Followers

Monday, April 08, 2013

சங்பரிவாரின் மோடி எனும் மூகமூடி - குமுதம் ரிப்போர்ட்டர்.

சங்பரிவாரின் மோடி எனும் மூகமூடி - குமுதம் ரிப்போர்ட்டர்.



இஸ்மாயில் என்ற பெயரில் காந்தியைக் கொன்ற கோட்சேவும் காந்தியின் கொள்கையைப் பின்பற்றுவதாகக் கூறும் மோடி அரசும் இந்துத்துவா சித்தாந்தத்தின் மறுபக்கங்களே!

மோடிதான் பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்றால், இந்தியாவின் மதச்சார்பற்ற தகுதி பின்னர் என்னவாகும்? அத்வானியின் ரத யாத்திரை நிறைவடைந்த நிலையில், மோடியின் ரத யாத்திரை நாடாளுமன்றம் நோக்கி பயணத்தைத் துவக்கிவிட்டது.

அண்மையில் பா.ஜ.க.வின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. புதிய தலைவரான ராஜ்நாத்சிங் பலத்த கரவொலிக்கிடையில் குஜராத் முதல்வர் மோடியை மேடைக்கு வரவழைத்தார். ஆளுயர மாலை அணிவித்து, அவரின் ‘ஹாட்ரிக்’ சாதனையை வானளாவப் புகழ்ந்திருக்கிறார். அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமருக்கான வேட்பாளர் மோடிதான் என்பதை ‘சூசகமாக’ தெரிவித்துள்ளார்கள். அல்லது நாம் சூசகமாகப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது!

"இது போன்ற முதலமைச்சரை நான் பார்த்ததில்லை" என ராஜ்நாத்சிங் வியந்து புகழ்ந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இந்தியாவில் குடிநீருக்கும் உணவுக்கும் பஞ்சம் வருகிறதோ, இல்லையோ பாரதப் பிரதமருக்கான பஞ்சம் நிறையவே வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இளையவர் ராகுல் காந்திதான் பிரதமருக்குரிய அனைத்துத் தகுதிகளோடும் அதற்கான அங்க அடையாளங்களோடும் தென்படுவதால் அவரை முன்னிறுத்துகிறார்கள். நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க ஏழைகளின் தலையில் விலைவாசி உயர்வும் பிரதமர் பற்றாக் குறையைத் தவிர்க்க நேரு குடும்பத்தின் வாரிசுகளில் யாராவது ஒருவரும் தேர்ந்தெடுக்கப் படலாம். அது அக்கட்சியின் மரபுரீதியிலான ஜனநாயகம்!

எரிக்கும் பூ! இந்தியாவில் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதற்கும் ஊழலைத் தடுத்து நிறுத்துவதற்கும் பி.ஜே.பி.யால்தான் முடியும் என அவர்கள் நம்புகிறார்கள். ஏனென்றால், ஏற்கெனவே பி.ஜே.பி.யின் ஆட்சியில் நடந்தேறிய ஊழல்களும் பயங்கரவாத சம்பவங்களும் அவர்களிடத்தில் அனுபவமாக நிறைய இருக்கிறது. அதை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர, பி.ஜே.பி.யின் கண்களுக்கு மோடி இன்னொரு ராமராக காட்சி தருகிறார்.

கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம், அதனைத் தொடர்ந்து நடந்த வகுப்புக்கலவரங்களை மிகத் தேர்ந்த முறையில் "கையாண்டு" வெற்றி பெற்ற மோடி போன்ற ஒரு முதலமைச்சரை ராஜ்நாத்சிங் பார்த்திருக்க முடியாதுதான். பவர்கட் இல்லாத மாநிலம், மது இல்லாத மாநிலம், என இந்தியாவில் குஜராத் ஒரு மாடல் மாநிலமாக ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கிவிட்டதால் நடந்து முடிந்த வகுப்புக் கலவரங்கள் வெற்றியின் மூலம் மறந்தே போனது அல்லது மறைக்கப்பட்டது.

மசூதி இடிக்கப்படுவதற்கு முன்புவரை அங்குள்ள இடத்தைச் சுத்தப்படுத்தி, சமதளமாக்கும் பணியில் ஈடுபடப் போவதாகவே நீதிமன்றத்தின் முன்னால் கூறிக்கொண்டிருந்தார்கள். இடித்த பிறகும் ‘அதுவாக இடிந்துவிட்டது’ என்றும் "கரசேவையின் வெற்றி" என்றும் "பூகம்பம் ஏற்பட்டால் சில அதிர்வுகள் இருக்கத்தானே செய்யும்" என்றும் கூறிக்கொண்டார்கள்.

ஆயிரம் முகமூடிகளை அணியும் அபூர்வ சிந்தாமணிகளான சங்பரிவார் அமைப்பினருக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடி என்ற முகமூடி அவசியம் தேவைப்படுகிறது. ஆனால், குஜராத் அல்ல இந்தியா! எத்தனை முறை கோட்சே அவதாரம் எடுத்து மகாத்மாவைக் கொன்றாலும் மதச்சார்பற்ற இந்திய மக்களின் நல்லிணக்கத்தை அவர்களால் வீழ்த்த முடியாது.

பிரித்தாளும் முறையை அடிப்படையாகக் கொண்டு பெரும்பான்மை வாக்குப் பிரிவுகளை பலப்படுத்துவதில் குஜராத்தில் வெற்றி பெற்றுள்ளார்கள். இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியல் கட்டமைப்பை மதித்து நடக்கும் முதல் தகுதியை மோடி பெற்றிருக்கிறாரா? என்ற கேள்வியோடு குஜராத் அரசை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. பல மதங்களைக் கொண்ட மக்கள் அவரவர் நம்பிக்கையின் அடிப்படையில் சம உரிமை பெறுவதற்கு சட்டப்பிரிவின் 25-வது விதி உதவுகிறது. ஆனால், குஜராத்தில் மோடியின் அரசு மதச் சுதந்திர சட்டம் என்ற பெயரில் அவ்வுரிமையை மறுத்து வருகிறது.

இன்றைக்கும் அங்கே கிறிஸ்துமஸ் போன்ற விழாக்களின்போது தேவாலயத்தின் கதவுகளும் சன்னல்களும் பாதி மூடப்பட்டு பிரார்த்தனை கீதங்கள் வெளியில் சென்றுவிடாமல் அமைதி காக்கப்படுகிறது. அரசு உத்தரவின் மூலம் கிறிஸ்துவ மக்களின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்புக்கு உள்ளூர் காவல்நிலையங்களைப் பயன்படுத்துகிறது. ஜனநாயக நிர்வாக அமைப்புகளுக்குள் ஊடுருவுவதும் சமுதாயத்தைப் பிளவுபடுத்தி தேர்தலில் ஆதாயம் பெறுவதே சங்பரிவாரத்தின் சூழ்ச்சியாகும்.

பசு வதை தடைச் சட்டம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்குகிறது. குஜராத்தில் இச்சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. பசு பாதுகாப்பு இந்துத்துவாவின் முக்கிய கொள்கையாகும். அதை மோடி அரசு உயர்த்திப் பிடித்துள்ளது.

முஸ்லிம், கிறிஸ்துவ மாணவர்களுக்கு சில பள்ளிகளில் சேர்க்கைக்கான அனுமதி கிடைப்பதில்லை. இந்து மக்கள் அதிகமாக வசிக்கும் நகர்களில் உள்ள பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளுக்கும் இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகளின் அடிப்படை வசதிகளுக்கும் இடையே பெரும் ஏற்றத்தாழ்வுகள் நிலவுகிறது. வீட்டுக் கடன், வங்கிக் கடன், மாணவர்களுக்கான உதவித்தொகை இவற்றில் தலித், கிறிஸ்துவர், முஸ்லிம் ஆகியோருக்கு பாகுபாடு காட்டப்படுகிறது. அமைதியான முறையில் பிரித்தாளும் தந்திரங்கள் அங்கே நிறைவேற்றப்படுகின்றன.

இச்சாதனை இந்தியா முழுமைக்கும் தொடர நேர்ந்தால் என்ன ஆகும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவங்களுக்கு முன்னால் மோடி அணிந்திருந்த மதச்சார்பற்ற முகமூடி, அதன் பின்னால் தொடர்ந்த கலவரங்களின்போது கழன்று விழுந்தது. இஸ்லாமிய மக்களும் பெண்களும் குழந்தைகளும் கூட அடித்தும் உயிரோடு எரித்தும் கொல்லப் பட்டார்கள். வீடுகளும் கட்டடங்களும் எரித்து சாம்பலாக்கப் பட்டன.

கர்ப்பிணிப் பெண்ணைக் கொல்ல மனமில்லாமல் வயிற்றைக் கிழித்து உள்ளிருந்த சிசுவினை எடுத்து தன் காதில் அணிந்தபடி அசுரப் பெண்ணை போரில் அழித்ததாக தமிழக கிராமத்தின் வக்கிரகாளியம்மன் வழிபாட்டு புராணக்கதை கூறுகிறது.

ஆனால், இந்துக் கடவுள்களின் மீது நம்பிக்கை கொண்டதாகக் கூறிக்கொள்ளும் பி.ஜே.பி.யின் பெண் அமைச்சர் மாயா முன்னிலையில் இஸ்லாமிய கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசுவை நெருப்பிலே எரித்துக் கொன்ற சம்பவம் நீதிமன்றத்தின் கண்டனத்தையும் 28 ஆண்டு கால சிறைத் தண்டனையும் பெற்றுக் கொடுத்துள்ளது. இச்சம்பவங்கள் இந்தியாவையே உலுக்கி எடுத்தன.

பிரிட்டிஷ் ஆட்சியில் வகுப்புக் கலவரங்கள் நிறைந்த நகரமாக கொல்கத்தா விளங்கியது. ஆனால், கடந்த 34 ஆண்டுகால இடதுமுன்னணி ஆட்சியில் ஒரு வகுப்புக் கலவரச் சம்பவமும் நடைபெறவில்லை என்பது அந்த ஆட்சியின் மிகப் பெரிய சாதனையாகும். 5 முறை தொடர்ச்சியாகவும் 7 முறை ஆட்சியிலும் இடது முன்னணியே வெற்றிபெற்ற திரிபுராவில் எந்த கலவரச் சம்பவங்களும் இடம் பெறவில்லை. ஆனால், ஊடகங்களுக்கு இது ஒரு சாதனையாகத் தெரிவதும் இல்லை.

தொழில் வளர்ச்சியில் குஜராத் சாதனை என்று புகழப்படுகிறது. ஆனால், அருகில் இருக்கக்கூடிய மாநிலங்களோடு ஒப்பிட்டால் அதில் உண்மை இல்லை என்பது தெரிய வரும். 3.95% இருந்த குஜராத்தின் தொழில் வளர்ச்சி 12.65% ஆக உயர்ந்துள்ளது. ஒடிஸாவிலோ 6.04% ஆக இருந்த தொழில் வளர்ச்சி 17.53% ஆக உயர்ந்துள்ளதோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். வங்கியின் வர்த்தக முதலீட்டில் குஜராத் முழுவதும் 4.7 % தான். ஆனால், ஆந்திராவில் 5.2 %, தமிழ்நாடு 6.2%. வங்கிக் கடன் வழங்கலில் குஜராத் 4.22 % ஆகவும், மகாராஷ்டிரா 26.6% ஆக கடன் வழங்கியுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் மா பயிரிட்டுள்ளது. ரிலையன்ஸ் மேங்கோஸ் என்ற பெயரில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறது. உருளைக்கிழங்கு, பருத்தி, எள், வெங்காயம், மாம்பழம் போன்ற பயிர்கள் உற்பத்தி செய்யப்பட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்குள்ள விவசாயிகள் இதைச் செய்யவில்லை. அக்ரோசெல், மெக்டொனால்ட், ஜெயின் போன்ற நிறுவனங்களே செய்கிறது. இதனால் சிறு குறு விவசாயிகள் நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள் . விவசாயத் தொழிலாளிகள் வேலை இழந்துள்ளார்கள். பட்டினியால் 166 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள் என குஜராத் முதல்வரே சட்டமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.

வறுமை, பட்டினி, ஊட்டச்சத்தின்மை, பெண்கள், குழந்தைகளுக்கு ரத்த சோகை நோய் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிகம் பீடித்துள்ளது. இவைதான் குஜராத்தின் மறைக்கப்பட்ட சாதனைகளாக விளங்குகிறது. கள்ளச்சாராய சாவுகள் அங்கே நிகழ்ந்தபோது மோடி அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. காந்தியின் கொள்கையை இம்மாநில அரசு உறுதியாகப் பின்பற்றி வருகிறது எனவும் மதுவிலக்கை பூரணமாக அமல்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தப் பட்டுள்ளது.

இஸ்மாயில் என்ற பெயரில் காந்தியைக் கொன்ற கோட்சேவும் காந்தியின் கொள்கையைப் பின்பற்றுவதாகக் கூறும் மோடி அரசும் இந்துத்துவா சித்தாந்தத்தின் மறுபக்கங்களே! மோடிதான் பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்றால், இந்தியாவின் மதச்சார்பற்ற தகுதி பின்னர் என்னவாகும்?

பாலபாரதி , MLA

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் (14-03-2013)

9 comments:

mohamed said...

அருமையான் கட்டுரை. என்னதான் ஹிந்துத்துவ வாதிகள் சதி செய்து மோடி செய்த மொள்ள மாறித் தனத்தை மறைக்க நினைத்தாலும் பெரும்பான்மை இந்திய மக்கள் மிக தெளிவோடு தான் இருக்கின்றார்கள்.இன்ஷா அல்லாஹ் இந்த முறையும் பிஜேபி தேர்தலில் படுதோல்வியை சந்திக்கும். அப்பொழுது இவர்களுக்கு தெரியும் இந்திய மக்களின் மன நிலை பற்றி.அப்பொழுது அத்வானி வருந்துவார் அவர் இஸ்லாமியர்களுக்கு எதிராக செய்த சதி தவறு என்று.

Unknown said...

சுவனம்,
இந்த நாட்டுல உருப்புடியா விமர்சனத்துக்கு பதில் தருவது இந்து மதம் மட்டுமே. இத்தனை சுல்தான்கள் வந்து இவ்ளோ கொலை செய்தும் நாங்கள் இஸ்லாமிடம் சமாதானமா போறோம். இதே இந்தியா இஸ்லாமிய நாடாக இருந்தால் நாடு அழிந்திருக்கும்

suvanappiriyan said...

சகோ முஹம்மத்!

//அருமையான் கட்டுரை. என்னதான் ஹிந்துத்துவ வாதிகள் சதி செய்து மோடி செய்த மொள்ள மாறித் தனத்தை மறைக்க நினைத்தாலும் பெரும்பான்மை இந்திய மக்கள் மிக தெளிவோடு தான் இருக்கின்றார்கள்.//

உண்மைதான் சகோ! இது போன்ற சிறுபான்மையினராக இருக்கும் இந்துத்வாவாதிகளுக்காக நாம் நடுநிலைவாதிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது. அதற்கான முன்னேற்பாடுகளை நாம் முன்னெடுக்க வேண்டும்.

suvanappiriyan said...

திரு ஜெய்சங்கர்!

//இந்த நாட்டுல உருப்புடியா விமர்சனத்துக்கு பதில் தருவது இந்து மதம் மட்டுமே.//

அப்படீங்களா! மார்க்கண்டேய கட்ஜூவிடம சொல்லி விடாதீர்கள். சிரிக்கப் போகிறார்.

//இதே இந்தியா இஸ்லாமிய நாடாக இருந்தால் நாடு அழிந்திருக்கும்//

இதே இந்தியாவை முஸ்லிம்கள் 1000 வருடங்கள் ஆண்டுள்ளார்களே! சேர, சோழ, பாண்டிய, மராட்டிய, மன்னர்களை எல்லாம் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து அகண்ட பாரதத்தை உருவாக்கி விட்டல்லவா சென்றனர்.

ராவணன் said...

////உண்மைதான் சகோ! இது போன்ற சிறுபான்மையினராக இருக்கும் இந்துத்வாவாதிகளுக்காக நாம் நடுநிலைவாதிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது. அதற்கான முன்னேற்பாடுகளை நாம் முன்னெடுக்க வேண்டும். /////

எப்படி அண்ணாச்சி? குண்டு வச்சா?

ராவணன் said...

///இதே இந்தியாவை முஸ்லிம்கள் 1000 வருடங்கள் ஆண்டுள்ளார்களே! சேர, சோழ, பாண்டிய, மராட்டிய, மன்னர்களை எல்லாம் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து அகண்ட பாரதத்தை உருவாக்கி விட்டல்லவா சென்றனர்.///

அகண்ட பாரதத்தை மட்டுமே உருவாக்க முடியும்...அகண்ட துலுக்க நாட்டை உருவாக்க முடியாது. அதுதான் இந்தியா...

ராவணன் said...

மாணிக்கம் அண்ணாச்சி....சொந்தமா ஏதாவது எழுதுவது?

ராவணன் said...

இந்தியர்களுக்கு உண்மையான இந்தியரான மோடியைப் பிடிக்கும். துலுக்கர்களுக்கும் பிடிக்கும் என்று எதிர்பார்க்கவா முடியும்?

suvanappiriyan said...

//எப்படி அண்ணாச்சி? குண்டு வச்சா? //

ஆமாம் அண்ணாச்சி....உங்க தோழர் புரோகித் இடமும், அசீமானந்தாவிடமும், சாது பிரக்யாகிங்கிடமும் நீங்க கேட்டா விலா வாரியாக எப்படி குண்டு வைப்பது, அதை எப்படி முஸ்லிம்கள் தலையில் கட்டுவது என்பதும் தெரியும். டெல்லி திஹார் சிறையில் போய் அவர்களிடம் பேட்டி எடுக்கலாமே....:-)

//அகண்ட பாரதத்தை மட்டுமே உருவாக்க முடியும்...அகண்ட துலுக்க நாட்டை உருவாக்க முடியாது. அதுதான் இந்தியா... //

நீங்க என்னதான் அவாள்களுக்கு சொம்பு தூக்குனாலும் உங்களையும் உங்க முணியாண்டி சாமியையும் தீட்டு என்று ஒதுக்கியே வைப்பர். அய்யோ பாவம்.....

//இந்தியர்களுக்கு உண்மையான இந்தியரான மோடியைப் பிடிக்கும். துலுக்கர்களுக்கும் பிடிக்கும் என்று எதிர்பார்க்கவா முடியும்?//

இன்று மோடிக்கு பல்லக்கு தூக்குபவர்கள் பெரும்பான்மை இந்துக்கள் அல்ல. 3 சதவீதமே இருக்கும் பார்ப்பனர்கள். தினமலரையும் தினமணியையும் படித்து விட்டு கற்பனை கோட்டை கட்ட வேண்டாம்.