Followers

Thursday, June 28, 2012

வாழைப்பழம்! வாழைப் பழம்! வாழைப் பழம்!

ராஜ்: யானைக்கிட்டே வாழைப்பழம் என்ன சொல்லும்?

கண்ணன்: தெரியாது! நீயே சொல்லேன்!

ராஜ்: ஒண்ணும் சொல்லாது! ஏன்னா? வாழைப்பழத்துக்கு பேசத் தெரியாது. :-)

----------------------------


ராஜா: ஹே! குமார்!

குமார்: ஹ்ம்.......சொல்லு!

ராஜா: உன் காதுல வாழைப்பழம் இருக்கு.

குமார்: என்ன சொல்றே!...

ராஜா: உன் காதுல வாழைப்பழம் இருக்குடா!....

குமார்: நீ என்ன சொல்றே? சுத்தமா விளங்கல்ல...

ராஜா: (கோபத்தோடு) உன் காதுல வாழைப்பழம் இருக்குது. புரிஞ்சுதா!

குமார்: ராஜா நீ சொல்றது எதுவுமே எனக்கு விளங்கல்ல...ஏன்னா...என் காதுல வாழைப்பழம் இருக்கு!

------------------------------


ஆப்பிள் அழுது கொண்டு இருந்தது

வாழைப்பழம்: ஏம்பா அழுவுறே!

ஆப்பிள்: எல்லாரும் என்னை கட் பண்ணி சாப்பிடுறாங்கப்பா!!!

வாழைப்பழம்: நீ யாவது பரவாயில்லை. எல்லாரும் என்னோட டிரஸ்ஸ அவிழ்த்துட்டுல்ல சாப்பிடுறாங்க!!

----------------------------------

வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல்படுகிறது. விஞ்ஞானிகளும் சத்துணவு நிபுணர்களும் உலகின் மிக உயர்ந்த தரமான உணவு வாழைப்பழம் தான் என்கிறார்கள். வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி பல் ஈறுகளையும் எலும்புகளைப் பிணைக்கும் தசை நார்களையும் உறுதியுடன் இருக்க உதவுகிறது. இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உருவாக வைட்டமின் ஏ- யையும் உடல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கிக் கொடுக்கிறது.




மக்னீசியம் பொட்டாசியம் சோடியம் பாஸ்பரஸ் போன்ற உப்புக்கள் வாழைப்பழத்தில் தாராளமாக இருப்பதால் இரத்த ஓட்டம் தங்குத் தடையின்றிச் சீராக இருக்கவும். முக்கியமாக இரத்தக் கொதிப்பு ஏற்படாமலும் பாதுகாத்து வருகிறது. நாம் தினமும் சாப்பிடும் இரண்டு வாழைப்பழங்கள் இரத்தக் கொதிப்பை எளிதில் கட்டுப்படுத்தும்.

நாம் சாப்பிடும் உணவில் பொட்டாசியமும் சோடியமும் இருந்தால் தான் நம் உடலில் உள்ள நெகிழ்ச்சிப் பொருள்கள் சம நிலையில் இருக்கும். பொட்டாசியம் உப்புக் குறைந்தால் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும். நாம் சாப்பிடும் அனைத்துப் பொருள்களிலும் சோடியம் உப்பு இருக்கிறது. ஆனால், பொட்டாசியம் இல்லை. இந்தக் குறையை தினமும் ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வருவதன் மூலம் நீக்கி விட முடியும்.

சத்துக்கள்

எங்கும் எப்போதும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழத்தில் இல்லாத சத்துக்களே கிடையாது. இதில் கர்போஹைடிரேட், புரதம், சிறிய அளவில் கொழுப்பு குளூக்கோஸ், நார்ச்சத்தும் ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் கால்சியம், , சோடியம், பாஸ்பரஸ், சல்பர், மக்னீசியம், இரும்பு, சிறிய அளவில் செம்புச்சத்தும் மற்றும் வைட்டமின் பொட்டாசியம் 400 மில்லி கிராம், திஷீறீஷீநீவீஸீ 20 மைக்ரோ கிராம், விட்டமின், ரிபோஃபிளேவின், தயாமின் சி, 10 மில்லி கிராம், விட்டமின் பி 6-.6 மில்லி கிராம். முதலான உணவுச் சத்துக்களும் கி, ஙி, சி வைட்டமின்களும் சத்துக்கள் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும்.

மருத்துவக் குணங்கள் :

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.

வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.
வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம். வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது. நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.

நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப் படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது. வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.

வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் (Natural Sugar) கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ் (Sucrose), பிரக்டோஸ் (Fructose) மற்றும் குளுகோஸ் (Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் (Fiber) கொண்டுள்ளது. இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 1 1/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை கொடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட. இதை நாம் உடலில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மூளை வலிமை (Brain Power): வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்து கொடுத்து சோதனை செய்து பார்த்தபோது மூளைத்திறன் அதிகரித்ததோடு, பொட்டாசியம் நிறைந்த இந்த உணவு அதிகமான கல்வித்திறனை அளிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. வாழையின் ஒவ்வொரு பாகமுமே மருத்துவ குணங்கள் கொண்டவை.
– THANKS TO ALAVUDEEN




11 comments:

VANJOOR said...

எல்லா விட்டமின்களையும் ஒரு பழத்தின் மூலம் தந்து நமது உடல் நலம் பேண வழி வகுத்த வல்லமை படைத்த இறைவனுக்கே எல்லாப் புகழும்.


CLICK >>>>
வாழையில் இவ்ளோ இருக்கா? ஆரோக்கியமாக வாழ, நோய் நீக்கும் மருந்தாக வாழைப்பழம்..
<<<< TO READ

.

suvanappiriyan said...

திரு புனை பெயரில்!

//சௌதி பெண்களைப் போல் தான் பிலிப்பினோ, பாக்கி, இந்திய பெண்கள் நடத்தப்படுகிறார்கள். சௌதியில் கரன்சியில் ஒரே டினாமினேஷன் தான். பணக்காரன் ஏழை என்ற பாகுபாடே கிடையாது… கம்யூனிஷம் சாதிக்க முடியாததை அங்கு சாதித்துள்ளார்கள். இவ்வளவு ஏன், மன்னர் குடும்பத்துடன் சாமான்யனும் சமமாக பஸ்ஸில் தான் போகிறார்கள்.. காரே கிடையாது.. மெய்யாலுமுலே….//

ஜனநாயக நாடான நம் தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் நீங்கள் சமமாக அமர்ந்து பயணித்து விட்டு இந்த கேள்வியைக் கேட்டால் நலமாயிருக்கும். அமைச்சர்களே மேடையில் கை கட்டி நின்றதை தினமும் பார்க்கிறோமே. தடாலடியாக அவர் காலில் அவரை விட மூத்தவர்கள் விழுந்து சுய மரியாதையை அடகு வைப்பதை தினமும் பார்க்கிறோமே!

இங்கு மன்னர் ஆட்சிதான். அவர் காலில் எவரும் விழுவது இல்லை. பள்ளிக்கு தொழுக வந்தால் எல்லோரோடும் வரிசையில்தான் நிற்க வைக்கப்படுவார். சில நாட்களுக்கு முன்பு இறந்த மன்னரின் தம்பி இளவரசர் நாயிஃப் எல்லோரும் அடக்கம் பண்ணும் பொது மைய வாடியில்தான் அடக்கம் செய்யப்பட்டார். அந்த சமாதிக்கு மேல் பளிங்கு கற்கலால் அலங்காரம் செய்யப்படவில்லை. உலக பணக்காரர்களில் ஒருவரான அவரின் உடல் மண் தரையில் கிடத்தப்பட்டு சாதாரண கூழாங்கற்களும் மண்ணையும் கொண்டு மூடப்பட்டது. ஒரு மழை பெய்தால் அந்த மண்ணும் கரைந்து சமாதி தரையோடு தரையாகி விடும். அண்ணா, எம்ஜிஆர், ராஜாஜி, காமராஜரின் அடக்க ஸ்தலங்கள் மற்றவர்களை விட எவ்வளவு கம்பீரமாக கட்டப்பட்டுள்ளது. எத்தனை லட்சங்கள் இன்று வரை செலவழிக்கப்பட்டு வருகின்றன. அதுவும் நம்மைப் போன்ற ஒரு ஏழை நாட்டுக்கு இந்த செலவுகள் தேவையா? அதையும் மக்கள் வழிபட்டுக் கொண்டிருக்கும் நிலைதானே நம் தமிழ்நாட்டுக்கு.

எனவே சவுதியை பற்றி கவலைப் படுவதை விட்டு விட்டு டாஸ்மார்க் கடையில் வாழ்வை தொலைத்துக் கொண்டிருக்கும் 60 சதவீதமான உடன்பிறப்புகளையும் ரத்தத்தின் ரத்தங்களையும் கரை சேர்க்க முயற்சி எடுங்கள். புண்ணியமாகப் போகும்.

suvanappiriyan said...

சலாம் வாஞ்சூர் பாய்!

//எல்லா விட்டமின்களையும் ஒரு பழத்தின் மூலம் தந்து நமது உடல் நலம் பேண வழி வகுத்த வல்லமை படைத்த இறைவனுக்கே எல்லாப் புகழும்.//

வருகைக்கும் பதிவு சம்பந்தமான சுட்டியை தந்தமைக்கும் நன்றி!

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

ரூபாய்க்கு எத்தன வாழைபழம் -ரெண்டுன.கடகாரன் கொடுத்தானா-கொடுத்தான்ன,எத்தன-2 ,ஒன்னு இங்க இன்னொன்னு -அதான்ன இது ......
உங்கள் கற்பனை காமடி அருமை சகோ....

புதிய வரவுகள்:
ஆத்திரமும் அவசரமும் கொண்ட ஆண்களே! உங்களைத்தான்!,
கருணாநிதி,ஜெயலலிதா இருவரில் நல்லவர் யார்?

suvanappiriyan said...

திரு இனியவன்!

//பூமியில் என்று தெளிவாக படைக்கப்பட்ட செய்தியை சொன்ன அல்லாஹ், மற்ற இடங்களில் என்று பொதுவாக வானங்களில் என்று சொன்னது ஏன்? இன்னும் படைக்கவில்லையா?அல்லது படைத்த இடத்தின் பெயர் தெரியவில்லையா? இனிமேல்தான் படைப்பான் எனில் எந்த இடம் என்பதை மார்க்க அறிஞரிடம் கேட்டுச் சொல்லுங்களேன், விஞ்ஞானிகளுக்கு உதவியாக இருக்கும் அல்லவா.//

பூமியில் நாம் வாழ்ந்து வருவதால் ஐயத்திற்கிடமின்றி தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. பூமியைத் தாண்டி வானம் என்ற சொல்லுக்கே சூரிய குடும்பம் என்றுதான் அர்த்தம் செய்து கொள்கிறோம். மற்ற கோள்களுக்கெல்லாம் 1400 வருடங்களுக்கு முன்பு என்ன பெயர் என்பது அன்றைய அரபுகளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. இவ்வாறு பல கோள்கள் சூரியனை மையமாக வைத்து சுழன்று வருகிறது என்று இன்றும் பலர் நம்புவதில்லை. அன்றைய மக்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். எனவேதான் அதன் பெயர்களைக் குறிப்பிடாமல் பொதுவாக வானம் என்று கூறுகிறான். இந்த அளவு இன்றைய அறிவியலோடு அன்றைய வசனம் ஒத்துப் போவதே பெரிய விஷயம் இல்லையா?

suvanappiriyan said...

திரு தங்கமணி!

//இதுவரை கேட்ட கேள்விகளுக்கு சுவனப்பிரியன் அளிக்காத பதில்கள்//
1) ஆணுக்கு ஆண், பெண்ணுக்கு பெண், அடிமைக்கு அடிமை கொலை செய்து பழி தீர்ப்பது என்றால், ஒரு சுதந்திரமானவன் அடிமையை கொலை செய்தால், பதிலுக்கு யாரை கொலை செய்யவேண்டும்? முனாவர் சொல்வது போல ஹதீஸ் துணையுடன் பதில் சொல்லாமல், குரான் வசனத்தின் அடிப்படையில் பதில் சொல்லவும்.//

2:178: ஈமான் கொண்டோரே! கொலைக்காக பழிதீர்ப்பது உங்கள் மீது விதியாக்கப் பட்டுள்ளது. சுதந்திரமுடையவனுக்கு சுதந்திரமுடையவன், அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண், இருப்பினும், ........ அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.

2:179: நல்லறிவாளர்களே! கொலைக்காக பழிதீர்க்கும் இவ்விதியின் மூலம் உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை (த் தீமைகள் இன்று) காத்துக் கொள்ளலாம்.

இவர்களின் சிந்தனைப்படி இப்படிப்பட்ட (அதாவது கொல்லப்பட்ட ஒரு பெண்ணுக்கு, பகரமாக எதிர்தரப்பு பெண் என்று....) பழிவாங்கல் சட்டம் இருந்தால்.. இதன் தொடர்ச்சியாக அடுத்து வரும் வசனம் இவ்விதியால் உங்களுக்கு வாழ்வு இருக்கிறது எனச் சொல்கிறதே... முஸ்லிம்களுக்கான இந்தச் சட்டத்தில் இப்படி (இவர்கள் கூற்றுப்படியான) ஒரு விதி இருந்தால், எப்படி வாழ்வு இருக்கமுடியும்? ஒருவரை ஒருவர் அநீதியாக கொலை செய்து கொண்டு மாண்டல்லவா போவர் என்றாவது யோசித்திருக்கலாம்..இல்லை...

சரி...அந்த வசனத்தை பார்ப்போம்.முதலில் –
//கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது//
பழி தீர்ப்பது குறித்து ஆரம்பிக்கும் இந்த வசனம் கொலை செய்தவன் குறித்து பேசுகிறது. முதல் தரப்பு கொலை செய்யப்பட்டவர். கொல்லப்பட்டுவிட்டார்.இனி அவர் வரப்போவதில்லை. தண்டிக்கவோ மன்னிக்கவோ அவரால் முடியாது.ஆனால் கொலை செய்தவர்? தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும் என்பது நியதி.

அதனால்தான் இந்த வசனம் இரண்டாம் தரப்பை ”பழிதீர்ப்பது” குறித்து ”கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது” என ஆரம்பிக்கிறது.

சரி எப்படி பழிதீர்ப்பது? பாரபட்சம் இன்றி,யார் கொலை செய்தாரோ அவரே கொல்லப்பட வேண்டும். இல்லையா? இதுதானே நீதி.

ஆம்!!!
ஆனால் இஸ்லாத்திற்கு முந்தைய அக்காலத்தில் நடந்தது அதுவல்ல. பெண்களின் மற்றும் அடிமைகளின் உயிரானது மதிப்பற்றதாக கருத்தப்பட்டது. ஒரு எஜமான் ஒருவனை கொலை செய்துவிட்டால்,பழிதீர்க்க அவன் தனது அடிமையை முன்னிருத்துவதும். பெண்களை ஆண் கொலை செய்தால் அவனை கொல்லாமல் விடுவதும். சுதந்திரமானவன் அடிமையை கொன்றால் அதற்கு பகரமாக நஷ்டஈடு தருவதும் பெண்ணை பெண் கொன்றால் கொன்றவளது உயிர் அத்தனை மதிப்பில்லாதது என அவர்கள் கருதியதால் கொன்றவள் ஈட்டுத்தொகையுடன் விடுதலை பெருவதுமான பாரபட்ச அநீதிகளை உடைக்கவே மேற்கண்ட வசனம் இறங்கியது.

முன்னமே சொன்னது போல் இரண்டாம் தரப்பான, அதாவது கொலை செய்தவன் குறித்து இவ்வசனங்கள் பேசுகிறது. கொலை செய்த சுதந்திரமானவனுக்கு பகரமாக அடிமையை பழிகொடுக்கும் வழக்கம் உடைக்கப்பட்டு அதே சுதந்திரமானவன் எவனாக இருந்தாலும் கொல்லப்பட வேண்டும்.அவன் அடிமையையோ, பெண்ணையோ கொன்றால் ஈட்டுத்தொகை கொடுத்து தப்பிக்கும் வழக்கம் ஆகாது.ஆக சுதந்திரமான அந்த கொலையாளிக்கு எதுவும் ஈடாகாமல் அந்த சுதந்திரமானவனே பழிதீர்க்கப்படவேண்டும் என்றும்

அடிமைக்கு அடிமை - அதாவது அடிமை இன்னொரு அடிமையை கொன்றால் ஈட்டுத்தொகை, ஏனெனில் கொல்லப்பட்டவனும் அடிமை.அவனது உயிர் மதிப்பில்லாது கருதப்பட்டதால். ஆனால் இனி அது நடக்காது.கொலைசெய்த அடிமைக்கு பகரமாக ஈட்டுத் தொகை இல்லை,அதே அடிமையே பழிதீர்க்கப்பட வேண்டும்.

இதே போல் பெண்ணுக்கு பெண் என்பது, கொலை செய்த பெண்ணுக்கு ஈட்டுத்தொகை பகரம் இன்றி அவளே பழிதீர்க்கப்பட வேண்டும் என்பதே இந்த வசனத்தின் சாராம்சம்.

ஆக! இறுதியாக, கொலை செய்த யாராக இருந்தாலும் அவரவருக்கு தக்க பகரங்களை கொடுத்து தப்பித்துக்கொள்வது ஆகாது.யாராக இருந்தாலும் அதாவது சுதந்திரமானவனுக்கு (பகரமாக ஏதும் இல்லாமல், அதே)சுதந்திரமானவனும்,அடிமைக்கு (பகரமாக ஏதும் இல்லாமல், அதே)அடிமையும், பெண்ணுக்கு (பகரமாக ஏதும் இல்லாமல், அதே)பெண்ணும் பழிவாங்கப்படவேண்டும்.எனும் நீதியை இந்த வசனம் எடுத்துரைக்கிறது.

இவ்வளவு தெளிவாக அன்றைய காட்டுமிராண்டித் தனத்தை துடைந்தெறிந்த வசனம் உங்களுக்கு வித்தியாசமாகபடுகிறதா?

ஸாதிகா said...

வித்தியாசமான முயற்சி.முதலில் வாழைப்பழ ஜோக்குகளாக போட்டு சிரிக்க வைத்து விட்டு சத்துக்களையும் மருத்துவக்குணங்களையும் விலாவாரியாக பயன் பெறும் கட்டுரையாக தந்ததற்கு நன்றி

suvanappiriyan said...

சகோ ஸாதிகா!

//வித்தியாசமான முயற்சி.முதலில் வாழைப்பழ ஜோக்குகளாக போட்டு சிரிக்க வைத்து விட்டு சத்துக்களையும் மருத்துவக்குணங்களையும் விலாவாரியாக பயன் பெறும் கட்டுரையாக தந்ததற்கு நன்றி//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ திருவாளப்புத்தூர்!

//புதிய வரவுகள்:
ஆத்திரமும் அவசரமும் கொண்ட ஆண்களே! உங்களைத்தான்!,
கருணாநிதி,ஜெயலலிதா இருவரில் நல்லவர் யார்?//

சிறந்த முயற்சி.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

வாழப்பழத்தை பற்றி குரானில் முகம்மது நபி ஏதும் கூறவில்லையா? குரான் கொட்டேசன் போடாமல் உங்கள் பதிவு வராதே, அதுக்காக கேட்டேன்!

.RAHMANFAYED said...

அஸ்ஸாலாம் அலைக்கும், சகா நல்ல தகவல், தொடருங்கள் உங்கள் பணியை சிறப்பாக...