Followers

Friday, January 11, 2013

மார்க்ஸ் அரவிந்தனின் சந்தேகங்களுக்கு பதில்!

PLZ WRITE A ARTICLE ABOUT THE END OF THE WORLD....

THINGS AND ALSO THEIR TRADITION MIXED VERY MUCH WITH MODERN SCIENCE, MY FRIENDS SAYING THAT QURAN HAVE CAME B4 ONLY 1400 YEARS, BUT THIS MAYAN'S SAID MANY THINGS ABOUT ASTRONOMY BEFORE 3000 YRS ITSELF AND ALSO THEY SAYING THAT SUMARIAN'S 1LY TEACHED THIS THINGS TO MAYAN'S I DONT KNOW IS THESE ARE ALL MYTH'S OR NOT.....SO PLZ GIVE A BRIEF ARTICLE ABOUT THIS, THE BOTTOM LINE IS "B4 3000YRS A ETHNIC GROUP WOULD TELL ABOUT SPACE AND GALAXY MEANS HOW CAN U SAY THIS QURAN CAME B4 14OO YRS IS MORE BETTER THAN THEM.....SO QURAN IS ALSO A HUMAN'S INVENTION..." MY FRIENDS SAYING.....TRY TO PUT ONE ARTICLE ABOUT THIS.....
ALLAH HAFFIZ....................

-MARX ARVIND.


சகோ மார்க்ஸ் அரவிந்த்!

உலக முடிவு நாள் பற்றி மாயன் காலண்டர் சொன்ன அருள் வாக்கு டுபாக்கூர் என்பது நிரூபணமாகி விட்டது. இல்லை என்றால் நீங்களோ நானோ இந்த கணிணி முன்னால் அமர்ந்து பதில் எழுதிக் கொண்டிருக்க முடியாது. :-)

அடுத்து குர்ஆனை சரியாக விளங்காதவர்களுக்கு உங்களுக்கு வந்த சந்தேகங்கள் போன்று வருவது இயற்கையே! மாயன் இனமும் சுமேரிய இனமும் பல அறிவியல் கண்டு பிடிப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளதை நாமும் மறுக்க வில்லை. அதே போல் இந்து மத வேதங்களை நீங்கள் ஆராய ஆரம்பித்தால் பல அறிவியல் உண்மைகள் அதிலும் வெளிப்படுவதை நாம் காண்கிறோம். ஆர்யபட்டர் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே வானியலைப் பற்றி பல உண்மைகளை சொல்லியுள்ளார். கிறித்தவ வேதமான பைபிளிலும் பல அறிவியல் செய்திகள் மறைந்திருப்பதை நானும் மறுக்க வில்லை. இது எவ்வாறு சாத்தியம் என்று சற்று நாம் சிந்திப்போம்.

'இறைவனையும் எங்களுக்கு அருளப்பட்டதையும், தம் இறைவனால் அப்ரஹாம், இஸ்மவேல், இஸ்ஹாக், யாகோபு, மற்றும் அவரது வழித் தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும், மோசேவுக்கும் ஏசுவுக்கு வழங்கப்பட்டதையும் ஏனைய தூதர்களுக்கு தமது இறைவனிடமிருந்து வழங்கப்பட்டதையும் நம்பினோம். அவர்களுக்கிடையே பாகுபாடு காட்ட மாட்டோம். அவர்களுக்கே நாங்கள் கட்டுப்பட்டவர்கள்' என்று கூறுவீராக!
-குர்ஆன் 2:136


இந்த குர்ஆன் வசனமானது உங்களின் பல கேள்விகளுக்கு விளக்கமாக அமைந்துள்ளது. நபி ஆதமிலிருந்து முகமது நபி வரை இந்த உலகில் பல ஆயிரம் இறைத்தூதர்கள் இறைவனால் அனுப்பப்பட்டனர். எந்த சமுதாயமும் தூதரும் இறை வேதமும் அருளப்படாமல் இருந்ததில்லை. நமது தமிழ் நாட்டுக்கும் இறைத் தூதரும் இறை வேதமும் வந்திருக்கிறது. அது திருக்குறளாகவும் இருக்கலாம்.

இப்படி அனுப்பப்படும் தூதர்கள் இறந்தவுடன் அந்த தூதரையே கடவுளாக்கி அந்த வேதங்களிலும் சில மாறுதல்களை அந்த மக்கள் செய்து விடுகின்றனர். இதற்கு உதாரணமாக சமீப காலத்திய பைபிளுக்கும் ஏசுவுக்கும் நிகழ்ந்த மாறுபாடுகளை நாம் சொல்லலாம். வருடா வருடம் புதிய திருத்தங்களுடன் பைபிள் வந்து கொண்டிருக்கிறது. நமது தமிழ் நாட்டிலேயே பல மாறுபட்ட பைபிள்களை பார்க்கிறோம். இவ்வாறுதான் மாயன்களையும் சுமேரியர்களையும் இந்துக்களையும் பார்க்க வேண்டும். சமீப காலத்திய பைபிளுக்கே இந்த கதி என்றால் 5000 மற்றும் அதற்கும் அதிகமான வருடங்களுக்கு முந்தய வேதங்களின் நம்பகத் தன்மையைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. மாற்றங்களை செய்பவர்கள் தங்களுக்கு தோதுவானதை மட்டுமே மாற்றுவர். அறிவியல் சம்பந்தமான பல செய்திகளை மாற்றாமலேயே வைத்து விடுவர். ஏனெனில் அதனால் அந்த புரோகிதர்களுக்கு எந்த நட்டமும் இல்லை.

மனிதர்களில் ஏற்றத் தாழ்வு இல்லை: புரோகிதம் இல்லை: ஏக இறைவனை மட்டுமே வணங்க வேண்டும்: புரோகிதர்களுக்கு படைக்க வேண்டிய அவசியம் இல்லை போன்ற கருத்துகள் எல்லாம் அந்த வேதங்களிலும் இருந்திருக்கிறது. இந்த வசனங்களை தங்கள் வேதங்களில் வைத்திருந்தால் தங்களால் பொருள் ஈட்ட முடியாது என்ற முடிவுக்கு வந்த மார்க்க அறிஞர்கள் அறிவியல் கருத்துகளை மாற்றாமல் புரோகிதம் சம்பந்தமாக வரக் கூடிய கருத்துக்களையும், பல தெய்வ வழிபாட்டையும் தஙகள் வேதங்களில் புகுத்தி விட்டனர். அரிஸ்டாட்டில், கோபர்நிகஸ், ஆர்யபட்டர் போன்ற முந்தய அறிஞர்கள் எந்த அறிவியல் உபகரணங்களும் இல்லாமல் வானவியலைப் பற்றி எல்லாம் ஓரளவு சொல்ல முடிந்ததற்கு காரணமே அன்றைய இறை வேதங்களில் மிஞ்சியிருந்த இறைக் கருத்துகளின் உதவியால்தான் என்றால் மிகையாகாது. இதை குர்ஆனும் உறுதிப்படுத்துகிறது.

'அவர்களில் ஒரு பகுதியினர் இறைவனின் வார்த்தைகளைச் செவியேற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர்'
-குர்ஆன் 2:75

'தம் கைகளால் நூலை எழுதி அதை அற்ப விலைக்கு விற்பதற்காக 'இது இறைவனிடமிருந்து வந்தது' என்று கூறுவோருக்கு கேடுதான்.'
-குர்ஆன் 2:79

'யூதர்களில் சிலர் வேதங்களின் வார்த்தைகளை அதற்குரிய இடங்களிலிருந்து மாற்றுகின்றனர்'
-குர்ஆன் 4:46

'அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டவற்றில் ஒரு பகுதியை விட்டு விட்டனர்'
-குர்ஆன் 5:13

மேற்கண்ட இந்த வசனங்கள் அனைத்துமே இறை வேதங்கள் அந்த மனிதர்களால் மாற்றப்பட்டு விட்டது என்பதை அறிகிறோம். குர்ஆன் மட்டும் மாறவில்லையா என்று நீங்கள் கேட்கலாம். குர்ஆன் இறை வேதம்தான் என்று எவ்வாறு நம்புகிறீர்கள் என்றும் நீங்கள் கேட்கலாம். அதற்கு குர்ஆனே பதிலளிக்கிறது.

அவர்கள் இந்த குர்ஆனை கவனமாக சிந்திக்க வேண்டாமா, இது அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். அல்குர்ஆன் 4:82

திருக்குர்ஆனை நபிகள் நாயகம் அவர்கள் இறைவனின் செய்திகள் என்று அறிமுகம் செய்தார்கள். இறைவனின் செய்திகள் என்றால் அது மனிதர்களின் செய்திகளைப் போல் அல்லாமல் அனைத்து வகையிலும் அனைத்தையும் மிஞ்சும் வகையில் அமைந்திருக்க வேண்டும்.

திருக்குர்ஆன் இப்படி அமைந்துள்ளதா என்றால் அரபுமொழி அறிந்த முஸ்லிம் அல்லாதவர் திருக்குர்ஆனை ஆய்வு செய்தால் கூட மனிதனால் எட்ட முடியாத உயர்ந்த தரத்தில் அது அமைந்திருப்பதை அறிந்து கொள்வர். அரபு மொழியின் மிக உயர்ந்த இலக்கியமாக திருக்குர்ஆன் 14 நூற்றாண்டுகளாக மதிக்கப்பட்டு வருகிறது.

மாபெரும் இலக்கியங்களில் பொய்களும், மிகையான வர்ணனைகளும் அவசியம் இடம் பெற்றிருக்கும். ஆனால் திருக்குர்ஆனில் பொய் இல்லை! முரண்பாடு இல்லை! ஆபாசம் இல்லை! மிகையான வர்ணனைகள் இல்லை! கற்பனைக் கலவை இல்லை! நழுவுதலும் மழுப்புதலும் இல்லை! மன்னர்களையும், வள்ளல்களையும் மிகைப்படுத்திப் புகழுதல் இல்லை!

எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும், (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள். அல்குர்ஆன் 7:157

அரபு மொழிப்பண்டிதராக இல்லாத, முந்தைய இலக்கியங்களை வாசிக்கவும் தெரியாத முஹம்மது நபி அவர்கள் சொந்தமாகக் கற்பனை செய்தால் அது எந்தத் தரத்தில் இருக்குமோ அந்தத் தரத்தில் திருக்குர்ஆன் இல்லை. அரபு மொழிப் பண்டிதர் கற்பனை செய்தால் எந்தத் தரத்தில் இருக்குமோ அந்தத் தரத்திலும் இல்லை. மாறாக பல நூறு மடங்கு உயர்ந்த தரத்தில் இருக்கிறது. எனவே இது இறைச் செய்தியாகத் தான் இருக்க முடியும்.

நபிகள் நாயகம் அவர்கள் கி.பி. 570-ல் பிறந்தார்கள்.

இந்தக் கால கட்டத்தில் உலக மக்கள் அறிவியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தார்கள். உலகம் உருண்டை என்ற சாதாரண அறிவு கூட அன்றைய மக்களுக்கு இருக்கவில்லை.

இத்தகைய காலத்தில் வாழ்ந்தவர் எவ்வளவு தான் பெரிய மேதையாக இருந்தாலும், அவரது காலத்து அறிவைக் கடந்து எதையும் கூறவே இயலாது. சுமார் நூறு வருடம் கடந்த பின் அவரது நூலை வாசித்தால் அதில் பல தவறுகள் இருப்பதை உலகம் கண்டு கொள்ளும்.

இதற்கு காரணம் நூறு வருடங்களுக்குப் பின் என்ன நடக்கும்: என்னென்ன கண்டு பிடிக்கப்படும் என்ற விபரங்களை நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவரால் ஊகம் செய்ய இயலாது.

பல அறிஞர்கள் கூட்டாகச் சேர்ந்து உருவாக்கிய நூலாக இருந்தால் கூட நூறு வருடங்கள் கழித்துப் பார்க்கும் போது அதில் பல தவறுகள் இருப்பதைக் காண முடியும். அந்த நூலே காலத்திற்கு ஒவ்வாத நூலாகி விடும்.

ஆனால் எழுதவும், படிக்கவும் தெரியாத, மிகவும் பின்தங்கிய சமுதாயத்தில் வாழ்ந்த ஒருவர் எதை இறை வேதம் என்று அறிமுகம் செய்தாரோ அந்த வேதத்தில் எந்த ஒன்றையும் தவறானது என்று இன்றைக்கும் நிரூபிக்க முடியவில்லை.

அது மட்டுமின்றி சென்ற நூற்றாண்டுக்கு முன்னால் வரை கண்டுபிடிக்கப்படாத, தற்போது கண்டு பிடிக்கப்பட்ட பல விசயங்களை குர்ஆன் அன்றே சொல்லியிருக்கிறது.

இன்று வாழும் பல்வேறு துறைகளிலும் தேர்ந்த அறிவுடைய ஒருவர் பேசுவதை விடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுவதையும், நபிகள் நாயகத்தின் காலச் சூழ்நிலையையும் ஒரு சேர சிந்திக்கும் யாரும் இது முஹம்மது நபி அவர்களின் சொந்த வார்த்தையாக இருக்க முடியாது: முக்காலமும் உணர்ந்த இறைவனின் வார்த்தையாகத் தான் இருக்க முடியும் என்ற முடிவுக்குத் தான் வந்தாக வேண்டும்.

அறிவியல், நவீன கண்டுபிடிப்புகள் மட்டுமின்றி குர்ஆன் கூறுகின்ற அரசியல் சட்டங்கள், குற்றவியல் மற்றும் சிவில் சட்டங்களை ஒருவர் ஆய்வு செய்தால் இன்று உலகமெங்கும் உள்ள எல்லாச் சட்டங்களை விடவும் அது சிறந்து விளங்குவதையும், மனித குலத்துக்கு அதிகப் பயன் தரக்கூடிய வகையில் அமைந்திருப்பதையும் அறிந்து கொள்வார். முஸ்லிமல்லாதவர்கள் கூட குர்ஆன் கூறும் சட்டங்களை அமுல்படுத்தக் கோரும் அளவுக்கு குர்ஆன் கூறும் சட்டங்கள் அமைந்துள்ளன.

ஏராளமான சட்டங்களையும், மரபுகளையும், முன் அனுபவங்களையும் ஆய்வு செய்து பல்வேறு சட்டமேதைகள் உருவாக்கிய சட்டங்களே ஆண்டு தோறும் திருத்தப்பட்டு வரும் நிலையில் இறைச் சட்டங்கள் என முஹம்மது நபி அவர்கள் அறிமுகப்படுத்திய சட்டங்கள் பலராலும் வரவேற்கப்படுவது முஹம்மது நபி அவர்களின் சொந்தக் கூற்றாக இருக்க முடியாது என்பதற்கு மற்றொரு சான்றாக உள்ளது.

கடைசியாக சுவாமி விவேகானந்தர் சொன்ன ஒரு கருத்தை சொல்லி இந்த பதிவை முடிக்கிறேன். மேலே எழுதியவற்றில் ஏதும் சந்தேகம் இருந்தால் பின்னூடடத்தில் கேளுங்கள். இறைவன் நாடினால் பதிலளிக்கிறேன்.

ஒரு மதத்திற்கு மத நம்பிக்கைக்கு அறிவியலின் உண்மையின் முன் நிற்கும் சக்தி இல்லையென்றால் அது அழிந்து போவதே நல்லது. எவ்வளவு வேகமாக அது அழிந்து போகிறதோ அவ்வளவுக்கு மானுடத்துக்கு நல்லது. ஏனென்றால் அத்தகைய மதநம்பிக்கை எப்போதுமே அறிவற்ற மூடநம்பிக்கையாகவே இருந்திருக்கிறது. – சுவாமி விவேகானந்தர்

14 comments:

UNMAIKAL said...

இன்றைய விஞ்ஞான கண்டுபிடிப்புகள் குரானில் 1400 வருடங்களுக்கு முன்பே அழுத்தமாக கூறப்பட்டிருக்கிறது.

Miracles of the Quran

அல் குர்'ஆனின் அற்புதங்கள்.

இருபதாம் நூற்றாண்டில் தொழில் நுட்ப விருத்தியால் கண்டறியப்பட்ட எத்தனையோ விஞ்ஞான உண்மைகளை அல் குரானில் 1400 வருடங்களுக்கு முன்னரே அழுத்தமாக சொல்லியிருப்பது அந்த அற்புதங்களில் ஒன்று எனலாம்.




சுட்டியை சொடுக்கி >>>> அல் குர்'ஆனின் அற்புதங்கள். அன்றே திரு குரானில் கூறப்பட்டிருக்கும் இன்றைய‌ விஞ்ஞான கண்டுபிடிப்புகள். !!!
<<<<<< விடியோ காணவும்

.
.

UNMAIKAL said...

தர்மத்தின் முக்கியத்துவம் பற்றியும், இறைவனை தியானிப்பது பற்றியும் இறைத்தூதர் சொல்லும் பல்வேறு அறிவிப்புகளில்

இரண்டை மட்டும் தலைப்பு தொடர்பாக நாம் பார்ப்போம், வாருங்கள் சகோஸ்...!

முதல் ஹதீஸ்

"மனிதனுடைய உடலில் 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) உள்ளன.

(அவை சரியாக இயங்குவதால், அதற்கு நன்றி செலுத்தும் பொருட்டு...) ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மூட்டுக்காகவும் தர்மம் செய்ய வேண்டும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உடனே நபித்தோழர்கள், 'அல்லாஹ்வின் தூதரே! இது யாருக்குச் சாத்தியமாகும்?' என்று கேட்டனர்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், "பள்ளிவாசலில் எச்சிலைக் கண்டால் அதை மூடி விடுவதும்,
பாதையில் கிடக்கும் (கல், முள் போன்ற) பொருளை அகற்றுவதும் (தர்மம்) ஆகும்.

இது உனக்கு முடியவில்லை என்றால், லுஹா தொழுகையின் இரண்டு ரக்அத்துக்கள் உனக்குப் போதுமானது" என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்: அஹ்மத், ஹதீஸ் எண் - 21959

இரண்டாம் ஹதீஸ்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

"ஒரு விஷயம் (சொல்கிறேன் கேள்:) ஆதமின் மக்களில் ஒவ்வொரு மனிதரும் முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளுடன் படைக்கப் பட்டுள்ளனர்.

எனவே, யார் அந்த முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளின் எண்ணிக்கை அளவுக்கு அல்லாஹ்வை (தக்பீர் கூறி) பெருமைபடுத்தி, அல்லாஹ்வை (தஹ்மீத் கூறி) புகழ்ந்து, 'அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை' என்று (தவ்ஹீத்) கூறி, அல்லாஹ்வை (தஸ்பீஹ் கூறி) துதித்து,

அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு (இஸ்திக்ஃபார்) கோரி, மக்களின் நடைபாதையில் கிடந்த ஒரு கல்லையோ, முள்ளையோ, எலும்பையோ அகற்றி, (மக்களிடம்) நல்லதை ஏவி-தீயதை தடுத்தாரோ...

அவர் அன்றைய தினத்தில் தம்மை நரக நெருப்பிலிருந்து அப்புறப்படுத்திய நிலையிலேயே நடமாடுகிறார்".

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல் - முஸ்லிம், ஹதீஸ் எண் - 1833

இந்த இரு அறிவிப்பிலும்... சொல்லப்பட்டு இருக்கும்... தர்மம், இறைசிந்தனை, தியானம், தொழுகை பற்றிய கருத்து, தமது உடலை சீரும் சிறப்புமாக இயங்க வைக்கும் இறைவனுக்கு நன்றிக்கடன் பட்டுள்ள முஸ்லிம்கள் தம் வாழ்வில் பின்பற்றுவதற்கு மிகவும் முக்கியமானது.

அதேநேரம்... இது ஒரு புறமிருக்க, இதே அறிவிப்புகளில், இன்னொரு மிக முக்கிய அம்சம் குறித்து மட்டும் இப்பதிவில் கவனிப்போம்..!

அது....

//மனிதனுடைய உடலில் 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) உள்ளன.//

//ஆதமின் மக்களில் ஒவ்வொரு மனிதரும் முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளுடன் படைக்கப்பட்டுள்ளனர்.//

இதெப்படி சாத்தியம்..?

ஏழாம் நூற்றாண்டின் ஓர் எழுதப்படிக்கத் தெரியாத மனிதர்,

அதுவும், அக்காலத்தில் மருத்துவ - அறிவியல் வளர்ச்சி அடைந்திராத ஒரு சூழலில் வாழ்ந்த ஒரு மனிதர்,

போகிற போக்கில் இப்படி ஒரு மருத்துவ அறிவியல் உண்மையை,
இக்காலத்திய மருத்துவ பட்டப்படிப்பு படித்தவர் கூறுவது போல எப்படி இவ்வளவு துல்லியமாக கூற முடிகிறது..?

சுட்டியை சொடுக்கி >>> 360 Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு ) <<<< படிக்கவும்.

.
.

UNMAIKAL said...

.
.

சுட்டியை சொடுக்கி >>> தன்னைத்தானே நிரூபிக்கும் குரான் <<< விடியோ காணவும்

.
.

UNMAIKAL said...

.
.
.

சுட்டியை சொடுக்கி >>>> குரான் கூறும் அறிவியல் 1 <<<<< விடியோ காணவும்

சுட்டியை சொடுக்கி
>>>> குரான் கூறும் அறிவியல் 2 <<<< விடியோ காணவும்


சுட்டியை சொடுக்கி
>>>> குரான் கூறும் அறிவியல் 3 <<<< விடியோ காணவும்



சுட்டியை சொடுக்கி>>>> குரான் கூறும் அறிவியல் 4. <<<< விடியோ காணவும்

.
.

faizeejamali said...

Super article Sago assalamualaikum
Quraanil 365 murai youm iyyam endru natkalai kurikkum patham idam petru iruppathaagavum avvare usboo ( varathai kurikkum patham ) 7 muraiyum madhathai kurikkum patham 12 muraiyum idam petru iruppathaagavum enakku oru msg vandhadhu adhu unmaya Sago

UNMAIKAL said...

// faizeejamali said...
Super article Sago assalamualaikum
Quraanil 365 murai youm iyyam endru natkalai kurikkum patham idam petru iruppathaagavum avvare usboo ( varathai kurikkum patham ) 7 muraiyum madhathai kurikkum patham 12 muraiyum idam petru iruppathaagavum enakku oru msg vandhadhu adhu unmaya Sago //

Dear Faizee Jamalee,

YES

CLICK >>> Secrets of the wording of the Quran <<< SEE VIDEO.

Unknown said...

//அரபு மொழிப்பண்டிதராக இல்லாத, முந்தைய இலக்கியங்களை வாசிக்கவும் தெரியாத முஹம்மது நபி அவர்கள் சொந்தமாகக் கற்பனை செய்தால் அது எந்தத் தரத்தில் இருக்குமோ அந்தத் தரத்தில் திருக்குர்ஆன் இல்லை. அரபு மொழிப் பண்டிதர் கற்பனை செய்தால் எந்தத் தரத்தில் இருக்குமோ அந்தத் தரத்திலும் இல்லை. மாறாக பல நூறு மடங்கு உயர்ந்த தரத்தில் இருக்கிறது. எனவே இது இறைச் செய்தியாகத் தான் இருக்க முடியும்.
//

முகம்மதுவுக்கு யாராவது டப்பிங் வாய்ஸ் குடுத்திருக்கப்போறாங்க.

ஒரு நியூஸ். நான் இன்னும் 2 வாரத்துக்கு ஆன்லைன்ல வர முடியாது. அதுக்காக நான் ஓடிப்போயிட்டேன்னு நினைக்க வேண்டாம்.

suvanappiriyan said...

சகோ உண்மைகள்!

//சுட்டியை சொடுக்கி >>>> அல் குர்'ஆனின் அற்புதங்கள். அன்றே திரு குரானில் கூறப்பட்டிருக்கும் இன்றைய‌ விஞ்ஞான கண்டுபிடிப்புகள். !!!
<<<<<< விடியோ காணவும்//

அருமையான சுட்டிகளைக் கொடுத்து பதிவை மெருகூட்டியமைக்கு நன்றி!

suvanappiriyan said...

திரு ஜெய்சங்கர்!

//ஒரு நியூஸ். நான் இன்னும் 2 வாரத்துக்கு ஆன்லைன்ல வர முடியாது. அதுக்காக நான் ஓடிப்போயிட்டேன்னு நினைக்க வேண்டாம்.//

ஹா..ஹா.. வேலை முடிந்ததும் அவசியம் வரவும். :-)

suvanappiriyan said...

சகோ ஃபைஜி ஜமாலி!

//Super article Sago assalamualaikum
Quraanil 365 murai youm iyyam endru natkalai kurikkum patham idam petru iruppathaagavum avvare usboo ( varathai kurikkum patham ) 7 muraiyum madhathai kurikkum patham 12 muraiyum idam petru iruppathaagavum enakku oru msg vandhadhu adhu unmaya Sago//

நம்பர்களை வைத்து குர்ஆனின் மகிமையை நாம் எடை போட முடியாது. அது போன்று நபிகளோ அல்லது அவர்களின் தோழர்களோ வழி காட்டவில்லை. சில எண்கள் ஒத்து வருவது உண்மைதான். சகோ உண்மைகளும் ஒரு செய்தியை தந்திருக்கிறார்கள்.

ஆனால் அதுவே இந்த குர்ஆனின் மகிமைக்கு காரணமாக்கக் கூடாது. வருமுன் உரைத்தது. இன்றும் எந்த அறிவியல் கருத்துக்கும் முரண்படாதது. உலக மக்கள் அனைவரும் பின் பற்றத்தக்க வகையில் இதன் சட்டங்கள் அமைந்துள்ளது பாமரருக்கும் புரியும் வகையில் உயர்தர நடை போன்றவற்றை வைத்தே இது இறை வேதம்தான் என்று வாதிடலாம்.

Anonymous said...

தன்னுடைய மதம் (மார்க்கம் ) மட்டுமே சரியானது, மற்றவை தவறானது என்று ஒருவன் நினைப்பனானால், அவன் தான் முழுக்க முழுக்க தவறானவன் - சுவாமி விவேகானந்தர்

Ivar Yaar? said...

அருமையான பதிவு,
நபிகளை பற்றி என்னமோ நினைத்திருந்தேன், அது தவறு என்று புரிந்து விட்டது. அந்த 360 எலும்பு மூட்டுகள் வசனம் உண்மையில் வியக்கவைக்கிறது...

//போகிற போக்கில் இப்படி ஒரு மருத்துவ அறிவியல் உண்மையை, இக்காலத்திய மருத்துவ பட்டப்படிப்பு படித்தவர் கூறுவது போல எப்படி இவ்வளவு துல்லியமாக கூற முடிகிறது..?//

ஒரு உண்மை. நபிகள் அவர்கள் கூறுவதற்கு 850 வருடங்களுக்கு முன்பிருந்தே மத்திய கிழக்கு ஆசிய மருத்தவத்திலும், புத்த மதத்திலும், சீன பிரதேசத்திலும் இந்த செய்தி பரவலாக நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது. முகமது (அல்லாவின் சாந்தி அவர்மேல் நிலைக்கட்டும்) அவர்கள் புதிதாக இந்த மருத்துவ கண்டுபிடிப்பை நிகழ்த்தவில்லை... :-(

Anonymous said...

//முகமது (அல்லாவின் சாந்தி அவர்மேல் நிலைக்கட்டும்) அவர்கள் புதிதாக இந்த மருத்துவ கண்டுபிடிப்பை நிகழ்த்தவில்லை... :-(//
குரானில் சொல்லப்பட்டு இருக்கும் எந்த விசயமும் முகமது புதியதாக சொல்லிய முத்துக்கள் அல்ல, ஏற்கனவே சொல்லப்பட்ட விஷயங்கள் தான் அதில் இருப்பவை,

Ivar Yaar? said...

//குரானில் சொல்லப்பட்டு இருக்கும் எந்த விசயமும் முகமது புதியதாக சொல்லிய முத்துக்கள் அல்ல, ஏற்கனவே சொல்லப்பட்ட விஷயங்கள் தான் அதில் இருப்பவை//

ஒத்து கொண்டால் சரி. முகமது ஏதோ புதிதாக, முதன்முறையாக 360 எலும்பு மூட்டுகள் தான் உடலில் உள்ளன என்று கூறியது போல மேலே ஒருவர் கம்மென்ட் செய்திருக்கிறார். துல்லியமாக அந்த காலத்திலேயே இந்த மருத்துவ உண்மையை முகமது கூறியதால் குரான் இறைவனால் அருளப்பட்ட வேதம் என்பது தெளிவாகிறது என்று பேசியும் இருப்பது மேலே படித்தால் தெரியும். அதனால் தான் ஏற்கனவே காலங்கலமாக விளங்கிய செய்தியை தான் அவர் கூறினார், புதிதாக அவர் இந்த மருத்துவ கண்டுபிடிப்பை நிகழ்த்தவில்லை என்று கூறியிருந்தேன். இதன் மூலம் அந்த 360 மூட்டுகள் பற்றிய இஸ்லாமிய குறிப்பை இறைவெளிப்பாடு என்று எடுத்துகொள்ள முடியாது என்பது நான் கூறவந்த செய்தியாகும்.

இன்னொரு விஷயம், முகமது அவர்கள் கூறிய அத்தனை விஷயங்களும் ஏற்கனவே விளங்கியவை அல்ல. அவர் சிலவற்றை புதிதாக கூறியும் இருக்கிறார். உதாரணத்திற்கு - காபாவை ஆபிரகாம் (தங்கள் இப்ராஹிம் நபி) கட்டினார், இயேசு (தங்கள் ஈசா நபி) சிலுவையில் அறையப்படவில்லை, ஆபிரகாம் இசாக்குக்கு பதிலாக இஸ்மவேலை (தங்கள் இஸ்மாயில் நபி) பலியிட சென்றார் போன்றவை. புதிதாக சில விலை உயர்ந்த முத்துக்களும் முகமது (அல்லாவின் சாந்தி அவர்மேல் நிலைக்கட்டும்) அவர்களால் உதிர்க்கப்பட்டு உள்ளன. நன்றி :-)