Followers

Showing posts with label ஆரோக்கியம். Show all posts
Showing posts with label ஆரோக்கியம். Show all posts

Wednesday, July 02, 2014

மெல்லக் கொல்லும் தண்ணீர் பாட்டில்கள்!



மதுரை : குடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள், பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை கவனிப்பதில்லை.

குடிநீர் பாட்டில்களில் 1 முதல் 7க்குள் ஏதேனும் ஒரு எண் இருக்கும். இந்த எண் மூலம் அந்த பாட்டில் எவ்வகை வேதிப்பொருளால் ஆனது, இது எந்த பொருள் வைக்க தகுதி கொண்டது என்பதை அறியலாம். அடிப்புற முக்கோணத்திற்குள் எண் ''1'' இருந்தால் அந்த பாட்டில் பிஇடி (பாலி எத்திலின் டெர்ப்தலேட்) வேதிப்பொருளில் ஆனது. இதில் பானம், குளிரூட்டிய உடனடி உணவு இருக்கும்.

எண் ''2'' இருப்பின், ஹெச்டிபிஇ (ஹை டென்சிட்டி பாலிஎத்தனால்) வேதிப்பொருளால் ஆனது. இதில் பால் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படும். எண் ''3'' என இருந்தால், பிவிசி (பாலிவினைல் குளோரைடு) என்ற வேதி பொருளால் தயாரிக்கப்பட்டவை. இதில் உணவுப்பொருட்கள், பழரசம் இருக்கும். எண் ''4'' எனில், எல்டிபிஇ (லோ டென்சிட்டி பாலி எத்திலின்) என்ற வேதி பொருளால் உருவாகி, பொருட்களை அடைப்பதற்கான பாக்கெட்டுகளாக இருக்கும்.

எண் ''5'' பிபி (பாலி புரோபைலின்) வேதிப்பொருளால் ஆகி, மைக்ரோவேவ் போன்ற உணவு பாத்திர பயன்பாட்டிலும், எண் ''6'' இருப்பின், பிஎஸ் (பாலிஸ்டிரின்) வேதிப்பொருளில் உருவாகி முட்டைகளுக்கான கூடு, பொம்மை, எலக்ட்ரானிக் பொருட்களுக்கான பிளாஸ்டிக்காக இருக்கும். இதுதவிர எண் ''7'' இடப்பட்டிருந்தால் மற்ற வகை பிளாஸ்டிக்காக குவளைகள், தட்டுகள் உள்ளிட்ட பாத்திரங்களாக மட்டுமே பயன்படுத்தலாம்.

இந்த 7 பிளாஸ்டிக் வகைகளில் அடிப்புறம் 1, 3, 6 எண்களிட்ட பாட்டில்கள் தரும் பாதிப்பு அதிகமிருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகள், பயணம் செய்வோர் என பலரும் ஏற்கனவே உபயோகப்படுத்திய பழைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி எடுத்துச் செல்வது அதிகரித்துள்ளது. புதிய மினரல் வாட்டர் பாட்டிலை வெயிலில் வைத்தாலே வேதிவினைகள் நடந்து நீரில் எளிதில் வேதிப்பொருட்கள் கலந்து விஷமாகுமென சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதைவிட மோசமாக, பழைய பாட்டிலில் குடிநீரை சுட வைத்து நிரப்புவது, ஆண்டுக்கணக்காக இந்த ஓற்றை பாட்டிலில் நீர் நிரப்பி பயன்படுத்துவதென மக்கள் அறியாமையில் உள்ளனர். இனிமேல் குடிநீரோ, உணவுப் பொருட்களோ வாங்கும் பாட்டில்கள், பேக்கிங்குகளில் அடிப்புறத்து எண்ணை பார்ப்பது அவசியம்.

தமிழக அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில் கூறுகையில், ''மறு சுழற்சிக்கு தகுதியற்ற சாதாரண குடிநீர் பாட்டில்களை பல நாட்களுக்கு அடுத்தடுத்து தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது. உணவுத் தரம் மிக்க பிளாஸ்டிக்கில் செய்த பாட்டில்கள் விலை அதிகமிருப்பினும், அதில் தண்ணீர் வைத்து குடிப்பதே உகந்தது. ''ஒன்ஸ் யூஸ்'' பாட்டில்களை ஒருமுறை பயன்படுத்தியதும் உடைத்தெறிய வேண்டும். இதில் அந்த பாட்டிலின் வேதிப்பொருள் அந்த நீர், உணவுடன் வினையாகி ''மெல்லக் கொல்லும் விஷமாகி'' நரம்பு மண்டலம் துவங்கி உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும்'' என்றார்.

நன்றி: தினகரன்

Thursday, January 23, 2014

பசுமை பள்ளி வாசல்கள் இனி அமைப்போமா!



இன்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு என்ன என்றால் 'புவி வெப்பமயமாதல்' என்று உடன் சொல்லி விடலாம். அந்த அளவு இன்று உலகை இந்த பிரச்னை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. சவுதியில் உள்ள தபூக்கில் நான் ஆண்டுகள் வேலை செய்துள்ளேன். சில நேரங்களில் குழாய்களில் தண்ணீர் ஐஸாக உறைந்து தொங்கிக் கொண்டிருக்கும். அந்த அளவு குளிர். அதிலும் இந்த வருடம் இன்னும் அதிகம். ரோடுகள் எல்லாம் ஐஸ்களால் சூழப்பட்டு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப் பொழிவு. பிலிப்பைனை தாக்கிய புயல். அதில் 6000 க்கும் மேலான மக்கள் பலி என்று சமீப காலங்களில் நடக்கும் பேரழிவுகளை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.

இந்த பேரழிவுகளுக்கு நாமும் ஒரு காரணம். வாகனங்களும், தொழிற்சாலைகளும் வெளியிடும் கார்பன் இந்த உலகை தூசுக்களால் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறது. தொடர்ந்து வற்புறுத்திக் கேட்டதால் எனது பையன்களுக்கு டூ வீலர் வாங்கிக் கொடுத்தேன். ஆனால் நான் அதிகம் பயணிப்பது சைக்கிளில்தான். 'என் காலேஜ் ஃப்ரண்டஸ்லாம் கிண்டல் பண்றானுங்க. இனி சைக்கிளில் போகாதீங்க... நம்மகிட்டதான் டூ வீலர் இருக்கே' என்று என் மகன் சொல்வதை பார்த்து சிரிப்பேன். அவனது நண்பர்களுக்காக நான் டூ வீலரில் போக வேண்டுமாம். நான் லீவில் ஊர் சென்ற போது சைக்கிளில் சென்று கொண்டிருந்தேன். அந்த ஊரிலேயே தொழில் செய்து வரும் ஒருவர் 'நீ சைக்கிளில் போவதும்: நான் டூ வீலரில் போவதும் சில நேரங்களில் எனக்கே வெட்கமாக இருக்கிறதுப்பா...' என்று சொன்னதை இன்றும் நினைத்தாலும் சிரிப்பு வரும். உடற் பயிற்சி செய்வதற்கு சைக்கிளைப் போன்ற சிறந்த ஒரு சாதனம் வேறு இல்லை என்று சொல்லலாம். விபத்துகளும் இதனால் குறையும். செலவும் மிச்சம். உடலுக்கும் ஆரோக்கியம். புவி வெப்பமயமாதலை ஓரளவு நம்மாலும் குறைக்க முடியும். நமது நாட்டு பணம் அநியாயாத்துக்கு பெட்ரோலுக்காக வெளி நாடு செல்வதையும் ஓரளவு இது குறைக்கும். எனவே இப்படி பல பயன்கள் உள்ளதால் உடல் ஆரோக்கியம் உள்ளவர்கள் லோக்கலுக்கு அதிகம் சைக்கிளையே பயன் படுத்துவோமாக! :-)

இங்கிலாந்தில் உள்ள மேட் MADE (Muslim Agency for Development Education) என்ற என்ற அமைப்பு உலக வெப்பமயமாதலை ஓரளவு குறைக்கும் பொருட்டு பல சேவைகளை செய்து வருகிறது. பள்ளி வாசல்களை எல்லாம் பசுமைக் குடில்களாக தற்போது இவர்கள் மாற்றி வருகின்றனர். பள்ளி வாசல்கள் எங்கும் தற்போது பசுமை பூத்துக் குலுங்குகிறது. உலகில் உள்ள இயற்கை வளங்கள் அனைத்தும் நமக்கு இறைவனின் வல்லமையை பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன. நபிகள் நாயகத்தின் போதனையும் இதனையே நமக்கு சொல்கிறது.

"ஒரு முஸ்லிம் ஒரு மரத்தை நட்டு அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து அதிலிருந்து ஒரு பறவையோ அல்லது ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்'' என்று இறைவனின் தூதர் நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: புகாரி 2320


ஆஹா...என்ன அழகிய ஒரு அறிவுரை. தொழுது கொள், ஹஜ் செய், ஜகாத் கொடு என்பது மட்டும் இஸ்லாம் அல்ல. ஒரு மரத்தை நட்டு அதனால் உயிரினங்கள் பயனுற்றால் அதற்கும் நன்மை எழுதப்படுகிறது என்ற நபிகளின் வார்த்தையை அந்த இளைஞர்கள் செயல்படுத்த ஆரம்பித்துள்ளனர். தொழுவதற்காக கை கால்களை அலம்பி சுத்தம் செய்து கொள்ளும் போது கூட தண்ணீரை சிக்கனமாக செலவு செய்யுங்கள் என்ற அறிவுரையையும் நபிகள் நாயகம் நமக்கு போதித்து இருக்கிறார்.

சுற்றுச் சூழலோடு அமைந்த பள்ளி வாசல்கள் என்றால் என்ன?

மான்செஸ்டரில் உள்ள நஜ்மி பள்ளி வாசல் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக உள்ளது. இந்த பள்ளி கட்டுமானமானது ஏற்கெனவே உபயோகப்படுத்தப்ட்ட மரங்களைக் கொண்டு கட்டப்பட்டது. இந்த பள்ளி வாசலின் மின்சாரத் தேவைகள் அனைத்தும் சூரிய சக்தியால் அமைக்கப்பட்டது. மேற் கூரைகள் கண்ணாடிகளால் வேயப்பட்டுள்ளது. ஒளி தேவைப்படும் போது சூரியனின் ஒளியையே பயன்படுத்தக் கூடிய வகையில் கட்டியுள்ளார்கள். பள்ளி வாசலை சுற்றி பசுமை நிறைந்த மரங்களை வளர்க்கின்றனர்.

இந்த அமைப்பின் உப தலைவர் கூறும் போது: 'ஒரு வணக்கத்தலம் இயற்கையோடு கூடியதாக கட்டப்பட்டிருக்க வேண்டும். அந்த சூழல் இருந்தாலே இறைவனை வணங்குவதற்கு நமக்கு ஏதுவாக இருக்கும். இவ்வாறு அமைப்பதற்கு நமக்கு அதிக பொருளாதார செலவும் கிடையாது. சிங்கப்பூரில் 2012ல் இதே போன்ற ஒரு பள்ளியை நிர்மாணித்தோம். கத்தாரிலும் இதே போன்ற பள்ளிகளை அமைக்க திட்டமிருக்கிறது. தண்ணீரை மறு சுழற்சி செய்து பள்ளியை சுற்றியுள்ள தோட்டங்களுக்கு திருப்பி விடுவது. பள்ளியை சுற்றி மரங்கள் செடி கொடிகளை வளர்ப்பது. வெள்ளிக் கிழமைகளில் சொற்பொழிவுகளில் சுற்று சூழலை மாசுபடாமல் எவ்வாறு பராமரிப்பது என்பதையும் மக்களுக்கு புரிய வைப்பது. பள்ளிக்கு தொழ வருபவர்கள் கூடிய வரை நடந்தோ, சைக்கிளிலோ, அல்லது டூ வீலரோ வர அறிவுறுத்துவது. ஒரு நபருக்காக ஒரு நான்கு சக்கர வாகனத்தை உபயோகிப்பதை முடிந்த வரை தவிர்த்துக் கொள்வது. இது போன்ற பல திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். இதற்கு மக்களிடம் அதிக ஆதரவும் இருக்கிறது"

"இந்த உலகை மாசுபடாமல் காக்கும் பொருப்பு மற்றவர்களை விட முஸ்லிம்களுக்கு அதிகம் உண்டு. அதனை இறைவனின் இல்லமாகிய பள்ளி வாசல்களிலிருந்து தொடங்குதல் மிக பொருத்தம் இல்லையா?' என்று கேட்கிறார் இந்த அமைப்பின் தலைவர் முராத்.


Creative ideas that can be easily implemented in almost any mosque are:

Use touch sensitive taps in all sinks; they turn on when touched and automatically turn off after a few seconds, reducing water wastage.

Provide recycling bins in the mosque. This makes it easier for community members to recycle glass, cardboard and paper, plastics, and aluminum by separating and collecting recyclables in the home and dropping them off at the neighborhood mosque.

Install solar panels that capture the sun’s energy and convert sunlight into electrical energy.

Put up colorful and informative posters that foster environmental awareness.

Encourage the imam, or leader of the mosque, to dedicate a Friday sermon to the importance of preserving the environment.

Provide bike racks in the parking space of the mosque to encourage worshipers to come to the mosque whenever possible by bike rather than car.

Plant a community garden. Transporting food across the world can be very harmful for the environment and costly. The community can grow fresh, local produce which they can share among themselves or donate to families in need.

Use environmentally friendly cleaning products and bio-degradable plates and cups during community events.



தகவல் உதவி: சவுதி கெஜட்.

Wednesday, January 15, 2014

புரபசர் நரேந்திர மோடி - :-)



வருங்கால இந்திய பிரதமராம்! இந்துத்வாவாதியினர் ஏகத்துக்கும் பிரசாரம் பண்ணுகின்றனர். ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் என்று துடைப்பை கையில் எடுத்தாரோ அன்றே மோடியின் பிரதமர் கனவு தவிடு பொடியாகி விட்டது.

Saturday, November 09, 2013

சவுதி இளைஞர்கள் தெரு கூட்டும் அதிசயம்!



சவுதி அரேபியா தற்போது தனது நாட்டு மக்களுக்கு வேலை கொடுக்கும் முகமாகவும், முறையான அனுமதியின்றி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை முறைப்படுத்தவும் சில சட்டங்களை சமீப காலமாக கடுமையாக்கியிருக்கிறது. இதனால் புனித நகரங்களான மெக்கா மெதினாவில் தெருக்களை சுத்தம் பண்ண ஆட்கள் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது. சிலரது அடையாள அட்டைகள் இன்னும் புதிக்கப்படாததால் சட்டத்துக்கு பயந்து பல பங்களாதேசத்தவர் வேலைக்கு வரவில்லை.

ஆட்கள் வேலைக்கு வராததால் மதினாவின் தெருக்களில் குப்பைகள் அதிகமாக சேர ஆரம்பித்தன. இது தொடர்ந்தால் சுற்று சூழலுக்கு ஆபத்து நேரும் என்பதை உணர்ந்த தன்னார்வ தொண்டர்கள் அந்த குப்பைகளை அகற்றுவதில் ஈடுபட ஆரம்பித்தனர். தற்போது சவுதிகளும் தெருக்களை கூட்டி தங்கள் வீதிகளை அழகாக வைக்க முயற்சிப்பதை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

நமது நாட்டில் இது போன்ற வேலை செய்பவர்களை தோட்டிகள் என்று ஒரு சாதியாக ஒதுக்கி வைத்திருப்போம். இந்துக்களிலேயே அவர்களோடு திருமண உறவு முதற் கொண்டு எந்த உறவுகளை பேணாததைப் பார்க்கிறோம். அவர்களை கோவிலுக்குள்ளும் அனுமதிப்பதில்லை.

ஆனால் சவுதியில் அதே வேலை செய்து வரும் பங்களாதேசத்தவர்கள் ஒவ்வொரு நேர தொழுகையிலும் அதே சீருடையோடு பள்ளியில் தோளோடு தோள் உரசி நின்று தொழும் காட்சியை தினமும் பார்க்கலாம். இந்த சகோதரத்துவத்தை கற்பித்தது இஸ்லாம். அதனை நடைமுறை படுத்தியவர் நபிகள் நாயகம்.

பல கோடிகளுக்கு அதிபதிகளான இந்த இளைஞர்கள் தேவை ஏற்படும் போது களத்தில் இறங்கி எந்த வேலையையும் செய்யத் துணிவதற்கு இஸ்லாம் காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது.

திருடாமல், பொய் பேசாமல், மற்றவர்களின் சொத்துக்களை அபகரிக்காமல் எந்த தொழிலையும் செய்யலாம்: அது கேவலம் இல்லை என்பதை இந்த இளைஞர்கள் நிரூபித்து வருகிறார்கள். நாம் கூட நமது தமிழ் நாட்டில் எதற்கெடுத்தாலும் அரசையே எதிர்பார்க்காமல் நம்மால் முடிந்த பொது வேலைகளை செய்து சுற்றுப் புறத்தை தூய்மையாக்க முயற்சிப்போமாக!

தகவல் உதவி

சவுதி கெஜட்

Sunday, September 29, 2013

உதிரம் கொடுத்து உயிர்களைக் காப்போம்!

'ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்'
-குர்ஆன் 5:32


சவுதி தலைநகர் ரியாத்தில் இரத்ததான முகாம்.

இடம்: கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி - இரத்த வங்கி, தபாப் ஸ்ட்ரீட், (மெக்கா ரோட் என்ட்ரன்ஸ் எண் 1.

நாள்: 04, அக்டோபர், 2013 வெள்ளி காலை 9 லிருந்து மாலை 5 மணி வரை

தாங்கள் வழங்கும் இரத்தம் இவ்வருட ஹஜ் பயணிகளில் தேவையானோருக்கு பயன்படுத்தப்பட உள்ளது.


வருட வாரியாக இரத்த தான விபரம்

2013 ம் வருடம் 149 நபர்கள்
2012 ம் வருடம் 1214 நபர்கள் (வெளிநாடுகளில் முதலிடம்)
2011 ம் வருடம் 915 நபர்கள் (மண்டலங்களில் முதலிடம்)
2010 ம் வருடம் 715 நபர்கள் (மண்டலங்களில் முதலிடம்)
2009 ம் வருடம் 395 நபர்கள்
2008 ம் வருடம் 331 நபர்கள்
2007 ம் வருடம் 307 நபர்கள்

இதுவரை இரத்த தானம் செய்தவர்கள் 4026 நபர்கள்.

(இறைவா) எங்களுக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் நன்மையைப் பதிவு செய்வாயாக. (அல்-குர்ஆன் 7:156)

இரத்த தானம் செய்வீர்!

இறையருளைப் பெறுவீர்!!

1. இரத்த தானம் :-
இரத்தானம் (குருதிக்கொடை) என்பது தேவைப்படும் இன்னொருவருக்கு ஏற்றுவதற்காக இரத்தத்தை வழங்கி சேமித்து வைத்தலாகும். ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 4.5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் உடலில் இருந்து ஒரு நேரத்தில் 400-450 மி.லி. இரத்தம் வரை எடுக்கப்படும். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் தானாகவே மீண்டும் உற்பத்தியாகிவிடும். இரத்தம் குறைந்து விட்டதே என்ற தவறான கருத்து தேவையே இல்லை.

2. இரத்ததானம் செய்வதற்கான தகுதிகள் :-
1) வயது 18 முதல் 55 வரை. உடல் எடை 50 கிலோவுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
2) எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, மலேரியா, இருதய நோய்கள், காசநோய் போன்ற பெரு வியாதிகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
3) இரத்த தானம் செய்யும் நான்கு மணி நேரத்திற்குள் நல்ல உணவு உட்கொண்டிருக்க வேண்டும்.
4) முந்தைய நாள் இரவு கண்டிப்பாக நல்ல தூக்கம் முக்கியம்.
5) தங்களுடைய சவூதி அடையாள (IQAMA - இக்காமா) அட்டை அல்லது செராக்ஸ் காப்பி அவசியம்.

3. இரத்த தானம் கேள்வி பதில்கள் :-

1. இரத்த தானம் செய்ய எவ்வளவு நேரமாகும்? குறைந்த பட்சம் 15 நிமிடங்களில் இருந்து அதிகபட்சம் 1/2 மணி நேரம் ஆகலாம்.
2. எத்தனை மாத இடைவெளிகளில் இரத்த தானம் செய்யலாம்? 3 மாத இடைவெளிகளில் இரத்த தானம் செய்யலாம்.
3. இரத்த தானம் செய்யும் முன் சாப்பிடலாமா? ஆம், இரத்த தானம் செய்யும் முன் நான்கு மணி நேரத்திற்குள் அதிகதிகமான திட, திரவ உணவு வகைகளை எடுத்துக் கொள்ளலாம்.
4. இரத்த தானம் செய்த பின் என்ன செய்ய வேண்டும்? திரவ உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்து வேலைகளையும் செய்யலாம்.
5. இரத்த தானம் செய்யக் கூடிய இரத்தம் யாருக்கு பயன்படும்? சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோர், இதய அறுவை சிகிச்சை செய்வோர், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சை, கடுமையாக தீக்காயம் பட்டவர்கள், பிரசவிக்கும் தாய்மார்கள்.

மனித நேயத்தை வார்த்தைகளால் அல்ல – நமது இரத்த தானத்தால் வெளிப்படுத்துவோம்!

சமுதாய நலன் கருதி வெளியிடுவோர்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
ரியாத் மண்டலம் (TNTJ Riyadh),
சவூதி அரேபியா.

Monday, January 14, 2013

நரை பிரச்னையில் உங்கள் இறப்பும் உள்ளது.


'உனக்குதான் வாரம் ஒரு தடவை தலைக்கு டை அடிக்கணும்னு கவலை. ஆனா இந்த மாமாவுக்கு எந்த பிரச்னையும் இல்லே. ஹாய்யா விட்டுடுவார். இல்லப்பா!'

-----------------------------------------------------

வயதான பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை, அனைவருக்கும் இன்று, ‘தலை’யாய பிரச்சனையாக இருப்பது முடி நரைத்தல். இள நரை பலரை பாடாய்ப் படுத்துகிறது. இதற்காக அந்த நரை முடியை கருப்பாக்கிக் காட்டுவதற்காக தினமும் பலர் சிரமப்படுவதைப் பார்க்கிறோம். இதற்காக நிறைய பொருளாதாரத்தையும் செலவு செய்ய நாம் தயங்குவதில்ல. அந்த பிராண்ட் நீண்ட நாள் நிலைத்திருக்கும். இந்த பிராண்ட் ஒரிஜினல் கலரைக் கொடுக்கும் என்று தேர்ந்தெடுத்து கலரை உபயோகப்படுத்துகிறோம்.


இது குறித்து ‘அலர்ஜி ஸ்பெஷலிஸ்ட்’ டாக்டர்கள் கூறுவதாவது:

‘டை பயன்படுத்துவதால்…அலர்ஜியில் ஆரம்பித்து ஹார்மோன் சமச்சீரின்மை, புற்றுநோய் வரை ஆபத்து நேரலாம்’ என்ற அதிர்ச்சி தகவலை கூறுகின்றனர். டை- ஐ தொடர்ந்து உபயோகிப்பதால், நம் தலைமுடிக்கு மட்டும் வினை புரிவதில்லை, உடலிலும் சென்று ரத்தத்திலும் அது கலக்கிறது. இரண்டு நாட்கள் வரை தங்கும் செமி டெம்பரரி டை; 15 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை நீடிக்கும் பெர்மனன்ட் டை என எல்லா டைகளுமே ரசாயன தயாரிப்பு என்பது தான் பிரச்சனையே!’

டைகளில் இருக்கும் பினலின்டயமின், அமோனியா, ஹைட்ரஜன் பெராக்சைடு போன்ற ரசாயனப் பொருட்கள், நம் ஹார்மோன்களை சரியாக செயல்படவிடாமல் தடுக்கின்றன. அலர்ஜி, எதிர்ப்பு சக்தி குறைதல்,கேன்சர், சிறுநீர்பை கேன்சர் என்று பல பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மீசைக்கு அடிக்கும்போது, சுவாசத்தின் வழியாக உள்ளே சென்று நுரையீரலை பாதிக்கக்கூடும் என்று சிலர் நினைக்கலாம்.ஆனால் அதற்கு வாய்ப்பில்லை. ஆனால் மீசைக்கு கீழ் இருக்கும் தோல் வழியாகவும் அது உடலில் ஊடுருவும்.

செம்பருத்தி, மருதாணி போன்ற இயற்கைப் பொருட்களை பயன்படுத்தி, நரையிலிருந்து தப்பிக்க முயற்சிக்கலாம்.

பிரபல புகைப்படக் கரைஞர் சித்ரா சுவாமிநாதன் கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்து போனார். அவருடைய இறப்புக்கு முக்கிய காரணமாக அவருடைய குடும்பத்தினர் சொல்வது … ஹேர் டை!

‘அப்பாவுக்கு 25 வருஷமா டை அடிக்கிற பழக்கம் இருந்தது. கொஞ்ச நாளுக்கு முன் அவருடைய உடல் நிலை மோசமானபோது, பரிசோதித்த டாக்டர்கள்… ‘நுரையீரல் பாதிப்படைஞ்சிருக்கு. இதற்கு இத்தனை நாளா இவர் பயன் படுத்திய டை தான் ஒரு முக்கிய காரணம்’, என்று சொன்னார்கள்!’ என்று சோகம் பொங்க சொல்கிறார் சித்ரா சுவாமிநாதனின் மகன் ஜான்சன்.

டை (Dye) என்ற வார்த்தையின் உச்சரிப்பு, இறப்பு (Die) என்பதையும் குறிப்பதால், ‘கலரிங்’ (colouring) என்ற சொல்லுக்கு தற்போது உலகம் மாறிவிட்டது. இயற்கை முறையில் தயாரிக்கும் ‘ஹென்னா’ என்று சொல்லப்படும் செம்பருத்தி, மருதாணி போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் டை-யைத் தவிர்த்து வேறு எதைப் பயன்படுத்தினாலும் அது நம் முடிக்கு மட்டுமல்ல, உடலுக்கும் கேடு விளைவிக்கும் என்பதை நாம் புரிந்து கொண்டு, நரையை அதன் அழகுடன் ஏற்றுக்கொள்ள பழகிக் கொள்வோம்.

---------------------------------------------------

'நான் இந்த தலையை ரொம்பவும் விரும்புறேன். ஏன்னா இந்த காடு ஒரு நாள் பச்சை கலரா மாறுது. மறுநாள் சிகப்பு கலரா மாறுது. தினம் ஒரு கலராக இந்த ஆள் மாத்திக்கிட்டு இருக்கான். நீ எங்கிருந்து வந்தே'

'இவன் மனைவிக்கிட்டேயிருந்து இன்னைக்குதான் இந்த காட்டுக்கு வந்தேன். அந்த பொம்பளை ஏதேதோ ரசாயனம் கலந்த கருப்பு டை அடிக்கிறா. எனக்கு மயக்கமே வருதுப்பா... அதான் ஓடியாந்துட்டேன்.'

------------------------------------------------

நபித் தோழர் ஜாபிர் அவர்கள் கூறினார்கள்:

'மக்கா வெற்றி நாளில் நபித் தோழர் அபூபக்கர் அவர்களின் தந்தை அபூ குஹாஃபா அவர்கள் நபியவர்களிடம் கொண்டு வரப்பட்டார். அவரது தலை முடியும் தாடியும் தும்பைப் பூவைப் பொல வெள்ளை வெளேர் என்று இருந்தது.

அப்போது நபியவர்கள் 'இந்த வெள்ளை நிறத்தை ஏதேனும் சாயம் கொண்டு மாற்றுங்கள். கறுப்பு நிறத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள்.' என்று கூறினார்கள்.

ஆதார நூல் முஸ்லிம்: 4270


இன்றைய நவீன உலகம் தற்போது ரசாயனம் கலக்கப்பட்ட கருப்பு டைகளை உபயோகப்படுத்துவதை தவிர்த்து வருகிறது. அதற்கு மாற்றாக மருதாணியையும், செம்பருத்தியையும் உபயோகிக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் நம்மவர்களில் பலர் இந்த ரசாயன கலவையில் உள்ள ஆபத்தை உணராது கருப்பு கலரை விரும்பி அடிக்கின்றனர். இதன் கேட்டை முகமது நபி உணர்ந்ததாலோ என்னவோ கருப்பு டை அடிக்க தடை விதித்துள்ளார்கள். ஆண்களானாலும் பெண்களானாலும் ரசாயனம் கலந்த கருப்பு டைகளை தவிர்த்து இயற்கையில் கிடைக்கும் மருதாணியையும், செம்பருத்தியையும் கொண்டு வெள்ளை முடிகளை சற்று அழகாக்கிக் கொள்வோம்.

இதன் மூலம் ரசாயன டை(dye) அடித்து டை(die) ஆவதை தவிர்ப்போம். :-)

Thursday, November 15, 2012

குறட்டை பிரச்னையை சமாளிப்பது எப்படி?


'நாசமாப் போச்சு! இன்னைக்கு நான் தூங்கினாப்பலதான்! இறைவா! என் தலையில இப்படியா எழுதனும்!'
(மாலை மலரில் வந்த கார்டூனை மாடலாக வைத்து வரைந்தேன்.)
--------------------------------------------------------

குறட்டை பிரச்னையை சமாளிப்பது எப்படி?

ஒரு முறை எனது அலுவலகத்துக்கு ஒரு பஞ்சாயத்து வந்தது. பாகிஸ்தானி இந்த பிரச்னையை கொண்டு வந்தவன். அவனது ரூமில் உத்தர பிரதேசத்தைச் சார்ந்த ஒருவன் மிக அதிக குறட்டை விடுவானாம். பாகிஸ்தானிக்கு சிறிய சத்தம் வந்தாலும் தூக்கம் வராது. எனவே சில நேரங்களில் தூரத்தில் இருக்கும் அவனது அண்ணன் ரூமில் சென்று தூங்கச் சென்று விடுவானாம். தான் மெஷினில் நின்று வேலை செய்வதால் தனக்கு தூக்கம் அவசியம் என்றும் இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றும் என்னிடம் சொன்னான். 'இதில் நான் தலையிட முடியாது. நமது பாஸிடம் சொல்லி முயற்சிக்கிறேன்' என்று சொல்லி அனுப்பி விட்டேன். இரண்டு நாட்களுக்கு பிறகு எனது பாஸ் அந்த இருவரையும் அலுவலகத்துக்கு அழைத்தார். பிரச்னைகளை காது கொடுதது கேட்டார்.

பாஸ் சிரித்துக் கொண்டே சொன்னதாவது 'தூங்கிய பிறகு ஒரு மனிதன் இறந்த சவத்தைப் போன்றவன். விழித்திருக்கும் போது ஏதேனும் தவறுகள் செய்தால் அதனை நான் தட்டிக் கேட்க முடியும். தூங்கும் போது வரும் பிரச்னைக்கு நானும் எதுவும் செய்ய முடியாது. இது இறைவன் புறத்திலிருந்து வருவது. இதற்கு நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. இதற்கு நிரந்தர மருத்துவமும் இல்லை. இரண்டு வாரம அனுசரிதது தூங்கிக் கொள். அதன் பிறகு தனியாக அறை சரி செய்து கொடுக்கிறேன்' என்று சொன்னவுடன் சமாதானமாகி சென்றான் அந்த பாகிஸ்தானிய நண்பன். சொன்னபடி இரண்டு வாரத்தில் குறட்டை விட்டுக் கொண்டிருக்கும் அந்த உத்தர பிரதேசத்து நபருக்கு தனி அறை கொடுக்கப்பட்டது.

இது உலகம் முழுவதும் உள்ள பிரச்னை. அமெரிக்காவில் இதனால் நிறைய விவாகரத்துகள் நடந்து வருகிறதாம். சோறு அதிகம் சாப்பிடுவதும் மது அதிகம் உட்கொள்வதும் குறட்டை வருவதற்கு முக்கிய காரணங்களாக சொல்கின்றனர்.

----------------------------------------------------------

மாலை மலரில் ஒரு மருத்துவர் குறட்டை சம்பந்தமாக தரும் விளக்கதை இனி பார்ப்போம்.

நாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்கும். சுருங்கும் தொண்டைவழியாக செல்லும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை.

ஆக சுருங்கிய தொண்டை வழியாக செல்லும் காற்றானது அழுத்தத்துக்குட்படுகிறது. அழுத்தம் நிறைந்த காற்று தொண்டையின் பின்புற தசைகளை அதிரச் செய்கின்றன.

இந்த அதிர்வைத் தான் நாம் குறட்டை என்கிறோம் என்கிறார் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே.கே.ஆர்.காதுமூக்கு தொண்டை மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரவிராமலிங்கம். அவர் கூறியதாவது:-

காரணங்கள்:

நாம் தூங்கும் போது தலைக்கு வைத்து கொள்ளும் தலையணையை மிகவும் பெரிதாக உயரமாக வைத்துக் கொள்வதால் ஏற்படும். சில வகையான ஒவ்வாமை காரணமாக சுவாசக் குழாயில் ஏற்படும் சளி, சிலருக்கு உடல் பருமன் காரணமாகவும் குறட்டை ஏற்படுகிறது.
முழு தூக்கம் இருக்காது:

யாராவது குறட்டை விட்டு தூங்கினால் அவனுக்கென்ன நிம்மதியாக தூங்குகிறான் என பலர் நினைப்பதுண்டு. ஆனால் அது தவறு. குறட்டை விடுபவர் நன்றாக தூங்க முடியாது என்பதுடன் பல பாதிப்பு நிலைக்கும் தள்ளப்படும் நிலையும் வரலாம். குறட்டை விடுபவர் மனம் தெளிவாக இருக்காது.

உடல் மிகவும் களைப்பாக இருக்கும் உடலில் சக்தி குறைவாக இருக்கும். தெளிவற்ற சிந்தனை வரும். அதிகமாக கோபம் வரும். இதுமட்டுமின்றி உடலுக்கு போதிய அளவு பிராணவாயு கிடைக்காது. இதனால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய் பக்கவாதம் போன்ற நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

அத்தோடு மிக தீவிரமாக குறட்டை விடுபவர்கள் உறக்கத்திலேயே இறந்து விடும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. அதனால் இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை:

சுவாசப் பாதையில் தேவையின்றி சதை வளர்ந்தால் சீராக காற்று போக வழியின்றி குறட்டை ஏற்படலாம். எனவே சதை வளராமல் இருக்க உடல் எடையில் கவனம் வேண்டும். பக்க வாட்டில் படுக்க வேண்டும். 4 அங்குல உயரத்திற்கு மேல் தலையணை வைத்து தூங்க கூடாது.

சாப்பிட்ட உடன் படுக்க போக கூடாது. புகை பிடிக்க கூடாது. அளவுக்கு அதிகமான மருந்துகள் சாப்பிடக் கூடாது. மருந்து அருந்த கூடாது. அத்தோடு இதனால் பாதிக்கப்படுபவர்கள் தொண்டை மூக்கு, காது நிபுணரை அணுகி ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

3 வகை நோயாளிகள்:

குறட்டையின் தீவிரத்தன்மையைப் பொறுத்து நோயாளிகளை 3 குழுக்களாக வகைப்படுத்தலாம்.

1. மெல்லிய குறட்டை- அடுத்திருக்கும் அறையில் ஒலியைக் கேட்க முடியும். மூச்செடுப்பதில் சிரமம் இல்லை.

2. உயரமான குறட்டை- கதவு மூடி இருந்தாலும் கூட அடுத்துள்ள அறையில் ஒலியைக் கேட்கலாம்.

3. உறங்கும் போது மூச்சுத் திணறுதல், நேரத்துக்கு நேரம், மூச்சு 10 வினாடிகளுக்கு மேலாக நிறுத்தப்படும்.

மாரடைப்பு அபாயம்:

7 மணி நேர நித்திரையின் போது 30 முறை மூச்சு திணறல் ஏற்பட்டால் இது ஆபத்தானதாக இருக்கலாம். பெருமூச்செடுத்த வண்ணம், நேரத்துக்கு நேரம் நோயாளி தூக்கம் கலையலாம்.

ரத்தத்தில் காணப்படும் குறைவான செறிவுடைய ஆக்சிஜன் இதயம், சுவாசப்பை மற்றும் மூளையை பாதிக்கலாம். ரத்த அழுத்தம் உயர்வடைவதால், மாரடைப்பு ஏற்படும்.

கட்டிலில் மரணம் கூட ஏற்படலாம். இந்த நோயாளிகள் பகலில் கூட நித்திரைத் தன்மையை, சோம்பேறித்தனத்தை உணர்வார்கள். டாக்டர் தூக்க வரலாற்றை சோதிக்கும் போது, இந்த பிரச்சினை பற்றி கூடுதலாக அறிந்த நோயாள ரின் துணையும் இருக்க வேண்டும்.

ஆபத்தான நோய்:

டான்சில் வீக்கம், அடினாய்டு பிரச்சினைகள் ஏற்படும் போதோ சளி பிடிக்கும் போதோ குறட்டை சத்தம் ஏற்படலாம். இந்தப் பிரச்சினைகளால் ஏற்படும் அடைப்பு நீங்கியவுடன், குறட்டை சத்தமும் நின்று விடும். அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் மற்றும் இள வயதினருக்கு குறட்டை ஏற்படுகிறது.

கழுத்தைச் சுற்றி அளவுக்கு அதிகமான தசை வளர்வதால், சதை அடைப்பு உருவாகி, குறட்டை ஏற்படுகிறது. ஆபத்தான மருத்துவக் கோளாறாக இது கருதப்படுகிறது. ஆபத்தான, தூக்கத் தடை ஏற்படுத்தும் நோயாக இது கருதப் படுகிறது.

ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்லும் போது கண்கள் வேகமாக அசையும், அந்த நேரத்தில் நம் மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளியேறும். இதற்கு `அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே' என்று பெயர். அந்த நேரத்தில் குறட்டையும் அதிகரிக்கும். ஒரு நேரத்திற்கு 18-க்கும் மேற்பட்ட முறை நம் கண்கள் வேகமாக அசைந்து, மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளிவருகிறது.

குறட்டை விடும் போது திடீரென நின்று திடீரென அதிகரிக்கும் சுவாசத்தால் நம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து இதய அடைப்பு திடீர் மரணம் ஆகியவை ஏற்படலாம்.

இந்தியாவில் அதிகம் பேர் பாதிப்பு:

இந்தியர்களில் பெரும்பாலோர் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நம் வாழ்க்கை முறை மாறி விட்டதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

குறட்டை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து `ஸ்லீப் அப்னியே' நோய் உருவாகி உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க தமிழகத்தின் பெரிய நகரங்களில் மருத்துவமனைகள் உள்ளன.

உங்கள் தூக்க முறையை வைத்து, உங்களுக்கு நோய் உள்ளதாப என்பதை அவர்கள் கண்டறிந்து விடுவர். காரணத்தைக் கண்டறிந்து விட்டால், 30 சதவீதத்தினர் நோயைக் குணப்படுத் திக்கொள்ளலாம். டான்சில் அடினாய்டு, மூக்கினுள் வீக்கம் போன்ற பிரச்னைகளை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.

குறட்டையை குறைக்க:

ஆக்சிஜனை உடலில் தேவையான இடத்திற்கு எடுத்து செல் லும் வகையில் புதிய கருவிகள் தற்போது கிடைக்கின்றன. அறையில் உள்ள ஆக்சிஜனை உள்ளிழுத்து நம் மூக்கின் வழியே உடலுக்குச் செலுத்தும் இவற்றை வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம்.

குறட்டையைக் குறைக்க மேலும் சில கருவிகள் விளம்பரப் படுத்தப்படுகின்றன. விசேஷ தலையணை, கழுத்துப் பட்டைகள், நாக்கை அழுத்திப் பிடிக்கும் கருவிகள் என பல வகைகள் உள்ளன. குறட்டை விடுபவரை, ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு திருப்பி படுக்க வைத்தாலே குறட்டை ஒலி குறையும்.

ஸ்பைரோ மீட்டர் கருவியால் மூச்சுப் பயிற்சி செய்தல், பலூன் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல், ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால் குறட்டை குறைகிறது என்பது ஆய்வில் கண்டறிந்த உண்மை.

யோகாவில் உள்ள மூச்சுப் பயிற்சியும் மிகச் சிறந்தது. தினமும் 45 நிமிடம் யோகா, மூச்சுப் பயிற்சியுடன் கூடிய நடை பயிற்சி போன்ற பழக்கங்களை, சிறு வயது முதலே கடைபிடிக்க வேண்டும். இதனால் இளவயது பருமனைக் குறைக்கலாம். திடீர் மரணத்தையும் தவிர்க்கலாம்.

சிகிச்சை முறை:

குறட்டை பிரச்சினையை அறுவை சிகிச்சை மூலம் குணப் படுத்தலாம். எல்.ஏ.யு.பி. என்னும் லேசர் சிகிச்சை மூலம் குறட்டையைக் குறைக்க முடியும். குறட்டைக்கு முதல் சிகிச்சை உடல் எடையை குறைப்பதுதான்.

அடுத்து காற்றுச் செல்லும் பாதையிலுள்ள அடைப்பு அதிகமாக இருந்தால் மூக்கு, உள்நாக்கு, தொண்டை போன்ற பகுதிகளை பரிசோதித்து அடைப்புள்ள இடத்தைக் கண்டறிந்து லேசர் கிச்சையின் மூலம் அடைப்பை சரி செய்யலாம்.

முற்றிய நிலையிலிருக்கும் நோயாளிக்கு ஆபரேஷன் செய்தாலும் சரியான தீர்வளிக்காது என்பதால் சிறிகிறி என்கிற மாஸ்க்கை ஒவ்வொரு நாளும் தூக்கத்தின்போதும் அணிந்துகொள்ளத் தருகிறோம். அதை அவர்கள் அணிவதால், அந்த மாஸ்க்கிலுள்ள ஆக்சிஜன் அடைப்புள்ள இடத்தில் வேகமாக அழுத்தம் கொடுத்து அடைப்பை விலக்கி, காற்று நன்கு செல்ல உதவுகிறது.

இதனால் அவர்கள் குறட்டை பிரச்சினையில்லாமல் ஆழமான தூக்கத்தை அனுபவிக்க முடிகிறது. காற்றடைப்பை கண்டறிய மருத்துவ மனையில் நவீனமான சிலிப்லேப் என்கிற முழுதும் கம்ப்ïட்டர் மயமாக்கப்பட்ட தூங்கும் அறையுள்ளது. நோயாளியை அந்த அறைக்குள்ளே ஒரு இரவு முழுவதும் தூங்க விடவேண்டும்.

அவரது உடலில் ஒன்பது இடங்களில் கம்ப்யூட்டரோடு இணைக்கப்பட்ட கேபிள்கள் பொருத்தப்படும். அது அன்று இரவு முழுவதும் அவர் தூங்குவது, குறட்டை விடுவது எத்தனை முறை விழிப்பு வந்து புரண்டு படுத்தார், எந்தப் பக்கமாக படுக்கும்போது குறட்டைகளின் தன்மை எப்படியிருந்தது.

ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, மூளைக்கும், மார்புக்கும் காற்று சென்று வந்த நிலை, அடைப்பு எங்கேயிருக்கிறது என்பதை துல்லியமாகக் கண்டறிந்து விடலாம் என்கிறார் டாக்டர் ரவிராமலிங்கம்.

http://www.maalaimalar.com/2011/01/26125828/medical-uses.html


Tuesday, October 30, 2012

நிலம் புயல் நீர்த்துப் போக வேண்டும்!


அமெரிக்காவை நேற்று போட்டு புரட்டி எடுத்த புயலின் வேகம் அடங்குவதற்குள் நம் தமிழகத்தை நிலம் புயல் நாளை தாக்கப் போகிறதாம். ஏற்கெனவே வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை கொட்டித் தீர்க்கிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் ஏற்கெனவே மழையினால் அனைத்து இடங்களும் தண்ணீரில் மிதக்கின்றன. வடிகால் வசதி இல்லாததால் 70, 80 லட்சம் மக்கள் தொகைக்கு மேல் வசிக்கும் இந்த நகரம் இன்று செய்வதறியாது தவிக்கிறது. ஒவ்வொரு மழைக் காலங்களிலும் இதே நிலைதான்.

ஏரிகள் நகரமான செங்கல் பட்டில் அநேக ஏரிகளை ரோடுகளாகவும் குடியிருப்பு இடங்களாகவும் மாற்றி விட்டனர். அந்த இடங்கள் எல்லாம் தூர் வாரப்பட்டு ஏரிகளாக முறையாக பராமரிக்கப்பட்டால் இந்த தொல்லையே இருக்காது. தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் நமது அரசாங்கம் தண்ணீர் தேங்கும் என்று எதிர் பார்க்கப்படும் இடங்களில் எல்லாம் இயந்திரங்களைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளதாம். இது ரெட்டிப்பு செலவு இல்லையா? மேலும் இது நிரந்தர தீர்வும் கிடையாது. இயந்திரங்கள் எடுக்கும் தண்ணீரும் வீணாக கடலில் போய்தான் கலக்கும். தண்ணீர் பிரச்னையில் எத்தனையோ கிராமங்கள் அல்லல் பட்டுக் கொண்டிருக்க நாமோ வரும் மழை நீரை சேகரிக்காமல் கடலில் வீணாக கலக்க விடுகிறோம். தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 12 டி எம் சி தண்ணீர் நமக்கு கிடைக்கிறது. இந்த கிருஷ்ணா நீரோடு மழை நீரும் சேர்ந்து கொண்டால் அனைத்தையும் சேமிக்க ஏரிகள் ஒழுங்கான முறையில் இல்லாததால் அனைத்து உபரி நீரும் வீணாக கடலில் கலக்கிறது. பாலாறு வழியாக ஆண்டுக்கு, 7 டி.எம்.சி.,யும், அடையாறு மூலம், 2 டி.எம்.சி.,யும் மழை நீர் கடலில் சேர்கிறது. பள்ளிக்கரணை படுகையில் உள்ள, 33 ஏரிகளில் இருந்து ஆண்டுக்கு ஒரு டி.எம்.சி., மழை நீர் கடலுக்கு செல்கிறது. இதை தடுக்க ஆட்சியாளர்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள்?..

சென்னை கடலூரை இப்புயல் நாளை மதியம் கடக்கும் போது மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வீசக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை துறைமுகம் பகுதியில் ஏழாம் நம்பர் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது மேலும் பீதியைக் கிளப்புகிறது. ஒரு மீட்டர் உயரத்துக்கு அலைகள் சீறுமாம். தமிழகத்தின் 11 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. அரசு மிக துரித நடவடிக்கை எடுத்து உயிர்ப் பலிகளும் பொருள் சேதமும் ஏற்படாமல் முடிந்த வரை காக்க வேண்டும். அரசே அனைத்தும் செய்யும் என்ற எதிர்பார்ப்பில் இல்லாமல் தற்போதே தடுப்புகளை ஏற்படுத்தி வெள்ளம் வீடுகளுக்குள் செல்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

----------------------------------------------------------


குரு பூஜையில் கொலை!

தமிழகம் முழுவதும் நிலம் புயல் பயத்தால் உறைந்து போயிருக்க நேற்று பசும் பொன் கிராமத்தில் 105 வது தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டுள்ளது. அது சமயம் அங்கு நடந்த சாதி மோதலில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது அதிர்ச்சியை தருகிறது. ஒரு வேனில் குரு பூஜைக்கு சென்றவர்களை ஒரு கும்பல் மறித்ததாகவும் எனவே வேறு பாதையில் சென்று அங்கும் கலவரம் ஏற்பட்டு டிரைவரை வெட்டியுள்ளார்கள். சிவகுமார், வீரமணி, மலைக் கள்ளன் என்ற மூன்று பேரும் இறந்ததாக போலீசாரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் பரமக்குடியில் தலித் மக்களின் தலைவராகக் கருதப்படுகிற மறைந்த இமானுவேல் சேகரனின் அஞ்சலிக்காக குழுமிய தலித்துக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தியதில் ஆறு பேர் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது..

ஒவ்வொரு முறையும் இது போல் சாதி தலைவர்களால் பிரச்னை வருகிறது. ஒன்று இதற்கு தடை விதிக்க வேண்டும். அல்லது பலத்த போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். இப்படி வருடா வருடம் வெளியூர்களில் இருந்து ஆட்கள் வந்து பூஜை செய்தால்தான் தேவரின் பெருமை அல்லது இமானுவேலுவின் பெருமை பறை சாற்றப்படுமா?

இன்று மூன்று இளைஞர்களின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது. எத்தனை கனவுகளோடு வாழ்ந்தார்களோ இன்று அநியாயமாக சாதிக் கொடுமையால் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளார்கள். இதற்கு பதிலடியாக இனி எதிர் தரப்பு களத்தில் இறங்கும். ஏன் இந்த வெறி? எதைக் கொண்டு போகப் போகிறோம்?

முஹர்ரம் ஊர்வலம், மீலாது ஊர்வலம், விநாயக சதுர்த்தி ஊர்வலம், சாதி தலைவர்களின் ஊர்வலம் நினைவு நாட்கள், தலைவர்களின் சிலைகள் என்று அனைத்தையும் தடை செய்து சட்டம் இயற்றினால் இது போன்ற விஷமிகளின் செயல் கட்டுக்குள் கொண்டு வரப்படும். ஆனால் ஓட்டுக்களை எதிர் பார்த்து இதை செய்ய அரசுகள் தயங்குகின்றன. எந்த அரசியல் கட்சி தலைவர்களும் யாரையும் கண்டித்து அறிக்கையும் விட மாட்டார்கள். ஏனெனில் அப்படி அறிக்கை விட்டால் அவர்களுக்கு ஓட்டு போய் விடுமே என்ற பயம். அரசாங்கமும் இரண்டு லட்சத்தை கொடுத்து தனது கடமையை செய்ததாக சொல்லிக் கொள்ளும். நாடு போகும் பாதையை நினைத்தால் பயமாக இருக்கிறது. அனைத்து மக்களும் அமைதியாக வாழக் கூடிய சூழலை உண்டாக்க பிரார்ததிப்போம்..

-----------------------------------------------------------

நேற்றைய புயலுக்குப் பிறகு அமெரிக்கா!








Saturday, October 20, 2012

மீன்களையும் விட்டு வைக்கவில்லை என்டோசல்ஃபான்!

மீன்களையும் விட்டு வைக்கவில்லை என்டோசல்ஃபான்!



'நம்ம வீட்டுக்கார பையனோட லேப்டாப்புல ஒரு சேதிய நான் சைடுல பார்த்தேன். அத நான் சொல்லட்டுமா?'

'ம்..ம்......சொல்லு... சொல்லு.....'

'என்சைக்ளோபீடியா தகவல்படி பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு நம்ம மூதாதையர்களில் பல பேர் கால் முளைத்து பரிணாமம் அடைந்து நில வாழ் உயிரினமா மாறிட்டாங்களாம்'

'அடடே....ஆச்சரியமா இருக்கே! அப்போ நீரில் வாழும் நம்முடைய சுவாச உறுப்புகளும் மாற்றமடைந்திருக்கணுமே! அது எப்படி ஆச்சு?'

'இப்படி குறுக்கு கேள்வி எல்லாம் கேட்டா எனக்கு என்ன தெரியும்? நான் சொல்றதை கண்ணை மூடிக்கிட்டு நம்பணும். புரியுதா?'

'???????????????'

--------------------------------------------------------

பல்வேறு வகையான மீன்களில் ஆராய்ச்சி செய்த சலீம் அலி சென்டர் பார் ஆர்னிதாலாஜி அண்ட் நேச்சுரல் ஹிஸ்டரி (SACON) என்ற அமைப்பு கேரளாவில் சிறப்பாக இயங்கி வருகிறது. மாநில அரசின் அங்கீகாரம் மற்றும் ஊக்கத்தில் இந்த அமைப்பு செயல்படுகிறது. சமீபத்தில் நடத்திய ஆய்வில் சில அதிர்ச்சிகரமான உண்மைகளை நமக்கு தந்திருக்கிறது.

கேரளாவில் பாயும் நதிகளில் பூச்சிகொல்லி மற்றும் தீங்கு விளைவிக்கும் விஷங்கள் பற்றி ஆய்வு செய்ய இந்த அமைப்பை கேரளா பயோ டைவர்சிடி போர்டு சமீபத்தில் அங்கீகாரம் அளித்து நியமித்தது. பாலக்காடில் பாயும் சித்துர்புழா என்ற ஒரு சிறு ஆற்றைத் தவிர ஏனைய 44 நதிகளையும் இந்த SACON அமைப்பு ஆய்வு செய்தது.



மிகவும் அதிர்ச்சிக்குரிய கண்டுபிடிப்பாக, ஆய்வுக்கு எடுக்கப்பட்ட 159 மீன்களில் அனைத்திலும் DDT எனப்படும் பூச்சிகொல்லி மருந்தும், என்டோசல்பான் எனப்படும் நச்சு பொருளும் கலந்துள்ளது தெரிய வந்தது.

சமீபத்தில் என்டோசல்ஃபான் உற்பத்திக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் அணி திரண்டதும் இந்தியா அதற்கு ஆதரவு அளித்ததும் பிறகு உச்ச நீதிமன்றம் தலையிட்டு அரசுக்குக் கொட்டு வைத்ததும் மத்திய அரசு என்டோசல்பான் உற்பத்தியாளர்களுக்கு வக்காலத்து வாங்கி நீதிமன்றத்தில் பேசியதும் குறிப்பிடத்தக்கது.

'இது சாதாரண விஷயம் அல்ல. இந்த டிடிடி மறறும் என்டோசல்ஃபான் பாதிப்பானது மண், நீர், தாவரம், மிருகங்கள், பறவைகள, மனிதர்கள் என்று அனைத்து ஜீவன்களையும் பாதிக்க தொடங்கியுள்ளது. ஆற்றோரங்களில் உள்ள பலர் தங்களின் குடிநீராக ஆற்று நீரையே பயன்படுத்தி வருகின்றனர். ஆறு மட்டுமல்ல கடலும் பொலிவிழந்து வருகிறது. தொழிற்சாலை கழிவுகள் கடலில் கொட்டப்படுவதால் அங்குள்ள மீன்களும் மிகுந்த பாதிப்படைந்து மனிதனுக்கு தீங்கு விளைவிக்கின்றன' என்கிறார் ஆய்வாளர் சி.எம்.ஜாய்.

விட்டமின் சி உடம்புக்கு தேவை என்று வாரத்துக்கு இரண்டு முறை மீன் குழம்பை விரும்பும் பிரியர்கள் நோய்களை விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறார்களோ? நமது வீட்டிலேயே ஒரு குளத்தை வெட்டி இனி நாமே மீன் வளர்க்க வேண்டியதுதான்.

முன்பு எங்கள் வீட்டில் அழகிய கிணறு இருந்தது. மோட்டர் பம்பு வைத்ததால் எவருமே கிணறை உபயோகப்படுத்துவதில்லை. எனவே அதனை மணலை போட்டு மூடி விட்டோம். முன்பெல்லாம் அந்த கிணற்றில் அருமையான கெழுத்தி மீன்களை வளர்ப்போம் குழம்புக்கு மிக ருசியான மீன். இனி அந்த கிணற்றை சுத்தம் செய்து அதில் மீன் வளர்க்கலாமா என்று யோசிக்கிறேன்.

தொழிற்சாலைகளின் கழிவுகள் ஆற்றில் கலப்பதாலேயே அதிகமாக நீர் மாசுபட காரணமாகிறது. ஆற்றோரங்களில் வாய்க்கால் ஓரங்களில் பலர் காலைக்கடனை கவலையினறி கழிக்கிறார்கள். மழை பெய்தால் அத்தனையும் ஆறுகள் வாய்க்கால்களில் கலந்து நீர் மாசுபடுகிறது. பல வீடுகளின் கழிவு நீர் ஆறுகளிலும் வாய்க்கால்களிலுமே கலக்கின்றன. இவற்றை எல்லாம் அரசு கவனத்தில் கொண்டு கழிவறைகளின் அவசியத்தை மக்களுக்கு போதிக்க வேண்டும். பாடபுத்தகங்களிலும் இது பற்றிய விழிப்புணர்வை சிறு வயதிலிருந்தே மாணவர்களின் மனத்தில் பதிய வைக்க வேண்டும்.
http://www.deccanchronicle.com/channels/cities/kochi/ddt-kerala-fish-453

Sunday, September 30, 2012

மற்றுமொரு தலித் கற்பழிப்பு ஹரியானாவில்!



இது அடுத்த கற்பழிப்பு. இங்கு மூன்று கயவர்கள் அதே முறையில் ஒரு தலித் பெண்ணை பலவந்தமாக கற்பழித்து அதே முறையில் மொபைலில் அந்த நிகழ்ச்சியை பரவ விட்டுள்ளார்கள. இதுவும் ஹரியானா மாநிலத்தில்தான் நடந்துள்ளது. போலீஸ் இது வரை உரிய நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

சோனிபட் : அரியானா மாநிலத்தில் மூன்று வாரத்தில் 3வது கற்பழிப்பு சம்பவம் நடந்துள்ளது. அரியானா மாநிலம், சோனிபட் அருகே கோகானா எனும் ஊரில் 11ம் வகுப்பு மாணவி ஒருவர், 3 பேரால் கற்பழிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 3 வாரத்தில் அரியானா மாநிலத்தில் இதுபோன்ற கற்பழிப்பு சம்பவம் நடப்பது 3வது முறையாகும். கடந்த செப் 21ம் தேதி திருமணமான பெண் ஒருவர் துப்பாக்கி முனையில் 3 பேரால் கற்பழிக்கப்பட்டார். அதேபோல் 16 வயது பெண் ஒருவரும் எட்டு பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார்.

'எனது கழுத்தை நெரித்தனர். ஒருவன் என் கைகளை பிடித்துக் கொண்டான். மற்றொருவன் என்னை களங்கப்படுத்தினான். காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.' என்று அந்த பெண் குமுறலோடு பேட்டி கொடுப்பது கல் நெஞ்சையும் உலுக்கி விடும்.

இந்த கயவர்களுக்கு வேறு வேலையே இல்லையா? பரிதாபத்திற்குரிய அந்த தாழ்த்தப்பட்ட மக்களை இம்சிப்பதில் இந்த கயவர்களுக்கு அப்படி என்ன சந்தோஷமோ தெரியவில்லை.

‘பிராமணனுக்குத் தலையை முண்டனம் செய்தல் உயிர்த்தண்டனையாகும். ஏனையோருக்கு உயிர்த்தண்டனையே உண்டு (8 : 378).

எந்தப் பாவம் செய்த போதிலும், பிராமணனைக் கொல்லாமல், காயமின்றி அவன் பொருளுடன் ஊரை விட்டுத் துரத்துக (8 : 379).

பிரம்மஹத்தியை விடப் பெரும் பாவம் உலகில் இல்லையாகையால், பிராமணனைக் கொல்ல மன்னன் எண்ணவும் கூடாது (8 : 379).

அந்தணனுடன் அவனுக்குரிய உயர்ந்த ஆசனத்தில் அகங்கரித்துச் சமதையாக அமர்ந்த நாலாம் வருணத்தவனை, அவனது உயிர்க்கு ஊறு நேராத வகையில் இடுப்பிற் சூடு போட்டோ, உட்கார்ந்த உறுப்பிற் சிறிது சேதப்படுத்தியோ ஊரை விட்டு ஓட்ட வேண்டியது (8 : 281).

அந்தணர் ஏவலுக்கென்றேயுள்ள நாலாம் வருணத்தானிடம், கூலி கொடுத்தோ, கொடுக்காமலோ அந்தணன் வேலை வாங்கலாம் (8 : 412).

மனுவின் இந்த சட்டங்கள் தான் அந்த கயவர்களை மேலும் மேலும் தவறு செய்ய தூண்டுகிறது.

மன்னன் இயற்ற வேண்டிய விசாரணைகள் எந்த நாட்டில் நான்காம் வருணத்தானால் நடைபெறுகின்றதோ, அந்நாடு சேற்றில் அகப்பட்ட பசுவைப் போல், கண் முன்னே துன்பமுறுகின்றது. (8 : 21)

அம்பேத்கார்தான் நமது நாட்டின் சட்டத்தை இயற்றியவர் என்று படித்துள்ளேன். நம் நாடு எதிர் கொள்ளும் பிரச்னைகளுக்கு அம்பேத்காரும் ஒரு காரணமோ? :-)

இப்போ மேல் சாதியினரின் ஆட்சி நம் தமிழகத்தில் நடப்பதால் வறுமை நீங்கி சுபிட்சம் எல்லா வீடுகளுக்குள்ளும் வர ஆரம்பிக்கும். :-)

இதை எல்லாம் நாங்கள் பின் பற்றுவதில்லை என்று பலர் சாதிக்கலாம். ஆனால் இன்றும் மனுவின் சட்டத்துக்கு அங்கீகாரம் கொடுக்க துடித்துக் கொண்டிருக்கும் சிலரையும் பார்ப்போம்.

மனு தர்ம ஆதரவாளர்கள்

இன்றும் மனுவைப் போற்றுபவர்கள் நம்மிடையே உள்ளனர். இந்தியா விடுதலை பெற்றவுடன் உச்ச நீதிமன்றம் உருவாகும் நிலையில் அந் நீதிமன்ற வளாகத்தில் மனுவின் சிலையை நிறுவ வேண்டுமென்று வேண்டுகோள் முன் வைக்கப்பட்டது. அவ்வாறு மனுக்குச் சிலை நிறுவினால் அதைத் தாமே முன்னின்று இடிப்பதாக அம்பேத்கர் கூறினார். ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தை பா.ஜ.க. ஆட்சி புரிந்தபோது ஜெய்ப்பூரில் உள்ள உயர் நீதிமன்ற வளாகத்தில் மனுவுக்குச் சிலை நிறுவப்பட்டது. இதற்கு மாநில காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் சிலை மேற்கூரை எதுவுமின்றி வீதியில் உள்ளது. பாரதிய ஜனதா ஆட்சி புரிந்தபோது இமாசலப் பிரதேசத்தில் மனாலி என்னுமிடத்தில் ஏற்கனவே உள்ள மனு கோயிலைப் பல லட்சம் செலவு செய்து புதுப்பித்துள்ளனர்.

”1992 ஏப்ரல் 18, 19 தேதிகளில் மதுராவில் உத்தரப்பிரதேச மாநில இந்து வழக்கறிஞர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் மாநில பா.ஜ.க. அரசின் அட்வகேட் ஜெனரல் வி.கே.என். சவுதாரி பேசுகையில் எல்லாக் காலங்களுக்கும் ஏற்ற சட்ட நூல் மனுஸ்மிருதிதான் என்று குறிப்பிட்டார். இதனை ஆர்.எஸ்.எஸ். சின் அதிகாரப்பூர்வமான பத்திரிகையான ‘ஆர்கனைசர்’ (மே 10, 1992) வெளியிட்டுள்ளது”. (மார்க்ஸ்).

ஒருகால் மோடி பிரதமராகி பிஜேபி ஆட்சிக்கு வந்தால் சுப்ரீம் கோர்டில் மனுவுக்கு சிலை வைக்கப்படலாம். மனு தர்மத்தின் படி ஆட்சியும் நடக்கலாம். இந்த நாட்டில் எதுவும் நடக்கலாம்....

-----------------------------------------------

சுடுகாட்டில் மின்சார பற்றாக்குறையால் தகனம் பாதிப்பு!

கோவை:உயிரற்றவர்களுக்கும், மின் தடையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கோவையில், மாநகராட்சி மற்றும் தனியாருக்கு சொந்தமாக, 12 மின் மயானங்கள் உள்ளன. மின் தடையால், மின் மயானங்களில், சடலங்கள் எரியூட்டும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. சொக்கம்புதூரில் உள்ள மாநகராட்சி மின் மயானத்தில், மின் தடையால், 125 கிலோ வாட் திறன் கொண்ட ஜெனரேட்டர் பழுதாகி விட்டது. இதனால், சடலம் எரியும்போது மின்வெட்டு ஏற்பட்டால், துர்நாற்றப் புகை வெளியேறுகிறது; இப்பகுதி மக்கள், பள்ளி மாணவர்கள் தவியாய் தவிக்கின்றனர்.சடலம் எரிந்து கொண்டிருக்கும்போது, மின் தடை ஏற்பட்டால், பல மணி நேரத்துக்குப் பின், மீண்டும் மின்சாரம் வரும் வரை, காத்திருக்க வேண்டியுள்ளது. பாதியில் விட்டுச் செல்லவோ, மயானத்தில் காத்திருக்கவோ முடியாமல் உறவினர்கள் தவிப்பது, பரிதாபகரமானது.

சொக்கம்புதூர் மாநகராட்சி மின் மயான காப்பாளர் ஜெகன்னாதன் கூறியதாவது:இங்கு, வாரம், 25 சடலங்கள் வருகின்றன. எரியூட்டும் கல்லின் உட்பகுதியில் மின்சார காயில் இருப்பதால், ஒருமுறை எரித்தாலும் அதன் வெப்பம் 24 மணி நேரத்துக்கு கல்லில் இருக்கும்.எனினும், சடலம் எரிந்து கொண்டிருக்கும்போது மின்வெட்டு ஏற்பட்டால், புகை வெளியேறுவதை தவிர்க்க முடியாது. மின்சாரம் எப்போது வரும், போகும் என்பது தெரியாத நிலையில், இப்பிரச்னை குறித்து உறவினர்களிடம் முன்பே கூறி விடுகிறோம். மின் தடையால் பணிகள் தாமதமாகி, சடலங்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

பாப்பநாயக்கன்பாளையம் தனியார் மின் மயான ஊழியர் உண்ணி கூறுகையில், ""இங்கு தினமும், குறைந்தது, 5-6 சடலங்கள் வருகின்றன. இரண்டு மின்தளங்கள் உள்ளன. ஜெனரேட்டர் வசதி இருப்பதால் பிரச்னை இல்லை,'' என்றார்.

தகனம் தடைபடுவது உணர்வுரீதியான விஷயம் என்பதால், மின் மயானங்களில் பழுதாக உள்ள ஜெனரேட்டர்களை சரி செய்ய வேண்டும்; ஜெனரேட்டர் இல்லாத இடங்களுக்கு, அந்த வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே, பொது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

பத்திரிக்கை செய்தி
29-09-2012

இவ்வாறு சுற்று சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த முறையை விட மனித உடலை மண்ணில் புதைப்பது சிறந்தது என்பது எனது கருத்து. இந்து மதத்தில் புதைப்பதில் ஏதும் சிக்கல் உள்ளதா என்பது தெரியவில்லை. ஏனெனில் இந்து மதத்தில் பலர் இறந்த உடலை மண்ணில் புதைப்பதை வழக்கமாகவும் கொண்டுள்ளனர்.

மின்சார பற்றா குறை நிலவும் இது போன்ற நாட்களிலாவது எரிப்பதற்கு பதில் புதைப்பது நல்லது என்பது எனது புரிதல். எங்கள் ஊரிலெல்லாம் உடல்களை வரிசையாக அடக்கி விட்டு மீண்டும் இரண்டு அல்லது மூன்று வருட இடைவெளியில் தொடங்கிய இடத்துக்கே வருவோம். மண்ணானது உடலை மக்கச் செய்து அடையாளமே இல்லாது செய்து விடும். அந்த மண்ணுக்கும் அந்த உடல் உரமாகி விடுகிறது. சுற்று சூழலுக்கும் எந்த பாதிப்பும் இல்லை..

Friday, September 07, 2012

காசை கரியாக்காதேடா என்று அம்மா சொல்லும்


காசை கரியாக்காதேடா என்று அம்மா சொல்லும்

இன்று நாங்களே சிவகாசியில் கரியாகிப் போனோம்.

இறந்த என் அப்பாவுக்காக கிடைத்தது 2 லட்சம்

இரண்டு வருடம் போனால் இருக்காது எங்களிடம் மிச்சம்.

இறந்த என் அப்பாவுக்கு ஈடாகுமா இந்த 2 லட்சம்

எண்ணிப் பார்த்து தடைகள் போடுங்கள் கொஞ்சம்!

அப்பாவை போன்ற உயிர்களாவது மிஞ்சும் கொஞ்சம்

நரகாசுரன் செத்ததற்காக வந்தது இந்த தீபாவளி

என் அப்பா செத்ததால் ஏன் வந்தது இந்த தீபாவளி

காசை கரியாக்கும் இந்த பணத்தில் உங்கள்

கிராமத்து ஏழைகளின் வயிற்றுப் பசியை போக்கினால்

பலரது வாழ்த்துக்களோடு செல்லுமே இந்த தீபாவளி!

ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று

வாயால் சொல்லாதீர்கள்: செயலில் காட்டுங்கள்:






பட்டாசு, மத்தாப்புகளில் வண்ணங்களை உருவாக்கவும் சப்தத்தை அதிகரிக்கவும் சேர்க்கப்படும் வேதிப்பொருள்கள் கீழ்க்கண்ட பாதிப்புகளை ஏற்படுத்தலாம்:

செம்பு: சுவாசப் பாதையில் எரிச்சல்

காட்மியம்: ரத்தசோகை, சிறுநீரகப் பாதிப்பு

காரீயம்: நரம்பு மண்டலப் பிரச்சினைகள்

மக்னீசியம்: இதன் தூசும் புகையும் உலோகப் புகை காய்ச்சலை ஏற்படுத்தலாம்

மாங்கனீசு: உளவியல் தொந்தரவு, பக்கவாதம், வலிப்பு

சோடியம்: ஈரப்பதக் காற்றுடன் வினைபுரிந்து தோலைப் பாதிக்கலாம்

துத்தநாகம்: குமட்டல், வாந்தியை உருவாக்கலாம்

நைட்ரேட்: மூளை வளர்ச்சியைப் பாதிக்கலாம்

நைட்ரைட்: கோமாவுக்கு இட்டுச் செல்லலாம்

உச்ச நீதிமன்ற ஆணைப்படி ஒரு பட்டாசில் உள்ள வேதிப்பொருள்களின் பட்டியல், அதன் அட்டையில் அச்சிடப்பட வேண்டும். ஆனால் இது செய்யப்படுவதில்லை.

மேற்கண்ட பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசு வெடிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், நம்ம ஊர் காவல்துறை இதை நடைமுறைப்-படுத்துவதில்லை. அத்துடன் 125 டெசிபலுக்கு மேலாக சப்தம் எழுப்பும் பட்டாசுகளை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை செய்துள்ளது. ஆனால், சந்தையில் கிடைக்கும் சில பட்டாசுகள் ஏற்படுத்தும் சப்த அளவு கீழே தரப்பட்டுள்ளது. இவை அந்தத் தடையை சாதாரணமாக மீறுகின்றன.

ஆட்டம் பாம் - 145 டெசிபல், சரவெடி - 142 டெசிபல், தண்டர்போல்ட் - 140 டெசிபல், கிங்பிஷர் ஷெல் - 141 டெசிபல், ஹைட்ரஜன் பாம் - 122 டெசிபல்

இந்தச் சப்தத்தை நீங்கள் கேட்டால் உங்கள் காது செவிடாவதற்கு மிக அதிக வாய்ப்பு இருக்கிறது. அதிக சப்தத்தால் காது கேட்கும் திறன் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, உயர் ரத்த அழுத்தமும் தூங்குவதில் பிரச்சினைகளும்கூட ஏற்படலாம்.

பட்டாசுகளால் ஏற்படும் காற்று மாசு-பாட்டால் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்-படுகின்றனர். காரணம்: அவர்களது நுரையீரல் வளர்ந்து வரும் நிலையில் இருக்கிறது. குறைவான மாசுபாட்டைக்கூட அவை தாங்குவதில்லை. எதிர்காலத்தில் உங்கள் குழந்தைக்கு சுவாசக் கோளாறு ஏற்பட பட்டாசு-களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

வரலாற்றில் தீபாவளி

மொகலாய பேரரசர் ஷாஜஹான் தீபாவளியன்று பெருவிருந்து ஏற்பாடு செய்து, சமபந்தி போஜனம் கொடுத்து பட்டாசு கொளுத்தி வாணவேடிக்கை செய்துள்ளார்.

தஞ்சை சரஸ்வதி மகாலில் உள்ள “ஆகாச பைரவ ஜல்பம்’ என்ற ஓலைச் சுவடியில் வாணவேடிக்கை பற்றி உள்ளது. சிவகாசி பட்டாசு தொழில் 1923-ல் ஆரம்பிக்கப்பட்டது. தீபாவளி வெடி வெடிக்கும் பழக்கம் பேரரசர் பாபர் (1483- 1530) காலத்தில் ஏற்பட்டது. மஹதாப் என்ற உருது சொல்லுக்கு மத்தாப்பு எனப் பொருள்.

வரலாறுகளில் தீபாவளி பண்டிகையில் பட்டாசு கொளுத்தும் பழக்கம் முற் காலங்களில் இருந்ததில்லை. மொகலாய சக்ரவர்த்தி பாபரின் காலத்தில்தான் இந்த பழக்கம் ஆரம்பமாகிறது. அனைத்து சாதியினரையும் வைத்து சமபந்தி போஜனை நடத்தி அதன் பிறகு பட்டாசுகளையும் கொளுத்தியுள்ளனர். அதை இன்று மிக தீவிரமாக பிடித்துக் கொண்டனர்.


------------------------------------------

ஒழிந்து போன கடலை மிட்டாயும் புதிதாய் பிறந்த நூடுல்ஸும்!

வேர்க் கடலை என்ற அருமையான உணவை தமிழக மக்களின் சொல்வாக்கில் பார்ப்போம்:

மதுரை - வயலுக்குப் போயி நெலக்கடல பரிச்சி சப்பிடலாம்லா...
திருநெல்வேலி - ஏலா வயக்காட்டுக்கு வாலா...கல்லப்பருப்பு திம்போம்.
கொங்கு - என்ற கூட வெள்ளாமக் காட்டுக்கு வா., கடல திங்கோணும்.
தஞ்சை - கொல்லைக்கு வா கடலை சாப்பிடலாம்.
ஈழம் - 'வாருமப்பா கச்சான் தின்னுவம்'.
கன்னியாகுமரி - அண்ணாச்சி வாறியலா கல்ல சாப்பிடுவோம்.

கடந்த வருட வியாபாரம் 1,500 கோடி. அடுத்த ஓரிரு வருடங்களில் இது 3,000 கோடியைத் தொடும் என்கிறது ஒரு சமீபத்திய புள்ளிவிவரம். எந்தப் பொருளுக்கு இப்படி ஒரு சந்தை என்று கேட்கிறீர்களா? டூ மினிட் இன்ஸ்டன்ட் நூடுல்ஸுக்குத்தான்.


25 வருடங்களுக்கு முன்பு கடையில் ஓரமாக ஒரு மூலையில் அடுக்கிவைக்கப்பட்ட வஸ்து, இன்றைக்கு, மளிகைச் சாமான் ரசீதில் தவிர்க்கவே முடியாத ஓர் அங்கம். உலகம் முழுக்கவே 'குப்பை உணவு’, 'சத்து இல்லாதது’ என்று உணவியல் நிபுணர்கள் குறிப்பிடும் நூடுல்ஸுக்கு எப்படி இப்படி ஒரு சந்தை சாத்தியமானது? 'ஒரு பொருளைப் பெரியவர்களுக்குப் பிடிக்கச் செய்தால், சந்தையில் அதற்கு என்று ஓர் இடத்தை உருவாக்கிவிடலாம்; குழந்தைகளுக்குப் பிடிக்கச் செய்துவிட்டாலோ அதற்கு என்று ஒரு சந்தையையே உருவாக்கிவிடலாம்’ என்ற சந்தைப் பொருளாதாரச் சூட்சுமம்தான் காரணம்.

இந்தியாவுக்கு நூடுல்ஸ் வந்த புதிதில் 'இது என்ன புழுப் புழுவாய்’ என்றுதான் பார்க்கப்பட்டது. மார்க்கெட் இழந்த நடிகையை அம்மாவாக்கி, 'இருடா கண்ணா... இதோ... ரெண்டே நிமிஷம்’ என்று சொல்லவைத்து விளம்பரப்படுத்தி, அப்புறம் மூக்கைத் துளைக்கும் நம்ம ஊர் மசாலா வாசத்தைச் சேர்த்தவுடன், வியாபாரம் கோடிக் கோடியாகக் கொட்டத் தொடங்கிவிட்டது.


சரி... நூடுல்ஸில் நமக்கு அப்படி என்னதான் பிரச்னை? இரண்டே நிமிடங்களில் தட்டுக்கு வர வேண்டும் என்பதற்கும், வாசம் மூக்கைத் துளைப்பதற்கும் அதில் சேர்க்கப்படும் வேதிப் பொருள்தான் பிரச்னை! நூடுல்ஸில் வாசத்துக்காகச் சேர்க்கப்படும் 'னீஷீஸீஷீ sஷீபீவீuனீ ரீறீutணீனீணீtமீ மோனோ சோடியம் க்ளூடமேட்’ (எம்.எஸ்.ஜி.) என்னும் வேதிப் பொருள் குழந்தை களின் உடலுக்கு எவ்விதத்திலும் நல்லது இல்லை.
வருஷத்துக்குப் பல மில்லியன் டாலருக்கு விற்கும் இந்த 'மோனோ சோடியம் க்ளூடமேட்’டைப் பற்றி டாக்டர் பிளேலாக் எழுதி 1970-களில் வெளியான 'தி டேஸ்ட் தட் கில்’ புத்தகம்தான் பல உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியது. மூளையின் ஹைப்போ தலாமஸ் வரை பாதிப்பைத் தரக் கூடிய இந்த ரசாயனம் சாதாரண வாந்தி, வயிற்று வலியில் தொடங்கி அறிவாற்றலைச் சிதைப்பது வரை பல்வேறு கோளாறுகளை உருவாக்கக்கூடியது என்கின்றன ஆய்வுகள்.
இந்த 'மோனோ சோடியம் க்ளூடமேட்’ நூடுல்ஸில் மட்டும் இல்லை. துரித உணவகங்களிலும் பல சைனீஸ் உணவகங்களிலும் ஏராளமான உணவுப் பொருட்களில் இது பயன்படுத்தப் படுகிறது. 'இதே காய்கறிகளைப் போட்டுத்தானே நானும் சமைக்கிறேன். அங்கே மட்டும் கடாய் வெஜிடபிள் வாசம் ஒரு தூக்கு தூக்குதே எப்படி?’ என்று மண்டையை உடைத்துக்கொள்ளும் இல்லத்தரசிகளுக்கு ஒரு செய்தி... கடைகளில் கடைசியாகக் கொஞ்சம் 'மோனோ சோடியம் க்ளூடமேட்’ எனும் ரசாயனத்தைப் போட்டு வாணலியை இறக்குவதால்தான் அப்படி மணக்கிறது.

'அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை; ஆதாரபூர்வமாக இதுவரை ஆய்வுகள் எதுவும் 'மோனோ சோடியம் க்ளூடமேட்’ கெட்டது எனச் சொல்லவில்லை!’ என்று வியாபாரிகள் தரப்பு சொன்னாலும், 'கொஞ்சம் பார்த்துப் பயன்படுத்துங்கப்பா... அட்டையில் இதைச் சேர்த்திருக்கோம்னு போடுங்க... பரவாயில்லைனு நினைக்கிறவன் சாப்பிட்டுப் போகட்டும்’ என எச்சரிக்கிறது அமெரிக்க உணவுக் கட்டுப்பாட்டுத் துறை. உடல் எடையைக் கூட்டி, மற்ற சாப்பாட்டை மறக்க/மறுக்கவைக்கும் இந்தச் சமாசாரம் நமக்குத் தேவையா? அவசர உலகின் அம்மா, அப்பாக்கள் கொஞ்சம் யோசியுங்கள்!

எப்போதோ படித்த எட்டாம் வகுப்பு வரலாற் றுப் புத்தகத்தைப் புரட்டும்போது, உள்ளே பத்திர மாக வைத்திருந்த சாக்லேட் தாளையோ, பள்ளி நண்பனின் புகைப்படத்தையோ பார்க்கும்போது ஏற்படும் பரவசம் இருக்குமே... அதுபோலத்தான் நிலக்கடலையைப் பார்க்கும்போதும் எனக்குள் இருக்கும். 'ராசா! ஒரு நாலணாக்கு அவிச்ச கடலை வாங்கிட்டுப் போடா’னு பள்ளி வாசலில் விற்ற பாட்டியை இப்போது பார்க்க முடியவில்லை. 'டணங் டணங்’ என்று இரும்பு வாணலியை இசை நயத்துடன் தட்டி, வறுத்த கடலை விற்றுச் செல்லும் வீதி வியாபாரி, கடற்கரையோடு காணாமல் போய்விட்டார். கால மாற்றத்தில் கொஞ்சம் வேகமாகக் காணாமல்போகும் கலாசார இழப்புகளில் கடலை மிட்டாயும் இப்போது சேர்ந்துவிட்டது. ஹசல் நட்டும் பாதாமும் முந்திரியும் இருக்கும் இடத்தில் கடலை மிட்டாய்க்கு இடம் இல்லை. கோகோவுக்கும் மில்க் சாக்லேட்டுக்கும் பரிதவிக்கும் பல பள்ளிக் குழந்தைகள் கடலை மிட்டாயை நேசிப்பது இல்லை. ஏன்? பிரச்னை, கடலை மிட்டாயிலோ அல்லது குழந்தைகளிடமோ இல்லை. வழக்கம்போல் நவீன வணிகத்தின் நெரிசலும் கூச்சலும்தான் இந்த ஓரவஞ்சனைக்குக் காரணம். குழந்தைகள் நேசிக்கும்படி அழகாக, மினுமினுப்பாகப் பல வண்ண வெளி ரேப்பரோ, தங்க நிறத்தில், வெள்ளி நிறத்தில் உள்சட்டையோ கடலை மிட்டாய்க்கு அணிவிக்கப்படவில்லை. ஜூனியர் சூப்பர் சிங்கருக்கோ, சூப்பர் டான்ஸருக்கோ தலைக்கு மேல் கடலை மிட்டாய் மழை கொட்டப்படுவது இல்லை. புரட்சி நடிகர்களோ, அழகு ராணிகளோ, பணக்கார விளையாட்டுகளின் வெள்ளை வீரர்களோ, இந்த மிட்டாய் சாப்பிடுவதாக எங்கும் சொல்லவே இல்லை. உண்மையில் கடலை மிட்டாய் இழப்பு என்பது கலாசார இழப்பு மட்டும் அல்ல; குழந்தைகளுக்கு ஓர் ஊட்டச் சத்துமிக்க தின்பண்ட இழப்பும்கூட!


பல் விளக்கிய பரபரப்பு நீங்கும் முன்னர், குழந்தையின் பிஞ்சுக் கால்கள் நைந்துபோகுமாறு ஷூவுக்குள் திணித்து, ஆட்டோவுக்குள் திணித்து, வகுப்பறைக்குள் திணித்து, கடைசியாக மூளைக்குள் திணிப்பைத் துவங்கும் திணிப்புக் கல்வி யுகத்தில், ஸ்நாக்ஸ் பாக்ஸ் சங்கதியும் சங்கடங்களும் ரொம்ப முக்கியமானவை. கடலை மிட்டாயில் புரதம் அதிகம். கிட்டத்தட்ட 25 சதவிகிதம் புரதச் சத்து அதில் இருக்கிறது. புரதத்துடன் கூடுதலாகக் கிடைப்பது துத்தநாகச் சத்து (பார்க்க அட்டவணை). நோய் எதிர்ப்பாற்றல் வேண்டும் எனில், இந்தப் புரதமும் துத்தநாகச் சத்தும்தான் ஒவ்வொரு நாளும் அதிகம் வேண்டும் என்கிறது நவீன அறிவியல்.
அதெல்லாம் சரி... கடலை மிட்டாயில் எண்ணெய் இருக்கிறதே என்பர் கொலஸ்ட்ரால் பயத்தில் உள்ளவர். அவர்களுக்கு ஒரு செய்தி... முதலில் கடலை எண்ணெயிலேயே கெட்ட கொலஸ்ட்ரால் கிடையாது. நிறைய பாலி அன்சேச்சுரேட்டும் மோனோ அன்சேச்சுரேட்டும் உள்ள கொழுப்பு அமிலங்கள்தான் அதிகம் உள்ளன. கடலையே இப்படி என்றால், கடலை மிட்டாய் இன்னும் ஒரு படி மேல்.

கடலை மிட்டாய் அதன் புரதத்தால் உடம்பை வளர்க்கும்; அதன் துத்தநாகச் சத்தால் நோய் எதிர்ப்பாற்றல் தரும்; அதில் சேர்க்கப்படும் வெல்லம் பிற மிட்டாய்களில் சேர்க்கப்படும் வெள்ளை சீனியைக் காட்டிலும் இனிப்பானதும் சிறந்த தும்கூட. இனிப்புடன் இரும்பு முதலான கனிமங்கள் நிறைந்தது. மிட்டாயுடன் மிக நுண்ணிய அளவில் சில நேரங்களில் சேர்க் கப்படும் சுக்குத் தூள் கடலையின் பித்தத்தையும் இனிப்பின் கபத்தையும் கட்டுப்படுத்தக்கூடியது. காலை அவசரத்தில் அரைகுறையாய்ச் சாப்பிட்டுப் போகும் குழந்தைக்கு ஸ்நாக்ஸ் பாக்ஸில் நூடுல்ஸோ, ஒரு பாக்கெட் மில்க் பிஸ்கட்டோ, மில்க் சாக்லேட்டுகளோ கொடுக்காத ஊட்டச் சத்தை மூன்று கடலை மிட்டாய்கள் தந்துவிடும்.

கடலை மிட்டாய் என்றதும் நினைவுக்கு வருவது கரிசல்காட்டுப் பூமியான கோவில்பட்டி. மொத்த ஊரும் கோகோ, பால்பவுடர் சாக்லேட் டுகளுக்குப் போன பின்பும் கோவில்பட்டியில் இன்றும் 50 குடும்பங்கள் கடலை மிட்டாய் தயாரித்து கோலாலம்பூர் வரைக்கும் அனுப்பிக் கொண்டு இருக்கின்றன.


அப்படிக் கடலை மிட்டாய் தயாரிக்கும் ஒரு நண்பரிடம் பேசியபோது அவர் சொன்னது... 'ரெண்டு மாசமானாலும் இது கெட்டுப்போகாது சார். அதோட இயல்பு அப்படி. நாளாச்சுன்னா மொறுமொறுப்பு குறையும். இந்த மொறுமொறுப்பும்கூட போகாம இருக்க கெமிக்கல் சேர்க்கச் சொன்னாங்க சார். ஆனா, நாங்க செய்ய மாட்டோம். புள்ளைங்க சாப்பிடுறது. நம்ம புள்ளைங்களா இருந்தா, தப்பானதைக் கொடுப்போமா சார்?'' என்று அடுத்த தலைமுறை மீது அக்கறையோடு கேட்டார் அழுக்கு வேட்டி கட்டியிருந்த அந்த மிட்டாய்க்காரர்!

மருத்துவர் கு.சிவராமன்
vikatan.com



Monday, September 03, 2012

உயிரினங்களின் மூலம் தண்ணீர் என்பது உண்மைதானா?



பெல்ஜியத்தை சேர்ந்த ஜான் பாப்டிஸ்டா வேன் ஹெல்மண்ட் என்ற வேதியியல் நிபுணருக்கு தாவரங்களின் வளர்ச்சியைப் பற்றி ஒரு பெரும் சந்தேகம் வந்தது. இது எவ்வாறு வளர்கிறது என்பதை சோதிக்க எண்ணினார். எனவே வில்லோ மரம் ஒன்றினை ஒரு பெரிய தொட்டியில் மண்ணை நிரப்பி வளர்க்க ஆரம்பித்தார். தொட்டியில் இட்ட மண்ணின் அளவை குறித்துக் கொண்டார். அதே போல் மரத்தின் நிறையையும் குறித்துக் கொண்டார். மரமும் நன்றாக வளர்ந்தது. ஐந்து வருடங்களுக்கு பிறகு தொட்டியிலிருந்து மரத்தை வெளியில் எடுத்து அதன் நிறையை கணக்கிட்டார். மரத்தின் அளவு 164 பவுண்டாக இருந்தது. அதன் பிறகு மண்ணின் நிறையை அளக்க ஆரம்பித்தார். ஆச்சரியமாக மண்ணின் நிறையில் மிக சிறிய மாற்றமே உண்டானது. மரத்தின் நிறை கூடினால் மண்ணின் நிறை குறைய வேண்டும். அதுதான் இயற்கை என்று ஹெல்மண்ட் நம்பியிருந்தார். ஏனெனில் இந்த மரம் வளர்வதற்கு ஆதாரமாக மண்தானே இருக்கிறது என்பது அவரது எண்ணம். ஆனால் இந்த மரம் வளர்ந்ததற்கு முக்கிய காரணம் அவர் தினமும் ஊற்றிய தண்ணீர் என்பதை பிறகு தான் விளங்கிக் கொண்டார்.



அதன் பிறகு பின்னால் வந்த அறிவியல் அறிஞர்கள் தண்ணீரோடு ஆக்சிஜன் மற்றும் சூரிய ஒளியும் ஒரு தாவரம் வளர அவசியம் என்பதை கண்டு பிடித்தனர். ஆக உயிரினங்கள் அனைத்தும் தங்கள் உடலில் உண்டாக்கப்பட்டுள்ள உடலமைப்பினால் தேவையான தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்கின்றன. அது இயலாத பட்சத்தில் அந்த உயிரினத்திற்கு இறப்பு நிச்சயம் என்பதை நாம் அறிவோம். இந்த தண்ணீரிலிருந்துதான் உயிரினங்கள் தங்கள் உடம்புக்கு தேவையான சத்துக்களை கிரகித்துக் கொள்கின்றன. நாம் உண்ணும் உணவிலிருந்து குடிக்கும் அனைத்து பானங்களின் மூலமும் தண்ணீராகவே இருக்கிறது. உயிரியல் பாடங்களை நாம் எடுத்துக் கொண்டாலும் உயிரினங்களுக்கு 80 சதவீதம் நீர் அவசியம் என்று கூறுகிறது. அதே போல் என்சைக்ளோபீடியாவும் உயிரினங்களின் உயிர் வாழ தண்ணீர் 50 சதவீத்திலிருந்து 85 சதவீதம் வரை அவசியம் என்கிறது. தாவரங்களின் ஒளிச் சேர்க்கை நடைபெற அடிப்படை பொருட்களாக கார்பன் டை ஆக்சைடு, நீர், பச்சையம், மற்றும் சூரிய ஒளி அவசியமாகிறது. இங்கும் நீரின் தேவை மிக அவசியமாகிறது. இந்த உண்மைகள் எல்லாம் அறிவியல் அறிஞர்களால் 17 ஆம் நூற்றாண்டு வாக்கில்தான் கண்டுபிடிக்கப்படுகிறது.


சாதாரண மண்ணை எடுத்துக் கொள்வோம். வெறும் மணலாக இருக்கும் போது அந்த மண்ணுக்கு உயிர் வருவது இல்லை. அந்த மண்ணோடு தண்ணீரும் கலந்து சேறும் சகதியுமாக மாறியவுடன்தான் புல் பூண்டுகள் முளைக்க ஆரம்பிக்கின்றன. எனவே இந்த இடத்திலும் தண்ணீரின் அவசியத்தை நாம் பார்க்கிறோம். இன்னும் விளக்கமாக சொல்லப் போனால் நீர் இல்லாத மண்ணானது உயிர் இல்லாத உடலைப் போன்றது.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் படத்தில் மணலில் எந்த அளவு தண்ணீர் உள்ளது. மக்கிய தாவரங்கள் கலந்த மண்ணில் எந்த அளவு தண்ணீர் உள்ளது. பயிர்கள் அதிகம் விளையக் கூடிய களிமண்ணில் எந்த அளவு தண்ணீர் உள்ளது என்பதை விபரமாக விளக்குகிறது.





(The table and figures were originally published by the Institute of Agriculture and Natural Resources at the University of Nebraska - Lincoln.)

டார்வினின் பரிணாம வளர்ச்சி விதி உயிரினங்கள் அனைத்தும் நீரிலிருந்தான் தோன்றின என்கிறது. அதாவது ஒரு செல் உயிரிகள் தண்ணீரிலிருந்தே தோன்றி பிறகு கால்கள் முளைத்து கரைக்கு வந்ததாக சொல்வார். அந்த ஒரு செல் உயிரி உண்டானது தண்ணீரிலிருந்தே என்பது டார்வினின் தத்துவமாகும். ஆனால் அதன் பிறகுதான் குழம்பி விடுகிறார். பலரையும் குழப்பி விடுகிறார். :-)

நமது மூளை 80% நீரால் ஆனது. கண்கள் உலர்ந்து போகாமலிருக்க இரண்டு வகையான ஈரம் தேவைப்படுகிறது. அவற்றின் விளிம்பில் 30 சுரப்பிகள் உள்ளன. கண்சிமிட்டும் போதெல்லாம் கண்விழி இவற்றின் மூலம் அலம்புகின்றன. அழுது கண்ணீர் விடும்போது கண் விழிமேல் இருக்கும் சுரப்பிகளிலிருந்து கண்ணீர் சப்ளை ஆகிறது. மனித உடலில் 97,000 இரத்த நாளங்கள் உள்ளன. ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன. இதயத்திலிருந்து புறப்பட்ட இரத்தம் உடல் முழுவதும் ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும் இதயத்திற்குத் திரும்ப எடுத்துக் கொள்ளும் நேரம் 30 செகண்டு ஆகும். 70 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 5600 மில்லிலிட்டர் ரத்தம் உடம்பிலிருக்கும். நமது மொத்த உடல் எடையில் 12% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது. இவ்வாறு நமது உடலின் எந்த பகுதியை எடுத்துக் கொண்டாலும் நீர் சார்ந்த பொருட்களே ஆதிக்கம் செலுத்துகிறது.

ஒவ்வொரு உயிரினத்தையும் இறைவன் நீரால் படைத்தான்..
குர்ஆன் 24:45

'உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்தே அமைத்தோம் என்பதையும் நம்மை மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?'
குர்ஆன் 21:30

'அவனே தண்ணீரால் மனிதனை படைத்தான்'
குர்ஆன் 25:54

மேற்கண்ட வசனங்கள் மனிதன் மற்றும் உயிருள்ள ஜீவராசிகள் அனைத்துக்கும் மூலமாக தண்ணீர் உள்ளது என்பதை விவரிக்கிறது. இது இன்று நமக்கு ஒரு சாதாரண கண்டுபிடிப்பாக இருக்கும். ஆனால் குர்ஆன் இறங்கிய அன்றைய அறியாமை காலத்தை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். நம் நாட்டைப் போல் நில வளம் பொருந்திய நாடு அல்ல அன்றைய சவுதி. எங்கு நோக்கினாலும் பாலைவனம்தான். ஏதோ ஒரு சில இடங்களில் அத்தி பூத்தாற்போல ஒரு சில பேரித்தம் மரங்கள் சோகமாக நின்று கொண்டிருக்கும். இது தான் அன்றைய அரேபியாவின் நிலை. அந்த சமூகமும் படிப்பறிவில்லாத சமூகம். இந்த நிலையில் எழுதவும் படிக்கவும் தெரியாத ஒரு நாட்டுப் புற அரபி இவ்வாறு வசனங்களை சொல்லியிருக்க முடியும் என்பதை நம் அறிவு ஏற்கிறதா?

இல்லை: இது உங்களையும் என்னையும் படைத்த அந்த ஏக இறைவனின் வார்த்தைகள் தான் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை என்ற முடிவுக்கே நாம் வருவோம்.

உயிர் வாழ மண்ணும் தண்ணீரும் எந்த அளவு அவசியம் என்று பார்த்தோம். மண்ணை மனைகளாக்காமல் பயிர் விளையும் பூமியாக்கி நீர் வளத்தையும் நில வளத்தையும் மாசு படாமல் காப்போம். பின்னால் ஏற்படக் கூடிய சிரமங்களை தவிர்ப்போம். தமிழக கிராமங்களில் உள்ள செல்வந்தர்கள் ஆங்காங்கே குளங்களை வெட்டி மழை நீரை சேகரித்து மக்களுக்கு சேவை செய்வோம். அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் நமக்கு நாமே திட்டம் வகுத்தால்தான் வருங்கால சந்ததிகள் நிம்மதியாக காலத்தை ஓட்ட முடியும்..

------------------------------------------------



கோவை சிறையில் பல ஆண்டுகள் விசாரணை கைதியாக இருந்து தற்போது விடுதலையாகியிருக்கும் சகோதரி ஆயிஷாவின் மனக்குமுறலை கேளுங்கள். இவரது தந்தை இன்றும் இந்துவாகத்தான் உள்ளார். சகோதரி ஆயிஷா புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர். ஒருக்கால் இவர் இஸ்லாத்தை ஏற்றதுதான் இவர் செய்த குற்றமாக காவல் துறை கருதியதா?

கோவையில் குண்டு வைத்து அப்பாவிகள் இறக்க காரணமானவர்கள் எந்த மதத்தவராக இருந்தாலும் அவர்களை தூக்கில் கூட போடுங்கள். ஆனால் அப்பாவிகளை இத்தனை வருடம் விசாரணை கைதிகளாக வைத்திருந்து விட்டு தற்போது வெளியாக்குவதால் அவர்களின் சிறையில் கழிந்த வாழ்நாளை யார் திரும்ப கொடுப்பார்?

Monday, August 20, 2012

கீழக்கரை குப்பையும் அரிஜனத் தெருக்களின் அவலமும்!



ஓரளவு வசதியான இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட ஊர் கீழக்கரை. வீடுகளெல்லாம் ஓரளவு நேர்த்தியாக கட்டப்பட்டு இருந்தாலும் குப்பைகளை அகற்றும் வழி தெரியாமல் இன்று முழி பிதுங்கி நிற்கிறது அந்த கிராமம். ஓரளவு படித்தவர்களும் நிறைந்த இந்த ஊர் குப்பைகளை அகற்றுவதற்கு அரசை நாடுவதும் அவர்கள் 'நீங்கள் எல்லாம் வசதியானவர்களாச்சே! நீங்களே பார்த்துக் கொள்ளக் கூடாதா' என்று கோரிக்கைகளை அலட்சியப் படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.

ஒரு சாதாரண குப்பை விஷயம் மக்கள் மற்றும் அரசின் அலட்சிய போக்கால் இந்த கிராமத்தை பெரும்பாடு படுத்துகிறது. இதனால் இந்த ஊர் மக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற பல நோய்கள் மிக இலகுவாக தொற்றிக் கொள்கிறது. நமது அரசாங்கத்தின் மெத்தனப் போக்கு நாம் அறியாதது அல்ல. அதிலும் பெரும்பான்மை முஸ்லிம்கள் உள்ள ஊர் என்றால் கேட்கவே வேண்டாம். அரசு உதவிகள் எதுவும் கிடைக்காமல் அரசு அதிகாரிகள் தங்கள் கடமையை செவ்வனே செய்து வருவார்கள். அவ்வாறு இருக்கையில் கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு வீட்டின் உரிமையாளரும் மனது வைத்தால் ஒரு நாளில் தீர்ந்து விடக் கூடிய பிரச்னை இது. ஆனால் ஒரு திருமணத்தை பல லட்சம் செலவு செய்து வீணடிக்கும் சமூகம், ஒரு சுன்னத்(முன் தோல் அகற்றுதல்) தனது பையனுக்கு செய்வதற்காக ஊரை கூட்டி விருந்து வைத்து வீண் பகட்டு காட்டும் சமூகம், தனது மகள் பூப்பெய்வதை பத்திரிக்கை அடித்து அதையும் விருந்தாக்கி மகிழும் சமூகம், இறந்த தாயோ தகப்பனோ வீட்டில் கிடக்க மார்க்கம் தடுத்த விருந்தை ஆக்கி அனைவரையும் அழைக்கும் சமூகம் தனது கிராமத்தின் சுகாதாரப் பிரச்னைக்கு அரசை கைகாட்டி விட்டு ஒதுங்கிக் கொள்வதை நினைத்தால் வேதனைப்படாமல் இருக்க முடியுமா?



எங்கள் ஊரிலும் இது போன்ற பிரச்னை அவ்வப்போது வருவதுண்டு. குடமுருட்டி ஆறு, அரசலாறு போன்ற ஆறுகள் எங்கள் ஊரை சுற்றி ஓடுவதால் அதன் கரைகளில் பள்ளம் தோண்டி குப்பைகளை துப்புறவு தொழிலாளர்கள் கொட்டுவார்கள். அது சில நாட்களில் மக்கி விடும். அதுவரை வேறு கரையோரத்தை நாடுவார்கள். ஆனால் இதைவிட கீழக்கரையில் ஆரம்பிக்க இருக்கும் பிளாஸ்டிக் கழிவு தொழிற்சாலைகள் போன்று எங்கள் ஊரிலும் ஆரம்பிப்பது நிரந்தர தீர்வாக அமையும். இதை ஒவ்வொரு கிராமத்திலும் அமுல்படுத்த வேண்டும். சில இடங்களில் குப்பைகளைக் கொண்டு மின்சாரமே தயாரிக்கிறார்களாம்.

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நாளில் ஒரு நடுத்தர பிளாஸ்டிக் வாளி அளவு குப்பைகள சேரும். இதனை எங்கள் ஊரில் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு திண்ணையில் வைத்து விடுவர்.காலையில் வரும் குப்பை வண்டியில் வரும் துப்புறவு தொழிலாளர்கள் ஒரு வாளி விடாமல் குப்பைகளை அள்ளிக் கொண்டு வாளியை வைத்து விட்டு சென்று விடுவர்.

மேலும் எங்கள் கிராமத்தில் அதிகமான வீடுகளில் வீட்டின் பரப்பளவை ஒத்த கொல்லையும் இருக்கும். கொல்லையின் கடைசி பகுதியில் எரு குண்டு என்ற ஒன்று இருக்கும். எங்கள் வீட்டில் பிளாஸ்டிக் கழிவுகளையும் மக்கிப் போகக் கூடிய கழிவுகளையும் எப்போதும் பிரித்தே சேர்ப்போம். இதனால் பிளாஸ்டிக் கழிவுகள் திண்ணைக்கு சென்று விடும். அதனை கார்பரேஷன் வண்டி வந்து எடுத்து சென்று விடும். மக்கிப் போகக் கூடிய கழிவுகளை கொல்லையில் உள்ள எரு குண்டில் போட்டு விடுவோம். ஆறு மாதத்துக்கு பிறகு அது நிரம்பியவுடன் அதனை மூடி விட்டு அதற்கு அருகிலேயே ஆட்களை வைத்து வேறொரு எரு குழி தோண்டச் செய்வோம். இதனால் போடப்பட்ட மீன், கோழி, ஆடு போன்றவற்றின் கழிவுகள் மற்ற வகையான குப்பைகள் மக்கிப் போய் சிறந்த உரமாகி விடுகிறது. நமது மண்ணுக்கு பிளாஸ்டிக்கைத் தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் சுலபத்தில் மக்கச் செய்து விடும் தன்மை உள்ளது.. சில வீடுகளில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் உடைந்த பிளாஸ்டிக் சாமான்கள் அனைத்தையும் சுத்தப்படுத்தி பழைய விலைக்கு விற்பவர்களும் உள்ளனர். இதனால் இந்த பிளாஸ்டிக்குகள் இடத்தை அடைக்காமல் மறு சுழற்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. இதற்காக ஒரு நாளில் உள்ள 24 மணி நேரத்தில் அரை மணி நேரம் இது போன்ற சுகாதாரத்துக்கு செலவு செய்தால் வீடும் நன்றாக இருக்கும் நாடும் நன்றாக இருக்கும்.


சில கிராம பஞ்சாயத்துகளில் அந்த நிர்வாகமே பழைய பிளாஸ்டிக்குகளை விலைக்கு எடுத்துக் கொள்வதாக பத்திரிக்கைகளில் படித்தேன். இதுவும் ஒரு சிறந்த வழி. பிளாஸ்டிக் அதிகம் சேகரித்து தரும் வீட்டுக்கு சில பரிசுகளை கூட கிராம நிர்வாகம் அறிவித்தால் பலன் இன்னும் அதிகரிக்கும். இதனால் பலர் மறைமுக வேலையும் பெறுவர். அல்லது பிளாஸ்டிக் பொருட்கள் பயன் படுத்துவதை அரசு தடை செய்ய வேண்டும்.

மற்றுமொரு சுகாதார பிரச்னை:

அதே போல் எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டு குடும்பம் சற்று வறியது. அவர்கள் வீட்டில் கழிவறை கட்டாமல் அவர்கள் கொல்லையில் தங்களது இயற்கை தேவைகளை நிறைவேற்றி வந்தனர். ஒரு முறை பக்கத்து வீட்டு நண்பரை(எனது வயதை ஒத்தவர்) அழைத்து 'ஒரு வீட்டுக்கு கழிவறை மிக அவசியம். உங்கள் வீட்டு பெண்கள் இவ்வாறு திறந்த வெளியில் செல்வது அசிங்கமா இல்லையா? சுகாதாரத்துக்கும் எவ்வளவு கேடு தெரியுமா?' என்று சொன்னேன். 'உண்மைதான். ஆனால் நாங்கள் மண்ணைப் போட்டு மூடி விடுவோம். இருந்தாலும் சரி செய்து விடுகிறேன்' என்று பதில் சொன்னவர் அதைப்பற்றி கண்டு கொள்ளவே இல்லை.

இரண்டு வாரம் பொறுத்த நான் பிறகு அவரை கூப்பிட்டு, 'நீங்கள் கட்டவில்லை என்றால் நான் எனது செலவில் கட்டி விடுகிறேன். இலவசமாக வைத்துக் கொண்டாலும் சரி. அல்லது கடனாக எடுத்துக் கொண்டாலும் சரி. இன்னும் இரண்டு நாளில் உங்கள் கொல்லையில் நான் வேலையை ஆரம்பிக்கப் போகிறேன்' என்று ஒரு போடு போட்டேன். இதனால் மிரண்டு போன அவர் எங்கெங்கேயோ பணத்தை தோது பண்ணி மறு நாளே கழிவறையை அவரது சொந்த செலவிலேயே கட்டிக் கொண்டார். அவருக்கு நன்றி சொல்லிக் கொண்டு 'நான் வேண்டு மென்றால் பணம் தரட்டுமா?' என்று கேட்டேன். 'நன்றி வேண்டாம். என் மனைவி தனது புறத்திலிருந்து பணம் கொண்டு வந்து வேலையை முடிக்க சொன்னார். "எவ்வளவோ வீண் செலவுகள் செய்கிறோம். தற்போது கழிவறையின் அவசியத்தை உணர்ந்து கொண்டேன்'(சுயமரியாதை தமிழன்!) என்றார் :-). அப்பாடி அண்டை வீட்டில் ஒரு சண்டை இல்லாமல் பிரச்னை சுமூகமாக முடிந்தது.

மற்றொரு சோகமான செய்தி. எங்கள் ஊரின் முடிவில் ரயிலடி சமீபமாக அரிஜனங்களின் காலனி உள்ளது. இங்கு அரசாங்கம் தனது செலவில் பொது கழிப்பறை கட்டிக் கொடுத்துள்ளது. ஆனால் இந்த மக்கள் தங்கள் தெருக்களிலும் ரெயில்வே தண்டவாள ஓரங்களிலும் தங்கள் இயற்கை தேவைகளை தீர்த்துக் கொள்கின்றனர். அரிஜனத் தெருவை கடந்து சென்றால் மூக்கைப் பிடித்துக் கொண்டுதான் செல்ல வேண்டும். எங்கள் வீடுகளில் பெண்கள் சிறுவர்களை ஏதாவது வேலை சொல்லும் போது 'ரயிலடி வழியாக போகாதே! அசிங்கமாக இருக்கும். தூரமாக இருந்தாலும் சந்திக்கட்டை(சந்தை) சுற்றிக் கொண்டு போ' என்று கட்டளை இடுவதை சர்வசாதாரணமாக பார்க்கலாம். தற்போது படித்த மக்கள் நிறைய அரிஜன தெருவில் உருவானாலும் நிலைமை இன்றும் அப்படியேத்தான் உள்ளது. இந்த மக்கள் பக்கத்தில் இருக்கும் எங்கள் கிராமத்தை பார்த்தும் ஏன் திருந்த மாட்டேன் என்கிறார்களோ தெரியவில்லை. இவ்வளவுக்கும் எங்கள் கிராமத்தில் அனைத்து வீடுகளிலும் வீட்டு வேலை செய்பவர்கள் இந்த அரிசன மக்களே. தினமும் எங்களின் வாழ்வை பார்த்தும் அந்த பக்கம் சென்றவுடன் பழைய நிலைக்கு மாறி விடும் விநோதத்தை என்னவென்பது?
________________________________________________________

சுற்றுச் சூழல் பொறியாளர் ரமேஷ் கூறுவதை கேட்போம்:

புதுச்சேரி : பிளாஸ்டிக் குப்பைகள் இவ்வுலகில் மட்கி மறைய குறைந்தபட்சம் 200 ஆண்டுகள் பிடிக்கிறது என சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ் பேசினார். தட்டாஞ்சாவடி வேளாண் கருத்தரங்கக் கூடத்தில் வேளாண்துறை மாநில நில நீர் பிரிவு சார்பில் நுண்ணாய்வு நீர் உபயோகம், மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர்வளப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமை வேளாண் இயக்குனர் சத்தியசீலன் துவக்கி வைத்தார். என்.சி.சி., அதிகாரி ஆனந்த், நீர் சேமிப்பு குறித்து பேசினார். விழாவில் சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ் பேசியதாவது:

உயிரினங்கள் இவ்வுலகில் வாழ தண்ணீர் தான் உயிர்நாடி. அவற்றை அதிக அளவில் பயன்படுத்தினால், நிலத்தடி நீர் மட்டம் படுபாதாளத்திற்கு சென்றுவிடும். ஆகவே தண்ணீரை முறையாக திட்டுமிட்டு பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண் டும். நிலத்தடி நீரை அள வுக்கு அதிகமாக எடுப்பதால், கடல் உட்புகுந்து விடும். குப்பை கூளங்கள், டெங்கு, மலேரியா என 10க்கும் மேற்பட்ட நோய்களுக்கு பிறப்பிடமாக இருக்கின்றன. பிளாஸ்டிக் குப்பைகளை குறைந்த வெப்பநிலையில் எரிக்கும் போது அதிலிருந்து டையாக்சின் நச்சு வாயு வெளிவருகிறது. இது தான் உலகிலேயே உயிரை பறிக்கும் மிகக்கொடிய நச்சு வாயுவாகும்.ஒருநாளைக்கு 33 ஆயிரம் லிட்டர் மாசுபட்ட காற்றை சுவாசிக்கிறோம். சாக்கடைகளில் போடப்படும் பிளாஸ்டிக் குப்பைகள், கழிவுநீரை வழிந்தோடாமல் செய்கின்றன. இதனால் கொசு உற்பத்தி அதிகரிக்கிறது. பிளாஸ்டிக் குப்பைகள் இம்மண்ணில் மட்கி மறைந்து போக, குறைந்தபட்சம் 200 ஆண்டுகள் பிடிக்கிறது. 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துகிறோம். இதற்கு பதிலாக, துணிப்பைகளை பயன்படுத்த பொதுமக்கள் பழகிக்கொள்ள வேண்டும். பூமியின் உயிர் துடிப்பை இறுக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என ஒவ்வொருவரும் சபதம் ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். வேளாண் பொறியியல் துணை இயக்குனர் வெங்கட்ராமன் நன்றி கூறினார்.

--------------------------------------------------------

ஒரு மனிதன் திட்டமிட்டு செயலாற்றினால் எதிலும் வெற்றி பெற முடியும் என்பதற்கு ரஃபீக் சொல்லும் சில வழிமுறைகளை கடைபிடிப்போம்.








Saturday, August 11, 2012

அல்ஜிமர்ஸ் நோயை விரட்டுகிறது தொழுகை-அமெரிக்க ஆய்வு

அல்ஜிமர்ஸ் நோயை விரட்டுகிறது தொழுகை-அமெரிக்க ஆய்வு

எனது தாத்தாவுக்கு 90 வயதுக்கு மேல் ஆகிறது. போன வருடம் வரை முடிந்த வரை பள்ளியில் சென்று தொழுது வருவதை நான் பார்த்துள்ளேன். போன வருடம் மதிய தொழுகை தொழுது விட்டு அவர் வீடு செல்வதற்கு பதில் எங்கள வீட்டு பக்கம் வர ஆரம்பித்துள்ளார். எனது நண்பன் இவர் ஞாபக மறதியில் தெரு மாறி செல்கிறார் என்பதால் 'என்ன தாத்தா? தெரு மாறி செல்கிறீர்கள்? உங்கள் வீடு அடுத்த தெரு' என்றவுடன் தாத்தா சுதாரித்துக் கொண்டு 'ஹி...ஹி...எனக்கு தெரியும் தம்பி. என் மக வீட்டுக்கு போறேன். வேறொன்றுமில்லை' என்று சிறிது தூரம் நடந்து பிறகு வந்த வழியே திரும்பி சென்றிருக்கிறார். என் நண்பன் என்னிடம் 'உன் தாத்தாவுக்கு குப்புற விழுந்தாலும் மீசையில மண் ஒட்டவில்லை என்ற கதை தான். எப்படியாவது சமாளித்து தான் கண்டிஷனில் இருப்பதாக காட்டிக் கொள்வார்' என்றான் சிரித்துக் கொண்டே........



(அமெரிக்க சர்ச் ஒன்றில் தொழுகைக்கான அழகிய அழைப்பொலி)

இதை நான் சொல்லக் காரணம் இறை பக்தியில் தினமும் தொழுகையை தவறாது பள்ளியில் சென்று ஐந்து நேரமும் நிறைவேறறுபவர்கள் எவருக்கும் சிரமம் கொடுக்காமல் தங்களது 90 வயதிற்கு பிறகும் நோய் நொடி இல்லாமல் வாழ்வதை பார்த்து வருகிறேன் என்பதை தெரிவிப்பதற்காகவே. சில மாதங்களுக்கு முன்பு தான் எனது தாத்தாவுக்கு கண் பார்வை மங்கத் தொடங்கியுள்ளது. இதே போல் இந்துக்களிலும் காலையிலும் மாலையில் எழுந்து குளித்து கோவிலுக்கு சென்று வருபவர்கள் நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்து வருவதை பார்த்து வந்துள்ளேன்.

இதை எல்லாம் நான் இங்கு குறிப்பிட காரணம் ஐவேளை தொழுகையை நேரம் தவறாமல் நிறைவேற்றும் முஸ்லிம்களிடம் அல்ஜிமர்ஸ் எனும் நோய் 50 சதவீதம் கட்டுப்படுத்தப் பட்டுள்ளதாக அமெரிக்க - இஸ்ரேலிய விஞ்ஞானிகள் புதிதாக கண்டு பிடித்துள்ளனர். அப்பாவி உலக மக்களை அழிப்பதில் முன்னணியில் இருக்கும் இந்த இரு நாடுகளும் இது போன்று ஆக்கபூர்வமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டால் பலரும் பயனடைவர். :-) அல்ஜிமர்ஸ் எனும் இந்த நோய் மனிதனுக்குள் ஏற்படும் ஞாபக மறதியைப் பற்றியது. தொழுகாத மக்களை விட நேரம் குறிப்பிட்டு சரியாக மசூதியை அடைந்து விடும் மக்களுக்கு இந்த நோய் வருவது தடுக்கப்படுகிறது.

டெல் அவீவ், யாஃபா, அமெரிக்காவின் இதர பல்கலைக்கழகத்தைச் சார்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். நினைவாற்றல் குறையாமலிருக்க பயிற்சி மையங்கள் மற்றும் இதர வழிகளில் பயிற்சி மேற்கொள்பவர்களை விட குறிப்பிட்ட நேரத்தில் தொழுகையை பேணுபவர்களுக்கு அல்ஸிமர்ஸ் நோய் தாக்கும் வாய்ப்பு குறைவாகும் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறித்த நேரத்தில் தொழுகையை பேணுவது அல்ஷிமர்ஸ் நோயிலிருந்து காப்பாற்றுவதுடன் புத்தியாகவும், சிந்தனை ரீதியாகவும் பேசுவதற்கு தேவையான ஆக்கப்பூர்வமான பலன்கள் கிடைப்பதாக இந்த ஆய்வுக் குழுவின் தலைவராக பணியாற்றிய பேராசிரியர் Rivka Inzelberg கூறுகிறார். இவரது ஆராய்ச்சியின் முடிவை துருக்கியில் நடந்த சர்வதேச ஆய்வு மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. துருக்கி, ஈரான், ஈராக், லெபனான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரபு நாடுகள், இந்தியா, போன்ற நாடுகள் இதில் கலந்து கொண்டன.

65 வயதுக்கு மேற்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 92 பேருக்கு மட்டுமே ஞாபக மறதி நோய் பாதித்துள்ளது. 300 பேருக்கு சிறிய அளவில் பாதித்துள்ளது. மீதமுள்ளோருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

'யார் வேதத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டு தொழுகையையும் நிலை நாட்டுகிறாரோ அத்தகைய சீர்படுத்திக் கொள்வோரின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம். '
-குர்ஆன் 7:170

ஆம். மன நிம்மதி, நோயிலிருந்து மீட்டல், பல வேலைகளையும் குறித்த நேரத்தில் செய்வதற்கான உந்துதல், சிறந்த உடற்பயிற்சி இவை எல்லாவற்றையும் விட இறப்புக்கு பிறகு இறைவன் தரக் கூடிய சொர்க்க வாழ்க்கை என்று ஐந்து வேளை தொழக் கூடியவரின் நன்மையின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இக்பால் செல்வன், சார்வகனிலிருந்து தருமி வரை எப்படியாவது முஸ்லிம்களை நாத்திகத்தின் பக்கம் கொண்டு வந்து விட வேண்டும் என்று அல்லும் பகலும் பாடுபடுகின்றனர். ஆனால் இறைவன் அவர்கள் நம்பும் அறிவியலின் மூலமாகவே பல உண்மைகளை உலகுக்கு அறிவித்துக் கொண்டுள்ளான்.

எனவே ஐவேளை தொழும் பழக்கம் இல்லாத மக்கள் இன்றிலிருந்து ஐந்து வேளையும் மசூதியில் சென்று தொழும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார்களாக! இதன் மூலம் செய்யும் தவறுகளிலிருந்தும் நோய்களிலிருந்தும், இறைவனின் கோபத்திலிருந்தும் தங்களை காத்துக் கொள்வார்களாக.....

http://www.haaretz.com/news/national/israeli-u-s-study-praying-regularly-could-reduce-risk-of-alzheimer-s.premium-1.453668

http://israel21c.org/health/israeli-research-shows-gardening-reading-and-praying-can-help-stave-off-alzheimers-disease

http://dinaex.blogspot.in/2012/08/50.html

http://thebeautyofislam.tumblr.com/post/28542915951

http://25.media.tumblr.com/tumblr_m64tffH12e1ruvx75o1_500.gif

Study shows females who prayed regularly had 50 percent less chance of having mild dementia or Alzheimer’s.

Praying regularly can reduce the risk of developing Alzheimer’s disease and milder memory problems by 50 percent, according to a joint Israeli-American study funded by the U.S. National Institutes of Health.

The study was aimed at identifying factors that increase the risk of developing Alzheimer’s. Researchers examined several aspects of the subjects’ lives, including what they did in their spare time during their 20s and 30s. It turns out females who prayed regularly had 50 percent less chance of having mild dementia or Alzheimer’s.
Lead researcher Prof. Rivka Inzelberg said they couldn’t determine the connection between praying and Alzheimer’s amongst men because 90 percent of their male subjects prayed daily. “But among the women, only 60 percent of the women prayed five times a day, as per Islamic custom, but 40 percent didn’t pray regularly, so we were able to compare the data,” Inzelberg explained.

The study did not characterize the connection between prayer and memory, but Inzelberg noted, “Prayer is a custom in which thought is invested, and the intellectual activity involved in prayer, beyond the content of the prayers, may constitute a protective factor against Alzheimer’s.”

The findings, presented at a Tel Aviv conference last month, also showed that 50 percent more women suffer memory problems than men and that formal schooling reduced the risk of Alzheimer’s and memory impairments.

Other risk factors that were identified were high blood pressure, diabetes, excess fats in the blood and heart problems.

In addition, researchers said those who gardened in their youths also had a reduced risk of dementia, though they hadn’t calculated the exact degree of influence.
This is not the first study suggesting a link between religion and health. In 2005 researchers concluded that adopting a spiritual or religious lifestyle slows down the progress of Alzheimer’s. An earlier study showed that more people succumbed to heart problems and cancer in secular kibbutzim than in religious ones.

The Israeli group Assia found that the morbidity and mortality rates among infants was much lower in religious communities than in secular ones. And researchers who conducted another joint Israeli-American study postulated that the mortality rate was lower for Arab dialysis patients than Jewish patients as a result of spiritual and community support.

http://thebeautyofislam.tumblr.com/post/28542915951

--------------------------------------------------------------

மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு – 18




Monday, July 23, 2012

ஒரு சவுதி தெரு கூட்டினால் எப்படி இருக்கும்?



துப்புறவு தொழிலாளர்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என்ற அறிவுரையை கொடுப்பதற்காக ஒரு சவுதியை ஒரு நாள் முழுக்க அந்த நண்பர்களோடு பணி செய்ய வைத்தனர். ஒரு நாள் முழுக்க பங்களாதேஷை சார்ந்த அந்த சகோதரர்களோடு ஒன்றாக இருந்து அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை சவுதிகள் அறிந்து கொள்ளும் பொருட்டு இந்த டாகுமெண்டரியை தயாரித்துள்ளனர்.

احترام عمال النظافة ليس ذوق فقط، و إنما ضرورة و إنسانية!

شكراً لتعاون الإدارة العامة للنظافة معنا لتصوير هذه الحلقة و الخروج معنا بكل شفافية

'துப்புறவு தொழிலாளர்களை மதித்து நடங்கள். அவர்களோடு மனித நேயத்தோடு நடந்து கொள்ளுங்கள்'

عشت يومي الأول كعامل نظافة.
التجربة كانت أصعب من المتوقع:
٩ ساعات عمل تحت الشمس! الله يعين العمالة على هالروتين اليومي

"முதல் முதலாக ஒரு துப்புறவு தொழிலாளியாக ஒரு நாள் முழுக்க வேலை செய்தேன். நான் எதிர் பார்த்ததை விட சிரமமான வேலைதான் இது. 9 மணி நேரம் வெயிலில் வேலை செய்து வரும் அந்த சகோதரர்களின் சிரமத்தை உணர்ந்து கொண்டேன். இறைவன் அவர்களுக்கு சிறந்த வாழ்வை அமைத்து கொடுக்கட்டும்."

இந்த காணொளிக்கு கிட்டத்தட்ட 4000 அரபிகள் பின்னூட்டம அளித்துள்ளார்கள். அத்தனை பேருமே இந்த துப்புறவு தொழிலாளர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் அவர்களை மரியாதையாக நடத்த வேண்டும் என்றும் அவர்களும் முஸ்லிம்களாகிய நமது சகோதரர்கள் என்றும் ஒருமித்த குரலில் பின்னூட்டியிருந்தார்கள்.

எனது அலுவலகத்துக்கு அருகிலேயே இரண்டு பங்காளிகள் தொழுகைக்கு தொடர்ந்து பள்ளிக்கு வருவார்கள். அப்பொழுது அவர்களின் மஞ்சள் நிற யுனிஃபார்மில் சில இடங்களில் அழுக்கும் படிந்திருக்கும். எனவே சவுதிகளோடு தோளோடு ஒட்டி நிற்க சங்கோஜப்பட்டுக் கொண்டு சிலர் நகர்ந்தால் அவர்களை இழுத்து தங்கள் அருகில் நிறுத்திக் கொள்ளும் பல சவுதிகளை பார்த்துள்ளேன். அவ்வாறு தோளோடு தோள் நெருங்கி நிற்கா விட்டால் சம்பந்தப்பட்டவர்களின் தொழுகை முழுமை பெறாது. எனவே இடைவெளி விடாது அவர்களை நிறுத்திக் கொள்ளும் அழகை நான் பார்த்து ரசிப்பேன்.

இவர்களுக்கு சம்பளம் 400(5000 ரூபாய்) அல்லது 500(6000 ரூபாய்) ரியால் தான் என்றாலும் பார்ட் டைம் வேலையாக மாதம் 1000 ரியாலுக்கு மேல் சம்பாதித்து விடுவார்கள். இன்னும் சிலருக்கு தெரு கூட்டும் பொழுதே சில வீடுகளில் அன்பளிப்பாக தரும் தொகையும் கணிசமாக தேரும். உணவகங்களுக்கு இவர்கள் சென்றால் சம்பளம் குறைவு என்பதால் எவரும் பணம் வாங்குவதில்லை. இருந்தாலும் மற்ற வேலைகளோடு ஒப்பிடும் போது இவர்களுக்கு சம்பளத்தை அரசு உயர்த்த வேண்டும். அரசு ஒருவருக்கு 2000 ரியால் ஒதுக்குகிறது. ஆனால் இடையில் காண்ட்ராக்ட் எடுக்கும் கம்பெனிகள் அனைத்தையும் சுருட்டிக் கொண்டு குறைந்த சம்பளத்தில் ஆட்களை அழைத்து வந்து விடுகின்றனர்.

மன்னர் ஃபைசல் காலத்தில் துப்புறவு பணிகளுக்கு இந்தியர்களைத்தான் முதலில் தேர்வு செய்தார். ஆனால் இந்திரா அம்மையாரோ எனது நாட்டு மக்கள் ஒரு நாட்டில் சென்று துப்புறவு பணியில் ஈடுபடுவது எங்களுக்கு இழுக்கு என்று மறுத்து விட்டார். எனவே அத்தனை விஷாக்களும் பங்களாதேஷூக்கு சென்றது. எப்படியோ சில வறியவர்களின் வீடுகளில் இன்பம் தழைத்தால் நமக்கும் சந்தோஷந்தானே!

ஒரு காலத்தில் அரபிகள் என்ற திமிரில் மற்ற மொழி பேசுபவர்களை 'ஊமைகள்' என்ற அடைமொழியோடு அழைத்தனர். அதாவது நீங்கள் அழகிய தமிழில் பேசினாலும் அவனை பொருத்த வரை விலங்குகள் மொழியைப் போனற விளங்காத மொழிதான். அரபி அல்லாத மற்ற மொழிகளை விலங்குகள் மொழி அதாவது 'ஊமை பாஷை' என்றே சொன்னான். ஆனால் இஸ்லாம் வந்து இந்த மொழி வெறி இன வெறியை உடைத் தெறிந்தது.

முகமது நபியின் கடைசி உரை:

பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!

மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; உங்களது தந்தையும் ஒருவரே! அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.

தலமைக்குக் கீழ்ப்படிவீர்!

ஒ… மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; அவருக்குக் கீழ்ப்படியுங்கள்!”
(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

இதற்குப் பிறகும் ஒரு முஸ்லிம் தன்னை உயர்ந்தவனாக எண்ணிக் கொள்வானா?

இதே நேரம் நம் நாட்டில் துப்புறவு தொழிலாளர்களை எந்த அளவு கேவலமாக நடத்துகிறோம் என்பதை நாம் தினமும் பார்க்கிறோம். சாதியால் இழிவாக்கப்பட்டு அவர்களை கோவிலிலும் அனுமதிப்பதில்லை. திருமண உறவுகளும் ஏற்படுத்திக் கொள்வதில்லை. மனித மலம் அள்ளுவதற்கும் இன்றும் இவர்களையே பயன்படுத்துகிறோம். சவுதியில் இதற்கெல்லாம் இயந்திரங்களின் உதவியையே நாடுகின்றனர். அவற்றை ஒன்றாக்கி உரமாகவும் தயாரித்து விடுகிறார்கள். ஆனால் நாமோ மொபைல் போனுக்கு செலவழித்தாலும் கழிவறை கட்ட மாட்டோம் என்று மத்திய மந்திரி குறைபட்டுக் கொள்ளும் நிலையில்தான் உள்ளோம். இது மாற வேண்டும்.

1.மலம், சிறுநீர் கழிக்கக்கூடாத இடங்கள் (இன்னிசை வெண்பா)
புற்பைங்கூழ் ஆப்பி சுடலை வழிதீர்த்தம்
தேவ குலம்நிழல் ஆநிலை வெண்பலிஎன்று
ஈரைந்தின் கண்ணும் உமிழ்வோடு இருபுலனும்
சோரார் உணர்வுடை யார்

2.மலம் சிறுநீர் கழிக்கும் முறை (குறள் வெண்பா)
பகல்தெற்கு நோக்கார் இராவடக்கு நோக்கார்
பகல்பெய்யார் தீயுனுள் நீர்

3.மலம், சிறுநீர் கழிக்கும் திசை (இன்னிசை வெண்பா)
பத்துத் திசையும் மனத்தான் மறைத்தபின்
அந்தரத்து அல்லால் உமிழ்வோடு இருபுலனும்
இந்திர தானம் பெறினும் இகழாரே
தந்திரத்து வாழ்துமென் பார்

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத் தமிழ் நூல்களின் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாக வைத்து எண்ணப்படும் இது ஒரு நீதி நூல். பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதினார்.

பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விடயம் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்து இயம்புகின்றது. கழிவறையின் தொன்மை வரலாறு பண்டைய இலக்கியங்களில் ஆங்காங்கு மலிந்து கிடக்கிறது.

ஆரியர்களின் ஊடுருவலுக்கு முன் தமிழர்களின் நிலை மிக சிறந்தே இருந்துள்ளதற்கு இந்த பாடல்கள் சிறந்த உதாரணமாக உள்ளது. வீட்டில் அவசியம் கழிவறை கட்டி சுகாதாரத்தைப் பேணுவோம். செல் போன்களை வசதி வரும் போது வாங்கிக் கொள்வோம். :-)







Thursday, June 28, 2012

வாழைப்பழம்! வாழைப் பழம்! வாழைப் பழம்!

ராஜ்: யானைக்கிட்டே வாழைப்பழம் என்ன சொல்லும்?

கண்ணன்: தெரியாது! நீயே சொல்லேன்!

ராஜ்: ஒண்ணும் சொல்லாது! ஏன்னா? வாழைப்பழத்துக்கு பேசத் தெரியாது. :-)

----------------------------


ராஜா: ஹே! குமார்!

குமார்: ஹ்ம்.......சொல்லு!

ராஜா: உன் காதுல வாழைப்பழம் இருக்கு.

குமார்: என்ன சொல்றே!...

ராஜா: உன் காதுல வாழைப்பழம் இருக்குடா!....

குமார்: நீ என்ன சொல்றே? சுத்தமா விளங்கல்ல...

ராஜா: (கோபத்தோடு) உன் காதுல வாழைப்பழம் இருக்குது. புரிஞ்சுதா!

குமார்: ராஜா நீ சொல்றது எதுவுமே எனக்கு விளங்கல்ல...ஏன்னா...என் காதுல வாழைப்பழம் இருக்கு!

------------------------------


ஆப்பிள் அழுது கொண்டு இருந்தது

வாழைப்பழம்: ஏம்பா அழுவுறே!

ஆப்பிள்: எல்லாரும் என்னை கட் பண்ணி சாப்பிடுறாங்கப்பா!!!

வாழைப்பழம்: நீ யாவது பரவாயில்லை. எல்லாரும் என்னோட டிரஸ்ஸ அவிழ்த்துட்டுல்ல சாப்பிடுறாங்க!!

----------------------------------

வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல்படுகிறது. விஞ்ஞானிகளும் சத்துணவு நிபுணர்களும் உலகின் மிக உயர்ந்த தரமான உணவு வாழைப்பழம் தான் என்கிறார்கள். வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி பல் ஈறுகளையும் எலும்புகளைப் பிணைக்கும் தசை நார்களையும் உறுதியுடன் இருக்க உதவுகிறது. இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உருவாக வைட்டமின் ஏ- யையும் உடல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கிக் கொடுக்கிறது.




மக்னீசியம் பொட்டாசியம் சோடியம் பாஸ்பரஸ் போன்ற உப்புக்கள் வாழைப்பழத்தில் தாராளமாக இருப்பதால் இரத்த ஓட்டம் தங்குத் தடையின்றிச் சீராக இருக்கவும். முக்கியமாக இரத்தக் கொதிப்பு ஏற்படாமலும் பாதுகாத்து வருகிறது. நாம் தினமும் சாப்பிடும் இரண்டு வாழைப்பழங்கள் இரத்தக் கொதிப்பை எளிதில் கட்டுப்படுத்தும்.

நாம் சாப்பிடும் உணவில் பொட்டாசியமும் சோடியமும் இருந்தால் தான் நம் உடலில் உள்ள நெகிழ்ச்சிப் பொருள்கள் சம நிலையில் இருக்கும். பொட்டாசியம் உப்புக் குறைந்தால் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும். நாம் சாப்பிடும் அனைத்துப் பொருள்களிலும் சோடியம் உப்பு இருக்கிறது. ஆனால், பொட்டாசியம் இல்லை. இந்தக் குறையை தினமும் ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வருவதன் மூலம் நீக்கி விட முடியும்.

சத்துக்கள்

எங்கும் எப்போதும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழத்தில் இல்லாத சத்துக்களே கிடையாது. இதில் கர்போஹைடிரேட், புரதம், சிறிய அளவில் கொழுப்பு குளூக்கோஸ், நார்ச்சத்தும் ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் கால்சியம், , சோடியம், பாஸ்பரஸ், சல்பர், மக்னீசியம், இரும்பு, சிறிய அளவில் செம்புச்சத்தும் மற்றும் வைட்டமின் பொட்டாசியம் 400 மில்லி கிராம், திஷீறீஷீநீவீஸீ 20 மைக்ரோ கிராம், விட்டமின், ரிபோஃபிளேவின், தயாமின் சி, 10 மில்லி கிராம், விட்டமின் பி 6-.6 மில்லி கிராம். முதலான உணவுச் சத்துக்களும் கி, ஙி, சி வைட்டமின்களும் சத்துக்கள் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும்.

மருத்துவக் குணங்கள் :

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.

வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.
வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம். வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது. நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.

நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப் படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது. வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.

வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் (Natural Sugar) கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ் (Sucrose), பிரக்டோஸ் (Fructose) மற்றும் குளுகோஸ் (Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் (Fiber) கொண்டுள்ளது. இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 1 1/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை கொடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட. இதை நாம் உடலில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மூளை வலிமை (Brain Power): வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்து கொடுத்து சோதனை செய்து பார்த்தபோது மூளைத்திறன் அதிகரித்ததோடு, பொட்டாசியம் நிறைந்த இந்த உணவு அதிகமான கல்வித்திறனை அளிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. வாழையின் ஒவ்வொரு பாகமுமே மருத்துவ குணங்கள் கொண்டவை.
– THANKS TO ALAVUDEEN




Tuesday, June 26, 2012

விளக்கை அணைக்காததால் மூன்று உயிர்கள் பலி!

விளக்கை அணைக்காததால் மூன்று உயிர்கள் பலி!

நாமக்கல் : நாமக்கல் அருகே உள்ள எருமப்பட்டியைச் சேர்ந்தவர் சசிகலா(28). இவரது மகன்கள் ஸ்ரீகாந்த்(8), பிரேம்நாத்(6). நேற்று இரவு வீட்டில் மின்சாரம் இல்லாததால் சிமில் விளக்கு ஏற்றி வைத்துள்ளனர். விளக்கு தவறி விழுந்ததில் சசிகலாவின் உடையில் தீப்பற்றியது. அவர் வீட்டில் அங்கும் இங்கும் ஓடியதால் வீடு முழுவதும் தீ பரவி உள்ளது. இதில் சசிகலாவும், அவரது இரு மகன்களும் தீக்காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனளிக்காமல் சசிகலாவும், ஸ்ரீகாந்தும் நேற்று இரவு உயிரிழநதனர். இந்நிலையில் பிரேம்நாத்தும் இன்று காலை உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-தினமலர்
27-06-2012

சிறிய அலட்சியம் எந்த அளவு சோகத்தை தந்து விடுகிறது என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக் காட்டுகிறது. இரவு படுக்கப் போகும் முன் எரியும் திரிகளை அணைத்து விட்டு படுப்பதால் என்ன சிரமம் வந்து விடப் போகிறது? இதற்கு சோம்பல் பட்டு படுதது விடுவதால் மூன்று உயிர்களை அந்த குடும்பம் இழந்துள்ளது. அந்த குடும்பத்துக்கு நம்முடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

இது போன்ற தனி மனித பாதுகாப்பில் கூட இஸ்லாம் சில கட்டளைகளை மனிதனுக்கு இடுகிறது. கீழ் வரும் நபி மொழிகள் மனிதர்கள் படுக்கப் போகும் முன் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை அழகாக நமக்கு சொல்லித் தருகிறது.

'இரவில் தாமதமாகி வருவதை தவிர்ந்து கொள்ளுங்கள், இரவு என்பது நிசப்தமானது, உங்களைச் சுற்றி எந்த வகையான விலங்கை இறைவன் அனுப்பியுள்ளான் என்பதை உங்களால் அறிந்து கொள்ள முடியாது. கதவுகளைத் தாழிட்டுக் கொள்ளுங்கள், தண்ணீர் பாத்திரத்தை மூடி விடுங்கள், உணவுப்பாத்திரத்தை மூடுங்கள், விளக்கை அணைத்து விடுங்கள்' என்று நபி அவர்கள் கூறினார்கள்.

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
(நூல்: புஹாரி - 6295,6296, புஹாரியின் அதபுல் முப்ரத்)

கதவை தாழிடுதல்:

முதன்முதல் அறிவுரை தூங்கச் செல்லு முன் கதவை தாழிட்டுக் கொள்வதாகும். இப்பொழுதெல்லாம் திருட்டு பல இடங்களில் சர்வசாதாரணமாகி விட்டது. அதனால் கதவை தாழிட்டுக் கொள்வதை சொல்லாமலேயே செய்து விடுவார்கள். திருட்டு பயம் இல்லாதிருந்தாலும் கதவை இரவில் தாழிட்டுக் கொள்ளத்தான் வேண்டும்.
மேலும் தூங்கிக் கொண்டிருக்கும் போது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் விலங்குகள் வீட்டுக்குள் நுழைந்து விடாமல் இருக்க கதவை தாழிடத்தான் வேண்டும்.
கதவை மூடி தாழிட்டுக் கொள்வது பாதுகாப்பு நடவடிக்கையாகும்.

தண்ணீர் பாத்திரத்தை மூடுதல்:

அந்த காலத்தில் குடிப்பதற்கும் வீட்டு உபயோகத்திற்கும் போதுமான தண்ணீர் கிடைக்காத காலம். போதுமான தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம். குடிநீர் தண்ணீர் பைகளிலே சேகரித்து வைத்துக் கொள்வார்கள். தண்ணீர் பைகளாகட்டும் தண்ணீர் உள்ள பாத்திரமாகட்டும் தண்ணீர் பைகளின் வாய் கட்டப்படவும் தண்ணீர் பாத்திரங்கள் மூடிவைக்கப்படவும் வேண்டும் என்று நபி அவர்கள் கூறியுள்ளார்கள்.
அப்போது தான் மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களோ பூச்சிகளோ அதில் விழுந்து விடாமல் பாதுகாக்க முடியும்.

உணவுப் பாத்திரத்தை மூடுதல்:

இதே முறை மற்ற உணவுப் வைத்திருக்கும் பாத்திரத்திற்கும் குழம்பு வைத்திருக்கும் பாத்திரத்திற்கும் பொருந்தும். மனிதனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பூச்சிகள் அதற்குள் சென்று விடலாம். தூசியோ தீங்கு விளைவிக்கும் பொருளோ அதில் விழுந்து விடலாம். அது உடலுக்கு சக்தி கொடுக்கும் உணவாக இருப்பதற்கு பதிலாக தீங்கு விளைவிக்கும் உணவாக மாறி விடலாம்.

விளக்கை அணைப்பது:

இங்கே சொல்லப்பட்டிருப்பது அகல்விளக்கு அல்லது அது போன்று திறந்த நிலையில் எண்ணெய் ஊற்றி திரியின் மூலம் எரிக்கப்படும் விளக்காகும். இப்படிப்பட்ட விளக்குகள் காற்று கூறுதலாக வீசும் போது அதன் தீப்பிளம்பு கூடும், அல்லது பூனை போன்ற விலங்குகளால் தீ விபத்து ஏற்பட முடியும்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்:

'நீங்கள் உறங்கச் செல்லும் போது உங்கள் வீட்டில் உள்ள நெருப்பை அணைக்காமல் விட்டுவிடாதீர்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூற்கள்: புஹாரி - 6293, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி - 1873, இபுனுமாஜா)

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்:
'உங்கள் வீடுகளில் விளக்கை திறந்திருக்கும் நிலையில் விட்டு விடாதீர்கள், அது உங்களது பகைவனாகும்' நபிமொழி. (நூல்: புஹாரியின் அதபுல் முஃப்ரத்)

முஸ்லிமல்லாத மக்களில் சிலர் தங்களது சில பண்டிகையின் போது அதிநவீன மின்சார விளக்குகள் இருந்தும் பெருவாரியான அகல்விளக்குகளை பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக கார்த்திகை தீபம் அன்று இவ்வாறு அகல்விளக்கை பயன்படுத்துகிறார்கள். அப்போது குறைந்தது விபத்துக்கள் ஏற்படும் போது அதிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கு அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வது அவசியம்.