Followers

Sunday, January 10, 2016

இதுதான் இஸ்லாம் : நெஞ்சை நெகிழ வைத்த காணொளி....!!

இதுதான் இஸ்லாம் : நெஞ்சை நெகிழ வைத்த காணொளி....!!------------------------------------------------------சவூதி அரேபியா...

Posted by Nazeer Ahamed on Sunday, January 10, 2016

இதுதான் இஸ்லாம் : நெஞ்சை நெகிழ வைத்த காணொளி....!!

------------------------------------------------------

சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் பிரபல டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்தவர் தேவராஜன்,
ஜித்தாவிலிருந்து ரியாத்திற்கு லோடு ஏற்றி ஓட்டிக்கொண்டு வந்த லாரியை ஓரமாக ஒதுக்கி வைத்து தூங்கியுள்ளார். சொமாலியாவை சேர்ந்த சில திருடர்கள் அவரை தாக்கி கீழே தள்ளி விட்டு சென்று விட்டனர்.

ரியாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவராஜனை நிறுவனத்தின் உரிமையாளர் விரைந்து வந்து காவல்துறையின் உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு நிலவரத்தை கூறிவிட்டு இரவு பகல் பாராமல் தேவராஜனுடன் இருந்து கூடப் பிறந்த சகோதரனைப் போல் சகோதர வாஞ்சையுடன் ஒவ்வொரு உதவிகளையும் செய்து வருகிறார்.
நெஞ்சை நெகிழ வைத்த காணொளி...

இந்த வீடியோவை அந்த உரிமையாளருக்கே தெரியாமல் அங்கிருந்தவர்கள் எடுத்துள்ளார்கள்.

வீடியோ உதவி : சாகுல் ஹமீது
நன்றி: டைம்ஸ் வீடியோ
-------------------------------------------------------
நபிகள் நாயகம் அவர்களுக்கு பணியாளராக இருந்த அனஸ் பின் மாலிக் அவர்கள் கீழ்வருமாறு கூறுகின்றார்கள்:
“நான் அல்லாஹ்வின் தூதர் அவர்களிடத்தில் பத்து வருடங்களாகப் பணிபுரிந்துள்ளேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் ஒருபோதும் எனக்கு "சீ" என்று கூறியதில்லை. இதனை ஏன் செய்தாய்? இதனைச் செய்யாதிருந்தால் என்ன? என்றாவது அவர் எனக்குச் சொன்னதில்லை. அல்லாஹ்வின் தூதர் அவர்கள் மக்களுள் நற்குணமிக்கவராக இருந்தார்கள்.”

ஆதாரம்:முஸ்லிம்
----------------------------------------------------
ஒரு முறை ஒரு மனிதர் நபிகள் நாயகம் அவர்களிடம் வந்தார். தமக்கு ஏதாவது தருமாறு கேட்டார். இது கேட்ட நபிகள் நாயகம் அவர்கள் ‘உங்களுடைய வீட்டில் ஏதாவது இருக்கின்றதா” எனக் கேட்டார்கள்”. "ஒரு போர்வையும் ஒரு பாத்திரமும் இருப்பதாக"அவர் பதிலளித்தார். இவற்றைக் கொண்டு வருமாறு நபிகள் நாயகம் அவர்கள் பணித்தார்கள். இவ்விரு பொருள்களும் கொண்டு வரப்பட்டன. நபிகள் நாயகம் அவர்கள் அவற்றை ஏலத்தில் விற்றார்கள். அதற்கு இரண்டு திர்ஹம்கள் கிடைத்தன.
“இதில் ஒரு திர்ஹத்திற்கு உணவு வாங்கி குடும்பத்துக்கு கொடுக்குமாறும் அடுத்த திர்ஹத்துக்கு ஒரு கோடரி வாங்கி வாருங்கள்" என்று கூறி அவரை அனுப்பி வைத்தார்கள். கோடரி வாங்கி வரப்பட்டது. அதனைப் பெற்றுக் கொண்ட நபிகள் நாயகம் அவர்கள் அதற்கொரு பிடியைப் பொருத்தி இந்த மனிதரிடம் ஒப்படைத்தார்கள்.
“நீங்கள் விறகு வெட்டி விற்பனை செய்யுங்கள். பதினைந்து நாட்களுக்கு இந்தப் பக்கம் தலைகாட்டக் கூடாது” என்று கூறி அனுப்பி வைத்தார்கள். அவர் நபிகள் நாயகம் அவர்கள் கூறியபடி விறகு வெட்டி விற்பனை செய்து வந்தார். 15 நாட்களில் பின் நபிகள் நாயகம் அவர்களைச் சத்தித்து தனது வருமானத்தைப் பற்றிக் கூறித் திருப்தியடைந்து இதற்கு நன்றி கூறினார். அப்போது “ இறுதி நாளில் முகத்தில் கறுத்த குறிகளுடன் வருவதைவிட இத் தொழில் உமக்கு மிகவும் சிறந்ததாகும்” என்று நபிகள் நாயகம் அவர்கள் போதனை செய்து அவரை அனுப்பி வைத்தார்கள்.

ஆதாரம்:திர்மிதி
‪#‎தொழிலாளி‬ ‪#‎முதலாளி‬ ‪#‎இஸ்லாம்‬

15 comments:

Dr.Anburaj said...

ஜனவாி 12 சுவாமி விவேகானந்தா் ஜெயந்தி -தேசிய இளைஞா் தினமாக கொண்டாடப்படுகின்றது.நவீன பாரததத்தின் புத்தெழுச்சிக்கும், நவீன இந்து மறுமலர்ச்சிக்கும் வித்திட்ட ஞான சூரியன் சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் நூற்றாண்டு விழாவாக 2013ம் ஆண்டு மலரவிருக்கிறது. பாரத தேசமும், உலகம் முழுவதும், இந்த விழாவினைக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

இந்தப் புனித தருணத்தில் சுவாமி விவேகானந்தரின் எழுச்சி மிகு சிந்தனைகளை இந்தப் புதிய தொடரில் தொகுத்து வழங்குவதில் தமிழ்ஹிந்து மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறது. இத் தொடர் அடுத்த 10 மாதங்களுக்கு சுவாமிஜியின் சிந்தனை அமுதத்தைத் தாங்கி வரும்.

இந்தத் தொடரின் பகுதிகள் முழுமையாக விவேகானந்த கேந்திரம் வெளியிட்டுள்ள “எழுமின் விழிமின்” என்ற நூலிலிருந்து எடுக்கப் பட்டுள்ளன.

சுவாமி விவேகானந்தர் நூற்றாண்டு விழா 1963ம் ஆண்டு கொண்டாடப் பட்டது. அப்பொழுது மாபெரும் சமூக சேவகராக இருந்த ஏகநாத் ரானடே அவர்கள் விவேகானந்த கேந்திரம் என்ற அமைப்பை நிறுவினார். கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் உலகம் போற்றும் நினைவுச் சின்னம் எழுப்பியது இந்த அமைப்பின் பெரும் சாதனையாகும். அந்த தருணத்தில் ரானடே அவர்கள் சுவாமிஜியின் சிந்தனைகள் என்ற பெருங்கடலில் இருந்து மையமான சமூக, தேசிய, ஆன்மிக சிந்தனைகளைத் திரட்டி, Arise Awake: என்ற தொகுப்பை உருவாக்கினார். அதே வருடம் அதனை ஆர்.கோபாலன் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து “எழுமின் விழிமின்” என்ற பெயரில் வெளிவந்து மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. 2003ம் ஆண்டு இந்த நூலின் பத்தாம் பதிப்பு வெளிவந்தது. 14ம் பதிப்பு விரைவில் வர இருக்கிறது.

50 வருடங்கள் கடந்த பின்னரும் இந்தப் புத்தகம் புத்தொளியுடன் மிளிர்கிறது என்றால், அதற்கு உணர்ச்சி மயமான மொழியில் ஆர்.கோபாலன் அவர்கள் செய்த ஜீவசக்தி ததும்பும் மொழியாக்கமே முக்கியக் காரணம் என்று கூறலாம். தமிழகமெங்கும் விவேகானந்தரின் சிந்தனைகளை எடுத்துச் சென்றதில் வேறு எந்த நூலையும் விட இந்த நூலின் பங்கு மகத்தானது.

********

‘சுவாமிஜியின் உள்ளம் ஒரு பெரிய சமுத்திரம். சாதாரண சமுத்திரமன்று; சிறந்த இரத்தினாகரம். அதில் அடங்கியுள்ள சிறந்த கருத்துக்களாகிய இரத்தினங்கள் அளவிலடங்கா. அவற்றின் மதிப்பும் ஒளியும் ஒன்றும் நிலையானவை; காலத்துக்குக் காலம் மாறுபாடில்லாதவை; இந்திய மக்கள் ஒவ்வொருவர் நெஞ்சிலும் நிலையாக விளங்கி ஒளிரத் தக்கவை. அவற்றுள் முக்கியமானவை சில மட்டுமே இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. முழுமையும் காண விரும்புவோர் இவை எடுக்கப் பட்ட முதல் நூலுக்குள் செல்ல வேண்டும்’

என்று பத்தாம் பதிப்பின் பதிப்புரை சொல்கிறது.

ஏகநாத் ரானடே அவர்கள் எழுதிய முன்னுரையில் இருந்து சில பகுதிகள் –

ஏக்நாத் ரானடே

‘சுவாமிகளின் உபதேச மொழிகளை நாம் சுருங்கக் கூறின், அவர் நமக்கு ஒரு மகா மந்திரத்தை உபதேசம் செய்ததாக் குறிப்பிடலாம். அது தான் தெய்வ நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் தேவை என்பது. தன்னம்பிக்கையானது உபநிஷத பேருண்மையை அடிப்படையாகக் கொண்டது. “நான் ஆத்மா; என்னை வாள் வெட்டாது. ஆயுதங்கள் துளைக்காது. நெருப்பு எரிக்காது. காற்று உலர்த்தாது. நான் சர்வசக்திமான்” என்று உபநிடதம் முழங்குகிறது. இந்த மந்திரத்த்தைத் தான் சுவாமி விவேகானந்தர் சதா சர்வ காலமும் நமது நாட்டினருக்கு ஆணியடித்தாற்போலப் புகட்டினார். அவர் பேசியவற்றில் எல்லாம், அவரது அருள்மொழியில் எல்லாம், இந்த மந்திரமே முழங்கிற்று. இதுவே அவரது உபதேச கீதத்தின் பல்லவியாக இருந்தது. இவ்வுண்மையின் உட்பொருளை நாம் புரிந்து கொண்டு அதற்குத் தக வாழ்வதற்கான தக்க தருணம் இதுவே. அவ்வாறு நாம் செய்தால், உலகிலுள்ள எந்த சக்தியும் நமக்குத் தீங்கிழைக்க முடியாது… ‘

‘இன்று நாடானது தனது சுதந்திரத்தையும், தனது வருங்காலத்தையும், தனது தர்மத்தையும் தொடர்ந்து பாதுகாப்பதற்காக ஆயத்தம் கொள்ள வேண்டிய நெருக்கடியான சரித்திரக் கட்டத்தில் வாழ்கிறது. இந்த வேளையில் நமது நரம்புகளில் முறுக்கேற்றவும், நமது உறுதிக்கு வலுவூட்டவும் இந்த உபதேசம் மிக அரியதாகும். உறுதுணை புரிவதாகும்..’

‘ஹிந்து தேசத்திற்கு சுவாமிகள் அருளுகிற மற்றொரு உபதேசமும் உண்டு. தமோ குணத்தை நாம் கைவிட வேண்டுமென அவர் கூறுகிறார். ஏனெனில் தமோ குணமானது பலவீனத்தையும், மூட நம்பிக்கையையும், அற்பத் தனத்தையும், சிறு விஷயங்களுக்கான பரஸ்பரச் சண்டை பூசல்களையும் உருவாக்குகிறது. இந்த இழிகுணங்களைக் கைவிட்டு ஒற்றுமை, சங்கம் சேர்த்து இணைந்து பணியாற்றுதல் ஆகிய பாறை போன்ற அடிப்படைகளின் மீது மகாசக்தியை நாம் நிர்மாணிக்க வேண்டும். இவ்வாறு தனித்தனியான நமது விருப்பங்களை ஒன்றுகூட்டி இணைத்து, நமது பழங்காலத்தையும் மிஞ்சக் கூடிய சிறப்புயர்வு வாய்ந்த வருங்காலத்தை நாம் நிர்மாணிக்க வேண்டும்..’



Dr.Anburaj said...

முதல் பாகம் – உபதேச மொழி

தெய்வீகச் செய்தி

நான் கூறுவதைக் கவனத்திற் கொள்க. ஹிந்து என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே உங்களுக்குள் சக்தி மின் அலையைப் போலப் பாயவேண்டும். அப்பொழுது தான், அப்பொழுது மட்டுமே, நீங்கள் ஹிந்து ஆவீர்கள்.

ஹிந்து என்ற பெயர் தாங்கிய மனிதர், எந்த நாட்டினராயினும், நமது மொழியோ அல்லது வேற்று மொழியோ பேசினாலும், அந்தக் கணமே உங்களுக்கு மிகமிக நெருங்கியவராகவும், இனியவராகவும் ஆகிவிட வேண்டும். அப்பொழுது தான், அப்பொழுது மட்டுமே, நீங்கள் ஹிந்து ஆவீர்கள்.

ஹிந்து என்ற பெயர் தாங்கிய மனிதருக்கு ஏற்படும் துன்பம், உங்களது உள்ளத்தை வந்து தாக்கி, உங்களது மகனே துன்பப்படுவது போன்ற உணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அப்பொழுது தான், அப்பொழுது மட்டுமே நீங்கள் ஹிந்து ஆவீர்கள்.

மகாபுருஷனான குருகோவிந்த சிங்கனைப் போல, ஹிந்துக்களுக்காக எதையும் தாங்கச் சித்தமாக இருக்கும்பொழுது தான், அப்பொழுது மட்டுமே நீங்கள் ஹிந்து ஆவீர்கள். ஹிந்து சமயப் பாதுகாப்புக்காக தனது ரத்தத்தைச் சிந்திய பிறகும், தனது குழந்தைகள் போர்க்களத்தில் கொல்லப் படுவதைக் கண்ட பிறகும் – ஆகா! அந்த மகாபுருஷனான குருவின் உதாரணம் தான் என்னே! – யாருக்காகத் தமது உதிரத்தையும், தமது நெருங்கிய மக்களின், இனியவர்களின் உதிரத்தையும் சிந்தினாரோ அவர்களே தம்மைப் புறக்கணித்துக் கைவிட்ட பிறகும் கூட – அவர், அந்தப் படுகாயமுற்ற சிங்கம் – களத்திலிருந்து ஓய்ந்து வெளிவந்தது, தெற்கே வந்து மடிய! நன்றிகெட்டுத் தம்மைக் கைவிட்டவர்களைக் குறித்து ஒரு பழிச்சொல்லைக் கூட அவர் தப்பித் தவறியும் வெளியிடவில்லை.

கவனத்திற் கொள்ளுங்கள். உங்களது நாட்டுக்கு நன்மை செய்ய நீங்கள் நினைத்தால் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு குரு கோவிந்த சிங்கனாக ஆகவேண்டும். உங்களது நாட்டு மக்களிடையே ஆயிரக் கணக்கான குறைபாடுகளை நீங்கள் காணலாம். ஆனால் அவர்களது ஹிந்து இரத்தத்தைக் கவனியுங்கள். உங்களைத் தாக்கிப் புண்படுத்த அவர்கள் நினைத்தாலும் அவர்களே உங்கள் முதல் வழிபாட்டிற்குரிய தெய்வங்கள். அவர்களில் ஒவ்வொருவரும் உங்களுக்குச் சாபமாரி பொழிந்தாலும், நீங்கள் அவர்களுக்கு அன்பு அருள் மொழிகளையே திருப்பியளிக்க வேண்டும். உங்களை அவர்கள் வெளியே துரத்தினால், மகா சக்திசாலியான அந்த சிங்கத்தைப் போல, குரு கோவிந்த சிங்கனைப் போல, வெளியே வந்து அமைதியாக இறக்க வேண்டும். ஹிந்து என்ற பெயர் தாங்க அத்தகைய மனிதனே தகுந்தவன். அத்தகைய லட்சியத்தையே நாம் எப்போதும் நம் முன் வைத்திருப்போமாக.

நம்மிடையே இருக்கும் வேறுபாடுகளைக் குழி தோண்டிப் புதைத்து விடுவோம். நாற்றிசையில்லும் இந்த அபாரமான அன்புணர்ச்சி அலையைப் பரப்புவோம்.

Dr.Anburaj said...

ஆத்மீகத்தின் ஊற்றுமுகம்:

ஞானமானது வேறு எந்த நாட்டுக்கும் செல்லுமுன் இந்தப் புராதன பூமியையே தனது வீடாகக் கொண்டிருந்தது. கடலிலே கலக்கத் துள்ளியோடும் இந்த நாட்டு நதிகள் இந்த நாட்டு மக்களிடையே ஆத்மீக வெள்ளம் எப்படிப் பெருக்கெடுத்துப் பாய்கிறது என்பதை உணர்த்துகின்றன. இந்நாட்டில் சிரஞ்சீவியாய் எழுந்து நிற்கும் இமயமலை படிப்படியாக மேலெழுந்து, பனிமுடி அணிந்து, உயர்ந்து வானுலக ரகசியங்களை நோக்குவது போல உள்ளது. உலகில் எல்லாக் காலத்திலும் வாழ்ந்துள்ள முனிவர்களிலே மிகச் சிறந்தவர்களின் திருவடிகள் நடமாடிய பாரதம் இதுவே தான்.

இங்கே தான் முதன்முதலில் மனிதனின் தன்மையைப் பற்றியும், ஆத்மாவின் இயல்பைப் பற்றியும் ஆராய்ச்சிகள் துவங்கின. “மனிதன் நித்தியமான, சிரஞ்சீவியான ஆத்மா ஆவான். அனைவருக்கும் மேலான ஒரு கடவுள் உண்டு; அவர் இயற்கையினுள்ளும், மனிதனுக்குள்ளும், எங்கும் உறைகிறார்” என்ற உண்மைகள் இங்குதான் கண்டுபிடிக்கப் பெற்றன. சமயத்துக்கும் தத்துவ சாஸ்திரத்துக்கும் சிகரமாக விளங்கக்கூடிய பல உன்னதமான கருத்துகளும் இங்குதான் அதிஉச்ச நிலையை அடைந்துள்ளன. ஆத்மீக ஞானமும் தத்துவ ஞானமும் இந்த நாட்டிலிருந்துதான் பொங்கித் தாவும் அலைபோல மீண்டும் மீண்டும் வெளியே பாய்ந்து உலகத்தை வெள்ளக் காடாக்கின.

தெய்வநிலை எய்தப் போராட்டம்:

எத்தகைய அற்புதமான நாடு இது! இந்தப் புனித நாட்டில் ஒருவர் நிற்பாராயின், அவர் அந்நியராயினும், அன்றி இந்த மண்ணின் மைந்தராயினும், அவரது ஆத்மா கொடிய விலங்கு நிலைக்குத் தாழ்ந்திராவிடில் அவர், உயிர்த்துடிப்புள்ள சிந்தனை உள்ளம் தன்னைச் சுற்றிலும் சூழ்ந்துள்ளதை உணருவார். அது இந்தப் பூமியின் மிகச் சிறந்த, மிகத் தூய்மையான மைந்தர்களின் உயிர்ச் சிந்தனையாகும். அந்த மைந்தர்கள் நூற்றாண்டுகளாக மனிதனை மிருக உணர்ச்சி நிலையிலிருந்து தெய்வநிலைக்கு உயர்த்தப் பணிபுரிந்தார்கள். அவர்களது முதல் தோற்ற காலத்தைக் கண்டுபிடிப்பதில் சரித்திரம் தோல்வியுற்று விட்டது.

இந்த நாடு தத்துவ ஞானத்துக்குப் புனிதமான இடம். நீதிநெறி ஒழுக்கத்துக்கும் ஆத்மீகத்துக்கும் புனிதமான இடம். தனது மிருக சக்திகளுடன் இடையறாது போராடுகிற மனிதனுக்குச் சிறிது ஓய்வு தந்து, சிந்திக்கத் தூண்டுகிற புனிதமான பூமி இது. மிருக இயல்பாகிற ஆடையை மனிதன் கழற்றி எறிந்து விட்டு அமர ஆத்மாவாகப் பிறப்பு இறப்பு அற்றவனாகவும், எப்பொழுதுமே அருள் பெற்றவனாகவும் விளக்கம் பெற்று எழுந்து நிற்கத் தேவையான பயிற்சிக் களமாக விளங்கும் இந்த நாடு, புனித நாடாகும். மகிழ்ச்சியாகிற பாத்திரம் என்றுமே நிரம்பியிருந்த நாடு இது. அதைவிடத் துன்பமும் நிரம்பித் ததும்பியிருந்தது இங்கே. கடைசி முடிவாக மனிதன் இவையெல்லாம் வெறும் பொய்த் தோற்றம் எனக் கண்டுகொண்டான். முதன் முதலில், இங்கே தான் அவன் அதனைக் கண்டான். இங்கேதான் முதன் முதலாக மனிதன் தனது காலை இளமையிலே, போகத்தின் மடிமீது கிடந்த போது சக்தி நிரம்பிப் புகழ் ஓங்கியிருந்த நிலையில், மாயையின் விலங்குகளைத் தகர்த்தெறிந்து வெளியேறினான்.

இங்கே, இந்த மனித சமூகக் கடலுக்கிடையே, சுகம்-துக்கம்; பலம்-பலவீனம்; செல்வம்-ஏழ்மை; மகிழ்வு-வருத்தம்; சிரிப்பு-கண்ணீர்; வாழ்வு-சாவு ஆகிய பலமான கடுஞ்சுழல்கள் ஒன்றையொன்று தாக்குவதன் இடையில் எல்லாம் உருகி இணைந்து, அமர சாந்தியும் அமைதியும் நிலவும் வண்ணம் துறவறத்தின் சிம்மாசனம் எழுந்தது.

இங்கே இந்த நாட்டில் வாழ்வையும் மரணத்தையும் பற்றிய பெரும் பிரச்சினைகளை முதன் முதலில் ஆணித்தரமாகப் பற்றிப் பரிகாரம் கண்டார்கள். வாழவேண்டுமென்ற தாகத்தைப் பற்றி ஆராய்ந்தார்கள். வாழ்க்கையை எப்படியாவது பாதுகாப்பதற்காக மனிதன் பித்துப் பிடித்துப் போராடி அதன் விளைவாகத் துன்பங்களைச் சேர்த்துக் குவித்துக் கொண்டான். இந்தப் பிரச்சினையும் ஆராயப்பட்டுத் தீர்க்கப்பட்டது. இந்த நாட்டில் இப்பிரச்சினை தீர்க்கப்பட்டதைப் போல அதற்கு முன்னர் எங்குமே தீர்க்கப்பட்டதில்லை. இனி வருங்காலத்திலும் தீர்க்கப் படாது. ஏனெனில் இங்கேதான் உண்மையாக உள்ள ஒரு பொருளின் தீய நிழல்தான் வாழ்க்கை என்று கண்டுபிடித்தார்கள்.

Dr.Anburaj said...

இந்த ஒரு நாட்டில்தான் சமயம் நடைமுறையில் வாழ்ந்து காட்டக் கூடியதாக உண்மையானதாக அமைந்தது. பிறநாடுகளில் மக்கள் ஆண்களும் பெண்களும் தம்மைவிட பலம் குறைந்த சகோதரர்களைக் கொள்ளையடித்து வாழ்க்கையின் போகங்களை அனுபவிப்பதற்காகக் கண்மூடித்தனமாகப் பாய்கிறார்கள். ஆனால் இந்த நாட்டில் மனிதர்கள், ஆண்களும் பெண்களும், பேருண்மை ஒளியைத் தம் அனுபூதிச் செல்வமாகப் பெறுவதற்காகவே துணிவுடன் இறங்குகிறார்கள்.

இங்கே, இந்த நாட்டில் மட்டுமே, மனித உள்ளமானது மனிதர்களை மட்டுமல்ல, பறவைகளையும், மிருகங்களையும், செடி கொடிகளையும் தன்னுடன் சேர்த்து அரவணைக்கும் அளவுக்கு விரிவடைந்தது. மிக உயர்ந்த கடவுளர் முதல் சிறு தூசு வரை மிக உயர்ந்தோரும் மிகத் தாழ்ந்தோரும், எல்லோருமே மிக விரிவாக அகன்று, நீண்டு, ஓங்கி வளர்ந்த மனித உள்ளங்களில் இடம் பெற்றுள்ளனர். அத்துடன் இங்குமட்டுந்தான் பிரபஞ்சத்தை ஆராய்ந்து எல்லாமே தொடர்புடைய ஒரே பொருள் தான் எனவும், பிரபஞ்சத்தின் நாடித் துடிப்பு, தன் சொந்த நாடித் துடிப்புதான் எனவும் கண்டார்கள்.

“சாது ஹிந்து”

நமது தாய் நாட்டிடம் உலகம் பட்டுள்ள கடன் அபாரமானது. ஒவ்வொரு நாடாக எடுத்துப் பார்த்தால் எந்த நாடும் பொறுமையான “சாது ஹிந்து”விடம் பட்டுள்ள கடனைப் போல இந்தப் பூமியிலுள்ள எந்த ஓர் இனத்திடமும் கடன்படவில்லை. “சாது ஹிந்து” என்ற சொல் வசைச் சொல்லாகச் சில சமயங்களில் பயன்படுத்தப் பெறுகிறது. ஆனால் ஒரு நிந்தனைச் சொல்லில் எப்பொழுதாவது அருமையான ஓர் உண்மை மறைந்திருக்குமாயின், அப்படிப்பட்ட சொல்தான் இந்தச் “சாது ஹிந்து” என்ற சொல். எப்பொழுதுமே “சாது ஹிந்து” கடவுளின் அருள்பெற்ற குழந்தை ஆவான்.

முற்காலத்திலும், இக்காலத்திலும், மிக்க பெருமை வாய்ந்த கருத்துக்கள் வலிமை வாய்ந்த பெருமை மிக்க இனத்தவரிடமிருந்து தோன்றி வந்துள்ளன. முற்காலத்திலும் இக்காலத்திலும் ஆச்சரியமான கருத்துக்கள் ஓர் இனத்திலுருந்து மற்றோர் இனத்துக்குக் கொண்டுசேர்க்கப்பட்டு வந்துள்ளன. முற்காலத்திலும், இக்காலத்திலும், பேருண்மைகள், சக்தி ஆகியவற்றின் விதைகள், முன்னேறிச் செல்லும் தேசீய வாழ்க்கை அலைகளால் வெளிநாடுகளில் விதைக்கப் பெற்றன. ஆனால் நண்பர்களே, கவனியுங்கள்! அக்கருத்துக்கள் யுத்த பேரிகைகளுடன், அணி வகுத்துச் செல்லும் போர்ப் படைகளின் துணையுடன் சென்று பரவின. ஒவ்வொரு கருத்தையும் இரத்த வெள்ளத்தில் ஊறவைக்க வேண்டியிருந்தது. அந்தக் கருத்துக்களின் ஒவ்வொரு சொல்லையும் லட்சக்கணக்கானவர்களின் புலம்பலும், அநாதையாக்கப் பட்டவர்களின் அலறலும், விதவைகளின் கண்ணீரும் பின் தொடர்ந்து சென்றன. முக்கியமாக மற்ற நாடுகளின் வரலாறு இதனைக் கற்பிக்கின்றது.

கிரீஸ் என்ற நாடு உண்டாவதற்கு முன்பே, ரோம் நாட்டைப் பற்றி எவருமே சிந்திக்காத பொழுதே, இப்பொழுதிருக்கும் ஐரோப்பியர்களின் மூதாதையர்கள் காடுகளில் வசித்து, தமது உடலில் நீல நிறம் தீட்டி வாழ்ந்த பொழுதே இங்கு உயர்ந்த நாகரிகம் இருந்தது. அதற்கும் முன்னரே, சரித்திரம் எட்டிப் புக முடியாத அவ்வளவு பழங்காலத்திலிருந்து, அன்று முதல் இன்று வரை, ஒன்றன் பின் ஒன்றாகப் பல உயர்ந்த கருத்துக்களும் எண்ணங்களும் பாரத நாட்டிலிருந்து அணிவகுத்து வெளியே சென்றன. ஆனால் ஒவ்வொரு சொல்லுக்கும் ஆரம்பத்தில் சாந்தியும் முடிவில் வாழ்த்தும் சேர்த்துக் கூறப்பட்டது. நாம் ஒருபோதும் பிற நாடுகளைப் பலாத்காரமாகப் பிடித்ததே இல்லை. அதன் காரணமாகவே பேரருள் பெற்று வாழ்கின்றோம்.

அமரபாரதம்:

Dr.Anburaj said...

அமரபாரதம்:

முன்னொரு காலத்தில் பெரிய கிரேக்கப் படைகள் அணி வகுத்து வரும் ஒலிகேட்டு உலகம் நடுங்கியது. ஆனால் கிரேக்கர்களின் அந்தப் பழமையான நாடு அடியோடு அழிந்து விட்டது. பின்னால் ஒரு கதை சொல்லக்கூட எஞ்சியிராத நிலையில், நிலப் பரப்பிலிருந்து அது மறைந்து விட்டது. ஒரு காலத்தில் ரோம சாம்ராஜ்யத்தின் கழுகுக் கொடி உலகின் பெருமை வாய்ந்த தேசங்கள் அனைத்தின் மீதும் பறந்துகொண்டிருந்தது. எங்கே பார்த்தாலும் ரோம் நாட்டின் சக்தியை மக்கள் உணர்ந்தார்கள். மனிதகுலம் தலைதூக்க முடியாதபடி அந்தச் சக்தி அழுத்தி வந்தது. ரோமின் பெயர் கேட்டு உலகமே நடுங்கியது. ஆனால் அவர்களின் காபிடலைன் மலை (புராதனக் கோயில்) இன்று இடிபாடுகளின் குவியலாகத்தான் இருக்கிறது. சீஸர்கள் ஆண்ட இடத்தில் சிலந்திகள் வலை பின்னுகின்றன. மற்ற நாடுகளும் இது போலவே புகழோடும் சிறப்போடும் தோன்றி மறைந்தன; சில மணி நேரம் ஆரவாரக் களிப்புடன், சுகபோகம் பெருகி வாழ்ந்து, பிறரை ஆக்கிரமித்துத் தீய முறையான தேசீய வாழ்வில் மூழ்கி, நீர்ப் பரப்பின் மீது தோன்றும் குமிழிகள் போல மாய்ந்து மறைந்தன.

ஆயினும் இன்றும் நாம் வாழ்கிறோம். இன்று மனு மீண்டும் வந்தால்கூட திகைப்படைய மாட்டார். இந்த நாடு அவருக்குப் புதிதாகத் தோன்றாது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒழுங்குறச் சீர்படுத்தப் பெற்று, சிந்தித்து அமைக்கப்பட்டு வந்த அதே சட்டங்கள் சிற்சில இடங்களில் மட்டும் மாற்றம் பெற்று இன்றும் புழக்கத்தில் உள்ளன. நமது முன்னோர்களின் நுண்ணிய பகுத்தறிவின் விளைவாகவும் பல நூற்றாண்டுகளின் அனுபவ வாயிலாகவும் தோன்றிய பழக்கவழக்கங்கள் சாசுவதமானவை போல் அப்படியேயிருக்கின்றன. அன்றியும் காலம் போகப்போக, அவற்றை துரதிர்ஷ்டம் தாக்கத் தாக்க, அந்தத் தாக்குதல்கள் ஒரே ஒரு பலனைத்தான் உண்டாக்கினதாகத் தோன்றுகிறது – அஃதாவது, அப்பழக்க வழக்கங்கள் மேலும் வலிமை பெற்று நிலைத்துவிட்டன. இதற்கெல்லாம் மையப்புள்ளி, இரத்த ஓட்டத்தின் ஊற்றான இருதயம், தேசீய வாழ்க்கையின் ஊற்று, நமது சமயம்தான். உலகில் நான் பெற்ற அனுபவத்துக்குப் பிறகு கூறுவதை நம்புங்கள்.

பல நூற்றாண்டுகளாக ஏற்பட்ட அதிர்ச்சிகளையும், நூற்றுக்கணக்கான அன்னியப் படையெடுப்புகளையும், சமாளித்துத் தாங்கிய அதே பாரதம்தான் இன்றும் உள்ளது. உலகில் உடைக்க முடியாத பாறையையும் விட உறுதியுடனும் இறவாத சக்தித் துடிப்புடனும் அழிக்கமுடியாத ஜீவனுடனும் அது பழைய நிலையிலேயே வாழ்கிறது. அதன் வாழ்க்கை ஆத்மாவின் வாழ்க்கையைப் போன்று ஆரம்பமும் முடிவும் அற்று, அமர நிலையில் இருக்கிறது. அப்படிப்பட்ட நாட்டின் புதல்வர்களே நாம்.

Dr.Anburaj said...

Rabindranath Tagore wrote—

If you want to know India, study Vivekananda.
In him everything is positive and nothing negative.
—Rabindranath Tagore
Image source: Wikimedia Commons
If you want to know India, study Vivekananda. In him everything is positive and nothing negative. (Romain Rolland, in a letter written to Swami Ashokananda informed that Rabindranath Tagore once told him these words. Acknowledgement: Sandeep Biswas, see discussion in the comment section below. —Ed.)
In recent times in India, it was Vivekananda alone who preached a great message which is not tied to any do's don'ts. Addressing one and all in the nation, he said: In every one of you there is Brahman (Bengali: ব্রহ্ম); the God in the poor desires you to serve Him. This message has roused the heart of the youths in a most pervasive way. That is why this message has borne fruit in the service of the nation in diverse ways and in diverse forms of sacrifice. This message has, at one and the same time, imparted dignity and respect to man along with energy and power. The strength that this message has imparted to man is not confined to a particular point; nor is it limited to repetitions of some physical movements. It has, indeed, invested life with a wonderful dynamism in various spheres. There at the source of the adventurous activities of today's youth of Bengal is the message of Vivekananda— which calls the soul of man, not his fingers.[Source]
Some time ago Vivekananda said that there was the power of Brahman in every man, that Narayana (God) wanted to have our service through the poor. This is what I call real gospel. This gospel showed of infinite from man's tiny egocentric self beyond the limits of all selfishness. This was no sermon relating to a particular ritual, nor was it a narrow injunction to be imposed upon one's external life. This naturally contained in it protest against untouchability— not because that would make for political freedom, but because that would do away with the humiliation of man— a curse which in fact puts to shame the self of us all.
Vivekananda's gospel marked the awakening of man in his fullness and that is why it inspired our youth to the diverse course of liberation through work and sacrifice. (see image below)[Source]

Image

Dr.Anburaj said...


I do not know how many of the younger generation read the speeches and the writings of Swami Vivekananda. But I can tell you many of my generation were very powerfully influenced by him and I think it would do a great deal of good to the present generation if they also went through Swami Vivekananda's writings and speeches, and they would learn much from them. That would, perhaps, as some of us did, enable us to catch a glimpse of that fire that raged in Swami Vivekananda's mind and heart and which ultimately consumed him at an early age. Because there was fire in his heart— the fire of a great personality coming out in eloquent and ennobling language— it was no empty talk that he was indulging in. He was putting his heart and soul into the words uttered. Therefore he became a great orator, not with the orator's flashes and flourishes but with a deep conviction and earnestness of spirit. And so he influenced powerfully the minds of many in India and two or three generations of young men and women have no doubt been influenced by him. . . . . .
If you read Swami Vivekananda's writings and speeches, the curious thing you will find is that they are not old. It was told fifty-six years ago, and they are fresh today because, what he wrote or spoke about dealt with certain fundamental matters and aspects of our problems or the world's problems. Therefore they do not become old. They are fresh even though you read them now.
He gave us something which brings us, if I may use the word, a certain pride in our inheritance. He did not spare us. He talked of our weaknesses and our failings too. He did not wish to hide anything. Indeed he should not. Because we have to correct those failings also. Sometimes he strikes hard at us, but sometimes points out the great things for which India stood and which even in the days of India's downfall made her, in some measure, continue to be great.
So what Swamiji has written and said is of interest and must interest us and is likely to influence us for a long time to come. He was no politician in the ordinary sense of the word and yet he was, I think, one of the great founders— if you like, you may use any other word— of the national modern movement of India, and a great number of people who took more or less an active part in that movement in a later date drew their inspiration from Swami Vivekananda. Directly or indirectly he has powerfully influenced the India of today. And I think that our younger generation will take advantage of this foundation of wisdom, of spirit and fire, that flows through Swami Vivekananda.
. . . Our nationalism must not be a narrow nationalism. Swami Vivekananda, though a great nationalist, never preached anything else. His was a kind of nationalism which automatically slipped into Indian nationalism which was part of internationalism. So, it is that broad approach that we must learn from those great men and if we learn it and act up to it to the best of our ability, then we shall honour their memory and we shall serve our country with some advantage, and possible also serve human

Dr.Anburaj said...

Often we recall the glorious deeds of Vivekananda. He was a great man. People forget that he almost belonged to this age because he died young at the age of forty. It was only sixty years back that he had passed away. Various problems, such as the question of the slavery of India and the degradation of the country, were all faced by him, and he raised his voice against them. That, perhaps, was the voice of India. . . . . .
You know that he became a Sannyasin at a young age, and became a disciple of Sri Ramakrishna Paramahamsa. But, along with his spiritual pursuits, he had such a deep love for his country that whatever he said or wrote had a strange effect on us.
. . . We can remember him only by recalling his great voice, his words, and if you study— which of course you must do— what he said fifty or sixty years ago, you will realize how strange a man he was. He had a flame in each of his words. If you study his speeches and writings— it may be in English, the language in which he often spoke and wrote, or in Bengali— you will find them most suitable for the present time. It is not that whatever he said a few years ago has become stale or a historic thing. He had a powerful grip of things. First of all, he strongly believed that Hindustan or Bharata had a special status. It does not mean that she is higher than other countries. All the other countries have their own status. They cannot be compared with India. The thought and culture of India have their own individuality. The people of India have always been imbued with higher ideals. . .
I would have been very happy to meet Swami Vivekananda, had I been so fortunate. I was not a child when he passed away. But I could not see him as I studied in Europe in those days. But whatever he has spoken or written I have read.
Whatever Swamiji wrote or said had a great significance. He had an enlightened brain, a sharp brain. Our brains should function properly along right lines, not that we become simply ostentatious. We should harbour no ill will towards anybody. We should always think about the future of our country. Swamiji awoke the people, made them understand the truth, and asked them to follow the right path. As and when I went through his books or articles, I was very much impressed by him, in fact, everybody will be impressed. I would say that you must read them; and having read, you must analyse them in your mind.
When Swamiji went to America he was hardly thirty. It was very difficult for him to go there, as he had no money. But he had heard that some religious conference was going to be held in America. He had a desire to go there. He had to face difficulty in getting money. Some people collected money for him. So far as I remember the Raja of Khetri also helped him. He was friendly with Swamiji. He got a ticket for him, gave him an overcoat and helped him to go there. He did not go there on behalf of any institution. He had to face difficulty there. But, when he reached there, he saw that speeches were being made in the conference. People were listening to the speeches. All of a sudden they saw a strange person, Vivekananda, clad in Sannyasin's robes. The audience was wonder-struck, and grew anxious to know who the strange man was. He created altogether an atmosphere.

Dr.Anburaj said...

சீர்திருத்தம் என்பது சிதைப்பதன்று, புதுப்பிப்பதாகும்:

உருவ வழிபட்டை எதிர்த்துப் பிரசாரம் செய்து, அதைப் பழிக்கிறவர்களுக்கு நான் கூறுகிறேன்: “சகோதரர்களே! எல்லாவிதமான வெளி உதவிகளையும் கைவிட்டுவிட்டு, உருவமற்ற கடவுளை வழிபட உங்களுக்குத் தகுதி இருக்குமாயின், அவ்வாறே செய்யுங்கள். ஆனால் அது போலச் செய்ய முடியாதவர்களைக் கண்டிக்க உங்களுக்கு உரிமையில்லை. ஏன் கண்டிக்கிறீர்கள்?”

அழகான பெரிய மாளிகை, மிகத் தொன்மையான புகழ் மிக்க புராதனச் சின்னம் அக்கறையின்மையாலோ, பயன்படுத்தாமையினாலோ, இடிந்து சிதைந்த நிலைக்கு இழிந்து விட்டது. அதனுள்ளே எங்கு பார்த்தாலும் அழுக்கும் தூசியும் படிந்து கிடக்கலாம். ஒருக்கால் அதன் சில பாகங்கள் தரை மட்டமாக இடிந்தும் கிடக்கலாம். அந்நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள்? தேவையானபடி தூய்மைப்படுத்துதல், பழுதுபார்த்தல் முதலிய வேலைகள் நடத்தி அதன் மூலம் பழையனவற்றைப் புதுப்பிப்பீர்களா, அல்லது மாளிகை முழுவதையும் தரைமட்டமாக இடித்துத் தள்ளிவிட்டு அந்த இடத்தில் அழகில்லாத- அது நிரந்தரமாக இருக்குமா, இராதா என்பது நிரூபிக்கப்படாத நிலையிலுள்ள- நவீன காலத்திட்டப்படி வேறொரு கட்டிடம் கட்டுவீர்களா? நாம் அதனைச் சீராக அமைக்க வேண்டும்; தேவையானபடி சுத்தப்படுத்தி, பழுது பார்த்து, முறைப்படுத்தவேண்டும் அல்லது நிறைவுறச் செய்ய வேண்டும். அதைத் தரைமட்டமாக்கக் கூடாது. சீர்திருத்தத்தின் உண்மையான பொருள் இதுவே ஆகும். அத்துடன் சீர்திருத்த வேலை முடிவடைகிறது.

ஒரு சீர்திருத்தக் குழு வெறும் சீர்திருத்தத்தில் மட்டும் ஈடுபடுமாயின் அது உயிர் வாழாது; அதிலுள்ள ஆக்க சக்திகள், உண்மையான துடிதுடிப்பு, அதாவது கொள்கைத் தத்துவங்கள் மட்டுமே எப்பொழுதும் வாழ்கின்றன. ஒரு சீர்திருத்தைச் செய்ய முயலும்போது அதன் ஆக்க அம்சத்தையே வலியுறுத்த வேண்டும். கட்டிடம் கட்டி முடித்து விட்டால் முட்டுக் கொடுத்திருக்கும் சாரங்களை அகற்றி விட வேண்டும்.

ஹிந்து மதத்தை ஏன் நாம் கைவிடவேண்டும்? சேர்ந்தே அதில் நீந்துவோம் அல்லது மூழ்குவோம்:

நமது நாட்டிலுள்ள சீர்திருத்தக் குழுவினர், அதற்கு மாறாகத் தமக்கென தனியானதொரு வர்க்கத்தை நிர்மாணித்துக் கொள்ள விரும்புகிறார்கள். எப்படியாயினும் அவர்கள் நல்ல பணி செய்திருக்கிறார்கள். அவர்கள்மீது இறைவன் அருள்பாலிக்க வேண்டும். ஆனால் சீர்திருத்தவாதிகளே! ஹிந்துக்களாகிய நீங்கள் மகத்தான பொதுப் பிணைப்பில் இருந்து ஏன் பிரிந்துபோக விரும்புகிறீர்கள்? மகத்தான மிகப்பெரும் புகழ்வாய்ந்த உடைமையான ஹிந்து என்ற பெயரை உங்களுக்கு வைத்துக்கொள்ள ஏன் வெட்கப்படுகிறீர்கள்?

அழியாப்பேறு பெற்றவர்களின் புதல்வர்களே! எனது நாட்டினரே! நமது தேசீயக் கப்பலானது யுகக்கணக்காக, நாகரிகத்தை ஏற்றிக்கொண்டு தனது மதிப்பிட முடியாத பெருநிதிகளால் உலகையெல்லாம் வளப்படுத்தி வந்துள்ளது. ஒளிமிகுந்து விளங்கிய பலநூற்றாண்டுகளாக வாழ்க்கைக் கடலைக் கடந்து நமது தேசியக் கப்பல் ஓடிவந்துள்ளது. துன்பமெல்லாம் கடந்த ஆனந்த நிலையாகிய மறுகரைக்குக் கோடிக்கணக்கான ஆன்மாக்களைக் கொண்டு சேர்த்திருக்கிறது. ஆனால் இன்றைக்கோ- நமது குற்றத்தினாலோ அல்லது வேறு எந்த காரணங்களினாலோ எப்படியாயினும் கவலையில்லை- அதில் ஓட்டை விழுந்து, பழுதுபட்டுள்ளது. இந்தக் கப்பலில் அமர்ந்துள்ள நீங்கள் இப்பொழுது என்ன செய்வீர்கள்? அதைச் சபித்துக்கொண்டும் உங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக்கொண்டும் பூசலிட்டுக்கொண்டும் நிற்பீர்களா? நீங்கள் அனைஅரும் ஒற்றுமையுடன் ஒன்றுசேர்ந்து ஓட்டைகளை அடைக்க, சிறந்தமுறையில் முயற்சிக்க மாட்டீர்களா? ஆகவே இப்பணியைச் செய்வதற்காக நாம் அனைவரும் நமது நெஞ்சத்து உதிரத்தை மகிழ்வுடன் அளிப்போம். அந்த முயற்சியில் தோற்போமாயின், நமது வாய்களில், வசைமொழியுடனன்றி, வாழ்த்து மொழியுடன், நாம் அனைவரும் ஒன்றாக மூழ்கி மரிப்போம்.


தீமைகள் எல்லாம் நாள்பட்ட கீல்வாதத்தைப் போல:

நமது சமூகத்தில் தீமைகள் மிகுந்துதான் உள்ளன. மற்ற எல்லாச் சமூகங்களிலும் இதைப் போலவே இருந்து வருகின்றன. இங்கே சில வேளைகளில் விதவைகளின் கண்ணீரால் பூமி நனைகிறது என்றால், அங்கே மேற்கு நாடுகளிலோ விவாகமாகாதவர்கள் விடும் பெருமூச்சு வானவெளியை நிறைக்கிறது. இங்கு வறுமைப் பிணி வாழ்க்கையில் நஞ்சாக உள்ளது என்றால், அங்கே மிதமிஞ்சிய சுகபோகங்களினால் அவற்றில் ஏற்பட்ட வெறுப்பு அந்த இனத்துக்கே நஞ்சாகியுள்ளது. இங்கே வயிற்றுக்கில்லாத கொடுமையால் மக்கள் தற்கொலை செய்துகொள்ள விரும்புகின்றனர். அங்கே அளவு கடந்த உணவின் பயனாகவே தற்கொலை செய்துகொள்கின்றனர்.

Dr.Anburaj said...

நாள்பட்ட கீல்வாதத்தைப் போல் தீமை எல்லாவிடத்தும் இருந்துவருகின்றது. காலிலுள்ள வாதத்தை மருந்து முதலியவற்றால் போக்கினால், அது உடனே தலைக்கு வந்து விடுகிறது. அங்கிருந்து விரட்டினால் இன்னோர் இடத்திற்குச் சென்றுவிடுகிறது. இவ்விதம் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குத் துரத்தலாமேயன்றி அடியோடு ஒழித்துவிடுவதென்பது இயலாது. குழந்தைகளே! தீமையை ஒழிப்பது என்பது சரியான வழியல்ல. நல்லது, கெட்டது இவை இரண்டும் நாணயத்தின் இரு பக்கங்களைப் போல் எக்காலத்தும் இணைபிரியாதவை என நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஒன்று உங்களுக்குக் கிடைத்தால், மற்றதும் கிடைத்தே தீரும். கடலின் நீர்ப்பரப்பில் ஓர் அலை எழுமானால் அதற்கு ஈடாக வேறோர் இடத்தில் குழிவிழுவது திண்ணம். அதுமட்டுமல்ல; வாழ்வென்பதே தீமைதான். வேறொரு ஜீவ ஜந்துவைக் கொல்லாமல் மூச்சு விடவே முடியாது. ஒருவன் ஒரு கவளம் உணவு அருந்தியபோதும் அவன் அதன் வழியாக வேறு ஏதாவது ஒரு ஜீவனை மோசம் செய்தவனே ஆகிறான். இதுதான் சட்டம்; இதுவே தத்துவஞானம்.

ஆகவே நாம் செய்யக் கூடியதெல்லாம் ஒன்றுதான். தீமையை எதிர்த்துப் புரியும் காரியங்கள் அனைத்தும் புறச் செயல்களைவிட உள்ளம் சம்பந்தப்பட்டதாகும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாம் எத்தனை வாய் கிழியப் பேசினாலும் சரிதான்; தீமையை எதிர்ப்பது என்பதெல்லாம் நிகழ்வதைவிட, பயிற்சிபூர்வமானது என்பதுதான் அதன் உட்கருத்து. அதுதான் நமக்கு அமைதி தரும்; அதுதான் நம்முடைய இரத்தத்தில் பாயும் வெறியைத் தணிக்கும்.

Dr.Anburaj said...

வெறித்தனமான சீர்திருத்தங்களால் பயன் விளையாது:

வெறியினால் குருட்டுத்தனமான பிடிவாதங்களைக் கொண்ட சீர்திருத்தக்காரர்கள் எங்கெங்கே இருந்தனரோ அங்கெல்லாம் அவர்கள் தமது வேலையில் சித்தியடையவில்லை என்பதை உலக வரலாறுகள் கற்பிக்கின்றன. அமெரிக்க நாட்டில் உரிமையையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட, அடிமைத்தனத்தைப் போக்குவதற்காக ஏற்பட்ட ஒரு யுத்தத்தைவிடப் பெரியதொரு எழுச்சியை ஊகிப்பதும் சாத்தியமில்லை. அதைப்பற்றி உங்களெல்லோருக்கும் தெரியும். அதனால் விளைந்த பயன் என்ன? அடிமைத்தன ஒழிப்புக்கு முன்னிருந்ததைவிட நூறு மடங்கு கேவலமான நிலையில் அவ்வடிமைகள் இன்று உள்ளனர்.

அடிமை ஒழிப்புக்கு முன்னால் இவ்வேழை நீக்ரோக்கள் * யாரோ ஒருவருடைய உடைமைகளாயிருந்து வந்தனர். ஆகவே சொத்துக்களை கவனிப்பது போல அவர்களது எஜமானர்கள் அவர்கள் கெட்டு அழியா வண்ணம் பாதுகாத்து வந்தனர். இன்றைக்கோ அவர்கள் யாருடைய சொத்தாகவும் இல்லை. அவர்களது உயிருக்கு மதிப்பென்பது கிடையாது. அற்பக் காரணங்களுக்காக அவர்கள் உயிருடன் கொளுத்தப் படுகிறார்கள். சுட்டுத் தள்ளப் படுகிறார்கள். அவர்களைக் கொல்லுகிறவர்களுக்கு எதிரான சட்டமில்லை ஏனெனில் அவர்கள் கருப்புத் தோலுடைய ‘நீக்ரோக்கள்’. அவர்கள் மனிதர்களல்ல; மிருகங்களாகக்கூட அவர்கள் ஆகமாட்டார்கள்; பலாத்காரமாகச் சட்டத்தின் மூலமோ அல்லது குருட்டுப் பிடிவாதத்தின் மூலமோ தீமையை அகற்ற முயன்றதால் மேற்கண்ட விளைவுகள் நிகழ்ந்தன.

[* – சுவாமிஜி வாழ்ந்த 1863-1904 காலகட்டத்தில் ‘நீக்ரோ’ என்பது சகஜமான சொல்லாகப் பயன்படுத்தப் பட்டது, இன்று போல அவமதிப்பான சொல்லாக அது கருதப் படவில்லை. அப்போதைய அமெரிக்காவில் கருப்பர்களின் நிலையை உள்ளபடியே சுவாமிஜி இங்கு எடுத்துக் கூறியுள்ளார். இதற்கு அரை நூற்றாண்டு கழிந்த பின்னரே அமெரிக்காவில் கருப்பர்களுக்கான உரிமைப் போரை மார்ட்டின் லூதர் கிங் முன்னெடுத்து வெற்றி பெற்றார்].

இஷ்டதெய்வ வழிபாட்டை, புத்தர் இடைவிடாமல் நிந்தித்து வந்தார். அதன் விளைவாக விக்கிரங்கள் பாரதத்தில் நுழைவு பெற்றன. வேதங்களுக்கு உருவங்களைப் பற்றித் தெரியாது. படைப்பாளனாகவும் நண்பனாகவும் இருந்த கடவுள் தத்துவத்தை இழந்த போது அதற்கு எதிர்ச்செயலாக மகான்களான ஆசான்களின் உருவங்களைச் சமைக்கத் துவங்கினார்கள். புத்தரே விக்கிரகமாக ஆக்கப்பட்டார். அப்படியே அவரை லட்சக்கணக்கான மக்கள் வழிபடுகிறார்கள். பலாத்காரமான சீர்திருத்த முயற்சிகள் உண்மையான சீர்திருத்தத்தை முட்டுக்கட்டையிட்டுத் தடுப்பதில் வந்து முடிகின்றன.

நல்லது செய்வதற்காகவேனும், முரட்டுப் பிடிவாதமான இயக்கத்தைத் துவக்கினால் சரித்திரம் அதற்கு விரோதமாக இவ்வாறு தீர்ப்பளிக்கிறது.

Dr.Anburaj said...

யாருக்குச் சீர்திருத்தம் தேவை?

மற்றொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்கலாம்… பாரதத்தின் பாமரமக்கள் பிறப்புரிமையாகப் பெற்று வந்துள்ள ஞான ஒளியை வெளிப்படுத்தும் வாய்ப்பு அவர்களுக்கு ஒரு காலத்திலும் அளிக்கப்படவில்லை. கடந்த சில நூற்றாண்டுகளாக மேல்நாட்டு மக்கள் சுதந்திரத்தை நோக்கி வெகுவேகமாக முன்னேறி வருகின்றனர். பாரதத்தில் குல நிர்ணயம் முதற்கொண்டு மனிதர்கள் எதைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக்கூடாது என்பது வரை எல்லா விவரங்களையும் தீர்மானித்துத் தருபவன் மன்னன்தான். மேலைநாடுகளில் மக்கள் எல்லாவற்றையும் தாமே செய்துகொள்வது வழக்கம்.

… பாரத மக்களுக்கு, தம்மிடம் சிறிதளவுகூட நம்பிக்கையில்லை. அந்நிலையில் அவர்கள் தம் காலில் நிற்பது பற்றிச் சிந்திக்கவும் முடியுமா? தனது ஆத்மாவில் நம்பிக்கை கொள்வதுதான் வேதாந்தத்தின் அடிப்படை. இது நடைமுறையில், மிகச் சிறிய அளவுக்குக் கூட இன்னும் கொணரப்படவில்லை.

சமூகச் சீர்திருத்தப் பிரச்சினை முழுவதும் ஒரு கேள்விக்குள் ஒடுங்கிவிடுகிறது. சீர்திருத்தம் யாருக்குத் தேவை? முதலில் அவர்களை உண்டாக்குவோம்.

Dr.Anburaj said...

நான்கு லட்சம் சிாியாவைப் சோ்ந்த முஸ்லீம்கள் ..... பாிதாபமான நிலை .இதுதான் இசலாம்

Nearly 400,000 Syrians starving in besieged areas
Deaths from malnutrition reported as three towns wait desperately for promised food aid to arrive from Damascus.As aid agencies prepare to deliver food to Madaya, on the outskirts of Damascus and two other besieged towns in Idlib province, an estimated 400,000 people are living under siege in 15 areas across Syria, according to the UN.

A deal struck on Saturday permits the delivery of food to Madaya, currently surrounded by forces loyal to Syrian President Bashar al-Assad, and the villages of Foua and Kefraya in Idlib, both of which are hemmed in by rebel fighters.
Inside Story - Syrians facing starvation: is there any hope left?

Due to a siege imposed by the Syrian government and the Lebanese Hezbollah group, an estimated 42,000 people in Madaya have little to no access to food, resulting in the deaths of at least 23 people by starvation so far, according to the charity Doctors Without Borders (MSF).

Reports of widespread malnutrition have emerged, some of them suggesting that Madaya residents are resorting to eating grass and insects for survival.

In Kefraya and Foua, about 12,500 people are cut off from access to aid supplies by rebel groups, including al-Nusra Front.

On December 26, Syrian government forces set up a checkpoint and sealed off the final road to Moadamiyah, a rebel-controlled town on the outskirts of Damascus, demanding that opposition groups lay down their arms and surrender.

The Moadamiyah Media Office, run by pro-opposition activists, estimates that 45,000 civilians have been stuck in the area for more than two weeks.

Dr.Anburaj said...



மிகச் சதாரண சம்பவம்.அரேபிய அடிமைத்தனம் தவிர வேறு இல்லை.

Dr.Anburaj said...


நன்றி ஐயா. சுவாமி விவேகானந்தா் குறித்த எனது பதிவுகளை வெளியிட்டு உதவியமைக்கு

தங்களுக்கு எனது மனப்புா்வமான நன்றியைத் தொிவித்துக் கொள்கின்றேன்.

---------------------------------------------------------------------------

ஈரான் நாட்டைச் சோ்ந்த முஸ்லீம் ஒரு வா் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் சோ்ந்து துறவியாகி

சுவாமி காங்கானந்தா் என்ற பெயா் தாங்கி தொண்டுகள் செய்து வருகின்றாா்.

ஆதாரம் ஜனவாி மாத ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்.