Followers

Wednesday, December 26, 2012

உன் கண்ணை பிடுங்கி எறிந்து விடு!

உன் கண்ணை பிடுங்கி எறிந்து விடு!



அரபு நாட்டில் நடந்த நெஞ்சை உருக வைக்கும் உண்மை சம்பவம் இது. பாலை நிலங்களால் சூழப்பட்ட ஒரு தேசம். அந்த தேசத்தில் ஒரு பெண் தனது ஒரேயொரு மகனுடன் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு ஒரு கண் இல்லை. தன் மற்றைய கண்ணை வைத்து கொண்டு வாழ வேண்டிய நிலை. கணவரின் இழப்பிற்கு பிற்பாடு அவளது சுவாசத்தின் ஒவ்வொரு மூச்சும் தன் மகனின் எதிர்கால வாழ்வு பற்றியதாகவே இருந்தது. தன்னிடம் இருந்த சொத்துக்களில் ஒரு பகுதியை விற்று மகனை ஒரு நல்ல தரமிக்க பாடசாலையில் சேர்த்தாள். மீதி சொத்தை தனது மகனின் கல்வி தொடர்பான செலவுகளுக்கு தயார் செய்திருந்தாள்.

நல்ல ஒழுக்கமிக்க மகன். இரக்கமானவன். புத்திசாலி. ஊரில் எல்லோரும் புகழும் வண்ணம் அவன் செயற்பாடுகள் இருந்தன. பாடசாலையில் முதல் இடத்துக்கு வருபவன் அவன். காலங்கள் உருண்டன. ஒரு முறை அவன் மிகச்சிறந்த பெறுபேற்றினை ஈட்டி அந்த பிரதேசத்திற்கும், அவனது பாடசாலைக்கும் பெருமை சேர்த்தான்.

இந்த செய்தியை அறிந்த உடனேயே அந்த தாய் ஆவலுடன் பாடசாலை நோக்கி ஓடினாள். மகனின் வகுப்பறை எது என அறிந்து அங்கு சென்று அவனை வாரி அணைத்து முத்தமிட்டாள். இறைவனை புகழ்ந்தாள். சந்தோஷத்துடன் வீடு வந்து அவனுக்கு பிடித்தமான உணவை தயாரிக்க ஆரம்பித்தாள்.

மகனின் வரவை எதிர்பார்த்து வழி மேல் விழி வைத்து காத்திருந்த தாய் மகன் வந்தவுடன் வாஞ்ஞையுடன் அருகில் சென்றாள். ஆனால் மகன் முகத்தை திருப்பி கொண்டான். தாயுடன் பேசவில்லை. நேராக அறைக்குள் சென்று படுத்து விட்டான். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. பதற்றத்துடன் ஓடிச்சென்று என்னவென்றாள் கவலையுடன். மகன் சொன்னான், “ நீ ஏன் என் பாடசாலைக்கு வந்தாய்?. அங்கு அழகான பணக்காரர்கள் மட்டுமே வருவார்கள். நீயோ குருடி. என் நண்பர்கள் என்னை குருடியின் மகன் என கூப்பிடுகின்றனர். இது பெரிய அவமானம். வெட்கம். இதன் பின்னர் நீ என் பாடசாலை பக்கமே வராதே” என கத்தினான் கோபமாக. அதிர்ந்து போனாள் தாய். ஆனாலும் மகனின் சந்தோஷம் கருதி இனி அவ்வாறு நடக்காது என சத்தியம் செய்தாள்.

இப்போது அவனது சுபாவம் மேலும் மாறுபட ஆரம்பித்தது. தன்னை தேடி வரும் நண்பர்கள் முன் வர வேண்டாம் என தாயை எச்சரித்தான். அவள் கண்கலங்க சரி என்றாள். பின்னர் சில நாட்கள் சென்ற பின், தனக்கு குருடியுடன் இருப்பது வெட்கம் என்றும், தான் ஹாஸ்டலில் தங்கி படிப்பதாக சொன்னான். ஒரு நாள் வீட்டை விட்டே சென்று விட்டான். அவள் கதறி துடித்தாள், தினமும் தன் மகனை நினைத்து.

இறுதி பரீட்சையில் பாஸாகி, மருத்துவ கல்லூரிக்கு மகன் தேர்வானது அவளுக்கு தெரியவந்தது. தலை நகர் சென்று படிக்க வேண்டும். நிறைய செலவாகும். தன்னிடம் மீதமிருந்த அனைத்து சொத்துக்களையும் விற்று மகனுக்கு அனுப்பி வைத்தாள். 5 ஆண்டுகள் பறந்து சென்றன. இப்போது அவளது மகன் ஒரு மருத்துவன்.

அவனை பார்க்க அவள் பல முயற்ச்சிகளை மேற்கொண்டும் எதுவும் பயனற்று போயின. ஒரு கடிதம் மகனிடம் இருந்து வந்தது. அதில், “அம்மா, நான் இப்போது இந்த நாட்டில் உள்ள சிறந்த வைததியர்களில் ஒருவன். குருடியின் மகன் வைத்தியன் என்பது தெரிந்தால் எனது கொளரவம் பாதிப்படையும். ஆதலால் நான் இந்த நாட்டை விட்டும் உன் பார்வையை விட்டும் கண்காணாத தேசம் செல்கிறேன்”. இது தான் அந்த கடிதத்தின் வரிகள். துடித்து போனாள் தாய்.

சில வருடங்கள் கடந்தன. முதுமையும், வறுமையும், அவளது ஒற்றை கண்ணுமே அவளிடம் எஞ்சியிருந்த சொத்துக்கள். பசி காரணமாக ஒரு பணக்கார வீட்டில் ஆயாவாக தினமும் வேலை செய்து வந்தாள் அந்த தாய். அந்த வீட்டின் எஜமான இளவயதினள். நல்ல இளகிய குணம் படைத்தவள். இறையச்சமிக்கவள். அவளும் ஒரு வைத்தியராகவே இருந்தாள். இந்த தாயை தனது தாயாக நேசித்து வந்தாள். எல்லாம் நன்றாகவே நடந்தன.
அவளது கணவன் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தான். தனது எஜமானியின் கணவர் வருகிறார் என்பதனால் வாய்க்கு ருஷியாக நல்ல உணவுகளை தயார்படுத்தி வைத்திருந்தாள் அந்த குருட்டு தாய்.

வீடு வந்த அவளது கணவன், சில நாளிகைகளின் பின்னர் சாப்பிட அமர்ந்தான். உணவை ஆசையாக வாயில் அள்ளி திணித்தான். திடீரென அவன் முகம் மாறியது. கருமை அவன் முகத்தில் அப்பி கொண்டது. சடாரென தனது மனைவியின் முகத்தை பார்த்து கேட்டான், “இதனை நீ தான் சமைத்தாயா?” என்று. மனைவி குழப்பத்துடன் இல்லையே என்றாள். “ அப்படியானால் யார் சமைத்தது” இது அவனது இரண்டாம் கேள்வி. வீட்டு வேலைக்காரி சமைத்தாள் என்றாள் மனைவி. உடன் எழுந்த அவன் அடுப்படிக்கு சென்று எட்டி பார்த்தான். உள்ளே அவனது குருட்டு தாய்.

அதிர்ந்து போனார்கள் இருவரும். இவள் இன்னும் இங்கேயா எனும் ஆத்திரமும், வெறுப்பும் அவன் மூளையை ஆட்டுவித்தது. என் மருமகளா என் எஜமானி என்ற சந்தோஷமும், மகிழ்ச்சியும் அந்த தாயின் இதயத்தை நிரப்பின. உணர்சிகளால் இருவருமே பேசவில்லை.

மீண்டும் சாப்பாட்டு அறைக்கு வந்த வைத்தியன் சொன்னான் தன் மனைவியை பார்த்து, “இந்த குருடியை உடனடியாக கொண்டு சென்று வேறு எங்காவது விட்டு விடு. கண்காணாத இடத்தில்”. கத்தினான். அவன் சத்தம் அடுப்படியில் நின்ற அந்த அபலை தாயின் இதயத்தில் முட்டி மோதி நின்றது. துவண்டு போனாள். வாழ்க்கையை இதற்கு பிறகும் வாழ வேண்டுமா என எண்ணி அழுதாள்.

தனது கணவனின் பிடிவாதமும், கோபமும், ஆவேசமும் எல்லை மீறி செல்லவே, அவனது மனைவியான அந்த பெண் வைத்தியர் வேறு வழியின்றி அவளுக்கு போதுமான பணத்தினை வழங்கி பல நூறு கிலோ மீட்டர் தூரத்தில் முன்பு அவள் வாழ்ந்து வந்த இடத்திற்கே மீண்டும் அனுப்பி வைத்தாள் அழுகையுடன்.

காலம் மீண்டும் வேகமாக அசைந்தது. இப்போது அந்த வைத்தியனின் தலை மயிர்கள் பழுக்க ஆரம்பித்து விட்டன. உடல் சற்று சோர்ந்தும் போய்விட்டது. கணவனின் தொடரான சுயநலன், நன்றி மறத்தல் போன்ற காரணங்களினால் கருத்து மோதல் ஏற்பட்டு அந்த வைத்தியரான மனைவியும் இவரை விவாகரத்து செய்து விட்டு இன்னாரு மறுமணம் புரிந்து கொண்டாள். இப்போது வைத்தியரிடம் பணத்தை தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. தனி மரமாக, எதிர்காலங்கள் சூனியமான நிலையில், ஆறுதலுக்கு கூட தலை வருட யாரும் இன்றி தனி மரமாக நின்றான். மெல்ல மெல்ல தான் தன் தாயாருக்கு செய்த துரோகங்கள், அநியாயங்கள், நோகடிப்புக்கள் அவன் உள்ளத்ததை வந்து உசுப்ப ஆரம்பித்தன. ஒரு முறை நடுநிசியில் எழும்பி அம்மா என கத்தி அழும் அளவுக்கு அவனுக்கு தனது பாவங்களின் பாரம் புரிந்து போனது.

ஒரு நாள் காலை அவன் தொலைபேசிக்கு ஒரு செய்தி வந்தது. அவனது தூரத்து உறவினர் ஒருவர் பேசினார். “உன் தாய் தள்ளாத வயதில் மரணிக்கும் தறுவாயில் இருக்கிறாள்” என்பதே அந்த செய்தி. உடனடியாகவே அவன் தனது காரில் கிளம்பி தாயிருக்கும் இடத்திற்கு சென்றான். அவன் சென்ற போது, அவளது உயிர் பிரிந்து விட்டது. உயிர் போன நிலையில் அவளை கட்டிலில் கிடத்தி வைத்திருந்தனர். இப்போது “அம்மா” என கதறினான். கண்ணீர் விட்டான். இறந்த தனது தாயை நல்ல முறையில் அடக்கம் செய்ய உதவினான்.

இப்போது ஒரு கடிதத்தை அவனது உறவுக்காரர் கொடுத்தார். தான் மறைந்த பின்னர், மகன் வருவதாக இருந்தால் மட்டும் கொடுக்குமாறும், இல்லையெனில் எரித்து விடுமாறும் தாயார் கடைசி தருவாயில் வேண்டிக் கொண்டதாகவும் அவர் சொன்னார். பிரித்து வாசித்தான். அவன் கண்களில் இருந்த வழிந்த கண்ணீர் அந்த பாலைவெளியையே சகதியாக மாற்றியது. அதில் இருந்த வரிகள் இதுதான்.............

“அன்பின் மகனே!..

சாந்தியும் சமாதானமும நம் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக!

எனக்கு தெரியும், என் உருவத்தை பார்ப்பது உனக்கு ஒரு போதும்
பிடிக்காது என்று. அதனாலேயே, எனது மரணத்திற்கு பின்னர் நீ
வந்தால் மட்டும் இதனை கொடுக்கும்படி சொன்னேன்.

மற்றபடி எனது அன்பு என்றும் மாறாதது. அது இறைவனுக்கு
மட்டுமே தெரிந்த விஷயம். மகனே நான் குருடிதான். உனக்கு
குருடி தாய் இருந்திருக்க கூடாது தான். எனக்கு உன் உள்ளம்
புரிகிறது. உனது உள்ளத்து உண்ர்வுகளை நான் பெரிதுமே
மதிக்கின்றேன். நான் உன்னை சபித்தது கிடையாது. ஏன்
கோபப்பட்டது கூட கிடையாது. எனக்கு ஒரு வாழ்க்கை
வேண்டும் என்றிருந்தால் நான் இன்னொரு திருமணம்
முடித்து நன்றாக வாழ்ந்திருப்பேன். உனக்காகவே நான்
வாழ்ந்தேன். அதை நீ புரிந்து கொள்ளாமல் போய் விட்டாய்!

மகனே உனக்கு தெரியுமா? நான் ஏன் குருடியானேன்
என்று. அப்போது உனக்கு சின்ன வயது. பாதையில் நின்று நீ
விளையாடிக்கொண்டிருந்தாய். ஏதோ ஒரு பொருள் உன்
கண்களில் பட்டு உன் ஒரு கண் குருடாகி விட்டது.
வைத்தியர்கள் இன்னொரு வெண்படலம் இருந்தால் மட்டுமே
உன் பார்வையை மீண்டும் கிடைக்க வைக்கலாம் என்றனர்.
என்ன செய்வதென்று தெரியவில்லை. நேரமும் போதாது.

அதனால்....

என் ஒரு கண்ணை உடனடியாக தானம் செய்து உனக்கு
பார்வை கிடைக்க செய்தேன். எனது கண்மணியே இன்று
உன் கண்களாக இருக்கிறது. நீ இந்த உலகத்தை, வாழ்க்கையை
பார்ப்பதும் அந்த கண்களாளேயே!...

உனக்கு இதுவும் அவமானம் என்றால் உனது வலது கண்ணை
பிடுங்கி எறிந்து விடு. ஏனென்றால் அது ஓர் குருடியின் கண்ணல்லாவா?

இல்லை மனமிருந்தால் அப்படியே விட்டு விடு. அந்த கண்களால் நான் உன்னை பார்த்துகொண்டிருப்பேன்.”

இப்படிக்கு,
என்றுமே அன்புள்ள, உன் குருட்டு அம்மா.

by: Abu Maslama
நன்றி: கைபர் தளம்

29 comments:

Unknown said...

மாஷா அல்லாஹ் !!!

உண்மை சம்பவம் .. இப்படிஎல்லாம் மனிதர்கள் இருக்கிறார்களே என்று நினைக்கும் போது வருத்தம் தான்

ஆனால் தன மகனின் மேல் பாசம் இறுதி வரைக்கும் அந்த தாயிடம் மாறவில்லை ..

இன்ஷா அல்லாஹ் இதை நான் ஷேர் செய்கிறேன்

faizeejamali said...

Idhanaleye thayin kaaladiyil suvarkam ena nabi (sal) avargal koorinaargal
Allah idhu pondre70 kum merpatta thaigalai kattilum anbilum parivilum irakkathalum sirappirkuriyavan anbirkkuriyavan irakkathirkuriyavan may allah forgive our sins and give us janna.

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,


கொஞ்ச நாளா உங்கப்பதிவுகளை தமிழ்மணத்தில் காணவில்லையே, ஒரு வேளை பிசியாகிட்டிங்களோனு நினைச்சேன்,ஆனால் நிறைய எழுதி இருக்கிங்க, தமிழ்மணத்தில் இணைப்பதில்லையா?

சின்ன வயசில் படிச்ச பாசமுள்ள தாய் இதயத்தை பரிசாக கொடுத்த கதை போல உள்ளது, உண்மை சம்பவம்னு சொல்லுறிங்க ஆச்சரியமா இருக்கு.

சரி இதெல்லாம் நீதி,நெறி பின்பற்றப்படும் இஸ்லாமிய தேசத்தில் தானே நடந்து இருக்கு, அப்போ மக்களை நல்வழி படுத்த தவறிவிட்டதா மார்க்கம்?


ஏன் இதைக்கேட்கிறேன் என்றால் வழக்கமா மனித தவறுகளை சொல்லி இதுக்கெல்லாம் தீர்வு மார்க்க போதனையேனு முடிப்பீங்க ,இப்போ அப்படி சொல்லலையேனு தான்!!!!

mohamed said...

சலாம் சகோ சுவனப்பிரியன்,

மாஷா அல்லாஹ் நெகிழ்ச்சியான உண்மை சம்பவம் உண்மையாக என் கண்களில் இருந்து கண்ணீர் சிந்த வைத்து விட்டது.

Anonymous said...

பார்க்கும் போதே உள்ளம் கலங்குகிறதே. இறைவன் அந்தத் தாய்க்கு என்றென்றும் நல்லருள் பாலிப்பானாக.

- வள்ளுவன்

பாகிஸ்தான்காரன் said...

பாஸ்
செம காமடி.
'' உயிரோடிருப்பவர்களின் கண்களை தானமாக வழங்க முடியாது'' பாஸ்

இதில இது ஒரு மனதை உருக்கும் உண்மை சம்பவம்.
ம்ம்ம் இப்படிப்பட்ட ச‌ம்பவங்கள் அரபு நாடுகளில் மட்டும் தான் நடக்கும்.

ஆமினா said...

மனதை கனக்கச்செய்து விட்டது :(

மும்தாஜ் said...

படித்து முடித்ததும் இதயம் கணக்கிறது.. கண்ணீருடன் கண்கள்..

தாயின் அன்பு எந்த சூழ்நிலையிலும் மாறாத ஒன்று என்பதற்க்கு சிற்ந்த எடுத்துக்காட்டு..

suvanappiriyan said...

சகோ சுல்தான் மைதீன்!

//ஆனால் தன மகனின் மேல் பாசம் இறுதி வரைக்கும் அந்த தாயிடம் மாறவில்லை ..//

பெத்த மனம பித்து பிள்ளை மனம் கல்லு என்று அதனால்தான் தமிழில் ஒரு பழமொழி கூட உண்டு.

suvanappiriyan said...

சகோ ஃபைஜி ஜமாலி!

//Idhanaleye thayin kaaladiyil suvarkam ena nabi (sal) avargal koorinaargal
Allah idhu pondre70 kum merpatta thaigalai kattilum anbilum parivilum irakkathalum sirappirkuriyavan anbirkkuriyavan irakkathirkuriyavan may allah forgive our sins and give us janna.//

'இதனாலேயே தாயின் காலடியில் சொர்க்கம் என்று நபிகள் கூறினார்கள்'

உண்மைதான் சகோ. உங்களோடு சேர்ந்து நானும் பிரார்த்திக்கிறேன்.

suvanappiriyan said...

திரு வவ்வால்!

//கொஞ்ச நாளா உங்கப்பதிவுகளை தமிழ்மணத்தில் காணவில்லையே, ஒரு வேளை பிசியாகிட்டிங்களோனு நினைச்சேன்,ஆனால் நிறைய எழுதி இருக்கிங்க, தமிழ்மணத்தில் இணைப்பதில்லையா?//

நான் இணைக்க தயார்தான். ஆனால் அவர்கள்தான் தயாரில்லை. ஒருக்கால் சினிமா, ஆபாசங்கள், வெட்டு, குத்து என்று வரிசையாக பதிவுகள் எழுதினால் அல்லது நாத்திகத்தை தூக்கி பிடித்து எழுதினால் ஒருகால் சந்தோஷப்பட்டு இணைப்பார்களோ என்னவோ. அவர்கள் இணைக்கவில்லை என்றாலும் வழக்கமாக தினமும் 700 லிருந்து 800 வரை தினமும் பார்வையாளர்கள் வருகின்றனர். பின்னூட்டங்களும அதே அளவு வந்து கொண்டுள்ளது. எனவே தமிழ் மணம் இணைக்கவில்லை என்ற குறை எனக்கில்லை.

//சின்ன வயசில் படிச்ச பாசமுள்ள தாய் இதயத்தை பரிசாக கொடுத்த கதை போல உள்ளது, உண்மை சம்பவம்னு சொல்லுறிங்க ஆச்சரியமா இருக்கு.//

அரபு பத்திரிக்கையில் வந்த சம்பவம் இது.

//சரி இதெல்லாம் நீதி,நெறி பின்பற்றப்படும் இஸ்லாமிய தேசத்தில் தானே நடந்து இருக்கு, அப்போ மக்களை நல்வழி படுத்த தவறிவிட்டதா மார்க்கம்?//

ஒரு நாட்டில் ஒட்டு மொதத மக்களையும் நேர்வழிப் படுத்துதல் என்பது யாராலும் இயலாத காரியம் இறைவனை தவிர. இறைவனை கட்டளைகளை சிலர் பின்பற்றுவர். பலர் ஒதுங்கி கொள்வர். ஐந்து வேளையும் தொழுபவர்களில் பலர் பொய் சொல்லுவதையும், திருடுவதையும், தாய் தந்தையை உதாசீனப்படுத்துவதையும் பார்க்கிறோம். இது போன்றவர்கள் இறைவனுக்காக தொழுகுறோம் என்ற இடத்தக்கு இன்னும் வரவில்லை. இன்னும் மனம் பக்குவப்படவில்லை. சிலர் ஒரு மாதத்திலேயே தங்களை மாற்றிக் கொள்வார்கள். சிலருக்கு சில ஆண்டுகள் கூட ஆகலாம்.

//ஏன் இதைக்கேட்கிறேன் என்றால் வழக்கமா மனித தவறுகளை சொல்லி இதுக்கெல்லாம் தீர்வு மார்க்க போதனையேனு முடிப்பீங்க ,இப்போ அப்படி சொல்லலையேனு தான்!!!!//

அந்த தாய் அந்த மகனை உலக கல்வியை கொடுத்ததோடு குர்ஆன் என்ன சொல்கிறது என்ற போதனைகளையும் ஊட்டி வளர்த்திருந்தால் இந்த இழி நிலைக்கு வந்திருக்க மாட்டார். எனவே முதல தவறு தாயிடமிருந்து ஆரம்பிக்கிறது.



suvanappiriyan said...

சகோ முஹம்மத்!

//மாஷா அல்லாஹ் நெகிழ்ச்சியான உண்மை சம்பவம் உண்மையாக என் கண்களில் இருந்து கண்ணீர் சிந்த வைத்து விட்டது.//

தன்னை வளர்த்து படித்து ஆளாக்கிய பெற்றோர்களை முதியோர் விடுதிகளிலும், அனாதை ஆஸ்ரமங்களிலும் தவிக்க விடும் எத்தனையோ பிள்ளைகளை பார்த்து வருகிறோம். மனிதம் பலரிடம் மறையத் தொடங்கியுள்ளது கவலை தரும் விஷயம்.

Yasmin Riazdheen said...

மாஷா அல்லாஹ் நெஞ்சை உறைய வைக்கும் பகிர்வு..

தாயின் அன்பிற்கு இவ்வுலகில் ஈடு இணை ஏது???


ஜசக்கல்லாஹ் ஹைரன் சகோ...

suvanappiriyan said...

சகோ வள்ளுவன்!

//பார்க்கும் போதே உள்ளம் கலங்குகிறதே. இறைவன் அந்தத் தாய்க்கு என்றென்றும் நல்லருள் பாலிப்பானாக.//

இது போல் பல சம்பவங்களை நாம் தினமும் பத்திரிக்கைகளில் படித்து வருகிறோம். பிரசாரங்களின் மூலமே இதனை நாம் தடுக்க முடியும்.

suvanappiriyan said...

சகோ ஞானி!

//' உயிரோடிருப்பவர்களின் கண்களை தானமாக வழங்க முடியாது'' பாஸ்//

அரபு நாடுகளில் கிராமங்களிலெல்லாம் இந்த சட்டங்களை யாரும் பார்ப்பது இல்லை. இது உண்மையா அல்லது கற்பனையா என்பதை இதனை எழுதியவருக்குத்தான் தெரியும்.

//இதில இது ஒரு மனதை உருக்கும் உண்மை சம்பவம்.
ம்ம்ம் இப்படிப்பட்ட ச‌ம்பவங்கள் அரபு நாடுகளில் மட்டும் தான் நடக்கும். //

நழுங்கதான் இப்போ காமெடி பண்றீங்க...அரபு நாடுகளை விட முதியோர் இல்லங்களில் பெற்றோர் சேர்க்கப்படும் எண்ணிக்கை இந்தியாவில்தான் அதிகம் என்பது தெரியுமா?

சவுதியில் அரபுகள் பல தவறுகள் செய்தாலும் பெற்றோரை வயதான காலத்தில் கவனிப்பதில் மிக ஆர்வமுடனேயே செயல்படுகின்றனர். இதை நான் பல இடங்களில் நேரிலேயே பார்த்துள்ளேன். குர்ஆன் அந்த அளவு இவர்களை இந்த விஷயத்தில் பக்குவப்படுத்தியுள்ளது.


suvanappiriyan said...

சகோ ஆமினா!

//மனதை கனக்கச்செய்து விட்டது :(//

இதனை படிக்கும் போது எனது மனமும் கனத்து விட்டது.

suvanappiriyan said...

சகோ மும்தாஜ்!

//படித்து முடித்ததும் இதயம் கணக்கிறது.. கண்ணீருடன் கண்கள்..

தாயின் அன்பு எந்த சூழ்நிலையிலும் மாறாத ஒன்று என்பதற்க்கு சிற்ந்த எடுத்துக்காட்டு..//

உண்மைதான் சகோதரி.

'அங்கத்தில் குறைகளற்ற குழந்தைகளை நீ எங்களுக்கு வழங்கினால் நன்றி செத்துவோராவோம்' என்று அவ்விருவரும் (ஆதம், ஹவ்வா) தமது இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர்.

-குர்ஆன் 7:189

suvanappiriyan said...

சகோ யாஸ்மின் ரியாஸ்தீன்!

//மாஷா அல்லாஹ் நெஞ்சை உறைய வைக்கும் பகிர்வு..

தாயின் அன்பிற்கு இவ்வுலகில் ஈடு இணை ஏது???//

உண்மைதான சகோதரி. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

ஊஜா : குஜராத்தில் 37 வயதான விதவை பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் இரவு பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், அப்பெண்ணின் ஆண் நண்பரை கத்திமுனையில் மிரட்டி உள்ளனர். மேலும் அவரை கடுமையாக தாக்கி விட்டு அப்பெண்ணை புடவையால் கட்டிப் போட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். காலையில் பெண்ணின் அழுகுரல் கேட்ட மக்களை அப்பெண்ணையும், மயங்கி கிடந்த ஆண் நண்பரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். போலீசிலும் புகார் அளித்துள்ளனர். பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபர்களுக்கு வயது 25 முதல் 30 க்குள் இருக்கும் என அப்பெண் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

dinamalar
27-12-2012

suvanappiriyan said...

தங்கமணி!

//அந்த அரபிய பழக்கத்தை உங்களது பழக்கமாக மேற்கொண்டு விட்டு அதற்கு சப்பைக்கட்டு கட்டுகிறீர்கள்.//

இஸ்லாம் வருவதற்கு முன்பு அரபுகள் பெண் குழந்தை பிறந்தால் உயிரோடு புதைத்து விடுவார்களாம். சில தந்தைமார்கள் பெண் குழந்தை பிறந்து விட்டால் சமூகத்தில் வர வெட்கப்பட்டுக் கொண்டு சில காலங்கள் மறைந்து வாழ்வானாம். இது தான் அன்றைய நிலை.

இஸ்லாம் வந்து முகமது நபி திருமணத்துக்கு மஹர் என்ற ஒரு வழக்கத்தை ஆரம்பித்து வைத்தவுடன் இந்த நிலை முற்றிலுமாக மாறுகிறது. இன்று பெண் குழந்தை பிறந்தால் சந்தோஷத்தில் இனிப்பு கொடுத்து மகிழ்கிறார்கள். பெண் குழந்தை பிறந்ததற்காக பல முறை சவுதிகள் கொடுத்த இனிப்பை நாங்கள் அலுவலகத்தில் சாப்பிட்டுள்ளோம். இப்படிப்பட்ட ஒரு சிறந்த ஏற்பாட்டை யாரோ சிலர் தவறாக பயன்படுத்தினால் அதனை விமரிசிக்கலாமா? பொட்டு கட்டுதலைப் பற்றி இதற்கு பகரமாக நான் கேட்டதற்கு வழக்கம்போல் பதிலே தராமல் ஓடி விட்டீர்களே! அதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா! எதிர்க்கிறீர்களா!


suvanappiriyan said...

திரு தங்கமணி!

//அட. எப்படி அரபியாவில் பெண்கள் இருந்தார்கள்? பிறக்கும் பெண்குழந்தைகளை உயிரோடு புதைத்துவிட்டால் அங்கே எப்படி பெண்கள் இருந்தார்கள்? மேலேயிருந்து குதித்தார்களோ?//

நான் சொல்ல வந்தது வறியவர்களை! பலர் வறுமைக்கு பயந்து பெண் குழந்தைகளை கொன்றதாக குர்ஆன் கூறுகிறது. இதை அன்றைய சிலை வணங்கிகள் குர்ஆனின் இந்த கருத்தை மறுக்கவில்லை.

அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப் பட்டால் அவனது முகம் கருத்து, கவலைப்பட்டவனாக ஆகி விடுகிறான். அவனுக்குக் கூறப்பட்ட கெட்டதெனக் கருதிய செய்தியினால் சமுதாயத்தி லிருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் இதை உயிருடன் புதைப்பதா? என்று எண்ணுகிறான் கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது.
(அல்குர்ஆன் 16:58,59)

அறியாமைக் காலத்தில் ரபீஆ மற்றும் முளர் குலத்தார் தங்களுடைய பெண் மக்களை உயிருடன் புதைப்பவர்களாக இருந்து வந்தனர். வறுமை மற்றும் இழிவைப் பயந்து பெண் மக்களை அரபுகள் கொன்று வந்தனர். இதற்குத் தடைவிதித்தே இறைவன் இவ்வசனத்தை அருளினான்.
“”உன்னுடைய குழந்தை உன்னுடன் உண வருந்துவதை அஞ்சி, அதை நீ கொலை செய்வது பெரும் பாவமாகும்.” என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி:7532 )

suvanappiriyan said...

திரு தங்கமணி!

//அப்படியா? மெஹர் என்பது முகம்மது நபி ஆரம்பித்து வைத்த பழக்கம், அதற்கு முன்னால் மெஹர் என்பது இல்லை என்று நிரூபிக்க வேண்டுமே? அதனை நிரூபியுங்கள். இது மாதிரி நிறைய நீங்கள் நிரூபிக்க கேட்டு உங்களிடம் பதிலே இல்லை. அதுமாதிரி இன்னொன்றுஎன்று ஓடிவிடுவீர்களே.//

இஸ்லாத்துக்கு முன்னர் அறியாமைக் காலம் என்றழைக்கப்படும் மௌட்டீக கால அரேபியாவில் பெண்கள் மிகவும் இழிவானவர்களாகவே கருதப்பட்டனர். அவளது உரிமைகள் பறிக்கப்பட்டன; ஆண்களின் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ளும் ஒரு கேளிக்கைப் பொருளாகவே கருதப்பட்டு வந்தாள். ஒரே பெண்ணைப் பல ஆண்கள் திருமணம் முடிக்கக் கூடிய ஒரு கீழ்த்தரமான நிலையே காணப்பட்டது. இதனை நபி அவர்களின் மனைவியான ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு விபரிக்கிறார்கள்:

“அறியாமைக் காலத்தில் நான்கு வகைத் திருமணங்கள் நடைபெற்றன.
முதல் வகை, இன்று மக்களிடையே வழக்கிலுள்ள திருமணத்தைப் போன்றதாகும். ஒருவர் மற்றொருவரின் பொறுப்பிலுள்ள ஒரு பெண்ணையோ அல்லது அவருடைய மகளையோ பெண் பேசி ‘மஹர்’ (விவாகக் கொடை) கொடுத்து மணந்து கொள்வார்.

இரண்டாம் வகைத் திருமணம், ஒருவர் தம் மனைவியிடம் நீ உன் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்தவுடன் இன்ன பிரமுகருக்குத் தூதனுப்பி (அவர் மூலம் கருக் கொள்வதற்காக) அவருடன் உடலுறவு கொள்ளக் கேட்டுக் கொள் என்று கூறிவிட்டு அவளுடன் உடலுறவு கொள்ளாமல் அவளை விட்டும் அந்தக் கணவன் விலகியிருப்பான். அவள் உடலுறவு கொள்ளக் கேட்டுக் கொண்ட அந்த மனிதர் மூலம் அவள் கருவுற்றிருப்பது தெரிகின்ற வரை கணவன் அவளை ஒரு போதும் தீண்ட மாட்டான். அந்தப் பிரமுகர் மூலம் அவள் கருத்தரித்துவிட்டாள் எனத் தெரிய வந்தால், விரும்பும் போது அவளுடைய கணவன் அவளுடன் உடலுறவு கொள்வான். குலச் சிறப்பு மிக்க குழந்தை பிறக்க வேண்டுமென்ற அற்ப ஆர்வத்தினாலேயே இப்படிச் செய்துவந்தனர். இந்தத் திருமணத்திற்கு ‘நிகாஹுல் இஸ்திப்ளாஹ்’ (விரும்பிப் பெறும் உடலுறவுத் திருமணம்) என்று பெயர்.

மூன்றாம் வகைத் திருமணம், பத்துப் பேருக்குக் குறைவான ஒரு குழுவினர் ஓரிடத்தில் ஒன்று கூடி அவர்கள் அனைவரும் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். அவள் கருத்தரித்துப் பிரசவமாகிச் சில நாட்கள் கழியும்போது, அவர்கள் அனைவரையும் அவள் தம்மிடம் வரச் சொல்வாள். அவர்களில் எவரும் மறுக்க முடியாது. அனைவரும் அவளிடம் ஒன்று கூடுவார்கள். அப்போது அவர்களிடம் ‘நீங்கள் செய்தது உங்களுக்கே தெரியும். இப்போது எனக்குக் குழந்தை பிறந்து விட்டது’ என்று கூறிவிட்டு அவர்களில் ஒருவனை நோக்கி ‘இவன் உங்கள் மகன் இன்னாரே’ என்று தான் விரும்பிய ஒருவரின் பெயரை அவள் குறிப்பிடுவாள். அவ்வாறே குழந்தை அந்த நபருடன் இணையும். அவரால் அதனை மறுக்க முடியாது.

நான்காம் வகைத் திருமணம், நிறைய மக்கள் ஓரிடத்தில் ஒன்று கூடி ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். தன்னிடம் வரும் யாரையும் அவள் தடுக்க மாட்டாள்.

இந்தப் பெண்கள் விலை மாதர்களாவர். அவர்கள் தங்களது வீட்டு வாசலில் பல அடையாளக் கொடிகளை நட்டு வைத்திருந்தனர். எனவே அவர்களை விரும்பியவர்கள் அங்கே செல்வார்கள். இந்தப் பெண்களில் ஒருத்திக்குக் கருத்தரித்துக் குழந்தை பிறந்தால் அவளுடன் உடலுறவு கொண்ட அனைவரும் அவளுக்காக ஒன்று கூட்டப்படுவார்கள். அங்க அடையாளங்களை வைத்து தந்தை – பிள்ளையைக் கண்டறியும் நிபுணர்களை அழைத்து வருவார்கள். தாம் தந்தை எனக் கருதிய ஒருவருடன் அந்தக் குழந்தையை அந்த நிபுணர்கள் இணைத்துவிடுவார்கள். அந்தக் குழந்தை அந்தத் தந்தையிடம் சேர்க்கப்பட்டு ‘அவருடைய மகன்’ என்று பெயர் சொல்லி அழைக்கப்பட்டு வந்தது. (அவன் தன் குழந்தையல்ல என்று) அவனால் மறுக்க முடியாது.

சத்திய மார்க்கத்துடன் முஹம்மத் நபி அவர்கள் அனுப்பி வைக்கப்பட்ட போது இன்று மக்களின் வழக்கிலுள்ள முதல் வகைத் திருமணத்தைத் தவிர அறியாமைக் காலத் திருமணங்கள் அனைத்தையும் தகர்த்துவிட்டார்கள்” [புகாரி: 5127].

அன்றைய அரபுலக பெண்களின் நிலை இஸ்லாத்துக்கு முன்னால் இவ்வாறுதான் இருந்தது.


suvanappiriyan said...

திரு தங்கமணி!

//தவறாகவே பயன்படுத்த முடியாத விஷயத்தைத்தானே உங்கள் அரபி சாமியார் கொடுக்க வேண்டும்? எப்படி தவறாக உபயோகப்படுத்தக்கூடிய ஒரு விஷயத்தை உங்கள் அரபி சாமியார் கொடுக்கிறார்? சரியாகப்படவில்லையே?//

அனைத்து நல்ல விஷயங்களை கொடுத்தாலும் மனிதன் இயற்கையிலேயே தவறிழைக்கக் கூடியவனாகவே படைக்கப்பட்டுள்ளான். சாத்தானின் தீண்டுதல் அனைத்து மனிதர்களிடத்திலும் இருக்கும். தனது தவறுகளிலிருந்து பாடம் பெற்று திருந்துபவனே வெற்றி பெற்றவனாகிறான் என்று இஸ்லாம் கூறுகிறது. நேர் வழியை தனக்கு காட்டுமாறு இறைவனிடம் பிரார்த்திக்குமாறு மனிதர்களை நோக்கி குர்ஆன் கட்டளையிடுகிறது.

'எங்கள் இறைவா! எங்களுக்கு நேர்வழி காட்டியபின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே! எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல்'
-குர்ஆன்; 3:9

முகமது நபியே சில நேரங்களில் தவறிழைத்து விடுகிறார். இறைவன் சுட்டிக் காட்டிய பிறகு தவறிலிருந்து விடு படுகிறார். இந்த சம்பவங்களும் குர்ஆனில் இடம் பெற்றுள்ளது. எனவே தவறிழைக்காத மனிதனே இந்த உலகில் இல்லை எனலாம்.

suvanappiriyan said...

திரு தங்கமணி!

//அதற்கு முன்னரே விசிறி என்பவர் பதில் கொடுத்துவிட்டார். அதனை படிக்கவில்லையா? அவர் சொன்னதை ஆமோதிக்கிறேன் என்று நான் சொல்லவேண்டும் என்றால், இதோ சொல்லிவிடுகிறேன். ஆமோதிக்கிறேன்.//

விசிறி சொன்னதைத்தான் ஆமோதிப்பீர்களோ! நீங்களாகவே முன் வந்து 'பொட்டு கட்டி தேவரடியார்களாக பெண்களை கொடுமைபடுத்துவது தவறான சட்டம். எனது மார்க்கம் தவறாக இந்த சட்டத்தை புகுத்தி விட்டது. எனவே இதனை வன்மையாக நான் கண்டிக்கிறேன்' என்று சொல்லப் படாதோ! ஏதோ ஒப்புக்காக வேறு வழியில்லாமல் அரை மனத்தோடு சொல்வது போல் உள்ளது. தெய்வக் குத்தம் ஆகி விடும் என்ற பயமோ! இருக்கலாம்.

ராவணன் said...

பாஷா ரஜினிகாந்த்....நெஞ்சை உலுக்கும் பதிவூ....

ராவணன் said...

அண்ணாச்சி.....

நம்ம ஒரே இறைவன் முனியாண்டிசாமிக்குத் தெரியாதா?

Dr.Anburaj said...

இது ஒருவகை மீனாட்சிபுரம்-ரக்மத்புரம்
தீண்டாமைக்கு தீர்வு இந்து சமயத்தில் உள்ளது.புத்தன் முதல் திருவள்ளுவர் கபிலர் மற்றும்ஆயிரக்கணக்கான சித்தர்கள்வரை இதை எதிர்த்துபோராடிக்கொண்டிருக்கின்றனர். தாங்கள் அறிவீர்களா? எல்லா சாதிமக்களின் ஆதிபெற்றோர்கள் அனைவரும் சாதியற்ற வேதகால சமூதாயத்தைச் சார்ந்தவர்கள்தாம். இனி மேலே படியுங்கள்.
அரபு நாட்டில் நடந்த நெஞ்சை உருக வைக்கும் உண்மை சம்பவம் இது. பாலை நிலங்களால் சூழப்பட்ட ஒரு தேசம். அந்த தேசத்தில் ஒரு பெண் தனது ஒரேயொரு மகனுடன் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு ஒரு கண் இல்லை. தன் மற்றைய கண்ணை வைத்து கொண்டு வாழ வேண்டிய நிலை. கணவரின் இழப்பிற்கு பிற்பாடு அவளது சுவாசத்தின் ஒவ்வொரு மூச்சும் தன் மகனின் எதிர்கால வாழ்வு பற்றியதாகவே இருந்தது. தன்னிடம் இருந்த சொத்துக்களில் ஒரு பகுதியை விற்று மகனை ஒரு நல்ல தரமிக்க பாடசாலையில் சேர்த்தாள். மீதி சொத்தை தனது மகனின் கல்வி தொடர்பான செலவுகளுக்கு தயார் செய்திருந்தாள்.

நல்ல ஒழுக்கமிக்க மகன். இரக்கமானவன். புத்திசாலி. ஊரில் எல்லோரும் புகழும் வண்ணம் அவன் செயற்பாடுகள் இருந்தன. பாடசாலையில் முதல் இடத்துக்கு வருபவன் அவன். காலங்கள் உருண்டன. ஒரு முறை அவன் மிகச்சிறந்த பெறுபேற்றினை ஈட்டி அந்த பிரதேசத்திற்கும், அவனது பாடசாலைக்கும் பெருமை சேர்த்தான்.

இந்த செய்தியை அறிந்த உடனேயே அந்த தாய் ஆவலுடன் பாடசாலை நோக்கி ஓடினாள். மகனின் வகுப்பறை எது என அறிந்து அங்கு சென்று அவனை வாரி அணைத்து முத்தமிட்டாள். இறைவனை புகழ்ந்தாள். சந்தோஷத்துடன் வீடு வந்து அவனுக்கு பிடித்தமான உணவை தயாரிக்க ஆரம்பித்தாள்.

மகனின் வரவை எதிர்பார்த்து வழி மேல் விழி வைத்து காத்திருந்த தாய் மகன் வந்தவுடன் வாஞ்ஞையுடன் அருகில் சென்றாள். ஆனால் மகன் முகத்தை திருப்பி கொண்டான். தாயுடன் பேசவில்லை. நேராக அறைக்குள் சென்று படுத்து விட்டான். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. பதற்றத்துடன் ஓடிச்சென்று என்னவென்றாள் கவலையுடன். மகன் சொன்னான், “ நீ ஏன் என் பாடசாலைக்கு வந்தாய்?. அங்கு அழகான பணக்காரர்கள் மட்டுமே வருவார்கள். நீயோ குருடி. என் நண்பர்கள் என்னை குருடியின் மகன் என கூப்பிடுகின்றனர். இது பெரிய அவமானம். வெட்கம். இதன் பின்னர் நீ என் பாடசாலை பக்கமே வராதே” என கத்தினான் கோபமாக. அதிர்ந்து போனாள் தாய். ஆனாலும் மகனின் சந்தோஷம் கருதி இனி அவ்வாறு நடக்காது என சத்தியம் செய்தாள்.

இப்போது அவனது சுபாவம் மேலும் மாறுபட ஆரம்பித்தது. தன்னை தேடி வரும் நண்பர்கள் முன் வர வேண்டாம் என தாயை எச்சரித்தான். அவள் கண்கலங்க சரி என்றாள். பின்னர் சில நாட்கள் சென்ற பின், தனக்கு குருடியுடன் இருப்பது வெட்கம் என்றும், தான் ஹாஸ்டலில் தங்கி படிப்பதாக சொன்னான். ஒரு நாள் வீட்டை விட்டே சென்று விட்டான். அவள் கதறி துடித்தாள், தினமும் தன் மகனை நினைத்து.

இறுதி பரீட்சையில் பாஸாகி, மருத்துவ கல்லூரிக்கு மகன் தேர்வானது அவளுக்கு தெரியவந்தது. தலை நகர் சென்று படிக்க வேண்டும். நிறைய செலவாகும். தன்னிடம் மீதமிருந்த அனைத்து சொத்துக்களையும் விற்று மகனுக்கு அனுப்பி வைத்தாள். 5 ஆண்டுகள் பறந்து சென்றன. இப்போது அவளது மகன் ஒரு மருத்துவன்.

அவனை பார்க்க அவள் பல முயற்ச்சிகளை மேற்கொண்டும் எதுவும் பயனற்று போயின. ஒரு கடிதம் மகனிடம் இருந்து வந்தது. அதில், “அம்மா, நான் இப்போது இந்த நாட்டில் உள்ள சிறந்த வைததியர்களில் ஒருவன். குருடியின் மகன் வைத்தியன் என்பது தெரிந்தால் எனது கொளரவம் பாதிப்படையும். ஆதலால் நான் இந்த நாட்டை விட்டும் உன் பார்வையை விட்டும் கண்காணாத தேசம் செல்கிறேன்”. இது தான் அந்த கடிதத்தின் வரிகள். துடித்து போனாள் தாய்.

Dr.Anburaj said...

இது ஒருவகை மீனாட்சிபுரம்-ரக்மத்புரம்
தீண்டாமைக்கு தீர்வு இந்து சமயத்தில் உள்ளது.புத்தன் முதல் திருவள்ளுவர் கபிலர் மற்றும்ஆயிரக்கணக்கான சித்தர்கள்வரை இதை எதிர்த்துபோராடிக்கொண்டிருக்கின்றனர். தாங்கள் அறிவீர்களா? எல்லா சாதிமக்களின் ஆதிபெற்றோர்கள் அனைவரும் சாதியற்ற வேதகால சமூதாயத்தைச் சார்ந்தவர்கள்தாம். இனி மேலே படியுங்கள்.
அரபு நாட்டில் நடந்த நெஞ்சை உருக வைக்கும் உண்மை சம்பவம் இது. பாலை நிலங்களால் சூழப்பட்ட ஒரு தேசம். அந்த தேசத்தில் ஒரு பெண் தனது ஒரேயொரு மகனுடன் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு ஒரு கண் இல்லை. தன் மற்றைய கண்ணை வைத்து கொண்டு வாழ வேண்டிய நிலை. கணவரின் இழப்பிற்கு பிற்பாடு அவளது சுவாசத்தின் ஒவ்வொரு மூச்சும் தன் மகனின் எதிர்கால வாழ்வு பற்றியதாகவே இருந்தது. தன்னிடம் இருந்த சொத்துக்களில் ஒரு பகுதியை விற்று மகனை ஒரு நல்ல தரமிக்க பாடசாலையில் சேர்த்தாள். மீதி சொத்தை தனது மகனின் கல்வி தொடர்பான செலவுகளுக்கு தயார் செய்திருந்தாள்.

நல்ல ஒழுக்கமிக்க மகன். இரக்கமானவன். புத்திசாலி. ஊரில் எல்லோரும் புகழும் வண்ணம் அவன் செயற்பாடுகள் இருந்தன. பாடசாலையில் முதல் இடத்துக்கு வருபவன் அவன். காலங்கள் உருண்டன. ஒரு முறை அவன் மிகச்சிறந்த பெறுபேற்றினை ஈட்டி அந்த பிரதேசத்திற்கும், அவனது பாடசாலைக்கும் பெருமை சேர்த்தான்.

இந்த செய்தியை அறிந்த உடனேயே அந்த தாய் ஆவலுடன் பாடசாலை நோக்கி ஓடினாள். மகனின் வகுப்பறை எது என அறிந்து அங்கு சென்று அவனை வாரி அணைத்து முத்தமிட்டாள். இறைவனை புகழ்ந்தாள். சந்தோஷத்துடன் வீடு வந்து அவனுக்கு பிடித்தமான உணவை தயாரிக்க ஆரம்பித்தாள்.

மகனின் வரவை எதிர்பார்த்து வழி மேல் விழி வைத்து காத்திருந்த தாய் மகன் வந்தவுடன் வாஞ்ஞையுடன் அருகில் சென்றாள். ஆனால் மகன் முகத்தை திருப்பி கொண்டான். தாயுடன் பேசவில்லை. நேராக அறைக்குள் சென்று படுத்து விட்டான். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. பதற்றத்துடன் ஓடிச்சென்று என்னவென்றாள் கவலையுடன். மகன் சொன்னான், “ நீ ஏன் என் பாடசாலைக்கு வந்தாய்?. அங்கு அழகான பணக்காரர்கள் மட்டுமே வருவார்கள். நீயோ குருடி. என் நண்பர்கள் என்னை குருடியின் மகன் என கூப்பிடுகின்றனர். இது பெரிய அவமானம். வெட்கம். இதன் பின்னர் நீ என் பாடசாலை பக்கமே வராதே” என கத்தினான் கோபமாக. அதிர்ந்து போனாள் தாய். ஆனாலும் மகனின் சந்தோஷம் கருதி இனி அவ்வாறு நடக்காது என சத்தியம் செய்தாள்.

இப்போது அவனது சுபாவம் மேலும் மாறுபட ஆரம்பித்தது. தன்னை தேடி வரும் நண்பர்கள் முன் வர வேண்டாம் என தாயை எச்சரித்தான். அவள் கண்கலங்க சரி என்றாள். பின்னர் சில நாட்கள் சென்ற பின், தனக்கு குருடியுடன் இருப்பது வெட்கம் என்றும், தான் ஹாஸ்டலில் தங்கி படிப்பதாக சொன்னான். ஒரு நாள் வீட்டை விட்டே சென்று விட்டான். அவள் கதறி துடித்தாள், தினமும் தன் மகனை நினைத்து.

இறுதி பரீட்சையில் பாஸாகி, மருத்துவ கல்லூரிக்கு மகன் தேர்வானது அவளுக்கு தெரியவந்தது. தலை நகர் சென்று படிக்க வேண்டும். நிறைய செலவாகும். தன்னிடம் மீதமிருந்த அனைத்து சொத்துக்களையும் விற்று மகனுக்கு அனுப்பி வைத்தாள். 5 ஆண்டுகள் பறந்து சென்றன. இப்போது அவளது மகன் ஒரு மருத்துவன்.

அவனை பார்க்க அவள் பல முயற்ச்சிகளை மேற்கொண்டும் எதுவும் பயனற்று போயின. ஒரு கடிதம் மகனிடம் இருந்து வந்தது. அதில், “அம்மா, நான் இப்போது இந்த நாட்டில் உள்ள சிறந்த வைததியர்களில் ஒருவன். குருடியின் மகன் வைத்தியன் என்பது தெரிந்தால் எனது கொளரவம் பாதிப்படையும். ஆதலால் நான் இந்த நாட்டை விட்டும் உன் பார்வையை விட்டும் கண்காணாத தேசம் செல்கிறேன்”. இது தான் அந்த கடிதத்தின் வரிகள். துடித்து போனாள் தாய்.

Anonymous said...

Dr Anbu Raj....said

சத்திய மார்க்கத்துடன் முஹம்மத் நபி அவர்கள் அனுப்பி வைக்கப்பட்ட போது இன்று மக்களின் வழக்கிலுள்ள முதல் வகைத் திருமணத்தைத் தவிர அறியாமைக் காலத் திருமணங்கள் அனைத்தையும் தகர்த்துவிட்டார்கள்” [புகாரி: 5127]. அன்றைய அரபுலக பெண்களின் நிலை இஸ்லாத்துக்கு முன்னால் இவ்வாறுதான் இருந்தது.எப்படிஅய்யா இப்படி அண்டபொய் ஆகாசப்பொய்யெல்லாம் உங்களுக்குச் சொல்ல முடிகிறது