

அந்தக் காலத்தில், சிங்கள மன்னர்கள் மட்டுமல்லாது, தமிழ் மன்னர்களும் தம்மை ஆரியர்கள் என்று அழைத்துக் கொள்வதில் பெருமைப் பட்டனர். யாழ்ப்பாண இராஜ்யத்தை சிங்கை ஆரியன் என்ற மன்னன் ஆண்டு வந்துள்ளான். இவன் பெயரிலேயே "சிங்கமும், ஆரியனும்" இருப்பது கவனிக்கத் தக்கது. ஆரியச் சக்கரவர்த்திகள் என்ற பெயரில் ஒரு அரச பரம்பரையினர், நீண்ட காலமாக வட இலங்கை ஆட்சியாளராக இருந்துள்ளனர். இவர்கள் கண்டி ராஜ்யத்துடன் சிறந்த ராஜதந்திர உறவுகளை பேணி வந்துள்ளனர். ஆரியச் சக்கரவர்த்திகள், இராமநாதபுரத்தை சேர்ந்த தமிழ்ப் பிராமணர்கள் என்றும், பாண்டிய மன்னனின் தளபதிகளாக ஈழத்திற்கு அனுப்பப் பட்டவர்கள் என்றும், ஒரு வரலாற்றுக் குறிப்பு கூறுகின்றது. (Aryacakravarti dynasty - http://en.wikipedia.org/wiki/Aryacakravarti_dynasty)//
-http://kalaiy.blogspot.com/2011/12/blog-post_26.html

கடைசியாக கேள்வி நேரமும் வந்தது. ஒரு அன்பர் ஜடாயுவிடம் 'ஒவ்வொரு சாதியினரும் வேறு வேறு கடவுளை வணங்குகின்றனர். சுடலைமாடன்சாமியை ஒரு சாதியினரும், சிவனை ஒரு சாதியினரும் பிள்ளையாரை ஒரு சாதியினரும் வணங்குகின்றனர். எப்படி இவர்கள் அனைவரும் ஒரு இயக்கத்தில் இணைவது?' என்று கேட்டார். அருமையான கேள்வி.

இதற்கு பதிலளித்த ஜடாயு 'பல சாதிகளும் பல தெய்வங்களை வணங்கினாலும் அவை அனைத்துமே ஒரு தெய்வத்திலிருந்து பிரிந்தவைகளே! எனவே பிரச்னையில்லை' என்றார். அதாவது தனக்கு கூட்டம் சேர்க்க வேண்டும் என்பதற்காக இங்கு ஏக தெய்வத்தை கொண்டு வருகிறார். ஆக பல தெய்வ வணக்கம் தவறு என்று தெரிந்து கொண்டே தனது சாதியின் மேலாண்மையை காப்பாற்றிக் கொள்ள ஏக தெய்வ மார்க்கமான இஸ்லாத்தை எதிர்க்கிறார். இப்படி பல குளறுபடிகளுக்கு மத்தியில் கருத்தரங்கு நிறைவுற்றது.

பெருமபான்மையான இந்து மக்களின் நலனுக்காக என்ற போர்வையில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. ஆனால் கூட்டமோ ஒரு ஆயிரத்தைக் கூட தாண்டவில்லை. அந்த அளவு இந்து மக்கள் இந்துத்வாவின் உண்மை முகத்தை உணர்ந்து கொண்டுள்ளனர்.

நீலகண்டனும், ஜடாயுவும் சிறந்த அறிஞர்கள். அதில் சந்தேகமில்லை. ஆனால் அஸ்திவாரம் பலமாக இல்லாமல் அடுக்கு மாடி கட்டிடம் கட்ட நினைத்ததுதான் இவர்கள் செய்த தவறு. சாதிகளை ஒழிக்காமல், பல தெய்வ வணக்கத்தை ஒழிக்காமல் இந்துக்களுக்குள் ஒற்றுமையை எக்காலத்திலும் உங்களால் கொண்டு வர முடியாது. சாதிகளை ஒழிக்க ஆரம்பித்தால் இந்து மதமும் இந்து மத வேதங்களும் காணாமல் போய் விடும். நமது முன்னோர்கள் வழிபட்ட 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற கொள்கைக்கு திரும்பவும் பயணிக்க வேண்டி வரும். அப்படி பயணித்தால் மேட்டுக்குடியான உங்களைப் போன்றவர்களின் பிடி தளரும். இதற்கு நீங்களோ உங்களின் இந்துத்வாவின் தலைவர்களோ உடன் படபோவதில்லை. எனவே இந்த ஆரிய திராவிட பிரச்னை என்பது ஒரு தொடர்கதை........

மேலும் பெரியார் வாழ்ந்த இந்த மண்ணில் சாதி இருந்துதான் ஆக வேண்டும் என்று இந்த நூற்றாண்டிலும் சொல்வதற்கு ஒரு தைரியம் வேண்டும். அது ஜடாயுவிடமும் அரவிந்தனிடமும் அதிகமாகவே உள்ளது.



49 comments:

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

நன்றாக விளக்கி உள்ளீர்கள் சகோ.

Anonymous said...

இந்துக்கள் அரிவாளை எடுக்கிற முட்டாள்கள்ன்னா முஸ்லீம்கள் மனித வெடிகுண்டா மாறி கொத்து கொத்தா கொல்ற புத்திசாலிகளா? உலகில் தம் மதத்தவர்களாலேயே அதிகமா கொல்லப்படும் மதம் எதுன்னா முஸ்லீம் மதம் தான். நீங்க பிற மதத்தை விமர்சிக்கிறிங்களா?

Kabilan said...
This comment has been removed by the author.
கபிலன் said...

பி ஜெ பியின் கூட்டம் பற்றி என்று தலைப்பை போட்டுட்டு....அங்கு நடந்த மேட்டரை சொல்லாமா....உங்களுக்கு தேவையனவையை மட்டும் காபி பேஸ்ட் பண்ணிட்டு....அதுக்கு விளக்கம் வேற கொடுக்க முயற்சி செய்திருக்கீங்க....வாழ்த்துக்கள் !

பி ஜெ பியோட பாய்ண்ட் கரெக்ட் மாதிரி தான் தோனுது...முழு மீட்டிங்க் தொகுப்பு எங்க இருக்குங்க...

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பின் சகோதரர் அண்ணன் சுவனப்பிரியன்,
வஹாபியிசம் என்ற பெயரை மேலாதிக்க சக்திகள் பயன்பாட்டுக்கு விடுவதில் அவர்களின் நரித்தனம் அப்பட்டமாக தெரிகிறது. அதை தான் இலக்கிய உலகில் ஜெயமோகனும் செய்கிறார். ஆனாலும் அவர்களின் ஆசை நிறைவேறாது.

இங்கிலாத்தின் உளவுத்துறை மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு அறிக்கையை தமது நாட்டிற்கு அளித்தது. சூபியிசத்தை ஊக்குவித்து தூய்மையான இஸ்லாமியர்களை ஒன்றுமில்லாமல் ஆக்க வேண்டும் என்ற சாராம்சத்தின் சுருக்கமாகும் அந்த அறிக்கை. (இதை இந்தியா டுடே என்னும் இதழும் முகப்பு கட்டுரையாக முனனர் வடித்திருந்தது.)

இஸ்லாத்திற்கு எதிரான சக்திகள் எல்லாம் இஸ்லாத்தை ஒழிக்க வேண்டுமெனில் எங்கே கை வைக்க வேண்டுமென அறிந்திருக்கின்றன. ஆனால் அவர்களால் தமது எண்ணத்தை ஒருக்காலும் நிறைவேற்ற முடியாது.

Unknown said...

Assalamu alikum good post bro! Jazakallahu kair

கோவி.கண்ணன் said...

//அவரைப் பார்த்து நாம் கேட்பது விஸ்வகர்மா சாதியினர் வேறு வேலைக்கு சென்று விட்டால் வழிபடுவதற்கு சிலை கிடைக்காது. சரி... அது போல் கோவிலில் மந்திரம் சொல்லி அர்ச்சகராக இருப்பதுதான் பிராமணர்களின் தொழில். ஆனால் ஜடாயு முதற்கொண்டு 95 சதமான பிராமணர்கள் இறைத் தொண்டு செய்வதில்லை. எந்த கோவிலும் சென்று மணியாட்ட செல்வதில்லை. எல்லோரும் நன்றாக படித்து அரசு உத்தியோகங்களிலும் அமெரிக்கா பிரிட்டன வளைகுடா என்று பறந்து சென்று வளமான வாழ்க்கையை வாழ்கின்றனர்//

செம செம்ம சூடு

:)

Anonymous said...

Human bombs are made by America not by Muslims. To induce the clashes between shiya and sunny, Americans are creating human bombs.

Anonymous said...

Human bombs are made by America not by Muslims. To induce the clashes between shiya and sunny, Americans are creating human bombs.

Anonymous said...

http://www.tntj-net.blogspot.com/2011/04/tntj_08.html


பன்றி ஹராம் ன்னு சின்ன புள்ள கூட தெரியுமே

pj க்கு தெரியாதா ???

இதுக்கு உங்களோட கருத்து என்ன ?

Anonymous said...

இவ்வளவு நாளா ஏன் உங்க தல
ஹஜ் செய்யல
கேட்டு சொல்லுங்க பாய்

சவூதி போனா சாட்டை அடி விழுகுமோ???

ஹா...ஹா...ஹா...

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ கார்பன் கூட்டாளி!

//நன்றாக விளக்கி உள்ளீர்கள் சகோ.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

திரு கபிலன்!

//பி ஜெ பியோட பாய்ண்ட் கரெக்ட் மாதிரி தான் தோனுது...//

அதாவது சிலை செய்து வருபவனின் வாரிசும் சிலைதான் செய்ய வேண்டும். தோட்டியின் வாரிசு தோட்டியாகவே இருக்க வேண்டும் என்கிறீர்களா? இதை ஆதரித்தால் ஒன்று நீங்கள் பிராமணராக இருக்க வேண்டும். வேறு சாதியாக இருந்தால் உங்களைப் பார்த்து பரிதாபம்தான் பட முடியும்.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ ஷேக்தாவூத்!

//இங்கிலாத்தின் உளவுத்துறை மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு அறிக்கையை தமது நாட்டிற்கு அளித்தது. சூபியிசத்தை ஊக்குவித்து தூய்மையான இஸ்லாமியர்களை ஒன்றுமில்லாமல் ஆக்க வேண்டும் என்ற சாராம்சத்தின் சுருக்கமாகும் அந்த அறிக்கை. (இதை இந்தியா டுடே என்னும் இதழும் முகப்பு கட்டுரையாக முனனர் வடித்திருந்தது.)//

புதிய தகவல். மேலதிக விபரம் இருந்தால் அதன் சுட்டியை தாருங்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ ஜாபர்கான்!

//Assalamu alikum good post bro! Jazakallahu kair//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ. கோவிக் கண்ணன்!

//செம செம்ம சூடு//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

அனானி!

//பன்றி ஹராம் ன்னு சின்ன புள்ள கூட தெரியுமே

pj க்கு தெரியாதா ???//

அரைகுறையாக படித்துவிட்டு பதிவுக்கு சம்பந்தம் இல்லாத விஷயத்தை இழுப்பது எதற்கு? பன்றி கறி சாப்பிடுவது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டது. மருத்துவத் துறையில் பயன்படுத்த எந்த தடையும் இல்லை என்ற வாதமே அங்கு வைக்கப்படுகிறது. மருத்துவ துறையிலும் பயன் படுத்த தடை குர்ஆனில் உள்ளதா? விபரம் தெரிந்தவர்களிடம் நன்றாக கேட்டுக் கொண்டு பிறகு பின்னூட்டம் இடவும். :-)

//இவ்வளவு நாளா ஏன் உங்க தல
ஹஜ் செய்யல
கேட்டு சொல்லுங்க பாய்//

அதைப் பற்றி அவரல்லவா கவலைப்பட வேண்டும்? ஹஜ் செய்ய கடன் இல்லாமலும் வசதி வாய்ப்பும் இருந்தால்தான் ஒரு முஸ்லிமுக்கு ஹஜ் கடமையாகிறது என்ற அரிச்சுவடி பாடம் கூட அறியாமல் இருக்கும் உங்களைப் பார்த்து பரிதாபப்படுகிறேன் சகோ.

suvanappiriyan said...

ஹாட் லிங்க்ஸ்!

//நண்பரே, தங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் பிளாக் மேலும் பல வாசகர்களைச் சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் பதிவுகளை பகிருங்கள்.//

இணைப்பதற்கு முயற்ச்சிக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

G u l a m said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
சகோ சுவனப்பிரியன்.,


ஆக்கம் முழுவதும் நிறைய ஆச்சரியம்.. கூடவே கேள்விக்களும்

இஸ்லாத்தை நோக்கி மட்டும் விமர்சிக்க பழக்கப்படுத்தபட்டவர்கள் இக்கேள்விக்குறிகளை கொஞ்சம் நோக்குவார்களா...?

ஜஸாகல்லாஹ் கைரன் பகிர்ந்த பதிவுக்கு....நன்றி சகோ

Anonymous said...

vahabism...sufism.....wat does these terms mean..?

Nasar said...

பெரும்பான்மையான இந்து சகோஸ் நல்லவங்கதா ஆனால்
இந்த குள்ள நரிக்கூட்டம் (பிராமின்ஸ்) தான் பெரும்பான்மையை கெடுக்குது ..
நாங்க பல தெய்வங்களை வணகுகிறோமே அதே போல நீங்களும் தவ்ஹீதை
விட்டு விட்டு எங்களைப்போல வணங்க்குகளே என்று சொல்லாமல் சொல்கிறார்கள் ....
சரி பதிவில் காரம் பத்தவில்லை ........
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

suvanappiriyan said...

அனானி!

//vahabism...sufism.....wat does these terms mean..?//

சூஃபியிசம்

தியானம், துறவறம், பாடல்கள் இதன் மூலம் இறைவனை மிகவும் நெருங்கலாம் என்ற ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப்படும் வழி முறைகளுக்கு சூஃபியிசம் என்று பெயர். இந்துக்களின் பிரார்த்தனை செய்யும் முறைகளை ஒரு சிலர் இஸ்லாமிய கருத்துகளை இணைத்து உண்டாக்கிய புது வழிமுறைக்கு சூஃபியிசம் என்று பெயர். முகமது நபி காலத்திலோ அதற்கு பின் வந்த அவர்களின் தோழர்களின் ஆட்சியிலோ இப்படி வழி முறை இருந்ததில்லை.

'தாமாகவே துறவறத்தை உருவாக்கிக் கொண்டனர். அதைக் கூட பேண வேண்டிய விதத்தில் பேணவில்லை.'
-குர்ஆன் 57:27

இறைவனை நெருங்க துறவறம் என்ற வழிமுறையை தாமாகவே இவர்கள் உருவாக்கிக் கொண்டதாக இறைவன் இங்கு கண்டிக்கிறான். அதைக் கூட அவர்கள் பேண வேண்டிய முறையில் பேணவில்லை என்ற சொற்றொடரையும் கவனிக்கவும். இது போன்று துறவறம் பூண்டவர்கள் பொது வாழ்வில் அந்த ஆசைகளை துறந்தவர்களாக இல்லை. தர்ஹாக்களில் துறவறம் பூண்டு சூஃபியிசத்தில் லயித்திருப்பவர்கள் கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருட்களை உட்கொள்வதும், களளத்தனமாக பெண்களோடு தொடர்பு கொள்வதும் வாடிக்கையாக்கி வைத்துள்ளனர். இதே போல் துறவறம் பூண்ட இந்து கிறித்தவ சந்நியாசிகளும், பிஷப்புகளும் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதை தினமும் பத்திரிக்கையில் படிக்கிறோம். இறைவன் சொலலாத ஒரு வழி முறை நமக்கு எதற்கு?

உறங்காமல் நின்று வணங்கப் போகிறேன், காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறோன், மணமுடிக்க மாட்டேன் என்றெல்லாம் கூறி இறைவணக்கத்தில் மட்டுமே ஈடுபட எண்ணிய நபித்தோழர்களை நபி அவர்கள் கண்டித்தார்கள். இறைவனுக்குச் செய்யும் கடமை. தனக்கு, மனைவியர்க்கு, மக்களுக்கு, உறவினருக்கு, சமுதாயத்திற்குச் செய்யும் கடமைகளும் உள்ளன என்றும் அறிவுரை பகர்கின்றார்கள்.

'இதே போன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும் உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுப்பதற்காகவும் இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்.
குர்ஆன் (2:151)

இறை வணக்கம் பற்றிய சந்தேகங்களுக்கு முகமது நபியின் தெளிவான வழி காட்டுதல் உள்ளதாக இறைவன் குர்ஆனில் கூறுகிறான. இவ்வளவு தெளிவான வசனங்கள் இருக்கும் போது பீர்அப்பா என்ற ஒரு கவிஞர் தத்துபித்தென்று உளறி 'இறைவனும் நானும் ஒன்றுதான்' என்றும் முடிவில நானே இறைவன்' என்றும் முடிக்கும் இந்த சூஃபியிசம் குழப்பத்தின் மொத்த உருவம். இந்துக்களின் அத்வைதத்தை கடன் வாங்கி குர்ஆனின் கருத்துக்களை தனது மொழியில் பீர் அப்பா எழுதியதே சூஃபியிச கவிதைகள். இதற்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தமில்லை.

அடுத்து வஹாபிசம்

அப்துல வஹாப் என்ற சவுதி அரேபியா ரியாத் நகரில் வாழ்ந்த ஒரு மனிதர் குர்ஆன் மற்றும் நபி மொழிகள் மட்டுமே இஸ்லாமிய வரமபுக்குள் சட்டங்களாக வர வேண்டும். புதிதாக எழும் நவீன பிரச்னைகளுக்கு குர்ஆனும் நபி மொழியும் கூறும் கருத்துக்கு உட்பட்டு நாமாக விளக்கம் அளிக்கலாம். அந்த விளக்கம் குர்ஆனோடு மோதாமல் இருக்க வேண்டும் என்ற கொள்கையை அந்த மக்களுக்கு பிரசாரம் செய்தார். இவரது பிரசாரத்தில் உள்ள உண்மையை உணர்ந்த மக்கள் இவரது பின்னால் அணி திரண்டனர். சவுதி அரேபியாவில் அந்த நேரத்தில் பல தர்ஹாக்கள் இடித்து தரை மட்டமாக்கப்பட்டன. இவரது கொள்கை குர்ஆன். அதற்கு விரிவுரையாக அமைந்த நபிகளின் பொன்மொழிகள். இதனை தொடர்பவர்கள் வஹாபிகள் என்று மற்றவர்களால் அழைக்கப்பட்டனர். இஸ்லாமிய பார்வையில் இவர்கள் தவ்ஹீத்(ஏக இறைவனை வணங்குபவர்) வாதிகள் என்றழைக்கப்படுவர்.

இவர்கள் தர்ஹாக்களுக்கு செல்லமாட்டார்கள். குர்ஆன் மற்றும் நபி மொழிகள் இவை இரண்டை மட்டுமே தங்களின் வழிகாட்டியாக வைத்துக் கொள்வர்.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ குலாம்!

//ஆக்கம் முழுவதும் நிறைய ஆச்சரியம்.. கூடவே கேள்விக்களும்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ நாசர்!

//பெரும்பான்மையான இந்து சகோஸ் நல்லவங்கதா ஆனால்
இந்த குள்ள நரிக்கூட்டம் (பிராமின்ஸ்) தான் பெரும்பான்மையை கெடுக்குது ..//

குள்ளநரிக் கூட்டம் எல்லா சமூகத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறது சகோதரரே! பிராமணர்களில் மிக நல்லவர்களை நான் சந்தித்துள்ளேன். இன்று வரை தொடர்பில் உள்ளேன். அவர்கள் அந்த மதத்தில் பிறந்து விட்டதால் அதை எப்படியாவது தூக்கி நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். அதற்கு இஸ்லாத்தை குறை கூறி இந்துத்வாவை வளர்க்க வேண்டாம் என்பதே இப்பதிவின் நோக்கம்.

//சரி பதிவில் காரம் பத்தவில்லை ........
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி//

'விவேகத்துடனும் அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக!'
-குர்ஆன் 16:125

'கனியிருப்பக் காய் கவர்ந்தற்று'

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.சுவனப்பிரியன்,
பதிவு ஜெட் வேகத்தில் சென்று முடிகிறது. சூடான நடை. அருமையான விளக்கங்கள். சரியான காணொளிகள்.

அதென்னவோ தெரியவில்லை...
நாத்திக-கம்யுனிச, ஹிந்துத்துவாக்களின் தளமாகட்டும், அல்லது கூட்டமாகட்டும்.... மிக ஜாக்கிரதையாக அவரவர் கொள்கைகளைத்தவிர்த்து... இஸ்லாம் பற்றித்தான் மிக மிக அதிகம் எழுதுகின்றனர்... பேசுகின்றனர்.

அதேநேரம், இஸ்லாமிய தளங்கள் மற்றும் மாநாடுகள் செல்லுங்கள்... இஸ்லாம் பற்றித்தான் மிக மிக அதிகம் கட்டுரைகளும் பேச்சுக்களும் இருக்கிறது.

சங்க்பரிவார RSS கும்பல்கள் சிறைக்கு வெளியில் சுதந்திரமாக திரியும்வரை... பெரியார் வாழ்ந்த மண்ணாவது.... பயமாவது... வெங்காயம்...! கிள்ளுக்கீரையும் வர்ணாசிரமம் பேசத்தான் செய்யும்.

இப்போது, இவர்களின் பார்ப்பனிய ஆதிக்கத்துக்கும் மற்றும் அனைத்து பெரியாரிய, கம்யுனிச நாத்திகருக்கும் மட்டுமின்றி கிருத்துவ கொள்கைகளுக்கும் அதை பேசவோ எழுதவோ தயங்கும் அளவுக்கு பெரிய முட்டுக்கட்டையாக... சவாலாக தெரிவது பிஜே மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்கூட்டங்களும், விவாதங்களும், கேள்விபதில்களும்தான்...!

இவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக சேர்ந்து மற்ற முஸ்லிம் தலைவர்களையும் இயக்கங்களையும் விட்டுவிட்டு இவரை மட்டுமே பிரதானமாக எதிர்க்கிறார்கள் என்றால்... பிஜே (with வஹாபிசம்) சரியான ரூட்டில்தான் பயணிக்கிறார் என்பது புரிகிறது.

பெரியாரால் முடியாததை இனி இஸ்லாமால் மட்டுமே இம்மண்ணில் முழுமையாக செய்து முடிக்க முடியும்.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ ஆஷிக்!

//இப்போது, இவர்களின் பார்ப்பனிய ஆதிக்கத்துக்கும் மற்றும் அனைத்து பெரியாரிய, கம்யுனிச நாத்திகருக்கும் மட்டுமின்றி கிருத்துவ கொள்கைகளுக்கும் அதை பேசவோ எழுதவோ தயங்கும் அளவுக்கு பெரிய முட்டுக்கட்டையாக... சவாலாக தெரிவது பிஜே மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்கூட்டங்களும், விவாதங்களும், கேள்விபதில்களும்தான்...!

இவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக சேர்ந்து மற்ற முஸ்லிம் தலைவர்களையும் இயக்கங்களையும் விட்டுவிட்டு இவரை மட்டுமே பிரதானமாக எதிர்க்கிறார்கள் என்றால்... பிஜே (with வஹாபிசம்) சரியான ரூட்டில்தான் பயணிக்கிறார் என்பது புரிகிறது.//

உங்கள் வாதம் சரி என்பதற்கு உதாரணமாக இன்று மட்டும் 10க்கு மேலான பின்னூட்டங்கள் பிஜே யை வசைமாறி பொழிந்து வந்தது. அவரை தனிப்பட்ட முறையில் தாக்கியும் இந்த பதிவுக்கு சம்பந்தமே இல்லாமல் பின்னூட்டங்கள் வந்த வண்ணம் இருந்தது. அனானிகளின் அந்த ஆதாரமில்லாத பின்னூட்டங்களை வெளியிடவில்லை. ஏன் இவர் மீது இந்த அளவு காட்டம். என்ன தவறை செய்தார் என்று நான் ஆச்சரியப்பட்டேன். உண்மையில் இஸலாமிய எதிரிகளுக்கு இன்றைய காலகடட்டத்தில் தவ்ஹீத் ஜமாத் மிகப் பெரும் சவாலாக இருக்கிறது என்பதையே இது போன்ற வசைமாறிகள் நமக்கு உணர்த்துகிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Nasar said...

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...
இவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக சேர்ந்து மற்ற முஸ்லிம் தலைவர்களையும் இயக்கங்களையும் விட்டுவிட்டு இவரை மட்டுமே பிரதானமாக எதிர்க்கிறார்கள் என்றால்... பிஜே (with வஹாபிசம்) சரியான ரூட்டில்தான் பயணிக்கிறார் என்பது புரிகிறது.
சகோ சரியாக சொன்னீர்கள் ...அதுதான் உண்மையும் கூட...
தூய இஸ்லாத்தை உள்ளது உள்ளபடி சொன்னால் அவன் " வஹாபி " ஏன் உண்மையான முஸ்லிம் என்று சொல்லகூடாதா !!?? சரி இவரு வஹாபி என்றல், அவரு (சொல்பவர்கள்) பாவியா????
சூபிசம் , வஹாபிசம் என்கிற சொல் இடையில் வந்ததுதான் ஆரம்பத்தில் இல்லை ...
அறிஜெர் P.J அவர்களின் கூட்டமென்றால் , பெருங்கூட்டம் கூடிவிடுகிறதால், மற்றவர்களுக்கு
எரிச்சலாக இருப்பதால் தான் அவரை கட்டம் கட்டி விமர்சிக்கிறார்கள்....
பழுத்த மரம் தான் (PJ ) கல்லடிபடும்
நான் எந்த இயக்கத்தையும் சாராதவன் ஆனால் அறிஜெர் P.J அவர்களை மதிக்கிறேன்
அவர் உண்மையை சொல்வதனால்

Rabbani said...

salaam brother
good post
congrats for tamilmanam makudam

Anonymous said...

jazakALLAH 4 ur explanation......brother

suvanappiriyan said...

சலாம்! சகோ ரப்பானி!

//salaam brother
good post
congrats for tamilmanam makudam//

உங்களின் பின்னூட்டததைப் பார்த்தபின் தான் தமிழ்மண மகுடத்தில் எனது பதிவு வந்தையே பார்த்தேன். ஓட்டளித்த அனைவருக்கும் நன்றி!

உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ நாசர்!

//பழுத்த மரம் தான் (PJ ) கல்லடிபடும்
நான் எந்த இயக்கத்தையும் சாராதவன் ஆனால் அறிஜெர் P.J அவர்களை மதிக்கிறேன்
அவர் உண்மையை சொல்வதனால்//

சரியாக சொன்னீரகள். நாம் குறிப்பிட்ட எந்த இயக்கத்திலும் தீவிரமாக இருக்க வேண்டாம். நன்மையான காரியங்களை யார் செய்தாலும் அதை வரவேற்போம். யார் என்பதை பார்க்காமல் என்ன சொல்கிறார் என்பதில் நமது கவனம் இருக்க வேண்டும். அதுதான் நம்மை குழப்பததில் ஆழ்த்தாது.

அனானி!

//jazakALLAH 4 ur explanation......brother//
நன்றி! பெயரைப் போட்டு எழுதுவதில் என்ன சிக்கல். :-)

உதயம் said...

நீங்கள் குறிப்பிட்ட இருவரும் நல்ல படிப்பாளிகள். அதிலும் அரவிந்தனின் எழுத்து நடையில் ஒரு வசீகரம் இருக்கும். அவர் எடுத்துக்கொண்ட கருத்தை வாசிப்பவர்களின் எண்ணத்தோடு ஒன்றி விடச் செய்யும் கலை அறிந்தவர். இவ்வளவு நிறைகள் இருந்தென்ன? சிந்தனைகள் சீழ் பிடித்தல்லவா இருக்கிறது. இஸ்லாத்தை விமர்சிக்கும் போது அரவிந்தன் கண்ணியம் இழந்து, எந்தளவிற்கும் தரம் தாழவும் தவறமாட்டார். சுயம் சேவக்கின் ரத்தம் உடம்பிலும், சிந்தையிலும் வந்து விட்டால் இஸ்லாமிய வெறுப்பும் துவேசமும் தானாக வந்து விடும்.

இந்து மதத்தை சரியாக புரியாமலும் அதை முறையாக உணராமலும் ஏராளாமானோர் இருக்கையில், இந்த கூட்டத்தில் நிரம்ப படித்த இந்த படிப்பாளிகள் அதனை விளக்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் இவர்கள் செய்தது என்ன?

ஒரு சந்தையில், பலரும் தங்களது பொருட்களை விற்பனை செய்து வந்தனர். ஒரு வியாபாரி மட்டும், மற்ற வியாபாரிகளின் பொருட்களை குறை கூறி, தம் பொருட்களை விற்க முயன்றார். இதனை கவனித்த ஒரு பெரியவர், அவரிடம் சென்று அவர் பொருட்களைப் பார்வையிட்டார். அவரது பொருட்கள் புழுத்து போய் இருந்தது. பெரியவர் புரிந்துக் கொண்டார். அவர் எதனால் மற்றவர்களின் பொருட்களை குறை சொல்கிறார் என்று.

தற்பொழுது, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் உள் நாட்டுப் போர் வெடிக்கும் என்று எழுதியும் பேசியும் வருகிறார்கள்.
"முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கண்டிப்பாக வேண்டும் என்றால், இந்து மதத்திற்கு மாறி, ஏதாவது ஒரு தாழ்த்தபட்ட சாதியில் ஐக்கியமாகிக் கொள்ளலாம்" என்று தொகாடியா சொல்லுமளவிற்கு இருக்கிறது இவர்களது மத துவேஷம்.

suvanappiriyan said...

திரு உதயம்!

//தற்பொழுது, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் உள் நாட்டுப் போர் வெடிக்கும் என்று எழுதியும் பேசியும் வருகிறார்கள்.
"முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கண்டிப்பாக வேண்டும் என்றால், இந்து மதத்திற்கு மாறி, ஏதாவது ஒரு தாழ்த்தபட்ட சாதியில் ஐக்கியமாகிக் கொள்ளலாம்" என்று தொகாடியா சொல்லுமளவிற்கு இருக்கிறது இவர்களது மத துவேஷம்.//

அவர்களின் வர்ணாசிர தர்மத்துக்கு தலைவலியாக இருப்பவர்கள் முஸ்லிம்களே! எனவே தான் எங்கு பேசினாலும் அவர்கள் முஸ்லிம்களை வம்புக்கிழுப்பது. ஆனால் இவர்களின் கனவு இந்தியாவில் எந்த காலத்திலும் நனவாகப் போவதில்லை.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

smart said...

பிஜேபி என்ன RSS போல இந்துத்துவா கட்சியா? இந்து தர்மம் பற்றி பேசச்சொல்ரீங்க? பொதுப் பிரச்சனைப் பற்றி பேசும் போது தப்பைத் தானே கேட்டுள்ளார்கள். முதல் கேள்விக்கு சிறு ஆதாரம்: முஸ்லீமும் கம்யூனிஸ்டும் அதிகாரத்தில் வளர்ந்ததால் தான் முல்லைப் பெரியார் பிரச்சனை வந்துள்ளது. தேசியம் அழிந்துள்ளது.
இரண்டாம் கேள்விக்கு:சாதிப் பாகுபாடுகள் போதிக்கப்படாத மதம் இந்துமதம் என்று சொல்வார்கள். சில நூற்றாண்டுகள் முன்னர்தான் பணக்கார சாதி எல்லாம் பிரிவினையை பழக்கத்தில் கொண்டுவந்தது. அந்தப் பிரிவினையை நீக்க அந்தச் சாதியின் பெருமையத் தான் சொன்னார்கள் அன்றி அந்தச் சாதியில் இந்த வேலைதான் செய்யவேண்டும் என சொல்ல வில்லை. . இடையில் சிண்டு முடிவதற்காக சில ஜாதிப் பெயர்களை இழுத்து கோர்த்துள்ளது உங்கள் கைவினை.

அனைவரும் சமம் சாதிகள் வேண்டாம் என்றால் எதற்கு ஒதிக்கீடு கேட்கிறார்கள் என்று சொல்லமுடியுமா? சிறுபான்மையினருக்கு ஆதரவு என்று சொல்வதானால், கேரளா,கோவா,ஜம்மு,நாகலாந்து... போன்ற இந்துக்கள் மைனாரிட்டியாகவுட்ட மாநிலத்தில் இந்துக்களுக்கு ஒதிக்கீடு வழங்கச் சொல்வீர்களா?

ஆரிய இனம் வந்து திராவிடர்களை அடிமைப்படுத்தினார்கள் என்று ஒப்புக்கு வைத்துக் கொண்டாலும், அதேப் போல வந்து ஆண்ட முகலாய, பிரிடிஷ் பற்றி கலையத்திலோ உங்கள் தளத்திலோ ஒன்றுமில்லையே? யாராவது பணம் கொடுத்தார்களா? ஓ பணம் கொடுத்தாலும் தப்பில்லை என்று நீங்கள் தானே சொல்லறீங்க

வாழ்க வளமுடன்
ஸ்மார்ட்

smart said...

///பாஜகவின் இளைஞர அணி நடத்திய இந்த கருத்தரங்கில் நிறைய இந்து மத வேதங்களையும் புராணங்களையும் பற்றி அறிந்து கொள்ளலாம் என்று கருத்தரஙகை இணையத்தில் பார்வையிட்டேன்.///
lol

உங்களைப் போல மாற்று மத நண்பர்கள் தான் பிஜேபியை மதவாதக் கட்சி என்று சொல்கிறார்கள் என்பதற்கு நல்ல உதாரணம்

smart said...

ஆரியர்கள் வந்தார்கள் என்று சொல்லும் நம்மூர் அறிவாளிகள் பாபருக்கு முன் அங்கே ராமர் கோவில் இருந்தது என்பதை மட்டும் என்று சொல்லமறுக்கிறார்கள் விவரம் தெரிந்தால் சொல்லவும் அண்ணே!
இஸ்லாததில் சாதியில்லை என்பவர்களின் நிக்கா பத்திரிக்கையில் ஏன் ஒரே சாதிக்காரவர்கள் பெயர் இருக்கு? வேறு சாதியில் பெண் கொடுத்து பெண் எடுக்க மாட்டார்களா என்று சொல்லுங்க சார்

smart said...

மகமதியரும் தீண்டாமை பாராட்டினர்!

கறுத்தான் said...

அமைபாக்கபட்ட எல்லா மதங்களுமே மக்களுக்கு எதிரானது தான் !சுடலை ஈஸ்சக்கி..... வழிபாடு என்பது சாதி ரீதி ஆனது அல்ல! தென் தமிழகத்தின் அணைத்து மக்களும் வழிபடும் தெய்வங்கள்( பிராமணர் தவிர) எனவே இது பூர்வ குடி மக்களின் வழிபாடு இதற்கும் ஆதிக்க இந்து மதத்திற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை எல்லுரும் இந்து என்று சொல்வது பிராமணிய கருத்து !

suvanappiriyan said...

திரு உதயம்!

//அதுதான் உன் மதம் உனக்குப் போதிக்கிறதா? ஒரு தீண்டத்தகாதவன் முஸ்லிமாக மாறி விட்டால், இக் குளத்திலிருந்து அவன் தண்ணீர் எடுப்பதை நீ தடுப்பாயா? என்று கேட்டேன். இந்த நேரடியான கேள்விகள் அந்த மகமதியர்களைப் பாதித்தன. எந்தப் பதிலும் அளிக்காமல் அவர்கள் அமைதியாக நின்றனர்.//

அம்பேத்காரின் இந்த சம்பவத்தை நானும் முன்பு படித்துள்ளேன். தாழ்த்தப்பட்டவர்கள் தண்ணீரில் கை வைத்ததால் குளம் அசுத்தமாகி விட்டது என்று அம்பேத்காரிடம் அந்த முஸ்லிம் இளைஞன் கோபமாக கேட்கிறான். இந்த எண்ணம் எதனால் அந்த இளைஞனுக்கு வருகிறது. பெரும்பான்மையான இந்துக்கள் அரிஜனங்களை நடததும் முறையை அந்த இளைஞன் தினமும் பார்க்கிறான். 'ஓ...இவர்களை இப்படித்தான் நடத்த வேண்டுமோ' என்ற எண்ணம் அவன் மனதில் பதிநது விடுகிறது. அதையே செயலிலும் காட்டுகிறான்.

'தாழ்த்தப்பட்டவன் உன் மதமான இஸ்லாத்துக்கு மாறி விட்டால் அப்பொழுதும் அவனை தடுப்பாயோ?' என்று அம்பேத்கார் கேட்க பதில் இல்லாமல் அந்த இளைஞன் திரு திரு என முழித்ததையும் பார்க்கிறோம். ஏனெனில் குர்ஆனைக் காட்டியோ முகமது நபியின் வழி முறையைக் காட்டியோ அவனால் தீண்டாமையை தூக்கி நிறுத்த முடியாது.

இஸ்லாத்தில் தீண்டாமை கிடையாது என்பதை அம்பேத்காரும் உணர்ந்ததாலேயே அப்படி ஒரு இக்கட்டான கேள்வியையும் அந்த இஸ்லாமிய இளைஞன் முன் வைக்கிறார்.

மற்ற உங்களின் கேள்விகளுக்கு வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து வந்து பதிலளிக்கிறேன்.

suvanappiriyan said...

திரு ஸ்மார்ட்!

//ஆரியர்கள் வந்தார்கள் என்று சொல்லும் நம்மூர் அறிவாளிகள் பாபருக்கு முன் அங்கே ராமர் கோவில் இருந்தது என்பதை மட்டும் என்று சொல்லமறுக்கிறார்கள் விவரம் தெரிந்தால் சொல்லவும் அண்ணே!//

ராமர் எப்போது பிறந்தார்? எங்கு பிறந்தார்? என்பதற்கு சரித்திர சான்று கொடுங்கள். அதன்பிறகு அங்கு கோவில் இருந்ததா? என்ற ஆராய்ச்சிக்கு போகலாம். தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களே பாபர் மசூதி இருந்த இடத்தில் கோவில் இருந்ததற்கான ஆதாரம் இல்லை என்கின்றனர். பிஜேபி ஆட்சியை பிடிக்க எடுத்த தந்திரம்தான் ராமர் கோவில். எப்போதெல்லாம் அவர்களுக்கு சரிவு ஏற்படுகிறதோ அப்போதெல்லம் ராம பக்தி பீறிட்டுக் கிளம்பும். ராமர் கதை என்பதே கற்பனையாக புனையப்பட்ட ஒரு கதாபாத்திரம்தான் என்பது அறிஞர்களின் கூற்று.

//இஸ்லாததில் சாதியில்லை என்பவர்களின் நிக்கா பத்திரிக்கையில் ஏன் ஒரே சாதிக்காரவர்கள் பெயர் இருக்கு? வேறு சாதியில் பெண் கொடுத்து பெண் எடுக்க மாட்டார்களா என்று சொல்லுங்க சார்//

எதை சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. ஆதாரத்தோடு சொன்னால் விளக்கம் தரலாம்.

//ஆரிய இனம் வந்து திராவிடர்களை அடிமைப்படுத்தினார்கள் என்று ஒப்புக்கு வைத்துக் கொண்டாலும், அதேப் போல வந்து ஆண்ட முகலாய, பிரிடிஷ் பற்றி கலையத்திலோ உங்கள் தளத்திலோ ஒன்றுமில்லையே? யாராவது பணம் கொடுத்தார்களா? ஓ பணம் கொடுத்தாலும் தப்பில்லை என்று நீங்கள் தானே சொல்லறீங்க//

முகலாயர்கள் வெளிநாட்டவர் என்பதிலோ பிரிட்டிஷார் வெளிநாட்டவர் என்பதிலோ எந்த மாற்று கருத்தும் இல்லையே! ஒரு நாட்டை மற்றொரு நாட்டான் பிடிப்பதென்பது அந்த காலத்தில் சர்வ சாதாரணம். ஆனால் ஆரியர்கள் இந்த நாட்டை பிடித்து பூர்வீக மக்களை தங்களின் அடிமைகளாக்கியதைத்தான் பலரும் விமரிசிக்கின்றனர்.

முகலாயர்கள் வந்தார்கள் ஆட்சி செய்தார்கள். பிறகு வந்த பிரிடடிஷாரால் முறியடிக்கப்பட்டாரகள். அதோடு அவர்களின் வேலை முடிந்தது.

அதே போல் பிரிட்டிஷார் வந்தனர். நமது நாட்டை ஆண்டனர். பிறகு சுதந்திர போராட்டத்தால் விரட்டப்பட்டனர். அவர்களின வேலையும் அத்தோடு முடிந்தது.

ஆனால் ஆரியர்களை அவ்வாறு ஒதுக்க முடியாது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன் வந்த அவர்கள் ஓரிறைக் கொள்கையிலே சிறந்திருந்த நமது முன்னோர்களின் வணக்கத்தை சிதைத்து ஆரியர்களின் பல தெய்வ வணக்கத்தை புகுத்தி விட்டனர். இங்கு ஒரு கலாசாரமே வீழ்த்தப்பட்டது.அனைத்து மக்களையும் இந்துக்கள் என்ற ஒரு கூட்டுக்குள் கொண்டு வந்து அடைக்க இன்று வரை முயற்ச்சிகள் நடந்து வருகிறது. சில இடங்களில் இந்துத்வா வெற்றியும் பெற்றுள்ளது.

suvanappiriyan said...

கருதா!

//அமைபாக்கபட்ட எல்லா மதங்களுமே மக்களுக்கு எதிரானது தான் !//

ஒத்துக் கொளகிறேன். எனவேதான் நான் இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன்.

//சுடலை ஈஸ்சக்கி..... வழிபாடு என்பது சாதி ரீதி ஆனது அல்ல! தென் தமிழகத்தின் அணைத்து மக்களும் வழிபடும் தெய்வங்கள்( பிராமணர் தவிர)//

பிராமணர் தவிர என்ற வாதம் வந்தாலே அங்கும் சாதி நுழைந்து விடுகிறதே!

//எனவே இது பூர்வ குடி மக்களின் வழிபாடு இதற்கும் ஆதிக்க இந்து மதத்திற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை எல்லுரும் இந்து என்று சொல்வது பிராமணிய கருத்து !//

ஒத்துக் கொள்கிறேன்.

AshIQ said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

ஒரே வார்த்தை...

இந்துக்கள் இப்படி சந்துக்களில் இருந்து சத்தம் போட்டுக் கொண்டிருப்பதைவிட்டு இஸ்லாமியர்களுடன் நேரடி விவாதம் செய்யத்தயாரா?

இரண்டு மதங்களில் உள்ள கொள்கைகளையும் அறிவு சார்ந்த விவாத்தினால், உரசி பார்க்க தயாரா?

நேரடி விவாத்ததிற்கு வர இயலாமல் இங்கே கூட்டம் போடுவது எதற்கு?.

(உண்மையான மற்றும் அணைவருடனும் சகோதரத்துவம் பேனும் இந்து சகோதரர்கள் வருத்தப்பட்டுக்கொள்ளவேண்டாம் ப்ளீஸ்)
-பஹ்ருத்தீன்

AshIQ said...

//இந்துக்கள் அரிவாளை எடுக்கிற முட்டாள்கள்ன்னா//
அரிவாளோட போஸ் கொடுக்கிறதை பெருமையா நினைக்கிற யாரு நீங்கதானே?

//முஸ்லீம்கள் மனித வெடிகுண்டா மாறி கொத்து கொத்தா கொல்ற புத்திசாலிகளா?//
கண்டுபிடிச்சுட்டாருய்யா, முஸ்லீம்கள் மனிதவெடி குண்டுனு, தற்கொலையை கடுமையாக கண்டிக்கும் ஒரே மதம் இஸ்லாம்தான், உலக வரலாற்றில் முதன்முதலில் தற்கொலைப்படையை கண்டுபிடித்தவர் என அறியப்படுபவர்
தேவேந்திரகுல வேளாளர் சுந்தரலிங்கம் என்ற இந்து மதத்தை சேர்ந்தவர்தான் என்பதை உமக்கு சொல்லிதருகிறேன்.தான் செத்துப்போறதும் மட்டும் இல்லாமல், திருமணம் செய்றதுக்கு முன்பாகவே முறைப்பென்னையும் தற்கொலை தாக்குதல் நடத்த வைத்தவர்.
//உலகில் தம் மதத்தவர்களாலேயே அதிகமா கொல்லப்படும் மதம் எதுன்னா முஸ்லீம் மதம் தான்//

என்னது மத்தத்தை கொலை செய்ஞ்சாங்களா? அச்சச்சோ அது எப்ப நடந்துச்சு.
உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் மதம் இஸ்லாம் என்பதை தெரிந்து கொள்ளும். உலக நடப்பு கேளுங்களேன் சொல்லிதருகிறோம். ஏனென்றால் மற்றவர்களுக்கு அறிவை போதிக்க வேண்டும் என்றூம் போதிக்கிறது இஸ்லாம். தற்போது கூட கிரிக்கெட் வீரர் வேய்ன் பெர்னல் இஸ்லாம் மதத்தை தழுவியுள்ளார்.
மைக்கேல் ஜாக்ஸன், மைக் டைசன், இப்படியே உலக பிரபலங்களை சொல்லிக்கொண்டே போகலாம், ஆனால் உலக விஷயங்களை சொன்னால் புரியுற அளவுக்கு உமக்கு விபரம் வேண்டுமே, சரி உமது ரேஞ்சுக்கு சொல்லப்போனால்...பெரியார்தாசன் தெரியுமா? அதான் கருத்தம்மா படத்திலே நடிச்சாரே அவரேதான் அவரு கூட இஸ்லாமை தழுவியுள்ளார், உங்க மதத்துல இருக்க பிடிக்காமல்தான்.

//நீங்க பிற மதத்தை விமர்சிக்கிறிங்களா?//
என்றூமே நாங்கள் பிற மத்தை திட்ட விரும்பியவர்கள் அல்ல, மற்றவர்கள் மதங்களை திட்டாதீர் என இஸ்லாம் கண்டித்துள்ளது. எங்குமே இஸ்லாமியன் ஒருவன் எந்த மதத்தையுமே வம்பிழுத்த சரித்திரமே இல்லை. இஸ்லாமியர்கள் சீண்டிய பின்பு பதிலடியாகத்தான் திட்டுவார்களே தவிர, உங்களை மாதிரி வம்பிழுக்க விரும்பியவரள் அல்ல இஸ்லாமியர்கள்.
உலகிலேயே தன் மதத்தவரால் தூற்றப்படும், திட்டப்படும் ஒரே மதம் இந்து மதம் தான். உதாராணம் நான் சொல்லவேண்டியதில்லை, ஏன்னா இந்த விஷயம் என்னை விட உங்களுக்கே அதிகமாக தெரியும்.
இல்ல இது கூட தெரியாதுனா கேளுங்க, இதையும் சொல்லித்தரேன்.
-பஹ்ருத்தீன்

suvanappiriyan said...

சகோ ஆஷிக்!

சிறப்பான கருத்துகளை பதிலாக அவர்களுக்கு கொடுத்துள்ளீர்கள். உங்களின் முதல் பின்னூட்டத்தில் சில வார்த்தைகளை கோபத்தில் பயன்படுத்தியிருந்தீர்கள். எனவேதான் சில திருத்தங்களுடன் அதனை வெளியிட்டேன்.

தொடர்ந்து கருத்துக்களை அளித்து வாருங்கள்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Parthiban said...

http://www.facebook.com/pages/BJP-YuvaMorcha/311600178855486?sk=app_196506863720166

மேற்கண்ட இணைப்பில் எமது கருத்தரங்க நிகழ்ச்சி காணொளியை காணலாம்.

Anonymous said...

இந்துக்கள் தான் உலகிலயே மிகப்பெரிய முட்டாள்கள் ஏன் என்றால் கொஞ்சமாவது அறிவிருந்தாள் சிலையையும் பசுவையும் பன்றியையும் எலியையும் நாயையும் வணங்குவார்களா சிவபெருமான் ஒரு கடவுள் அவருக்கு பார்வதி,தெய்வானை என்று ரெண்டு பொன்டாட்டி வேற அதுல ஒன்று கல்ல பொன்டாட்டி தேவையா கடவுளுக்கு

கபிலன் said...

தங்களுடைய பரிதாபத்திற்கு நன்றி : )
நான் என்ன சாதியாக இருந்தால் தங்களுக்கென்ன ? சக மனிதனாக நினைத்து கருத்தை சொல்லுங்க சார்...

சாதியை நாங்கள் மறந்தாலும், நீங்க மறக்க மாட்டீங்க போல தெரியுதே !

கபிலன் said...

" Parthiban said...
http://www.facebook.com/pages/BJP-YuvaMorcha/311600178855486?sk=app_196506863720166

மேற்கண்ட இணைப்பில் எமது கருத்தரங்க நிகழ்ச்சி காணொளியை காணலாம்."

Link is not working