Followers

Tuesday, June 26, 2012

மார்க்கத்தின் குரு இறைவனுக்கு சமமாக முடியுமா?

இன்று பல குடும்பங்களை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கும் ஒரு தலையாய பிரச்னை ஆன்மீகம். மனிதன் தற்போது அவசர உலகத்தில் மன நிம்மதியின்றி வாழ்கிறான். எங்கு பார்த்தாலும் எந்திர வாழ்க்கை. மன நிம்மதி வேண்டி தன்னை படைத்த இறைவனை நோக்கி அவனது கவனம் செல்கிறது. இந்த நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் சில கயவர்கள் தங்களை ஆன்மீக குரு என்றும் கடவுளுக்கு நெருக்கமானவர்கள் என்றும் கூறி அப்பாவி மக்களை வளைத்துப் போடுவதில் குறியாக இருக்கின்றனர். சில பெண்கள் கற்பையும் இழந்து சொத்து சுகங்களையும் இழந்து நடுத் தெருவில் நிற்கும் காட்சியைப் பார்க்கிறோம். பத்திரிக்கைகளிலும் தினமும் படிக்கிறோம்.


முகமது நபி மனிதப் படைப்பல்ல: அவர் தேவர்களை ஒத்த விஷேச படைப்பு என்று பலர் கூறி அதுபோல் தாங்களும் தெய்வாம்சம் பொருந்திய ஒரு மகான் என்று வலையை விரிப்பர். பிற்காலத்தில் தன் பெயரால் இது போன்று பல பொய்கள் அரங்கேற்றப்படும் என்று தெரிந்ததால்தான் அதன் வாசல்கள் அனைத்தையும் முகமது நபி அடைத்து விட்டு சென்று விட்டார். இதற்கு ஆதாரமாக ஒரு அருமையான நபி மொழியைப் பார்ப்போம்.

"என் பெயரில் ஏதேனும் ஒரு செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் அதாவது உங்கள் உணர்வுகள் அச்செய்திக்குப் பணியுமனால் இன்னும் அச்செய்தி உங்களுடைய வாழ்க்கைக்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதைக் கூறுவதில் நானே உங்களில் மிகத் தகுதி வாய்ந்தவன்."
"என் பெயரில் ஏதேனும் ஒரு செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்கள் உள்ளம் வெறுக்குமானால் இன்னும் உங்களது தோல்களும் முடிகளும் அதற்குக் கட்டுப்படாமல் அதை விட்டு விரண்டு ஓடுமானால் இன்னும் அச்செய்தி உங்களுடைய வாழ்க்கைக்கு சாத்தியப்படுவதை விட்டும் தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களில் நானே அதை விட்டும் தூரமானவன்"

அறிவிப்பவர்: நபித் தோழர் அபூ உஸைத்
நூல்: அஹமத் 15478


பெரிய தலைப்பாகையோடு பெரிய தாடியோடு ஒரு பெரியவர் வந்து 'நான் இறைவனுக்கு நெருக்கமானவன்: என் காலில் விழுந்து ஆசி பெறுங்கள்' என்று கூறினால் உடன் தெளிவில் இருக்கும் ஒருவனின் மனசாட்சி இதை ஒத்துக் கொள்ளாது. நம்மைப் போன்று ஆசா பாசங்கள் நிறைந்த மல ஜலத்தை சுமந்து கொண்டிருக்கிற ஒருவன் எப்படி இறைவனாக முடியும்? எப்படி இறைவனுக்கு நெருக்கமானவனாக முடியும்? என்ற கேள்விகளை எழுப்பும். ஆன்மீகத்தைப் பற்றியும் கடவுளின் வல்லமையைப் பற்றியும் அறியாத ஒருவன் அந்த போலி ஆன்மீகவாதியிடம் உடன் சரணடைந்து விடுவதைப் பார்க்கிறோம்.

முகமது நபியை பற்றி கூறும்போது 'தனக்கு பின்னால் நடப்பதை எல்லாம் அறிவார்: அவருக்கு ஞானக் கண் உள்ளது. உங்கள் உள்ளத்தில் உள்ளதையும் அறியும் ஆற்றல் பெற்றவர்:' என்று கூறும் சிலரை நாம் பார்த்துள்ளோம். இவ்வாறு முகமது நபிக்கு இறைத்தன்மையை கொடுப்பதோடு 'மனிதனும் தெய்வமாகலாம்' என்ற கொள்கையை சொல்லி தனக்கும் கூட்டம் சேர்க்கும் பல போலி ஆன்மீக வாதிகளை அவ்வப்போது நாம் கேள்விப்படுகிறோம்.

'"நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான்: எனக்கு இறைவனிடமிருந்து வரும் செய்தியைத் தவிர வேறு எந்த சிறப்பும் பெற்றவன் அல்ல" என்று முகமது நபி கூறினாலும் சில ஆதாரமில்லாத நபி மொழிகளை கொடுத்து பாமர மக்களை வலையில் வீழ்த்த முயற்ச்சிப்பர்.

அடுத்து ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இளைஞர்களை மார்க்க போதனை என்ற பெயரில் சில பொய்யான நபி மொழிகளை போதித்து தற்கொலை குண்டுதாரிகளாக மாற்றுவதை பார்க்கிறோம். ஜிஹாதுக்கு தவறான விளக்கம் கொடுக்கப்படுகிறது. குர்ஆனை விளங்கிய ஒரு முஸ்லிம் இந்த வலையில் வீழ மாட்டான். அவனுக்குத் தெரியும். அப்பாவி மக்களை கொல்வது குர்ஆனில் எந்த அளவு தடுக்கப்பட்டுள்ளது என்பதை. மொசாத்தும், சிஐஏ வும் சில கள்ள மார்க்க அறிஞர்களை கைக்குள் போட்டுக் கொண்டு பாகிஸ்தான் மசூதிகளில் குண்டு வைப்பதை பார்க்கிறோம். இந்த இளைஞர்கள் எல்லாம் மேலே உள்ள நபி மொழியை சரியாக சிந்தித்தார்கள் என்றால் அழிவிலிருந்து வெளி வருவார்கள்.

அடுத்து திருட்டு, கொலை, விபசாரம், பொய், வட்டி போன்ற பெரும்பாவங்களை என் மனசாட்சி நியாயப்படுத்துகிறது: எனவே மேலே உள்ள நபி மொழிக்கிணங்க நான் செய்கிறேன் என்ற வாதத்தை வைப்பதும் சிறு பிள்ளைத் தனமானது. இந்த பெரும்பாவங்கள் அனைத்தும் தண்டனைக்குரிய குற்றங்கள் என்று குர்ஆன் தெளிவாகக் கூறி விடுகிறது. எனவே சந்தேகம் உள்ள ஒரு செய்தி முகமது நபி சொன்னதாக நமக்கு கிடைத்தால் முதலில் அது குர்ஆனுக்கு மாற்றமாக இருந்தால் உடன் புறம் தள்ளி விட வேண்டும். மேலும் சில பொதுவான விஷயங்களில் நமது மனசாட்சியைக் கேட்டாலே அழகிய பதில் கிடைத்து விடும். குர்ஆனுக்கும் ஆதாரபூர்வமான நபி மொழிக்கும் மாற்றாக ஒரு செய்தி நமக்கு கிடைத்தால் நம் மனசாட்சியிடம் கேட்டு நாமே ஒரு முடிவுக்கு வந்து விடலாம். இதில் குழப்பமே இல்லை. இதற்காக ஒரு பெரிய மார்க்க அறிஞரை தேடுவதும்: அவர் தவறான வழியை இவருக்கு காண்பிப்பதும்தான் தற்போது உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது.

அப்துல்கைஸ் தூதுக் குழுவினர் முகமது நபி அவர்களிடம் வந்த போது 'இந்த மக்கள் யார்?' என்று நபிகள் நாயகம் அவர்கள் கேட்டார்கள். அதற்கு அங்கிருந்த மக்கள் 'இவர்கள் ரபீஆ குடும்பத்தினர்' என்றார்கள். இதைக் கேட்ட முகமது நபி அவர்கள் 'இழி நிலை காணாத, வருத்தத்திற்குள்ளாகாத சமுதாயமே வருக! உங்கள் வரவு நல்வரவாகுக' என்று வாழ்த்துக் கூறினர்.

-அறிவிப்பவர் இப்னு அப்பாஸ்
நூல்கள்: புகாரி 53, 87, 4368


இந்த நபி மொழியின் படி தனக்கு முன்னால் உள்ள மக்கள் கூட்டம் யார் என்பதை அறியாதவர்களாகவே முகமது நபி இருந்துள்ளார். மற்றவர்கள் சொன்னபோதுதான் இவர்கள் இன்னார் என்று நபிகளுக்கே விளங்குகிறது. இது போல் பல நபி மொழிகளை நாம் பார்க்கிறோம்.

இறைவன் சில நேரங்களில் அறிவித்துக் கொடுத்தால்தான் அவர்களால் சில மறைவான விஷயங்களை அறிய முடிகிறது. மற்ற நேரங்களில் அவர்களும் நம்மைப் போன்ற ஒரு மனிதராகத்தான் வாழ்ந்து மறைந்தார்கள். ஒரு இறைத் தூதருக்கே இஸ்லாத்தில் இந்த நிலைதான். ஆனால் நாமோ நாகூரிலும், ஏர்வாடியிலும், அஜ்மீரிலும் அடங்கியுள்ளவர்கள் நம்மைக் காப்பாற்றுவார்கள். நமது தேவைகளை பூர்த்தி செய்வார்கள் என்று நம்பிக் கொண்டு வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறோம். பல கள்ள மார்க்க அறிஞர்களையும் போலி சாமியார்களையும் நம்பி நமது தன்மானத்தை இழந்து நிற்கிறோம்.

என் மீது பொய் சொல்வ தென்பது வேறு யார் மீதும் பொய் சொல்வதைப் போன்றதல்ல. என் மீது வேண்டுமென்று பொய் சொல்பவர் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.
அறிவிப்பவர் : முகீரா (ரலி), நூல் : முஸ்லிம்.


மேற்கண்ட நபி மொழி முகமது நபியின் பெயரால் ஒரு பொய்யை சொல்லுவது எந்த அளவு குற்றம் என்பதையும் விளங்குகிறோம்.

எனவே உண்மையான இஸ்லாத்தை உணர்ந்து அதன்படி அமல் செய்யக் கூடிய நன் மக்களாக உங்களையும் என்னையும் இறைவன் ஆக்கி அருள்புரிவனாக!





18 comments:

Anonymous said...

Masha Allah

suvanappiriyan said...

திரு புனை பெயரில்!

//நான் ஒரு இஸ்லாமியன் என்று சொன்னால் குர்ஆனை விளங்கியிருக்க வேண்டும்–> அப்படியா…? திருக்குறளை படித்ததுண்டா… எந்தவிதமான தீவிரவாதமுமின்றி வாழ்வுமுறை தத்துவம் சொல்லும் நூல். நீங்கள் ஏன் திருக்குறளை பின்பற்றவில்லை…? படிக்கலையா..? இல்லை பிடிக்கலையா…?//

திருக்குறளை நான் நன்றாகவே விளங்கியுள்ளேன். 100க்கு மேற்பட்ட குறள்கள் மனனமாகவே தெரியும். அது யாருக்கு அருளப்பட்டது? எந்த காலத்தில் அருளப்பட்டது? என்ற விபரம் நம்மிடம் இல்லை. இந்தியாவில் உள்ள இலக்கியங்களிலேயே மிக உயர்ந்த தரத்தில் வைத்து பார்க்க வேண்டிய ஒரு நூல் திருக்குறள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. திருக்குறள் போதிக்கும் பல சட்டங்கள் குர்ஆனிலும் வருவதைப் பார்க்கிறேன். ஒருக்கால் குர்ஆன் பைபிள் போல இதுவும் நம் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்ட வேதமாகவும் இருக்கலாம். திருவள்ளுவர் ஒரு இறைத்தூதராகவும் இருக்கலாம். உண்மையை இறைவனை அறிவான்.

'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்'
-குர்ஆன் 14:4

இந்த வசனத்தின்படி உலகில் உள்ள மூல மொழிகள் அனைத்திற்கும் இறை வேதமும் இறைத்தூதரும் வந்திருப்பதாக குர்ஆன் கூறுகிறது. அந்த வகையில் செம்மொழியான தமிழ்மொழிக்கும் வேதமும் தூதரும் வந்துள்ளனர். அவர் திருவள்ளுவராகவும் இருக்கலாம்.

'அவர்களில் ஒரு பகுதியினர் இறைவனின் வார்த்தைகளைச் செவியேற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர்'
-குர்ஆன் 2:75

முன்பு அனுப்பப்ட்ட வேதங்கள் மார்க்க அறிஞர்களின் சுயநலத்தால் தங்கள் விருப்பத்துக்கு மாற்றி விட்டதாக குர்ஆன் கூறுகிறது. வருடா வருடம் புதிய மாற்றங்களோடு பைபிள் வெளியிடப்படுவதை நாம் அறிவோம். சித்தர்களின் பாடல்கள் திருக்குறளின் மேலும் பல பாகங்கள் நமக்கு கிடைக்கவில்லை. அடுத்து 'திங்களை பாம்பு கொண்டற்று' என்று அறிவியலுக்கு முரண்படும் குறளையும் பார்க்கிறோம். மாமிசம் உண்ணாமல் வாழ்பவனை எமன் கூட உயிரை எடுக்க அஞ்சுவான் (குறள்33:326) என்று வரும் குறளைப் பார்க்கிறோம். எஸ்கிமோக்களிடம் இதை சொன்னால் அவர்கள் நம்மை அடிக்க வருவார்கள். இது போல் பல குறள்களை என்னால் காட்ட முடியும். இவை எல்லாம் இடைச் செருகலாகக் கூட இருக்கலாம். அடுத்து புதிதாக ஒரு வேதம் வரும்போது அதற்கு முன்பு இருந்த வேதத்தின் கட்டளைகளை பின்பற்ற தேவையில்லை. எனவே தற்போது இறை வேதத்துக்குரிய அனைத்து தகுதிகளையும் குர்ஆன் பெற்றிருப்பதாக நான் எண்ணுவதால் குர்ஆனை பின்பற்றுகிறேன். அதற்காக திருக்குறளையோ திருவள்ளுவரையோ மட்டமாக நினைப்பதாக எண்ண வேண்டாம். இலக்கியம் என்ற வகையில் அதன் மீது எனக்கு இன்றும் மதிப்பு உள்ளது.

suvanappiriyan said...

திரு க்ருஷ்ணகுமார்!

//ஜெனாப் சுவனப்ரியன்,

தங்களது மேற்கண்ட கூற்று ஒரு தனிமனிதனின் சுய புரிதலின் பாற்பட்டதாக உள்ளது. அது வரை சரியே. ஆனால் பாக்கிஸ்தானிலும் துரத்ருஷ்டவசமாய் ஹிந்துஸ்தானத்திலும் குரான்-ஏ-ஷெரீஃப் படி ஒருவர் நடக்கிறாரா இல்லையா என்பதை அவரவரின் தாலீம் படி இல்லாது தப்லீக்குகள் முடிவு செய்யும் நிலையே உள்ளது. கிட்டத்தட்ட தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற நிலை. வாயைத் திறந்து பாடக்கூடாது என்று ஒரு பாடகனை ஒரு சர்க்கார் ஷரியத் படி தடுக்க இயலும் என்ற நிலை மோசமானது இழிவானது.//

இந்தியாவில் அப்படி ஒரு நிலை எங்குமே இல்லை. ஏ.ஆர்.ரஹ்மான் பல இஸ்லாமிய கீதங்களை பாடி அது உலகப்புகழும் பெற்றுள்ளது. விரும்பியவர்கள் கேட்பார்கள். விரும்பாதவர்கள் தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு சென்று விடுவார்கள். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானத்தைப் பொறுத்தவரை உண்மையான இஸ்லாம் அவர்களுக்குப் போதிக்கப்படவில்லை. மொகலாயர் ஆட்சியில் அரசர்களை குஷிப்படுத்த சில கள்ள அறிஞர்கள் எழுதிய சட்ட புத்தகங்களைத்தான் இஸ்லாமாக சொல்லிக் கொடுக்கின்றனர். இதனால் மூளை சலவை செய்யப்பட்ட சில இளைஞர்கள் ஆயுதத்தை கையில் எடுக்கின்றனர். இதற்கு இஸ்லாம் எப்படி பொறுப்பாக முடியும். சவுதி அரேபியாவும் ஷரீயத்தின்படிதான் ஆட்சி நடத்தி வருகிறது. அங்கு இந்து நண்பர்கள் பலர் குடும்பத்தோடு 10 வருடம் 20 வருடம் என்று பொருளீட்டுகின்றனரே! அவர்களை யாரும் தடுத்தனரா? ஏனெனில் சவுதியில் இஸ்லாமிய சட்டம் ஓரளவு முறையாக பேணப்படுகிறது.

பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தானையும் பொறுத்த வரை அந்த மக்களுக்கு கல்வியறிவு சரியாக கொடுக்கப்படவில்லை. உண்மையான இஸ்லாமிய மார்க்கத்தையும் ஆட்சியாளர்கள் போதிக்கவில்லை. இது இரண்டும் சரியானால் அமைதி திரும்பும்.

//இது போன்ற நிலைப்பாடுகள் தான் பாமியான் புத்தர் சிலைகளை குண்டு வைத்து தகர்க்கும் இழிநிலைக்கு காந்தார முஸல்மான்களைத் தள்ளியது.//

அதற்கு தாலிபான்கள் வேறு ஒரு காரணம் சொல்கிறார்கள். புத்தர் சிலைகளை புணரமைக்க ஐநா பல மில்லியன் டாலர்களை தர முன் வந்தது. தாலிபான்கள் அவர்களிடம் 'போரினால் எங்கள் நாடு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு பால் வாங்கக் கூட பொருளாதார வசதி எங்களிடம் இல்லை. எனவே அந்த பணத்தை கொடுத்து எங்கள் குழந்தைகளை காப்பாற்றுங்கள். சிலைகளை நாங்கள் பிறகு சரி செய்து கொள்கிறோம்' என்றனர். இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. 'எங்கள் குழந்தைகளுக்கு தராத பணம் சிலைகளை சரி செய்யவா தருகிறீர்கள்?' என்ற வேகத்தில் அந்த சிலைகளை தரை மட்டமாக்கினர். அவர்கள் தரப்பு சொல்லும் வாதமும் நியாயமாகத்தானே இருக்கிறது.

நம் நாட்டிலும் சாலையோரம் குடிசைகளில் மக்கள் ஒண்டிக் கொண்டிருக்கும் போது காயிதே மில்லத்துக்கும் காமராஜருக்கும் மணி மண்டபம் கட்ட பல கோடிகளை நமது அரசு அழிப்பதில்லையா? அதுபோல்தான் இதுவும்.

//காய்தேஆஜமின் மதவெறி வேண்டுமானால் ஹிந்துஸ்தானத்தை கூறு பிளந்திருக்கலாம். கலாசாரத்தின் அடிப்படையில் ஹிந்துஸ்தானம் ஒன்றே.//

காயிதே ஆஜம் மட்டுமல்ல. நேரு, ராஜாஜி, வல்லபாய் பட்டேல், ஜின்னா போன்ற அனைத்து தலைவர்களும் நாடு பிரிய ஆசைப்பட்டனர். இதற்கு வலுவான ஆதாரங்களும் உண்டு. இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் வாழ்க்கையை நடத்தக் கூடிய கலாசாரங்களில் ஒன்றாக இருக்கின்றனர். இறைவனை வணங்குவதில்தான் மாறுபடுகிறோம்.

NKS.ஹாஜா மைதீன் said...

சலாம் சகோ....

இஸ்லாத்தில் தனி மனித துதிபாடலுக்கு வேலையே இல்லை என்பதை அருமையாக சொல்லி இருக்கறீர்கள்...

ஷர்புதீன் said...

/ /கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)//

இந்த வரிகளை கவனித்தபோதே உங்களுக்கு திருக்குறள் மீதும், அதன் 'பல' கருத்துக்கள் மீதும் உடன்பாடு உண்டு என்பதை அறிந்தேன், எனக்கு தெரிந்தவகையில் திருக்குறளை மேற்கோள் காட்டும் போது , எனது 'பல' இஸ்லாமிய நண்பர்கள்,(குறிப்பாக தங்களது இஸ்லாமிய செயகல்களில் ஒரு வித அதீத ஆர்வத்தை வெளிபடுத்துபவர்கள்,) அவ்வளவாக ரசிக்கமாட்டார்கள். அவ்வப்போதுதான் உங்களை போன்ற சிலரை பார்க்க முடிகிறது.

தினமும் குளி என்பது போன்ற திருக்குறளை கூட 'பெரிதாக' அவர்கள் ரசித்ததில்லை, THE 100 (MICHALE H HEART) புத்தகத்தை இலக்கிய சோலை என்ற பதிபகத்தில்தான் படிக்க நேர்ந்தது, அது குறித்து அளவளாவும் போது கூட நபி ஸல் பற்றி மட்டுமே சிலாகிப்பார்கள். மற்றவர்கள் பற்றியும் அறிவியல் அறிஞர்கள் பற்ற்டியும் சிலாகிக்கலாம் என்றால் கூட அவர்களுக்கு உடனே ஞாபகம் வருவது அல்குவாரிஸ்மி, ஷிரின் அல்பாரெடேய் போன்றோர்கல்தான்.

அப்படியே ஒரு குட்டி சுயதம்பட்டம் -
உங்கள் மனதில் நீங்கள் நினைத்துகொள்ளும் பேமஸ் ஆன நபர்கள் , அவர்கள் எந்த துறையானாலும் எந்த நாடாக இருந்தாலும் அவர்களை இருப்பத்தொரு கேள்விகளுக்குள் கண்டுபிடிக்கும் விளையாட்டை சில வருடங்களாக அந்த விளையாட்டை பிடித்த நண்பர்களோடு விளையாடி வருகிறேன். ( எனது கண்டுபிடிக்கும் திறன் 80% சதவீதம் ) அது "இஸ்லாமிய" நண்பர்களாக இருந்தால் எனக்கு மிக மிக சுலபம் கண்டுபிடிக்க ... ஒன்று மல்கம் எக்ஸ், ....அல்லது அர்மேநியாவை சேர்ந்த புஹாரியாக, இருக்கும் இல்லையெனில் சலாவுதீன் போன்ற வீரராக இருக்கும்.. (மிக சிறிய வட்டத்துக்குள் வாசிக்கிறார்கள்)

suvanappiriyan said...

சலாம் சகோ ஹாஜா மைதீன்!

//இஸ்லாத்தில் தனி மனித துதிபாடலுக்கு வேலையே இல்லை என்பதை அருமையாக சொல்லி இருக்கறீர்கள்...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

naren said...

நண்பரே,

மார்க்க அறிஞர்கள் @ குருமார்கள் தேவையை உளவியல் மற்றும் நிதர்சன் ரீதியாகவும் பார்க்கலாம்.
அண்ணன் பி.ஜே அவர்கள் சொல்லும் ஏகத்துவம் கொள்கைகள் (மைனஸ் அரபி தாக்கம்) பின்பற்றி இந்து மதத்தில் இருந்தால் அவரை சாமியார் என்றுதான் அழைப்பார்கள். மற்ற மதங்களில் இருந்தால் அந்த மதப்படி அழைப்பார்கள்.

மார்க்கத்தை, மத கோட்பாடுகளை விளக்க ஒருவர் தேவைபடுவார், இதுதான் மதங்களின் நிதர்சன உண்மை. பி.ஜே. அவர்கள் இந்த அளவு ஜமாத்தை சேர்த்தற்கு அவரின் பேச்சு திறமையோ, மார்க்க விளக்கமோ மார்க்க படி நடப்பதோ அல்ல. அவரின் பலமே தனிமனித ஒழக்கம்தான். இது மார்க்கத்திற்கு அப்பாற்பட்டது. அதையும் நன்றாக அறிந்துள்ளார். மற்ற அறிஞர்களை பற்றி அப்படி சொல்ல முடியாது. இருந்தாலும் பி.ஜே.யின் தம்பிமார்கள் சாமியாரின் பக்தரைப்போல அவரின் சொந்த தேவைக்கு பணம் கொட்டுகிறார்கள், ஆனால் அவர் ஒழுக்கவாதியாக இருப்பதால் அதனை மறுத்து இயக்கதிற்கு அளிக்கிறார். பி.ஜே இந்து மதத்தில் இருந்தாலும் இதே ஒழுக்கத்தை வைத்து பெரிய சாமியாராக வந்திருப்பார்.

இந்து மதத்திலும் அப்படிதான் ஒழுக்கத்துடன் சாமியாராக இருப்பவர்களும் உண்டு ஒழுக்கமில்லாமலும் சாமியாராக இருப்பவரகளும் உண்டு.

இந்த ஒழுக்கம் மதம் சார்ந்தது அல்ல. ஒரு மனிதனின் பகுத்தறிவு சார்ந்தது எது சரி எது சரியில்லை என்று ஒரு மனிதனுக்கு தெரிந்துவிடும். நீங்களே ஹதீஸ்களை பற்றி சொல்லும்போது சொல்லியுள்ளீரக்ள். அதை போல தான் பகுத்து ஆராய்ந்தால் யார் உண்மையான சாமியார், அறிஞ்சர் என தெரிந்துவிடும்.

பகுத்தறிவு உள்ள சாதாரன மனிதனை தவிர்த்து, உளவியல் பிரச்சனை உள்ளவர்கள் தான் சாமியார், அறிஞர்கள் சொல்லும் பொய் கூற்றுகளை நம்பி மோசம் போகிறார்கள். இதன் காரண காரியங்கள் தான் அவுலியாக்கள், வாழும் கடவுள்கள் என்ற சமாச்சாரங்கள்.

இந்த மறுமொழிக்காக, நித்யானந்தாவிடம் போட்டு கொடுத்து வீட்டிற்கு ஆட்டோ வர மாதிரி செய்ய வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

naren said...

////அதற்கு தாலிபான்கள் வேறு ஒரு காரணம் சொல்கிறார்கள். புத்தர் சிலைகளை புணரமைக்க ஐநா பல மில்லியன் டாலர்களை தர முன் வந்தது. தாலிபான்கள் அவர்களிடம் 'போரினால் எங்கள் நாடு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு பால் வாங்கக் கூட பொருளாதார வசதி எங்களிடம் இல்லை. எனவே அந்த பணத்தை கொடுத்து எங்கள் குழந்தைகளை காப்பாற்றுங்கள். சிலைகளை நாங்கள் பிறகு சரி செய்து கொள்கிறோம்' என்றனர். இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. 'எங்கள் குழந்தைகளுக்கு தராத பணம் சிலைகளை சரி செய்யவா தருகிறீர்கள்?' என்ற வேகத்தில் அந்த சிலைகளை தரை மட்டமாக்கினர். அவர்கள் தரப்பு சொல்லும் வாதமும் நியாயமாகத்தானே இருக்கிறது.////


நண்பரே, உங்கள் நியாயம் புல்லரிக்க வைக்கின்றது. இதற்கு ஆதாராம் இருக்கின்றதா. குழந்தைகளுக்கு பணம் தரவில்லை என்றால் சிலைக்கு தரும் பணத்தை பெறாமல் இருப்பதுதான் ஒரு நியாயமுள்ள மனிதன் செய்வது.

சரி அந்த சிலையை உடைத்த மக்களுக்கு அல்லா மிக அதிகமாக கூலி கொடுப்பான் என்று நம்புவோமாக..

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,
நல்லதொரு சமூக விழிப்புணர்வுக்கான பதிவு சகோ. நன்றி.

suvanappiriyan said...

அளவுக்கதிகமான சுதந்திரத்தின் விலை:

வாஷிங்டன்:அமெரிக்காவில் விபசாரத்தில் ஈடுபட்ட, 79 சிறுமிகளை போலீசார் மீட்டுள்ளனர். இது தொடர்பாக, 104 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அமெரிக்காவில், 13 வயது முதல் 17 வயது வரையுள்ள, பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த வயதுள்ள, ஒரு லட்சம் பெண்கள் விபசாரத்தில் தள்ளப்படுவதாக சி.என்.என்., "டிவி' தெரிவித்துள்ளது.இதற்கிடையே எப்.பி.ஐ., அதிகாரிகள், பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி, 79 சிறுமிகளை விபசாரத்திலிருந்து மீட்டுள்ளனர். இவர்களை, "செக்ஸ்' தொழிலில் ஈடுபடுத்தியது தொடர்பாக, 104 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட ஒரு பெண் குறிப்பிடுகையில், "11 வயது முதல் இந்த தொழிலில் ஈடுபட்டு வந்தேன்' என்றாள்'வாடிக்கையாளர்களை கவர்வதற்காக தெருக்களில் நின்றிருந்த, 2,200 சிறுமிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக, 1,017 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Dinamalar
26-06-2012

Mohamed Nalim said...

தான்னை நேர்வலி படுத்தியது இறை வாக்குகளும் இறை அருளும் தான் என்று நம்புபவன் மாத்திரம் தான் இறைவாக்குடன் கலந்து வரும் மனிதக்கருத்தை ப்ரித்தரிவான் ஆனால் தனக்கு இன்னாரின் பேச்சின் மூலம் தான் நேர்வலி பெற்றோம் என்று நினைத்தால் அவன் தக்லீதில் மூழ்கி அவருக்கு இறை இச்தானத்தை குடுக்கிறான்

suvanappiriyan said...

நண்பர் நரேன்!

//நண்பரே, உங்கள் நியாயம் புல்லரிக்க வைக்கின்றது. இதற்கு ஆதாராம் இருக்கின்றதா. குழந்தைகளுக்கு பணம் தரவில்லை என்றால் சிலைக்கு தரும் பணத்தை பெறாமல் இருப்பதுதான் ஒரு நியாயமுள்ள மனிதன் செய்வது.//

http://www.greenspun.com/bboard/q-and-a-fetch-msg.tcl?msg_id=005AZw

பொருளாதார தடைகளால் அடிப்படை வசதிகள் சீர்குலைந்து நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஊட்டச்சத்துக்குறைவினால் மரணித்துக்கொண்டிருக்கும் தேசத்தில் பாமியான் புத்தச்சிலையை புதுப்பிக்கிறோம் என்ற பெயரில் ஐ.நாவின் யுனெஸ்கோ முயற்சி மேற்கொண்டது.குழந்தைகள் பட்டினியால் வாடும் பொழுது தங்களது தேசம் வறுமையில் உழலும் போது அதைப் பற்றி யெல்லாம் கவலைப்படாமல் உயிரற்ற சிலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றீர்களா? என்ற ஆதங்கமும், ஆத்திரமும் ஆப்கான் மக்களை புத்தர் சிலை உடைக்க காரணமானது.ஆனால், சர்வதேச முஸ்லிம் அறிஞர்களின் தலைவரான டாக்டர்.யூசுஃப் அல் கர்ழாவி ஆப்கானுக்கு நேரடியாக சென்று சிலைகளை உடைக்க வேண்டாம்.அருங்காட்சியகத்தில் கொண்டு செல்லுங்கள் என்று உபதேசித்தார்.

கண்ணதாசன் பாடினார் ' தெய்வம் என்றால் அது தெய்வம், சிலை என்றால் வெறும் சிலைதான் '. பார்வையில்தான் எல்லாம் இருக்கிறது. இன்னும் நான் பாமியான் புத்தச் சிலைகள் உலகத்தின் பாரம்பரியச் சொத்து என்று கூறுவதைக் கூட நான் ஒப்புக்கொள்ளவில்லை. அவை ஆப்கானியச் சொத்துக்கள். அவ்வளவுதான். பல கிராமங்களில் அய்யனார் சிலைகள் இருக்கின்றன. பெரிய குதிரை சிலைக்குப் பக்கத்தில் அய்யனார் வீரமாக சிமிண்டினால் செய்யப்பட்டு நின்று கொண்டிருக்கிறார். அவைகள் கிராமத்துச் சொத்து. அவைகளை உருவாக்குவதோ, உடைப்பதோ, மீண்டும் உருவாக்குவதோ, எல்லாம் அந்த கிராமத்தவரின் உரிமை. உலகச்சொத்து உரிமையாளர்கள் என்று கூறிக்கொண்டு யாரும் அவர்கள் ஊரில் வந்து அவர்களைத் தடுப்பதை விரும்பமாட்டோம். தாலிபான் உடைக்கும் சிலைகள் பெரியவையாக இருக்கலாம், மிகப்பழமையானவையாக இருக்கலாம். இருந்தால் என்ன ? பல கிராமங்களில் அய்யனார் சிலைகள் கவனிப்பாரற்று இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதுபோல் பவுத்தர்களே இல்லாது கவனிப்பாரற்று பழுதடைந்த சிலைகளை இடிப்பதால் யாருக்கு என்ன நஷ்டம் வந்து விடப் பொகிறது. வேண்டுமானால் அதை விட பெரிய சிலைகளை சீனாவிலோ, ஜப்பானிலோ, தாய்லாந்திலோ கட்டிக் கொள்ளட்டுமே? யார் தடுத்தது?
ஆகவே தாலிபானைத் திட்டவேண்டிய அவசியம் என்ன ? நான் அவர்களது கொள்கைகளை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் அவர்களது கொள்கைகளை வைத்துக்கொள்ள அவர்களுக்கு முழு உரிமை இருக்கிறது. அவை அவர்களது கொள்கைகள். அவர்களது சிலைகள். அவர்களது கலாச்சாரம். அவர்களது வரலாறு. உங்களுக்கு அவர்களது கொள்கைகள் பிடிக்கவில்லை என்றால், நீங்கள் அவர்களைப்போல ஆகாமலிருங்கள்.


//சரி அந்த சிலையை உடைத்த மக்களுக்கு அல்லா மிக அதிகமாக கூலி கொடுப்பான் என்று நம்புவோமாக..//


சைவ மன்னனை வைணவ மன்னன் வெற்றி கொண்ட பிறகு சைவக்கோவில்களை இடித்து வைணவக்கோவில்களாக மாற்றியது...

வைணவ மன்னனை சைவ மன்னன் வெற்றி கொண்ட பிறகு வைணவக்கோவில்களை சைவக்கோவில்களாக மாற்றியது...

இந்த இரண்டு சைவ/வைணவ மன்னர்களும் பவுத்த மன்னனை வெற்றி பெற்றால்... புத்த கோவில்களையும், புத்த சிலைகளையும் இடித்தது... எண்ணாயிரம் சமணர்களை வாதத்தில் தோற்றதால் கழுவில் ஏற்றியது... எல்லாம் வரலாற்றில் இருக்க...

இவர்களுக்கு அந்த அல்லா என்ன கூலி கொடுப்பான்? நம் தமிழகத்தில் வீழ்ந்தது அனைத்தும் சிலைகள் அல்ல: மனித உயிர்கள்: இதற்கும் சேர்த்து பிரார்த்தித்து விடுங்கள்.

suvanappiriyan said...

சலாம் சகோ முஹம்மது ஆஷிக்!

//ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,
நல்லதொரு சமூக விழிப்புணர்வுக்கான பதிவு சகோ. நன்றி. //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ ஷர்புதீன்!

//அப்படியே ஒரு குட்டி சுயதம்பட்டம் -
உங்கள் மனதில் நீங்கள் நினைத்துகொள்ளும் பேமஸ் ஆன நபர்கள் , அவர்கள் எந்த துறையானாலும் எந்த நாடாக இருந்தாலும் அவர்களை இருப்பத்தொரு கேள்விகளுக்குள் கண்டுபிடிக்கும் விளையாட்டை சில வருடங்களாக அந்த விளையாட்டை பிடித்த நண்பர்களோடு விளையாடி வருகிறேன். ( எனது கண்டுபிடிக்கும் திறன் 80% சதவீதம் ) அது "இஸ்லாமிய" நண்பர்களாக இருந்தால் எனக்கு மிக மிக சுலபம் கண்டுபிடிக்க ... ஒன்று மல்கம் எக்ஸ், ....அல்லது அர்மேநியாவை சேர்ந்த புஹாரியாக, இருக்கும் இல்லையெனில் சலாவுதீன் போன்ற வீரராக இருக்கும்.. (மிக சிறிய வட்டத்துக்குள் வாசிக்கிறார்கள்)//

ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஆர்வங்கள் இருக்கும். உங்களுக்கு செஸ்விளையாட பிடிக்கும். எனக்கு பால் பேட்மிட்டன் விளையாட பிடிக்கும். கேரம் போர்டில் ஒரே தடவையில் அனைத்து காய்களையும் போட்டு கேமையே முடித்தவன் நான். அதே போல் பாடுவது தாளம் போடுவது போன்றவற்றிலும் படிக்கும் காலங்களிலிருந்தே ஆர்வம். ஓவியமும் அது போல்தான். எனவே எதுவுமே நமது அறிவை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். அவை சிக்கலில்லாத வாழ்வை தரக் கூடியதாகவும் இருக்க வேண்டும். மன அமைதியும் கிடைக்க வேண்டும். இதற்காக நாம் தேடலிலும் இருக்க வேண்டும். அந்த தேடல் நமது மறு உலக வாழ்வுக்கு ஏற்புடையதாகவும் இருக்க வேண்டும்.

தேடுங்கள் கிடைக்கும்: தட்டுங்கள் திறக்கப்படும்:

suvanappiriyan said...

சகோ நரேன்!

//பி.ஜே இந்து மதத்தில் இருந்தாலும் இதே ஒழுக்கத்தை வைத்து பெரிய சாமியாராக வந்திருப்பார்.//

அண்ணன் பிஜேயின் மேல் உங்களுக்கு ஏன் சார் இந்த கொலை வெறி? :-) அவர் இஸ்லாத்தில் இருப்பதால்தான் மறுமையில் இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும் என்ற பயத்தில் நேர்மையாக நடந்து வருகிறார். மறுமை என்று ஒன்று உண்டு: அங்கு கேள்வி கணக்குகளும் உண்டு: என்ற நம்பிக்கையை அவருக்குத் தந்தது எது? மனித கருத்துகள் புகாத குர்ஆன். அதையும் அரபியிலேயே விளங்கியிருக்கிறார். அந்த அரபி மொழியை நன்றாக விளங்கியவர்கள் முகமது நபியின் ஹதீஸுக்கும் குர்ஆனுக்கும் உள்ள மொழி நடை வேற்றுமையை நன்றாக உணருவர். ஒரு நபர் இரண்டு விதமான மொழி நடையை கொள்ள முடியாது. அதுவும் பல வருடங்கள் தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றியிருக்க முடியாது.

அதே இந்து மதத்தில் வேதங்கள் பாதுகாக்கப்படாததால் அதன் நம்பகத்தன்மை அழிந்து பலரை நாத்திகத்தின் பால் கொண்டு சென்று விட்டது. நித்தியானந்தாக்கள், ஜெயேந்திரர்கள் இன்றும் மக்களால் மதிக்கப்டுவதும் இதனால்தான். உரசிப் பார்க்க இறை வேதம் இல்லாததுதான் இவர்கள் இன்றும் ஆட்டம் போடக் காரணம்.

//இந்த மறுமொழிக்காக, நித்யானந்தாவிடம் போட்டு கொடுத்து வீட்டிற்கு ஆட்டோ வர மாதிரி செய்ய வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.//

ஹா..ஹா...அவரே தினம் ஒரு கோர்ட்டுக்கும் தினம் ஒரு காவல் நிலையத்துக்கும் வாய்தா வாங்கிக் கொண்டிருக்கிறார். ஆட்டோ அனுப்பவெல்லாம் அவருக்கு நேரமேது?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

புதுடெல்லி: மஹராஷ்ட்ரா சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கைதிகளின் சமூக சூழல்களை குறித்து ஆய்வு செய்த டாட்டா இன்ஸ்ட்யூட் ஆஃப் சோசியல் சயன்ஸஸ்(Tata Institute of Social Sciences (TISS)) வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிர்ச்சிகரமான உண்மைகள் அடங்கியுள்ளன. சிறையில் அடைக்கப்பட்டுள்ள 90 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் நிரபராதிகள் என்றும், க்ரிமினல் கும்பல்களுடன் அவர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும் TISS அறிக்கை கூறுகிறது.
சில வழக்குகளில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே போலீஸ் கைது செய்கிறது என்று TISS அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
15 சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 3 ஆயிரம் முஸ்லிம் கைதிகளில் 70 சதவீதம் பேர் விசாரணை கைதிகள் ஆவர். தடா, மோக்கா போன்ற தீவிரவாத தடுப்புச் சட்டங்களின் கீழும், அஃபிஸியல் சீக்ரெட் சட்டத்தின் கீழ் உளவாளிகள் என முத்திரைக் குத்தப்பட்டும் இவர்களில் பெரும்பாலோர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால், இவர்கள் கடுமையான குற்றங்கள் எதுவும் செய்யவில்லை என்று TISS ஆய்வறிக்கை கூறுகிறது.
25.4 சதவீதம் பேருக்கு வழக்குகளை வாதிட வழக்கறிஞர்கள் இல்லை.
TISS க்காக க்ரிமினாலஜி அண்ட் ஜஸ்டிஸ் ஸ்கூல் ஆஃப் சோசியல் வர்கில் டாக்டர்.விஜய் ராகவனும், ரோஷ்னி நாயரும் ‘மஹராஷ்ட்ரா சிறைகளில் முஸ்லிம் சமூகத்தின் சமூக பொருளாதார சூழல் மற்றும் மறுவாழ்வுக்கான தேவைகள்’ என்ற தலைப்பில் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.

-http://www.sinthikkavum.net/2012/06/tiss.html

suvanappiriyan said...

திரு தங்கமணி!

//அப்படியென்றால், மனிதர்களை அவரவர் இஷ்டம் போல இருக்க விட வேண்டியதுதானே? முஸ்லீம்களையும் அவரவர் இஷ்டம் போல இருக்க விட வேண்டியதுதானே?
கொடுக்க வேண்டிய அறிவுரையை கொடுத்தாயிற்று, மற்றபடி அவரவர் பார்த்துக்கொள்ளட்டும் என்று இருக்கலாமே?//

'முஹம்மதே! மனிதர்களின் அரசனும் மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடும் சாத்தானின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன்' என்று கூறுவீராக! சாத்தான் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான்.
-குர்ஆன் 114:1,2,3,4,5

இங்கு முகமது நபியையே சைத்தானிடமிருந்து பாதுகாவல் தேட பிரார்த்திக்குமாறு இறைவன் பணிக்கிறான். சைத்தான் என்ற ஒரு படைப்பு இல்லாவிட்டால் எல்லா மனிதர்களும் தேவர்களைப் போல் தவறே செய்யாமல் இருந்து விடுவர். இறைவனிடமிருந்து வழிகாட்டியும் வரும்: அதிலிருந்து மனிதர்களை ஆசை காட்டி மோசம் செய்யும் சைத்தானின் எண்ணங்களும் வரும். இந்த இரண்டையும் சீர்தூக்கி பார்த்து எது நேரான வழி என்று தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மனிதனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

சைத்தானின் வலையில் வீழ்பவர் நிரந்தர வாழ்வின் சுகத்தை இழக்கிறார். இறை வேதங்களின் படி தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர் நிரந்தர வாழ்வின் சுகத்தை அனுபவிக்கிறார். அதை விளக்கி மக்களுக்கு எடுத்துச் சொல்லவே ஆதாமிலிருந்து நோவா, ஆப்ரஹாம், மோசே, ஏசு, மற்றும் முகமது நபி வரை இறைத் தூதர்களை இறைவன் அனுப்பி வைத்தான். இதில் கடைசியாக அனுப்பப்பட்டவரே முகமது நபி. இவ்வளவு பிரசாரம் பண்ணியும் தர்ஹாக்கள் கட்டக் கூடாது என்று முகமது நபி தடுத்தும் இன்று பல நாடுகளில் தர்ஹாக்கள் வழிபாடு நடத்தப்படுகிறதா இல்லையா? அவர்களுக்கு இதனை அழகாக்கி காட்டி தவறான வழிக்கு இழுத்துச் சென்றது சைத்தானல்லவா? ஒரு உயிரை அநியாயமாக கொல்லக் கூடாது என்று குர்ஆன் தடுத்திருக்க அந்த குர்ஆனின் பெயரால் அப்பாவி மக்களின் கழுத்தறுக்கும் கூட்டம் உலகில் உள்ளதா இல்லையா? இப்பொழுது சொல்லுங்கள் பிரசாரம் தேவையா? தேவையில்லையா?

ஷர்புதீன் said...

சலாம்!

பார்த்தீர்களா நீங்களும் கடைசியில் எனது கருத்தை நேரிடையாக அர்த்தம் செய்துகொண்டு விட்டீர்கள்.

நான் இஸ்லாமியர்கள் அதிகம் வாழ்ந்த ஊர் காரன் என்பதால் எனக்கு நெருங்கிய நண்பர்கள் அநேகமாக இஸ்லாமியர்களே, அவர்கள் உலக விஷயங்கள் குறித்து பேசினால் கூட அதில் இஸ்லாமியர்கள் குறித்தோ, அல்லது இஸ்லாமியம் சம்பந்தபட்டோ மட்டுமே பெச்வார்கள், மாட்டின் கூப்பர் செல்போனை கண்டுபிடித்தார் என்ற செய்தியை அசுவராசியமாக கேட்பார்கள், அமெரிக்காவில் மிக பேமஸான கூடைபந்தாட்ட வீரர் ஒருவர் இஸ்லாமியராக ( கரீம் அப்துல் ஜப்பார் ) மாறிய கதை தெரியுமா எண்டு சொல்லும்போது, அட அப்படியே சொல்லுடா மச்சான் என்பார்கள். இதற்காக இவர்கள் இஸ்லாமிய போபியா என்றோ, இஸ்லாமிய வறியர்கள் என்றோ சொல்ல வரவில்லை, ( வளர்ப்பு, சூழல், etc ) பாரதியின் "நான் கண்டு மொழிகளிலே தமிழ் மொழி போல் எங்கும் காணோம்" என்ற பதத்தில் "நான் கண்ட" என்ற வரிகளை அழுத்தி சொல்ல விரும்புகிறேன்.