Followers

Thursday, August 22, 2013

மயிலாடுதுறையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளாம்!

மும்பை:பாகிஸ்தான் பயங்கரவாதிகள், இலங்கை மற்றும் கடலோர மாநிலங்கள் வழியாக, தென் மாநிலங்களில் நுழைந்து, தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக, மகாரஷ்டிர மாநில உளவுத் துறை எச்சரித்துள்ளது.

இது குறித்து, தென் மாநிலப் பகுதிகளுக்கான எச்சரிக்கையாக, மகாராஷ்டிர மாநில உளவுத் துறை கூறியிருப்பதாவது:பாகிஸ்தானின், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பு, பஞ்சாபியர்கள் மற்றும் முஸ்லிம்கள் என, பலருக்கும் பயங்கரவாத தாக்குதல் பயிற்சி அளித்து வருகிறது. தென் மாநிலங்களில் தாக்குதல் நடத்துவதற்காக தயார் செய்யப்பட்டுள்ள இவர்கள், இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் இருந்து, தமிழகத்தில் நுழைந்து, மதுரை, மயிலாடுதுறையில் பயங்கர தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளனர்.இன்னும் சில மாதங்களில், தாக்குதல் நடத்தப்படலாம். கடந்த பிப்ரவரி மாதம், 2ம் தேதி, மூன்று பாகிஸ்தான் இளைஞர்களை, இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்து விசாரித்தபோது, இந்த தகவல் தெரிய வந்துள்ளது.சிங்கள மீனவர்கள் போல், கேரளா மற்றும் தமிழகத்திற்குள், பயங்கரவாதிகள் நுழையக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான முயற்சியில், லஷ்கர் - இ - தொய்பா, பப்பர் கால்சா இன்டர்நேனல், ஜெய்ஷ் -இ - முகமது, ஜமாத் - உத் - தாவா, லஷ்கர் - இ - ஜாங்வி, அல் - உமர் முஜாகிதீன், ஹிஜ் - உல் - முஜாகிதீன் போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.தென் மாநிலங்களை தாக்க திட்டமிட்டுள்ள அந்த அமைப்புகள், இதற்காக இலங்கையில் இருந்து புறப்பட திட்டமிட்டுள்ளன.இவ்வாறு, அந்த எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் 21-08-2013



இதைப் படித்து விட்டு என்னையறியாமல் சிரித்து விட்டேன். இஸ்லாத்தை இந்த மண்ணிலிருந்து துடைத்து எறிந்து விட வேண்டும் என்று இந்துத்வா வாதிகள் பலவாறாக சிந்திக்கின்றனர். அதில் இந்த செய்தியும் ஒன்று. பாகிஸ்தான் காரனுக்கு மயிலாடுதுறைதான் தெரியுமா? இங்கு பேசும் தமிழ் மொழியாவது அவனுக்கு விளங்குமா? இங்கு குண்டு வைப்பதால் அவனுக்கு என்ன நன்மை? ஏதோ எல்லையோரத்தில் தனது நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்ப அவ்வப்போது ஊடுருவல் என்ற நாடகம் அரங்கேற்றப்படும். இந்தியாவும் பாகிஸ்தானுமே இதை அவ்வப்போது செய்து வரும். மக்களுக்கும் இது பழகி விட்டது. அந்த செய்தியை மகாராஷ்ட்ர இந்துத்வாவாதி ஒருவர் திரித்து வெளியிட அதை நம்மூர் தினமலரும் பிரபலப் படுத்தியுள்ளது. இந்த செய்திக்கு என்ன ஆதாரம்? யார் சொன்னது? எனறெல்லாம் தினமலர் கவலைப்பட போவதில்லை. உளவுத் துறையிலிருந்து அரசின் அடி மட்டம் வரை மோடியின் ஆட்கள் வேலை பார்ப்பதால் இது போன்ற செய்திகளை இவர்களால் தைரியமாக உலவ விட முடிகிறது. இஸ்லாத்தை களங்கப்படுத்த ஏதாவது ஒரு செய்தி வேண்டும். அவ்வளவே!

இஸ்லாம் தமிழகத்தில் நாள்தோறும் பரவலாக பரவி வருகிறது. இது காலாகாலமாக இந்து மதத்தை ஆண்டு கொண்டிருக்கும் மேல் சாதியைச் சேர்ந்த இந்துத்வ வாதிகளுக்கு உறுத்திக் கொண்டே இருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் இந்து மதம் அழிந்து விடுமே என்ற பயம் வேறு. வாதத்தால் இஸ்லாத்தை இந்த இந்துத்வ வாதிகளால் வெல்ல முடியாது. எனவே தான் இது போன்ற குறுக்கு வழிகளை அவ்வப்போது கையில் எடுக்கின்றனர். தானும் தனது குடும்பமும் சுற்றத்தார்களும் மாற்று மதத்தவர்களும் அமைதியாக சுதந்திரமாக வாழ்ந்து வரும் போது அதைக் கெடுக்க எந்த முஸ்லிமாவது அல்லது எந்த ஹிந்துவாவது முயல்வானா? இதை நடுநிலைவாதிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எங்கெல்லாம் முஸ்லிம்கள் சற்று வசதி வாய்ப்புகளோடு உள்ளார்களோ அங்கு சென்று அவர்களின் சொத்துக்களை கொள்ளையடிப்பது இவர்களின் வாடிக்கை. குஜராத்தில் அதைத்தான் செய்து காட்டினர். கோயம்புத்தூரிலும் அதே பாணியைத்தான் கையாண்டனர். மேலப் பாளையத்திலும் பல கொலைகளை முஸ்லிம்களின் மேல் போட்டு கலவரத்தை உண்டாக்க நினைத்தனர். தற்போது விநாயக சதுர்த்தி வேறு வருகிறது. பல முஸ்லிம் ஊர்களில் ராமகோபாலன் ஆசியோடு பிரச்னைக்கு தயாராகி வருகின்றனர். இவ்வளவு முயற்சி செய்தும் இதுவரை இந்த இந்துத்வ வாதிகளால் தமிழகத்தில் கலவரத்தை உண்டு பண்ண முடியவில்லை. ஏன்? ஏனெனில் இங்கு காலா காலமாக இந்துக்களும் முஸ்லிம்களும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இந்து மதத்தின் பெரும்பான்மை மக்கள் இந்துத்துவ வாதிகளை தொடர்ந்து புறக்கணித்தே வருகின்றனர். இந்துத்வாவாதிகள் செய்து வரும் புரட்டுக்களையும் நன்கு அறிந்தே உள்ளனர். இருந்தாலும் முஸ்லிம்களாகிய நாம் மிக கவனமுடன் இந்துத்வாவாதிகளை அணுக வேண்டும். இவர்கள் செய்யும் சதி வேலைகளை ஆதாரத்தோடு இந்து மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். தமிழக மண் என்றுமே மத மோதல்களுக்கு இடமளிக்காது என்பதை இந்த இந்துத்வா வாதிகளுக்கு இந்துக்களும் முஸ்லிம்களும் புரிய வைக்க வேண்டும்.



9 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அடேங்கப்பா...!
என்னே ஓர் அபார துப்பு..!

இந்த அதிபயங்கர திட்டத்தை தவிடு பொடியாக்கும் கிரேட் ஐடியாவை இந்திய அரசு மற்றும் உளவுத்துறைக்கு நான் முகநூல் வாயிலாக சொல்கிறேன்..!

'மயிலாடுதுறை' என்ற பெயரை...
"மானாடுபடிக்கட்டு" என்று மாற்றி விட வேண்டும்..!

'மதுரை' என்ற பெயரை
"குருதை" என்று மாற்றிவிட வேண்டும்..!

இனி என்னாகும்..? பாகிலிருந்து வந்த பயங்கரவாதிகள் தாங்கள் தேடிவந்த ஊர் தமிழ்நாட்டில் கிடைக்கவே கிடைக்காமல் மண்டை காய்ந்து... திரும்பி வந்த வழியே சென்று விடுவார்கள் அல்லவா..?

வேறு யாரும் தம் கருத்தாக இந்த ஸ்டேடசை சுட்டுடாமல் இருக்க...
ஐடியாவுக்கு காபிரைட் போட்டாச்சு..!

#கிரேட்_ஆண்ட்டி_டெர்ரர்_ஐடியா © முஹம்மத் ஆஷிக் - Citizen of World.

suvanappiriyan said...

சகோ ஆஷிக்!

//மயிலாடுதுறை' என்ற பெயரை...
"மானாடுபடிக்கட்டு" என்று மாற்றி விட வேண்டும்..!

'மதுரை' என்ற பெயரை
"குருதை" என்று மாற்றிவிட வேண்டும்..!//

ஹா...ஹா....நன்றாகவே உள்ளது. கற்பனையாக உளவுத் துறையால் உருவாக்கப்பட்ட பல பெயர்களால் இன்னும் எத்தனை காலத்துக்கு பொய்களை அரங்கேற்றுவார்கள் என்று பார்ப்போம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

புதுடில்லி: ""குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக, 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த எதிர்ப்பை, 10 மாதங்களுக்கு முன், பிரிட்டன் விலக்கிக் கொண்டதன் மூலம், குஜராத்தில் நடந்த மனித உரிமை மீறல்களை ஏற்றுக் கொண்டதாகி விடாது,'' என, பிரிட்டனுக்கான இந்திய தூதர், ஜேம்ஸ் பீவன் தெரிவித்துள்ளார்.

டில்லியில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், மேலும் கூறியதாவது: குஜராத்தில், 2002ல் நடந்த கலவரத்தில், பிரிட்டனைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். கடந்த அக்டோபரில், முதல்வர், மோடியுடன், தூதரக அளவிலான பேச்சு நடைபெற்றது. இதன் மூலம், குஜராத்தில் நடந்த, மனித உரிமை மீறல்களையும் ஏற்றுக் கொண்டதாக அர்த்தமாகி விடாது. என் பணியை செய்வதற்காகவே நான் இங்கிருக்கிறேன். இவ்வாறு கூறிய, ஜேம்ஸ் பீவனிடம், "விசா' கேட்டு மோடி மனு செய்தால், அனுமதி அளிக்கப்படுமா என்று, நிருபர்கள் கேள்வி எழுப்பினர், இதற்கு பதில் அளித்த, ஜேம்ஸ் பீவன், ""இந்த கேள்விக்கு பதில் சொல்ல இது உகந்த நேரம் அல்ல; இது குறித்து கருத்து தெரிவிக்க நான் விரும்பவில்லை,'' என்றார்.
புதுடில்லி: ""குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக, 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த எதிர்ப்பை, 10 மாதங்களுக்கு முன், பிரிட்டன் விலக்கிக் கொண்டதன் மூலம், குஜராத்தில் நடந்த மனித உரிமை மீறல்களை ஏற்றுக் கொண்டதாகி விடாது,'' என, பிரிட்டனுக்கான இந்திய தூதர், ஜேம்ஸ் பீவன் தெரிவித்துள்ளார்.

டில்லியில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், மேலும் கூறியதாவது: குஜராத்தில், 2002ல் நடந்த கலவரத்தில், பிரிட்டனைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். கடந்த அக்டோபரில், முதல்வர், மோடியுடன், தூதரக அளவிலான பேச்சு நடைபெற்றது. இதன் மூலம், குஜராத்தில் நடந்த, மனித உரிமை மீறல்களையும் ஏற்றுக் கொண்டதாக அர்த்தமாகி விடாது. என் பணியை செய்வதற்காகவே நான் இங்கிருக்கிறேன். இவ்வாறு கூறிய, ஜேம்ஸ் பீவனிடம், "விசா' கேட்டு மோடி மனு செய்தால், அனுமதி அளிக்கப்படுமா என்று, நிருபர்கள் கேள்வி எழுப்பினர், இதற்கு பதில் அளித்த, ஜேம்ஸ் பீவன், ""இந்த கேள்விக்கு பதில் சொல்ல இது உகந்த நேரம் அல்ல; இது குறித்து கருத்து தெரிவிக்க நான் விரும்பவில்லை,'' என்றார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=786797

Anonymous said...

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீஸ் அதிகாரி டி.ஜி. வன்சாராவுக்கு எதிராக இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இன்னொரு போலீஸ் அதிகாரியான பி.பி. பாண்டே வாக்குமூலம் அளித்துள்ளார்.

நரேந்திர மோடியை கொலைச் செய்ய லஷ்கர்-இ-தய்யிபா அமைப்பினர் குஜராத்திற்கு வருகை தரவுள்ளதாக ஐ.பி கடிதம் அளிப்பதற்கு முன்பே அத்தகவலை வன்சாரா, தனக்கு தெரிவித்தார் என்று பாண்டே சி.பி.ஐக்கு அளித்த வாக்குமூலத்தில் கூறுகிறார்.

குஜராத் எஸ்.ஐ.பி இணை இயக்குநரான ராஜீந்தர் குமாருடன் 2004-ஆம் ஆண்டு தனக்கு போதிய அறிமுகம் இல்லை என்று பாண்டே தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

ராஜீந்தர் குமாருக்கு வன்ஸாராவுடன் நெருக்கமான தொடர்பு இருந்தது. அஹ்மதாபாத் போலீஸ் கமிஷனராக இருந்த கே.ஆர்.கவுசிக்கை தேடி ராஜீந்தர் குமார் க்ரைம் ப்ராஞ்ச் அலுவலகத்திற்கு அடிக்கடி வருகை தந்துள்ளார்.

நான்கு பேர் மோடியை தாக்க வருவதாக ஐ.பி தகவல் அளிப்பதற்கு சில தினங்களுக்கு முன்பே வன்ஸாராவுக்கு தெரியும் என்று பாண்டேவின் வாக்குமூலம் கூறுகிறது. அதேவேளையில் போலி என்கவுண்டர் நடப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு இரண்டு பேர் மோடியை தாக்க வருவதாக பாண்டேவுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக இவ்வழக்கின் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது.

எஃப்.ஐ.ஆர் தயாரித்த க்ரைம் ப்ராஞ்ச் இன்ஸ்பெக்டர் ஜே.ஜி.பர்மர் தற்போது சி.பி.ஐயின் சாட்சி ஆவார்.

அதேவேளையில் வன்ஸாரா மீது பாண்டே குற்றம் சுமத்தும் போது அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் உறுதியாகும். உளவுத்துறை தகவல்களின் முரண்பாடே இதற்கு காரணம். உளவுத்துறைக்கு கிடைத்த தகவல்களின் உறைவிடம் குறித்து முன்னரே சந்தேகம் நிலவியது. தற்போது இது மேலும் சிக்கலாகியுள்ளது என்று சி.பி.ஐ அதிகாரிகள் கூறுகின்றனர்.

http://newindia.tv/tn/india/141-crime/1724-2013-08-23-04-39-11

Anonymous said...

மாலைமலத்தின் பொய் செய்தியும் குமரி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நடவடிக்கையும்.

இன்று குமரி மாவட்டத்துக்கு தொழில் நிமித்தமாக வருகை புரிந்த தர்மபுரி மற்ற மைசூரைச் சார்ந்த முஸ்லிம் சகோதரர்கள் ஆறு பேரை சந்தேகத்தின் பேரில் காவல்துறை கைது செய்துள்ளது. இவர்களை தீவிரவாதிகள் என்பது போல் மாலை மலம் போன்ற பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் சம்மந்தப்பட்ட சகோதரர்களின் குடும்பத்தார் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையினை அணுகி அவர்களை விடுவிக்க உதவுமாறு கோரிக்கை வைத்தனர். உடனடியாக மாநில தலைமை நிர்வாகிகள் குமரி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு காவல்துறையினை அணுகி உண்மை நிலவரத்தை அறிந்து கைது செய்யப்பட்டுள்ள சகோதரர்களுக்கு உதவிடுமாறு பணித்தது. இதனை தொடர்ந்து குமரி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டரணியினர் காவல்துறையினை தொடர்பு கொண்டு காவல் நிலையத்துக்கு நேரடியாக சென்று சகோதரர்களின் விடுதலைக்கு முயற்சி செய்தது. கைது செய்யப்பட்ட அனைவரும் வியாபார நிமித்தம் வருகை தந்தவர்கள் என்பதனை காவல் துறையினரும் தவ்ஹீத் ஜமாஅத்தின் முயற்சி மூலம் உறுதி செய்தனர். அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஆறு சகோதரர்களும் விடுதலை செய்து குமரி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் வசம் ஒப்படைக்கப்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

அப்பாவிகளின் விடுதலைக்கு துரிதமாகவும் துணிச்சலாகவும் களம் இறங்கிய குமரி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள், தொண்டரணியினர் மற்றும் கிளை நிர்வாகிகளுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!

(ஜஸாக்கல்லாஹ் கைர தகவல் Mohammad Sheik )

Dr.Anburaj said...

இஸ்லாமிய நாடு சிரியாவில்இரசாயன குண்டு வீசி 1300 பொதுமக்கள் படுகொலை. நைஜியாவில் அப்பாவி மக்கள் கழுத்தை அறுத்து படுகொலை. சரியத் தைநாட்டின் அமல்படுத்தக் கோரும் இஸ்லாமிய இயக்கம் சாதனை. பாக்கிஸதானில் தினமி தினம்குண்டு வெடிப்பு. அனைத்து இஸ்லாமிய நாடுகளும் அலங்கோலம்.இதில் இஸ்லாத்தின் பெயர் சமாதானம். அவனை வெட்டு இவனை கழுத்தை வெட்டு என்று கூறம் குரான் ஒரு பயங்கரவாத தூண்டும் ஆவணம்.தத்துவம் அதன் காப்பாளர் முகம்மது. 50 வயதில 6 வயது சிறுமியை திருணம் செய்தவர். காலையில் கணவனை கொன்றுவிட்டு மாலையில் சோபியா என்ற யுதப்பெண்ணை மணம் முடித்துக் கொண்டவர். அடிமைப்பெண்களைத்திருமணம் செய்யாமல் வைப்பாட்டிகளாக வேலைக்காரிகளாக விற்பனை பண்டமாக வைத்துக் கொள்ளலாம்என்று உபதேசித்து தானும் 20 மேல்குமுஸ் பெண்களை வைப்பாட்டிகளாக வைத்திருந்தனவர். த்து எடுத்த மகனின் மனைவியை-மகன்-விவாகரத்து செய்தபின் திருணம் செய்தவன். ஒரு வயதான யுத தலைவியை இருகால்களையும் எதிர்திசையில் ஓட்டப்பட்ட இரு ஒட்டகங்கின் காலில்கட்டி உடலைப்பிளந்து கொலை செய்தவர். அஸ்தா என்ற பெண்கவிஞரைக் கொலை செய்தவர். பதர்கொள்ளையில் வியாபாரிகளின் பொருட்களைக் கொள்ளையிட்டவர்-பகல் கொள்ளை அடித்த திருடர் அவர் செய்த அட்டுழியங்கள் ஒன்றா இரண்டா , அவரது போதனைகள் இன்றும் இரதத ஆறு ஓடிக்கொண்டிருக்கின்றது. குரான் ஒழியும் வரை பயங்கரவாதம் ஒழியாது.

Anonymous said...

//இந்து மதத்தின் பெரும்பான்மை மக்கள் இந்துத்துவ வாதிகளை தொடர்ந்து புறக்கணித்தே வருகின்றனர். இந்துத்வாவாதிகள் செய்து வரும் புரட்டுக்களையும் நன்கு அறிந்தே உள்ளனர்.//

ஆமாங்க, எல்லாம் அறிந்தே உள்ளோம், எங்கள் நாட்டில் எப்போது ஜிஸ்யா வரி கட்டி எங்கள் கடவுளை வணங்கும் நாள் வருமோ என்ற நிலையையும் எதிர் பார்த்தே உள்ளோம், துப்பு கெட்ட அரசாங்கங்கள் அமைந்தால் இப்படி அரபு சாக்கடைகள் இந்த நாட்டில் கலப்பதை எப்படி தடுக்க முடியும்.

//இவர்கள் செய்யும் சதி வேலைகளை ஆதாரத்தோடு இந்து மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்//

நீங்க செய்றத விடவா அவங்க செய்றாங்க? அவங்களுக்கு சரியா செய்ய தெரியலை, கத்து குட்டிகள், அதான் மாட்டிகிறாங்க, உங்கள் கூட்டத்தை போல திறமையாக செய்ய முடியுமா? நீங்க செய்றத பார்க்கும்போது அவங்க செய்றது தப்பா தெரியலைங்க. என்ன அழகா நல்ல பிள்ளை வேஷம் போடுறீங்க. நீங்க அரபு சாக்கடைய இங்க கலக்குறத நிறுத்துங்க, அவங்க நிறுத்துவாங்க, எங்ககிட்ட தப்பு இருந்தா நாங்க திருதிக்கிறோம், அத சாக்கா வச்சு இங்க தாவா செய்து இஸ்லாமிய நாடா இந்த நாட்டை நீங்க மாற்ற நினைக்கும்போது இது போல இந்துத்துவ வாதிகள் வருவதில் எந்த தவறும் இல்லை. மூட கூட்டமே உங்களுக்குதான் பாகிஸ்தான் ஒதுக்கி தந்திருக்கிரோமே போய் தொலைய வேண்டியது தானே. இந்தியா என்ன துலுக்கர்களின் அப்பன் வீடா. அட சவுதில நாங்க மத பிரச்சாரம் செய்ய சென்றால் சம்மதிப்பீர்களா மூடர்களே, தரித்திரம் பிடித்த பீடை கூட்டம் எந்த நாட்டுக்கு போய் அமைதியாக இருக்கிறது. எங்கு சென்றாலும் பிரச்சனை, எந்த இடத்தில ஒரு துலுக்கன் குடியேறினாலும் பிரச்சனை. என்னவோ வானத்தில் இருந்து குதித்தவர்கள் என்ற நினைப்பு. உங்கள் கூட்டத்தை ஒதுக்கி வைப்பதே உலகிற்கு நன்மை

Anonymous said...

//மூட கூட்டமே உங்களுக்குதான் பாகிஸ்தான் ஒதுக்கி தந்திருக்கிரோமே போய் தொலைய வேண்டியது தானே. இந்தியா என்ன துலுக்கர்களின் அப்பன் வீடா. அட சவுதில நாங்க மத பிரச்சாரம் செய்ய சென்றால் சம்மதிப்பீர்களா மூடர்களே, தரித்திரம் பிடித்த பீடை கூட்டம் எந்த நாட்டுக்கு போய் அமைதியாக இருக்கிறது. எங்கு சென்றாலும் பிரச்சனை, எந்த இடத்தில ஒரு துலுக்கன் குடியேறினாலும் பிரச்சனை. என்னவோ வானத்தில் இருந்து குதித்தவர்கள் என்ற நினைப்பு. உங்கள் கூட்டத்தை ஒதுக்கி வைப்பதே உலகிற்கு நன்மை//

Why this kolaveri?

ராவணன் said...

அண்ணாச்சி உங்கள் கும்பல் இருப்பது மயிலாடுதுறை இல்லையா?