Followers

Wednesday, July 30, 2014

பார்பனர்களை வந்தேறிகள் என்று வீரமணி கூறுவது ஏன்?

பார்பனர்களை வந்தேறிகள் என்று வீரமணி கூறுவது ஏன்?

ஹானஸ்ட் மேன்!

//அகண்ட பாரதத்தை பற்றி பேசும் அருமை நண்பா! பிராமணர்கள் இந்த நாட்டில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து சாகும்போது வேறு நாட்டிலா புதைக்கப் படுகிறார்கள்? அவனை வந்தேறி என்று கருதி உமது ஒரு மறுமொழியில் “வந்தேறிகள் யார்” என்று வீரமணியிடம் பொய் கேள் என்று எழுதிநீரே! அப்போது இந்த பரந்த மனப்பான்மை எங்கே போனது. அந்த வீரமணி சென்னையில் நடந்த ஒரு பொதுகூட்டத்தில் “பிராமணர்களே! தமிழ்நாட்டை விட்டு வெளியேறுங்கள்”" என்று வீர முழக்கமிட்டபோது உங்களை போன்றவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தீர்களே!//

அதற்கு காரணம் பார்பனர்களே! இந்த மண்ணின் மைந்தர்களோடு திருமண உறவு வைத்துக் கொண்டு சந்ததிகளை உருவாக்கியிருந்தால் இந்த கேள்வியே வந்திருக்காது. வீரமணியும், பெரியாரும் வேறு வேலைகளை பார்த்துக் கொண்டு போயிருப்பார்கள். அக்ரஹாரம் என்ற தனி குடியிருப்புகளை நாடு தோறும் உருவாக்கிக் கொண்டு உழைக்கும் மக்களை வீட்டுக்குள்ளும் ஏற்ற மாட்டீர்கள். உட்கார்ந்த இடத்தை தண்ணீர் விட்டு கழுவி தோஷத்தை நீக்குவீர்கள். நமது முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கே இந்த சம்பவம் நடந்துள்ளது. எனது வீட்டில் சுமதி என்ற இந்து பெண் பல ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். தனது சொந்த வீட்டைப் போல் உரிமையோடு அனைத்து இடங்களுக்கும் வருவார். இந்த உரிமையை ஒரு பார்பனர் வீட்டில் அந்த பெண் பெற்று விட முடியுமா?

வரன் தேடும் பக்கங்களை பார்வையிடுங்கள். பிராமிண் ஐயர் என்று போட்டு வடமா என்ற உட்பிரிவையும் குறிக்கத் தயங்குவதில்லை. பிராமிண் ஐயர் என்று போட்டு விட்டு பிரஹாசரணம் என்ற உட்பிரிவையும் மறக்காமல் குறிப்பிடுகிறீர்கள். மற்ற சாதிகளும் அப்படித்தான். விஸ்வகர்மா, இசை வேளாளர், மறவர் என்று 1000க்கு மேற்பட்ட சாதிகளை முதலில் குறிப்பிடுகின்றனர். எனவே பார்பன எதிர்ப்பு தமிழகத்தில் ஒழிய ஒரே வழி அவர்கள் விரும்பி பிற்படுத்தப்பட்ட சாதியில் சம்பந்தம் வைத்து இந்த நாட்டு ரத்தத்தோடு கலக்க வேண்டும். அவ்வாறு செய்வார்களேயானால் 'வந்தேறிகள்' என்று வீரமணி சொல்வதற்கு வாய்ப்பில்லாமல் போகும்.

//நீங்கள் புகழாரம் சூட்டி புளகாங்கிதம் அடையும் அத்தனை அரசர்களும் இந்து பெண்களை மணந்து முஸ்லிம் புதல்வர்களை பெற்று விட்டு சென்றுவிட்டார்கள். அந்த பெண்கள் (நீங்கள் அடிக்கடி கூறுவதுபோல) வர்ணாசிரம் மற்றும் சாதிவெறிக்கு பயந்துதான் மதம் மாறினார்களா? (ராணி ஷாபாய் என்பவர் மரியம் உஸ்மாநியாக மாறியது போல) மதமாற்றத்திற்கு அதுதான் காரணம் என்று சதா சர்வகாலமும் இங்கே எழுதிகொண்டிருப்பது ஏன்?//

குறிப்பிட்ட ஒரு சிலர் மன்னனின் விருப்பத்திற்காக மேலும் மகாராணி ஆகி விடும் ஆசையில் மாறியிருக்கலாம். மேலும் அந்த மன்னர்கள் அந்த பெண்களை வைப்பாட்டிகளாக வைக்காமல் தனது மனைவியாக்கிக் கொண்டு சம உரிமையை கொடுத்தார்கள். ஆனால் எங்கள் ஊர் ராஜராஜனின் வைப்பாட்டிகள் தங்கியிருந்த ஒரு தெருவே தஞ்சையில் இன்றும் சான்று பகன்றுக் கொண்டிருக்கிறது. இத்தனை தலைமுறை கடந்தும் அந்த குடும்பங்களின் இழிநிலை போன பாடில்லை. இதுதான் வித்தியாசம்.

ஆனால் அடித்தட்டு மக்கள் மாறக் காரணம் வர்ணாசிரமக் கோட்பாடே. மிரட்டி மதம் மாறியிருந்தால் இந்துத்வ ஆட்சி நடக்கும் இந்த காலத்தில் ஏன் தாய் மதம் திரும்புவதில்லை என்ற கேள்விக்கு உங்கள் பதில் என்ன?

//இந்து பெண்களை மணந்து இந்து ஜனத்தொகையை குறைத்து முஸ்லிம் ஜனத்தொகையை அதிகரித்தது தவிர வேறென்ன நடந்துவிட்டது? நம் தாய் பிறப்பினால் ஒரு இந்து என்று கூட நினைக்காமல் இந்துக்களுக்கு ஜசியா வரியை விதிக்க வில்லையா?//

இந்த திருமணங்களால் சாதி வெறி இந்துக்களிடம் குறைய ஆரம்பித்தது. ஒளரங்கஜேப் சாதி ஒழிப்பிற்கு பல திட்டங்களையும் தீட்டினார். இந்து ரத்தம் தனது உடலில் கலந்ததனால் எழுந்த பாசமாகக் கூட இருக்கலாம்.

//ஜசியா வரி//

இதனை எத்தனை முறை விளக்குவது. அதைவிட அதிகமாக ஜகாத் என்ற ஒரு பெரும் தொகையை முஸ்லிம்கள் அரசு கசானாவுக்கு மாதா மாதம் அனுப்பி வந்தனரே. முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்தி விட்டு இந்துக்கள் எந்த வரியும் செலுத்தாமல் இருந்தால் அது நியாயமாகுமா?

//கொல்லப்பட்டதாக செய்தி வருகிறதே ஆனால் முஸ்லிம் தலைவர்கள் கொல்லப்பட்டதாக செய்தி வருகிறதா? அப்படியானால் யார் அராஜகவாதிகள்?//

பழனி பாபா கொல்லப்படவில்லையா? நமது தேசத் தந்தை காந்தியை கொன்றது யார்? எதற்காக இந்த கொலை?

//இங்கே கொல்லப்படும் இந்து ஒரு காலத்தில் உமது பாட்டன் பாட்டியின் பேரனாக இருக்கலாம். நபி அவர்களுக்காக அவனை கொல்லும் முஸ்லிம்களுக்கு நபி அவர்கள் என்ன உறவு? கொள்ளு தாத்தாவா? எள்ளு தாத்தாவா?//

சட்டத்தை மதிக்காமல் ஒரு இந்துவை ஒரு முஸ்லிமோ அல்லது ஒரு முஸ்லிமை ஒரு இந்துவோ கொல்வதை நான் பார்த்தால் அதனை முதலில் தடுப்பேன். என்னால் தடுக்க முடியவில்லை என்றால் குறைந்த பட்சம் காவல் துறையில் புகார் செய்து நீதி மன்றத்தில் அந்த கொலையாளிகளை காட்டியும் கொடுப்பேன். இஸ்லாம் காரணமின்றி அப்பாவிகளை கொல்வதை வன்மையாக கண்டிக்கிறது.


No comments: