Followers

Sunday, August 25, 2013

செங்கிஸ்கான் - பாகம் 1

குறிப்பு :



மிகக் கொடுங்கோலர்களாக அறியப்படுகிற செங்கிஸ்கானும், மங்கோலியப்படைகளும் உலகில் மாபெரும் மாற்றங்கள் வரக் காரண கர்த்தாக்களாக இருந்திருக்கிறார்கள். மங்கோலியர்கள் உண்டாக்கிக் கொடுத்த சூழ் நிலைகளே ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கு பெரும் உந்துதலாக இருந்தது என்பதை பெரும்பாலோர் அறிந்திருப்பதில்லை. இது மங்கோலியர்களின் பல்வேறு ஆளுமைகளைக் குறித்து ஒரு சிறிய அறிமுகம் செய்யும் எண்ணத்துடன் எழுதப்பட்டது. கூடவே சில பல மங்கோலியர்கள் குறித்தான தகவல்களும்.



*



1930-ஆம் வருடம் ஸ்டாலினின் ரஷ்யப்படைகள் மங்கோலியாவைக் கைப்பற்றின. தங்களை வெற்றி கொண்டு ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக ரஷ்யர்களை அடக்கி ஆண்ட மங்கோலியர்களின் மீது ஆழ்ந்த கோபம் கொண்டிருந்த ஜோசப் ஸ்டாலின் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டர். ஏறக்குறைய முப்பதாயிரம் மங்கோலியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் மதம் மற்றும் கலாச்சாரத்தை அழித்தொழிக்கும் நோக்கத்துடன் ரஷ்யப் படைகள் பவுத்த விஹாரங்களை ஒன்றன் பின் ஒன்றாக உடைத்தும், தீ வைத்தும் அழித்தனர். பல புத்த பிக்குகள் கொலை செய்யப்பட்டு, பெண் பிக்குணிகள் பலர் கற்பழிக்கப்பட்டனர். புனித பவுத்தச் சின்னங்கள் பலவும் தகர்த்தெறியப்பட்டு, ஏறக்குறைய ஏழு நூற்றாண்டுகள் வரை காப்பாற்றி வைக்கப்பட்டிருந்த பல புத்தமத புனித நூல்களும், வரலாற்று ஆவணங்களும் கொளுத்தப்பட்டன.



இத்தனை களோபரங்களுக்கு மத்தியின் 1937-ஆம் வருடம், மத்திய மங்கோலியாவின் நிலா ஆற்றை ஒட்டியிருக்கும் ஷாங்கி மலைத்தொடர்களில் அமைந்ததொரு பவுத்த மடாலத்தில் லாமாக்களால் காப்பாற்றி வைக்கப்பட்டிருந்த மங்கோலிய பேரரசன் செங்கிஸ்கானின் ஆத்ம பதாகையை (Sulde – Banner) முகமறியா விசுவாசி ஒருவர் அங்கிருந்து ரகசியமாக, மங்கோலிய தலை நகரமான உலான்படாருக்கு (Ulaanbataar) எடுத்துச் சென்றார், ஆனால் அங்கிருந்து அது மீண்டும் காணாமல் போனதுடன் இன்றுவரை கண்டுபிடிக்கப் படாமல் இருக்கிறது.



இந்த பதாகை மங்கோலியர்களுக்கு மிக முக்கியமான ஒரு விஷயமாதலால் அது குறித்து இங்கு சிறிது பார்க்கலாம்.



பல நூற்றாண்டு காலம் உள் ஆசியாவில் அமைந்திருக்கும் மங்கோலிய ஸ்டெப்பிப் புல்வெளியில் ஆட்டு மந்தைகளை மேய்த்துக் கொண்டும், ஒருவருடன் ஒருவர் போரிட்டும் வாழ்ந்த பழங்குடி, நாடோடி இனத்தவரான மங்கோலியர்களின் முக முக்கியமான நம்பிக்கைகளில் ஒன்று இந்த ஆத்மபதாகை.



ஒவ்வொரு மங்கோலியப் படைவீரனுக்கும் அவனது ஆத்ம பதாகை மிக முக்கியமானது, தனக்குப் பிரியமான குதிரையின் பிடறி மயிறை கொத்தாக அறுத்துக் கட்டி, அதனை அவனது ஈட்டியின் கூர் முனைக்குக் கீழே கட்டித் தொங்க விடப்படும் அந்தப் பதாகைய அவனது அது முக்கியமான ஒன்றாகக் கருதுவான். எந்தவொரு மங்கோலியப் படைவீரனும் தனது கூடாரத்தை அமைக்கும் ஒவ்வொரு முறையும், அக்கூடாரத்திற்கு வெளியே அவனது ஆத்ம பதாகை தாங்கிய ஈட்டியை பெருமையோடு நிறுத்தி வைத்திருப்பான். அது அவனது அடையாளத்திற்கு மட்டுமன்றி, அவனுக்குப் பாதுகாவலாக இருக்கும் என்ற அசைக்க முடியாத பழங்குடி நம்பிக்கை அவனுடையது. அத்துடன் மங்கோலிய ஸ்டெப்பிப் புல்வெளியின் திறந்து கிடக்கும் நீல வானின் அடியில், காற்றில் பறக்கும் அந்தப் பதாகை மற்ற, சாதாரண மங்கோலியர்களால் பணிவுடன் வணங்கப்படும்.



மேலும், அப்பதாகை ஸ்டெப்பியின் காற்றில் அளைந்து, நீர், நிலம், காற்று, ஆகாயம் மற்றும் சூரியனின் வலிமை ஆகியவற்றை உள்ளிளிழுத்து, பின்னர் போர்புரிகையில் அச்சக்தியை அவனுக்குக் கடத்துவதுடன், நல்ல மேய்ச்சல் நிலங்களையும், அவனது எதிர்காலக் கனவுகளை நனவாக்கவும் ஆத்ம பதாகையே காரணமாக இருக்கும் என்பது நம்பிக்கை. அதனைத் தாங்கிச் செல்லும் போர்வீரன் இறந்த பிறகு, அவனுடைய ஆவி அந்தப் பதாகையில் சென்று காலம் காலமாக தங்கியிருக்கும் என்பதுடன், அவனது வருங்கால சந்ததினருக்கு ஒரு ஊக்கமளிக்கும் சக்தியாக இருக்கும் என்பதுவும் மிக, மிக முக்கியமான காரணம்.



மேற்படி காரணங்களில் மிக நம்பிக்கை கொண்டவனான செங்கிஸ்கானும் தன்னுடன் இரு பதாககைகளை வைத்திருந்தான். அவனுடைய வெள்ளைக் குதிரையின் பிடறி மயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட பதாகை சமாதான காலத்திலும், கறுப்புக் குதிரையிலிருந்து தயாரான பதாகையை போர்க்காலத்திலும் உபயோகித்துக் கொண்டிருந்தான் செங்கிஸ்கான். ஆனால் அவனுடைய வெள்ளைப் பதாகை செங்கிஸ்கான் மறைந்த சில காலத்திலேயே வரலாற்றிலிருந்தும் மறைந்துவிட்டது. ஆனால் கறுப்புப் பதாகை அவனது ஆத்மாவின் அடையாளமாக நீண்ட காலம் தப்பிப் பிழைத்திருந்தது.



பதினாறாம் நூற்றாண்டில், செங்கிஸ்கானின் வழித் தோன்றலாகிய, ஜானாபஜாரை (Zaanabazaar) சேர்ந்த புத்த பிக்கு ஒருவரால் ஒரு புதிய ஆலயம் கட்டுவிக்கப்பட்டு அதில் செங்கிஸ்கானின் ஆத்மபதாகை வைத்துக் காப்பாற்றப்பட்டு வந்தது. அத்தனை மங்கோலியர்களும் அந்த பதாகையை மிக மரியாதையுடனும், பணிவுடனும் வணங்கி வந்தனர். அதனைக் காண நூற்றுக் கணக்கான மைல்கள் புனிதப் பயணம் செய்து வருவதும் நடந்து வந்தது.



புயலிலும், பனி மழையிலும், படையெடுப்புகளையும், உள் நாட்டுக் கலவரங்களையும் பொருட்படுத்தாமல், திபெத்திய மஞ்சள் தொப்பிப் பிரிவைச் சேர்ந்த ஆயிரம் புத்த பிக்குகளால் செங்கிஸ்கானின் ஆத்மா அடங்கிய அப்பதாகை தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வந்தது. ஆனான் அவர்களால் ஸ்டாலினின் சர்வாதிகார, கம்யூனிசப் படைகளுக்கு முன்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அந்த பிக்குகள் கொல்லப்பட்டார்கள். செங்கிஸ்கானின் ஆத்மா அவனது ஸ்டெப்பிப் புல்வெளியை விட்டு, வரலாற்றை விட்டு நிரந்தரமாகவே மறைந்து போனது.



*



உலகம் அஞ்சிய செங்கிஸ்கான் அதிர்ஷ்டவசத்தாலோ அல்லது விதியினாலோ உருவாக்கப்பட்டவனல்ல. உண்மையில் செங்கிஸ்கான் தன்னை செங்கிஸ்கான உருவாக்கிக் கொண்டான் என்பதே வரலாறு கூறும் உண்மை. ஆரம்ப கால செங்கிஸ்கானிடம் தனக்கு ஒரு ஆத்ம பதாகையைத் தயாரிக்கும் அளவிற்குக் கூட அவனிடம் குதிரைகள் இருந்ததில்லை. சிறுவன் செங்கிஸ்கான் வன்முறை நிறைந்த தனது பழங்குடிகள் நடுவே வளர்ந்தவன். கொலையும், கொள்ளையும், ஆட்கடத்தலும், அடிமைப்படுத்துதலும் நிரம்பிய உலகமாக செங்கிஸ்கானின் இளமைப்பருவ உலகம் இருந்தது.



பழங்குடி சமுதாயத்தால் விலக்கம் செய்யப்பட்ட தந்தைக்குப் பிறந்த செங்கிஸ்கான் தனது பால்ய வயதில் சில் நூறு மங்கோலியர்களைத் தவிர வேறு யாரையும் கண்டு வளர்ந்திருக்கவியலாது. மேலும் முறையான கல்வியும் அவனுக்கு அளிக்கப்படவில்லை. இப்படிப்பட்ட சூழ் நிலையில் செங்கிஸ்கான் மனித வாழ்வின் குரூரங்களையும், பேராசைகளையும், கனவுகளையும் நேரடியாக கண்டு வளர்கிறான். அந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே அவனது ஒன்றுவிட்ட சகோதரன் ஒருவனைக் கொல்லும் நிலையும் அவனுக்கு ஏற்படுகிறது. அவனைக் கொல்கிறான். எதிரி பழங்குடிகளால் கவர்ந்து செல்லப்பட்டு அடிமைப்படுத்தப்படுகிறான். பின்னர் அங்கிருந்து தப்பிச் செல்கிறான்.



இவ்வாறான சூழ் நிலையில் வளர்ந்த செங்கிஸ்கானுக்கு பின்னாட்களில் தன்னை எதிர் நோக்கிய வெவ்வேறு ஆபத்துகளை எதிர்கொள்ளவும், அதனை முறியடிக்கவும் தேவையான மனவுறுதியையும், திறனையும் அளித்திருக்க வேண்டும். ஆனால், இளமையில் அச்சமும், தயக்கமும் உடையவனான செங்கிஸ்கான், நாய்களின் மீது அச்சமுடையவனாக, எளிதில் அழும் குணமுடையவனாக இருக்கையில், அவனுடைய இளைய சகோதரன் அவனையும் விட வலிமையானவனாகவும், வில் வித்தியயில் அசகாய சூரனாகவும் இருந்தான்.



பட்டினியிலும், அவமானத்திலும், அடிமை வாழ்க்கையிலும் அல்லல் பட்ட செங்கிஸ்கான் இளமையில் எடுத்த இரண்டு முடிவுகள் அவனுக்கு ஒரு திருப்புமுனையை அளித்தன எனலாம். அவனை விடவும் வயது கூடிய ஒருவனுடன் இணைபிரியா நட்பு பாராட்டுவதாக சபதம்பூண்டு, அந்த நண்பனின் வாயிலாக கற்ற, பெற்ற பாடங்கள் முக்கியமானவை. ஆனால் வயது வந்தபிறகு அதே நண்பன் செங்கிஸ்கானுக்கு பரம எதிரியாக மாறினான். இன்னொன்று, தனக்கு மிகவும் பிரித்த ஒரு பெண்ணை மணந்து அவளை எதிர்கால மங்கோலிய மன்னர்களின் அன்னையாக்கியது போன்றவை செங்கிஸ்கானின் வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்துகின்றன.



வருடங்கள் செல்லச் செல்ல, செங்கிஸ்கான் ஸ்டெப்பியிலுள்ள அவனது அத்தனை எதிரிகளையும் ஒருவர் பின் ஒருவராக தீர்த்துக் கட்டுகிறான். ஐம்பது வயது நிறைவதற்குள், காலங்காலமாக உலகின் பழங்குடி மக்களை துன்புறுத்திய, நாகிரிகம் பொருந்திய நாடுகளை நிர்மூலமாக்கி அவர்களிடையே அச்சத்தை தோற்றுவிக்கும் ஒருவனாக மாறுவது எவரும் எதிர்பாராத ஒன்று. சீனத்தின் மஞ்சளாற்றுப் பகுதியிலிருந்து மத்திய ஆசியாவின் அனைத்துப் பகுதிகளுடன், துருக்கி, பாரசீகம் மற்றும் ஆப்கானிஸ்தானின் மலைகளிலிருந்து சிந்து சமவெளியின் இண்டஸ் நதிவரை செங்கிஸ்கானின் கீழ் வந்தது.



மங்கோலியப்படை வெற்றிகளின் மேல் வெற்றிகள் குவித்து, நாடுகளுக்கிடையேயான போர் என்ற எல்லையைத் தாண்டி, கண்டங்களுக்கிடையேயான போராக மாறியது. மேலும் மங்கோலியப்படை தங்கள் நாட்டை விட்டு ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில், பல முனைகளில் போர் புரிந்து கொண்டிருந்தது. கனமான இரும்புக் கவசங்களை உடலெங்கும் தரித்துப் போர் புரிந்த ஐரோப்பிய பிரபுக்கள், செங்கிள்கானின் ஒழுங்கும், கட்டுப்பாடும் கொண்ட குதிரைப்படையணிகள் முன் சிதறியோடினர்.



புதிய போர்முறைத் தந்திரங்களுடன், ஒத்திசைந்து இயங்கும் குதிரைப் படையுடன் செங்கிஸ்கான் எதிரிகளின் பாதுகாப்பு அரண்களை உடைத்து, மிகுந்த வேகத்துடன் அவர்கள் அறியாமல் உட்புகுந்து தாக்கி நிர்மூலமாக்கும் தந்திரத்தை உலகம் அதுவரை கண்டதில்லை. செங்கிஸ் அவரது மக்களுக்கு புதிய போர்முறைகளைக் கற்றுத் தந்தது மட்டுமன்றி, அப்போர் நீண்டகாலம் நிகழ்ந்தால் அதனை எவ்வாறு தாக்குப் பிடித்து பின் போரிட்டு வெற்றி கொள்வது போன்றவற்றையும் கற்றுக் கொடுத்தான். அதுவே மங்கோலியர்கள் உலகின் பல பகுதிகளிலும் நீண்டகாலம் வெற்றியுடன் தாக்குப்பிடித்திருக்க ஒரு காரணியாயிற்று.



*



ரோமானியர்கள் இரு நூறு வருடங்களுக்கும் மேலாக போரிட்டுப் பெற்ற பகுதிகளை விடவும் அதிகமான பகுதிகளை வெறும் இருபத்தைந்து வருடங்களில் மங்கோலியர்கள் கைப்பற்றினர். செங்கிஸ்கானும், அவரது மகனும் பேரன்களும் 13-ஆம் நூற்றாண்டில் வென்ற நிலங்களின் அளவும், அவ்வாறு வென்றெடுத்த நாடுகளில் வசித்த மொத்த மக்கள்தொகை அளவும் வேறெந்த மனிதனாலும் உலக வரலாற்றில் அதுவரை எந்த மனிதனாலும் வெற்றி கொள்ளப்படவில்லை. மங்கோலியப் படைவீர்னின் குதிரைக் குளம்படிகள் பசிபிக் மஹா சமுத்திரத்திலிருந்து மத்தியதரைக் கடல்வரை இருக்கும் ஒவ்வொரு ஆற்றிலும், குளங்களிலும், ஏரிகளிலும் ஏறி இறங்கின.



மங்கோலிய அரசு அதன் உச்சத்தில் ஏறக்குறைய 11 மில்லியனிலிருந்து 12 மில்லியன் சதுர மைல்கள் கொண்ட தொடர்ச்சியான நிலப்பரப்பை தன்னகத்தே கொண்டிருந்தது. ஏறக்குறைய ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு இணையானதாகவும், வட அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ, மத்திய அமெரிக்கா மற்றுக் கரீபியன் தீவுகளை உள்ளடக்கிய மொத்த நிலப்பரப்பை விடவும் அதிகமான நிலப்பரப்பு உடையதாக இருந்தது ஒருங்கிணைந்த மங்கோலியப் பேரரசு.



குளிர் பிரதேசமாக சைபீரிய மலைத்தொடர்களிலிருந்து, கடும் வெப்பம் நிலவும் இந்தியச் சமவெளி வரையும், வியட்நாமிய அரிசி வயல்களிலிருந்து, ஹங்கேரியின் கோதுமை வயல்கள்வரையும், கொரியாவிலிருந்து பால்கன் வரையும் பரந்து விரிந்திருந்தது. இன்று உலகின் மிகப் பெரும்பான்மையான மக்கள் மங்கோலியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலேயே வசிக்கிறார்கள் என்பது மிகவும் ஆச்ச்சரியமான ஒரு விஷயம். இன்றைய நவீன உலக வரைபடத்தில் காணும் ஏறக்குறைய 30 நாடுகளும், அதில் வசிக்கும் 3 பில்லியன் மக்களும் மங்கோலியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களே.



செங்கிஸ்கான் உலகை வெல்லப் புறப்பட்டுச் சென்ற நேரத்தில் மொத்த மங்கோலிய மக்கள் தொகை வெறும் 1 மில்லியன் மட்டுமே. அதாவது இந்திய ரயில்வேயில் பணி புரியும் மொத்த தொழிலாளர்களை விடவும் குறைந்த அளவு மக்கள்தொகையே மங்கோலியாவில் இருந்தது. அந்த 1 மில்லியன் மக்கள் தொகையிலிருந்து செங்கிஸ்கான் தனக்கு வேண்டிய 1 இலட்சம் படைவீரர்களைத் தேர்ந்த்தெடுத்தான். மொத்த மங்கோலியப்ப்டையயும் ஒரு கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அடக்கிவிட முடியும்.



செங்கிஸ்கானின் குதிரைப்படை சென்ற வழியில் இருந்த நாடுகளின் எல்லைகள் திருத்தி அமைக்கப்பட்டன. அவனின் கட்டமைப்பு கற்களால் ஆகாமல் நாடுகளால் ஆனது. சிறு சிறு நாடுகளாக சிதறிக்கிடந்த நாடுகளை ஒன்றுபடுத்தி பெரிய நாடுகளாக மாற்றியமைத்த பெருமை செங்கிஸ்கானையே சாரும். கிழக்கு ஐரோப்பாவில் ஒரு டஜனுக்கும் மேலாக சிதறிக்கிடந்த ஸ்லாவாக் நாடுகளை ஒன்றிணைத்து மாபெரும் ரஷ்யாவாக உருவாக்கிய பெருமையும் செங்கிஸ்கானுடையதே.



கிழக்கு ஆசியவில் சாங்க் அரச பரம்பரையினரால் நிர்வாகிக்க இயலாமல் பலவீனமாகசி சிதறிக்கிடந்த பல பகுதிகளை தனது போர்த் தந்திரங்கள் மூலம் வென்றெடுத்து சீனா என்ற மாபெரும் நாட்டை உருவாக்கித் தந்தவர்கள் செங்கிஸ்கானும் அவனுக்குப் பின் வந்த அவனது வாரிசுகளும்தான். மஞ்சூரியாவின் தெற்கிலிருந்த ஜூர்சட்டையும், மேற்கே திபெத்தையும், கோபி பாலைவனத்தைத் தொட்டடுத்து இருந்த டாங்குட் ராஜ்ஜியத்தையும், கிழக்கு துர்க்கிஸ்தானிலிருந்த உய்குர் நிலங்களையும் இணைத்து உருவாக்கப்பட்டதே இன்றைய சீனம்.



எல்லைகளை விரிவுபடுத்திய மங்கோலியர்களினால் உருப்பெற்ற கொரிய, இந்திய நாடுகளின் எல்லைகள் (பிரிவினைகளுக்கு முந்தைய) இன்றுவரை மங்கோலியர்கள் வகுத்த அளவிலேயே இருப்பது இன்னுமொரு ஆச்சரியமே.



*



செங்கிஸ்கானின் பேரரசு உலக நாடுகளை இணைத்தது மட்டுமல்லாமல் பல்வேறு கலாச்சாரங்கள் ஒன்றிணையவும், அனைத்து நாடுகளுக்கும் ஏற்புடைய ஒரு புதிய பொது உலக சட்டத்தை இயற்றவும் வழிவகை செய்தது. செங்கிஸ்கான் பிறந்த 1162-ஆம் வருடம் பல சிறு தீவுகளாக சிதறிக்கிடந்த உலகம், தனக்கு அண்டையிலுள்ள நாட்டினைத் தவிர உலகின் பிற பகுதிகளில் இருந்த நாடுகளைக் குறித்தோ அல்லது அதன் கலாச்சார, மொழி, பழக்க வழக்கங்கள் குறித்தோ எந்தவிதமான அறிதலும் இல்லாமலிருந்தது.



சீனாவிலிருந்த எவரும் ஐரோப்பாவைக் கேள்விப்பட்டதில்லை; ஐரோப்பியர் எவரும் சீனம் குறித்து அறிந்திருக்கவில்லை. அன்றைய வரலாற்று ஆதாரங்களின்படி எவரும் மேற்கண்ட நாடுகளுக்கோ அல்லது அங்கிருந்து இங்கோ பயணம் எதுவும் மேற்கொள்பவர்களாக இல்லை. ஆனால் செங்கிஸ்கான மரணமடைந்த 1227-ஆம் வருடம் அவனது ஆட்சியின் கீழிருந்த ஒவ்வொரும் நாடும் பிற நாடுகளுக்கு தங்களின் பிரதிநிதிகளை அனுப்பி வைத்ததுடன், வியாபாரத் தொடர்பும் கொண்டவைகளாக மாறின.



நிர்வாகத்தில் புதிய மாற்றங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் மங்கோலியர்களே.



பிறப்பினால் தகுதியற்ற ஒருவன் உயர்பதவியை அடையும் பழைய முறையை மாற்றி, உழைப்பும், திறமையும், விசுவாசமும் உடயவர்களுக்கு உயர்பதவிகள் அளிக்கும் முறை மங்கோலியர்களால் அவர்கள் ஆக்கிரமித்த பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒன்றிர்க்கொன்று தொடர்பற்று, தொலைவில் இருந்த பட்டுச் சாலையின் (சில்க் ரோடு) வழியில் இருந்த நகரங்கள் இணைக்கப்பட்டு, அங்கு தங்கு தடையற்ற வணிகம் நிகழ வழி செய்யப்பட்டது. தங்கள் ஆட்சியின் கீழுள்ள மக்கள் அனைவருக்கும் வரிகள் குறைக்கப்பட்டு ஆசிரியர்கள், பூசாரிகள், மருத்துவர்கள் மற்றும் கல்விச் சாலைகளுக்கான வரிகள் அறவே அகற்றப்பட்டது. உலக நாடுகள் அனைத்திற்கும் பொதுவான அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு, நீல வானின் கீழுள்ள அத்தனை மக்களுக்கும் இது பொதுவானது என்று அறிவிக்கப்பட்டது.



ஆட்சியாளர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் எனும் அக்கால நடைமுறை நீக்கப்பட்டு, மக்களை ஆளுகிற அனைவரும் அச்சட்டங்களுக்கு உட்பட்டவர்கள் என செங்கிஸ்கானால் வலியுறுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. மதச் சுதந்திரம் அளிக்கப்பட்ட அதே நேரத்தில், குடிமக்கள் அனைவரும் மதத்திற்கு அப்பாற்பட்டு அரசிற்கு விசுவாசமானவர்களாக இருக்கச் செய்யப்பட்டார்கள். மக்களைத் துன்புறுத்தும் சட்டங்கள் நீக்கப்பட்டு, திருடர்களும், கொள்ளையர்களும், சமூக விரோதிகளும் மிகக் கடுமையான முறையில் ஒடுக்கப்பட்டனர். செங்கிஸ்கானே இது போன்ற கொள்ளையர்களை அடக்கு செயல்களை தனிப்பட்ட முறையில் பல முறை செய்ததாக அறியப்படுகிறது.



உலக வரலாற்றில் பிணைக் கைதிகளைப் பிடித்து வைக்க மறுத்த ஒரே பேரரசன் செங்கிஸ்கானாகத்தான் இருக்க வேண்டும். தன்னுடன் போர் புரியும் நாடுகளிலிருந்து வரும் பிரதிநிதிகளுக்கு பொதுச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கும் Diplomatic Immunity செங்கிஸ்கானாலேயே உலகிற்கு முதல் முதலாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.



அடித்தளம் மிக உறுதியாக அமைக்கப்பட்ட நிலையில் செங்கிஸ்கானின் மங்கோலியப் பேரரசு அடுத்த 150 ஆண்டுகள் வரை தொடர்ந்து விரிவடைந்து கொண்டே சென்றது. அதனைத் தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில் சிதறிப்போனாலும் செங்கிஸ்கானின் வாரிசுகளே அந்த சிறிய, பெரிய நாடுகளையும் ஆண்டுவந்தார்கள்.



ரஷ்யா, துருக்கி, இந்தியா, சீனா மற்றும் பாரசீக நாடுகள் செங்கிஸ்கானின் வாரிசுகளால் தொடர்ந்து ஆளப்பட்டன. ஆண்ட ஒவ்வொருவரும் தங்களுக்கு வெவ்வவேறு விதமான பட்டங்களைச் சூட்டிக் கொண்டார்கள். கான், பேரரசர், ராஜா, ஷா, எமிர், தலாய் லாமா போன்ற பட்டங்களை உதாரணங்களாகச் சொல்லலாம். இந்த வாரிசுகளின் தலைமையில் மேலும் ஒரு நூற்றாண்டு வரை மங்கோலிய அரசாங்கங்கள் ஆளப்பட்டன.



அந்த வாரிசுகளின் ஒரு பிரிவினரான மொகலாயர்கள் இந்தியாவை 1857-ஆம் வருடம் வரை ஆண்டு வந்தார்கள். சிப்பாய்க் கலகத்திற்குப் பிறகு பிரிட்டிஷ்காரர்கள் கடைசி மொகலாய மன்னரான இரண்டாம் பகதூர் ஷாவை நாடுகடத்தியதுடன், அவரது மகன் மற்றும் பேரன்களின் தலைகளைத் துண்டித்து கொல்லும் வரை எனலாம். அத்துடன் செங்கிஸ்கானின் நேரடி வாரிசுகளின் ஆட்சி இந்தியாவில் முடிவடைந்தது.



உஸ்பெகிஸ்தானின் அமைந்த புகாராவின் எமிரான ஆலம்கான், சோவியத் படைகள் உஸ்பெகிஸ்தானைக் கைப்பற்றும் வரை ஆட்சி செய்து வந்தார். அவரே செங்கிஸ்கானின் நேரடி, கடைசி வாரிசு. அவருக்குப் பின் செங்கிஸ்கானின் வாரிசுகள் எவரும் எங்கும் ஆட்சி புரியவில்லை.



*



(பாகம் இரண்டில் தொடர்கிறது)

-நரேந்திரன்.

15 comments:

MANO நாஞ்சில் மனோ said...

அறியாத பல செய்திகள் அறிய செய்தமைக்கு நன்றி...ஆர்வமாக தொடர்கிறேன்....!

suvanappiriyan said...

திரு மனோ!

//அறியாத பல செய்திகள் அறிய செய்தமைக்கு நன்றி...ஆர்வமாக தொடர்கிறேன்....!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

பாலா said...

சகோதரரே, இந்த இடுகைக்கு சம்பந்தமில்லாத கேள்வி.....

உங்களின் ஒவ்வொரு பதிவின் பின்னூட்டத்திலும் இந்தியாவில் இந்துக்களால், அல்லது பிற மததினரால் நிகழ்த்தப்பட்ட் பாலியல் குற்றங்களை மாய்ந்து மாய்ந்து நீங்களும் சில நண்பர்களும் எழுதி நிரப்பினீர்களே? தற்போது மும்பையில் ஒரு பெண் நிருபர் மீது நிகழ்த்தப்பட்டுள்ள இந்த கொடுமை குறித்து உங்கள் கருத்து என்ன என்று அறிந்து கொள்ள ஆவலாகி இங்கே வந்தேன். அதுகுறித்து உங்களது கருத்தாவது வெளிவரும் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி

faizeejamali said...

அஸ்சலாமுஅலைகும் சகோ அருமையான பதிவு

Dr.Anburaj said...

மங்கோலியர்கள் ஒருவருக்கொருவர் நடந்து கொள்வதை குறித்து மிக கடுமையான அறநெறி விதிகளை தெங்கிரி விதித்தார். ஆனால் எதிரிகளோடு நடந்துகொள்ளும்போது எந்த விதி முறைகளும் கிடையாது. அவர்கள் மற்றவர்களை கொள்ளையிடலாம், சூறையாடலாம், கற்பழிக்கலாம். ஆனால் ஒரு மங்கோலியனிடமிருந்து சிறியதை திருடுவதும் பொய்யுரைப்பதும் மிக கடுமையாக தண்டிக்கப்பட்டது. வணிக கூட்டத்தினரை சூறையாடுவதை, அமைதியான சமுதாயங்களை கொள்ளையிடுவதை, நம்பிக்கை கொள்ளாதவர்களை படுகொலை செய்வதை, அப்பாவியான முஸ்லிமல்லாத பெண்களை அடிமைபடுத்தி கற்பழிப்பதை பற்றியெல்லாம் அல்லாஹ் கண்டுகொள்ளவில்லை. ஆனால் ஒரு முஸ்லிமிடமிருந்து செய்த சிறிதளவு திருட்டை கைகளை வெட்டுவதின் மூலமும் , மது அருந்துவதை சவுக்கால் அடிப்பதைக்கொண்டும், முஸ்லிமுடனான விபசாரத்தை கல்லால் அடிப்பதின் மூலமும் தண்டித்தார்.

செங்கிசும் அவரது படையினரும் அவர்கள் கொல்லும்போதும் கொள்ளையிடும்போதும் தாங்கள் கடவுளுடைய வேலையையே செய்வதாக உண்மையாக நம்பினர். அவர்கள் எதிர்த்து நின்று கடவுளுடைய விருப்பத்திற்கு எதிராக சென்றதால், அவர்களுக்கு அது கடவுளின் தண்டனை என்று அவருக்கு பலியானவர்களிடம் அவர் வழக்கமாக கூறினார். முகம்மதுவும் அவரது படையினரும் அவர்கள் கொல்லும்போதும் கொள்ளையிடும்போதும் தாங்கள் கடவுளுடைய வேலையையே செய்வதாக உண்மையாக நம்பினர். கொல்வது நீங்கள் அல்ல, மாறாக உங்களுடைய கைகளைக் கொண்டு கடவுளே கொல்கிறார் என்று குர்ஆனில் அல்லாஹ் கூறினார். கொள்ளைப் பொருளும் கைப்பற்றப்பட்ட பெண்களும் உங்களுக்கு ஹலால் என்றும் அவர் கூறினார்.
செங்கிஸ் ஒரு விதிவிலக்கான அரசியல்வாதியாகவும் புத்தி கூர்மையான ராணுவ தலைவராகவும் விளங்கினார். அவரால் எல்லா மங்கோலிய குலங்களையும் சக்திவாய்ந்த ஒரே ராணுவமாக ஒன்றிணைக்க முடிந்தது. சூறையாடல் மற்றும் எதிரி பெண்கள் ஆகியவற்றால் கவரப்பட்டு தெங்கிரி கடவுளின் ஆசியோடு, சுற்றுப்புறத்திலுள்ள நாடுகளை தாக்குவதற்கு செங்கிசோடு கைகோர்க்க எல்லா இடங்களிலிருந்தும் அவர்கள் வந்தனர். முஹம்மது தலைசிறந்த அரசியல்வாதியாகவும் புத்தி கூர்மையான ராணுவ மனிதராகவும் இருந்தார். ஜிஹாத் என்ற அவருடைய கருத்து மனித வரலாற்றிலேயே ஒரு கைதேர்ந்த அடி(Master stroke in human history). உயிருடனிருந்து கொள்ளைப் பொருளையும் கைப்பெற்றப்பட்ட பெண்களையும் அனுபவியுங்கள். இறந்து சுவர்க்கத்திற்கு சென்று நிரந்தரமாக கன்னியாக உள்ள பெரிய மார்பகங்களை உடைய கன்னிப்பெண்களுடன் பாலுறவு கொள்ளுங்கள். கொள்ளைப் பொருள் மற்றும் அழகான பெண்களால் கவரப்பட்டு அரேபியாவின் எல்லா இடங்களிலிருந்தும் அரபியர்கள் வந்தனர். அவ்வப்போது, தகுதியான ஜிஹாதிகளை(Potential Jihadis) அவர் புறந்தள்ள வேண்டியிருந்தது.

தாக்குதல்கள் ஒன்றில் குதிரையில் இருந்து விழுந்ததின் நீண்டகால விளைவுகளால் 62 அல்லது 63 ஆம் வயதில் செங்கிஸ் இறந்தார். கைபர் தாக்குதலின்போது விஷம் வைக்கப்பட்டதின் நீண்டகால விளைவுகளால் 62 அல்லது 63 ஆம் வயதில் முஹம்மது இறந்தார்.

அல்லாஹ்வும் யேஹோவாவும் போன்றே தெங்கிரியும் அதே தெய்வம் என்றும் முஹம்மது மற்றும் மோசஸ் போன்ற நபிமார்களில் ஒருவராக செங்கிசும் இருந்தார் என்றும் தோன்றவில்லையா? ஒருவேளை செங்கிஸ்கானின் வழித்தோன்றல்கள் இறுதியாக அதை உணர்ந்து கொண்டனர். முஹம்மதின் சிஷ்யகோடிகளுக்கு அவர்களுடைய சொந்த மருந்தின் சுவையையே பல வருடங்களுக்கு கொடுத்த பிறகு, மதம் மாற முடிவெடுத்து முஸ்லிம்களோடு கைகோர்த்து, இந்தியாவுக்கு கடவுளுடைய வேலையை அங்கே செய்ய சென்றனர்.

Unknown said...

சகோ சுவனப்பிரியனுக்கு ஒரு அழுத்தமான வேண்டுகோள் !

அன்புராஜ் போன்ற மடையர்கள் இஸ்லாத்தை சரியாக
புரிந்து கொள்லாமல், நமது உயிரினும் மேலான
நபியை பற்றியும் குர்ஆன் பற்றியும் ,
அவதூராக எழுதுவதை நீங்கள் தடைசெய்ய வேண்டும் .
அல்லது அதற்க்கு தக்க விளக்கத்தை கொடுக்கவேண்டும் .
என்னை பெறுத்த வரை இந்த மடையர்களின் பின்னூட்டத்தை
தடை செய்வதே நல்லது !

suvanappiriyan said...

திரு பாலா!

//உங்களின் ஒவ்வொரு பதிவின் பின்னூட்டத்திலும் இந்தியாவில் இந்துக்களால், அல்லது பிற மததினரால் நிகழ்த்தப்பட்ட் பாலியல் குற்றங்களை மாய்ந்து மாய்ந்து நீங்களும் சில நண்பர்களும் எழுதி நிரப்பினீர்களே? தற்போது மும்பையில் ஒரு பெண் நிருபர் மீது நிகழ்த்தப்பட்டுள்ள இந்த கொடுமை குறித்து உங்கள் கருத்து என்ன என்று அறிந்து கொள்ள ஆவலாகி இங்கே வந்தேன். அதுகுறித்து உங்களது கருத்தாவது வெளிவரும் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி //

மனித உயிர்கள் அனைத்தும் ஒரே மூலத்திலிருந்து பல்கி பெருகியவர்கள் என்று நம்புபவன் நான். எனவே இறந்த அனைத்து உயிர்களும் அநியாயமாக கொல்லப்படுவதற்கு, கற்பழிக்கப்படுவதற்கு எனது வன்மையான கண்டனங்கள். மும்பை பத்திரிக்கையாளர் வன் புணர்வு செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. தக்க தண்டனை குற்றவாளிகளுக்கு கிடைக்க வேண்டும். இதை ஃபேஸ் புக்கில் நான் பதிந்துள்ளேன்.

அடுத்து மும்பை வரை செல்லும் நீங்கள் நமது திருச்சியில் சில நாட்களுக்கு முன்பு வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட தவ்ஃபீக் சுல்தானா என்ற .ஸ்லாமிய பெணமணியைப் பற்றி உங்களைப் போன்றவர்கள் எத்தனை பேர் தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர்? இங்கும் இறந்த உடலை மத கண்ணோட்டத்தோடு பார்க்கும் பாங்கு உள்ளதை மறக்க மாட்டீர்கள். இறந்த உடல் மேல் சாதியா இந்துவாக இருந்தால் ஊடகங்களால் பிரபல்யப்படுத்தப் படுகிவது வழி வழியாக வரும் மரபு. இது மாற வேண்டும்.

suvanappiriyan said...

சகோ மூமின்!

//அன்புராஜ் போன்ற மடையர்கள் இஸ்லாத்தை சரியாக
புரிந்து கொள்லாமல், நமது உயிரினும் மேலான
நபியை பற்றியும் குர்ஆன் பற்றியும் ,
அவதூராக எழுதுவதை நீங்கள் தடைசெய்ய வேண்டும் .
அல்லது அதற்க்கு தக்க விளக்கத்தை கொடுக்கவேண்டும் .
என்னை பெறுத்த வரை இந்த மடையர்களின் பின்னூட்டத்தை
தடை செய்வதே நல்லது ! //

அன்பு ராஜ் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் முன்பே பதில் தந்தாகி விட்டது. திரும்பவும் பழைய பல்லவியையே பாடிக் கொண்டிருக்கிறார். இனி அவதூறாக அவர் அனுப்பும் எந்த பின்னூட்டங்களும் அனுமதிக்கப்பட மாட்டாது.

இஸ்லாத்தை எந்தெந்த வழியில் எல்லாம் அழிக்க முயல்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டவே அவரது சில பின்னூட்டங்களை வெளியிட்டேன்.

பாலா said...

என்ன சகோதரரே கடைசியில் பிளேட்டை என் மீதே திருப்பி விட்டு விட்டீர்கள்? நான் பதிவு எழுதியே பல மாதங்கள் ஆகிவிட்டன.

'உங்களைப்போன்ற' இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்? என் மத அடையாளமா? சரி விடுங்கள். நான் கேட்ட கேள்வி இந்து ஊடகங்களை பற்றியதல்ல. உங்களைப்பற்றி. இதுதான் இந்து மதத்தில் உள்ள பிரச்சனை. இந்துமதத்தில் உள்ள சாதி பிரச்சனைகளே இது போன்றே கற்பழிப்புகளுக்கு காரணம் என்று எழுதினீர்களே? ஆனால் இந்த விஷயத்தில் மூச்சு கூட விடவில்லையே. அதே போல என் கருத்துக்கு பதில் அளிக்கும்போது கூட 'இசுலாமிய மதத்தை சேர்ந்த குற்றவாளிகள்' என்று எங்கும் கூறாமல் தவிர்த்துவிட்டு, பொதுவாக கண்டனம் தெரிவிப்பது போல கூறி இருக்கிறீர்களே? இதைத்தான் நானும் கூறுகிறேன். இந்துக்கள் செய்யும் தவறை மட்டும் ஹைலைட் செய்து காட்டும் நீங்கள் இதை பற்றி கூறவில்லையே?நீங்கள் கூறும் சோ கால்டு இந்து ஊடகங்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் இந்த செய்தியை ஹைலைட் செய்து விட்டு மற்றவற்றை இருட்டடிப்பு செய்வது போல, நீங்கள் இந்துக்கள் செய்யும் தவறுகளை ஹைலைட் செய்து விட்டு, இசுலாமை சேர்ந்தவர்கள் செய்வதை இருட்டடிப்பு செய்கிறீர்களோ என்பதுதான் என் சந்தேகம்.

C.Sugumar said...
This comment has been removed by the author.
suvanappiriyan said...

திரு பாலா!

//இசுலாமிய மதத்தை சேர்ந்த குற்றவாளிகள்' என்று எங்கும் கூறாமல் தவிர்த்துவிட்டு, பொதுவாக கண்டனம் தெரிவிப்பது போல கூறி இருக்கிறீர்களே? இதைத்தான் நானும் கூறுகிறேன்.//

முஸ்லிம்கள் தீவிரவாதத்தில் ஈடுபட்டால் அதனை கண்டிப்பதில் என்றுமே முதலில் இருப்பவன். கோவை காவலர் செல்வராஜ் கொல்லப்பட்டபோது அதை வன்மையாக கண்டித்தவன்.

ஆனால் இன்று ஊடகங்கள் பெரும்பாலும் எங்கு கொலை நடந்தாலும் முதலில் அவர்களின் கை நீளுவது முஸ்லிம்களை நோக்கியே! மாலேகான் குண்டு வெடிப்பில் , புத்த கயா குண்டு வெடிப்பில், தமிழகத்தில் நடக்கும் கொலைகளில் முதலில் இஸ்லாமியர்களை கைது செய்தனர். விசாரணை முடிவில் இந்துத்வ இயக்கங்கள் என்பது உலகுக்கு தெரிய வந்தது. இந்தியாவில் நடக்கும் அனைத்து குண்டு வெடிப்புகளுக்கு பின்னாலும் ஆர்எஸ்எஸ் உள்ளது என்பதை மததிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் தினமலர், தினமணி போன்ற ஊடகங்கள் பார்பனர்களால் நடத்தப்படுவதால் இந்துத்வா செய்யும் கொலைகள் மறைக்கப்படுகிறது. அதுதான் உண்மை.

Anonymous said...

Anonymous said...


மக்கள் உரிமை : வெகுஜன மக்களும், அறிவு ஜீவிகளும் இஸ்லாத்தை சரியான கொள்கை என்று ஏற்றுக் கொண்டாலும் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதில் உள்ள பின்னடைவிற்கான காரணங்கள் என்ன?


டாக்டர் அப்துல்லாஹ் : இஸ்லாமியர்கள் பெண்களை பூட்டி வைப்பார்கள். பர்தாவை போட்டு மூடி வைப்பார்கள். அடுத்தவர்களுடன் பழக விட மாட்டார்கள். தானும் பழக மாட்டார்கள். மோடி மஸ்தான் வேலை செய்பவர்கள். புகை போடுபவர்கள். இவர்களுடன் சேர்ந்தால் நம் வாழ்வை கெடுத்து விடுவார்கள் என்றெல்லாம் பரப்பப்பட்ட ஒரு சமூகத்தில் வாழ்ந்தவன் நான். எனது 16வயது வரை நான் சென்ற ஒரே முஸ்லிம் வீடு சிராஜுத்தீன் வீடு மட்டும் தான். அந்த வீட்டில் உள்ள எல்லோரும் என்னிடம் அன்பாக பழகுவார்கள்.


இஸ்லாத்தைப் பற்றி இஸ்லாமியர்களே அறியாமல் இருப்பதும், பிறர் தவறான கோட்பாட்டை சொல்லும் போது உடனே அதனை எதிர்கொண்டு அவர்களுக்கு விளக்கம் அளிக்க முன்வராததும் வருத்தத்திற்குரியது. இஸ்லாம் முஸ்லிம்களுக்காக மட்டும் வந்த மார;க்கம் என்று நான் விளங்கவில்லை. உங்களுக்கே தெரியும் இஸ்லாம் அனைத்து மக்களுக்காவும் இறைவனால் தனது இறுதி நபி மூலம் இறுதி வேதத்துடன் அருளப்பட்டதாகும்.


இஸ்லாம் எல்லா மக்களுக்கும் உரியது. அதில் மற்றவர்களை அழைக்காமல் இஸ்லாத்தை மூடி மறைத்த இஸ்லாமியர்களும் உண்டு. இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக பார்ப்பவர்களும் உண்டு. முஸ்லிம்கள் என்றால் முட்டாள்கள், கடத்தல்காரர்கள், மோடிமஸ்தான் வேலைப் பார்ப்பவர்கள், எல்லோரும் ஒன்றாக சேர்ந்து (மன்னிக்க வேண்டும்) எச்சில் சாப்பாடு சாப்பிடுபவர்கள் என்று எண்ணுபவர்கள் உண்டு. இந்த தவறான சித்தரிப்புகளை நீக்க் எத்தனை இஸ்லாமியர்கள் தகுந்த பதில் தந்தார்கள். பதில் சொல்வது நமது கடமையில்லையா? எல்லோருக்குமான அழைப்பு திருக்குர்ஆனில் உள்ளது. அதனை சரியான முறையில் மக்களிடம் நம்மவர்கள் சொல்வதில்லை.


ஜமாத்தில் இருப்பவர்களைப் பற்றி சொல்லவே வேண்டும். ஜமாத்தில் மொத்தமே மூன்று பேர்கள் என்றால் அதிலும் நான்கு கட்சி. உலகளவில் சதி செய்து முஸ்லிம்களை தீவிரவாதி என்று முத்திரை குத்தி விட்டார்கள்.


முருகன் கொலை செய்தால் முருகன் கொலை செய்தான் என்றும் நெல்சன் கொள்ளை அடித்தால் நெல்சன் கொள்ளை அடித்தான் என்றும்

இதையே முகம்மது செய்தால் இஸ்லாமிய தீவிரவாதி செய்து விட்டான் என்று சித்தரிக்கிறார்கள். நான் இப்போது களத்தில் இறங்கியதற்கும் இதுவே காரணம். இன்ஷா அல்லாஹ் என்னுடைய பிரச்சாரம் இதற்கு பயன்பெறும்.


(மக்கள் உரிமைக்கு அப்துல்லாஹ் பெரியார் தாசன் அளித்த பேட்டி)

பாலா said...

//ஆனால் இன்று ஊடகங்கள் பெரும்பாலும் எங்கு கொலை நடந்தாலும் முதலில் அவர்களின் கை நீளுவது முஸ்லிம்களை நோக்கியே! மாலேகான் குண்டு வெடிப்பில் , புத்த கயா குண்டு வெடிப்பில், தமிழகத்தில் நடக்கும் கொலைகளில் முதலில் இஸ்லாமியர்களை கைது செய்தனர். விசாரணை முடிவில் இந்துத்வ இயக்கங்கள் என்பது உலகுக்கு தெரிய வந்தது. இந்தியாவில் நடக்கும் அனைத்து குண்டு வெடிப்புகளுக்கு பின்னாலும் ஆர்எஸ்எஸ் உள்ளது என்பதை மததிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் தினமலர், தினமணி போன்ற ஊடகங்கள் பார்பனர்களால் நடத்தப்படுவதால் இந்துத்வா செய்யும் கொலைகள் மறைக்கப்படுகிறது. அதுதான் உண்மை.//

அய்யோ கடவுளே!! திரும்ப திரும்ப ஏன் மற்ற ஊடகங்களை பற்றியே பேசுகிறீர்கள். மேலே நீங்கள் கூறிய கருத்துக்கள் பொய் என்று நான் கூறவே இல்லையே? அதே போல ஊடகங்களும் நேர்மையானவை என்றும் கூறவே இல்லையே? அப்புறம் ஏன் ஒவ்வொரு தடவையும், இந்துத்வா ஊடகங்களை இழுக்கிறீர்கள்?

நீங்கள், உங்கள் நண்பர்களான வாஞ்ஜூர், உண்மைகள் ஆகியோர் பத்திரிக்கை செய்திகளில் தேடி தேடி இந்துக்கள் செய்யும் தவறுகளை காப்பி பேஸ்ட் செய்து உங்கள் கருத்து பெட்டிகளை நீங்களே நிரப்புவீர்களே.... இந்த செய்தியையும் அப்படி போட்டால் என்ன என்பதுதான் என் கேள்வி. மற்றபடி உங்கள் நேர்மை மீதோ, இந்துத்வா ஊடகங்களின் நேர்மை மீதோ என் விமர்சனம் அல்ல. மேலும் இந்து மதத்தில் உள்ள சாதி பிரச்சனைகள், மற்றும் ஒழுக்கமற்ற தன்மை ஆகியவையே பெரும்பாலான கற்பழிப்புகளுக்கு காரணம் என்று கூறுவீர்களே. இப்போது இந்த கற்பழிப்பில் ஈடுபட்டவர்களுக்கான காரணம் என்ன? என்ற ஆவலிலேயே கேட்டேன். வேறொன்றும் இல்லை.

SNR.தேவதாஸ் said...

பாலாவின் கேள்விகளில் பல நியாயங்கள் உள்ளன.
எனக்கும் இது போன்ற சந்தேகம் இருந்தது.
அதை திரு.பாலா அவர்கள் வினவி இருக்கிறார்.
திரு.சுவனபிரியன் அவர்களே தங்களது
பதிவில் எழுதுவது தங்களது கருத்து.
அதே போல அதனைப் படித்து அதற்கு கருத்துச் சொல்வது அதனைப் படிப்பவர்களது கருத்து.
அதற்காக கருத்து சொல்பவர்களை மடையர் என்று சொல்வது எந்த விதத்திலும் நாகரீகமானது அல்ல.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்

Unknown said...

முருகன் கொலை செய்தால் முருகனுடைய நோக்கத்தை முன்வைக்கிறார்
வில்சன் கொலை செய்தால் வில்சனுடைய நோக்கத்தை முன்வைக்கிறார்.
முஹ்மது கொலை செய்தால் குர்ஆன் நோக்கத்தை முன் வைக்கிறார்.
அல்லாஹ் பெரியவர் னு கோஷம் எழுப்பி விமானம் கடத்துதல், கொலை செய்தல், குண்டுவைத்தல் நடக்கும் போது அல்லாஹ் தவறானவனாக அடையாளம் காணப்படுகிறது