
18-08-2015 அன்று 1500 பேர் கொண்ட முதல் தாய்லாந்த் ஹாஜிகள் குரூப் மதினா விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த வருடம் தாய்லாந்திலிருந்து மட்டும் 10400 பேர் ஹஜ் பயணம் செய்வதற்கு முன் பதிவு செய்துள்ளனர். தாய்லாந்த் எம்பாஸியின் மூத்த அதிகாரி தானிஸ் நா சொங்க்லா விமான நிலையம் வந்து தனது நாட்டு ஹாஜிகளை வரவேற்று உபசரித்தார்.
'தாய்லாந்து அரசு ஹாஜிகளின் புனித பயணத்தை மிக முக்கிய நிகழ்வாகக் கருதுகிறது. ஹாஜிகளின் முதல் குரூப்பை வரவேற்கும் வாய்ப்பு பெற்றதை எனது பாக்கியமாக கருதுகிறேன்.ஹாஜிகளின் பயணத்தில் எந்த சிக்கலும் இல்லாமல் தங்கள் கடமைகளை செய்ய ஒத்துழைத்து வரும் சவுதி அரசுக்கு தாய்லாந்து அரசின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார் நா சொங்க்லா.
தகவல் உதவி
சவுதி கெஜட்
19-08-2015
No comments:
Post a Comment