Followers

Wednesday, November 19, 2014

அன்றைய அரபுலகமும் இன்றைய இந்தியாவும்!



ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் பெண் ஒருவர் நிர்வாணமாக கழுதை மீது ஏற்றப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சிகார் மாவட்டம் கன்கரா கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு உள்ளூர் கிராமப் பஞ்சாயத்து அளித்த தீர்ப்பின்படி இந்த கொடூரச் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜசமந்த் என்ற கிராமத்திலும் ஒரு பெண்ணுக்கு நிர்வாண ஊர்வல தண்டனை வழங்கப்பட்டது. அச்சம்பவத்தின் தாக்கம் விலகுவதற்குள் மீண்டும் அப்படி ஒரு கொடூரம் நடந்துள்ளது.

இது குறித்து போலிஸ் எஸ்.பி. ரவி கூறியதாவது, "பாதிக்கப்பட்ட பெண்ணின் 10 வயது மகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து பெண்ணின் கணவரை கைது செய்துள்ளோம். கழுதை மீது ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டபோது அவர் வாயில் துணியை திணித்துள்ளனர். இதனால் அந்தப் பெண் மயங்கி விழுந்துள்ளார்" என்றார்.

தமிழ் ஹிந்து - நவம்பர் 17 2014

http://tamil.thehindu.com/india/article6607939.ece?utm_source=vuukle&utm_medium=referral

--------------------------------------------------------

A tribal woman in Madhya Pradesh was allegedly gangraped by 10 persons, including her husband, paraded naked and forced to drink urine in front of her minor son following a land dispute.

After the woman lodged a complaint in which she alleged that the attack was carried out at the behest of her husband, all the accused were nabbed, police said.

மற்றொரு சம்பவத்தில் அதே ராஜஸ்தானில் ஒரு பெண் 10 பேரால் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். அந்த 10 பேரில் அந்த பெண்ணின் கணவனும் அடங்கும். அனைவர் முன்னிலையிலும் அந்த பெண்ணை நிர்வாணமாக்கியும் உள்ளனர். அதன் பிறகு அந்த பெண்ணின் மகனுக்கு முன்னால் சிறுநீரை குடிக்கச் சொல்லியுள்ளது அந்த காட்டுமிராண்டி கும்பல்.

http://www.thehindu.com/news/national/other-states/woman-gangraped-by-10-men-including-husband-in-mp/article6116679.ece

ஹிந்து நாளிதழ் - 06-14-2014

-------------------------------------------------------------



அதே மத்திய பிரதேசத்தில் சாராபஞ்ச் என்ற கிராமத்தில் தனது சொல்லைக் கேட்காத கீழ் சாதி பெண்ணை 3 மணி நேரம் ஆடைகளை களைந்து அம்மணமாக நிற்க வைத்துள்ளனர். அடித்தும் உள்ளனர். இவை அனைத்தும் மேல் சாதியினர் கிராமத்தில் வைத்து நடந்துள்ளது.

இந்து மக்களை காப்பாற்ற நாங்கள் ஒருவரே முழு அதாரிட்டி என்று வாய் கிழிய பேசும் மோடியின் பிஜேபிதான் அங்கு ஆட்சி செய்கிறது. இதுதான் இந்து மதத்தைக் காப்பாற்றும் லட்சணமா?

இஸ்லாம் வருவதற்கு முன்பு அன்றைய அரபுலகம் எவ்வாறு இருந்தது என்பதை தெரிந்து கொள்ள இன்றைய நமது மத்திய பிரதேசம், உபி, பீஹார் போன்ற மாநிலங்களின் தலித் மற்றும் பிறபடுத்தப்பட்ட மக்களின் குடியிருப்புகளையும் அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

No comments: