Followers

Monday, February 09, 2015

உயிர் - ஆன்மா இரண்டுக்குமுள்ள வித்தியாசம் என்ன? -2



'ஆன்மாக்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் இறைவன் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கிற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளது'
குர்ஆன் 39: 42


இந்த வசனம் மிகப் பெரும் அறிவியல் உண்மைகளை மனிதர்களுக்கு கூறிக் கொண்டுள்ளது.

உடலில் உறவாடும் உயிருக்கும் ((Life) அந்த உயிருக்குச் செறிவூட்டி செம்மைப்படுத்தும் ஆன்மா(Soul) வுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை திருகுர்ஆன் அழகுற எடுத்துக் காட்டுகிறது. அல்லாஹ் ஆன்மாக்களை அவை மரணிக்கிற நேரத்திலும் இன்னும் தூக்கத்தில் அவை மரணிக்காத நிலையிலும் கைப்பற்றுகிறான்.

உறங்கும்போது நமக்கு கிளினிகல் மரணம் (Clinical Death) என்ற சம்பவம் நடப்பதில்லை. உயிர் மட்டும் உடலில் தங்கி இருக்கிறது. ஆனால் ஆன்மா இறைவனிடம் சென்று விடுகிறது. அதாவது உடலை விட்டு அது பிரிந்து விடுகிறது. உயிர் உடலை விட்டுப் பிரியும்போது கிளினிகல் மரணம் (Clinical Death) நிகழ்கிறது. அதாவது உயிரோட்டம் நின்று, உடல் உறுப்புகள் செயலிழக்கும் நிலை (Clinical Death) சம்பவிக்கிறது. அப்போதும் ஆன்மா இறைவன் வசமாகிறது.

குர்ஆனின் இந்தக் கருத்து 10 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டானிய உளவியல் பேராசிரியர் ஒருவரின் கவனத்தை ஈர்த்தது. அவர் அந் நாட்டு, உளவியல் வல்லு நர்கள் சங்கத்தின் (British Psychologists Society) தலைவர். அவர் பெயர் டாக்டர் ஆர்தர் ஆலிசன் (Dr.Arthur Alison) அவர் தூக்கம், மரணம், கனவு போன்ற அதீத மனோ தத்துவ செயல்பாடுகள் (Para Psychology) குறித்து ஆய்வு நடத்திக் கொண்டிருந்தார். அவரின் ஆய்வு முடிவுகள் (Datas) அன்றைய உளவியல் வல்லுநர்களின் கருத்துகளுக்கு முரண்பட்டிருப்பதைக் கண்டார். அம்முடிவுகளை அக்கருத்துகளைக் கொண்டு அவரால் விளக்க முடியவில்லை. அதனால் பல்வேறு மத நூல்களைப் படிக்கத் தொடங்கினார். அவற்றில் ஏதேனும் விடை கிடைக்குமா? என்று அலசினார். அந்தத் தேடுதல் வேட்டையில் அவர் கண்டதுதான் மேற்கண்ட 39:42 குர்ஆன் வசனம். குர்ஆனின் கருத்து மின்னணு (Electronic) கருவிகள் மூலம் அவர் கண்ட ஆராய்ச்சி முடிவுகளை அப்படியே கொஞ்சமும் பிசகாமல் விளக்கியது. பரவசமடைந்த பேராசிரியர் திருகுர்ஆனின் விளக்கத்தில் மெய் சிலிர்த்துப் போனார். அந்த வசனம் இப்படி முடிகிறது. "நிச்சயமாக இதில் சிந்திக்கின்ற மக்களுக்கு உறுதியான பல சான்றுகள் இருக்கின்றன".

இதன்படி அந்த அறிஞர் உண்மையைக் கண்டார். சத்திய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். தனது பெயரை அப்துல்லா எலிசன் என்றும் மாற்றிக் கொண்டார். டாக்டரின் ஆய்வுகள் நமக்கு சொல்ல வருவது நாம் உறங்கும்போது உடலில் உயிர் இருக்கிறது. ஆனால் ஆன்மா இல்லை. உயிர் பிரியும் போது உடலில் இரண்டும் இல்லை.

---------------------------------------------

இனி இந்து மதக் கருத்துக்குள் நுழைவோம். மரணித்த உடலை எரியூட்டும்போது ஆன்மா உடலை விட்டுப் பிரிகிறது என்ற இந்து மதத்தின் ஒரு சிலரின் வாதம் குர்ஆனின் கருத்துப் படியும் அறிவியல் ஆய்வுகளின் படியும் தவறாகும். மறு உலக வாழ்வை தவறாக புரிந்து கொண்டு மறு பிறவி என்ற கோட்பாட்டை வலிந்து தமிழர்கள் தலையிலும் கட்டி விட்டனர். :-) வாழும் கலை ரவி சங்கர் மறு பிறவி தத்துவத்தை மறுக்கிறார். பண்டைய தமிழ் நூல்களும் மறு பிறவி என்று எதுவும் கிடையாது என்று கூறுகிறது. இது பற்றி முன்பு பத்திரிக்கையில் வந்த சம்பவத்தை நினைவு கூர்வோம்.

இங்கிலாந்தில் ஒரு மூத்த ஹிந்து குடிமகன் அந் நாட்டு நீதிமன்றத்தில் விசித்திரமான வழக்கொன்றை 2009-ல் மேல் முறையீடு (Appeal) செய்திருந்தார். அவர் பெயர் தேவேந்தர் காய் (Devender Ghai) 70 வயதான அவர் 1958-ல் கென்யா எனும் ஆப்ரிக்க நாட்டிலிருந்து அங்கு போய் குடியேறியவர். அவர் குடியிருந்து வரும் New Castle என்ற நகரின் மாநகராட்சி மன்றத்திற்கு (City Council) மனு ஒன்றை அனுப்பி இருந்தார். அதில் தாம் இறந்த பின் தம் உடலை ஹிந்து மத ஆச்சாரப்படி திறந்த வெளியில் (Open Air) எரியூட்டுவதற்கு அனுமதிக்கும்படிக் கேட்டிருந்தார். ஆனால் அவர் கோரிக்கையை அம்மன்றம் நிராகரித்து விட்டது. அதனால் அவர் லண்டன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

அவர் அந்த வழக்கில் கீழ்வருமாறு வாதிட்டார். இறந்த பின் புனித வேள்வி நெருப்பில் தகனமாகும் உடலிலிருந்து எனது ஆன்மா விடுவிக்கப்படுவதுடன் மறுபிறப்பு எனும் உயர் நிலையை அடையும் என்று ஒரு ஹிந்து என்ற முறையில் நான் நம்புகிறேன். எப்படி (கிரேக்க) புராணக் கதையில் ஃபீனிக்ஸ் ((Phoenix-பறவை) எரிந்த பின் தீ நாக்குகளிலிருந்து (Flames) எழும்பி மறு படியும் உருப்பெற்று வந்ததோ அதுபோல் எனது இந்த முறையீடு மத உணர்வுகளைத் தூண்டக் கூடியது என்பதை நான் மறுக்கவில்லை. அதுவும் குறிப்பாக இறப்பு என்பது நம்மோடு முடிந்து போய்விடுகிறது என்ற கருத் தோட்டத்தைப் பரவலாக நம்புகின்ற மக்கள் வாழும் ஒரு நாட்டில் இந்த வழக்கு இங்கிலாந்தில் ஒரு மாதிரி வழக்கு (A Test Case) என்று கருதப்பட்டது. மேலும் மரணித்த மனித உடலைப் போக்கி அழிக்கும்(Disposing off) வழி முறையைப் பற்றி சுவையான ஒரு விவாதத்தையும் எழுப்பியிருந்தது.

-(செய்தி : ஹிந்து நாளிதழ் (25.03.2009)

மறு பிறவி என்று ஒன்று இருந்தால் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகமாகக் கூடாது. இந்த ஒரு கோடி உயிரினங்கள் தான் அடுத்த ஜென்மத்திலும் இருக்க வேண்டும். வேண்டுமானால் ஆடு மனிதனாக, மனிதன் ஆடாக பிறப்பெடுக்கலாமே தவிர, ஒரு கோடியை விட அதிகமாகவே கூடாது. ஒரு கோடியாக இருந்த உயிரினங்கள் இரண்டு கோடியாக பெருகினால் அதற்குப் பெயர் மறுபிறவி அல்ல. புதிய உயிர்களின் உற்பத்தி என்றே கூற வேண்டும்.

பாரதியார் முப்பது கோடி முகமுடையாள் என்று பாடினார். அப்போது இந்தியாவில் முப்பது கோடி மக்கள் இருந்தனர். அவர்கள் மறு பிறவி எடுத்தால் இப்போதும் முப்பது கோடி தான் இருக்க வேண்டும். 70 கோடிப் பேர் அதிகமாகியுள்ளோம். நாம் மட்டும் அதிகமாகவில்லை. அனைத்து உயிரினங்களும் அதிகமாகியுள்ளன.

புதுப் புதுப் பிறவிகள் உற்பத்தியானால் மட்டுமே இது சாத்தியமாகுமே தவிர பழையவர்களே மீண்டும் பிறந்தால் இப்படி தாறுமாறாகப் பெருகக் கூடாது. பெருக முடியாது. மறு பிறவி இல்லை என்பதற்கு இதை விட வேறு எந்தச் சான்றும் தேவையில்லை.

அதற்குச் சொல்லப்படுகின்ற தத்துவமும் ஏற்புடையதாக இல்லை. ஏற்கனவே செய்த பிறவிப் பயனையே இப்போது அனுபவிக்கிறோம் என்பதற்கு இவர்கள் கூறும் தத்துவம் என்ன?

இவ்வுலகில் நாம் கெட்ட காரியம் செய்தால் அடுத்த பிறவியில் அனுபவிப்போம் என்று கூறினால் மனிதன் நல்லவனாக வாழ்வான் என்பது தான் தத்துவம்.

ஒருவருக்குத் தண்டனை கொடுப்பதாக இருந்தால் இன்ன குற்றத்துக்காக இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது என்று அவருக்குத் தெரிய வேண்டும். அது தான் தண்டனை. பரிசு கொடுப்பதாக இருந்தாலும் எந்தச் செயலுக்காக அந்தப் பரிசு கிடைத்தது என்பதை அவர் உணர வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் பரிசுகளாலோ, தண்டனைகளாலோ எந்தப் பயனும் ஏற்படாது.

இந்தப் பிறவியில் துன்பம் அனுபவிக்கும் யாருக்காவது நாம் இதற்கு முன் எந்தப் பிறவியில் இருந்தோம் என்பது தெரியுமா? நிச்சயம் தெரியாது! என்ன பாவம் செய்ததற்காக இந்த நிலையை அடைந்தோம் என்று தெரியுமா? அதுவும் தெரியாது. அப்படியானால் அவன் அடுத்த பிறவியைப் பற்றிக் கவலைப்பட்டு எப்படி நல்லவனாக வாழ்வான்?

ஆன்மாவானது மறுபடியும் மறுபடியும் பல ஜென்மம் எடுத்து வரும் என்று எந்த இந்து வேதமும் குறிப்பிடவில்லை என்றுSri Satya Prakash Vidya Lankar தன்னுடைய நூலான Awagawan (Page 104) -ல் குறிப்பிடுகிறார்.

'மறு பிறவித் தத்துவம் என்பது ஒரு கொள்கை அளவில் மட்டுமே இந்து மதத்தில் குறிப்பிடப் படுகிறது. அது உண்மை என்றோ அடிப்படையான தத்துவம் என்றோ கொள்ளப் பட வேண்டியது இல்லை. வேதங்களோ, உபநிஷத்துகளோ இதைக் குறிப்பிடவில்லை.'
-சுவாமி பூமாந்த தீர்த்தர், ஞான பூமி
10 பக்கம்
97 ஏப்ரல்

மரணத்திற்குப் பின் உள்ள மறுமை வாழ்வு பற்றி குர்ஆன் என்ன கருத்து வைக்கிறதோ அதையே தான் இந்து மத வேதங்களும் வைக்கின்றன. அவற்றை வரிசையாக கிழே பார்ப்போம்.

'ஏ அக்னி! இறந்த இந்த மனிதர் மறு உலகிற்கு செல்வார்'
10 : 16 : 5 - ரிக் வேதம்

மேற்கண்ட ஆதாரங்கள் மறு பிறவி என்பது இந்து மதமே ஒத்துக் கொள்ளாத ஒரு கோட்பாடு என்பதை விளங்குகிறோம்.

--------------------------------------------

Invited to the First Islamic International Conference on the Medical Inimitability in the Quran held in Cairo in 1985, Dr. Alison presented two papers:

The first paper was: “the psychological and spiritual methods of therapy in the light of the Holy Quran”,
The second paper was: “sleep and death in the light of the Quranic verse 39:42″ which he presented in association with Dr Muhammad Yehya.

Hearing the numerous Quranic facts presented in the conference, Dr Alison uttered the “Shahadah” and embraced Islam at the concluding session of the event.

In an interview given to the Arabic-weekly, he narrated the story of his conversion to Islam saying:

“During the conference on Medical Inimitability in the Qur’an, I could realize that the difference was great. Then I was convinced that Islam is the most proper religion that befits my inborn nature and conduct. In the heart of my hearts I had felt that there is a God controlling the Universe. He is the Creator.”

“Therefore, when I studied Islam, I found that it did not conflict with reason and science. I believe that is the revealed religion from the one and only God. As I witnessed the truth, I uttered the two testimonies. The moment I uttered it, I was overwhelmed by a strange and ineffable feeling mingled with ease, comfort and satisfaction.”

தகவல் உதவி:
http://aliaalifali.blogspot.com/2010/02/blog-post.html
http://annajaath.com/archives/7140
http://www.themodernreligion.com/convert/convert_Scientists.htm



No comments: