
World Assembly of Muslim Youth (WAMY) 'வாமி' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலமாக ஜெத்தாவிலிருந்து 22 கண் பார்வையற்றவர்கள் புனித உம்ரா பயணத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த அமைப்பின் டைரக்டர் முஹம்மத் அல் ஜஹ்ரானி கூறும் போது 'இவ்வாறான நிகழ்ச்சிகள் வருடம் முழுக்க நடத்த திட்டமிட்டுள்ளோம். இது போன்ற நிகழ்வுகள் குறையுடைய மக்களின் மனதில் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. பலரிடமிருந்து நிறைய கோரிக்கைகளும் வந்துள்ளது. வருங்காலத்தில் இன்னும் சிறப்பாக செய்ய திட்டமிட்டுள்ளோம்.' என்று கூறினார்.
இறைவன் இந்த குறையுடைய மக்களின் உம்ரா பயணத்தை ஏற்றுக் கொண்டு அதற்குரிய கூலியைத் தருவானாக!
தகவல் உதவி
சவுதி கெஜட்
09-07-2015
No comments:
Post a Comment