Followers

Monday, July 21, 2014

டெல்லி இமாம் பதவிக்கு சாதி பார்க்கப்படுகிறதே!

டெல்லி இமாம் பதவிக்கு சாதி பார்க்கப்படுகிறதே!

//“Therefore, Emperor Shahjahan wrote to the Shah of Bukhara to send for the exalted post of the Imamat of Jama Masjid a man noble by birth, descendant of the Holy Prophet from both of his parents, with high learning and high qualities, i.e., inwardly and outwardly an outstanding figure of the time.”//

அண்ணன் ‘அரவிந்தன் நீலகண்டனின் அல்லக்கை’ தம்பி Maran அவர்களே,
உங்களுக்கு எதுக்கு இந்த பதில் சொல்லும் வெட்டி பொல்லாப்பு அப்பு?
ஷாஜஹான் ஒரு கூமுட்டை.

அந்த ஆளு ஓழுங்கான முஸ்லிமே இல்லை.

அவன் சொன்னது செஞ்சது பெரும்பாலும் ஏறுக்கு மாறான தவறுகள்.
அவன் ஒன்னும் இஸ்லாமின் அத்தாரிட்டி இல்லை.

அவனது சட்டங்கள் ஒன்னும் இஸ்லாமிய சட்டங்கள் ஆகாது. அறியவும்.

அவனுக்கு வால் பிடிக்க வேண்டாம்.

மேலும், நீங்க தந்த சுட்டியில், அறிவும் படிப்பும் உள்ள அறிஞர் வேண்டும்ன்னு சாஜகான் கேட்கிறான். இது சரி. ஆனால், நபியின் வாரிசாக இருந்தால் நல்லதுன்னும் கேட்கிறான். இது இஸ்லாத்தில் தேவை அற்றது.
நபியின் வாரிசாக ஒரு பாமர படிக்காத முட்டாப்பயல் எவனாச்சும் அங்கெ இருந்து இருந்தால் அவன் டெல்லிக்கு அனுப்பப்பட்டு இருந்திருக்கவே மாட்டான். சாஜகான் அவனை திருப்ப அனுப்பி இருந்திருப்பான். ஆக, இங்கே இமாம் ஆவுறதுக்கு முக்கியம் கல்வி. வாரிசு அல்ல.

இன்றைய இமாமுக்கு வாரிசு இல்லாமல் போனாலோ அல்லது புகாரியின் மகன் படிக்காத முட்டாளோவோ இருந்தாலோ அல்லது கேடு கேட்ட குடிகாரனாக இருந்தாலோ, மக்கள் விரட்டி அடித்து விடுவார்கள் என்பதையும் அறியவும். இமாமாக முடியாது என்பதையும் அறியவும்.

மேலும், டெல்லி ஜும்மா மஸ்ஜிதில் இமாமின் வாரிசுதான் இமாம் ஆகலாம் என்பதும் இஸ்லாத்துக்கு எதிரானது. ஷரியத் கோர்ட்டில் யாராவது வழக்கு போட்டால் புகாரியின் வேட்டி கிழிஞ்சிடும்.

அடுத்து,

முக்கியமாக, ஆனானப்பட்ட மக்காவிலுள்ள மஸ்ஜித்திலும், நபியே கைப்பட கட்டிய மதினாவில் உள்ள மஸ்ஜித்திலும் நபியின் வாரிசுகளுக்கு இமாமாக ஆகமுடியாமல் பெப்பே காட்டப்பட்டுவிட்டது. அப்படி வாரிசுகளுக்கு பெப்பே காட்ட சொன்னதே நபி தான். இதுதான் இஸ்லாம். நபியின் வாரிசு என்று சொல்லிக்கொண்டு எவனும் பந்தா விட முடியாது இஸ்லாத்தில். அறியவும்.
மீண்டும் சொல்றேன். ஷாஜகான் ஒரு கூமுட்டை. அவன் செஞ்சது ஏகப்பட்டது இஸ்லாத்தில் இல்லாதது. சொல்லாதது. எதிரானது.

அப்புறம்,

மக்கா பத்தியும் சப்பை கட்டி இருக்கார் உங்க பாஸ் அர நீல கண்டன்.
அதுக்கு உங்களின் அர வேக்காட்டு ஆதாரத்த காணோம் தந்தால் அதில் தொடரலாம்.

குறிப்பு >>>
முந்திய கமெண்டில் கொஞ்சம் காணோம். வினவு காரவுக வெட்டி விட்டாக. இதில் என்ன எல்லாம் கொத்துகறி போட போறாகளோ. கமென்ட் முழுசா வருமான்னு தெரியலை.

-நன்றி செம்மல்

No comments: