Followers

Sunday, April 14, 2013

யாதும் ஊரே யாவரும் கேளீர்!

யாதும் ஊரே யாவரும் கேளீர்!

//Anonymous said...

"இந்தியனாகவும் இருப்பதற்கு மிகவும் மகிழ்ந்து போனேன். என்னை இந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் பிறக்க வைத்தமைக்கும் இறைவனுக்கு நன்றி சொன்னேன்." பரவாயில்லையே//

இந்த அனானி சகோதரருக்கு ஒரு முஸ்லிம் தமிழகத்தை நேசிப்பதும், தமிழ் மொழியை நேசிப்பதும், பாரத நாட்டை நேசிப்பதும் ஆச்சரியமாக தெரிகிறது. அவரைச் சொல்லிக் குற்றமில்லை. அந்த அளவு ஊடகங்கள் நமது மக்களை மூளை சலவை செய்து வைத்துள்ளன.


என்னைப் பொருத்த வரை இனம் மொழி கடந்து அனைத்து மக்களையும் நேசிக்கக் கூடியவன். அவன் ஆரியனோ, திராவிடனோ, அராபியனோ, ஐரோப்பியனோ, ஆப்ரிக்கனோ யாராக இருந்தாலும் என்னைப் பொருத்தவரை அவன் ஆதமுடைய மகன். என்னுடைய சகோதரன். அதே போல் இந்த உலகம் அதிலும் இந்த பூமிப் பந்தை உண்டாக்கியது இறைவன் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளவன். இதனால் உலக நாடுகள் அனைத்தையுமே நான் நேசிக்கிறேன். அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆசியா என்று எந்த கண்டத்து நாடுகளையும் நான் விரோதமாக பார்க்கவில்லை. ஏனெனில் அத்தனை கண்டங்களையும் படைத்து பரிபாலிப்பது என்னைப் படைத்த இறைவனே!

அதே போல் உலக மொழிகள் அனைத்தையுமே நான் ஒரே தரத்திலேயே வைத்து பார்க்கிறேன். ஏனெனில் இந்த உலக மொழிகள் அனைத்தையும் மனிதர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்காக இறைவனே மனிதனுக்கு அருளினான் என்று குர்ஆன் கூறுவதால் உலக மொழிகள் அனைத்துமே எனது சகோதர மொழிகளே! தேவ மொழிகள் என்று தனித்து பிரிக்கச் சொல்லி இஸ்லாமும் எங்கும் சொல்லவில்லை. எனவே எனக்கு மொழி வெறியும் கிடையாது.

அதே நேரம் நான் பிறந்த மண்ணான இந்திய தேசத்தையும், எனது தாய் மொழியான தமிழையும் மற்ற நாட்டையும் மொழிகளையும் விட சற்றே அதிகமாக நேசிக்கிறேன். காரணம் பிறந்த மண்ணை நேசிப்பதும், தாய் மொழியை நேசிப்பதும் நமது ரத்தத்திலேயே காலகாலமாக ஊறி விட்டதனால் இந்த நேசிப்பு வருகிறது. நான பிறந்து வளர்ந்து ஆளாகி எனக்கென்று ஒரு அடையாளத்தை தருவதனால் நான் பிறந்த மண்ணை நேசிப்பது இயல்பாகவே வந்து விடக் கூடிய ஒன்று.

அதே நேரம் இந்த நேசம், பாசம் மற்ற நாடுகளையும், மொழிகளையும், இனங்களையும் வெறுக்கும் அளவுக்கு சென்று விடக் கூடாது என்பதில் நான் மிகக் கவனமாக இருக்கிறேன். இந்த இடத்தில்தான் பலரும் தவறு செய்து விடுகின்றோம். ஒரு முஸ்லிமாக இருக்க வேண்டுமானால் முஸ்லிம் அல்லாதவர்களை ஒதுக்கி வாழ வேண்டும்: அல்லது ஒரு இந்துவாக வாழ வேண்டுமானால் இந்து மதத்தின் மேல் உள்ள நம்பிக்கை இல்லாதவர்களோடு அந்நியனாக பழக வேண்டும் என்று ஒரு மாயை தவறாக உருவாக்கப்பட்டுள்ளது. இது மற்ற நாடுகளுக்கு எப்படியோ.....பல மத இனங்கள் இணைந்து வாழும் நமது பாரத தேசத்துக்கு இந்த கொள்கையானது மிக ஆபத்தானது.

இஸ்லாம் இந்தியாவுக்கு சொந்தமான மதமல்ல...இந்து மதமே இந்தியாவுக்கு சொந்தமானது என்ற கருத்து பரவலாக விதைக்கப்படுகிறது. சொல்லப் போனால் நமது இந்திய நாட்டுக்கென்று குறிப்பிட்டு சொல்லக் கூடிய எந்த மதமோ மார்க்கமோ இருந்திருக்க வில்லை. வரலாறு பதியப்பட்ட காலம் தொட்டு கடந்த 2000, 3000 வருடங்களாக நமது நாட்டின் வரலாறுகளை தோண்டிப் பார்த்தோமானால் எங்குமே அமைதி நிலவியதாக சரித்திரங்களை பார்க்க முடியவில்லை. யாருக்கெல்லாம் படை பலமும், ஆள் பலமும் இருந்ததோ அவர்கள் அனைவரும் அந்தந்த காலங்களில் நமது நாட்டை ஆண்டிருக்கின்றனர். எனவே ஒரு குழுவோ, ஒரு இனமோ, ஒரு மதமோ அல்லது ஒரு மார்க்கமோ நமது பாரத நாட்டுக்கு உரிமை கொண்டாட முடியாது.

நமது நாட்டில் பல மார்க்கங்களாக இருந்த பல சாதிகளை ஒன்றாக்கி இன்று இந்து மதம் என்ற பொது மதத்தை காட்டுகின்றனர் சில இந்துத்வாவாதிகள். 'நாங்கள் பெரும்பான்மையாக இருப்பதால் இதை இந்து ராஷ்டிரமாக அறிவிப்போம்' என்று அறிக்கைகளும் விடுகின்றனர். இந்த இந்து மதத்துக்கு பூரண உரிமை கொண்டாடுபவர்கள்..நம் தேசத்திலே இரண்டு அல்லது மூன்று சதவீதமே இருக்கும் பார்ப்பணர்கள். இவர்களில் தீவிர எண்ணம் கொண்ட அத்வானி, மோடி, மோகன் பகவத், போன்ற பலர் இஸ்லாம் இந்த மண்ணுக்கு அந்நியமானது. எனவே இந்த மண்ணின் சொந்த தயாரிப்பான இந்து மதத்தையே நாம் பின்பற்ற வேண்டும் என்று தினமும் எங்காவது ஒரு இடத்தில் சொல்லி வருகின்றனர். இந்து மதம் இந்தியாவுக்கு சொந்தமானது என்பது எந்த அளவு ஒரு இட்டுக்கட்டப்பட்ட வாதம் என்பதும், அத்வானி போன்ற ஆரியர்களின் பூர்வீகம் எந்த நாடு அவர்கள் எங்கிருந்து வந்தனர் என்பதன் வரலாற்று ஆய்வுகளை கீழே தருகிறேன். படித்து தெளிவு பெறுவோம்.

-----------------------------------------------------------------


மாஸ்கோ: ரஷ்யாவில் பனி படர்ந்த தெற்கு சைபீரிய பகுதியில் 4,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆரிய நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கஜாகிஸ்தான் எல்லையை ஒட்டிய இந்தப் பகுதியில் இந்த நகரம் ஆரிய இனத்தினரால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. ஐரோப்பாவில் மேற்கத்திய நாகரீகப் பரவலின் ஆரம்ப காலத்தில் இந்த நகரம் உருவாகியிருக்கலாம் என்று தொல்லியல் அராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். எகிப்தில் பிரமிடுகள் கட்டப்பட்ட காலத்துக்கு சற்று பிந்தைய காலகட்டத்தில் இந்த நகரம் உருவாகியிருக்கலாம். இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக தொல்லியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் பெத்தனி ஹூக்ஸ் மற்றும் அவரது குழுவினர் தான் இந்த நகரை கண்டுபிடித்துள்ளனர்.



பிபிசி தொலைக்காட்சியில் 'Tracking The Aryans' என்ற தொடரை வழங்கி வரும் பெத்தனி இது குறித்துக் கூறுகையில், இந்த நாகரீகம் கிரேக்க நாகரீகத்துக்கு போட்டியானதாக இருந்திருக்கலாம், இந்த நகரில் மட்டும் சுமார் 2,000 பேர் வரை வசித்திருக்கலாம் என்றார். இந்தப் பகுதியில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆரியர்கள் குடியேற்றம் இருந்தது 20 ஆண்டுகளுக்கு முன்பு தான் தெரியவந்தது. சோவியத் யூனியன் உடைந்த பிறகு இந்தப் பகுதியில் தொல்லியல் ஆய்வுகளுக்கு அனுமதி கிடைத்தவுடன் பெத்தனியும் அவரது குழுவினரும் இங்கு ஆராய்ச்சிகளில் இறங்கினர். அப்போது கிடைத்த சில தடயங்களின்படி இங்கு ஆரிய நகரம் இருந்திருக்க வேண்டும் என்று தெரியவந்தது. இதையடுத்து கடந்த பல ஆண்டுகளுக்கு முன் இந்த பனிப் பகுதியில் தொல்லியல் ஆராய்ச்சியை அவரது குழு மேற்கொண்டு வருகிறது. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த நகரில் கிடைத்த பொருட்களில் மேல் நோக்கு வளைவான அமைப்பு கூடிய 20 வீடுகள், மேக்-அப் சாதனங்கள், பாண்டங்கள், ஸ்வஸ்திக் புதைக்கப்பட்ட குதிரைகள், ரதத்தின் பாகங்கள், சின்னங்கள் (Swastika symbol) ஆகியவை அடங்கும்.

ஆரிய நாகரீகத்தின் அடையாளமான சுவஸ்திக்கை தான் 1930களில் ஹிட்லர் தனது நாஜி அமைப்பின் சின்னமாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே சிறந்த இனம் இது தான் என்று கூறிக் கொண்டு பிற இனத்தினரை அழிக்கும் வேலையை, யூதர்களை அழிப்பதில் இருந்து தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல பல ஐரோப்பிய மொழிகளின் மூலமாக ஆரிய மொழி் இருந்திருக்கலாம் என்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நகர கண்டுபிடிப்பு குறித்து பெத்தனி கூறுகையில், பண்டைய பல இந்திய வேதங்களிலும் குதிரைகளைப் பலி கொடுப்பது குறித்தும், இறந்த தலைவனின் உடலுடன் அவனது குதிரையும் கொன்று புதைக்கப்பட்ட விவரங்களும் உள்ளன. இங்கு கிடைத்துள்ள ஆதாரங்களுக்கும் அந்த வேதங்களுக்கும் அதிக ஒற்றுமை உள்ளது என்றார். இவர் லண்டனின் கிங்க்ஸ் கல்லூரியில் வரலாற்றுத்துறை 'விசிட்டிங்' பேராசிரியையாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://timesofindia.indiatimes.com/world/europe/4000-year-old-Aryan-city-discovered-in-Russia/articleshow/6683681.cms?intenttarget=no

http://www.thehindu.com/news/international/4000yearold-aryan-city-discovered-in-russia/article812961.ece

http://www.dailymail.co.uk/sciencetech/article-1317362/Europe-begins-Cities-built-swastika-painting-Aryans-remote-Russian-plains.html

http://tamil.oneindia.in/art-culture/essays/2010/4-000-year-old-aryan-city-discovere-russia.html

29 comments:

Anonymous said...

குறிப்பிட்ட அந்த பின்னூட்டம் எழுதியதற்கு உண்மையிலேயே வருந்துகிறேன். மிகவும் தரம் தாழ்ந்து போய்விட்டேன். நண்பர் அவர்கள் தயவுசெய்து என்னை மன்னிக்கவேண்டுகிறேன். அந்த பின்னூட்டத்தையும் நீக்கிவிட வேண்டுகிறேன்.

suvanappiriyan said...

சகோ அனானி!

//குறிப்பிட்ட அந்த பின்னூட்டம் எழுதியதற்கு உண்மையிலேயே வருந்துகிறேன். மிகவும் தரம் தாழ்ந்து போய்விட்டேன். நண்பர் அவர்கள் தயவுசெய்து என்னை மன்னிக்கவேண்டுகிறேன். அந்த பின்னூட்டத்தையும் நீக்கிவிட வேண்டுகிறேன்.//

உண்மையை உணர்ந்து கொண்டதற்கு நன்றி! உங்களைப் போன்று பலரும் முஸ்லிம்களைப் பற்றி தவறான எண்ணத்திலேயே இருக்கின்றனர். அவர்கள் விளங்கிக் கொள்ளவாவது அந்த பின்னூட்டம் அப்படியே இருக்கட்டும்.

உங்களைப் பொன்ற நடுநிலைவாதிகள் இந்து மதத்தில் பெரும்பான்மையாக இருக்கும் வரை இந்துத்வாவாதிகளின் பொய் பிரசாரம் இந்த மண்ணில் எடுபடாது.

வாழ்த்துக்கள்.

suvanappiriyan said...

டார்ஜிலிங், ஏப். 14-

மேற்கு வங்காளம் மாநிலம், டார்ஜிலிங் பகுதியில் உள்ள கலிம்போங் நகரை சேர்ந்த இளம்பெண், உடல் நலமில்லாத தனது அக்காவிற்கு மருந்து வாங்குவதற்காக கடந்த புதன்கிழமை மாலை நடந்து சென்றுக்கொண்டிருந்தார்.

அவருக்கு அருகில் வேகமாக வந்து நின்ற காரில் இருந்து இறங்கிய டிரைவர், அந்த பெண்ணை பலவந்தமாக காரில் திணித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் பறந்தான். காரின் உள்ளே 3 புத்த துறவிகள் அமர்ந்திருந்தனர். அந்த பெண்ணை வற்புறுத்தி மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை வாயில் ஊற்றி காரினுள் வைத்தே 4 பேரும் மாறி, மாறி கற்பழித்து விட்டு சாலையோரம் உருட்டிவிட்டு சென்றுவிட்டனர்.

அரை மயக்க நிலையில், சாலையோரம் கிடந்த அந்த இளம்பெண்ணின் பரிதாப நிலையை கண்ட வழிப்போக்கர்களில் சிலர் அவரை கொண்டுச் சென்று வீட்டில் ஒப்படைத்தனர்.

நடந்த சம்பவத்தை அறிந்த பெற்றோர், போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார், திகில் விலகாத நிலையில் இருந்த அந்த பெண்ணை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் கற்பழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, காரின் டிரைவர் கரண் ரோக்கா, புத்த துறவிகள் சம்டேன் ஸ்டாண்டப் (21), புர்பா டோர்ஜி (20) டாவா டுக்பா (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

புத்த துறவிகள் 3 பேரும் கடந்த மாதம் பூட்டானில் இருந்து வந்து கலிம்போங்கில் உள்ள புத்த மடத்தில் தங்கியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

http://iqranett.com/ta/tamil-news/item/78-miro-raped-by-busddist

ஒரு மனிதனுக்கு திருமணம் எவ்வளவு அத்தியாவசியம் என்பதை உணர்த்தும நிகழ்வு இது.

Anonymous said...

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பதே சரியானது. யாவரும் கேளீர் என்பதல்ல.

கேளிர் என்பதன் பொருள் உறவினர் என்பதாகும்.

- பாஹிம்

Unknown said...

யாதும் ஊரே யாவரும் கேளிர் தான். ஆனா முட்டாள் முஸ்லீம்கள் தலையெடுக்கும் வரைக்கும்.

அப்புறம் ஊரே நாசமாயிடும்

suvanappiriyan said...

//அப்புறம் ஊரே நாசமாயிடும்//

முஸ்லிம்கள் அதிகாரத்துக்கு வந்து விட்டால் உங்களைப் போன்ற இந்துத்வா வாதிகளால் கோபத்தில் ஊரே நாசப்பட்டு விடும் என்று சொல்கிறீர்களா! உண்மையை ஒத்துக் கொண்டதற்கு நன்றி!

அடுத்து ஒருவன் முஸ்லிமாகவும் இருந்து கொண்டு முட்டாளாகவும் இருக்க வாய்ப்பில்லை. அந்த அளவு இஸ்லாம் அறிவியலோடு பொருந்தி எல்லா நாட்டுக்கும் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடியதாகவே உள்ளது. உங்கள் பார்வையில் எவரேனும் முட்டாள்களாக தெரிந்தால் அவர்களிடத்தில் இஸ்லாமிய வாழ்வு இருக்காது. இதனை நன்றாக கவனித்துப் பாருங்கள். அவர்கள் பெயரளவில் முஸ்லிம்களே!

suvanappiriyan said...

சகோ பாஹிம்!

//கேளிர் என்பதன் பொருள் உறவினர் என்பதாகும்.//

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி!

Unknown said...

//அவர்கள் பெயரளவில் முஸ்லிம்களே!//

அப்படின்னா நரேந்திர மோடி கூட பெயரளவில் இந்துவே. இதை ஏன் ஒப்புக்க மாடேங்குறீங்க

Anonymous said...

தலையில் அடித்த ஆசிரியர்... மனநிலை பாதித்த மாணவன்!
எங்கே செல்லும் இந்த பாதை?

மாணவனின் திறன் அறிந்து மெச்சி மேலும் நல்லறிவு ஊட்டுவது ஆசிரியருக்கு அழகு. இதோ இங்கே ஓர் ஆசிரியரின் வெறியாட்டத்தால் மாணவனின் நிலை என்ன ஆனது, அவனது குடும்பம் என்ன கதியில் இருக்கிறது பாருங்கள்...

சென்னை அயனாவரம் அரசு மனநல மருத்துவமனை வார்டு ஒன்றில் எதையோ வெறித்துப் பார்த்தபடி படுத்திருந்தான் 16 வயது சிறுவன் அப்பாஸ் அலி. அவனுக்கு பக்கத்திலேயே அவனது அப்பா இஸ்மாயில்.

மகன் பேசும் நிலையில் இல்லை. அப்பாதான் பேசினார். ''திண்டி​வனம் சர்க்கார் தோப்பு எங்க ஊரு. மொத்தம் மூணு குழந்தைங்க. மூணு பேருமே திண்டிவனம் தேசிய மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறாங்க. இவன் மூத்தவன். அந்த ஸ்கூல்ல 12-வது படிச்சிட்டு இருந்தான். நல்லாப் படிப்பான். ஸ்கூல்ல 2-வது ரேங்க் எடுக்கிற பையன். எல்லா வாத்தியார்கிட்டயும் இவனுக்கு நல்ல பேருதான். ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஸ்கூல்ல செய்முறைத் தேர்வு நடந்த நேரத்தில், பக்கத்துல இருந்த பையன் என் மகன்கிட்ட பேசியிருக்கான். இதனால, கோபமான அந்த ஸ்கூல் வாத்தியார் வெங்கட்ராமன், என் பையனை நெத்தியிலயும், பின் மண்டையிலயும் ஓங்கி அடிச்​சிருக்கார். சோகமா வீட்டுக்கு வந்த அவன் ராத்திரி முழுக்கத் தூங்கலை. சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிட்டு இருந்தான். கோபமாக் கத்த ஆரம்பிச்சான். அவன் செய்கையே வழக்கத்துக்கு மாறா இருந்தது. மறுநாள், மிலாடி நபி. பள்ளிவாசலுக்கு தொழுகைக்குப் போன இடத்துலயும் முறைதவறி நடந்துக்கிட்டான். 'உன் பையனுக்கு என்னாச்சுப்பா... இப்படி நடந்துக்க மாட்டானே?’னு அங்க வந்தவங்களும் என்கிட்ட கேட்டாங்க. அப்போதான் வாத்தியார் அடிச்சதுல நம்ம பையனுக்கு ஏதோ ஆயிடுச்சுனு புரிஞ்சுக்கிட்டேன். உடனே, டாக்டரைப் பார்த்தேன். எந்தப் பலனும் இல்லை. அந்த ஸ்கூலுக்குப் போய், 'அடிச்ச அந்த வாத்தியாரை அன்பா என் பையன்கிட்ட பேசச் சொல்லுங்க... அப்படியாவது என் பையன் குணமாகிறானானு பார்க்கலாம்’னு கெஞ்சினேன். பள்ளி நிர்வாகம் இந்த விவகாரத்தை மூடிமறைக்கிறதுலதான் குறியா இருந்தது. யாரும் கண்டுக்கலை. அதனால, ப்ளஸ் டூ பொதுத் தேர்வையே என் பையனால எழுத முடியலை. பேராசிரியர் கல்யாணி அய்யா மூலமா போலீஸ்ல புகார் கொடுத்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. கோர்ட்டுக்குப் போனேன். என் பையன் மனநிலை மாறக் காரணம் என்னன்னு கூறும்படி திண்டிவனம் கோர்ட் ஆர்டர் போட்டது. இப்போ, இந்த ஹாஸ்பிட்டல்ல சேர்த்து இருக்கோம். இருபது நாளா இங்கதான் இருக்கோம். சைக்கிள்ல டீ வியாபாரம் செஞ்சு வாழ்க்கையை ஓட்டுறவன் நான். ரெண்டு மாசமா வேலைக்குப் போகலை. குடும்பத்தோட சென்னையில தங்கிச் சாப்பிடுற அளவுக்கு வசதியும் இல்லை. ரொம்பக் கஷ்டத்துல இருக்கேன். பையனோட ஒரு வருஷப் படிப்பும், வாழ்க்கையும் வீணாப்போச்சு. என் பையனை நல்லபடியா என்கிட்ட குணமாக்கிக் கொடுத்துட்டாங்கன்னா போதும்'' என்று தழுதழுத்தவர், ''எம் புள்ளையோட இந்த நிலைக்குக் காரணமான பள்ளி நிர்வாகம் மீதும், அந்த வாத்தியார் மேலயும் கண்டிப்பான நடவடிக்கை எடுக்கணும்'' என்று வேண்டுகோள் வைத்தார்.

Anonymous said...

.....continue

நாம் மருத்துவமனையில் இருந்த நேரத்தில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தமிழகத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி அங்கே வந்து விசா​ரணை நடத்தினார். ''பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று உறுதியளித்தார்.

இந்த விவகாரத்துக்காகப் போராடும் தோழமை அமைப்பின் இயக்குநர் தேவநேயன், ''தமிழக வகுப்பறைகளில் தண்டனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதையும் மீறி இந்த மாணவனை அடித்தது மாபெரும் குற்றச்செயல். கல்வித் துறை அதிகாரிகள் என்ன செய்கின்றனர் என்று தெரியவில்லை. இந்த மாணவனைக் குணப்படுத்தி இறுதி வரை படிக்கவைப்பதுடன், அந்தக் குடும்பத்தின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பது அரசின் கடமை'' என்றார் தீர்க்கமாக.

சம்பந்தப்பட்ட தேசியப் பள்ளித் தலைமை ஆசிரியர் குமாரதேவனிடம் பேசினோம். ''மாணவன் அப்பாஸ் அலி அருகில் உள்ள மாணவனுக்கு விடை சொல்லிக் கொடுத்திருக்​கிறான். இதனால் ஆசிரியர் வெங்கட்ராமன், அவன் முதுகில் தட்டிக் கண்டித்துள்ளார். அவன் மனநிலை பாதிப்படை​யும் அளவுக்கு எதுவும் நடக்கவில்லை. சம்பந்தப்பட்ட ஆசிரியரைக் கடந்த மாதம் 16-ம் தேதியே இடைநீக்கம் செய்து​விட்டோம். மாணவனிடம் ஆசிரியரை மன்னிப்பு கேட்கவும் செய்துவிட்டோம்'' என்றார்.

மாணவனுக்கு சிகிச்சையளிக்கும் மருத்து​வர்களோ, ''ஆசிரியர் அடித்தபோது, மாணவன் பயங்கர அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்​கிறான். அந்தப் பயத்தில் இருந்து அவன் இன்னும் மீளவில்லை. தொடர்ந்து சிகிச்சை கொடுத்தால், அவனைப் பழைய நிலைக்குக் கொண்டுவரலாம்'' என்றனர்.

மாணவனிடம் ஆசிரியர் மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதுமா? அந்த ஆசிரியர் இடை நீக்கம் செய்யப்படுவதால்தான், மாணவனின் மனநிலை சரியாகிவிடுமா? ஓர் ஆசிரியரின் துடுக்குத்தனத் தின் காரணமாக ஒரு மாணவனின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்டதே?

suvanappiriyan said...

//அப்படின்னா நரேந்திர மோடி கூட பெயரளவில் இந்துவே. இதை ஏன் ஒப்புக்க மாடேங்குறீங்க//

உங்க ஆட்கள் நரேந்திர மோடியை அவ்வாறு சொல்லவில்லையே. இந்து மதத்தை காக்க வந்த ரட்சகன் என்றல்லவா பொய்யான பிரசாரம் செய்யப்படுகின்றனது. கிருபானந்த வாரியார், குன்றக்குடி அடிகளார் போன்ற சிறந்த இந்து மத ஆன்மீகாதிகளை மதம் கடந்து அனைவரும் நேசிக்கிறோமே....

Unknown said...

//குறிப்பிட்ட அந்த பின்னூட்டம் எழுதியதற்கு உண்மையிலேயே வருந்துகிறேன். மிகவும் தரம் தாழ்ந்து போய்விட்டேன். நண்பர் அவர்கள் தயவுசெய்து என்னை மன்னிக்கவேண்டுகிறேன். அந்த பின்னூட்டத்தையும் நீக்கிவிட வேண்டுகிறேன்//

Anonymous.. எதற்காக மன்னிப்பு கேட்கிறீர்கள், உண்மையை தானே சொன்னீர்கள், சுவனப்ரியன் போன்ற வேடதாரிகள்
இல்லை என்று நீட்டி முழக்கி பதிவு எழுதி விட்டால் உண்மை இல்லை என்று ஆகிவிடுமா, இந்தியாவில் 90% முஸ்லிம்கள்
'இந்த நாடு இன்னும் சவுதியை போல ஆகவில்லையே' என்ற மன வருத்தத்திலேயே உள்ளனர். சவுதியை போல் இந்தியாவும் மாறி
இங்கே ஷரியா என்னும் சட்டம் எப்போது வரும் என்ற எதிர் பார்ப்பிலேயே உள்ளனர். இந்தியா என்பது
அவர்களை பொறுத்தவரை எதோ அந்நிய தேசம் தான், இந்த உண்மையை தெரிந்து கொள்ள அதிக சிரமப்பட
தேவை இல்லை, உங்கள் ஊர்களில் முஸ்லிம்கள் இருப்பார்கள், உங்களுடன் படித்தவர்கள் பழகியவர்கள் இருப்பார்கள்
அவர்களுடன் இன்னும் நெருக்கமாக பழகி பார்த்தால் தெரிந்து கொள்ளலாம், பெரும்பாலான முஸ்லிம்களின் எண்ணம்
எதோ இந்த நாட்டில் அவர்களை வலுக்கட்டாயமாக பிடித்து வைத்திருப்பது போலவும், அவர்களை வாழ விடாமல்
பல விதங்களில் கொடுமை படுத்தப்படுகிறார்கள் என்பது போலவுமே இருக்கும்.பிற மதத்தவர்களுடன் பழகும் முஸ்லிம்களில்
90% பேர் அவர்கள் மத கூற்றுப்படி பிற மதத்தவன் காபிர் என்ற எண்ணத்துடனே பழகுகின்றனர். இந்த கூமுட்டை
கூட்டத்துடன் அதிகமாக பழகியவன் என்ற காரணத்தினாலேயே இதை கூறுகிறேன். இந்த கூட்டத்தின் மேல் எனக்கு
வெறுப்பு ஏற்பட காரணமும் அதுவே, அதிலும் சுவனப்ரியன் போன்றவர்கள் ரொம்ப உத்தமர்கள் மாதிரி பிற
மதத்தவரை மதிப்பது போலவும் மதங்களை மதிப்பது போலவும் தங்களை உத்தமர்களாக காட்டி கொள்வார்கள்,
மற்றொரு பக்கம், எங்கள் மார்க்கமே உத்தமம் மற்றதெல்லாம் பொய் என்று தங்கள் கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பார்கள்
வெளிப்படையான தீவிரவாதிகளை விட இவரை போன்றவர்கள் ஆபத்தானவர்கள்.

Unknown said...

//ஒரு முஸ்லிமாக இருக்க வேண்டுமானால் முஸ்லிம் அல்லாதவர்களை ஒதுக்கி வாழ வேண்டும்: அல்லது ஒரு இந்துவாக வாழ வேண்டுமானால் இந்து மதத்தின் மேல் உள்ள நம்பிக்கை இல்லாதவர்களோடு அந்நியனாக பழக வேண்டும் //

சுவனப்ரியரே,உங்கள் துலுக்க கூட்ட தலைவர்கள் வேண்டுமென்றால் முஸ்லிம் முஸ்லிமோடு மட்டுமே
பழகவேண்டும் என்று சொல்லி கொடுத்து இருக்கலாம், எங்களுக்கு அப்படி சொல்லி கொடுக்கப்படவும் இல்லை அப்படி செய்ய நாங்கள் அறிவிலிகளும் இல்லை. உமது எல்லைக்குள் மட்டுமே கூறுங்கள், அடுத்தவர்களை நீர் கைக்காட்டி எல்லாரும் அப்படி தான் என்று கூற வேண்டாம், யூத கிறிஸ்தவர்களை நண்பர்களாக்கி கொள்ளவேண்டாம், என்பது போன்ற இறை கட்டளைகள் எதுவும் எங்களுக்கு இல்லை. பிற மதத்தவர்களோடு இணக்கமாக நாங்கள் இருந்த காரணத்தால் தான் உம்மை போன்ற அரபு அடிமைகள் இந்த நாட்டை அரபு துலுக்கனுக்கு அடிமையாக்க வேலைகளை செய்து கொண்டிருக்கிறீர்கள்.

//.பல மத இனங்கள் இணைந்து வாழும் நமது பாரத தேசத்துக்கு இந்த கொள்கையானது மிக ஆபத்தானது. //

ரொம்ப ஓவரா சீன் போடாதீர்கள் சுவனம், உங்கள் கூட்டம் எப்படி என்பது இப்போது கொஞ்சம் கொஞ்சமாக எல்லாருக்கும் புரிந்து வருகிறது.

//சொல்லப் போனால் நமது இந்திய நாட்டுக்கென்று குறிப்பிட்டு சொல்லக் கூடிய எந்த மதமோ மார்க்கமோ இருந்திருக்க வில்லை.//

இதனால் என்ன சொல்ல வருகிறீர், இந்தியாவை சவுதிக்கு விற்று விடுவோமா? 1400 ஆண்டுகளுக்கு முன்பு முகமது வந்து கடவுளின் வார்த்தைகள் என்று ஒரு புத்தகத்தை அச்சடித்து முடிக்கும் வரை சவுதியில் கூட இஸ்லாம் என்ற ஓன்று இல்லையே. எதற்கும் ஒரு தொடக்கம் உண்டு அல்லவா.

// இஸ்லாம் இந்த மண்ணுக்கு அந்நியமானது. எனவே இந்த மண்ணின் சொந்த தயாரிப்பான இந்து மதத்தையே நாம் பின்பற்ற வேண்டும் என்று தினமும் எங்காவது ஒரு இடத்தில் சொல்லி வருகின்றனர். //

உண்மை தானே, இந்த நாட்டை காபிர் நாடு என்றும் இந்துக்களை காபிர் என்றும் துவேசத்தை போதிக்கும் உமது மதம் எப்படி இந்த மண்ணுக்கு சொந்தமானதாக இருக்க முடியும், முகமது என்ன இந்த நாட்டிலா பிறந்தார், இந்தியாவிலா இஸ்லாம் தோன்றியது, மூளையற்ற உமது கூட்டம் அரபியனுக்கு அடிமையாக இருக்கிறது என்பதற்காக மற்றவர்களும் அப்படி ஆக வேண்டும் என்று ஏன் துடிக்கிறீர்கள். அப்படி என்ன உலகத்தில் இஸ்லாம் சாதித்து கிழித்தது. இஸ்லாம் என்ற மதம் தோன்றி உலகில் நாசத்தை விளைவிக்கும் முன்னரே சகல கலைகளிலும் வித்தகர்களாக சீரோடும் சிறப்போடும் வாழ்ந்தவர்கள் எம் முன்னோர், உலகிற்கே ஆன்மீக வழிகாட்டியாக திகழ்ந்த ஒரு நாட்டில் பிறந்து விட்டு அரபியனுக்கு கால் கழுவி குடித்து கொண்டிருக்கிறீர்.

Unknown said...

//அத்வானி போன்ற ஆரியர்களின் பூர்வீகம் எந்த நாடு அவர்கள் எங்கிருந்து வந்தனர் என்பதன் வரலாற்று ஆய்வுகளை கீழே தருகிறேன். படித்து தெளிவு பெறுவோம்.//

ஆய்வுகள் என்னங்க சொல்லுது ... (உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது)- (ஆரம்ப காலத்தில் இந்த நகரம் உருவாகியிருக்கலாம் )(எகிப்தில் பிரமிடுகள் கட்டப்பட்ட காலத்துக்கு சற்று பிந்தைய காலகட்டத்தில் இந்த நகரம் உருவாகியிருக்கலாம்)( இந்த நகரில் மட்டும் சுமார் 2,000 பேர் வரை வசித்திருக்கலாம் )(இங்கு ஆரிய நகரம் இருந்திருக்க வேண்டும் என்று தெரியவந்தது)(இங்கு கிடைத்துள்ள ஆதாரங்களுக்கும் அந்த வேதங்களுக்கும் அதிக ஒற்றுமை உள்ளது)

இது தான் இந்த ஆய்வு எதுவுமே நிருபிக்கப்பட்டவை கிடையாது "வந்திருக்கலாம், போயிருக்கலாம் , படுத்திருக்கலாம், நடந்திருக்கலாம்" என்று எல்லாமே யூகங்கள் இதை வைத்து தான் சுவனர் தம்பட்டம் அடித்து கொண்டிருக்கிறார்.

//உங்களைப் பொன்ற நடுநிலைவாதிகள் இந்து மதத்தில் பெரும்பான்மையாக இருக்கும் வரை இந்துத்வாவாதிகளின் பொய் பிரசாரம் இந்த மண்ணில் எடுபடாது.//

இந்த நடுநிலை வாதிகள் தான் உமது தாவா கூட்டத்தினரின் இலக்கு, இவர்களை தான் சுலபமாக மூளை சலவை செய்து விட உமது கூட்டத்தால் முடிகிறது, உமது கூட்டத்தின் உண்மை முகத்தை இந்த நடுநிலை வாதிகள் தெரிந்து கொண்டால் நீர் அரபு நாட்டுக்கு போய்தான் தாவா செய்ய வேண்டி இருக்கும்.

//அடுத்து ஒருவன் முஸ்லிமாகவும் இருந்து கொண்டு முட்டாளாகவும் இருக்க வாய்ப்பில்லை. அந்த அளவு இஸ்லாம் அறிவியலோடு பொருந்தி எல்லா நாட்டுக்கும் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடியதாகவே உள்ளது//

அண்ணே, இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பு எல்லாம் மூளை இருந்தவன் சுயமாக சிந்தித்து கண்டுபிடித்தது
எதுவும் உங்கள் புத்தகத்த படிச்சி கண்டு பிடித்தது இல்லை, நித்தியானந்தா எழுதிய புத்தகங்களில் இருந்து கூட இன்னும் நூறு வருடங்களுக்கு பிறகு உள்ள அறிவியலுக்கு பொருத்தமான வசனங்களை காட்டலாம்,
உங்க குரான்ல சொன்னத விட மேலான அறிவியல் இந்த நாட்டின் வேத நூல்களிலும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும் உள்ளது,எல்லாமே நேரடியாக உள்ளது. அந்த வசனம் அத சொல்லுது,இந்த வசனம் இந்த அறிவியல சொல்லுது என்று கண்டுபிடிப்புகளை வைத்து வசனத்தை சம்பந்தபடுத்தி உங்கள் கூட்டம் கேவலமாக உளறுவது போன்ற அறிவியல் அல்ல அது.

//முஸ்லிம்கள் அதிகாரத்துக்கு வந்து விட்டால் உங்களைப் போன்ற இந்துத்வா வாதிகளால் கோபத்தில் ஊரே நாசப்பட்டு விடும் என்று சொல்கிறீர்களா! உண்மையை ஒத்துக் கொண்டதற்கு நன்றி!//

அட துலுக்க தீவிரவாதியே, உமது மதம் இந்த நாட்டில் பரவ வேண்டும் இந்த நாட்டை துலுக்க நாடாக்க வேண்டும் என்று சதா சர்வகாலமும் சிந்தித்து கொண்டிருக்கும் நீர் ஒருவன் இந்து மதத்தை பின்பற்றினால் அவனை இந்துத்துவ வெறியன் என்கிறீரா? இந்து என்பவன் உமது கூட்டத்திற்கு வால் பிடித்து கொண்டிருந்தால் அவன் நல்லவன் அப்படிதானே, நீர் மட்டும் எனது
மதம் எனது மார்க்கம் என்று வெறி பிடித்து இருப்பீர்,மற்றவர்களும் அவர்கள் மதத்தில் பற்றுடன் இருந்தால் அதை தவறு என்கிறீர், அடுத்த மதத்தவரை பார்த்து வெறியன், இந்துத்துவவாதி என்று கூறும் யோக்கியதை கண்டிப்பாக உமது மும்மீன் கூட்டத்திற்கு கிடையாது, அப்படி ஒரு இந்துவை பார்த்து இந்துத்துவ வாதி என்று நீர் கூறினால் அது எமக்கு பெருமை தான், அதே நேரத்தில் எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் என்பதை நாங்கள் கூறுகிறோம் , நீரும் ஏற்று கொள்ளும்

Anonymous said...

இந்த ஜெய்சங்கர் என்பவர் தங்களிடம் விதண்டவாதமே செய்கிறார் எனவே அவருக்கெல்லாம் தாங்கள் பதில் சொல்லிக்கொண்டு இருக்கவேண்டாம் என்பது எம்மென்னம்.
ஷாஜஹான்.

suvanappiriyan said...

அனந்தன் கிருஷ்ணன்!

//இந்த நாடு இன்னும் சவுதியை போல ஆகவில்லையே' என்ற மன வருத்தத்திலேயே உள்ளனர். சவுதியை போல் இந்தியாவும் மாறி
இங்கே ஷரியா என்னும் சட்டம் எப்போது வரும் என்ற எதிர் பார்ப்பிலேயே உள்ளனர்.//

ஆட்சியை பிடிப்பதோ, அதிகாரத்தை கைப்பற்றுவதோ ஒரு முஸ்லிமின் வேலையல்ல. அப்படி செய்யச் சொல்லி குர்ஆனும் கட்டளையிடவில்லை. ஆனால் உண்மையை விளக்கி பிரசாரம் செய்யச் சொல்கிறது. அதைத்தான் செய்து வருகிறோம. நமது இந்திய அரசியல் சட்டமும் ஒரு மதத்தின் பெருமைகளை எடுத்துச் சொல்ல எந்த தடையும் விதிக்கவில்லை.

மேலும் இந்தியா சவுதியைப் போல் மாறினால் பெரும்பான்மையினர் சந்தோஷமேபடுவர். வர்ணாசிரமம் முற்றாக ஒழிக்கப்படும். குப்பனும் சுப்பனும் கோவிலின் கருவறை சென்று தனது தெய்வத்தை தரிசிக்க முடியும். இரட்டை குவளை முறை ஒழிக்கப்படும். பொதுக் குளத்தில் தலித்கள் தாராளமாக தண்ணீர் எடுக்கலாம். வேதங்களின் பெயரால் பெரும்பான்மையினரை சூத்திரர்கள் என்று கூறும கொடுமை மறையும். தலித்களும் மற்ற பிற்படுத்தப்பட்ட சாதியினரும் தங்களின் இழிவை துடைப்பர்.

இரண்ட சதவீதமே இருக்கும் பார்பனர்களுக்கு இந்த மாற்றங்கள் சற்றே கசப்பைத் தரும். அதற்காக மன மாற்றங்களை தடுத்து நிறுத்த முடியுமோ?

//ரொம்ப ஓவரா சீன் போடாதீர்கள் சுவனம், உங்கள் கூட்டம் எப்படி என்பது இப்போது கொஞ்சம் கொஞ்சமாக எல்லாருக்கும் புரிந்து வருகிறது.//

மாலேகான் குண்டு வெடிப்பு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு, மெக்கா மசூதி குண்டு வெடிப்பு, என்று வரிசையாக இந்துத்வாவாதிகள் கம்பி எண்ணிக் கொண்டிருப்பதை மறந்து விட்டீர்களோ! இன்னும் சில நாட்களில் தீர்ப்பும் வர இருக்கிறது. பிறகு ஒரு முடிவுக்கு வாரும்.

suvanappiriyan said...

//இதனால் என்ன சொல்ல வருகிறீர், இந்தியாவை சவுதிக்கு விற்று விடுவோமா? 1400 ஆண்டுகளுக்கு முன்பு முகமது வந்து கடவுளின் வார்த்தைகள் என்று ஒரு புத்தகத்தை அச்சடித்து முடிக்கும் வரை சவுதியில் கூட இஸ்லாம் என்ற ஓன்று இல்லையே. எதற்கும் ஒரு தொடக்கம் உண்டு அல்லவா. //

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற சட்டம் நம் நாட்டில் பல ஆயிரம் வருடங்ளுக்கு முன்பே இருந்துள்ளதே....இந்த கொள்கை எப்படி வந்தது என்று கொஞ்சம் சொல்லுங்களேன். இந்த ஆரிய மதமே 2000 வருடங்களுக்கு முன்பு இங்கிருந்த ஓரிறைக் கொள்கையை குழி தோண்டி புதைத்து பல தெய்வ வணக்கத்தை புகுத்தி விட்டது. இஸ்லாம் நம் நாட்டில் மறைந்த அந்த பழைய கொள்கையை மீட்டெடுக்கிறது.

//இது தான் இந்த ஆய்வு எதுவுமே நிருபிக்கப்பட்டவை கிடையாது "வந்திருக்கலாம், போயிருக்கலாம் , படுத்திருக்கலாம், நடந்திருக்கலாம்" என்று எல்லாமே யூகங்கள் இதை வைத்து தான் சுவனர் தம்பட்டம் அடித்து கொண்டிருக்கிறார்.//

இந்த தமிழ் மண்ணுக்கு சம்பந்தம் இல்லாத சமஸ்கிரதம் எங்கிருந்து வந்தது என்ற விபரத்தை தந்தால் நானும் தெரிந்து கொள்வேன்.

//அட துலுக்க தீவிரவாதியே, உமது மதம் இந்த நாட்டில் பரவ வேண்டும் இந்த நாட்டை துலுக்க நாடாக்க வேண்டும் என்று சதா சர்வகாலமும் சிந்தித்து கொண்டிருக்கும் நீர் ஒருவன் இந்து மதத்தை பின்பற்றினால் அவனை இந்துத்துவ வெறியன் என்கிறீரா? //

இந்து மதம் என்றால் என்ன? அதற்கு என்ன வரைமுறை அதை முதலில் தெரிவிக்கவும். பிறகு விவாதிக்கலாம்.

suvanappiriyan said...

//அதே நேரத்தில் எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் என்பதை நாங்கள் கூறுகிறோம் , நீரும் ஏற்று கொள்ளும்//

அது அந்த காலம். ஹேமந்த் கர்கரே உமமை போன்ற இந்துத்வாவாதிகளின் முகமூடியை மிக அழகாக தோலுரித்து காட்டினாரே! அவரையும் விட்டு வைக்கவில்லை படுபாவிகள். பொய் அதிக நாள் நீடிக்காது நண்பரே! உண்மை வெளி வந்தே தீரும். வெறுப்பை தூரமாக்கி இந்த நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முன் வாரும்.

இந்த பாரத நாட்டை சிறந்த தேசமாக ஆக்க முஸ்லிம்கள் என்றுமே கை கொடுப்பர். இஸ்லாமும் அதைத்தான் விரும்புகிறது.

suvanappiriyan said...

சகோ சாஜஹான்!

//இந்த ஜெய்சங்கர் என்பவர் தங்களிடம் விதண்டவாதமே செய்கிறார் எனவே அவருக்கெல்லாம் தாங்கள் பதில் சொல்லிக்கொண்டு இருக்கவேண்டாம் என்பது எம்மென்னம்.//

அவர் விதண்டா வாதமே செய்தாலும் அதற்கான பதிலும் நேரமும் நம்மிடம் இருக்கிறது. முடிந்த வரை பதில் கொடுப்போம். ஓராயிரம் ஜெய்சங்கர்கள் இதனால் தெளிவடையலாம் அல்லவா?

Anonymous said...

அண்மையில் ‘ஃபிகி’ (FICCI) எனும் அமைப்பின்
பெண்கள் பிரிவு நடத்திய கூட்டத்தில் மோடி கலந்துகொண்டு
குஜராத்தில் பெண்கள் அடைந்துள்ள
முன்னேற்றம் குறித்து நிறைய பேசினார்.


நம்ம ஊர் மீடியா எல்லாம் “ஆஹா....பெண்களை
இரட்சிக்க வந்த ஒரே தலைவர்”
என்பதுபோல் மோடியைத்
தூக்கிவைத்துக் கொண்டாடின.


இந்நிலையில், அகமதாபாதிலுள்ள
விமன்ஸ் ஆக்ஷன் குரூப் எனும் அமைப்பின் தலைவி
இல பதக் என்பவர் ஃபிகி பெண்மணிகளுக்கு
ஒரு திறந்த மடல் எழுதியுள்ளார்.
அதில் பல உண்மைகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
அந்தக் கடிதத்தின் முக்கியமான பகுதிகள் வருமாறு:


ஃபிகி அமைப்பைச் சேர்ந்த மதிப்புக்குரிய பெண்களே,
எங்கள் முதலமைச்சர் நரேந்திர மோடி உங்களுடைய கூட்டத்தில் பேசி
உங்களையெல்லாம் கவர்ந்துவிட்டார் என்று
ஊடகங்களின் வழி அறிந்தேன்.


நான் மட்டுமல்ல, அதையெல்லாம் படித்த, கேட்ட
குஜராத்திலுள்ள பெண்கள் எல்லாருமே
அப்படியே திடுக்கிட்டுப் போய் விட்டோம்.
குஜராத் பெண்கள் பற்றியும் அவர்களின் முன்னேற்றம் பற்றியும்
மோடி சொன்னதெல்லாம் உண்மையா?
நிச்சயமாக இல்லை.


உண்மையைச் சொல்லவேண்டுமெனில்,
குஜராத்தில் பெண்களின் எண்ணிக்கை
குறைந்துகொண்டே வருகிறது.


2001-இல் ஆயிரம் ஆண்களுக்கு 921 பெண்கள் என்று இருந்தனர்.
2011-இல் இது 918ஆகக் குறைந்துவிட்டது.


இந்தப் பத்தாண்டு காலத்தில்
ஒன்பது மாநிலங்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகமானபோது
குஜராத்தில் குறைந்துவிட்டது.


குஜராத் மாநிலத்தில் 15இலிருந்து 49 வயது வரையுள்ள பெண்களில்
55.5 சதவீதம் பேர் இரத்த சோகை நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர்.


60.8 சதவீதம் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவு கிடைப்பதில்லை.


74.4 சதவீத தலித்-பட்டியல் சாதிக் குழந்தைகளுக்கு
ஊட்ட உணவு இல்லாததால்
விதவிதமான நோய்களுக்கு ஆளாகியுள்ளனர்.


தாய்- சேய் இறப்பு விகிதமும் குஜராத்தில்
அதிகரித்து வருவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.



-இப்படி குஜராத்தில் பெண்களின் உண்மை நிலையை
வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார் இல பதக் அவர்கள்.
-சிராஜுல்ஹஸன்

faizeejamali said...

ஹிந்துத்வா வாதிகள் அனைவரும் தீவிரவாதிகள் . போலி ஹின்துக்கள் என்ரு ஒப்பு கொன்டமைக்கு நன்ரி

Unknown said...

//ஆட்சியை பிடிப்பதோ, அதிகாரத்தை கைப்பற்றுவதோ ஒரு முஸ்லிமின் வேலையல்ல. அப்படி செய்யச் சொல்லி குர்ஆனும் கட்டளையிடவில்லை//

அப்படியா! அப்படி என்றால் எங்கள் ஊருக்கு அருகில் உள்ள பள்ளிவாசலில் வெள்ளிகிழமை தோறும் சொற்பொழிவு ஆற்றும் ஒருவர் 'இந்த நாடு இஸ்லாமை ஏற்று இஸ்லாமிய நாடாக மாற வேண்டும், இங்கே ஷரியா வரவேண்டும், அதற்கு மும்மீன்கள் உழைக்க வேண்டும்" என்று முழங்குகிறாரே அவர் மன நலம் இல்லாமல் அதை செய்கிராரா?

//ஆனால் உண்மையை விளக்கி பிரசாரம் செய்யச் சொல்கிறது. அதைத்தான் செய்து வருகிறோம./

எந்த உண்மை ? முகமது ஒரு தூதரு, அவருக்கு வஹீ வந்தது, கடவுள் பேசினார் என்பதா? உங்களுக்கு தான் அது உண்மை எங்களுக்கு வெறும் குப்பை, இந்த நாட்டிலும் இது போன்று கடவுளுடன் பேசுபவர்கள் நிறயப்பேர் இருக்கிறார்கள். இந்த காலத்தில் தொழில் நுட்ப வளர்ச்சி, கடவுளுடன் பேசுகின்ற நித்தியானந்தா மாட்டிக்கொண்டார், அந்த வளர்ச்சி இல்லாத காரணத்தால் முகமது இன்னும் தூதராக இருக்கிறார்.

//நமது இந்திய அரசியல் சட்டமும் ஒரு மதத்தின் பெருமைகளை எடுத்துச் சொல்ல எந்த தடையும் விதிக்கவில்லை//

உண்மைதான், அது உமது ஊத்தை மதத்தின் பெருமை என்று ஓன்று இருந்தால் அதை பற்றி எடுத்து சொல்ல மட்டுமே, தெருவுக்கு தெரு கூட்டம் போட்டு அடுத்த மதத்தை இழிவுபடுத்தி உமது மதத்தை பெரிதாக்கி கூறும் உரிமையை உமது கூட்டத்திற்கு யார் கொடுத்தது, உமது ஜமாஅத் கூட்டத்தில் என்ன மண்ணாங்கட்டிக்கு அடுத்த மதத்தை பற்றி 'அங்கே அப்படி நடக்கிறது, இங்கே இப்படி நடக்கிறது' என்ற பேச்சு.
பிற மதங்களில் தவறு இருந்தால், தவறுகள் நடந்தால் அதை திருத்தி கொள்ள அவர்களுக்கு தெரியும், என்னவோ நீங்கள் மட்டுமே 100% ஒழுங்காக இருப்பது போலவும் மற்ற மதத்தவர் தவறு மட்டுமே செய்து கொண்டிருப்பது போலவும் மேடை போட்டு அடுத்த மதத்தை குறை கூறி மதம் மாற்றலாம் என்று இந்திய அரசியல் சட்டம் சொல்கிறதா?

//மேலும் இந்தியா சவுதியைப் போல் மாறினால் பெரும்பான்மையினர் சந்தோஷமேபடுவர். வர்ணாசிரமம் முற்றாக ஒழிக்கப்படும். குப்பனும் சுப்பனும் கோவிலின் கருவறை சென்று தனது தெய்வத்தை தரிசிக்க முடியும். இரட்டை குவளை முறை ஒழிக்கப்படும். பொதுக் குளத்தில் தலித்கள் தாராளமாக தண்ணீர் எடுக்கலாம். வேதங்களின் பெயரால் பெரும்பான்மையினரை சூத்திரர்கள் என்று கூறும கொடுமை மறையும். தலித்களும் மற்ற பிற்படுத்தப்பட்ட சாதியினரும் தங்களின் இழிவை துடைப்பர். //

அடடா தலித்துகள் மேல் என்ன பாசம், அவர்களை தானே வெகு சுலபமாக மதம் மாற்றலாம், அதனால் பாசம் இருக்கத்தான் செய்யும், சுவனரே, அரபு நாட்டில் உமது இஸ்லாம் வரும் முன்னால் அங்கே சிலை வணக்கம் செய்த மக்கள் இருந்தனர், யூதர்கள் இருந்தனர், கிறிஸ்தவர்கள் இருந்தனர் வேறு சமய நம்பிக்கை உடையவர்களும் இருந்தனர், உமது துலுக்கம் அங்கே ஆட்சியில் வந்ததும் அவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டனர் அல்லது ஒடுங்கி போய்விட்டனர். இது தான் உமது சவூதி மற்றும் பிற துலுக்க நாடுகளின் லட்சணம். நீர் என்னடாவென்றால் இங்கே குப்பனும் சுப்பனும் கோவிலின் கருவறை சென்று தனது தெய்வத்தை தரிசிக்க முடியும் என்கிறீர். உமது கூட்டத்தால் உடைக்கப்பட்ட கோவில்களின் எண்ணிக்கை தெரியுமா?
சாதி வேறுபாடும் இரட்டை குவளை முறை எல்லாம் மறைந்து கொண்டு தான் வருகிறது சுவ்னரே, கடைசிவரை அது அப்படியேவா இருக்க போகிறது, நாங்க 21ஆம் நூறாண்டிற்கு வந்து விட்டோம், எல்லாருக்குமே புத்தி இருக்கிறது, மற்றம் கொண்டு வர எங்களுக்கு தெரியும், அரபு நாட்டிக்கு அடிமையாக இருக்கும் உங்கள் கூட்டம் அதை குறித்து கவலை கொள்ள வேண்டாம்.

இவ்வளவு தலித்துகளை குறித்து கவலை படும் நீர், பிற மதத்தவரை உமது மதம் தீண்ட தகாதவர்கள் போல் நடத்துகிறதாம்? அவர்களை காபிர் என்கிறதாம், பள்ளிவாசலுக்குள் வர கூடாது என்கிறதாம்,, முதலில் அதை நீக்க முயற்சி செய்யும்,

//மாலேகான் குண்டு வெடிப்பு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு, மெக்கா மசூதி குண்டு வெடிப்பு, என்று வரிசையாக இந்துத்வாவாதிகள் கம்பி எண்ணிக் கொண்டிருப்பதை மறந்து விட்டீர்களோ! இன்னும் சில நாட்களில் தீர்ப்பும் வர இருக்கிறது. பிறகு ஒரு முடிவுக்கு வாரும்//

இந்துத்துவ வாதிகள் கத்துக்குட்டிகள் சுவனரே, உங்கள் ஆட்கள் அளவுக்கு திறமை அவர்களிடம் இல்லை. உங்களை போல மூளை சலவை செய்து ஸ்லீப்பர் செல் நடத்தும் திறமை அவர்களுக்கு இல்லை, அது தான் மாட்டி கொண்டார்கள், உங்களை போல வருமா? எந்த முஸ்லீமை பார்த்தாலும் பயத்துடனே பார்க்க வேண்டி இருக்கிறது இவன் எந்த செல்லில் இருக்கிறானோ என்று? ஒட்டுமொத்தமாக உங்கள் கும்பலுக்கு கொடுக்கபட்டிருக்கும் டார்கெட் 'இந்தியாவை இஸ்லாமிய மயம் ஆக்குவது'

Dr.Anburaj said...

அரபுகலாச்சாரத்தில்உள்ள குறைகள் குறித்து நான் எழுதிய கடிதம் என்பவாயிற்று பதில் தயாராகவில்லையோ

suvanappiriyan said...

//அரபுகலாச்சாரத்தில்உள்ள குறைகள் குறித்து நான் எழுதிய கடிதம் என்பவாயிற்று பதில் தயாராகவில்லையோ //

அரபு கலாசாரம் என்பது என்ன? இஸ்லாமிய கலாசாரம் எத்தகையது? என்பதற்கு தெளிவாக விளக்கம் தரப்பட்டுள்ளது. இங்கு சென்று பார்த்துக் கொள்ளவும்.

http://onlinepj.com/search/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/

Unknown said...

//ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற சட்டம் நம் நாட்டில் பல ஆயிரம் வருடங்ளுக்கு முன்பே இருந்துள்ளதே....இந்த கொள்கை எப்படி வந்தது என்று கொஞ்சம் சொல்லுங்களேன். //

அப்படியா! அதற்கு இஸ்லாம் என்று பெயர் இருந்ததா, முகமது என்று தூதர் எவரும் இருந்தாரா? பிற மதத்தவன் காபிர்களை காபிர், அவர்களுடன் பழக வேண்டாம், காபிர்களை கொல்லுங்கள் என்று சட்டங்கள் ஏதும் அப்போது மக்கள் பின்பற்றினார்களா. இதிலிருந்து தெரிவது, முகமது புதிதாக ஒன்றும் ஓரிறை கொள்கையை கொண்டுவரவில்லை உமது நாட்டிலேயே அது இருக்கிறது, பிறகு எதற்கு அரபு நாட்டவனையும் முகமதுவையும் பிடித்து தொங்கி கொண்டிருக்கிறீர். முகமது சொன்ன குரானில் இருப்பவை எதுவுமே புதிதாக அவர் சொன்னது இல்லை. எல்லாமே அதற்கு முன்பே சொல்லப்பட்டவை தான், எனவே அதை காப்பி அடித்த புத்தகம் என்று சொல்வதில் என்ன தவறு.

,

//இந்த தமிழ் மண்ணுக்கு சம்பந்தம் இல்லாத சமஸ்கிரதம் எங்கிருந்து வந்தது என்ற விபரத்தை தந்தால் நானும் தெரிந்து கொள்வேன்.//
இந்தியாவிற்கு சமஸ்க்ரிதம் வரும் முன் அதை யார் பேசிக்கொண்டு இருந்தார்கள், எந்த நாடுகளில் எல்லாம் சமஸ்க்ரிதம் மக்களின் பேச்சு மொழியாக இருந்தது என்ற விபரத்தை வந்திருக்கலாம், போய் இருக்கலாம் என்ற யூகங்களின் அடிப்படையில் இல்லாமல் நிருபிக்கப்பட்ட உண்மைகளை எல்லாம் தெரிந்த அதி
மேதாவியான உங்களிடம் எதிர் பார்க்கிறேன்

//இந்து மதம் என்றால் என்ன? அதற்கு என்ன வரைமுறை அதை முதலில் தெரிவிக்கவும். பிறகு விவாதிக்கலாம்.//

எதற்காக அதை உமது கூட்டத்திடம் விவாதிக்க வேண்டும், அப்படி விவாதித்து தான் தன்னை நிருபிக்க வேண்டிய அவசியம் இந்து சமயத்திற்கு இல்லை.
விவாதம் செய்து நிருபித்தால் உம்மை போல் அரபு அடிமைகள் இந்து சமயத்தை ஏற்று கொள்வீர்களா, பிறகு எதற்கு உம்மிடம் விவாதிக்க வேண்டும், மேலும் நல்ல பொருளை விவாதம் செய்தோ விளம்பரம் செய்தோ விற்க வேண்டிய அவசியம் இல்லை, சொத்தைகளுக்கும் தரம் கெட்டவைகளுக்கும் தான் விளம்பரமும் விவாதமும் தேவைப்படும், விவாதமும் விளம்பரமும் உங்கள் மத வியாபாரத்திற்கு வேண்டுமானால் தேவையாக இருக்கலாம். எங்களுக்கு தேவை இல்லை, இன்றும் கூட இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம், நாங்கள் அதை கிழித்தோம், இதை கிழித்தோம் என்று ஊர் ஊராக விளம்பரம் செய்து தான் உமது மதத்தின் பெருமையை கூற வேண்டி இருக்கிறது, சொன்னவுடன் பெருமைப்படும் அளவிற்கு உமது மதத்தில் ஒரு மண்ணும் இல்லை.


// வெறுப்பை தூரமாக்கி இந்த நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முன் வாரும். //

என்னுடைய நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் எண்ணம் எப்போதுமே எனக்கு உண்டு, அது உங்களை போன்ற அரபு அடிமைகள் சொல்லி வந்ததல்ல, எனது நாட்டில் நிலவும் தீமைகளை அகற்ற முயற்சி செய்யாமல் அடுத்த நாட்டு கொள்கைகளை இங்கே புகுத்த முயற்சி செய்பவர்களை வெளிப்படையாக சொன்னால் நான் அடியோடு வெறுக்கிறேன்
//இந்த பாரத நாட்டை சிறந்த தேசமாக ஆக்க முஸ்லிம்கள் என்றுமே கை கொடுப்பர்.//

உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு, வாழ்த்துக்கள்

Unknown said...

// இஸ்லாம் நம் நாட்டில் மறைந்த அந்த பழைய கொள்கையை மீட்டெடுக்கிறது.//

அய்யா! கொஞ்சம் தயவு செய்து அந்த கொள்கையை எப்படி மீட்டு எடுத்து இந்த நாட்டில் செயல்படுத்த போகிறீர்கள் என்பதை விளக்கமாக சொன்னால் நாங்கள் புரிந்து கொள்வோம், சில விஷயங்கள் புரியாததால் தான் தவறுகள் நடக்கிறது, அதை மீட்டெடுக்க என்ன திட்டங்கள் வைத்துள்ளீர்கள், மீட்டு எடுத்த பிறகு இந்தியா எப்படி இருக்கும் என்பதையும் விளக்குங்களேன், தயவுசெய்து இதற்க்கான பதிலை எதிர் பார்க்கிறேன்

suvanappiriyan said...

//அய்யா! கொஞ்சம் தயவு செய்து அந்த கொள்கையை எப்படி மீட்டு எடுத்து இந்த நாட்டில் செயல்படுத்த போகிறீர்கள் என்பதை விளக்கமாக சொன்னால் நாங்கள் புரிந்து கொள்வோம், சில விஷயங்கள் புரியாததால் தான் தவறுகள் நடக்கிறது, அதை மீட்டெடுக்க என்ன திட்டங்கள் வைத்துள்ளீர்கள், மீட்டு எடுத்த பிறகு இந்தியா எப்படி இருக்கும் என்பதையும் விளக்குங்களேன், தயவுசெய்து இதற்க்கான பதிலை எதிர் பார்க்கிறேன் //

பெரிதாக ஒன்றும் இல்லை. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற அடிப்படைக்கு விரும்பிய மக்களை கொண்டு வருவது. இது வந்து விட்டாலே சாதி ஏற்றத் தாழ்வுகள் தானாக மறைந்து விடும். சாதிக்கு ஒரு சாமி இருப்பது தான் சாதி வெறிக்கு அடிப்படை காரணமே. நாங்களெல்லாம் முன்பு சாதி இந்துக்களாகத்தான் இருந்தோம். இன்று உலக முஸ்லிம்களில் ஒருவராக தலை நிமிர்ந்து நிற்கிறோம். அந்த நிலையை எனது சகோதரர்களுக்கும் விரும்புபவர்களுக்கு பகிர்ந்தளிக்கவும் தயாராக உள்ளோம்.

மற்றபடி ஆட்சியை பிடிப்பது ஒரு முஸ்லிமின் கடமையல்ல. குர்ஆனும் அந்த கட்டளையை முஸ்லிம்களுக்கு இடவில்லை. எனவே பயம் வேண்டாம். :-)

Dr.Anburaj said...

/இந்து மதம் என்றால் என்ன? அதற்கு என்ன வரைமுறை அதை முதலில் தெரிவிக்கவும். பிறகு விவாதிக்கலாம்.//
முதலில் விஞ்ஞானம் என்றால் என்ன ? இயற்பியல் உயிரியில், வேதியியில போன்ற பாடங்களுக்கு வேதம் எது ?
நபி யார்? நபி யின்றி வேதம் இன்றி இருப்பதால்தான் விஞ்ஞானம் மனித குலத்திற்கு இவ்வளவு பயனுள்ள காரியங்களைச் சாதித்து வருகின்றது.
சமயத்திற்கும் வேதம்என்றொரு புத்தகம் தேவையில்லை.நபி என்று ஒரு மனிதன் தேவையில்லை. 10000 ஆண்டுகளின் மனித சமூக அறிவியல் கலை மற்றும் அனைத்து துறைகளின் வளர்ச்சி நிலையில் ஒவ்வொரு படிததரங்களின் தொகுப்புதான் இந்து மதம் இந்து நாகரீகம்.தாய் மண்ணை கொஞசம் நேசி.சோற்றுக்கு மட்டும் இந்தியா. நேசத்திற்கு அரேபியாவா என்ன வேசித்தனம்

ஆனந்த் சாகர் said...

சுவனப்பிரியர் என்ற ஹூரிப்பிரியரே,

ஆரியர், திராவிடர் என்ற கதையெல்லாம் அரதப்பழசானது. இந்த கட்டுக்கதையை தூக்கிபிடித்து இந்துக்களை, இந்தியர்களை இனவெறியர்களாக மாற்றி அவர்களுக்குள் பேதங்களை உருவாக்கி அதன்மூலம் கூறுகெட்ட முகம்மதுவின் நாற்றமெடுக்கும் அரபு கலாசாரத்தை இந்தியகளிடையே நுழைக்க துடிக்கும் உம்மை போன்ற கயவர்களின் பாட்சா பலிக்காது.