Followers

Tuesday, September 10, 2013

நரேந்திர மோடி போட்டுக் கொள்ளும் புர்கா!



ஜெய்ப்பூரில் இன்று நடந்த பிஜேபி கூட்டத்துக்கு ஒரு சில முஸ்லிம்களை பணம் கொடுத்து கொண்டு வந்துள்ளனர். அவர்களும் வாங்கிய பணத்துக்கு வஞ்சகம் இல்லாமல் புர்கா போட்டுக் கொண்டு போஸ் கொடுத்து விட்டு சென்றுள்ளனர். மோடிக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? இதில் எத்தனை பிஜேபி இந்து பெண்கள் புர்கா போட்டுக் கொண்டு வந்தனர் என்ற உண்மை மோடியிடம் கேட்டால் தெரிய வரும் :-)

தனக்கு முஸ்லிம்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறது என்பதை நமது நாட்டுக்கு தெரிவிக்கிறாராம். இந்துக்களே இதனை நம்பாத போது முஸ்லிம்கள் யாரேனும் நம்பி விடுவார்களா என்ன? முஸ்லிம்களின் ஆதரவை பெற வேண்டுமென்றால் குஜராத்தில் நடந்த கலவரத்துக்கு காரணமான அனைத்து கயவர்களையும் சட்டத்தின் முன் கொண்டு வந்தாலே போதும்: முஸ்லிம்களுக்கு அவர்களின் விகிதாச்சாரத்திற்கேற்ப அரசு வேலை வழங்கினாலும் போதும்: முஸ்லிம்களின் ஓட்டு கணிசமாக பிஜேபிக்கு செல்லும். அதனை விடுத்து இது போன்ற கண்ணா மூச்சி விளையாட்டுக்களை பிஜேபியினர் கை விட வேண்டும். தேர்தல் நெருங்க நெருங்க இனி மோடியின் தலையில் முஸ்லிம்கள் அணியும் தொப்பியை காணலாம். சுஷ்மா ஸ்வராஜ் இனி புர்கா அணிந்து கூட்டத்தில் கலந்து கொள்வதை எதிர்பார்க்கலாம். சிறுபான்மையினரை காங்கிரஸ் திருப்திபடுத்த பல வேலைகளை செய்து வருகிறது என்று ஓயாமல் கூவி வந்த மோடி தற்போது என்ன செய்து வருகிறார்? இவர் செய்யும் காரியத்துக்கு என்ன பெயர் வைப்பது?

பிரதமர் பதவியின் மேல் உள்ள ஆசை இந்த மனிதனை என்னவெல்லாம் செய்யச் சொல்கிறது?

எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்....

இந்துக்களும் முஸ்லிம்களும், கிறித்தவர்களும் இந்த அரசியல்வாதிகளின் குள்ளநரித்தனங்களை புரிந்து கொண்டு இவர்களை ஓரம் கட்ட ஓரணியில் திரள வேண்டும். அப்போதுதான் இந்தியா தலை நிமிரும்.

-------------------------------------------------------

By Anil Dogra-

JALANDHAR: The North American Punjabi Association (NAPA), a representative organization and voice of overseas Punjabis settled in North America and a Political Pressure Group in Punjab today called on the Central government to initiate prosecution of Chief Minister Narendra Modi, following the written confession of disgraced Deputy Inspector General (DIG) of Gujarat, DG Vanzara who has been in prison since 2007 on trial for several extra-judicial killings, including that of 19 year-old Mumbai student Ishrat Jahan in 2004.

Releasing the Press Statement Satnam Singh Chahal Executive Director of North American Punjabi Association said that the explosive letter has shaken the nation for the gravity of the charges it contains against Narendra Modi and his Home Minister Amit Shah. Vanzara has revealed that the "fake encounters" in Gujarat, were a conscious policy adopted by the Modi administration. The fact that these killings furnished the 'halo of a brave chief minister' to Modi is an indication of the cold-blooded political chicanery behind the encounters.

Chahal said that this is the first time that a police officer of Vanzara's rank, has publicly cited Modi's approval of the killings committed in the name of fighting terror, and his endorsement of the state police's brutality in return for political gain. Modi's disregard for the rule of law has been known since the carefully orchestrated Gujarat pogrom of 2002, which according to human rights organizations and revelations by senior officers such as Sanjeev Bhatt and R. B. Sreekumar, took place with Modi's complicity.

The people of Gujarat have suffered enough. This dark night of state terror must give way to a new dawn, of respect for democracy, the rule of law and the sanctity of human life," said Chahal. "This is the time for the judiciary to demonstrate its independence and its adherence to the dictum. 'Be you ever so high, the law is above you,'" added Chahal

Source : Punjab Newsline Network
- See more at: http://www.punjabnewsline.com/punjab/napa-demands-prosecution-of-modi-for-using-senior-police-officers-to-carry-fake-encounters/86404#sthash.rnbOIF9Z.fOGLRAeO.dpuf



3 comments:

VANJOOR said...

மோடி வேலை - பாஜக திட்டம்!

ஜெய்ப்பூர்: பாரதிய ஜனதா கட்சியின் 'முஸ்லிம்களைக் கவர்ந்திழுக்கும் மோடி வேலை'யின் ஒரு பகுதியாக, தொப்பியும் ஜிப்பாவும் அணிந்த அஜ்மீர் தர்கா பிரமுகர்களைக் கொண்டு,

நரேந்திர மோடியை கவுரவிக்கும் விழா ஒன்றை செப்டம்பர் 10ஆம் தியதி நன்கு வடிவமைக்கும் விதமாக, கணிசமான அளவு முஸ்லிம்களை இவ்விழாவில் திரள வைக்க முஸ்லிம்களின் பாரம்பரிய உடைகளான ஷெர்வானி (ஜிப்பா) மற்றும் தொப்பி ஆகியவற்றை அவர்கள் அணிந்து காட்சி அளிப்பது ஊடகங்களின் வழியாக பரப்பப்படவும் வேண்டும் என்று பாஜக மூத்த பிரமுகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனராம்.

விழாவில் கட்சியின் இந்தியத் தலைவர் ராஜ்நாத் சிங்க்குக்கும், குஜராத் முதல்வர் மோடிக்கும் தஸ்தர்பந்தி எனப்படும், தர்கா படத்துடன் கூடிய மரியாதை செய்யப்பட இருக்கிறதாம்..

ஒரு இலட்சம் சிறுபான்மை (முஸ்லிம்) மக்களுக்கு இவ்விழா குறித்த குறுஞ்செய்தி தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும்,

இரண்டாயிரம் புர்கா அணிந்த பெண்கள் உடபட, குறைந்தது பத்தாயிரம் பேர் இவ்விழாவில் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

ஆண்கள் கட்டாயமாக தங்கள் முஸ்லிம் புற அடையாளத்துடனேயே (தொப்பி போன்றவையுடன்) கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பாஜகவின் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

எல்லையில்லா "இழிநிலை"யில் ராஜஸ்தான் முஸ்லிம் சமூகம்!

ராஜஸ்தான் மாநிலத்தின் புகழ்பெற்ற "அஜ்மீர் தர்கா" அமைந்துள்ள, முக்கிய கடை வீதிகளில், ஆர்.எஸ்.எஸ்.ன் "சாகா-பயிற்சி" ஊர்வலத்தில், குண்டர்கள் மீது "மலர் தூவி வரவேற்க" முஸ்லிம்கள் கட்டாயப்படுத்தப்படுத்தப்பட்டனர்.

Click here to see picture >>>>>

(03/02/13) நடந்த "சாகா பயிற்சி" ஊர்வல பாதையில் வழிநெடுக இருபுறமும் காத்திருந்துமுஸ்லிம்களை கொன்றொழிக்கும் ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் மீது உயிருக்கு பயந்து முஸ்லிம்கள், மலர் தூவி வரவேற்றனர்.


ராஜஸ்தான் போன்ற சிறிய எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில், கோவில்களில் நடக்கும் பூஜை-புனஸ்காரங்கள் உள்ளிட்ட செயல்களிலும் முஸ்லிம்கள் ஈடுபட நிர்பந்திக்கப்படுகின்றனர்.

விழாக்காலங்களில் கோலமிடுவது, நாக பூஜைகளின்போது "பாம்பு புத்துக்களில் பாலூற்றுவது" சரஸ்வதி பூஜையின்போது நடனமாடுவது உள்ளிட்ட காரியங்களில் முஸ்லிம் பெண்மணிகள் கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இத்தனைக்கும், தமிழகத்தைவிட பன்மடங்கு அதிகமாக "தப்லீக்" வேலைகள் நடக்கும் மாநிலமாக இருந்தும்,

தொழுகை போன்ற வணக்கங்கள் - பர்தா உள்ளிட்ட ஒழுக்கங்களை பேணும் முஸ்லிம் பெண்கள், உயிருக்கு பயந்து - சூழ்நிலைக்கு அஞ்சி, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

நன்றி: மறுப்பு

suvanappiriyan said...

ஸ்ரீநகர் : கடந்த வாரம் சி.ஆர்.பி.எப்., வீரர்களால் சோபியான் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட 4 பேரும் உள்ளூர்வாசிகள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனால் உயிரிழந்தவர்கள் 4 பேரும் பயங்கரவாதிகள் எனவும், அவர்கள் அனைவரும் தங்களை தாக்க முயற்சி செய்ததாகவும் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் தெரிவித்திருந்தனர். இதற்கு உள்ளூர்வாசிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த விசாரணையில் உயிரிழந்தவர்கள் அனைவரும் உள்ளூர்வாசிகள் என தெரிய வந்துள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=801193

Anonymous said...

அண்ணாச்சி உங்கள் தாய் இத்தாலியின் தலைமையில் எங்கள் நாடு நன்றாக தலை நிமிர்ந்து உள்ளது.

இப்படிக்கு
அவனே நான்...