Followers

Thursday, December 07, 2017

பாபர் மசூதியை இடித்தவர்களின் இன்றைய நிலை!

பாபர் மசூதியை இடித்தவர்களின் இன்றைய நிலை!

DNA ஊடகம், பாபர் மசூதி இடிப்பு நாளான நேற்று, ஒரு மாறுப்பட்ட பதிவை கொண்டு வந்திருந்தது. பல்வேறு இஸ்லாமிய இதழ்களில் முன்பு பேசப்பட்ட செய்தி தான் என்ற போதிலும், புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் அதில் இருந்தன. மசூதியை இடித்ததால் சங்பரிவாரங்களால் கொண்டாடப்பட்ட மூவர் பிற்காலத்தில் முஸ்லிமாகிய செய்தியையும், அவர்கள் இப்போது என்ன செய்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் சொல்லும் கட்டுரை அது.

பல்பீர் சிங், யோகேந்திர பால் மற்றும் சிவ பிரசாத். இதில் பல்பீர் சிங் சிவசேனா கட்சியின் முன்னணி பொறுப்பில் இருந்தவர். பாபர் மசூதியின் முகட்டில் முதலில் ஏறி ஈட்டியை இறக்கியவர். இவர் கொண்டு வந்த இரண்டு செங்கற்கள் பானிபட் சிவசேனா அலுவலகத்தில் இன்றும் காணப்படுகின்றன. காலப்போக்கில் இஸ்லாமிய கோட்பாடுகள் பிடித்து முஸ்லிமாகிவிட்ட இவரும் இவரது நண்பருமான யோகேந்திர பாலும், தங்களின் தவறுகளுக்கு பரிகாரமாக நூறு மசூதிகளை கட்டுவது அல்லது புணரமைப்பது என்று உறுதிமொழி ஏற்றிருந்தனர். இதுவரை சுமார் நாற்பது மசூதிகளை இவர்கள் கட்டிவிட்டதாக கூறும் DNA ஊடகம், கூடுதலாக, இஸ்லாமிய செய்திகளை பரப்பும் கல்வி நிறுவனம் ஒன்றையும் பல்பீர் சிங் (முஹம்மது அமீர்) ஹைதராபாத்தில் நடத்தி வருவதாக தெரிவிக்கிறது.

இந்த கட்டுரையின் மூன்றாவது நபரான சிவ பிரசாத், பஜ்ரங்தல் அமைப்பின் இளைஞர் அணி தலைவராக இருந்து, மசூதி இடிப்புக்கு முன்பாக சுமார் நாலாயிரம் இளைஞர்களுக்கு இது தொடர்பில் பயிற்சி அளித்தவர். பாபர் மசூதி இடிப்பில் பெரும் பங்காற்றிய இவர் இன்று முஹம்மது முஸ்தபாவாக மாறிவிட்டார். ஷார்ஜாவில் வசித்துவரும் இவரை, இஸ்லாமிய தழுவலுக்கு பிறகு குடும்பத்தினர் நிராகரித்துவிட்டனர். ஊருக்கு வந்தால் கொல்லப்படுவாய் என்ற சங்பரிவார அமைப்புகளின் அச்சுறுத்தலும் இவருக்கு இருப்பதாக விளக்குகிறது DNA ஊடக கட்டுரை.

இறைவன் நமக்கு தரும் படிப்பினைகளை நினைத்தால் ஆச்சர்யமாக தான் இருக்கிறது. DNA கட்டுரையை முழுமையாக படிக்க: https://goo.gl/wywGRy

அவர்களும் சூழ்ச்சி செய்தார்கள். இறைவனும் சூழ்ச்சி செய்தான்; சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் சிறந்த சூழ்ச்சி செய்பவன் இறைவனேயாவான்’

(
அல்-குர்ஆன் 3:54)

தகவல் உதவி
சகோ ஆஷிக் அஹமத்




5 comments:

vara vijay said...

Jerusalem?

Dr.Anburaj said...

மசூதிகளையும், சர்சுகளையும் மதிக்கும் இந்துக்கள் பாபர் மசூதியை மட்டும் இடித்தது ஏன்?

Posted: 06 Dec 2017 11:19 AM PST
"எது நடந்ததோ அது நல்லதற் கல்ல.பிறர் கையால் தமது வழிபாட்டுத்தலம் உடைபடும் போது எப்படிப்பட்ட வேதனை ஏற்படும் என்பதையாவது இப்போது முஸ்லிம்கள் உணர்ந்திருப்பார்கள்". #பாபர்மசூதி இடிக்கப்பட்ட பிறகு RSS தலைவர் தேவரஸ் கூறியது… (இஸ்லாமிய ஆட்சியாளர்களால் #காசியில் உள்ள விஸ்வநாதர் ஆலயம்,#மதுராவில் இருந்த கிருஷ்னர் ஆலயம்,#குஜராத்தில் இருந்த சோமநாதபுரம் ஆலயம் போன்ற ஆயிரக்கணக்கான இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டு அங்கு மசூதிகள் கட்டப்பட்ட வரலாற்றை நினைவு படுத்தி RSS தலைவர் இவ்வாறு கூறினார்.) டிசம்பர் 6 பாபர்மசூதி […]

Dr.Anburaj said...

அனைத்து மதங்களையும் அரவணைத்து கொள்ளும் குணம் இந்துமதத்திற்கு மட்டுமே உள்ளது என அத்வானி கூறினார்.


அத்வானி பேசியதாவது:இந்துமதத்துக்கு மட்டும் தான் அனைத்து மதங்களை அரவணைத்து கொள்ளும் குணம் உள்ளது. அதனால்தான் நம் இந்தியாவின் கலாசாரத்தை பல்வேறு நாடுகளும் வியந்து பார்க்கின்றன. அதுமட்டுமல்லாமல் இந்துமதம் மற்ற மதங்களின் நல்ல குணங்களை தன்னுடன் பொருத்திகொள்கிறது. இந்துமதத்தில் உள்ள நல்ல அம்சங்களை தெரிந்து கொள்வதால் மக்கள் நிம்மதி மற்றும் ஒற்றுமையுடன் உள்ளனர். சகிப்புதன்மை குணத்தாலேயேதான் நாட்டில் சகோதரத்துவம் வளர சாத்திய மாகிறது என்றார்.
-----------------------------------------------------------------------



Dr.Anburaj said...

மதம் வழிபாட்டுக்கானதுதான், ஆனால் அந்த வழிபாடு தேச ஒற்றுமைக்கானது! ஒருவன் ’நான் இந்து இல்லை’ என்று கூறும்போது வழிபாட்டைப் பொறுத்தமட்டில் பிரச்சனை இல்லை! ஆனால் தேசப்பக்தியைப் பொறுத்தமட்டில்?

“ஒருவன் மதம்மாறி போனால், எதிரிகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடிவிடுகிறது” – என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளதை இங்குநாம் நினைத்துப்பார்க்கவேண்டும்!

இந்துவாக வாழ்வது தேச ஒருமைப்பாட்டுக்கானது அல்ல, என வாதிடுவதே தேசத்துரோகமாகும்! ’இந்த குடும்பத்தை நான் மதிக்கிறேன் ஆனால் அம்மாவை கொலை செய்வேன்’, என்று ஒருவன் சொன்னால் அது எந்த அளவுக்கு குற்றமோ, அந்த அளவுக்கு குற்றமாகும், ’எனக்கு நாட்டுப்பற்று இருக்கிறது, ஆனால் நான் இந்துமதத்தை அழிக்கும் செயலில் ஈடுபடுவேன்’, என சொல்வது!

வழிபாட்டுக்காக மதம்மாறுகிறவர்களைவிட பணத்திற்காகவும் தேசத்துரோகத்திற்காக மதம் மாருகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது! தேசத்துரோகத்திற்காக மதம் மாறுகிறவர்களில் பலர் தங்களை கிருஸ்தவர் அல்லது முஸ்லீம் என காட்டிக்கொள்லாமல் இந்துவாக காட்டிக்கொண்டே செயல்படுகிறார்கள்! அவர்களின் இலக்கு அதிகமான இந்துக்களை மதம் மாற்றுவது! இந்துவாக காட்டிக்கொண்டு பேசினால்தான் நம்மைப்போல ஒரு இந்துவே சொல்றானே நாம் ஒத்துக்கொள்ள வேண்டியதுதான்! என்று சாதாரண இந்து கருதுவான் என்பது அவர்களின் திட்டமாக இருக்கிறது!

கிருஸ்தவ கிழக்கிந்திய கம்பெனிதான் இந்த திட்டத்தை வகுத்துக்கொடுத்து செயல்படுத்தியது! இந்த விசயத்தில் அவர்கள் சாதாரண மக்களையும் வேட்டையாடினார்கள், முக்கியமான பெரும்புள்ளிகளையும் வேட்டையாடினார்கள்! முக்கியமான புள்ளிகள் என்றால் மதமாற்ற வேட்டை வேகமாக நடக்கும் என்பது அவர்களின் கணிப்பாக இருந்தது! அவர்களின் வேட்டைக்கு இலக்கான முதல் முக்கியப்புள்ளி ஜவஹர்லால் நேரு! இவர்கள் ஏற்படுத்திய பாதிப்பு காந்தியிடமும் இருந்தது! கிழக்கிந்திய கிருஸ்தவ கம்ம்பெனியின் இந்த தாக்குதலால் அந்தகாலத்து காங்கிரஸ் தலைவர்கள் பலரும் பாதிக்கப்பட்டார்கள்! அவர்கள் தங்களை கிருஸ்தவன் என்றோ முஸ்லீம் என்றோ குறிப்பிடாமல் ”மதச்சார்பற்றவன்” என்று குறிப்பிட்டார்கள்!
ஒரு இந்து, ‘நான் இந்து இல்லை’ என சொல்லிக்கொள்வதுதான் ‘நான் மதசார்பற்றவன்’ என்பதன் பொருளாகும்! ஆனால் மதம்மாறி பெயரை மாற்றி வைத்துக்கொண்டபிறகு எவனும் ’நான் மதச்சார்பற்றவன்’ என்று சொல்லமாட்டான்! ’மதச்சார்பற்றவன்’ வேடம் போட்டிருக்கும் எவனும், கிருஸ்தவனாக அல்லது முஸ்லீமாக மதம் மாறியவனிடம்போய் ‘நீ மதச்சார்பற்றவன்’ என்று சொல்லமாட்டான்! இந்துக்களிடம் மட்டும்தான் அந்த தாக்குதல் நடத்தப்படும்! காரணம், இந்துக்களை மதம்மாற்றுவதுதான் இவர்களின் இலக்கு!

ஆனால் தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவித்தவுடன் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி ‘நான் ஒரு இந்து தேசியவாதி’ என குறிப்பிட்டுச் சொன்னார்!

நேரு காந்தி வரிசையில், ஆனால் அவர்களைவிட இன்னும் அதிகமான அளவில் கிருஸ்தவ கிழக்கிந்திய கம்பெனியால் பாதிக்கப்பட்டவர்கள் ஈ.வே.ராமசாமி நாயக்கர், அண்ணாத்துரை, கருனாநிதி போன்றவர்கள். இவர்களைப்போல இன்னும்பலர் இந்துப்பெயர்களை பயன்படுத்திக்கொண்டு இந்துமதத்தை கேவலமாக பேசினார்கள்! இப்படி கேவலமாக பேசுவதை கிருஸ்தவராகவோ முஸ்லீமாகவோ பெயர்மாற்றிக்கொண்டு செய்திருந்தால் அவர்களால் தொடர்ந்து செய்யமுடியாமல் போயிருக்கும்! எனவேதான் அவர்கள் கிருஸ்தவ கிழக்கிந்திய கம்பெனியின் திட்டப்படி இந்துவாக இருந்துக்கொண்டே இந்துவை தாக்கினார்கள்!

... 2

Dr.Anburaj said...

2
இந்த வரிசையில் இப்போது சோனியா, ராகுல், கெஜ்ஜிரிவால், மம்தா, ஸ்டாலின், வைக்கோ, திருமா வளவன், தா.பாண்டியன்,டி.ராஜ, சீமான், திருமுருகன் காந்தி, மனுஷபுத்திரன்,இந்து ராம், கமலகாசன், விஜய்,விஜயின் தந்தை இப்படியாக இன்னும்பலர் இருக்கிறார்கள்! இவர்கள் எல்லோருக்குமே மாற்றப்பட்ட ஒரு கிருஸ்தவ அல்லது இஸ்லாமிய பெயர் உண்டு! அதை ரகசியமாக வைத்திருப்பார்கள்! சிலருக்கு மதம்மாறிய பெயர் இல்லாமலும் இருக்கலாம்!

வைக்கோவை பொறுத்தமட்டில் கோபால்சாமி என்னும் பெயரை வைக்கோ என வைத்துக்கொண்டதே மதமாற்றத்தின்போதுதான்!


கிழக்கிந்திய கம்பெனி இன்று இல்லை! ஆனால் அந்த வேலையை செய்ய பல கிருஸ்தவ மிசினரிகளும் இஸ்லாமிய அமைப்புகளும் இருக்கின்றன! இவற்றிற்கு வெளிநாடுகளில் இருந்து பலகோடி பணம் தவறான வழிகளில் வருகிறது! இப்போது அந்த பணம்வரும் பாதை நரேந்திரமோடியின் நடவடிக்கைகளால் பெரும்பங்கு அடைக்கப்பட்டுள்ளது என்னும் நல்ல செய்தி இருந்தாலும் முழுமையாக தடுக்கப்படவில்லை என்பது கசப்பான செய்திதான்!

இந்துக்கள் யாரும் தங்களை இந்து என பெருமையாக சொல்லிக்கொள்ளக்கூடாது என உத்தரவிடும் வகையில் மதசார்பற்ற என்னும் வார்த்தையை நேருவும் காந்தியும் பிரகடனப்படுத்தினர்! ‘தில்லை நடராஜனையும் திருவரங்கநாதனையும் பீரங்கிவைத்து சுடும் நாள் எந்த நாளோ அதுதான் எங்களுக்கு நல்லநாள்‘ என்று, ஈ.வே.ரா, அண்ணாதுரை, கருனாநிதி, நெடுஞ்செழியன் போன்றோர் பேசினார்கள்! இன்றுவரை திமுகவினர் இப்படித்தான் பேசிவருகிறார்கள்! புதிதாக கோயில் கட்டுவதை குற்றமென சினிமாவில் சொன்ன நடிகனின் தந்தை ஆலய உண்டியலில் பணம்போடுவதை இழிவுபடுத்தி ஒரு பாதிரிபோல் பேசுகிறார்! இந்து அமைப்புகளால் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் திரைப்படத்திற்கு ஒரு நடிகன் ஆதரவு தெரிவிக்கிறார்!

எல்லோருமாக சேர்ந்து மோடி என்ன செய்தாலும் அதை எதிர்க்கிறார்கள்! மோடியை இவர்கள் எதிர்ப்பதற்கு அவர் தன்னை ”இந்து” என காட்டிக்கொள்வதே காரணம்! ஒரு இந்து தன்னை இந்து என காட்டிக்கொள்ளக்கூடாது என்பதுதான், கிருஸ்தவ மிசினரிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் திட்டப்படி காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டுகள், மற்றும் மதம்மாறி தலைவர்கள் மற்றும் நடிகர்களின் கொள்கையாகும்!

ஒரு இந்து “நான் ஒரு இந்து” என்று சொன்னால், இவன் தீவிரவாதி இவனை கொல்லுங்கள் என்பார்கள்! கொலைகளையும் செய்வார்கள்! அதே இந்து மதம்மாறிவிட்டு “நான் ஒரு கிருஸ்தவன், நான் ஒரு முஸ்லீம்” என்று சொன்னால்- ஐயோ பாவம் அவனுக்கு உதவுங்கள் என்று சொல்வார்கள்! இதுதான் இந்த அன்னிய கைக்கூலிகளின் செயலாகும்!

இந்தியா பலமாக இருப்பது என்பது இந்துமதம் பலமாக இருப்பதுதான்! காரணம் இந்துமதம்தான் இந்தியாவை புனிதமாக கருதுகிறது! இந்துக்களின் எண்ணிக்கையை குறைத்துவிட்டு கிருஸ்தவர்களின் மற்றும் முஸ்லீம்களின் எண்ணிக்கையை இந்துக்களின் எண்ணிக்கைக்கு இணையாக மாற்றிவிட்டு ஒற்றுமைப்படுத்துவதென்பது, முடியாத காரியமாகும்! ஏசுவின் ராஜியம் காணவேண்டும், அல்லாவின் ராஜியம் காணவேண்டும் என்பதுதான் அவர்களின் கனவாக இருக்கிறது! அவர்களை ஊட்டி வளர்ப்பது தேசத்தை துண்டாடுவதற்கு சமமாகும்! தேசத்தை துண்டாடுவதற்காகத்தான் அன்னிய சக்திகள் இந்த மதம்மாறிகளை கைக்கூலிகளாக பயன்படுத்துகின்றனர்!

கமலகாசன் ஊழலை ஒழிக்க கட்சி துவங்குகிறாராம் முதலில் நான் முதல்வராக என்று சொன்னார் பின்பு ஊழலை ஒழிக்க என்கிறார்! சரி மோடி என்ன செய்கிறார்? ஊழலைதானே ஒழிக்கிறார்? நீங்கள் ஊழலை ஒழிப்பதாக சொல்லிக்கொண்டு தினகரனை ஏன் ஆதரிக்கிறீர்கள்? ஊழலை ஒழிக்கவேண்டும் என சொல்பவர்கள் ஏன் மோடியை ஆதரிக்கவில்லை? ஊழலை ஒழிப்பது இவர்களின் நோக்கமல்ல! இந்து மதத்தை ஒழிப்பதுதான் இவர்களின் நோக்கம்! இந்துவின் காவலனாக விழங்கும் மோடியை ஒழிக்கவேண்டியது இவர்களின் முதல் கடமையாக இருக்கிறது! அதற்காக இவர்கள் திருநீறு பூசி குங்குமப்பொட்டும் வைப்பார்கள்!

இந்த வேடதாரிகள் விசயத்தில் தேசப்பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்! பிரதமர் நரேந்திரமோடி இந்திய பொருளாதாரத்தையும் காப்பாற்றுவார், இந்திய பன்பாட்டையும் காப்பாற்றுவார்! பிரதமரை பிந்தொடர்ந்து அவர் திட்டங்களுக்கு ஆதரவு தரவேண்டியது தேசப்பக்தர்களின் கடமையாகும்!