Followers

Saturday, September 15, 2012

கூத்தாடி பவர் ஸ்டார் கைது! இளைஞர்கள் கதறல்!



தமிழகத்தின் விடி வெள்ளி, வருங்கால முதல்வராக பார்க்கப்பட்ட கூத்தாடி பவர் ஸ்டார் அவர்கள் இன்று பலரிடம் பல லட்சங்கள் பண மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டார். இதனால் வெகுண்டெழுந்த அவரது ரசிகர்கள் கதறி அழுதனர். கைதுக்கு எதிராக கோஷமிட்டனர். வருங்கால தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரமான இந்த பவர் ஸ்டார் கூத்தாடியை விடுதலை செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். வரிசையாக தமிழக முதல்வர்களாக கூத்தாடிகளாகவே பார்த்து பழக்கப்பட்ட தமிழக மக்களில் பலர் பவர் ஸ்டாரின் விடுதலையை ஆவலோடு எதிர் பார்த்து காத்திருக்கின்றனர்.

பவர் ஸ்டாரை கைது செய்யும் போது அவரது ரசிகர்களான அந்த இளைஞர்களின் கண்களில் ஒரு ஆவேச தீ தெரிவதைப் பார்த்தேன். அதைப் பார்த்து உண்மையிலேயே அதிர்ச்சியடைந்தேன்.:-)

---------------------------------------------------

சத்துணவிலும் ஜாதி வெறி.

சேலம் மாவட்டம் காடையாம் பட்டி ஒன்றியத்தில் உள்ள பல கிராமங்களில் சத்துணவுக்கூடங்களில் சமையல் பணியில் ஈடுபடும் தலித் பெண்கள், சாதி வெறியர் களால் சமூகப்புறக்கணிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.

பார்ப்பனி யத்தில் ஊறிப் போன சாதி இந்துக்கள்,தங்கள் வீட்டுக் குழந்தைகளை சத்துணவுக் கூடத்துக்கு அனுப்ப மறுத்து பகிரங்கமாக தீண்டாமையை வெளிப்படுத்துகின்றனர்.

“இந்தப் பெண்கள் சமைத்த உணவை சாப்பிடுவது பாவம்” என்று, அவர்கள் கூறுவதாக ‘இந்து’நாளேடு (செப்டம்பர் 4) செய்தி வெளியிட்டுள்ளது.

எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ்மாதம் ரூ.1300-லிருந்து 3000 வரை குறைந்த ஊதியத்தில்தான் இந்தப் பெண்கள் பணிக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுந்தர வனிதா என்ற தலித் பெண், 2012 ஆகஸ்டு 16ஆம் தேதி பணிக்கு நியமிக்கப்பட்டார். பணி நியமன நாளிலிருந்தே, அவர் சமூகப்புறக்கணிப்புக்கு உள்ளாகி வருகிறார்.

“நான் அவமானத்தால் செத்துக் கொண்டிருக்கிறேன்”என்று ‘இந்து’ நாளேட்டின் செய்தியாளரிடம் கண்ணீர் மல்க அவர் கூறினார்.

முதல் நாளிலிருந்தே என்னை கேவலமாகப் பேசுவதும், துன்புறுத்துவதும் தொடங்கிவிட்டது.

ராசிபுரத்தான் காட்டு வலவு எனும் கிராமத்தில் நடுநிலைப் பள்ளியில்நான் பணி நியமனம் செய்யப்பட்டேன்.

வன்னியர் ஆதிக்கம் நிறைந்த இந்த கிராமத்தில் தலித்பெண் சமைத்த மதிய உணவை சாப்பிடுவதை அவமானமாகக் கருதுகிறார்கள்.

கிராமப்பஞ்சாயத்துத் தலைவர், ‘இதில் தான் ஒன்றும் செய்ய முடியாது’ என்று கூறிவிட்டார்.

அதைத்தொடர்ந்து இந்தப் பெண் அவரது சொந்த கிராமமான மூக்கனூரிலுள்ள ஊராட்சி ஒன்றியநடுநிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டார்.

சொந்த கிராமம் என்பதால், இவரது சாதி அடையாளம்தெரியும் என்பதால் அங்கே மேலும் மோசமான புறக்கணிப்புக்கு உள்ளானார்.

இவரைப்போல் சத்துணவு சமையல் கூடங்களுக்கு நியமிக்கப்பட்ட தலித் பெண்கள் அனைவரும் இதே போன்ற புறக்கணிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள் என்று ‘இந்து’ நாளேட்டின் செய்திகூறுகிறது.

தீண்டாமையை வெளிப்படையாகப் பின்பற்றும் சாதி ஆதிக்கவாதியர் மீதுவன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.

ஆனால், ஆட்சியோநிர்வாகமோ அதற்குத் தயாராக இல்லை.

தமிழக கிராமங்களில் பார்ப்பன ‘மனுதர்மமே’ஆட்சி செய்துக் கொண்டிருக்கிறது.

சட்டங்களுக்கு சாதி வெறியர்கள் சவால்விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

நன்றி: திராவிடர் விடுதலைக் கழக வார ஏடான புரட்சிப் பெரியார் முழக்கம்

பிறகு இந்த மக்கள் இந்து மதத்தின் மேல் வெறுப்புற்று இஸ்லாத்தை தழுவினால் அங்கும் வந்து அவர்களை துன்புறுத்தினால் அந்த மக்கள் எங்கு செல்வார்கள்? 21 ஆம் நூற்றாண்டிலும் ஏன் இப்படி?

சிந்திக்க மாட்டீர்களா?

-----------------------------------------

இஸ்லாத்தை ஏற்ற இந்து பெண் விரிவுரையாளர்!


மதுரையில் 24 வயது இன்ஜினியரிங் கல்லூரி பெண் விரிவுரையாளர் இஸ்லாத்தை ஏற்ற செய்தியை படித்துப் பாருங்கள். மேலே சொன்னது போன்ற தீண்டாமைகள் இந்து மதத்தில் இருக்கும் காலமெல்லாம் அந்த மக்கள் இஸ்லாத்தை ஏற்பது தொடர்கதையாகவே இருக்கும்.




33 comments:

NKS.ஹாஜா மைதீன் said...

பவர் ஸ்டார் ...ஹி ஹி....பேரை கேட்டாலே அநியாயத்துக்கு சிரிப்பு வருதே...

நம்பள்கி said...

வருங்கால முதலமைச்சர் வாழ்க!

விளையும் பயிர் முளையிலே!

Seeni said...

nantri!

suvanappiriyan said...

சகோ ஹாஜா மைதீன்!

//பவர் ஸ்டார் ...ஹி ஹி....பேரை கேட்டாலே அநியாயத்துக்கு சிரிப்பு வருதே...//

வருங்கால தமிழக முதல்வரை இப்படி எல்லாம் சொல்லக் கூடாது. :-)

suvanappiriyan said...

சகோ நம்பள்கி!

//வருங்கால முதலமைச்சர் வாழ்க!

விளையும் பயிர் முளையிலே!//

கதறி அழுத அந்த இளைஞர்களின் பெற்றோர் தான் எனக்கு ஞாபகத்துக்கு வந்தனர்.

suvanappiriyan said...

சகோ சீனி!

//nantri!//

நன்றி காவல் துறைக்கா! பவர் ஸ்டாருக்கா! எனக்கா! :-)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

அஜீம்பாஷா said...

பவர் ஸ்டார், உள்ளே போனதும் பவர் லெஸ் ஸ்டார் ஆகிவிட்டார்.

அஜீம்பாஷா said...

சும்மா அவரை வருங்கால முதல்வர்னு கூப்பிடாதீங்க,அப்புறம் வெளியே வந்து கடன் வாங்கியாவது" வருங்கால முதல்வர்" ன்னு படம் எடுத்து உங்களையெல்லாம் அவதுறு கேஸ் போட்டு உள்ளே வச்சு அவர் நடிச்ச டெய்லி பத்து முறை பார்க்க வச்சிருவார். ஆமா.

Riyas said...

பவர் ஸ்டாரின் தீவிர ரசிகர்கள் இங்கும் வந்து உங்களை தாக்கலாம் கவனம் :-)

இந்த "கூத்தாடி" என்ற வசனம் தேவையற்றதாகவே நினைக்கிறேன்.. இதற்குப்பதிலாக "நடிகர்" என்ற வசனமே நாகரீகமாக படுகிறது..!!

தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள்!

வவ்வால் said...

சு.பி சுவாமிகள்,

ஏன் இந்த இரட்டை வேடம் , சில நாட்களுக்கு முன் அரிஜனங்கள் எங்களைப்பார்த்து சுத்தமாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள் எனப்பதிவிட்டீர், அப்போதே நான் அப்படி சொல்வது தவறு என சொன்னேன்.

இப்போது தலித் பெண்ணுக்கு கொடுமை என்பது போல நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்கள்.

உங்கள் வஹாபிசமூம் பார்ப்பணியம் போன்ற ஆதிக்க மத வெறியே.

எனவே அங்கு வந்தாலும் நீங்கள் சும்மா விட மாட்டீர்கள், கொலையே செய்தாலும் செய்வீர்கள்.

தலித்துகள் ஷியா முஸ்லீமாக மாறினால் என்ன செய்வீர்கள் என்பதை நாடறியும்.

ராவணன் said...

நீ யாரு பவர் ஸ்டாரைக் குறை கூற?

மற்றவர்களை வம்பிற்கு இழுத்தால் மொகமதுவையும் சிலர் வம்பிற்கு கொண்டு வருவார்களே.

suvanappiriyan said...

சகோ அஜீம் பாஸா!

//சும்மா அவரை வருங்கால முதல்வர்னு கூப்பிடாதீங்க,அப்புறம் வெளியே வந்து கடன் வாங்கியாவது" வருங்கால முதல்வர்" ன்னு படம் எடுத்து உங்களையெல்லாம் அவதுறு கேஸ் போட்டு உள்ளே வச்சு அவர் நடிச்ச டெய்லி பத்து முறை பார்க்க வச்சிருவார். ஆமா.//

ஓ....இது தமிழ் நாடு. நீங்கள் சொல்வது போல் நடந்தாலும் நடக்கும்.

ராவணன் said...

கூத்தாடி என்பது கொண்டாடக்கூடிய ஒரு இனம்.

கொலைகாரன் என்பது வெறுக்கத்தக்க ஒரு இனம்.

நீ கொலைகாரன் இனத்தைச் சேர்ந்தவன்.

ராவணன் said...

நீ அடிச்சு ஆடு மாமு......சாரி....அண்ணாச்சி.....

suvanappiriyan said...

வவ்வால் சுவாமிகள்!

//உங்கள் வஹாபிசமூம் பார்ப்பணியம் போன்ற ஆதிக்க மத வெறியே.

எனவே அங்கு வந்தாலும் நீங்கள் சும்மா விட மாட்டீர்கள், கொலையே செய்தாலும் செய்வீர்கள்.//

அதற்கு கீழெ உள்ள செய்திகளை படித்தீர்கள்தானே! யாரும் இஸ்லாத்தை பிரசாரம் பண்ணக் கூட அவசியம் .ல்லை. அந்த பெண் விரிவுரையாளர் யாரும் சொல்லாமலேயே இணையத்தின் மூலமே இஸ்லாத்தை அறிந்து கொண்டு இன்று முஸ்லிம் ஆகியிருக்கிறார். நீதிபதி தனியாக அழைத்து விசாரித்தும் அவரது மனத்தை மாற்ற முடியவில்லை.

இது போல் இனி நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் உங்களைப் போன்றவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை அன்பொடு அரவணைக்க வேண்டும். அது முடியாது என்கிறீர்களா? அப்போ இஸ்லாத்தின் வளர்ச்சியையும் தடுக்க முடியாது. ர்திதாக இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு ஒரு தலைமுறை சற்று சிரமத்தை கொடுக்கும். அடுத்த தலைமுறை தலை நிமிர்ந்து நடக்கும். முதல் தலைமுறையிலேயே வெற்றியடைய தங்களின் ஊரை மாற்றினாலே சாத்தியப்பட்டு விடும்.

suvanappiriyan said...

சகோ ரியாஸ்!

//இந்த "கூத்தாடி" என்ற வசனம் தேவையற்றதாகவே நினைக்கிறேன்.. இதற்குப்பதிலாக "நடிகர்" என்ற வசனமே நாகரீகமாக படுகிறது..!!

தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள்!//

கூத்தாடி என்பதுதான் முன்பு வழக்கத்தில் இருந்த சொல். அந்த சொல் திரும்பவும் வந்தால்தான் இவர்கள் துறைக்கு செல்ல ஆசைப்படும் குடும்ப பெண்களின் எண்ணிக்கை கொஞ்சமாவது குறையும். இந்த நாட்டிலேயே கழிசடை துறை என்று ஒன்று உண்டென்றால் இது இந்த கூத்தாடிகள் துறைதான். இதற்குள்ள முக்கியத்துவம் குறைக்கப்பட வேண்டும்.

suvanappiriyan said...

//நீ யாரு பவர் ஸ்டாரைக் குறை கூற?

மற்றவர்களை வம்பிற்கு இழுத்தால் மொகமதுவையும் சிலர் வம்பிற்கு கொண்டு வருவார்களே.//

ஓ...ராவணன் பவர் ஸ்டார் ரசிகரா? சொல்லவே இல்ல.....:-)

Anonymous said...

பூவண்ணன் says:
September 14, 2012 at 5:15 am

அன்பு தோழரே
பெரியாரின் பக்தன் என்று கூறப்படுவது பெருமை தான்
அவரால் அதிகம் பலனடைந்தது ஹிந்து மதமும்,பிராமணர்களும் தான்
இன்று இஸ்லாமை பார்த்து கேள்வி கேட்கும் நிலைக்கு,கிண்டல் செய்யும்,பழிக்கும் நிலைக்கு ஹிந்து மதத்தை பின்பற்றுபவர்கள் பேசும் நிலையை உருவாக்கியது அம்பேத்கரும் பெரியாரும் தான்
அவர்கள் அடித்த அடியில் தான் தன பழமைவாதங்களை,பிற்போக்குத்தனங்களை,பெண்களை விலங்குகளை,அடிமைகளை விட கேவலமாக நடத்துவதை ஹிந்து மதம் விட்டு விட்டது.

அவருக்கு முன்னால் லட்சக்கணக்கில் நாடார்கள்,வன்னியர்கள்,கள்ளர்கள்,மீனவர்கள்,உடையார்கள் என்று தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமல்லாது பிற்படுத்தப்பட்ட சாதி மக்களும் கிருத்துவத்திற்கு மாறினர்
அவர்கள் அனைவருக்கும் சுயமரியாதையை உருவாக்கியதால்,எதிர்க்கும் சக்தியை தந்ததால் தான் மத மாற்றங்கள் நின்றன

இங்கு வந்த மிச்சிஒனரிகள் அளவிற்கு வட மாநிலங்களில் இருந்திருந்தால் அவை முற்றிலுமாக மாறியிருக்கும்.பக்கத்தில் இருக்கும் கேரளாவில் நாராயண குரு அவர்களின் பிராமணர்களை ஒதுக்கிய ஹிந்து மத வழிப்பாடுகள் வந்ததால் கூட பாதி தான் மத மாற்றம் இல்லாமல் தப்பித்து
பெரியாரால் தான் இங்கு மத மாற்றங்கள் தடுக்கப்பட்டன.

UNMAIKAL said...

வவ்வாலுக்கு.....

இஸ்லாத்தை விளங்கி

தூண்டுதலின்றி

இஸ்லாத்தினால் ஈர்க்கப்பட்டு

தானாகவே இஸ்லாத்தை தழுவிய‌ர்களில் சிலர்


20/08/2012 ’’அரக்கோணத்தில் இஸ்லாத்தை ஏற்ற கிரி’’

28.08.2012 பரமக்குடியில் இஸ்லாத்தை ஏற்ற ராணி மற்றும் சிவரஞ்சனி

20.08.12கீழக்கரை கிழக்கு தெருவில் இஸ்லாத்தை ஏற்ற ரீட்டா

20.08.12 செய்துங்கநல்லூர் ல் இஸ்லாத்தை ஏற்ற ஏழுமலை

20- 08- 2012மதுரையில் இஸ்லாத்தை ஏற்ற பாலமுருகன்

18-8-2012 சேலம் பச்சபட்டியி்ல் இஸ்லாத்தை ஏற்ற செல்வம்

22.8.2012 குமரியில் இஸ்லாத்தை ஏற்ற நாகராஜன்

15-8-2012துறையூரில் இஸ்லாத்தை ஏற்ற அகிலா

09.08.12 புதுக்கோட்டையில் இஸ்லாத்தை ஏற்ற ஜோதி

03.08.2012 சென்னை அசோக் நகர் ல் இஸ்லாத்தை ஏற்ற சுந்தர்

8-7-2012 விருதுநகர் ல் இஸ்லாத்தை ஏற்ற சரவணன்

13-7-2012 திருச்சியில் இஸ்லாத்தை ஏற்ற முரளி

30.07.2012 காரைக்காலில் இஸ்லாத்தை ஏற்ற சக்திவேல்

24.07.12 இராஜகிரி பண்டாரவாடை ல் இஸ்லாத்தை ஏற்ற டேவிட்

30-7-2012 திருச்சியி்ல் இஸ்லாத்தை ஏற்ற Dr அசோகன்!

16-7-2012மங்கலம்பேட்டையில் இஸ்லாத்தை ஏற்ற துளசி

20.07.2012கோவையில் இஸ்லாத்தை ஏற்ற கண்ணன்

16/7/2012 நீடாமங்கலம் ல் இஸ்லாத்தை ஏற்ற ராதா கிருஷ்ணன்

15.07.2012 இராஜபாளையத்தில் இஸ்லாத்தை ஏற்ற காளிராஜ்

15.07.2012 சென்னை ஜாம்பஜார் ல் இஸ்லாத்தை ஏற்ற சரவணன்

13.7.12 ராமநாதபுரத்தில் இஸ்லாத்தை ஏற்ற முத்து

மேலும்
>>>> ’இஸ்லாத்தை நோக்கி’ <<<<

Anonymous said...

//கூத்தாடி பவர் ஸ்டார் //

solluvathu mathaveriyan suvana piriyan. Velangidum :)

suvanappiriyan said...

//solluvathu mathaveriyan suvana piriyan. Velangidum :)//

நான் எந்த மதத்தையும் பின்பற்றவில்லையே! எனது மார்க்கம் இஸ்லாம். இதிலும் வெறி கிடையாது. பற்று மட்டுமே.

Anonymous said...

K A V Y A says:
September 15, 2012 at 8:34 am

//தமிழ்நாடு ஒன்றும் தனி தீவல்ல. அது இந்தியாவின் கலாச்சாரத்தில் ஒரு கூறு. இதை திராவிட கழகம் ஆரம்பதிலுர்ந்தே மறுத்து வருகிறது. தமிழர்களுக்கு ஒரு தனி அடையாளத்தை கொடுத்து, அதை மெருகேத்தி, உசுபேத்தி, கடைசியில் அதை இந்தியவிலுருந்து பிரிப்பதே இவர்களின் லாங் டெர்ம் பிளான். ர்

லாங் டெர்ம் பிளான் அரசியலில் போட முடியாது. Please understand that. Politicians look for immediate gains. Hindu agitation was spearheaded by politician – no doubt for immediate gain. But the success overflowed to general welfare of Tamil language which is a point of debate in all that I write here.

இந்தியாவிலிருந்து பிரிப்பதென்று என்றால், அவர்கள் “எங்களை மொழியையும் கலாச்சாரத்தையும் உங்கள் மொழியைத்திணித்து அழிப்பதே உங்கள் லாங் டெர்ம் பிளான்” என்றால் என்ன பதில் சொல்வீர்கள்? மார்க் டுல், மில்லியன் மூட்டினியில் சொல்கிறார்: ஹிந்தி 1000க்கும் மேலான இந்திய மொழிகளை விழுங்கியிருக்கிறது. Hind has gobbled up more than 1000 languages and dialects of India. உங்கள் பதிலென்ன? தமிழ் அழியக்கூடாதென்று நினைத்துச்செயல்படுவோரிடம் என்ன தவறு கண்டீர்கள்? தமிழர்களுக்கு அந்த அக்கறையில்லையென்றால் பின் ஆருக்கு? தமிழ் இல்லையென்றால் தமிழன் என்ற அடையாளம் எப்படி வரும்?
தமிழை அழிக்க முடியாது என்ற வாதம் போலி. Rubbish.அழிக்க முடியும். ஏனென்றால் மற்ற மக்களுக்கு உள்ள தாய்மொழிப்பற்றுத் தமிழர்களுக்கு கிடையாது. வெகு இலகுவாக விலைபோவார். எனவே தமிழைக்காப்பது அரசியல்வாதியின் வேலையாகப்போய்விட்டது.
நினவிருக்கட்டும் தென்மொழிகளில் சமசுகிருத ஆதிக்கத்தை எதிர்த்தது தமிழன் ஒருவனே. குயக்கோடனைப் பாண்டியன் அவையில் எதிர்த்தது நக்கீரனே. சங்ககாலத்திலிருந்தே சமசுகிருதமே உயர்வென்போர் எதிர்க்கப்பட்டேயிருந்திருக்கிறார்கள். (ரா. ராகவையங்கார்: சங்க காலம் கட்டுரை) அந்த எதிர்ப்பினாலே தமிழ் இன்றும் சாகாமல் பிழைத்துக்கிடைக்கிறது.

மலையாளம், தெலுங்கு எல்லாம் சமசுகிருதத்துக்குள் அமுங்கியன எதிர்ப்பு இல்லையாதனலால். மலையாளம் தெரிந்தால் உங்களுக்குப் புரியும். Malayalam is a highly sanskritised language. Botn languages went into the hands of the Brahmins in their origins, and whose aim was not language; but bringing Vedic religion into Andhra and Kerala. So, the Brahmins wrote the Ithikasas first in the languages. Similar to the aim of missionaries.

பார்ப்பனர்கள் சமசுகிருதத்தை தமிழில் உள்ளே கொண்டுவந்தாரகள். அதற்கு எதிர்ப்பு இல்லாவிட்டால் இன்றும் தமிழும் மலையாளம் போலத்தான் ஆகியிருக்கும். அல்லது இருமொழிகளும் ஒன்றாகியிருக்கும். ஒரு மக்களின் உயிர்மூச்சு அவர்தம் தாய்மொழி.
பிரபல மலையாளிகள் சொல்வதுண்டு: முதலில் நானொரு மலையாளி. பின்னர்தான் நானொரு இந்தியன அவர்களிடம் போய்: கேரளா ஒரு தீவன்று என்று சொல்லவியலுமா?
கே பி எஸ் மேனோன் (இந்தியாவின் முதல் வெளியுறவுத்துறைச்செயலர் நேருவின் கீழ்) தன் சுய சரிதையில் சொல்கிறார். I am a Malayali to my finger tips. (Many Worlds)

இப்படி எவரேனும் தமிழ்நாட்டில் சொல்லிவிட்டால், அவர்களைத் தமிழ் வெறியரென்பதேன்?

கோவி.கண்ணன் said...

//இந்த நாட்டிலேயே கழிசடை துறை என்று ஒன்று உண்டென்றால் இது இந்த கூத்தாடிகள் துறைதான். இதற்குள்ள முக்கியத்துவம் குறைக்கப்பட வேண்டும்.//

அவர்கள் பிழைப்பையும் சிடி போட்டு காசாக்கி விற்பவர்களை என்ன சொல்வீர்கள் சுவன அண்ணன் ?
:)

என்னமோ போங்க, நடிகை ஷகீலா முக்காடோடு கோர்டுக்கு வந்தால் பிரச்சனை செய்விங்க, அவங்க படத்தை உங்க ஆள்களே சிடி போட்டு விற்கிறார்கள். அவங்களுக்கெல்லாம் கண்டனம் கிண்டனம் கிடையாதா ? அவங்களெல்லாம் உண்மையான முஸ்லிம் இல்லைன்னு உங்க சான்றிதழ் கிடைக்காதா ?

asha parveen said...

தனக்கு ஒருவர் பிடிக்கும் என்றால் அவர் தவறு செய்தாலும்
அவரை ஏற்கும் கூட்டம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது:-(((

வவ்வால் said...

சு.சுவாமிகள்,

நீங்க சொன்னது போல யாரும் பிரச்சாரம் செய்யாமல் இஸ்லாம் மதம் வர்ராங்கண்ணே வச்சுப்போம், ஆனால் ஷியா இஸ்லாம் ஆக மாறினால் என்ன செய்வீங்கன்னு கேட்டேன் பதிலே இல்லை?

நீங்களே குண்டு வச்சு கொல்வீங்களா?

suvanappiriyan said...

வவ்வால் சுவாமிகள்!

//நீங்க சொன்னது போல யாரும் பிரச்சாரம் செய்யாமல் இஸ்லாம் மதம் வர்ராங்கண்ணே வச்சுப்போம், ஆனால் ஷியா இஸ்லாம் ஆக மாறினால் என்ன செய்வீங்கன்னு கேட்டேன் பதிலே இல்லை?//

ஷியா என்றால் பிரிவு என்று அர்த்தம் வரும். கர்பலாவில் முகமது நபியின் பேரப்பிள்ளையை வஞ்சகமாக முஸ்லிமாக நடித்த சில யூதர்கள் அவரை ஆட்சித் தலைவருக்கு எதிராக போர் செய்ய வைத்தனர். இரண்டு பக்கமும் தவறான புரிதல்களால் அந்த சண்டையில் இஸ்லாமிய உலகு இரண்டாக பிரிகிறது.(இதிலும் பிராமணர்களின் பங்கு உள்ளது) தற்போது இணையத்தின் மூலம் உண்மை நிகழ்வு என்ன என்பதை பல படித்த ஷியா முஸ்லிம்கள் அறிந்து வருகின்றனர். இங்கு எப்படி வஹாபிகளோ அது போன்ற ஒரு சிறந்த அமைப்பு ஷியாக்களிலும் தற்போது உண்டாகி வருகிறது. இது அதிகரித்தால் ஷியாவும், சன்னிகளும் ஒன்றாகும் காலம் வெகு தொலைவில் இல்லை. இந்த ஷியாக்கள் உடலை கீறிக் கொள்வது போன்ற மூடப் பழக்கங்களை செய்ய மாட்டார்கள். சன்னிகளோடு அன்பாகவே பழகுவர்.

மேலும் குர்ஆனிலோ, நபி மொழிகளிலோ இப்படி ஒரு பிரிவு கிடையாது. அனைவரும் முஸ்லிம்களே!

யாராவது புதிதாக இஸ்லாத்தை ஏற்று ஷியா பிரிவில் சேர்ந்தால் அவர்களுக்கு குர்ஆனின் மொழி பெயர்ப்பைக் கொடுத்து ஒன்றாக்க முயற்சிப்போம். முடியவில்லை என்றால் மாரில் அடித்துக் கொள்வது, உடலை கீறிக் கொள்வது போன்றவையை யாவது தவிருங்கள் என்றும் இது இஸலாத்தில் இல்லாத பழக்கம் என்பதை விளக்குவோம். புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள் எங்களிடம் உள்ள ஆதாரங்களை பார்த்து உண்மையை விளங்கிக் கொள்வார்கள். எனவே இதில் எந்த பிரச்னையும் இல்லை.

முதலில் அப்படி ஒரு ஆளைக் கொண்டு வாருங்கள். நான் மாற்றிக் காட்டுகிறேன் இன்ஷா அல்லாஹ்.


suvanappiriyan said...

கோவி கண்ணன்!

//அவர்கள் பிழைப்பையும் சிடி போட்டு காசாக்கி விற்பவர்களை என்ன சொல்வீர்கள்//

தவறான வியாபாரங்கள் யார் செய்தாலும் அது தவறுதான். எனக்கு தெரிந்த நண்பர்கள் யாரும் இவ்வாறு வியாபாரத்தில் ஈடுபட்டால் வேறு தொழில் பார்க்கச் சொல்லி அறிவுறுத்துவேன். அதுதானே நம்மால் முடிந்தது.

//அவங்களெல்லாம் உண்மையான முஸ்லிம் இல்லைன்னு உங்க சான்றிதழ் கிடைக்காதா ?//

சான்றிதழ் கொடுக்கும் உரிமை நம்மை படைத்த இறைவனிடம் அல்லவா உள்ளது.

suvanappiriyan said...

சகோ ஆஷா ஃபர்வீன்!

//தனக்கு ஒருவர் பிடிக்கும் என்றால் அவர் தவறு செய்தாலும்
அவரை ஏற்கும் கூட்டம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது:-(((//

இந்த எண்ணம் மாற வேண்டும். சினிமா மாயை நம் தமிழகத்தை விட்டு செல்ல வேண்டும்.

Anonymous said...

K A V Y A says:
September 15, 2012 at 10:26 am

//அவர்கள் ஹிந்தி மீது இவ்வளவு வெறுப்பு காட்டுவதில்லை. அவர்கள் எல்லோரும் தமிழர்களை விட தங்களது தாய் மொழியின் மீது அதிக மதிப்பு வைத்திருக்கிறார்கள். இருப்பினும், ஆங்கிலம், தாய்மொழி, மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளை படித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஏன் தமிழர்களுக்கு மட்டும் இந்த மொழி வெறி?
நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ஹிந்தி மெல்ல மெல்ல தமிழ்நாட்டில் ஊடுருவி கொண்டிருக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை. வட இந்தியாவிலிருந்து கூலி தொழிலாளிகள் வருகை அதிமாகி உள்ள நிலையில், அவர்களை வேலை வாங்குவதற்காக தொழில் செய்யும் தமிழர்கள் மெல்ல மெல்ல ஹிந்தியை கற்று கொண்டுதான் இருக்கிறார்கள்.//

இராஜன்!

தமிழர்களுக்கு மொழிவெறியிருப்பதாகச்சொல்வது உண்மையன்று. எங்கு சென்றாலும் அங்குள்ள மொழியைக்கற்று வாழ்பவர்கள் தமிழர்கள். தில்லியில் 10 லட்சமும் மும்பையில் அதற்குமேலாகவும் தமிழர்கள் வாழ்கிறார்கள் 60 களில் சென்றவர்கள். அவர்கள் ஹிந்தியோ மராட்டியோ படிப்பதில்லையென்ற வெறியுடன் வாழவில்லை. சச்சினின் அப்பாதான் தாராவியில் தமிழர்களுக்கு மராட்டி ஆசிரியர்.
அதே வேளையில் பீஹாரிகளை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் எங்கு சென்று வாழ்கிறார்களோ அங்குள்ள மக்களுடன் அவர்கள் சேர்ந்து வாழவிரும்பாமல் தங்களுக்குள்ளேயே ஹிந்தி பேசி அவர்கள் கலாச்சாரத்தை மட்டும் பேணிவாழ்வதால் அவர்கள் எங்குமே விரும்பப்படுவதில்லை. மஹாராட்டிராவில் மட்டுமன்றி; எங்கும் அப்படித்தான். அவர்களின் குழுமனப்பானமை மிகவும் சிறுபிள்ளைத்தனமாக இருக்கும். பீஹாரிகள் மற்றும் உபிக்காரர்களின் ஹிந்தி பற்று, வெறியென்பதே நிதர்சனம்.

சிபிஎஸ்சி மும்மொழித்திட்டத்தை அறிவித்தது. அதன்படி வடமாநிலத்தவர் ஒரு தென்மொழியையும் தென்மாநிலத்தவர் ஹிந்தியையும் படிக்கவேண்டும். வடமாநிலத்தில் எவருமே எந்தத் தென்மொழியையும் படிக்கவில்லை. திட்டம் படுதோல்வி. எப்போதும் அப்படித்தான். தமிழ் அல்லது மற்ற தென்மொழிகளில் பாண்டித்தியமுள்ள எவரையும் அங்கு பார்க்க முடியாது. ஆனால், ஹிந்தியில் பாண்டித்தியமுள்ள பேசவல்ல தென்னவரகள், தமிழர்களைப் பார்க்க முடியும். நான் மதுரையில் பலவிடங்களில் இந்தியில் என் மனைவியுடனும் குழந்தைகளிடம், உரையாடுவதுண்டு. ஜூஸ் கடைக்காரனிடமும் ஹோட்டல் சர்வர்களிடமும் ஹிந்தியில்தான் பேசுவோம். வடநாட்டு யாத்ரிகளிடம் ஹிந்தியில் கேட்டு தமிழில் பேருந்து நடத்துனரிடம் சொல்லி, அவர்களுக்கு ராமேசுவரம் மாட்டுத்தாவணியிலிருந்து போக உதவுங்கள் என்று சொல்வதுண்டு. பேருந்துப்பயணிகள் மிகவும் உதவுவார்களை இகழ்வது கிடையாது. எவரும் ஹிந்தி பேசியதற்காக ஹிந்திக்காரர்கள் கணிசமாக வாழ்கிறார்கள். எவரும் எங்களைக்கண்டு இகழ்வதோ, வெறுப்புப்பார்வை வீசுவதோ கிடையாது. அதே வேளையில் ட்ரக் டரைவர் ஒருவர் சொன்னார்: கேரளாவில் நான் எதைக்கேட்டாலும் சர்வர் தருவதில்லை.

மலையாளத்தில் சொன்னால்தான் தருவான். குழந்தைகளுக்கு ஹிந்தி மட்டுமே தெரியும் தமிழ் உச்சரிப்பு பிறருக்குச் சிரிப்பைத்தருமென்று வெட்கப்பட்டு ஹிந்தி பேசிவ்ருகிறார்கள். அப்படியிருக்க தமிழருக்கு ஹிந்தி வெறுப்பென்கிறீர்களே!! அப்படிச்சொல்லும் நீங்கள் லக்நோவில் தமிழ் பேசுங்கள் பார்ப்போம்.

உண்மையென்னவென்றால் அவர்களுக்குத்தான் ஹிந்தி வெறி. எனவேதான், தமிழ்ப்பார்ப்பனர்கள் சமசுகிருதத்தை முதலில் வைத்துத் தமிழை இரண்டாவதாக சங்ககாலமுதல் செய்து வர, இன்றும் சமசுகிர்தமே கோயிலில் என்றெல்லாம் வாதாடிவர, உபி பார்ப்ப்னர்களோ ஹிந்தியே முதல்; தம் மொழி இந்தியா முழுக்கப்பரவ வேண்டுமென்ற கொள்கையுடையோராகி, அப்பார்ப்ப்னர்களுள் ஒருவரான டண்டன் இந்தியப்பாராளுமன்றத்திலே ஹிந்திக்காக வாதாடி, அவரின் ஒரே ஓட்டில் ஹிந்தி ஆட்சிமொழியாகியது என்று அறிகிறோம். ஜாதி, மதம், என்று பாராமல் அனைத்து உபிக்காரரும் ஹிந்திக்காக வாழ்கிறார்கள்; அதுமட்டுமா, இந்திய மொழிகளிலே தம்மொழியே சிறந்தது என்ற தற்பெருமையும் அவர்களுக்குண்டு. 17ன் நூற்றாண்டில் மொகலாயர் அரண்மனைக்கவிஞர்களால் உருவாக்கப்பட்ட மொழிதான் அது. சூர்தாஸ்தான் முதற்கவிஞர்கள். அதற்குமுன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு மின் ஆழ்வார்களும் நாயன்மார்களும் சமணர்களும் தமிழ்க்கொடைதந்துவிட்டு மறைந்துவிட்டார்கள்.

இங்கிருந்து கூலிவேலைக்காக ஆயிரக்கணக்கில் வடமாநிலம் சென்ற தமிழர்களிடம் அவர்கள் முதலாளிகள் தமிழில் ஆணையிடுவது கிடையாது. ஹிந்திதான். இவர்களும் ஹிந்தியை கபக்கென்று பிடித்து விரைவில் பேசப்பழகிவிடுவார்கள். போய்ப்பாருங்கள்.

அதே சமயம், நீங்கள் சொல்கிறீர்கள். ஹிந்தி கூலிக்காரர்களிடம் ஹிந்தியில்தான் பேசுகிறார்கள் அவர்கள் முதலாளிகளென்று. ஹிந்தி கூலிக்காரர்களால், தமிழகத்தில் ஹிந்தி வருகிறதென்று.
தமிழ்க்கூலிக்காரர்களால் தமிழ் தில்லியில் நுழையவில்லை.
வேறுபாடு காட்டும் ஆர் வெறியர்களென்று. உங்கள் வாயிலிருந்தே வந்து விட்டது : – )

Nellai Premkumar said...

//இது போல் இனி நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் உங்களைப் போன்றவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை அன்பொடு அரவணைக்க வேண்டும். அது முடியாது என்கிறீர்களா? அப்போ இஸ்லாத்தின் வளர்ச்சியையும் தடுக்க முடியாது.//

திரு சுவனம்,
உங்கள் கூட்டத்தை போல் மூளை சலவை செய்யப்பட்ட இனம் உலகில் வேறு ஏதும் இல்லை. எனவே வரும் காலத்தில் கால மாற்றத்திற்கு ஏற்ப மற்றவர்கள் எல்லாரும் தங்களை மாற்றி கொள்வார்கள் அதனால் தாழ்த்தப்பட்ட மக்கள் என்று கூறப்படுவ்பவர்களும் எல்லோருடன் சமம் ஆகி விடுவார்கள். இஸ்லாத்தின் வளர்ச்சியை ஏன் தடுக்க முடியாது சுவனம். உங்களை போல் எல்லாருக்கும் தங்கள் மதத்தின் மீது வெறி வந்து விட்டால் இஸ்லாம் என்பது சவுதியில் மட்டும் தான் இருக்கும். துரதிஷ்டவசமாக உங்கள் கூட்டத்தை தவிர மற்ற மதங்களை பின்பற்றுபவர்கள் தன் மதத்தின் மீது பற்றுடன் மட்டும் தான் இருக்கிறார்கள். மத வெறியுடன் இருப்பவர்கள் கூட தங்கள் வெறியை காட்டுவதில்லை. ஆனால் வெளிப்படையாக தங்கள் மத வெறியையும் காட்டிக்கொண்டு, அதற்கு வியாக்கியானமும் சொல்லிக்கொண்டு இருப்பவர்கள் உங்கள் கூட்டம் மட்டும் தான். வெளிப்படையாக சொல்லுங்கள், உலகில் மத வெறியை பரப்பியதை தவிர என்ன சாதித்து விட்டது நீங்கள் பெரிதாக தூக்கி பிடித்து கொண்டிருக்கும் உங்கள் மார்க்கம். உங்களிடம் சாதி இல்லை என்று கூறி கொள்வீர்கள். காபாவில் திருநீறு பூசிய ஒரு இந்துவை உங்களால் அழைத்து செல்ல முடியுமா? அவன் அல்லாவை ஏற்றால் அழைத்து செல்கிறேன் என்பது தான் உங்கள் பதிலாக இருக்கும். இப்படி எல்லாருக்கும் பொதுவான கடவுளின் இல்லம் என்று சொல்லப்படும் ஒரு இடத்திற்கு கடவுளை வேறு முறையில் வழிபடும் ஒரே காரணத்திற்காக ஒருவரை நுழையவிட மறுக்கும் நீங்கள் எப்படி கொஞ்சம்கூட வெட்கம் இல்லாமல் சாதி வெறியை பற்றி பேசுகிறீர்கள். உங்கள் மதத்தின் மீது இவ்வளவு பற்றுடன் வெறியுடன் நீங்கள் இருக்கும்போது நரேந்திர மோடியும், மாயா பென்னும் தங்கள் மதத்தின் மீது வெறியுடன் இருப்பதை குறை கூற நீங்கள் யார். இந்துக்கள் தங்கள் மதத்தின் மீது வெறியுடன் இருந்தால் உங்கள் கூட்டத்திற்கு ஏன் ஜன்னி வருகிறது. இந்துக்களில் மதவெறி இல்லாத மக்கள் பெரும்பன்மையானவர்கள் இருப்பதால் தான் 'எனது மதத்தை நான் பரப்புவேன் உன்னால் முடிந்ததை பார்த்து கொள் என்ற ரீதியில் உங்களை போன்றவர்கள் பேச முடிகிறது சுவனம்'. நரேந்தர மோடியும் மாயா பென்னும் செய்தது தவறுதான். ஆனால் உங்கள் சவுதியில் ஒரு பிற மதத்தவன் சென்று தனது மதத்தை பரப்ப உரிமை உண்டா? வெளிப்படையாக தனது மத இறைவனை ஒருவன் வணங்க முடியுமா. இந்த நாட்டில் என்பது சதவீத மக்கள் பின்பற்றும் ஒரு மதத்தில் ஒரு சில குறைகள் இருக்கலாம். ஆனால் அதை பயன்படுத்தி எங்கோ சவூதி என்ற பாலைவன நாட்டில் தனது சுய லாபத்திற்காக ஒரு வியாபாரி உருவாக்கிய ஒரு மதத்தை இங்கே வியாபாரம் செய்ய நீங்கள் முற்படுவீர்கள். இங்கே ஷரியா வரும், இஸ்லாம் வரும் என்று நீங்கள் கொக்கரிப்பீர்கள். அதை பார்த்து கொண்டு நாங்கள் பொத்தி கொண்டு இருக்க வேண்டும். அப்படி இருந்தால் எந்த தடையும் இன்றி உங்கள் மத வியாபாரத்தை செய்வீர்கள். அதை விளம்பரமும் செய்வீர்கள் அப்படிதானே. ஓட்ட பந்தயத்தில் ஒருவன் மட்டும் ஓடி ஜெயிப்பது வெற்றி அல்ல சுவனம். உங்கள் இஸ்லாமிய கூட்டத்திற்கு உணமையிலேயே தங்கள் மார்க்கத்தின் மீது நம்பிக்கை இருந்தால் சவுதியில் பிற மதங்களுக்கு சுதந்திரம் கொடுத்து பார்க்கட்டுமே. பிற மதங்கள் பிரசாரம் செய்ய அனுமதிக்கட்டுமே. அதை செய்ய தைரியம் இருக்கிறதா. உங்கள் மார்க்கம் மட்டுமே உண்மையானது யோக்கியமானது என்று நீங்கள் வைக்கும் அதே கருத்தை சொல்ல எல்லா மதத்தவருக்கும் உரிமை உண்டு.

Nellai Premkumar said...

//இந்த நாட்டிலேயே கழிசடை துறை என்று ஒன்று உண்டென்றால் இது இந்த கூத்தாடிகள் துறைதான். இதற்குள்ள முக்கியத்துவம் குறைக்கப்பட வேண்டும்.//

உங்கள் கூட்டத்தின் தீவிரவாதத்தை விட கூத்தாடிகள் கேவலமானவர்கள் அல்ல சுவனம். கொஞ்சம் உங்கள் முதுகை சொரிந்து அழுக்கை அகற்றி விட்டு அடுத்தவர் அழுக்கை பற்றி சொல்லுங்கள். உங்களை போன்ற மத தீவிரவாதிகளை விட கூத்தாடிகள் கேவலமானவர்கள் அல்ல. ஒரு கூத்தாடியை எந்த மதத்தவன் தேடி சென்றாலும் அவன் வேண்டாம் என்று சொல்வது இல்லை. ஆனால் இஸ்லாமியன் மட்டுமே உண்மையானவன் அவன் மட்டுமே சொர்கத்திற்கு செல்லும் தகுதி உடையவன் என்று சொல்லும் அல்லா என்ற மிக பெரிய மத வெறியனை விட கூத்தாடிகள் மோசமானவர்கள் இல்லை. கொஞ்சம் பண்புடன் வார்த்தைகளை உபயோகிக்கக் கற்று கொள்ளுங்கள்.

Nasar said...

கூத்தாடி பவர் ஸ்டாரை ஏசினால், ராவணனுக்கு ஏன் கோவம் வருகிறது ???
இவரும் கூத்தாடி பரம்பரையில் வந்தவரோ...!!!???
போங்கப்பா ... "முனியாண்டி " விலாசில் மட்டன் பிரியாணி சாப்பிடுங்க .....

--

Unknown said...

Mr Nellai Premkumar,

///ஒரு கூத்தாடியை எந்த மதத்தவன் தேடி சென்றாலும் அவன் வேண்டாம் என்று சொல்வது இல்லை. ///

கூத்தாடியை, கூத்தாடி என்று நீங்களும் சேர்ந்து வர்ணிப்பதைப் பாராட்டுகிறேன்.

விபச்சாரன், விபச்சாரிகளை எவன்/எவள் தேடிச் சென்றாலும், வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்தான்!