Followers

Friday, July 03, 2015

சவுதியில் பாறை நகருகிறதாம் - தினகரனின் புருடா.... :-)



ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் மட்டும் சுமார் 30 நிமிடங்களுக்கு மிதக்கும் விசித்திர பாறை !!

சவுதி அரேபியாவில் AL-Hassa பகுதியில் ஒரு பெரிய பாறையொன்று ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் சுமார் 30 நிமிடங்களுக்கு தரையிலிருந்து 11 செண்டி மீட்டர் உயரத்தில் மிதக்கிறதாம். 1989ல் ஏப்ரல் மாதம் அதாவது 17 வருஷத்துக்கு முன்பு இந்த பாறைக்கு பின்னால் ஒரு தீவிரவாதி ஒளிஞ்சிருந்ததாகவும் அவனை போலீசார் என்கவுண்டரில் போட்டுத்தள்ளியதாக கூறுகின்றனர்.இப்பவும் அந்த பாறையில் ரத்தக்கறைகளை கானலாமெனவும், கல் மேலே உயரும் போது அந்த கறை கறுத்து ஈரமாக இருப்பதாகவும் கூறுகின்றனர். ஊர் மக்கள் அதை அழிக்க முயன்றதாகவும்... அழித்தாலும் அது பின்னர் தோன்றியதாகவும் கூறுகின்றனர்.

தகவல் உதவி
தினகரன் நாளிதழ்

சுத்த பொய். ஒரு சிறந்த நாளிதழ் இது போன்ற ஆதாரமற்ற செய்திகளை வெளியிடலாமா? இஸ்லாத்தை மேன்மைபடுத்தி எத்தனையோ செய்திகள் தினம் வந்து கொண்டிருக்க இந்த செய்தியை தேடிப் பிடித்து போடுவதன் மூலம் இஸ்லாம் பத்தோடு பதினொன்று என்பதை வாசகர்களுக்கு காட்டி முட்டாளாக்குவதானேயொழிய வேறொன்றுமில்லை.

சவுதி அரேபியாவில் 25 வருடம் வேலை பார்க்கும் எனக்கு இந்த செய்தியை யாரும் சொன்னதில்லை. அல் ஹஸாவுக்கும் சென்றுள்ளேன். அப்படி ஒரு பாறையை நான் கண்டதில்லை. அதற்கு சொல்லப்பட்ட கதையையும் நான் கேட்டதில்லை. இணைய தளத்தில் போட்டதை எடுத்து தினகரன் போட்டுள்ளது. அதற்கு சவுதி அரசின் ஆதாரத்தையும் வெளியிடவில்லை.

வெப்ப விரிசலால் சில நேரம் பாறைகள் விரிவடைவதால் சிறிது அசைவுகள் ஏற்படலாம். இது நம் நாட்டிலும் ஏற்படும். நகரும் கற்களை நாமும் படித்திருக்கிறோம். அதற்கு அறிவியல் காரணங்கள் உண்டு. அது போன்று ஆய்வு செய்து போடாமல் இஸ்லாத்தின் பெயரால் கட்டுக் கதைகளை அவிழ்த்து விடுவதை தினகரன் இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்.

http://www.dinakaran.com/Gallery_Detail.asp…

No comments: