Followers

Friday, January 18, 2019

கும்பமேளாவினால் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழப்பு!

கும்பமேளாவினால் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழப்பு!
உபியின் கான்பூர் தெருக்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. கிட்டத்தட்ட 250 தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. உபியை ஆளும் யோகி ஆதித்யநாத் அரசு கும்பமேளாவுக்காக 3 மாதத்துக்கு அனைத்து தொழிற்சாலைகளையும் மூடச் சொல்லி ஆணை பிறப்பித்துள்ளது. தினக் கூலிகள், தோல் பதனிடுவோர் என இரண்டு லட்சம் பேர் இதனால் வேலையிழந்து உள்ளனர்.
பெரும் முதலாளிகளோ '3 மாதம் வரை எங்களால் பொருத்திருக்க முடியாது. எங்கள் ஆர்டர்களை பாகிஸ்தான், பங்களாதேஷூக்கு திருப்பி விடுகிறோம்' என்று கூறுகின்றனர். இதனால் இரு நாடுகளும் பலனடையப் போகின்றன.
சிறு தொழில் அமைப்பின் தலைவரான ஹஃபீஸூர் ரஹ்மான் கூறுகிறார் 'இது முதல் முறையாக நடைபெறுகிறது. மூன்று மாதம் என்பது மிக அதிகம். முன்பெல்லாம் குளியல் நடைபெறும் 3 நாட்களுக்கு மட்டும் தொழிற்சாலைகளை மூடுவோம். அதனால் பெரும் பாதிப்பும் எங்களுக்கு இல்லை. மூன்று மாத தடையால் ஏற்கெனவே வாங்கிய ஆர்டர்களை இப்போது திருப்பி கொடுத்துள்ளோம். எங்களுக்கு வந்த ஆர்டர்கள் எல்லாம் தற்போது பாகிஸ்தானுக்கும், பங்களாதேஷூக்கும் சென்று விட்டது. லட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து நிற்கின்றனர். வருடத்துக்கு 7000 கோடிக்கு மேல் தொழில் நடந்து நமது நாட்டுக்கு அந்நிய செலாவணியையும் தந்து கொண்டுள்ளன இத் தொழிற்சாலைகள். இன்று அனைத்தும் கேள்விக் குறியாகியுள்ளது.' என்கிறார்.
தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
19-01-2019
யோகி ஆதித்யநாத் போன்ற சாமியார்களுக்கு உழைப்பின் மகத்துவம் விளங்க வாய்ப்பில்லை. வழக்கமாக கும்பமேளா நாட்களில் 3 நாட்கள் மட்டுமே தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கும். மூன்று மாதம் மூடப்படுவதால் லட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கின்றனர். நமது நாட்டுக்கு கிடைத்த அந்நிய செலாவணி இன்று பாகிஸ்தானுக்கு சென்று விட்டது.
"போலோ பாரத் மாதா கீ ஜே'


1 comment:

Dr.Anburaj said...

மாயாவதியும் அகிலேஸ்யாதவ் மற்றும் ராகுல் காந்தி போன்றவர்கள் என்ன மயிர் பிடிங்கவா சென்று விட்டார்கள் ? எதிா்கட்சியினா் செய்தது என்ன ?