Followers

Wednesday, November 26, 2014

இந்துவின் உயிர் காக்க தன் உயிர் விட்ட முஸ்லிம்கள்!



உபியில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக கலந்து வாழும் ஓர் ஊர் மொராதாபாத். இங்கு சுமன் என்ற பெண் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இதனை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த நுஃமான், தனீஷ் என்ற இரு இஸ்லாமிய இளைஞர்கள் தத்தளித்துக் கொண்டிருந்த அந்த பெண்ணை காப்பாற்ற அந்த வெள்ளத்தில் குதித்தனர். ஆனால் நீரின் வேகம் அதிகரிக்கவே அந்த இளைஞர்களால் அந்த பெண்ணைக் காப்பாற்ற முடியவில்லை. இவர்களாலும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. ஆம். இந்த இரு இளைஞர்களும் நீரால் அடித்துச் செல்லப்பட்டனர். 36 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மூன்று உடல்களையும் ராணுவத்தினர் மீட்டனர்.

இரு இஸ்லாமிய இளைஞர்களின் சவ(ஜனாஜா) ஊர்வலத்தில் பல இந்துக்கள் தங்கள் தோள்களால் அந்த தியாகிகளை சுமந்து சென்றனர். வழி நெடுக இந்து பெண்கள் மலர்களை தூவி அந்த இளைஞர்களுக்கு தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். 'யாரோ சாலையில் இறந்து கிடந்தாலும் நமக்கென்ன என்று செல்பவர்களை பார்த்துள்ளோம். ஆனால் இந்த இளைஞர்கள் தங்கள் உயிரை விட மற்றவரின் உயிருக்கு மதிப்புக் கொடுத்த தன்மை எல்லோருக்கும் வந்து விடாது. இந்த இரு இளைஞர்களும் எங்கள் பார்வையில் உண்மையில் ஹீரோக்கள்' என்று புகழ்ந்தார் அந்த ஊரின் இந்துவான சக்தி மல்ஹோத்ரா.

'எங்கள் நகரம் சமூக ஒற்றுமையில் சிறந்து விளங்குவதை இந்த நிகழ்வு எடுத்துக் காட்டுகிறது' என்கிறார் உள்ளூர் வாசியான முஸ்லிம் இக்ராம் குரைஷி. இறந்த மூன்று குடும்பத்தினருக்கும் தலா ஐந்து லட்சம் அரசு தரப்பில் வழங்கப்படும். அரசு உத்தியோகமும் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆதாரம்:

-முஸ்லிம் மிர்ரர்
-ஹிந்துஸ்தான் டைம்ஸ்
24-09-2014



குஜராத்தில் அப்பாவியான ஒரு முஸ்லிம் கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து அந்த சிசுவையும் வெளியில் இழுத்து நெருப்பில் இட்டவர்களும் நமது நாட்டிலேதான் வாழ்கிறார்கள். தனது உயிரையும் துச்சமாக மதித்து ஒரு இந்து பெண்ணை காப்பாற்ற முயற்சித்து உயிர் விட்ட இந்த இரு இஸ்லாமிய இளைஞர்களும் நமது நாட்டில்தான் வாழ்கிறார்கள். மனிதரில்தான் எத்தனை நிறங்கள்!

'ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்'

-குர்ஆன் 5:32

1 comment:

Dr.Anburaj said...

குஜராதிதிலும் கலவசத்தின் போது பல இந்துக்கள் முஸ்லீம்களை பாதுகாத்திருப்பாா்கள்.அந்தச்சமபவங்களை எழுதுங்கள். என்ன கெட்ட புத்தி த்ங்களுக்கு