Followers

Sunday, September 02, 2012

ரஜினி - ஜெயலலிதா சண்டை திரும்பவும் தொடங்குமா?

ரஜினி - ஜெயலலிதா சண்டை திரும்பவும் தொடங்குமா?



“புரட்சித் தலைவி ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்ற பிறகு அவருக்குப் பாராட்டு விழா நடத்த சினிமாக்காரர்கள் ஆசைப்பட்டோம், ஆனால் அதை மறுத்துவிட்டார்கள், இப்போது அந்த வாய்ப்பு வந்திருக்கிறது….. ஜெயா டிவியில் சோவின் எங்கே பிராமணன், தொடரை நான் விரும்பிப் பார்ப்பேன். சோ கொடுக்கிற விளக்கங்கள் நல்லா இருந்தது. ஆனா அதுக்கப்புறம் நின்னுடுச்சி. நான்கூட சோ கிட்ட, ஏன் நிறுத்திட்டீங்கன்னு கேட்டேன். அதுக்கு அவர் சொன்னார், 'சிஎம் கூட என்கிட்ட கேட்டாங்க்.. ஆனா எனக்குத்தான் நேரமில்லே'ன்னார். இந்தத் தமிழ்நாட்ல, சிஎம் சொல்லியும் கேட்காத ஒரு ஆள் இருக்கார்னா அது சோ சார்தான்.



இந்த மரணம் என்பது இயற்கையானது. எல்லாருக்கும் வரக் கூடியது. இந்த மரணம் ஒரு தடவைதான் என்றில்லை... ரெண்டு முறை நிகழும். அதாவது உயிர் உடலைவிட்டு போனா முடிஞ்சது...அவ்வளவுதான்.

. மரணமே இல்லாத சில பேர் இருக்காங்க. அவங்க ஒரு பர்சன்ட்தான். அவங்க வாழும்போதும் சரி, இறந்து போன பிறகும் சரி, அவங்க பேரும் புகழும் எப்பவுமே நிலைச்சிருக்கும். அவங்கள்லாம் சாகாவரம் பெற்றவர்கள். தனிப்பிறவி.

இன்று அரசியலில் என்னுடைய ஆருயிர் நண்பர் மதிப்பிற்குரிய டாக்டர் கலைஞர் அவர்கள், புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள், விஸ்வநாதன் ராமமூர்த்தி... இவங்களுக்கெல்லாம் வெற்றி தோல்வி போன்றவை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

இவங்களைப் பொறுத்தவரை வெற்றியடைஞ்சா சந்தோஷம் இருக்கும். தோல்வியடைஞ்சா மனசு கொஞ்சம் வருத்தப்படும். ஆனா அவங்க பேருக்கும் புகழுக்கும் எந்த பாதிப்பும் வராது.
ஏன்னா... அதையெல்லாம் தாண்டிய நிலையில் இருப்பவர்கள் இவர்கள். வெற்றி, தோல்விகளை தாங்கிக்கொள்ளும் சமமான மனநிலையில இருப்பாங்க.அவங்க வாழ்ந்த காலத்துல நானும் வாழ்ந்திருக்கேன். அவங்க கூட பழகியிருக்கேங்கிற சந்தோஷத்தோட,இந்த விழாவுல எனக்கு பேச வாய்ப்பளித்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொண்டு, முதல்வர் புரட்சித் தலைவி அவர்கள் இன்னும் மக்களுக்கு நிறைய சேவை செய்து, இந்தியா மட்டுமில்லே உலக அளவில் அவர் பேரும் புகழும் பெறவேண்டும், அதற்கு தேவையான நல்ல ஆரோக்கியத்தையும் மனநிம்மதியையும் இறைவன் அவருக்கு வழங்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு விடைபெறுகிறேன்."



இவ்வாறு மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் ராமமூர்த்திக்கு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஹைலைட்டாக பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார் ரஜினி காந்த். ஜெயலலிதாவுக்கு முன்னால் கருணாநிதியை உயர்த்திப் பேசுவதற்கும் ஒரு தில் வேண்டும். அது ரஜினியிடம் உள்ளது. பல பேர் நினைப்பது போல் இது பெரும் பிரச்னையாக மாற வாய்ப்பில்லை. ஏனெனில் இதற்கு முன் ரஜினியை பகைத்துக் கொண்டு அதனால் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அவ்வளவு லேசில் மறந்து விடுபவர் அல்ல ஜெயலலிதா. எனவே இந்த பிரச்னையை ஆறப் போடவே ஜெயலலிதா தரப்பு முயற்ச்சிக்கும் என்பது எனது கணிப்பு.

"நான் சொன்னால் இந்த விருதினை அளிக்கும் காலம் கனியும். அப்போது இவர்களுக்கு பத்மா விருதுகள் கிடைக்கச் செய்வேன் என்பதை மட்டும் இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்."

எம்.எஸ். விஸ்வநாதனுக்கு மத்திய அரசின் விருதுகள் கிடைக்கவில்லை என்பதற்காக ஜெயலலிதா உதிர்த்த முத்தான வார்த்தைகள்தான் இது. இன்னும் 'நான்' என்ற அகந்தை அகலாதது இவரிடம் உள்ள பெரும் குறை. அதுதான் இவருக்கு பல எதிரிகளை சம்பாதித்து கொடுத்துள்ளது. இனி வரும் காலங்களிலாவது இது போன்ற வார்த்தைப் பிரயோகங்களை தவிர்ப்பார் என்று நம்பலாம்.

மற்றபடி இறப்பை பற்றி ரஜினி சொன்ன கருத்துகளில் நான் மாறுபடுகிறேன். ஜெயலலிதாவோடு ஒப்பிடும் போது பொது நலத்தில் கருணாநிதி எந்த வகையிலும் குறைவானவர் இல்லை என்பது எனது கணிப்பு. எப்படியோ இன்னும் சில வாரங்கள் பரபரப்பாக செய்திகளை தர விஷயம் கிடைத்தாகி விட்டது. :-) (நம் பதிவர்களுக்கும் சேர்த்துதான்.)



24 comments:

மர்மயோகி said...

"டாஸ்மாக் புகழ் குடிகார தமிழ்நாட்டின் குடிகார தமிழர்களுக்கு" இந்த குடிகார ரஜினி எது உளறினாலும் செய்திதான்..
சுவனப்பிரியரே..நீங்களும் இந்த வலையில் வீழ்ந்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது...
படத்தில் நடிக்க முடியாமல், நோய்வாய்ப்பட்டிருக்கும் இந்த குடிகாரனுக்கு தன்னை லைம் லைட்டில் வைத்திருக்க பரபரப்பான செய்தி வேண்டும்..இதோ உளறிவிட்டான்..
இது போதாதா ஆபாச குமுதம், ஆபாச விகடன், ஆபாச நக்கீரன் போன்ற பலான பத்திரிக்கைகளுக்கு..செய்திகளை தலைப்பை போட்டு, "டாஸ்மாக் புகழ் குடிகார தமிழ்நாட்டின் குடிகார தமிழ் ரசிகனுக்கு" விற்று காசு பார்த்துவிடுவான்..

மர்மயோகி said...

//ஜெயலலிதாவுக்கு முன்னால் கருணாநிதியை உயர்த்திப் பேசுவதற்கும் ஒரு தில் வேண்டும். அது ரஜினியிடம் உள்ளது. பல பேர் நினைப்பது போல் இது பெரும் பிரச்னையாக மாற வாய்ப்பில்லை. ஏனெனில் இதற்கு முன் ரஜினியை பகைத்துக் கொண்டு அதனால் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அவ்வளவு லேசில் மறந்து விடுபவர் அல்ல ஜெயலலிதா. எனவே இந்த பிரச்னையை ஆறப் போடவே ஜெயலலிதா தரப்பு முயற்ச்சிக்கும் என்பது எனது கணிப்பு.//

உங்கள் கணிப்பு முற்றிலும் தவறு.. தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலும் உலகெங்கும் நீங்கள் புகழ் பெறவேண்டும் என்று ஜெயலலிதாவுக்கு கூழைக்கும்பிடு போட்டுவிட்டு கருணாநிதிக்கும் புகழ் உண்டு என்று சொல்வதற்கு எதற்கு "தில்" வேண்டும்?
ரஜினியை பகைத்ததால் ஒன்றும் ஜெயலலிதா தோற்றுவிடவில்லை..அந்த சமயத்தில் ஜெயலலிதாவின் அடுக்கடுக்கான தவறுகள் மக்களிடையே பெரும் வெறுப்பை ஏற்படுத்தி இருந்தது..அதை தாமாகாவை தொடங்கிய மூப்பனார், சங்கபரிவாரின் கைக்கூலி கோமாளி சோ, இந்த குடிகாரன் ரஜினி ஆகியோர் சந்தில் சிந்து பாடி தங்களால்தான் ஜெயலலிதா தோற்றார் என்ற பிம்பத்தை ஏற்படுத்தி இருந்தனர்...

"டாஸ்மாக் புகழ் குடிகார தமிழ்நாட்டை சேர்ந்த குடிகார தமிழனுக்கு " குடிகாரன் ரஜினி "வாயிஸ்" கொடுத்தததாக பலான பத்திரிக்கைகள் ரஜினியிடம் பிச்சை எடுத்து வாந்தி எடுத்து "டாஸ்மாக் புகழ் குடிகார தமிழ்நாட்டை சேர்ந்த குடிகார தமிழனை" மூளை சலவை செய்தன..அதை நீங்களும் வழிமொழிவது ஆச்சரியமாக உள்ளது..

மர்மயோகி said...

//ஜெயலலிதாவுக்கு முன்னால் கருணாநிதியை உயர்த்திப் பேசுவதற்கும் ஒரு தில் வேண்டும். அது ரஜினியிடம் உள்ளது. பல பேர் நினைப்பது போல் இது பெரும் பிரச்னையாக மாற வாய்ப்பில்லை. ஏனெனில் இதற்கு முன் ரஜினியை பகைத்துக் கொண்டு அதனால் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அவ்வளவு லேசில் மறந்து விடுபவர் அல்ல ஜெயலலிதா. எனவே இந்த பிரச்னையை ஆறப் போடவே ஜெயலலிதா தரப்பு முயற்ச்சிக்கும் என்பது எனது கணிப்பு.//

உங்கள் கணிப்பு முற்றிலும் தவறு.. தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலும் உலகெங்கும் நீங்கள் புகழ் பெறவேண்டும் என்று ஜெயலலிதாவுக்கு கூழைக்கும்பிடு போட்டுவிட்டு கருணாநிதிக்கும் புகழ் உண்டு என்று சொல்வதற்கு எதற்கு "தில்" வேண்டும்?
ரஜினியை பகைத்ததால் ஒன்றும் ஜெயலலிதா தோற்றுவிடவில்லை..அந்த சமயத்தில் ஜெயலலிதாவின் அடுக்கடுக்கான தவறுகள் மக்களிடையே பெரும் வெறுப்பை ஏற்படுத்தி இருந்தது..அதை தாமாகாவை தொடங்கிய மூப்பனார், சங்கபரிவாரின் கைக்கூலி கோமாளி சோ, இந்த குடிகாரன் ரஜினி ஆகியோர் சந்தில் சிந்து பாடி தங்களால்தான் ஜெயலலிதா தோற்றார் என்ற பிம்பத்தை ஏற்படுத்தி இருந்தனர்...

"டாஸ்மாக் புகழ் குடிகார தமிழ்நாட்டை சேர்ந்த குடிகார தமிழனுக்கு " குடிகாரன் ரஜினி "வாயிஸ்" கொடுத்தததாக பலான பத்திரிக்கைகள் ரஜினியிடம் பிச்சை எடுத்து வாந்தி எடுத்து "டாஸ்மாக் புகழ் குடிகார தமிழ்நாட்டை சேர்ந்த குடிகார தமிழனை" மூளை சலவை செய்தன..அதை நீங்களும் வழிமொழிவது ஆச்சரியமாக உள்ளது..

மர்மயோகி said...

//ஜெயலலிதாவுக்கு முன்னால் கருணாநிதியை உயர்த்திப் பேசுவதற்கும் ஒரு தில் வேண்டும். அது ரஜினியிடம் உள்ளது. பல பேர் நினைப்பது போல் இது பெரும் பிரச்னையாக மாற வாய்ப்பில்லை. ஏனெனில் இதற்கு முன் ரஜினியை பகைத்துக் கொண்டு அதனால் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அவ்வளவு லேசில் மறந்து விடுபவர் அல்ல ஜெயலலிதா. எனவே இந்த பிரச்னையை ஆறப் போடவே ஜெயலலிதா தரப்பு முயற்ச்சிக்கும் என்பது எனது கணிப்பு.//

உங்கள் கணிப்பு முற்றிலும் தவறு.. தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலும் உலகெங்கும் நீங்கள் புகழ் பெறவேண்டும் என்று ஜெயலலிதாவுக்கு கூழைக்கும்பிடு போட்டுவிட்டு கருணாநிதிக்கும் புகழ் உண்டு என்று சொல்வதற்கு எதற்கு "தில்" வேண்டும்?
ரஜினியை பகைத்ததால் ஒன்றும் ஜெயலலிதா தோற்றுவிடவில்லை..அந்த சமயத்தில் ஜெயலலிதாவின் அடுக்கடுக்கான தவறுகள் மக்களிடையே பெரும் வெறுப்பை ஏற்படுத்தி இருந்தது..அதை தாமாகாவை தொடங்கிய மூப்பனார், சங்கபரிவாரின் கைக்கூலி கோமாளி சோ, இந்த குடிகாரன் ரஜினி ஆகியோர் சந்தில் சிந்து பாடி தங்களால்தான் ஜெயலலிதா தோற்றார் என்ற பிம்பத்தை ஏற்படுத்தி இருந்தனர்...

"டாஸ்மாக் புகழ் குடிகார தமிழ்நாட்டை சேர்ந்த குடிகார தமிழனுக்கு " குடிகாரன் ரஜினி "வாயிஸ்" கொடுத்தததாக பலான பத்திரிக்கைகள் ரஜினியிடம் பிச்சை எடுத்து வாந்தி எடுத்து "டாஸ்மாக் புகழ் குடிகார தமிழ்நாட்டை சேர்ந்த குடிகார தமிழனை" மூளை சலவை செய்தன..அதை நீங்களும் வழிமொழிவது ஆச்சரியமாக உள்ளது..

suvanappiriyan said...

மர்மயோகி!

ரஜினி மீது ஏன் இந்த கோபம். குடி என்பது அரசே இன்று நடத்தும் ஒரு வியாபாரமாகிப் போன நாட்டில் இதனை பெரிது படுத்த அவசியமில்லை. பொதுவில் பிரச்னை செய்யாமல் அவரளவில் குடித்து விட்டோ எப்படியோ இருந்து விட்டு போகட்டும். அவராச்சு. அவரது குடும்பமாச்சு. நமக்கு அதைப் பற்றி கவலையில்லை.

அப்படி பார்க்கப் போனால் இன்று டாஸ்மார்க்கின் வருமானத்தை எகிற வைத்து கருணாநிதிக்கு நான் சளைத்தவர் அல்ல என்றுகாட்டிக் கொண்டிருக்கிறார் நமது முதல்வர். இந்த முறை ஜெயித்து வந்தது கூட கலைஞரின் குடும்ப அரசியலை எதிர்த்துதானே யொழிய நல்லாட்சி தருவார் ஜெயலலிதா என்ற நினைப்பில் மக்கள் வாக்களிக்கவில்லை என்பதையும் நினைவு கூறுங்கள்.

Unknown said...

///பொதுவில் பிரச்னை செய்யாமல் அவரளவில் குடித்து விட்டோ எப்படியோ இருந்து விட்டு போகட்டும். அவராச்சு. அவரது குடும்பமாச்சு. நமக்கு அதைப் பற்றி கவலையில்லை.///


தீமைகளை முடியுமானளவிற்கு தடுக்க வேண்டிய முஸ்லிம்களாகிய நமக்கு, யார் குடித்து யார் நாசமாகிப்போனாலென்ன என்ற தங்களின் நிலைப்பாடு சரியில்லை.

suvanappiriyan said...

சகோ யூசுப் இஸ்மத்!

//தீமைகளை முடியுமானளவிற்கு தடுக்க வேண்டிய முஸ்லிம்களாகிய நமக்கு, யார் குடித்து யார் நாசமாகிப்போனாலென்ன என்ற தங்களின் நிலைப்பாடு சரியில்லை.//

குடி ஒரு சமூக கேடு என்பதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை. நான் இந்த பதிவில் ரஜினி தமிழக முதல்வர் முன்னால் இந்த அளவு தைரியமாக பேசியதை வைத்தே இந்த பதிவை எழுதினேன். எனவே இதை விடுத்து 'அவர் குடிப்பார்' என்று சொன்னதால்தான் அதைப் பற்றி அவர்களின் குடும்பம் கவலைப்படட்டும் என்ற ரீதியில் சொன்னேன். ஒரு சாதாரண அடித்தட்டு மனிதனுக்கு நாம் அறிவுரை சொன்னால் ஏறும். கோடிகளில் புரள்பவர்களுக்கு நமது அறிவுரைகள் ஏதும் பலன் தரும் என்கிறீர்களா? அல்லது இந்த குடியின் தீமையை உணராதவரா ரஜினி?

Unknown said...

///ஒரு சாதாரண அடித்தட்டு மனிதனுக்கு நாம் அறிவுரை சொன்னால் ஏறும். கோடிகளில் புரள்பவர்களுக்கு நமது அறிவுரைகள் ஏதும் பலன் தரும் என்கிறீர்களா? அல்லது இந்த குடியின் தீமையை உணராதவரா ரஜினி?///



நபிமார்களிலிருந்து இன்றுவரை வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கிற ஷாலிஹீன்கள் , வாழ்வின் அடித்தளத்தில் உள்ளவர்களிடம் மட்டுமல்லாது, அதிகார வர்க்கத்தினரிடமும் பணத்தில் புரளுபவர்களிடமும் தங்களது அறிவுரைகளை எடுத்துச் சொல்பவர்களாக இருந்துள்ளனர் என்பது தாங்கள் அறிந்ததொன்று.

நீங்கள் குறிப்பிட்டவருக்கு தங்களது அறிவுரைகள் எடுபடாமல் போகலாம் என்று எதை வைத்து சொல்கிறீர்கள்?

இறைவன் ஒருவருக்கு ஹிதாயத்தை எந்த நேரத்திலும் அருளலாம். தங்களது பதிவுகளைப் பார்ப்பவர்கள்கூட, சில சமயங்களில் தங்களது தவறான செயல்களை மாற்றிக்கொள்ளலாம்.

அடுத்தது, உங்கள் எழுத்தை அனேகம்பேர் விரும்பிப் படிக்கின்றனர். அது தொடர வேண்டுமென்பதே என் அவா.

suvanappiriyan said...

//நீங்கள் குறிப்பிட்டவருக்கு தங்களது அறிவுரைகள் எடுபடாமல் போகலாம் என்று எதை வைத்து சொல்கிறீர்கள்?

இறைவன் ஒருவருக்கு ஹிதாயத்தை எந்த நேரத்திலும் அருளலாம். தங்களது பதிவுகளைப் பார்ப்பவர்கள்கூட, சில சமயங்களில் தங்களது தவறான செயல்களை மாற்றிக்கொள்ளலாம்.

அடுத்தது, உங்கள் எழுத்தை அனேகம்பேர் விரும்பிப் படிக்கின்றனர். அது தொடர வேண்டுமென்பதே என் அவா.//

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி சகோ. இதனை ஒரு இஸ்லாமிய பதிவாக நான் இடவில்லை. பொது பதிவாகவே நான் இட்டேன். நான் சொன்ன கருத்தில் இவ்வாறு தவறாகவும் அர்த்தம் தொனிக்கும் என்பதை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி!

Anonymous said...

பூவண்ணன் says:
September 1, 2012 at 10:14 am

நீங்க சிந்துசமவெளி/சரஸ்வதி எல்லாம் ஆரியரது தான் ,மத்தவங்க எல்லாம் நாகரீகம் இல்லாதவங்கன்னு சொல்றீங்களா
.இல்லை ஆரியர் திராவிடர் என்று பிரிவே இல்லை என்று கூறுகிறீர்களா

அந்தமான்ல இப்ப இருக்கறவங்க /நாகலண்டுல இருக்கறவங்க/காஷ்மீர்ல இருக்கற குஜ்ஜர்/தமிழ்நாட்டுல இருக்கற தோடர்/கள்ளர்/மள்ளர் /பிராமணர் எல்லாம் ஒண்ணா தெரிகின்றார்களா .இல்லை வேற வேற குழுக்கள் இருந்தது
ஆனா சிந்துசமவெளி/சரஸ்வதி எல்லாம் ஆரியரது தான் என்று கூறுகிறீர்களா
இப்பவும் காஷ்மீர்ல இருந்து கன்யாகுமரி வரை இருக்கின்ற பிராமணர்கள் ஒரே மாதிரி கோத்ரம் வெச்சு முனிவர்களை தங்கள் மூதாதையர் ஆக வழிபடுகிறார்களே ஆனால் மற்றவர்கள் எல்லாரும் ஏன் சிவ கோத்ரா /விஷ்ணு கோத்ரா என்று காந்தி ஹரிஜன் பேர் வெச்ச மாதிரி ஒரே கோத்ரத்தின் கீழ் வருகின்றனர்.
அந்தமானில் இருப்பவர்களுக்கும் பாரத்வாஜ காஷ்யப கோத்ரம் இருக்குமோ
ஜ்ஹர்க்ஹாந்து மாநிலத்தில் கோத்ரம் என்று வருவது என்ன என்று பாருங்கள்
http://www.tribalstuff.in/2011/04/oraons-the-gotra-system-part-i/

இப்போது யார் யாரெல்லாம் சிந்து/சரஸ்வதிக்கு உரிமை கொண்டாடலாம்.இந்தியரா/பாகிஸ்தானியாரா/பர்மா நாட்டுகாரரா
வேறு வேறு முறையில் திருமணம்/இறந்தவர்களை அடக்கம் செய்தல்/இறைவனை வணங்குதல்/அவனுக்கு படைக்கும் உணவுகள்/பேசும் மொழி கொண்ட பல குழுக்களில் யார் இதற்க்கு சொந்தம் கொண்டாடலாம்

இரு பிரிவினரின் இடையே இருக்கும் பிரிவுகள் எப்படி உருவாகி இருக்கும் என்பதை ஊகிக்கும் retrospective ஆராய்சிகள் தான் ஆரியர் படையெடுப்பு /திராவிட மொழிகள் ,வடமொழி கலப்பு/அசுவமேத யாகம்/குதிரை அறியாத குழுக்கள் போன்ற முயற்சிகள்
வெள்ளைக்காரன் ஒரு நோக்கத்திற்காக ஒன்றை பிடித்து கொண்டான் என்றால் இப்போது அவர்கள் இடத்தை பிடித்து கொண்ட குழு அவர்களின் நோக்கத்திற்காக மற்றொன்றை திணிக்கிறது.நாளை மாயாவதி அனைத்திலும் தம்மத்தை ஆதராபூர்வமாக நிரூபிப்பார்.
வரலாற்றில் எழுதப்பட்ட விஷயங்கள் கிடைக்கும் காலத்தில் வாழ்ந்த ராஜராஜ சோழன் எந்த சாதி என்று சொல்லுங்களேன்.தமிழ்நாட்டில் மட்டும் நூறு சாதிகள் நாங்கள் தான் ராஜராஜனின் வழிதோன்றல்கள் என்று கத்தி கொண்டு திரிகின்றன .அது முடியுமா
மலையாளமும் தமிழும் எப்படி பிரிந்தது என்று சொல்ல முடியுமா.அதை சொல்லும் ஒரு தியரி சூழ்ச்சி /அதை முறியடித்து ஆதாரபூர்வ தியரி உள்ளது என்று கூப்பாடு போடுவதால் அது உண்மையாகி விடுமா
ஆப்கானிஸ்தான் ,ரஷ்ய எல்லைகளில் வாழும் மக்கள் வேறு ,இங்கு காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை(வட கிழக்கில் எது வரை எடுத்து கொள்ளலாம் என்று ஆதாரத்துடன் பேசுபவர்கள்/ புத்தகம் எழுதுபவர்கள் கூறுகிறார்கள்)இப்போது வசிக்கும் மக்கள் ஒன்று தான் என்கிறீர்களா

Anonymous said...

பூவண்ணன் says:
September 1, 2012 at 10:17 am

இப்போதும் அந்தமானில் பழங்குடியினர் வசிக்கின்றனர். சில மைல்கள் தொலைவில் உள்ள தீவுகளில் பல்வேறு பிரிவினர்,வேறு வேறு மொழிகள்,பழக்க வழக்கங்கள்.இப்போது அவர்களை விட அங்கு சென்ற வங்காளிகளும் தமிழர்களும் தான் அதிகம்.இவர்கள் அனைவரும் ஒன்று தான் அதாம் ஏவாள் இல் இருந்து வந்தவர்கள் என்கிறீர்களா .அனைவருக்கும் ஒரே கலாசாரம் தான் இருந்தது வெள்ளையரும்/இஸ்லாமியரும் வருவதற்கு முன் என்கிறீர்களா
அசைக்கமுடியாத ஆதாரம் /சூழ்ச்சிகளை முறியடித்த உடலையும் தலையையும் சேர்த்த தரவுகள் எதை காட்டுகின்றன.இருக்கும் வித்தியாசங்களுக்கு காரணம் என்ன /எப்படி உருவானது என்ற ஆராய்ச்சியில் எல்லாம் ஒன்று தான் எனபது தான் ஆராய்ச்சியின் முடிவா.

இப்போதும் ரஷ்யாவில் அகழ்வாராச்சியில் கிடைத்த 4000 ஆண்டு முற்பட்ட ஆர்யர்களின் கிராமம் என்று வருகிறதே.அது எல்லாம் சூழ்ச்சியின் தொடர்ச்சியா .ரஷ்யர்களுக்கு இந்த சூழ்ச்சியால் என்ன பயன் http://articles.timesofindia.indiatimes.com/2010-10-04/europe/28241450_1_aryan-settlements-aerial-photography

அலெக்சாண்டர் போருஸ் மீது போர் தொடுத்தார்.அவருடைய படை வீரர்கள் பலர் இந்தியாவிலேயே தங்கி விட்டனர்
சந்திரகுப்தா மௌரியர் செளுகிஸ் என்று அலேசேண்டேருக்கு பின் வந்த அரசனை வென்று அவர் மகளை மனம் முடித்தார் என்று எல்லாம் படித்தோமே
இப்போது மரபணுக்களில் வித்தியாசம் இல்லை என்பதால் அது எல்லாம் பொய்யா.இப்போது இருப்பவர்கள் எல்லாரும் கலப்பு என்று கூறுவதால் அப்படி ஒன்று நடக்கவே இல்லை எனபது அர்த்தமா

பிரியங்கா காந்தியின் குழந்தைக்கும் தமிழ்நாட்டில் பிறந்த குழந்தைக்கும் மரபணுவில் வித்தியாசம் ஒன்றும் இருக்காது.அதை வைத்து சோனியா வெளிநாட்டவர் என்ற வாதம் பொய் என்று வாதிடலாமா
மரபணு ஆராய்சிகள் இன்று யாரும் நாங்கள் தான் ஆரியர் நாங்கள் தான் திராவிடர் என்று சொல்ல முடியாது. எல்லாம் கலந்து விட்டன என்று தான் கூறுகின்றன
ஆர்யர் ,திராவிடர்,மொகலாயர் என்ற பிரிவே இல்லை,யாரும் படை எடுத்தோ ,இல்லை மாடு மேய்த்து கொண்டோ வரவில்லை என்று கூறவில்லை,கூறவும் முடியாது.

அது எப்படிங்க காஷ்மீர பிராமணரோ ,ஒரிய பிராமணரோ ,இல்லை சரஸ்வத் பிராமணரோ .இல்லை ஐயன்காரோ இல்லை மைதிலி,பட் என்று இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் காஷ்யப பாரத்வாஜ அகஸ்தி என்று ஒரே மாதிரி ரிஷி பேர் கோத்திரம் வருகிறது.
நானும் பொழுது போவாம bharat matrimony இல இருக்கிற தமிழ் BC /SC /ST சாதிகள்,வட மாநில சாதிகள் /அண்டை மாநில சாதிகள் கோத்திரம் என்னன்னு பார்த்தா சிவா கோத்திரம்/விஷ்ணு கோத்திரம் தான் இல்ல கோத்திரம் காலியாக உள்ளது . ஒன்னு ரெண்டு பேர் ஊர் பேரு ,மிருகம் பேரு ன்னு ஏதாவது வருது.
கோத்திரம் எல்லாம் வேதத்திலேயே கூட இருக்குதாமே.அது எப்படிங்க சூத்திரன்/பஞ்சமன் எல்லாருக்கும் ஒரே கோத்திரம் இல்லே பழங்குடி நாய்,பூனை,பன்றி,மீன் ஆனா எந்த மூலையில,எந்த மொழி பேசினாலும் பிராமணர்களுக்கு மட்டும் ரிஷிமூலம் ஒண்ணா இருக்குது.
ஒரு வேலை இதுவும் maxmuller சூழ்ச்சியோ

Anonymous said...

பூவண்ணன் says:
September 1, 2012 at 10:20 am

மரபணு ஆராய்ச்சியை வைத்து முஹலாயர் படையெடுப்பு,டச்சு,கிழக்கிந்திய,பிரெஞ்சு படையெடுப்புகளை நடந்ததா /இல்லையா என்று கண்டுபிடிக்க முடியுமா.சில நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த இவற்றையே கண்டுபிடிக்க முடியாத போது ஆர்யர் பற்றி அசைக்க முடியாத ஆதாரம் கிடைத்தது போல் பேசுவதை கண்டு தான் மரபணு பற்றி தெரிந்தவர் சிரிப்பார்.ஆங்கிலோ இந்தியர் என்ற இனமே உருவாகி இன்றும் இருக்கிறது.அவர்கள் மரபணுவும் மற்றவர் மரபணுவுக்கும் வித்தியாசம் இல்லை என்பதை தானே குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு மக்களிடையே வித்தியாசம் காட்டும் மரபணுக்கள் கிடைக்கவில்லை என்ற ஆராய்ச்சியின் முடிவுகள் தெரிவிக்கின்றன
இப்போது யாரையும் இவர் ஆர்யர் ,திராவிடர்,மொங்கோலியர் என்று வகைபடுத்த முடியாத அளவில் அவை கலந்து விட்டன என்று சில ஆராய்சிகள் தெரிவிக்கின்றன
இப்போதும் ஒரு ஆராச்சி மத்திய ஆசியாவில் வசிப்பவர்,ரஷ்யாவில் வசிப்பவர் காஷ்மீர் பண்டிட்,வட இந்திய சதுர்வேதி ,கன்யாகுமரி சானார்,பள்ளர்,தோடர் போன்றோரை வைத்து ஆராய்ச்சி செய்தால் மத்திய ஆசியாவில் இருப்பவரோடு தொடர்பு இருக்கும் சாத்தியங்கள் காஷ்மீர் பண்டிதருக்கு/சதுர்வேதிக்கு அதிகமா இல்லை தென்னிந்திய சாதிகளுக்கு அதிகமா எனபது தெரிந்து விட போகிறது.

Anonymous said...

Kavya says:
August 31, 2012 at 6:48 am

ராமர் தெய்வமாக வணங்கப்படுகிறார் இல்லையென்று ஆரும் சொல்லவில்லை. சுவனப்பிரியன் சொன்னது கோயில்களைப்பற்றி.

இராமருக்குக்கோயில்கள் என்பது எங்கெங்கெல்லாம் நாயுடுக்கள், நாயக்கர்கள், அய்யங்கார்கள் இருக்கிறார்களோ அங்கும் உருவாக்கப்படும் அவர்களால். சுவனப்பிரியன் அவர்களைச்சுட்டிக்காட்டிப்பேசவில்லை. தமிழக கிராமத்து மக்கள் இராமரை வழிபடவில்லை. எனவே இராமருக்கு அவர்களால் கோயில்கள் கட்டப்படவில்லை என்பதுதான். தெலுங்கர்கள் எங்கிருக்கிறார்களோ அங்கும் இராமர் கோயில்கள் உண்டு.

தமிழகத்தில் வடமாநிலங்களில் இராமர் கோயில்கள் கிராமங்களிலும் உண்டு. ஆயினும் மேற்சொன்னவர்களால் மட்டுமே எழுப்பபட்டவை. ஆங்கும் கிராமத்துத்தேவைதைகளை வழிபடுவோர் கணிசம். அவர்களால் இராமருக்குக்கோயிலகள் இரா.

சுருங்கச்சொன்னில், இராமர் வழிபாடு தமிழகத்தில் பரவலாக இல்லை. குறிப்பாக தென் மாவட்டங்களில். திருனெல்வேலியில் எங்கேயிருக்கிறது என்று தேடிப்பாருங்கள். இந்து முன்னனியினர்தான் கன்யாகுமரியில் கட்டி வைத்திருக்கிறார்கள். அவர்கள் நோக்கம் இராமரை தமிழர்களிடையே பரப்புவதாகும். ஆந்திராவில் எங்கு பார்த்தாலும் இராம‌ர் கோயில்க‌ள் உண்டு.

ஆனால் இராமரைப்பற்றித்தெரியா தமிழர் கிடையாது. இராமாயணம் கேட்கப்படுகிறது. சிலரால் படிக்கவும் படுகிறது. ஆனால் இராமர் கோயில்கள் உளவா என்பதுதான் கேள்வி.பதில், உண்டு. எங்கெங்கெல்லாம் தெலுங்கு பேசும் மக்கள் மற்றும் வைணவர்கள், தமிழ்பார்ப்பனர்கள் (அய்ய்ரகள் – இவர்கள் வழக்கம் சிவனுக்கோ, முருகனுக்கோ கோயில்கட்டினால், அங்கு ஒரு இராமர் சன்னதியோ திருப்பதி சன்னதியோ கட்டி வழிபடுவது. எல்லாச்சாமிகளும் வேண்டுமென்பதே இவர்கள் கொள்கை) கணிசமாக வாழ்கின்றாரோ ஆங்கு. கிராமத்து மக்களிடையே இல்லை.

suvanappiriyan said...

முதலில் நான் ஒன்றைத் தெளிவு படுத்தி விடுகின்றேன். எனக்கு மொழி வெறியோ, சாதி வெறியோ, இன வெறியோ, மத வெறியோ என்றுமே இருந்ததில்லை. இஸ்லாமோ முகமது நபியோ எனக்கு அதனை போதிக்கவும் இல்லை. உலக மூல மொழிகள் அனைத்தும் இறைவனே உண்டாக்கியதாக குர்ஆன் சொல்கிறது. அதே போல் உலகில் உள்ள ஆண் பெண் அனைவரும் ஆதாம் ஏவாளிலிருந்து பல்கிப் பெருகியதாக குர்ஆன் கூறுகிறது. இன்றைய அறிவியலும் உலக மக்கள் அனைவருக்கும் ஒரே மூலமே என்று கண்டு பிடித்துள்ளது. இதன் மூலம் சாதி பாகுபாடு, இன, மொழி பாகுபாடு காட்டுவது ஒரு இஸ்லாமியனின் செயல் அல்ல.

இன்று இஸ்லாமிர்களிடமும் அன்சாரிகள், குரைஷிகள் என்ற குலப்பெயர், கோத்திரப் பெயர்கள் உள்ளதை மறுக்கவில்லை. இவை அனைத்தும் மனிதர்களை இன்னார் என்று அடையாளப் படுத்திக் கொள்வதற்காக நாமாக வைத்துக் கொண்ட பெயர்கள். இந்த இனம் உயர்ந்தது இந்த இனம் தாழ்ந்தது என்று குர்ஆனில் எங்குமே உங்களால் காண முடியாது. அதே போல் தங்கமணி கொடுத்த சாதிப் பட்டியலையும் குர்ஆனில் காண முடியாது.காயல்பட்டினம் போன்ற கடற்கரை தமிழக கிராமங்களில் உள்ள இஸ்லாமியர்களில் பலரின் மூதாதையர் அரபு வணிகர்களாக இங்கு வந்து தமிழக பெண்களை மணமுடித்து இந்த நாட்டோடு இரண்டற கலந்து விட்டனர். இன்று இவர்களிடம் சென்று மரபணு ஆராய்சி செய்தால் அரபுகளின் மரபணுக்களை காணுவது சிரமம். அதனால் அரபு வணிகர்களின் வியாபாரமோ திருமண கலப்போ நடைபெறவில்லை எனறு கூற முடியுமா?

அதுபோல் இந்துக்களிலும் பல சாதிகள் கோத்திரங்கள் சமூக அமைப்பில் இருப்பதில் தவறில்லை. பிரச்னை எங்கு வருகிறது? நான் நெற்றியில் பிறந்தேன். நீ காலில் பிறந்தாய். நான் சாப்பிட்ட எச்சில் இலையில் புரண்டு எழுந்தால் உனக்கு மோட்சம் கிட்டும். எனது அக்ரஹாரத்தில் நுழைந்தால் காலில் உள்ள செருப்பை கழட்டி விட வேண்டும். கோவிலில் சாமியை வழிபட உனக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் நிற்க வேண்டும். அதை மீறி வரக் கூடாது. வேதத்தை நீ ஓதினால் உன் நாக்கை அறுப்பேன்' என்று நம் சகோதரர்களை இழிவு படுத்துவதுதான் பிரச்னை..

அது அந்த காலம். தற்போது நாங்களெல்லாம் திருந்தி விட்டோம் என்று தங்கமணியும், வேதம் கோபாலும், மலர் மன்னனும், ஸ்மிதாவும் அநியாயத்துக்கு சாதிப்பார்கள். ஆனால் நான் மேலே கொடுத்த சுட்டியில் ஒரு பிராமணர் 'நாம் நடப்பதற்கு காலைத்தான் பயன் படுத்த வேண்டும். அதற்கு தலையை பயன் படுத்த முடியுமா? எனவே சூத்திரர்கள் எங்கு இருக்க வேண்டுமோ அங்கு இருப்பதுதான் நல்லது' என்று தனது காலை சுட்டிக் காட்டி தைரியமாக பேட்டியும் கொடுக்கிறார். இந்த 20 ஆம் நூற்றாண்டிலும் பெரியார் அம்பேத்கார் போன்றவர்களின் அயராத உழைப்புக்குப் பின்னும் இப்படி ஒருவர் பேட்டி கொடுக்கிறார். அதற்கு ஆதாரமாக வேதத்தையும் காட்டுகிறார்.
அப்படி என்ன நீங்கள் மற்றவர்களை விட உயர்ந்து விட்டீர்கள்? ஒரு அக்ரஹாரத்தில் ஒரு தலித் மாணவனை 20 வருடம் வளர விட்டால் இன்றுள்ள பிராமணர்களை விட சிறப்பாக படித்து முன்னுக்கு வருவான். அதே ஒரு தலித் சேரியில் ஒரு பிராமண மாணவனை 20 வருடம் விட்டுப் பாருங்கள். அவனது நிறம், குணம், அறிவு அனைத்திலும் அநேக மாற்றங்களை காண முடியும். அக்ரஹாரத்தில் வளர்ந்த ஒரு முஸ்லிமான அப்துல் கலாம் உலகம் போற்றும் அணு விஞ்ஞானியாக மாற வில்லையா? ஒரு மனிதனின் அறிவு ஜீன்களால் குறைந்த சதவிதமே கடத்தப்படுகிறது. அதிகமான மாற்றங்கள் அவனது சுற்று சூழல்களாலேயே ஏற்படுகிறது என்பதை எவரும் மறுக்க முடியாது.

'நீ ஒரு முஸ்லிம். உனக்கு எதற்கு இந்த ஆராய்ச்சி?' என்று தங்கமணியும், ஸ்மிதாவும் கேட்கலாம். ஒரு காலத்தில் எனது முன்னோர்களும் ராமசாமியாகவோ கந்த சாமியாகவோதான் இருந்துள்ளார்கள். எனது முன்னோர்களின் மார்க்கம் இந்த அளவு சீர் கெட்டிருக்கிறதே என்ற ஆற்றாமையினால்தான் கேட்கிறேன்.

அதிலும் ஸ்மிதா தானாக முன் வந்து 'சுவனப்பிரியனையும், காவியாவையும் இந்த பதிவில் ஏன் காணவில்லை?' என்று கேட்டதாலேயே சில விபரங்களை சொல்ல வேண்டியதாகி விட்டது. :-)

அடுத்து ஆரிய படைபெடுப்பு பற்றி சகோதரர் பூவண்ணன் அவர்கள் எழுப்பியிருக்கும் பல கேள்விகளுக்கு ஆதாரங்களோடு தங்கமணி பதிலை தருவார் என்று ஆவலோடு காத்திருக்கிறேன்..

Anonymous said...

மதுரை - பழங்காநத்தம் வழியாக ஆரப்பாளையம் செல்லும் பைபாஸ் மேம்பாலத்திலிருந்து இடது புறமாக சிறிது,பெரிதுமான வீதிகளை கடந்து 2 அல்லது 3 கிலோமீட்டர் தொலைவில் வருகிறது மாடக்குளம் கண்மாய்.கண்மாய் கரையோரத்தில் ஸ்ரீஈடாடிஅய்யனார் கோவில், கோவிலையொட்டிய பாதையில் கண்மாயின் உட்புறமாக சென்றால் சமீபத்தில் பெய்த மலையால் பசுமையான கண்மாயில் 3அடி உயரத்தில் கல் ஒன்று தெரிகிறது. கண்மாயில் நீர்நிறைந்திருக்கும் போது முழ்கிவிடுவதால் அந்த கல்லில் உள்ள எழுத்துக்கள் சற்று தெளிவாக இல்லை. அந்த கல்லை சுத்தபடுத்திய பிறகு,கல்வெட்டு அறிஞர் சாந்தலிங்கம் அந்த கல்லின் வரலாற்றை பேச துவங்கிய போது பிரமிப்பாகதான் இருந்தது. அந்த கல் 12அல்லது 13 ம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என கூறினார். ''மாடக்குளத்தின் கீழ் மதுரை'' என பழந்தழிழ் இலக்கியங்கள் சொல்லும் அளவுக்கு மாடக்குளம் என்ற கிராமம் பெயர்பெற்றிருந்தது .அந்த கல்லின் வரலாறு மிக முக்கியமானது என்கிறார் கல்வெட்டு அறிஞர் சாந்தலிங்கம். 12ம் நூற்றாண்டில் அரசர்கள்,பார்பனர்களுக்கு எதிராக விவயாயிகளும், வணிகர்களும் ஒன்று திரண்டு சங்கம் வைத்திருந்தாகவும், அப்போது விவசாயிகளுக்கு உதவியாக மாடக்குளம் கண்மாயை தூர்வாரி,புணரமைத்து கொடுத்தற்காக நிறுவப்பட்ட கல்தான் தேவடியாகல். சாந்தலிங்கம் நடுகல் என்று மட்டுமே சொன்னார், நண்பர் ஒருவர் அந்த கல்லுக்கு தேவிடியாகல் என்று பெயர் இருப்தை சொன்ன போது நம்ப முடியவில்லை.ஆனால் அப்பகுதி விவசாயி ஒருவரை விசாரித்த போது உண்மைதான் என்பதை உணரமுடிந்தது.அதற்கான காரணம் அவருக்கு தெரியவில்லை, தன்து பாட்டன் காலத¢திலிருந்து அப்பெயர் இருப்பதாக சொல்கிறார். அந்த கல்லுக்கு சற்று தொலைவில் 18ம் நூற்றாண்டை சேர்ந்த சற்று உயரமான இரட்டைக் கல் காணப்படுகிறது. அதற்கு குத்துக்கல் என்று அழைக்கிறார்கள். கண்மாயின் நீர்மட்டம் அறிவதற்காக நடுப்பட்டகல் அது.

http://indrayavanam.blogspot.in/2012/09/blog-post.html

Anonymous said...

Kavya says:
August 31, 2012 at 7:03 am

காளியும் சுடலைமாடசாமியும் மாரியம்மாவும் எல்லாமே தெய்வங்கள்தான். பிராம்மணர் உள்பட பல குலத்தினருக்கும் இவர்கள் குலதெய்வம்//

கொள்ளைய‌டிப்ப‌தும் ஒரு க‌லை என்று ஒரு திரைப்ப‌ட‌த்தில் வ‌ச‌ன‌ம் வ‌ரும். திண்ணையில் பொய் சொல்வ‌தும் ஒரு க‌லையாகி விட்ட‌து.

பிராம‌ண‌ர் என்ப‌து ஒரு ஜாதியின் பெய‌ர‌ன்று. என‌வே த‌ங்க‌ம‌ணி சொல்வ‌து முத‌ற்பொய். த‌மிழ்ப்பார்ப்ப்ன‌ர்க‌ள் என்ப‌தே ச‌ரியான‌ ப‌த‌ம்.

இவ‌ர்க‌ளுக்குக் குல‌தெய்வ‌ங்க‌ள் உள‌. அவ‌ர்க‌ளுள் அய்ய‌ங்கார்க‌ளுக்கும் உண்டு. ஆனால் அவர்களுக்குக் குல‌தெய்வ‌ம் வைண‌வ‌த்தெய்வ‌மாக‌த்தான் இருக்க‌வேண்டும். ஆனால் மாரிய‌ம்ம‌னைக்குல‌தெய்மாக‌க் கொண்டு ப‌ல‌ர் வாழ்கிறார்கள். பிற‌ த‌மிழ‌ரின் ப‌ழ‌க்க‌த்தின் தாக்க‌ம். போக‌ட்டும். இந்த‌ பார்ப்ப்ன‌ர்க‌ளுக்கு மாரிய‌ம்ம‌னோ அல்ல‌து ப‌ல‌ பெய‌ர்க‌ளின் ப‌ல‌விட‌ங்க‌ளில் வ‌ண‌ங்க‌ப்ப‌டும் அம்ம‌ன்க‌ள், பிள்ளையார் (சுப்பிர‌ம‌ணிய‌ம் சுவாமியின் குல‌தெய்வ‌ம் பிள்ளையார்ப்ப‌ட்டி பிள்ளையார்), முருக‌ன், அல்ல‌து வைண‌வ‌த்தெய்வ‌ங்க‌ள் (ஜெயேந்திர‌ர் (பிற‌ப்பால் அய்ய‌ர்) த‌ன் குல‌தெய்வ‌ம் திருப்ப‌தி பாலாஜி என்றார் ஒரு பிர‌ச்சினை பேச‌ப்ப‌ட்ட‌ போது) இப்ப‌டித்தான் அவ‌ர்க‌ள் குல‌தெய்வ‌ங்க‌ள்.

எவ‌ருக்கும் மாட‌சாமி, கொம்ப‌ன், மூக்க‌ன், கருப்பசாமி, மதுரை வீரன், சுட‌லைசாமி, இச‌க்கி, பேய்ச்சி குல‌தெய்வ‌ம் கிடையாது. எவ‌ருக்குமே மாட‌ சாமி என்று பெய‌ர் கிடையாது. இவை த‌மிழ‌ர்க‌ளின் கிராம‌த்துத் தேவ‌தைக‌ள். இன்று ந‌க‌ர‌ங்க‌ளிலும் உண்டு. இத்தெய்வ‌ங்க‌ளை ந‌கையாடியும் இழித்துப்பேசியும் கால‌ங்கால‌மாக‌ வாழ்ந்து வைதீக‌த்தெய்வ‌ங்க‌ளையும் மிக‌வும் பாப்புல‌ரான‌ பிற‌தெய‌ங்க‌ளையும். அல்ல‌து அப்ப‌டிப்பாப்புல‌ரான‌ தெய்வ‌ங்க‌ளை, வைதீக‌த்தெய்வ‌ங்க‌ளாக‌ மாற்றியும் வ‌ழிப‌ட்டுவ‌ந்த‌வ‌ர்க‌ள் த‌மிழ்ப்பார்ப்ப‌ன‌ர்க‌ள்.

எவ‌ராவ‌து மாட‌சாமி ஐயர், க‌ருப்ப‌சாமி அய்ய‌ங்கார் கேள்விப்ப‌ட்டிருக்கிறீர்க‌ளா?

(க‌ரு மாணிக்க‌ம் அய்ய‌ங்கார் உண்டு. ஏனெனில், அது திருமாலுக்கு ந‌ம்மாழ்வார் இட்ட‌ திருநாம‌மென்ப‌தால். ‘கருமாணிக்கமே என்று பரவசமாகப்பாடுவார் அவர்)

அதே வேளையில், க‌ருப்ப‌சாமிக்கோணார், க‌ருப்ப‌சாமித்தேவ‌ர், க‌ருப்ப‌சாமிச் செட்டியார், என்று எங்கும் காண‌லாம்.

Anonymous said...

//முதலில் நான் ஒன்றைத் தெளிவு படுத்தி விடுகின்றேன். எனக்கு மொழி வெறியோ, சாதி வெறியோ, இன வெறியோ, மத வெறியோ என்றுமே இருந்ததில்லை//

என்ன சொல்கிறீர்கள் சுவனப்பிரியன். சாதி வெறி, இன வெறியை விடுங்கள். உங்களுக்கு மத வெறி இல்லையா? இந்தியாவில் ஷரியா வருவதை நீங்கள் விரும்பவில்லையா? உங்களுக்கு இந்தியா அல்லாவின் தேசமாக மாறுவதில் விருப்பம் இல்லையா. இந்தியாவில் ஷாரியாவும் அல்லாவின் ஆட்சியும் வருவதற்கு உங்களுக்கு விருப்பம் இல்லை. என்று கூற முடியுமா திரு சுவனம். அப்படி நீங்கள் விரும்பினால் அதற்கு பெயர் தான் மத வெறி. வேறு எதை மத வெறி என்று சொல்ல வருகிறீர்கள்.

//நீ ஒரு முஸ்லிம். உனக்கு எதற்கு இந்த ஆராய்ச்சி?' என்று தங்கமணியும், ஸ்மிதாவும் கேட்கலாம். ஒரு காலத்தில் எனது முன்னோர்களும் ராமசாமியாகவோ கந்த சாமியாகவோதான் இருந்துள்ளார்கள். எனது முன்னோர்களின் மார்க்கம் இந்த அளவு சீர் கெட்டிருக்கிறதே என்ற ஆற்றாமையினால்தான் கேட்கிறேன்.//

உங்க முன்னோர்கள் இந்துக்கள் என்று ஒத்து கொண்டதற்கு நன்றி சுவனம். ஆனால் உங்களுக்கு நிஜமாகவே இந்து மதம் இந்துக்கள் பற்றிய ஆராய்ச்சி அவசியம் இல்லாதது. ஏன் தெரியுமா என் தகப்பன் தவறு செய்கிறார் அல்லது வழி தவறி நடக்கிறார் என்றால். நான் அவரை திருத்த பார்ப்பேன். காரணம் அவர் என் தந்தை. அதை விட்டு என் பக்கத்துக்கு வீட்டுக்காரர் மிகவும் நல்லவர். அதனால் நான் இனி அவரை அப்பா என்று அழைக்க போகிறேன் என்று சொல்ல மாட்டேன். இந்து மதத்தில் தவறான வழி காட்டல் இருக்கிறது என்றால் அதை திருத்தும் வேலையை நாங்கள் பார்த்து கொள்கிறோம். மாறுதல் ஒன்றே மாறாதது அல்லவா. உங்களை போன்றவர்கள் அதை பார்க்க தேவை இல்லை.

Anonymous said...

பெங்களூரு:நாட்டில் உள்ள அணுமின் நிலையங்களையும், ராணுவ தளவாடங்களையும் தகர்க்க திட்டமிட்டிருந்ததாக, கைதான, 16 பயங்கரவாதிகள் குறித்த, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், மேலும் ஒரு பயங்கரவாதி, நேற்று பெங்களூருவில் கைது செய்யப்பட்டான். –Dinamalar 02-09-2012

---------------------------------------------------------------------

abul hassan - Nagercoil,இந்தியா
03-செப்-201212:32:08 IST Report Abuse
சென்னையை தகர்க்க திட்டமிட்ட பயங்கர தீவிரவாதிகள் கைது. திடுக்கிடும் தகவல்கள். பின்னணி என்ன ? என்று தினந்தோறும் பத்திரிகைகளில் வரும் தலைப்பு செய்திகள் திகில் திரைப்படம், நாவல்களையே மிஞ்சும் அளவுக்கு நம் உள்ளத்தை அதிர வைக்கின்றன. எப்படியும் முஸ்லிம்களாகத்தான் இருக்கும் என்று எண்ணிக் கொண்டே செய்தியை வாசித்தால் அந்த எண்ணத்தை பொய்யாக்காமல் அது மெய்படுத்தியது. அந்த பயங்கரவாதிகள் வீரப்பன் போன்று பெரிய மீசையுடன் இருக்கிறர்களா? இல்லை. ஆட்டோ சங்கர் போல் நிறைய தலை முடியுடன் உள்ளார்களா? இல்லை திரைப்பட வில்லன்கள் போல் முகத்தில் கீறல், மச்சத்துடன் இருக்கிறார்களா ? அதுவும் இல்லை. பின் எப்படித்தான் இருக்கிறார்கள். பள்ளி மாணவர்கள் போல் அரும்பு மீசையுடன், பால் வடியும் முகம் என்று சொல்வார்களே அது போன்ற தோற்றத்துடன் இருப்பவர்களை பார்க்கும் போது இவர்களா நாட்டையே உலுக்கிய தீவிரவாதிகள். இளமை பருவ குரும்புகளையே ( திருட்டு தம், சினிமா, டூர் ) வீட்டுக்கு தெரியாமல் செய்ய தெரியாதவர்கள், அப்பா, அம்மா விடம் கையும் களவுமாக பிடிபடக்கூடியவர்கள் இவர்களா பெரிய தலைவர்களை தீர்த்து கட்ட திட்டம் தீட்டியவர்கள், பெரிய நகரங்களை தகர்க்க திட்டம் தீட்டியவர்கள் ஆச்சர்யம் தான். பயங்கரவாதிகள் சிக்கியது எப்படி ? என்ற தலைப்பில் தினமலர், தினத்தந்தி உள்ளிட்ட பத்திரிகைகளில் வந்த செய்தியை படிக்கும் போது நம்மை மேலும் அதிரவைக்கிறது. இந்த இளைஞர்கள் பார்வையிட்ட இணையதளங்கள் பயங்கரவாத அமைப்புகளின் இணையதளங்களாம், இதை ஆறு மாதமாக புலனாய்வுத்துறை கண்கானித்ததாம். அப்படி என்றால் இந்த நாட்டில் முஸ்லிம்கள் மட்டும் இணையதளங்கள் பார்க்கும் போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். எந்த நேரமும் அவர்கள் கண்காணிக்க படுகிறார்கள். ஒரு தனிமனிதனின் பிரைவசி ( அந்தரங்கம் ) பாதிக்க படுவதை பற்றி எந்த அரசியல்வாதிகளுக்கும் கவலை இல்லை. இதை விட ஒரு சிறந்த ஆதாரத்தை காவல் துறை வெளிப்படுத்தி இருந்தால் நாம் நம்பலாம். ஆனால் இது நாட்டில் நடக்கும் சில அரசியல் நிகழ்வுகளை திசை திருப்புவதற்காக அல்லது யாரோ இதன் மூலம் வரும் தேர்தலில் ( தேர்தலை முன் கூட்டியே நடத்தி ) ஆதாயம் பெறுவதற்காக இந்த செய்தியை பிரபலப் படுத்துகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப் படவேண்டியதில் முஸ்லிம்களுக்கு மாற்றுக் கருத்து இருக்காது. ஆனால் உண்மையான குற்றவாளிகள் மதத்தின் பெயரால் தப்புவது அனைத்து சமூகத்தையும் அதிகமாக பாதிக்கும் என்பதை அனைவரும் உணர வேண்டும். அமைதியை போதிக்கும் இஸ்லாத்தில் இந்த பயங்கரவாதிகளுக்கு இடம் இல்லை என்பது முஸ்லிம் ஒவ்வொருவனுக்கும் தெரியும். ஒரு மனிதனை கொலை செய்பவன் ஒட்டு மொத்த சமுதாயத்தையே கொலை செய்தவன் போலாவான் என்பது குரான் வாக்கு. இதற்கு மாற்றாக நடப்பவன் முஸ்லிமே கிடையாது. பெயரிலேயே சாந்தியை பொருளாக கொண்ட மார்க்கம் பயங்கரமாக சித்தரிக்க படுவது வேடிக்கையே. சூடான ஐஸ் கிரீம் உண்டா அது போல்தான் தீவிரவாத இஸ்லாம் என்ற வார்த்தை பொருளற்றது.
-------------------------------------------------------------------

Mohamed Nawaz - Sakaka,சவுதி அரேபியா
03-செப்-201214:15:34 IST Report Abuse
அது எப்படிங்க பிஜேபி ஆளும் மாநிலங்களில் மட்டும் இப்படி நடக்கிறது? என்னவோ போங்க இந்தியாவை சீர்குலைக்க ஆங்கிலேயன் வர வேண்டாம். இந்தியர்களே இந்திய அரசியல்வாதிகளே போதும்.


razzaq - Jubail,சவுதி அரேபியா
03-செப்-201210:54:25 IST Report Abuse
தினமலர் அசிரியர் அவர்களே, சவுதி யில் பயிற்சி பெற்ற திவிரவாதி என்கிறீர்களே உங்களுக்கு தெரியுமா? இங்கு ஒரு கண்டன கூட்டம் கூட நடத்த முடியாது. ஒருவரை பற்றி அடுத்தவர் குறை சொல்ல முடியாது. நம்ம ஊரில் மைக் செட் வைத்து அடுத்தவனை திட்டுவது போலே இங்கு எதையும் செய்ய முடியாது. அப்படி இருக்கும் போது பயிற்சி கொடுக்குறாங்க என்பதை நம்ப முடியாது. இருபது பேரை கூடி கூட்டம் போட்டாலே ஒடனே போலீஸ் வந்து விடும். அதனாலே நீங்க சொல்லுற மாதிரி பயிற்சி எடுக்க முடியாது, நம்புற மாதிரி இல்லே.

Jayadev Das said...

\\ஜெயலலிதாவோடு ஒப்பிடும் போது பொது நலத்தில் கருணாநிதி எந்த வகையிலும் குறைவானவர் இல்லை என்பது எனது கணிப்பு. \\ ஜெ. வை மட்டம் தட்ட வேற வழியே தெரியலையா தலைவா............

Jayadev Das said...

\\ரஜினியை பகைத்ததால் ஒன்றும் ஜெயலலிதா தோற்றுவிடவில்லை..அந்த சமயத்தில் ஜெயலலிதாவின் அடுக்கடுக்கான தவறுகள் மக்களிடையே பெரும் வெறுப்பை ஏற்படுத்தி இருந்தது..அதை தாமாகாவை தொடங்கிய மூப்பனார், சங்கபரிவாரின் கைக்கூலி கோமாளி சோ, இந்த குடிகாரன் ரஜினி ஆகியோர் சந்தில் சிந்து பாடி தங்களால்தான் ஜெயலலிதா தோற்றார் என்ற பிம்பத்தை ஏற்படுத்தி இருந்தனர்..\\ 100% correct..

Jayadev Das said...

\\இந்த முறை ஜெயித்து வந்தது கூட கலைஞரின் குடும்ப அரசியலை எதிர்த்துதானே யொழிய\\ குடும்ப அரசியல் இருந்து ஒழியட்டும், மக்களுக்கு நல்லது செய்தால் பரவாயில்லையே? அது நடக்கவில்லையே?

suvanappiriyan said...

சகோ ஜெய தேவ தாஸ்!

//குடும்ப அரசியல் இருந்து ஒழியட்டும், மக்களுக்கு நல்லது செய்தால் பரவாயில்லையே? அது நடக்கவில்லையே?//

இலவசங்களை தவிர்த்து மற்றபடி ஜெயலலிதாவுக்கு இவர் பரவாயில்லை என்பதுதான் எனது கணிப்பு. அதற்காக நான் திமுக காரன் அல்ல. தொலை நோக்கு பார்வையில் எந்த அரசியல் கட்சியுமே மக்களுக்கு நல்லது செய்வதில்லை. இதில் கலைஞரை மட்டும் ஏன் குறை சொல்வானேன் என்பதுதான் எனது நிலை.

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Jayadev Das said...

சகோ சுவனப் பிரியன், நல்லது பண்ணாட்டியும் பரவாயில்லை, தன்னுடைய ஒரு குடும்பத்துக்காக தமிழகம் மொத்தத்தையும் பலிகடா ஆக்குவது ஏற்கத் தக்கது அல்ல. இவர் அரசியலுக்கு வந்த நாளில் இருந்து இதைத்தான் செய்து வந்திருக்கிறார், ஹிந்தி வேண்டாம் என்றதில் இருந்து இன்றைக்கு சாராயத்தை தெருத் தெருவுக்கு ஊற்றியது வரை. இவர்கள் ஆட்சியில் கொள்ளை போன விலை நிலங்கள் கொஞ்சமா நஞ்சமா? இலவம் எவ்வளவு நாளைக்குக் கொடுக்க முடியும்? அதை சாராயத்தின் மூலம் தானே ஈடு கட்டினார்? இதனால் அருந்த பெண்களின் தாலிக்கு யார் பதில் சொல்வது? அண்டை மாநிலங்கள் நம் உரிமைகளைப் பறித்த எதற்கும் இவர் வாயைத் திறந்ததே இல்லை, கடிதம் மட்டும் போடுவார், பிள்ளைகளுக்கு பதவி வேண்டுமென்றால் நேரில் டெல்லிக்கு வீல் சேரிலேயே போவார். அண்டை மாநிலமான கேரளம் இப்படி இல்லையே? அங்கு யார் ஆட்சிக்கு வந்தாலும் மாநில நலனுக்காக உழைக்கிறார்களே? ஜெயலிதாவை இவருடன் எதற்கு நீங்கள் ஒப்பிட வேண்டும்? அந்தம்மா கொள்ளையடிப்பதை விட இவரு கொஞ்சம் கம்மியாய் அடிக்கிறார் என்பதெல்லாம் ஒரு வாதமா நண்பரே? எல்லா அரசியல் வாதியும் ஊழல் செய்கிறான் என்பதால் இவரும் அப்படித்தான் இருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லையே? ஒன்னேமுக்கால் லட்சம் கோடி இன்றைக்கு பன்னாட்டு நிறுவனங்கள் தின்று விட்டு போய் விட்டனவே? ஒரு கிரிக்கெட் ரசிகன் இந்தியா ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கும் அக்கறை கூட இந்த மனுஷனுக்கு இல்லையே?

நண்பன் said...

மனிதனின் மனசுல உள்ளதை அறிந்து கொள்ளும்
திறமை உங்களிடம் இருந்தால் இந்த பேச்சுக்கள் அத்தனையும் பொய்யே .
ஒரு நாடு செழித்து அந்நாட்டு மக்கள் சந்தோசத்துடன் அமைதியுடன் வாழ .தலைவரும் மக்களில் ஒருவரே என்ற உண்மை மக்களுக்கு என்று புரிகிறதோ அப்போது தான் மக்கள் அவரவர் இருக்கும் இடத்தில் நலமாக வாழ முடியும் .தலைவர்கள் என்ன சொந்த பனத்யா மக்களுக்கு கொடுக்கிறார்கள் ?அரசு பணம் ?மக்கள் ஆச்சி ?அது மக்கள் பணம் .ஒருத்தன் இட்டலியும் தோசையும் சாப்பிட நாள் முழுதும் உழைக்கிறான்
ஒருத்தன் அவன் சரியாய் வேலை பார்க்கிறானா என்பதுக்கு மட்டும் சம்பளம் வாங்குறான் இதுக்கு மேல மேல என்ன என்ன உண்மையான உழைப்பாளி எல்லோருக்கும் உணவு போடுறான்