Followers

Saturday, December 09, 2017

ஐந்து வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

ஐந்து வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

ஹிசார் : அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தின் உக்லானா கிராமத்தில் 5 வயது சிறுமி ஒருவரை கடத்தி சென்ற, கற்பழித்து கொன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

நேற்று இரவு வீட்டில் தாயாருடன் சிறுமி தூங்கி கொண்டிருந்தார். காலையில் தாயார் எழுந்து பார்த்த போது சிறுமியை காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடி பார்த்த போது, அருகில் இருந்த குளம் அருகே உடல் முழுதும் ரத்த காயங்களுடன் பிறப்புறுப்பில் குச்சி சொருகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். வாயிலும் ரத்தம் வந்து கொண்டிருந்தது. முதல்கட்ட விசாரணையில் சிறுமி கொடூரமாக கற்பழிக்கப்பட்டது தெரியவந்தள்ளது. குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைத்துள்ள போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேத பரிசோதனை நடத்திய டாக்டர் ரீத்து குப்தா கூறுகையில், பிறப்புறுப்பில் தாக்கப்பட்டதால் தான் சிறுமி உயிரிழந்தார். இதனால், அந்த சிறுமிக்கு உடல் உள்பக்கத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. தோள்பட்டை, கை, மூக்கில் நகக்கீறல்கள் காணப்பட்டுள்ளன. கழுத்து பகுதியிலும் ரத்தம் வந்தது தெரியவந்தது.

சம்பவத்தை கேள்விபட்ட கிராம மக்கள் குற்றவாளியை உடனே பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டதுடன், கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

தகவல் உதவி
தினமலர்

10-12-2017


No comments: