Followers

Monday, January 14, 2019

ராம் ஜெத்மலானி...

ராம் ஜெத்மலானி...
இந்திய அரசியலில் பிரபலமான பெயர். இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றவர். மத்திய சட்ட அமைச்சராகவும் பணியாற்றியவர். பல ஊழல் வழக்குகளை திறம்பட கையாண்டவர். இனி இவரது எண்ணங்களை பார்போம்.
'ஒரு வக்கீலாக இருந்து பல மதங்களின் மார்க்கங்களின் நூல்களை படித்துள்ளேன். இஸ்லாத்தின் தூதுவரான நபிகள் நாயகம் மிகச் சிறந்த தூதுவர் என்ற முடிவுக்கு வந்தேன். இதை பல இடங்களில் கூறியுள்ளேன். நபிகள் நாயகம் அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தை தங்கள் வாழ்வில் முஸ்லிம்கள் கடை பிடித்தால் உலகிலேயே மிகச் சிறந்த நாகரிகத்துக்கு சொந்தக்காரர்களாக இஸ்லாமியர்கள் மாறி விடுவர். நான் இந்துவாக இருந்தாலும் இஸ்லாத்தின் பல சட்டங்களை இன்றும் பின்பற்றி வருகிறேன்.'
'நபியே! உம் இறைவனின் பாதையில் மக்களை விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும் அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன்வழியை விட்டுத் தவறியவர்களையும் அவன் வழியைச் சார்ந்து நேர்வழிப் பெற்றவர்களையும் நன்கு அறிவான்.'
16 : 125 - குர்ஆன்


2 comments:

Dr.Anburaj said...

"Prophet Mohammed is one of the greatest Prophets" என்று வீடியோவில் இராம் ஜேத்மலானி கூறுகின்றார்.ஆனால் தாங்கள் அதை இஸ்லாத்தின் தூதுவரான நபிகள் நாயகம் மிகச் சிறந்த தூதுவர் என்ற முடிவுக்கு வந்தேன் என்று பொய்யாக மொழி பெயா்த்துள்ளீா்கள். சிறந்த பலரில் இவரும் ஒருவா் என்றுதான் இராம் ஜேத்மலானி சொன்னாா். தாங்கள் முகம்மதுதான் சிறந்தவா் என்று மொழி பெயா்த்துள்ளது

பச்சை பொய். ஏமாற்று வேலை. பொய் சொல்லி இராம்ஜேத்மலானியிடம் முகம்மதுவிற்கு சான்று பெறும் தாழ்ந்த நிலையிலா இசுலாம்
உள்ளது. பெரியவா்கள்ஒரு சபையில் பேசும் போது மரியாதை நிமித்தம் பாராட்டிப் பேசுவார்கள். அதை தவறாக நயவஞ்சகமாகபயன்படுத்துவது பண்பாடு அற்ற இழிந்த செயல். இராம் ஜேத்மலானி ஒரு வில்லங்கமான பேர்வழி.
முஹம்மதை பின்பற்றி எழுச்சி பெற்ற அரேபியா்கள் கலைகள் இலக்கியம் விஞ்ஞானம் மருத்துவம்...போன்ற மக்களுக்கு பயன்படும் துறைகளில் பெரும் கண்டுபிடிப்பை சாதித்து பெரும் அறிவு புரட்சிக்கு வழி காட்டி தலைமை தாங்கி உலகை மகிழ்ச்சியில் ஆழ்த்தவில்லை. மாறாக வாள் கொண்டு பிற மக்களை வெல்ல வேண்டும் என்ற கொடூரமான போர் வெறி கொண்டு வாளின் பலத்தால் பல நாடுகளை இரத்தக்களிறியில் ஆழ்த்தி பெரும் வெற்றிகளைக் கண்டார்கள். அரேபிய முஸ்லிம்படை முழக்கத்தைக் கண்டு உலகம் நடுங்கியது உண்மை.அதனால் ஏற்பட்ட இரத்தக்களறியின் கடுமையை பெண்களுக்கு ஏற்படட கொடுமையான துயரத்தை இராம் ஜேத்மலானி அறிந்து பேசினாரா அறியாமல் பேசினாரா? நான் அறியேன். ஆனால் போதிய தகவல்கள் அறிந்தவர்போல் இராம்ஜேத்மலானி பேசவில்லை.
போர் புரிவது ஆன்மீக சாதனை அல்ல.வாள் எடுத்து பல நாடுகளை வென்றது ஆன்மீக அடையாளம் அல்ல.இதை புரிந்து கொள்ளாமல் ஒரு அப்பாவிபோல் -முட்டாள்போல் இராம்ஜேத்மலானி பேசுவது கூட்டத்தினரின் கைதட்டலைப் பெற நடத்தும் ஒரு நாடகம்.

கௌதமா் ஒருகுண்டு ஊசியைக் கூட எடுக்காமல் பல நாடுகளை, கோடிக்கணக்கான மக்களின் அன்பை பெற்று இன்றும் அன்பிற்கு அமைதிக்கு பண்பாட்டிற்கு ஆன்மீகத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்து வருகின்றார். இன்றும் இந்து பண்பாடு உலக அளவில் வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக யோகக் கலை உலக அளவில் அரபு நாடுகளில் பெரும் அளவில் பரவி வருகின்றது. வாள் வீச்சு ஆன்மீகம் அல்ல.

Dr.Anburaj said...

போர் புரிந்து நாடுகளை வெல்வதுதான் ஆன்மீகம் எனறால் அலெக்சாண்டா் செங்கிஸ்கான் போன்றவர்கள்தான் சாதனையாளர்கள். அரேபியா்கள் அல்ல. வேட்டை நாகரீகத்தில் இருந்து விவசாய நாகரீகத்திற்கு மாறி அதில் இருந்து பண்பாடு கல்வி விஞ்ஞானம் மருத்துவதம் போன்ற தளங்களில் அரும சாதனை படைத்த எகிப்தியர்களை போரால் பாழாக்கி அந்த நாட்டை நாசம் செய்தது அரேபியர்களின் மன்னன் இரண்டாம் கலிபா ஆன உமா் என்பவா்தான். ஸபெயின் நாடு அரேபிய நாகரீகத்தை அழித்து இன்று ஜனநாயக நாடாக ஆன்மீக நாடாக கத்தோலிக்க நாடாக அமைதியுடன் வாழ்நது வருகின்றது. பயங்கரவாதிகளை அந்த நாடு உற்பத்து செய்ய வில்லை.குரான் இருக்கும் இடத்தில் பயங்கரவாத இயக்கங்கள் நிச்சயம் இருக்கின்றார்கள். அரேபியா்்களால் உலகம் பாழானதுதான் மிக மிக அதிகம். நன்மைகள் எதாவது உண்டா ? எலெக்டரான் நுண்நோக்கி கொண்டுதான் பார்க்க வேண்டும்.