Followers

Showing posts with label பாகிஸ்தான். Show all posts
Showing posts with label பாகிஸ்தான். Show all posts

Sunday, August 06, 2017

பாகிஸ்தான் செழிக்காது! அபுல் கலாம் ஆசாத்







எவ்வளவு தீர்க்கதிரிசனமான வார்த்தை! பாகிஸ்தான் பிரிவினையில் அவ்வாறு செல்வது முஸ்லிம்களின் எதிர்காலத்தை குட்டிச்சுவராக ஆக்கி விடும். எனவே தனியாக பிரிந்து செல்லாதீர்கள். இநதுக்களோடு சேர்ந்தே ஒரே இந்தியாவில் இருப்போம் என்று கடைசி வரை போராடி பார்த்தார் அபுல் கலாம் ஆசாத். கேட்டார்களா குறுமதியாளர்கள். பேச விட்டார்களா அபுல் கலாம் ஆசாத்தை! பிரித்துக் கொண்டு சென்று 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. அதற்குள் அபுல் கலாம் எதைச் சொன்னாரோ அதனை உண்மையாக்கி விட்டனர் பாகிஸ்தானிகள். எங்கு திரும்பினாலும் பிரச்னை. கொலை, கொள்ளை, ஊழல் என்று இன்று பாகிஸ்தான் செய்வதறியாது திகைத்து நிற்கிறது.

லாகூரிலிருந்து வெளிவந்த ஒரு உருது பத்திரிக்கையில் சோரிஸ் காஷ்மீரி என்ற நிருபருக்கு 1946 ஆம் ஆண்டு அளித்த பேட்டியின் முக்கியமான சிலவற்றை பார்ப்போம்.

கேள்வி: இந்து முஸ்லிம் பிரச்னை அதிகமாகி விட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரிவினை தவிர்க்க முடியாதது என்று நீங்கள் நினைக்கவில்லையா?

பதில்: பாகிஸ்தான் பிரித்து கொடுப்பதால் இந்து முஸ்லிம் பிரச்னை ஓய்ந்து விடும் என்ற வாதத்தை நான் ஏற்கவில்லை. பாகிஸ்தானில் உள்ள இந்துக்களையும் சீக்கியர்களையும் முஸ்லிம்கள் தாக்கும் அபாயம் உண்டு. அதே போல் இங்குள்ள முஸ்லிம்கள் இந்துக்களால் தாக்கப்படும் அபாயம் உள்ளது. இது காலத்துக்கும் தீராத பிரச்னையை உண்டு பண்ணும். அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகள் பாகிஸ்தானில் தளம் அமைத்து இந்தியாவுக்கு தொல்லை கொடுக்கும் அபாயமும் உள்ளது.

பெரும் செல்வந்தர்கள் வணிக நிறுவனங்களை பங்கு கோட்டு கொள்வர். ஏழைகள் மேலும் ஏழைகளாவர். இது பிரச்னைகள மேலும் அதிகமாக்கும்..

கேள்வி: ஆனால் பல உலமாக்கள் மற்றும் முகமது அலி ஜின்னா போன்றவர்கள் பாகிஸ்தான் பிரிவினையை ஆதரிக்கிறார்களே! தனி நாடாக பிரிந்தால் ஒரு குடையின் கீழ் வர சாத்தியம் உண்டல்லவா?

பதில்: பாகிஸ்தான் பிரிவினையால் ஏதேனும் நன்மை நடக்கும் என்பது தெளிவானால் அதற்கு முதல் ஆதரவுக் குரல் நானே கொடுப்பேன். இதனால் எந்த நன்மையும் விளையப் போவதில்லை. உலமாக்கள் என்று சொல்கிறீர்கள். அக்பருடைய அவையில் இருந்து தனி மதம் கண்ட பல முஸ்லிம்களையும் உலமாக்கள் என்றே கூறுகிறோம். உலமாக்கள் சொல்வதெல்லாம் மார்க்கமாகாது. இஸ்லாத்தின் அடிப்படையை புரிந்து கொள்ள குர்ஆனையும் நபி மொழிகளையும் பார்க்க வேண்டும்.

1000 ஆண்டு காலம் இந்த பரந்த பாரத நாட்டை ஆண்ட முஸ்லிம்கள் இஸ்லாத்துக்காக என்ன செய்து விட்டார்கள்? பெயரளவுக்குத்தான் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தனர். உலமாக்கள் சபைகளை எல்லாம் இந்த அரசர்கள் தடை செய்ததை வரலாறுகளில் பார்க்கிறோம்.

நமது தூதர் நபியவர்கள் 'இந்த உலகம் முழுவதிலும் எனக்கு தொழும் இடமாக ஆக்கப்பட்டுள்ளது' என்று கூறியதை நாம் மறந்து விடக் கூடாது. ஒரு முஸ்லிமுக்கு உலகம் முழுவதுமே புண்ணியமான இடங்கள்தான். அனைத்து நாடுகளையும் படைத்தது ஒரு இறைவனே. எனவே இருக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி அதில் நாம் முன்னேறவே யோசிக்க வேண்டும்.

இவ்வாறு பலதரப்பட்ட மக்களும் கலந்து வாழும் ஒரு நாட்டை துண்டாடி தனியாக ஒரு தேசம் உண்டாக்க இஸ்லாம் வழி காட்டவில்லை. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலங்களை விட சிறுபான்மையாக உள்ள மாநிலங்களில் தங்களின் இஸ்லாமிய நடவடிக்கையை பேணுவதில் அதிக அக்கறை காட்டுவதை பார்க்கிறோம். பிற்காலத்தில் பாகிஸ்தானில் இஸ்லாம் அதன் உண்மை முகத்தை இழந்து விடும் அபாயம் உள்ளது. இறைவனே இதனை நன்கு அறிந்தவன்.

கேள்வி: ஆனால் இந்துக்களும் முஸ்லிம்களும் இரு வேறுபட்ட கலாசாரத்துக்கு சொந்தக்காரர்கள். அனைத்திலும் வேறுபடுகிறார்கள். இந்த இருவருக்குள் ஒற்றுமை எவ்வாறு சாத்தியம் என்று எதிர் பார்க்கிறீர்கள்?

பதில்: இது பற்றி நான் அல்லாமா இக்பாலுடனும், மௌலானா ஹூசைன் அஹமத் மதனியுடனும் நிறைய விவாதித்துள்ளேன். நீங்கள் குர்ஆனை முழுவதும் படித்துப் பாருங்கள். அதில் சில வசனங்கள் மட்டுமே முஸ்லிம்களை நோக்கி சொல்லப்பட்டிருக்கும். அதிகமான அறிவுரைகள் 'மனிதர்களே' என்று உலக மக்களைப் பார்த்துதான் குர்ஆன் பேசும். முஸ்லிம் அல்லாத மக்களோடு நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற வழி காட்டுதலும் குர்ஆனில் உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுவே குர்ஆன் கூறும் வழிமுறை.

இந்த அகண்ட பாரதத்தில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்தவர்கள், பார்சிகள், சீக்கியர்கள் என்று பலதரப்பட்ட மக்கள் கலந்து ஒரு குழுவாக வாழ்ந்து வருகின்றனர். அவரவர் நம்பிக்கையை மதித்து சந்தோஷமாக வாழ்தல் என்பது மிக எளிதானதே. முன்பு நாம் இவ்வாறு வாழ்ந்திருக்கிறோம்.

சுதந்திரம் என்பது அந்நிய நாட்டின் ஆதிக்கத்திலிருந்து நம்மை விடுவித்துக் கொள்கிறோம்.. அதற்காக மதத்தின் அடிப்படையில் பிரிவினையை உண்டாக்கி சுதந்திரம் அடைவது என்பது பிரச்னையை மேலும் அதிகமாக்கவே செய்யும். இதை நான் நன்றாக உணர்ந்ததாலேயே இந்த அளவு உங்களிடம் பேசுகிறேன்.

முஸ்லிம்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் குறுகிய வட்டத்திலிருந்து வெளி வர வேண்டும். அவர்கள் உலக மக்களுக்கு நற் செய்தியை கொண்டு செல்லும் முக்கிய பணியை இறைவன் கொடுத்துள்ளான். அதை விடுத்து சாதி, இனம், மொழி என்ற பெயரில் பிரிந்து கொள்வதை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. சிலர் முஸ்லிம்களுக்குள் ஒற்றுமையை உண்டு பண்ண இந்துக்களை எதிரிகளாக்க முற்படுகின்றனர். அப்படி ஒரு ஒற்றுமை வந்தால் அது வெளி உலகுக்கான போலி ஒற்றுமையாகத்தான் இருக்கும். இஸ்லாம் கூறும் உளப்பூர்வமான ஒற்றுமையை உங்களால் கொண்டு வர முடியாது. அதற்கு முஸ்லிம்கள் குர்ஆனையும் முகமது நபியின் வாழ்வு முறையையும் தங்கள் கைகளில் எடுக்க வேண்டும். அதுதான் நிரந்தர தீர்வாகவும் இருக்க முடியும்.

வஹ்ஹாபி என்றும், சூஃபி என்றும், சுன்னத் ஜமாத் என்றும் ஷியா என்றும் முஸ்லிம்கள் பலவாறாக பிரிந்து கிடக்கின்றனர். ஆமீன் என்று சப்தமிடுவதும், கைகளை உயர்த்துவதும் கூட பல இடங்களில் பிரச்னையாக்கப்படுகிறது. சில மொளலவிகள் தங்களுக்கு தோதான ஃபத்வாக்களை கொடுத்து மக்களை அறியாமையில் இன்றும் வைத்துள்ளனர். இதற்கெல்லாம் அழகிய தீர்வை நமது தூதர் நமக்கு காட்டித் தந்திருக்க அதன் பக்கம் ஏனோ நாம் கவனம் செலுத்துவதில்லை.

எனவே முஸ்லிம்கள் சகோதர பாசத்தோடு ஒன்றினைந்து இந்தியா சுதந்திரம் அடைய அனைத்து மக்களோடும் தோளோடு தோள் கொடுத்து ஒத்துழைப்பு நல்க வேண்டும்....

THE MAN WHO KNEW THE FUTURE
by Shorish Kashmiri, Matbooat chattan, Lahore.

மிக நீண்ட பேட்டி. நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது மொழி பெயர்ப்பு செய்து படிப்போம். இவர் எதை எல்லாம் எதிர்பார்த்தாரோ அவை எல்லாம் ஒவ்வொன்றாக நடந்து வந்துள்ளதை பார்த்து ஆச்சரியப்படுகிறோம்..

Wednesday, January 06, 2016

பதான்கோட் சண்டை: 'ராணுவம் அருகே இருக்க, என்எஸ்ஜி-யை வரவழைத்தது ஏன்?'



பதான்கோட் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கையில் தேசிய பாதுகாப்பு கமாண்டோக்களை ஈடுபடுத்தியது குறித்து பாதுகாப்பு நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பதான்கோட்டுக்கு அருகே ஆயிரக்கணக்கான ராணுவ வீர்ர்கள் கைவசம் இருக்கும் போது, முதற்கட்ட நடவடிக்கைகளுக்காக டெல்லியிலிருந்து தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்களை வரவழைக்கப்பட்டது பெரிய தவறு, மேலும், உடனடி நடவடிக்கைகளில் ராணுவ வீரர்களை ஈடுபடுத்துவதற்குப் பதிலாக, சில என்.எஸ்.ஜி. படையினரை வரவழைத்ததால் கால தாமதம் ஏற்பட்டது என்று ராணுவ மற்றும் பாதுகாப்பு வட்டார நிபுணர்கள் சாடியுள்ளனர்.

இது குறித்து பதான்கோட்டுக்கு அருகே பிரிகேடியராக இருக்கும் வீரர் ஒருவர் கூறும்போது, “அவர்கள் செய்ததை எங்களில் பலரால் நம்பவே முடியவில்லை. அருகிலேயே இரண்டு இன்ஃபாண்ட்ரி பிரிவுகளும், இரண்டு ஆயுதப் படைப்பிரிவுகளும் உள்ளன. வடக்கு ராணுவ தலைமைச் செயலகமும் உள்ளது. இந்தப் படையினர் பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கென்றே சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள். ஆனால் விமானப்படை தளத்துக்கு என்.எஸ்.ஜி. படையினர் சிலரை வரவழைத்தது காலதாமதத்துக்கே வழிவகை செய்தது” என்றார்.

லெப்டினன்ட் ஜெனரல் பிரகாஷ் கடோச், கூறும்போது, “ஒரு குறிப்பிட்ட இலக்கைத் தாக்க என்.எஸ்.ஜி. கமாண்டோ பயன்படும், ஒட்டுமொத்த பகுதியையும் அதனால் கையாள முடியாது. என்.எஸ்.ஜி.யை அனுப்பியதில் தீங்கொன்றும் இல்லை. ஆனால், திட்டவட்டமான கட்டளைகளும், கட்டுப்பாடும் இருப்பது அவசியம். எல்லையோர காவல் படை, என்.எஸ்.ஜி. ஆகியவற்றை மனம் போன போக்கில் அழைத்து விட முடியாது. இங்கு ஏதேனும் கட்டளைகளும், வழிகாட்டுதலும், கட்டுப்பாடும் இருந்ததா? இதற்கெல்லாம் ராணுவமே சிறந்தது” என்றார் அவர்.

முன்னாள் ராணுவ தளபதி வி.பி.மாலிக், 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்கு தெரிவிக்கும் போது, “என்.எஸ்.ஜி. சரியான தேர்வா என்பது எனக்கு ஐயமாக உள்ளது. அவர்கள் டெல்லியிலிருந்து வந்தனர். மாறாக உள்ளூரை நன்கு அறிந்த படையினரிடமே பொறுப்பை ஒப்படைத்திருக்க வேண்டும்” என்றார்.

ராணுவ சேவையில் இருக்கும் ஒரு அதிகாரி கூறும்போது, “10 சிறப்புப் படைப் பிரிவுகள் கொண்ட ராணுவம், அல்லது குறைந்தது உதாம்பூரில் இருந்து ஒரேயொரு படை பதான்கோட்டுக்கு 2 மணி நேரங்களில் வந்திருக்க முடியும். நாங்கள் இத்தகைய திடீர் தாக்குதல்களை முறியடிக்கவே சிறப்புப் பயிற்சி பெற்றுள்ளோம்.

மாறாக நீங்கள் என்.எஸ்.ஜி. கமாண்டோக்களை அனுப்பினீர்கள். அவர்கள் வெறும் 160 கமாண்டோக்களுடன் 24 சதுர கிலோமீட்டர் பகுதியை அவர்களால் சிறப்பாக பாதுகாக்க முடியும் என்று யார் கூறினார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

அதாவது உள்ளூர் ராணுவப்படை இத்தகைய தாக்குதலை எதிர்கொள்ள தயாராகப் பயிற்சியில் இருந்துள்ளது, ஆனால் சமயம் வரும்போது இவர்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்படாதது பெரும் தவறு என்று பலரும் கருதுகின்றனர்.

முன்னாள் ராணுவ நடவடிக்கைகள் தலைமை இயக்குநரான லெப்.ஜெனரல் விநோத் பாட்டியா 'தி இந்து' (ஆங்கிலம்) இதழில் கூறும்போது, “பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை எப்படிக் கையாளப்பட வேண்டுமோ அப்படி கையாளப்படவில்லை. உண்மை என்னவெனில் அதிக காலம் எடுத்துக் கொள்ளப்பட்டது. ராணுவம் அழைக்கப்பட்டிருந்தால் அதன் பலத்துக்கு இன்னும் விரைவில் முறியடிக்கப்பட்டிருக்கும்” என்றார்

"இந்திய ராணுவம் பல ஆண்டுகளாக பயங்கரவாத எதிர்ப்புச் சண்டைகளை திறம்பட கையாண்டு வருகிறது. ராணுவத்திடம் ஒப்படைத்திருந்தால் உயிரிழப்புகளும் கூட இருந்திருக்காது. காஷ்மீருக்கு எத்தனை முறை இத்தகைய பயங்கரவாத முறியடிப்பு நடவடிக்கைகளுக்காக என்.எஸ்.ஜி. கமாண்டோக்கள் அனுப்பப்பட்டுள்ளனர்? அங்கு ராணுவம்தான் இதனை திறம்பட முறியடித்து வருகிறது” என்று பணியிலிருக்கும் மற்றொரு ராணுவ அதிகாரி தெரிவித்தார்.

ஏகப்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் நடவடிக்கையில் ஈடுபட்ட போது யார் இந்த அமைப்புகளுக்கு கட்டளைகளை வழங்கினர்? அதாவது யார் தலைமையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று ஏகப்பட்ட கேள்விகள் எழுந்துள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ
06-01-2016

நான் முன்பு எதை எல்லாம் சொன்னேனோ அது உண்மைதான் என்பதை இந்த கட்டுரை வெட்ட வெளிச்சமாக்குகிறது. இன்னும் உண்மைகள் தோண்ட தோண்ட வரும்.

Tuesday, January 05, 2016

நிரஞ்சனின் தந்தை தனது மகனைப் பற்றி உருக்கம்!



பஞ்சாபில் இறந்த நிரஞ்சனின் தந்தை சிவராஜனின் உருக்கமான பேட்டி.....

"பள்ளியில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்ற நிரஞ்சன் எம்.வி. இன்ஸ்ட்டியூட்டில் பி.இ. மெக்கானிக்கல் பிரிவில் சேர்ந்தான். அங்கும் சிறப்பாக படித்து முடித்ததால், கேம்பஸ் இண்டர்வியூ-வில் பெரிய தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனால் அதையெல்லாம் வேண்டாமென சொல்லிவிட்டு, மலையேற்ற பயிற்சிக்கு போனான்.

நிரஞ்சன் 2003-ல் தன் விருப்பப்படியே புணேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் தேர்ச்சி பெற்றான். தேசியப் பாதுகாப்பு படையில் வெடிகுண்டு நிபுணராக சேர்ந்தான். 2012-ல் நிரஞ்சனுக்கும், பாலக்காட்டை சேர்ந்த பல் மருத்துவர் ராதிகாவும் திருமணம் நடந்தது. இப்போது ஒன்றரை வயதில் விஸ்வமாயா என்கிற பெண் குழந்தை இருக்கிறாள். கடந்த சனிக்கிழமை காலை போனில் பேசும்போது கூட, ''அப்பா, பதான்கோட் விமானப்படை தளத்துக்கு போகிறேன். நீங்கள் நேரத்துக்கு சாப்பிட்டு, மருந்துகளை முறையாக எடுத்துக்கொள்ளுங்கள். தைரியமாக இருங்கள்''என சொன் னான். நிரஞ்சனின் மரணத்தை தாங்க முடியவில்லை. இருப்பினும் நாட்டுக் காக, அவனது விருப்பப்படியே ராணுவ உடையிலே உயிர்த் துறந் திருக்கிறான். கடைசியாக செப்டம்பர் மாதம் ஓண‌ம் பண்டிகையின் போது வீட்டுக்கு வந்தான். மீண்டும் ஜனவரி 26-ம் தேதி நீண்ட விடுமுறையில் வந்து, பெங்களூருவில் தங்குவதாக சொல்லிவிட்டு போனான். இப்போது பிணமாக வந்திருக்கிறான்."

--------------------------------

இந்தியாவும் பாகிஸ்தானும் உயர் மட்ட அளவில் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டு கவலையற்று இருக்கிறார்கள். இந்தியாவின் ஸ்லீப்பர் செல்கள் பாகிஸ்தானிலும் பாகிஸ்தானின் ஸ்லீப்பர் செல்கள் இந்தியாவிலும் இருந்து கொண்டு பொது மக்களை கொன்று குவிக்கிறார்கள். இரு நாட்டு அரசுகளும் தங்கள் இடத்தில் பிர்சனை விஸ்வரூபம் எடுத்தால் உடன் எல்லையில் பத்ட்டத்தை உண்டு பண்ணி மக்களை திசை திருப்புகிறார்கள். பதான் கோட் தாக்குதலும் இவ்வாறே நிகழ்த்தப்பட்டுள்ளது. எல்லையில் ராணுவம் என்ன செய்கிறது. இத்தனை கிலோ மீட்டர் இத்தனை ஆயுதங்களோடு உள்ளே எப்படி வந்தார்கள். முன்பு கார்கில் யுத்தம் நடந்த போதும் பல கிலோ மீட்டர் உள்ளே வந்து கூடாரம் அடித்து தங்கியுள்ளார்கள். பாராளுமன்ற தாக்குதலும் நடந்து பல ஜவான்கள் உயிரிழந்தது ஞாபகம் இருக்கலாம். பிஜேபி ஆட்சியில் மட்டும் ஏன் தொடர்ந்து இவ்வாறெல்லாம் நடக்கிறது. உங்களின் வாக்கு வங்கியை தக்க வைத்து கொள்ள எதிரி நாட்டோடும் கூடிக் குலாவுவீர்களா? சொந்த மக்களையே பலிகடா ஆக்குவீர்களா?

இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒன்றாக்கி விடுங்கள். அல்லது இந்தியாவையும் பாகிஸ்தானையும் நிரந்தரமாக பிரித்து விடுங்கள். இனிமேலும் நீங்கள் கோடிகளில் புரள்வதற்காக அப்பாவி ராணுவ வீரர்களின் உயிரை காவு கொடுக்காதீர்கள்.

பாகிஸ்தான் சிம் கார்டுடன் துப்பாக்கிகளுடன் தீவிரவாதிகள் கைது!







பஞ்சாப் மாநிலம் பதான் கோட்டின் விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திநமது ஜவான்கள் பலர் உயிரிழந்தது அறிந்திருக்கலாம். நேற்று சந்தேகத்திற்கிடமாக காரில் சென்று கொண்டிருந்த மூன்று இளைஞர்களை போலீஸார் நிறுத்தும் படி சைகை காட்டினர். ஆனால் அவர்கள் போலீஸாரை நோக்கி சுட ஆரம்பித்தனர். சுதாரித்துக் கொண்ட போலீஸார் அவர்களை வளைத்து உயிரோடு பிடித்துள்ளனர்.

பிடிபட்டவர்களின் பெயர் போலு (வயது 20) சந்தீப் சிங் (வயது 25) ஜதிந்தர் சிங் (வயது 34) இவர்கள் மூவரும் பஞ்சாiபை சேர்ந்தவர்கள். போலீஸாரால் தேடப்பட்டு வரும் சமூக விரோதியான ஜௌபால் என்பவனின் நெருங்கிய கூட்டாளிகள் இம்மூவரும் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட இரட்டை குழல் துப்பாக்கிகள், பாகிஸ்தான் சிம் கார்டுகள், 190 துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. பதான் கொட்டில் நடந்த தாக்குதலில் கண்டிப்பாக இவர்களுக்கும் தொடர்பிருக்கும். பாகிஸ்தான் ஏஜண்டுகளாக இவர்கள் செயல்பட்டுள்ளார்களா மேலும் எத்தனை பேர் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விபரம் விசாரணையில் தெரிய வரும். நம் நாட்டு இந்துத்வாவாதிகளின் செயலாக இருப்பதற்கே அதிக வாய்ப்பு உள்ளது.

தகவல் உதவி
hindustantimes
ndtv
04-01-2016

MOHALI: Three people have been arrested in Punjab's Mohali with Pakistani sim cards, a Pakistan-made automatic rifle and other weapons, the police have said.

The arrest of the three men, described by the Mohali police as heroin smugglers, comes as operations are still on against Pakistani terrorists who attacked an air force base in Pathankot, also in Punjab.

Senior police officer GPS Bhullar ruled out any connection between the men arrested in Mohali and the terrorists. Smugglers who operate across the Indo-Pak border in Punjab routinely use Pakistani sim cards to communicate with their contacts, he said.

He said the three men arrested today belonged to a cartel smashed earlier by the police.

Mohali is adjacent to Chandigarh, the shared capital of Punjab and Haryana.

Terrorists suspected to belong to the Pakistan-based terror group Jaish-e-Mohammad, attacked the Pathankot air base early on Saturday morning and an operation to eliminate them has been on since then.

All six terrorists who launched the attack on the Air Force base on Saturday morning have been killed after an offensive operation that lasted for over 60 hours.

http://www.ndtv.com/others-news/3-gangsters-arrested-in-punjabs-mohali-with-pakistani-sim-cards-1261985

http://www.hindustantimes.com/punjab/3-held-with-sim-card-arms-ammunitions-in-sas-nagar/story-HFVgMMeL97gEuRlwinZVDJ.html

Monday, December 28, 2015

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கோவர்தனன் கைது!



முன்னால் ராணுவ வீரர் கோவர்தனன் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐக்கு உளவு பார்த்ததாக ராஜஸ்தான் போக்ரானில் கைது செய்யப்பட்டுள்ளார். கோவர்தனன் தற்போது ராஜஸ்தான் பட்வாரியில் வேலை செய்து வருகிறார். முக்கிய ஆவணங்களை பாகிஸ்தானுக்கு அளித்த போது பிடிபட்டுள்ளார். விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

தகவல் உதவி
INDIATODAY
27-12-2015

http://indiatoday.intoday.in/story/rajasthan-ats-arrest-ex-armyman-suspected-for-spying-for-isi/1/556855.html

Sunday, December 27, 2015

மோடியின் பாகிஸ்தான் விஜயம் குறித்து....





'நம்முடைய ஜவான்கள் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தால் கொல்லப்படுகிறார்கள். நமது பிரதமர் மன் மோகன்சிங் பாகிஸ்தான் பிரதமரோடு கோழிக் கறி சாப்பிட்டுக் கொண்டுள்ளார்'

தேர்தல் பிரசாரத்தில் சென்ற ஆண்டு மோடி...

தற்போது நிலைமை ஏதாவது மாறியுள்ளதா? அதை விட அதிக முறுகல் நிலைதானே உள்ளது? தற்போது நவாஸ் ஷெரீஃபோடு மோடி சிக்கன் பிரயாணி சாப்பிடுகிறாரே? நவாஸ் ஷெரீஃபின் பேத்தியின் கல்யாணத்துக்கும் சென்று வருகிறாரே? மன்மோகன் சிங்கை விட நெருக்கமாக உள்ள மோடியை யார் கேள்வி கேட்பது?

முன்பு கேட்டது எந்த வாய்? தற்போது சிக்கன் பிரியாணி சாப்பிடுவது எந்த வாய்?

---------------------------------------------

ஒரு கற்பனை கலந்துரையாடல்....

நவாஸ் ஷெரீஃப்: வாங்க மோடி ஜீ.... சாப்பாடெல்லாம் நல்லா இருந்ததா?

மோடி: ஓ.... பிரமாதம்.... அது கடவுள் இது கடவுள் என்று சொல்லி ஒன்னுத்தயும் சாப்பிட உட மாட்டேங்க்றாய்ங்க.. இப்போ தான் வயிறு நிரம்ப நிம்மதியா சாப்பிட்டேன்....

நவாஸ் ஷெரீஃப்: நல்லது... நாட்டின் பாதுகாப்பை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மோடி: எந்த குறையும் இல்லை. இந்தியாவில் பாதுகாப்போடு செல்லும் நானே இங்கு சர்வ சுதந்திரமாக வந்துள்ளேன். இதிலேயே தெரியவில்லையா?

நவாஸ் ஷெரீஃப்: உங்க கட்சி ஆட்கள் பாகிஸ்தானை ஏகத்துக்கும் கலாய்க்கிறாங்களே.. நீங்க கொஞ்சம் கண்டிக்கக் கூடாதா?

மோடி: அதை எல்லாம் கண்டுக்காதீங்க... நம்ம இந்துத்வா பசங்களுக்கு உங்க நாட்டை பத்தி ஏதாவது சொன்னாத்தான் உணர்ச்சியே வருது.... 'பாரத் மாதாகீ ஜே' என்று அப்பதான் கத்துராய்ங்க... எங்களுக்கு சில மாநிலங்களில் ஓட்டு விழுவதே உங்க நாட்டு புண்ணியத்துல தான். அதனால இதெல்லாம் சீரியஸா எடுத்துக்காதீங்க...

நவாஸ் ஷெரீஃப்: சரியாக சொன்னீர்கள். எனக்கும் பிரச்னை வரும் போதெல்லாம் காஷ்மீர் பகுதியில் ராணுவத்தை அனுப்புவேன். உடன் மக்களின் அனைத்து கவனமும் உங்க நாட்டின் மீதுதான் இருக்கும். நாம் ரெண்டு பேரும் சேர்ந்து மக்களை மடையர்களாக்கிக் கொண்டே இருப்போம்.

மோடி: ஆஹா இந்த விஷயத்திலும் நாம ஒத்து போறோம். பலே பலே...

-------------------------

தொலைக் காட்சியில் நவாஸ் ஷெரீஃபும் மோடியும் பீஃப் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நிகழ்வை பார்த்த சென்னி மலையும் ராம் நிவாஸூம் 'ஆஹா.. மோடிஜியின் என்ன ஒரு ராஜதந்திரம் பாரத்தாயா... போலோ... பாரத் மாதாகி ஜே' என்று புளங்காகிதம் அடைந்தனர் மோடி நிறையவே இவர்கள் காதில் பூ சுற்றியதை அறியாதவர்களாக!. :-)

Friday, December 25, 2015

முஸ்லிமாக நடித்து உளவு பார்த்த ஐபிஎஸ் அதிகாரி!

இந்துத்வாவாதி: சார்.... நீங்கள் 5 வருடம் பாகிஸ்தானில் முஸ்லிமாக நடித்து உளவு பார்த்துள்ளீர்கள். அது பற்றிய அனுபவங்களை ...

Posted by Nazeer Ahamed on Friday, December 25, 2015

சார்.... நீங்கள் 5 வருடம் பாகிஸ்தானில் முஸ்லிமாக நடித்து உளவு பார்த்துள்ளீர்கள். அது பற்றிய அனுபவங்களை பகிரலாமே?

அஜீத் தோவல் ஐபிஎஸ்:

ஐந்து வருடம் அல்ல ஏழு வருடம் உளவு பார்த்துள்ளேன். பாகிஸ்தானின் லாகூரில் ஒரு மிகப் பெரிய தர்ஹா உள்ளது. நிறைய ஆட்கள் அந்த தர்ஹாவுக்கு வருவதும் போவதுமாக இருந்தனர். நானும் ஒரு முஸ்லிமாக அந்த கூட்டத்தோடு கூட்டமாக வலம் வந்து கொண்டிருந்தேன். அந்த தர்ஹாவின் ஒரு மூலையில் நீண்ட வெள்ளை தாடியோடு ஒரு மகானைப் போல ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் என்னை சைகையால் அழைத்தார். அழைத்து அவர் என்னிடம் கேட்டார்..

'நீ இந்துவா?'

'இல்லை... நான் இந்து அல்ல' என்று மறுத்தேன்.

'என்னோடு வா...' என்று என்னை அழைத்துக் கொண்டு ஒடுக்கமான சந்துகளின் வழியாக என்னை அழைத்துச் சென்றார். மறு பேச்சு பேசாமல் அவரோடு சென்றேன். அவருடைய வீடு வந்தவுடன் என்னை உள்ளே அழைத்துச் சென்று கதவை தாளிட்டார். கதவை தாளிட்டவுடன் என்னிடம் அவர் திரும்பவும்

'நீ இந்துதானே' என்று கேட்டார். நான் குழம்பிப் போய்

'ஏன் என்னைப் பார்த்து இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறீர்கள்?' என்று கேட்டேன்.

'ஏனென்றால் உனக்கு காது குத்தியிருக்கிறது. முஸ்லிம்கள் காது குத்த மாட்டார்கள்' என்றார்.

'ஆம்... நான் முன்பு இந்து. இப்போது முஸ்லிமாக மதம் மாறியுள்ளேன்' என்று சொன்னேன்.

'இல்லை... பொய் சொல்கிறாய்... இப்போதும் நீ இந்துவாகத்தான் இருக்கிறாய். பயப்படாமல் சொல் நீ இந்துதானே'

'ஆம் நான் இந்துதான்'

'உடனே காதுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து ஓட்டையை அடைத்து விடு. பாகிஸ்தானில் உளவாளியாக இவ்வாறு திரிவது பெரிய ஆபத்தில் போய் முடியும்.'

'சரி நான் மறைத்துக் கொள்கிறேன்.'

'நீ இந்து மதத்தைச் சேர்ந்தவன் என்று எப்படி கண்டு பிடித்தேன் என்பது உனக்கு தெரியுமா?'

'தெரியாது நீங்களே சொல்லுங்கள்'

'ஏனென்றால் நானும் ஒரு இந்துதான்' (சபையில் கைத் தட்டல்) இந்த மக்கள் எனது முன்னோர்களை நிறைய கொன்றுள்ளார்கள். அதற்கு நான் இப்பொழுது பழிக்குப் பழி வாங்கிக் கொண்டுள்ளேன். உங்களைப் போன்ற உளவாளிகளைக் காணும் போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது.' என்று சொல்லிக் கொண்டே அந்த அறையின் அலமாரியை திறந்து எனக்கு காண்பித்தார்.

'இதோ பார் சிவனின் சிலை... அருகில் துர்காவின் சிலை.... நான் இதைத்தான் தினமும் வணங்கி வருகிறேன். வெளியே சென்றால் நான் ஒரு இஸ்லாமிய சூஃபி மகானாக மதிக்கப்படுகிறேன். தர்ஹாவில் எனக்கு மிகுந்த மரியாதையும் கிடைக்கிறது.' என்றார்.

அந்த பெரியவரை அதற்கு பிறகு நான் சந்திக்க முடியவில்லை. அவருக்கு அரசு தரப்பிலிருந்து உதவி ஏதாவது செய்யலாம் என்று நினைத்தேன். அது என்னால் முடியாமல் போய் விட்டது'

------------------------------------------------

ஒரு இந்திய ஐபிஎஸ் அதிகாரி தனது அனுபவங்களை பகிர்ந்ததைத்தான் காணொளியாக நாம் பார்தோம். ஹிந்தி தெரியாதவர்களுக்காக இதனை மொழி பெயர்த்தேன்.

பாகிஸ்தானில் தினமும் அரங்கேறி வரும் குண்டு வெடிப்புகளின் சூத்திதாரிகள் யார் என்பது இப்போது விளங்கியிருக்கும். ஷியா மசூதியில் குண்டு வெடிப்பதும் அடுத்த வெள்ளிக் கிழமை அதற்கு பதிலடியாக சன்னி முஸ்லிம்களின் பள்ளியில் குண்டு வெடிப்பதும் தொடர்கதையாக இருந்ததை படித்திருப்போம். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் 100, 150 என்று முஸ்லிம்கள் இறப்பதற்கு முக்கிய காரணம் யார் என்தை நாம் விளங்கியிருப்போம். 'ஒரு மனிதனைக் கொன்றவன் ஒட்டு மொத்த மனிதனையும் கொன்றவனாவான்' என்று குர்ஆன் கூறியிருக்க ஒரு உண்மையான இஸ்லாமியன் இவ்வாறான கொலை பாதக செயல்களில் ஈடுபடுவானா என்பதை நாம் சிந்திக்க கடமைபட்டுள்ளோம்.

மாறு வேஷத்திலிருக்கும் அந்த சூஃபி ஞானியைப் போல் எத்தனை பேர் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உலா வருகிறார்களோ அதனை அந்த இறைவனே அறிவான்.

இதை எல்லாம் படித்துப் பார்த்த போது எனக்கு ஒரு குர்ஆன் வசனம்தான் ஞாபகத்துக்கு வந்தது.

‘அவர்களும் சூழ்ச்சி செய்தார்கள். இறைவனும் சூழ்ச்சி செய்தான்; சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் சிறந்த சூழ்ச்சி செய்பவன் இறைவனேயாவான்’

(அல்-குர்ஆன் 3:54)

நமது இந்திய நாட்டின் மீது வெறுப்போடு செயல்படும் பாகிஸ்தானிய அரசும் அதன் ராணுவமும்தான் நமக்கு எதிரிகள். அந்த நாட்டு சாதாரண குடி மக்கள் நமக்கு எதிரிகள் அல்ல என்பதை நாம் பிரித்துப் பார்க்க தெரிந்திருக்க வேண்டும். நமது நாட்டில் இந்து பெருங்குடி மக்களையும் இந்துத்வாவாதிகளையும் எவ்வாறு நாம் தரம் பிரித்து பார்க்கிறோமோ அதே அடிப்படையையே இங்கும் நாம் கையாள வேண்டும்.

இஸ்லாமியர்களை கருவறுத்துக் கொண்டிருக்கும் சூழ்ச்சிக்கார்கள் என்றுமே வெற்றியடைய போவதில்லை. அதனை வருங்கால வரலாறு உணர்த்தும்.

#இந்தியா #இந்துத்வா #பாகிஸ்தான்

Tuesday, October 27, 2015

சகோதரி கீதாவை காப்பாற்றிய பாகிஸ்தானிய குடும்பம்!









காது கேட்காமல் வாயும் ஊமையாகிப் போய் தனது சிறு வயதில் தவறுதலாக சம்ஜோதா எக்ஸ்பிரஸ்ஸில் ஏறி பாகிஸ்தான் சென்று விட்டார் சகோதரி கீதா. அவரை 14 வருடங்களாக தனது வீட்டிலேயே தனது மகளைப் போல பாவித்து அவரது விலாசத்தையும் கண்டு பிடித்து தற்போது இந்தியாவில் அவரது உறவினர்களிடம் சேர்ப்பிக்க வந்துள்ள அப்துல் சத்தார் குடும்பத்துக்கு இறைவன் நன்மைகளை வாரி வழங்குவானாக!

அந்த பெண் கீதாவின் விருப்பத்துக்கு குறுக்கே நிற்காமல் அவர் வழிபடும் தெய்வங்களின் படங்களை ஒரு ரூமில் வைத்து அவருக்கு சகல சௌரியங்களையும் செய்து கொடுத்துள்ளது அப்துல் சத்தார் குடும்பம். 'இந்த மார்க்கத்தில் வற்புறுத்தல் இல்லை' என்ற குர்ஆனின் வசனத்தை செயல்படுத்திக் காட்டியுள்ளது இவரது குடும்பம்.

இதனிடையே கீதாவை இத்தனை ஆண்டுகள் பராமரித்து வந்த எதி அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதுகுறித்து பாகிஸ்தான் பத்திரிகையான 'டான்' வெளியிட்ட செய்தியில், "பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த நிதியை அறக்கட்டளை நிறுவனர் அப்துல் சத்தார் எதி பணிவுடன் மறுத்துவிட்டார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அவரது மகன் அன்வர் காஸ்மி இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாக அந்தப் பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்துத்வாவாதிகளே!

இனியாவது அப்துல் சத்தாரைப் போன்று மனிதர்களாக மாற முயற்சி செய்யுங்கள். மாட்டை காட்டி மனிதனைக் கொல்லும் மிருக புத்திக்கு இனியாவது விடை கொடுங்கள்.

Thursday, October 22, 2015

இந்தியர்களுக்கு இலவச உணவு வழங்கும் பாகிஸ்தானியர்!





சில நாட்களுக்கு முன் மும்பையில் ஒரு பாகிஸ்தானிய குடும்பம் விடுதி கிடைக்காததால் நடு ரோட்டில் தங்களின் பொழுதை கழித்ததை மறந்திருக்க மாட்டோம். இந்திய அரசும் பாகிஸ்தானிய அரசும் போட்டி போட்டுக் கொண்டு இரு நாட்டு மக்களையும் பிரித்து வைத்தே தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்கின்றனர். சில அரசியல் அமைப்பினரோ பாகிஸ்தானை இந்தியாவின் எதிரியாகவே, இந்திய மக்களுக்கு சித்தரித்து வருகின்றனர். 'பாகிஸ்தானை சேர்ந்தவர்' என்றாலே அவர் 'இந்தியாவுக்கு எதிரானவர்' என்ற எண்ணம் பல இந்தியர்களின் மனதில் ஆணி வேராக பதிந்திருக்கின்றது.

இதை தகர்க்கும் வகையில் பாகிஸ்தானை சேர்ந்த தொழிலதிபரான இக்பால் லத்திஃப், ஒரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். பாகிஸ்தானை சுற்றிப் பார்க்க குறுகிய கால விசாவில் வருகை தரும் அனைத்து இந்தியர்களுக்கும், தனது 'டங்கின் டோனட்ஸ்' உணவகத்தின் அனைத்து கிளைகளிலும் உணவும், டோனட்டும் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பை இக்பால் விடுத்துள்ளார். பாகிஸ்தானிலுள்ள இஸ்லாமாபாத், லாகூர், பேஷாவர் ஆகிய நகரங்களில், உலகப் புகழ் பெற்ற டோனட் உணவகமான டங்கின் டோனட்ஸின் 26 கிளைகளின் உரிமையாளரான இக்பால், இந்த அறிவிப்பை விடுத்த சில நாட்களில் 2400 க்கும் அதிகமான இந்தியர்கள், தனது உணவகங்களில் உண்டு மகிழ்ந்ததாக கூறி பெருமை கொள்கிறார்.

'ஒரு பாகிஸ்தானிய குடும்பம் தங்குவதற்கு இடமின்றி காவல் நிலையத்திலும் ரோட்டோரத்திலும் தங்கியிருந்ததை பத்திரிக்கைகளில் படித்தேன். இது என்னை மிகவும் பாதித்தது. இது போன்று மனிதர்களுக்குள் பிறந்த நாட்டை வைத்து வெறுப்பை வளர்க்காமல் நட்புக் கரம் நீட்ட என்னால் ஆன சிறிய முயற்சியே இது' என்கிறார் இக்பால் லத்தீஃப்.

வாழ்த்துக்கள் இக்பால் லத்தீஃப் அவர்களே!

தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா



Friday, June 19, 2015

ரமலானை முன்னிட்டு பாகிஸ்தானில் இந்தியர்கள் விடுதலை!




இஸ்லாமபாத் : இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் இன்று தொடங்குவதை முன்னிட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 113 மீனவர்களை அந்நாட்டு அரசு விடுதலை செய்துள்ளது. இஸ்லாமாபாத்திலிருந்து தங்களுக்கு இது குறித்த உத்தரவு வந்துள்ளதாக கூறிய மலிர் சிறையின் துணை கண்காணிப்பாளர் முகமது ஹூசைன் செஹ்டோ, புனிதமான ரமலான் மாதத்தை முன்னிட்டு நல்லெண்ண நடவடிக்கையாக மீனவர்களை விடுவிக்குமாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 113 மீனவர்களும் லாகூருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பின்னர் வாகா எல்லையில் வைத்து அவர்கள் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சிறையில் இருந்து வெளியே வந்த இந்திய மீனவர்களுக்கு பாகிஸ்தான் மீனவர்கள் சால்வையை பரிசாக தந்து அனுப்பி வைத்தனர்.

------------------------------------------------

KARACHI: Pakistan today released 113 Indian fishermen lodged in a jail here in a goodwill gesture, days after Prime Minister Narendra Modi called up his Pakistani counterpart Nawaz Sharif to greet him on the holy month of Ramzan.

"We have got orders from Islamabad that the fishermen have been released from Malir jail as a goodwill gesture on the occasion of the holy month of Ramzan starting tomorrow," deputy jail superintendent Muhammad Hussain Sehto told PTI.

NDTV
june, 18, 2015

Monday, March 09, 2015

umra pia





சில மதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் பெஷாவரில் பள்ளிக் குழந்தைகளை குறி வைத்து துப்பாக்கி சூடு நடந்தது ஞாபகமிருக்கலாம். இதில் 134 குழந்தைகள் இறந்தனர். உலகையே பதற வைத்தது இந்த நிகழ்வு. வழக்கமாக இஸ்லாமிய தோற்றத்தில் ஒரு சில பாதகர்கள் இந்த செயலை நிகழ்த்தினர். துப்பாக்கி சூடு நடத்திய ஒருவனை சுட்டுக் கொன்றது ராணுவம். அவனது உடல் முழுக்க பச்சை குத்தப்பட்டிருந்தது. அவன் ஒரு ஐரோப்பியன் என்பது தெரிய வந்தது. இந்த கொலைகாரர்களை அனுப்பியதன் நோக்கம் இஸ்லாத்தின் மேல் வெறுப்பை உண்டு பண்ண வெண்டும் என்பதே! எனவே தான் எங்கு இது போன்ற துப்பாக்கிச் சூடு நடந்தாலும் அதனை செய்பவர்கள் 'அல்லாஹு அக்பர்' என்று குரல் கொடுத்துக் கொண்டு செய்வார்கள். அவனுக்கும் இஸ்லாத்துக்கும் ஏதும் சம்பந்தம் உள்ளதா என்றெல்லாம் யோசிக்க மாட்டார்கள். நமது மீடியாக்களும் அதற்கு கண் காது மூக்கு வைத்து மிக சிறப்பாக கதை வசனம் எழுதி காசு பார்த்து விடும்.

ஆனால் கொலைகார்களின் எண்ணத்தில் மண்ணைப் போடும் விதமாக குழந்தைகளை இழந்த பெற்றோர் தற்போது இறை இல்லத்தில் தங்கள் பாரங்களை இறக்கி வைக்க ஜெத்தா வந்துள்ளனர். மொத்தமாக 910 நபர்கள் உம்ரா செய்வதற்காக சிறு சிறு குழுக்களாக வந்து கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கான முழு செலவுகளையும் பாகிஸ்தான் ராணுவம் ஏற்றுக் கொண்டுள்ளது.

உம்ரா பயணத்தில் இருந்த ஒரு பெற்றோர் 'நாங்கள் எங்கள் குழந்தைகளுக்காகவும் பாகிஸ்தான் மற்றும் உலகில் உள்ள குழந்தைகளின் நலனுக்காகவும் பிரார்த்திக்க வந்துள்ளோம். இறைவனிடம் முறையிட்டு எங்கள் பாரங்களை இறக்கி வைக்க வந்துள்ளோம்' என்றனர்.

எதிரிகள் எத்தனை திட்டங்களை தீட்டி இஸ்லாமிய மார்க்கத்தை களங்கப்படுத்த நினைத்தாலும் அதில் வெற்றி பெறப் போவதில்லை. நம்பிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதை இனி உணர்ந்து கொள்வார்கள்.

தகவல் உதவி
சவுதி கெஜட்
08-03-2015

Tuesday, February 24, 2015

2000 குழந்தைகளின் உயிர் காத்த சிறுவன் ஹஸன்!



ஷோலே ஹிந்தி படத்தில் வரும் அம்ஜத்கான் போல் இருக்கும் இந்த பாகிஸ்தானிய சிறுவனுக்கு வயது 15 தான். பாகிஸ்தானின் ஹாங்கு மாவட்டத்தில் உள்ள இப்றாகிம்ஜாய் நகரில் வசித்து வந்தான். இந்த சிறுவனின் பெயர் அய்த்ஜாக் ஹஸன். ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிக்கு சென்ற இந்த சிறுவன் பள்ளியின் காம்பவுண்டுக்கு வெளியே நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சந்தேகத்திற்கிடமான ஒரு நபர் பள்ளியை நோக்கி வேகமாக வருகிறார். அந்த நபர் கையில் உள்ள ரிமோட் கண்ட்ரோலையும், வயிற்றின் பகுதி சற்று உப்பியிருப்பதையும் நோட்டமிட்ட ஹஸன் இவன் தற்கொலை குண்டுதாரி என்பதை யூகித்துக் கொண்டார். அந்த நேரத்தில் பள்ளியில் 2000க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தன.

அவனை தடுத்து நிறுத்தி பள்ளி குழந்தைகளை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று சக நண்பர்களோடு கூறுகிறான் ஹஸன். ஆனால் அது நமக்கே ஆபத்தாக முடியும் என்று ஹஸனை தடுக்கின்றனர் அவனது நண்பர்கள். எனது உயிரை விட எனது நண்பர்களின் உயிரே முக்கியம் என்று கூறி தற்கொலை குண்டுதாரியை நோக்கி ஹஸன் வேகமாக ஓடுகிறான். இவன் வருவதைப் பார்த்து அவனும் ஓட எத்தனிக்கவே நிலை தடுமாறி பள்ளி வளாகத்தின் காம்பவுண்ட் சமீபமாக அந்த சக்தி வாய்ந்த டைம் பாம் வெடித்து சிதறுகிறது. தற்கொலை குண்டுதாரியும் இளைஞன் ஹஸனும் அதே இடத்தில் தூக்கி எறியப்படுகிறார்கள். இருவருமே அந்த இடத்திலேயே இறந்து விடுகின்றார்கள். ஹஸன் அந்த கொலைகாரனை தடுத்திருக்கா விட்டால் பள்ளி குழந்தைகளில் பல நூறு பேர் இறந்திருப்பார்கள். இந்த இளைஞனின் சமயோஜித வியூகத்தால் பெரும் குண்டு வெடிப்பு தடுக்கப்பட்டது.

'எனது மகன் எனது மனைவியை அவனது தாயை அழ வைத்து விட்டு சென்றது வருத்தமாக இருந்தாலும் ஓராயிரம் குழந்தைகளின் தாய்களின் அழுகுரலை தனது உயிரைக் கொடுத்து தடுத்து நிறுத்தியிருக்கிறான். அதை நினைத்து பெருமைப்படுகிறேன்' என்கிறார் ஹஸனின் தந்தை முஜாஹிர் அலி.

பாகிஸ்தான் அரசு இந்த சிறுவனின் வீர செயலை பாராட்டி பட்டமளித்து கௌரவித்தது. ஹஸன் செய்த இந்த வீர செயலுக்கு பெயர்தான் ஜிஹாத். இந்த செயலுக்கு ஹஸனுக்கு கண்டிப்பாக இறைவனிடத்தில் வெகுமதி உண்டு. இறைவன் இந்த இளைஞனின் உயிர் தியாகத்தை ஏற்றுக் கொண்டு அவனுக்கு சொர்க்கத்தில் நிரந்தர இடத்தை தர நாமும் பிரார்திப்போம். பழைய செய்தியாக இருந்தாலும் ஜிஹாத் என்பது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுவதற்காக இந்த செய்தியை பகிர்கிறேன்.

முகமூடி போட்டுக் கொண்டு கிருத்தவர்களையும், குர்துகளையும், ஷியாக்களையும் தலையை அறுத்து படமாக வெளியிடும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் இந்த சிறுவன் ஹஸனின் தீர செயலை நினைத்துப் பார்க்கட்டும். இஸ்லாம் காட்டும் வழி இதுதான் என்று இனியாவது உணரட்டும். யூதர்களின் கைப்பாவையாக இஸ்ரேலின் ஏவலாளனாக இனியும் இருக்காமல் செய்த பாவங்களுக்குக்காக இறைவனிடம் மன்னிப்புக் கேட்டு தூய இஸ்லாமிய மார்க்கத்தின்பால் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளட்டும்.

தகவல் உதவி
பிபிசி
09-01-2014

http://www.bbc.com/news/world-asia-25663992

Sunday, February 22, 2015

பெஷாவர் தாக்குதலை நடத்திய சூத்திதாரிகள் யார்?

பெஷாவர் தாக்குதலை நடத்திய சூத்திதாரிகள் யார்?



சில மாதங்களுக்கு முன்பு பெஷாவர் பள்ளிக் கூடத்தில் நூற்றுக்கு மேற்பட்ட சிறுமிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நிகழ்வை நாம் மறந்திருக்க மாட்டோம். அதில் பள்ளிக் கூடத்தினுள் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் சிலரின் உடலை பார்த்த பாகிஸ்தானிகள் ஆச்சரியப்பட்டுப் போயினர். ஏனெனில் அந்த தீவிரவாதிகளின் உடலில் பல உருவங்கள் பச்சைக் குத்தப்பட்டிருந்தன. தமிழ் நாட்டில் உள்ள எந்த முஸ்லிமாவது தங்கள் உடலில் பச்சைக் குத்தி பார்த்திருக்கிறீர்களா? இந்துக்களும் கிருத்தவர்களும் தங்கள் பெயர்களையோ தங்கள் காதலியின் பெயர்களையோ தங்கள் கைகளில் பச்சைக் குத்திக் கொள்வதை பார்த்திருப்போம். இஸ்லாத்தில் இவ்வாறு உடலில் பச்சைக் குத்திக் கொள்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் பெஷாவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவனின் உடலில் உருவப் படங்கள் பச்சை குத்தப்பட்டிருந்தன. அந்த நேரத்திலேயே அது வீடியோவாகவும் வந்தது. இது பற்றி எனது கம்பெனியில் வேலை செய்யும் பாகிஸ்தானி சொன்னதாவது 'பலுசிஸ்தான் போன்ற பகுதிகளில் பாகிஸ்தானின் ராணுவமே சில இடங்களில் நுழைய முடியாது. அந்த அளவு சாலை வசதிகளும் இல்லை. இதனை பயன்படுத்திக் கொண்டு ரஷ்யாவிலிருந்து ஆப்கான் வழியாக பாலைவனங்களூடாக பாகிஸ்தான் புகுந்து விடுவர். இவர்களில் பெரும்பாலோர் மொசாத்தால் பயிற்சி கொடுக்கப்பட்டவர்கள். சில நேரம் ஷியா பள்ளிகளில் குண்டு வைப்பார்கள். சில நேரம் சன்னி பள்ளிகளில் குண்டு வைப்பார்கள். மற்ற சில நேரங்களில் இந்திய பார்டர்களில் இங்கிருந்து துப்பாக்கி சூடு நடத்தி இந்தியா பாகிஸ்தானுக்கு முறுகல் நிலையை உண்டாக்குவர். இது இவர்களுக்கு இடப்பட்ட வேலை. பாகிஸ்தானிகள் சிலரும் இதற்கு உடந்தை. இதற்காக அவர்களுக்கு மாதாமாதம் பெரும் தொகை கைமாறாக கொடுக்கப்படுகிறது. ரூட் போட்டுக் கொடுப்பது. உணவு தயாரித்துக் கொடுப்பது போன்ற வேலைகளை இவர்கள் செய்து வருகின்றனர். உள் நாட்டு சிறு குழப்பங்களை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வது இவர்களுக்கு கை வந்த கலை. தங்களின் மீது சந்தேகப் பார்வை பட்டு விடாதபடி மிக கவனமாக காய்களை நகர்த்துவார்கள்' என்று சொன்னார்.

இதனால் என்ன நன்மை என்று நீங்கள் கேட்கலாம்?

முறுகல் நிலை தொடர்ந்து இருந்தால் அமெரிக்க இஸ்ரேலிய ராணுவ தளவாடங்கள் மில்லியன் கணக்கில் விற்பனையாகும். இந்தியாவும் பாகிஸ்தானும் போட்டி போட்டுக் கொண்டு ராணுவ தளவாடங்கள் வாங்குவதை தினமும் நாம் பத்திரிக்கையில் படிக்கிறோம். இந்த ஆயுத வியாபாரிகளுக்கு எதிராக ஒபாமாவும் வாயை திறக்க முடியாது. ஏனெனில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு ஒபாமா கட்சியும் எதிர் கட்சியும் தேர்தல் செலவீனங்களுக்காக இந்த ஆயுத வியாபாரிகளையே நாட வேண்டியதாக இருக்கும். எனவே இவர்கள் எதனை சொல்கிறார்களோ அதனையே ஒபாமாவும் மறுப்பேதும் சொல்லாமல் தலையாட்டுவார். எப்படி ஆர்எஸ்எஸ், அதானி, கும்பலுக்கு நமது மத்திய அரசு தலையாட்டுகிறதோ அது போல :-)

அல் ஷபாப், போகோ ஹராம், ஐஎஸ்ஐஎஸ், தாலிபான், இந்தியன் முஜாஹிதீன் என்று நாட்டுக்கு தக்கவாறு இந்த யூதர்களின் முகமூடி மாறிக் கொண்டே இருக்கும். தாலிபான்களை தீவிரவாதிகள் என்று சொல்லாதீர்கள் என்று அமெரிக்கா சமீபத்தில் அவர்களுக்கு சிறந்த சர்டிபிகேட் கொடுத்து கௌரவித்ததையும் நாம் மறந்து விடக் கூடாது. பாகிஸ்தானில் எவ்வாறு மொசாத்துக்கு உதவ ஆட்கள் இருக்கிறார்களோ அதே போல் இங்கும் இந்துத்வாக்கள் அவர்களுக்கு பூரண ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டுள்ளனர். இந்துத்வா ஆட்சிக் கட்டில் ஏறியவுடன் இஸ்ரேலோடு நமது நாட்டின் தொடர்புகள் இன்னும் அதிகமாயுள்ளதை நாம் கவனித்திருப்போம். இனி மறைமுகமாக என்னவெல்லாம் நமது நாட்டில் அரங்கேற்றப் போகிறார்களோ பொருத்திருந்து பார்போம்.

Sunday, February 15, 2015

தொலைக்காட்சியை உடைக்கும் பாகிஸ்தானிய கிறுக்கர்கள்!



தொலைக்காட்சியை உடைக்கும் பாகிஸ்தானிய கிறுக்கர்கள்!

விளையாட்டு என்பது உடல் ஆரோக்கியத்திற்காக ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இந்த விளையாட்டை நாட்டின் கவுரவ பிரச்னையாக எடுத்துக் கொண்டு சில கிறுக்கர்கள் தொலைக் காட்சி பெட்டியை உடைப்பதைத்தான் இங்கு பார்கிறோம். அட கிறுக்கன்களா! விளையாட்டில் ஜெயித்தவனும் தோற்றவனும் கோடிகளில் புரளுவதை நீ அறிய மாட்டாயா? உடைத்த அந்த டிவியை வாங்க நீ இரண்டு மாதம் உடல் வியர்வை சிந்தி உழைக்க வேண்டுமே என்றாவது சிந்தித்தாயா? விளையாட்டு, இசை என்ற எந்த பொழுது போக்கு அம்சங்களையும் ஒரு அளவுக்கு மீறி நேசித்தால் அதன் முடிவு எவ்வாறு இருக்கும் என்பதற்கு இந்த நிகழ்வுகளே சாட்சிகளாக இருக்கின்றது.

இந்தியாவிலும் பகிஸ்தானிலும் தேச பக்திக்கு அடையாளமாக கிரிக்கெட்டின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் போக்கு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இந்த போக்கானது இரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் நல்லதல்ல. வறுமையான மக்களை அதிகம் கொண்ட இந்த நாடுகள் பொருளாதார முன்னேற்றத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பாகிஸ்தானிடம் ஜெயித்த சந்தடி சாக்கில் மோடி அரசு பெட்ரோல் விலையை மேலும் ஏற்றியுள்ளது. அது பற்றி எல்லாம் தேச பக்தி பேசுபவர்களுக்கு கவலையில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் பாகிஸ்தானை ஜெயித்து விட வேண்டும்.

இந்திய பாகிஸ்தானின் பெரும்பான்மை மக்கள் என்றுதான் சிந்திக்க தொடங்குவார்களோ! பொறுத்திருந்து பார்போம்.

Thursday, December 18, 2014

ஒன்றாகவே படித்தோம்! ஒன்றாகவே இறந்தோம்! - கவிதை



ஒன்றாக பள்ளியில் குதூகலித்து படித்தோமே!

நன்றாக பள்ளியில் ஒன்றாக உணவு உண்டோமே!

கூட்டாக வாழ்வின் கனவுகளை அசை போட்டோமே!

எட்டாத வேலைகளையும் எட்டி விட முனைந்தோமே!

ஒன்றாக பள்ளி சீருடையில் உலா வந்தோமே! தோழா...

நன்றாக சென்ற நமது பள்ளி நாட்களை நொடிகளில்

மிருகமான சில மனிதர்களின் கோழைத் தனத்தால்

இழந்து விட்டோம். இனி இழக்க ஒன்றுமில்லை!

இறப்பிலும் இன்று ஒன்று சேர்ந்து விட்டோம்!

ஒன்றாகவே படித்தோம்! ஒன்றாகவே இறந்தோம்! இறைவா!

எதிரிகளுக்கு கூட எங்கள் நிலை வர வேண்டாம்!

-பெஷாவர் பள்ளியில் ஒன்றாக படித்த மாணவர்கள்!




Tuesday, December 16, 2014

பாகிஸ்தானில் அப்பாவி பள்ளி குழந்தைகள் கொலை!



பாகிஸ்தானில் பெஷாவரில் ராணுவ பள்ளியை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 130 பள்ளி குழந்தைகள் இறந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தாலிபான்கள் பொறுப்பேற்றுள்ளதாக செய்திகள் வருகிறது. இந்த கொடும் செயலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மனித குல விரோதிகள்.

'ஒரு உயிரைக் கொல்வது ஒட்டு மொத்த மனித குலத்தையும் கொன்றதற்கு சமமாகும்' என்று குர்ஆன் கூறியிருக்க இவ்வாறு அப்பாவி பள்ளிக் குழந்தைகளை கொன்றவன் இஸ்லாமிய பெயர் வைத்திருந்தாலும் இறைவன் முன்னால் அவன் உண்மை முஸ்லிம் அல்ல. நாளை மறுமை நாளில் இறந்த அந்த குழந்தைகள் கொன்றவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு தண்டிக்கப்படுவர் என்கிறது குர்ஆன். எனவே மனித குல விரோதிகளே உங்களின் தண்டனைக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Wednesday, December 10, 2014

நோபல் பரிசு பெற்ற மலாலாவின் உணர்ச்சி மிகு உரை!



நார்வே நாட்டின் ஆஸ்லோவில் இன்று அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற பாகிஸ்தான் பெண் யூசப்சாய் மலாலா 'இப்போதே சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவோம்.. இப்போதே.. என்று தனது உரையில் தெரிவித்தார்.

அவர் உரையாற்றுகையில் கூறியதின் சுருக்கம்::

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்.....

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல இறைவனின் திருநாமம் கொண்டு ஆரம்பம் செய்கிறேன்......

இந்த நாள் எனக்கு மிக முக்கியமான நாள். எனக்கு வாழ்த்துக்கள் கூறி என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மலாலா என்றால் ’துயரம் தோய்ந்த’ என்று பொருள், ஆனால் மகிழ்ச்சிகரமான ஒரு பெண்ணாக இன்று நான் இருக்கிறேன். எனது பெற்றோரின் நிபந்தனையற்ற அன்புக்கு நான் நன்றி செலுத்துகிறேன். குறிப்பாக என் தந்தை எனது இறகுகளை ஒடுக்காமல் என்னை பறக்க அனுமதித்ததற்கு நன்றியைப் பதிவு செய்துகொள்கிறேன். எனது பொறுமைக்கும், எப்போதும் உண்மையையே பேச வேண்டும் என்பதற்கும் தூண்டுகோலாக இருக்கும் என் தாயாருக்கும் நன்றி. இஸ்லாம் என்றால் என்ன? என்று எனக்கு தெளிவாக விளக்கிய எனது தாயாருக்கு என் நன்றி. இதுதான் இஸ்லாமின் உண்மையான செய்தி என்று நாங்கள் பலமாக நம்புகிறோம்.

சகோதர சகோதரிகளே, பலமான நாடுகள் என்று நாம் அழைக்கும் நாடுகள் ஏன் போர்களை உருவாக்குவதில் பலமாக உள்ளன, அமைதியை உருவாக்குவதில் பலவீனமாக உள்ளன? ஏன் துப்பாக்கிகள் அளிப்பது எளிதாக இருக்கிறது, புத்தகங்கள் அளிப்பது கடினமாக இருக்கிறது? போருக்கான டாங்கிகளை உருவாக்குவது சுலபமாக உள்ளது பள்ளிக்கூடங்கள் கட்டுவது கடினமாக உள்ளது? இப்படிப்பட்ட கேள்விகளை பெரியோர்கள் என்று கூறப்படுவர்களுக்குப் புரியும், ஆனால் சிறுவர்களான நமக்கு புரியாது.

நாம் நவீன உலகில் வாழ்கிறோம், இந்த 21ஆம் நூற்றாண்டில் நம்மால் முடியாதது எதுவுமல்ல என்று நாம் நம்புகிறோம். செவ்வாய் கிரகத்திற்கு சென்று விட்டோம், ஏற்கெனவே சந்திர மண்டலத்தை அடைந்து விட்டோம், பின்பு அனைவருக்கும் கல்வி, தரமான கல்வி என்பதை மட்டும் சாதிக்க முடியாதா என்ன? இதுவும் உண்மையாகும்.

கல்வி என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை நம் தலைவர்களுக்கு கூற வேண்டிய நேரம் அல்ல இது. அவர்களுக்கு ஏற்கெனவே தெரியும். அவர்களது குழந்தைகள் நல்ல பள்ளிகளில் படிக்கின்றனர். இப்போது அனைவருக்கும் அத்தகையது தகைய வேண்டும், நடவடிக்கை எடுங்கள் என்/று அவர்களை வலியுறுத்துவோம். உலகத் தலைவர்களே ஒன்று கூடுங்கள், கல்வியை முன்னுரிமையாக்குங்கள்.

15 ஆண்டுகளுக்கு முன்பு உலகத் தலைவர்கள் சில இலக்குகளை நிர்ணயித்தனர். இதனையடுத்து வந்த ஆண்டுகளில் கொஞ்சம் வளர்ச்சி ஏற்பட்டது. ஆனாலும் முதன்மைக் கல்வி மட்டுமே விரிவடைந்தது. முன்னேற்றம் அனைவரையும் சென்றடையவில்லை.

நமது குழந்தைகளின் கல்விக்காக நாம் போராடுவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும் என்பதே எனது மிகப்பெரிய லட்சியம். நாம் அனைவரும் இதில் ஒன்றுபட்டால் இதனை சாதிக்க முடியும்.

ஏற்கெனவே இதனை நோக்கி நாம் அடியெடுத்து வைத்து சென்று கொண்டிருக்கிறோம், ஆனால் தாண்டிச்செல்ல இப்போது நேரம் வந்துள்ளது.

மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, அன்னை தெரசா, ஆங் சாங் சூசி ஆகிய பெரியவர்கள் பெரிய மாற்றங்களை சாதித்துள்ளனர். அவர்கள் இந்த மேடையில் இருந்திருக்கிறார்கள். கைலாஷ் சத்யார்த்தி அவர்களும் நானும் எடுத்துள்ள வழிமுறைகள் மாற்றங்களைக் கொண்டுவரும். நிலையான மாற்றத்தை ஏற்படுத்தும்.

என்னுடைய கிராமத்தில் இன்னமும் பெண்களுக்கு உயர்கல்வி இல்லை. நான் இதனை மாற்ற விரும்புகிறேன், இதன் மூலம் அவர்கள் கனவுகளை நிறைவேற்ற விரும்புகிறேன்.

இங்குதான் நான் தொடங்குகிறேன், ஆனால் இதோடு மட்டும் நிறுத்திவிடப்போவதில்லை. ஒவ்வொரு குழந்தையும் பள்ளியில் இருப்பதை பார்க்கும் வரை நான் இந்த போராட்டத்தை கைவிடப்போவதில்லை. நான் தாக்கப்பட்ட பிறகு இதில் மேலும் பலமானவளாகிவிட்டேன். ஏனெனில் யாரும் என்னை தடுக்க முடியாது என்பதை நான் அறிவேன். இப்போது நாம் லட்சக்கணக்கானவர்கள் ஆகிவிட்டோம், ஒருவரும் நம்மை தடுத்து விட முடியாது.

எனது சொந்த ஊரான ஸ்வாட் இயற்கை எழில் கொஞ்சும் மிக அழகிய நகரம். கல்வி பயில வேண்டும் என்ற தாகத்தால் கல்விச் சாலைகளில் ஆனந்தமாக சுற்றித் திரிந்தோம். ஸ்வாட் நகரம் சுற்றுலாவுக்கு பிரசித்திப் பெற்றது. திடீரென்று ஒருநாள் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது. 400 பள்ளிக் கூடங்கள் நிர்மூலமாயின. எங்களின் கனவுகள் தகர்ந்தது. எங்கும் பிரச்னை. பெண்கள் வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டனர். எனது உலகம் தீவிரவாதிகளால் மாற்றப்பட்டது. எனக்கு முன்னால் இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று அமைதியாக வீட்டில் முடங்கி விடுவது. இரண்டாவது அடக்கு முறைக்கு எதிராக குரல் கொடுப்பது. நான் இரண்டாவது வழியை தேர்ந்தெடுத்தேன். இன்று உங்கள் முன் நிற்கிறேன்.

(பயங்கர கை தட்டல்)

என்னுடைய மிகச்சிறந்த பள்ளி தோழிகளில் ஒருவர் மருத்துவராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவர் தைரியமானவர். ஆனால் அவரது மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு வெறும் கனவாகவே முடிந்தது. 12 வயதில் அவருக்குத் திருமணம் செய்து வைத்தனர். உடனே குழந்தையும் பிறந்தது. அவரே ஒரு 14 வயது குழந்தை ஆனால் அவருக்கு ஒரு குழந்தை...அவர் சிறந்த மருத்துவராகியிருப்பார் என்றே நான் கருதுகிறேன். ஆனால் அவரால் முடியவில்லை, காரணம் அவர் ஒரு பெண், அவரது உடைந்த கனவுதான் எனது நோபல் பரிசு தொகையை மலாலா நிதியத்திற்கு அளிக்கச் செய்துள்ளது.

இதன் முதல் தொகை எனது இருதயம் எங்கு உள்ளதோ அங்குதான் செல்ல வேண்டும். அதாவது பாகிஸ்தானில் கல்விச்சாலைகளைக் கட்ட வேண்டும், குறிப்பாக எனது சொந்த ஊரான ஸ்வாட் மற்றும் சங்லாவில் கல்விசாலைகள் கட்டப்பட வேண்டும்.

இதை எல்லாம் எடுத்துச் சொன்னதற்காக சிலரால் நான் சுடப்பட்டேன். என்னை சுட்டவர்கள் அதற்கு இஸ்லாத்தையும் காரணமாக காட்டுகின்றனர். இஸ்லாம் அப்பாவி பொது மக்களை சுடச் சொல்கிறதா? கல்வி கற்கச் செல்லும் சிறுமிகளை சுடச் சொல்கிறதா? குர்ஆன் என்ன சொல்கிறது என்பதை விளங்கித்தான் அவர்கள் இந்த அராஜகத்தை நிகழ்த்துகிறார்களா?

'ஒரு மனிதனை அநியாயமாகக் கொல்வது ஒட்டு மொத்த மனித சமுதாயத்தையும் கொல்வதற்கு ஒப்பாகும்' என்ற குர்ஆன் வசனத்தை தாலிபான்கள் பார்க்கவில்லையா? அதனைப் பற்றிய விளக்கம் அவர்களுக்கு கிடைக்கவில்லையா?

புனித குரானின் முதல் இரண்டு அத்தியாயத்திலிருந்து நான் கற்றுக் கொண்டது இதைத்தான், அதில் வரும் ’இக்ரா’(Iqra) என்ற சொல், இதன் பொருள் படி அல்லது வாசி. படிப்பதற்கு இறைவன் இந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறான் என்றால் அதனை தடுக்க இவர்கள் யார்? எனவே, நான் கடந்த ஆண்டு ஐ.நா.வில் கூறியது போல், ‘ஒரு ஆசிரியர், ஒரு புத்தகம், ஒரு பேனா போதும் உலகை மாற்ற’.

இன்று பாதி உலகம் விரைவு கதியில் முன்னேற்றம் அடையும் அதே தருணத்தில், பல நாடுகளில் கோடிக்கணக்கானோர் பசி, பட்டினி, அநீதீ என்ற பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இன்றும் பல அப்பாவி மக்கள் போரினால் உயிரிழந்து வருகின்றனர். சிரியா, காஸா, இராக்கில் இன்னும் குடும்பங்கள் அகதிகளாக மாறிவருகின்றன. நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் இன்னமும் பெண்கள் கல்விச்சாலைகளுக்கு செல்ல அனுமதி கிடையாது. பாகிஸ்தானிலும் ஆப்கானிலும் அப்பாவி மக்கள் பலர் தற்கொலை தாக்குதல்களில் பலியாகிவருகின்றனர்.

இன்று நான் ஒரு பெண்ணாக தெரியலாம். என்னுடைய குரல் தனித்த குரல் அல்ல. நான் பலவாகவுள்ளேன்.

ஆகவே நாம் பணியாற்றுவோம், காத்திருக்கத் தேவையில்லை.

Monday, December 08, 2014

சிந்த் மாகாணத்தில் உள்ள அழகிய பாறை மலை!



பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் பாறை மலையைத்தான் பார்க்கிறீர்கள். இதன் உச்சியில் இறைவனை வழிபடுவதற்கு ஒரு வணக்கத் தலமும் கட்டப்பட்டுள்ளது. இந்த பாறைகளுக்கு அருகிலேயே மன்னர் முகமது பின் காசிமினால் கட்டப்பட்ட ஒரு மஸ்ஜித் உள்ளது. இந்த மஸ்ஜித்தான் முதன் முதலாக மொகலாய மன்னர்களால் இந்த பகுதியில் கட்டப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இறைவன் படைப்பில்தான் எத்தனை விநோதங்கள்.

Saturday, November 22, 2014

ஏ ஆர் ரஹ்மானின் சூஃபி இசைக் கச்சேரி துபாயில்!



வரும் டிசம்பர் 18 அன்று துபாயில் ஏ ஆர் ரஹ்மானின் சூஃபி இசைக் கச்சேரி நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் பாடகர் ராஹத் ஃபதே அலி கான், சுனித் சௌஹானும் கலந்து கொள்கின்றனர். இந்திய பாகிஸ்தான் கலைஞர்கள் இணைந்து கலந்து கொள்ளும் நிகழ்ச்சி. இசையின் அடிப்படையில் சிறப்பாக இருக்கும் என்று நம்பலாம். ஆனால் இந்த இசையின் மூலமெல்லாம் இறைவனை அடைய முடியாது. தவறான நம்பிக்கையில் ஏ ஆர் ரஹ்மானும், ஃபதே அலி கானும் இருக்கிறார்கள். இறைவனும், நபிகளும் காட்டித் தராத எந்த வழி முறையும் நம்மை இறைவனுக்கருகில் கொண்டு செல்லாது. ஏ ஆர் ரஹ்மானின் முந்தய இசைக் கச்சேரிகளில் பெண்களை அரை குறை உடைகளை வலிந்து திணித்து ஆட விடுவதைப் பார்த்தோம்.. இசைக்கும் ஆடை குறைப்புக்கு என்ன சம்பந்தமோ தெரியவில்லை. எனவே இஸ்லாம் இசைக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறதோ அதன் அளவை மீறாது இருப்போமாக! ஏ ஆர் ரஹ்மானும் தர்ஹாக்கள், இசை போன்ற போலிகளை விடுத்து உண்மையான ஆன்மீகத்தின் பக்கம் தனது கவனத்தைத் திருப்புவாராக!

195, 295, 395, 495, 750, 1000 திர்ஹம்கள் என்று டிக்கெட்டுகள் நவம்பர் 20லிருந்து விநியோகிக்கப்படுமாம். கஷ்டப்பட்டு உழைத்த காசை டிக்கெட் எடுத்து வீணாக்காமல் ஊருக்கு அனுப்பி விடுங்கள். ஆர்வமுள்ளவர்கள் ஒரு வாரம் கழித்து யுட்யூபில் இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொள்ளலாம். :-)

ராஹத் ஃபதே அலி கானின் எனக்கு பிடித்த ஒரு பாடல்.

Tuesday, September 02, 2014

பாகிஸ்தானிகள் தமிழில் சொற்பொழிவுகளை கேட்கலாமோ!



இலங்கையில் கிரிக்கெட் விளையாட பாகிஸ்தானிய அணிகள் வந்தபோது வெள்ளிக் கிழமை தொழுகை நேரமாகி விட்டது. உடனே பாகிஸ்தானிய அணிகள் அங்கிருந்த ஒரு ஜூம்ஆ பள்ளிக்கு தொழுகைக்காக சென்றனர். அந்த பள்ளியும் தமிழ் முஸ்லிம்களின் பள்ளி. மார்க்க சொற்பொழிவும் தமிழிலேயே சொல்லப்படும் பள்ளி.

இங்கு தொழுகைக்கு வந்த பாகிஸ்தானிகள் உர்து மொழியையும், பஞ்சாப் மற்றும் புஷ்து மொழிகளை பேசக் கூடியவர்கள். நமது தமிழ் மொழிக்கு சற்றும் சம்பந்தமில்லாதவர்கள்: நமது கலாசாரத்துக்கும் எந்த தொடர்பும் இல்லாதவர்கள். இப்படி பல மொழி பல கலாசாரம் கொண்ட அந்த மக்களை இந்த பள்ளியின் பக்கம் ஈர்தது இஸ்லாம். மொழி புரியாவிட்டாலும் தொழுகை, மற்றும் அந்த தொழுகையில் ஓதப்படும் குர்ஆன் வசனங்களும் அரபியிலேயே இருப்பதால் இவர்களுக்கு எந்த சிரமத்தையும் இங்கு எதிர் கொள்ள வாய்ப்பில்லை. எனவே தான் இஸ்லாம் தொழுகையில் மட்டும் உலகம் முழுவதற்கும் ஒற்றுமைக்காக அரபு மொழியை வைத்தது. அதே பள்ளியில் அந்த குர்ஆன் வசனங்களுக்கான மொழி பெயர்ப்புகளை பள்ளியின் உள்ளேயே தாய் மொழியான தமிழில் பிரசிங்கிக்கப்படுகிறது. குர்ஆன் அந்த மனிதனிடம் என்ன பேசுகிறது என்பதை அந்த மனிதன் அறிய வேண்டுமல்லவா? எனவேதான் தமிழில் பிரசிங்கிக்கப்படுகிறது. அதே போல் தொழுகைக்கான அழைப்பொலியும் அரபு இல்லாமல் தமிழில் இருந்திருந்தால் அந்த பாகிஸ்தானிகளும் 'ஏதோ பஜனை பாடுகிறார்கள்' என்று நினைத்திருக்கக் கூடும்.

தேவ மொழி அரபி என்றிருந்தால் பள்ளியின் உள்ளே தமிழ் நுழைந்திருக்க முடியாது. அந்த பாகிஸ்தானிகளும் தமிழில் தானே சொல்லப்படுகிறது நாம் ஏன் கேட்க வேண்டும் என்று வெளியில் காத்திருக்கவில்லை. சொல்லப்படுவது நம் அனைவரையும் படைத்த இறைவனின் வார்த்தை. நமக்கு புரியாவிட்டாலும் அதற்கு மரியாதை கொடுத்து நாம் அமர்ந்து செவி தாழ்த்தி கேட்போம் என்று அவர்களை உட்கார வைத்தது இஸ்லாம். இஸ்லாத்தைப் பொருத்த வரை உலக மொழிகள் அனைத்தையும் ஒரே தரத்தில் வைத்து பார்க்க வேண்டும் என்று சொல்கிறது. தாய் மொழிப் பற்று ஒருவனுக்கு இருக்கலாம். ஆனால் அந்த மொழிப் பற்று வெறியாக மாறிவிடக் கூடாது என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. இதை நாம் சரியாக உள் வாங்கிக் கொண்டால் மொழியால் இனத்தால் நடக்கும் பல மோதல்களை தடுத்து விட முடியும்.

ஒரு முறை புசைலா என்ற சஹாபி பெண்மணி நபி அவர்களிடம் வந்து "இறைத்தூதரே நான் என் சமூகத்தை நேசிப்பது இன வெறியா" என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள் "தன் சமூகத்தை ஒருவன் நேசிப்பது இன வெறி அல்ல. மாறாக தன் சமூகத்தை சார்ந்தவன் வரம்பு மீறி அநீதியை செய்யும்போது அவன் செய்வது தவறு என்று தெரிந்தும் அவன் தன் சமூகத்தைச் சார்ந்தவன் என்பதற்காக அவனுக்கு உதவினால் அதுவே இனவெறி" என்றார்கள்.

- நூல்: அஹ்மத்