Followers

Thursday, July 31, 2014

சாதித் திமிரால் நிகழ்ந்த நிகழ்வு - காது போச்சு.....



பாட்னா: ராமானுஜ் என்ற முன்னால் இராணுவ வீரரின் முறுக்கு மீசையைக் கண்டு அதிருப்தி கொண்டனர் யாதவ சாதியை சார்ந்த நங்கு யாதவ், பினா யாதவ். மீசையை எடுக்கும்படி வற்புறுத்தினர். ஆதிக்க சாதியினர் மீசையை எடுக்கும்படி கூறியும் அவர் எடுக்காததால் பலமாக தாக்கி அவருடைய காதை அறுத்திருக்கும் செய்தியை ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைகளில் காண முடிந்தது. இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது.

உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவன் முறுக்கு மீசை வைக்கக் கூடாதா? காலில் செருப்பு அணிந்து ஆதிக்க சாதியினர் கிராமங்களில் நடக்கக் கூடாதா? தோளில் துண்டு போடக் கூடாதா? அட மதி கெட்டவர்களே! உன் அப்பன் வீட்டு பணத்திலேயா இந்த சுகத்தை பெற்றான்? அல்லது நீ பெரிய அரசு அதிகாரியாக இருந்து லஞ்சத்தில் கோடிகளாக சேர்த்து வைத்துள்ளாயே அந்த பணத்திலா மிடுக்காக நடக்கிறான்?

'எனது காதை அறுத்தனர். எனது இரு சக்கர வாகனத்தையும் எடுத்துச் சென்றனர்' என்று பரிதாபமாக போலீஸில் வழக்கு பதிவு செய்துள்ளார். காதை அறுத்தவர்களோ யாதவர்கள். முலாயம் சிங் யாதவ் தனது மகனுக்கு இதனை எப்படி கையாள்வது என்பதை அழகாக சொல்லிக் கொடுப்பார்.

தனது வியர்வையை இந்த மண்ணுக்கு உரமாக்கி நமக்கு சோறு தரும் இந்த உழைக்கும் வர்க்கத்தை இப்படி கேவலப்படுத்தலாமா? இப்படியே போனால் இந்த நாடு உருப்படுமா? மதி கெட்டவர்களே திருந்துங்கள்! இல்லை என்றால் ஒரு நாள் அதே மக்களால் திருத்தப்படுவீர்கள்.


Ramanuj Verma told the police that brothers Nanku Yadav and Bina Yadav stopped him, when he was on way to his native Kauriya village in Patna district on Monday evening. The duo allegedly told him he had no business to sport a twirled moustache.

A fight ensued. The brothers called a few of their friends and all joined in assaulting Verma, according to his complaint.

"During the fight, Bina cut my ear. They then took my bike and other belongings and fled," the ex-solder told the police.

Bihta police station SHO Sanjit Kumar Sinha, quoting Verma's complaint, said a sharp weapon was used in slicing off his left ear.

தகவலுக்கு நன்றி

ஹிந்துஸ்தான் டைம்ஸ்
30-07-2014

2 comments:

ஆனந்த் சாகர் said...

//சாதித் திமிரால் நிகழ்ந்த நிகழ்வு - காது போச்சு.....//

இஸ்லாமிய மதத்திமிரால் முஸ்லிம்கள் குண்டுவைத்து அப்பாவி மக்களை கொள்கிறார்களே. அதை முதலில் நிறுத்த சொல்லிவிட்டு பிறகு ஜாதி சண்டை பற்றி பதிவிடவும்.

நீங்கள் என்னதான் ஜாதி சண்டையை வைத்து ஊளையிட்டாலும் அதனாலெல்லாம் எவரும் இஸ்லாத்திற்கு மாறப்போவதில்லை. யாராவது ஏமாந்த சோணகிரி உங்களிடம் மாட்டினால்தான் உண்டு.

Anonymous said...

ஆனந்த் சாகர்,
குண்டு வைக்கும் கலாச்சாரத்தை ஆதரிக்கும் போக்கு எந்தவொரு நல்ல மனிதனுக்கும் இருக்க வாய்ப்பில்லை . அதே நேரத்தில், குண்டு வைப்பவன் இஸ்லாமிய பெயர்தான்கியாக இருப்பானே ஆனால், உடனே குண்டுவெடிப்பை இஸ்லாமிய மார்க்கத்துடன் தொடர்பு படுத்தும் போக்கை தான் உலகளாவிய ஊடகங்களும் உல்லூர் ஊடகங்களும் செய்கின்றன.. அதே நிலைப்பாட்டையே தாங்களும் எடுப்பதில் எனக்கு எவ்வித ஆச்சிரியமும் இல்லை.

//இஸ்லாமிய மதத்திமிரால் முஸ்லிம்கள் குண்டுவைத்து அப்பாவி மக்களை கொள்கிறார்களே. அதை முதலில் நிறுத்த சொல்லிவிட்டு பிறகு ஜாதி சண்டை பற்றி பதிவிடவும்.\\
குண்டு கலாச்சாரம் அசிமானந்த மாவைச்ட்டுகள் இன்னும் ஆர் எஸ் எஸ் போன்றோர் செய்தால் அப்பாவி உயிர்கள் பறிக்கப்படுவதில்லையா? தவறை சைதவனையும் அந்த இயக்கத்தினரையும் குறை கூறுங்கள் மாறாக அவர்கள் சார்ந்துள்ள மார்க்கத்தை அல்ல. எல்லா மனித கூட்டனகலிலும் நல்லவர்களும் இருப்பார் தீயவர்களும் இருப்பார் என்பதுதான் எதார்த்தம்.
zahir.bukhari