Followers

Monday, December 11, 2017

மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஒரு குடும்பமே கழுத்தறுத்து கொலை!

மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஒரு குடும்பமே கழுத்தறுத்து கொலை!

சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது. தாய், மனைவி, மகள், மகனை கொலை செய்த தொழிலதிபர் தானும் தற்கொலைக்கு முயன்றது போலீஸ் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில், "சென்னை பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன். இவர் ஜவுளிக்கடை நடத்தி வந்துள்ளார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில், விரக்தியில் இருந்த தாமோதரன் தனது தாய் சரஸ்வதி, மனைவி தீபா, மகன் ரோசன், மகள் மீனாட்சி ஆகியோரை நேற்றிரவு கழுத்தறுத்து கொலை செய்ததாகத் தெரிகிறது.

மேலும், சம்பவத்துக்கு முன்னர் அவர் 5 பக்க கடிதம் ஒன்றை எழுதிவைத்துள்ளார். அதில், ஏற்கெனவே தொழில் நஷ்டத்தில் இருந்த தான் கடந்த டிசம்பர் மாதம் அமல்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு நீக்கத்தால் மேலும் நொடித்துப்போனதாக குறிப்பிட்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸார் சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

காயங்களுடன் மீட்கப்பட்ட தாமோதரன் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
12-12-2017




No comments: