Followers

Saturday, July 26, 2014

பெற்ற தாயை விட மேலானவன் இறைவன் - திருவாசகம்

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ, பாவியேனுடைய
ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, உலப்பு இலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!

-திருவாசகம்



பொருள்:குழந்தைக்கு வேண்டிய பாலை எப்போது தர வேண்டும் என்று நினைத்து நேரமறிந்து தருபவள் தாய். அந்த தாயை விட என் மேல் அன்பு செலுத்தி, நீ என்னுடைய உடலை உருக்கி, எனக்குள் இருக்கும் ஒளியை பெருக்கி, அழிவு இல்லாத தேனையொத்த அறிவினைத் தந்து , வெளியில் இருந்த செல்வமான சிவ பெருமானே,

விளக்கம்:இந்த பாடலில் நம்மை படைத்த இறைவன் தாயை விட ஒரு படி மேல் என்று பாடப்படுகிறது. ஒரு தாய் தனது குழந்தைக்கு பசித்தால் தாய்ப்பாலை புகட்ட முடியும். சிறிது பெரியவனானாலும் அவனுக்கு உணவு வழங்க முடியும். ஆனால் அறிவை வழங்க முடியாது. எல்லோராலும் மதிக்கப்படுகின்ற அந்த வற்றாத அறிவை எனக்கு தந்த இறைவா! என்னை இந்த உலகில் எல்லா செல்வங்களையும் குறைவின்றி தந்து கௌரவமாக வாழச் செய்திருக்கிறாயே! உன்னை நான் வாழ்த்துகிறேன்! வணங்குகிறேன்! என்கிறார் மணி வாசகர்.

தமிழ் மொழியில் எண்ணிலடங்கா இறை பக்தி பாடல்கள் இதுபோல் மலிந்து கிடக்கின்றன. ஆனால் அதனை எல்லாம் மறைத்து விட்டு எதற்கும் உதவாத வருணாசிரமத்தை தூக்கிப் பிடிக்கிற பார்பனர்களின் ராமாயணம் வலிந்து முன்னிறுத்தப்பட்டு இன்று இந்து வேதங்களின் தரத்தில் பார்க்கப்படுகிறது. வட நாட்டை ஆண்ட ஒரு அரசனின் மகனின் வாழ்வில் நடந்த ஒரு சில சம்பவங்களை மேலும் கற்பனையில் மெருகூட்டி ஒரு அவதார புருஷனாக காட்டப்பட்டு அந்த ராமனின் பெயரால் பல ஆயிரம் உயிர்களையும் காவு கொண்டு விட்டது இந்துத்வா. இது இனி மேலும் தொடராமல் இருக்க வட மொழி நூல்களை தூரமாக்கி திருவாசகம், திருக்குறள், திருமந்திரம் போன்ற தமிழ் நூல்கள் இந்து மக்களை சென்று அடைய வேண்டும். இந்து மதத்தின் மறுமலர்ச்சியை உண்மையிலேயே விரும்பும் இந்து இயக்கங்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். இதன் மூலமாக மட்டுமே இந்து மதத்தை அழியாமல் காக்க முடியும்.

1 comment:

tamilan said...

இராமனா கடவுள்?? *மனைவியை மீட்க குரங்கிடம் மன்றாடிய கடவுள் .

கடவுள் இராமனின் தந்தை அரசன் தசரதனுக்கு இந்த இராமாயணத்தின்படி கடவுள் இராமன் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை தன்னுடைய மனைவி சீதையைக் காப்பாற்றுவதிலேயே செலவு செய்ய வேண்டியதாயிற்று.

தேவி சீதையோ இராவணன் என்ற வீரனிடம் சிக்கிக் கொண்டிருந்தாள்.

மனைவி மாற்றானிடம் மாட்டிக் கொண்டிருக்கும் போது கூட கடவுள் இராமன் எந்தக் குறையுமின்றி வாழ்க்கையை சொட்டு விடாமல் சுவைத்து கொண்டிருந்தான்.

கடவுள் இராமன் நாடு வீட்டேகி காடு புகுகின்றான் தன் மனைவியோடு.

சுக்ரீவன் மான் வேடம் பூண்டு தோற்றந் தந்து கடவுள் இராமனை ஏமாற்றி விடுகின்றான்.

கடவுள் இராமனால் சாதாரண சுக்கிரீவன் பூண்டிருந்த மாறுவேடத்தைக் கூட கண்டு கொள்ள இயலவில்லை.

இராவணன் என்ற தீயவனிடமிருந்து தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப்பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கையேந்தி மனைவிப் பிச்சை கேட்டான்.

தெய்வீக சீதையை தெய்வீக ராமன் அனுமானிடம் 34 பாடல்களில் அசிங்கம் அசிங்மாக அடையாளம் சொல்கிறான்.

வாராழி கலசக் கொங்கை
வஞ்சிபோல் மருங்குவாள் தன்
தாராழிக் கலைசார் அல்குல்
தடங்கடற்கு உவமை தக்கோய்
பாராழி பிடரில்தங்கும், பாந்தழும்
பணி வென் றோங்கும்
ஓராளித் தேரும் கண்ட உனக்கு
நான் உரைப்ப தென்ன ?

அருமையான தமிழ் ஆனால் அசிங்கத்தின் உச்சம்.

ராமபிரான் சொல்கிறான் அனுமானிடம்." என் மனைவி சீதையின் கொங்கைகள் கலசம் போன்றவை. அவளுடைய அல்குல் (பெண்குறி) தடங் கடற் போன்றது." என்கின்றான்.

குரங்குக் கடவுள் ஹனுமான் மனிதக் கடவுள் இராமனின் மனைவியை மீட்டுத்தரும் மகத்தான சாதனையைச் சாதித்திட இசைகின்றான்.


கடலுக்குக் குறுக்கே பாலங்கட்டி கடலைக் கடந்து தனது சொந்த மனைவியை மீட்க கடவுள் இராமணனுக்கு 12 ஆண்டுகள் ஆயின.

ஆனால் இந்தக் கடவுளின் மனைவியை கடத்தி செல்ல தீயவன் இராவணனுக்கு ஒரே நாள் தான் தேவைப்பட்டது.


சொல்லுங்கள் இதில் யார் ஆற்றல் மிக்கவன்? கடவுள் இராமனா? தீயவன் இராவணனா?

ஹனுமான் மலைகளைத் தூக்கிக் கொண்டு பறந்து சென்றிடும் ஆற்றல் நிறைந்தவன் எனப் பேசப்படுகின்றது.


இது உண்மையானால் அவன் இராமனையே தூக்கிக் கொண்டு லங்காபுரத்திற்குப் பறந்திருக்கலாம்.

இதன் மூலம் அவர்கள் சீதையை வெகு சீக்கிரமாகவே மீட்டிருக்கலாம்.

இந்த 12 ஆண்டுகளாக இராவணன் சீதையை என்னென்ன செய்தான் என்பதை யாரறிவார்கள்.


ஒரு தீயவன் தீயனவற்றைத் தான் செய்திருப்பான்.


சொடுக்கி படியுங்கள்

>>>>
மனைவியை மீட்க குரங்கிடம் மன்றாடிய இராமனா கடவுள்?? *
<<<<<<


ராமன் பிறந்தது தசரதனுக்கா? குதிரைக்கா? பார்ப்பன குருக்களுக்கா?

ராமனின் தந்தை தசரதன் நடத்திய அசுவமேத யாகம்.

அறுபதாயிரத்து மூன்று மனைவிமார்கள் தசரதனுக்கு இருந்தும் குழந்தை மட்டும் இல்லை. அதற்காக அசுவமேத யாகம் ஒன்றை நடத்தினான் தசரதன். இந்த யாகத்தை நடத்துவதற்காக கலைக்கோட்டு (ருசிய சிருங்கர்) முனிவர் அழைத்து வரப்பட்டார்.


ஹோதா, அத்வர்யு முதலிய இருத்துவிக்குகள் இராச பாரியைகளைப் (தசரதனின் மனைவிகளை) புணர்ந்தார்கள்.

இதன் காரணமாக தசரதனின் ராஜபத்தினிகள் கர்ப்பம் தரித்தார்கள் என்று வால்மீகி தெளிவாகவே கூறியுள்ளார்.

ராமன் பிறந்தது தசரதனுக்கா? குதிரைக்கா? பார்ப்பன குருக்களுக்கா?

சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

>>>>
குதிரையுடன் உடலுறவா? அசுவமேதயாகத்தின் ஆபாசங்கள் கொடூரங்கள்.
<<<<<

.