Followers

Sunday, January 13, 2019

துபாய் மன்னரின் எளிமை....

துபாய் மன்னரின் எளிமை....
கோடிகளில் புரளும் துபாய் நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் மன்னர் எவ்வளவு எளிமையாக நடந்து கொள்கிறார்! மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நம் நாட்டு மந்திரிகளிடம் கூட இந்த எளிமையை எதிர் பார்க்க முடியாது. இஸ்லாம் இவருக்கு எடுத்த பாடத்தினால் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.


2 comments:

Dr.Anburaj said...


சம பந்தி விருந்தில் கலந்து கொள்வது எளிமையான வாழ்க்கையா ?

அரேபியா்கள் வயிறு புடைக்க சாப்பிடுவதில் வல்லவர்கள். அரேபியர்கள் சாப்பிட 30 நிமிடங்களுக்கு மேல் ஆகும்.

சதா அரேபியர்கள என் புகழ்ந்து பதிவு செய்வது ஏன் ? அரேபிய அடிதை்தனம்தானே காரணம் ? லால் பகதூா் சாஸ்தரியின்வாழ்க்கையில் இருந்து ஒரு நாளாவது ஒரு பதிவை செய்தது உண்டா ?

Dr.Anburaj said...

காசி இந்து பல்கலைக்கழகத்தை உருவாக்குயவா் திரு.மதம் மோகன் மாளவிளா. முன்னாள் பாதுகாப்புதுறை அமைச்சராக இருந்த திரு.ஜெகஜீவன்ராம் அவர்களை மேற்படி பல்லைக்கழகத்தில் சோ்த்து படிக்க வைத்தாா். அங்கு சாதி மனப்பான்மை தலை தூக்கியது. ஜெகஜீவன்ராமின் தட்டு தனியாக வைக்க கட்டாயப்படுத்தினார்கள் சில மாணவர்கள். இதை அறிந்த திரு.மாளவிவியா விடுதிக்குச் சென்று திரு.ஜெகஜீவன்ராம் சாப்பிட்ட எச்சில் தட்டு கழுவி சுத்தம் செய்தாா்.திரு.ஜெகஜீவன்ராம் அவர்களை புறக்கணித்தால் தினசரி அவர் சாப்பிட்ட தட்டை தான் கழுவ வருவேன் என்று அறிவித்தாா்.அனைத்து மாணவர்களும் ஒன்று கூட்டி மனிதனை மனிதன் மதித்து நடக்க வேண்டும் என்பதை உறுதி செய்தாா். தீண்டாமை ஒழிந்தது. உயா் மதிப்பெண்கள் பெற்று திரு.ஜெகஜீவன்ராம் அவர்கள் தோ்ச்சி பெற்று உள்துறை அமைச்சா் பாதுகாப்புத்துறை அமைச்சா் போன்ற உயா்ந்த பதவிகளைப் பெற்று நாட்டுக்குத் தொண்டு செய்தாா்.
----------------------------------------------------------------------------------------
தமிழ் நாட்டில் ஆதிதிராவிட மகாஜன மக்களை வைத்து அரசியல் செய்து பிழைப்பவர்கள்தான் சீர்திருத்தவாதிகளாக தங்களை காட்டிக் கொள்கின்றார்கள்.இவர்களின் செயல்முறைகளில் போலித்தனம் வெளிவேசம் அதிகம் உள்ளது. இதனால்தான் தீண்டாமையின் சுவடுகள் இன்னும் அழியாமல் உள்ளது. வருந்தத்தக்க விசயம். ஆா்எஸ்எஸ போன்ற இந்து இயக்கங்களின் பயிற்சி முறைக்குள் ஆதிதிராவிட மகாஜன மக்கள் அனைவரையும் கொண்டுவந்து விட்டால் தீண்டாமை முற்றிலும் ஒழிந்து விடும்.