Followers

Wednesday, January 25, 2012

ஆழ் கடல் வழிகளில் உள்ள இருள் வெளிகள்: ஓர் அற்புதம்!

ஆழ் கடல் வழிகளில் உள்ள இருள் வெளிகள்: ஓர் அற்புதம்!

'அல்லது ஆழ் கடலில் உள்ள பல இருள்களைப் போன்றது. ஓர் அலை அதை மூடுகிறது. அதற்கு மேலே மற்றொரு அலை. அதன் மேலே மேகம். ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல இருள்கள். அவன் தனது கையை வெளிப்படுத்தும் போது அதைக் கூட அவனால் பார்க்க முடியாது. இறைவன் யாருக்கு ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியும் இல்லை.'

-குர்ஆன்24:40

விமானத்தில் பயணிக்கும் ஒருவர் மேகத்துக்கு மேல் பறந்தால் சூரியனின் பிரகாசத்தை நன்றாக உணருவார். அதே விமானம் மேகத்துக்கு கீழே பறக்கும் போது முன்பு இருந்த சூரியனின் பிரகாசம் மட்டுப் படுவதை உணருவார். சூரியனின் கதிர்கள் மேகத்தை ஊடுருவ முடியாமல் தடுக்கப்படுவதால்தான் இத்தகைய மாற்றத்தை நம்மால் உணர முடிகிறது.




மேகங்கள் தடுப்பதால் இன்றைய நவீன அளவைகளின் தொழில் நுட்ப உதவி கொண்டு சூரியனின் ஒளிக் கதிர்கள் 30 சதவீதம் வரை கடலின் மேற்பரப்பில் பிரதிபலிப்பதாக அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். ஒளி நிற மாலைகளின் ஏழு வண்ணங்களையும் கடலின் மேற்பரப்பு கிரகித்துக் கொள்கிறது. நீல நிறத்தைத் தவிர மற்ற வண்ணங்களெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக 200 மீட்டர் ஆழத்துக்குள் உறிஞ்சப்படுகிறது. ஆனால் அதற்கு கீழே நீங்கள் செல்ல செல்ல நீல நிறமும் மறைந்து போய் இருள்வெளிகள் சூழ ஆரம்பித்து விடுகிறது. 1000 அடி ஆழம் வரை நீங்கள் சென்றால் எந்த ஒரு ஒளியையும் உங்களால் காண முடியாது. உங்கள் கைகளை நீங்கள் பார்க்க நினைத்தாலும் உணரத்தான் முடியுமே யொழிய கண்களால் பார்க்க முடியாது.



கடலின் ஆழத்தில் இருள் வெளிகள் எவ்வாறு உருவாகின்றது என்பதை விளக்கும் படம்.



இன்று நாம் கடலின் ஆழத்தையும் அதன் தன்மையையும் வெகு சுலபமாக கண்டு பிடித்து விட முடிகிறது. ஆக்சிஜன் சிலிண்டர்களைக் கட்டிக் கொண்டு பல நாள் கடலுக்கடியில் ஆராய்ச்சி செய்கிறோம். நீர் மூழ்கி கப்பல்களின் உதவி கொண்டு கடலின் ஆழத்தை ஓரளவு நம்மால் நெருங்க முடிகிறது. ஆளில்லா நீர் மூழ்கி சாதனங்களில் கேமராக்களைப் பொறுத்தி கடலின் தன்மைகளை அடர்த்தியை இப்பொழுது அறிந்து கொள்கிறோம். இது போன்ற சிறந்த உபகரணங்கள் இல்லாமல் மனிதனால் 70 மீட்டருக்கு மேல் கடலின் ஆழத்துக்கு செல்ல முடியாது. அந்த காலத்தில் முத்து குளிப்பவர்கள் இருந்துள்ளார்களே என்ற கேள்வியும் வரும. அவர்கள் எல்லாம் கடல் ஆழம் குறைந்த பகுதிகளிலேயே தங்கள் தொழிலை செய்து வந்தனர. நாமோ ஆயிரம் மீட்டர் ஆழத்தையும் அதற்கும் கீழான ஆழத்தையும் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். இருள் வெளிகள் ஆரம்பமாகும் 200 மீட்டர் ஆழம் வரை கூட மனிதனால் எந்த உபகரணமும் இல்லாமல் பயணிக்க முடியாது. இத்தனை வசதி வாய்ப்புகளும் விஞ்ஞானிகளுக்கு கிடைத்த பிறகுதான் கடலின் ஆழத்தில் ஏற்படும் மாற்றங்களை தற்காலங்களில் கண்டறிய முடிந்தது.





மேல் அடுக்கில் உள்ள சிகப்பு நிறம் 10 மீட்டருக்குள் கிரகிக்கப்படுகிறது. பின்னர் 50 மீட்டர் ஆழத்தில் மஞ்சள் கதிர்கள் கிரகிக்கப்படுகிறது. 100 மீட்டர் ஆழத்தில் பச்சைக் கதிர்கள் உறிஞ்சப்படுகிறது. 200 மீட்டர் ஆழம் சென்றவுடன் நீல நிறக் கதிர்களும் மறைய ஆரம்பிக்கின்றன. கடைசியில் உறிஞ்சப்படும் நிறம் ஊதாவாகையால் நமது கண்களுக்கு கடலின் மேற்பரப்பு நீலமாகத் தெரிகிறது.

அடுத்து கடலின் அடியில் ஒன்றின் மேல் ஒன்றாக அலைகள் ஏற்படுவதையும் இங்கு நாம் கவனிக்க வேண்டும். இங்கு ஏற்படும் அலைகளின் கீழ் மட்ட நீரின் அடர்த்தியும் மேல் மட்ட நீரின் அடர்த்தியும் வேறுபடுவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.இங்கு ஏற்படும் இந்த அலைகளையும் அதன் அடர்த்தியையும் நாம் நமது சாதாரண கண்களைக் கொண்டும் காண இயலாது. மேலும அதற்க்கான கடல்சார்ந்த படிப்பும், கடலின் உப்புத் தன்மையைப் பற்றிய அறிவும், கடல் நீரின் அடர்த்தியை விளங்கும் ஆற்றலும் இருந்தால்தான் உங்களால் சாத்தியப்படும்.



கடலின் கீழ் பரப்பும் மேல்பரப்பும் அடர்த்தியில் வெறுபடுவதை சுட்டிக்காட்டும் படம்.

படத்தில் கடல் நீரின் இரண்டு அடுக்குகளுக்கு இடையில் உள்ள அலைகளை நாம் காணக் கூடியதாக இருக்கிறது. கீழ் அடுக்கு மேல் அடுக்கை விட அடர்த்தி அதிகமாக உள்ளதை இங்கு நாம் கவனிக்க வேண்டும். இவை எல்லாம் சமீப காலங்களில்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஒளியின் வேகம் வினாடிக்கு 300000 கிலோ மீட்டராகவும் நீருக்கு அடியில் அதே ஒளியின் வேகம் 225000 கிலோ மீட்டராகவும் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் வரை கூட சூரிய ஒளியால் ஊடுருவிச் செல்ல முடியவில்லை. 200 மீட்டர் ஆழம் வரை சன்னம் சன்னமாக குறைந்துமுடிவில் ஒளியே இல்லாமல் போக காரணம் தண்ணீரின் மேல் மட்ட கீழ்மட்ட அடர்த்தியும் அதற்கு மேல் அங்கு அலைகள் தடுப்புகளாக தடுப்பதுவுமே முக்கிய காரணம். சராசரி கடலின் ஆழமாக விஞ்ஞானிகள் குறிப்பிடுவது 3795 மீட்டராகும். கிட்டத்தட்ட எட்டு அல்லது ஒன்பது கிலோ மீட்டர் ஆழத்தை அன்றைய மனிதனால் கற்பனையாவது செய்து பார்த்திருக்க முடியுமா? என்பதை இங்கு நாம் சிந்திக்க கடமைபட்டுள்ளோம்.

'அல்லது ஆழ் கடலில் உள்ள பல இருள்களைப் போன்றது. ஓர் அலை அதை மூடுகிறது. அதற்கு மேலே மற்றொரு அலை. அதன் மேலே மேகம். ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல இருள்கள். அவன் தனது கையை வெளிப்படுத்தும் போது அதைக் கூட அவனால் பார்க்க முடியாது. இறைவன் யாருக்கு ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியும் இல்லை.'

-குர்ஆன்24:40

இந்த வசனத்தை இன்னும் சற்று ஆராய்வோம்:

1.நாம் கடலின் ஆழத்துக்கு சென்றோமானால் பல அடுக்குகளை கொண்ட இருள்களை காண முடியும் என்று இந்த வசனத்தில் விளங்குகிறோம்.

ظلمات 2. என்ற அரபி வார்த்தைக்கு இருள் என்று பொருள் வரும். இங்கு இந்த வார்த்தையை இறைவன் இருள்கள் என்று பன்மையில் குறிக்கிறான். இதுவும் கூட தேர்ந்தெடுத்து போடப்பட்ட வார்த்தை. ஏனெனில் கடல் நீர் பல அடுக்குகளால் பல வேறு அடர்த்தியில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அந்த சூழ்நிலையை இருள்கள் என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும்.

3.அடுத்து 'அவன் தனது கையை வெளிப்படுத்தும் போது அதைக் கூட அவனால் பார்க்க முடியாது' என்று சொல்லப்படுகிறது. மேலே நாம் பார்த்த அனைத்து உபகரணங்களும், அறிவியல் அறிவும் இருந்தால் தான் இப்படி ஒரு வார்த்தையை சொல்ல முடியும்.

ஆனால் முகமது நபியோ கடலை பார்த்திராதவர். எழுதப் படிக்கவும் தெரியாதவர். அங்கு வாழ்ந்த சமூகத்தினரும் கூட மெத்த படித்தவர்கள் கிடையாது. இந்த நிலையில் மேற்கண்ட வசனங்களை நாம் சிந்தித்து பார்ப்போம். எப்படி இந்த மனிதரால் இது போன்ற ஒரு வார்த்தை பிரயோகத்தை உபயோகப்படுத்த முடிந்தது?

அடுத்து இது போன்ற ஒரு வார்த்தையை அவர்கள் மத்தியில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. ஏனெனில் கடலின் ஆழத்தின் இருள்களைப் பற்றி அன்றைய மக்கள் முகமது நபியிடம் கேட்கவும் இல்லை. கடலையே பார்த்திராத அந்த மக்களுக்கு இது பற்றிய அறிவும் இருந்திருக்க வாய்ப்பும் இல்லை.



'இது முன்னோர்களின் கட்டுக் கதை அதை இவர் எழுதச் செய்து கொண்டார். காலையிலும் மாலையிலும் அது இவருக்கு வாசித்துக் காட்டப்படுகிறது.' எனவும் கூறுகின்றனர்.

'வானங்களிலும் பூமியிலும் உள்ள இரகசியத்தை அறிந்தவனே அதை அருளினான்' என முஹம்மதே கூறுவீராக! அவன் மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.


-குர்ஆன் 25:5,6

Professor Rao says: "It is difficult to imagine that this type of knowledge was existing at the time around 1400 years back. Maybe some of the things they have simple ideas about such, but to describe those things in great detail is very difficult. So, this is definitely not a simple human knowledge. A normal human being cannot explain this phenomenon in that much detail. So I thought the information must have come from a supernatural source."
Yes, the source of such knowledge must be from a level beyond that of man. It cannot be from nature, as Professor Rao said, but this is far beyond nature, and far beyond human capability. What Professor Rao was trying to say is that this is something which cannot be attributed to a natural being, for it is truly the speech of the one who knows nature, the universe and its secrets, as the Qur'an tells us:
Say: The (Qur'an) was sent down by Him who knows the secrets (that is) in the heavens and the earth... (Qur'an 25:6).


Prof. Ramakrishna Rao, in "Muhammad the Prophet of Islam":

"The personality of Muhammad, it is most difficult to get into the whole truth of it. Only a glimpse of it I can catch. What a dramatic succession of picturesque scenes! There is Muhammad, the Prophet. There is Muhammad, the Warrior; Muhammad, the Businessman; Muhammad, the Statesman; Muhammad, the Orator; Muhammad, the Reformer; Muhammad, the Refuge of Orphans; Muhammad, the Protector of Slaves; Muhammad, the Emancipator of Women; Muhammad, the Judge; Muhammad, the Saint. All in all these magnificent roles, in all these departments of human activities, he is alike a hero." ... Muhammad is the "Perfect model for human life."



1000 மீட்டருக்கும் 5000 மீட்டருக்கும் இடைப்பட்ட கடலின் ஆழத்தில் மிக சக்தி வாய்ந்த கேமராககளின் துணை கொண்டு எடுக்கப்பட்ட காணொளி. எங்கும இருட்டு. எதிலும் இருட்டு. ஆனாலும் அங்கும் உயிரினங்களை இறைவன் பரவ விட்டிருக்கிறான். அங்கு வாழும் உயிரினங்களுக்கு பிரத்தியேகமாக உடலிலேயே ஒளி உமிழும் தன்மையை ஏற்படுத்தியுள்ளான். படைத்தவனின் கருணையை என்னவென்பது. இது வரை நான் பார்த்திராத உயிரினங்கள்.

'அவனே இறைவன்! படைப்பவன்: உருவாக்குபவன்: வடிவமைப்பவன்'-குர்ஆன் 59:23

ஆம்! வடிவமைப்பவனிலெல்லாம் சிறந்த வடிவமைப்பவன். என்ன ஒரு நேர்த்தி: என்ன ஒரு அழகு: புகழ வார்த்தைகள் இல்லை. இந்த காணொளியைப் பார்த்தவுடன் என் வாயிலிருந்து வந்த வார்த்தைகளே இவை....

الله اكبر....الله اكبر.....الله اكبر

அல்லாஹூ அக்பர்....அல்லாஹூ அக்பர்......அல்லாஹூ அக்பர்.........

47 comments:

அரபுத்தமிழன் said...

பதிவு அருமை ஜசாக்கல்லாஹ்.

நட்புடன் ஜமால் said...

சுஃபானல்லாஹ் ...

இன்னும் இன்னும் கடல் பற்றி தெரிந்து கொள்ள ஆவலுண்டு சமயம் இருப்பின் பகிருங்களேன் ...

aaa said...

GOOD & NICE ARTICLE.WELLDONE BRO.WE EXPECT MORE ARTICLE LIKE THIS FROM YOU.INSHA ALLAH.ALLAH ALWAYS WITH YOU.

சார்வாகன் said...

அப்பாடா ரொம்ப நாள்களுக்கு பிறகு மத [புத்தக] அறிவியல் பதிவு .மிக்க நன்றி.இதைத்தான் எதிர்பார்த்தோம். வி சே குறித்த பதிவுகள்[கொஞ்சம் தவறினால் என்ன ஆவது!!!!!!] அச்சமூட்டவது போல் மத அறிவியல் செய்வது இல்ல என்பதால் தைரியமாக விவாதிக்க்லாம.

முதலில் அந்த வசனத்தின் உண்மையான பொருள் முதலில் இருந்தே இப்போது வரை அப்ப்டியே இருந்ததா என்பதை பார்ர்க்க வெண்டும். இதனை வரும் பின்னூட்டங்களில் பார்ப்போம்.
அதற்கு முதலில் சகோ சுவனன் பதிவில் கூறிய சில விவரங்கள் சரியாக இருக்கும் வாய்ய்புகளை பார்ப்போம்.
1. //ஆனால் முகமது நபியோ கடலை பார்த்திராதவர். எழுதப் படிக்கவும் தெரியாதவர். அங்கு வாழ்ந்த சமூகத்தினரும் கூட மெத்த படித்தவர்கள் கிடையாது//.
முகமது கடல் பார்க்காமல் இப்படி கூற முடியுமா??

2877. & 2878. அனஸ்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மில்ஹானின் மகளான உம்மு ஹராம்(ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கு சாய்ந்து அமர்ந்து (உறங்கிக்) கொண்டிருந்து, பிறகு (விழித்தெழுந்து) சிரித்தார்கள். உம்முஹராம்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! ஏன் சிரிக்கிறீர்கள்?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'என் சமுதாயத்தில் சிலர் இறைவழியில் (போரிடுவதற்காகக்) கடலில் பயணம் செய்வார்கள். அவர்களின் நிலை, கட்டில்களில் (சாய்ந்து) வீற்றிருக்கும் அரசர்களைப் போன்றதாகும்" என்று கூறினார்கள். அதற்கு உம்மு ஹராம்(ரலி), 'என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! இவரையும் அவர்களில் ஒருவராக ஆக்குவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். பிறகு மீண்டும் அவ்வாறே (சாய்ந்து அமர்ந்தவாறு உறங்கிக் கொண்டிருந்துவிட்டு பிறகு விழித்தெழுந்து) சிரித்தார்கள். முன்பு கேட்டதைப் போன்றே, 'ஏன் சிரிக்கிறீர்கள்?' என்று நபி(ஸல்) அவர்களிடம் உம்மு ஹராம்(ரலி) கேட்டார்கள். நபி(ஸல்) அவர்களும் முன்பு (பதிலளித்ததைப்) போன்றே பதிலளித்தார்கள். அதைக் கேட்டு உம்மு ஹராம்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம், 'என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் (கடல் பயணம் செய்து அறப்போருக்கு) முதலாவதாகச் செல்பவர்களில் ஒருவராக இருப்பீர்கள். பிற்பாடு செல்பவர்களில் ஒருவராக இருக்க மாட்டீர்கள்" என்று கூறினார்கள். பிறகு, உம்மு ஹராம்(ரலி) உபாதா இப்னு ஸாமித்(ரலி) அவர்களை மணந்தார்கள். பிறகு கரழா இப்னு அப்தி அம்ர் என்பவரின் மகளுடன் (அறப் போருக்காகக்) கடல் பயணம் செய்தார்கள். அவர்கள் (போர் முடிந்து) புறப்பட்டபோது தம் வாகனப் பிராணியின் மீது ஏற, அது அவர்களைக் கீழே தள்ளிவிட்டது. அவர்கள் அதிலிருந்து விழுந்து இறந்துவிட்டார்கள்.
Volume :3 Book :56
(continue)

சார்வாகன் said...

திரு முகமது வின் மருமகன் திரு உத்மான் உள்ளிட்ட பலர் அபிசீனியாவிற்கு கப்பலில் சென்றதும் வரலாறு.இன்னும் பாருங்கள் கடலில் கிடைத்த ஒரு பெரிய மீனை முகமது உட்பட்ட பலர் சாப்பிட்டனர் என்றும் கூறுகிறது.


4362. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் 'கருவேல இலைப்' படைப் பிரிவில் சென்றோம். அபூ உபைதா(ரலி) எங்களுக்குத் தளபதியாக நியமிக்கப்பட்டார்கள். எங்களக்குக் கடுமையான பசி ஏற்பட்டது. அப்போது இறந்த (பெரிய) மீன் ஒன்றைக் கடல், (கரையில் கொணர்ந்து) எறிந்தது. (அதற்கு முன்) அதைப் போல் (ஒரு மீனை) நாங்கள் பார்த்ததேயில்லை. அது 'அம்பர்' என்று அழைக்கப்படுகிறது. அதிலிருந்து அரை மாதம் நாங்கள் உண்டோம். அபூ உபைதா அவர்கள் அதன் (விலா) எலும்புகளில் ஒன்றை எடுத்து பூமியில் நட்டுவைக்க (அதன் கீழே) ஒருவர் வாகனத்தில் சென்றார்.
அறிவிப்பாளர்: அபுஸ் ஸுபைர்(ரஹ்) கூறினார்.
ஜாபிர்(ரலி) இவ்விதம் கூற கேட்டேன்.
அபூ உபைதா(ரலி), 'உண்ணுங்கள்" என்று கூறினார்கள். நாங்கள் மதீனாவுக்கு (திரும்பி) வந்தபோது நபி(ஸல்), அவர்களிடம் அதைச் சொன்னோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் (கடலிலிருந்து) வெளிப்படுததிய அந்த உணவை உண்ணுங்கள். (அதனால் தவறில்லை) உங்களுடன் (அதில் சிறிது) இருந்தால் நமக்கும் உண்ணக் கொடுங்கள்" என்று கூறினார்கள். உடனே, அவர்களில் சிலர், நபி(ஸல்) அவர்களிடம் (அந்த மீனில்) ஒரு துண்டைக் கொண்டு வந்தனர். அதை நபி(ஸல்) அவர்கள் உண்டார்கள்.
Volume :4 Book :64
2. ஆகவே அக்கலத்தில் கடல் பயணம் சாதணமான ஒன்று.அரேபியா தமிழகம் கூட கடல்வழி தொடர்பு இருந்தது என்பதும் உண்மை

3. முக‌ம‌து க‌வில் க‌ட‌ல் ப‌ய‌ண‌ம் செய்ப‌வ‌ர்க‌ளை பார்த்த‌தாக் கூறுகிறார்.இது குரானில் குறிப்பிடாத‌ ஒன்று.குரான் இல்லாத‌ இறைச் செய்தி உண்டு என்றே பி.ஜே வும் கூறுகிறார்.இதுவும் அந்த‌ வ‌கையா?
(ப‌திலின் பிற‌கு தொட‌ரும்)

suvanappiriyan said...

சகோ சார்வாகன்!

//திரு முகமது வின் மருமகன் திரு உத்மான் உள்ளிட்ட பலர் அபிசீனியாவிற்கு கப்பலில் சென்றதும் வரலாறு.இன்னும் பாருங்கள் கடலில் கிடைத்த ஒரு பெரிய மீனை முகமது உட்பட்ட பலர் சாப்பிட்டனர் என்றும் கூறுகிறது.//

முகமது நபி தனது வாழ்நாளில் அதிக காலங்களை மெக்காவிலும் மதினாவிலும் கழித்திருக்கிறார். வரலாற்று நூல்களில் கடல் பயணம் செய்த ஒரு சில தோழர்கள் கடலின் தன்மையைப் பற்றியோ கடலின் ஆழத்தைப் பற்றியோ சொன்னதாக ஹதீதுகள் பதியப்படவில்லை. வாகன வசதி இல்லாத அந்த காலத்தில் வறுமையில் உழன்ற அந்த காலங்களில் நெடும் பயணம் என்பது அந்த மக்களுக்கு சாத்தியமில்லாத ஒன்று. 5 சதவீதத்துக்கும் குறைவான நபர்களே கடற்பயணம் மேற்கொண்டவர்கள். அந்த மக்கள் இது சம்பந்தமான கேள்விகளையும் முகமது நபியிடம் வைக்கவிலலை. பின்னால் வரக் கூடிய அறிவியல் அறிவு நிரம்பிய மக்கள் இந்த வசனங்களை எல்லாம் ஆய்ந்து இது இறை வேதம்தான் என்ற முடிவுக்கு வர வேண்டும் என்ற ஏற்பாட்டிலேயே இத்தகைய வசனங்களையும் இறைவன் ஆங்காங்கே தெளித்திருக்கிறான் என்று எண்ணுகிறேன்.

அவர்கள் சிந்திப்பதற்காக இந்தக் குர்ஆனில் பல விஷயங்களைத் தெளிவுபடுத்தியுள்ளோம். அது அவர்களுக்கு வெறுப்பையே அதிகப்படுத்துகிறது.
-குர்அன் 17:41

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்!

வாஞ்சூர பாய், அரபுத் தமிழன், நட்புடன் ஜமால், ஹிமாஸ் நிலர் மற்றும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் வருகை புரிந்து கருத்தைப் பதிந்தமைக்கு நன்றி!

ஜாஹிர் ஹுஸைன் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
சகோ மாஷா அல்லாஹ் உண்மையில் பேச வாய் வரவில்லை
அல்லாஹு அக்பர்

Anonymous said...

Brother I understand you dont have any rights to compare two great religions by any means. Bro post about The arrogant holy war and islamic terrorism in globe as well justify if possible. Some kind of half muslims force non muslims to have bad opinion about the Great Islam. Mind bro You are taking HIS name invein.

சிராஜ் said...

சகோ சார்வாகன்,

What heppend ?

குர்ஆனில் கடலின் ஆழத்தில் நடக்கும் விஷயங்கள் பற்றி எல்லாம் வந்திருக்கிறது. இன்றைய நவீன உலகில் பல சாதனங்களின் உதவிகளுடன் கண்டுபிடிக்கப்படும் இந்த உண்மைகளை முஹம்மது அன்றே சொல்லி இருக்க வாய்ப்பில்லை. ஆகவே இது முஹம்மது அல்லாதவரிடம் இருந்து, இறைவனிடம் இருந்து தான் வந்திருக்க வேண்டும்
என்பதே பதிவின் சாரம்.

நீங்கள் சொன்ன ஹதீத் மீன் சாப்பிடுவதையும், கடல் வழிப் பயணத்தையும் பற்றி பேசுகிறது. அந்த ஹதீத் ஆழ் கடலின் நிலைகளைப்பற்றி பேசவில்லை.
பொருந்த வில்லையே சகோ??????

NKS.ஹாஜா மைதீன் said...

சலாம் சகோ....
அருமையான பதிவு..குரான் கூறும் அறிவியலை யாராலும் மறுக்க முடியாது...

Nizam said...

அருமையான பதிவு சகோதரே. என்ன அற்புதமன கனளோலி இந்த படைப்புகள் ஒவ்வோண்ரும் அதிசயம்.

Nizam said...

சகோ சார்வாகன், நீங்கள் இருபாதம் நூற்றாண்டில் இருந்துகொண்டு ஆறாம் நூற்றாண்டில் இப்படி யாரவது சொல்ல முடியுமா என்று சீந்தித்து பாருங்கள். நிச்சயமாக கடவுள் மட்டும் தான் இப்படி தவறு இல்லாமல் சொல்ல முடியும். இது மட்டும் மல்ல எல்லா விதாமான அறிவியல் வசனத்தையும் ஆய்வு உட்படுத்தியே பாருங்கள்.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம!

வருகை புரிந்து கருத்தைப் பதிந்த ஜாகிர், அனானி, சிராஜ், ஹாஜா மைதீன் நண்பர்களுக்கு நன்றிகள். வருகைக்கும் கருத்துக்கும் ஓட்டளித்தமைக்கும் நன்றி!

suvanappiriyan said...

அனானி!

//Brother I understand you dont have any rights to compare two great religions by any means. Bro post about The arrogant holy war and islamic terrorism in globe as well justify if possible. Some kind of half muslims force non muslims to have bad opinion about the Great Islam. Mind bro You are taking HIS name invein.//

இங்கு நான் எந்த மதத்தையும் விமரிசிக்கவில்லையே! இடம் மாறி வந்து விட்டதோ?

R.Puratchimani said...

// 'அல்லது ஆழ் கடலில் உள்ள பல இருள்களைப் போன்றது. ஓர் அலை அதை மூடுகிறது. அதற்கு மேலே மற்றொரு அலை. அதன் மேலே மேகம். ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல இருள்கள். அவன் தனது கையை வெளிப்படுத்தும் போது அதைக் கூட அவனால் பார்க்க முடியாது. இறைவன் யாருக்கு ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியும் இல்லை.' //

இதில் சொற்குற்றமோ அல்லது பொருட்குற்றமோ உள்ளது என நினைக்கின்றேன்.

குறிப்பாக
// அதன் மேலே மேகம். ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல இருள்கள்.//

மேகத்தை இருள் என்று சொல்வது சரியா? மேகம் கருமை நிறத்திலும் இருக்கும் வெள்ளை நிறத்திலும் இருக்கும். இது எவ்வாறு இருளாகும்?.

மேலும் நீரில் இருக்கும் இருளுக்கும் மேகத்திற்கும் இடையிலும் இரவில் மட்டுமே இருள் இருக்கும். அதுவும் அமாவாசை மற்றும் அதற்க்கு சில நாட்களுக்கு முன்பு.

so, இதில் சொற்குற்றமோ அல்லது பொருட்குற்றமோ உள்ளது

Unknown said...

சகோ. சுவனப்பிரியன்,

மிக அருமையான பதிவு, தொடர்ந்து இது போன்ற பல பதிவுகளை எழுதவும். குர்ஆனில் ஆராயாமல் விடப்பட்ட அதிசயங்கள் ஏராளம். தொடர் பதிவாக கூட எழுத சகோ. களை தூண்டவும். ஒருவரின் சிந்தனைக்கு அறியாத விஷயங்கள் வேறொருவரின் பார்வைக்கு தெளிவாக அறிய வாய்ப்புள்ளது.

நன்றி.

suvanappiriyan said...

சகோ கார்பன் கூட்டாளி!

//மிக அருமையான பதிவு, தொடர்ந்து இது போன்ற பல பதிவுகளை எழுதவும். குர்ஆனில் ஆராயாமல் விடப்பட்ட அதிசயங்கள் ஏராளம். தொடர் பதிவாக கூட எழுத சகோ. களை தூண்டவும். ஒருவரின் சிந்தனைக்கு அறியாத விஷயங்கள் வேறொருவரின் பார்வைக்கு தெளிவாக அறிய வாய்ப்புள்ளது.//

அறிவியல் ரீதியாக உங்கள் அளவுக்கு என்னால் எழுதுவது சிரமமே! பதிவுக்கு நேரமும் அதிகம் எடுத்துக் கொள்ளும். இருந்தாலும் எனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தைப் பொருத்து மேலும் இது போன்ற பதிவுகள் இட முயற்ச்சிக்கிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

ஜெய்லானி said...

இரெண்டாவது வீடியோ.... பார்க்கும் போதே உடல் சிலிர்க்கிறது. இறைவனின் படைப்பை நினைத்து .

அல்லாஹு அக்பர் ....!!!

suvanappiriyan said...

திரு புரட்சி மணி!

//so, இதில் சொற்குற்றமோ அல்லது பொருட்குற்றமோ உள்ளது//

'ஆழ் கடலில் உள்ள பல இருள்களைப் போன்றது.' என்று இந்த வசனம் ஆரம்பமாகிறது. அந்த இருள் எவ்வாறு உண்டாகிறது என்பதை அதன் கீழே வரும் வசனங்கள் விளக்குகின்றன. சூரியனிலிருந்து பெறப்படும் ஒளியானது மேகங்களால் மட்டுப்படுத்தப்பட்டு கடலை வந்து அடைகிறது. கடலை அடைந்த சூரிய ஒளியானது கடல் அலைகளால் உறிஞ்சப்பட்டு சன்னம் சன்னமாக 200 மீட்டர் ஆழம் வரை ஒளியின் தாக்கம் தென்படுகிறது. அதற்கும் கீழே மேலும் அலைகள் ஏற்பட்டு சுத்தமான இருட்டான பிரதேசமாக மாறி விடுகிறது. ஒருவனின் கையை வெளியில் நீட்டினால் அவனது கையையே அவனால் பார்க்க முடியாத அளவு இருட்டு. இதை காணொளியிலும் பார்க்கலாம்.

ஒன்றுக்கு மேல் ஒன்றாக பல இருள்கள் என்று குர்ஆன் கூறுவது கடல்களுக்குள் நடக்கும் மாற்றத்தை. கடல் மட்டத்துக்கு வெளியே நடக்கும் மாற்றத்தை கூறவில்லை. தற்போது உங்கள் ஐயம் விலகியிருக்கும் என்று நினைக்கிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

ராஜ நடராஜன் said...

மதம் மட்டுமேயல்லாது இது போன்ற பொதுவெளியில் கலந்து கொள்வதில் எமக்கு ஆட்சேபனையில்லை.

மாற்றங்கள் தொடர வாழ்த்துக்கள்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,
சிந்தையை தூண்டும் சிறப்பான இடுகை.

சுபஹானல்லாஹ்...

அனைத்தையும் படைத்த அல்லாஹ் மட்டுமே மனிதர்களுக்கு அவர்கள் அறியாததை பற்றி இப்படி தெளிவாக கூற முடியும். சிந்திப்போருக்கு குர்ஆனில் பல அத்தாட்சிகள் உள்ளன. அதில் ஒன்று இது.

இது போன்ற வசனங்களை பொய்யாக்க பிரயத்தனப்பட்டு முடியாமல் தோற்றுப்போகும்போதுதான் மானசீகமாக தம் தோல்வியை ஒப்புக்கொண்டு "ஏக இறைவன் தவிர வணக்கத்திற்கு வேறு யாருமில்லை... முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர்" என்று பலர் மனதார இஸ்லாமை தம் வாழ்வில் மார்க்கமாக ஏற்றுக்கொள்கிறார்கள்.

பதிவுக்கு மிக்க நன்றி சகோ.

suvanappiriyan said...

//இரெண்டாவது வீடியோ.... பார்க்கும் போதே உடல் சிலிர்க்கிறது. இறைவனின் படைப்பை நினைத்து .

அல்லாஹு அக்பர் ....!!!//

வருகைக்கும் கருத்தை பதிந்தமைக்கும் நன்றி சகோ ஜெய்லானி!

suvanappiriyan said...

திரு ராஜ ராஜன்!

//மதம் மட்டுமேயல்லாது இது போன்ற பொதுவெளியில் கலந்து கொள்வதில் எமக்கு ஆட்சேபனையில்லை.

மாற்றங்கள் தொடர வாழ்த்துக்கள்.//

எனது முந்தய பதிவான குருதிக் கொடை பதிவுககு போட்ட பின்னூட்டம் என்று நினைக்கிறேன். இடம் மாறி வந்திருக்கிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சலாம்! சகோ ஆஷிக்!

//அனைத்தையும் படைத்த அல்லாஹ் மட்டுமே மனிதர்களுக்கு அவர்கள் அறியாததை பற்றி இப்படி தெளிவாக கூற முடியும். சிந்திப்போருக்கு குர்ஆனில் பல அத்தாட்சிகள் உள்ளன. அதில் ஒன்று இது.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

R.Puratchimani said...

//ஒன்றுக்கு மேல் ஒன்றாக பல இருள்கள் என்று குர்ஆன் கூறுவது கடல்களுக்குள் நடக்கும் மாற்றத்தை. கடல் மட்டத்துக்கு வெளியே நடக்கும் மாற்றத்தை கூறவில்லை.//


அப்படி இருப்பின் இங்கே மேகத்தை குறிப்பிடாமல் இருந்திருக்கலாம். மேலும் நீங்கள் சூரிய ஒளியை பற்றி குறிப்பிடுகிறீர்கள். சூரிய ஒளி என்று சொல்லாமல் ஏன் வெறும் ஒளி என்று மட்டும் சொல்கிறார். குரான் சொல்ல வரும் ஒளி, சூரிய ஒளியா? சிந்தியுங்கள்
என் சிற்றறிவிற்கு எட்டிய வரை அவர் சொல்ல வரும் ஒளியே வேறு. அது என்ன ஒளி? தேடுங்கள் கிடைக்கும்.

தங்கள் பதிலுக்கு மிக்கக நன்றி :)

ராஜ நடராஜன் said...

//எனது முந்தய பதிவான குருதிக் கொடை பதிவுககு போட்ட பின்னூட்டம் என்று நினைக்கிறேன். இடம் மாறி வந்திருக்கிறது.//

நான் இந்தப் பதிவுக்குப் பின்னூட்டம் போட்டா இலவசமாக இன்னொரு பதிவும் தருகிறீர்களே!நல்லாயிருக்குது உங்க ஆட்டம்:)

suvanappiriyan said...

திரு ராஜ நடராஜன்!

//நான் இந்தப் பதிவுக்குப் பின்னூட்டம் போட்டா இலவசமாக இன்னொரு பதிவும் தருகிறீர்களே!நல்லாயிருக்குது உங்க ஆட்டம்:)//

சாரி.....நான்தான் தவறாக விளங்கி விட்டேன் போல..... முதல் பின்னூட்டத்தில்


//மதம் மட்டுமேயல்லாது இது போன்ற பொதுவெளியில் கலந்து கொள்வதில் எமக்கு ஆட்சேபனையில்லை.

மாற்றங்கள் தொடர வாழ்த்துக்கள்.//

என்ற உங்கள் வரிகளைப் படித்தேன். இந்த பதிவில் நான் குர்ஆன் வசனம் அறிவியலோடு எப்படி ஒத்து போகிறது என்று ஒப்பிட்டிருந்தேன்.

குடியரசு தினத்தைப் பற்றிய பொதுவான பதிவு ஒன்று நேற்று இட்டதை பின்னூட்டம் இடும் போது தவறுதலாக கமெண்ட்டை இங்கு போட்டு விட்டீர்களோ என்று நினைத்தேன். எனக்கும் முன்பு இது போன்ற ஒரு தவறு நடந்திருக்கிறது. இந்த பதிவுக்கான பின்னூட்டம்தான் இது என்று விளக்கியதற்கு நன்றி!

தொடர்ந்து கருத்துக்களை கூறி வாருங்கள்.

suvanappiriyan said...

திரு புரட்சி மணி!

//குரான் சொல்ல வரும் ஒளி, சூரிய ஒளியா? சிந்தியுங்கள்
என் சிற்றறிவிற்கு எட்டிய வரை அவர் சொல்ல வரும் ஒளியே வேறு. அது என்ன ஒளி? தேடுங்கள் கிடைக்கும்.

தங்கள் பதிலுக்கு மிக்கக நன்றி :)//

குர்ஆன் இறக்கப்பட்டதே எதற்காக? மனிதர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக! ஒவ்வொரு உதாரணமும் மனிதனை நேர்வழிபடுத்துவதற்காக இறைவனால் எடுத்தாளப்படுகிறது. இங்கு கடலுக்கு அடியில் உள்ள இருளை போன்றது ஏக இறைவனை நிராகரிப்பவனின் இதயம். ஏனெனில் இதற்கு முந்தய வசனத்தில் இறைவனை நிராகரிப்பவர்களை பற்றி பேசி அதற்கு ஒரு உதாரணத்தையும் கொடுத்து விட்டு அதன் தொடர்ச்சியாக அல்லது என்று ஆரம்பித்து கடலின் இருளை பற்றி இறைவன் சொல்ல ஆரம்பிக்கிறான்.

'அல்லாஹ் யாருக்கு ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியும் இல்லை' என்பது அறிவொளியைக் குறிக்கும். இறைவன் அந்த அறிவு ஒளியை யாருக்கு எற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த அறிவு ஒளியும் கிடைக்கப் போவதில்லை என்பதை இந்த வசனத்தின் மூலம் அறிகிறோம். முன்னர் சொன்ன கடல் இருட்டு அதற்கு மேல் மேகம் என்பது சூரிய ஒளியை மையமாக வைத்து சொல்லப்பட்டது.

பின்னர் சொல்லப்பட்ட ஒளியானது அறிவு சம்பந்தமாக சொல்லப்படுகிறது. இந்த வசனத்தின் முன் வசனத்தையும் நாம் சேர்த்து படித்தால் நமக்கு எந்த குழப்பமும் வராது.

என்னுடைய விளக்கத்தில் ஏதும் தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். நன்றி!

Anonymous said...

கடலுக்கடியில் என்ன இருக்குதுன்னு தெரிஞ்ச குரானுக்கு முகம்மது நபி நின்னுகிட்டு இருந்த பூமிக்கடியில் எண்ணை இருப்பது தெரியாமல் போனது ஆச்சரியம். அது வெள்ளைக்கார காஃபிர்களுக்கு தெரிந்தது அதைவிட ஆச்சர்யம்!

ZAKIR HUSSAIN said...

simply superb. Lot of research you have done!!

suvanappiriyan said...

அனானி!

//கடலுக்கடியில் என்ன இருக்குதுன்னு தெரிஞ்ச குரானுக்கு முகம்மது நபி நின்னுகிட்டு இருந்த பூமிக்கடியில் எண்ணை இருப்பது தெரியாமல் போனது ஆச்சரியம். அது வெள்ளைக்கார காஃபிர்களுக்கு தெரிந்தது அதைவிட ஆச்சர்யம்!//

'முஹம்மதே! 'நாங்கள் உம்முடன் சேர்ந்து உன் மார்க்கமாகிய இஸ்லாத்தைப் பின்பற்றினால் எங்களின் வசிப்பிடத்திலிருந்து வாரிச் செல்லப்பட்டு விடுவோம்' என்று அவர்கள் கூறுகின்றனர். அபயமளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்காக வசிப்பிடமாக நாம் ஆக்கவில்லையா? ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கி கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.'
-குர்ஆன் 28 : 57

பாலைவனத்தில் கிடைக்கும் கனிகள்!

இன்றைய மக்கா நகரம் முகமது நபி காலத்திலும் அதற்கு முன்னரும் எவ்விதக் கனி வர்க்கமும் முளைக்காத பாலைவனப் பெருவெளியாக இருந்தது.

இந்த பாலைவனப் பெருவெளிக்கு உலகின் பல பாகங்களிலிருந்தும் கனி வர்க்கம் கொண்டு வரப்படும் எனத் திருக்குர்ஆன் முன்னறிவிப்பு செய்கிறது.

இந்தியாவில் இந்த வசனம் இறங்கியிருந்தால் இது ஒரு ஆச்சரியமான செய்தியாக இருந்திருக்காது. நம் நாடு நில வளத்திலும், நீர் வளத்திலும் அன்று முதல் தன்னிறைவு பெற்றிருக்கிறது. ஆனால் பாலைவனப் பிரதேசமான மக்காவை நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். மண் வளமும் கிடையாது. தண்ணீர் வசதிக்கும் வாய்ப்பில்லை. இருந்தும் 'ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக மக்காவை நோக்கிக் கொண்டு வரப்படுகிறது' என்ற வாசகத்தைக் கவனிக்க வேண்டும்.

பாலைவனம் சோலைவனம் ஆக வேண்டுமாயின் அரபு நாடுகளுக்கு செல்வம் குவிய வேண்டும். கறுப்புத் தங்கமான பெட்ரோலை கணக்கில்லாமல் அந்நாடுகளுக்கு இறைவன் கொடுத்து இன்று அரபு நாடுகள் சோலைவனமான காட்சியைப் பார்க்கிறோம்.

எனவே அனானி பொய்யாகலாம்: ஆனால் குர்ஆன் பொய்யாகாது: :-)

suvanappiriyan said...

//simply superb. Lot of research you have done!!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஜாகிர் உசேன்!

R.Puratchimani said...

தங்களின் விளக்கம் மிக அருமை. இதைத்தான் நான் pathivil எதிர்பார்த்தேன் .
ithaiyum தாண்டி அதற்க்கு ஆழந்தா பொருள் உள்ளதாகவே என்னுடைய சிற்றறிவு சொல்கிறது.

//'அல்லாஹ் யாருக்கு ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியும் இல்லை'//என்பது அறிவொளியைக் குறிக்கும்.

அறிவை ஏன் அறிவொளி என்று சொல்ல வேண்டும் சகோ:) அவர் இங்கே அதை மட்டும் சொல்லவில்லை அதையும் தாண்டி செல்கிறார்.
ஒளி என்பதை காண முடியும் தானே. ஆனால் அறிவொளியை காண முடியாது. அவர் சொன்ன ஒளியை காண முடியும்.
சிந்தியுங்கள்..உணமையான அர்த்தத்தை உணர்வீர்கள்.
இறைவன் விரும்பினால் :)
தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி சகோ. :)

R.Puratchimani said...

// ஆனால் அறிவொளியை காண முடியாது//

மன்னிக்கவும் இங்கே "அறிவை காண முடியாது ஆனால் அறிவொளியை காண முடியும்". என்று வர வேண்டும். நன்றி :)

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

மாஷா அல்லாஹ். மிக அருமையான ஆய்வு... தொடருங்கள், இறைவன் துணை நிற்பானாக...ஆமீன்.

வஸ்ஸலாம்..

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ ஆஷிக்!

//அஸ்ஸலாமு அலைக்கும்,

மாஷா அல்லாஹ். மிக அருமையான ஆய்வு... தொடருங்கள், இறைவன் துணை நிற்பானாக...ஆமீன்.

வஸ்ஸலாம்..//

கொஞ்சம் தாமதமாக வந்திருக்கிறீர்கள். வேறொரு இடத்தில் நடந்த சூடான விவாதம் தாமதத்துக்கு காரணமாக இருக்கலாம். :-)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

அப்பலோனியஸ் ரோடியஸ் எழுதிய அர்கோநாடிகாவிலும் ஹோமர் எழுதிய இலியாட்-லும் ஆழ்கடல் இருட்டாக இருக்கும் என எழுதியுள்ளார்கள். இவர்கள் கிரேக்கர்கள் அதனால் இவர்களுக்கு அரபி தெரியாது. மேலும் குரான் இறங்குவதற்கு முன்பே அப்பலோனியஸ் ரோடியஸும் (கிமு 3-ம் நூற்றண்டு) ஹோமரும் (கிமு 8-ம் நூற்றண்டு) வாழ்ந்து மடிந்துவிட்டார்கள். ஆதலால் இவர்கள் குரானிலிருந்து இந்த கருத்தை காப்பியடித்திருக்க வாய்ப்பில்லை. மேலும் முகம்மது அவர்களை போலவே ஹோமரும் கடலை பார்த்திராதவர், ஏனெனில் அவருக்கு கண் தெரியாது. அதுமட்டுமல்லாது அன்றைய மக்கள் அப்பலோனியஸ் ரோடியஸிடமும் ஹோமரிடமும் ஆழ்கடல் என்ன கலர் கேட்கவும் இல்லை.

எனவே இந்த ரகசியம் அல்லாஹ்விடமிருந்துதான் இவர்களுக்கும் அறிவிக்கபட்டிருக்க வேண்டும். ஆக அப்பலோனியஸ் ரோடியஸும் ஹோமரும் முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் ஈசா நபி (அலை) அவர்களுக்கும் முன்னர் வந்த அல்லாஹ்வின் தூதர்களே என்று இதனால் தெரிகிறது. அப்பலோனியஸ் ரோடியஸ் நபி (அலை) ஹோமர் நபி (அலை) இவர்களை நாம் அடையாளம் காண சுவனபிரியனின் ஆராய்ச்சி உதவியுள்ளது எனில் மிகையில்லை. .. இப்படித்தான் குரானில் தோண்ட தோண்ட அறிவுப்புதையல்கள் அகப்பட்டுக்கொண்டே இருக்கும் மாஷா அல்லாஹ்..

அனானிகளுக்கு பதில் சொல்லும் ஒரு அனானி said...

@ Anonymous said...

?????ஆழ்கடல் இருட்டாக இருக்கும் என எழுதியுள்ளார்கள்.??????
---அவருக்கு கண் தெரியாது---(பூமியும் இருட்டாகத்தான் இருந்திருக்கும்)


ஆனால்,

!!!!!!ஆழ் கடலில் உள்ள பல இருள்களைப் போன்றது....ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல இருள்கள்....!!!!!!(-குர்ஆன்24:40)

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

மாஷா அல்லாஹ், மிக அருமையான அறிவியல் பதிவு. கடல் தொடர்பாக மேலும் ஆய்வு பதிவுகள் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

// சுவனப்பிரியன் said...
//simply superb. Lot of research you have done!!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஜாகிர் உசேன்!//

திரு. ஜாஹிர் உசேன் என்பதற்கு பதில் சகோதரர் ஜாஹிர் உசேன் என்று எழுதலாமே.. :)

Anonymous said...

அனானிகளுக்கு பதில் சொல்லும் அனானி சகோ,
நானென்ன கேள்வியா கேட்டேன்? அல்லாஹின் அற்புதங்களை சொல்லி வியந்து கொண்டல்லவா உள்ளேன், எனக்கேன் பதில் சொல்கிறீர்கள்?

//?????ஆழ்கடல் இருட்டாக இருக்கும் என எழுதியுள்ளார்கள்.??????
---அவருக்கு கண் தெரியாது---(பூமியும் இருட்டாகத்தான் இருந்திருக்கும்).
ஆனால்,!!!!!!ஆழ் கடலில் உள்ள பல இருள்களைப் போன்றது....ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல இருள்கள்.....!!!!!!(-குர்ஆன்24:40)//

சரியான பாயிண்டை பிடித்துள்ளீர்கள். இதிலிருந்து தெரிவது என்னவெனில் ஆண்டவன் ஈசா நபி (அலை) அவர்கள் மூலமாக அருளிய இஞ்சில் வேதத்தை யூதர்களும் கிருத்துவர்களும் மாசுபடுத்தியதை போலவே அப்பலோனியஸ் ரோடியஸ் நபி (அலை) ஹோமர் நபி (அலை) இவர்கள் மூலமாக இறக்கிய வேதங்களை கிரேக்கர்கள் மாற்றிவிட்டதாக தெரிகிறது. இதனால்தான் குரானின் தேவை ஏற்பட்டது என்பது தாங்கள் அறியாததா என்ன?

நெருஞ்சிப்பேட்டை குறிஞ்சிநாதன் said...

சுவனம் அய்யா,

ஆழ்கடல் இருளைச் சொன்ன அல்லா நிலாவில் தண்ணீர் இருப்பதைப் பற்றி ஏதேனும் சொன்னாருங்களா?

வீணாப் போன இஸ்ரோகாரவுக ராக்கட் அனுப்பிக் காசக் கரியாக்கறானுவ.

suvanappiriyan said...

நெருஞ்சிப் பேட்டை குறிஞ்சி நாதன் (கவிதைநயமான பெயர்) :-)

//ஆழ்கடல் இருளைச் சொன்ன அல்லா நிலாவில் தண்ணீர் இருப்பதைப் பற்றி ஏதேனும் சொன்னாருங்களா?

வீணாப் போன இஸ்ரோகாரவுக ராக்கட் அனுப்பிக் காசக் கரியாக்கறானுவ.//

4:82. அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.

7:185. வானங்கள், பூமி, இவற்றின் ஆட்சியையும் அல்லாஹ் படைத்திருக்கும் மற்றப் பொருள்களையும் அவர்கள் நோட்டமிடவில்லையா? அவர்களுடைய (மரண) தவணை நெருங்கியிருக்கக்கூடும் என்பதையும் (அவர்கள் சிந்திக்கவில்லையா?) இதற்குப் பின்னர் எந்த விஷயத்தைத் தான் அவர்கள் ஈமான் கொள்ளப்போகிறார்கள்?

நெருஞ்சிப்பேட்டை குறிஞ்சிநாதன் said...

**
4:82. அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.

7:185. வானங்கள், பூமி, இவற்றின் ஆட்சியையும் அல்லாஹ் படைத்திருக்கும் மற்றப் பொருள்களையும் அவர்கள் நோட்டமிடவில்லையா? அவர்களுடைய (மரண) தவணை நெருங்கியிருக்கக்கூடும் என்பதையும் (அவர்கள் சிந்திக்கவில்லையா?) இதற்குப் பின்னர் எந்த விஷயத்தைத் தான் அவர்கள் ஈமான் கொள்ளப்போகிறார்கள்?
**


1. மத்தவுக சொன்னாங்க சொல்லலை. அது வேற விசயம். அல்லா சொன்னாரா இல்லையா? தெளிவாச் சொல்லுங்க.

2. அல்லா சொல்லாத எதையும் மனிதன் தன் சுய அறிவால் அறிந்து கொள்ள முயற்சித்தால் இறந்துவிடுவானா? புரியவில்லை விளக்கவும்.

வண்டு முருகன் said...

///ஆழ்கடல் இருளைச் சொன்ன அல்லா நிலாவில் தண்ணீர் இருப்பதைப் பற்றி ஏதேனும் சொன்னாருங்களா?

வீணாப் போன இஸ்ரோகாரவுக ராக்கட் அனுப்பிக் காசக் கரியாக்கறானுவ.//

4:82. அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.

7:185. வானங்கள், பூமி, இவற்றின் ஆட்சியையும் அல்லாஹ் படைத்திருக்கும் மற்றப் பொருள்களையும் அவர்கள் நோட்டமிடவில்லையா? அவர்களுடைய (மரண) தவணை நெருங்கியிருக்கக்கூடும் என்பதையும் (அவர்கள் சிந்திக்கவில்லையா?) இதற்குப் பின்னர் எந்த விஷயத்தைத் தான் அவர்கள் ஈமான் கொள்ளப்போகிறார்கள்?//

இந்த வசனங்களில் எங்குமே நிலவில் தண்ணீர் இருப்பதை பற்றி எதுவுமே இல்லையே.
இதன் மூலம் நிலவில் தண்ணீர் இருக்கிறது என்று சொல்கிறீர்களா? இல்லை என்று சொல்கிறீர்களா?

suvanappiriyan said...

சகோ வண்டு முருகன்!

//இந்த வசனங்களில் எங்குமே நிலவில் தண்ணீர் இருப்பதை பற்றி எதுவுமே இல்லையே.
இதன் மூலம் நிலவில் தண்ணீர் இருக்கிறது என்று சொல்கிறீர்களா? இல்லை என்று சொல்கிறீர்களா?//

குர்ஆன் ஒரு அறிவியல் புத்தகம் அல்ல என்று நான் முன்பே குறிப்பிட்டுள்ளேன். போகிற போக்கில் அறிவியல் கருத்துகளை அலட்சியமாக வீசி விட்டு செல்வதே அதன் நடை. இது இறை வேதம்தானா என்று பரீட்சித்து பார்ப்பவர்கள் அதில் கூறப்பட்ட விஞ்ஞான வசனங்களை தற்கால கண்டு பிடிப்புகளோடு ஒப்பிட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இதைத்தான் குர்ஆன் 'சிநதிக்க வேண்டாமா?' என்று மனிதர்களைப் பார்த்து பல இடங்களில் கேட்கிறது.

வண்டு முருகன் said...

//குர்ஆன் ஒரு அறிவியல் புத்தகம் அல்ல என்று நான் முன்பே குறிப்பிட்டுள்ளேன். போகிற போக்கில் அறிவியல் கருத்துகளை அலட்சியமாக வீசி விட்டு செல்வதே அதன் நடை. இது இறை வேதம்தானா என்று பரீட்சித்து பார்ப்பவர்கள் அதில் கூறப்பட்ட விஞ்ஞான வசனங்களை தற்கால கண்டு பிடிப்புகளோடு ஒப்பிட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இதைத்தான் குர்ஆன் 'சிநதிக்க வேண்டாமா?' என்று மனிதர்களைப் பார்த்து பல இடங்களில் கேட்கிறது.//


அது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், அனால் நிலவில் தண்ணீர் பற்றி சிந்திக்க அது சம்பந்தமான ஒரு வரி கூட இந்த வசனங்களில் இல்லையே. நீங்களே சொல்லுங்கள் இதில் எந்த வசனத்தை நீங்கள் நிலவில் தண்ணீருடன் ஒப்பிட்டு சிந்திப்பீர்கள்