Followers

Friday, October 31, 2014

கணவன் மனைவி விஷயத்தில் அல்லா ஏன் வரணும்?

திரு சாரங்க்!

//சல்லவர்கலுக்கும் அவரது பொண்டாட்டிமார்களுக்கும் ஊடே இருக்கும் இரவு நேரத்து பிரச்சனையில் அல்லா மூக்கை நோழைத்து எதற்கு குர்ஆனில் வசனம் வைக்க வேணும். இதனால மானிடனுக்கு என்ன லாபம்
புருஷன் இறந்துவிட்டால் எத்தனை மாதங்களுக்கு அவனது மனைவி மார்கள் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்பதை குர்ஆனில் எழுதி என்னத்தை அல்லா சாதித்துள்ளார்//

இதனால் சாதித்தது பல இருந்தாலும் எனக்கு தெரிந்த ஒன்றிரண்டை சொல்கிறேன். விவாகரத்து பண்ணிய மறு வாரமே ஒரு பெண் மறுமணம் புரிந்தால் அந்த நேரத்தில் அந்த பெண்ணுக்கு ஏதும் குழந்தை வயிற்றில் தங்கியிருந்தால் அதற்கு யார் சார் பொறுப்பு? கணவன்மார்கள் இருவருமே எனது குழந்தை இல்லை என்று வாதிட்டால் அந்த குழந்தையின் எதிர்காலம் என்னாவது? அவன் அனாதையாக திரிய வேண்டும் என்று சொல்கிறீர்களா? அந்த குழந்தைக்கு சேர வேண்டிய வாரிசு சொத்துக்களும் கிடைக்காமல்லவா போய் விடும்? தந்தை பெயர் தெரியாமல் அனாதையாக தெரிவில் சுற்றித் திரியச் சொல்கிறீர்களா?

முக்காலத்தையும் உணர்ந்த நம்மைப்படைத்த இறைவனுக்கு பிற்காலத்தில் இது போன்ற சிக்கல்கள் எல்லாம் வரக் கூடாது என்பதற்காகத்தான் நமக்கான சட்டங்களை வகுத்துத் தந்துள்ளான். இந்த சட்டங்களை உலக முஸ்லிம்கள் சரியாக கடைபிடிப்பதால்தான் தகப்பன் பெயர் தெரியாத குழந்தைகளை இஸ்லாமிய நாடுகளில்நம்மால் பார்க்க முடிவதில்லை.

இந்த சட்டங்களை உதாசீனப்படுத்திய ஐரோப்பிய நாடுகளில் தாய் தகப்பன் யாரென்றே தெரியாத பெரும் இளைஞர்கள் கூட்டம் மன நோயாளிகளாக சுற்றி வருவதை நாம் தினமும் பார்க்கிறோம். சமூகத்தில் வெறுப்படைந்து கல்லூரிக்குள் புகுந்து சக மாணவர்களை சகட்டு மேனிக்கு துப்பாக்கியால் போட்டு தள்ளுவதும் இறை சட்டங்களை அந்த மாணவர்கள் தூரமாக்கியதால்தான்.

மேலும் இறைத் தூதர்களின் குடும்ப பிரச்னைகள் தாம்பத்திய பிரச்னைகள் பலவற்றில் மனித குலத்துக்கு பல சட்டங்களும் தீர்வுகளும் இன்று வரை கிடைத்து வருகின்றன. இதனால் பலனடைந்த கோடிக்கணக்கான இஸ்லாமியர்களைக் கேட்டுப் பாருங்கள் அதன் பலன் உங்களுக்குத் தெரிய வரும்.

நான் தற்போது கம்பெனி வேலையாக தபூக்கில் உள்ளேன். ரியாத் வந்தவுடன் இன்னும் விரிவாக விளக்க முயற்சிக்கிறேன் இறைவன் நாடினால்.

Monday, October 20, 2014

பத்து வயதிலேயே துப்பறிந்தவனாக்கும் நான்! :-)



(பல வருடங்களுக்கு முன்பு கோலாலம்பூர் விமான நிலையத்தில் ஜெத்தாவுக்கு என்னை வழியனுப்ப தாத்தா வந்திருந்தபோது எடுத்த புகைப்படம்).

40 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வு! முன்பு எங்களுக்கு சொந்தமான நிலம் நிறைய மதஹரம் என்ற ஊரில் இருந்தது. சொந்தமாக விவசாயம் பார்த்தோம். எனது தாத்தா அறுவடை சீசன்களில் 10 நாட்கள் கூட வீட்டுக்கு வராமல் அங்கேயே தங்கி விடுவார். எனக்கு அப்பொழுது 10 வயது இருக்கும். பள்ளி விடுமுறைகளில் நானும் வயல்வெளிக்கு சென்று சுகந்தமான காற்றை சுவாசிப்பது உண்டு. எங்கள் வீட்டிலிருந்து வயலுக்கு செல்வது குதிரை வண்டியில். இதற்காகவே தாத்தா அருமையான சிவந்த குதிரை ஒன்றை வாங்கினார். குதிரை வண்டியில் பயணம் செய்வதற்காகவே நான் விடுமுறையில் வயல்வெளிக்கு செல்வதுண்டு. குதிரை வண்டிக்காக தனி லாயமும், ஒரு ஓட்டுனரையும் சம்பளத்துக்கு தாத்தா வைத்திருந்தார். டக்... டக்.. டக்.... என்ற அந்த குதிரையின் குளம்பொளி ஏற்படுத்தும் சந்தத்தோடு அமைந்த அந்த சப்தம் மிக ரம்மியமாக இருக்கும். வழி நெடுக மரங்கள்..... செல்லும் வழி எங்கும் குடை பிடித்து எங்களை வெயிலின் தாக்கத்திலிருந்து காக்கும். அந்த அழகே அழகு......!

தாத்தாவுக்கு மதியம் வீட்டிலிருந்து சாப்பாடு போகும். வயலில் வேலை செய்பவர்களில் யாராவது ஒருவர் தினமும் சைக்கிளில் வந்து தாத்தாவுக்கான சாப்பாட்டை வாங்கிச் செல்வர். எங்கள் வீட்டிலிருந்து வயலானது கிட்டத்தட்ட எட்டு கிலோ மீட்டர் இருக்கும்.

ஒரு நாள் மத்தியான நேரத்தில் 'தாத்தாவுக்கு சாப்பாடு கொடுங்கள்' என்று ராஜேந்திரன் என்ற வயலில் வேலை செய்யும் நபர் வந்து கேட்டார். நாங்களும் சாப்பாட்டைக் கொடுத்து விட்டோம். மதியம் சாப்பிட வீட்டுக்கு நான் வந்தபோதுதான் அந்த நபரிடம் நானே சாப்பாட்டைக் கொடுத்தேன். அவர் சென்ற அரை மணி நேரம் கழித்து வேறொருவர் 'தாத்தாவுக்கு சாப்பாடு கொடுங்கள்' என்று கேட்டு வந்தார். ஏற்கெனவே ஒரு பையன் வந்து சாப்பாடு வாங்கி சென்று விட்டாரே என்று சொல்லி அவரை திருப்பி அனுப்பி விட்டோம். இன்று போல் அன்று தொலை பேசி வசதிகள் இல்லாததால் நேரமாகவே ஹோட்டலில் சாப்பாட்டை தாத்தா முடித்துக் கொண்டார்.

தாத்தா என்னிடம் மறுநாள் விசாரணை நடத்தினார்.

'ஞாபகப்படுத்திச் சொல். யார் சாப்பாட்டைக் கொண்டு சென்றது'

'நன்றாக ஞாபகம் இருக்கிறது. முன்பு நம் குதிரை வண்டி ஓட்டுனராக வேலை செய்த ராஜேந்திரன் தான்'

மறுநாளும் வந்தது. யார் என்பதை கண்டு பிடிக்க தாத்தா என்னையும் அழைத்துக் கொண்டு ராஜேந்திரனின் கிராமத்துக்கே சென்றார். ராஜேந்திரன் நான் வருவதை தூரத்திலிருந்து பார்த்து விட்டு அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடி மறைந்து விட்டார். சாப்பாட்டு கேரியர் சுத்தமாக கழுவப்பட்டு கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தது.

'ஐயா! மன்னிச்சிருங்கய்யா! என் பையன் தெரியாம செஞ்சுட்டான்' ராஜேந்திரனின் தகப்பனார்.

'பசித்தால் என்னிடம் கேட்டிருக்கலாமே! இப்படி திருடுவது தப்பில்லையா'

'அந்த பயலை நானும் அடிச்சேன்யா! வேலைக்கும் ஒழுங்கா போறதில்ல...'

'சரி.... இனிமேலாவது வீட்டுக்கெல்லாம் போக வேண்டாம் என்று சொல்லி கண்டித்து வை. இனி ஒரு தரம் இப்படி நடந்தால் போலீஸில் புகார் செய்து விடுவேன்'

என்று எச்சரித்து விட்டு அங்கிருந்து கிளம்பினோம். 10 வயதிலேயே துப்பறிந்து ஒரு மிகப்பெரிய தவறையும் மிகப் பெரிய குற்றவாளியையும் கண்டு பிடித்த பெருமிதத்தில் தாத்தாவோடு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடந்து வந்தேன்.

பசித்த வயிற்றுக்காக ஒரு வேளை சாப்பாட்டை திருடிய ராஜேந்திரனுக்கு இத்தனை சிக்கல்கள் வந்துள்ளது. ஆனால் இன்றைய அரசியல்வாதிகளும், அரசு உத்தியோஸ்தர்களும் 50 கோடி, 100 கோடி என்று கொள்ளையடித்து விட்டு சிரித்த முகத்தோடு கோர்ட்டுக்கு எவ்வாறு வர முடிகிறது என்று ஆச்சரியப்படுகிறேன். மக்களுக்கு உழைக்க வேண்டிய இவர்கள் தங்களின் மக்களுக்காக உழைப்பதையே வாடிக்கையாக்கிக் கொண்டுள்ளனர். இறைவன் தான் இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டும்.

வயல்வெளியையும் நிலத்தையும் மையமாக வைத்து புனையப்பட்ட அழகிய பாடல். மருதகாசியினுடையது. கேளுங்கள்......

வளர்ந்து விட்ட பருவப்பெண் போல் உனக்கு வெட்கமா?-தலை
வளைஞ்சு சும்மா பாக்கிறியே தரையின் பக்கமா-இது
வளர்த்து விட்ட தாய்க்குத் தரும் ஆசை முத்தமா?-என்
மனைக்கு வரக் காத்திருக்கும் நீ என் சொத்தம்மா!

நெத்தி வேர்வை சிந்தினோமே முத்து முத்தாக-அது
நெல்மணியாய் விளைஞ்சிருக்கு கொத்து கொத்தாக
பக்குவமாய் அறுத்து அதைக் கட்டுக்கட்டாக-அடுச்சு
பதறு நீக்கி குவிச்சு வைப்போம் முட்டு முட்டாக!

ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை!
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே!….

பாடலாசிரியர்: கவிஞர். மருதகாசி.



Sunday, October 19, 2014

தங்கமணிக்கு மேலும் சில விளக்கங்கள்!

தங்கமணி!

//ஷாலி, ஐஐஎம் கணபதி ராமெனல்லாம் இப்போது எப்படி பரிணாமவியல் தப்பு, குரான் சொல்லும் creationதான் சரி என்று சுபியை தாங்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை.//

பரிணாமவியல் டார்வினின் ஒரு கற்பனை கோட்பாடே. நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை அல்ல. ஐரோப்பிய நாடுகளில் பல கல்லூரிகளில் பரிணாமவியல் பாடங்களை எடுத்து விட்டார்கள் என்ற செய்தி தங்கமணிக்கு தெரியுமா?

பரிணாமவியலை நிரூபிக்க அதன் அறிஞர்கள் எத்தகைய மோசடிகளில் எல்லாம் ஈடுபட்டார்கள் என்பதற்கு 10க்கும் மேற்பட்ட பதிவுகளை எழுதியுள்ளேன். அதை படித்து விட்டு அதன் பிறகு பரிணாவியலுக்கு வக்காலத்து வாங்க வரவும்.

suvanappiriyan.blogspot.com/2012/10/blog-post_18.html

//ஒரு இடத்தில் கூட உலகம் உருண்டை என்று நேரடியாக வரி குரானிலிருக்காது. அதே போல எந்த இடத்திலும் சூரியனைத்தான் பூமி சுற்றுகிறது. சூரியன் பூமியை சுற்றவில்லை என்று இருக்காது.//

'அவன் இரண்டு கிழக்கு திசைகளுக்கும் இறைவன். இரண்டு மேற்கு திசைகளுக்கும் இறைவன்'
-குர்ஆன் 55:17

'கிழக்குகளுக்கும் மேற்குகளுக்கும் உரிய இறைவன் மேல் ஆணையிடுகிறேன்'
-குர்ஆன் 70:40

ஒரு பொருள் உருண்டையாக இருந்து சுழலும் போதுதான் இரண்டு கிழக்குகளும் இரண்டு மேற்குகளும் உருவாக சாத்தியம் உள்ளது.

'அவனே பூமியை பயன்படுத்த எளிதானதாக உங்களுக்கு அமைத்தான்.எனவே அதன் பல பகுதிகளிலும் செல்லுங்கள்.'
-குர்ஆன் 67:15

பூமி தட்டையாக இருந்தால் ஒரே பகுதியில்(மேற்பரப்பில்) மட்டுமே மனிதர்கள் செல்ல முடியும். இந்த பூமி உருண்டையாக இருந்தால்தான் மேல்,கீழ்,பக்கவாட்டு என்று 'பல பகுதிகளிலும்' மனிதர்கள் செல்ல முடியும்.

'சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும்.'
-குர்ஆன் 36:38

ஓரளவு வானியல் அறிவு உள்ளவர்களுக்கு கூட சூரியனும் அதன் இடத்தை விட்டு நகர்கிறது என்ற செய்தி புதுமையாகவே இருக்கும். சூரியன் ஒரு இடத்தில் நிலையாக நிற்கிறது என்றும் அந்த சூரியனைச் சுற்றியே பூமி, செவ்வாய், சந்திரன் போன்ற கோள்களெல்லாம் அதனதன் பாதையில் சுற்றி வருகின்றன என்றும் நம்பி இருந்தோம். நாம் மட்டும் அல்ல... அறிவியல் அறிஞர்கள் கோபர் நிக்கஸ், கெப்ளர், கலிலியோ போன்ற மேதைகளெல்லாம் கூட சூரியன் நகர்வதில்லை என்ற கொள்கையையே கொண்டிருந்தனர்.

தொலை நோக்கியை கண்டுபிடித்த கலிலீயோ கூட சூரியன் நகர்வதில்லை என்ற நம்பிக்கையிலேயே இறந்தும் போனார். இரவும் பகலும் ஏற்படுவதற்கு சூரியனின் நகர்வு அவசியமில்லை என்பதனாலேயே பெரும்பாலான அறிஞர்கள் சூரியன் நகர்வதில்லை என்ற கோட்பாட்டைக் கொண்டிருந்தனர்.

இது போன்ற மெகா அறிவியல் உண்மைகளை முகமது நபியால் எவ்வாறு சொல்ல முடிந்தது? இது போன்று நூற்றுக்கணக்கான அறிவியல் வசனங்களை என்னால் காட்ட முடியும்.

suvanappiriyan.blogspot.com/2009/03/blog-post_13.html

நாம் வாழும் பூமி கோள வடிவமாகவே உள்ளது என்பதை இந்த பதிவில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. பார்த்துக் கொள்ளுங்கள்.

Saturday, October 18, 2014

வஹாபியத்தால் தமிழகத்தின் அமைதி கெடுகிறதா?

திரு க்ருஷ்ணகுமார்!

//நான் சொல்ல வந்ததெல்லாம் சங்க நூற்கள் தமிழர் தம் வாழ்விடங்களை ஐவகை நிலங்களாகப் பிரித்து அந்த ஐவகை நிலங்களில் ஐந்து கடவுட்களை வழிபட்டதைப் பகிர்ந்தது.//

அடடா... நான் இதனை மறுக்கவில்லையே! ஐந்து நிலங்களையுடைய மக்கள் தங்கள் கற்பனைக்கு ஒப்ப பல தெய்வங்களை வணங்கியுள்ளனர். அதே நேரம் ஏக தெய்வ கொள்கையும் அதே தமிழர்களிடத்தில் இருந்துள்ளது. ஏக தெய்வ கொள்கைக்கு மாறுமாறு சித்தர்கள் தமிழர்களை கேட்டுக் கொள்வதாக வரும் பாடல்களை நான் முதலிலேயே கொடுத்துள்ளேன். திருவள்ளுவரும் பல இடங்களில் ஏக தெய்வ கொள்கையை பறை சாற்றுகிறார். திரு மூலர் அருளிய திருமந்திரத்திலும் ஏக தெய்வ கொள்கை விரவிக் கிடக்கிறது.

குர்ஆனில் என்னதான் ஏக தெய்வ கொள்கையையை பறை சாற்றினாலும் ஒரு சிலர் தர்காக்களில் வீழ்ந்து கிடப்பது போல் தமிழ் இந்துக்களிடமும் பல தெய்வ கொள்கை புகுத்தப்பட்டது. அதைத்தான் நான் சுட்டிக்காட்டினேன். ரிக் யஜூர் சாம அதர்வண வேதங்களிலும் உபநிஷத்களிலும் ஏக தெய்வ கொள்கை பல இடங்களில் வலியுறுத்தப்படுகிறது. வேறு சில இலக்கியங்களில் பல தெய்வ கொள்கையும் வருகிறது. இரண்டில் ஏதோ ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும். தர்ஹாக்கள் எவ்வாறு மனிதர்களால் உருவாக்கப்பட்டு சில முஸ்லிம்களால் பின்பற்றப்படுகிறதோ அதுபோலவே இந்துக்களில் பல தெய்வ கொள்கையும் மனிதர்கள் தங்களின் சுயநலத்துக்காக உருவாக்கிக் கொண்டனர் என்பதே எனது வாதம். இந்துக்களிலும் ,முஸ்லிம்களிலும் இந்த தவறு நிறையவே நடந்துள்ளது. அதனை திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே எனது வாதம்.

//தமிழர் தம் வாழ்வியலின் முக்யமான கூறு பன்மை. ஆப்ரஹாமியத்தின் அரக்கக்கோட்பாடு (இறைக்கோட்பாடு) போதிக்கும் அசிங்கம் மிரட்டும் ஒருமை. அதை நெகிழ்த்தும் தன்மையதானதே தர்க்காஹ் ஷெரீஃப் வழிபாடுகள். மாற்று மதத்தவருடன் ஒருங்கிணைந்து நல்லிணக்கமாக வாழ விழையும் ஒரு கோட்பாடு தர்க்காஹ் ஷெரீஃப் வழிபாடுகள்.//

வஹாபியம் தமிழகத்தில் தலை எடுத்த பிறகுதான் பல நல்ல காரியங்கள் நடைபெற ஆரம்பித்துள்ளன.

1. இன்று தமிழகத்தில் பல ஆண்டுகளாக இரத்ததானம் செய்வதில் முதலிடத்தில் இருப்பது 'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்' என்ற அமைப்பே. இதன் மூலம் பல இந்துக்களும் கிறித்தவர்களும் பலனடைகிறார்கள். இலவசமாக அவர்களுக்கு இரத்தம் போய் சேருகிறது.

தமிழகம் மட்டுமல்லாது ஒவ்வாரு சுதந்திர தினத்தன்றும், ஹஜ் நேரங்களிலும் இதே அமைப்பு வளைகுடாக்களிலும் 'இரத்ததான முகாம் நடத்துகிறது' ரியாத்தில் பல வருடங்களாக இந்த அமைப்பு அரசிடமிருந்து விருதுகளை பெற்று வருகிறது. தமிழனின் பெருமையை கடல் கடந்தும் கொண்டு செல்வது நீங்கள் வெறுக்கும் வஹாபியர்களே!

2. தமிழகமெங்கும் இலவச ஆம்புலன்ஸ் வசதிகளை 'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்' என்ற இந்த வஹாபிய அமைப்பு ஏற்படுத்தி இந்து கிறத்தவ அன்பர்களுக்கும் இலவச சேவையை செய்து வருகிறது.

3. 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியை தமிழகத்தின் பட்டி தொட்டிகளெல்லாம் நடத்தி இந்துக்களை கேள்வி கேட்க வைத்து இந்து முஸ்லிம் ஒற்றுமையை அதிகரிக்கச் செய்ததும் இதே வஹாபிய இயக்கம்தான்.

4. சென்ற மாதம் பில்லி சூன்யம் என்பது வெறும் ஏமாற்று வேலை என்பதை நிரூபிக்க இந்த அமைப்பின் நிறுவனர் பி.ஜெய்னுல்லாபுதீன் தனது உயிரையே பணயமாக வைத்து 'தனக்கு யாரும் பில்லி சூன்யம் வைத்து அதில் வெற்றியடைந்து விட்டால் அவருக்கு பரிசு 50 லட்சம் என்று அறிவிப்பு செய்து ஒரு சூன்யக்காரரோடு ஒப்பந்தமும் இட்டு இன்று சூன்யம் பொய் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளது. முஸ்லிம்களை விட இந்துக்களே பில்லி சூன்யம் உண்மை என்று நம்பி தங்கள் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருந்தார்க்ள. அவர்கள் அனைவரும் 'சூன்யம் என்பது பொய்' என்பதை விளங்கிக் கொண்டு இன்று நேர் வழிக்கு வந்துள்ளதும் இதே வஹாபிய அமைப்பினால்தான்.

5. இந்த மாதத்தை 'தீவிரவாத எதிர்ப்பு மாதமாக' அனுசரித்து தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் தீவிரவாதத்துக்கு எதிரான பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளதும் இதே வஹாபிய அமைப்புதான்.

தமிழகத்தில் வஹாபியம் வேரூன்றிய பிறகுதான் இந்து முஸ்லிம் கலவரங்களே இல்லாமல் போனது. தமிழகம் என்றுமே அமைதிப் பூங்காவாக திகழும். அதற்கு ஏக இறைவனை மட்டுமே வணங்கும் நாங்கள் என்றுமே உறுதுணையாக இருப்போம்.

Friday, October 17, 2014

கடித்த நாயை நாம் பாதுகாக்கத்தானே வேண்டும்!



கடித்த நாயை நாம் பாதுகாக்கத்தானே வேண்டும்!

“இவ்வழக்கில் ஜெய லலிதாவுக்காக ஆஜரான வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் நான் மதிக்கக்கூடியவர். அவர் ஜெயலலிதாவின் உடலில் உள்ள நோய்களை பற்றி எடுத்துக்கூறி ஜாமீன் கேட்டார். அதனால் நான் அதிகமாக ஆட்சேபிக்கவில்லை.

எனவேதான் உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி இருக்கிறது. தண்டனைக்கும் இடைக்காலத் தடை மட்டுமே விதித்திருக்கிறது. அவர் வீட்டை விட்டு எங்கும் போக கூடாது. கட்சிக்காரர்களை சந்திக்ககூடாது. அரசியல் செய்ய கூடாது. மேல் முறையீட்டில் வாய்தா வாங்கக்கூடாது. டிசம்பர் 18-ம் தேதிக்குள் வழக்கை நடத்த வேண்டும். ஒரே ஒரு நாள் தாமதித்தால் கூட ஜாமீன் தள்ளுபடி செய்யப்படும் என நீதிபதிகள் கண்டிப்பாக சொல்லி இருக்கிறார்கள்.

இந்த ஜாமீன் காலத்தில் சுப்பிரமணியன் சுவாமியையோ, நீதிபதியையோ அசிங்கமாக பேசக்கூடாது. கார்ட்டூன் போடக் கூடாது. வீடு மீதோ, ஆட்கள் மீதோ தாக்குதல் நடத்தக் கூடாது. மீறி ஏதாவது நடந்தால் ஜெயலலிதாவிற்கு ஜாமீன் இல்லாமல் போய்விடும் என நீதிபதிகளே கூறி இருக்கிறார்கள்.

அவருடைய கட்சிக்காரர்கள் வன்முறையில் ஈடுபடக் கூடாது. அதனை ஜெயலலிதா தடுக்க வேண்டும். நீதிமன்றத்தையும், நீதிபதியையும் அருவருப்பாக பேசக்கூடாது. தமிழ்நாட்டில் மீண்டும் சட்டம் ஒழுங்கை கெடுத்தால் அவருக்குத்தான் பிரச்சினையாக முடியும்.

ஆனால் அதே நேரத்தில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் நான்காண்டு சிறை தண்டனை ஏழாண்டாக கூட மாற வாய்ப்பு இருக்கிறது. அதனால் ஜெயலலிதாவுக்கு சிக்கல் இன்னும் முடிந்துவிடவில்லை. இதனை யாரும் மறந்துவிடக் கூடாது''என்றார்.

ட்விட்டரில் விமர்சனம்

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் சமூக வலைதளத்தில் அதிமுகவினரை கடுமையாக விமர்சித்துள்ளார்.அதில் அதிமுகவினரை பொறுக்கிகள் என குறிப்பிட்டுள்ளது கட்சியினர் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

-சுப்ரமணியம் சுவாமி
தமிழ் ஹிந்து நாளிதழ்
18-10-2014

நாய் கடித்தால் கடி பட்டவர் அந்த நாயை இறந்து விடாமல் மிக ஜாக்கிரதையாக பாதுகாக்க வேண்டும் என்று சொல்வார்கள். அந்த சம்பவம் ஏனோ எனக்கு இப்போது ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது. :-)

சூரியன் வெளிச்சங்களாகவும் சந்திரன் ஒளியாகவும் மாறிய விநோதம்!

சூரியன் வெளிச்சங்களாகவும் சந்திரன் ஒளியாகவும் மாறிய விநோதம்!

ஆண்டுகளின் எண்ணிக்கையையும் காலக் கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும் சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். சந்திரனுக்கு பல நிலைகளை ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் இறைவன் இதைப் படைத்துள்ளான்.அறிகிற சமுதாயத்திற்கு வசனங்களை அவன் தெளிவாக்குகிறான்.

-குர்ஆன் 10:5


என்ன அழகிய ஒரு இறைவனின் வார்த்தை!. 'லியா அன்' என்ற அரபிச் சொல்லை அரபு இலக்கணத்தின் படி மொழி பெயர்த்தால் 'வெளிச்சம்' என்றும் பன்மையில் 'வெளிச்சங்கள்' என்றும் இரண்டையுமே ஒரே வார்த்தையில் அரபு அகராதி குறிப்பதை பார்க்கலாம்.

அரபு மொழியில் நல்ல பாண்டித்தியம் உள்ளவர்களிடம் நாம் இதைப்பற்றிய தெளிவை அடையலாம். இணையத்திலும் கூகுளில் தேடினால் ஒருமையும் பன்மையும் ஒரே வார்த்தையில் குறிப்பிடப்படுவதை நாம் அறிய முடியும்.

சூரியனின் சாதாரண வெந்நிற ஒளி மாறுபட்ட அதிர்வெண்களையும் மாறுபட்ட நிறங்களையும் கொண்ட ஒளிகளின் கலவை என நியூட்டன் தனது சோதனைகள் மூலம் நிரூபித்தார். அவர் சூரிய ஒளியை ஒரு முப்பட்டைக் கண்ணாடிக்குள் செலுத்தி ஒளிப் பிரிகையை செய்து காட்டினார். அவற்றை மாறுபட்ட நிறங்களை உடைய ஒளிக் கற்றைகளாக வெளிப்படுத்திக் காட்டினார். அதன் பிறகு அந்த மாறுபட்ட வர்ணங்களை உடைய ஒளிக் கற்றைகளை ஒன்று குவித்து வெண்ணிறமுள்ள ஒரே ஒளிக் கற்றையாக மீண்டும் மாற்றிக் காட்டினார். இந்த முப்பட்டைக் கண்ணாடியும் அதன் துணைக் கருவிகளும் இணைந்த கருவியையே நாம் 'நிறமாலை' (spectrascope) நோக்கி என்கிறோம்.

இங்கு சூரியன் பல ஒளிகளை உமிழ்ந்து ஒரு ஒளியாக நமது கண்ணுக்கு தெரிகிறது. சூரியனை நாம் சாதாரணமாக பார்த்தால் அதில் ஏழு வர்ணங்களை உள்ளடக்கிய ஒரே வெளிச்சத்தை நாம் காணக் கூடியதாக இருக்கிறது. அதாவது ஏழு வெளிச்சங்களை சுருக்கி நம் கண்ணுக்கு ஒரு வெளிச்சமாக தருகிறது. எனவே 'லியாஅன்' என்ற இந்த வார்த்தை பிரயோகம் ஒருமைக்கும் பொருந்தி வருகிறது. ஏழு வண்ணங்களின் கூட்டுக்கும் பொருந்தி வருகிறது.

குர்ஆனில் பயன்படுத்தப் பட்டிருக்கும் 'அஸ்ஸ்ம்ஸ லியாஅன்' என்ற அரபி வார்த்தையை அரபு மொழியும், ஒளிப்பிரிகையையும் நன்கு அறிந்த ஒருவர் ஆழ்ந்து சிந்தித்தாரானால் இது இறைவனின் வார்த்தைதான் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ள மாட்டார். ஏனெனில் 'நூர்' என்ற வார்த்தையும் 'லியாஅன்' என்ற வார்த்தையும் மேலோட்டமாக பார்க்கும் போது ஒரே பொருளையே தரும். சந்திரனுக்கு போட்ட 'நூர்' என்ற வார்த்தையை சூரியனுக்கு குர்ஆன் பயன்படுத்தியிருந்தால் பொருளே மாறி விடும்.

ஆனால் எந்தக் குழப்பமும் இல்லாமல் சூரியனுக்கு எந்த வார்த்தையை பயன் படுத்த வேண்டும். சந்திரனுக்கு எந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்று நிதானித்து வார்த்தைகள் கையாளப்பட்டிருக்கிறது. இயற்பியலை ஓரளவு அறிந்த எந்த மனிதரும் இந்த வார்த்தை பிரயோகத்தை பார்த்து ஆச்சரியப் படாமல் இருக்க முடியாது. எழுதப் படிக்கத் தெரியாத முகமது நபி இப்படி ஒரு வார்த்தையை இந்த இடத்தில் பயன்படுத்தியிருக்க முடியுமா என்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.




இனி குர்ஆன் சந்திரனுக்கு 'நூர்' என்ற வார்த்தையை ஏன் பயன்படுத்தியது என்பதையும் பார்ப்போம். அதற்கு முன்பாக எதிரொளிப்பு என்பதற்கு விக்கி பீடியா தரும் விளக்கத்தையும் பார்ப்போம்.

எதிரொளிப்பு அல்லது ஒளித்தெறிப்பு (Reflection) என்பது ஒளிக்கதிரானது சென்று ஒரு பொருளில் பட்டு எதிர்வது ஆகும்.
நாம் கண்ணாடியில் பார்க்கும் பொழுது நம் முகம் நமக்கு எவ்வாறு தெரிகின்றது? இருட்டான ஓர் அறையிலே கண்ணாடியில் நம் முகம் தெரியுமா? ஏன் தெரியவில்லை? வெளிச்சமான ஓரிடத்தில் நாம் கண்ணாடி முன்னர் நின்றால், நம் முகத்தில் ஒளிக்கதிர்கள் பட்டு எதிருவுற்று பின்னர் அவ்வொளி அலைகள் சென்று கண்ணாடியில் பட்டு கண்ணாடியால் எதிர்வுற்று நம் கண்களில் வந்து சேர்வதால் நாமே நம் முகத்தைப் பார்க்க இயலுகின்றது. இப்படி கண்ணாடியிலும், பிற பொருள்களிலும் ஒளி பட்டு எதிர்வது (தெறிப்பது) ஒளியெதிர்வாகும்.

இனி 'நூர்' என்ற அரபி வார்த்தைக்கு அரபு அகராதியில் வரும் சில ஆங்கில வார்த்தைகளைப் பார்ப்போம்.
Illumination- ஒளியூட்டுதல்
Glow- ஒளிர்வு, பிரகாசம்
Gleam - பிரதிபலிக்கும் ஒளி
Flare – வெளிப்பாடு




சந்திரனின் ஒளியானது அதன் சொந்த ஒளியல்ல. சூரியனிடமிருந்து பெறப்பட்ட ஒளியையே பிரதிபலிக்கிறது. இங்கு நூர் என்ற வார்த்தைக்கு கிடைக்கும் அநேக விளக்கங்களும் பிரதிலிப்புக்கு கையாளப்படும் வார்த்தைகளாகவே உள்ளதை எண்ணி வியக்கிறோம். முந்தய காலங்களில் சந்திரன் தனது ஒளியையே பிரதிபலிப்பதாகத்தான் நம்பி வந்தோம். சூரியனின் ஒளியையே சந்திரன் பிரதிபலிக்கிறது என்ற உண்மை சமீப காலமாகத்தான் அறியப்பட்டது.

'அவற்றில் சந்திரனை ஒளியாக அமைத்தான்: சூரியனை விளக்காக அமைத்தான்'
-குர்ஆன் 71;16


திருக்குர்ஆனில் சூரியனுக்கு பயன்படுத்தப்படும் அரபுச் சொல் ‘ஷம்ஸ்’ இதனை ‘ஸிராஜ்’ (ஒளிவிளக்கு) ‘வஹ்ஹாஜ்’ (பிரகாசிக்கும் விளக்கு) ‘தியா’ (ஒளிரும் மகிமை) என்றும் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. சூரியன் தனக்குள் எரிந்துகொண்டே இருப்பதால், அது கடுமையான உஷ்ணத்தையும் வெளிச்சத்தையும் உண்டு பண்ணிக்கொண்டே உள்ளது.

சந்திரனை குறிக்கும் அரபுச் சொல் ‘கமர்’ என்பதாகும். குர்ஆன் இந்த சந்திரனை ‘முனீர் என்றும் வர்ணிக்கிறது. ‘முனீர்’ என்றால் ஒளியை (நூர்) வழங்கும் கோளம் என்று பொருள். எந்த இடத்திலும் சந்திரனை குறித்திட ‘வஹ்ஹாஜ்’ ‘தியா’ ‘ஸிராஜ்’ ஆகிய சொற்கள் பயன்படுத்தப்படவே இல்லை. அதே போல் சூரியனை குறித்திட ‘நூர்’ அல்லது ‘முனீர்’ என்ற சொற்களும் பயன்படுத்தப்படவில்லை. இரண்டு கோள்களும் ஒளியை உமிழ்ந்தாலும் அதன் தன்மைகள் மாறுபடுவதால் அங்கு வார்த்தைகளும் மிக துல்லியமாக தேர்ந்தெடுத்து பயன்படுத்தப்படுகிறது. இந்த அறிவை எல்லாம் முகமது நபி தனது கற்பனையால் யூகித்து குர்ஆனை உருவாக்கியிருக்க முடியுமா என்பதை படிப்பவர்களின் சிந்தனைக்கே விட்டு விடுகின்றேன். மேலும் தற்போது நம் வசதிக்கேற்ப குர்ஆனில் மாற்றி விட்டோம் என்றும் சொல்ல முடியாது. ஏனெனில் முகமது நபியால் சரி பார்க்கப்பட்டு உஸ்மான் அவர்களால் பிரதி எடுக்கப்பட்ட குர்ஆனின் இரண்டு பிரதிகள் இன்றும் நம் கைவசம் உள்ளது. அதை வைத்து உறுதி செய்து கொள்ளலாம்.

இறைவனே அறிந்தவன்.

Thursday, October 16, 2014

தமிழன் ஏக இறைவனை வணங்கினானா?

தமிழன் ஏக இறைவனை வணங்கினானா?

திரு க்ருஷ்ணகுமார்!

//தமிழன் ஒரே கடவுளைத் தான் வழிபட்டான் என்று எப்படி கூசாது உங்களால் புளுக முடிகிறது. தமிழ்ச் சங்க நூற்கள் ஐவகை நிலமும் அந்த நிலத்தில் வழிபடும் கடவுட்கள் பற்றியும் கூறுவதை எப்படி நைசாக மறைத்து அல் தக்கியா செய்கிறீர்கள்.//

ஆதாரம் இல்லாமல் நான் எதனையும் எழுத மாட்டேன். சங்க இலக்கியங்களில் ஏக தெய்வக் கொள்கை பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஆதாரங்களை கீழே பாருங்கள்.

தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

அதாவது தனக்கு உவமை இல்லாத ஏக இறைவனை வணங்கினால்தான் மனக்கவலை இல்லாதிருக்க முடியும் என்று திருவள்ளுவர் கூறுகின்றார்..

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்
-குறள்: 388

நல்ல முறையில் நீதி பரிபாலனம் செய்து மக்கள் எவ்வகையிலும் துன்பப்படாமல் காப்பாற்றும் ஆட்சியாளன் இறைவனென்று வைக்கப்படும் என்கிறார் வள்ளுவர். அதாவது அந்த மன்னன் இறைவனைப் போன்று போற்றுதலுக்குரியவர் என்ற அர்த்தத்தில் வள்ளுவர் கூற பின்னால் வந்தவர்கள் அந்த மன்னனையே கடவுளாக்கி விட்டார்கள்.

“எல்லாவுலகங்களும் அரசனின்றி அச்சத்தால் எப்பக்கங்களிலும் சிதறுண்டிருக்குங்கால் அவ் வெல்லாவற்றையும் காத்தற் பொருட்டுப் பிரம்ம தேவன், இந்திரன், வாயு, இயமன், சூரியன் அக்கினி, வருணன், சந்திரன், குபேரன் ஆகிய இவர்களுடைய அழிவில்லாத கூறுகளைக் கொண்டு அரசனைப் படைத்தான்.”
-“சுக்கிர நீதி” என்ற வட மொழி நூல்

“பல்வேறு தெய்வங்களின் மனித வடிவமே மன்னன்”
-நாரத ஸ்மிருதி,- ஆ.சிவசுப்பிரமணியன்

அதாவது இறைவனுக்கு உரிய தகுதிகள் அனைத்தையும் நமது முன்னோர்களின் வேதங்கள் அரசனுக்கு தாராளமாக கொடுத்து வந்ததையே மேலே உள்ள வாக்கியங்கள் நமக்கு அறிவுறுத்துகிறது. இந்த கருத்துக்களை சாதாரண மனிதன் சொன்னதாக சொல்லாமல் இறை பக்தியை ஊட்டி வேதங்களின் மூலமாக சொன்னதால் நம் மனத்தில் பசுமரத்தாணிபோல் பதிந்து விட்டது.

இனி இந்து மத வேதங்க ள் ஏக தெய்வ கருத்தை கொண்டிருப்பதை பார்ப்போம்.
'அந்தந்த ஆசைகளால் அறிவிழந்தவர்கள் அந்தந்த நியமத்தை கைக்கொண்டு தம்முடைய இயல்புகளுக்கு கட்டுண்டு கவரப்பட்டவர்களாய் வேறு தெய்வங்களை வழிபடுகின்றனர்'
-பகவத் கீதை 7:20

'ஏகம் ஏவம் அத்விதயம்' - 'அவன் ஒருவனே: வேறு எவரும் இல்லை'
- சந்த்க்யோ உபநிஷத் 6:2:1.

'அவன் வடிவத்தை காண முடியாது. எவர் கண்ணுக்கும் புலப்படாதவன்.எவர்கள் மனதாலும் இதயத்தாலும் அவனை அறிந்திருக்கிறார்களோ அவர்களின் இதயத்தில் நிலையாக இருப்பவன்.'
-ஸ்வதேஸ் வதரா உபநிஷத் 4:20

'அன்தாதம ப்ரவிஸன்தி ஏ அசம்பூதி முபாசதே'

'எவர்கள் இயற்கை வஸ்துகளை வணங்குகிறார்களோ அவர்கள் இருளில் பிரவேசிக்கின்றார்கள்.இன்னும் எவர்கள் மனிதனால் படைக்கப்பட்ட பொருட்களை வணங்குகிறார்களோ அவர்களும் இருளில் ஆழமாக மூழ்குகின்றார்கள்' -யஜூர் வேதம் 40:9
'நண்பர்களே! தெய்வீக தன்மை வாய்ந்த அவனையல்லாது வேறு எவரையும் வணங்காதீர்கள். அவனை மட்டுமே வணங்குங்கள்'- ரிக் வேதம் 8:1:1-10

'ஏக இறைவனையே ஞானிகள் பல பெயர்கள் கொண்டு அழைக்கின்றனர்'
-ரிக்வேதம் 1:164:46

இது போன்ற எண்ணற்ற வசனங்கள் இந்து மத வேதங்களில் எங்கும் நிறைந்திருக்கிறது. எனவே நான் பொய் சொல்லுகிறேனா? அல்லது க்ருஷ்ணகுமார் பொய் சொல்லுகிறாரா என்பதை படிப்பவர்களின் கவனத்துக்கே விட்டு விடுகின்றேன்.

பாலஸ்தீன மக்களை உங்கள் அல்லாஹ் ஏன் காப்பாற்றவில்லை?

பாலஸ்தீன மக்களை உங்கள் அல்லாஹ் ஏன் காப்பாற்றவில்லை?

தங்கமணி!

//அது சரி, இதுவரை எந்த பாலஸ்தீனரும் பாதிப்படையவில்லையா? அல்லது எந்த பாலஸ்தீனரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யவில்லையா? //

மனிதனுடைய வாழ்வானது இந்த உலகத்தோடு முடிந்து விட்டால் உங்களின் கேள்வி நியாயமானது. அநீதி இழைக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை இன்றில்லா விட்டாலும் என்றாவது நிறைவேறும். இவ்வுலகத்தில் நிறைவேறா விட்டாலும் மறு உலக வாழ்வில் கண்டிப்பாக தண்டனையை அனுபவிப்பான். ஒருவன் இருபது பேரை கொலை செய்திருப்பதாக வைத்துக் கொள்வோம். இந்த உலகில் தண்டனை கொடுத்தால் ஒரு முறைதான் அவனது உயிரை எடுக்க முடியும். ஆனால் நியாயத் தீர்ப்பு நாளில் இறைவன் முன்னால் தண்டிக்கப்பட்டால் அவன் கொன்ற அந்த இருபது பேருக்குமாக இருபது முறை உயிர் கொடுக்கப்பட்டு வேதனை செய்யப்பட்டு கொல்லப்படுவான். அதுதான் நியாயமாகவும் இருக்கும். உங்களைப் போன்றவர்களெல்லாம் பிற்காலத்தில் கேலி செய்வீர்கள் என்பதை இறைவன் அறிந்ததால் தனது திருமறையில் கூறுகிறான்.

ஏக இறைவனை மறுப்போருக்கு இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப்பட்டுள்ளது. அவர்கள் நம்பிக்கைக் கொண்டோரைக் கேலி செய்கின்றனர். இறைவனை அஞ்சியோர் நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்கு மேலே இருப்பார்கள். இறைவன் நாடியோருக்கு கணக்கின்றி வழங்குகிறான்.

-குர்ஆன் 2:212

//அது சரி. ஏன் இந்த ஹதீஸ் குரானில் இல்லை? இதுவும் வானவர் ஜிப்ரீல் மூலமாகத்தானே தெரிந்திருக்க வேண்டும்?//

குர்ஆனில் இல்லை என்று யார் சொன்னது?
யாரேனும் ஜிப்ரீலுக்கு எதிரியாக இருந்தால் அது தவறாகும். ஏனெனில் அவரே இறைவனின் விருப்பப்படி இந்த குர்ஆனை முஹமதாகிய உமது உள்ளத்தில் இறக்கினார். ' இந்த குர்ஆனானது தனக்கு முன் சென்ற வேதங்களை உண்மைப்படுத்தக் கூடியதாகவும் நம்பிக்கைக் கொண்டோருக்கு நேர் வழியாகவும் நற்செய்தியாகவும் உள்ளது' என்று கூறுவீராக!

-குர்ஆன் 2:97
வானவர் ஜிப்ரீல் சம்பந்தமாக குர்ஆனில் வரும் வேறு வசனங்கள்:
16:102, 19:64, 26:193, 53:5

//அது சரி ஜிப்ரீல் மூலமாக சொன்னதற்கு என்ன ஆதாரம்? முகம்மது தன்னிடம் ஜிப்ரீல் சொன்னார் என்று அவரே சொல்லிகொண்டதை தவிர?//

குர்ஆனின் நம்பகத்தன்மைதான் பிரதானமான ஆதாரம். அறிவியல், வரலாறு, வானவியல் என்று பல துறைகளை குர்ஆன் தொட்டுச் செல்கிறது. ஆனால் இன்று வரை நிரூபணமாக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் குர்ஆனோடு மோதவில்லை. இது ஒன்றே போதும் இந்த குர்ஆனானது முகமது நபியின் கற்பனை அல்ல. உங்களையும் என்னையும் படைத்த ஏக இறைவனின் வார்த்தைதான்: இதில் எந்த சந்தேகமும் இல்லை. இதில் ஏதேனும் அறிவியல் குறைகளை கண்டுபிடிக்க நீங்களும்தான் முயற்சித்துப் பாருங்களேன். உங்கள் முயற்சியில் வெற்றிப் பெற்று விட்டால் உங்கள் பக்கம் நான் வந்து விடுகின்றேன். :-)


ஸ்வீடன் நாட்டின் முதல் இஸ்லாமிய கல்வி மந்திரி!



ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் ஸ்வீடன் நாட்டில் முதன் முதலாக ஒரு முஸ்லிமுக்கு முக்கிய மந்திரி பதவி கொடுக்கப்பட்டுள்ளது. 27 வயதே நிரம்பிய அய்தா ஹெட்சியாலிக் என்ற முஸ்லிம் பெண்மணிக்கு கல்வி மந்திரி பதவி கொடுத்து அழகு பார்த்துள்ளது ஸ்வீடன் அரசு.

இந்த பெண்மணி போஸ்னியாவிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர். 1987ல் பிறந்தார். 1992ல் போஸ்னிய செர்பிய போர் உச்சக்கட்டத்தை எட்டிய போது அங்கிருந்து இவரது குடும்பம் போஸ்னியாவுக்கு புலம் பெயர்ந்தது. அப்போது அவருக்கு வயது ஐந்து. அன்று நடந்த உள் நாட்டு பொரில் 200000 முஸ்லிம்கள் அநியாயமாக செர்பியர்களால் கொல்லப்பட்டனர். பிறந்த நாடை விட்டு சோகத்தோடு வெளியேறிய இந்த குடும்பத்துக்கு ஸ்வீடன் புகலிடம் அளித்தது.

சோகத்திலெல்லாம் பெரிய சோகம் சொந்த மண்ணை விட்டு பிரியும் சோகம்தானே! அந்த வலியை உணர்ந்ததாலோ என்னவோ கடுமையாக படித்து பல திறமைகளை வளர்த்துக் கொண்டு அரசியலிலும் பிரவேசித்து இன்று கல்வி மந்திரியாகவும் பதவி ஏற்றுள்ளர் இந்த இள மங்கை.

ஸ்வீடன் முழுக்க 450000 லிருந்து 500000 லட்சம் வரை முஸ்லிம்கள் உள்ளதாக 2011 ஆம் ஆண்டு அறிக்கை கூறுகிறது. பல ஐரோப்பியர்கள் தினமும் இஸ்லாத்தை ஏற்கும் செயல் அதிகரித்தவண்ணமே உள்ளது. தற்போதய கால கட்டத்தில் இஸ்லாமியரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கலாம் என்று அறிக்கைகள் கூறுகின்றன.

தகவல் உதவி
முஸ்லிம் மிர்ரர்
10-10-2014

Wednesday, October 15, 2014

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இல்லையா?

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இல்லையா?

தங்கமணி!

//வஹாபிகளின் வழித்தோன்றல்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் என்று சிரியாவில் சவுதி அரேபியா, பஹ்ரேன், ஷேக்குகளின் ஆதரவுடன் அங்குள்ள சியா, யாஜிதி ஆண்களை கழுத்தை வெட்டிக்கொன்று, அவர்களின் மகள்கள், மனைவிகள், பெண்களை விலைக்கு வாங்கி விற்று, பாலுறவு அடிமைகளாக வைத்துகொண்டிருக்கிறார்களே, அதெல்லாம் சுன்னாவா?
அவர்களுக்கெல்லாம் அநீதி இழைக்கப்படவில்லையா? அல்லது அதெல்லாம் அல்லாவின் வழியில் நடக்கும் ”அறப்போரா”?//

இஸ்லாத்தின் பெயரால் யார் எந்த காரியத்தை செய்தாலும் அதற்கு குர்ஆனின் கட்டளை இருக்க வேண்டும். அது அல்லாமல் தனி மனிதர்கள் செய்யும் எந்த காரியத்துக்கும் இஸ்லாமோ முஸ்லிம்களோ பொருப்பாக மாட்டார்கள்.

ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பே சிஐஏவும், மொஸாத்தும் சேர்ந்து அவர்களின் காரியங்களை சாதித்துக் கொள்ள உருவாக்கிய அமைப்புகளே! எந்த நாட்டின் ஆதரவும் இல்லாமல் இத்தனை இடங்களை இவர்களால் எப்படி பிடிக்க முடிந்தது? அதிலும் பல லட்சம் டாலருக்கு பெட்ரோலை விற்கின்றனர் இந்த தீவிரவாத குழுவினர். இதனை வாங்குபவர்கள் யார்? உங்கள் வீட்டில் உங்களையே கண்காணிக்கும் வசதிபடைத்த அமெரிக்காவால் இதனை கண்டுபிடிக்க முடியாதா? சதாம் ஹூசைனை சில வாரங்களிலேயே முடிவுக்கு கொண்டு வந்தனர். கடாஃபியையும் சில வாரங்களிலேயே ஒரு முடிவுக்கு கொண்டு வந்தனர்.

ஆனால் எந்த நாட்டின் ஆதரவும் இல்லாத ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை ஒரு முடிவுக்கு கொண்டு வர இன்னும் இவர்களால் முடியவில்லையாம். தாலிபான்களை உருவாக்கியதும் அமெரிக்காவும், இஸ்ரேலும்தான். அதே போல் அல்காயிதா, உசாமாபின்லேடன், என்று அனைவரையும் உருவாக்கியது சிஐஏவும் மொசாத்தும் என்று பல அறிக்கைகள் கூறுகின்றன. இதை ஏன் இவர்கள் செய்ய வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம்.

அமைதியிழந்த அமெரிக்க ஐரோப்பிய மக்கள் இன்று லட்சக்கணக்கில் இஸ்லாத்தில் சேர்ந்த வண்ணம் உள்ளனர். இன்றும் 10 ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் இஸ்லாமியர் பெரும்பான்மையாக வாழும் தேசங்களாக மாறினால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று பல அறிக்கைகள் கூறுகின்றன. எனவே இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு அந்த தேசங்கள் தள்ளப்பட்டுள்ளன. அதற்கான முதல்படிதான் அல்காயிதா, ஐஎஸஐஎஸ போன்ற அமைப்புகள். இந்த அமைப்பின் பெயரால் அராஜகங்களை அரங்கேற்றினால் இஸ்லாத்தின் வளர்ச்சியையும் தடுக்க முடியும். அதோடு தீவிரவாதிகளை ஒடுக்குகிறேன் என்ற போர்வையில் அரபு நாடுகளின் பெட்ரோல் வளத்தையும் சுரண்ட முடியும். ஒரு கல்லில் இரண்டு மாங்காய். தற்போது ஆப்கானிஸ்தானத்தில் அந்த நாட்டை பாதுகாக்கிறேன் என்ற போர்வையில் சென்ற மாதம் அமெரிக்கா புதிதாக பாதுகாப்பு ஒப்பந்தம் போட்டதை நாம் பத்திரிக்கையில் பார்த்தோம்.

நமது நாட்டிலும் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்க 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற அமைப்பை உளவுத்துறையே உருவாக்கியதாக ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேய காட்ஜூ கூறியதையும் நாம் மறந்து விட முடியாது.

இந்தியாவில் தங்களின் கிளைகளை திறக்கப் போவதாக அல்காயிதாவின் தலைவர் ஜவாஹிரி கொடுத்த அறிக்கையை நாம் பத்திரிக்கைகளில் பார்த்தோம். இந்தியாவில் உள்ள எந்த முஸ்லிமும் எந்த ஒரு கோரிக்கையும் வைக்காமல் இருக்கும் போது திடீரென்று இவர் அறிவிக்க காரணம் என்ன? இந்த செய்தி எங்கிருந்து கசியவிடப்பட்டது?

SITE என்ற செய்தி ஸ்தாபனத்திலிருந்து இந்த செய்தி கசிய விடப்பட்டுள்ளது. இந்த செய்தி ஸ்தாபனமானது இஸ்ரேலுடைய மொசாத்தின் அங்கத்தினர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு மேலும் நெருக்குதல்களைக் கொடுக்கவும் இந்துத்வாவாதிகளுக்கு இந்து மக்களின் ஆதரவை பெற்றுத் தரும் முகமாகவே இந்த செய்தியை மொசாத் கசிய விட்டுள்ளது.

அஸ்ஸாம் காஷ்மீர் குஜராத் போன்ற மாநிலங்களில் ராணுவத்தாலும் ஆட்சியாளர்களாலும் பல கொடுமைகள் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டிருக்கலாம். அதனை எவ்வாறு எதிர் கொள்வது என்பது இந்திய முஸ்லிம்களுக்கு தெரியும். காவல்துறையும், நீதித் துறையும் இந்தியாவில் முற்றாக சிதைந்து விடவில்லை. எனவே அல்ஜவாஹிரி போன்ற அமெரிக்க கைக் கூலிகளின் உதவி எந்த இந்திய முஸ்லிமுக்கும் தேவையில்லை என்பதை இங்கு பதிவு செய்து கொள்கிறோம்.

1. சைபல் எட்மண்ட்ஸ் என்ற எஃப்பிஐ அங்கத்தினர் விவரிக்கும் போது அல்ஜவாஹிரி நேடோவில் வேலை செய்த முன்னால் அதிகாரி என்ற உண்மையை போட்டு உடைத்திருக்கிறார். அல்காய்தா என்ற இந்த அமைப்பும் அமெரிக்காவின் சிஐஏ வால் உருவாக்கப்பட்ட அமைப்பு என்றும் தெளிவுபடுத்துகிறார். வளைகுடாக்களில் கால் ஊன்றவும் இந்தியா போன்ற நாடுகளில் இந்துத்வாவாதிகளின் கைகளை பலப்படுத்தவும் தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளவே அல்காயிதாவை இஸ்ரேலிய மொசாத் உருவாக்கியதாக விவரித்து கூறுகிறார்.

2. SITE என்ற இந்த செய்தி ஸ்தாபனமானது ரிடா கட்ஸ் என்ற முன்னால் இஸ்ரேலிய ராணுவ வீரரின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. தற்போது இந்த யூதன் மொசாத்தில் வேலை செய்து வருகிறார். இந்த செய்தி ஸ்தாபனமானது அல்காய்தாவின் முக்கிய செய்திகளை வெளியிடுவதும் மேலும் அமெரிக்காவுக்கு தோதான செய்திகளை தேர்ந்தெடுத்து வெளியிடுவதும் இதன் முக்கிய பணியாகும்.

Tuesday, October 14, 2014

வஹாபிய இஸ்லாமும் அரபு கலாசாரமும்!

திரு க்ருஷ்ணகுமார்!

//அராபியத்தை திணித்து தமிழ்ப் பண்பாட்டினை சுவடின்றி அழிக்க விழையும் பிற்போக்கு வஹாபியம் தமிழகத்தில் தலையெடுத்து வரும் சூழலில் இது போன்ற தமிழ்ப்பண்பாட்டு வேர் உள்ள விஷயங்களை விகஸிதமாகப் பகிர முனைவது என்பது சங்கடமான விஷயம் என்று புரிகிறது.//

இஸ்லாம் என்பது வேறு! அராபிய கலாசாரம் என்பது வேறு!

1400 வருடங்களுக்கு முன்பு அராபிய கலாசாரம் என்பது என்ன?

இஸ்லாம் வருவதற்கு முன் அராபிய தீபகற்பத்தில் 365 சிலைகளை கஃபாவில் வைத்து வழி பட்டு வந்தனர். இறைத் தூதர் ஆப்ரஹாம், அவரது மகன் இஸ்மாயில் போன்றோரின் சிலைகளையும் வைத்து அன்றைய அரபிகள் தினம் ஒரு சிலையை வழிபட்டு வந்தனர்.

பல வருடங்கள் புளிக்க வைக்கப்பட்ட மதுபானங்களை குடித்து மகிழ்ந்தனர் அன்றைய அரபிகள். யாரிடம் அதிக நாட்கள் புளிக்க வைக்கப்பட்ட மதுபானம் உள்ளதோ அவரே அன்றைய சமூகத்தில் மரியாதையாக பார்க்கப்பட்டார்.

1400 வருடங்களுக்கு முன்பு அராபியாவில் வட்டி பெரும் தொழிலாக நடந்து வந்தது. முகமது நபியின் சிறிய தகப்பனார் மிகப் பெரிய வட்டி வியாபாரியாக இருந்தார். யூதர்கள் மதினாவில் வட்டி தொழிலில் மிகப் பிரதான இடத்தைப் பெற்றிருந்தனர்.

பெண் குழந்தைகள் பிறந்தால் வறுமைக்கு அஞ்சி உயிருடன் புதைத்து விடும் பழக்கம் அன்றைய அரபு கலாசாரமாக இருந்தது. ஜனாதிபதி உமர் இஸ்லாத்தை தழுவுவதற்கு முன்னால் தனது பெண் குழந்தையை உயிரோடு புதைத்துள்ளார். பிற்காலங்களில் இதனைச் சொல்லி முகமது நபியிடம் அழுத வரலாறு உண்டு. இது அன்றைய அரபுலக கலாசாரம்.

விபசாரம் தலைவிரித்தாடியது. பலரும் ஒரு பெண்ணிடம் செல்வார்கள். அந்த பெண் கருவுற்றால் யாரை கை காட்டுகிறாளோ அவன் அந்த குழந்தைக்கு தகப்பனாக பொறுப்பெடுத்துக் கொள்வான். இது அன்றைய அரபு கலாசாரம்.

இந்த கொடுமைகள் அனைத்தும் இஸ்லாம் வந்தவுடன் பூண்டோடு ஒழிக்கப்பட்டது. ஆனால் அன்று அந்த அரபுகள் என்ன செய்தார்களோ அதனை இன்று நாம் நமது நாட்டில் அரங்கேற்றி வருகிறோம்.

பிறந்த பெண் குழந்தையை கள்ளிப்பால் கொடுத்து அல்லது அரிசியை திணித்து சேலம், உசிலம்பட்டி போன்ற ஊர்களில் இன்றும் கொன்று வருகிறோம்.

அன்றைய அரபுகளைப் போல் சாராயத்தை 10ம் வகுப்பு மாணவனுக்கும் ஊற்றிக் கொடுக்கும் கொடுமையை செய்து வருகிறோம். அரசே சாராய கடையை நடத்தி வருடா வருடம் வருமானத்தை கூட்டும் மாவட்டங்களுக்கு அரசே ஊக்கத் தொகை கொடுக்கும் அநியாயத்தை அரங்கேற்றி வருகிறோம்.

அன்றைய அரபுகளைப் போல் விபசார விடுதிகளை நடத்தி அதற்கு அரசு அனுமதி அளிக்கும் கொடுமையையும் செய்து வருகிறோம். பல பெண்களை பொட்டுக்கட்டி கோவிலுக்கு நேர்ந்து விட்டு அவர்களை தேவரடியார்கள் என்ற புனித பெயரை சூட்டி அவர்களை முடிவில் விபசாரத்தில் தள்ளுகிறோம்.

அன்றைய அரபுகளைப் போல் வட்டி தொழிலை வங்கிகள் மூலமாக அரசே நடத்துவதை நாம் அங்கீகரிக்கிறோம். அதிலும் ஒரு படி மேலே போய் கந்து வட்டி தொழில் மிக ஜோராக நடக்கும் மாநிலம் நமது மாநிலம் என்றால் அதுவும் மிகையாது.

இவ்வாறு அன்றைய அரபுகள் எதை எல்லாம் தங்கள் கலாசாரமாக கொண்டிருந்தார்களோ அவை அனைத்தையும் தமிழர்களாகிய நாம் நமது கலாசாரமாகவே மாற்றி விட்டோம்.

ஆனால் 3000 வருடங்களுக்கு முன்பு உள்ள தமிழனின் கலாசாரம் என்பது என்ன?

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி யில்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே.
-திருமூலர்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
- (புறம்: 129)

“நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே;
சுற்றி சுற்றி வந்து முணு, முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா!
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ!
நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்..!”

-சிவவாக்கிய சித்தர்

மேலே நாம் பார்த்த மூன்று பாடல்களின் அடிப்படையில்தான் அன்றைய தமிழகம் இருந்தது. 3000 ஆண்டுகளுக்கு முன் தமிழன் எவ்வாறு வாழ்ந்தானோ அந்த வாழ்கையைத்தான் இன்றைய இஸ்லாமியர்கள் அதாவது உங்கள் பாஷையில் 'வஹாபிகள்' செய்து வருகிறார்கள். எனவே அன்றைய அரேபிய கலாசாரத்தை துடைத்தெறிவதற்காக நாங்கள் அல்லும் பகலும் பாடுபடுகிறோம். திருவள்ளுவரும், கணியன் பூங்குன்றனாரும், சிவ வாக்கிய சித்தரும், திருமூலரும் இன்று உயிருடன் இருந்திருந்தால் தமிழகத்தில் மலரும் தவ்ஹீத் அதாவது ஓரிறைக் கொள்கை புரட்சியினைக் கண்டு ஆனந்த கண்ணீர் வடித்திருப்பர்.

மேலும் சொல்கிறேன் கேளுங்கள்.....

குலப்பெருமை பேசி அன்றைய அரபுகள் பல வருடங்கள் சண்டையிடுவார்கள். கொலைகளும் தாராளமாக நடக்கும். அந்த கொலைக்கு பழி வாங்க அவனது வாரிசுகள் இலக்காக்கப்படுவர். இது பல தலைமுறையாக நடந்து வந்தது. முகமது நபி அந்த மக்களிடம் இஸ்லாத்தை போதித்த பிறகுதான் பழிக்குப் பழி வாங்கும் வழக்கம் விட்டொழிந்தது.

அன்றைய அரபுகள் எதைச் செய்தார்களோ அதனை இன்று நாம் அரங்கேற்றி வருகிறோம். தருமபுரி போன்ற மாவட்டங்களில் குலப்பெருமை பேசிக் கொண்டு காதலின் பெயரால் குடிசைகளை கொளுத்திக் கொண்டிருக்கிறோம். பலரை உயிரோடு எரிக்கவும் செய்கிறோம்.

அன்றைய அரபுகளிடம் தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடியது. மனிதர்களை அடிமைகளாக வைத்து மிகப் பெரும் கொடுமையை செய்து வந்தனர். எந்த சம்பளமும் தராமல் வாழ்நாள் முழுக்க முதலாளிக்கு உழைக்க கட்டாயப்படுத்தப்பட்டனர். வணக்க வழிபாடுகளில் அவர்களுக்கென்று ஒரு நாளை நியமித்து இறை இல்லங்களுக்குள் உள்ளே அனுமதிக்காமல் தடுத்து வைத்தனர். இஸ்லாம் வந்ததற்கு பிறகு அந்த கஃபாவில் முதன் முதலாக பாங்கொலியை சொன்னவர் பிலால் என்ற ஆப்ரிக்க அடிமை. முகமது நபி இவர்தான் அதற்கு சரியான ஆள் என்று தேர்ந்தெடுத்து அந்த புனிதப்பணியை செய்ய வைத்தனர்.

அன்று அந்த அரபுகள் எவ்வளவு தீண்டாமை பாராட்டினார்களோ அதற்கு ஒரு படி மேலே போய் காலில் செருப்பணிந்து வந்தாலே குற்றமாக பார்க்கும் மனப்பான்மையை நமது இளைஞர்களிடத்திலே வளர்த்து வைத்துள்ளோம். இரண்டு நாட்களுக்கு முன்பு மதுரையில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் செருப்பணிந்து டீக்குடிக்க வந்ததால் சக மாணவர்களால் எச்சரிக்கப்பட்டு அடியையும் கொடுத்துள்ளனர். தலித் மாணவர்கள் தற்போது காவல் துறையை நாடியுள்ளனர்.
http://www.youtube.com/watch?v=MwfDfUGhAv4

அதற்கும் மேலாக அந்த தலித்களை கோவில்களுக்குள் அனுமதிக்காமலும், அவர்களோடு திருமண உறவு கொள்ளாமலும் ஒதுக்கியே வைத்துள்ளோம். இன்று வரை அது தொடர்கிறது. அன்றைய அரபுகளுக்கு சற்றும் நாங்கள் குறைந்தவர்களல்ல என்று ஒவ்வொரு விஷயத்திலும் அவர்களோடு போட்டி போடுகிறோம்.

அந்த அரபு கலாசாரத்தை முற்றாக ஒழிக்கவே நாங்கள் அதாவது ஏகத்துவவாதிகள் பாடுபடுகிறோம். இது தமிழகத்துக்கு நல்லதா அல்லது தீயதா என்பதை உங்களின் முடிவுக்கே விட்டு விடுகின்றேன்.

குர்ஆன் வசனங்களை குழப்பும் அப்துல் அஜீஸ்!

திரு அப்துல் அஜீஸ்!

//இந்த வசனம் அல்லாஹ்வுடன் லாத் மனாத் போன்ற தெய்வங்கள் மக்காவில் வணங்கப்பட்டபோது இறங்கியது. அந்த வசனத்தை அல்லாவை வணங்கிய அடியார்களை அல்லாவிடம் தமக்காக இறைஞ்சும்படி கேட்பதற்கு உபயோகப்படுத்தி குழப்புகிறார்கள் இந்த தீவிரவாதிகள்.//

என்னை தீவிரவாதியாக சித்தரித்தது உங்களிடம் நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை என்பதைக் காட்டுகிறது.

//தர்காவுக்கு செல்லும் எந்த முஸ்லீமும் அல்லாவுக்கு இணையாக அடியார்களை பார்ப்பதுமில்லை, வணங்குவதுமில்லை. தங்களுக்காக அல்லாவிடம் கேட்டுகொள்வதற்காவே செல்லுகிறார்கள். அது தெரிந்திருந்தும், குழப்பம் செய்வதையே ஒரே தொழிலாக செய்துவரும் ஷாலியும், சுவனப்பிரியனும் அல்லாவுக்கு இணையாக அடியார்களை வணங்குகிறார்கள் என்று எழுதுகிறார்கள். இது அவர்கள் எந்த அளவுக்கு அசிங்கமானவர்கள் என்று காட்டுகிறது.//

ரொம்பவும் உஷ்ணமாகி விட்டீர்கள் என்று நினைக்கிறேன். இறைவன் என்ன சொல்லுகிறான்?

அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை” (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான். -குரஆன் 39:3

சிறு பிள்ளைக்கும் விளங்குவதுபோல் இந்த வசனத்தில் இறைவன் மற்றவர்களை துணைக்கழைப்பதை கண்டிக்கும் போது பிஎச்டி பட்டம் வாங்கிய உங்களுக்கு விளங்கவில்லையா? இறைவன் உங்களுக்கு மறுமையில் கடுமையான தீர்ப்பளிப்பதை காணும் பொது இதனை உணர்ந்து கொள்வீர்கள்!

//இவர்கள் குறிப்பிட்ட ஹதீஸ்கள் யூதர்களால் எழுதி திணிக்கப்பட்டவை. ஆகையால் இவைகளை ஒத்துகொள்ளக்கூடாது.//

நான் குறிப்பிட்ட நபி மொழிகள் அனைத்தும் ஹதீஸ் கலை வல்லுனர்களால் ஆதாரபூர்வமானவை என்று அங்கீகரிக்கப்பட்டவை. அறிவித்த நபரிலிருந்து முகமது நபி வரை அறிவிப்பாளர் வரிசை எங்கும் பிசகாது சரியாக செல்கிறது. நான் குறிப்பிட்ட நபி மொழி யூதர்களுடையது என்பதற்கு ஆதாரத்தை சமர்ப்பிக்கவும். இல்லை என்றால் பொய் சொன்னதற்காக இறைவன் முன்னால் குற்றவாளியாக்கப்படுவீர்கள்.

//பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்! குர்ஆன் 72:18
இந்த வசனம் அல்லாஹ்வுடன் லாத் மனாத் போன்ற தெய்வங்கள் மக்காவில் வணங்கப்பட்டபோது இறங்கியது. அந்த வசனத்தை அல்லாவை வணங்கிய அடியார்களை அல்லாவிடம் தமக்காக இறைஞ்சும்படி கேட்பதற்கு உபயோகப்படுத்தி குழப்புகிறார்கள் இந்த தீவிரவாதிகள்.//

லாத், மனாத் போன்ற தெய்வங்களை இந்த வசனத்தில் பெயர் குறிப்பிட்டு இறைவன் கூறவில்லையே! மற்ற எவரையும் அழைக்காதீர்கள் என்று பொதுவாகத்தானே கூறுகிறான். அந்த பொதுவில் நாகூர் ஆண்டவரும், ஏர்வாடி இப்றாகிமும், மற்ற தர்காக்களும் வருகிறதே!

இப்படி நெஞ்சறிந்து பொய்யுரைக்கலாமோ! :-)

//ஆகவே இந்த ஏமாற்றுக்காரர்களை, தீவிரவாதிகளை, பெட்ரோல் பிணந்திண்ணிகளை அடையாளம் கண்டுகொண்டு அப்புறப்படுத்துங்கள்.//

பிஎச்டி பட்டம் பெற்ற ஒரு இலக்கியவாதியின் எழுத்தாக இது தெரியவில்லையே! பொய்களை புனைந்து நீங்கள் எழுதிய கட்டுரையின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டியதற்காக எங்களை பிணந்திண்ணிகள் என்று கூறும் அளவுக்கு சென்று விட்டீர்கள். கண்டிப்பாக இதற்கான தண்டனையை வாழும் நாட்களிலேயே இறைவன் மூலம் பெற்றுக் கொள்வீர்கள். அந்த தண்டனை உங்களை வந்தடையும் நேரம் நாகூர் ஆண்டவரோ, ஏர்வாடி பாவாவோ, அல்லது நீங்கள் முரீது வாங்கியுள்ள தலைவரோ உதவிக்கு வர மாட்டார். உங்களைப் பார்த்து பரிதாபப்படுகிறேன்.

மேலும் நான் ஒரு அலுவலகத்தில் அக்கவுண்டண்டாக பணி புரிகிறேன். எனது தேவைக்கும் அதிகமாகவே இறைவன் அந்த அலுவலகத்திலிருந்து எனக்கு கொடுக்கிறான். இணையத்தில் எழுதுவதற்கு நான் யாரிடமும் எந்த காலத்திலும் பொருள் உதவி பெற்றதில்லை. அது எனக்கு அவசியமும் இல்லை.

Monday, October 13, 2014

தாயைப் போல பூமியின் அரவணைப்பு!

தாயைப் போல பூமியின் அரவணைப்பு!



'உயிருடன் உள்ளோரையும், இறந்தோரையும் அணைத்துக் கொள்ளக் கூடியதாக பூமியை ஆக்கவில்லையா?'
-குர்ஆன் 77:25,26

பூமிக்கு உள்ள ஈர்ப்பு விசையை இந்த குர்ஆனின் வசனம் மெய்ப்பிக்கிறது. இதை ஒரு சிறு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம். கடைத் தெருவில் ஒரு தாய் தன் குழந்தையை கைகளைப் பிடித்தவாறு நடந்து அழைத்துச் செல்கிறாள். அந்த குழந்தை ஒரு கடையைப் பார்த்து விட்டு அங்கு செல்ல எத்தனிக்கும். உடனே தாயானவள் அந்த குழந்தையை தன் பக்கம் தன் கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டு வருவதைப் பார்க்கிறோம். அப்பொழுதுதான் அந்த குழந்தை தான் தனது தாயின் கட்டுப்பாட்டில் இருப்பதையே உணருகிறது.

அதே போல் தாயின் மார்போடு ஒரு குழந்தை அமர்ந்திருக்கும்போது தலையை அங்கும் இங்கும் அசைக்கும். அதை ஒரு பொருட்டாக அந்தத் தாய் எடுத்துக் கொள்வதில்லை. அதே சமயம் தாயின் அரவணைப்பிலிருந்து துள்ளிக் குதித்து இறங்க முயற்ச்சிக்கும் போது அந்த தாயின் பிடி மேலும் இறுகி தன் குழந்தையை அவளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறாள். இது நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சாதாரண ஒரு நிகழ்வு.

இதையே நாம் பூமிக்கும் பூமிக்கு மேல் வசிக்கும் கோடிக்கணக்கான ஜீவராசிகளையும் பொருத்திப் பார்ப்போம். நம்முடைய அன்றாட வாழ்வில் பூமி நம்மை அரவணைத்திருப்பதை நாம் உணருவதில்லை. எப்படி ஒரு குழந்தை தன் தாயின் அரவணைப்பை உணருவதில்லையோ அதைப் போல. அதே குழந்தை சில வருடங்களில் பெரிதானவுடன், அதே தாய் அந்த குழந்தையை தனியே வெளியில் சென்று விளையாட அனுமதிக்கிறாள். இனி குழந்தைக்கு தனது பாதுகாப்பு தேவையில்லை என்று தாய் உணருவதால் குழந்தையை தனியே விட்டு விடுகிறாள்.

அதே போன்றுதான் ஓரளவு அறிவு வளர்ச்சி அடைந்த மனிதன் பூமியின் ஈர்ப்பாற்றலுக்கு மேலே அதாவது ராக்கெட்டில் சென்றால், இனி தனது ஈர்ப்பாற்றல் மனிதனுக்கு தேவையில்லை என்று கருதி ராக்கெட்டின் பிடிப்பை பூமி தளர்த்தி விடுவதையும் பார்க்கிறோம்.

இந்த இடத்தில் குர்ஆனின் 'அணைத்தல்' என்ற வார்த்தைப் பிரயோகம் மிகவும் இலக்கியத்துடனும், அறிவியல் சார்ந்தும் மிகவும் கவனமாகக் கையாளப்பட்டுள்ளதை நினைத்து நாம் ஆச்சரியப்படுகிறோம்.

மனிதர்கள் மட்டுமின்றி, விலங்கினங்களாயினும் அல்லது உயிரற்ற பொருட்களாயினும் சிதறடிக்கப்படாமல் அவைகளை இருக்கும் இடத்திலேயே இருக்க வைப்பது பூமியின் ஈர்ப்பு விசையே ஆகும்.

மேலும் இந்த பூமி நாம் வாழ்வதற்கென்றே விஷேசமாக படைக்கப்பட்ட ஒரு கோளாகும். இதன் காரணமாகவே அதனுடைய ஈர்ப்பு விசை ஒரு இழு விசையாக நமக்குத் தோன்றாமல் நாம் அணிந்திருக்கும் உடை போன்று ஒரு இதமான அணைப்பாகத் தென்படுகிறது. இதற்கு மாறாக பூமியின் ஈர்ப்பு விசை நமக்கு ஒரு இழு விசையாக தென்பட்டால் நம்மால் இதன்மீது ஒரு போதும் வாழ இயலாது.

பூமியும் அசுர வேகத்தில் சுற்றுகிறது. அது சுற்றுவதோடு அல்லாமல் சூரியனையும் சுற்றி வருகிறது. அதோடல்லாமல் மொத்த கேலக்ஸியுமே ஒரு இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. இவ்வளவு காரியங்கள் நடந்தும் நம்மால் அதை உணர முடிகிறதா?

ஒரு பொருள் பூமியில் நிலையாக நிற்க வேண்டுமானால் நான்கு கால்கள் அல்லது குறைந்த பட்சம் மூன்று கால்களாவது தேவைப்படும். ஆனால் மனிதர்களாகிய நாம் இரண்டு கால்களைக் கொண்டு எவ்வாறு நிற்கிறோம்? நாம் கீழே விழ வேண்டிய தருணத்தில் நம் உடல் சமன் செய்து புவி ஈர்ப்பு விசைக்கு தோதாக கனத்தை சமன் செய்வதாலேயே நாம் நிலையாக பூமியில் நிற்க முடிகிறது. ஒரு காலை முன் எடுத்து வைக்கும் போது மற்ற காலை எந்த கோணத்தில் வைக்க வேண்டும் என்று காலின் அனைத்து மூட்டுக்ககளுக்கும், தசைகளுக்கும் மூளையானது கட்டளையை பிறப்பிக்கிறது. உடலில் உள்ள 300க்கும் மேற்பட்ட தசைகள் இந்த கட்டளையை ஏற்று பூமியின் ஈர்ப்பு விசையையும் காற்றின் அழுத்தத்தையும் சமன் செய்து நாம் கீழே விழுந்து விடாமல் ஒரு தாயைப் போல் அரவணைக்கிறது இந்த பூமி. எனவே தான் நமது நாட்டில் பூமியை தாயாக வர்ணிப்பதையும் பார்க்கிறோம். நம் மேல் எவ்வளவு அக்கறை இருந்தால் இறைவனானவன் இத்தகைய ஏற்பாட்டுகளை நமக்காக செய்திருக்க முடியும் என்று என்றாவது நாம் சிந்தித்திருக்கிறோமா? இதுவும் இறைவனின் விந்தைகளில் ஒன்றல்லவா?

ஆஹா... இறைவன் நம் மீது பொழிந்த கருணையே கருணை.

'உயிருடன் உள்ளோரையும், இறந்தோரையும் அணைத்துக் கொள்ளக் கூடியதாக பூமியை நாம் ஆக்கவில்லையா?'
-குர்ஆன் 77:25,26

இந்தியா ஒளிர்கிறதாம்.... நம்புங்கண்ணே.... நம்புங்க......



மதுரை மாவட்டம் ராயபாளையத்தில் தேனீர் கடைக்கு செருப்பு அணிந்து சென்றதால் தலித் மாணவர்களை ஆதிக்க சாதி இந்து மாணவர்கள் தாக்கியுள்ளார்கள்.

ஆனந்த், பாண்டியராஜன் என்ற இரண்டு தலித் மாணவர்களுக்குத்தான் இந்த நிலை. இது பற்றி அவர்கள் கூறும்போது:

'செருப்பு அணிந்து இங்கெல்லாம் வரக் கூடாது. பெஞ்சின் மேல் உட்கார்ந்து டீ அருந்தக் கூடாது. எங்களுக்கு அடங்கித்தான் நடக்க வேண்டும். ஐயா, சாமி என்று எங்களை மரியாதையாகக் கூப்பிட வேண்டும் என்று தினமும் நாங்கள் மிரட்டப்படுகிறோம். நேற்று ஒருவர் இதே பிரச்னையை வைத்து என்னை அடித்து விட்டார்' என்கிறார் இந்த மாணவர்.

இவ்வாறு சாதி வெறி பிடித்து அலைவது மாணவர்கள் என்று நினைக்கும் போது நமக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. இஸ்லாத்தை எவராவது ஏற்றால் கூப்பாடு போடும் இந்துத்துவவாதிகளே இந்த சாதி வெறிக்கு என்ன பதிலை வைத்திருக்கிறீர்கள். இது ஏதோ 30 அல்லது 40 வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வு அல்ல. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த கணிணி யுகத்தில் நேற்று நமது மதுரையில் நடந்த நிகழ்வுதான் இது.

வெட்கித் தலை குனியுங்கள் இந்துத்வாவாதிகளே!

Sunday, October 12, 2014

மரம் செடி கொடிகளை மனிதனால் உருவாக்க முடியுமா?

நிச்சயமாக இறைவன்தான், வித்துகளையும, கொட்டைகளையும் வெடித்து முளைக்கச் செய்கிறான்; இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகிறான், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் அவனே வெளிப்படுத்துகிறான்; அவனே உங்கள் இறைவன்- எப்படி நீங்கள் திசை திருப்பப்படுகிறீர்கள்?
-குர்ஆன் 6:95

“உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? உங்கள் செவிப்புலன் மீதும், உங்கள் பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? அகிலங்களின் அனைத்துக் காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?” என்று நபியே! நீர் கேளும். உடனே அவர்கள் “இறைவன்” என பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக.
-குர்ஆன் 10:31

'நீங்கள் மூட்டுகிற நெருப்பைப் பற்றி சிந்தித்தீர்களா? அதற்குரிய மரத்தை நீங்கள் உருவாக்கினீர்களா? அல்லது நாம் உருவாக்கினோமா?'
-குர்ஆன் 56:71,72


இந்த மூன்று வசனங்களையும் ஒரு மனிதன் ஆழ்ந்து சிந்தித்தான் என்றால் இறைவனின் ஆளுமையை உணரத் தொடங்கி விடுவான். நாம் பார்க்கும் விதைகள் அனைத்தும் கிட்டத் தட்ட இறப்பு நிலைக்கே சென்று விடுகிறது. பல மாதங்கள்: பல வருடங்கள் கழித்து நீங்கள் ஒரு விதையை பூமியில் போட்டு சிறிது தண்ணீரை ஊற்றினால் நிலத்தை பிளந்து கொண்டு செடிகளாகி பின்னர் மரங்கள் வெளியாவதை நாம் பார்ப்போம். இது எவ்வாறு சாத்தியமாகிறது? இத்தனை நாளும் சூரிய ஒளி கூட படாது இருட்டறையிலே இருந்த இந்த விதைக்கு எவ்வாறு உயிர் வந்தது? யார் கொடுத்தது? என்றாவது சிந்தித்திருக்கிறோமா?




அடுத்து மரங்களின் கட்டுமான பொருட்களில் பிரதானமானது லிக்னோ செல்லுலோஸ் என்ற வேதிப் பொருளாகும். லிக்னைனும் மற்றும் மரத்துக்கு கடினத் தன்மை கொடுக்க செல்லுலோஸ் என்ற பொருளும் சேர்ந்து கலவையாக மரங்கள் பரிணாமம் அடைகின்றன. வேதியியல் பாஷையில் சொல்வதாக இருந்தால் மரம் என்பது 50 சதவீதம் செல்லுலோசாலும், 25 சதவீதம் ஹெமி செல்லுலோசாலும், 25 சதவீதம் லிக்னைனாலும் உருவாக்கப்பட்டுள்ளது. ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் கார்பனும் கலந்த கலவைகளே நாம் மேலே பார்த்த தனிமங்கள். ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் கார்பனும் வளி மண்டலத்தில் மிகவும் கணக்கிலடங்காமல் பரந்து கிடப்பதை நாம் அறிவோம். இந்த மூன்றும் சேர்ந்துதான் லிக்னோ செல்லுலோஸ் என்ற பொருளை உருவாக்குகிறது. இந்த பொருள்தான் மரங்கள் விரிந்து படரக் காரணமாக அமைகிறது. ஆச்சரியமாக அறிவியல் அறிஞர்கள் லிக்னோ செல்லுலோஸை செயற்கையாக உருவாக்க பலமுறை முயன்றும் தோல்வியையே தழுவியுள்ளனர். இவ்வளவுக்கும் நமது வளி மண்டலத்தில் ஆக்சிஜனும், ஹைட்ரஜனும், கார்பனும் கணக்கிலடங்காமல் கிடைத்தும் அறிவியல் அறிஞர்களால் செயற்கையாக உருவாக்க முடியவில்லை.



நம்மைச் சுற்றியுள்ள அத்தனை மரங்களும் பல மில்லியன் வருடங்களாக ஆக்சிஜன், கார்பன், தண்ணீர், சூரிய ஒளி போன்ற கலவைகளினால் கூட்டுத் தயாரிப்பாக தயாரிக்கப்பட்டு நம் கண் முன் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. ஹைட்ரஜன் இரண்டு பங்கும் ஆக்சிஜன் ஒரு பங்கும் கலந்த கலவையான தண்ணீரை ஊற்றி நாம் மரத்தை வளர்க்கிறோம். நெருப்பை அணைக்கும் தண்ணீரை ஊற்றி நெருப்பால் எரிக்கப்படும் மரத்தை வளர்க்கின்றோம். இது ஒரு முரண்பாடான நிகழ்வு அல்லவா? இது எவ்வாறு சாத்தியமாகிறது? இறைவன் நாடினால் எதுவும் முடியும் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக் காட்டு.

36:33. அன்றியம், இறந்து தரிசாகக் கிடக்கும் பூமி அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்; பின்னர் மழையினால் அதனை நாமே உயிர்ப்பித்து, அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகின்றோம்; அதிலிருந்துதான் இவர்கள் உண்கிறார்கள்.

36:34. மேலும், அதில் நாம் பேரீத்த மரங்களினாலும், திராட்சை(க் கொடி)களினாலும் தோட்டங்களை உண்டாக்குகிறோம்; இன்னும் அதில் நீரூற்றுக்களைப் பீறிட்டு ஓடச்செய்கின்றோம்.

36:35. அதன் பழவகைகளை அவர்கள் உண்பதற்காக; ஆனால் அவர்களுடைய கைகள் இதை உண்டாக்கவில்லை - ஆகவே அவர்கள் நன்றி செலுத்தமாட்டார்களா?



இந்த மரங்கள் எவ்வாறு உருவாகின்றது? இதன் செல்கள் எப்படி பரிணமிக்கின்றன? என்று ஆராய்ந்து சோர்ந்து போய் உள்ளனர் நமது விஞ்ஞானிகள். இது வரை நடந்த ஆராய்ச்சிகளில் எந்த முடிவும் இறுதியாக இதுவரை எட்டப்படவில்லை.

காடுகளைப் பற்றி ஆராய்ந்து வரும் ஒரு பிரிட்டன் நிறுவனம் 'மரம் கொடிகளைப் பற்றிய பல அரிய தகவல்கள் இன்று வரை நமக்கு அரிதாகவே கிடைத்து வருகிறது' என்கிறது.

Despite the knowledge resulting from earlier and ongoing research, there still exists a lack of information on the chemistry and structure of wood fibres. Large variations can be found within a single tree, from the pith to the bark and from the base to the top of a tree. Often the chemistry and structure of a wood cell are extremely heterogeneous and difficult to investigate with conventional techniques.2

A paper in the scientific journal Plant Physiology titled "Our Understanding of How Wood Develops is not Complete" describes the limited knowledge of the subject that scientists possess:

Considering the important role that wood is foreseen to play in the near future, it is surprising to see that our understanding of how wood develops is far from complete. With a few exceptions, very little is known about the cellular, molecular, and developmental processes that underlie wood formation. Xylogenesis represents an example of cell differentiation in an exceptionally complex form. This process is controlled by a wide variety of factors both exogenous (photoperiod and temperature) and endogenous (phytohormones) and by interaction between them. It is driven by the coordinated expression of numerous structural genes (some of known function) involved in cell origination, differentiation, programmed cell death, and heartwood (HW) formation and by virtually unknown regulatory genes orches trating this ordered developmental sequence. The presence of gene families and the extreme plasticity of the metabolism involved (as exemplified by the unusual behavior of plants with transformed cell walls; for review, see Fagard et al., 2000) add a further complexity to our understanding of the process of wood formation.3




The extraordinary creation in wood is emphasized thus in another scientific journal, Annals of Botany:
Wood formation is a highly complicated process involving an unbelievable variety of metabolic steps in the roots, stem and crown of shrubs and trees. At the centre of these processes is cambial activity which results in the release of young woody cells that undergo maturation until autolysis of the protoplast, indicating the final developmental stage. Later on, in various tree species, woody cells become further modified by an additional process called heartwood formation. The properties of wood that make it an appropriate raw material for many purposes are largely determined by the specific architecture of the cell walls. Difficulties in investigating these many developmental stages appear when routine techniques, which work well for soft plant tissues, are applied. Therefore, in most cases, these techniques need modification or the use of completely revised protocols to yield good results for woody tissues.4
In terms of absorbing the energy of low-speed blows and reducing the damage therefrom, wood is a most important material. The Second World War plane known as the “Mosquito” was made by compressing wood between strips of fiber board, making it the most damage-resistant plane of its time. The hardness and resistant nature of wood make it a very reliable material. Because wood breaks or cracks slowly enough to be visible from the outside, and that gives people enough time to take the necessary precautions .5


7.As seen in the picture to the left, wood consists of tube or straw-shaped cells. By combining one on top of the other, these cells, which make up the roots and trunks of plants, serve as channels that carry water and minerals right through the plant. This tisue, known as “xylem,” also constitutes a powerful structure that enables the plant to remain upright. To the right can be seen a slice of dry wood in cross-section. When dried out, the tube-like channels become hollow, as shown in the illustration.

The iron concentration inside plant cells is 1,000 times greater than that in the soil outside.8 Under normal condition, an exchange of matter from a high density region to a lower density one will take place. But exactly the opposite happens in plant roots, and the ions in the soil are easily able to pass into the root cells.9

Photosynthesis: The Superior Technology in a Miniature Factory
It is not only the wood and root parts of trees that cannot be obtained by artificial means, but also the leaves. Most important of the features that make leaves inimitable is their ability to make photosynthesis. Photosynthesis, one of the systems that scientists still do not fully understand, may be summarized as plants manufacturing their own nutrients. Thanks to the structure in plant cells that makes them able to make direct use of solar energy, they store solar energy, at the end of various complex processes, in the form of energy that can be used by human beings and animals. In addition, the photosynthetic energy stored in trees is also given off during burning. For example, the energy emitted by wood burned to heat a house is actually energy from the Sun stored during the formation of wood.10


1 http://www.forestpathology.org/wood.html; Wood Chemistry and Anatomy, 2005.
2 http://www.forestresearch.gov.uk/fr/INFD-6FMCUS; The Research Agency of the Forestry Commission, 2007.
3 Christophe Plomion, Gregoire Leprovost, Alexia Stokes, "Wood Formation in Trees", Plant Physiology, December 2001, Vol. 127, pp. 1513–1523.
4 Uwe Schmitt, "Chaffey, N.J. ed. Wood formation in trees—cell and molecular biology techniques", Annals of Botany, 2002, Vol. 90, no. 4, pp. 545-546.
5 Julian Vincent, "Tricks of Nature", New Scientist, 17 August 1996, Vol. 151, no. 2043, p. 39.
6 Julian Vincent, "Tricks of Nature", New Scientist, 17 August 1996, Vol. 151, no. 2043, p. 40.
7 http://www.smddrums.com/woodcell.htm
8 Malcolm Wilkins, Plantwatching, Facts on File Publications, New York, 1988, p. 119.
9 William K. Purves, Gordon H. Orions, H. Craig Heller, Life, The Science of Biology, 4th edition, W.H. Freeman and Company, p. 724.
10 http://www.montana.edu/wwwpb/pubs/mt8405.html; Michael Vogel, "Heating with Wood: Principles of Combustion", 2003.