Followers

Saturday, January 19, 2019

5 கிலோ மீட்டர் தனது தாயாரை சுமந்து சென்ற சரோஜ்!

5 கிலோ மீட்டர் தனது தாயாரை சுமந்து சென்ற சரோஜ்!
ஒரிஸ்ஸாவின் கர்பாபகல் கிராமத்தை சேர்ந்தவர் சரோஜ்(வயது 17). இவரது தாயார் இறந்து விட்டார். ஆனால் உடலை எடுத்துச் செல்ல அக்கம் பக்கத்தவர் யாரும் உதவ முன் வரவில்லை. காரணம் இவர் ஒரு கீழ் சாதி இந்து. என்ன கொடுமை!
தனது தாயாரின் உடலை தனது சைக்கிளில் வைத்து 5 கிலோ மீட்டர் தூரமிருக்கும் காட்டுக்குள் சென்று எரியூட்டியிருக்கிறார் சரோஜ். நாம் வாழ்வது நாகரிக சமூகத்தில்தானா என்ற ஐயம் ஏற்படுகிறது.
தகவல் உதவி
இந்தியா டுடே
17-01-2019


1 comment:

Dr.Anburaj said...

படிப்பதற்கு மிக மிக வேதனையாக இருக்கின்றது.நாம் வாழ்வது நாகரிக சமூகத்தில்தானா என்ற ஐயம் ஏற்படுகிறது.முறையான சமய கல்வியை அளிக்காவிட்டால் மனிதன் மாக்களாக மாறிவிடுவான்.700 வருட முகலாளர்கள் ஆட்சியில் இந்துக்களின் சமய சமூக அமைப்பு நாசமாகிப்போனது. 200 ஆண்டுகால் ஆங்கிலேயா்கள் ஆட்சியில் இந்துக்களின் சமய சமூக அமைப்புகள் நாசம் செய்யப்பட்டது.“நடமாடும் கோவில் நம்மவர்கள்“ என்று மனிதனை சிறப்பித்து அடையாளப்படுத்தும் இந்து மதத்தில் இப்படியும் நடககுமா ? வேதனை வேதனை.முறையான சமய கல்வியை அளித்து மக்களை நல்வழிப்படுத்தாவிட்டால் பெரும் வேதனைகள் தொடரத்தான் செய்யும். இந்து அறநிலையத்துறையை அரசு கைபற்றி முடக்கி போட்டுள்ளது.