Followers

Tuesday, January 15, 2019

மும்பையில் மூன்று இஸ்லாமியர் தாக்குதலுக்கு உள்ளாயினர்!

மும்பையில் மூன்று இஸ்லாமியர் தாக்குதலுக்கு உள்ளாயினர்!
மும்பை லோனோவால் பகுதியில் குதிரை ஏற்றம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது குஜராத்தின் வதேதராவைச் சேர்ந்த ஆஷிம் மேமன்(32), சுஃபியான் மேமன்(30), அஹமது மேமன்(28) என்ற இந்த மூவரும் குதிரை சவாரி செய்துள்ளனர். சவாரி முடிந்தவுடன் பேசிய தொகைக்கு அதிகமான தொகையை குதிரை ஓட்டி கேட்டுள்ளார். 'இது அநியாயம்.... நாங்கள் பேசிய தொகையைத்தான் தருவோம்' என்றுள்ளனர் அந்த இஸ்லாமிய குடும்பத்தினர். உடனே தனது சக குதிரை ஓட்டிகளை அழைத்து அந்த குடும்ப உறுப்பினர்களை கடுமையாக தாக்க ஆரம்பித்துள்ளனர். தாக்கி விட்டு ஓடி விட்டனர். கடுமையான காயமடைந்த மூவரும் தற்போது தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. வழக்கு மட்டுமே பதியப்பட்டுள்ளது.
மோடி, அமீத்ஷா போன்ற இந்துத்வாக்கள் விதைத்த இஸ்லாமிய வெறுப்பு சாமான்ய மக்களையும் பாதிக்கிறது. இது ஒரு வளரும் நாட்டுக்கு அழகல்ல...
தகவல் உதவி
கேரவன் டெய்லி
15-01-2018


No comments: