Followers

Saturday, September 29, 2012

அஹ்மத் நஜாத் - ஒரு சிறந்த தலைவருக்குரிய இலக்கணம்!

அஹ்மத் நஜாத் - ஒரு சிறந்த தலைவருக்குரிய இலக்கணம்!



ஐநாவில் அஹ்மத் நஜாதின் அழகிய உரை:

தனது நாட்டை மட்டும் நினைக்காமல் உலக மக்களின் பொருளாதாரத்தையும் அவ்வப்போது தனது பேச்சினுடையே சொல்லி வரும் இந்த தலைவரைப் பற்றியும் இவரது எளிமையைப் பற்றியும் சமீபத்தில் இணையத்தில் படித்ததை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன். இவரிடம் உள்ள ஒரே குறை இவர் ஷியா பிரிவை சேர்ந்தவர். அந்த காலத்தில் தகவல் வசதியற்ற காலத்தில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு ஷியா, சன்னி என்று இரு பிரிவாக பிரிந்து விட்டார்கள். தற்போது இணைய வசதியினால் யார் தவறு செய்தது? எங்கு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது? என்ற உண்மை பலருக்கும் தெரிய வருகிறது. இதன் மூலம் கசப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி வருகிறது. இவர் முயற்சி செய்தால் இவரது காலத்தில் இரண்டு பிரிவுகளும் ஒன்றாகி முகமது நபி காலத்தில் எவ்வாறு ஒன்றுபட்ட சமூகமாக இருந்தோமோ அது போன்ற நிலையை அடையலாம். அதற்கான முயற்சியை இந்த தலைவர் எடுப்பார் என்று நம்புவோம். இனி அவரது எளிய வாழ்வை சற்று பார்ப்போம்.


அவருடைய மாத வருமானம் 1200 டாலர் இது ஒரு வளர்ச்சியடைந்த நாட்டு தனிநபருடைய வருமானத்தை காட்டிலும் குறைவானது

• •அவர் இன்னமும் வாழ்வது அவரது அப்பா கட்டிய 40 வருடம் பழமையான வீட்டில் தான்

• •இவரது விருப்ப உணவு தன் மனைவியின் கையால் சமைத்தவை மட்டுமே..

• •படிப்பு : அறிவியல் , தொழில்நுட்ப போக்குவரத்து பொறியியல் மற்றும் திட்டமிடல் (Phட in Transportation Engineering and Planning from Iran University of Science and Technolog)

• • இவரது வங்கி நிலுவை 0

• •இவரிடம் இருந்த ஒரே ஒரு வண்டி. தற்போது அதையும் விற்று தன் நாட்டு மக்களுக்கு பங்கிட்டுள்ளார்

• • அவர் ஜனாதிபதி ஆகிய பின் தன் சொந்த ஜெட் விமானத்தையும் தன் நாட்டு விமானப்படைக்கு அன்பளிப்பு செய்துள்ளார்.

• • பெட்ரோலை சேமிக்க வேண்டி எந்தவொரு படைபட்டாளம் இன்றியே தனியொரு வாகனத்தில் பயணம் செய்வார்.

• •நிலத்தில் உறங்க நாட்டமுள்ள இவர் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கினாலும் நிலத்திலேயே உறங்குவாராம்

இந்த எளிமை என்னை மிகவும் கவர்ந்தது. உலக தலைவர்கள் இவரைப் போன்று அனைத்து மக்களையும் நேசிக்க ஆரம்பித்தால் உலகம் அமைதியுறும். இன்று உலகுக்கு தேவை அமைதி. அதனை கொண்டு வர இவர் ஒரு தூண்டுகோலாக இருந்தால் நல்லதே!


'உன்னை விட மாட்டேன்'

அஹமத் நஜாத் ஹீரோவாக நடிக்க ஒரு படம் எடுக்கலாம் என்ற ஐடியா! படத்தின் பெயர் 'உன்னை விட மாட்டேன்'.

அமெரிக்காவைப் பார்த்து சொல்றது மாதிரி இருக்குல்ல.....:-)

------------------------------------------------






59 comments:

நன்னயம் said...

எனக்கும் அஹ்மத் நஜாத் தொடர்பாக நீங்கள் எழுதியிருப்பதில் மாற்று கருத்து இல்லை. அவர் எளிமையான ஒருவர் என்பது முன்பே அறிந்திருந்தேன். ஏனைய தவல்கள் தற்போதுதான் வாசித்து அறிந்து கொண்டேன்.
ஜெயலலிதாவுக்கு ?? போட்டுள்ளீர்கள். அபாயத்தை விலை கொடுத்து வாங்க வேண்டாம். சும்மா புரட்சி தலைவி என்று போட்டு விடவும்.

Unknown said...

ஈரானின் தலைவர் அஹ்மத் நஜாதின் தகவல்கள் படித்தேன், நல்ல எளிமையான மனிதர், இரானின் சிறந்த தைரியமான தலைவர். அதற்கு ஏன் ஒப்பிடாக நம் தமிழக தலைவர்களை போடுகிறீர்கள், ஒவ்வொரு தலைவரும் வெவ்வேறு சிந்தனை எண்ணம் கொண்டவர்கள் அல்லவா..!!!

என் தளத்தில் "மை படிந்த கை"...

suvanappiriyan said...

@எதிகாலிஸ்ட்!

//ஜெயலலிதாவுக்கு ?? போட்டுள்ளீர்கள். அபாயத்தை விலை கொடுத்து வாங்க வேண்டாம். சும்மா புரட்சி தலைவி என்று போட்டு விடவும்.//

தமிழக மக்களுக்காக என்ன புரட்சி பண்ணினார்கள் என்று தெரிந்தால் உடன் போட்டுடலாம். நமக்கு எதுக்கு வம்பு. :-(

Anonymous said...

சுவனப்பிரியரே

உங்கள் எதிர்தரப்புக்கு பொழுது போகவில்லை போல ..

அமோகமான ஆதரவை பெற்று உள்ளீர்கள் ...

வாழ்த்துக்கள் ...

சிராஜ் said...

சலாம் அண்ணன்...

அஹமதி நஜாத் சவுதி அரேபியாவின் தலைவராக இருந்து இருந்தால்... உலக வரலாறு இன்று வேறு மாதிரி இருந்து இருக்கும்....

எனது சகோதரர் அஹமதி நஜாத் நீண்ட காலம் வாழ்ந்து ஈரானிய மக்களை அடுத்த கட்டத்திற்க்கு அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கை எனக்கு பெரிதும் உண்டு...

Seeni said...

nalla thakaval!

suvanappiriyan said...

சலாம் சகோ சிராஜ்!

//அஹமதி நஜாத் சவுதி அரேபியாவின் தலைவராக இருந்து இருந்தால்... உலக வரலாறு இன்று வேறு மாதிரி இருந்து இருக்கும்....//

சில நேரங்களில் சவுதி ஆட்சியாளர்களைப் போல் மிதவாதத்தோடு நடந்து கொள்வதும் இஸ்லாத்துக்கு நன்மையை தேடித் தருகிறது. மற்றபடி அஹமத் நஜாத் சிறந்த தலைவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அஜீம்பாஷா said...

Two Years Ago he came to haj, since he is president of a country for security purpose they allotted him a special tent , but he refused to stay there and he stayed along with other hajis in their tent. and he told that no need special preference in other rituals also. which i heard through volunteers who was in mina at that time.

suvanappiriyan said...

சகோ ஆயிஷா ஃபாரூக்!

//அதற்கு ஏன் ஒப்பிடாக நம் தமிழக தலைவர்களை போடுகிறீர்கள், ஒவ்வொரு தலைவரும் வெவ்வேறு சிந்தனை எண்ணம் கொண்டவர்கள் அல்லவா..!!!//

சிந்தனைகள் எவ்வளவு வேறுபட்டாலும் மக்களின் நலனில் ஒன்றிணைய வேண்டும். அதைத்தான் நாம் எதிர்பார்ப்பது.

suvanappiriyan said...

சகோ சீனி!

//nalla thakaval!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ அஜீம் பாஸா!

//Two Years Ago he came to haj, since he is president of a country for security purpose they allotted him a special tent , but he refused to stay there and he stayed along with other hajis in their tent. and he told that no need special preference in other rituals also. which i heard through volunteers who was in mina at that time. //

தற்போது உலகில் உள்ள சிறந்த தலைவர்களில் இவரும் ஒருவர் என்றால் அது மிகையாகாது.

ஆஷா பர்வீன் said...

மாஷா அல்லாஹ்

அருமையான பதிவு

suvanappiriyan said...

சகோ ஆஷா ஃபர்வீன்!

//மாஷா அல்லாஹ்

அருமையான பதிவு//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

UNMAIKAL said...

அணு ஆயுதத்திற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை – அஹ்மத் நஜாத்

இஸ்லாம் அணு ஆயுதங்களை தடைச் செய்கிறது என்று ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் கூறியுள்ளார்.

ஈரான்-ஈராக் போர் காலக்கட்டத்தில் இரசாயன ஆயுதங்களுக்கு பலியானவர்களை நினைவுக்கூறும் விதமாக மேற்கு நகரமான போருஜர்தில் நடந்த நிகழ்ச்சியில் அஹ்மத் நஜாதின் செய்தி வாசிக்கப்பட்டது.

ஈரானின் ராணுவ கொள்கையில் அணு ஆயுதங்களுக்கு இடமில்லை.

உயர் ஆன்மீக தலைவர் அலி காம்னஈ ஏற்கனவே இதுக்குறித்து விளக்கிவிட்டார்.

பேரழிவு ஆயுதங்களுக்கு இஸ்லாம் அனுமதி அளிப்பதில்லை என்பதே ஈரானின் இத்தகைய நிலைப்பாட்டிற்கு காரணமாகும் என்று நஜாத் தனது செய்தியில் கூறியுள்ளார்.

ஐ.நா:மேற்கத்திய நாடுகள் சர்வதேச அளவில் அணு ஆயுத பீதியை உருவாக்குவதாக ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் கூறினார்.

ஆயுதக் கடத்தல், பேரழிவு ஆயுதங்களின் பீதி ஆகியவற்றை பரப்புரைச் செய்வதே மேற்கத்திய நாடுகளின் முக்கிய பணி என்று அவர் தெரிவித்தார்.

ஐ.நா பொது அவையில் உரை நிகழ்த்துகையில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய நாடுகளை ஒரு பிடி பிடித்தார் நஜாத்.

ஐ.நா பொது அவையில் உரை நிகழ்த்திய முக்கிய நபர்களில் நஜாதும் ஒருவர் ஆவார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் நஜாத் கூறியது:

“15 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஐ.நாவின் அதிகாரங்களை குத்தகைக்கு எடுத்துள்ளது.

எல்லா உறுப்பு நாடுகளுக்கும் ஐக்கிய நாடுகள் அவையில் சம உரிமை வேண்டும்.

சில நாடுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள பாரபட்சமான அதிகாரங்கள் தாம் உலகில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு காரணம்.

பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள இரண்டு நாடுகள் அவர்களின் விருப்பத்தை பிற நாடுகளின் மீது திணிக்கின்றனர்.

உலகில் நடக்கும் அனைத்துப் பிரச்சனைகளின் பின்னணியிலும் ஒரு பகுதியில் இவ்விரண்டு நாடுகளும் உள்ளன.

ஆகையால் பாதுகாப்பு கவுன்சிலால் அதன் பொறுப்பை முழுமையாக நிறைவேற்ற இயலவில்லை என்று நஜாத் கூறினார்.

அமெரிக்கா உலகை ஆண்ட காலம் முடிந்துவிட்டது – அஹ்மத் நஜாத்!

தெஹ்ரான்:அமெரிக்காவும், நேட்டோவும் உலக நாடுகளுக்கு கூடுதல் காலம் கட்டளை பிறப்பிக்க இயலாது என்று ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் கூறியுள்ளார்.

உலகை ஆண்ட அமெரிக்காவின் காலம் முடிந்துவிட்டது.

தங்களது கொள்கையை மாற்ற அவர்கள் தயாராகவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆப்கானின் பொருளாதார நிலைக்குறித்து தாஜிகிஸ்தானில் நடந்த மாநாட்டில் உரைநிகழ்த்தினார் நஜாத்.

தெற்கு-மத்திய ஆசியாவுக்கான வெளியுறவு துணைச்செயலாளர் ராபர்ட் ப்ளேக்கின் தலைமையில் அமெரிக்க குழுவும் இம்மாநாட்டில் பங்கேற்கிறது.

ஆனால், நஜாத் உரை நிகழ்த்த எழுந்தவுடன் அரங்கை விட்டு வெளியேறிய இக்குழுவினர் பின்னர் அவர் உரையை பேசி முடித்ததும் அரங்கிள் நுழைந்தனர்.

நஜாத் தனது உரையில், காலனி மயமாக்கலை லட்சியமாக கொண்டு செயல்படும் நேட்டோ உறுப்பு நாடுகளின் கொள்கைதான் உலகத்தில் பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்று நஜாத் சுட்டிக்காட்டினார்.

ஆப்கானில் இருந்து வெளிநாட்டு ராணுவம் உடனடியாக வாபஸ் பெறவேண்டும்.

உலகின் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு காரணம் அமெரிக்காவும், நேட்டோவும் ஆகும்.

தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்காவும், நேட்டோவும் ஆப்கானில் நுழைந்தன.

இதே பேனரில் தான் இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளை சுற்றியும் இவர்கள் செயல்படுகின்றனர்.

நேட்டோவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவு சீர்கெடவும் இதுதான் காரணம். இவ்வாறு நஜாத் கூறினார்.

Anonymous said...

எத்திகாலிஸ்ட்டு அக்கவுண்டை ஹாக் செய்தது யார்?

UNMAIKAL said...

அமெரிக்கா நிர்பந்தம்: இந்தியா நிராகரிக்கும் – அஹ்மத் நஜாத்

இந்தியாவின் மீது அமெரிக்கா செலுத்திவரும் நிர்பந்தத்தை ஈரான் பொருட்படுத்தாது என்று அந்நாட்டின் அதிபர் அஹ்மத் நஜாத் கூறியுள்ளார்.

இரு நாடுகள் இடையேயான உறவு கூடுதல் வலுப்பெறும் என்று நஜாத் தெரிவித்துள்ளார்.

டெஹ்ரானில் அதிபர் ஹவுஸில் வைத்து மாத்யமம் பத்திரிகையின் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார் நஜாத்.

இந்தியா உள்பட பிராந்திய நாடுகள் ஒன்றிணைந்தால் காலனி ஆதிக்க சக்திகளின் வீழ்ச்சி பரிபூரணமடையும் என்று நஜாத் கூறினார்.

டெல்லியில் இஸ்ரேல் தூதரக அதிகாரியை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் ஈரானுக்கு பங்கில்லை என்று நஜாதுடன் இருந்த முன்னாள் அமைச்சரும், அரசுக்கு முக்கிய ஆலோசகருமான டாக்டர்.விலாயத்தி விளக்கமளித்தார்.

இந்தியா நடத்தும் அனைத்து விசாரணைக்கும் ஈரான் முழு ஒத்துழைப்பை அளிக்கும்.

மூன்று ஈரானிகளை மையமாக கொண்டு விசாரணை நடைபெறுவது குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில் விலாயத்தி இவ்வாறு தெரிவித்தார்.

அமைதியான வழிகள் மூலமாக மட்டுமே ஈரான் பயணிக்கும்.

தீவிரவாதத்தை அரசு நிர்வாக பாணியாக மாற்றிய இஸ்ரேல் எவ்வித சூழ்ச்சிகளையும் செய்வார்கள்.

ஈரானுக்கு இந்த வழக்கம் இல்லை என்று விலாயத்தி மேலும் கூறினார்.

இந்தியா-ஈரான் இடையேயான உறவு நூற்றாண்டுகள் பழமையானது.

எதிரிகளின் சூழ்ச்சிகளால் அதனை தகர்க்க முடியாது என்று சர்வதேச விவகாரங்களில் ஈரான் அதிபர் நஜாதின் ஆலோசகரான ஷைகுல் இஸ்லாம் கூறினார்.

இந்தியா-பாரசீக நாகரீகத்திற்கு எத்தனையோ ஆண்டுகால பாரம்பரியம் உள்ளது.

ஒரு நூற்றாண்டு கூட பழமை இல்லாத இஸ்ரேலும் இதர நாடுகளும் சதித் திட்டம் தீட்டினாலும் அதனை தகர்க்க முடியாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து இந்தியா ஈரானில் இருந்து இறக்குமதிச் செய்யும் கச்சா எண்ணையின் அளவை குறைக்கும் என நம்பவில்லை என்று ஈரான் தலைவர்கள் கூறினர்.

ஈரானில் இருந்து எண்ணெயை இறக்குமதிச் செய்வது இந்தியாவின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

இச்சூழலில் ஏகாதிபத்தியத்தின் தந்திரங்களை அடையாளம் கண்டு இரு நாடுகள் இடையேயான உறவுகளில் நெருக்கம் ஏற்படுத்தவும் இந்தியா தயாராகும் என நம்புவதாக ஈரான் தலைவர்கள் தெரிவித்தனர்.

அழிவின் விளிம்பில் சியோனிஸ்டுகள் – அஹ்மத் நஜாத் !

டெஹ்ரான்:நாகரீகமற்ற சியோனிஸ்டுகளின் காலம்முடிந்துவிட்டது.

அவர்கள் அழிவின் விளிம்பில் உள்ளனர் என்று ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் கூறியுள்ளார்.

பல்வேறு மத நம்பிக்கையாளர்களுக்குமத்தியில் பிரிவினையின் விதையை தூவும் சியோனிஸ்டுகளின் பிடியில்இருந்து உலகம் சுதந்திரம் அடையும் என்பதில் தனக்கு நல்ல நம்பிக்கை இருப்பதாக நஜாத் தெரிவித்தார்.

இஸ்ரேல் அரசின் நிலைமை ஆபத்தில் இருப்பது அமெரிக்க அரசுக்கு புரிந்துவிட்டது.

இது யூத அரசு புதிய சூழ்ச்சிகளை மேற்கொள்ள தூண்டுகிறது.

இஸ்லாத்திற்கு எதிராக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் உலகம் முழுவதும் முஸ்லிம்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில் அஹ்மத் நஜாதின் அறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரான் மக்கள் தண்டனைகளையும், மிரட்டல்களையும் சந்திக்க தயாராக உள்ளனர் – அஹ்மத் நஜாத் !

டெஹ்ரான்:ஈரான் மக்கள் கடந்த 33 ஆண்டுகளாக செருக்குப் பிடித்த பெரும் நாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

தண்டனைகளையும், மிரட்டல்களையும் அவர்கள் சந்திக்க அவர்கள் தயாராகவே உள்ளனர் என்று ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் தெரிவித்துள்ளார்.

மேலும் நஜாத் கூறியது: நாட்டின் மொத்த வருமானத்தில் வெறும் 10 சதவீதம் மட்டுமே பெட்ரோல் மூலம் கிடைக்கிறது.

தடையை எதிர்கொள்ளும் விதத்தில் பெட்ரோலை கையாள ஈரான் மக்கள் தயாராக உள்ளனர்.

ஈரான் குடியரசு அதன் லட்சியங்களையும், விழுமியங்களையும் உறுதியாக பின்பற்றுவதுதான் இத்தகைய தாக்குதல்களுக்கு காரணமாகும்.

அழுத்தங்களுக்கு அடிபணியாமல், உறுதியாக நிற்கவும், எதிரியின் அரசியல் அபிலாஷைகளுக்கு பதிலளிக்கவும் நாம் கடமைப்பட்டுள்ளோம் என நஜாத் ஈரான் மக்களுக்கு நினைவூட்டினார்.

அமெரிக்கா பின்னோக்கி செல்கிறது.

ஈரான் வளர்ச்சியின் பாதையில் சஞ்சரிக்கிறது.

இஸ்லாத்தின் உதயத்திற்கு பின்னர் கண்ட மிகப்பெரிய புரட்சிகளில் ஒன்றுதான் ஈரானில் நடைபெற்ற இஸ்லாமிய புரட்சி என்று நஜாத் தெரிவித்தார்.

UNMAIKAL said...

அணிசேரா நாடுகளின் உச்சிமாநாடு:

ஈரானின் ராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றி!


டெஹ்ரான்:டெஹ்ரானில் முடிவடைந்த அணிசேரா நாடுகளின் 6 நாள் உச்சிமாநாடு ஒரே நேரத்தில் அமெரிக்காவின் தலைமையிலான மேற்கத்திய நாடுகளுக்கு கிடைத்த பலத்த அடியாகவும்,

ஈரானின் ராஜ தந்திரத்துக்கு கிடைத்த வெற்றியாகவும் கருதப்படுகிறது.

அணு ஆயுதத்தின் பெயரால் இஸ்ரேல் ஈரானை தாக்கப் போவதாக ஊகங்கள் கிளம்பிய வேளையில் ஈரான் அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டிற்கு களம் அமைத்தது.

மேற்கத்திய நாடுகள் ஈரானின் மீதுதடைகளை தீவிரப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ள வேளையில்தான் உச்சிமாநாடு நடைபெற்றுள்ளது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் எதிர்ப்பை புறக்கணித்துவிட்டு ஐ.நா பொது அவை பொதுச்செயலாளர் பான் கீ மூனை அணிசேரா நாடுகளின் இயக்கத்தின் உச்சிமாநாட்டில்கலந்துகொள்ளச் செய்தது ஈரான் அதிபர் அஹ்மத் நஜாதின் வெற்றியாகும்.

உச்சிமாநாட்டில் பங்கேற்க கூடாது என்று அமெரிக்காவும், இஸ்ரேலும் பான் கீ மூனுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தன.

பான் கீ மூனின் இதயத்தில் ஈரானுக்கு சிறிதளவேனும் இடம் அளித்ததில் வெட்கப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார்.

பான் கீ மூனை அடுத்து உச்சிமாநாட்டில் அனைவரையும் ஈர்த்தது இந்தியாவின் பங்களிப்பாகும்.

இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அணிசேரா நாடுகளின் இயக்க உச்சிமாநாட்டில் கலந்துகொண்டது முக்கியத்துவம் பெற்றது.

ஈரானின் உயர் ஆன்மீக தலைவர் ஆயத்துல்லாஹ் அலி காம்னஈ உடன் சந்திப்பையும் நடத்தினார் மன்மோகன்.

ஒருவேளை, ஆயத்துல்லாஹ் அலி காம்னஈ ஐ முதன் முதலாக சந்திக்கும் முஸ்லிம் அல்லாத நாட்டின் தலைவராகவும் மன்மோகன் இருக்க வாய்ப்புள்ளது.

ஈரானுடான வர்த்தக-தூதரக உறவை வலுப்படுத்த இந்தியா தீர்மானித்தது ஈரானுக்கு ஆதாயமாக மாறியுள்ளது.

உச்சிமாநாட்டில் கலந்து கொண்டதுடன்,

ஈரானுக்கு புகழாரம் சூட்டிய பான்கீ மூனின் நடவடிக்கை இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் பலத்த அடியாக மாறியது.

சர்வதே அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நடுநிலையான முயற்சிகளை மேற்கொள்ள ஈரானால் இயலும் என்று ஐ.நா பொது அவை பொதுச் செயலாளர் பான் கீ மூன் தனது உரையில் குறிப்பிட்டார்.

அதேவேளையில் அணுசக்தி உள்ளிட்ட விவகாரங்களில் சர்வதேச சமூகத்தின் கவலைகளை அகற்றவும், சர்வதேச அணுசக்தி ஏஜன்சியுடன் ஈரான் ஒத்துழைக்கவும் வேண்டும் என்று பான் கீமூன் கோரிக்கை விடுத்தார்.

தமது நாட்டில் அணு ஆயுதங்கள் இல்லை என்றும்,

மேற்காசியா முழுவதையும் அணு ஆயுதம் இல்லாத பிராந்தியமாக மாற்றவேண்டும் என்பதே தங்களது நோக்கம் எனவும் ஈரான் பதிலளித்தது.

இஸ்ரேலிடம் அணு ஆயுதம் இருப்பதை இதன் மூலம் உணர்த்த ஈரானால் முடிந்தது.

ஈரான் அணு ஆயுத நாடாக மாறிவிடும் என்பதல்ல, மாறாக ஈரானின் தற்போதைய அரசிடம்தான் அமெரிக்காவிற்கு எதிர்ப்பு என்று டெஹ்ரான் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பிரபல அமெரிக்க பத்திரிகையாளர் ராபர்ட் நைமன் தெரிவித்தார்.

இஸ்ரேல் அணு ஆயுதங்களை சொந்தமாக்கியது அமெரிக்காவுக்கு பிரச்சனை இல்லை.

காரணம், இஸ்ரேல் அமெரிக்காவிற்கு நேசத்திற்குரிய நாடு என்று நைமன் கூறினார்.

120 உறுப்புநாடுகள், 21 கண்காணிப்பு நாடுகள் அடங்கியது தான் அணிசேரா நாடுகளின் இயக்கமான NAM.

ஐக்கிய நாடுகள் சபையை அடுத்து அதிகமான நாடுகளை உறுப்பினராக கொண்ட அமைப்பு.

ஐ.நா அவை உறுப்பினர்களில் 3-இல் 2 பகுதி நாடுகள் NAM இல் உறுப்பினராக உள்ளன.

இரண்டாவது உலகப் போரைத் தொடர்ந்து சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்காவுடன் சேராத இயக்கமாக அணிசேரா நாடுகளின் அமைப்பு உருவானது.

இதுவரை அமெரிக்காவின் கட்டளைகளை நிறைவேற்றும் உயிர் துடிப்பில்லாத அமைப்பாகவே NAM கருதப்பட்டது.

ஆனால், டெஹ்ரானில் நடந்த உச்சிமாநாட்டில் அணிசேரா நாடுகளின் இயக்கத்தை உயிரூட்டும் வகையில் மாநாட்டின் ஒவ்வொரு காலடித் தடங்களும் அமைந்திருந்தன.

முஸ்லிம் உலகில் ஈரானுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளும் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

உச்சிமாநாட்டின் தீர்மானங்களிலும் ஈரானின் ‘டச்’ காணப்பட்டது.

சிரியாவில் வெளிநாட்டு தலையீடு மற்றும் ஈரானுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா ஏற்படுத்திய தடைகளை கண்டித்த தீர்மானம், ஃபலஸ்தீன் மக்களுக்கு ஆதரவையும், ஒற்றுமை உணர்வையும் பிரகடனப்படுத்தியது.

உச்சிமாநாட்டை மேற்கத்திய நாடுகளின் ஊடகங்கள் புறக்கணித்தன.

அதேவேளையில் மாநாட்டில் உரையாற்றிய முர்ஸி, தனது உரையில் சிரியாவை கண்டித்தவுடன் அந்நாட்டின் பிரதிநிதி அவையில் இருந்து வெளியேறிய செய்திக்கு முக்கியத்துவம் அளித்து வெளியிட்டன.

THANKS TO: THOOTHU ONLINE.

Prakash said...

மக்களால் மதிக்கப்படுவதற்கு மதம் தேவை என்பதெல்லாம் இல்லை அல்லவா!

UNMAIKAL said...

முஸ்லிம் என்பதால் பதவி உயர்வை தடுக்கிறார்கள் – சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்!

29 Sep 2012

மும்பை:முஸ்லிம் என்ற காரணத்தால் தான் நீதிபதியாக பதவி உயர்வு பெறும் வாய்ப்பு தடுக்கப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.

த ஹிந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அஜ்மல்கான் கூறியது:

“நீண்டகால அனுபவத்தின் அடிப்படையில் கடந்த 2011 ஆம் ஆண்டு நீதிபதி பதவிக்கு நான் தகுதியானவர் என்பதை நீதிமன்றம் கண்டறிந்தது.

அதற்கு அனுமதி ஆவணமும் எனக்கு வழங்கப்பட்டது.

ஆனால், பின்னர் பதவி உயர்வு தடைப்பட்டுப் போனது.

மத அடிப்படைவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக உளவுத்துறையின் குற்றச்சாட்டு எனது பதவி உயர்வுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

நண்பர்கள், என்னுடன் பணிபுரிபவர்கள் ஆகியோரிடம் என்னைக் குறித்து விசாரித்துள்ளனர்.

தேசத்துடன் எனக்கு எவ்வளவு தூரம் பற்று இருக்கிறது என்பதை ஆராயவே இந்த விசாரணை.

இதனால் நானும், எனது குடும்பத்தினரும் மிகுந்த மன வேதனைக்கு ஆளானோம்.

ரமலான் மாதத்தில் ஊரில் உள்ள மதரஸா மற்றும் மஸ்ஜிதுக்கு நன்கொடை அளித்ததை குறித்தும் ஐ.பி அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

1983-89 காலக்கட்டத்தில் மதுரை அரசு சட்டக்கல்லூரியில் ஐந்து ஆண்டுகள் படிப்பில் சேர்ந்த 140 நபர்களில் நானும் ஒருவன்.

பின்னர் தேர்வில் வெற்றிப் பெற்று முதல்10 இடங்களை பிடித்தவர்களில் நானும் இடம் பெற்றேன்.

ஆனால், 20 ஆண்டுகளுக்கும் மேலான எனது வழக்கறிஞர் பணியில் சமூக பாரபட்சத்தின் வேலிகளை தாண்டுவதில் நான் தோல்வியை தழுவினேன்.

ஒரு பொது விசாரணை நடத்தப்பட்டால், எனது பெயர் கான் என்றும், நான் தீவிரவாதி அல்ல என்றும் இந்த தேசத்திற்கு என்னால் உணர்த்த முடியும்.” என்று அஜ்மல் கான் கூறுகிறார்.

நிரபராதிகளான முஸ்லிம்கள் மீது தீவிரவாத முத்திரையை குத்தாதீர்கள் என்றும்,

மதத்தை பார்த்து யாரையும் சிறையில் அடைக்க கூடாது என்றும் உச்சநீதிமன்றம் நேற்று முன் தினம் உத்தரவிட்டது.

பாலிவுட் நடிகர் ஷாரூக் கானின் ‘மைநேம் ஈஸ் கான்! ஐ அம் நாட் எ டெரரிஸ்ட்’ என்ற திரைப்படத்தின் உரையாடலை மேற்கோள்காட்டி உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது.

http://www.thoothuonline.com/they-stop-the-promotion-because-i-am-a-muslim-says-chennai-hc-lawyer/

UNMAIKAL said...

அமெரிக்காவின் கரங்களை துண்டிக்க ஈரானுக்கு அணு குண்டு தேவையில்லை : அஹ்மத் நஜாத்

அமெரிக்காவின் கரங்களை துண்டிக்க ஈரானுக்கு அணு குண்டு தேவையில்லை” என ஈரானின் ஜனாதிபதி அஹ்மத் நஜாத் தெரிவித்துள்ளார்.

”மோதலுக்குத்தான் அமெரிக்கா தயாராகிறது என்றால் ஈரானின் பதிலடியை குறித்து சிந்தித்து அமெரிக்காவிற்கு துக்கமடைய வேண்டிய சூழல் ஏற்படும்” என நஜாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் சக்தியை நிலையை நெருங்கி விட்டதாக சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் அறிக்கை அண்மையில் கசிந்ததைத் தொடர்ந்து பிராந்தியத்தில் நிலவும் மோதல் சூழலின் பின்னணியில் ஈரான் ஜனாதிபதி நஜாதின் எச்சரிக்கை அறிக்கை வெளியாகியுள்ளது.

மேலும் அவரின் அறிக்கையில்

இதர நாடுகளை வறுமையில் உழலச்செய்து அவர்களுடைய சொத்துக்களை ஏப்பமிட்டு அமெரிக்கா தனது சொந்த செல்வ செழிப்பை உறுதிச்செய்கிறது.

ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை அங்கீகரிக்க முடியாது.

அணு ஆயுதமற்ற உலககை தோற்றுவிக்க அமெரிக்கா ஈடுபாடு காட்டவில்லை,

தன்வசம் இருக்கும் அணுகுண்டுகளை மேலும் வலுப்படுத்த அமெரிக்கா 81 பில்லியன்- $81 billion- அமெரிக்க டொலர்களை மேலதிகமாக ஒதுக்கியுள்ளது.

ஆனால் ஈரான் முழு ஆண்டுக்குமான அணு ஆய்வுக்காக செலவாக வெறும் 250 மில்லியனை-merely $250 million- மட்டும் ஒதுக்கியுள்ளது.

சர்வதேச அணு சக்தி ஏஜன்சியின் தலைவர் யூகியோ அமானோ அமெரிக்காவின் பொம்மை.

மேற்க்கு சக்திகளின் அணு ஆயுதங்கள் குறித்த அறிக்கையை தயார் செய்யாத சர்வதேச அணுசக்தி ஏஜன்சி அமெரிக்கா வசம் 5000 ஆயிரம் அணு ஆயுதங்கள் இருப்பதை மறந்துவிடக்கூடாது.

ஈரானின் அணுசக்தி தொடர்பாக சர்வதேச அணுசக்தி ஏஜன்சி தயார் செய்துள்ள அறிக்கை பொய்யான காரணங்களின் பின்னணியை கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறும் மேற்கத்திய நாடுகளிடன் அதற்குரிய ஆதாரங்கள் இல்லை என ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர் ஸலாஹி தெரிவித்துள்ளார்.

அதிகாரப்பூர்வம் அல்லாத அறிக்கையின் வாதத்தில் உறுதியாக இருந்தால் அதனை விரைவாக வெளியிட வேண்டும் என ஸலாஹி சவால் விடுத்துள்ளார்.

-Lankamuslim.org

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

ரொம்ப நடுநிலை தான் போங்கோ :-))

அஹ்மத் நஜாத் நல்லவர்னு உங்களுக்கு தெரியுது ஆனா சவுதி அரசர் அப்துல்லாவுக்கு தெரியலையே, இரானுக்கு எதிரா கிளர்ச்சி செய்ய உதவிட்டு இருக்காரே.

காரணம் இரானின் எண்னை வளம் இருக்கும் பகுதியில் இரானில் இருக்கும் சன்னிகள் பகுதியில் இருக்கு அதனை அடையவே(சவுதியில் எண்ணை வளம் ஷியா பகுதியில்)

இந்த சுட்டி பாருங்க,

http://oilprice.com/Geopolitics/Middle-East/The-Endless-War-Saudi-Arabia-Goes-on-the-Offensive-Against-Iran.html

நீங்க இப்படி இரானிய தலைவருக்கு ஆதரவா பதிவு போட்டது தெரிந்தால், நாடு கடத்தினாலும் கடத்துவாங்க :-))

suvanappiriyan said...

வவ்வால்!

//நீங்க இப்படி இரானிய தலைவருக்கு ஆதரவா பதிவு போட்டது தெரிந்தால், நாடு கடத்தினாலும் கடத்துவாங்க :-))//

ஹி...ஹி...அஹ்மத் நஜாதும் மன்னர் அப்துல்லாவும் நெருங்கிய நண்பர்கள். ஷியாக்கள் வரும் காலங்களில் தவறை உணர்ந்து எங்களோடு இணையும் காலம் தூரத்தில் இல்லை. அஹ்மத் நஜாத் காலத்திலேயே அது நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

UNMAIKAL said...

ப்ரேசில் நாட்டு Google தலைவருக்கு பிடி வாரண்ட்,

ஈரானில் Gmail க்கு தடை!,

கொட்டு வாங்க ஆரம்பித்த கூகுள்! Updated


நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தும் வீடியோவை நீக்காமல் வைத்துள்ள Yotube க்கு ப்ரேசில் BRAZIL நாட்டு நீதிமன்றம் நேற்று ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.

10 நாட்களுக்குள் நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தும் வீடியோவை Youtube ல் இருந்து நீக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

10 நாட்களுக்கு பிறகும் அந்த வீடியோ Youtube ல் இருந்தால் அந்த வீடியோ இருக்கும் ஒவ்வொரு நாளைக்கும் Google நிறுவனம் 5 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம் வழங்க வேண்டும் எனவும் கோர்ட் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

National Islamic Union என்ற இஸ்லாமிய அமைப்பு ஒன்று தொடர்ந்த வழக்கில் ப்ரேசில் நாட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதே போன்று தேர்தல் தொடர்பான மற்றுமொரு சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்குமாறு ப்ரேசில் நாட்டு தேர்தல் நீதிமன்றம் சமீபத்தில் Google க்கு உத்தரவிட்டது,

ஆனால் வழக்கம் போல இது பேச்சு சுதந்திரம் எனக் கூறி Youtube நீக்க மறுத்து விட்டது.

ஒபாமா கி்ட்டதான் இந்த மாறி பேச்சுல்லாம் செல்லும் ,

ஆனால் ப்ரேசில் நாட்டு நீதிமன்றம் ஆத்திரமடைந்து சமீபத்தில் ப்ரேசில் நாட்டு Google நிறுவனத்தின் தலைவருக்கு (Head of Google operation in Brazil) பிடி வாரண்ட் பிறப்பித்தது உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து புதன் கிழமை (26-9-2012) ப்ரேசில் நாட்டு Google நிறுவனத்தின் தலைவர் போலிசாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் ”நான் வழக்கிற்கு முழுவதுமாக ஒத்துழைக்கின்றேன் நீதிமன்றத்தில் ஆஜராகின்றேன் என அவர் எழுத்துபூர்வமாக அவர் எழுதி கொடுத்ததை தொடர்ந்து விடுவிக்கப்பட்டார்.


இதே போன்று ஈரான் நாட்டு அரசு தற்போது Gmail க்கு ஈரான் நாட்டில் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ஈரான் நாட்டு தொலை தொடர்பு துறை அமைச்சர் , நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து Google நிறுவனத்தில் Gmail சேவை ஈரான் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது

மேலும் மறு உத்தரவு வரும் வரை இந்த தடை தொடரும் எனக் தெரிவித்துள்ளார்.

TNTJ

Anonymous said...

சிகாகோ:அமெரிக்காவில், நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கி சூட்டில், ஐந்து பேர் பலியாயினர்.அமெரிக்காவில், சமீப காலமாக, துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து விட்டன. மினசோட்டா மாகாணத்தில் உள்ள, ஒரு வர்த்தக நிறுவனத்தில், 25 ஊழியர்கள், வேலை செய்தனர். இந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஒருவர், முதலாளி மீது கொண்டிருந்த வெறுப்பின் காரணமாக, நேற்று முன்தினம், துப்பாக்கி சூடு நடத்தினார்.

இதில், வர்த்தக நிறுவன உரிமையாளர் உட்பட, நான்கு பேர் பலியாயினர். மேலும், நான்கு பேர் காயமடைந்தனர். இறுதியில், துப்பாக்கி சூடு நடத்திய நபர், தன்னைத் தானே சுட்டு, தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

-paper news
29-09-2012

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்,

தமது எளிமையான வாழ்க்கை, இனிமையான பழக்கவழக்கம், நேர்மையான ஒழுக்கம்... இவற்றால் அதிபர் மஹ்மூத் அஹமத் நிஜாத், ஈரானுக்கு வெளியேயும் நல்லவர்களிடம் ஒரு ரியல் லைஃப் ஹூரோவாக வலம் வருகிறார். அதேநேரம், அமெரிக்க ஏகாதியபத்தியத்துக்கும், இஸ்ரேலியே ஸியோநிசத்துக்கும் இவர்தான் இன்று ரியல் லைஃப் வில்லன்.

' ஹிரோ.. வில்லன்.. ' ---இதனால் தான் தமிழ்மணத்தில் இருந்த இப்பதிவை திரைமணத்தில் தூக்கி போட்டுட்டாங்களா..!

ஹா....ஹா.....ஹா..... என்னே அவர்களின் ஒரு பொறுப்புணர்ச்சி..!

suvanappiriyan said...

சலாம் சகோ ஆஷிக்!

//' ஹிரோ.. வில்லன்.. ' ---இதனால் தான் தமிழ்மணத்தில் இருந்த இப்பதிவை திரைமணத்தில் தூக்கி போட்டுட்டாங்களா..! //

ஒருக்கால் இதுவும் கூட காரணமாக இருக்கலாம். ஈரானுக்கு உலக நாடுகள் ஆதரவு கொடுக்க ஆரம்பித்தால் அமெரிக்காவின் திமிர்தனத்தை ஓரளவு கட்டுப்படுத்தலாம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

வவ்வால் said...

சுபி.சுவாமிகள்,

சும்மா பேச்சுக்கு கை குலுக்கிட்டு முதுகில் குத்தும் வேலை செய்வதை நட்பு என்கிறீர்களா?

இரானில் கலகம் உண்டாக்க சௌதி பண உதவி ,ஆயுதம் கொடுக்கிறது என்பது தெரியாதா?

அதை சொல்லி தான் சுட்டி எல்லாம் கொடுத்தேன்,ஆனால் வழக்கம் போல நழுவிட்டிங்க :-))

suvanappiriyan said...

//இரானில் கலகம் உண்டாக்க சௌதி பண உதவி ,ஆயுதம் கொடுக்கிறது என்பது தெரியாதா?

அதை சொல்லி தான் சுட்டி எல்லாம் கொடுத்தேன்,ஆனால் வழக்கம் போல நழுவிட்டிங்க :-)) //

ஹி..ஹி...கவலைப்படாதீங்க.....ஒரு உண்மையான முஸ்லிம் மற்றொரு உண்மையான முஸ்லிமை என்றுமே முதுகில் குத்த மாட்டார். நாட்டின் பாதுகாப்புக்காக செய்யப்படும் சில நடவடிக்கைகளை சிலர் தங்களுக்கு தோதாக திரிக்கின்றனர். அவர்கள் செயலால் தோல்வியையே தழுவுவார்கள்.

இருவருமே இறைவனுக்கு பயந்தவர்கள். நல்லதே நடக்கும்.

suvanappiriyan said...

சகோ நபி வழி!

உலகில் எந்த ஆட்சியாளரிடமும் குறைகள் இருக்கவே செய்யும். நீங்கள் ஏதும் மாற்றம் தேவைப்பட்டு வரக் கூடிய ஆட்சி இதை விட மோசமாக இருந்தால் என்ன செய்வீர்கள்? எனவே தற்போது சவுதி அரசு நல்ல முறையிலேயே செல்கிறது. மேலும் சிறப்பாக பிராரத்திப்போம்.

suvanappiriyan said...

சகோ நபி வழி!

உலகில் எந்த ஆட்சியாளரிடமும் குறைகள் இருக்கவே செய்யும். நீங்கள் ஏதும் மாற்றம் தேவைப்பட்டு வரக் கூடிய ஆட்சி இதை விட மோசமாக இருந்தால் என்ன செய்வீர்கள்? எனவே தற்போது சவுதி அரசு நல்ல முறையிலேயே செல்கிறது. மேலும் சிறப்பாக பிரார்த்திப்போம்.

Unknown said...

vavvaal,

///சும்மா பேச்சுக்கு கை குலுக்கிட்டு முதுகில் குத்தும் வேலை செய்வதை நட்பு என்கிறீர்களா?///

இந்தியா, அதன் சுற்றியுள்ள நாடுகளிடம் நடந்துகொள்வதும் நீங்கள் சொல்வதுபோலத்தான்!

அதற்காக, இந்தியா காலந்தாழ்த்தியாவது வாங்கிக் கட்டிக் கொள்கிறது.

ஊர்சுற்றி said...

"...பெட்ரோலை சேமிக்க வேண்டி எந்தவொரு படைபட்டாளம் இன்றியே தனியொரு வாகனத்தில் பயணம் செய்வார்...."

அடடா.....அண்மையில் அமெரிக்காவுக்கு வந்தபோது இவருடன் வந்த படைபட்டாளம் எவ்வெலவு தெரியுமா? 160 பேருங்கோ !

இவர் தங்கிய ஹோட்டலின் ஒரு இரவு வாடகை தெரியுமாங்கோ? $1600.00 ங்கோ !

இவர் தங்கிய ஹோட்டலில் எத்தனை அறை வாடகைக்கு எடுத்தார்கள் எனத்தெரியுமா? இரண்டு தளங்கள் முழுவதுமுங்கோ!!!

இந்த ரேட்டில் அவருக்கு ஜீரோ வங்கிக்கையிருப்பு என்றாலென்ன, பழைய காரென்றலென்ன????????

Anisha Yunus said...

பாய்,

சகோதரர் அஹ்மது நஜாத்தின் மீதான இந்த எண்ணம் எனக்கும் உண்டு, அவர் காலத்திலேயே இந்த இரண்டு பிரிவுகளும் சேர்ந்து விடாதா.... உலகிற்கு ஒரு அசாதாரண உதாரணத்தை தந்து விடாதா என்று. அவரைப் பற்றிய ஒவ்வொரு வரியையும் படிக்கையில் இன்னும் மனதில் உயர்ந்து கொண்டே போகிறார். மாஷா அல்லாஹ்... மிக அருமையான பதிவு. ஜஸாகல்லாஹு க்ஹைர்.

வஸ் ஸலாம்.

Anonymous said...

//ஈரானின் தலைவர் அஹ்மத் நஜாத்//

How does it benefit you and me?

UNMAIKAL said...

CLICK >>>> மனித கேடயமாகும் காஷ்மீர் இளைஞர்கள் <<<< TO READ

UNMAIKAL said...

இந்தியாவின் சுவிட்சர்லாந்து என வர்ணிக்கப்பட்ட காஷ்மீர்,

இயற்கை எழில் சூழ்ந்த உலகின் மிக அழகான நிலப்பரப்புகளின் பட்டியலில் முதன்மையாகத் திகழ்ந்தது.

ஆனால் இன்று, காஷ்மீர் பள்ளத்தாக்கு காணும் இடமெல்லாம் மரணப் புதைகுழிகளால் நிரம்பியுள்ளது.

ஈழத்தில் நடைபெறும் இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு மவுனசாட்சியாக இந்திய அரசு இருப்பதன் காரணம்,

அது தன்னளவில் அதே இனப்படுகொலையை தன் நாட்டு மக்கள் மீதே நடத்திக் கொண்டிருப்பதுதான் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

உலகின் மிகக் கொடூரமான ராணுவ அடக்குமுறையின் மூலம்,


காஷ்மீரில் ஓர் இனப்படுகொலையை இந்திய ராணுவம் நிகழ்த்தி வருகிறது.


CLICK TO >>>>>காஷ்மீர் புதைக்கப்பட்ட பள்ளத்தாக்கு . கீற்று சிறப்புக் கட்டுரை. - அ.முத்துக்கிருஷ்ணன் <<<<<TO READ

.

suvanappiriyan said...

ஊர்சுற்றி!

//அடடா.....அண்மையில் அமெரிக்காவுக்கு வந்தபோது இவருடன் வந்த படைபட்டாளம் எவ்வெலவு தெரியுமா? 160 பேருங்கோ !//

இவரை கொல்வதற்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் நேரம் பார்த்து காத்திருக்கின்றது. அந்த நாட்டுக்கு பயணிக்கும் போது தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவையில்லை.

தேவையில்லாமல் ஊர் சுற்றி கொண்டிருக்காமல் ஒரு இடத்தில் அமர்ந்து சிந்திக்கவும். தெளிவு பிறக்கும்.

suvanappiriyan said...

சகோ அன்னு!

//சகோதரர் அஹ்மது நஜாத்தின் மீதான இந்த எண்ணம் எனக்கும் உண்டு, அவர் காலத்திலேயே இந்த இரண்டு பிரிவுகளும் சேர்ந்து விடாதா.... உலகிற்கு ஒரு அசாதாரண உதாரணத்தை தந்து விடாதா என்று. அவரைப் பற்றிய ஒவ்வொரு வரியையும் படிக்கையில் இன்னும் மனதில் உயர்ந்து கொண்டே போகிறார். மாஷா அல்லாஹ்... மிக அருமையான பதிவு. ஜஸாகல்லாஹு க்ஹைர்.//

இன்ஷா அல்லாஹ் உங்கள் பிரார்த்தனை பலிக்கட்டும்.

ஊர்சுற்றி said...

//...இவரை கொல்வதற்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் நேரம் பார்த்து காத்திருக்கின்றது. அந்த நாட்டுக்கு பயணிக்கும் போது தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவையில்லை. ...///


இங்கே நியூயோக்கில் இந்த ஈரான், கியூபா, வெனிசுவேலா கோஷ்டிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதிலேயே பொலிஸ், எஃப். பி.ஐ மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் கெடுபிடிகள் தாங்க முடியாமல் இருக்கிறது.
இவரைக்கொல்ல அமெரிக்காவுக்குத்தான் அழைக்க வேண்டும் என்றில்லை.
ஐ.நா வுக்கு பக்கத்தில் இருக்கும் ஹொட்டேலுக்கு கொண்டு சென்று இவர்களை விட தனி லேனை ஒதுக்கி உள்ளனர். யாரும் போக முடியாது. அப்படிப் பாதுகாப்பு.
ஆமாம்...சுவனப்பிரியன் அவர்களே. சும்மா இணையத்தில் மட்டுமே எழுதாமல் ஊரையும் சுற்றினால் உண்மை தெரியவரும்.

இவரைக்கொல்ல அமெரிக்கா ஐ.நா வுக்கு அழைக்குமாம். கொல்லுமாம். கதை விடுகிறார் கேளுங்கள்.

ஊர்சுற்றி said...

இன்னொன்று .....இந்த 160 படைபட்டாளத்தில் அனேகர் பெண்கள். இவர்கள் ஏன் வந்துள்ளனர் யூத சைத்தானின் எடுபிடிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கவா?
இந்தப் பெண்கள் (படைபட்டாளம்) ஹொட்டலில் இருந்து நேரே போன இடம் அமெரிக்க சுதந்திர தேவி சிலை !
ஆஹா...!!!!!
அடுத்தது மன்ஹட்டனின் விலை உயர்ந்த ஆடை அணிகலன் கடைகள், ஷம்பூ, மேக்கப் பொருட்கள்.
பாவப்பட்ட சில சிற்றூழியர்கள் மலிவான கடைகளுக்கு ஷொப்பிங் போனார்கள்.

இவர்கள் வாங்கியது என்ன தெரியுமா?
தமது பிள்ளைகளுக்கு பாதணி, தலையிடிக்கு போடும் ரைலினோல், விட்டமின்கள், சோப் போன்றவை !

இரானில் சோப்புக்கூடவா இல்லை?
அப்படி இல்லாத நாட்டில் இருந்து 160 பேருடன் வந்து $1600 டொலருக்கு ஒரு அறைவீதம் எடுத்து தங்க வேண்டுமா?

நல்ல எளிமையான மனிதர்.

திருபுவனம் வலை தளம் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அஹமத் நிஜாத் பேணும இஸ்லாமிய பண்புகள் எனும்தலைப்பில் நான் எழுத இருந்தேன்
சிறப்பாக அதை செய்து விட்டீர்கள்
இதற்கு முன் அவரை பற்றி நான் பதிந்த செய்திகள் சில
http://newstbm.blogspot.com/2011/10/blog-post_13.html

ஊர்சுற்றி said...

சுவனப்பிரியன் இன்னொரு விடயத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
அரசசெலவில் படைபட்டாளத்துடன் வந்த பெண்கள் தம்மை பேர்ஷியாவில் இருந்து வந்தவர்கள் என்ச் சொல்லிக்கொண்டனர். மக்களின் வரிப்பணத்தில் வந்தவர்கள் தமது நாட்டின் பண்டைய பெயரில் ஒழித்து அறிமுகம் செய்வதன் நோக்கம் என்ன?
எனக்கு எத்தனையோ ஈரானியர்களைத் தெரியும் அவர்கள் தம்மை ஈரானியர்கள் எனவே சொல்லுவார்கள். ஆனால் மக்கல் வரிப்பணத்தில் வந்தவர்கள்??????
அப்படிப்பார்த்தால் ஐ.நாவின் உத்தியோகபூர்வ அறிக்கைகள், அழைப்புகல் எல்லாவற்றிலும் பேர்ஷியா எனவே இருக்க வேண்டுமே? ஈரான் என்றல்லவா இருக்கிறது!

திருபுவனம் வலை தளம் said...

சர்வதேச சமூகத்தின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஆணிவேராய் இருப்பவை அமெரிக்காவும் இஸ்ரேலுமே" என்று ஈரானிய அதிபர் மஹ்மூத் அஹ்மதி நிஜாத் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
http://newstbm.blogspot.com/2011/07/blog-post_07.html

திருபுவனம் வலை தளம் said...

The Fox New TV (US) asked the Iranian President Ahmedi Nijad;

"When you look into the mirror in the morning what do you
say to yourself"?
He answered: I see the person in the mirror and tell him
"Remember, you are no
more than a small servant, ahead of you today is the heavy
responsibility, and
that is to serve the Iranian nation".
http://newstbm.blogspot.com/2011/01/blog-post_4620.html

ஊர்சுற்றி said...

பெற்றோலை சேமிக்க படைபட்டாளம் இல்லாமல் செல்லும் இவரின் நாட்டில் அமெரிக்க, ஐரோப்பிய எண்ணெய் ஏற்றுமதி தடையினால் 40-50 பில்லியன் டொலர் பெறுமதியான பெற்றோல் தேங்கிக்கிடக்கிறது! இவர் வேறு இன்னும் மிச்சம் பிடிக்கிறார் போலும்!!!!

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! திருபுவனம் வலைதளம்!

//அஹமத் நிஜாத் பேணும இஸ்லாமிய பண்புகள் எனும்தலைப்பில் நான் எழுத இருந்தேன்
சிறப்பாக அதை செய்து விட்டீர்கள் //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Unknown said...

மிஸ்டர் ஊர்சுற்றி,

//மக்களின் வரிப்பணத்தில் வந்தவர்கள் தமது நாட்டின் பண்டைய பெயரில் ஒழித்து அறிமுகம் செய்வதன் நோக்கம் என்ன?
எனக்கு எத்தனையோ ஈரானியர்களைத் தெரியும் அவர்கள் தம்மை ஈரானியர்கள் எனவே சொல்லுவார்கள். ஆனால் மக்கல் வரிப்பணத்தில் வந்தவர்கள்??????
அப்படிப்பார்த்தால் ஐ.நாவின் உத்தியோகபூர்வ அறிக்கைகள், அழைப்புகல் எல்லாவற்றிலும் பேர்ஷியா எனவே இருக்க வேண்டுமே? ஈரான் என்றல்லவா இருக்கிறது!///

இந்தியப் பிரதமர் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதும் மக்கள் வரிப் பணத்தில்தான்! சொந்தப் பணத்தில் அல்ல.

கருணாநிதி அடிக்கடி டில்லிக்குப் பறப்பதும் அவரின் சொந்தப் பணம் அல்ல.

உத்தியோக அல்லது உத்தியோகமற்ற விஜயங்களாக இருந்தாலும் ஒரு நாட்டின் அமைச்சர்களிலிருந்து அரச தலைவர்கள்வரை, மக்கள் வரிப்பணத்தில் இருந்துதான் பயணிக்கின்றனர். இதற்கு ஈரான் தலைவரும் விதி விலக்கல்ல.

தான் பிறந்த நாட்டை, ஒருவர் பலவிதத்தில் அழைத்துக் கொள்ளலாம். ஈரான் நாட்டவரின் மொழி பார்சு மொழி. அந்த மொழியின் அடையாளத்தில் அவர்களின் நாட்டை பெர்ஷியா என்று அழைத்துக் கொள்வது அவர்களின் உரிமை. விருப்பம். பழைய பெயரும் பெர்ஷியாதான்! இதனால், உங்களுக்கென்ன?

ஜெர்மன் நாட்டவர், தமது நாட்டை Deutschland என்று அழைப்பர். அவர்கள், ஆஸ்திரியா அல்லது சுவிஸ், நெதர்லாந்து போன்ற பக்கத்து நாடுகளுக்குப் போனால், தமது நாட்டை Deutschland என்றே அழைத்துக் கொள்வர்.

நீங்கள் சொல்லும் ஐ. நா அறிக்கைகள், அழைப்புகள் எல்லாம் ஜெர்மனி என்றுதான் இருக்கிறது. இது அவர்களுக்கே பிரச்சனை அல்ல. உங்களுக்கென்ன பிரச்சனை இப்போது?

நீங்களும் கொஞ்சம் நன்றாக ஊர்சுற்றினால் என்ன?


///இந்தப் பெண்கள் (படைபட்டாளம்) ஹொட்டலில் இருந்து நேரே போன இடம் அமெரிக்க சுதந்திர தேவி சிலை !
ஆஹா...!!!!!
அடுத்தது மன்ஹட்டனின் விலை உயர்ந்த ஆடை அணிகலன் கடைகள், ஷம்பூ, மேக்கப் பொருட்கள்.
பாவப்பட்ட சில சிற்றூழியர்கள் மலிவான கடைகளுக்கு ஷொப்பிங் போனார்கள்.///

இரானிய ஜனாதிபதிக் குழுவினர், என்ன சாப்பிடுகிறார்கள், எங்கே தூங்குகிறார்கள், யாருடன் கதைக்கிறார்கள், எங்கே ஷாப்பிங் செய்கிறார்கள் போன்றவற்றை அமெரிக்க ஊடக ஷைத்தான்கள் எப்போதும் ஒரு 'நக்கல்' கலந்த அறிக்கைகளையும் செய்திகளையும் ஒளிபரப்புவதை, நீங்கள் இங்கே வாந்தி எடுக்கிறீர்களா?

///இவர்கள் வாங்கியது என்ன தெரியுமா?
தமது பிள்ளைகளுக்கு பாதணி, தலையிடிக்கு போடும் ரைலினோல், விட்டமின்கள், சோப் போன்றவை !


இந்தியனுக்கு அவனின் நாட்டில் என்னதான் இருந்தாலும், வெளிநாட்டில் காலடி எடுத்து வைத்தால், அவன் இந்தியப் பொருள்களையே மறந்து விடும் பழக்கதோஷம் இருக்கிறது. ஆனால், அவனைவிட, ஈரான்காரன் எவ்வளவோ மேல். அவனின் நாட்டில் எல்லாமே இருக்கிறது.

///இரானில் சோப்புக்கூடவா இல்லை?///

30 வருடங்களுக்குமுன், இலங்கையிலிருந்து வரும் பயணிகளிடம் இருந்து, இந்திய சுங்க அதிகாரிகள் முதல் சாதாரண இந்தியன்வரை, அவர்களிடம் சோப்பு கேட்டு தொல்லை படுத்தினதை நினைவுபடுத்துகிறீர்கள்.

ஊர்சுற்றி said...

/....இந்தியப் பிரதமர் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதும் மக்கள் வரிப் பணத்தில்தான்! சொந்தப் பணத்தில் அல்ல.....///

அவர் சிறந்த தலைவருக்குரிய இலக்கணம் என சு.பி பதிவு போடவில்லையே !

//...இதற்கு ஈரான் தலைவரும் விதி விலக்கல்ல.....//

அப்படிச் சொன்னால் ஓகே! ஆனால் அமெரிக்கா இவரை கொன்று விடும். பொற்றோலை மிச்சம் பிடிக்கிறார் என எடுத்து விடக்கூடாது பாருங்க!


/.... விருப்பம். பழைய பெயரும் பெர்ஷியாதான்! இதனால், உங்களுக்கென்ன?...//

அப்படியே ஐ.நாவின் குறிப்புகளிலும் மாற்ரம் செய்யலாமே. மதராசைக்கூட சென்னை என மாற்றி விட்டனர் !

/....ஜெர்மன் நாட்டவர், தமது நாட்டை Deutschland என்று அழைப்பர். அவர்கள், ஆஸ்திரியா அல்லது சுவிஸ், நெதர்லாந்து போன்ற பக்கத்து நாடுகளுக்குப் போனால், தமது நாட்டை Deutschland என்றே அழைத்துக் கொள்வர். ....//

ஆனால அமெரிக்காவுக்கு வந்தால் அப்படிச் சொல்லுவதில்லை. காரணம் ஆஸ்திரியா அல்லது சுவிஸ், நெதர்லாந்து களில் டொச் மொழி உள்ளது. நான் தமிழ் விழாக்களில் ஈழம் எனச் ஒல்லுவேன் வேறு இடங்களில் Sri Lanka எனவே சொல்லுவேன்.

/.....நீங்கள் சொல்லும் ஐ. நா அறிக்கைகள், அழைப்புகள் எல்லாம் ஜெர்மனி என்றுதான் இருக்கிறது. இது அவர்களுக்கே பிரச்சனை அல்ல. உங்களுக்கென்ன பிரச்சனை இப்போது?...//

ஒரு விடயம் தெரிந்து கொள்ளுங்கள். அமெரிகாவில் பல நாட்டு மக்களும் தமது சுதந்திர நிகழ்வைக் கொண்டாடுவார்கள். நியூயோக் நகரத்தில் சாலையில் அலங்கார ஊர்திகளுடன் அட்டகாசமாய் இருக்கும். ஆனால் அவர்களிலும் அதிகமாக வசிக்கும் ஜேர்மனி இனத்து மக்கள் கப்சிப்பாக இருப்பார்கள். காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்?

//...நீங்களும் கொஞ்சம் நன்றாக ஊர்சுற்றினால் என்ன?...//

அதனால் தான் நியூ யோக் கதைகள் சொல்ல முடிகிறது!




//....இரானிய ஜனாதிபதிக் குழுவினர், என்ன சாப்பிடுகிறார்கள், எங்கே தூங்குகிறார்கள், யாருடன் கதைக்கிறார்கள், எங்கே ஷாப்பிங் செய்கிறார்கள் போன்றவற்றை அமெரிக்க ஊடக ஷைத்தான்கள் எப்போதும் ஒரு 'நக்கல்' கலந்த அறிக்கைகளையும் செய்திகளையும் ஒளிபரப்புவதை, நீங்கள் இங்கே வாந்தி எடுக்கிறீர்களா?...///

ஈரானிய அதிபர் பற்றி வாதி எடுக்கும் போது யோசித்திருக்க வேண்டும் இதை ! மேலும் ஒரு சைத்தான் நாட்டுக்குப் போய் அதுவும் சுதந்திர தேவிசிலையையா பார்க்க வேண்டும். அமெரிக எதிரி சே குவேரா நியூயோக் வந்தபோது தங்கியது ஹொட்டேலில் அல்ல ஒரு ஏழையின் அப்பாட்மென்றில்!

//...


இந்தியனுக்கு அவனின் நாட்டில் என்னதான் இருந்தாலும், வெளிநாட்டில் காலடி எடுத்து வைத்தால், அவன் இந்தியப் பொருள்களையே மறந்து விடும் பழக்கதோஷம் இருக்கிறது. ஆனால், அவனைவிட, ஈரான்காரன் எவ்வளவோ மேல். அவனின் நாட்டில் எல்லாமே இருக்கிறது....////

சோப்பு, ஷம்பு, விற்றமின்.....????

//....

30 வருடங்களுக்குமுன், இலங்கையிலிருந்து வரும் பயணிகளிடம் இருந்து, இந்திய சுங்க அதிகாரிகள் முதல் சாதாரண இந்தியன்வரை, அவர்களிடம் சோப்பு கேட்டு தொல்லை படுத்தினதை நினைவுபடுத்துகிறீர்கள்.....///

ஆம்..தொல்லைப்படுத்தினார்கள். கேட்டால் சார் நம்ம சோப்பு சரியில்லை. அதுதான் கேட்கிறோம் என்பார்கள். அதை விடுத்து இலங்கைச் சோப்பை கையில் வைத்துக்கொண்டு பெரிய லெவல் கதை அளப்பதில்லை

Unknown said...

நியு யோர்க் சுற்றி,

///மேலும் ஒரு சைத்தான் நாட்டுக்குப் போய் அதுவும் சுதந்திர தேவிசிலையையா பார்க்க வேண்டும்.///

அந்த நாட்டின் ஊடகங்களைத்தான் ஷைத்தான் என்று சொன்னேன். நாடல்ல.

புலன்கள் பெயர்ந்த தமிழ்க் குலக்கொழுந்துகள், ஊருக்குச் சென்றால், அதிகமானவர்கள் கொழும்பில்தான் எல்லா சுற்றுலாக்களும் Sight Seeing களும்! இதுகூட தவறல்ல.

அதேபோல, ஈரானியர்கள் போய் பார்த்தது என்ன தவறா?

///தமிழ் விழாக்களில் ஈழம் எனச் ஒல்லுவேன்///

எனக்கு விளங்கவில்லை.

///ஆனால அமெரிக்காவுக்கு வந்தால் அப்படிச் சொல்லுவதில்லை. காரணம் ஆஸ்திரியா அல்லது சுவிஸ், நெதர்லாந்து களில் டொச் மொழி உள்ளது.///

நெதர்லாந்தில், Deutsch (டொச்) அல்ல. Dutch (டச்) தான் இருக்கிறது.

.நீங்களும் கொஞ்சம் நன்றாக ஊர்சுற்றினால் என்ன?...//

///அதனால் தான் நியூ யோக் கதைகள் சொல்ல முடிகிறது!///

நியூ யோக் நகர சுற்றி என்று பேரை மாற்றிக்கொள்ளுங்கள்.

///அமெரிக எதிரி சே குவேரா நியூயோக் வந்தபோது தங்கியது ஹொட்டேலில் அல்ல ஒரு ஏழையின் அப்பாட்மென்றில்!///

அண்மைக்கால நிகழ்வுகளை கதையுங்கள். செகுவேராவிற்கு பணம் பற்றாக்குறையாக இருந்திருக்கும்.

அன்றுபோல் இன்று இல்லை.
இன்றுபோல் நாளையும் இருக்காது.

அதுசரி, தமிழ்ப் பயங்கரவாதிகளின் எச்சங்களின் தலைமைக் கொழுந்துகள், அமேரிக்கா, கனடா, ஐரோப்பா என்று கொஞ்ச நாளைக்குமுன் விசிட் அடித்தது, மக்கள் வரிப் பணத்திலா அல்லது மக்களிடம் பறித்த பணத்திலா? வந்தவர்கள் Apartment இல்தான் தங்கினார்களா?

///கேட்டால் சார் நம்ம சோப்பு சரியில்லை. அதுதான் கேட்கிறோம் என்பார்கள். அதை விடுத்து இலங்கைச் சோப்பை கையில் வைத்துக்கொண்டு பெரிய லெவல் கதை அளப்பதில்லை///

இலங்கைச் சோப்பு கையில் இருந்தால், எந்த மடையன் பெரிய லெவல் கதை அளப்பான்? என்ன ஆளய்யா நீங்கள்?

///ஐ.நாவின் குறிப்புகளிலும் மாற்ரம் செய்யலாமே. மதராசைக்கூட சென்னை என மாற்றி விட்டனர்///

நாடு விட்டு நாடு அகதியாகப் போனோமா, தொழில் செய்தோமா, உழைத்தோமா என்றிராமல், இன்னொரு நாட்டின் பேரை மாற்ற வேண்டும் என்ற கோளாறு உள்ளவராக இருக்கலாமா?

///ஆனால் அவர்களிலும் அதிகமாக வசிக்கும் ஜேர்மனி இனத்து மக்கள் கப்சிப்பாக இருப்பார்கள். காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்? ///

என்னிடம் கேட்டால்? இருக்கும் இடத்தில் உள்ளவர்கள்தான், மிகவும் அறிந்தவர்கள்.

சொல்லுங்கள் சும்மா குதறாமல், நாமும் அறிந்து கொள்ளலாம்.

///சோப்பு, ஷம்பு, விற்றமின்.....????///

சித்தாலேபவும் இருக்கிறதா?

ஊர்சுற்றி said...

//....

அந்த நாட்டின் ஊடகங்களைத்தான் ஷைத்தான் என்று சொன்னேன். நாடல்ல. ...//

அடடா..இப்படியும் ஒரு வெட்டியோடல் இருக்கா? அப்போ பிளேனைக்கடத்தி குண்டுவைக்கும் போதும், 30,000 அலவில் வேலை செய்யும் கட்டடங்கலை வீழ்த்தும் போதும் ஊடகங்களா கொல்லப்படுகின்றன?

//....புலன்கள் பெயர்ந்த தமிழ்க் குலக்கொழுந்துகள், ஊருக்குச் சென்றால், அதிகமானவர்கள் கொழும்பில்தான் எல்லா சுற்றுலாக்களும் Sight Seeing களும்! இதுகூட தவறல்ல. ....//



//....அதேபோல, ஈரானியர்கள் போய் பார்த்தது என்ன தவறா?....//

தவறல்ல, பெற்றோல் மிச்சம் பிடிக்க இருந்த காரையும் விற்றுவிட்டார், படைபட்டாளங்களுடன் போவதில்லை அஹமதினஜாஅத் என எழுதி கதை விடுவதில் தான் தவறே இருக்கிறது. இந்தப் பதிவின் தலைப்பு என்ன? மீண்டும் படிக்கவும்.

ஊர்சுற்றி said...

///ஆனால அமெரிக்காவுக்கு வந்தால் அப்படிச் சொல்லுவதில்லை. காரணம் ஆஸ்திரியா அல்லது சுவிஸ், நெதர்லாந்து களில் டொச் மொழி உள்ளது.///

நெதர்லாந்தில், Deutsch (டொச்) அல்ல. Dutch (டச்) தான் இருக்கிறது.

.நீங்களும் கொஞ்சம் நன்றாக ஊர்சுற்றினால் என்ன?...//

டொச்..டச் அல்ல இங்கே பிரச்சினை. ஆங்கிலம் முதன்மை மொழியாக இருக்கும் இடங்களில் அவர்கள் ஜேர்மனியர்கள் என தம்மை அறிமுகம் செய்வார்கள். அதுதான் சொல்ல வந்த பொயின்ற்!

///அதனால் தான் நியூ யோக் கதைகள் சொல்ல முடிகிறது!///

நியூ யோக் நகர சுற்றி என்று பேரை மாற்றிக்கொள்ளுங்கள்...//

நல்லகாலம் அஹமதினஜாத் கூட்டம் நியூயோக் வந்திச்சு. அவர் நல்லவர் வல்லவர் பெற்றோல் சேமிப்பாளர், விலை உயர்ந்த கடைகளை தவிர்ப்பவர், அவருடன் வந்த படை பட்டாளப்பெண்கள் அமெரிக்க அடையாளமாக இருக்கும் சுதந்திர தேவி சிலையை துச்சமென மதிப்பவர்கள் என நினைத்துக்கொண்டிருந்த எனக்கு நியூயோக் சுற்றியாக இருப்பதால் பம்மாத்துகள் புரிந்தது!

///அமெரிக எதிரி சே குவேரா நியூயோக் வந்தபோது தங்கியது ஹொட்டேலில் அல்ல ஒரு ஏழையின் அப்பாட்மென்றில்!///

அண்மைக்கால நிகழ்வுகளை கதையுங்கள். செகுவேராவிற்கு பணம் பற்றாக்குறையாக இருந்திருக்கும்...//

அண்ணா....எந்த ஒரு அரசுக்கும் நியூயோர்க்கில் ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதி நிதி இருப்பார். அங்கே தங்கும் வசதி உண்டு. ஸ்ரீலங்காவுக்கும் உள்ளது. ஏழை நாட்டினர் வந்தால் ஹொட்டேலுக்கு போக மாட்டார்கள். அங்கே தெங்குவர். மக்களின் வரிப்பணத்தில் உல்லாசமாய் வாழுவோர் ஹொட்டல்களில் கழியாட்டம் போடுவார்கள்.

அதை விடுங்க ஈரானிடம் அதிகம் பணம் உள்ளதா? அப்போ ஏன் பெற்றோலை மிச்சம் பிடிக்கிறார் நல்லவர் வல்லவரான தலைவர்?
ஈரானிடம் பணம் இல்லை ஆனால் 50 பில்லியன் பெறுமதியான பெற்றோல் தேங்கிக்கிடக்கிறது!
இல்லாத பணத்தை மிச்சம் பிடித்து இருக்கும் பெற்றோலை சேமிக்கிறாராக்கும்? சுப்பர்!

ஒரு டொலருக்கு எத்தனை ஈரானிய ரியால் எனத்தெரியுமா? 32,000-40,000 ரியால்கள்! கடந்த 10 மாதங்களில் மட்டும் 25% கூடி இருக்கிறது. சும்மா சொல்லக்கூடாது பாவன் சே குவேரா கையில் காசில்லை. அவர் நியூயோக் வந்த போது ஒரு டொலருக்கு 25-30 பேசோ (கியூப பணம்) கிடைத்திருக்கும் இரானியப்பணம் அப்படியா 32,000-40,000 அடேயப்பா?


//...அன்றுபோல் இன்று இல்லை.
இன்றுபோல் நாளையும் இருக்காது......

அதுக்கென்ன இப்போ? ஒரு வேளை அஹமதினஜாத் இன் நல்ல, வல்ல, மிச்சம் பிடிக்கும் குணங்களெல்லாம் தலைகீழாகி விடும் எனச் சொல்ல வருகிறீர்களா?

//....அதுசரி, தமிழ்ப் பயங்கரவாதிகளின் எச்சங்களின் தலைமைக் கொழுந்துகள், அமேரிக்கா, கனடா, ஐரோப்பா என்று கொஞ்ச நாளைக்குமுன் விசிட் அடித்தது, மக்கள் வரிப் பணத்திலா அல்லது மக்களிடம் பறித்த பணத்திலா? வந்தவர்கள் Apartment இல்தான் தங்கினார்களா?...///

இங்கே நாம் பேசுவது அஹமதினஜாத் நல்லவர், வல்லவர், மிச்சம் பிடிப்பவர், எளிமையானவர் எனும் தலைப்பில். அதற்குள் நீங்கள் ஏன் பயங்கரவாதிகளின் எச்சசொச்சங்களை இழுக்கிறீர்கள்? அப்போ அஹமதிநஜாத் அந்தக்கூட்டத்தைச் சேர்ந்தவரா?

///கேட்டால் சார் நம்ம சோப்பு சரியில்லை. அதுதான் கேட்கிறோம் என்பார்கள். அதை விடுத்து இலங்கைச் சோப்பை கையில் வைத்துக்கொண்டு பெரிய லெவல் கதை அளப்பதில்லை///

இலங்கைச் சோப்பு கையில் இருந்தால், எந்த மடையன் பெரிய லெவல் கதை அளப்பான்? என்ன ஆளய்யா நீங்கள்?.////

ஒப்பீட்டிக்குச் சொன்னேன். அஹமினஜாத் பெரிய லெவல் கதை ஆனால் அமஎரிக்காவில் சோப்பு ஷம்பு ஷொப்பிம்க்! பொயின்ற் விளங்குதா?

///ஐ.நாவின் குறிப்புகளிலும் மாற்ரம் செய்யலாமே. மதராசைக்கூட சென்னை என மாற்றி விட்டனர்///

நாடு விட்டு நாடு அகதியாகப் போனோமா, தொழில் செய்தோமா, உழைத்தோமா என்றிராமல், இன்னொரு நாட்டின் பேரை மாற்ற வேண்டும் என்ற கோளாறு உள்ளவராக இருக்கலாமா?...///

பார்த்தீர்களா உங்கள் வக்கிரத்தை? இங்கே விவாதம் அஹமதிநஜாத் பற்றியது.
இன்னொன்று அகதியாய் போனாலும் அந்த நாட்டில் சகல உரிமைகளும் உள்ளன!
ஈரானியருக்கும் அவை உள்ளன!
மயன்மார் முஸ்லிம் அகதிகளுக்கும் உரிமை உள்ளது. அண்மையில் மயன்மார் முஸ்லிம் அகதியை சந்தித்தேன் அவர் மயன்மார் முஸ்லிம்களுக்காக ஐ.நா படிக்கட்டுகளில் ஏறி இற (ர)ங்கிக்கொண்டிருக்கிறார். அகதியாய் வந்தோமா..கோப்பையை (எச்சில் தட்டு?) கழுவிமோமா...வேலையைப்பார்த்தோமா என வாழாவிருக்கவில்லை!

///ஆனால் அவர்களிலும் அதிகமாக வசிக்கும் ஜேர்மனி இனத்து மக்கள் கப்சிப்பாக இருப்பார்கள். காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்? ///

என்னிடம் கேட்டால்? இருக்கும் இடத்தில் உள்ளவர்கள்தான், மிகவும் அறிந்தவர்கள்.

//...

அடடா....அதனால்தானா அமெரிக்கா வந்த படைபட்டாளப் பெண்டிர் அமரிக பெண்டிரைப்போல் சோப்பு..சீப்பு..கண்னாடி..ஷம்பூ??? சுப்பராக இருக்கே!

///சோப்பு, ஷம்பு, விற்றமின்.....????///

சித்தாலேபவும் இருக்கிறதா?...//

அது ஸ்ரீலங்கா அதிபர் கொடுப்பார்?

Unknown said...


///டொச்..டச் அல்ல இங்கே பிரச்சினை. ஆங்கிலம் முதன்மை மொழியாக இருக்கும் இடங்களில் அவர்கள் ஜேர்மனியர்கள் என தம்மை அறிமுகம் செய்வார்கள். அதுதான் சொல்ல வந்த பொயின்ற்!///

உங்கள் போயின்ட் ரொம்ப முக்கியம்? இது உங்களிடம் இருந்துதான் அறிந்து கொள்ள வேண்டுமா? ஒருத்தருக்கும் தெரியாது?

ஆங்கிலம் முதன்மை அற்ற நாடுகளிலும், ஜெர்மனி என்றுதான் அறிமுகம், சில நாடுகளைத் தவிர!

/....அதுசரி, தமிழ்ப் பயங்கரவாதிகளின் எச்சங்களின் தலைமைக் கொழுந்துகள், அமேரிக்கா, கனடா, ஐரோப்பா என்று கொஞ்ச நாளைக்குமுன் விசிட் அடித்தது, மக்கள் வரிப் பணத்திலா அல்லது மக்களிடம் பறித்த பணத்திலா? வந்தவர்கள் Apartment இல்தான் தங்கினார்களா?...///
///அதற்குள் நீங்கள் ஏன் பயங்கரவாதிகளின் எச்சசொச்சங்களை இழுக்கிறீர்கள்?///

நியூ யோர்கில் இருந்து கொண்டு, உங்களது பிறந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களில் இருந்து, எல்லா முஸ்லிம்களையும் குதறும் நீங்கள், இந்த தமிழ்ப் பயங்கரவாதிகளின் அழுகல் தலைவர்களை மட்டும் நாங்கள் இழுக்கும்போது, தட்டி வேறு பக்கம் திருப்புகிறீர்கள். ஏன் உங்களுக்கு வயிற்றெரிச்சலா?

///இலங்கைச் சோப்பு கையில் இருந்தால், எந்த மடையன் பெரிய லெவல் கதை அளப்பான்? என்ன ஆளய்யா நீங்கள்?.//// ///ஒப்பீட்டிக்குச் சொன்னேன்.///

மடையனின் ஒப்பீடு யாருக்கு இங்கு தேவைப்படுகுது!

சித்தாலேபவும் இருக்கிறதா?...//
அது ஸ்ரீலங்கா அதிபர் கொடுப்பார்?///

கிழட்டு சம்பந்தனிடம் கேட்டுப் பாருங்கள்.

///ஆனால் அவர்களிலும் அதிகமாக வசிக்கும் ஜேர்மனி இனத்து மக்கள் கப்சிப்பாக இருப்பார்கள். காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்? ///
///என்னிடம் கேட்டால்? இருக்கும் இடத்தில் உள்ளவர்கள்தான், மிகவும் அறிந்தவர்கள்.///

கேட்ட கேள்விக்கு பதில் எழுதப் பழகுங்கள். கேள்வி கேட்கும்போதே குதறாமல் பதில் சொல்லச் சொன்னேன். இதற்கும் உங்கள் பதில் குதறலாக வேறொன்றாக இருக்கிறதே! நாய் வாலை நிமிர்த்த முடியுமா?


///நாடு விட்டு நாடு அகதியாகப் போனோமா, தொழில் செய்தோமா, உழைத்தோமா என்றிராமல், இன்னொரு நாட்டின் பேரை மாற்ற வேண்டும் என்ற கோளாறு உள்ளவராக இருக்கலாமா?...///
///பார்த்தீர்களா உங்கள் வக்கிரத்தை?///

உங்கள் உடம்பு முழுவதும் மிருக வக்கிரந்தானே! அதனால்தான், மியன்மார் முஸ்லிம்களையும் இழுத்தீர்களாக்கும்!

வாழ்நாள் முழுவதும் குதறிக்கொண்டே இருங்கள். அதுதானே தொழில்!

முஸ்லிம்களுக்கெதிரான வக்கிர எண்ணங்களையும் மிருக வெறியையும் வேறு தளங்களில் வைத்துக் கொள்ளுங்கள். இங்கே கும்மியடிக்க வேண்டாம்.

ஊர்சுற்றி said...

//...

உங்கள் போயின்ட் ரொம்ப முக்கியம்? இது உங்களிடம் இருந்துதான் அறிந்து கொள்ள வேண்டுமா? ஒருத்தருக்கும் தெரியாது?...///

அப்போ ஏன் அஹமதி நஜாத் நல்லவர் வல்லவர் சோப்பு சீப்பு ஷம்பு பாரசீகம் கதைக்கு ஜேர்மனியை இழுத்து வந்தீர்கள்? பொயின்ற் விளங்கினால் ஒத்துக்கொண்டு விட்டு போக வேண்டியதுதானே?

///...ஆங்கிலம் முதன்மை அற்ற நாடுகளிலும், ஜெர்மனி என்றுதான் அறிமுகம், சில நாடுகளைத் தவிர!...///

அப்படியான நாடுகளில் வந்து ஏன் ஈரான் என்பதனை பேர்சியா என சொல்ல வேண்டும்??? ஒரு சில நாடுகளை (ஒரே மொழியை விளங்கிக்கொள்ளக்கூடிய) தனியாக எடுத்து ஆங்கிலம் பேசும் நாட்டில் நடந்ததை ஒப்பிட்டீர்களே? அப்போ தெரியவில்லையா?

//..

நியூ யோர்கில் இருந்து கொண்டு, உங்களது பிறந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களில் இருந்து, எல்லா முஸ்லிம்களையும் குதறும் நீங்கள், இந்த தமிழ்ப் பயங்கரவாதிகளின் அழுகல் தலைவர்களை மட்டும் நாங்கள் இழுக்கும்போது, தட்டி வேறு பக்கம் திருப்புகிறீர்கள். ஏன் உங்களுக்கு வயிற்றெரிச்சலா?...///

நான் சொல்ல வந்தது ஈரானிய அதிபர் சு.பி சொன்னது போல நல்லவர் , வல்லவர், பெற்றோஓலை மிச்சம் பிடிப்பவர், சிக்கனமானவர் அல்ல என்பதனையே! அதற்கு நீங்கள் சொன்ன பதில் இன்றுவரை ஈரானின் நம்பிக்கைக்கும் நட்புக்கும் பாத்திரமாக இருக்கும் கியூபாவின் தலை சிறந்த தலைவனை அவமதித்ததே! அவரின் தியாகங்கள், போடாட்ட குணம் அமெரிகக் மக்களால் (இளம் சந்ததி) பாராட்டப்படுகிறது. ஆனால் நீங்கள் அமெரிக்க கடும்போக்காளர்கள் கூட சொல்லாத ‘அவரிடம் ஒபணம் இல்லை. அதனால் தான் ஏழையின் குடிசையில் தங்கினார்” எனும் கருத்துப்பட நையாண்டி செய்கிறீர்களே! இதுவா அஹமதி நஜாத்தின் தோழன் ஃபிடல் காஸ்ரோவுக்கு கொடுக்கும் உபகாரம்? இதையா எல்லாம்வல்ல இறைவன் உங்களுக்கு கற்றூத்தந்தான்?

//..

மடையனின் ஒப்பீடு யாருக்கு இங்கு தேவைப்படுகுது!...//

உண்மை உறைத்தால் இப்படித்தான் பதில் இருக்கும் !

//...சித்தாலேபவும் இருக்கிறதா?...//
அது ஸ்ரீலங்கா அதிபர் கொடுப்பார்?///

கிழட்டு சம்பந்தனிடம் கேட்டுப் பாருங்கள்.....///

அப்போ ஏன் என்னிடம் கேட்டீர்கள் சித்தாலெப்பே இருக்கா எண்டு? உங்களுக்கே பதில் தெரிந்திருக்கே? அடுத்த தடவை பெற்றொல் மிச்சம் பிடிக்கும் தலைவலி மாத்திரையை அமெரிகாவில் வாங்கும் அஹமதி நஜாத் கோஷ்டி இடம் சொல்லுங்கள் கிழட்டு சம்பந்தனிடம் கேட்கும்படி! ஒருவேளை ஆளைத்தெரியாதே எனச் சொன்னால் கிழட்டு ஹொமேனியிலும் விட கொஞ்சம் இளமையாக இருப்பார் என அடையாளம் சொல்லுங்கள்!

//..

கேட்ட கேள்விக்கு பதில் எழுதப் பழகுங்கள்....//

அதை நீங்கள் சொல்லி நாம் தெரிய வேண்டி இருக்கு!

//.. கேள்வி கேட்கும்போதே குதறாமல் பதில் சொல்லச் சொன்னேன். இதற்கும் உங்கள் பதில் குதறலாக வேறொன்றாக இருக்கிறதே! நாய் வாலை நிமிர்த்த முடியுமா?..//

அமெரிக்காவில் ஜேர்மனிய வழித்தோன்றல்கள் மிக அதிகம். அவர்கள் மொத்த சனத்தொகையில் 17% ஆனால் அவர்களிலும் விடக் குறைவான வீததில் இருக்கும் அயரிஷ் காரர்கள், இந்தியர்கள், சீனர்கள், யூதர்கள், ஈழத்தமிழர்கள், மெக்சிக்கர்கள்.....போல தம்மை வெளிக்காட்டிக்கொள்வதில்லை. காரணம் ஹிட்லர்!
அதேபோல ஈரானில் இருந்தௌ வந்த கோஷ்டி தம்மை பேர்ஷியர்கள் என அறிமுகம் செய்து கொண்டனர்! காரணம்????






//...உங்கள் உடம்பு முழுவதும் மிருக வக்கிரந்தானே! அதனால்தான், மியன்மார் முஸ்லிம்களையும் இழுத்தீர்களாக்கும்! ...///

அஹமதி நிஜாத் பற்றி எழுதப்போக அகதிவாழ்க்கையை இழுத்து தனது வக்கிரத்தை வெளியில் காட்டியது யார்?
மயன்மார் முஸ்லிம் அகதிக்காக ஐ.நா படிக்கட்டுகளில் ஏறி இறங்கி (இரங்கி) பாடுபடும் மயன்மார் முஸ்லிமின் நற்குணங்களைச் சொல்லுவது தப்பா?

அனேகமாக இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் ஐ.நா அருகே அவரைக்காண இயலும் அப்போது அவரிடம் ”....நாடு விட்டு நாடு அகதியாகப் போனோமா, தொழில் செய்தோமா, உழைத்தோமா என்றிராமல், இன்னொரு நாட்டின் பேரை மாற்ற வேண்டும் என்ற கோளாறு உள்ளவராக இருக்கலாமா?...” என ஒரு யூசுப் இஸ்மத் என்பவர் சொல்கிறார். அதுபற்றி அவரின் கருத்து என்ன எனக்கேட்டுச் சொல்கிறேன்!

//...வாழ்நாள் முழுவதும் குதறிக்கொண்டே இருங்கள். அதுதானே தொழில்!..///

அடடா!!!!!

//....முஸ்லிம்களுக்கெதிரான வக்கிர எண்ணங்களையும் மிருக வெறியையும் வேறு தளங்களில் வைத்துக் கொள்ளுங்கள். இங்கே கும்மியடிக்க வேண்டாம்....///

ஒரு அகதியை நோக்கி எறியப்பட்ட சொற்களை மீண்டும் நோக்குங்கள். பாலஸ்தீன அகதி, ஈரானைய அகதி, ஈராக்கிய அகதி, ஆப்கானிஸ்தானிய அகதி, திபெத்திய அகதி, ....என நீளும் பட்டியலில் உள்ளவர்களை நோக்கியே இச்சொற்கள் எறியப்பட்டிருக்கிரதாக நான்கருதுகிறேன். வக்கிர புத்தி , கும்மியடித்தல் பற்றி நீங்க சொல்லி நான் தெரிய வேண்டி இருக்கு!

Unknown said...

///அப்போ ஏன் அஹமதி நஜாத் நல்லவர் வல்லவர் சோப்பு சீப்பு ஷம்பு பாரசீகம் கதைக்கு ஜேர்மனியை இழுத்து வந்தீர்கள்? பொயின்ற் விளங்கினால் ஒத்துக்கொண்டு விட்டு போக வேண்டியதுதானே?///

நெதர்லாந்தில் Dutch இருக்கிறது என்று உங்களைத் திருத்தினால், ஒத்துக்கொண்டு தொலைந்து போக வேண்டியதுதானே!. அதல்ல பிரச்சனை என்று ஆங்கிலம் முதன்மொழி என்று இழுத்துக்கொண்டு சென்றதும் நீங்கள்தானே!

///அப்படியான நாடுகளில் வந்து ஏன் ஈரான் என்பதனை பேர்சியா என சொல்ல வேண்டும்???///

பெர்ஷியா என்றால் அன்றிலிருந்து இன்றுவரை, எல்லா நாட்டினருக்கும் தெரிந்த நாடு. உங்களுக்குத் தெரியாவிட்டால், நான் என்ன செய்ய?

///கியூபாவின் தலை சிறந்த தலைவனை அவமதித்ததே! அவரின் தியாகங்கள், போடாட்ட குணம் அமெரிகக் மக்களால் (இளம் சந்ததி) பாராட்டப்படுகிறது.///

ஒரு நாட்டின் மக்கள், ஒரு நாட்டுத் தலைவரைப் பாராட்டினால் நாமும் பாராட்ட வேண்டுமா? என்னய்யா விவஸ்தை கெட்டவராக இருக்கிறீரே!

நீங்கள் சொன்னதுபோல், எனது எழுத்தில் எந்த அவமதிப்பும் இல்லை.

///ஆனால் நீங்கள் அமெரிக்க கடும்போக்காளர்கள் கூட சொல்லாத ‘அவரிடம் ஒபணம் இல்லை. அதனால் தான் ஏழையின் குடிசையில் தங்கினார்” எனும் கருத்துப்பட நையாண்டி செய்கிறீர்களே!///

பொதுவாக நயவஞ்சகர்களிடம் எந்த ஒரு உண்மையையும் எதிர்பார்க்க முடியாது. அதனால்தான், நான் சொல்லாத எதையெதையோ உளறுகிறீர்கள். நீங்கள்தான், அவர் Apartment இல் தங்கினார் என்று பெருமிதமாகச் சொன்னீர்கள். நீங்களே சொல்லிவிட்டு, நான் எழுதி நையாண்டி செய்ததாக சொல்கிறீர்களே! உண்மையில், நயவஞ்சகர்களிடம், உண்மையை எதிர்பார்க்க முடியாதுதான்!

அவரிடம் பணம் இல்லாமல் இருந்திருக்கும் என்று மட்டும் நான் சொன்னது எப்படி நையாண்டி என்ற கோதாவில் வரும்?

///உண்மை உறைத்தால் இப்படித்தான் பதில் இருக்கும் !///

நயவஞ்சகர்களிடம் உண்மை இருந்தால்தானே, உறைப்பதற்கு!

///கேட்ட கேள்விக்கு பதில் எழுதப் பழகுங்கள்....//
///அதை நீங்கள் சொல்லி நாம் தெரிய வேண்டி இருக்கு!///

நானென்ன வேறு எவன் சொன்னாலும், நீர் தெரிந்து கொள்ளப் போவது இல்லை.

///அமெரிக்காவில் ஜேர்மனிய வழித்தோன்றல்கள் மிக அதிகம். அவர்கள் மொத்த சனத்தொகையில் 17% ஆனால் அவர்களிலும் விடக் குறைவான வீததில் இருக்கும் அயரிஷ் காரர்கள், இந்தியர்கள், சீனர்கள், யூதர்கள், ஈழத்தமிழர்கள், மெக்சிக்கர்கள்.....போல தம்மை வெளிக்காட்டிக்கொள்வதில்லை. காரணம் ஹிட்லர்!///

கேட்ட கேள்விக்கு இரண்டு தடவை யாரையோ குதறி விட்டு, பதிலை தரும் பெரிய யோக்கியவான் நீங்கள்?

ஜெர்மனில் தசாப்த காலமாக இருக்கும் எனக்கு, அம்மக்களின் வாழ்வு இயல்பு நிலைகளைப் பற்றி நன்கு தெரியும்.

///அதேபோல ஈரானில் இருந்தௌ வந்த கோஷ்டி தம்மை பேர்ஷியர்கள் என அறிமுகம் செய்து கொண்டனர்! காரணம்????///

இதே பின்னூட்டத்தில் போட்டிருக்கிறேன். தேடித் தெளிவு பெறுங்கள், விரும்பினால்!

///அஹமதி நிஜாத் பற்றி எழுதப்போக அகதிவாழ்க்கையை இழுத்து தனது வக்கிரத்தை வெளியில் காட்டியது யார்?
மயன்மார் முஸ்லிம் அகதிக்காக ஐ.நா படிக்கட்டுகளில் ஏறி இறங்கி (இரங்கி) பாடுபடும் மயன்மார் முஸ்லிமின் நற்குணங்களைச் சொல்லுவது தப்பா?///

உங்களுக்கேன் மற்றவர்களின் வாழ்க்கையைப்பற்றி அவ்வளவு அக்கறை? அதுவும் முஸ்லிம்களைப் பற்றி!

மியன்மார் முஸ்லிம்களைப் பற்றி இங்கு கும்மியடிக்கும் நீங்கள், வேறு தளங்களில் நிச்சயமாக அவர்களுக்கு எதிராக எழுதி இருப்பீர்கள்.

New York வந்த ஈரானியப் பெண்கள் சீப்பு, சோப்பு, சாம்பு வாங்கினார்கள் என்று பொண்ணப் பயல் மாதிரி, எழுதிக் குவிக்கிறீர்களே! உங்களுக்கு வெட்கமாக இல்லை. இது வக்கிரமாக உங்களுக்குப் படவில்லையா? அதே ரேஞ்சில் நாங்களும் பதிலளித்தால், எம்மை வக்கிரமாகப் பார்க்கிறீர்கள்?

அமெரிக்க, கனடா, ஐரோப்பா என்று விசிட் அடித்த சம்பந்தன் கூட்டத்தோடு இருந்த தமிழ்ப் பெண்கள், அவர்களுக்கு ஆலவட்டம் பிடித்த பெண்கள் என்ன வாங்கினார்கள், எங்கே படுத்தார்கள், எந்த சோப்பு வாங்கிக் குளித்தார்கள் என்றெல்லாம் எழுத மாட்டீர்கள்! அது மட்டும் உங்களுக்கு அசிங்கம். இப்படி நான் கேட்பதும் அசிங்கம்தான்! உங்களது பெண்சாதி, பெண்மக்களை எப்படி கௌரவமாக நினைக்கிறீர்களோ, அந்த நிலையிலிருந்து, அந்நிய பெண்களையும் கௌரவமாக ஏன் நோக்கக்கூடாது? அதாவது, ஈரானியப் பெண்கள் உள்பட!

///மயன்மார் முஸ்லிம் அகதிக்காக ஐ.நா படிக்கட்டுகளில் ஏறி இறங்கி (இரங்கி) பாடுபடும் மயன்மார் முஸ்லிமின் நற்குணங்களைச் சொல்லுவது தப்பா?///

அதை சாதாரண தமிழ்க் குடிமகன் சொன்னால், நிச்சயம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இதை உதட்டிலே ஈரமும் நெஞ்சிலே நஞ்சும் வைத்துள்ள நீங்கள் சொல்லலாமா?

Unknown said...

///வக்கிர புத்தி , கும்மியடித்தல் பற்றி நீங்க சொல்லி நான் தெரிய வேண்டி இருக்கு!///

கொஞ்சமும் முன் யோசனை இல்லாமல், பரபரக்க எழுதித் தள்ளும்போதே யோசித்து இருக்க வேண்டும்.

உங்களுக்கு எவ்வளவு சொல்லியும் திருந்தவா போகிறீர்கள்?

அஹ்மதி நஜாத் ஒரு முஸ்லிமாக இருப்பதினால், இப்படி குறுக்கும் நெடுக்குமாக எழுதித் தள்ளும் நீங்கள், முஸ்லிமல்லாத ஒரு நாட்டின் அதிபர் நியூ யோர்க்கிற்கு வந்திருந்தால், இந்தப் பக்கமும் வந்திருக்க மாட்டீர்கள்.

ஹஜ் பயணம் இனி மெட்ரோ ரயிலில், என்ற பதிவில் உங்களது கமெண்ட் பார்த்தேன்.

இவரா இப்படி எழுதுகிறார் என்று புல்லரித்து விட்டது.

///ஒரு அகதியை நோக்கி எறியப்பட்ட சொற்களை மீண்டும் நோக்குங்கள்.///

அகதி என்றால் யார் என்பதும், வக்கிர புத்தியுள்ளவர்கள் யாரென்பதும் நான் நன்கறிவேன்.

எனது எழுத்துக்கள் யாரை நோக்கி எறியப்பட்டது என்பதையும் நான் அறிவேன்.

Unknown said...

///அடுத்த தடவை பெற்றொல் மிச்சம் பிடிக்கும் தலைவலி மாத்திரையை அமெரிகாவில் வாங்கும் அஹமதி நஜாத் கோஷ்டி இடம் சொல்லுங்கள் கிழட்டு சம்பந்தனிடம் கேட்கும்படி! ஒருவேளை ஆளைத்தெரியாதே எனச் சொன்னால் கிழட்டு ஹொமேனியிலும் விட கொஞ்சம் இளமையாக இருப்பார் என அடையாளம் சொல்லுங்கள்!///


விட்டமின்களில் இருந்து இப்போது, தலைவலி மாத்திரையாக மாறிவிட்டதா? ஒன்றை உளறி இன்னொன்றை உளருவதுதானே, உமக்கு கை வந்த கலை.

கிழட்டு சம்பந்தனும் அவரின் நாதாரிக் கூட்டமும் மறுபடி அங்கு விசிட் அடிக்க வரும்போது, தலைவலி மாத்திரை, விட்டமின், சாம்பு, சோப்பு எல்லாவற்றையும் மக்களிடம் பறித்த பணத்தில் இருந்து வாங்குவதற்கு ஷாப்பிங் செய்ய உதவி செய்யும். அவர்கள் கொண்டுவரும் சித்தாலேபையை நீர் வாங்கிக் கொள்ளும்.

அப்படியே, அவர்கள் எதைச் சாப்பிடுகிறார்கள் அதாவது, இடியப்பம், தோசை, இட்லி, வடை, சாம்பார், சட்டினி சம்பல் போன்றவைகளை எங்கு வாங்கிச் சாப்பிடுகிறார்கள் என்பதையும் பதிவு செய்யும்.

என்ன விலையில் சாப்பிடுகிறார் என்பதையும் கவனியும்!

அவர்கள் தங்குவது, ஹோட்டலிலா அல்லது Apartment இலிலா அல்லது ஏழையின் குடிசையிலா என்பதையும் பதிவு செய்யும்.

இதற்குத்தான் நீர் லாயக்கு!

ஊர்சுற்றி said...

//..ஒரு நாட்டின் மக்கள், ஒரு நாட்டுத் தலைவரைப் பாராட்டினால் நாமும் பாராட்ட வேண்டுமா? என்னய்யா விவஸ்தை கெட்டவராக இருக்கிறீரே! ...//

அதைத்தான் நானும் ஆரம்பத்திலேயே இருந்து சொல்கிறேனே! சு.பி பாராட்டினால் அந்த புழுகுமூட்டை பாராட்டை நானும் ஒத்துக்கொண்டு ஊதவேண்டுமா?

//...
நெதர்லாந்தில் Dutch இருக்கிறது என்று உங்களைத் திருத்தினால், ஒத்துக்கொண்டு தொலைந்து போக வேண்டியதுதானே!. அதல்ல பிரச்சனை என்று ஆங்கிலம் முதன்மொழி என்று இழுத்துக்கொண்டு சென்றதும் நீங்கள்தானே!...//

இங்கே பிரச்சினை டொச்/டச் அல்ல. அஹமிநயாத் ஏன் கோடிகோடியாக வழிந்தோடும் பெற்றோலை மிச்சம் பிடிக்க வேண்டும்? ஒரு டொலருக்கு 35,000 ரியால்களாக மாறிய நாட்டில் இருந்தௌ வந்தவர் ஏன் $1600 இரவுக்கு கொடுத்து 160 ‘படைபட்டாலம்’ தங்க வேண்டும்....

///..
பெர்ஷியா என்றால் அன்றிலிருந்து இன்றுவரை, எல்லா நாட்டினருக்கும் தெரிந்த நாடு. உங்களுக்குத் தெரியாவிட்டால், நான் என்ன செய்ய?....//

ஒன்றும் செய்ய வேண்டாம். எப்படி ஹிட்லர் இழைத்த கொடுமைகளால் ஏறக்குறைய 50 மில்லியன் ஜேர்மன் வழித்தோன்றல்கள் தமது இன அடையாலத்தை மறைக்கிறார்களோ அவ்வாறே இரானியரும் உலக அறிவு குறைந்த ஹொட்டல் ஊழியர்களிடமும் தம்மை பேர்சியா எனச் சொல்லி ஒழிக்க முனைகிறார்கள்!

///கியூபாவின் தலை சிறந்த தலைவனை அவமதித்ததே! அவரின் தியாகங்கள், போடாட்ட குணம் அமெரிகக் மக்களால் (இளம் சந்ததி) பாராட்டப்படுகிறது.///

ஒரு நாட்டின் மக்கள், ஒரு நாட்டுத் தலைவரைப் பாராட்டினால் நாமும் பாராட்ட வேண்டுமா? என்னய்யா விவஸ்தை கெட்டவராக இருக்கிறீரே!

நீங்கள் சொன்னதுபோல், எனது எழுத்தில் எந்த அவமதிப்பும் இல்லை.....///

பாராட்ட வேண்டிய அவசியம் இல்லை. போகிறபோக்கில் அவரிடம் காசில்லாமல் இருதிருக்க வேண்டும் என அள்ளி விடக்கூடாது. நான் சொன்னது போல சேயின் கையெழுத்துடன் கியூபாவில் பணத்தாள் இருந்த காலம் அது!
ஈரானிய அதிபர் (பெற்றோல் மிச்சம் பிடிக்கும் படைபட்டாள கேஸ்) மற்றும் மக்களுக்காக நிரந்தர சைத்தானை எதிர்த்து குரல் கொடுக்கும் நாட்டின் தலை சிறந்த போராளியைக்கூட் அகாரியம் முடிந்த பின் கைவிடும் கோஷ்டி நீங்கள்!

///ஆனால் நீங்கள் அமெரிக்க கடும்போக்காளர்கள் கூட சொல்லாத ‘அவரிடம் ஒபணம் இல்லை. அதனால் தான் ஏழையின் குடிசையில் தங்கினார்” எனும் கருத்துப்பட நையாண்டி செய்கிறீர்களே!///

பொதுவாக நயவஞ்சகர்களிடம் எந்த ஒரு உண்மையையும் எதிர்பார்க்க முடியாது. அதனால்தான், நான் சொல்லாத எதையெதையோ உளறுகிறீர்கள். நீங்கள்தான், அவர் Apartment இல் தங்கினார் என்று பெருமிதமாகச் சொன்னீர்கள். நீங்களே சொல்லிவிட்டு, நான் எழுதி நையாண்டி செய்ததாக சொல்கிறீர்களே! உண்மையில், நயவஞ்சகர்களிடம், உண்மையை எதிர்பார்க்க முடியாதுதான்!....//

அப்பாட்ட்மென்ற் என்றால் நியாண்டியா? அப்பாடா! சுப்பர் !!!!

ஊர்சுற்றி said...

//...அவரிடம் பணம் இல்லாமல் இருந்திருக்கும் என்று மட்டும் நான் சொன்னது எப்படி நையாண்டி என்ற கோதாவில் வரும்?...//
போகிற போக்கில் அள்ளிவிடலில் வருமே?



///அமெரிக்காவில் ஜேர்மனிய வழித்தோன்றல்கள் மிக அதிகம். அவர்கள் மொத்த சனத்தொகையில் 17% ஆனால் அவர்களிலும் விடக் குறைவான வீததில் இருக்கும் அயரிஷ் காரர்கள், இந்தியர்கள், சீனர்கள், யூதர்கள், ஈழத்தமிழர்கள், மெக்சிக்கர்கள்.....போல தம்மை வெளிக்காட்டிக்கொள்வதில்லை. காரணம் ஹிட்லர்!///

கேட்ட கேள்விக்கு இரண்டு தடவை யாரையோ குதறி விட்டு, பதிலை தரும் பெரிய யோக்கியவான் நீங்கள்?

ஜெர்மனில் தசாப்த காலமாக இருக்கும் எனக்கு, அம்மக்களின் வாழ்வு இயல்பு நிலைகளைப் பற்றி நன்கு தெரியும்....//

நான் பேசுவது அம்ரிக்க ஜேர்மனிய வழித்தோன்றல்கள் பற்றி !



///அஹமதி நிஜாத் பற்றி எழுதப்போக அகதிவாழ்க்கையை இழுத்து தனது வக்கிரத்தை வெளியில் காட்டியது யார்?
மயன்மார் முஸ்லிம் அகதிக்காக ஐ.நா படிக்கட்டுகளில் ஏறி இறங்கி (இரங்கி) பாடுபடும் மயன்மார் முஸ்லிமின் நற்குணங்களைச் சொல்லுவது தப்பா?///

உங்களுக்கேன் மற்றவர்களின் வாழ்க்கையைப்பற்றி அவ்வளவு அக்கறை? அதுவும் முஸ்லிம்களைப் பற்றி!

மியன்மார் முஸ்லிம்களைப் பற்றி இங்கு கும்மியடிக்கும் நீங்கள், வேறு தளங்களில் நிச்சயமாக அவர்களுக்கு எதிராக எழுதி இருப்பீர்கள்.

New York வந்த ஈரானியப் பெண்கள் சீப்பு, சோப்பு, சாம்பு வாங்கினார்கள் என்று பொண்ணப் பயல் மாதிரி, எழுதிக் குவிக்கிறீர்களே! உங்களுக்கு வெட்கமாக இல்லை. இது வக்கிரமாக உங்களுக்குப் படவில்லையா? அதே ரேஞ்சில் நாங்களும் பதிலளித்தால், எம்மை வக்கிரமாகப் பார்க்கிறீர்கள்?...///

நான் வக்கிரமாகச் சொல்லவில்லை. ஆனால் சு.பி பெற்றோல் மிச்சம் பிடிக்கிறார்...படைபட்டாலம் இல்லை...இருந்த காரையும் விற்று விட்டார் என பெரிய லெவலுக்கு கதை விட்டார். ஆனால் நிலமை நியூயோர்க்கில் தலைகீழ் என்பதே என் கருத்து!

///...அமெரிக்க, கனடா, ஐரோப்பா என்று விசிட் அடித்த சம்பந்தன் கூட்டத்தோடு இருந்த தமிழ்ப் பெண்கள், அவர்களுக்கு ஆலவட்டம் பிடித்த பெண்கள் என்ன வாங்கினார்கள், எங்கே படுத்தார்கள், எந்த சோப்பு வாங்கிக் குளித்தார்கள் என்றெல்லாம் எழுத மாட்டீர்கள்! அது மட்டும் உங்களுக்கு அசிங்கம். இப்படி நான் கேட்பதும் அசிங்கம்தான்! உங்களது பெண்சாதி, பெண்மக்களை எப்படி கௌரவமாக நினைக்கிறீர்களோ, அந்த நிலையிலிருந்து, அந்நிய பெண்களையும் கௌரவமாக ஏன் நோக்கக்கூடாது? அதாவது, ஈரானியப் பெண்கள் உள்பட! ....//

அஹமதி நஜாத் நல்லவர் வல்லவர் பெற்றோலை மிச்சம் பிடிப்பார் எனக் கதை விட்டவர்கள். அதற்கு பதில் இல்லாமல் சம்பந்தரையும் அகதித்தமிழனையும் புலியையும் இழுத்து வருவது இருக்கே? சுப்பர்!!!!

///மயன்மார் முஸ்லிம் அகதிக்காக ஐ.நா படிக்கட்டுகளில் ஏறி இறங்கி (இரங்கி) பாடுபடும் மயன்மார் முஸ்லிமின் நற்குணங்களைச் சொல்லுவது தப்பா?///

அதை சாதாரண தமிழ்க் குடிமகன் சொன்னால், நிச்சயம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இதை உதட்டிலே ஈரமும் நெஞ்சிலே நஞ்சும் வைத்துள்ள நீங்கள் சொல்லலாமா?...///

அந்த அகதி மயன்மார் முஸ்லிம் எனக்கு என்ன சொன்னார் எனத்தெரியுமா உங்களுக்கு? அகதி காஷ்மீர் முஸ்லிம் குடும்பம் ஒன்று ஐ.நா முன்னாடி என்னிடம் என்ன பேசினார்கள் எனத்தெரியுமா உங்களுக்கு. ?

ஊர்சுற்றி said...

///வக்கிர புத்தி , கும்மியடித்தல் பற்றி நீங்க சொல்லி நான் தெரிய வேண்டி இருக்கு!///

கொஞ்சமும் முன் யோசனை இல்லாமல், பரபரக்க எழுதித் தள்ளும்போதே யோசித்து இருக்க வேண்டும்.

உங்களுக்கு எவ்வளவு சொல்லியும் திருந்தவா போகிறீர்கள்?

அஹ்மதி நஜாத் ஒரு முஸ்லிமாக இருப்பதினால், இப்படி குறுக்கும் நெடுக்குமாக எழுதித் தள்ளும் நீங்கள், முஸ்லிமல்லாத ஒரு நாட்டின் அதிபர் நியூ யோர்க்கிற்கு வந்திருந்தால், இந்தப் பக்கமும் வந்திருக்க மாட்டீர்கள்....///

பலகாலமாக இந்தப்பக்கம் வந்து கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் நானாக பார்க்காத சம்பவங்கள் பற்றி பொதுவாக கொமென்ற் போடுவதில்லை!

//...ஹஜ் பயணம் இனி மெட்ரோ ரயிலில், என்ற பதிவில் உங்களது கமெண்ட் பார்த்தேன்.

இவரா இப்படி எழுதுகிறார் என்று புல்லரித்து விட்டது......//

நான் போட்ட கொமென்றுக்கு பதில் உண்டா? சும்மா புல்லரித்து பிரஜோசனம் இல்லை! ”ஆதாமிண்டே மகன் அபு” அமெரிக்க ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படம். அந்தப்படத்தின் அடிநாதமே இந்த சொந்த உழைப்பு/ஹஜ் செயற்பாடுகள்! அது பம்மாத்து என்றால் சொல்லி விட்டு போங்களேன்! எனக்கென்ன வந்தது?

///ஒரு அகதியை நோக்கி எறியப்பட்ட சொற்களை மீண்டும் நோக்குங்கள்.///

அகதி என்றால் யார் என்பதும், வக்கிர புத்தியுள்ளவர்கள் யாரென்பதும் நான் நன்கறிவேன்.

எனது எழுத்துக்கள் யாரை நோக்கி எறியப்பட்டது என்பதையும் நான் அறிவேன்.....//

பின்னூட்டம் இடும் போது யாரை நோக்கி என உங்களுக்கு மட்டும் தெரிந்தால் போதாது. மற்றவர்களுக்கும் தெரியும் படி போட்டால் நல்லது!


///அடுத்த தடவை பெற்றொல் மிச்சம் பிடிக்கும் தலைவலி மாத்திரையை அமெரிகாவில் வாங்கும் அஹமதி நஜாத் கோஷ்டி இடம் சொல்லுங்கள் கிழட்டு சம்பந்தனிடம் கேட்கும்படி! ஒருவேளை ஆளைத்தெரியாதே எனச் சொன்னால் கிழட்டு ஹொமேனியிலும் விட கொஞ்சம் இளமையாக இருப்பார் என அடையாளம் சொல்லுங்கள்!///


விட்டமின்களில் இருந்து இப்போது, தலைவலி மாத்திரையாக மாறிவிட்டதா? ஒன்றை உளறி இன்னொன்றை உளருவதுதானே, உமக்கு கை வந்த கலை.....///

எனது ஒரிஜினல் கொமென்ற் இல்

“...இவர்கள் வாங்கியது என்ன தெரியுமா?
தமது பிள்ளைகளுக்கு பாதணி, தலையிடிக்கு போடும் ரைலினோல், விட்டமின்கள், சோப் போன்றவை !


11:07 AM “ க்கு போட்டிருந்தேன் கவனிக்கவில்லையோ?

//......கிழட்டு சம்பந்தனும் அவரின் நாதாரிக் கூட்டமும் மறுபடி அங்கு விசிட் அடிக்க வரும்போது, தலைவலி மாத்திரை, விட்டமின், சாம்பு, சோப்பு எல்லாவற்றையும் மக்களிடம் பறித்த பணத்தில் இருந்து வாங்குவதற்கு ஷாப்பிங் செய்ய உதவி செய்யும். அவர்கள் கொண்டுவரும் சித்தாலேபையை நீர் வாங்கிக் கொள்ளும்.....//

அப்படியே, அவர்கள் எதைச் சாப்பிடுகிறார்கள் அதாவது, இடியப்பம், தோசை, இட்லி, வடை, சாம்பார், சட்டினி சம்பல் போன்றவைகளை எங்கு வாங்கிச் சாப்பிடுகிறார்கள் என்பதையும் பதிவு செய்யும்.

என்ன விலையில் சாப்பிடுகிறார் என்பதையும் கவனியும்!

அவர்கள் தங்குவது, ஹோட்டலிலா அல்லது Apartment இலிலா அல்லது ஏழையின் குடிசையிலா என்பதையும் பதிவு செய்யும்.

இதற்குத்தான் நீர் லாயக்கு!...///

அது சுவனப்பிரியன, கவனப்பிரியனோ சம்பந்தர் நல்லவர் வல்லவர் இடியப்பமே சாப்பிடாதவர் இட்லி வடை சட்னி சம்பல்...என கதை விட்டால் பின்னர் பார்க்கலாம் !
இங்கே கருப்பொருள் அஹமதிநஜாத் நல்லவர், வல்லவர்.....சம்பந்தர் புலி அகதித்தமிழன் அல்ல!