Followers

Thursday, January 17, 2013

தமிழகத்தின் தர்ஹாக்களைப் பார்த்து வருவோம்!

'தமிழகத்தின் தர்ஹாக்களைப் பார்த்து வருவோம்:

தூய வழி காட்டச் சொல்லி கேடடு வருவோம்'

என்று இஸ்லாத்தை சரியாக விளங்காத ஒரு பாடகரின் பாட்டு தமிழகமெங்கும் முன்பு பிரபலமாக இருந்தது. ஆனால் இந்த தர்ஹாக்களைப் பற்றி முகமது நபி என்ன சொல்லுகிறார் என்று பார்ப்போம்.

கப்ருகள் கட்டப்படுவதையும், பூசப்படுவதையும், அதன் மீது உட்காருவதையும் நபி அவர்கள் தடை செய்தார்கள். அறிவிப்பாளர் : ஜாபிர்(ரலி), நூல்கள் : அஹ்மது, முஸ்லிம், நஸயீ, அபூதாவூத், திர்மிதி.

யூத கிறிஸ்த்தவர்களில் ஒரு நல்ல மனிதன் இறந்து விடும் போது, அவனது கப்ரின் மீது ஒரு வணங்கும் இடத்தை கட்டிக் கொள்வார்கள். நாளடைவில் அதில் சில வடிவங்களையும் அமைத்துக் கொள்வார்கள். அல்லாஹ்விடம் இவர்களே மிகக் கெட்டவர்கள் என்று நபி அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி.

நீங்கள் எனது அடக்கத் தலத்தை விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கி விடாதீர்கள் என்று நபி அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பாளர் : அபூ ஹூரைரா (ரலி) நூல் : அபூதாவூத்.

உயரமான எந்த அடக்கத் தலத்தையும், இடித்து சமப்படுத்தாமல் விட்டு விடாதே! எனக் கூறி, நபி அவர்கள் என்னை அனுப்பிய பணிக்கே உம்மையும் அனுப்புகிறேன், என அலீ (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹய்யாஜீல் அஹ்தீ (ரலி) நூல்கள் : முஸ்லிம், திர்மிதி, நஸயீ, அபூதாவூத், அஹ்மது.


இஸ்லாம் எந்த அளவு தர்ஹாக்கள் கட்டுவதை எதிர்க்கிறது என்று பார்த்தோம். ஆனால் அதே இஸ்லாத்தின் பெயரால் நமது தமிழகத்தில் உள்ள தர்ஹாக்களின் பெயர்களைப் பார்ப்போம்.



தமிழகத்தின் தர்ஹாக்களின் பெயர்களைப் பாரீர்!

1. பீடி மஸ்தான் (பீமா பள்ளி)
2. கட்டி மஸ்தான் (பொறையார் )
3. சட்டி மஸ்தான் (பொதக்குடி)
4. சங்கிலி மஸ்தான் (கோயம்பத்தூர்)
5. மோனகுரு மஸ்தான் (ஊமைப்பிள்ளை அவ்லியா-தொண்டி)
6. குரங்கு மஸ்தான். தஞ்சை
7. அனுமான் அவ்லியா தஞ்சை
8. அணிப்பிள்ளை அவ்லியா தஞ்சை
9. பாஸ்போர்ட் அவ்லியா தஞ்சை
10. கப்ரடி அவ்லியா (திருவிதாங்கோடு)
11. காட்டு பாவா அவ்லியா (தக்கலை அருகில், பேட்டை )
12. வேப்ப மரத்து அவ்லியா (கோட்டார்)
13. மாமரத்து அவ்லியா (நீலவெள்ளி)
14. மரத்தடி அவ்லியா (கோட்டார் )
15. மரக்கட்டை அவ்லியா (சென்னை ராயபுரம்)
16. மோத்தி பாவா (சென்னை,அண்ணா சாலை)
17. மிஸ்கீன் அவ்லியா நெல்லை
18. பச்சை அவ்லியா நெல்லை
19. பக்கீர் மஸ்தான். நெல்லை
20. பிச்சை அவ்லியா (திலி பேட்டை)
21. அப்துர் ரஸ்ஸாக் மஸ்தான். (திருவனந்தபுரம்)
22. மலுக்கர்; மஸ்தான் (மஞ்சேரி, கேரளா)
23. மைதீன் பிச்சை அவ்லியா (பொட்டல் புதூர்)
24. ஆத்தங்கரை அவ்லியா (ஆத்தங்கரை)
25. அக்கரைப்பள்ளி அவ்லியா (குளச்சல்)
26. அம்பலத்து அவ்லியா (திருவிதாங்கோடு)
27. மக்கட்டி லெப்பை அவ்லியா (திருவிதாங்கோடு)
28. காத்தாடி அவ்லியா (ஆளூர்)
29. பல்லாக்கு அவ்லியா (கீழக்கரை)
30. ஸந்தூக் அவ்லியா திருவை)
31. கால்துட்டு அவ்லியா (காயல் பட்டணம்)
32. சாலை சாஹிப் அவ்லியா (புது ஆயங்குடி)
33. நிர்வாண அவ்லியா(மஜ்தூப் வலி)(காயல் பட்டணம்)
34. ஹயாத் அவ்லியா (கோட்டார்)
35. ஹயாத்தே அவலியா (திட்டு விளை,
36. பிரேக் ஷா அவ்லியா (கொடிக்கால பாளையம்)
37. ஹாஸ் பாவா அவ்லியா (கொடிக்கால பாளையம்)
38. கேத்தல் பாவா அவ்லியா (புதுப்பட்டினம்)
39. பட்டாணி சாஹிப் அவ்லியா (திலி பேட்டை)
40. கோட்டு மூஸா அவ்லியா (கூத்தா நல்லூர்)
41. மொட்டைப பக்கீர் அவ்லியா (சிவகங்கை)
42. கோதரிசா அவ்லியா (பொட்டல் புதூர் அருNயுள்ள மலை)
43. அப்பா ராவுத்தர் அவ்லியா (கூத்தா நல்லூர்)
44. படேஷா ஹஸ்ரத் அவ்லியா (மஞ்சக்குப்பம்)
45. வண்ணம் தீட்டும் அவ்லியா (நக்ஷபந்த் அவ்லியா)
46. கோயுன் பாபா அவ்லியா (ஆடுகளின் தந்தை, துருக்கி)
47. தக்கடி அப்பா அவ்லியா (பஸீர் வலி மேலப்பாளையம்) புலிகள் பாம்புகளிடையே வந்து காப்பாற்றியவர்)
48. ஜஹான்ஷா அவ்லியா (கொடிக்கால்பாளையம்)
49. ஒட்டகாஸ் அவ்லியா (உடன்குடி)
50. காட்டப்பா அவ்லியா ”
51. புளியடி அவ்லியா ”
52. காட்டானை அவ்லியா (வேதாளை)
53. கப்படா சாஹிப் அவ்லியா (காரைக்கால்)

இந்த பெயர்களை எல்லாம் பார்த்தாலே தெரியும் இது எந்த அளவு மோசடியான ஒரு வணக்கம் என்று. இஸ்லாத்தை அழிக்க இஸ்லாமிய எதிரிகளால் உண்டாக்கப்பட்டதே இந்த சமாதி வணக்கம். இதற்கு அறிந்தோ அறியாமலோ நமது சகோதர சகோதரிகள் அதிக அளவில் பலியாகிக் கொண்டுள்ளனர். இதில் அதிகமாக பெண்களே ஆர்வம் காட்டுகின்றனர்.

கடந்த 20 வருடங்களாக தவ்ஹீத் (வஹாபிகள்) வாதிகளின் அயராத முயற்சியால் இன்று ஓரளவு தமிழகத்தில் சமாதி வழிபாடு குறைந்துள்ளது. முற்றிலுமாக இந்த வணக்கத்தை இஸ்லாமியர்கள் விட்டொழிக்க வேண்டும்.

யாரை எல்லாம் நாம் இறை நேச செல்வர்களாக மதிதது வருகிறோம் என்பதற்குரிய விளக்கத்தையும் பார்ப்போம்.


1. வாயில் போட்டு மென்ற வெற்றிலையால் பிள்ளை வரம் கொடுப்பவர் அவ்லியா !
2. எச்சிலைத் தண்ணீரில் துப்பி வேண்டியது நடக்க துப்பிக்கொடுப்பவர் அவ்லியா !
3. பச்சைத் தலைப்பாகை, நீண்ட அங்கி, ஜபமாலை சகிதம் உலா வருவோர் அவ்லியா!
4. மாந்திரீகம்,இஸ்மு,தகடு,தாவீஸ்,இலை,பீங்கான் என ஏமாற்றும் தங்ஙள்கள் அவ்லியா!
5. தர்காக்களின் ஆதீன கர்த்தா, அவ்லியாவின் வாரிசு என வசூலுக்கு வருவோர் அவ்லியா!
6. செய்கு முஹ்யித்தீன், நாகூர் நாயகம் பரம்பரை என தம்பட்டம் அடிப்போர் அவ்லியா!
7. குழி தோண்டி (துணி நெய்யும் குழியில்) கஃபாவை காண்பவர் அவ்லியா (பீரப்பா)
8. காமமோகம் கொண்டு பெண்களை தனிஅறையில் சந்தித்து முரீது கொடுப்பவர் அவ்லியா!
9. பெண்களையும் ஆண்களையும் தடவிக்கொடுத்து ஓதி ஊதுபவர் அவ்லியா!
10. நிர்வாண கோலமாக அலையும் சன்னியாச பரதேசிகள் அவ்லியாக்கள் !
11. கஞ்சா அபின் போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்துவோர் அவ்லியாக்கள்!
12. இரவெல்லாம் கேளிக்கைகளிலும், சல்லாபங்களிலும் ஈடுபட்டுப் பகலிலே பத்தினிகளாக நடிப்போர் அவ்லியாக்கள்!

எவ்வளவு அழகிய வாழ்வு முறையை குர்ஆன் மூலம் இஸ்லாம் நமக்குத் தந்திருக்க இந்த தர்ஹாக்களை ஊருக்கு ஊர் கட்டி அதற்கு வணக்கத்தையும் செலுத்தி வரும் மக்கள் திருந்தும் நாள் எப்போது? ஏக இறைவனை மட்டுமே வணங்கப் பணிக்கப்பட்ட நமக்கு இந்த நூற்றுக் கணக்கான தர்ஹாக்கள் எதற்கு? சிந்திக்க வேண்டாமா தோழர்களே! தோழிகளே!

--------------------------------------------------


புதிய எழுத்தாளர்கள் பலர் இணைந்து தொகுத்திருக்கும் 'எதிர்க் குரல்' என்ற புத்தகம் வெளி வந்து விட்டது. பல அரிய தகவல்களைத் தாங்கி இந்த புத்தகம் வருகிறது. நீங்களும் படியுங்கள். மற்றவர்களுக்கும் புத்தகத்தை அறிமுகப்படுத்துங்கள்.


20 comments:

UNMAIKAL said...

இறைவனின் கடும் எச்சரிக்கைக்கு அஞ்சி தர்கா வழிபாட்டை விட்டொழிப்போம்

தர்கா விடியோ காணுங்கள்

சுட்டிகளை சொடுக்கி விடியோ காணுங்கள்.

>>>>> 1. தர்கா என்றால் என்ன?

>>>>>2. சமாதியை வழிபடுவது ஏன்?

>>>>> 3. தர்கா ஜியாரத் சுன்னத்தா?

>>>>>4. அவ்லியாக்களை வணங்குவது ஏன்?

>>>>>5. நாகூரில் கபுரை வணங்குவது ஏன்?

>>>> 6. பிள்ளை வரம் கொடுக்கும் யானை அவ்லியா? <<<<<<

.

UNMAIKAL said...

மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை வழங்கவேண்டும்:

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை


மாலேகான் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மீதான வழக்குகளை
மத்திய அரசின் உள்துறை விரைந்து நடத்தி குற்றம் புரிந்தோரைத் தண்டிக்க ஆவன செய்ய வேண்டும்
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

மாலேகான் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மீதான வழக்குகளை மத்திய அரசின் உள்துறை விரைந்து நடத்தி குற்றம் புரிந்தோரைத் தண்டிக்க வேண்டும்

என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மாலேகான் குண்டு வெடிப்பில் சம்பந்தப் பட்ட இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ்.காரர்களான ஜோஷி, லோகேஷ் சர்மா முதலிய பார்ப் பனர்கள் அதில் மட்டுமல்லாமல், அய்தரா பாத்தின் மெக்கா மஜிஸ்த் ஆஜ்மீர்தர்கா குண்டுவெடிப்புகளிலும் சம்பந்தப்பட்டு, அதற்கு மேலும் குஜராத் கலவரத்தை திட்டமிட்டே அங்கே நிகழ்த்திவிட்டு,

முஸ்லீம்கள்மீது பழியைப் போட்டு விட்டு செயலை மிகவும் பக்குவமாகச் செய்துள்ளார்கள்!

2002-ல் குஜராத்தில் நிகழ்ந்த சம்ஜுத்தா எக்ஸ்பிரஸ் கோத்ரா ரயில் எரிப்பில் 50 கரசேவகர்களைக் கொன்ற சதி நிகழ்விலும் இதே லோகேஷ் சர்மா, ஆர்.எஸ்.எஸ். முக்கியப் புள்ளியான ஜோஷியின் ஆணைப்படி அதிலும் கலந்து கொண்டு தனது பங்களிப்பைச் செலுத்திடத் தவறவில்லை என்ற திடுக்கிடும் தகவல் நேஷனல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி (NIA) மூலம் கிடைத்துள்ளதாக 13.1.2013 டைமஸ் ஆஃப் இந்தியா நாளேடு தெளிவாக வெளியிட்டுள்ளது.

டில்லி பாலியல் வன்கொடுமைக்கு உடன் தீர்ப்பு வர வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

மும்பை ஹோட்டலில் பாக். தீவிரவாதிகள் நடத்திய திட்டமிட்ட, உடனே தூக்கில் போட வேண்டும் என்பவர்கள், நாடாளுமன்றக் கட்டடம் தாக்கப்பட்ட வழக்கில் பிடிபட்டவர்கள் - கசாப்புகள் போன்றவர்கள் உடனே தண்டனையை நிறைவேற்றுங்கள் என்று துள்ளிக் குதிக்கும் பா.ஜ.க., மற்றும் வலது சாரி தீவிரவாதிகள் - இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ். படைகள் இந்த மாதிரி வழக்குகளில் சிக்கியவர்கள்மீது ஏன் நீதி விசாரணை - வழக்குகள் - நத்தை வேகத்தில் நகர வேண்டும்?

பாபர் மசூதி இடிப்புக்குக் காரணமான குற்றவாளிகளான பிரபல ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., முன்னணித் தலைவர்கள் குற்றப் பத்திரிக்கையில் இடம் பெற்று வழக்கு - விசாரணை ஜவ்வு மிட்டாய் மாதிரி ஏன் 20 ஆண்டுகளுக்கு மேல் ஆக வேண்டும்?

வெள்ளி விழா வரட்டும் என்று மத்திய அரசு காத்திருக்கிறதோ என்ற கேள்வி பொதுநல ஆர்வலர்களிடமிருந்து நீண்ட காலமாகவே கிளம்பி நிலை கொண்டு, இன்னமும் விடை கிடைக்காதவைகளாக இருக்கிறது.

தீவிரவாதம் என்றாலே இஸ்லாமியர்கள்தான் என்பது போன்ற ஒரு படத்தை நாடு முழுவதும் ஊடகங்களும், இத்தகைய மதவெறி அரசியல்வாதிகளும் வரைந்து காட்டுவதில் பெரு வெற்றி அடைந்துள்ளார்கள்.

மத்தியில் உள்ள அதிகார வர்க்கம் முழுக்க இதில் காவி உணர்வு கொண்ட உயர் ஜாதியினராகவே உள்ளதால், காவல்துறை, விசாரணைத் துறையில் முன்பிருந்த பா.ஜ.க. ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்ட தங்கள் ஆதரவு, அனுதாபங் கொண்ட பலரும், அதே போல நீதித்துறையில் அந்த ஆட்சி பருவத்தில் இடம் பெற்றவர்களும், தற்போதுள்ள ஆட்சியின் கீழ் பணிபுரியும் பல உயர் அதிகாரிகள் நீதித்துறையில் உள்ளோரும், ஒரு வேளை அடுத்து அவர்கள் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வது என்று மனதிற்குள் கணக்குப் போட்டு, செயலை மந்தப்படுத்துவதும் தான் இந்த மெத்தனத்திற்கு முக்கியக் காரணங் களாக இருக்க வேண்டும்!

நீதி வழங்குவதில், குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்தி தண்டனை வழங்குவதில் ஏன் இரட்டை மனப்பான்மையான ஜாதிய மனுதர்மப் பார்வை இருக்க வேண்டும்?

தாங்களே முன்னின்று கலவரங்கள், தீ வைப்புகள், மக்களை அழிக்க வெடிகுண்டு களை நட்டு வைத்து வெடிக்கச் செய்து, பழியை பிற மக்கள் மீது போட்டு, மதக் கலவரங்களைத் தூண்டுவதில் மிகப் பெரிய தேசியக் குற்றம் - சமூக விரோத நடவடிக்கை வேறு உண்டா?


எனவே மத்திய அரசின் உள்துறை இந்த வழக்குகளை விரைந்து நடத்தி குற்றம் புரிந்தோரைத் தண்டிக்க ஆவன செய்ய உடனே முன்வர வேண்டும்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை 16.1.2013

SOURCE: http://www.viduthalai.in/headline/52798-2013-01-16-09-42-59.html

Unknown said...

எல்லா தர்காவுலேயும் பாம் வச்சு இஸ்லாமிய மானத்தை காப்பாத்துங்க சுவனம்

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

சலாம்,

பதிவு அருமை,அண்ணே பாவாக்கள்(!!!!) பேரலாம் எங்கிருந்து எடுத்திங்க.எனக்கென்னவோ இப்பதிவுக்கேன்றே அதிக மெனக்கெட்டு இருப்பிங்கலோனு தோணுது.

என் பதிவு:நெய்ச் சோறு,கறிச் சாப்பாடு -மவ்லித் மாதம்-tvpmuslim.blogspot.com

suvanappiriyan said...

ஜெய்சங்கர்!

//எல்லா தர்காவுலேயும் பாம் வச்சு இஸ்லாமிய மானத்தை காப்பாத்துங்க சுவனம்//

ஹி...ஹி...பாம் வைக்கிறதுல்லாம் உங்க தோஸ்துகளான இந்துத்வாவாதிகளின் வேலை என்பதை புலனாய்வு வரிசையாக கண்டு பிடித்து கைது பண்ணி வருவதை அறியவில்லையா. சகோ உண்மைகள் பகிர்ந்த செய்தியில் திரு வீரமணியின் கோரிக்கையையும் படித்து விடவும்.

நாங்கள் பிரசாரம் என்ற ஒரு ஆயுதத்தை வைத்தே தர்ஹாக்களின் முக்கியத்துவத்தை குறைத்து விடுவோம். அந்த மக்களே இந்த தர்ஹாக்களை இடித்து விட்டு அங்கு கல்விக் கூடங்களை நிறுவும் காலம் கூடிய விரைவில் வரும். உங்கள் காலத்திலேயே அதனை பார்க்கலாம்.

suvanappiriyan said...

சலாம் சகோ திருவாளப்புத்தூர்!

//பதிவு அருமை,அண்ணே பாவாக்கள்(!!!!) பேரலாம் எங்கிருந்து எடுத்திங்க.எனக்கென்னவோ இப்பதிவுக்கேன்றே அதிக மெனக்கெட்டு இருப்பிங்கலோனு தோணுது.//

முக நூலை பார்வையிடும் போது கண்ணில் பட்ட இந்த லிஸ்டை காப்பி பேஸ்ட் பண்ணி எனது கருத்துக்களையும் இணைத்து பதிவாக்கினேன். எனவே இந்த பாராட்டு இந்த லிஸ்டை பகிர்ந்த அந்த சகோதரரையே சேரும்.

suvanappiriyan said...

சகோ உண்மைகள்!

//மாலேகான் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மீதான வழக்குகளை
மத்திய அரசின் உள்துறை விரைந்து நடத்தி குற்றம் புரிந்தோரைத் தண்டிக்க ஆவன செய்ய வேண்டும்
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை//

வீரமணி அவர்களின் முக்கியமான அறிக்கையை பகிர்ந்தமைக்கு நன்றி!

UNMAIKAL said...

முஸ்லிம்களை "போலி என்கவுண்டரில்" சுட்டுத்தள்ளிய போலீசுக்கு

ஜெயிலில் "சுகபோக" வசதிகள்!


.Friday, 18 January 2013 06:15 maruppu மீடியா - மறுப்பு செய்திகள்

சொஹ்ராபுத்தீன் ஷேக் "போலி என்கவுண்டர்" குற்றவாளிகளான "டி.ஜி.வஞ்சாரா" உள்ளிட்ட போலீசாருக்கு ஜெயிலில், தனி மேஜை, நாற்காலிகள், தினமும் 4 பத்திரிக்கைகள், டி.வி, பால், அறுசுவை உணவு, தடையற்ற மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படுகின்றன.

போலி என்கவுண்டர் குற்றச்செயலில் ஈடுபட்ட இவர்கள், பதவி நீக்கம் செய்யப்பட்டு கடந்த 1 வருடமாக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மும்பைக்கு அருகில் "தலோஜா" ஜெயிலில் உள்ள அவர்கள், தங்களை அஹ்மதாபாதில் உள்ள "சபர்மதி" ஜெயிலுக்கு மாற்றவும் கோரியுள்ளனர்.


அப்பாவி முஸ்லிமை கொன்ற இவர்களின் "சுகபோக" வசதிகளுக்கு மாஜிஸ்டிரேட் நீதிமன்றம், நேற்று (17/01) அனுமதியளித்து தீர்ப்பளித்தது.

படுக்கை வசதி போதவில்லை, தனி நூலக வசதி, வீட்டு சாப்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளும் இவர்கள் சார்பாக வைக்கப்பட்டது.

இதை எதையுமே சி.பி.ஐ. அதிகாரிகள் எதிர்க்கவில்லை.

இதுகுறித்து குற்றவாளிகளின் வழக்கறிஞர் "வினோத்" குறிப்பிடும்போது, இவர்கள் "விசாரனை"க்கைதிகளே தவிர, குற்றம் நிரூபிக்கப்பட்ட தண்டனை கைதிகள் அல்ல.

எனவே, இவர்களுக்கு எல்லா வசதிகளும் செய்து தரப்படவேண்டும் என்றார்.

சோப்ராஜ் வழக்கில் "உச்சநீதிமன்றம்" இத்தகைய தீர்ப்பை வழங்கிய முன்மாதிரி இருக்கிறது, என்கிறார்,வினோத்.

THANKS TO SOURCE:http://www.maruppu.in/all-medias/43-maruppu-news/750--qq-qq-

UNMAIKAL said...

ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் முகாம்களை கண்டுபிடிக்க காடுகளில் என்.ஐ.ஏ தேடுதல் வேட்டை!
18 Jan 2013 NIA team scans Dewas forests for saffron hideouts

புதுடெல்லி:ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் ரகசிய முகாம்களை கண்டுபிடிக்க மத்தியபிரதேச மாநிலத்தின் தேவாஸில் உள்ள காட்டுப்பகுதிகளில் தேசிய புலனாய்வு ஏஜன்சி தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெடிக்குண்டு தாக்குதல்களை நடத்துவதற்கு முன்பு இங்கு ஹிந்துத்துவா தீவிரவாதிகள் சோதனை நடத்தியிருந்தனர்.

இதுத்தொடர்பான ஆதாரங்கள் மற்றும் ரகசிய முகாம்களை கண்டுபிடிக்க என்.ஐ.ஏ சோதனை நடத்திவருகிறது.

வெடிக்குண்டு தாக்குதல்களுக்கு சூத்திரதாரியாக திகழ்ந்த ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷியின் கொலை மற்றும் மலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பு ஆகியவற்றில் தொடர்புடைய பல்பீர்சிங்கையும் என்.ஐ.ஏ இந்த தேடுதல் வேட்டைக்கு அழைத்துவந்தது.

குராதியா ராவு காட்டுப் பகுதியில் இந்த சோதனை நடந்தது.

தேவாஸின் தலைநகரில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள மோ காட்டுப் பகுதியில் இன்னொரு என்.ஐ.ஏ குழுவினர் சோதனை நடத்தினர்.

ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் ரகசிய புகலிடமாக திகழும் தீபால்பூரில் இருந்து முன்னர் கைதுச் செய்யப்பட்ட கமால் சவுகான் என்ற ஹிந்துத்துவா தீவிரவாதியை அழைத்து வந்தும் இங்கு சோதனை நடத்தப்பட்டது.

இந்தூரில் மண்டல்வாடா கிராமத்தில் இருந்து கடந்த திங்கள் கிழமை பல்பீர் சிங் கைது செய்யப்பட்டான்.

ஜோஷியின் நெருங்கிய நண்பனும், கொலையில் குற்றவாளிகளில் ஒருவனுமான ஜிதேஷ் பட்டேலின் வீட்டிலும் என்.ஐ.ஏ சோதனை நடத்தியது.

பல்பீர் சிங்கின் வீட்டில் இருந்து 9 எம்.எம் பிஸ்டலின் தோட்டக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதில் மீதமுள்ள தோட்டக்களை உபயோகித்து ஜோஷி கொல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

2007 டிசம்பர் 29-ஆம் தேதி பைக்கில் சென்றுகொண்டிருந்த ஜோஷி 9 எம்.எம் பிஸ்டலின் தோட்டா பாய்ந்து மரணமடைந்தான்.

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் குற்றவாளியான தேஜ்ராம் பவார் உள்ளிட்ட இப்பகுதியில் முக்கிய ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் வீடுகளிலும் என்.ஐ.ஏ சோதனை நடத்தியது.

இப்பகுதியில் சோதனைகள் தொடரும் என்று என்.ஐ.ஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தீவிரவாத செயல்களின் ரகசியம் கசிந்ததும், மதுபான விற்பனையில் ஏற்பட்ட தகராறும் ஜோஷியின் கொலைக்கு காரணம் என்று பல்பீர்சிங் என்.ஐ.ஏவிடம் ஒப்புக்கொண்டுள்ளான்.

இதனிடையே, சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மலேகான் குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய மேலும் ஒரு ஹிந்துத்துவா தீவிரவாதியையும் தேசிய புலனாய்வு ஏஜன்சி கைது செய்துள்ளது.

இந்தூரில் ஸான்வர் பகுதியைச் சார்ந்த தினேஷ் தேவ்ரா என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான். இவனிடம் விசாரணை தொடருகிறது.

நேற்று முன் தினம் இந்த இரண்டு குண்டுவெடிப்புகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷி கொலைத் தொடர்பாக பல்பீர் சிங் என்ற ஹிந்துத்துவா தீவிரவாதியை என்.ஐ.ஏ கைது செய்திருந்தது.

SOURCE:http://www.thoothuonline.com/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/

Unknown said...

//.பாம் வைக்கிறதுல்லாம் உங்க தோஸ்துகளான இந்துத்வாவாதிகளின் வேலை என்பதை புலனாய்வு வரிசையாக கண்டு பிடித்து கைது பண்ணி வருவதை அறியவில்லையா.//

பாகிஸ்தான்லேயும் ஈரான்லேயும் குண்டு வைப்பது இந்துத்துவா வாதிகளா? சுவனம்

suvanappiriyan said...

//பாகிஸ்தான்லேயும் ஈரான்லேயும் குண்டு வைப்பது இந்துத்துவா வாதிகளா? சுவனம் //

அது உங்க இந்துத்வாவாதிகளின் நெருங்கிய பந்துக்களான யூதர்களின் கைவரிசை. இதை ஈரானின் புலனாய்வு தெளிவாக தெரிவிக்கிறது.

Anonymous said...

//அது உங்க இந்துத்வாவாதிகளின் நெருங்கிய பந்துக்களான யூதர்களின் கைவரிசை. இதை ஈரானின் புலனாய்வு தெளிவாக தெரிவிக்கிறது. //

இப்படி சொல்லித்தான் நம்மள ரொம்ப நல்லவங்கனு காட்டிக்க வேண்டி இருக்கு

Anonymous said...

இன்னும் கொஞ்ச நாள் போனால், தாலிபான்கள் கூட இந்துத்துவா வாதிகள் தான், அதை தாலிபானின் புலனாய்வு பிரிவு கண்டு பிடித்துள்ளது என்று சுவ்னபிரியர் ஹாலால் பீர் போதையில் கூறினாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை

Anonymous said...

எல்லாரும் நம்புங்கள், முஸ்லிம்கள் ரொம்ப நல்லவர்கள் அவர்களுக்கு குண்டு வைக்க தெரியாது, விரல் சூப்ப மட்டுமே தெரியும்

Unknown said...

//இதை ஈரானின் புலனாய்வு தெளிவாக தெரிவிக்கிறது./

வேலிக்கு ஓணான் சாட்சி

Adirai Iqbal said...

அல்லாஹ்வை அன்றி அவர்களுக்கு தீமையையோ, அவர்களுக்கு நன்மையையோ செய்ய சக்தியற்றவர்களை அவர்கள் வணங்குகின்றார்கள். மேலும் 'இவர்கள் அல்லாஹ்விடம் எமக்காக பரிந்துரை செய்வோர்' எனவும் கூறுகின்றனர். வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ் அறியாதவை (இருப்பதாக நினைத்து) அவை பற்றி நீங்கள் அவனுக்கு அறிவித்து கொடுக்கின்றீர்களா?.அவன் தூய்மையானவன் அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் மேலானதாகிவிட்டான் ' என்று (நபியே) நீர் கூறுவீராக ! (அல் குர்ஆன் 10:18)

அல்லாஹ்வையன்றி மறுமை நாள் வரை தனக்கு எந்த பதிலையும் அளித்திடாதோரை அழைப்பவனை விட மிகவும் வழிக்கெட்டவன் யார்? அவர்களோ இவர்களின் அழைப்பை உணராதவர்களாக இருக்கின்றனர். (அல் குர்ஆன் 46:5)

ராவணன் said...

அண்ணாச்சி நீங்க ஒரு தீவிரவாதியா?

ராவணன் said...

அண்ணாச்சி ஒங்க அரேபிய அல்லாவின் பினாமியா இந்த வீரமணி?

…இந்த வீரமணி கூறுவது அனைத்தும் குரானின் மறுஒலிப்பா?

Anonymous said...

If we are not allowed to construct tomb over the (kabr) in pious peoples grave, first You should destroy our prophet kabr, it is also constructed over the grave. கப்ருகள் கட்டப்படுவதையும், பூசப்படுவதையும், அதன் மீது உட்காருவதையும் நபி அவர்கள் தடை செய்தார்கள். அறிவிப்பாளர் : ஜாபிர்(ரலி), நூல்கள் : அஹ்மது, முஸ்லிம், நஸயீ, அபூதாவூத், திர்மிதி.

யூத கிறிஸ்த்தவர்களில் ஒரு நல்ல மனிதன் இறந்து விடும் போது, அவனது கப்ரின் மீது ஒரு வணங்கும் இடத்தை கட்டிக் கொள்வார்கள். நாளடைவில் அதில் சில வடிவங்களையும் அமைத்துக் கொள்வார்கள். அல்லாஹ்விடம் இவர்களே மிகக் கெட்டவர்கள் என்று நபி அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி.

நீங்கள் எனது அடக்கத் தலத்தை விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கி விடாதீர்கள் என்று நபி அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பாளர் : அபூ ஹூரைரா (ரலி) நூல் : அபூதாவூத்.

உயரமான எந்த அடக்கத் தலத்தையும், இடித்து சமப்படுத்தாமல் விட்டு விடாதே! எனக் கூறி, நபி அவர்கள் என்னை அனுப்பிய பணிக்கே உம்மையும் அனுப்புகிறேன், என அலீ (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹய்யாஜீல் அஹ்தீ (ரலி) நூல்கள் : முஸ்லிம், திர்மிதி, நஸயீ, அபூதாவூத், அஹ்மது. The evidence you given is not for All.

Syed said...

மேல இந்த பதிவை போட்டவன் முஸ்லிமே அல்ல அவன் ஒரு கேடுகெட்ட யூத கைக்கூலி இதில் இவன் போட்டிருக்கும் முக்காவாசி தர்காக்களுமே கிடையாது