Followers

Monday, September 03, 2012

உயிரினங்களின் மூலம் தண்ணீர் என்பது உண்மைதானா?



பெல்ஜியத்தை சேர்ந்த ஜான் பாப்டிஸ்டா வேன் ஹெல்மண்ட் என்ற வேதியியல் நிபுணருக்கு தாவரங்களின் வளர்ச்சியைப் பற்றி ஒரு பெரும் சந்தேகம் வந்தது. இது எவ்வாறு வளர்கிறது என்பதை சோதிக்க எண்ணினார். எனவே வில்லோ மரம் ஒன்றினை ஒரு பெரிய தொட்டியில் மண்ணை நிரப்பி வளர்க்க ஆரம்பித்தார். தொட்டியில் இட்ட மண்ணின் அளவை குறித்துக் கொண்டார். அதே போல் மரத்தின் நிறையையும் குறித்துக் கொண்டார். மரமும் நன்றாக வளர்ந்தது. ஐந்து வருடங்களுக்கு பிறகு தொட்டியிலிருந்து மரத்தை வெளியில் எடுத்து அதன் நிறையை கணக்கிட்டார். மரத்தின் அளவு 164 பவுண்டாக இருந்தது. அதன் பிறகு மண்ணின் நிறையை அளக்க ஆரம்பித்தார். ஆச்சரியமாக மண்ணின் நிறையில் மிக சிறிய மாற்றமே உண்டானது. மரத்தின் நிறை கூடினால் மண்ணின் நிறை குறைய வேண்டும். அதுதான் இயற்கை என்று ஹெல்மண்ட் நம்பியிருந்தார். ஏனெனில் இந்த மரம் வளர்வதற்கு ஆதாரமாக மண்தானே இருக்கிறது என்பது அவரது எண்ணம். ஆனால் இந்த மரம் வளர்ந்ததற்கு முக்கிய காரணம் அவர் தினமும் ஊற்றிய தண்ணீர் என்பதை பிறகு தான் விளங்கிக் கொண்டார்.



அதன் பிறகு பின்னால் வந்த அறிவியல் அறிஞர்கள் தண்ணீரோடு ஆக்சிஜன் மற்றும் சூரிய ஒளியும் ஒரு தாவரம் வளர அவசியம் என்பதை கண்டு பிடித்தனர். ஆக உயிரினங்கள் அனைத்தும் தங்கள் உடலில் உண்டாக்கப்பட்டுள்ள உடலமைப்பினால் தேவையான தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்கின்றன. அது இயலாத பட்சத்தில் அந்த உயிரினத்திற்கு இறப்பு நிச்சயம் என்பதை நாம் அறிவோம். இந்த தண்ணீரிலிருந்துதான் உயிரினங்கள் தங்கள் உடம்புக்கு தேவையான சத்துக்களை கிரகித்துக் கொள்கின்றன. நாம் உண்ணும் உணவிலிருந்து குடிக்கும் அனைத்து பானங்களின் மூலமும் தண்ணீராகவே இருக்கிறது. உயிரியல் பாடங்களை நாம் எடுத்துக் கொண்டாலும் உயிரினங்களுக்கு 80 சதவீதம் நீர் அவசியம் என்று கூறுகிறது. அதே போல் என்சைக்ளோபீடியாவும் உயிரினங்களின் உயிர் வாழ தண்ணீர் 50 சதவீத்திலிருந்து 85 சதவீதம் வரை அவசியம் என்கிறது. தாவரங்களின் ஒளிச் சேர்க்கை நடைபெற அடிப்படை பொருட்களாக கார்பன் டை ஆக்சைடு, நீர், பச்சையம், மற்றும் சூரிய ஒளி அவசியமாகிறது. இங்கும் நீரின் தேவை மிக அவசியமாகிறது. இந்த உண்மைகள் எல்லாம் அறிவியல் அறிஞர்களால் 17 ஆம் நூற்றாண்டு வாக்கில்தான் கண்டுபிடிக்கப்படுகிறது.


சாதாரண மண்ணை எடுத்துக் கொள்வோம். வெறும் மணலாக இருக்கும் போது அந்த மண்ணுக்கு உயிர் வருவது இல்லை. அந்த மண்ணோடு தண்ணீரும் கலந்து சேறும் சகதியுமாக மாறியவுடன்தான் புல் பூண்டுகள் முளைக்க ஆரம்பிக்கின்றன. எனவே இந்த இடத்திலும் தண்ணீரின் அவசியத்தை நாம் பார்க்கிறோம். இன்னும் விளக்கமாக சொல்லப் போனால் நீர் இல்லாத மண்ணானது உயிர் இல்லாத உடலைப் போன்றது.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் படத்தில் மணலில் எந்த அளவு தண்ணீர் உள்ளது. மக்கிய தாவரங்கள் கலந்த மண்ணில் எந்த அளவு தண்ணீர் உள்ளது. பயிர்கள் அதிகம் விளையக் கூடிய களிமண்ணில் எந்த அளவு தண்ணீர் உள்ளது என்பதை விபரமாக விளக்குகிறது.





(The table and figures were originally published by the Institute of Agriculture and Natural Resources at the University of Nebraska - Lincoln.)

டார்வினின் பரிணாம வளர்ச்சி விதி உயிரினங்கள் அனைத்தும் நீரிலிருந்தான் தோன்றின என்கிறது. அதாவது ஒரு செல் உயிரிகள் தண்ணீரிலிருந்தே தோன்றி பிறகு கால்கள் முளைத்து கரைக்கு வந்ததாக சொல்வார். அந்த ஒரு செல் உயிரி உண்டானது தண்ணீரிலிருந்தே என்பது டார்வினின் தத்துவமாகும். ஆனால் அதன் பிறகுதான் குழம்பி விடுகிறார். பலரையும் குழப்பி விடுகிறார். :-)

நமது மூளை 80% நீரால் ஆனது. கண்கள் உலர்ந்து போகாமலிருக்க இரண்டு வகையான ஈரம் தேவைப்படுகிறது. அவற்றின் விளிம்பில் 30 சுரப்பிகள் உள்ளன. கண்சிமிட்டும் போதெல்லாம் கண்விழி இவற்றின் மூலம் அலம்புகின்றன. அழுது கண்ணீர் விடும்போது கண் விழிமேல் இருக்கும் சுரப்பிகளிலிருந்து கண்ணீர் சப்ளை ஆகிறது. மனித உடலில் 97,000 இரத்த நாளங்கள் உள்ளன. ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன. இதயத்திலிருந்து புறப்பட்ட இரத்தம் உடல் முழுவதும் ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும் இதயத்திற்குத் திரும்ப எடுத்துக் கொள்ளும் நேரம் 30 செகண்டு ஆகும். 70 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 5600 மில்லிலிட்டர் ரத்தம் உடம்பிலிருக்கும். நமது மொத்த உடல் எடையில் 12% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது. இவ்வாறு நமது உடலின் எந்த பகுதியை எடுத்துக் கொண்டாலும் நீர் சார்ந்த பொருட்களே ஆதிக்கம் செலுத்துகிறது.

ஒவ்வொரு உயிரினத்தையும் இறைவன் நீரால் படைத்தான்..
குர்ஆன் 24:45

'உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்தே அமைத்தோம் என்பதையும் நம்மை மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?'
குர்ஆன் 21:30

'அவனே தண்ணீரால் மனிதனை படைத்தான்'
குர்ஆன் 25:54

மேற்கண்ட வசனங்கள் மனிதன் மற்றும் உயிருள்ள ஜீவராசிகள் அனைத்துக்கும் மூலமாக தண்ணீர் உள்ளது என்பதை விவரிக்கிறது. இது இன்று நமக்கு ஒரு சாதாரண கண்டுபிடிப்பாக இருக்கும். ஆனால் குர்ஆன் இறங்கிய அன்றைய அறியாமை காலத்தை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். நம் நாட்டைப் போல் நில வளம் பொருந்திய நாடு அல்ல அன்றைய சவுதி. எங்கு நோக்கினாலும் பாலைவனம்தான். ஏதோ ஒரு சில இடங்களில் அத்தி பூத்தாற்போல ஒரு சில பேரித்தம் மரங்கள் சோகமாக நின்று கொண்டிருக்கும். இது தான் அன்றைய அரேபியாவின் நிலை. அந்த சமூகமும் படிப்பறிவில்லாத சமூகம். இந்த நிலையில் எழுதவும் படிக்கவும் தெரியாத ஒரு நாட்டுப் புற அரபி இவ்வாறு வசனங்களை சொல்லியிருக்க முடியும் என்பதை நம் அறிவு ஏற்கிறதா?

இல்லை: இது உங்களையும் என்னையும் படைத்த அந்த ஏக இறைவனின் வார்த்தைகள் தான் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை என்ற முடிவுக்கே நாம் வருவோம்.

உயிர் வாழ மண்ணும் தண்ணீரும் எந்த அளவு அவசியம் என்று பார்த்தோம். மண்ணை மனைகளாக்காமல் பயிர் விளையும் பூமியாக்கி நீர் வளத்தையும் நில வளத்தையும் மாசு படாமல் காப்போம். பின்னால் ஏற்படக் கூடிய சிரமங்களை தவிர்ப்போம். தமிழக கிராமங்களில் உள்ள செல்வந்தர்கள் ஆங்காங்கே குளங்களை வெட்டி மழை நீரை சேகரித்து மக்களுக்கு சேவை செய்வோம். அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் நமக்கு நாமே திட்டம் வகுத்தால்தான் வருங்கால சந்ததிகள் நிம்மதியாக காலத்தை ஓட்ட முடியும்..

------------------------------------------------



கோவை சிறையில் பல ஆண்டுகள் விசாரணை கைதியாக இருந்து தற்போது விடுதலையாகியிருக்கும் சகோதரி ஆயிஷாவின் மனக்குமுறலை கேளுங்கள். இவரது தந்தை இன்றும் இந்துவாகத்தான் உள்ளார். சகோதரி ஆயிஷா புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர். ஒருக்கால் இவர் இஸ்லாத்தை ஏற்றதுதான் இவர் செய்த குற்றமாக காவல் துறை கருதியதா?

கோவையில் குண்டு வைத்து அப்பாவிகள் இறக்க காரணமானவர்கள் எந்த மதத்தவராக இருந்தாலும் அவர்களை தூக்கில் கூட போடுங்கள். ஆனால் அப்பாவிகளை இத்தனை வருடம் விசாரணை கைதிகளாக வைத்திருந்து விட்டு தற்போது வெளியாக்குவதால் அவர்களின் சிறையில் கழிந்த வாழ்நாளை யார் திரும்ப கொடுப்பார்?

48 comments:

ஸாதிகா said...

சலாம்.அருமையான ஆக்கம் சகோ. இறுதியில் //உயிர் வாழ மண்ணும் தண்ணீரும் எந்த அளவு அவசியம் என்று பார்த்தோம். மண்ணை மனைகளாக்காமல் பயிர் விளையும் பூமியாக்கி நீர் வளத்தையும் நில வளத்தையும் மாசு படாமல் காப்போம். பின்னால் ஏற்படக் கூடிய சிரமங்களை தவிர்ப்போம். தமிழக கிராமங்களில் உள்ள செல்வந்தர்கள் ஆங்காங்கே குளங்களை வெட்டி மழை நீரை சேகரித்து மக்களுக்கு சேவை செய்வோம். அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் நமக்கு நாமே திட்டம் வகுத்தால்தான் வருங்கால சந்ததிகள் நிம்மதியாக காலத்தை ஓட்ட முடியும்.// நல்லதொரு மெசேஜ் கொடுத்து நிறைவு செய்துள்ளது இன்னும் சிறப்பு.

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

தண்ணிரில் இவ்வளவு விஷயங்களா?

பல அறியாத விஷயங்களை தெரிந்து கொண்டேன் சகோ. மாஷா அல்லாஹ்.

ஆனால் இறுதியில் ஒரு பொதுநல உத்தரவு போட்டீர்களே, அது தான் ஹைலைட்.

UNMAIKAL said...

வாசகர்களே கீழ்க்கண்ட காணொளிகளையும் காணுங்கள்.


சொடுக்கி >>> 1.
இஸ்லாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட நீண்ட நாள் அரசியல் சிறைவாசிகளின் விடுதலைக் கோரி கடந்த 1-9-2012 அன்று சென்னையில் SAVE TAMILS MOVEMENT ஏற்பாடு செய்த அரங்கக்கூட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் ஆற்றிய உரை
<<<< காணுங்கள்


சொடுக்கி >>>> 2.
கோவை குண்டு வெடிப்பு தொடர்பான பொய்வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து விடுதலையான தோழர் ஆயிஷா இப்ரஹீம் அவர்களின் உரை
<<< காணுங்கள்

THANKS TO : செல்லையா முத்துசாமி .

ராஜ நடராஜன் said...

சகோ.சுவனப்பிரியன்!இப்பத்தான் உங்க பின்னூட்ட முத்திரையைப் பார்த்தேன்.

காய் இல்லாமல் கனியில்லை:)

பல செய்திகளையும் தொடுகிறீர்கள்.ஆனால் இறுதியாக மதத்தில் வந்து முடிச்சுப் போடுவதால் உங்கள் எழுத்தின் சாரம் மாறி விடுகிறது.

உலகின் அனைத்து நாகரீகங்களும் நீர் நிலையை சார்ந்தே உருவாகியுள்ளன.எகிப்திய நாகரீகத்துக்கு நைல் உதவியென்ற போதிலும் ஏனைய அரேபிய நிலப்பகுதி ஆட்டோமன் அரசுக்கட்டுப்பாட்டில் வருகின்றது.சவுதி அரேபியா நிலப்பரப்பில் பெரிதாக இருந்தாலும் முந்தைய காலத்தில் பாலைவனம் சார்ந்த மத்திய பகுதியில் மக்கள் வசிப்பதற்கான சாத்தியமில்லாத நிலையிருந்த போதும் குதிரை,ஒட்டகம் மூலம் நீண்ட பயணங்களை கடப்பதற்கு மட்டுமே பாலைவனம் பயன்பட்டிருக்க முடியும்.ஓரளவுக்கு நீர் நிலைகள் சார்ந்த நிலப்பகுதியே மக்கள் வாழ்வுக்கு ஆதாரமாக இருந்திருக்க கூடும்.

முகமது வாழ்ந்து திரிந்த பகுதிகள் பாலைவனத்தோடு ஓரளவுக்கு மலைகள் சார்ந்த பகுதியென்பதால் நீருக்கான சாத்தியங்கள் இருந்திருக்க கூடும்.இப்பொழுது மெக்காவில் வரும் நீரின் ஒரு பகுதி கூட முகமதுவால் அருந்தப்பட்டது என்ற நம்பிக்கையுடனே சொல்லப்படுகிறது.எப்படியிருந்த போதிலும் நீரின் தேவையை நம்மை விட முகமது வாழ்ந்த கால மனிதர்கள் உணர்ந்தே இருப்பார்கள்.அதற்கான பதிவை உணர்வு பூர்வமாக குரான் செய்திருக்கலாம்.இஸ்லாம் செய்த ஒரே பயன் நாடுகள் கடந்து மதத்தால் பல மக்களை ஒன்றிணைத்தது மட்டுமே.அதுவே அதன் பலமும் பலவீனமும் என்பதை மெக்காவிற்கான கூட்டமும் மத தீவிரவாதமும் சொல்கின்றன.

பைபிளும் கூட ஒரு வார திட்டமிடுதலில் ஒரு நாள் நீரைப் படைத்தேன் என்கிறது.மதங்கள் சார்ந்து இது வரை நான் யோசிக்கவில்லையென்ற போதிலும் பதிவுலக சண்டைகள் இதன் பின்புலம் என்ற தேடலை தருகிறது.

தேடலில் கிறுஸ்தவ மதத்திற்கும்,இஸ்லாமிய மதத்திற்கும் பங்காளி சண்டைகள் என்றே மத ஆவணக்குறிப்புக்கள் சொல்கின்றன.குரானுக்கான கிளிப்பிள்ளை ஒப்பித்தலை விட பைபிளுக்கான ஆதாரங்களை நீருபணம் செய்யவும் விவாதம் செய்யவும் பலரும் முயற்சி செய்கிறார்கள் என்பதே இதுவரையிலான எனது புரிதல்.

நீரின்றி அமையா உலகு என தமிழே சொல்லும் போது சவுதி அரேபியா சென்று நீரை இறக்குமதி செய்ய வேண்டியதில்லை:)

ADMIN said...

அருமை.. இயற்கைக்கு எதிராக மனித குலம் செய்யும் சதியால், ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. நீரின் அவசியத்தை பற்றிய செய்திகளை நிறைவாக சொல்லி முடித்திருக்கிறீர்கள். சக பதிவர் ஸாதிகா அவர்களின் கருத்தை நானும் வழிமொழிகிறேன். பகிர்வினுக்கு மிக்க நன்றி..!

suvanappiriyan said...

சகோ ராஜ நடராஜன்!

//முகமது வாழ்ந்து திரிந்த பகுதிகள் பாலைவனத்தோடு ஓரளவுக்கு மலைகள் சார்ந்த பகுதியென்பதால் நீருக்கான சாத்தியங்கள் இருந்திருக்க கூடும்.இப்பொழுது மெக்காவில் வரும் நீரின் ஒரு பகுதி கூட முகமதுவால் அருந்தப்பட்டது என்ற நம்பிக்கையுடனே சொல்லப்படுகிறது.எப்படியிருந்த போதிலும் நீரின் தேவையை நம்மை விட முகமது வாழ்ந்த கால மனிதர்கள் உணர்ந்தே இருப்பார்கள்.அதற்கான பதிவை உணர்வு பூர்வமாக குரான் செய்திருக்கலாம்.இஸ்லாம் செய்த ஒரே பயன் நாடுகள் கடந்து மதத்தால் பல மக்களை ஒன்றிணைத்தது மட்டுமே.அதுவே அதன் பலமும் பலவீனமும் என்பதை மெக்காவிற்கான கூட்டமும் மத தீவிரவாதமும் சொல்கின்றன.//

முகமது நபி காலத்தில் அங்கு தண்ணீரே இல்லை என்று சொல்லவில்லை. நம்மை விட பாலை வன பிரதேசங்களில் தண்ணீரின் அளவு குறைவு என்பதே நான் சொல்ல வந்தது. தனது வாழ் நாளில் அதிக நாட்களை தற்காப்பு போர்களிலும் மார்க்க பிரசாரத்திலும் கழித்த ஒருவர் இது போன்று ஆராய்ச்சிகளெல்லாம் பண்ண வாய்ப்பிருந்தாது என்பதே நான் சொல்ல வந்தது. இன்றும் கூட உயிரினங்களின் உடல் அதிகமாக தண்ணீரினால் ஆனது என்பதை நம்பாதவர்களும் உள்ளனர். இதனையே நான் சுட்டிக் காட்டினேன்.

//பல செய்திகளையும் தொடுகிறீர்கள்.ஆனால் இறுதியாக மதத்தில் வந்து முடிச்சுப் போடுவதால் உங்கள் எழுத்தின் சாரம் மாறி விடுகிறது.//

'நீரின்றி அமையாது உலகு' என்பது போல 'மார்க்கமின்றி அமையாது மனித வாழ்வு'.

நீங்கள் என்னதான் மதம் வேண்டாம் என்று தூர போனாலும் எந்த வகையிலாவது வந்து உங்களோடு ஒட்டிக் கொள்ளும். எனவே மதம் அல்லது மார்க்கங்களை ஒதுக்காமல் அதன் மூலம் மனித குலம் மேன்மையுற என்ன வழி என்று சிந்திப்பதே நிரந்தர அமைதிக்கு வழி வகுக்கும்.

//நீரின்றி அமையா உலகு என தமிழே சொல்லும் போது சவுதி அரேபியா சென்று நீரை இறக்குமதி செய்ய வேண்டியதில்லை:)//

வள்ளுவர் சொன்னதையும் எடுத்துக் கொள்வோம்: குர்ஆன் சொன்னதையும் சிந்திப்போம். பைபிள் சொலவதிலும் நல்லவைகளை எடுத்துக் கொள்வோம். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்தற்கொப்ப அரபுலகையும் சேர்த்துக் கொள்வோம்.

//இஸ்லாம் செய்த ஒரே பயன் நாடுகள் கடந்து மதத்தால் பல மக்களை ஒன்றிணைத்தது மட்டுமே.அதுவே அதன் பலமும் பலவீனமும் என்பதை மெக்காவிற்கான கூட்டமும் மத தீவிரவாதமும் சொல்கின்றன.//

இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றப்படும் அநேக வன்முறைகள் பணத்துக்காக வல்லரசுகள் மேற்கொள்ளும் நாடகம் என்பதை அறியாதவரல்ல நீங்கள். வன்முறையை இஸ்லாம் போதிக்க வில்லை. அவ்வாறு யாரும தவறாக வழி நடத்தப்பட்டால் அந்த மனிதனின் புரிதலில் ஏற்பட்ட கோளாறேயொழிய அதற்கு இஸ்லாம் காரணமாகாது.




suvanappiriyan said...

சகோ அபு நிஹான்!

//தண்ணிரில் இவ்வளவு விஷயங்களா?

பல அறியாத விஷயங்களை தெரிந்து கொண்டேன் சகோ. மாஷா அல்லாஹ்.

ஆனால் இறுதியில் ஒரு பொதுநல உத்தரவு போட்டீர்களே, அது தான் ஹைலைட். //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சலாம் சகோ ஸாதிகா!

//நல்லதொரு மெசேஜ் கொடுத்து நிறைவு செய்துள்ளது இன்னும் சிறப்பு.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ உண்மைகள்!

//வாசகர்களே கீழ்க்கண்ட காணொளிகளையும் காணுங்கள்.//

அருமையான காணொளிகளைப பகிர்ந்தமைக்கு நன்றி!. காணொளியின் முக்கியத்துவம் கருதி பதிவிலும் தற்போது இணைத்துள்ளேன்.

suvanappiriyan said...

சகோ தங்கம் பழனி!

//அருமை.. இயற்கைக்கு எதிராக மனித குலம் செய்யும் சதியால், ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. நீரின் அவசியத்தை பற்றிய செய்திகளை நிறைவாக சொல்லி முடித்திருக்கிறீர்கள். சக பதிவர் ஸாதிகா அவர்களின் கருத்தை நானும் வழிமொழிகிறேன். பகிர்வினுக்கு மிக்க நன்றி..!//

கணிண சம்பந்தமாக பல தகவல்களை உங்கள் பதிவுகளில் கொடுத்து வருகிறீர்கள். உங்கள் தளமும் சகோ பாசித் தளமும் கணிணி சம்பந்தமான எனது பல ஐயங்களை தீர்த்துள்ளது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

UNMAIKAL said...

இளவரசி கேட் மிடில்டனிடம் கை குலுக்க மறுத்த ஈரான் பாராலிம்பிக் வீரர்!

லண்டன்: லண்டன் பாராலிம்பிக் போட்டியின்போது வட்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஈரான் வீரர் மெஹராத் கரம் ஜடே, பதக்கத்தைக் கொடுத்த இளவரசி கேட் மிடில்டனிடம் கை குலுக்க மறுத்தார்.

தங்களது நாட்டுக் கலாச்சாரப்படி அறிமுகம் இல்லாத பெண்ணைத் தொடக் கூடாது என்பதால் இவ்வாறு கை குலுக்க மறுத்ததாக பின்னர் ஈரானியர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதேசமயம், ஈரானிய வீரர்கள் கை குலுக்க மாட்டார்கள், எனவே அதை எதிர்பார்க்க வேண்டாம் என்று முன்கூட்டியே போட்டி அமைப்பாளர்கள் கேட் மிடில்டனுக்கு அறிவுறுத்தியிருந்ததால் அவர் ஏமாற்றமடையவில்லையாம்.

லண்டனில் தற்போது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.

அதில் ஆடவர் வட்டு எறிதல் போட்டியில் இங்கிலாந்து வீரர் அலெட் டேவிஸ் தங்கத்தையும், ஈரான் வீரர் மெஹராத் வெள்ளியையும், சீன வீரர் லெஷாங் வாங் வெண்கலத்தையும் வென்றனர்.

பதக்கங்களை இளவரசர் வில்லியமின் மனைவியான கேட் மிடில்டன் வழங்கினார்.

முதலில் வெண்கலப் பதக்கத்தைக் கொடுத்த அவர் சீன வீரருடன் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

அடுத்து ஈரான் வீரரிடம் வந்தார்.

அப்போது கேட் மிடில்டனுக்கு ஈரான் வீரர் மெஹராத் கை குலுக்கவில்லை.

மாறாக கைகளைத் தட்டியபடி நின்றார்.

இதையடுத்து அவருக்கு வெள்ளிப் பதக்கத்தை சிரித்தபடி அணிவித்தார் கேட்.

ஈரான் கலாச்சாரப்படி அறிமுகம் இல்லாத ஆணும், பெண்ணும் உடல் ரீதியாக தொட்டுக் கொல்லக் கூடாது என்பதால், கேட் மிடில்டனுக்கு மெஹராத் கை குலுக்கவில்லையாம்.

மேலும் இந்த பழக்க வழக்கம் குறித்து ஏற்கனவே கேட் மிடில்டனுக்கு கூறப்பட்டிருந்ததால் அவரும் கை கொடுக்கவில்லை.

மெஹராத் மட்டுமல்ல, போட்டிகளில் கலந்து கொண்டுள்ள பிற இஸ்லாமிய வீரர்களும் கூட தங்களுக்குப் பரிசு வழங்குவது பெண்களாக இருக்கும்பட்சத்தில் அவர்களிடம் கை குலுக்குவதில்லை.

அதேபோல வெளியிடங்களிலும் கூட பெண்களிடம் சற்று டிஸ்டன்ஸ் பின்பற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


http://tamil.oneindia.in/news/2012/09/04/sports-iranian-athlete-refuses-shake-duchess-of-cambridge-160797.html

suvanappiriyan said...

திரு செந்தில் குமார்!

//குரான் உலகத்தில் உள்ள அனைவருக்கும் இறைவனால் சொல்லப்பட்டது என்றால், ஏன் இஸ்ரவேலர்களின் புராணக்கதைகள் மட்டும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது? ஏன் உலகில் பிற பகுதிகளின் புராணக்கதைகள் (அதாவது இறைவன் நிகழ்த்தியதாக சொல்லப்படும் அற்புதங்கள்) அதில் குறிப்பிடப்படவில்லை?
இதிலிருந்தே முகமது என்ற மனிதர் தனக்குத் தெரிந்த புராணக் கதைகளை சொல்லி யூதர்களோடு போட்டி போட்டு தன்னிடம் God சொல்லியதாக ஏமாற்றிய ஒரு ஏடுதான் குரான் என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுவது இயல்புதானே?//

'இறைவனையும் எங்களுக்கு அருளப்பட்டதையும் தம் இறைவனால் ஆப்ரஹாம், இஸமவேல், இஸ்ஹாக், யாகோபு, மற்றும் அவரது வழித் தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும் மோசேவுக்கும் ஏசுவுக்கும் வழங்கப்பட்டதையும் ஏனைய நபிமார்களுக்கு தமது இறைவனிடமிருந்து வழங்கப்பட்டதையும் நம்பினோம்: அவர்களுக்கிடையே பாகுபாடு காட்ட மாட்டோம்: அவனுக்கே நாங்கள் கட்டுப்பட்டவர்கள்:' என்று கூறுங்கள்.
-குர்ஆன் 2:136

'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்'
-குர்ஆன் 14:4

இந்த இரண்டு குர்ஆனின் வசனங்களும் அனைத்து மொழிகளிலும் வேதத்தை இறைவன் கொடுத்ததாக கூறுகிறது. அந்த வகையில் நமது தமிழ் மொழிக்கும் வேதங்கள் வந்திருக்கின்றன. அது திருக்குறளாகக் கூட இருக்கலாம். ஆனால் அதைப் பற்றி குர்ஆனில் அறிவிப்பு இல்லை. முன்னர் அளித்த வேதங்களை மனிதர்கள் திருத்தி தங்களின் கருத்துக்களை புகுத்தியதால்தான் புதிய வேதத்தை அருள அவசியமேற்படுகிறது. எனவே அந்த திருத்தப்படட பழைய வேதங்களை அதன் கருத்துக்களையும் சொல்வதால் யாருக்கு என்ன நன்மை வந்து விடப் போகிறது? குர்ஆன் இறங்கிய காலத்திற்கு சமீபமாக இறக்கப்பட்ட இன்ஜீல் (பைபிள்) வேதத்தைப் பற்றியும் அதனை மககள் எவ்வாறு திருத்தினர் என்பதைப் பற்றியும் இறைவன் பல இடங்களில் கோடிட்டுக் காட்டுகிறான். அதற்கு முந்தய பழைய வேதங்கள் பல அழிந்தே விட்டன. அத்தனையையும் சொல்வதாக இருந்தால் பல வால்யூம்கள் தேவைப் படுமே!.

ஹுஸைனம்மா said...

//உயிர் வாழ மண்ணும் தண்ணீரும் எந்த அளவு அவசியம் //

பயிர்நிலங்கள் அருகிவரும் இக்காலத்தில் மாற்று விவ்சாய முறைகளை நாடவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். மண் இல்லாமல், நீர் மட்டுமே பயன்படுத்தி விவசாயம் செய்யும் Hydroponics முறை தற்போது பயன்பாட்டில் உள்ளது. இதில் மண்ணில் பயிர்செய்யும்போது தேவைப்படுவதைவிட தண்ணீர் குறைவாகவே தேவைப்படுகீறதாம். கீழேயுள்ள சுட்டியில் இதை வெற்றிகரமாக செய்துவருபவரின் பேட்டியைப் பார்க்கலாம்.

http://gulfnews.com/news/gulf/uae/environment/getting-more-for-less-without-soil-1.1025065

இதிலிருந்து(ம்) உயிர்கள் பெருக-வாழ நீர்தான் முக்கிய ஆதாரம் என்பதும் தெரியவருகிறது.

suvanappiriyan said...

கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்திற்கு பழிவாங்க நடந்த கலவரம் என்று சங்க்பரிவார்கள் அளித்த விளக்கத்தை முற்றிலும் நிராகரித்த நீதிமன்றம் நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலை முன்னரே திட்டமிட்டு தயார் செய்த சதித் திட்டம் என்று கூறியது. ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையிலும் இவ்வழக்கில் நீதி கிடைக்க போராடிய சமூக நீதி போராளி வழக்கறிஞசர் தீஸ்தா ஸெடல்வாட் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்.

வழக்கமாக கலவர வழக்குகளில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் தண்டிக்கப்படுவது இல்லை. முதன் முறையாக குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பு ஹிந்துத்துவா வகுப்புவாத வெறியை கட்டுப்படுத்தவும், சங்க்பரிவார சக்திகளை தளர்த்தவும் உதவும். உயர் கல்வி என்பது ஹிந்துத்துவா மதவெறிக்கு ஒரு தடையில்லை என்பதை மகப்பேறு டாக்டரும் பெண்கள் நலத்துறை அமைச்சருமான மாயா கொத்னானியின் செயல் நிரூபிக்கிறது. இதுபோன்ற தருணங்களில்தான் நாம் மிகவும் விழிப்போடு இருந்து மனித நேயம் காட்க்க வேண்டும்.

http://www.sinthikkavum.net/2012/09/blog-post_3.html

Unknown said...

உயிரினங்களின் மூலம் தண்ணீர் என்பது தவறு.. மாறாக உயிரினங்கள் தண்ணீரில் தோன்றின என்பதே சரியான கூற்று ஏனெனில் நீர் அசேதன மூலக்கூறு...

suvanappiriyan said...

சகோ ஹூசைனம்மா!

//இதிலிருந்து(ம்) உயிர்கள் பெருக-வாழ நீர்தான் முக்கிய ஆதாரம் என்பதும் தெரியவருகிறது.//

பதிவுக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக அருமையான தகவலை தந்தமைக்கு நன்றி!

suvanappiriyan said...

சகோ அருண் பிரசாத்!

//உயிரினங்களின் மூலம் தண்ணீர் என்பது தவறு.. மாறாக உயிரினங்கள் தண்ணீரில் தோன்றின என்பதே சரியான கூற்று ஏனெனில் நீர் அசேதன மூலக்கூறு...//

நீங்கள் சொல்வது போலவும் வைத்துக் கொள்ளலாம். முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

ராஜ நடராஜன் said...

//வள்ளுவர் சொன்னதையும் எடுத்துக் கொள்வோம்: குர்ஆன் சொன்னதையும் சிந்திப்போம். பைபிள் சொலவதிலும் நல்லவைகளை எடுத்துக் கொள்வோம். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்தற்கொப்ப அரபுலகையும் சேர்த்துக் கொள்வோம்.//

சகோ.சுவனப்பிரியன்!எனக்கு இதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை.

நீங்க ஓரளவுக்கு மிதவாதம் பேசினாலும் உங்களோடு பல்லவி பாடுபவர்களின் கூட்டு வகாபி முயற்சிகளால் பதிவுலகைப் பொறுத்த வரையில் இஸ்லாத்திற்கு களங்கமே விளைகிறது என்பதை உங்கள் அனைவருக்கும் எதிராக கிளம்பும் விமர்சனங்களே சாட்சி.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை இருக்கலாம்.தவறில்லை.ஆனால் அதனையே தொடர்ந்து முன்னிலைப்படுத்துவது தவறு என்ற கருத்துக்களே அதிகம் காணப்படுவதோடு வேறு பிரிவினை வாதங்களையும் உருவாக்குகிறது.

நேஷனல் ஜியாகிரிபிக்காரன் உங்கள் அனைவரையும் விட சிறந்த இஸ்லாமிய சேவை செய்கிறான் என்பதை மெக்கா என்ற ஆவணப்படம் பார்க்கும் போது உணர முடிந்தது.நன்றி.

Anonymous said...

பூவண்ணன் says:
September 4, 2012 at 6:26 am

the stories/studies on aryan dravidian keeps getting repeated

its a retrospective study to understand two different groups with different practises and various theories are attempted

there exists tamil and malayalam.Are they different or the same

The gothra of a kashmiri brahmin or gujarathi brahmin or bengali brahmin remains the same while those of sudras have no resemblance with that or with their counterparts across the country

I am surprised that people beleive, somehow certain people across the country got knowledge of vedas and sanskrit without any migration or movement.
The so called aryans have been proud of their roots,gothras,practises and had written about the similar gothra origins found in afghan and central asia
when subramania swamy claims that he is kashyapa gothra and has more rights than a kashmiri muslim on kashmir he is proud of his connection with kashyapa muni.a nadar or pallar or kallar has nothing similar to that
Are the aryans willing to say that there rishi gothras and practise of avoiding marriage in the same gothra are hoax and they have no connection with those of the same gothra who live in different parts and speak different languagesஅது எப்படிங்க காஷ்மீர பிராமணரோ ,ஒரிய பிராமணரோ ,இல்லை சரஸ்வத் பிராமணரோ .இல்லை ஐயன்காரோ இல்லை மைதிலி,பட் என்று இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் காஷ்யப பாரத்வாஜ அகஸ்தி என்று ஒரே மாதிரி ரிஷி பேர் கோத்திரம் வருகிறது.

http://en.wikipedia.org/wiki/Datt

Gotra

Datts claim descent from Rishi Bharadwaja and derive their gotra from his name. Some consider Gaj Bhavan, the grandson of Bharadwaj to be the real founder of their clan. All Datts are Saraswat Brahmins of Punjab

rajdeep sardesai from goa is a saraswat brahmin and there exists bharadwaja gothra in TN too.if they are from the same ancestry how did they reach different parts of india without migration

which is nearer to kashmir?

afghanistan or kanyakumari

Anonymous said...

பூவண்ணன் says:
September 4, 2012 at 6:38 am

https://www.trsiyengar.com/id272.shtml

The Kambojas are a very ancient Kshatriya tribe of the north-western parts of the Indian subcontinent, of what now forms north-eastern Afghanistan and southern parts of Tajikstan. Upamanyu was one such Rishi of Kamboja lineage who finds frequent mention in ancient Indian texts like Rig Veda, several Puranas and the epic Mahabharata.

Upamanyu is the name of a Vedic Rishi who finds reference in Book I, Hymn 102. 9 of the Rig Veda [4], Siva Purana, Linga Purana, Kurma Purana and also in Adi Parava [7] as well as in Anushasana Parava of epic Mahabharata [8] [9]

the brahmanas,kshatriyas and vaishyas have gothras while the sudras,panchamas,tribals have none of it
if the word aryan,dravidian is annoying we can use gothrawallahs and nongothrawallahs

People who where proud of being called aryans a century back and wrote extensively about aryans but when democracy and its one man one vote made things tough for them to succeed unlike monarchy and godmen days,they made an aboutturn and started the aryans are hoax theories

Nasar said...

சகோ ர.நடராஜன் SAID..
நீரின்றி அமையா உலகு என தமிழே சொல்லும் போது சவுதி அரேபியா சென்று நீரை இறக்குமதி செய்ய வேண்டியதில்லை:)
சகோ சு.பிரியன் SAID....
'நீரின்றி அமையாது உலகு' என்பது போல 'மார்க்கமின்றி அமையாது மனித வாழ்வு'.

வாவ் ...சூப்பர் ..இன்டிகேஷன் ..மார்க்கம் இல்லாதவர்கள் சிந்தித்தால் சரி.--

suvanappiriyan said...

திரு அ. அர்வி!

//அப்படி என்ன நீங்கள் மற்றவர்களை விட உயர்ந்து விட்டீர்கள்? ஒரு அக்ரஹாரத்தில் ஒரு தலித் மாணவனை 20 வருடம் வளர விட்டால் இன்றுள்ள பிராமணர்களை விட சிறப்பாக படித்து முன்னுக்கு வருவான். அதே ஒரு தலித் சேரியில் ஒரு பிராமண மாணவனை 20 வருடம் விட்டுப் பாருங்கள். அவனது நிறம், குணம், அறிவு அனைத்திலும் அநேக மாற்றங்களை காண முடியும். அக்ரஹாரத்தில் வளர்ந்த ஒரு முஸ்லிமான அப்துல் கலாம் உலகம் போற்றும் அணு விஞ்ஞானியாக மாற வில்லையா? ஒரு மனிதனின் அறிவு ஜீன்களால் குறைந்த சதவிதமே கடத்தப்படுகிறது. அதிகமான மாற்றங்கள் அவனது சுற்று சூழல்களாலேயே ஏற்படுகிறது என்பதை எவரும் மறுக்க முடியாது.//- Suvanappiriyan

//சுவனப்பிரியனின் இந்த கூற்றை நான் ஆமோதிக்கின்றேன். அவருக்கு தனது மத விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்களில் புத்தி நன்றாக வேலை செய்கிறது. இஸ்லாம் என்ற விஷயத்தில் தான் அவருக்கு அறிவுக்குறைபாடு ஏற்பட்டுவிடுகிறது.//

இஸ்லாத்தை நான் பின் பற்றுவதால் எந்த வகையில் எனது அறிவில் குறைவு வந்து விட்டதாக நீங்கள் நினைக்கிறீர்கள்? எனது மூதாதையர் முன்பு பின் பற்றிய இந்து மதத்தை விட எந்த வகையில் இஸ்லாம் தாழ்ந்து விட்டது என்பதை ஆதாரத்தோடு விளக்கினால் எனது அறிவில் உள்ள குறைபாட்டை என்னால் நிவர்த்தி செய்து கொள்ள முடியும். எனக்கு உதவி செய்வீர்களா?

//Are the aryans willing to say that there rishi gothras and practise of avoiding marriage in the same gothra are hoax and they have no connection with those of the same gothra who live in different parts and speak different languagesஅது எப்படிங்க காஷ்மீர பிராமணரோ ,ஒரிய பிராமணரோ ,இல்லை சரஸ்வத் பிராமணரோ .இல்லை ஐயன்காரோ இல்லை மைதிலி,பட் என்று இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் காஷ்யப பாரத்வாஜ அகஸ்தி என்று ஒரே மாதிரி ரிஷி பேர் கோத்திரம் வருகிறது.//- சகோதரர் பூவண்ணன்!

//rajdeep sardesai from goa is a saraswat brahmin and there exists bharadwaja gothra in TN too.if they are from the same ancestry how did they reach different parts of india without migration
which is nearer to kashmir?
afghanistan or kanyakumari//- சகோதரர் பூவண்ணன்!

சகோதரர் பூவண்ணன் அவர்கள் வரிசையாக கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகிறார். தங்கமணி, ஸ்மிதா, வேதம் கோபால் எல்லாம் எங்கே? அட....மலர் மன்னனாவது வந்து ஏதாவது ஒப்பேத்தலாம்ல....நானும் ஆவலோடு ஒவ்வொரு முறையும் திண்ணைக்கு வந்து ஏமாற்றத்தோடு அல்லவா திரும்புகிறேன்.

Nasar said...

சகோ ர.நடராஜன்...ATTENTION PLEASE
நியூயார்க் போலீஸ்: 6 வருடங்களாக முஸ்லிம்களை உளவு பார்த்து என்ன கிடைத்தது?
நியூயார்க் ஏரியாவில் வசிக்கும் முஸ்லீம் மக்களை ஆறு வருடங்களுக்கு மேலாக உளவு பார்த்தும், உருப்படியான ஒரு கேஸ்கூட கிடைக்கவில்லை என ஒப்புக் கொண்டுள்ளது நியூயார்க் போலீஸ் NYPD (New York Police Department)

நியூயார்க் கோர்ட்டில் நடைபெறும் சிவில் உரிமை வழக்கு ஒன்றில் சாட்சியமளித்த NYPD துணைத் தலைவர் தாமஸ் கலாடி, கோர்ட்டில் இதை ஒப்புக்கொண்டார்.

முஸ்லிம் மக்களை உளவு பார்ப்பதற்காக டெமோகிராஃபிக்ஸ் யூனிட் என்ற பிரிவு ஒன்றை அமைத்து, அதில் பல உளவாளிகளை பணியில் அமர்த்தியிருந்தது நியூயார்க் போலீஸ். காவல்துறையின் உளவு பார்க்கும் பிரிவுகளில், அதிகளவு பட்ஜெட் ஒதுக்கப்பட்டதும், இந்த பிரிவுக்குதான்.

கடந்த 6 வருடங்களுக்கு மேலாக ஃபுல் ஃபோர்ஸில் இயங்கிவரும் பிரிவு இது.

டெமோகிராஃபிக்ஸ் யூனிட்டின் உளவு புரோகிராம், சி.ஐ.ஏ.-வின் உதவியுடன் உருவாக்கப்பட்டது. நியூயார்க் ஏரியாவில் எங்கெல்லாம் முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கிறார்களோ, அங்கெல்லாம் தமது உளவாளிகளை ஊடுருவ விட்டுள்ளது இந்த யூனிட்.

முஸ்லிம்கள் வசிக்கும், ஷாப்பிங் செய்யும் இடங்களில் துவங்கி, வழிபாட்டு ஸ்தலங்கள், இஸ்லாமிய மாணவர் அமைப்புகள் என்று சகல இடங்களிலும் தமது ஆட்களை வைத்திருக்கிறார்கள் இவர்கள்.

கடந்த வருடம் கொண்டுவந்த புதிய நடைமுறை ஒன்றின்படி, முஸ்லிம் பெயரில் இருந்து அமெரிக்க பெயருக்கு மாற்றிக் கொள்ளும் அனைவரும் கண்காணிக்கப்பட்டனர்.

அதேபோல, வேறு மதங்களில் இருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறியவர்களும், முழுமையான கண்காணிப்பு வளையத்துக்குள் வந்தனர்.

இவ்வளவு துல்லியமாக ஊடுருவியும், இதுவரை எந்தவொரு வழக்கும் பதிவாகவில்லை என்று கோர்ட்டில் ஒப்புக் கொண்டுள்ளார், NYPD துணைத் தலைவர்.

SOURCE: http://viruvirupu.com/2012/08/22/23965/

ராவணன் said...

அதுக்குத்தான் எல்லாரும் தண்ணியடிக்கவேண்டும் என்று சொல்வது.

தண்ணீர் என்றால் குளிர்ந்த நீர்.

நீரின்றி அமையாது உலகு...தமிழன் எதையும் தெளிவாகக் கூறுவான்.

நீ தமிழனா? இல்லை துலுக்கனா?

suvanappiriyan said...

//அதுக்குத்தான் எல்லாரும் தண்ணியடிக்கவேண்டும் என்று சொல்வது.

தண்ணீர் என்றால் குளிர்ந்த நீர்.

நீரின்றி அமையாது உலகு...தமிழன் எதையும் தெளிவாகக் கூறுவான்.

நீ தமிழனா? இல்லை துலுக்கனா?//

மொழியால் தமிழன்: இனத்தால் திராவிடன்: பிறந்த தாய் நாட்டால் இந்தியன்: மார்க்கத்தால் இஸ்லாமியன்: முடிவில் குடியால் அழிந்து கொண்டிருக்கும் உங்களைப் போன்றவர்களை திருத்த வந்திருக்கும் முஸ்லிம்:

suvanappiriyan said...

சகோ நாசர்!

//அதேபோல, வேறு மதங்களில் இருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறியவர்களும், முழுமையான கண்காணிப்பு வளையத்துக்குள் வந்தனர்.

இவ்வளவு துல்லியமாக ஊடுருவியும், இதுவரை எந்தவொரு வழக்கும் பதிவாகவில்லை என்று கோர்ட்டில் ஒப்புக் கொண்டுள்ளார், NYPD துணைத் தலைவர்.//

ராஜ நடராஜன் விளங்கிக் கொள்வதற்காக அழகிய சுட்டியை கொடுத்துள்ளீர்கள். ஆனால் அதை கவனிக்காது சென்று விடுவார்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

உதயம் said...

மெய்யெழுத்து



குர்-ஆனை பொய்யாக்க அவன் ஏன் முஸ்லிமாகவில்லை?

http://meiyeluthu.blogspot.fr/2012/08/blog-post_6928.html

suvanappiriyan said...

தங்கமணி!

//இந்தியாவிலும் பாகிஸ்தானிலும், ஈராக், சவுதி அரேபியா, இந்தோனேஷியா, மலேசியா, துருக்கி, மாலத்தீவுகள், பங்களாதேஷ், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளில் பயங்கரவாதத்தில் ஈடுபடும் முஸ்லீம் இளைஞர்கள் மெத்த படித்தவர்கள். டாகடர்கள், என்ஜினீயர்கள்.//

இந்துத்வ பயங்கரவாதிகளுக்கு ஆர்.டி.எக்ஸ் சப்ளை செய்த புரோகித் எந்த இனத்தை இனத்தை சேர்ந்தவர்? மாலேகான் குண்டு வெடிப்பை நடத்திய கும்பல்தான் மகாராஷ்டிராவிலுள்ள ஜல்னா, பர்பானி, நான்டேட் ஆகிய இடங்களிலும் குண்டு வெடிப்புகளை நடத்தியிருப்பதும் புலனாவில் நிரூபணமாகியுள்ளது. 2007 அக்டோபர் 11 அன்று அஜ்மீரில் க்வாஜா மொய்னுதீன் சிஸ்டி தர்காவில் நடந்த குண்டுவெடிப்பிற்கு காரணமானவர்கள் என்று தேவேந்திர குப்தா, விஷ்ணு பிரசாத், சந்திரசேகர் படிதர் என்ற மூன்று பேரை இராஜஸ்தான் காவல்துறை தற்போது கைது செய்துள்ளது. இதில் தேவேந்திர குப்தா ஒரு ஆர்.எஸ்.எஸ் காரன். இவன் வாங்கிய செல்பேசியையும் அதன் சிம் கார்டையும் பயன்படுத்திதான் குண்டு வெடிக்க வைக்கப் பயன் படுத்தப் பட்டுள்ளது. இந்த வருடம்(2010) ஏப்ரல் 30ஆம் தேதி இந்த மூவரும் கைது செய்யப்படும் வரை, இந்த குண்டுவெடிப்பு, ஜிகாதி தீவிரவாதிகளின் செயல் என்று வழக்கை விசாரித்துவந்த காவல்துறையும், ஊடகங்களும் பிரச்சாரம் செய்துவந்தன.

அஜ்மீர் குண்டு வெடிப்பு சதியில் சுனில் ஜோஷி என்பவன் முக்கிய பங்காற்றியிருப்பதாகவும், மெக்கா மசூதியில் குண்டை வெடிக்கவைக்க பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகள் அஜ்மீர் குண்டுவெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பான ஆதாரங்களை சி.பி.ஐ கண்டுபிடிக்கும்வரை ஹைதிராபாத் போலீஸின் கட்டுக்கதையே தொடர்ந்தது.

அதே காலகட்டத்தில், கோவா குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக இந்து தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவுடன் தொடர்புடைய நால்வர் உள்பட 11 பேர் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சி (National Investigating Agency - NIA) குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்துள்ளது. 2009 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். நண்டெட்டில் வெடிவிபத்து நடந்த வீட்டில் தயாரிக்கப்பட்டுவந்த வெடிகுண்டு அவுரங்கபாத்தில் உள்ள ஒரு மசூதிக்காக செய்யப்பட்டு வந்துள்ளது. அந்த வீட்டில் அவுரங்கபாத் நகரத்தின் வரைபடமும், சில ஒட்டு தாடிகளும், முஸ்லிம் ஆண்கள் அணியக்கூடிய உடைகளும் கண்டெடுக்கப்பட்டன.

இராணுவ பணியில் இருக்கும்போதே தீவிரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெருமை லெஃப்டினட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோகித்திற்கு மட்டுமே உண்டு. தீவிரவாத ஒழிப்பு பிரிவு (ATS) புரோகித்தை விசாரித்தபோது மெக்கா மசூதி குண்டுவெடிப்பிற்கும் ஆர்.டி.எக்ஸ் (RDX) வெடிமருந்தை விநியோகித்ததும் தான்தான் என்று ஒப்புக்கொண்டுள்ளான். ஹைதிராபாத் போலீஸ் ஏற்கனவே ஹர்கட்-உல்-ஜிகாதி-இஸ்லாம் என்ற அமைப்புதான் மெக்கா மசூதி குண்டுவெடிப்பினை நடத்தியது என்று அறிவித்துவிட்டதனால், புரோகித் வெடிமருந்து விநியோகித்த உண்மை வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்று ATS அதிகாரிகள் அறிவுறத்தப்பட்டனர். அஜ்மீர் சம்பவத்திலும் மெக்கா மசூதி சம்பவத்திலும் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து கலவை ஒன்றுபோலவே இருந்தது என்று மேலே குறிப்பிட்டதை நினைவில்கொள்ளவும்.

“தனி இந்து தேசத்தை” உருவாக்கவேண்டும் என்றும் தொடர் குண்டுவெடிப்பிற்கு திட்டமிட்ட புரோகித்தும், சத்வியும் மற்றவர்களும் தங்களுக்குள் பேசியுள்ளனர். அபிநவ் பாரத் என்ற பெயரில் ஒரு அமைப்பு வீர் சாவர்கரால் ஆரம்பிக்கப்பட்டு பின்னாளில் அது கலைக்கப்பட்டது . ஹிமானி சாவர்கர் என்பவனால் 2005-06 ஆண்டுவாக்கில் புனேவில் தற்போதைய அபிநவ் பாரத் என்ற தீவிரவாத அமைப்பு, “தனி இந்து தேசம்” அமைப்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டு அரம்பிக்கப்பட்டுள்ளது.

Source : Article titled ‘Hindu Terror - Conspiracy of silence’ by Smruti Koppikar, published in ‘The Outlook “, a weekly news magazine, dated July 19, 2010.)

http://www.outlookindia.com/article.aspx?266145

இந்த வழக்குகளில் முதலில் கைது செய்யப்பட்டது முஸ்லிம்களே! அதன் பிறகு தான் உண்மை வெளி வந்தது. இதில் சம்பந்தப்பட்ட பலர் அரசு உத்தியோகத்தில் உள்ளவர்கள். எந்த இனம் என்பதும் நான் சொல்லாமலேயே உங்களுக்கு தெரியும். எனவே தங்கமணி இதை காரணமாக வைத்து தனது இனத்தவர்களை அரசு உத்தியோகம் பார்க்கக் கூடாது என்று சொல்லப் போகிறாரா?

suvanappiriyan said...

தங்கமணி!

//இந்த மெத்த படித்தவர்கள்தான் உங்களது அரபுமததின் மீது சேற்று வாரி வீசுகிறார்கள்.//

அமெரிக்காவில படித்த முஸ்லிம்கள் எப்படி இருக்கிறார்கள் என்ற சமீபத்திய அறிக்கையை பார்த்து விடுங்கள்.

NEW YORK—In more than six years of spying on Muslim neighborhoods, eavesdropping on conversations and cataloguing mosques, the New York Police Department's secret Demographics Unit never generated a lead or triggered a terrorism investigation, the department acknowledged in court testimony unsealed late Monday.

http://www.mercurynews.com/breaking-news/ci_21360607/nypd-muslim-spying-led-no-leads-terror-cases

நியூயார்க் போலீஸ்: 6 வருடங்களாக முஸ்லிம்களை உளவு பார்த்து என்ன கிடைத்தது?

நியூயார்க் ஏரியாவில் வசிக்கும் முஸ்லீம் மக்களை ஆறு வருடங்களுக்கு மேலாக உளவு பார்த்தும், உருப்படியான ஒரு கேஸ்கூட கிடைக்கவில்லை என ஒப்புக் கொண்டுள்ளது நியூயார்க் போலீஸ் NYPD (New York Police Department)

நியூயார்க் கோர்ட்டில் நடைபெறும் சிவில் உரிமை வழக்கு ஒன்றில் சாட்சியமளித்த NYPD துணைத் தலைவர் தாமஸ் கலாடி, கோர்ட்டில் இதை ஒப்புக்கொண்டார்.

முஸ்லிம் மக்களை உளவு பார்ப்பதற்காக டெமோகிராஃபிக்ஸ் யூனிட் என்ற பிரிவு ஒன்றை அமைத்து, அதில் பல உளவாளிகளை பணியில் அமர்த்தியிருந்தது நியூயார்க் போலீஸ். காவல்துறையின் உளவு பார்க்கும் பிரிவுகளில், அதிகளவு பட்ஜெட் ஒதுக்கப்பட்டதும், இந்த பிரிவுக்குதான்.

கடந்த 6 வருடங்களுக்கு மேலாக ஃபுல் ஃபோர்ஸில் இயங்கிவரும் பிரிவு இது.

டெமோகிராஃபிக்ஸ் யூனிட்டின் உளவு புரோகிராம், சி.ஐ.ஏ.-வின் உதவியுடன் உருவாக்கப்பட்டது. நியூயார்க் ஏரியாவில் எங்கெல்லாம் முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கிறார்களோ, அங்கெல்லாம் தமது உளவாளிகளை ஊடுருவ விட்டுள்ளது இந்த யூனிட்.

முஸ்லிம்கள் வசிக்கும், ஷாப்பிங் செய்யும் இடங்களில் துவங்கி, வழிபாட்டு ஸ்தலங்கள், இஸ்லாமிய மாணவர் அமைப்புகள் என்று சகல இடங்களிலும் தமது ஆட்களை வைத்திருக்கிறார்கள் இவர்கள்.

கடந்த வருடம் கொண்டுவந்த புதிய நடைமுறை ஒன்றின்படி, முஸ்லிம் பெயரில் இருந்து அமெரிக்க பெயருக்கு மாற்றிக் கொள்ளும் அனைவரும் கண்காணிக்கப்பட்டனர்.

அதேபோல, வேறு மதங்களில் இருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறியவர்களும், முழுமையான கண்காணிப்பு வளையத்துக்குள் வந்தனர்.

இவ்வளவு துல்லியமாக ஊடுருவியும், இதுவரை எந்தவொரு வழக்கும் பதிவாகவில்லை என்று கோர்ட்டில் ஒப்புக் கொண்டுள்ளார், NYPD துணைத் தலைவர்.


suvanappiriyan said...

தங்கமணி!

//எல்லா இந்துக்களும் பூணூல் போட வேண்டும். பார்ப்பனர்களும் ஆச்சாரிகளும், சில சத்திரிய குலங்களும் மட்டுமே பூணூல் போடுவதால், மற்றவர்களுக்கு ஏன் பூணூல் இல்லை என்று கேட்பதை போன்ற கேள்வி இது. நீங்கள் போடவில்லை என்றால், அவர்கள் என்ன செய்வார்கள்? திருமணம் நடத்தும் போது எல்லோருக்கும்தான் பூணூல் அணிந்து திருமணல் செய்விக்கிறார்கள். தொடர்ந்து போட்டு வழக்கத்தை பின்பற்றவில்லை என்றால், பார்ப்பனர் என்ன செய்யமுடியும்?//

பரவாயில்லையே! அப்போ நம்ம கிராமங்களில் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் பூணூல் போட்டு அழகு பார்க்கலாமே! சட்டத்தில் திருத்தம் செய்ய முயற்சியுங்களேன். அப்படியே அவர்களை அர்ச்சகர்களாகவும் ஆக்கி விட்டால் தீர்ந்தது பிரச்னை. ஜெயேந்திரரிடம் பேசி ஆவண செய்யுங்கள்.

//ஒரு பங்களாதேஷி முஸ்லீமை ஒரிஜினல் அரபு முஸ்லீம் நடத்தும் இஸ்லாமிய பாங்கை பாருங்களேன். இந்த மாதிரி அரபு வாயால் திட்ட ஒரு முஸ்லீமுக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சுவனப்பிரியன் புல்லரித்தால் இங்கே யாரும் அதிர்ச்சியடைய மாட்டார்கள். உங்களது அரபு விசுவாசம் உலகம் அறிந்த்தாயிற்றே.//

அந்த பங்களாதேஷியை ஏன் அந்த அரபி அடிக்க வேண்டும்? சவுதி நாட்டையும் அந்த மன்னரையும் இழிவாக பேசியதாலும் சவுதி அமெரிக்காவுக்கு பயந்து கொள்கிறார்கள் என்று சொன்னதாலும் அடி வாங்கினான். பிழைக்கப் போன இவனுக்கு அந்த நாட்டு அரசியலைப் பற்றி அரபிகளிடம் ஏன் வம்பளக்க வேண்டும்? ஒரு சவுதி நாட்டுக்காரனே தனது அரசரை இழிவாக பேசினால் அடிக்க வந்து விடுவான். அந்த அளவு விசுவாசமாக மன்னர் நடக்கிறார். மக்களும் மதிக்கிறார்கள். எனவே முதல் தவறு பங்களாதேஷியுடையது. அதற்காக அவனை அடித்தது சவுதியின் தவறு. தவறு செய்தால் காவல் துறையிடமே ஒப்படைத்திருக்க வேண்டும்.

என்னதான் இருந்தாலும் எச்சில் இலையில் புரள்வதைப் என்னால் ஜீரணிக்க முடியவில்லை. நீங்க எப்படி? இலையில் புரள்வதை ஆதரிக்கிறீர்களா?

//அப்படிப்பட்டவர்கள் இச்லாத்தை விட்டு வெளியேறிவிடலாம் என்று நீங்களும் காவ்யாவும் சொன்னீர்கள். எப்படி போக முடியும் என்று கேட்டதற்கு மட்டும் இன்னும் பதில் இல்லையே!//

இஸ்லாத்தில் சேரவோ வெளியேறவோ சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் இல்லை. ஏக இறைவனை வணங்கி முகமது நபியை கடைசி தூதராக ஏற்றுக் கொண்ட அனைவரும் முஸ்லிம்கள். இதனை ஏற்காத அனைவரும் முஸ்லிம் அல்லாதவர். இது மதம் அல்ல. மார்க்கம்.

'இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது'
-குர்ஆன் 2:256

Anonymous said...

//இதுவரை எந்தவொரு வழக்கும் பதிவாகவில்லை என்று கோர்ட்டில் ஒப்புக் கொண்டுள்ளார், NYPD துணைத் தலைவர்.//

NYPD நம்மூரு போலிசு மாதிரி சிரிப்பு போலிஸ் ஆகிவிட்டதா இல்லை மாமூல் வாங்கிவிட்டு வழக்கு பதிவு செய்யாமல் விட்டுவிட்டதா என FBIயை விட்டு விசாரணை நடத்தவேண்டும். ஏனெனில் முஸ்லீம் மக்களை ஆறு வருடங்களுக்கு மேலாக உளவு பார்த்தும், உருப்படியான ஒரு கேஸ்கூட கிடைக்கவில்லை என சொல்லுவது நம்பும் படியாகவா இருக்குது?

Anonymous said...

திருவாளர் தங்கமணி,

இலங்கையிலிருந்து வந்து இந்திய நாட்டின் பிரதம மந்திரியைக் கொலை செய்த மாபாதகர்கள் எந்த மதத்தவர்கள்? எந்த இனத்தவர்கள்?

இந்திய விடுதலைக்கு முன்னரும் பின்னும் தனி நாடாயிருந்த ஐதராபாத்தைக் காட்டிக் கொடுத்துத் துரோகமிழைத்தவர்கள் எந்த இனத்தவர்கள்?

இலங்கையில் முஸ்லிம்கள் பள்ளிவாசலிற் தொழுகையில் ஈடுபட்டிருந்த வேளை அங்குச் சென்று அவர்களைக் கொலை செய்தவர்கள் எந்த இனத்தவர்கள்?

- வள்ளுவன்

ராஜ நடராஜன் said...

சகோ.சுவனப்பிரியன்!அதெப்படி ஒரு பின்னூட்டமிட்டு விட்டு திரும்பவும் வரமாட்டேன்னு நினைக்கிறீங்க.கண்ணுல பட்டா அதுவும் சூடான இடுகையில் வந்து பெயரையும் குறிப்பிடும் போது மறுபடியும் சலாம் சொல்லாம இருக்க முடியுமா:)

@ சகோ.நாசர்!NYPD,FBI,CIA என்ற அமெரிக்க இயந்திரங்கள் அமெரிக்காவின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல் படும் அரசு யந்திரங்கள்.இவைகள் 9/11க்குப் பின் இன்னும் அதிக பலப்படுத்தியதாலேயே அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் இருக்கிறது. 9/11க்குப் பின் அமெரிக்க வாழ்வை துறந்த இஸ்லாமியர்கள் எத்தனை பேர் என உங்களுக்கு தெரியுமா?இப்பொழுது இருப்பவர்கள் அந்த வாழ்க்கையோடு ஏற்புடையவர்களாகவும்,சட்ட திட்டங்களை மதிப்பவர்களாகவும் பெரும்பான்மையான இஸ்லாமியர்களாக இருக்க கூடும்.NYPD.FBI கண்காணிப்பு இருப்பதாலேயே தவறுகள் தவிர்க்கப்படுகின்றன என்பதோடு ஆள் நடமாட்டத்தால் கடற்கரை நண்டுகள் மாதிரி ஒளிந்து கொள்பவர்களாகவும்,எலி வளையங்களாக கூட சிலர் இருக்கவும் கூடும்.

முந்தைய கால அமெரிக்க தவறுகளுக்கு முக்கிய காரணம் காசு இருந்தா உனக்கு விசா தருகிறேன் என்ற பணக்கொள்கைதான்.இப்பொழுது வடிகட்டுவதோடு இஸ்லாமிய பெயர் இருந்தாலே கணினி தகவல் குறிப்புக்களை மறுபடியும் ஆராய முயல்கிறார்கள்.இஸ்லாமியர்கள் சார்ந்து குரல் கொடுக்கும் நிறைய அமெரிக்கர்கள் இருக்கிறார்கள்.ஆனால் ஏனைய மதங்கள் சார்ந்தும் குரல் கொடுக்கும் வகாபிய குணவான்களை காண்பது அரிது அரிது.மிகவும் அரிது என்பதே பிரச்சினைகளுக்கான முக்கிய காரணங்கள்.

இன்னும் சொன்னால் இன்னும் சொல்வேன்:)

suvanappiriyan said...

திரு முரளி!

//Good answer and explanation suvanapiriyan…According to QURAN….Islam is for middle eastern people….//

பாராட்டுக்கு நன்றி. எல்லாப் புகழும் இறைவனுக்கே! பின் வரும் வசனத்தை பாருங்கள்:

'இந்த குர்ஆன் ரம்ஜான் மாதத்தில்தான் அருளப்பட்டது. அது மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். பொய்யை விட்டு உண்மையை பிரித்துக் காட்டும்.'
-குர்ஆன் 2:185

'படிப்பினை பெறுவதற்காக இறைவன் தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.'
-குர்ஆன் 2:221

'இந்த குர்ஆன் மனிதர்களுக்கு விளக்கமும் நேர் வழியும் இறைவனை அஞ்சுவோருக்கு அறிவுரையுமாகும்'
குர்ஆன் 3:138

இவ்வாறு குர்ஆன் சட்டங்களை சொல்லும் இடத்து 'முஸ்லிம்களே!' என்றோ அல்லது 'அரபு மக்களே' என்றோ சொல்லவில்லை. அனைத்து இடங்களிலும் 'மனிதர்களே!' என்றுதான் விளிக்கிறது. இதில் நீங்களும், நானும், செந்தில் குமாரும், மலர் மன்னனும் இன்னும் உலகில் உள்ள அனைத்து மக்களும் அடங்குவர்.

//Prophet Musa(jesus)want to revive judaism but jews didn’t accept his reforms, it’s very unfortunate his greek disciple JOHN founded a new religion in his name.//

'இஸ்ரவேலர்கள் உங்களை நம்புவார்கள் என்று ஆசைப்படுகின்றீர்களா? அவர்களில் ஒரு பிரிவினர் இறைவனின் வார்த்தைகளைச் செவியேற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர்'
-குர்ஆன் 2:75

'அவர்களில் ஒரு பகுதியினர் உள்ளனர். வேதத்தில் இல்லாததை வேதம் என்று நீங்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக வேதத்தை வாசிப்பது போல் தமது நாவுகளை வளைக்கின்றனர். 'இது இறைவனிடமிருந்து வந்தது' எனவும் கூறுகின்றனர். அது இறைவனிடமிருந்து வந்ததல்ல. அறிந்து கொண்டே இறைவனின் பெயரால் பொய் கூறுகின்றனர்.'
-குர்ஆன் 3:78

உங்களின் வாதங்களை இந்த வேத வசனங்கள் உண்மைப் படுத்துகின்றன.

//anyone know what is the reason and why ISLAM and CHRISTIANITY spreading now…..//

இஸ்லாமும் கிறித்தவமும் முன்பு இந்தியாவில் பரவியதற்கு முக்கிய காரணம் இந்து மதத்தின் வர்ணாசிரம கொடுமைகள். இன்று உலகில் இஸ்லாம் வேகமாக பரவ காரணம் பல மொழிகளிலும் குர்ஆன் மொழி மாற்றம் செய்யப்பட்டு அனைத்து மக்களின் கைகளிலும் இலகுவாக கிடைப்பதும் ஒரு காரணம் என்பேன். மற்ற காரணங்களை நீங்கள் தான் சொல்ல வேண்டும்..

suvanappiriyan said...

ஆத்தூர்: ஆத்தூர் தலைவாசல் அருகே ஏடிஎம் காவலாளியைத் தாக்கி விட்டு கொள்ளை அடித்ததாக வெங்கடேஸ்வரன் என்ற பாலிடெக்னிக் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=541860

இன்றைய செய்தி தங்கமணி பார்வைக்கு....

இதன் மூலம் நான் சொல்ல வருவது குற்ற செயலில் ஈடுபடுபவனுக்கு அவன் சார்நத மதத்தை அடையாளப்படுத்தக் கூடாது என்பதே. தவறு செய்பவர்களும், நல்லவர்களும் எல்லா மதங்களிலும் மார்க்கங்களிலும் கலந்தே உள்ளனர். இதை புரிந்து கொண்டு சிறந்த பாரபட்சமற்ற நடவடிக்கை எடுத்தால் பல குற்றங்கள் குறையும்.

---------------------------------------------------------------

கோவை குண்டு வெடிப்பில் 'வெடிகுண்டு ஆயிஷா' என்று 10 வருடங்களுக்கு முன் பரபரப்பாக செய்தியில் அடிபட்டவரை பலர் மறந்திருக்க முடியாது. வெடி குண்டை உடலில் கட்டிக் கொண்டு வீடு வீடாக வருவதாக நமது பத்திரிக்கைகள் கதை கட்டி காசு பார்த்தன. இவர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர். இஸ்லாத்தை ஏற்றதை தவிர வேறு எந்த குற்றமும் செய்யாத அப்பாவி. 10 வருடங்களுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து விட்டு தற்போது விடுதலையாகி உள்ளார். அவரது அனுபவங்களை கேளுங்கள். சாதாரண விசாரணை கைதியாக இத்தனை காலம் சிறையில் வைத்து விட்டு குற்றமற்றவர் என்று விடுதலையாக்கியுள்ளது அரசு தரப்பு. இழந்து போன இவரது கடந்த கால வாழ்வை திருப்பிக் கொடுப்பது யார்?
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=2jZ3zy8mKL4

எனது இந்திய நாட்டுக்கு எதிராக செயல்பட்டவன் முஸ்லிமாக இருந்தாலும் அவனை தூக்கிலும் போடுங்கள். அதை நான் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரு காரணத்திற்காக அப்பாவி முஸ்லிம்களை குற்றப்பரம்பரையாக சித்தரிக்கும் போக்கை இனியாவது கை விடுங்கள். தற்போது நமது நாட்டின் சிறப்பான எதிர்காலத்திற்கு இது மிக அவசிய தேவையாகிறது.....

suvanappiriyan said...

சகோ ராஜ நடராஜன்!

//முந்தைய கால அமெரிக்க தவறுகளுக்கு முக்கிய காரணம் காசு இருந்தா உனக்கு விசா தருகிறேன் என்ற பணக்கொள்கைதான்.இப்பொழுது வடிகட்டுவதோடு இஸ்லாமிய பெயர் இருந்தாலே கணினி தகவல் குறிப்புக்களை மறுபடியும் ஆராய முயல்கிறார்கள்.இஸ்லாமியர்கள் சார்ந்து குரல் கொடுக்கும் நிறைய அமெரிக்கர்கள் இருக்கிறார்கள்.ஆனால் ஏனைய மதங்கள் சார்ந்தும் குரல் கொடுக்கும் வகாபிய குணவான்களை காண்பது அரிது அரிது.மிகவும் அரிது என்பதே பிரச்சினைகளுக்கான முக்கிய காரணங்கள்.//

இந்த கண்காணிப்பு அவசியம் என்பேன். நமது நாட்டிலும் இது அமுல்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் இஸ்லாமிய பெயரில் ஒளிந்து கொண்டு நாச வேலைகள் செய்பவர்களின் நடவடிக்கை மட்டுப்படுத்தப் படலாம் அல்லவா? இந்தியாவில் நடந்த குண்டு வெடிப்புகள் அனைத்திலும் முதலில் கைது செய்யப்பட்டது இஸ்லாமியர்களே! பிறகு ஹேமந்த் கர்கரே என்ற நேர்மையான அதிகாரி தலையீட்டால் பல இந்துத்வாவாதிகள் இன்று சிறைக்கு உள்ளே! எல்லா இடத்திலும் ஹேமந்த் கர்கரே போன்றவர்களை நம்மால் எதிர்பார்க்க முடியாது அல்லவா? இவரைப் போன்றவர்கள் அமெரிக்காவிலும் ஒன்றிரண்டு பேர் இருப்பதால்தான் பல உண்மைகள் வெளி வருகிறது.

NKS.ஹாஜா மைதீன் said...

சலாம் சகோ....ஒரு சாட்டையடி பதிவாக போட வேண்டியதை இப்படி சுருக்கமாக இறுதியில் போட்டு விட்டீர்களே....அருமை

ராஜ நடராஜன் said...

சகோ!சுவனப்பிரியன்!உங்களை மறுபடியும் நம்ம கடைப்பக்கம் பார்த்த நினைப்பில் மறுபடியும் வந்தேன்.

ஏன் எல்லோரும் ஹேமந்த் கட்கரையோடு நின்று கொள்கிறீர்கள்?இஸ்லாமிய பெயர்களில் இந்துத்வாவாதிகள் செய்த குற்றங்கள் ஏற்கனவே சந்திக்கு வந்து விட்டன.அதனையும் மீறி தொடந்து வரும் இஸ்லாமிய பெயர்களுக்குப் பின்பான தவறுகளை ஏன் விமர்சிக்க மறுக்குறீர்கள்.அல்லது எல்லா இஸ்லாமிய பெயர்களுக்கும் பின்னால் இந்துத்வாவாதிகளே நிரம்பியிருக்கிறார்கள் என்று நம்புகிறீர்களா?

நல்லவர்களை முன்னிலைப்படுத்துவதோடு தீயவர்களை அடையாளம் காட்டும் துணிவும் வேண்டும்.இந்த சுய விமர்சனம் இல்லாத வரை இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற கெட்ட பெயர் இஸ்லாமியர்களுக்கு வந்தே தீரும்.

ராஜ நடராஜன் said...

சகோ.ஆயிஷாவின் பேட்டி முன்பு காண நேர்ந்தது.ஒரு பெண்ணின் வாழ்க்கை திசை மாறிப்போனது சோகத்துக்குரியதுதான்.

suvanappiriyan said...

சகோ ராஜ நடராஜன்!

//நல்லவர்களை முன்னிலைப்படுத்துவதோடு தீயவர்களை அடையாளம் காட்டும் துணிவும் வேண்டும்.இந்த சுய விமர்சனம் இல்லாத வரை இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற கெட்ட பெயர் இஸ்லாமியர்களுக்கு வந்தே தீரும்.//

வன்முறையை யார் ஆதரித்தது? எந்த மதத்திலிருந்து வன்முறை வந்தாலும் அதனை எதிர்ப்பதே ஒரு இஸ்லாமியனின் முதல் கடமையாக இருக்கும். இஸ்லாமும் அதைத்தானே போதிக்கிறது.

தற்போது அடிபடும் ஒருசில இஸ்லாமியர்களின் பெயர் வலிந்து கொண்டு வரப்படுகிறது. அவர்களை பொதுவில் வைத்து விசாரித்தால் அதனுள் மறைந்துள்ள உண்மை வெளிப்படும். கேமரா முன்னால் விசாரிக்க என்ன தடை? உண்மை வெளிப்பட்டு விடும். தற்போது போலீஸ் அதிகாரிகள் சொல்வதைத்தானே பத்திரிக்கைகளும் பிரசுரிக்கின்றன. அதை சம்பந்தப்பட்டவர்கள்தான் சொன்னார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்?

k.rahman said...

//நல்லவர்களை முன்னிலைப்படுத்துவதோடு தீயவர்களை அடையாளம் காட்டும் துணிவும் வேண்டும்.இந்த சுய விமர்சனம் இல்லாத வரை இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற கெட்ட பெயர் இஸ்லாமியர்களுக்கு வந்தே தீரும்.//

சரியாக சொன்னீர்கள்.

ராஜ நடராஜன் said...

சகோ.இதோ பின்னூட்டம் சொல்லி முடிக்கல.அதற்குள் நீங்களே வக்காலத்து வாங்குகிறீர்கள்.காவல்துறை ஒரு முறை தவறாக ஒருவனை குற்றப்படுத்தி விடலாம்.ஆனால் தொடர்ந்தும் மாநிலங்கள் கடந்துமா குற்றப்படுத்தும்.இதென்ன வாதம் காமிரா முன் கொண்டு வந்து நிறுத்து என்று.இந்திய காவல்துறையும் உலகில் எந்த காவல்துறையும் அப்படி செயல்படுவதில்லை.தவறுகள் செய்யாதவன் எனும் போது வாதாட போராட நீதிமன்றங்கள் இருக்கின்றன.மதம் என்ற பெயரில் இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்.

என்னமோ போங்க!நீங்களும் உங்க சப்பைக்கட்டும்:)

ராஜ நடராஜன் said...

பத்திரிகைகள் இந்தியாவில் ஓரளவிற்கு தன்னிச்சையாக செயல்படுகின்றன.அனைத்து பத்திரிகைகளையும் போலிஸ் அதிகாரிகள் விலைக்கு வாங்கி விட முடியாது.மேலும் காவல்துறையும்,பத்திரிகைக்காரர்களும் கீரியும் பாம்பும் மாதிரியென்பதையெல்லாம் நீங்க அறிந்திருக்க மாட்டீர்கள்:)

suvanappiriyan said...

திரு அர்வி!

//Suvanappiriyan is lying (or it might have been mohammed who lied through his teeth). See this statement by a mouslem cleric:
“NRK, a Norwegian broadcaster, showed a clip in which Bukhari stated: “If a person doesn’t fast during Ramadan, he is mocking Islam. And if the person is in a Muslim state, the authorities must behead him.”//

இங்கு யாரும் பொய் சொல்லவில்லை. உங்களின் புரிதலில்தான் குறைபாடு உள்ளது.
இந்த வசனம் ''இஸ்லாத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை - கட்டாயம் இல்லை'' என்ற ஒரு கருத்தை மட்டும் சொல்லவில்லை. ''இது வழிகேடு'' என்றும் ''இது நேர்வழி'' என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. வழிகேட்டிலிருப்பதும், நேர்வழிக்குத் திரும்புவதும் அவரவர் விருப்பத்திற்குட்பட்டது. இதில் எதை வேண்டுமானாலும் ஒருவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இஸ்லாம் அவரை நிர்ப்பந்திக்காது - கட்டாயப்படுத்தாது - வற்புறுத்தாது.

வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகியபின் ஒருவரை வற்புறுத்தி இஸ்லாத்திற்கு அழைக்க வேண்டிய அவசியமில்லை.

வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகியபின் இஸ்லாத்திலிருந்து வெளியேறுபவரையும் கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்ற கருத்தையும் உள்ளடக்கியுள்ளது.

ஒருவன் இஸ்லாத்தில் இருந்து கொண்டு எனக்கு வசதியான சட்டங்களை மாத்திரம் பின்பற்றுவேன் என்று சொல்ல முடியாது. 'இந்த மார்க்கத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்' என்று முஸ்லிம்களைப் பார்த்து இறைவன் கூறுகிறான். விருப்பமில்லாதவர்கள் இந்த இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடலாம். அதனால் இஸ்லாத்துக்கோ முஸ்லிம்களுக்கோ எந்த சங்கடமும் இல்லை.

எனவே நீங்கள் குறிப்பிட்ட வசனம் முஸ்லிம் அல்லாதவர்களுக்காகவும் இஸ்லாத்தை அரைகுறையாக பின் பற்றுபவர்களுக்காகவும் சொல்லப்பட்டது.

suvanappiriyan said...

திரு பாண்டியன்!

//suvanappiriyan — what is your concern here. why you mroe worry about Bhramin rather than hindus? as usual you people are nicely doing split concept within hindus. you should be ashamed by doing this. you are not a real muslim. kasukku aall poudikkum koolikara muslim.//

இந்த வர்ணாசிரம அநீதியை எதிர்த்துதான் எனது முன்னோர்கள் இஸ்லாத்தை ஏற்றனர். இதற்கு முழு காரணமானவர்கள் பார்ப்பனர்கள். இதை உங்களால் மறுக்க முடியுமா? அதை சொன்னால் உங்களுக்கு ஏன் மூக்கில் வியர்க்கிறது?

இனி வரும் காலங்களிலாவது மனிதர்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வுக்கு எல்லோரும் வர வேண்டும் என்பதே என் அவா.

எனக்கு கௌரமான வேலை இருக்கிறது. பணத்துக்காக ஆள் பிடித்து கொடுக்கும் அளவுக்கு நான் வறுமையிலும் இல்லை. இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

suvanappiriyan said...


திரு பாண்டியன்!

//as usual you people are nicely doing split concept within hindus.//

ஆரிய திராவிட பிரச்னை என்பது இன்று தோன்றியதல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடர்ந்து வருவது. மதுரைக்கு பக்கத்தில் கல் வெட்டு ஆதாரத்தோடு 12 ஆம் நூற்றாண்டில் பிராமணர்களுக்கு எதிராக தமிழர்கள் சங்கம் வைத்து போராடிய நிகழ்வை கீழே தருகிறேன் பார்த்துக் கொள்ளுங்கள். எனவே இதில் இஸ்லாமியர்களின் பங்கு ஒன்றும் இல்லை.

மதுரை - பழங்காநத்தம் வழியாக ஆரப்பாளையம் செல்லும் பைபாஸ் மேம்பாலத்திலிருந்து இடது புறமாக சிறிது,பெரிதுமான வீதிகளை கடந்து 2 அல்லது 3 கிலோமீட்டர் தொலைவில் வருகிறது மாடக்குளம் கண்மாய்.கண்மாய் கரையோரத்தில் ஸ்ரீஈடாடிஅய்யனார் கோவில், கோவிலையொட்டிய பாதையில் கண்மாயின் உட்புறமாக சென்றால் சமீபத்தில் பெய்த மலையால் பசுமையான கண்மாயில் 3அடி உயரத்தில் கல் ஒன்று தெரிகிறது. கண்மாயில் நீர்நிறைந்திருக்கும் போது முழ்கிவிடுவதால் அந்த கல்லில் உள்ள எழுத்துக்கள் சற்று தெளிவாக இல்லை. அந்த கல்லை சுத்தபடுத்திய பிறகு,கல்வெட்டு அறிஞர் சாந்தலிங்கம் அந்த கல்லின் வரலாற்றை பேச துவங்கிய போது பிரமிப்பாகதான் இருந்தது. அந்த கல் 12அல்லது 13 ம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என கூறினார். ''மாடக்குளத்தின் கீழ் மதுரை'' என பழந்தழிழ் இலக்கியங்கள் சொல்லும் அளவுக்கு மாடக்குளம் என்ற கிராமம் பெயர்பெற்றிருந்தது .அந்த கல்லின் வரலாறு மிக முக்கியமானது என்கிறார் கல்வெட்டு அறிஞர் சாந்தலிங்கம். 12ம் நூற்றாண்டில் அரசர்கள்,பார்பனர்களுக்கு எதிராக விவயாயிகளும், வணிகர்களும் ஒன்று திரண்டு சங்கம் வைத்திருந்தாகவும், அப்போது விவசாயிகளுக்கு உதவியாக மாடக்குளம் கண்மாயை தூர்வாரி,புணரமைத்து கொடுத்தற்காக நிறுவப்பட்ட கல்தான் தேவடியாகல். சாந்தலிங்கம் நடுகல் என்று மட்டுமே சொன்னார், நண்பர் ஒருவர் அந்த கல்லுக்கு தேவிடியாகல் என்று பெயர் இருப்தை சொன்ன போது நம்ப முடியவில்லை.ஆனால் அப்பகுதி விவசாயி ஒருவரை விசாரித்த போது உண்மைதான் என்பதை உணரமுடிந்தது.அதற்கான காரணம் அவருக்கு தெரியவில்லை, தன்து பாட்டன் காலத¢திலிருந்து அப்பெயர் இருப்பதாக சொல்கிறார். அந்த கல்லுக்கு சற்று தொலைவில் 18ம் நூற்றாண்டை சேர்ந்த சற்று உயரமான இரட்டைக் கல் காணப்படுகிறது. அதற்கு குத்துக்கல் என்று அழைக்கிறார்கள். கண்மாயின் நீர்மட்டம் அறிவதற்காக நடுப்பட்டகல் அது.

http://indrayavanam.blogspot.com/2012/09/blog-post.html

Unknown said...

Mr Raja Nadarajan,

///காவல்துறை ஒரு முறை தவறாக ஒருவனை குற்றப்படுத்தி விடலாம்.ஆனால் தொடர்ந்தும் மாநிலங்கள் கடந்துமா குற்றப்படுத்தும்.///

இந்திய காவல்துறை ஒருமுறைதான் தவறாக அப்பாவி முஸ்லிம்களை குற்றப்படுத்துமா? அவர்களின் பொழுதுபோக்கே, குற்றமற்ற முஸ்லிம்களைப் பிடித்து, உள்ளே தள்ளுவதுதானே!

///இதென்ன வாதம் காமிரா முன் கொண்டு வந்து நிறுத்து என்று.இந்திய காவல்துறையும் உலகில் எந்த காவல்துறையும் அப்படி செயல்படுவதில்லை.தவறுகள் செய்யாதவன் எனும் போது வாதாட போராட நீதிமன்றங்கள் இருக்கின்றன.///

இந்திய காவல்துறையை பிற நாடுகளின் காவல்துறைகளோடு ஒப்பிடுவது, ஏளனத்தின் உச்சம்.

தவறுகள் செய்யாத அப்பாவி முஸ்லிம்களின் பிணை மறுக்கப்படுவதும் நீதிமன்றங்கள்தான்.

பத்து, பதினைந்து வருடங்கள் அப்பாவி முஸ்லிம்களை உள்ளே வைத்த பிற்பாடு, குற்றமற்றவன் என்று தீர்ப்பளித்து, எதுவித நஷ்டஈடோ, கொடுப்பனவுகளோ அளிக்காது, துரத்தி விடுவதும் அதே நீதிமன்றங்கள்தான்!

இந்திய காவல்துறையின் மனித உரிமை மீறல்கள் - இந்திய மாநிலங்கள் என்ன, நாடுகள் கடந்த, எல்லாரும் தெரிந்த, திறந்த இரகசியம்.

அண்மையில் ஐ.நா கூட, மனித உரிமை மீறல்களில் இந்தியா முன்னணி வகிக்கும் நாடு என, பறைசாற்றியிருந்தது.

காஷ்மீரில் அட்டூழியங்களை தினமும் கட்டவிழ்த்துவிடும் இந்தியக் காவல்துறையின் மனித உரிமை மீறல்களைப்பற்றி முதலில் விவாதித்துவிட்டு, இலங்கைத் தமிழர் களுக்கெதிரான மனித உரிமை மீறல்களைப்பற்றிப் பேசலாம் என்று இலங்கையிலுள்ள சிங்கள அரசியல்வாதிகள் அண்மையில் இந்திய நிலைப்பாட்டைப்பற்றி காட்டமாக கருத்து வெளியிட்டிருந்தனர்.

லண்டன் சேனல் 4 இல், இந்திய காவல்துறையினால் அப்பாவி முஸ்லிம்களுக்கெதிராக நடத்தப்பட்ட கொலை வெறியாட்டங்கள், கற்பழிப்புகள் போன்ற அட்டூழியங்களை விவரணச் சித்திரமாக காட்டியதற்கே, இந்தியா வெலவெலத்துப் போனது. இது ஒரு சாம்பிள்தான்!

ஊடகங்களாக இருக்கட்டும், காவல்துறையாக இருக்கட்டும், மனித உரிமைகளாக இருக்கட்டும், - இந்தியா திருந்துவதற்கு வெகு தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது.



k.rahman said...

//இந்திய காவல்துறையின் மனித உரிமை மீறல்கள் - இந்திய மாநிலங்கள் என்ன, நாடுகள் கடந்த, எல்லாரும் தெரிந்த, திறந்த இரகசியம்.//

முதல்ல இலங்கை போலீஸ் உருபடர வழிய பாருங்க. அப்பறம் இந்தியா போலிச ஏளனம் பண்ணலாம்.