Followers

Wednesday, January 09, 2013

பாகிஸ்தான் செழிக்காது! அபுல் கலாம் ஆசாத்


பாகிஸ்தான் செழிக்காது! அபுல் கலாம் ஆசாத்தின் கணிப்பு!



எவ்வளவு தீர்க்கதிரிசனமான வார்த்தை! பாகிஸ்தான் பிரிவினையில் அவ்வாறு செல்வது முஸ்லிமகளின் எதிர்காலத்தை குட்டிச்சுவராக ஆக்கி விடும். எனவே தனியாக பிரிந்து செல்லாதீர்கள். இநதுக்களோடு சேர்ந்தே ஒரே இந்தியாவில் இருப்போம் என்று கடைசி வரை போராடி பார்த்தார் அபுல் கலாம் ஆசாத். கேட்டார்களா குறுமதியாளர்கள். பேச விட்டார்களா அபுல் கலாம் ஆசாத்தை! பிரித்துக் கொண்டு சென்று 50 ஆண்டுகள் ஆகி விட்டது. அதற்குள் அபுல் கலாம் எதைச் சொன்னாரோ அதனை உண்மையாக்கி விட்டனர் பாகிஸ்தானிகள். எங்கு திரும்பினாலும் பிரச்னை. கொலை, கொள்ளை, ஊழல் என்று இன்று பாகிஸ்தான் செய்வதறியாது திகைத்து நிற்கிறது.

லாகூரிலிருந்து வெளிவந்த ஒரு உருது பத்திரிக்கையில் சோரிஸ் காஷ்மீரி என்ற நிருபருக்கு 1946 ஆம் ஆண்டு அளித்த பேட்டியின் முக்கியமான சிலவற்றை பார்ப்போம்.

கேள்வி: இந்து முஸ்லிம் பிரச்னை அதிகமாகி விட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரிவினை தவிர்க்க முடியாதது என்று நீங்கள் நினைக்கவில்லையா?

பதில்: பாகிஸ்தான் பிரித்து கொடுப்பதால் இந்து முஸ்லிம் பிரச்னை ஓய்ந்து விடும் என்ற வாதத்தை நான் ஏற்கவில்லை. பாகிஸ்தானில் உள்ள இந்துக்களையும் சீக்கியர்களையும் முஸ்லிம்கள் தாக்கும் அபாயம் உண்டு. அதே போல் இங்குள்ள முஸ்லிம்கள் இந்துக்களால் தாக்கப்படும் அபாயம் உள்ளது. இது காலத்துக்கும் தீராத பிரச்னையை உண்டு பண்ணும். அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகள் பாகிஸ்தானில் தளம் அமைத்து இந்தியாவுக்கு தொல்லை கொடுக்கும் அபாயமும் உள்ளது.

பெரும் செல்வந்தர்கள் வணிக நிறுவனங்களை பங்கு கோட்டு கொள்வர். ஏழைகள் மேலும் ஏழைகளாவர். இது பிரச்னைகள மேலும் அதிகமாக்கும்..

கேள்வி: ஆனால் பல உலமாக்கள் மற்றும் முகமது அலி ஜின்னா போன்றவர்கள் பாகிஸ்தான் பிரிவினையை ஆதரிக்கிறார்களே! தனி நாடாக பிரிந்தால் ஒரு குடையின் கீழ் வர சாத்தியம் உண்டல்லவா?

பதில்: பாகிஸ்தான் பிரிவினையால் ஏதேனும் நன்மை நடக்கும் என்பது தெளிவானால் அதற்கு முதல் ஆதரவுக் குரல் நானே கொடுப்பேன். இதனால் எந்த நன்மையும் விளையப் போவதில்லை. உலமாக்கள் என்று சொல்கிறீர்கள். அக்பருடைய அவையில் இருந்து தனி மதம் கண்ட பல முஸ்லிம்களையும் உலமாக்கள் என்றே கூறுகிறோம். உலமாக்கள் சொல்வதெல்லாம் மார்க்கமாகாது. இஸ்லாத்தின் அடிப்படையை புரிந்து கொள்ள குர்ஆனையும் நபி மொழிகளையும் பார்க்க வேண்டும்.

1000 ஆண்டு காலம் இந்த பரந்த பாரத நாட்டை ஆண்ட முஸ்லிம்கள் இஸ்லாத்துக்காக என்ன செய்து விட்டார்கள்? பெயரளவுக்குத்தான் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தனர். உலமாக்கள் சபைகளை எல்லாம் இந்த அரசர்கள் தடை செய்ததை வரலாறுகளில் பார்க்கிறோம்.

நமது தூதர் நபியவர்கள் 'இந்த உலகம் முழுவதிலும் எனக்கு தொழும் இடமாக ஆக்கப்பட்டுள்ளது' என்று கூறியதை நாம் மறந்து விடக் கூடாது. ஒரு முஸ்லிமுக்கு உலகம் முழுவதுமே புண்ணியமான இடங்கள்தான். அனைத்து நாடுகளையும் படைத்தது ஒரு இறைவனே. எனவே இருக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி அதில் நாம் முன்னேறவே யோசிக்க வேண்டும்.

இவ்வாறு பலதரப்பட்ட மக்களும் கலந்து வாழும் ஒரு நாட்டை துண்டாடி தனியாக ஒரு தேசம் உண்டாக்க இஸ்லாம் வழி காட்டவில்லை. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலங்களை விட சிறுபான்மையாக உள்ள மாநிலங்களில் தங்களின் இஸ்லாமிய நடவடிக்கையை பேணுவதில் அதிக அக்கறை காட்டுவதை பார்க்கிறோம். பிற்காலத்தில் பாகிஸ்தானில் இஸ்லாம் அதன் உண்மை முகத்தை இழந்து விடும் அபாயம் உள்ளது. இறைவனே இதனை நன்கு அறிந்தவன்.

கேள்வி: ஆனால் இந்துக்களும் முஸ்லிம்களும் இரு வேறுபட்ட கலாசாரத்துக்கு சொந்தக்காரர்கள். அனைத்திலும் வேறுபடுகிறார்கள். இந்த இருவருக்குள் ஒற்றுமை எவ்வாறு சாத்தியம் என்று எதிர் பார்க்கிறீர்கள்?

பதில்: இது பற்றி நான் அல்லாமா இக்பாலுடனும், மௌலானா ஹூசைன் அஹமத் மதனியுடனும் நிறைய விவாதித்துள்ளேன். நீங்கள் குர்ஆனை முழுவதும் படித்துப் பாருங்கள். அதில் சில வசனங்கள் மட்டுமே முஸ்லிம்களை நோக்கி சொல்லப்பட்டிருக்கும். அதிகமான அறிவுரைகள் 'மனிதர்களே' என்று உலக மக்களைப் பார்த்துதான் குர்ஆன் பேசும். முஸ்லிம் அல்லாத மக்களோடு நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற வழி காட்டுதலும் குர்ஆனில் உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுவே குர்ஆன் கூறும் வழிமுறை.

இந்த அகண்ட பாரதத்தில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்தவர்கள், பார்சிகள், சீக்கியர்கள் என்று பலதரப்பட்ட மக்கள் கலந்து ஒரு குழுவாக வாழ்ந்து வருகின்றனர். அவரவர் நம்பிக்கையை மதித்து சந்தோஷமாக வாழ்தல் என்பது மிக எளிதானதே. முன்பு நாம் இவ்வாறு வாழ்ந்திருக்கிறோம்.

சுதந்திரம் என்பது அந்நிய நாட்டின் ஆதிக்கத்திலிருந்து நம்மை விடுவித்துக் கொள்கிறோம்.. அதற்காக மதத்தின் அடிப்படையில் பிரிவினையை உண்டாக்கி சுதந்திரம் அடைவது என்பது பிரச்னையை மேலும் அதிகமாக்கவே செய்யும். இதை நான் நன்றாக உணர்ந்ததாலேயே இந்த அளவு உங்களிடம் பேசுகிறேன்.

முஸ்லிம்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் குறுகிய வட்டத்திலிருந்து வெளி வர வேண்டும். அவர்கள் உலக மக்களுக்கு நற் செய்தியை கொண்டு செல்லும் முக்கிய பணியை இறைவன் கொடுத்துள்ளான். அதை விடுத்து சாதி, இனம், மொழி என்ற பெயரில் பிரிந்து கொள்வதை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. சிலர் முஸ்லிம்களுக்குள் ஒற்றுமையை உண்டு பண்ண இந்துக்களை எதிரிகளாக்க முற்படுகின்றனர். அப்படி ஒரு ஒற்றுமை வந்தால் அது வெளி உலகுக்கான போலி ஒற்றுமையாகத்தான் இருக்கும். இஸ்லாம் கூறும் உளப்பூர்வமான ஒற்றுமையை உங்களால் கொண்டு வர முடியாது. அதற்கு முஸ்லிம்கள் குர்ஆனையும் முகமது நபியின் வாழ்வு முறையையும் தங்கள் கைகளில் எடுக்க வேண்டும். அதுதான் நிரந்தர தீர்வாகவும் இருக்க முடியும்.

வஹ்ஹாபி என்றும், சூஃபி என்றும், சுன்னத் ஜமாத் என்றும் ஷியா என்றும் முஸ்லிம்கள் பலவாறாக பிரிந்து கிடக்கின்றனர். ஆமீன் என்று சப்தமிடுவதும், கைகளை உயர்த்துவதும் கூட பல இடங்களில் பிரச்னையாக்கப்படுகிறது. சில மொளலவிகள் தங்களுக்கு தோதான ஃபத்வாக்களை கொடுத்து மக்களை அறியாமையில் இன்றும் வைத்துள்ளனர். இதற்கெல்லாம் அழகிய தீர்வை நமது தூதர் நமக்கு காட்டித் தந்திருக்க அதன் பக்கம் ஏனோ நாம் கவனம் செலுத்துவதில்லை.

எனவே முஸ்லிம்கள் சகோதர பாசத்தோடு ஒன்றினைந்து இந்தியா சுதந்திரம் அடைய அனைத்து மக்களோடும் தோளோடு தோள் கொடுத்து ஒத்துழைப்பு நல்க வேண்டும்....

THE MAN WHO KNEW THE FUTURE
by Shorish Kashmiri, Matbooat chattan, Lahore.

மிக நீண்ட பேட்டி. நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது மொழி பெயர்ப்பு செய்து படிப்போம். இவர் எதை எல்லாம் எதிர்பார்த்தாரோ அவை எல்லாம் ஒவ்வொன்றாக நடந்து வந்துள்ளதை பார்த்து ஆச்சரியப்படுகிறோம்..

------------------------------------------------


இந்த பாலத்தைக் கடக்கவும் மிகுந்த திறமை வேண்டும் இல்லையா! :-)


பலுசிஸ்தானின் ரமமியமான ஒரு இடம்.


37 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சலாம் சகோ.சுவன்ப்பரியன்.
மிக அருமையான ஆக்கம் சகோ.

///சிலர் முஸ்லிம்களுக்குள் ஒற்றுமையை உண்டு பண்ண இந்துக்களை எதிரிகளாக்க முற்படுகின்றனர். ///
------------இன்றைக்கு ஹிந்துத்துவாக்கள் செய்யும் அதே மத அரசியல்..!

மக்காவில் பிறந்த அரேபியர்.... ஒருவர் இந்தியாவின் விடுதலைக்காக போராடி சிறை சென்று தனது பெயரையே (ஆசாத்) 'விடுதலை' என்று மாற்றிக்கொண்டு... சுதந்திர நாட்டில் கல்வி அமைச்சராக இருந்து... 'அபுல் கலாம்' (எழுதுகோலின் தந்தை)என்ற புகழுக்கு உள்ளாகி... பாரத ரதனாவை 'பதவியில் இருக்கும் போது வேண்டாம்' என்று மறுத்து... இங்கேயே மடிந்து இதே மண்ணில் புதைந்து..... மாஷாஅல்லாஹ்.... என்ன ஒரு புரட்சி..!

இவர் சே குவாராவை விடவேல்லாம் அதிக புகழுக்கு உரியவர் என்றால் மிகை இல்லை..!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஆனால்...... இவர் இப்படி இருக்க.... நம்ம பங்காளிகளின் மூதாதையரோ........

பிறந்த மண்ணை விட்டு, வாழ்ந்த வீட்டை விட்டு, பழகிய உற்றார் உறவினரை விட்டு, நடந்த தெரு, சுற்றிய ஊர், படித்த பள்ளி, வேலை செய்த அலுவலகம், விவசாயம் பார்த்த நிலம், பராமரித்த தோப்பு, தண்ணீர் ஊற்றிய பூந்தோட்டம், இத்யாதி இத்யாதிகளை விட்டுவிட்டு துறந்து விட்டு நாடோடியாக இலவச ரயிலில் கராச்சிக்கு சென்ற முட்டாள்களிடம் எந்த அளவுக்கு மத வெறி இருந்திருக்க வேண்டும்..? இவர்களாகவே நிறைந்த ஒரு நாடு வேறு எப்படி இருக்கும்..? இதுதான் இஸ்லாம் சொன்னதா..?

'இது மதச்சார்பற்ற நாடு- முஸ்லிம்களே, உங்களுக்கு இங்கே பாதுகாப்பு உண்டு' என்று நாட்டின் பிரதமர் (ஆக போகிறவர்) அறிவிக்க... அடுத்த நிலையில் இருந்த அபுல்கலாம் ஆசாத் அதற்கு உதாரண சாட்சியாக இங்கேயே இருக்க சொல்ல... உயிருக்கு ஆபத்து இல்லாத நிலையில் ஜிஹாத் செய்தது இஸ்லாத்திற்கு முற்றிலும் எதிரானது.

ஆக, பாகிஸ்தான் ஆரம்பமே இஸ்லாத்துக்கு புறம்பானது. சுயநலன் மிக்கது. அப்போதைய பிரிவினையை ஆதரித்த முஸ்லிம் தலைவர்களுக்கு இந்திய முஸ்லிம்களை பற்றி எவ்வித அக்கறையோ பற்றோ பாசமோ தொலைநோக்கு பார்வையோ சுத்தமாக இல்லை. எந்த அளவுக்கு என்றால்... அப்போதைய முஸ்லிம் அல்லாத சில இந்திய தலைவர்களுக்கு இருந்த அக்கறை கூட அவர்களுக்கு இல்லை.

'பாக்' என்றால் தூய்மையாம். 'தூய நாடாம்'. பெயரில் மட்டுமே..! அங்கே பெரும்பாலானோர் உள்ளத்தில் அது அறவே இல்லை.

UNMAIKAL said...

நாம் சுவாசிக்கும் இந்த சுதந்திர காற்றுக்காக,

திரு.அபுல் கலாம் ஆசாதுக்கு

இந்த தேசம் என்றைக்கும் நன்றி கடன் பட்டிருக்கிறது. - by பா.சதீஸ் முத்து கோபால்



>>>> இந்தியா விடுதலை வெற்றி : திரு.அபுல் கலாம் ஆசாத் > <<<<

திரு.அபுல் கலாம் ஆசாத் எழுதிய சுயசரிதையான "இந்தியா விடுதலை வெற்றி" வாசித்தேன்.
(தமிழில் மொழி பெயர்ப்பு: திரு.ஏ.ஜி.வெங்கடாச்சாரி மற்றும் திரு.பூரண சந்திரன்)


இந்தியாவின் விடுதலைக்கு திரு.ஆசாதின் பங்கு என்ன என்பதை முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது.

1940 முதல் 1946 வரை காங்கிரஸ் தலைவராக பொறுப்பு வகித்த போது, இவர் ஆற்றிய செயல்பாடுகள் நம்முடைய விடுதலைக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை எப்படி ஒவ்வொரு தலைவராலும் படிப்படியாக அங்கீகரிக்கப்பட்டது என்பது ஆச்சர்யம் நிறைந்ததாக இருக்கிறது.

கடைசி வரை இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டுவிடக்கூடாது என மிகவும் பாடுபட்டவர் திரு.ஆசாத் அவர்கள்.

இந்த சுயசரிதையில் நான் குறிப்பிட விரும்பும் சில செய்திகள்:

திரு.ஜின்னாவின் பாகிஸ்தான் கோரிக்கைக்கு எதிராக திரு.ஆசாத் பலமுறை வலியுறுத்திப்பேசி பிறகு ஜின்னாவின் மனதையும் மாற்றுவதில் ஓரளவு வெற்றி கண்டபோதிலும்,

திரு.நேரு அவசரப்பட்டு வெளியிட்ட ஒரு அறிக்கையின் மூலமாக ஜின்னா மீண்டும் மனம் மாற நேரிட்டது.

மந்திரி சபை தூது திட்டத்தை காங்கிரஸ் சுதந்திரமாக மாற்றிக்கொள்ளும் என்ற நேருவின் கூற்று, முஸ்லீம் லீகால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போனது.

ஒருவேளை நேரு பொறுமையாக செயல் பட்டிருந்தால் இந்திய வரலாறு மாறிப்போயிருக்கலாம்.

பிரிவினைக்குப் பிறகு திரு.வல்லபாய் பட்டேல், மத்திய உள் துறை அமைச்சராக இருத்த போது, ஏற்ப்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்காமல் விட்டதும்,

அதை தொடர்ந்து கலவரத்தை கட்டுப்படுத்த திரு.காந்தி உண்ணாவிரதம் தொடங்கியதும்,

காந்தியின் போக்கால் கலவரம் உடனடியாக கட்டுக்குள் வந்ததும் திரு.ஆசாத் ஒளிவு மறைவின்றி எழுதியிருப்பது போல தோன்றுகிறது.

பிர்லா மாளிகையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த பிறகும், போதிய பாதுகாப்பை காந்திக்கு வழங்காததும்,

அதன் பிறகு காந்தியின் மரணத்தில் ஏற்பட்ட சோக நிகழ்வுகளும் மனதை பிசைகிறது.

78 வயதில், உண்ணாவிரதம் இருந்து இந்த தேசத்தை ஒற்றுமை படுத்திய காந்தியின் செயல்பாடுகளும்,

அதற்கு ஆசாத்தின் துணையும்,

அகிம்சை எவ்வளவு வலிமையானது என்பதை உணர வைக்கிறது.

நாம் சுவாசிக்கும் இந்த சுதந்திர காற்றுக்காக, திரு.அபுல் கலாம் ஆசாதுக்கு இந்த தேசம் என்றைக்கும் நன்றி கடன் பட்டிருக்கிறது.

Posted by பா.சதீஸ் முத்து கோபால்
THANKS TO SOURCE: http://ivansatheesh.blogspot.com.

UNMAIKAL said...

மௌலானா அபுல்கலாம் ஆசாத்.

தோற்றம் 11.11.1888 மறைவு 22.2. 1958

1888ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி, மௌலானா கைருதீனுக்கும், அலியாவுக்கு மகனாக, மெக்காவில், மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது (அபுல் கலாம் ஆசாத்) பிறந்தார்.

அபுல்கலாம் என்ற அரபுச் சொல்லிற்கு "சொல்லின் செல்வர்" என்று பொருள்.

பரவலாக இவர் மௌலானா ஆசாத் (விடுதலை) என அறியப்படுகிறார்.

10 வயதிலேயே குரானை கற்றுத் தேர்ந்தார்.

17 வயதில் இஸ்லாமிய உலகில் பயிற்சி பெற்ற ஆன்மீகவாதியாக அறியப்பட்டார்.

கெய்ரோவில் உள்ள அல் அசார் பல்கலைக்கழகத்தில் அவர் கற்ற கல்வி அவரது அறிவை விசாலமாக்கியது.

இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும் இந்திய முசுலிம் அறிஞரும் ஆவார்.

சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட ஆசாத், சிறையில் பல ஆண்டுகளைக் கழித்தார்.

சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்து- முசுலிம் ஒற்றுமையை வலியுறுத்திய முசுலிம் தலைவர்களில் முதன்மையானவர்.

இந்தியா விடுதலையடைந்த பிறகு அமைந்த முதல் இந்திய அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர்.

மதவாதத்தை ஒரேடியாக குழி தோண்டிப் புதையுங்கள் என்பதுதான் ஆசாத் மாணவர்களுக்கு எப்போதும் கூறும் அறிவுரையாகும்.

மாணவர்களின் ஒழுக்கமின்மை குறித்து அவர் வேதனைப்படுவார்.

1954இல் கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய கூட்டத்தில் பேசும் போது, எந்த காரணமுமின்றி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து மிகவும் வேதனைப்படுவதாகவும், இத்தகைய போராட்டங்கள் தேசத்தின் கலாச்சார வேரை அசைத்துப் பார்ப்பதாகவும் அவர் வருத்தப்பட்டார்.

இன்றைய மாணவர்கள் நாளைய அரசியல் தலைவர்கள், அவர்களுக்கு முறையான பயிற்சிகளை அளிக்காவிட்டால் தேசத்திற்கு தேவையான தலைமைத்துவம் கிடைக்காமல் போய்விடும் என்ற கருத்தினைக் கொண்டிருந்தார் ஆசாத்.

அரபு, உருது, பார்சி ஆகிய மொழிகளில் மௌலான அபுல் கலாம் ஆசாத் பல நூல்களை எழுதியுள்ளார்.

குரானை அரபு மொழியிலிருந்து பார்சி மொழிக்கு மொழி பெயர்த்தார்.

பாக்கிஸ்தான் பிரிவினையையும் அங்கு இராணுவ ஆட்சி ஏற்படப்போவதையும் முன்னரே தெரிவித்த பெருமை உடையவர்.[1]

1992ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் உயரிய குடிமை விருதான பாரத ரத்னா மறைந்த பிறகு வழங்கப்பட்டது.[2]

இந்தியாவில் கல்வித்துறைக்கு சரியான அடித்தளமிட்ட இவராற்றிய பணியை நினைவுகூறும் வகையில் இவரது பிறந்த நாள் தேசிய கல்வி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

புதுதில்லியில் உ்ளள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் இவரது பெயரைத் தாங்கி உள்ளன.

மௌலான அபுல் கலாம் ஆசாத் அற்புதமான ஒரு மனிதர்.

தனது வாழ்வின் இறுதி வரை இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டார்.

ஹுஸைனம்மா said...

சுப்ஹானல்லாஹ்!! எவ்வளவு ஒரு நல்ல தலைவரைக் கொண்டிருந்திருக்கிறோம்!! சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் என்பதைத் தவிர வேறு எதுவும் தெரியாது இவரைப் பற்றி. இவர் போன்ற தலைவர்களே இன்றைய தேவை.

இவரின் அறிவுரைகள் இன்றைய முஸ்லிம்களும் பின்பற்ற வேண்டியதே!!

//நீங்கள் குர்ஆனை முழுவதும் படித்துப் பாருங்கள். அதில் சில வசனங்கள் மட்டுமே முஸ்லிம்களை நோக்கி சொல்லப்பட்டிருக்கும். அதிகமான அறிவுரைகள் 'மனிதர்களே' என்று உலக மக்களைப் பார்த்துதான் குர்ஆன் பேசும். முஸ்லிம் அல்லாத மக்களோடு நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற வழி காட்டுதலும் குர்ஆனில் உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுவே குர்ஆன் கூறும் வழிமுறை.//

ஹுஸைனம்மா said...

முழு பேட்டியையும் படிக்கும் ஆவலில் தேடியபோது இங்கு கண்டேன்:
http://www.newageislam.com/articledetails.aspx?ID=2139

(தகவலுக்காக)

காந்தி ஒரு உண்மை முஸ்லிமான இவரது ஆலோசனையை ஏற்காமல், பெயரளவில் மட்டுமே முஸ்லிமாக இருந்த ஜின்னாவின் பிடிவாதத்தை மதித்தது ஏன் என்று புரியவில்லை.

//அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகள் பாகிஸ்தானில் தளம் அமைத்து இந்தியாவுக்கு தொல்லை கொடுக்கும் அபாயமும் உள்ளது//

எவ்வளவு தீர்க்கமாகக் கணித்துள்ளார்!!

UNMAIKAL said...

திருமண ஆசை காட்டி பல முறை கருக்கலைப்பு செய்துவிட்டு

ஏமாற்றிய பாதிரியார் மீது நர்ஸிங் மாணவி புகார்


Posted by: Siva Published: Thursday, January 10, 2013, 10:54 [IST]

சென்னை: திருமண ஆசைகாட்டி சீரழித்து பலமுறை கர்ப்பத்தை கலைத்துவிட்டு தன்னை ஏமாற்றிய பாதிரியார் மீது நர்ஸிங் மாணவி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

விழுப்புரத்தைச் சேர்ந்தவர் காவ்யா(25)(பெயர் மாற்றப்பட்டுள்ளது).

அவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து பாதிரியார் மீது புகார் கொடுத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

என் தந்தை ஒரு விவசாயி. அவருக்கு என்னையும் சேர்த்து 7 பிள்ளைகள். நான் பி.எஸ்.சி. நர்சிங் படித்துக் கொண்டிருக்கிறேன்.

முதலில் தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்தபோது வியாசர்பாடி சர்மா நகரைச் சேர்ந்த அந்தோணி ஜோசப்(31) என்பவர் அவரது பெரியம்மா லூர்து மேரிக்கு சிகிச்சை அளிக்க என்னை அழைத்துச் சென்றார்.

அங்கிருந்து அவர் தினமும் என்னை தனது வாகனத்தில் கல்லூரிக்கு அழைத்து வருவார். அப்போது அவர் தன்னை மணக்குமாறு கேட்டார். முதலில் மறுத்தேன். உடனே அவர் நீ என்னை மணக்காவிட்டால் நான் அவர் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார்.

அதன் பிறகு என்னை கட்டாயப்படுத்தி தனது காரில் 23-4-2012 அன்று மூணாறுக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஒரு ஹோட்டலில் தங்க வைத்த அவர் குளிர்பானத்தில் மயக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து என்னை கற்பழித்துவிட்டார்.

மயக்கம் தெரிந்த பிறகு அவருடன் தகராறு செய்தேன். உடனே என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி என்னை சமாதானம் செய்தார்.

அவரது வார்த்தையை நம்பி நடந்த விஷயத்தை நான் யாரிடமும் கூறவில்லை.

இந்நிலையில் நான் கர்ப்பமானேன். மருத்துவரிடம் அழைத்துச் சென்று என்னை தனது மனைவி என்று கூறி கல்லூரியில் படிக்கும் சமயத்தில் குழந்தை வேண்டாம் என்று நினைக்கிறோம் என்று கூறி மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொடுத்து கருவை கலைத்தார்.

அதன் பிறகு அவர் தங்கி இருந்த மூலக்கடை அசிசி நகர், ஆலயத்தில் உள்ள அறைக்கு அழைத்துச் சென்று திருமண ஆசை காட்டி என்னை மீண்டும் சீரழித்தார்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி தோழியின் திருமணத்திற்காக வேலூர் கிளம்பினேன். அப்போது அவர் என்னை தனது காரில் அழைத்துச் சென்றார். வேலூரில் ஒரு அறை எடுத்து தங்கினோம். அப்போது அவர் எனது கழுத்தில் மஞ்சள் கயிற்றை கட்டிவிட்டு என்னை மனைவி என்று கூறி மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்தார்.

அதன் பின்னர் தங்கத் தாலி வாங்கித் தருவதாகக் கூறி மஞ்சள் கயிற்றை அறுத்துவிட்டார். கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றோம். அதன் பிறகு கிண்டிக்கு சென்றோம். இரண்டு இடங்களிலும் கணவன், மனைவி என்று கூறியோ அறை எடுத்தோம்.

இந்த காலகட்டத்தில் 3 முறை கர்ப்பம் ஆனேன். ஆனால் இந்த விஷயம் தெரிந்தால் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டார்கள் என்று கூறியே கர்பத்தை கலைக்க வைத்தார்.

எனக்காக பாதிரியார் தொழிலையே விட்டுவிடுவதாக தெரிவித்தார். ஆனால் கடந்த சில வாரங்களாக என்னுடன் அவர் பேசவில்லை.

இதையடுத்து அவரை தொடர்பு கொண்டபோது என்னை திருமணம் செய்ய மறுத்தார்.

மேலும் தனக்கு அதிகாரம் படைத்த பலரைத் தெரியும் என்றும், என்னால் அவரை ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறினார். அவருடன் சேர்ந்து அவரது தம்பியும் மிரட்டுகிறார்.

அதனால் திருமண ஆசை காட்டி என்னை சீரழித்த பாதிரியார் அந்தோணி ஜோசப் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/01/10/tamilnadu-nursing-student-complaints-against-pastor-167722.html

UNMAIKAL said...

கூடுதல் வரதட்சணை கேட்டு

இரும்புக் கம்பியால் மனைவி தொடையில் சூடு வைத்த கணவர் கைது.. மாமியார் ஓட்டம்!


Posted by: Mayura Akilan Published: Thursday, January 10, 2013, 9:28 [IST]

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு கட்டிய மனைவி என்றும் பாராமல்,

தொடையில் இரும்புக் கம்பியால் சூடு வைத்த கொடூரக் கணவரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த கொடும் செயலுக்கு உடந்தையாக இருந்த மாமியார் தலைமறைவாகி விட்டார்.

அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி, நடுவக்குறிச்சியைச் சேர்ந்தவர் கண்ணன். 29 வயதான இவர் தொழிலாளி. இவருக்கும் செல்வி என்ற 27 வயதுப் பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்திற்குப் பின்னர் கண்ணனும் அவரது தாயார் ஜெயலட்சுமியும் சேர்ந்து செல்வியை வரதட்சணை கூடுதலாக கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று கண்ணன் இரும்புக் கம்பியை பழுக்க காய்ச்சி, அதை தனது மனைவியின் தொடையில் வைத்து சூடு போட்டு மிருகம் போல நடந்து கொண்டார்.

இதைத் தட்டிக் கேட்காமல் பார்த்து ரசித்துள்ளார் மாமியார்.

படுகாயமடைந்த செல்வியை உடனடியாக அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். போலீஸிலும் புகார் செய்யப்பட்டது.

இதையடுத்து போலீஸார் கண்ணனைக் கைது செய்தனர்.

மாமியார் தலைமறைவாகி விட்டார். அவரைத் தேடி வருகின்றனர்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/01/10/tamilnadu-husband-arrested-torturing-wife-167713.html

suvanappiriyan said...

சலாம் சகோ ஆஷிக்!

//மக்காவில் பிறந்த அரேபியர்.... ஒருவர் இந்தியாவின் விடுதலைக்காக போராடி சிறை சென்று தனது பெயரையே (ஆசாத்) 'விடுதலை' என்று மாற்றிக்கொண்டு... சுதந்திர நாட்டில் கல்வி அமைச்சராக இருந்து... 'அபுல் கலாம்' (எழுதுகோலின் தந்தை)என்ற புகழுக்கு உள்ளாகி... பாரத ரதனாவை 'பதவியில் இருக்கும் போது வேண்டாம்' என்று மறுத்து... இங்கேயே மடிந்து இதே மண்ணில் புதைந்து..... மாஷாஅல்லாஹ்.... என்ன ஒரு புரட்சி..!

இவர் சே குவாராவை விடவேல்லாம் அதிக புகழுக்கு உரியவர் என்றால் மிகை இல்லை..!//

இன்று நாம் தவ்ஹீத்வாதிகள் எந்த பிரச்னைகளை எதிர் கொள்கிறோமோ அவை அத்தனையையும் அவர் காலத்திலும் மக்கள் அனுபவித்திருக்கிறார்கள். தன்னலமற்ற மிகச் சிறந்த தலைவர். ஏனோ அன்று முஸ்லிம் லீக்கும் காங்கிரஸூம் இவரை முன்னிலைப்படுத்தாமல் மேற்கத்திய மோகத்தில் வளர்ந்த ஜின்னாவை முன்னிலைப்படுத்தியது. அதன் பலனை இன்று இரு நாடுகளும் அனுபவித்து வருகின்றன.

suvanappiriyan said...

சகோ ஹூசைனம்மா!

//சுப்ஹானல்லாஹ்!! எவ்வளவு ஒரு நல்ல தலைவரைக் கொண்டிருந்திருக்கிறோம்!! சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் என்பதைத் தவிர வேறு எதுவும் தெரியாது இவரைப் பற்றி. இவர் போன்ற தலைவர்களே இன்றைய தேவை.

இவரின் அறிவுரைகள் இன்றைய முஸ்லிம்களும் பின்பற்ற வேண்டியதே!!//

இவரது ஒவ்வொரு பேட்டிகளும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இவர் எதை எல்லாம் பின்னால் எதிர்பார்த்தாரோ அவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாய் நடந்து வந்துள்ளதை பார்க்கிறோம். இவர் முஸ்லிம் என்பதாலேயே பல உண்மைகளை நமது ஊடகங்கள் மறைத்து விட்டன.

suvanappiriyan said...

சகோ உண்மைகள்!

//அரபு, உருது, பார்சி ஆகிய மொழிகளில் மௌலான அபுல் கலாம் ஆசாத் பல நூல்களை எழுதியுள்ளார்.

குரானை அரபு மொழியிலிருந்து பார்சி மொழிக்கு மொழி பெயர்த்தார்.

பாக்கிஸ்தான் பிரிவினையையும் அங்கு இராணுவ ஆட்சி ஏற்படப்போவதையும் முன்னரே தெரிவித்த பெருமை உடையவர்.[1]

1992ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் உயரிய குடிமை விருதான பாரத ரத்னா மறைந்த பிறகு வழங்கப்பட்டது.[2] //

பாரத்தின் மிகச் சிறந்த தலைவர் ஒருவரின் மேலதிக விபரங்களை பகிர்ந்தமைக்கு நன்றி.

semmalai akash said...

பதிவைவிட கருத்துகள் காரசாரமாக இருக்கிறது.

அருமையான பதிவு.

UNMAIKAL said...

PART 1. ஜின்னாவின் எண்ணத்திற்கு மதிப்பளித்திருந்தால் பிரிவினையே ஏற்பட்டிருக்காது.

இந்தியாவும், இந்தியர்களும் முழுமையாகவே ஜின்னா குறித்து தவறான கருத்தை வைத்துக் கொண்டிருக்கிறோம்.

யாராவது ஒருவர் மீது பழியைப் போட வேண்டுமே என்பதற்காக ஜின்னாவை பழித்துக் கொண்டிருக்கிறோம்.

இது தவறானது. - ஜஸ்வந்த் சிங்


ஜின்னா-என்ன தான் சொல்கிறார் ஜஸ்வந்த்?

சிம்லா: இந்தியாவும், இந்தியர்களும் முழுமையாகவே ஜின்னா குறித்து தவறான கருத்தை வைத்துக் கொண்டிருக்கிறோம்.

யாராவது ஒருவர் மீது பழியைப் போட வேண்டுமே என்பதற்காக ஜின்னாவை பழித்துக் கொண்டிருக்கிறோம்.

இது தவறானது என்று பாஜகவலிருந்து நீக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங் கூறியுள்ளார்.

நேற்று சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியில் கரன் தாப்பரின் 'டெவில்ஸ் அட்வகேட்' நிகழ்ச்சியில் ஜஸ்வந்த் சிங் அளித்துள்ள பேட்டியின் சில முக்கிய பகுதிகள்...

ஜின்னா சுதந்திர இந்தியாவுக்காக இங்கிலாந்து ஆட்சியாளர்களை எதிர்த்து தீவிரவமாக போராடியவர்.

அதேசமயம், இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் நலனுக்காகவும் போராடினார்.

அதற்காக இந்துக்களை ஜின்னா ஒருபோதும் வெறுத்ததில்லை.

அவர் ஒருபோதும் இந்துக்கள் மீது துவேஷம் கொள்ளவே இல்லை.

காங்கிரஸ் கட்சியுடன் மட்டுமே அவருக்கு கருத்து வேறுபாடு இருந்தது.

இதை தனது கடைசிக்காலத்தில் வெளியிட்ட அறிக்கைகளிலும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையிலும் அவர் தெளிவுபடத் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியுடன்தான் அவருக்கு மிகப் பெரிய கருத்து வேறுபாடு இருந்தது.

காந்தியை ஒரு அரசியல் சுயநலவாதி என்று அவர் விமர்சித்துள்ளார்.

ஜின்னா ஒரு மாபெரும் மனிதர் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.

காங்கிரஸ் கட்சியின் வலிமைக்கும், இங்கிலாந்து ஆட்சியாளர்களின் அசாதாரண பலத்தையும் தாண்டி அவர் உயர்ந்து நின்றார்.

உண்மையில் இவர்கள் இருவருமே ஜின்னாவை விரும்பாதவர்கள்.

ஜின்னாவிடம் பல விஷயங்கள் எனக்குப் பிடிக்கும்.

அவர் சுயமாக வளர்ந்தவர். எந்தவித பின்னணியும் இல்லாமல் கடுமையாக உழைத்து வளர்ந்தவர்.

ஆனால் காந்தி அப்படி அல்ல. அவர் ஒரு திவானின் மகன்.

அதேபோல நேரு மிகப் பெரிய கோடீஸ்வரரின் வாரிசு. அவர்கள் எல்லாம் பெரும் பணக்காரர்கள்.

ஆனால் ஜின்னா அப்படி அல்ல.

தானே முயன்று, கடுமையாக உழைத்து தனக்கென ஒரு அரசியல் வரலாற்றை படைத்தவர் ஜின்னா.

அவ்வளவு பெரிய மும்பையில், பரம ஏழையாகத்தான் அவரும் வாழ்ந்தார்.

அங்கு அவர் தாக்குப்பிடிக்க காரணம் அவரது மன வைராக்கியம் மற்றும் கடுமையான முயற்சிகளே.

மும்பையில் அவர் வாட்சன்ஸ் ஹோட்டலின் மொட்டை மாடியில் தான் ஒரு அறையில்தான் தங்கியிருந்தார்.

ஜின்னா என்றில்லை, சுயமாக உயர்ந்த, கடுமையாக உழைக்கக் கூடிய யாரையும் நான் பாராட்டவே செய்வேன், அவர்களை மதிப்பேன்.

இந்தியாவும், இந்தியர்களும் முழுமையாகவே ஜின்னா குறித்து தவறான கருத்தை வைத்துக் கொண்டிருக்கிறோம்.

யாராவது ஒருவர் மீது பழியைப் போட வேண்டுமே என்பதற்காக ஜின்னாவை பழித்துக் கொண்டிருக்கிறோம்.

இது தவறானது.

1946ல் நடந்த தேர்தலில் ஜின்னாவின் முஸ்லீம் லீக் கட்சி அனைத்து முஸ்லீம் தொகுதிகளிலும் வென்றது.

ஆனால் அவர்களால் ஆட்சியில் அமர முடியாத நிலை.

காரணம், காங்கிரஸ் கட்சி ஒரு முஸ்லீம் வேட்பாளரைக் கூட நிறுத்தாமல் பெரும்பாலான இடங்களில் வென்றிருந்தது.

எனவே முஸ்லீம் லீக்கால் ஆட்சியில் இடம் பிடிக்க முடியவில்லை.

அப்போதுதான் அவர் தேர்தலில் நின்றால் மட்டும் போதாது என்பதை ஜின்னா உணர்ந்தார்.

முஸ்லீம்களுக்கும் ஆட்சியில் அதிகாரம் வேண்டும் என்பதை காங்கிரஸுக்கும் உணர்த்தினார்.

இதையடுத்தே இடஒதுக்கீடு உத்தரவாதம் தரப்பட்டது.

முதலில் 25 சதவீதம் என்று அறிவிக்கப்பட்ட இட ஒதுக்கீடு பின்னர் 33 சதவீதமாக உயர்ந்தது.

ஆனால் இது சரிவர கடைப்பிடிக்கப்படவில்லை.

பாரபட்சம் காட்டப்பட்டது, இது தான் நாடு பிளவுபடக் காரணமானது.


CONTINUED ……

UNMAIKAL said...

PART 2. ஜின்னாவின் எண்ணத்திற்கு மதிப்பளித்திருந்தால் பிரிவினையே ஏற்பட்டிருக்காது.

இந்தியாவும், இந்தியர்களும் முழுமையாகவே ஜின்னா குறித்து தவறான கருத்தை வைத்துக் கொண்டிருக்கிறோம்.

யாராவது ஒருவர் மீது பழியைப் போட வேண்டுமே என்பதற்காக ஜின்னாவை பழித்துக் கொண்டிருக்கிறோம்.

இது தவறானது. - ஜஸ்வந்த் சிங்


நேருவுக்கும், ஜின்னாவுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன.

நேரு, அதிகாரம் அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்திருக்க வேண்டும் என்று கருதினார்.

ஆனால் ஜின்னா அதிகராபப் பரவல் நிறைந்த பெடரல் அரசியலை வலியுறுத்தினார்.

முஸ்லீம்களுக்கு அதிகாரம் வழங்க காந்தி ஒப்புக் கொண்டார்.

ஆனால் அதை நேரு விரும்பவில்லை.

இந்தியா பிரியும் வரை தனது கருத்தில் நேரு உறுதியாகவும், பிடிவாதமாகவும் இருந்தார்.

இந்தத் தவறை பின்னால்தான் நேரு உணர்ந்தார், அதை ஒப்பும் கொண்டிருக்கிறார்.

இந்தியா இரண்டாகப் பிரிந்ததற்கு நேருவும், அதேபோல ஜின்னாவும்தான் முக்கிய காரணம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

இதை நான் குற்றச்சாட்டாக கூறவில்லை.

உண்மையைப் பதிவு செய்கிறேன்.

அந்த சமயத்தில் என்ன நடந்தது, எந்தச் சூழ்நிலை பிரிவினைக்கு இட்டுச் சென்றது என்பதைக் கூறுகிறேன்.

எனது கருத்து என்னவென்றால் ஜின்னா மட்டுமே பிரிவினைக்குக் காரணம் அல்ல.

அப்படிப்பட்ட கருத்தை நாம் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே.

மேலும் ஜின்னா பாகிஸ்தான் என்ற வார்த்தையை நெடுங்காலத்திற்கு பயன்படுத்தவில்லை.

முஸ்லீம்களுக்கு தனி இடம் வேண்டும் என்று மட்டுமே கோரினார்.

சில மாகாணங்களை முஸ்லீம்களுக்காக ஒதுக்க வேண்டும். அவை இஸ்லாமிய மாகாணங்களாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்.

மேலும், இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றார்.

சிறுபான்மையினருக்கும் அதிகாரத்தில் பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைத்தால்தான் பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, சமுதாயத்தில் கெளரவத்துடனும், அதிகாரத்துடனும் இருக்க முடியும் என அவர் நினைத்தார்.

அதுதான் அவரது முதன்மையான நோக்கமாக இருந்ததே தவிர பிரிவினை அவரது முதல் எண்ணமாக இல்லை.

அதாவது இந்தியாவுக்குள் சுயாட்சி கொண்ட ஒரு பாகிஸ்தானையே அவர் விரும்பினார்.

அந்தக் கருத்து சாத்தியமானதுதான் என்றும் அவர் நினைத்தார்.

அவரது எண்ணத்திற்கு மதிப்பளித்திருந்தால் பிரிவினையே ஏற்பட்டிருக்காது.

இந்துக்களை அவர் ஒருபோதும் வெறுத்ததில்லை.

காங்கிரஸ் மீதும், காங்கிரஸ் தலைமை மீதும்தான் அவரது கோபம் இருந்தது. இந்துக்களை நான் எதிரியாகவே நினைக்கவில்லை என்று அவர் தொடர்ந்து கூறி வந்திருக்கிறார் என்பதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

முதன் முதலாக காந்தியிடம் ஜின்னாவை கோகலே அறிமுகப்படுத்தியபோது, காந்தி சொன்ன வார்த்தை இது- ''ஒரு முஸ்லீம் தலைவரை வரவேற்பதில் பெருமை அடைகிறேன்''.

அங்கேயே பிரிவினை வந்து விட்டது.

ஜின்னாவை ஒரு முஸ்லீம் என்ற கோணத்தில்தான் காந்தியே பார்த்திருக்கிறார்.

ஆனால் தான் ஒரு முழுமையான இந்தியர் என்ற எண்ணத்துடன் இருந்தவர் ஜின்னா.

தன்னை ஒரு முஸ்லீமாக பார்ப்பதை அவர் விரும்பாதவர்.

ஜின்னாவுக்கும், காந்திக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

ஜின்னா ஒரு சிறந்த பேச்சாளர், சிறந்த நாடாளுமன்றவாதி, நாடாளுமன்ற அரசியலில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்.

பிரிவினைவாதத்தை எந்த நிலையிலும் அவர் ஏற்காதவர்.

ஆனால் காந்தி, தனது கருத்துக்களைக் கூற மதத்தைத் துணைக்கு அழைத்தவர்.

ஆனால் ஜின்னா மதம் என்ற சொல்லை கடைசி நேரத்தில்தான் கையில் எடுத்தார்.

ஆனால் காந்திக்கோ, அவரது அரசியலின் ஆரம்பத்திலிருந்தே மதமும் கலந்தே இருந்தது.

ஆனால் ஜின்னா, அரசியலில் மதம் கலக்கக் கூடாது என்று உறுதியாக இருந்தவர்.

இந்திய, பாகிஸ்தான் பிரிவினையை நான் ஜின்னாவின் மாபெரும் வெற்றியாக கூற மாட்டேன்.

அதேபோல தான் நினைத்ததை ஜின்னாவும் சாதிக்கவில்லை.

பாகிஸ்தான் உருவான சில காலத்திலேயே ஜின்னாவின் கொள்கைகள், நோக்கங்கள் அடிபட்டுப் போய் விட்டன.

அந்த வகையில் காந்தியும் சரி, ஜின்னாவும் சரி தோல்வியடைந்தவர்கள் என்றே கூற வேண்டும் என்று கூறியுள்ளார்.

இப்போது கூட முஸ்லீம்களை நாம் சரியாக நடத்துகிறோமா என்றால்.. இல்லை.

அவர்களை வெளிகிரகவாசிகள் போல நடத்துகிறோம்.

அப்படி நடத்தியதால் தான் பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவானது.

CONTINUED ……

UNMAIKAL said...

PART 3. ஜின்னாவின் எண்ணத்திற்கு மதிப்பளித்திருந்தால் பிரிவினையே ஏற்பட்டிருக்காது.

இந்தியாவும், இந்தியர்களும் முழுமையாகவே ஜின்னா குறித்து தவறான கருத்தை வைத்துக் கொண்டிருக்கிறோம்.

யாராவது ஒருவர் மீது பழியைப் போட வேண்டுமே என்பதற்காக ஜின்னாவை பழித்துக் கொண்டிருக்கிறோம்.

இது தவறானது. - ஜஸ்வந்த் சிங்


இப்போதும் அவர்களை அப்படி நடத்தி நாட்டை பிளவுபடுத்த வேண்டுமா?.

இந்தியாவில் அனைவரும் சட்டத்துக்கு உட்பட்டு சம உரிமையோடு வாழ அனுமதி வேண்டும்.

அதைச் செய்யாத வரை பிரச்சனைகள் தீராது.

முஸ்லீம்கள் குறித்த பாஜகவின் நிலை சரியல்ல என்று கூறியுள்ளார் ஜஸ்வந்த் சிங்.

அன்று அனுமன்.. இன்று ராவணணா?:

இந் நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின் சிம்லாவில் இன்று நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

ஒரு புத்தகம் எழுதியதற்காக நீக்கியுள்ளார்கள்.

உண்மையில் என் புத்தகத்தை பாஜத தலைவர்கள் படித்துக் கூட பார்க்கவில்லை.

என்னை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக ராஜ்நாத் சிங் தொலைபேசியில் கூறினார்.

இதை அத்வானியும் ராஜ்நாத் சிங்கும் டெல்லியிலேயே நேரில் சொல்லியிருக்கலாம்.

சிம்லா கூட்டத்துக்கு வரச் சொலிவிட்டு, இங்கு வைத்து கட்சியை விட்டு நீ்க்குவதாக போனில் சொன்னது தான் வருத்தம்.

நான் இதுவரை பாஜகவின் அனுமனாக இருந்தேன்.

இப்போது என்னை பாஜக ராவணனாக கருதுகிறது.

நான் ராணுவத்திலிருந்து மக்கள் சேவைக்கு வந்தவன்.

நான் பென்ஷன் வாங்கும் ஆசாமியும் அல்ல.

30 வருடமாக பாஜகவில் அரசியலில் இருந்தேன்.

அதன் ஆரம்பகால உறுப்பினர் தான். கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளேன். அது இப்படி முடிவுக்கு வரும் என்று நினைத்ததில்லை.

என் புத்தகத்தை வைத்து காங்கிரஸ் பிரச்சனை செய்தால் அதைப் புரிந்து கொள்ளலாம்.

காரணம் நாடு பிளவுபட காரணம் என்று நான் காங்கிரஸ் தலைவர்களைத் தான் அதில் விமர்சித்துள்ளேன்.


ஆனால், பாஜக பிரச்சனை செய்தால் என்ன செய்வது?.

எல்லாவற்றையும் அரசியலாக்குவது தவறு.

குறிப்பாக ஒருவரின் சிந்தனைகளுக்கு தடை போடுவது பெரும் தவறு.

ஜின்னா குறித்தும், நாடு பிளவுபட்ட அந்த வலி மிகுந்த நாட்களையும் தான் நான் புத்தகமாக்கினேன்.

அந்தப் புத்தகம் 5 வருட கடும் உழைப்பில் உருவானது.

புத்தகம் எழுதியதற்காக நான் வருதப்படவில்லை. அதை கவனமாகப் படித்துப் பாருங்கள்.

இந்து-முஸ்லீகள் ஒற்றுமையின் தூதராக இருந்த ஜின்னா ஏன் பாகிஸ்தானின் தந்தையாக மாறினார்.

ஏன் நாடு பிளவுபடக் காரணமானார்..

அவரில் ஏன் அந்த மாற்றம் ஏற்பட்டது.. என்பதை விளக்கும் நூல் தான் இது.

இந்தப் புத்தகம் எழுதி நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை.


அத்வானி எதிர்க் கட்சித் தலைவராக நீடிக்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து அந்தக் கட்சி தான் முடிவு செய்ய வேண்டும்.

இளைய தலைமுறையிடம் பொறுப்பைத் தருமாறு பாஜகவுக்கு ஆர்எஸ்எஸ் அறிவுரை தந்துள்ளது குறித்து கேட்கிறீர்கள்.

அது குறித்து நான் ஏதும் கூற விரும்பவில்லை. நான் ஆரஎஸ்எஸ்சில் எந்தக் காலத்திலும் உறுப்பினராக இருந்ததில்லை.

அவர்களது கருத்துக்களுக்கு நான் எப்படி பதில் சொல்வது என்ற ஜஸ்வந்த் சங் பரிவார் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்

நன்றி: http://thatstamil. oneindia. in/news/2009/08/19/india-dont-regret- writing-book- on-jinnah- jaswanth. html

Article Copied From: http://mallippattinam.weebly.com/297230072985302129853006-2958298530212985-2980300629853021-29703014300629943021296530072993300629923021-29723000302129972984302129803021.html

mohamed said...

சுபஹானல்லாஹ் பாகிஸ்தான் பிரிவினையால் மக்களிடத்தில் ஏற்படப் போகும் மிகப் பெரிய பிரட்சனைகளை அப்பொழுதே எவ்வளவு அழகாக கணித்திருக்கிறார் சகோதரர் அபுல் கலாம் ஆசாத்.தன்னை இஸ்லாமிய நாடு என்று பெயர் அளவில் அழைத்து கொள்ளும் பாகிஸ்தானில் வாழும் முஸ்லிம்களின் பாதுகாப்பை விட இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு தான் பாதுகாப்பு அதிகம் உள்ளது.

suvanappiriyan said...

சகோ ஆகாஷ்!

//பதிவைவிட கருத்துகள் காரசாரமாக இருக்கிறது.

அருமையான பதிவு.//

சகொ உண்மைகள் தரும் தகவல்கள் இந்த பதிவை மேலும் மெருகூட்டுகிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ முஹம்மத்!

//சுபஹானல்லாஹ் பாகிஸ்தான் பிரிவினையால் மக்களிடத்தில் ஏற்படப் போகும் மிகப் பெரிய பிரட்சனைகளை அப்பொழுதே எவ்வளவு அழகாக கணித்திருக்கிறார் சகோதரர் அபுல் கலாம் ஆசாத்.தன்னை இஸ்லாமிய நாடு என்று பெயர் அளவில் அழைத்து கொள்ளும் பாகிஸ்தானில் வாழும் முஸ்லிம்களின் பாதுகாப்பை விட இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு தான் பாதுகாப்பு அதிகம் உள்ளது.//

மிகச் சிறந்த தலைவரை பற்றிய உண்மையான வரலாறு நமது புத்தகங்களில் வஞ்சகமாக மறைக்கப்பட்டுள்ளது. தேசப்பிரிவினைக்கு நேரு, ஜின்னா, படேல், ராஜாஜி, இந்துத்வா, முஸ்லிம் லிக் என்று பலரும் காரணமாக இருக்க இங்கு பலர் ஜின்னாவை மட்டுமே முன்னிலைப் படுத்துவர்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Unknown said...

சலாம் சகோ.சுவனப்பிரியன் !

மொழி பெயர்ப்பது அதிக நேரமெடுக்கும் ஒரு வேலை...அதை பொருட்படுத்தாமல் மாஷா அல்லாஹ் ! சிறப்பாக செய்து வருகிறீர்கள் .. ஓய்வு நேரங்களில் இதைப்போன்ற இன்னும் முக்கியமான பல தகவல்களை தமிழ் படுத்திட ஆங்கில புலமை பெற்ற சகோக்கள் முன் வரவேண்டும்..!!! எதிர்கால தலைமுறையினருக்கு நாம் கொடுத்து செல்லும் பொக்கிஷம் இது..எளிமையாக புரிந்து கொள்ளவும் ,ஆங்கிலம் தெரியாதோர் கருத்துக்களை உள்வாங்கவும் மொழிபெயர்ப்பு இன்றியமையாதது..! இதற்கென ஆங்கில புலமை பெற்ற சிலரை வேலைக்கு அமர்த்தி இஸ்லாத்திற்கு வலு சேர்க்கும் ஆங்கில படைப்புக்கள் அனைத்தையும் மொழிபெயர்க்கவேண்டும் ..அதையும் தனி பதிவுகளாக வெளியிட வேண்டும் இன்ஷா அல்லாஹ் ! அதையும் நாம் செய்வோம்..!

சலாம் சகோ.முகம்மத் ஆசிக் !

//உயிருக்கு ஆபத்து இல்லாத நிலையில் ஜிஹாத் செய்தது இஸ்லாத்திற்கு முற்றிலும் எதிரானது. //

நீங்கள் சொல்ல வந்தது " ஹிஜ்ரத் " என்று நினைக்கிறேன் ...சரியா..? :-))

நன்றி !!!

suvanappiriyan said...

சலாம் சகோ நாகூர் மீரான்!

//மொழி பெயர்ப்பது அதிக நேரமெடுக்கும் ஒரு வேலை...அதை பொருட்படுத்தாமல் மாஷா அல்லாஹ் ! சிறப்பாக செய்து வருகிறீர்கள் .. ஓய்வு நேரங்களில் இதைப்போன்ற இன்னும் முக்கியமான பல தகவல்களை தமிழ் படுத்திட ஆங்கில புலமை பெற்ற சகோக்கள் முன் வரவேண்டும்..!!! எதிர்கால தலைமுறையினருக்கு நாம் கொடுத்து செல்லும் பொக்கிஷம் //

உண்மைதான் சகோ. இதன் முக்கியத்துவம் உணர்ந்துதான் ஓய்வு நேரங்கள் எதனையும் வீணாக்காமல் இது போன்ற பணிகளில் ஈடுபடுவது. எனவேதான் சாட்டிங்கில் கூட அதிக நேரம் வருவதில்லை. மற்ற பதிவுகளை படித்து பின்னூட்டம் இடுவதற்கு கூட நேரமில்லாமல் போய் விடுகிறது.

Anonymous said...

Jaisankar Jaganatha இன்னும் கருத்து கூற வரவில்லையா ?

அவரது கருத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

இப்படிக்கு
அண்ணனின் விழுதுகள்

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அலைக்கும் சலாம் சகோ. நாகூர்மீரான்,

மிகச்சரியாக எனது தவறை சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி சகோ.

///உயிருக்கு ஆபத்து இல்லாத நிலையில் ஜிஹாத் செய்தது இஸ்லாத்திற்கு முற்றிலும் எதிரானது.///


பிழை திருத்தம்:-

உயிருக்கு ஆபத்து இல்லாத நிலையில் 'ஹிஜ்ரத்' செய்தது இஸ்லாத்திற்கு முற்றிலும் எதிரானது.

---என்று வந்திருக்க வேண்டும்.

// 'அபுல் கலாம்' (எழுதுகோலின் தந்தை//

'அபு அல் கலம்' (எழுதுகோலின் தந்தை)//---என்று சரியாக வந்திருக்க வேண்டும்.

Unknown said...

சுவனம் என்ன ஆச்சு உங்களுக்கு? திடீர்னு பாகீஸ்தானை திட்டி எழுதி கமெண்ட்ஸ்கூட வருது. உங்க தேசத்தை நீங்களே திட்டலாமா?

பாலாறும் தேனாறும்ல அங்க ஓடுது.

சும்மா ஜோக். உங்க தேச பக்தி எனக்கு தெரியும்.

எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா? இஸ்லாத்தில் முகம்மது நபி கலப் என்று இதய சக்கரத்தை சொல்லியிருப்பார். அது என்னவென்று சொல்ல இயலுமா?

suvanappiriyan said...

//Jaisankar Jaganatha இன்னும் கருத்து கூற வரவில்லையா ?

அவரது கருத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.//

ஜெய்சங்கர் 'வந்துட்டார்யா............... வந்துட்டார்யா'.........................' வடிவேல் பாணியில் கற்பனை பண்ணிக் கொள்ளவும். :-)

suvanappiriyan said...

ஜெய்சங்கர்!

பலரது எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் பின்னூட்டம் இட்டுள்ளீர்கள்.

//எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா? இஸ்லாத்தில் முகம்மது நபி கலப் என்று இதய சக்கரத்தை சொல்லியிருப்பார். அது என்னவென்று சொல்ல இயலுமா?//

அரபியில் இதயத்துக்கு 'கல்ப்(b)' என்று பெயர். அதுதான் நீங்கள் கேள்விப்பட்டது. அவர் அரபியர் என்பதால் இதயத்தை குறிக்க இந்த சொல்லைத்தான் பயன்படுத்த வேண்டும். வேறு ஒன்றும் இந்த சொல்லுக்கு விசேஷம் இல்லை.

Unknown said...

//அரபியில் இதயத்துக்கு 'கல்ப்(b)' என்று பெயர். அதுதான் நீங்கள் கேள்விப்பட்டது. அவர் அரபியர் என்பதால் இதயத்தை குறிக்க இந்த சொல்லைத்தான் பயன்படுத்த வேண்டும். வேறு ஒன்றும் இந்த சொல்லுக்கு விசேஷம் இல்லை.
//

அது குண்டலினி சக்தியின் இதய சக்கரம் என்று நினைத்தேன்.

குண்டலினி பற்றி முகம்மது நபி என்ன சொல்லியிருக்கார்?

suvanappiriyan said...

//குண்டலினி பற்றி முகம்மது நபி என்ன சொல்லியிருக்கார்?//

குண்டலினி யோகம் என்பது யோகாசனங்களில் உயிரோட்டத்தைச் சீர்படுத்துவதற்காகச் செய்யும் பயிற்சியாகும். குண்டலினி =குண்டம்(நெருப்பு) + அலி(பாலின வேறுபாடுக்கு உட்படாத) + னி(உயிர்). இவ்வண்டம் எவ்வாறு ஐமூல சக்திகளால் (பஞ்சபூதங்கள்) ஆனதோ அதைப்போலவே மனித உடம்பும் ஐமூல சக்திகளால் ஆனது; ஐந்து முறைகளைக் கொண்டு இயங்குகிறதென்பது யோகக் கலையின் அடிப்படை. அதில் ஆகாய சக்திக்கு உரிய யோகாவே குண்டலினி.

குண்டலினி என்பது சரீரம் சார்ந்த சக்தி. இது முதுகெலும்பின் அடியில் இருக்கும். இதை மூலாதாரத்தில் இருந்து ஆக்கினைக்கு ஏற்றும் போது ஒரு குட்டிப்பாம்பு ஊறுவது போல் மேலே ஏறும். வேதாத்திரி மகரிஷி அவர்களால் வடிவமைக்கப்பட்ட எளிய முறை குண்டலினி யோகத்தில் தேர்ந்த ஒரு வல்லவர் விரும்பினால் ஒருவருடைய குண்டலினி சக்தியை ஒரே நிமிடத்தில் புருவ மையத்திற்கு இடம் மாற்றி அமைத்து விடலாம். காந்தத்தைக் கொண்டு இரும்பை இழுப்பது போல தனது தவ ஆற்றலைக் கொண்டு மற்றொருவர் குண்டலினியை எழுப்பி மாற்றி அமைத்து விடலாம்.

என்றெல்லாம் குண்டலினிக்கு சித்தர்கள் விளக்கம் கொடுக்கிறார்கள்.

இஸ்லாத்தில் இது போன்ற நம்பிக்கைகளுக்கெல்லாம் இடமில்லை. ஒருவனின் குண்டலினியை மற்றொருவன் மாற்றுவது என்பதெல்லாம் நடவாத காரியம் என்பது இஸ்லாமிய நம்பிக்கை. அப்படி எல்லாம் சக்தி மனிதர்களுக்கு இருந்திருந்தால் கருணாநிதி ஜெயலலிதாவுக்கு செய்திருக்கலாம். அல்லது ஜெயலலிதா கருணாநிதிக்கு செய்திருக்கலாம். இது போன்ற செயல்களெல்லாம் செய்வதற்கு நம்மைப் படைத்த இறைவனுக்கு மாத்திரமே சாத்தியப்படும் என்கிறது இஸ்லாம்.

அடுத்து யோக நிலையில் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றனவோ அவை அனைத்தும் ஐந்து வேளை தொழுகைகளில் முஸ்லிம்களுக்கு கிடைத்து விடுகிறது. தொடர்ந்து ஐந்து வேளை தொழுது வரும் முஸ்லிம்களுக்கு இதனாலேயே பெரும்பாலும் வியாதிகள் வருவதில்லை.

எனது தாத்தா இன்றும் உடல் ஆரோக்கியத்தோடு வாழ்ந்து வருவதற்கு முக்கிய காரணமே அவர் ஐந்து வேளை தொழுகையையும் முறையாக தொழுது வந்ததுதான். எனவே தொழுகையே மிகச் சிறந்த யோகப் பயிற்சி என்பது எனது அபிப்ராயம்.

சூரியன் போன்றவற்றை வணங்காமல் ஒருவர் யோகப் பயிற்சி செய்து தனது உடலை சீராக வைத்துக் கொள்ளவும் இஸ்லாம் எந்தத் தடையையும் விதிக்கவில்லை.

Akbar said...

அருமையான முயற்சி வாழ்த்துக்கள் சகோ சுவனப்பிரியன்.
மிகமிக தேவையானதும் கூட........
அன்று முஸ்லிம்கள் பெயரளவில்தான் ஆண்டார்கள்.
இன்று முஸ்லிம்கள் பெயர்க்காகதான்
வாழ்கிறார்கள்...
தொடருங்கள் உங்களின் முயற்சிக்கும் உழைப்பிற்கும் இறைவன் துணை நிற்ப்பானாக......

Akbar said...
This comment has been removed by the author.
suvanappiriyan said...

சகோ அக்பர்!

//அருமையான முயற்சி வாழ்த்துக்கள் சகோ சுவனப்பிரியன்.
மிகமிக தேவையானதும் கூட........
அன்று முஸ்லிம்கள் பெயரளவில்தான் ஆண்டார்கள்.
இன்று முஸ்லிம்கள் பெயர்க்காகதான்
வாழ்கிறார்கள்...
தொடருங்கள் உங்களின் முயற்சிக்கும் உழைப்பிற்கும் இறைவன் துணை நிற்ப்பானாக...... //

வருகைக்கும் கருத்துக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி!

Nasar said...

அஸ்ஸலாம் அலைக்கும் சகோ.....
இன்றைய சூழலுக்கு மிக மிக அவசியமான மௌலான அபுல் கலாம் ஆசாத்தின் பேட்டியை பகிர்ந்துக்கொண்டீர்கள்....முக்கியமாக அக்பருதீன் ஓவைசியின் மேடைப்பேச்சு விஷமத்தனமானது...
பொறுப்புள்ள மனிதர் இப்படியாக பேசியிருக்கக்கூடாது மற்றும் இப்படிப்பட்டவர்களை நாம் ஊக்குவித்தால் பாக் போல இந்தியாவும் மாறக்கூடும் ..இது நமக்கு தேவையா ...??
[பெரும்பாலான முஸ்லிம்கள் அவர் பேச்சை வரவேற்கவில்லை..மிக்க சந்தோசம் ...நன்றி இறைவனுக்கு]
கடந்த நாலு வருசமாக ஒரு பாகிஸ்தானி தான் என் வண்டியின் டிரைவர், அவர் பாக்கைவிட இந்தியாவை மெச்சுகிறார் பல காரணங்களுக்காக ....அங்கே வீதிக்கு வீதி தீவிரவாத குழுக்கள் ஏராளம்.
இங்கே நமக்கு 'அரிவாள்' அங்கே அவர்களுக்கு 'துப்பாக்கி' சர்வசாதாரணம் ...ஆக மொத்தத்துல என் தாய்நாடு இந்தியா சூப்பர் ..
அன்றே ஆசாத் அவர்கள் தீர்க்கதரிசனமாக சொல்லியுள்ளதை இன்று
பாக்கில் நாம் கண்கூடாக பார்க்கிறோம் ..நாலு முறை இராணுவ ஆட்சி.
"கச்சராஸ்தான்" என்று பெயர் வைத்து இருக்கலாம் ....!!! --

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ நாஸர்!

//முக்கியமாக அக்பருதீன் ஓவைசியின் மேடைப்பேச்சு விஷமத்தனமானது...
பொறுப்புள்ள மனிதர் இப்படியாக பேசியிருக்கக்கூடாது மற்றும் இப்படிப்பட்டவர்களை நாம் ஊக்குவித்தால் பாக் போல இந்தியாவும் மாறக்கூடும் ..இது நமக்கு தேவையா ...??//

உவைஸியின் பேச்சை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவரது கைதுக்கு ஆதரவும் தெரிவிக்கிறேன்.

அதற்கு முன்னால் தெகோடியா இதை விட மோசமாக அங்கு பேசி விட்டு சென்றிருக்கிறார். அவரை கைது செய்யாது இன்று வரை விட்டு வைத்திருக்கும் காவல் துறையின் போக்கையும் நாம் கண்டிக்க வேண்டும். தெகோடியா அவ்வாறு பேசியில்லா விட்டால் உவைசியும் பேசியிருக்க மாட்டார் என்பதும் இங்கு கவனிக்கத் தக்கது.

அடுத்து பல காலமாக கம்பீரமாக வீற்றிருக்கும் சார்மினாருக்கு பக்கத்தில் சமீப காலமாக பாக்கிய லஷ்மி கோவிலை உண்டாக்கி அயோத்தியை போல் இங்கும் பிரச்னையை வளர்க்கும இந்துத்வா வாதிகளையும் அரசு கைது செய்து நடு நிலை வகிக்க வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பு

//அன்றே ஆசாத் அவர்கள் தீர்க்கதரிசனமாக சொல்லியுள்ளதை இன்று
பாக்கில் நாம் கண்கூடாக பார்க்கிறோம் ..நாலு முறை இராணுவ ஆட்சி.
"கச்சராஸ்தான்" என்று பெயர் வைத்து இருக்கலாம் ....!!! -- //

சரியாக சொன்னீர்கள். :-)

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஒரு தன்னலமற்ற தலைவரை பற்றி நமக்கு மறக்கடித்திருப்பது ஒரு ஜனநாயக நாட்டில் வேதனைக்குரிய விசயம். நன்றி தகவல் பரிமாற்றத்திற்கு. மேலும் அபுல்கலாம் பற்றி அறிந்துகொள்ள உங்கள் கட்டுரை ஏதுவாய் அமைகிறது. மேலும் தகவல்களை தேடிக்கொண்டிருக்கின்றேன்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

Special thanks to Hussain amma

suvanappiriyan said...

சகோ ஸ்டார்ஜன்!

//ஒரு தன்னலமற்ற தலைவரை பற்றி நமக்கு மறக்கடித்திருப்பது ஒரு ஜனநாயக நாட்டில் வேதனைக்குரிய விசயம். நன்றி தகவல் பரிமாற்றத்திற்கு. மேலும் அபுல்கலாம் பற்றி அறிந்துகொள்ள உங்கள் கட்டுரை ஏதுவாய் அமைகிறது. மேலும் தகவல்களை தேடிக்கொண்டிருக்கின்றேன்.//

இது போன்ற மறைக்கப்பட்ட வரலாறுகள் நமது நாட்டில் நிறைய உள்ளன. இணையம் என்ற இந்த மாபெரும் சக்தி தற்போது அதனை ஒவ்வொன்றாக வெளிக் கொண்டு வருகிறது.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

Unknown said...

உங்கள் சேவை பணி மென் மேலும் வளர வாழ்த்துக்கள் நணபரே

Unknown said...

உங்கள் சேவை பணி மென் மேலும் வளர வாழ்த்துக்கள் நணபரே